Search This Blog

30.9.15

இதுதான் இந்து மதம்!இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!


இந்து மதத்தைப் பொறுத்த வரை பெண் - ஒரு மானுடக் கூறேயல்ல! கூலி கூடக் கொடுக்காது ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் மாட்டப் படும் மாட்டினும் கீழானவள்; அதனால்தான் கணவன் இறந்தவுடன் - அவனோடு வைத்து எரிக்கப்படவண்டி யவள் என்பதை சாத்திர ரீதியாகவே செதுக்கி வைத்து விட்டனர்.
இன்னும் விதவையா காமல், சுமங்கலிகளாய் இருக் கிற பெண்கள் விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களுட னும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்தும் எவருக்கும் முன்னதாக சடலம் வைக்கப்பட்ட கட்டை யண்டை வருவர்.- (ரிக் வேதம், 4-11-17)
கருட புராணம் என்ன கதைக்கிறது? அதனையும் பார்த்துவிடலாமே!
மாசு மூடிய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப் பொன்னை கெடுக்காமை போல, கொழுநனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னி யானவன் தகிப்பானேயன்றி, அவளைச் சிறிதும் வருத் தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்று முள்ள சுற்றத்தாரையும் மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து - கண வனே தெய்வம் அவனைப் பிரிந்து வாழ்வதென்பது அடுக்காது என்று, தனது கணவனுடனே துஞ்சும் உத் தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார்? சாக மனம் (உடன்கட்டை) செய்த புண் ணியவதி மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க் கத்தில் கணவனோடு இன் பம் துய்ப்பாள். நாயகனோடு உடன்கட்டை ஏறாதவள் எந்த ஜென்மத்திலும் துக் கமே அடைவாள் என்கிறது விஷ்ணு புராணம் (14 ஆம் அத்தியாயம்).
கணவன் இறந்த பின்பு அவனுடைய சடலத்துடன் அக்னிப் பிரவேசம் செய்ய எத்தனிக்கும் பெண்கள் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகின்றார்கள் என்கிறது காசிக் காண்டம்.
இந்து மதத்தின் சீலங்கள் என்று கூறி ஏற்றுக்கொள்ளும் ஒரே ஒரு பெண்ணை இந்து ராஷ்டிர பேர்வழிகளே காட்டுங்கள் பார்க்கலாம்.
இங்கிலீஷ்காரன் - அவன் கிறிஸ்தவன் - இந்துக் கலாச் சாரத்தை நாசமாக்கி விட்ட வன் என்று நா சுளுக்கேறக் கூச்சலிடும் பேர்வழிகள் - இங்கிலீஷ்காரன் இந்த நாச மாகப் போகிற உடன்கட்டை ஏற்றுதலை சட்டம் போட்டு ஒழித்தானே - அதற்காக இந்துப் பெண்கள் ஆயிரம் சலாம் போட வேண்டாமா வெள்ளைக்காரனுக்கு?
1628 இல் மதுரை நாயக்க மன்னனுடன் 700 மனைவிகளும், திருமலை நாயக்கனுடன் 200 மனைவி மார்களும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடு மையை அறிந்த பின்னும் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கலாமா?
அது, 18 ஆம் நூற்றாண்டு; மராட்டியப் பார்ப்பனர் ஒரு வரின் மனைவி கோகிலா; அந்தப் பார்ப்பனன் மரணம் அடைந்தான். அவன் சடலம் சென்றது - அதற்குப் பின் னால் அந்தப் பெண் அலங் கரித்து ஊர்வலமாக சுடுகாட் டுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அதனை வேடிக்கைப் பார்த்த இராணுவத்தினர் மனம் இரங்கி, உள்ளே புகுந்து கொடியவர்களிட மிருந்து அப்பெண்ணை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணை வீட்டார் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்; ஜாதிப் பிரஷ்டம் செய்தனர்.
அந்தப் பெண்ணை இரா ணுவத் தலைவர் கர்னல் லிட் டில்டன் பங்களாவிலேயே வைத்து ஆளாக்கினர். கல்வி கொடுத்து இராயல் குளோரித் தாள் என்று பெயர் சூட்டி, நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியராக்கினர்.
மனிதப் பண்பு எங்கே இருக்கிறது?
இந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்!
------------------------------- மயிலாடன் அவர்கள் 30-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: