Search This Blog

27.8.13

மதமும் சாமியும் - தந்தை பெரியார்



இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.

சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன.

அதாவது,
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவாவதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை  - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
-----------------------------27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).

42 comments:

தமிழ் ஓவியா said...


கண்ட பலன்?


ஆகஸ்ட் 24 - சனி ஏழு மலையப்பன் மைசூர் மண் டபம் எழுந்தருளல். குச் சனூர் சனி பகவான் ஆரா தனை. மகா சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 25 - ஞாயிறு சிறீரங்கம் நம் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் அனுமனுக் குத் திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

ஆகஸ்ட் 26 - திங்கள் திருச்செந்தூர் முருகப்பெரு மான் உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக் குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 27 - செவ் வாய் திருச்செந்தூர் முரு கப்பெருமான் சிங்கக்கேடய சப்பரத்திலும், இரவு பல் லக்கிலும் பவனி. பெரு வயல் முருகப்பெருமான் புறப்பாடு. திருப்பரங்குன் றம் ஆண்டவர் புறப்பாடு. கார்த்திகை விரதம்.

ஆகஸ்ட் 28 - புதன் திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை பூங் கோவில் சப்பரத்திலும், இரவு முத்துக்கிடா வாக னத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத் திலும் பவனி சிறீகிருஷ்ண ஜெயந்தி.

ஆகஸ்ட் 29 - வியாழன் மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க முத்துக் கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத் திலும் அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் திருவீதி யுலா. ஸ்ரீபஞ்சராத்திர ஜெயந்தி.

ஆகஸ்ட் 30 - வெள்ளி மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம். திருச்செந்தூர் முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ் சனசேவை.

....இத்தியாதி ....இத்தி யாதி கோவில் வைபவங்கள் வெகு ஜோராக நடக்கத் தான் செய்கின்றன. இது ஒரு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல். ஆண்டு முழுவதும் இவை போன் றவை எத்தனை எத்த னையோ!

இவையெல்லாம் நடந்து என்ன பயன்? வறுமைக் கோட்டைத் தாண்டி மக்கள் வளர்ந்து விட்டார்களா? மருத்துவமனைகளை இழுத்து மூடும் நிலை ஏற் பட்டுவிட்டது - கடவுளின் கடாட்சத்தால் என்ற நிலை உண்டா?

நூற்றுக்கு நூறு மக்கள் கல்வி கற்றுத் கடைத்தேறி விட்டார்களா? காஷ்மீர் பகு தியில் அந்நியப் படைகள் ஊடுருவல் தடுத்து நிறுத் தப்பட்டதா?

வன்முறைகள் ஓடி ஒளிந்துவிட்டனவா? உண வுப் பஞ்சம் நீங்கியதா? குடிநீர்ப் பஞ்சம் பறந்துவிட் டதா? சாலையோர மக் களுக்குக் குறைந்தபட்சம் குடிசை வீடுகள் கிடைக் கின்றனவா?

மக்கள் உழைப்பும், பண மும், முயற்சியும் பாழான தைத் தவிர - முட்டாள் தனம் முண்டா தட்டி எழுந் ததைத் தவிர நாடு கண்ட பலன் என்னவாம்?

புரோகிதச் சுரண்டல் தொழில் ஓகோ என்று நடந்ததை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெரியார் விட்டுச் சென்ற அசையும், அசையா சொத்துகள் எவை?


கழகத் தலைவர் விளக்கம்

...நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் மறைவுக்குப் பின் நமது மக்களில் பலரும் - ஏன் நம் இன எதிரி களும்கூட - ஒரு கேள்வியைக் கேட் காமல் இருப்பதில்லை.

பெரியார் எவ்வளவு சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் என்பதே அந்தக் கேள்வி.

இன்னும் சில அரசியல்வாதி களும், ஆன்மிகப் போர்வையாளர்களும்கூட இதை அறிய வருமான வரித் துறைக்கேகூட படையெடுத்து ஊடுருவிப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு நாங்கள் அன்றும் சொன்னோம்; இன்றும் சொல்லுகிறோம்.

ஆம்! ஏராளமான சொத்துக்களைப் பெரியார் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவைகளில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று இரண்டு வகைச் சொத்துக்களும்கூட - ஏராளம் சேர்த்துவிட்டு அதை எங்களிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்!

அசையும் சொத்துக்கள் (Movable Properties) என்பவை இதோ இந்த மணவிழாவை காதல் மணமாக, ஜாதி மறுப்புத் திருமணமாக, தாலி இல்லாது வெறும் மாலைகளை மட்டுமே மாற்றிக் கொண்டு தனது சொந்தக் காலில் நிற்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ள எங்கள் திராவிட மாணவர்; கழகப் பொறுப்பாளரான இளைஞர் தமிழ்ச்செல் வனைப் போன்றுள்ள எண்ணற்ற இலட்சிய இளைஞர்கள் - சர்வ பரித் தியாகம் செய்யத் தயாராக இயக்கத்திடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனரே, இவர்கள்தான் பெரியார் விட்டுச் சென்றுள்ள அசையும் சொத்துக்களாகும்; அதுபோலவே, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இலட்சியங்களைக் கொண்டுள்ள இயக்கமும், அதன் லட்சியங்களும்தான் அசையாத நிரந்தரச் சொத்துக்கள் ஆகும் (பலத்த கைத்தட்டல்).

- (நெய்வேலியில் 23.8.2013 அன்று நடைபெற்ற தன.தமிழ்ச்செல்வன் - குண.கோமதி ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


தேவை துப்பாக்கி!


தற்காப்பு ஆயுதங்கள் - தேவைப்பட்டால் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி பெண் களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் (விடுதலை, 24.12.2012).

இது ஏதோ தீவிரமாகப் பேசவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஒன்றல்ல; பெண்களை ஆண்கள் போகப் பொம்மைகளாகக் கருதும் கேவல மான சிந்தனைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக இந்த வாய்ப்புப் பெண்களுக்கு அளிக்கப்பட்டே தீர வேண்டும்.

அவ்வப்பொழுது பெண்கள் பாதிக்கப்படும் பொழுது - பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப் படும்பொழுது வீர முழக்கங்கள், ஆவேசக் குரல்கள் கிளம்பும்; சில நாள்களுக்குப் பிறகு அதுபற்றிய சிந்தனையோ, பேச்சோ இருக்காது; மீண்டும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பொழுது மீண்டும் அதே ஆவேசக் குரல்கள் - ஆர்ப்பாட்டங்கள்!

போதும், போதும் - இனிமேலும் அறிவுரைகள் தேவையில்லை - உருப்படியான செயல்பாடுகள்தான் தேவையே தவிர, வெற்றுச் சொற்கள் தேவையில்லை.

மும்பையில் பத்திரிகைத் துறையில் நிழற்படக் கலைஞரான பெண் ஒருவர் வெறிபிடித்த அய்ந்து பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டார் என்ற செய்தி இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்குமே மாபெரும் தலைக்குனிவே! தமிழ் நாட்டிலும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும், ஊடகங்கள் அத்தகுச் செய்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன.

உலகில் பெண்கள் வாழப் பாதுகாப்பில்லாத ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படு கிறது.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஓடிவிட்டன; பிரதமராகவும், முதலமைச்சராகவும் இந்நாட்டில் பெண்கள் வந்துவிட்டனர் - என்ன பயன்?

பெண் கல்வி கூட வளர்ந்தேதான் இருக்கிறது என்பதும் உண்மைதான்; வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக் கிறார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமையும் கிடைத்து விட்டது. விவாகரத்து உள்பட பல சட்டங்களும் பெண்களுக்குச் சாதகமாக வந்துவிட்டன என்பதெல்லாம் வளர்ச்சியின் அத்தாட்சிகள்தான் - அதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு இருந்தும் பெண்கள் மத்தியில் இன்னும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்னும் சமூக மனப்பான்மை இருந்து வருகிறது. இந்த உளவியல் நோய் முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

உடை உடுத்துவதிலிருந்து ஆண் - பெண் வேறுபாடு இருக்கவே கூடாது. சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சகஜமாகப் பழகும் வகையில் மக்கள் மனோபாவம் மாறியாகவேண்டும்.

பாடல்கள், நடனம், அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல்கள் என்பது மட்டுமே பெண்களுக்கு உரியது என்ற நிலை தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுவயதிலேயே பெண்களுக்கு, ஆண்களுக் குரிய உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்று அனைத்தும் கற்பிக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட வகுப்புக்குமேல் பாலியல் தொடர்பான கல்வியியல் புகட்டப்படவேண்டும். மறைத்து மறைத்துப் பேசி பாலியலில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும் யதார்த்த நிலை போக்கப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற் காவது பெண்களுக்குத் தற்காப்புக் கண்ணோட் டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்படவேண்டும்.

வக்கிரப் புத்தியோடு பெண்களைச் சீரழிக்கும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தி வந்தால் போதும், தங்கள் வாலைச் சுருட்டிக் கொள்வார்கள் ஆண்கள்.

இதற்கு வழக்கம்போல இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எதிர்த்துக் குரலைக் கொடுக்கத்தான் செய்யும்.

அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், பரீட்சார்த்த மாகவாவது கொஞ்ச நாளைக்குக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


சபாஷ், மகாராஷ்டிர அரசு பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்



மும்பை, ஆக. 26-மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நெருக்கடி

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான மக்களவை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசிடம் தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகள் அவை.

இந்தத் தோல்வி, கட்சியின் மாநிலத் தலைவரான குமாரசாமியை கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பதவி விலகச் செய்திருக்கிறது. வயதான காலத்தில் குமாரசாமியின் தந்தையாரான தேவேகவுடாவிற்கும் ஏன்தான் இந்தத் தொல்லையோ! (எதற்கும் நாமக்கல் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது நல்லது!).

கேரளமா - கொக்கா?

கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. வேற்று மொழிக்காரர்கள் அதனை எதிர்க்கின்றனர். எனவே, ஏற்கெனவே இருந்துவரும் ஆணையை மறுபரிசீலனை செய்ய லாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கேரள மாநில முதல மைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

தொடக்கத்திலேயே இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கேரளம் என்ன தமிழ்நாடா? கண்டிப்பாக அங்கு மொழிமீது கை வைக்க முடியாது - மலையாளிகள் தமிழர்கள்போல இளிச்சவாயர்கள் அல்லவே!

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...

திரைப்பட, தொலைக்காட்சி மாணவர் மீது கடும் தாக்குதல் அகில பாரத வித்யா பரிஷத் அமைப்பு மீது புகார்

சென்ற புதன்கிழமை, ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று, இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைக்கல்விக் கழகத்தின் மாணவர்கள் 5 பேர் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் வெளியே அகில இந்திய மாணவர் பரிஷத் ஹக்ஷஏஞ உறுப்பினர்களால் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் பட்டவர்த் தனின் ஆவணப்படமான ஜெய் பீம் காஷ்ரேட் திரையிடப்பட்டு அதன் பிறகு தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் கபீர் கலா மஞ்ச்சின் நிகழ்ச்சியும் நடைபெற்ற பின், இந்தத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள் ளன. புனே நகரை மய்யமாகக் கொண்ட யுக்பாத் என்ற இளைஞர் அமைப்புடன் சேர்ந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி மாண வர்களால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட் டது. கடந்த இரண்டரை ஆண்டு காலங்களில், கபிர்கலா மஞ்சின் முதல் பொது நிகழ்ச்சி இது.

தாக்கப்பட்டஅய்ந்து மாணவர்கள்

1) சமீன் - இரண்டாம் ஆண்டு ஒளிப்பதிவுத்துறை மாணவர்

2) அன்சர்ஷா - மூன்றாம் ஆண்டு ஒளிப்பதிவுத்துறை மாணவர்

3) கிஸ்லே - மூன்றாம் ஆண்டு எடிட்டிங் மாணவர்

4) சிறீராம் ராஜீ - மூன்றாம் ஆண்டு எடிட்டிங் மாணவர்

தமிழ் ஓவியா said...

5) அஜயன் - மூன்றாம் ஆண்டு ஒளிப்பதிவுத்துறை மாணவர்

ஆவணப்படம் திரையிடுவதும், கபீர் கலா மஞ்சின் நிகழ்ச்சியும் இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று. மூட நம்பிக்கை களுக்கு எதிராகப்போராடிய வீரர் நரேந்திர தபோல்கரைக் கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடக்க இருந்தகடையடைப்பு காரணத் தால், இந்நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கை கள் வந்தன. ஆனால் யுக் பாத்தும் தினரக் கல்விக் கழக மாணவர்களும் அந்தக் கருத்துகளுக்கு உடன்பட மறுத்தனர். இந்நிகழ்ச்சிகள் போலிகளை கவுரவப் படுத்தும் நிகழ்ச்சிகள் என்று மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படவில்லை.

12 அகில பாரத வித்யா பரிஷத் உறுப்பினர்கள் தேசியத் திரைப்பட ஆவணக் கட்டடத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்துக்கிடந்தனர். கபீர்கலா மஞ்ச் உறுப்பினர்கள் அவர்கள் நிகழ்ச்சியை முடித்தவுடன் வித்யா பரிஷத் உறுப்பினர்கள் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மாணவர்களைக் கடும் வார்த்தைகளால் திட்டினர். கபீர்கலா மஞ்ச் குழுவை அழைத்து பொது நிகழ்ச்சி கள் நடத்துவதன் மூலம் தேசிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி னர். அதற்கு திரைப்பட தொலைக்காட்சி மாணவர்கள் கபீர்கலாமஞ்ச் ஒரு பண்பாட்டு நிறுவனம் என்றும் அவர்கள் மஞ்சினுடைய ஜாதி எதிர்ப்பு மூடநம்பிக் கைகள் ஒழிப்பு ஆகியவற்றிற்கான கருத் துகளை ஆதரிப்பதாகவும் பதிலுரைத் தனர்.

இதைக்கேட்டவுடன் அகில பாரத வித்யா பரிஷத் உறுப்பினர்கள் முழக்கங் களை எழுப்பினர். பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், நக்சல்கள், ஒழிக ஒழிக என்று சத்தமிட்டனர். ஒரு பரிஷத் உறுப்பினர், திரைப்பட தொலைக்காட்சி மாணவர் ஒருவரது கன்னத்தில் அறைந் தார். மற்ற மாணவர்கள் தலையிட்டு அமைதியை உண்டாக்கினர். இவ்வளவு நாழி தாங்கள் ஒளித்து வைத்திருந்த காவி நிற கொடிகளை எடுத்து இடை விடாத முழக்கங்களை எழுப்பினர்.

ஆவணக் காப்பகத்தின் வளாகத் துள்ளே கடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருப்பதைக் கண்ட மாணவர்கள், வாசலுக்கு வெளியே விரைந்தனர். பரிஷத் உறுப்பினர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாசலைக் கடந்த உடனேயே 12 பரிஷத் உறுப்பினர்கள், கொடிதாங்கி வந்திருந்த கட்டைகளின் பின் புறத்தால், 4 திரைப்பட தொலைக் காட்சி மாணவர்களைத் தாக்கினர். ஒரு மாணவர் தலையில் ஹெல்மெட்டால் அடிக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத் துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தலையில் தையல்கள் போடப்பட்டன.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் ஒரு காவலர், சாதாரண உடையுடன் நிகழ்ச்சிக்குப்பின்னே உள்ளவர்கள் பற்றி புலன் விசாரித்துக் கொண்டிருந்தார். அதே காவலர் பிறகு பரிஷத் உறுப்பி னர்களுடன் ஆவணவளாகத்திற்கு வெளியே ஊடாடிக்கொண்டு இருந்தார்.

திரைப்பட, தொலைக்காட்சி மாணவர் கள் பரிஷத் உறுப்பினர்களால் தாக்கப் பட்டபோது, அவர்கள் உதவி வேண்டி கூக்குரலிட்டனர். ஆனால் அந்தக் காவலன் ஒரு ஊமைப் பார்வையாளராகத் தான் இருந்தார்.

பிரபாத் காவல் நிலையத்தில், திரைப்பட, தொலைக்காட்சி கல்விக்கழக மாணவர் சங்கம், பரிஷத் உறுப்பினர்கள் மீது ஒரு புகாரைப் பதிவு செய்திருக்கிறது.

திரைப்பட, தொலைக்காட்சி மாணவர்களாகிய நாங்கள் இதை ஒரு ஏதோ சாதாரண நிகழ்ச்சியாக நினைக்கவில்லை இது அடக்கு முறைத்தனத்தின் எழுச்சியைக் காட்டு கிறது. அது, கருத்துத் தெரிவிக்கும் உரிமையைப் பறிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி.

எங்கள் மாணவர் சங்கம் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப் படாத ஒன்று; நாங்கள் கலைஞர்கள்; திரைப்படத் தயாரிப்பாளர்கள்; நாங்கள் இசை, நாடகம், சினிமா மூலம் எங்கள் சொந்த கருத்துக்களை வெளியிட விரும்புபவர்கள் ஊடகங்கள் மூலமாக தங்கள் கருத்துக்களை வெளியிடு வோர் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது. நாங் களோ, எந்த ஒரு அமைப்போ அல்லது தனி நபரோ பொதுக்கருத்துக்கு எதிராக ஏதும் சொன்னால், தேச விரோதி என்று முத்திரை குத்தப்பட்டு வருவதை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அது கொலைக்கு சம மாகும், அண்மையில் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டிருப்பது பயங்கரமானதாகும். நிலைக்களத்தில் இருந்த காவல் துறையினரும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆகவே அகில இந்திய வித்யா பரிஷத் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் இம்மாதிரி நிகழ்வுகள் இனி நடக்காது. பண்பாட்டு நிறுவனங்கள் இதுபோன்று தொடர்ந்து தாக்கப் படுவதைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த நாங்கள் திட்டமிட் டுள்ளோம். என்று திரைப்பட தொலைக் காட்சி மாணவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


ஆசிரியருக்குக் கடிதம்

வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


விழுப்புரம் மாவட்டம் பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது. காலம்சென்ற தமி ழறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளராகப் பணியாற்றியபோது, வரலாற்றுத் தடயங்களை ஆவணப் படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். விழுப்புரம் வட்டம், அரசலா புரத்தில் இருந்த கோழி நடுகல் மற்றும் திருக்கோவிலூர் வட்டம், ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழை மையான கல்வெட்டுகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விழுப்புரம் கொண்டு வந்தார். இவற்றைக் கொண்டு, விழுப்புரம் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில், விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்:21.5.92- ஆணையின்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னார்க்காடு மாவட்ட கண்காணிப்புப் பொறி யாளர் கோ.பச்சைமுத்து அவர்களால் இவ்வருங்காட்சியகம் 29.7.1992-இல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தக்கது, விழுப்புரம் வட்டம் அரசலாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கோழி நடுகல் லாகும். இதன் காலம் கி.பி.3-ஆம் நூற்றாண்டு. வரலாற்று ஆய்வாளர் களால் இந்நடுகல் முக்கிய ஆவண மாகக் கருதப்படுகிறது.

விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட் டிருந்த இந்நினைவுச் சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் வடக்குப் பகுதியில், அதாவது மேற்கண்ட அருங்காட்சி யகம் இருந்த இடத்தில், வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இத னைத் தொடர்ந்து அதன் அருகி லேயே மய்யப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அரசு அலுவலக வளாகத் தில் கோயில் கட்டுவதற்கு அரசு விதிகள் எப்படி இடம் கொடுக்கின் றன எனத்தெரியவில்லை?

வாகனம் நிறுத்துமிடம் மற்றும் திடீர் கோயில் ஆகியவற்றின் காரண மாக, அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த நடுகல் மற்றும் கல் வெட்டுகள் அப்பகுதியில் கடைக் கோடிக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இப்போது அந்த இடம் குப்பைக் கூளங்கள் கொட்டுவதற்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வருங்காட்சியகத்தை அமைத்த விழுப்புரம் செயற்பொறி யாளர்கள் வே.கோவிந்தராசன், கொடுமுடி ச.சண்முகன் ஆகியோர், இதனைப் பாதுகாப்பவர்கள் அடி எங்கள் முடி மேலன (அவர்கள் பாதம் எங்கள் தலையில்) எனத் தெரிவித் துள்ளதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுக ளுக்கு முற்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை, துறையின் ஆணையின் படி அமைக்கப்பட்ட அருங்காட்சிய கம் அதே அலுவலகத்தில் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பது வேதனைக்குரியதாகும். எனவே இதுகுறித்துத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 20 ஆண்டுகளுக் கும் மேலாக பாது காக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்த நினைவுச் சின்னங்களை அழியாமல் பாதுகாத் திட நடவடிக்கை எடுத்திட வேண்டு கிறேன்.

- கோ. செங்குட்டுவன்
(ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வரலாற்றுப் பேரவை)

தமிழ் ஓவியா said...

""கோகுல அஷ்டமி "" கொண்டாடுவோர் சிந்தனைக்கு !!

பாஞ்சாலிக்கு அவ்வளவு துணியை ஏதோ ஒரு பெரும்

ஆலையில் இருந்து துணி நெய்து தருவது போல தம் கருணையாலும் ,மிக பெரிய சக்தியாலும் ""அற்புதம் "" செய்ததாக கூறப்டுகிற கண்ணன் தான் -பிறர் முன் பெண்களின் துகில் -சேலை -உரியப் படகூடாது என்ற மிகப் பெரிய "' நாகரிக "'மனித நேய தத்துவவாதியாக காட்டபடுகிற கண்ணன்தான் -குளத்தில் குளித்துகொண்டிருந்த 'கோபியர்களின் " புடவைகளை கரையிலிரிருந்து அபகரித்தான் .கோபியர்கள் வெட்கத்தால் உடலை நீரில் புதைத்துக்கொண்டு தலையைமட்டும் வெளியே வைத்து கெஞ்சி சேலை தானம் கேட்க்க ,அவர்களிடம் தண்ணீருக்கு மேலே வாருங்கள் ,வந்தால் தான் சேலையை தருவேன் என்று கூறினான் .அந்த காரியத்தை கவுரவர்கள் செய்தால் மான பங்கம் அதையே கிருஷ்ணன் செய்தால் குறும்பு என்றும் ""லீலை ""என்றும் வர்ணித்து மகிழ்ந்து .அதனையே படமாக்கி பூஜை அறைகளில் வைத்து வணங்குவதா ? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் அவர்கள் எழுதிவைத்த கதைகளில் இருந்தே நிருவபடுவதால் ""கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி "" என்பது நிரூபணமாகிறது..( தமிழர் தலைவர் கி .வீரமணியின்"" கீதையின் மறுபக்கம் "" நூலிலிருந்து )

தமிழ் ஓவியா said...


நரியைப் பரியாக்கிய லீலை!


அரசியல் பிரச்சினை என்றால் அடேயப்பா - வானத்தை வில்லாக வளைத்து, எழுதும் வக்கணையைப் பாருங்கள். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தும் திறமையைப் பாருங்கள்.

அதேநேரத்தில், ஆன்மீகச் சமாச் சாரம் என்றால், ஆமைபோல அய்ந் தவித்து, அடங்கி விடும் மர்மம் ஏன்?

தன் காலை முதலை கவ்விய போது, ஆதிமூலமே என்று யானை அலறி அழைத்தபோது, மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந்தோடி வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்தான் என்று புராணம் சொன்னால், அந்த இடத்தில் மட்டும் அவாளின் அறிவு வேலை செய்யாது.

அதனை அண்டப் புளுகு என்று அலச மாட்டார்கள். மாறாக .........என்பது அய்தீகம்.... என்பது நம்பிக்கை என்று நைசாக நழுவிவிடுவார்கள்.

தன் சீடனான பட்டரைக் காப் பாற்றுவதற்காக திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மை தன் காதில் இருந்த குண்டலத்தைக் கழற்றி எறிந்தவுடன், அப்படியே அமாவாசை பவுர்ணமியாக பரிணமித்துவிட்டது என்று அபிராமி அந்தாதி சொன் னால், அந்த இடத்தில் அறிவு ஆராய்ச்சிக்கு இடம் தரமாட்டார்கள். மாறாக, ........என்பது அய்தீகம் ..........என்பது நம்பிக்கை என்று நழுவி விடுவார்கள்.

மதுரை இருக்கிறதே, அங்கு நடப்பது மீனாட்சி தர்பார் என்பார்கள். ஆண்டு ஒன்றுக்கு 365 நாள்களில் 294 நாள்கள் அந்தக் கோவிலில் ஏதாவது திருவிழா என்று, கூத்தடிப் பார்கள். அப்பொழுதுதானே அவாள் வயிற்றில் அறுத்துக் கட்ட முடியும்.

ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் நரியைப் பரியாக்கிய லீலை என்று ஒரு நாள் கூத்து அங்கே - முழு பக்கம் ஒதுக்கி எழுதுகிறார்கள்!

அது என்ன நரியைப் பரியாக்கிய கதை?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்க வாசகன் அங்கே அமைச்சர்; படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர்.

குதிரை வாங்கச் சென்ற அமைச் சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட் கள் ஓடின; ஓடிக்கொண்டே இருந் தன. குதிரைகளையும் காணோம் - மந்திரி மாணிக்கவாசகனையும் காணோம்.

அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந் துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்க வாசகன்.

பாண்டிய மன்னனின் மகாகோபத் துக்கு ஆளானான் மாணிக்கவாச கன். என்ன செய்வதென்று அறியா மல், கைப்பிசைந்து நின்றான்; கடவு ளிடம் கசிந்துருகிப் பாடினான்.
என்ன ஆச்சரியம் - சினிமாவில் விட்டலாச்சாரியாவின் மாய தந்திரக் கதைபோல, சிவகணங்களைக் குதி ரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் (குதிரைகளாகவும்) ஆக்கி மதுரைக்கு அனுப்பி வைத் தான் சிவபெருமான்.

மன்னனும் மகிழ்ந்தான்; ஆனால், அன்று இரவு என்ன நடந்தது? மறு படியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன.

இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு - மாணிக்கவாச கனை சுடு மணலில் கட்டிப் போட்டா னாம். ஆனால், இறைவன் திருவரு ளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். சுடுமணல் என்ன செய்யும்?

இதனைக் கண்டு அரசன் ஆண் டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடு வித்ததாக தலபுராணம் கூறுகிறது.

நரியைப் பரியாக்க முடியுமா? எந்தப் பத்திரிகைக்காரர் எழுது கிறார்? கடவுள் சக்தியால் முடியும் என்றால், அந்த நரிகளை நிரந்தரமாக ஏன் பரிகளாக்கவில்லை? என்ற கேள்வி எழுமே!

அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்!

ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவன் அவன் எவ்வளவுதான் சிவபக்தி உடையவனாக இருந்தாலும், மன்னவன் கட்டளையை மறந்து, மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு கோவில் திருப்பணி செய்தது முறையானதுதானா?

அமைச்சர் செய்தது மோசடியல் லவா? தண்டிக்கப்பட வேண்டியவ னல்லவா? அந்தக் குற்றவாளிக்குக் கடவுள் துணை போனது நேர்மை யானதுதானா?

இப்படியெல்லாம் சோ ராம சாமியை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம் - கல்கி ராஜேந்திரனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்ப்போம் - ஆனந்தவிகடன் அறிவு வினாவை இந்த வகையில் தொடுக் குமா?

பக்தி என்ற போர்வையில் ஒழுக் கக்கேட்டை வளர்க்கலாமா? கடமை பிறழலாமா?

ஆம், ஒழுக்கக்கேடாக நடக்கலாம்; கடமை தவறலாம் என்கின்றனரே - இவர்களை என்ன சொல்ல - இவர் கள் நம்பும் ஆன்மிகத்தின் யோக்கி யதைதான் என்ன?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



அவர்கள் பாணியில்

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவி லுக்கு ரூ.25 கோடி செலவில் தங்கத் தேர்.

சிந்தனை: தினமலர் துக்ளக் பாணியில் சொல்ல வேண்டுமானால் இனிமேல் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட் டலம் வரும் பாருங்கள். காவிரியாற்றில் நீர் கரை புரண்டு ஓடி வரும் பார்க்கப் போகிறீர்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - விமர்சனங்களும்


உயருகிறது

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச் சுமையைச் சரிக் கட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு மாதா மாதம் ரூ.10 ஏற்றுவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

(உலகிலேயே தேர்தல், மக்கள் வாக்குபற்றிக் கவலைப்படாது கடமையாற்றும் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான்; அப்படித்தானே?)

மனித உரிமை

மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு -அங்குள்ள புத்த துறவிகள் போராட்டம். (பிறகு என்ன? மனித உரிமை என்றால் சிங் களவர்களுக்குப் பிடிக்குமா என்ன?)

நீட்டிப்பு

இந்திய நாடாளுமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.

(வேறு வழி என்ன? நாடாளுமன்றத்தை நடக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்போது வேறு வழிதான் என்ன? நீட்டித்துதான் ஆக வேண்டும். அப்பொழுதாவது அவையை நடத்த விடுவார்களா? என்பதும் நியாயமான கேள்வியே!)

அத்துமீறல்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செய்தி வெளிவந்து கொண்டு தானிருக்கிறது.

(சிறு துளி பெரு வெள்ளமாகி இந்தியா - பாகிஸ்தான் சண்டை என்று செய்தி வராமல் இருந்தால் சரி!)

மனிதநேயம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் நுரையீரல் - 90 நிமிடத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 2 பேர்களுக்குப் பொருத்தப்பட்டது.

(மனிநேயம் என்று இதற்குத்தான் பெயர். மண்ணுக்குள் புதைக்கப்படுவதைவிட, தீக்கு இரையாக்கப்படுவதைவிட செத்தும் உயிர் வாழக் கூடிய, இந்த மாந்தநேயம் பாராட்டப்பட வேண் டியது. பின்பற்றப்பட வேண்டியது ஆகும். திராவிடர் கழகம் உடற்கொடை இயக்கத்தையே நடத்துகிறதே!)

பட்டாசு

விருதுநகர் அருகே, முதலிப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 4 பெண் தொழிலாளிகள் படுகாயம்.

(இதுபோன்ற சேதிகள் அவ்வப்பொழுது வருவதும், அந்த நேரத்தில் மட்டும் அரசு அதி காரிகள் சூடாக செயல்படுவதும், வாடிக்கையா கவே போய்விட்டது. ஏதாவது உருப்படியாக தொலைநோக்கோடு செய்யுங்கள் அய்யா! மக்களுக்குத் தேவையில்லாத, காசு பணத்தைக் கரியாக்கும், இதுபோன்ற தொழில்களுக்கு மாற் றாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது பற்றி, அரசுகள் சிந்திக்கக் கூடாதா? சிங்கப்பூரில் பட்டாசு வெடிக்கக் கூடாது தெரியுமா?)

எந்தப் பொந்தில்?

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு.

(எந்தப் பொந்தில் எந்தப் பாம்போ! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எதற்கும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப் புக் கருவியை வைத்துக் கொள்வது நல்லது).

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் ஏமாளிகள் அல்லர்


டில்லியில் பிஜேபியின் தேசிய பிரச்சாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சிறு பான்மையினரின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக பிஜேபி என்ற இந்துத்துவா கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் தேர்தலில் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், அது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சிறுபான்மையி னருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை சிறுபான்மையினர் எளிதில் மறந்திட முடியாது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடிசா மாநிலத் தில் கிறித்தவர்களுக்கு எதிராக பிஜேபியினரும், சங்பரிவார்க் கும்பலும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினரை உறுதியான ஒரு முடிவுக்கு வரச் செய்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, தங்களின் வாக்குகள் சிதறப் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தங்கள் மதத்தை இந்து மயமாக்கிக் கொள்ள வேண்டும்; சிறுபான்மையினர் தங்கள் கடவுள்களை மறந்துவிட்டு கிருஷ்ணனை யும், இராமனையும் வணங்க வேண்டும் என்று கூறு கிறவர்கள், எப்படி சிறுபான்மையினரின் வாக்கு களை எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதுவும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று கூறும் நரேந்திர மோடியின் சிந்தனையும், செயல்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அவர் மேற்கொண்ட நரவேட்டையும், எளிதில் மறக்கப்படக் கூடியவையும் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை அது ஏற்படுத்தி விட்டது.

குஜராத் கலவரத்தின் போது, அது பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில் என்கிறபோது அவர் நோக்கு - போக்கு எத்தகையது என்பதற்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவைப்படாது.

குஜராத் கலவரத்தின்போது அகதிகள் முகாம் களில் சரணடைந்த முசுலிம்களை எவ்வளவுக் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார் முதல் அமைச்சர் மோடி!

முசுலிம்கள், முகாம்களை தங்கள் இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பேசிடவில்லையா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப்பற்றி அவர்களுக்குப் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் மோடியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குமுன் புதுடில்லியில் பிஜேபி சார்பில் பெண்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை (13.7.2008) நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று எல்.கே. அத்வானி பேசினார்.

அப்பொழுது தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட அதே உத்தியைத்தான் இந்தத் தேர்தலுக்கு முன்பும் பயன்படுத்திட எத்தனித்துள்ளனர்.

சிறுபான்மையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். வரும் தேர்தலில் அவர்கள் பிளவுபடாமல் வாக்கு களைச் சிதறடித்துக் கொள்ளாமல் ஒன்றுபட்டு எழுந்து பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


தமிழ்ச்செல்வன், கோமதி ஆகியோரின் ஜாதிமறுப்பு - காதல் திருமணம்


தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

நெய்வேலி, ஆக. 27- தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி போன்றோர் கழகத்தின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத் தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த இலட்சிய சொத்து எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார். நெய்வேலியில் (ஆக. 23-ஆம் தேதி) நடைபெற்ற விருத்தாசலம் கழக மாவட்ட மாணவரணித் தலைவர் தன.தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை யேற்பு விழாவில் தமிழர் தலைவர் பேசியதாவது: மணமக்கள் தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி ஆகியோர் இயக்கத்தின் வெற்றிகளை சுட்டி காட்டுகிற கொள்கை மலர்கள். அவர்கள் பூத்து, காய்த்துக் கனிவார்கள். அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே அய்யா அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்ன என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் விட்டுச் சென்ற சொத்து அசையும் சொத்து, அசையா சொத்து என்று தெரிவித்தேன். அதிலே, தமிழ்ச்செல்வன் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் கொள்கையிலே உறுதியாக இருந்து, அந்த கொள்கையை வாழ்க்கை முறையாகவும், பிறருக்கும் எடுத்துச் செல்பவர் களாகவும் உள்ளனர். இதுபோன்ற ஒப்பற்ற இளைஞர்கள் பெரியாரின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத்தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த லட்சிய சொத்து. இதை யாராலும் பறிக்க முடியாது. தமிழ்ச்செல்வன் திருமணத்தை பொறுத்த வரையிலே இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம். அதிலும், காதல் திருமணம் எனும் போது நாம் பெருமைப்படுகிறோம். சிக்கல் இல்லாமல், பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு இந்தத் திருமணம் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது. காதல் திருமணங்களிலே சிக்கல் இல்லை. சிலர் சிக்கல் இருப்பதாகப் பேசி, அதை தங்கள் வளர்ச்சிக்காக ஏணிப்படிகாளக பயன் படுத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு வருகின்ற வழியிலே தாமதம் ஏற்பட்டது. அதுவும் கூட ஒரு வகையிலே கொள்கை பிரச்சாரம் தான். மனிதன் என்பதற்கு அடையாளமே சிரிப்புதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். ஆனால், இங்கே என்ன நிலை பொம்பள சிரித்தால் போச்சு, பொகையில விரிச்சா போச்சு என எழுதி வைத்தார்கள். மிருகங்களுக்குதான் சிரிக்கத் தெரியாது. ஆனால், பெண்கள் சிரிக்கக் கூடாது என மிருகங்களைவிட கேவலமாகப் பெண்களை நடத்தினார்கள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் பெண்களை மனிதர்களாக்கியது. இன்று பெண்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதி களாக, மருத்துவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் மணமகள் கோமதி, தமிழ்ச்செல்வன் படித்திருக்கிறார்கள். ஆண், பெண் சமவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் நூறுக்கு, நூறுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். காரணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். மேடையிலே கருப்பு சட்டையோடு அமர்ந்திருக்கிறார். இதற்காக அவர்களது பெற்றோர்களை பாராட்டுகிறோம். தமிழ்ச்செல்வன் மணவிழா எல்லா வகையிலும் சிறப்பான விழா. இது மட்டுமல்ல, இந்தத் திருமணத்திலே தாலி இல்லை. திருமண அவசரத்திலே தாலிகட்ட மறந்தது போல என எழுதிவைத்தார்கள். ஆனால், எங்கள் தோ ழர்கள் தாலி கட்டுவதில்லை. தமிழர் திருமணத்திலே தாலி இல்லை. தாலி என்பது ஜாதியைப் பாதுகாக்க இடையிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டது. இத்தகைய நிலையிலே தாலி இல்லாமல் திருமணம் நடந்தது பாரட்டத்தக்கது. இல்லறம் சிறக்க தொண் டறம் மிக முக்கியமானது. யார்யாரெல்லாம் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர் களிடத்திலே அன்பு, பாசம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதுவே நமது தலையாயக்கடமை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். மூடநம்பிக்கை யற்ற வாழ்வு வாழ வேண்டும். சிக்கனமாக, எளிமை யாக, சிறப்பாக வாழ வேண்டும் எனப் பேசினார்.

தமிழ் ஓவியா said...


வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!


உணவுப் பாதுகாப்புச் சட்டம்:

வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!

தமிழர் தலைவர் வரவேற்பு

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து, இரண்டாவது முறை யும் முழுமையாக அய்ந்தாண்டுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியின் மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு ஒளி முத்தாகத்தான் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் - ஏழை, எளியவர்களின் பசி தீர்க்கும் மனிதநேயச் சட்டமாக மக்களவையில் திருத்தங்கள் பலவற்றை எதிர்க்கட்சிகள் தந்த நிலையில், அவைகளில் முக்கியமானவைகளையும், அவசியமானவைகளையும் ஏற்று நிறைவேற்றியுள்ளனர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், அவரது பொறுப்பாளர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

கருணைச் சட்டம்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு கள் எல்லாமே நமக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை களோ, மன நிறைவைத் தருபவைகளாகவோ இல்லை என்ற போதிலும், விருப்பு - வெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில் இச்சட்டம் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய வாழும் மனிதர்க்கெல் லாம்வயிற்றுக்குச் சோறிடும்!

கருணைச் சட்டம்!

66 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்பும் வறுமை, ஏழ்மை போகவில்லை என்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பரிகாரமாக முடிந்த அளவுக்கு, 82 கோடி மக்கள் பயனடையும் திட்டம் இது!

அந்த ஏழை, எளியவர்களுக்கு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ ஒன்று இரண்டு ரூபாய்க்கும், தானியம் ஒரு ரூபாய்க்கும் இனி கிடைக்கும் வாய்ப்புகள் இச்சட்டம் மூலம், இந்தியா முழுவதும்; இதனை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அனுபவ ரீதியாகப் பார்த்து மேலும் சில திருத்தங்களைச் செய்வது இன்றியமையாததே!

மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது!

தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே இலவச அரிசி வழங்கும் (PDS) பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்திவரும் நிலையில், அது பாதிக்கப்படாத பாதுகாப்பு இருப்பதும் அவசியமாகும்.

மாநில உரிமைகள் பறிபோகாமல் இதனைச் செயல் படுத்துதல் முக்கியமாகும்!

தி.மு.க. பொறுப்பான - ஆக்கபூர்வமான எதிர்க் கட்சியாக உள்ளது என்பதை உரிய திருத்தங்களைத் தந்ததன்மூலம் நிரூபித்துள்ளது. அவைகளில் பல ஏற்கப்பட்டு சட்டமாகி வரும் நிலையில், அதனை வரவேற்பதுதான் சரியான அணுகுமுறை; தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இதனை மிகவும் பாராட்டி, மக்கள் பசி போக்கும் மாபெரும் திட்டம் என்று வரவேற்றுள்ளார்கள்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் - அவர்கள் கூறிய அத்தனைக் கருத்துக்களும் அப்படியே ஏற்கப்படாவிட் டாலும்கூட, இதன் மனிதாபிமானக் குறிக்கோளை எண்ணி வரவேற்று ஆதரித்துள்ளனர்!

தேர்தல் கண்ணோட்டமா?

இது தேர்தல் கண்ணோட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று சில அரசியல் கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதையே தமது புனித தார்மீகக் கடமையாகக் கொண்ட ஊடகங்களும் கூறுகின்றன; எழுதுகின்றன!

ஆளும் கட்சி - ஆட்சி 5 ஆண்டுகாலத்திற்குள், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தவறல்லவே!

அதுமட்டுமா? எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் - வாக்கு வங்கிக்கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின் றனவா? இல்லையே!

எனவே, இதில் ஓட்டுக் கண் ணோட்டம் இருந்தாலும், தவறு இல்லை; நாட்டு மக்கள் கண்ணோட்டம் இருக்கிறதே! மறுக்க முடியுமா?

அடிப்படைத் தேவை பூர்த்தி - சிறையில்தானா?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை; இந்த சுதந்திர நாட்டில் இன்றும்கூட, வெளியில் இருக்கும் குடிமக்களுக்கு இவைகளுக்கு உத்தரவாதம் உண்டா? இல்லையே!

சிறைக்குப் போனால்தான் அங்கே இம்மூன்றுக்கும் உத்தரவாதம் உண்டு!

இதுதான் யதார்த்தமான நிலை. இதில் முக்கியமாக பசிக்குத்தான் முன்னுரிமை தரப்படல் வேண்டும்; பசி போக்கிடும் திட்டம் இது.

காலந்தாழ்ந்தாலும்...

பல்லாயிரக்கணக்கில் கோடி ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கப்பட்டாலும்கூட, காலந்தாழ்ந்தாவது (Better late than never) எத்தகைய மனச் சங்கடங்கள் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - தமிழக மீனவர்களை இலங்கை கொடுமைப்படுத்தும் நிலை - பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறை இருட்டுக்கிடையில் இது ஒரு ஆறுதல் வெளிச்சம்.

எனவே, வரவேற்கிறோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.8.2013

தமிழ் ஓவியா said...


நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு ஏன்?


அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக, இலங்கைத் தீவு சென்று ஒரு வார கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது வருகையையும், சுற்றுப்பயணத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு - கடமை - பாது காப்பு - இலங்கை அரசுக்குக் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால், இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண் டுள்ளது? புத்த பிக்குகள், அவரின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுள் ளனர்.

கொழும்புவில் உள்ள அய்.நா. அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். நவநீதம் பிள்ளையின் சுற்றுப் பயணம், இலங்கை நலனுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. இது ஏதோ அங்குள்ள புத்த பிக்குகளின் நிலைப்பாடு என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. இலங்கை அரசின் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்தும் அதுதான் என்பதை முதலில் புரிந்துகொண்டால் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பதுங்கியுள்ள விஷமம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிவிடுமே!

அய்.நா. பிரதிநிதிகளையே இலங்கைக்குள் செல்லத் தடை செய்தவர்கள்தானே அவர்கள். பன்னாட்டுப் பத்திரி கையாளர்களை செய்தி சேகரிக்கச் செய்யவிடாமல் தடுத்தவர்களும் அவர்கள்தானே? உள்நாட்டிலும் எத்தனை எத்தனைப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஜெனீவா வில் 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அய்.நா. கூட்டத் தில் பங்கேற்க வந்த மக்கள் உரிமைக் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிஃபேன் தெரிவித்தது என்ன?

இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையிலிருந்து வந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள்; அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ஸ்கைப்மூலம் பேசினார். அதே சமயம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அய்ரோப் பாவைச் சேர்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 500 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசும் அங்கே தனியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக இலங்கையிலிருந்து 126 பேர்களை அவர்களே அழைத்து வந்தார்கள். அவர் களைத் தவிர, அடியாட்களையும் அனுப்பி வைத்திருந்தது இலங்கை அரசு. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப் பட்டது. அமர்வு தொடங்கியதுமே அய்.நா.வுக்கான மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் நவநீதம் பிள்ளை நேற்று நடந்த சம்பவங்கள் அய்.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று சொல்லவில்லையா?

அந்த நவநீதம்பிள்ளை இப்பொழுது இலங்கை சென்று நேரடியாகப் பிரச்சினைகளை, இலங்கைத் தீவின் பிரத்தியட்ச நிலைமைகளைக் கண்டாய்ந்து நடக்க இருக்கும் மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவரை வரக்கூடாது என்பதோ, அவர் பணிகளைத் தடுப்பதோ எந்த வகையில் சரி?

இதற்காகவே கூட இலங்கை அரசு க(த)ண்டிக்கப் படவேண்டாமா?

2013 பிப்ரவரி 11 ஆம் தேதி மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்த அறிக்கை மிகவும் முக்கியமானது.

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியை இலங்கை அரசு அறவே செய்யவில்லை. போர் முடிந்த பிறகும் ஆள் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்னும் இராணுவக் கட்டுப்பாடுதான் இருந்து வரு கிறது. இராணுவம் ஏன் வெளியேற்றப்படவில்லை? இராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்பத் துக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசே நியமித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றெல்லாம் மனித

உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் காணப்பட்டன.
அடுத்து ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை சென்று நேரிடையாக ஆய்வு செய்யும் நவநீதம்பிள்ளை, உண்மை நிலைகளை விரிவாக எடுத்துச் சொல்லி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக புத்த பிக்குகளை இலங்கை அரசே தூண்டி விடுகிறது என்பதுதான் உண்மையான நிலை.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக்வான்யூ சொன்னதுபோல, ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஜென்மம்.

நடக்க இருக்கும் ஜெனீவா கூட்டத்தில் வழவழா கொழகொழா முடிவுகளை எடுக்காமல், இலங்கை அதிபரை கூண்டிலேற்றும் வைபவத்திற்குக் கால்கோள் விழா நடத்துவது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


வேண்டாம் இரட்டை வேடம்


ஆசிரியருக்குக் கடிதம்

வேண்டாம் இரட்டை வேடம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் அய்யப்பா பக்தியும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

அதுபோல் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற பெரும் பகுத்தறிவாளர் களின் பெயர்களை ஊர்களுக்கும், நகர் களுக்கும் வைத்துக்கொண்டு, பகுத்தறி வுக்கு ஒவ்வாத செயல்பாடுகளை ஆண்டு தோறும் நிலைப்படுத்தி வருகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, அலகு குத்தி தேர் இழுத்தல், கோழி, ஆடு வெட்டுதல், பொங்கல் வைப்பது, மொட்டை அடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கத்திற்கு ஆளாகி பகுத்தறிவுக்கு முர ணாக இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின் பற்றுகிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் வரலாறு பேசும் சிறப்புப் புரட்சியாளர் கள். மதப் பண்டிகைகளைக் கொண்டாடும் நோக்கமே, ஜாதியை நினைவுப்படுத்தத்தான் என்றும். சுதந்திர நாட்டில் ஜாதிகள் இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? என்று தந்தை பெரியார் கேட்டாரே!

நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் சாகும்போது இந்துவாக சாக மாட் டேன் என்று சபதம் எடுத்து பவுத்தம் தழுவி வரலாற்றில் தமது எதிர்ப்பைப் பதிவு செய் தாரே, புரட்சியாளர் அம்பேத்கர், இதை யெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட்டால் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் செய்யும் நன்றி ஆகும். அதை விட்டு மாறாக மதப் பண்டிகைகளையும், மதம் சார்ந்த ஜாதி களையும் கடைப்பிடித்தால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமே தவிர, வேறென்ன?

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், அண் ணாவுக்கும், கலைஞருக்கும் பிறந்த நாள், அந்தந்த இயக்கத்தின்பால் கொண்டாடப் படும் விழாவை எண்ணிப்பாருங்கள். மதப் பண்டிகைகளை கொண்டாடுபவர்களும், ஜாதியை நிலைப்படுத்துகிறவர்களும்தான் மேற்சொன்ன தலைவர்களுக்கு விழா எடுக்கிறார்கள், சிந்தித்துப்பாருங்கள் எதற்கு இந்த இரட்டை வேடம்?

தந்தை பெரியாரால் வாழ்கிறோம், புரட்சியாளர், அம்பேத்கரால் வாழ்கிறோம். அவர்கள் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் சென்று அவர்களுக்கு நாடெங்கும் சிலை கள் வைத்து நகர்களுக்கு பெயர் வைத்து பெருமை பேசுவோம்! புகழ்பாடுவோம்! அதை விட்டு, போட்டி போட்டுக்கொண்டு செய்யும் மதப்பண்டிகைகளால் கண்ட பலன் என்ன? எண்ணிப்பாருங்கள். உங்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் விழாவை சிறப் பாகச் செய்யுங்கள் உன்னை இழிவுப்படுத் தியும், கேவலமாகவும், மனித குலத்தில் வைத்திருக்கும் கடவுளுக்கு விழா எடுத்ததில் உனக்கு பெருமை சேரும் என்றால், தயவு செய்து தலைவர்களின் பெயர்களை எடுத்து விட்டு உங்கள் விருப்பமான தெய்வங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு கொண் டாடுங்கள் என் போன்ற பகுத்தறிவாளர் களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தோழர்களே!

உணருங்கள்! செயல்படுங்கள்!!

குறிப்பு:

1) தலையில் தேங்காய் உடைப்பது.
2) குழந்தையை தோளில் உட்கார வைத்து தீ மிதித்தல்
3) மண்ணைத் தோண்டி உயிரோடு புதைப்பது
4) சாட்டையால் அடிப்பது
5) குழந்தைகளை நரபலி கொடுப்பது

போன்ற உயிருக்கு ஆபத்தான முட்டாள் தனமான செயல்களை செய்வதால் இது வரை உங்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இப்படியெல்லாம் செய்யச் சொல்லி தூண்டி விடுபவனை, செய்யச் சொல்லுங் களேன் பார்க்கலாம்?

உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது அதைச் சரியாக உபயோகித்து இது போன்ற முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கைவிடுங்கள் தோழர்களே!

நன்றி!

நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே!

ராச் செஸ்டர் பல்கலைக்கழகம் - ஆய்வு - முடிவு
(தலைப்பு செய்தி - விடுதலை, 14.8.2013)

- ச.இரணியன்
(பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயில்)

தமிழ் ஓவியா said...


கே.கம்மாப்பட்டி ஒரு எச்சரிக்கை


இராசபாளையம் அருகே, கே.கம்மாப்பட்டி கிராமத்தில் 200 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில், அரசு தொடக்கப்பள்ளி ஒன்றுள்ளது. 50 மாணவர்களும் 25 மாணவிகளும் படிக்கின்றனர். மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சமைக்கும் பெண் மரகதவள்ளி என்பவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெரும் பாலும் வேறு ஜாதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மதிய உணவைச் சாப்பிட மறுக் கிறார்கள் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று, ஊர் பெரியவர் களைச் சந்தித்துச் சமாதானம் சொல்லியுள்ளனர். கட்டுப்படாத நிலையில், சத்துணவுத் திட்ட இணை இயக்குநர் வசந்தி என்பவரே, நேரடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஒரு வழியாகக் கிராமத்துப் பெரியவர்களை இசைய வைத்துள்ளார். அப்படியும்கூட மாணவர்கள் மட்டும்தான் மதிய உணவைச் சாப்பிடுகிறார்களாம். மாணவிகள் சாப்பிட மறுக்கிறார்களாம்.

2013ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடுமையா என்ற கேள்விதான் எழுகிறது. வேதனையாகவும் உள்ளது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கொடுமை இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தில் தான் இருக்கிறது; ஜாதிகளுக்குள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்.

தீட்டு என்றால் என்ன? அதன் தன்மை என்ன? தொட்டால் என்னதான் ஆகும் என்று எவரேனும் - சிந்தித்ததுண்டா?

ஜாதிக்கே அடையாளம் இல்லாதபோது தீட்டுக்கு என்ன அடையாளம் இருக்க முடியும்? தாழ்த்தப்பட்ட பெண் சமைத்தால் மிளகாய் உரைக்காதா? சர்க்கரை இனிக்காதா? பாகற்காய் கசக்காதா?

உணவு விடுதிகளில் சாப்பிடச் செல்லுபவர்கள் சமைப்பவர்கள் எந்த ஜாதி என்று தெரிந்து கொண்டா சாப்பிடுகிறார்கள்?

தொடக்கப் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமிகளிடம் இப்படிப்பட்ட வேற்றுமை நச்சு விதை திணிக்கப்பட்டால், எதிர்காலம் எந்த நிலையில் இருக்கும்?

பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? பெற்றோர்கள், பெரியோர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறுவர் களைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை.

இன்னும் சில கிராமங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் கிளாஸ் முறை இருக்கிறது. தீண்டாமை ஒழிப்புக்கு என்ற தனிக்காவல் பிரிவு இருந்தும் என்ன பயன்?

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு.

இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு நகமும், பல்லும் இருக்குமானால், தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடுமா? அதற்கான தைரியம்தான் ஏற்படுமா?

இந்தத் தீண்டாமை எங்காவது நிலவுமானால், அந்தப் பகுதியில் இந்தத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களின் கடமையைச் செய்வார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு சமையல் செய்த பெண் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத் துக்காக வேறு ஊருக்கு மாற்றப்பட்ட பொழுது, அதனைக் கண்டித்து எழுதியது விடுதலை - தீர்மானம் போட்டது திராவிடர் கழகம். அதன் காரணமாக, அந்த வெளியூர் மாற்ற ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இராசபாளையம் அருகே இந்த ஒரு பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை என்பது, ஏதோ ஒரே ஒரு இடத்தில் அத்திப் பூத்தது போல நடைபெற்ற சம்பவம் என்று அலட்சியப்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் உள்ள நிலையை நேரில் கண்டறிந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சக்திகள்மீது சட்டப்படியான தண்டனையை அளிக்க வேண்டும்.

சத்துணவு சமையற்காரர்களாக, அதிக அளவு தாழ்த்தப்பட்டவர்களை நியமிப்பது என்பதை, ஒரு கொள்கை முடிவாக அரசு எடுத்தால்கூட நல்லது தான்.

தீண்டாமை நடமாடினால், அந்தப் பகுதிக்கே ஒட்டு மொத்தமாக பொது அபராதம் விதிக்க வேண்டும். தண்ட வரி விதிக்க வேண்டும்! இது போன்ற பிரச்சினையில் மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டார்கள்; சட்டம் தன் கடமையைக் கூர்மையாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஊர்களில் இவ்வாறு நடந்தால் போதும்; மற்ற மற்ற பகுதிகளில் உள்ள வர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு விடுவார்களே!

தந்தை பெரியார் பிறந்த மண் இந்த வகையிலே வழிகாட்டட்டுமே!

தமிழ் ஓவியா said...


தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞரின் கடும் முயற்சியால் தமிழ் செம்மொழியான நிலையில், அதனைச் சீர்குலைப்பதா?


செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமிப்பது சரியானதுதானா?

தமிழ் உணர்வாளர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழ்நாட்டு எம்.பி.களே தடுத்து நிறுத்த முன் வாரீர்!

தமிழர் தலைவரின் காலங்கருதி விடுக்கப்படும் அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அரும்பாடுபட்டு தி.மு.க. ஆட்சியில் கிடைக்கப் பெறச் செய்த செம்மொழி என்னும் தமிழுக்கான உயர் தகுதியைச் சீர்குலைக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு வருவதையும், செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமித்ததைச் சுட்டிக் காட்டியும் தமிழுணர்வுக்கு எதிராக செயல்படும் போக்குகளைத் தடுத்து நிறுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் பெரு முயற்சி எடுத்தார்கள்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த வாய்ப்பையும், முழுமையாகப் பயன்படுத்தி இடையறாத அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து வந்ததன் விளைவே, பல்லாயிரம் ஆண்டுகளில் தமிழ் மொழி பெறாத ஏற்றத்தை செம்மொழித் தகுதி பெற்றதன் மூலம் அடைந்தது! தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ஒரு வரலாற்றுச் சாதனை அது!

தமிழ்மொழியால், செத்த மொழி சமஸ்கிருதத்துக்குக் கிடைத்த தகுதி!

தமிழுக்கு செம்மொழித் தகுதி வந்ததன் விளைவாகவே, நெல்லுக் கிறைத்த நீர், புல்லுக்கும் கிடைத் தது போன்று சமஸ்கிருதம் (இம் மொழி தமிழ்மொழி போல் பேச்சு மொழி அல்ல என்ற போதிலும்) அதிகார பூர்வமாக, செம்மொழித் தகுதியைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய வுடன், செம்மொழியான தமிழின் பெயரால் இயங்கிய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பெயரில் அமைந்த - கோட்டையில் இயங்கிய அருமையான செம்மொழி நூலகம் காணாமற் போயிற்று! தனியார் வசமிருந்த அரசு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி - அன்று - செம்மொழிப் பூங்காவை மிக அருமையாக ஏற்படுத்தியதற்கும் கூட பல வகை சோதனைகள்!

கர்நாடகத்தில் இருந்த அதன் தலைமையகம் தமிழ்நாட்டிற்கு வந்த பெருமையைக் குலைக்கும் வண்ணம் தொடர் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன!

செம்மொழிச் செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரி பதிவாளரா?

அந்த செயல் குழு இயங் கவே இல்லை; தலையே இல்லாத நிலை ஒருபுறம்!

இன்னொரு கொடுமை - வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போன்று, இதற் குத் தலைமை அதிகாரி யாக, தமிழுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு சென்னை அய்.அய்.டி. அதிகாரியையா பதிவாளராக, பொறுப்பாளராகப் போடுவது?

அந்தோ கொடுமை! கொடுமை!! இதை நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தி.மு.க.வினரும், தோழமையினரும் தடுத்து நிறுத்தி தமிழ் ஆய்ந்தவர்தான் பொறுப்பாளராக வர ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.

இது அவசர அவசியம்! தி.மு.க.வின்மீது உள்ள கோபத்தை, கலைஞர் மீதுள்ள ஆத்தி ரத்தை, மத்திய மாநில அரசுகள் அதன் பார்ப்பன ஆதிக்கத்தை செம்மொழி மீது காட்டலாமா?

தமிழுணர்வாளர்களே உங்கள் கடமை என்ன?

ஏற்கெனவே மத்திய அரசு, செம்மொழி (Classical Language) என்பதற்காக பழைமை அளவு கோலான காலக் கணக்கை மாற்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளையும், செம்மொழிப் பட்டியலில் கொண்டு வந்து, செம்மொழி தகுதியை மிகவும் கேலிக் கூத்தாக்கி விட்டனரே!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பார்ப்பன ஏடுகள் எப்படியெல்லாம் கேலி செய்து எழுதின! இதனால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில்வை என்றெல்லாம் எழுதியதை மறக்க முடியுமா?

தமிழ்ப் புலவர்களே, தமிழன் என்று சந்து முனையில் சிந்துபாடி நிந்தாஸ்துதியில் ஈடுபடும் அரசியல்வாதிகளே உங்கள் கடமை என்ன? மவுனம்தானா? தமிழா தமிழனாக இரு!

தமிழா தன்மானத்தோடு உரிமைக்குப் போராடு!!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள்.

சென்னை
29.8.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சட்டம் - ஒழுங்கு?


விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ரமேஷ், அவருக் குச் சொந்தமான இரு சக்கரவண்டியில் (மோட் டர் பைக்) சேகுவாரா படத்தினை (ஸ்டிக்கர்) ஒட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு காலமாகவே அந் தப் படம் அவர் வாகனத் தில் இடம் பெற்றிருந்தது.

திடீரென்று அக்கா வல் நிலைய ஆய்வாளர் அந்தப் படத்தினை அகற் றுமாறு ஆணை பிறப்பித் தார். காரணம் கேட்டார், உகந்த முறையில் பதில் இல்லை. ஆய்வாளர் கடு மையாகப் பேசவே வேலையை விட்டு விலகு வது என்று முடிவு செய்து சீருடையை ஒப்படைக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நண்பர் கள் அந்த முடிவைக் கை விடக் கோரவே, சீரு டையை அளிக்காமல் திரும்பி விட்டார்.

திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரச் சினையைக் கைவிடுவ தாக இல்லை. ரமேஷை பற்றிப் புகார் செய்து கண்காணிப்பாளருக்கு எழுதினார். அதன் விளைவு - திருநாவலூர் காவல் நிலையத்திலிருந்து ஆயுதப் படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டார்.

இது என்ன கொடுமை! இரு சக்கர வாகனங் களில் கடவுள் படங்களை ஒட்டி வைத்திருக்கின்ற னர். இதே ரமேஷ் சேகு வாரா படத்துக்குப் பதி லாக ஒரு விநாயகர் படத்தை ஒட்டியிருந்தால் அதனை எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருப் பாரா?

ஒரு போராளியின் படத்தை ஒட்டக் கூடாது - ஒரு கற்பனை - களி மண் கடவுள் படத்தை ஒட்டலாம் என்ற வகை யில் ஏதாவது அரசு ஆணையிருக்கிறதா? ஆய்வாளர்தான் புகார் செய்து கடிதம் எழு தினார் என்றால் மாவட் டக் காவல்துறை கண் காணிப்பாளர் அது குறித்து தம் சிந்தனை யைச் செலுத்தி இருக்க வேண்டாமா?

காவல் நிலையத்திற் குள்ளேயே சட்ட விரோத மாக கோயில்களைக் கட் டலாம்; இந்திய அரச மைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள மதச் சார்பின் மைக்கு விரோதமாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாட லாம் அதெல்லாம் குற்றம் இல்லை; தமக்குப் பிடித்த ஒரு போராளியின் படத்தை தம் சொந்த வாகனத்தில் ஒட்டுவது தான் குற்றமா?

சட்டம் ஒழுங்கு என் பது ஒரு வழிப்பாதையா?

- மயிலாடன்

குறிப்பு: திரு ரமேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பெண்ணின் தந்தை கதறல்: என் மகளை அசராம்பாபு கெடுத்து விட்டாரே!

ஷாஜகான்பூர், ஆக. 29-உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 72 வயது சாமியாரான அசராம் பாபு பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பெண்ணின் தந்தை கூறியதாவது:

என் மகளுக்கு உடல்நிலை சரியில் லாமல் இருந்ததால் சாமியார் அசராம் பாபுவின் ஆசிரமத் துக்கு அழைத்து சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம். என் மகளை பிடித் துள்ள தீய சக்தியை விரட்ட பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்து விட்டார். அப்போது அவர், சத்தம் போட்டால், உன்னையும் வெளியே இருக்கும் உன் பெற்றோரை எனது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று மகளை மிரட்டியுள்ளார்.

அவர் மீது புகார் கொடுத்து 2 வாரங்களாகி விட்டது. இதுவரை காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி இப்போதுதான் காவல் துறையினர் அவருக்கு சம்மன் கொடுத்துள்ளனர். அசராம் பாபுவின் ஆசிரமத்தில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள்.

நாங்கள் பொய் சொல்ல வில்லை. எந்த பெற்றோராவது தனது மகளின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு, இதுபோன்ற குற்றச் சாட்டை கூறுவார்களா? உண் மையை கண்டறிய சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார்மீது புகார்

தாம்பரம், ஆக. 29- பெண் ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பாதிரியாரி டம் காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

தாம்பரம் அடுத்த சந்தோஷ புரத்தைச் சேர்ந்தவர் ஜானி. இவரது மனைவி மரியாள் (39) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). சந்தோஷபுரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விசேஷ காலங் களில் உணவு வழங்கப்படும். இதற்கு உதவியாக மரியாள் இருந்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்துள்ளார் மரியாள். அருகில் வந்த பாதிரியார் அமலதாஸ், ஆபாசமாக பேசி மரியாளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப் படுகிறது. இதை அவர் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து வேலை முடிந்து செல்லும் போது, அவரது கைகளை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன் றுள்ளார். இதனால் பயந்துபோன அவர், பாதிரியாரை கீழே தள்ளி விட்டு தப்பினார். பின்னர் நடந்தவற்றை கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் அக்கம்பக்கத்தினருடன் சென்று பாதிரியாரை கண்டித்துள் ளார்.

இதைத் தொடர்ந்து அதே மாதம் 20ஆம் தேதி நடந்த வழி பாட்டில் எந்த காரணமும் இல் லாமல் ஜானியையும், மரியாளை யும் பாதிரியார் ஒதுக்கி வைத்தார். இது குறித்து செங்கல்பட்டு பிஷப் பிடம் அவர்கள் புகார் செய்தனர். அதற்கு அவர், நிர்வாகிகளிடம் புகார் செய்யுங்கள் என கூறி அனுப்பினார். நிர்வாகிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து மரியாளுக்கு பாதிரியாரிடம் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஆலயத்துக்கு சென்ற மரியாளை, எனது ஆசைக்கு இணங்கு. இல்லாவிட்டால் நீ தவ றானவள் என செய்தி பரப்பி, உன்னையும் உன் குடும்பத் தினரையும் ஊரை விட்டு துரத்தி விடுவேன் என பாதிரியார் அமல தாஸ் மிரட்டி யுள்ளார். அப் போதும் அவரிடம் இருந்து மரியாள் தப்பியுள்ளார்.

இது குறித்து கடந்த 13ஆம் தேதி காவல் ஆணையர் ஜார்ஜி டம் புகார் செய்யப்பட்டது. அதில் பணம், அரசியல் செல் வாக்கு உடைய பாதிரியார் என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரியாள் கூறியிருந்தார். அதுகுறித்து விசாரிக்க சேலையூர் காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நேற்று முன்தினம் பாதிரி யாரிடம் விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா - விடை போட்டியா? பிரளயமா?


பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 14.07.2013 அன்று மதுரையில் கலந்துரையாடல் கூட்டத்தை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கூட்டியிருந்தார்கள்.

காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் அய்ந்து பேர் கலந்து கொண்டு விவரம் கேட்டறிந்தோம். இது எப்படி சாத்தியமாகுமா? என்று எங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. குறிப்பாக நூறு மாணவர்களுக்கு மேல் பங்கேற்றாலே பெரிது என எண்ணினோம். அறிவிப்பும் வந்தது.

அதை 120-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளுக்கு நேரிலும், அஞ்சல் மூலமும் அனுப்பினோம். தலைமை கழகத்திலிருந்து எத்தனை புத்தகம் வேண்டும் என கேட்டபோது 150 போதும் என்று கூறினோம். அவர்களும் அனுப்பிவைத்தனர். புத்தகங்களை நேரில் சென்று கொடுக்க ஆரம்பித்ததுதான் தாமதம். பிறகு ஒவ்வொரு பள்ளியாக கேட்க ஆரம்பித்தனர். வந்த 150 புத்தகங்களும் தீர்ந்து விடவே மீண்டும் நேற்று 300 புத்தகங்கள் தேவைப்பட அதையும் அனுப்பி வைத்தனர்.

இன்று மீண்டும் பள்ளிகளில் இருந்து அலை அலையாக தொலைபேசி அழைப்புகள் கழகத் தலைவர் ச.அரங்கசாமி அவர்களுக்கும், எனக்கும் வந்து கொண்டே இருக்க புத்தகங்களின் எண்ணிக்கையை காலை 11 மணிக்கு 200 என்று சொல்லி, நண்பகல் 12 மணிக்கு 300 என்று சொல்லி, மதியம் 2 மணிக்கு 400 என்று சொல்லி, மாலை 4 மணிக்கு 500 புத்தகம் கண்டிப்பாக தேவை என்று தலைமை கழகத்தில் சொல்லியுள்ளோம்.

எங்களுக்கு சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் இது எவ்வளவு பெரிய பணி! இளம் சிறார்களிடம் அறிவுலகப் பேராசான் அய்யா பெரியார் அவர்களை கொண்டு சேர்க்கும் பணியல்லவா? என நாங்கள் எண்ணிக் கொண்டு, களத்தில் இறங்கியிருக்கிறோம்.இதற்கிடையில் காரைக்குடி ஒரு மய்யம் மட்டும் போதும் என்று இருந்த நிலை மாறி,தேவகோட்டையிலும் ஒரு மய்யத்தில் நடத்துவது என்று மாற்றி ஏற்ப்பாடுகள் செய்து வருகிறோம். போகிற நிலைமையை பார்க்கும் போது மூன்றாவதாக ஒரு மய்யத்தை உருவாக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களையும் அறியாத ஓர் உற்சாகம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.இப்படி ஒரு நிகழ்ச்சியை கழக வரலாற்றில் உருவாக்கி கொடுத்த கழக பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.புத்தகங்களை கொண்டு சென்று பள்ளிகளில் தரும்போது அங்கே நாங்கள் காணும் மரியாதை அளவிட முடியாதது.

ஆம்! அந்த மரியாதை எல்லாம் நம்மை மனிதனாக்கி மானமும் அறிவும் பெற வேண்டும் என வாழ்நாளெல்லாம் உழைத்த தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர் தம் தன்னலமல்லாத கொள்கைகளுக்கும் கிடைக்கும் மரியாதை அல்லவா! இந்த அனைத்து சிறப்புகளுக்கும் முழு முதற் காரணம் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வில்லா உழைப்புதான் என்பதிலே இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.போற்ற வேண்டியவர்கள் தூற்றிக் கொண்டிருக்க, தூற்ற வேண்டியவர்கள் போற்றுகிறார்கள் நம் தலைவர் அவர்களை.

ஆம்! அய்யா பெரியார் அகிலம் முழுமைக்கும் பயணிக்க காரணம் வணக்கத் திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் மானம் பாரா, நன்றி பாரா தொண்டுகள்தான். அது என்றென்றும் வளர்ந்து வீறு கொண்டெழ நாமும் சேர்ந்து உழைப்போம்.

இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் அய்யா வழி நடப்போம்!

அழிவை அணைக்க நேர்ந்தாலும், அய்யா கொள்கை மலர வைப்போம்!! அதற்கு தமிழர் தலைவரின் தலைமையில் சூளுரைப்போம்.

- தி. என்னாரெசு பிராட்லா மாவட்ட கழக செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழி யிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?

(குடிஅரசு, 12.5.1935

தமிழ் ஓவியா said...


உரத்த சிந்தனை


இன்று தேசிய விளையாட்டு தினமாம்!

இந்தியா விளையாட்டுத்துறையில் இன்றுவரை எந்த ஒரு முன்னேற்றமும் எடுக்காததற்கு காரணம் என்ன?, இதற்காக நாம் வேதகாலம் காலூன்ற தோன்றிய காலத்திலிருந்து வந்த மாற்றத்தை கவனிக்கவேண்டும். இது நீண்டகால பரம்பரை நோய் என்று கூறினால் கூட மிகையாகாது.

எல்லாதுறைகளிலும் அனைத்திலும் மனிதர்களின் உழைப்பு 6-ஆம் நூற்றாண்டு வரை நிறைந்து இருந்தது, ஆனால் வேதகாலம் தோன்ற ஆரம்பித்த பிறகு சமூகத்தில் பிரிவினை ஏற்பட்டது, உழைப்பவர் ஒருபுறம் அவர்களின் உழைப்பைச் சுரண்டி தின்பவர்கள் ஒருபுறம்; இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடாய் மாறத்துவங்கியது, இதன் விளைவு உழைக்கும் மக்கள் அடிமைகளாய அவர்களுக்கு இட்ட பணிகளை இரவு பகல் என்று பார்க்காமல் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள இடமின்றி பல நூற்றாண்டுகளாக கழித்தனர்.

அதே நேரத்தில் உழைப்பைச்சுரண்டி வாழும் வர்க்கமோ சோம்பேறிகளாய் கொழுத்து ஓய்வுநேரத்தில் சுகபோகமாய் வாழ்வதையே முறையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் பொது வாழ்க்கையில் கலக்காமல் தங்களை தனிப்பட்டவர்களாக கருதிக்கொண்டு இருந்ததால் வெளிவுலகம் தெரியாமல் உண்பதும் உறங்குவதுமாக கழித்துக்கொண்டு இருக்க விளையாட்டு மற்றும் அதுகுறித்த அறிவு முற்றிலும் தேங்கிப்போனது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் போர் முறையி னாலான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் அவை முகலாய அரச வம்சத்தினருக்கும், படைத் தளபதி அமைச்சர்கள் போன்ற மேம்பட்ட சமூகத்தோடு நின்று விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய போது இங்கு பாரம்பரிய நடனங்கள் என்றும் சம்பிரதாயங்கள், சடங்குகள் என்ற பெயரில் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் தான் விளையாட்டுகளாக நடத்தப்பட்டன. அதுவும் இறுதியில் இரத்தக்களறியாக முடிவுற்றது. வலியவர்கள் தோற்றாலும், வென்றாலும் கொலையில் தான் முடியும். ஆகையால் பொதுமக்கள் பலர் இது போன்ற சடங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி தங்களது ஆட்சியை நிலைப்படுத்திய பிறகு பள்ளிக்கூடங்களில் விளையாட்டைப் புகுத்தினர். ஆனால் பாரம்பரிய குணத் தால் கல்விகற்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை வளப்படுத்துவதிலேயே பார்ப்பன மற்றும் முதலாளி வர்க்கம் அதிகம் அக்கறை காட்டியது, ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்களின் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப்போட்டிகளில் அதிகம் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் வசதியற்ற சூழலில் இருந்து வரும் மாணவ - மாணவிகளே.

இந்தியாவில் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கம் கல்வியுகம் என்று கூறலாம் ஆனால் இங்கு அதிகம் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை அமைக்க கல்வியைக் கற்க ஆரம்பித்தனர். அதனால் தான் சர் சிவி இராமன், கணித மேதை இராமானுஜம் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஜிடி நாயுடு போன்ற திறன்மிகுந்த அறிவியல் மேதைகள் தோன்றினார்கள், ஆனால் இந்திய வரலாற்றில் விளையாட்டுத்துறையில் முத்திரைபதித்தவர்கள் இதுவரை தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவும் விளையாட்டுத்துறையில் பிற நாடுகளைப்போல் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தின் காரணமாக விளையாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்டது, இருப்பினும் அதன் சிறந்த பணிகள் என்று இன்றுவரை எதுவுமே இல்லாதது வேதனைக்குரிய செய்தியாகும். இதற்குப் பெரிய உதாரணமாக கூற வேண்டுமென்றால் தேசிய விளையாட்டுதினத்தை எப்போது உருவாக்கினார்கள் என்று விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கே தெரியாமல் இருக்கிறது, 2002இல் இருந்து தியான்சந்த் பெயரில் விருதுவழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கிறது. ஆனால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு தெரியவில்லை.

ஒரு தேசிய விளையாட்டு தினத்தையே இப்படி கேலிக்கூத்தாக மாற்ற முக்கிய காரணம் கிரிக்கெட். கிரிக்கெட்டில் பணம் பார்த்த பிறகு பல அரசியல் வாதிகளும், பணமுதலாளிகளும் மற்ற விளையாட்டுத் துறைகளில் மக்களின் கவனம் சென்றுவிடாமல் இருக்க கிரிக்கேட்டை மாத்திரமே மக்களிடையே ஒரு விளை யாட்டுப்போல் மாயப்பிம்பத்தை காட்டி வருகின்றனர். சமீபத்தில் வில்வித்தையில் தங்கம் வென்று வந்த வீரங்கனைகளை மரியாதையுடன் வரவேற்க அரசு தரப்பில் டில்லி விமான நிலையத்திற்கு ஒருவர் கூட செல்லாதது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உண்மையில் இந்திய தேசிய விளையாட்டுத்தினம் என்பது ஒரு தினசரி சடங்கு போல் கடமைக்காக நடத்தப்படும் நாளே அன்றி உண்மையில் இந்தியாவில் விளையாட்டிற்கு மரியாதைத் தரப்படும் ஒரு நாளே அல்ல என்று கூறலாம்

தமிழ் ஓவியா said...


கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்று விட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக் கிறது என்ப தற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


கேட்டீர்களா சேதியை? கலாச்சார எல்லையாமே!


விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் அயோத்தியை நோக்கி யாத்திரை புறப்பட இருந்ததும் - உ.பி. அரசு அனுமதி மறுத்ததும் - அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் உ.பி. அரசின் தடை செல்லும் என்று தீர்ப்பு வந்ததும் அனைவருக்கும் தெரியும்.

தடையை மீறிய வி.எச்.பி. பொதுச் செயலாளர் ப்ரவீன் தொகாடியா என்ன சொன்னார் தெரியுமா?

அயோத்தியைச் சுற்றி எங்கள் கலாச்சார எல்லை இருக்கிறது. எனவே அங்கு முஸ்லீம்களின் சின்னங் களை அனுமதிக்க முடியாது என்று கொக்கரித் துள்ளார்.

சட்டீஸ்கர் மாநில வி.எச்.பி.யின் அமைப்புச் செயலாளர் அம்பரீஷ் சிங் என்பவரோ, அயோத்தியைச் சுற்றி 252 சதுர கிலோ மீட்டர் எங்களின் கலாச்சார எல்லை; இந்த வட்டாரத்தில் முசுலிம்களின் எந்த ஒரு சின்னமும் இருக்கக் கூடாது; இருக்கவும் விட மாட்டோம் என்று நீட்டி முழங்கி இருக்கிறார். இந்தக் கூட்டத்தின் கையில் ஆட்சி சென்றால் என்ன ஆகும்? சிந்திப்பீர்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் பூர்விகம் செவ்வாய் கிரகமாம்! விஞ்ஞானிகள் தகவல்


லண்டன், ஆக.30- பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-ஆவது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரண மான மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் கூறியதாவது:

மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரி னங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந் திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப் பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ் வாய்தான் பொருத்தமான கிரகம் என்றா லும், அவை பரிணாம வளர்ச்சியடை வதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோ ரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்கிறார் ஸ்டீவன் பென்னர்.

தமிழ் ஓவியா said...

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்கள் இனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, ஆக.30- பழங்குடியினர் பட்டி யலில் (எஸ்.டி.) நரிக் குறவர்கள் இனத்தவரைச் சேர்க்க மத்திய அமைச் சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

இது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் கலைஞரும், தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியிருந்த கடிதங் களில் கோரிக்கை விடுத் திருந்தனர்.

இந்நிலையில், பிரத மர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் நரிக்குறவர்கள் இனத் தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப் புதல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட் டத்தின் 342 (1) மற்றும் (2) பிரிவுகளில் நரிக் குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க மத்திய அரசு சட்டத் திருத்த மசோதா தயாரிக்க வேண்டும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கான அறி விப்பு அரசிதழில் வெளி யிடப்படும். அதன்பிறகு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகள், பலன்கள் நரிக்குறவர் களுக்குக் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...


தகுதி - திறமையைப் பாரீர்! 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்ற நால்வருக்கு வங்கி செயல் தலைவர் பதவியாம் எல்லாம் ஜாதிக் குறிதான்!


புதுடில்லி, ஆக.30- பொதுத் துறை வங்கிகளில் செயல் இயக்குநர் (Executive Director) பொறுப்புகளுக்கு 4 அதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் நேர்முகத் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களோ, 30-க்கு ஒன்றே ஓன்றுதான்!

ஒரு செயல் இயக்குநர் (Executive Director) வங்கியின் மிக உயர்ந்த நிர்வாகத்தின் ஒரு பங்கு. வங்கித் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகிய பணிகளுக்கு அடுத்த இடம்தான் செயல் இயக்குநர்.

எல்லா வங்கி அதிகாரிகளும் அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கைகளில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்று, நீங்கள் வேலை பெற முடியுமா? முடியும். நீங்கள் பொதுத்துறை வங்கியின் செயல் இயக்குநராக ஆசைப் பட்டால் முடியும்.

நான்கு பொதுத் துறை வங்கிகளின் பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியப் பொருளாதாரப் பணிகள் செயலாளர் ராஜீவ் தக்ரூ என்பவரால் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவ்விதம் அறிவிக்கப்பட்டவர்கள் பி.எஸ். ராமராவ், ஆந்திரா வங்கியின் பொது மேலாளராக இருப்பவர், விஜயா வங்கியின் செயல் இயக்குநராகவும், சென்ட்ரல் பாங்கு ஆஃப் இந்தியாவின் பொது மேலாளரான அப்துல் அகர்வால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநராகவும் சிண்டிகேட் வங்கி பொது மேலாளர் மகேஷ் ஜெயின், இந்தியன் வங்கி செயல் இயக்குநராகவும், ஒரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸ் பொது மேலாளராக இருந்த தக்கர், தேனா வங்கி செயல் இயக்குநர் பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

செயல் இயக்குநர் பதவி, வங்கித் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி. செயல் இயக்குநர் பதவிக்கு, பணி அமர்த்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும். ஆளுநர் வர முடியாமல் போகும் பட்சத்தில், பொருளாதாரப் பிரிவுச் செயலாளர் நியமிக்கும் ஒரு துணைக் குழு, வேட்பாளர்களைப் பேட்டி கண்டு பொருளாதாரப் பிரிவு செயலாளர் தலைமையில் வேட்பாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

ஆனால், இந்த குறைந்த மதிப்பெண் பெற்ற பொது மேலாளர்கள் பணி நியமனக் குழுவை எப்படி ஏமாற்றி வந் தனர் என்பது புரியவில்லை. (எல்லாம் ஜாதிக் குறிதானே).

தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 28.8.2013)

தமிழ் ஓவியா said...


தீவிரவாதம் ஒழிய, மாணவர்கள் பகுத்தறிவாளர்களாகட்டும்!


இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதம் சாராத அறிவியற் கொள்கைகளை, மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டி யது அரசின் கடமை. ஆனால் உண்மை நிலையென்ன? நாட்டில் மதக்கலவரங் கள், தீவிரவாதங்கள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு சம்பவங்களென நாளும் பெருகி வருகின்றது. மக்களின் வாழ்க்கையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற தன்மைகள் உண்டாக அரசாங்கத்திடம் எந்த விதமான கொள் கைகளோ, கோட்பாடுகளோ, எதுவும் இல்லை. மக்கள் வெளியே நடமாட அஞ்சு கின்றனர். பெண்கள் ஆபரணங்களுடன் சென்று திரும்ப முடியவில்லை.

இளம் பெண்கள் தனியாக வெளி இடங்களுக் குச் சென்று வர முடியவில்லை. 1947-இல் கிடைத்ததாகச் சொல்லப்படும் சுதந்திரம் 2013-ஆம் ஆண்டிலும் மக் களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியா ஜனநாயக நாடு என்று சொல் லப்படுகிறதே தவிர ஜனங்களுக்குப் பாதுகாப்பில்லை. நாயகர்களுக்கும் (தலைவர்களுக்கும்) பாதுகாப்பில்லை. எங்கும் பணநாயகமே மேலோங்கி நிற்கிறது. இலஞ்சம் தலை விரித்தாடு கிறது. இலட்சியவாதிகள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், நாட்டில் அமைதிக்குப் பங்கம் தான் விளையும். இன்று தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீருக்கு டில்லிக்கும் சென்னைக் கும் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது. தப்பித்தவறி தண்ணீர் வந்துவிட்டால், அதைச்சேமிக்க எந்த துப்புமில்லை. கொடநாட்டில் கொடி நாட்டினால் போதுமா? தமிழ்நாட்டில் நாற்று நட வேண்டாமா? கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும் (முக்கொம்பு) கீழணைக் கும் (அணைக்கரை) இடையில் தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர், புத்தூர், குடிதாங்கி, திருவைக் காவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் 30 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனரே!

இதுபற்றி அரசுக்கு ஏதேனும் அக்கறை உண்டா? பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானா? மேட்டூர் அணை 16 கதவணையிலிருந்து இடைப்பாடிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய் வெட்டி யிருந்தால், பெரிய ஏரி நிரம்பியிருக்குமே. மக்கள் நலன் பற்றி அக்கரை இல்லாத அரசு; திராவிடர் கழகங்களின் ஆர்ப் பாட்டங்களை அலட்சியப்படுத்தினார் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணக்கூடும் என்றாரே நம் தமிழர் தலைவர், உண்மை தானே!

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்கு, தமிழ்நாட்டு முதலமைச்சரே முட்டுக்கட்டை போடுகின்றார் என்றால், ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டு மக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகவேண்டிய நிலைதானா! இஞ்சி தின்ற குரங்காக இன்று மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். மந்திரி மார்கள், வாய் திறக்கவே பயப்படுகிறார் கள். பதவி ஆசையில் பட்டத்து ராணியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்கும் திராணி யுள்ள தலைவர் நம் தமிழர் தலை வரன்றோ! அவரணியில் தமிழ்மக்கள் ஒன்று சேர வேண்டாமா! சிந்திப்பீர். இன்னும் உறக்கம் வேண்டாம். விழித் தெழுங்கள்!

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழர் தலைவர் காலத்திலேயே முடிவு கட்ட வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள். இன்றைய மாண வர்கள் நாளை நாடாளும் மந்திரிகள். அவர்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கப் படவேண்டும். அவர்கள் சுயசிந்தனையா ளர்களாக மாற்றப்பட வேண்டும். நாம் வரலாற்று ரீதியாக திராவிடர்கள் என்பது உணரப்படவேண்டும்.

இதற்காகத் தான், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு இணைந்து வழங்கும் பெரியார் 1000 மாபெரும் வினா - விடைப் போட்டியாகும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- கா.நா.பாலு (தலைவர் நகர தி.க., இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.

(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


மனப்பாடம் செய்வீர்!


பார்ப்பனரைப் புரோகிதராக அழைத்து நடைபெறும் திருமண வீடுகளிலே புரோகித பார்ப்பான் கூறும் மந்திரம் கீழே தரப்படுகின்றது. இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து நமது இயக்கப் பேச்சாளர்களும், பகுத்தறிவாளர்களும் ஒவ்வொரு திருமணத்திலும் கூறக் கேட்டுக் கொள்கின்றோம்.

சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ துரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ.

இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர் முறையே கந்தவர்வனும், உத்திரனும், அக்னியும் அடைந்து அனுபவித்தார்கள். இப்போது அய்ந்தாவதாக மண மகனாகிய உனக்குத் தானம் செய்து கொடுக்கிறேன் என்று புரோகிதர் சொல்லுகிறார்.

நமது பெண்களையும், ஆண்களையும் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கேவலப்படுத்துகிறார்கள் என்கிற உண் மையை நாம் அம்பலப்படுத்தி பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை உணர வைக்க வேண்டும். புரியாத மொழியால் வரும் கேட்டைப் பார்த்தீர்களா? மந்திரங்கள் எல்லாம் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும் சூட்சுமம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...

புத்தர் பற்றி ரசல்!

கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல்லொழுக்கம் எதையும் கிறித்து புதிதாக கூறவில்லை

- பெர்ட்ரண்டு ரசல்

தமிழ் ஓவியா said...


மதத்திற்குள் ஒருமைப்பாடு


இந்து சந்நியாசிகள் எதை துறந்தாலும் பொறாமையைத் துறக்க மாட்டார்கள் என்று எழுத்து வேந்தர் சுகி.சுப்பிரமணியம் ஒரு தடவை எழுதியிருந்தார். இந்திய நாட்டுச் சாதாரண சந்நியாசிகளிலிருந்து மடாதிபதிகள் வரை இதற்கு விதி விலக்கல்லர். ஜகத்குரு என்பதெல்லாம் கூட ஒப்பனைப் பெயர்களே தவிர, உணர்வுப் பெயர்களல்ல.

இந்தியாவில் ஜகத்குரு என்ற பெயரில் அரை டஜன் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இதில் சிருங்கேரி ஜகத்குரு, காஞ்சி காமகோடி ஜகத்குரு மடத்தை, ஆதிசங்கரர் நிர்மாணித்த மடமே இல்லை என்பார். சைவ மடங்கள் பற்றிக் கேட்பானேன்? திருவாவடுதுறையும், திருத்தரும புரமும் வடக்கு - தெற்குத்துருவங்கள் போல நெடுந் தொலைவுக்குப் போவானேன்? உங்கள் நல்லூர் ஞான சம்பந்தராதீனம் சுவாமிநாத சுவாமிகளுக்கும், மதுரை ஆதீனத்துக்குமே இப்பொழுது இராசிப் பொருத்த மில்லையாம்!

இந்த பழைய மடங்கள்தான் அப்படி என்றால், புதிய நிறுவனங்களிடையிலும் கூட ஒருங் கிணைப்பு இல்லை. இராம கிருஷ்ண மிஷனில் சுவாமி சிவா னந்தர் சேரவில்லை. சிவானந்த தபோவனத் திலோ இராமகிருஷ்ண மிஷனிலோ சுவாமி சின்மயானந்தர் சேரவில்லை.

எல்லாம் தனித்தன்மைகள்! இந்த அவலச் சூழ்நிலையில் எப்படி உலக நிறுவனம் தோன்ற முடியும்?

ஜாதி வேற்றுமைகள், வழக்கு நெறிகள், விளம்பர ஆசைகள், ஆதிபத்திய உரிமைகள் ஆகியன சைவத்திற்கு ஒரு உலகந் தழீஇய நிறுவனத்தை படைப்பதில் தடையாக உள்ளன. இந்த தடையை உடைத்து ஒருமைப்பாடு காண நாம் எடுத்த முயற்சிகள் போதிய பலன் தர வில்லை.

- குன்றக்குடி அடிகளார் - (நமது சிந்தனை 1.11.1980 இதழில்)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல... யூகோஸ்லாவியாவில்....

யூகோஸ்லாவியா பயணக்கதை எழுதி வரும் திரு.மணியன் அங்கு தான் சந்தித்த ஒரு முஸ்லிம் ஜோடிகளுடன் நடந்த உரையாடலை எழுதுகிறார்.

நீங்கள் தினமும் பிரார்த்தனை செய்வீர்கள் இல்லையா? என்று கேட்டேன் அந்த இளம் ஜோடியை.

இல்லை, எங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை! என்று பதில் சொன்னார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் முஸ்லீமாக இருக்க முடியாதே! என்றேன்.

இந்த நாட்டில் அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் முஸ்லீம் இல்லை; கிறிஸ்டியன் இல்லை; நான் ஹ்யூமன்... இங்கே இரண்டு மனிதர்கள்தான் சந்தித்துக் கொள்வார்கள். இரண்டு மதங்கள் சந்தித்துக் கொள் ளாது. கிறிஸ்தவர் குடும்பத்தில் பிறந்த பெண், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பிள்ளையைக் காதலித்து கல் யாணமும் செய்து கொள்வாள். எங்கள் திருமணமெல்லாம் பதிவுத் திருமணம்தான்... என்று விளக்கமாக சொன்னாள்.

நன்றி: இதயம் பேசுகிறது மே (5-11) 1985
தகவல்: வே.அன்புராஜ், திருலோக்கி

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வினோபா?

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்தி கனால் சேவை செய்ய முடி யாது. உதாரணமாக ஒருவன் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடு துறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?

(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தமிழ் ஓவியா said...

ஆளை விடய்யா!

திருடர்களுக்கு: வீண் சிரமப்பட்டு பூட்டை உடைக்க வேண்டாம். விலை மதிப்புள்ள பொருள்கள், பொன், வெண்கலச் சிலைகள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் எதுவும் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படி எழுதப்பட்டுள்ள கோவில் நெல்லை மாவட்டம் காருகுறிச்சியின் கீழ் பகுதியில் கால்வாய் கரையில் அமைந்துள்ளது.

ஆளைவிடய்யா... என் கையிலே மடியிலே ஒன்றுமில்லை என்று கடவுள் கெஞ்சுவது போல் இல்லையா?

தகவல்: நெல்லை சந்திரன், மீனவன்குளம்