Search This Blog

18.8.13

சமூகநீதிச் சிந்தனை: கூடாரம் காலியாகும் - எப்போது?

டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அனில்குமார் என்ற மாண வனும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலமுகந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த மாணவனும் 2012இல் தற்கொலை செய்து கொண்டனர். அது மிகப் பெரிய புயலைக் கிளப்பியது.

மாணவர்கள் இருவரும் கல்வியில் சிறந்தவர்கள்! அவர்களின் தற்கொ லைக்குக் காரணம் ஜாதிவெறிதான்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டி விட்டு மாணவர்கள் மத்தியில் நஞ்சைக் கக்கும் ஒரு சதி வேலையில் ஈடு பட்டது அந்த எய்ம்ஸ் நிறுவனம்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள்  ஏளனத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள் -_ மேல் ஜாதி பேராசிரியர்களாலும் மாணவர் களாலுமே!

இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெற்றி பெற முடியாது என்ற நிலையில் மேல் ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெற்ற மாணவர்களைப் பழி வாங்கும் அற்பப் புத்தியில் செயல்பட்டது.
புறக்கணித்தல், - ஒத்துழையாமை, மனத் தளர்வை உண்டாக்குதல், ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளுதல், - ஏளனம் செய்தல் என்னும் இழிவுக் குணத்தோடு நடந்து கொண்டனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பார பட்சம் என்றால் தெரிந்து கொள்ள லாமே!

இதன் பின்னணியில் இருந்தவர் எய்ம்ஸ் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால் என்ற பார்ப்பனர்.

மருத்துவர் அன்புமணி அவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற முறையில் எய்ம்ஸில் நடந்து வரும் அத்துமீறல்களை விசாரிக் குமாறு பல்கலைக் கழகங்களின் மானியக் குழுத் தலைவராக இருந்த டாக்டர் தோரட் தலைமையில் மூவர் குழு ஒன்று  விசாரணை நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அந்தக் குழு எய்ம்ஸில் நடை பெறும் அத்துமீறல்கள் ஒழுங்கீனங் களைச் சுட்டிக் காட்டியதுடன், அவற்றை நீக்குவதற்கான ஆலோ சனையையும், வழிமுறைகளையும் பரிந்துரைகளாகத் தந்தது.

எய்ம்ஸ் நிறுவனமோ அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது என்றும், தோரட் மீது வழக்குத் தொடுக்கப் போவதாகவும் மிரட்டியது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் தான் தோன்றித் தனத்தைத் தடுத்து நிறுத்துமாறு 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பிரதமருக்குக் கடிதமே எழுதினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்தியாவிலேயே இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெய்யில் பொரிக்கப்பட்டது போலும்!  இக்கல்லூரியில் படிக்கும் இளங்கலை மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்.) 30 சதவிகிதத்தினருக்கு எய்ம்ஸ் மருத் துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் சரியானது? பார்ப்பான் பண்ணையம் கேட் பாரில்லை என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு - எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு தேவையில்லை என்று தீர்ப்புக் கூறியுள்ளது.
இதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கையினை வெளி யிட்டார் (விடுதலை 6.8.2013).

டில்லியில் ஒத்தக் கருத்துக்கள் கொண்டோரை இணைத்துப் போராட் டம் நடத்தப்படும் என்று போராட்ட அறிவிப்பினைக் கொடுத்தார்.

நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புக் கணைகள் கிளம்பின. 14.8.2013 அன்று இந்தக் காரணத்துக்காகவே நாடாளு மன்றம் செயல்படாமல் முடக்கப் பட்டது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் நாடாளு மன்றத்தில் அரசு சார்பில் உறுதி அளித்தார். உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்; தேவைப் பட்டால் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இடஒதுக்கீடு காப்பாற்றப்படும் என்று அறிவித்ததன் அடிப்படையில் நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது.

போராடிப் போராடிப் பெற்ற சமூக நீதியைக் கொல்லைப்புற வழியாக வீழ்த்திட வேதியக் கூட்டம் சதி வலை களைப் பின்னிக் கொண்டே வருகிறது. 2009ஆம் ஆண்டைய ஒரு சதி!

மசோதாவின் பெயர் தாழ்த்தப் பட்டோர் பணியிடங்கள் மற்றும் சேவைகளுக்காக, இடஒதுக்கீடு (Reservation in Posts and Services) மசோதாவாகும்.
இது மசோதா அல்ல -_ தாழ்த்தப் பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்குச் சுருக்கு மாட்டும் தூக்குக்கயிறு.

தகுதி வாய்ந்தவை என்று பட்டியல் போட்டு வைத்துள்ள 47 நிறுவனங் களில் இவர்களுக்கு உள்ளே நுழையாதே! என்ற அச்சுறுத்தல் விளம்பரப் பலகையாகும்.

அய்.அய்.டி.கள் 7, அய்.அய்.எம்.கள் 7; அலகாபாத் பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் 10, புதுச்சேரி ஜிப்மர், வாரணாசி இந்துப் பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், மருத்துவக் கல்வி மற்றும் சண்டிகர் ஆராய்ச்சிக்கான முது கலைப் பட்டப் படிப்பு நிறுவனம் -_ விசுவ பாரதி (மேற்கு வங்காளம்) கோல்கத்தா விக்டோரியா நினைவகம், தேசிய நூலகம், இந்திய அருங் காட்சியகம், புதுடில்லி இந்தியப் போர் நிறுவனம் இவைகளில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது,  கிடையவே கிடையாது.

இதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாம் (Institute of National Importance). இப்படி ஒரு பட்டியலைத் தயாரித்த வர்கள் யார்? எந்தக் குழு தயாரித்தது? அப்படி தயாரிக்க ஆணை பிறப் பித்தது யார் அல்லது எந்த அமைப்பு?

அதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும்; உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனரின் சேட்டைகள் -_ திரைமறைவுச் சதிகள் பின்னணியில் என்பது மட்டும் பகல் சூரியன் போன்ற உண்மையாகும். இந்த 47 கல்வி நிறுவனங்களோடு முற்றுப் புள்ளியா? இல்லை; தேவைப்பட்டால் இந்தப் பட்டியலை நீட்டிக் கொள்ள லாம்; அரசு அனுமதி பெற வேண் டுமா? நாடாளுமன்றத்தின் அனு மதியைப் பெற வேண்டுமா? அதெல் லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடை யாது.

எல்லா நிறுவனங்களின் தலைகள் எல்லாம் பூணூல் கயிறாயிற்றே!)
2004-இல் அய்க்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் (CMP) ஒன்று வகுக்கப் பட்டது.

அதன் அடிப்படையில் தாழ்த்தப் பட்டவர் மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணியிடங்கள் மற்றும் சேவை மசோதா ஒன்று 2004-இல் மக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

திரு. சுதர்சன் நாச்சியப்பன் அவர்களின் தலைமையிலான அரசுப் பணித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2005 ஜூன் மாதத்தில் அக்குழு சமூகநீதிக் கண் ணோட்டத்தில் பலன் உள்ள அம் சங்கள் நிரம்பிய அறிக்கையினை அளித்தது.

எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாமல் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, -ரூ. 50 ஆயிரம் தண்டத் தொகை அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கிடப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றை தூரத் தூக்கி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகள் 47 நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கும் ஒரு மசோதாவைத் தயாரித்து வெறும் இரண்டு நிமிடங் களில் மாநிலங்களவையில் நிறைவேறச் செய்து விட்டது. ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் நக நுனியில் மறைத்து வைத்திருந்த விஷத்தின் மூலம் சாகடிக்கப்பட்டு விட்டன.

இந்தச் சதி எப்படி நடைபெற்றது? அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற அமைப்புகளின் இயக்குநர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர்களின் முயற்சியில் இது நடந்திருக்கிறது.

பிரதமரிடம் அவர்கள் ஒன்றுபோல வைத்த அழுத்தம் என்ற கண்ணி வெடியில் பிரதமர் சிக்கியிருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த 47 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளித்தால் தகுதியும் திறமையும் இதயம் வெடித்துச் செத்துப் போய்விடும் என்று மூக்கால் அழுது காரியம் சாதித்திருக்கிறார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்த பட்ச திட்ட மெல்லாம் நமது பிரதமருக்கு எங்கே தெரியப் போகிறது என்ற நினைப்பு!

இப்படி ஒரு மசோதா தயாரிக் கப்பட்டதோ அதனை அமைச்சரவை யிலும் வைக்கப்பட்டபோது- அதனை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புள்ளிகள் சமூகநீதிக் காற்றை சுவா சித்துக் கொண்டவர்கள் கவனிக்காமல் எப்படி குறட்டை விட்டனர்?

நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நம் மக்களின் நிலை இந்த நிலையிலா இருக்கிறது என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.
விதி விலக்கு அளிக்கப்பட்ட 47 நிறுவனங்களின் பட்டியலை பார்த்த பிறகு தான் அய்யய்யோ! மோசம் போய் விட்டோமே! என்று கதற ஆரம்பித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் சேர்த்து ஒரே மசோதாவாகக் கொண்டு வரவே திட்டமிடப்பட்டது.

இடஒதுக்கீடு என்பது பொதுப் பிரச்சினையாக இருப்பதால் ஒரே வகையான சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்கிற நல்லெண் ணத்துடன்தான் அவ்வாறு கூறப் பட்டது.

அதெல்லாம் முடியவே முடியாது, தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் (Sc;ST) தனி மசோதா தேவை என்று அடம் பிடித்தனர். கடைசியில் நிலைமை என்ன? கோட்டை விடப்பட்டது.

இந்தத் துறை என்பது பிரதமரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இணை அமைச்சராக பிரதீவ்ராஜ் சவுகான் என்பவர் இருந்தார். தாழ்த்தப்பட்டோர் நாடாளுமன்றக் குழு உண்டு. தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் மூன்று விழுக் காடு உள்ள பார்ப்பனர்கள் கண் களில் மிளகாய்த் தூள் தூவுகின்றனர் என்றால், இந்த நிலையை என்ன சொல்ல!

இந்த  சமூக அநீதியை எதிர்த்தும் சுதர்சனநாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கோரியும் சென்னையில் மெமோரியல் ஹால்முன் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது (24.2.2009).

இடை இடையே எதிர்ப் போரா ட்டங்களை நாம் நடத்தி வந்தும்கூட நீதிமன்றங்களைப் பயன்படுத்தி உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டம் தம் காரியத்தைச் சாதித்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
மருத்துவக் கல்லூரி இளங்கலை(MBBS)ப் படிப்பில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவீத இடங்களைப் பெற்று நுழைவுத் தேர்வை நடத்துகிறது. தேசிய தேர்வு வாரியம் (National Board of Examination)
அதே போல முதுகலைப் பட்டப் படிப் பில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீத இடங்களைப் பொதுத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை யும் நடத்துகிறது.

இதில் என்ன கொடுமையென்றால் இவற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடே கிடையாது. இடஒதுக்கீடு வழங்கப்படும் மாநிலங்களிலிருந்து இடங்களை அள்ளிச் சென்று இந்திய அளவில் இடங்களை இடஒதுக்கீடே இல்லாமல் தானம் (?) செய்வது எந்த வகையில் அறிவு நாணயம்?
இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த மாநிலத்திலிருந்து இடங்களை அலக்காகத் தூக்கிச் சென்று நுழைவுத் தேர்வை நடத்தி அகில இந்தியாவுக்கும் தான தர்மம் செய்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1896 இளங்கலை (MBBS) இடங்கள் உள்ளன. +2 தேர்வு மதிப் பெண்கள் அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு முறையில் (கவுன்சிலிங்) இடங்கள் நிரப்பப்படுகின்றன.

நெருக்கடி நிலை காலத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று, தானடித்த மூப்பாக நடந்து கொள்கிறது -_ இந்திய மத்திய அரசு.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதைபோல இப்பொழுது இன் னொரு வேலியைத் தாண்டிக் குதித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதுகலை என்று வித்தியாசம் இல்லாமல் மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கைக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தப் போகிறதாம். (Neet - National Eligibility - Cum - Entrance Test)
பெயரளவிற்கு மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் வெறும் கட்டடங்களாக இருக்கும் அவ்வளவு தான்.

இதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஒழுங்கான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த நுழைவுத் தேர்வை நடத்திட மருத் துவக் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்றுஒரே போடாகப் போட்டு விட்டது. விட்டு விடுவார்களா? உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்யப் போகிறார்களாம்.

இதனை எதிர்த்தும் போர்க்கொடி தூக்கி இருப்பதுதிராவிடர் கழகமே!

(தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை விடுதலை 22.7.2013).
@@@@@@@@@@@@@@@@@@@@

28.9.2012 அன்று சென்னைக்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கான நாடாளுமன்றக் குழுவிடம் (Parliamentary Committee on the Welfare of other Backward Classes) திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில்கூட கீழ்க்கண்ட அம்சம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது என்ற கொள்கை முடிவை 2007இல் மத்திய அரசு நடை முறைபடுத்தியதை எதிர்த்து உயர்ஜாதி மக்கள் போராட்டம் மேற் கொண்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். ஒரு நீண்ட நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகும்; பொது விவாதம் மற்றும் கலந் துரையாடலுக்குப் பிறகும், ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீதம் இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று ஆண்டு காலத்தில் தவணை முறையில் நிறைவேற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. உயர் ஜாதி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் 9 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்து ஆணை யிடப்பட்டது.

இவை அனைத்திற்கும் பிறகும் இந்த 9 சதவீத இடஒதுக்கீடு முறையாகவும் முழுமையாகவும் பல மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் கால தாமதமின்றி உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்த தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க் கையிலும் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2007ஆம் ஆண்டு முதல் அளிப்பது என்ற கொள்கை முடிவை மத்திய அரசு மேற்கொண்டு நடை முறைப்படுத்திய நிலையில், மத்திய பல்கலைக் கழகங்கள், இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் IITS இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் IIMS ஆகியவற்றில் இத்தகைய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் தவிர்ப்பு அளித்திருப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

எனவே, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது என்ற கொள்கை முடிவை எந்தவிதத் தவிர்ப்பும் இன்றி அனைத்து மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் மத்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் IITS,, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் IIMS  உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கோரிக்கை மனுவில் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

80 சதவீதம் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை வைக்கும் நிலையிலும், மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் நம்மை ஏய்க்கும் இடத்திலும் இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ண ஆரம்பித்தாலே போதும், அந்த எண்ணத்தில் கொஞ்சம் தீ பிழம்புத் தொனித்தாலே போதும்! ஏய்க்கும் கூட்டத்தின் கூடாரம் காலியாகி விடும்! அந்த எண்ணத்தை ஏற்படுத்தவும்  கூடாரத்தைக் காலி செய்யச் செய்யவுமே ஓர் இயக்கம் இருக்கிறது -_  அதுதான் திராவிடர் கழகம். ஒரு தலைவர் இருக்கிறார் அவர்தான் அக்கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

ஒருவர்கூட இல்லையே!
மத்திய அரசு துறைகளில் 149 அரசு செயலாளர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை. - மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி நாடாளுமன்றத்தில் தகவல் 6.9.2012

****************************************************************************
              -----------------------------  மின்சாரம் அவர்கள் 17-8-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

44 comments:

தமிழ் ஓவியா said...

ஏழுமலையானும் செல்போனும்!

திருப்பதி ஏழுமலையான் தரிச னத்துக்குச் செல்போனுடன் செல்லு வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன், ஏழுமலையானுக்கு அத னால் என்ன இடர்ப்பாடோ! எந்தச் சத்தம் கேட்டால்தான் என்ன - அதுதான் சிலையாயிற்றே! அதற்கு என்ன இடர்ப்பாடு ஏற்படப் போகிறது?

பக்கத்தில் இருந்து மந்திரம் ஓதும் அர்ச்சகர் பார்ப்பான் சொல்லு வதையும் அது கேட்கப் போகிறதா என்ன?

அடேயப்பா ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு எவ்வளவு பம்மாத்து வேலை!

தமிழ் ஓவியா said...

கைது ஏனோ?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ்ப் பிரிவைச் சேர்ந்த மாணவர் களுக்கு உயர் கல்வியில் சலுகைகள் வழங்கக் கோரி தலைமைச் செய லகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.

மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பிரச்சினைகளை அறிந்து, தேவையான முயற்சி களைச் செய்வதுதான் ஒரு நல் லாட்சியின் கடமையே தவிர வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பூச்சாண்டியை காட்டிக் கைது செய்வது சரியல்லவே - அதுவும் சமூக நீதிப் பிரச்சினையில்!

தமிழ் ஓவியா said...

பள்ளி வாசல் மீது தாக்குதல்

இலங்கையில் பள்ளி வாசல்மீது பவுத்தர்கள் தாக்குதல் நடத்தி யிருப்பதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தினர் நேற்று (16.8.2013) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கை அரசாக இருந்தாலும் சரி, சிங்களவர்களாக இருக்கும் பவுத்தர்களானாலும் சரி, தமிழர்கள் என்றால் - அவர்கள் எந்த மதத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களைத் தாக்கிட அவர்களின் நிறுவனங்களை அடித்து நொறுக்கிட கைத்தடிகள், ஆயுதங்கள் சிங்களவர்கள் கைகளுக்கு எப்படியோ வந்துவிடும்.

சிங்களவன் ஒவ்வொருவனும் இனவெறியனாகவே இருக்கிறான். போதும் போதாதற்குச் சிங்கள இன வெறியன் ராஜபக்சே அங்கே சர்வாதிகாரி.

இதைப்பற்றி எல்லாம் இங்குள்ள சோ ராமசாமிகள், குருமூர்த்திகள் மற்றும் பார்ப்பன ஊடகங்களுக்குக் கவலையில்லை; ஈழத் தமிழர்கள் பிரச்சினையென்றால் இவர்களின் கண்கள் இருண்டுப் போய் விடும்!

தமிழ் ஓவியா said...

தங்கமே தங்கம்

நாள்தோறும் ஓர் அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. அது தங்கத்தின் விலை நிர்ணயம் ஒவ்வொரு நாளும் - அதிரடி மாற்றத்திற்கு அது ஆளாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு என்கிறது இன்றைய செய்தி.

என்றாலும் நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைச்சல் இல்லை. அடுத்து வரும் அட்சய திருதியை என்ற நாளில் தங்கத்தின் விலையை உச்சத்தில் ஏற்றினாலும் ஏற்று வார்கள்.

ஏனெனில் கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கம் வாங்கினால் திடீர் குபேரர்கள் ஆகி விடுவார் களே - அப்படி ஒரு மூடநம்பிக் கையைப் பிரச்சாரம் செய்து வைத்துள்ளார்களே

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வீழ்ச்சி என்று வாள் வாள் என்று கத்து கிறார்களே - ஒரே ஒரு சட்டம் போடட்டும்! தங்க நகைகளுக்குத் தடை, கோயிலில் உள்ள நகைகள் அரசுடைமை ஆக்கப்படும், தங்கம் என்பது அரசின் கஜானாவில் மட்டும் என்று ஒரே ஒரு அவசர சட்டத்தைப் போட்டுச் செயல்படுத் தட்டும். உலகிலேயே இந்தியா பொருளாதார நிலையிருப்பில் முதல் பரிசைத் தட்டிக் செல்லாதா?

கையில் வெண்ணெய் இருக் கிறது - என்றாலும் நெய்க்கு அலைந்து கொண்டு இருக் கிறார்களே - அய்யோ பாவம்!

தமிழ் ஓவியா said...

மோடிக்கு மொத்துகள்

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிஜேபியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொன்னாலும் சொன்னார்கள் - நாட்டில் கடும் எதிர்ப்புச் சுனாமி சுழன்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பார்களே - அது நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த மோ(ச)டிக்கே முற்றும் பொருந்தும்.

சிறுபான்மையினரை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னாலும் சொன் னார்; நாலாப் பக்கங்களிலிருந்தும் மொத்தோ மொத்துகள்.

நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய், கணிசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் - அமர்த்தியா சென் போன்ற அரசி யலுக்கு அப்பாற்பட்ட பொருளாதார அறிஞர்கள்கூட கடுமையான விமர் சனங்களை மோடி மீது ஏவினார்கள். சுதந்திர தின உரையில் நாகரி கமற்ற வகையில் பிரதமரைப் பார்த்து ஒண்டிக்குஒண்டி சந்திக்கலாமா என்று சவால் விடுத்தார்.

பிஜேபியின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானியே இது அநாக ரிகம் என்று முகத்தில் அறைந்தது போல் கருத்துக் கூறினார்.

மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறிய சுவையான விமர்சனம் - மோடி என்றால் தேசிய தர்ம சங்கடம்! என்றாரே பார்க்கலாம்.

குஜராத்தில் வளர்ச்சியோ வளர்ச்சி! என்று பல வண்ணத்தில் விளம்பரப் பலுன்களைப் பறக்க விட்டு, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் கோயபெல்சுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது அல்லவா! அது பற்றியும் மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களைவிட அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இடையில் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே (Dropouts) நிறுத்துவது குஜராத்தில்தான் என்று சவுக்கடி கொடுத்துள்ளார்.

ஒரு அரசின் சாதனைகளில் கம்பீரமாக நிற்க வேண்டியது கல்வியே!

அதிலேயே கோட்டை விட்டவர் - ஓட்டைப் போட்டவர் எப்படி நல்லாட் சியை நடத்துவதாகக் கருத முடியும்?

இந்துத்துவாவாதி அல்லவா? கல்வியைப் பார்ப்பனர் அன்றி மற்ற வர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிற மனு தர்மப் புத்தியோடு செயல்படுகிறார் போலும்!

தமிழ் ஓவியா said...

மோடிக்கு மொத்துகள்

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிஜேபியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொன்னாலும் சொன்னார்கள் - நாட்டில் கடும் எதிர்ப்புச் சுனாமி சுழன்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பார்களே - அது நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த மோ(ச)டிக்கே முற்றும் பொருந்தும்.

சிறுபான்மையினரை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னாலும் சொன் னார்; நாலாப் பக்கங்களிலிருந்தும் மொத்தோ மொத்துகள்.

நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய், கணிசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் - அமர்த்தியா சென் போன்ற அரசி யலுக்கு அப்பாற்பட்ட பொருளாதார அறிஞர்கள்கூட கடுமையான விமர் சனங்களை மோடி மீது ஏவினார்கள். சுதந்திர தின உரையில் நாகரி கமற்ற வகையில் பிரதமரைப் பார்த்து ஒண்டிக்குஒண்டி சந்திக்கலாமா என்று சவால் விடுத்தார்.

பிஜேபியின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானியே இது அநாக ரிகம் என்று முகத்தில் அறைந்தது போல் கருத்துக் கூறினார்.

மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறிய சுவையான விமர்சனம் - மோடி என்றால் தேசிய தர்ம சங்கடம்! என்றாரே பார்க்கலாம்.

குஜராத்தில் வளர்ச்சியோ வளர்ச்சி! என்று பல வண்ணத்தில் விளம்பரப் பலுன்களைப் பறக்க விட்டு, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் கோயபெல்சுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது அல்லவா! அது பற்றியும் மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களைவிட அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இடையில் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே (Dropouts) நிறுத்துவது குஜராத்தில்தான் என்று சவுக்கடி கொடுத்துள்ளார்.

ஒரு அரசின் சாதனைகளில் கம்பீரமாக நிற்க வேண்டியது கல்வியே!

அதிலேயே கோட்டை விட்டவர் - ஓட்டைப் போட்டவர் எப்படி நல்லாட் சியை நடத்துவதாகக் கருத முடியும்?

இந்துத்துவாவாதி அல்லவா? கல்வியைப் பார்ப்பனர் அன்றி மற்ற வர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிற மனு தர்மப் புத்தியோடு செயல்படுகிறார் போலும்!

தமிழ் ஓவியா said...


மோடியின் அதிகப்பிரசங்கித்தனம் திக்விஜய்சிங் தாக்கு


புதுடில்லி, ஆக. 17: அதிகப் படியான ஆவலால் நரேந்திர மோடி எல்லா எல்லைகளையும் மீறுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க் கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஆற்றிய சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்தார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பிரதமர் தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். அதோடு, நிர்வாக சீர்கேடு பற்றி பொது விவாதம் நடத்த தயாரா? என்றும் சவால் விடுத்தார். சுதந்திர தினத்தில் மோடி இவ்வாறு பேசியதை பாஜ மூத்த தலைவர் அத்வானி மறைமுகமாக கண்டித்தார்.

இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியில், பிரதமரை தாக்கி பேசிய விதத்தில் இருந்து, வரையறுக் கப்பட்ட எல்லா விதிமுறைகளையும், பாரம்பரியத்தையும் மோடி தகர்த்து விட்டார். அதிகப்படியான ஆவலால் எல்லா எல்லைகளையும் அவர் மீறுகிறார் என்றார்.

மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், செங்கோட்டையில் இருந்து பிரதமர் பேசும்போது, 120 கோடி மக்களின் நம்பிக்கை, குறிக் கோளின் பிரதிநிதியாக அவர் விளங் குகிறார். யாராவது அவருடைய பேச்சை தனது பேச்சுடன் ஒப்பிடும் படி கூறினால், அது அவருடைய விரக்தி தவிர வேறொன்றையும் பிரதிபலிக்கப் போவதில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீடு முறையை பின்பற்றாத ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது


சென்னை, ஆக.17- இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து வெளி யிட்டுள்ள அறிவிக் கையை ரத்து செய்யக் கோரிய வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில தாழ்த் தப்பட்ட மற்றும் பழங் குடியின ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறு வனர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, தொடக்க மற் றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று தேசிய கல்வி கவுன்சில் புதிய விதி முறை களை வகுத்துள்ளது.

இதற்கான அறிவிக் கையை 23-8-2010 அன்று தேசிய கல்வி கவுன்சில் வெளியிட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம்பெறவேண்டும் என்பது அவசியமானது. அதேநேரம் அந்தந்த மாநில அரசுகள் ஏற்கெ னவே வழங்கும் இட ஒதுக்கீடு அடிப்படை யில் மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு சலுகை மதிப் பெண்களை வழங்க லாம் என்று கூறியுள் ளது.இதனடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் தேர்ச்சி மதிப்பெண்ணை ஆந்திர மாநில அரசு 40 சதவீதம் என்றும், ஒரிசா, மணிப் பூர் மாநில அரசுகள் 50 சதவீதம் என்றும், உத்தர பிரதேச மாநில அரசு 55 சதவீதம் என்றும் நிர்ண யம் செய்துள்ளது.

ஆனால், சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு இந்த சலுகை மதிப்பெண்கள் வழங்கப் படவில்லை. இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து 22-5-2013 அன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட் டது. இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே, அதாவது 16-4-2013 அன்று தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்க வேண் டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.

இதுவரை எந்த நட வடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 22-5-2013 அன்று வெளியிடப்பட்ட அறிக் கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர் வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி, தமிழக கல்வித் துறை, முதன்மை செய லாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோ ருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!

- சிவகாசி மணியம்

இதழ்களில் வரும் சில செய்திகள் எடுத்த எடுப்பில் சிரிக்க வைத்தாலும் அடுத்த கணம் அதிர வைக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் உதித்த மண்ணில் இன்னுமா இந்த இழிநிலை என்ற வேதனையும் விஞ்சுகிறது. இப்போதும் இப்படி என்றால் நூறு இருநூறு ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் நாடு எப்படி இருந்திருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. செய்வினை என்ற சொல் நல்ல தமிழ்ச் சொல். அதற்கு இங்கு சொல்லப்படும் அர்த்தமே வேறு. மாய மந்திரங்களால் வேண்டாதவரை வீழ்த்தும் மர்ம ஆயுதம் என நம்பி ஏமாறுகிறார்கள் மடமை விரும்பிகள்!

அம்மனுக்கு சூன்யம் வைத்தது யார்? எனும் தலைப்பில் (22.7.2013) ஜூனியர் விகடனில் ஓர் செய்தி! மதுரை மாவட்டம் கிரெனைட் புகழ் கீழ வளவு கிராம மக்கள் கொந்தளிக்கிறார்களாம். அப்படி என்னதான் நடந்தது? அங் குள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு முன்பும் பின்பும் மந்திரிக்கப்பட்ட பொருள்களை சில மர்ம நபர்கள் புதைத்து விட்டுச் சென்றதால் தான் பதற்றம்! ஊராட்சித் தலைவர் தர்ம லிங்கம் சொல்வதைக் கேட்போம்.

இது கிரெனைட் புள்ளிகளின் வேலை தான். அம்மனைக் களங்கப் படுத்தி துஷ்ட ஆவிகளை ஏவி, அம் மனின் சக்தியை குலைக்கப் பார்க்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஊர் மக்களும் குற்றம் சாட்ட, மேலிடத்திலிருந்து ஆதரவு வர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

திருநெல்வேலிக்கே அல்வாவா? சிவகாசிக்கே பட்டாசா? என்று கேலியாய்க் கேட்பதுபோல் சாமிக்கே செய்வினையா? என்று கேட்டால் எங்க ஊர் வீரமாகாளி மிகவும் சக்தி வாய்ந் தவர். ஏழை எளிய மக்கள், தங்களால் எதிர்க்க முடியாதவர்கள் பற்றி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் உடனே நியாயம் வழங்குவாள். தப்பு செய்தவர்களைத் தண்டிப்பாள். சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து குவாரியில் ஜே.சி.பி. இயந்திரத்தால் தோண்டும் போது இந்தச்சிலை இயந்திரத்தில் சிக்கி சிலையின் கை சேதப்பட, பயந்து போனவர்கள் ஊர்க்காரர்களிடம் சொல்லாமல் கோயில் அருகிலேயே புதைத்து விட்டார்கள்.

நாங்கள் கடந்த ஆண்டு கோயிலைச் சுத்தம் செய்தபோது அம்மன் எங்களுக்கு கிடைத்தாள். அதற்கான பூஜைகள் செய்து அம்மனை கோயில் காம்பவுண்டுக்குள் வைத்தோம். அம்மன் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்த பின்பு தான் இந்த வட்டாரத்தையே தோண்டி நாச மாக்கியவர்கள் சிறை செல்ல ஆரம்பித்தார்கள். இன்று வரை பழைய செல்வாக்கோடும், அதிகாரத்தோடும் அவர்களால் வலம் வர முடியவில்லை.

இந்தப்பகுதி ஆளும் கட்சிக்காரர் களை கைக்குள் போட்டுக்கொண் டாலும் முதல்வரிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை. இதற்கு முழுக்காரணம் உக்கிரமான வீரகாளியம்மன்தான். முன்பு போல் செயல்பட வேண்டுமென் றால் அம்மனின் உக்கிரத்தை குறைக்க வேண்டுமென்று மந்திரவாதிகளிடம் செய்வினை செய்து தகடு, குங்குமம், மஞ்சள் நூல் சுற்றப்பட்ட தேங்காய் ஆகியவற்றை கடந்த 10-ஆம் தேதி புதைத்திருக்கிறார்கள். நடுச்சாமத்தில் கோயில் அருகே சத்தம் கேட்க பக்கத்திலிருந்தவர்கள் தகவல் சொன் னார்கள்.

நாங்கள் வருவதற்குள் டாடா சுமோவிலும், மோட்டார் பைக்கிலும் தப்பி ஓடிவிட்டார்கள். காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். சிலருக்கு அங்கேயே சாமி வந்து புதைத்து கிடந்த மாந்திரீகத் தகட்டை எடுத்துப் போட் டார்கள். காவல்துறையிடம் காட்டி விட்டு எரித்துவிட்டோம். சாமி தோசம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பரிகாரம் செய்தோம். இன்னார்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் கிரெனைட் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் ஊராட்சித் தலைவர்.

ஊர்க்காரர்கள் சிலர் பி.ஆர்.பி.க்கு அதிக வருமானம் கொடுத்தது கீழவளவு குவாரிகள் தான். வீரகாளியம்மன் பின்புறமுள்ள இடங்களில் அவருக்கு குவாரிகள் உண்டு. கண்மாயின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. எங்கள் பகுதியை மொட்டை ஆக்கி விட்டனர். கிரானைட் எடுத்துவிட்டு மண்ணைப் போட்டு மூடியது போல் பூமிக்குள் இருந்த அம்மன் சிலையை சேதப் படுத்தி மறுபடியும் பூமிக்குள் புதைத்து வைத்த பாவத்துக்குத்தான் இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மனின் உக்கிரத்தைக் குறைப்பதற்காக இது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள் என்றனர்.

பகுத்தறிவாளன் என்பவன் இதனை மறுக்க கடமைப்பட்டிருக்கிறான் என்பது எழுதப்படாத விதி. கீழவளவு எனும் பெயருக்கேற்ப தாழ்வான மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி சீரழியத்தான் வேண்டுமா? உயர் எண்ணங்கள் பூத்துக்குலுங்க வேண் டாமா? பூமிக்குள் புதைந்து, சிதைந்து போன சிலைக்குப்பெயர் வீர(!) மாகாளியம்மனா? உக்கிரமான அம்மனை வெறும் தகரம், குங்குமம், மஞ்சள் நூல், தேங்காய் இவற்றால் செய்வினை செய்து செயல் இழக்கச் செய்ய முடியுமா?

தமிழ் ஓவியா said...


அம்மனைவிட வலிமை உள்ள பொருள்களா இவை துஷ்ட ஆவிகளையே துரத்தி அடிக்க முடியாத அம்மன், இயற்கை வளங்களை வெட்டி எடுத்து சுரண்டி கோடிகளைக் குவிக்கும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்திருப்பாள்? மண்ணில் புதைந்து கிடந்தவளை சேதப்படுத்தினாலும் வெளியில் எடுத்து விடுதலை தந்தது யார்? தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சக்தியற்றவள் ஊரை எப்படிக் காப்பாற்றுவாள்? தப்பு செய்தவர்களை எங்ஙனம் தண்டிப் பாள்?

இப்பெருங்கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் சகாயமும், அதற்குப்பின் வந்த அன்கல் மிஸ்ராவும் தூக்கியடிக்கப்பட்டார்களே ஏன்? அவர்களும் தப்பு செய்தவர்களா? மூன்றாவதாக வந்திருக்கும் சுப்பிரமணி யத்தையாவது அம்மன் விட்டு வைக்குமா? அம்மன் இருக்கும்போது காவல்துறை ஏன்? வழக்கு நடக்கிறதே அம்மனுக்கு சம்மன் அனுப்பினால் வருவாளா சாட்சி சொல்ல? கேள்விகள் இருக்கின்றன நூறு! ஏதேனும் பதில் இருந்தால் கூறு! பட்டுக்கோட்டையார் பாடலின் பல்லவி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு., இருக்கும் அய்ந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவும் கூட டவுட்டு!!

தமிழ் ஓவியா said...


சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது


சிறையிலோ அல்லது காவல் துறைக் காவலிலோ இருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில் பாட்னா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு (4 மற்றும் 5) ஆகியவற்றை மேற் கோள் காட்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5) பிரிவில், ஒரு நபர் சிறையில் இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பாக காவல்துறைக் காவலில் இருந்தாலோ நாடாளுமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு போட்டி யிடுவதற்கு தகுதி இல்லாதவர் என்றும், வாக்காளர்களால் தேர்வு செய்யமுடியாதவர் என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்று தெரிவித்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (பிரிவு 4 மற்றும் 5) நாடாளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைக்கும் போட்டியிடும் நபர், தேர்வு செய்யப்படுவதற்கு தகுதி படைத்தவராக இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள் 62(5) பிரிவின்படி சிறையில் இருக்கும் நபர் அல்லது காவல் துறைக் காவலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்தனர்.

கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யலாம் என்று இதே நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொது நலன் வழக்கு ஒன்றில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக சிறையில் அல்லது காவல்துறைக் காவலில் இருக்கும் நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பின் மூலம் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களா என்பதை ஆய்வு செய்வார்கள் என்றும், அத்தகைய வர்களை இனி தேர்தலில் போட்டியிட நிறுத்தவும் மாட்டார்கள் என்றனர்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தனியார் கோயிலில்களில் இனிக்கிறது, அறநிலையத்துறை கோயில்களில் கசக்கிறதா?


அரசுக் கோயில்களில் பூஜைகள் செய்வதற்கு பயிற்சி பெற்ற அர்ச்சகர் களுக்குத் தடைகள் இருக்கலாம். ஆனால் பல தனியார் கோயில்களில் அவர்களுக்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

அரசால் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்ட 200 பேரில் கிட்டத் தட்ட 150 பேர் தனியார் கோயில்களில், தமிழ்நாடு முழுவதிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடு களிலுள்ள, கோயில்களுக்கு குடமுழுக்கு மற்றும் யாகங்கள் செய்வதற்கும் அழைக்கப்படுகின்றனர்,

சில அர்ச்சகர்கள் கோயில்களில் முழுநேரப் பணியாளர்களாகச் செய லாற்றுகின்றனர். சிலர் பகுதி நேர அர்ச்சகர்களாகப் பணியாற்றுகின்றனர்.

மற்றப்பகுதிநேரங்களில் மெக்கானிக், கணினி மய்யம் நடத்துவோராகத் தங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்கள். சிலர் மேற்படிப்பிற்காக கல்லூரிகளில் சேர்ந்தும் படிக்கிறார்கள்.

2006-இல் மதுரையைச் சேர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார் நல கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக் கின் காரணமாக, அரசு கோயில்களில் இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் பணி செய்வதற்கு நீதி மன்றம் தடை ஆணை பிறப்பித்தது.

பல தனியார் கோயில்களில், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நல்ல உணர்வு களுடன் பூஜைகள் செய்து வருவதால், அவர்கள் விரும்பப்படுகின்றனர்.

சண்முகம் என்ற பயிற்சிப்பெற்ற அர்ச்சகருக்கு 29 வயதுதான் ஆகிறது. துறையூரில் உள்ள 50 ஆண்டு பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் தொழில் எனக்கு நிறைவைத்தருகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நான் தமிழிலோ, வடமொழியிலோ அர்ச்சனை செய்து வருகிறேன். அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அவர் சொன்னார்.

ஒரு மாதத்திற்கு முன்பு சென் னையைச் சேர்ந்த இணையர், துறை யூரைத் தங்கள் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்கள் சண் முகத்தைச் சென்னைக்கு வரவழைத்து, தங்கள் குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சியும் மற்றும் பல சடங்கு களையும் செய்து கொண்டனர்.

தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ரங்கநாதன், தாங்கள் யாரையும் விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லையென்றும், தாங்கள் பூஜைகளை நல்ல மனதுடன் செய்து வருவதாகவும், குறிப்பாக ஆகம விதிமுறைகளைப் பின் பற்றி வருவதாகவும் கூறினார். மேலும் தாங்கள் பாரம்பரிய முறைப்படி ஆடைகள் அணிந்து வருவதாகவும், சிலர் குடுமி வைத்து இருப்பதாகவும் கூறினார்.

அவரது வகுப்புத் தோழர் தியாக ராஜன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் கடந்த இரண்டு மாதங்களில் குடமுழுக்கு மற்றும் பல சடங்குகளைச் செய்து வருகிறார். கரு வறைக்குள் ஜாதி என்ற சொல்லுக்கே இடம் இல்லை. ஆன்மீக மனம் கொண்ட அனைவரும் பூஜை செய்ய லாம் என்று சொல்லுகிறார்.

(ஆதாரம்: டெக்கான் கிரானிக்கல் 29.7.2013)

தமிழ் ஓவியா said...


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி!


உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு, சட்டப் பூர்வமாக இதற்கு அனுமதி அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக வழக்குரை ஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும், அலு வல் மொழியாகவும் தமிழ் மொழியைக் கொண்டு வரக் கோரி, முந்தைய தி.மு.க. ஆட்சி யின்போது, முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதி அளித்திருந்தார்.

இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதாட முயன்ற போது, நீதிபதி மணிக்குமார் அதற்கு அனுமதி மறுத்தார்.

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் வழக்குரைஞர் சங் கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழில் வாதாட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினர். மேலும், மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தினர், நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி மணிக்குமார் முன் ஆஜரான வழக்குரைஞர்கள், தமிழில் வாதாட அனுமதி மறுப்பது, ஏற்கெனவே தலைமை நீதிபதி அளித்த அனுமதியை மீறுவதாக உள்ளதால், இதுபற்றி மேல்முறையீடு செய்ய இருப்ப தாகத் தெரிவித் தனர். அதன்பின், அனுமதி மறுத்த தமது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வும், இனி தமிழில் வாதாட அனுமதி அளிப் பதாகவும் நீதிபதி மணிக்குமார் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


திருவானைக்கா கோயிலின் மகத்துவம்

டைம்ஸ் ஆப் இந்தியா எனும் ஆங்கில நாளேடு, செய்திப் பஞ்சத்தால் தவிப்பதால் திருவானைக்கா பாரம் பரியமிக்க கோவிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை எனும் தலைப்பில் ஒரு பிச்சைக்காரப் பெண் அங்கு வரு வோரிடம் பிச்சை கேட்பது போன்ற படத்துடன் சிவக்குமார் எனும் செய்தி யாளர் வாயிலாக செய்தி வழங்கியுள்ளது. ஆம் 18.7.2013-ஆம் நாள் இதழின் 2-ஆம் பக்கம் தரப்பட்டுள்ள செய்தியே தான்!

1000 ஆண்டுகளுக்கு முன் குலோத் துங்க சோழனால் கட்டப்பட்ட கோவிலாம்! பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் வடிவில் சிவன் உள்ளாராம். தமி ழகத்தின் அதிக நிலப்பரப்பில் அமைந் துள்ள 5 கோயில்களான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், சிதம்பரம் நடராசர், திருவரங்கம் ரங்கநாதர் ஆகியவற்றுடன் இதுவும் ஒன்றாம். ஆனால் குலோத் துங்கனோ மற்ற சோழ மன்னர்களோ நம்மக்களுக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டித்தரவில்லையே என கேட்டு விடாதீர்கள்!

கோவில் வளாகத்துக்குள் புகுந்தால் எங்கு நோக்கினும் வீணான உணவுப் பொருள்களும், குப்பைகளும் கிடக்கின் றனவாம். தாங்கள் வழிபடும் கோவில் களை குப்பைக் கூடங்களாக ஆக்கி விடுகிறோமே என்று பக்தர்கள் மனதில் துளியும் எண்ணம் உதிக்காதாம்! அங்குள்ள கடவுள் வரக்கூடியவர்களது மனதில் உழவாரப்பணி எனும் பெயரி லாவது, தனது இருப்பிடத்தை தூய்மைப் படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடாதா! கடவுள் மனது வைத்தால் குப்பைகளை நொடியில் மறையச் செய்து விடலாமே! சர்வசக்தி வாய்ந்தவரான சாமிக்கு இது கூடவா முடியாது? அட, அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்களாவது ஆண்டவனிடம் குப்பையை ஒழிக்கு மாறு விண்ணப்பிக்க மாட்டார்களா? தனக்கு தட்சணை மட்டும் தான் வேண்டும் என்று கோருவார்களோ!

ஒரு பக்தரின் வருத்தம் என்ன தெரியுமா? கோவில் வாசலில் துவங்கி, துரத்தித்துரத்தி பிச்சை கேட்கிறார் களாம்! கோவில் காவலாளிக்கு தட் சணை கொடுத்துவிட்டு உள்ளே திரியும் இவர்கள், கோவிலின் ஒரு மூலையில் இயற்கை உபாதைகளை கழித்து விடுகிறார்களாம்! போகட்டும் அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர் ஏறத்தாழ 40 ஏக்கர் பரப்புள்ள கோவிலின் மய்யத்திலுள்ள கருவறையிலிருந்து கொண்டு, தனக்கு அவசரம் எனில் எங்கு செல்கிறார் என் பதை பக்தர் அறிவாரா? அவரும் கரு வறையை மறைவாக பயன்படுத்தத்தானே நேரிடும்! கருவறைக்குள் உள்ள கரப்பான் பூச்சி, பல்லி, கொசு எல்லாமே அங்கு தானே மலம் கழிக்கின்றன!

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள யானை, ஒட்டகம் போன்றவை வளாகத் துக்குள்ளேயே தான் சாணி போட்டு, மூத்திரம் விடுகின்றன! கடவுளுக்கு மனி தனைப்போல உணவு படைக்கின் றோமே! அதை உண்டவரான கடவுள் எங்கு மலஜலம் கழிக்கிறார்? மறைய வன் நாவில் கலை மகள் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே எங்கே என்று கலைவாணர் பாடிக்காட்டியதை நமது சிவக்குமார் அறியார் போலும்! இனியாகிலும் பெரிய கோவில்களுக்குள் கழிப் பிடங்கள் தேவை என்பதை வெளிப் படுத்தும் புத்திசாலித் தனம் யாராவது பக்தருக்கு, செய்தியாளருக்கு வரட்டும் என்று எதிர்பார்ப்போம்.

தனது கோவிலைக்கூட நன்றாக வைத்துக் கொள்ளத் தெரியாத சாமிகளின் கோவில் பாராமரிப்புக்கு மதுரை, திருவரங்கம், சென்னை கபாலீசுவரர் கோவில்களில் போன்று, தொழிலதிபர்களை தக்காராக நியமித்தால் அவர்கள் (இறைவனிடம் வேண்டினால் பலன் ஏதுமில்லை என்று நன்கு அறிந்தவர்களாதலால்) அரசினர் கேட்டுப் பணம் பெற்று, உடைந்து சிதலமானவற்றைச் சரி செய்வார்களாம். அதாவது பார்ப்பனர் சொற்படி இயங்கிய அறிவிலி குலோத் துங்க சோழன் போன்று இன்றைய அரசினரும் செயல்பட வேண்டுமென்று ஒரு கிழம் ஆதங்கப்படுகிறதாம்.

பக்தர்கள் வெயிலில் வாடாமல் வரிசையில் நின்று கோவிலுக்குள் செல்ல திருவரங்கம் போன்று கூடாரம் அமைக்க வேண்டுமாம். தமிழகமெங்கும் நியாய விலை கடைகளில் வெயிலில், வரிசையாக கால் கடுக்கக்காத்துக் கிடக் கிறார்களே நம் பெண் மக்கள் லட்சக் கணக்கான பேர். இவர்களைப்பற்றி யெல்லாம் கவலைப்படாதவர்கள் தான் சுகவாசிகளான பக்தர் குழாம்!

இதெல்லாம் கிடக்கட்டும். அங்கு பிச்சை எடுத்துத் திரியும் ஏழைகளை யாவது சாமி காப்பாற்ற முடியாதா? அவர்களது பிழைப்புக்காவது வழிகாட் டக்கூடாதா? இதையெல்லாம் எழுதிய என்னிடமாவது, இந்த மடையனுக்கு புத்தி புகட்ட வேண்டுமென நல் லெண்ணத்துடன் பேச விரும்பினால் எனது கைபேசி எண் ரணைத் தர ஆயத்தமாக உள்ளேன். ஓ! சர்வசக்தி வாய்ந்த உங்களுக்கு தான் எனது தொலைபேசி முகவரி தெரியுமே!

அ.காசிவிசுவநாதன், மதுரை

தமிழ் ஓவியா said...


காலை உணவை தவிர்த்தால்...

காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை இதயக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் இது குறித்து கூறியதாவது: உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம் போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை நேர உணவைத் தவிர்ப்பதாலும் அதனால், நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது தொடர்பாக 16 ஆண்டுகளாக 27ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில், 1500 பேருக்கு முதன் முறையாக இதயக் கோளாறு ஏற்பட்டதையும் காண முடிந்தது. இரவு நேரத்தில், மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு 55 சதவீதம் இதயக் கோளாறுகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதே நேரத்தில், இவர்கள், காலை நேர உணவை எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ள வர்களாக இருந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.

காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை உணவை தவிர்ப்பதால் உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வரு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக இதயக் கோளாறு ஏற்படும்.

தீக்கதிர் வண்ணக்கதிர்
04.08.2013

தமிழ் ஓவியா said...


எண் கணிதம் என்னும் அடையாள அழிப்பு


நாம் நாளேடுகளை எடுத்த உடன் அன்றாடம் பார்க்கும் ஓர் அவலம் ஆன்மீகம், ஜோதிடம் ஆகியன. அறிவி யல் அறிவு தொடர்பான செய்திகள் நம்ம தமிழ் நாளேடுகளில் வருவதில்லை, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும் ஏதாவது ஒரு அறிவியல் செய்தியை அப்படியே எவ்வித தனித்த மொழி நடையுமின்றி, எளிமையில்லாமல், படிப்பவர்களுக்கு கொஞ்சமும் புரியாதவகையில் பதிப்பார்கள்,

ஆனால் ஜோதிடம் மற்றும் ஆன் மீகம் தொடர்பானவைகளை விரிவாக எளிய நடையில் எழுதுவார்கள், இதுவும் ஒரு கலாச்சார அழிப்பு முறைதான், ஜோதிடத்தின் மூலம் மிகவும் நுணுக்கமாக இன அடையாள அழிப்பை விடுதலை அடைந்தபிறகு பிறகு மேற்கொண்டு வருகின்றனர்.. இதற்கு பெருவரியான வெகுசனப் பத் திரிகைகள் அதற்கு துணை போயின. அதன் தாக்கம் தற்போது மிகவும் அபாயகரமான பரிணமித்துள்ளது. அண்மையில் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள இருபாலர் கல்விபயிலும் ஒரு பள்ளியின் வருகைப் பதிவேட்டை பார்க்க நேர்ந்தது.

மொத்தம் 63 பெயர்களில் இரண்டு இஸ்லாமியப் பெயர்கள் 13 கிறிஸ்துவப் பெயர்கள். தவிர, மற்றவை எல்லாம் இப்படி இருந்தன.

மோக்ஷா, க்ரியா, ப்ரத்திக், சைலேஷ், ஹித்தேஷ், கிஷன், ச்சரண், தஹனுஷ், அபய், ப்ரபுல்

பெண்பால் பெயர்கள்: அம்ரிதா, ஷஹானா, சுகிதா, ஆஸ்தா, மேக்னா ஊர்மி, ப்ரபா, க்ருத்திகா, அவதன்யா

இதில் யாரும் ஹிந்திக்காரர்களின் குழந்தைகள் இல்லை. எல்லாம் நம் தமிழ் குடும்பக் குழந்தைகள் தான், ஆறுதலாக எட்டு பெயர்களில் தமிழ் வாடை அடிப்பது தெரிகிறது. அவை தனித் தமிழ்ப் பெயர்கள் அல்லவென் றாலும், தமிழ் என்று கருதியேனும் வைக்கப்பட்டவையாக இருக்கக் கூடியவை.

குமார், ராசு, செல்வன், சரசுவதி, கலையரசி, அற்புதம், புனிதா மாரிச் செல்வி.

இது குறித்து அப்பள்ளியின் தமிழா சிரியையிடம் கேட்ட போது அவர் கூறியது குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே தற்போது எண் கணித சோதிடர்களின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். பிறரைப்பார்த்து பெயர் வைப்பதும் ஒரு கெட்டபழக்கமாகவே போய்விட்டது, முக்கியமாக எண்கணிதம் முறையில் பெயர் வைப்பது நாகரீகமாக கருதுகின்றனர், அதை பெருமையுடனும் கூறிக்கொள்கின்றனர் என்றார். இன்று எண்கணிதம் என்ற பார்ப்பனிய மூடத் தன சிந்தனையுடன் இந்த தமிழல்லாத பெயர்களை தங்கள் குழந்தைக்கு சூட்டத் துவங்குகின்றனர்.

சிறிதளவும் இனமானம் இல்லாமல் தங்கள் குழந் தைகளை தங்களின் அடையாளமில் லாமல் கூட வளர்க்கத்தயங்குவதில்லை, எண் கணிதம் ஆங்கில எழுத்துக் களைக்கொண்டு உருவானவை, இதற்கும் தமிழுக்கும் தொடர்பில்லை, அவரவருக்குக் கூட்டினால், தாங்கள் விரும்பும் கூட்டு எண் வந்தால் போட்டுக் கொள்ள வேண்டியது அவ்வளவே! ஆனால் இந்த முறை தமிழ் ஒலிப்பு முறைக்குப் பொருந்துமா? தமிழ் உச்சரிப்பிற்கு இயைந்துச் செல்ல முடியாத ஆங்கில எண்கணிதத்தால் தமிழனுக்கு என்ன ஆற்றல் வந்து விடப் போகிறது? ஆங்கிலப் பெயரிலேயே இந்த எண் கணித ஜோதிடத்தின் சரித் தன்மையை நிரூபிக்க முடியுமா இவர்களால்? நாளும் கோளும் நலிந் தோர்க்கில்லை, அதுபோல்

ஞானியர்க்கும் இல்லை ஒரு இன அடையாளத்தில் முதல் படி அவர் பெயரிலேயே அமைந்து விடுகிறது. (எ.கா) சீக்கியர்கள், மற்றும் வட இந்தியர்களை பெயரை வைத்தே தெரிந்து கொள்ளாம், ஆனால் இன்று தமிழ் நாட்டின் தலைநகரில் 70 விழுக் காடு குழந்தைகள் தமிழ்க் குழந்தைகள் தானா என்று அய்யம் தோன்றுகிறது.

காரணம் எண்கணித ஜோதிடம் என்ற ஏமாற்று வித்தையில் மூழ்கி தமிழன் தன்னையறியாமல் தனது அடை யாளத்தை துறந்து நிற்கிறான், 1950-களில் ஆப்ரிக்கா மற்றும் ஃபிஜி தீவு களில் வாழ்ந்த இரண்டாம் தலை முறைத்தமிழன் இன்று தன்னை தமி ழன் என்று அடையாளம் காணமுடி யாத அளவிற்கு அங்கு குடியேறிய வட இந்தியர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டி இன்று தமிழர்களாக இருந்தும் அவர்கள் மொழியடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள்.

இந்த நிலை இன்னும் தமிழக நகரங்களில் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழ்பெயர்கள் இல்லாத நிலை போய் நமது மண்ணிலேயே நமது இன அடையாளத்தை இழந்து வாழும் சூழல் வந்துவிடும் போலிருக்கிறது.

- சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களா?

ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டி.வி. பார்ப்பவர்களுக்கு வாழ்வில் உடல் ரீதியாக என்ன விளைவுகள் உண்டா கின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச் சியே அது. தேசிய புள்ளி விவர துறைமற்றும் ஆஸ்திரேலியா நீரிழவு, உடல் பருமன், வாழ்வு முறை ஆராய்ச் சியில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. டி.வி. பார்க்கும் பழக்கம் உள்ள சாதாரண ஆஸ்திரேலியர்களின் வாழ்நாள் காலத்தின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பொதுவாக, தினமும் சில மணி நேரம் டி.வி. பார்க்கும் பழக்கமுள்ள ஒருவரின் வாழ்நாள் 4.8 வருடங்கள் குறைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள், டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 22 நிமிடம் வாழ் நாளை இழப்பதாக கணக்கிட்டுள்ளனர். சராசரியாக தினசரி 6 மணி நேரம் டி.வி. பார்ப்பவர்களையும், டி.வி.யே பார்க்காதவர்களையும் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள். உடல் உழைப்பின்றி சும்மா இருப்பது, உடல் பருமனாக இருத்தல், புகைப்பிடித்தல் போன்று தொடர்ந்து டி.வி. பார்ப்பதும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும் என்பதும் தெரிய வந்துள்ளது.

வாழ்வு முறையில் நம்முடைய பல பழக்கங்களே நமக்கு பிரச்சினைகள் தோன்ற காரணமாக அமைவதால், நமது அன்றாட நடைமுறைகளை எச்சரிக்கையோடு அமைத்துக் கொள் வதே நல்லது. பின் விளைவுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தவிர்க்கலாம். கொஞ்சம் மன உறுதியிருந்தால் இதுசாத்தியமே.

தமிழ் ஓவியா said...


ஜாதிப் பேரணிகளுக்குத் தடை:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், இது தொடர்பாக மாநில அரசு தேர்தல் ஆணையம் மற்றும் பிரதான கட்சிகளுக்கு அறிவிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மோதிலால் யாதவ் என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உமாநாத் சிங், மகேந்திரதயாள் ஆகியோரடங்கிய அமர்வு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

சமீப காலமாக மாநிலத்தில் ஜாதி வாரியான பேரணி, கூட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அரசியல் கட்சிகள் ஜாதி வாரியாக பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என தனித்தனியாக ஜாதி ரீதியில் பேரணி, கூட்டங்களை நடத்துகின்றனர். இது போன்ற கூட்டம், பேரணிகள் மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் இது அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் புல்புல் கோடியால் ஆஜரானார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 மாவட்டங்களில் பிராமணர்கள் சம்மேளனம் பேரணி நடத்தியது. இதில் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார். இதே போல சமீபத்தில் முஸ்லிம் சம்மேளனம் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆதரவோடு பெரும்பாலான மாவட்டங்களில் பேரணியை நடத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் இத்தகைய தீர்ப்பை நீதி பதிகள் அளித்துள்ளனர். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ் ஓவியா said...

முதலமைச்சர் சுதந்திர நாள் உரையில் தந்தை பெரியார் - காமராசர் பெயர்களை மறைத்தது ஏன்?
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, ஆக.17- சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், பச்சைத் தமிழர் காமராசர் பெயர்களை சுதந்திர நாள் விழா உரையில் முதலமைச்சர்மறைத்தது ஏன்? என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர் மானங்கள் வருமாறு:

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் (16.8.2013) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட் டப் பறக்கும் சாலை அமைக்கும் திட் டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நாளேடுகளில் 1,815 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை துறைமுகம் - மதுர வாயல் எக்ஸ்பிரஸ் பறக்கும் சாலை திட் டத்தையே கைவிடப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளதாகவும், செயலாக்கம் நிறுத்தப் பட்டு, அதனால் ஏற்படுத்தப்பட்ட தாமதத் திற்காகக் காண்ட்ராக்டர் அதிக இழப் பீடு கேட்பதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்படிப்பட்ட முடிவினை எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எவ்வாறு சேது சமுத்திரத் திட் டத்திற்கு மூடு விழா நடத்த எண்ணு கிறார்களோ - எப்படிப் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மூன்றாண்டுக் காலமாக இழுத்து மூடி வைத்திருக் கிறார்களோ - பேரறிஞர் அண்ணா அவர் களின் நினைவாக எழுப்பப்பட்ட பேரறி ஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூல கத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களோ - எப்படி செம் மொழி ஆய்வு நிறுவனத்தையும், பாவேந்தர் ஆய்வு நூலகத்தையும் சரியாக இயங்க விடாமல் செய்திருக்கிறார்களோ - அதைப் போலவே இந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்திட அ.தி.மு.க. ஆட்சியினர் நினைக்கிறார்கள். மதுரவாயல் - துறைமுகம் சாலையை நம்பி, ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்க திட்டமிட்டு, அந்த நிறுவனங் கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

சென்னை துறைமுகம்; திருப்பெரும் புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய கண்டெய்னர் டெர்மினலை அமைக்க திட்டமிட்டிருந்தது. மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டி ருந்தது. தற்போது அந்த இரண்டு பணி களும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதுபோலவே தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த 9,300 கோடி ரூபாய்க் கான 1,037 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைத் திட்டங்கள் பல காரணங்களால் தாமதிக்கப்பட்டுள்ளதாம்! திண்டுக்கல் - தேனி - குமுளி சாலையை அகலப்படுத்தும் திட்டம் இன்னும் முடிய வில்லை.

தமிழ் ஓவியா said...

135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலைத் திட்டம் இந்த மாதத் திற்குள் முடிவடைந்திருக்க வேண்டும். சென்னை - திருப்பதி சாலையை அகலப் படுத்தும் திட்டம், ஆந்திர மாநிலப் பகுதி யில் பணி முழுமை பெற்று விட்டது; ஆனால் தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணை யத்திற்கும், மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த வேறுபாடான நிலை காரணமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற திட்டங்களும், 1,745 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைப் பணிகளும் குளறுபடி யிலே உள்ளன.

காலதாமதம் காரணமாக எந்தெந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என் றால், அக்டோபர் 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய சென்னை - திருப்பதி சாலை; அக்டோபர் 2011இல் முடிவடைந் திருக்க வேண்டிய சென்னை - தடா சாலை; ஜூன் 2013இல் முடிவடைந்திருக்க வேண் டிய எண்ணூர் மணலி சாலை அபிவிருத்தி திட்டம்; செப்டம்பர் 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்; மே 2013இல் முடிவடைந்திருக்க வேண் டிய திருச்சி - காரைக்குடி சாலைத் திட்டம்; டிசம்பர் 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய கிருஷ்ணகிரி - வாலா ஜாபாத் சாலைத் திட்டம் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கண்ட திட்டங்கள் தமிழகத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி இலட்சக்கணக்கான படித்த இளைஞர் களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே கார ணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு ஜெய லலிதா அரசு இந்தத் திட்டங்களை நிறை வேற்ற ஒத்துழைக்காமல் இருக்கிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கினை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்:2 தலைவர்களின் பெயர்கள் இருட்டடிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (15-8-2013) செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் ஆற்றிய விடுதலை நாள் விழா உரையில் சுதந்திரத்தைப் பெற ஆங்கிலே யர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் கொடுத்த தலைவர்களின் பெயர் களைப் பட்டியலிட்டிருக்கிறார்.
அந்தப் பட்டியலில் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது தமிழகத்தில் அளப்பரிய பணிகளாற்றிய தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் ஆகிய முக்கியமான தலைவர்களின் பெயர் கள் விடுபட்டுப் போனது ஆச்சரியத் தையும், அதிர்ச்சியையும் தருகிறது. இந்தப் பெருந்தலைவர்களின் பெயர் களை பட்டியலிலிருந்து நீக்கியது ஏதோ இயல்பாக நடந்து விட்ட காரியமென்று இந்தக் கூட்டம் கருதவில்லை. வேண்டு மென்றே திட்டமிட்டு இப்பெயர்கள் இந்த ஆண்டு நீக்கப்பட்டு விட்டதாகவே இக்கூட்டம் கருதுகிறது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார், பெருந் தலைவர் காமராசர் ஆகியோர் விடுதலைப் போராட்டத்தின் போது ஆற்றிய பணிகளைத் திட்டமிட்டு மறைக்க இந்த ஆட்சியினர் முற்படு வதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக் கின்றது.

தீர்மானம்: 3 தமிழக மீனவர்கள் பிரச்சினை

இலங்கைச் சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும், தமிழகக் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை காரணமின்றி கடுமையாகத் தாக்கியும், உயிரைப் பறித்தும், அவர்கள் பிடித்த மீன்களை கொள்ளையடித்தும், அவர்களது மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்தியும், படகுகளை நாசப்படுத்தியும் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் நாள்தோறும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகம் சார்ந்த கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றி லும் தடுக்கப்படுகின்றன.

அண்மைக் காலமாக தமிழகக் கடல் எல்லைக்குள்ளேயே நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற அராஜகமான நடவடிக்கைகளில் சிங்கள மீனவர்களும், சிங்களக் கடற் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, தமிழக மீனவர்களுக்கு தக்க பாதுகாப்பு கோரி மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுத்த தாகத் தெரியவில்லை. மத்திய அமைச்சர் திரு. நாராயணசாமி அண்மையில் செய்தியாளர்களிடம் கூறும்போது மீனவர் பிரச்சினைக்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு பதிலை எதிர்பார்த்து இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதிக் கொண் டிருக்கிறார். இனியாவது மீனவர்களின் பிரச் சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து அவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டு மென்று மாவட்டக் கழகச் செயலாளர் களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு?

ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாகியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு மிகவும் அனுசரணையாக இருந்து வரும் நாளேடுகள் எல்லாம் கூட, இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் கொலை, கொள்ளைகள் பெருகி விட்டன என்று புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டு, சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டிய காவல்துறையும் முடமாக்கப்பட்டு, சட்ட நெறிமுறைகள் அனைத் தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள், சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி ஆகிய அனைத்து விதமான சமூக விரோதச் செயல்களும் தொடர்ந்து இடைவெளி யில்லாமல் நாள்தோறும் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சீரழிந்த நிலையைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக ஜெயலலிதா, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறதென்று தமிழ்நாட்டில் கெட்டு விட்ட சட்டம் ஒழுங்கு நிலைமையை நியாயப்படுத்து வதைப் போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப் போய்விட்ட நிலையில் பொதுமக்கள் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தை களும், பாதுகாப்பின்றி, பயத்தின் கோரப்பிடியில் இருந்திட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய ஜெயலலிதா அரசை மாவட்டக் கழகச் செயலாளர் களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம்: 5 சேது சமுத்திரத் திட்டத்தில் புகுத்தப்படும் மதவாதம்!

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிலரின் தூண்டுதல் முயற்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாக ஜெயலலிதா கருத்துக்களைச் சொல்லி வருகிறார்.

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளி யிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டு மென்று வலியுறுத்துவோம் என்றெல்லாம் குறிப் பிட்டுச் சொல்லிவிட்டு; தற்போது அந்தத் திட்டத் தையே தேவையில்லை என்று சொல்வது, தென்மாவட்டங்களின் வளர்ச்சியிலும், முன்னேற் றத்திலும் ஜெயலலிதா எந்த அளவுக்கு அக்கறை யில்லாமல் நடந்து கொள்கிறார் என்பதையே காட்டுகிறது.

மதவாத சக்திகளின் முயற்சிகளை முனை மழுங்கச் செய்து, தாமதமாகி வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6 ஜனநாயக விரோத நடவடிக்கைகள்

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமாகவும், ஜனநாயக நடவடிக்கைகளை தடை செய்திடும் நோக்கத்தோடு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. பேச்சுரிமை, எழுத் துரிமை ஆகியவற்றுக்கு தடை செய்து, முதலமைச் சரை யாராவது குறை கூறிப் பேசினால் உடனடியாக அவதுறு வழக்கு போடுவதும், நீதி மன்றங்களுக்கு இழுத்தடிப்பதும், அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்துவதும் தொடர் கதையாக நீடித்து வருகின்றது. அரசியல் தலைவர்களை சில மாவட் டங்களுக்குள் நுழையவோ, அந்த மாவட்டங் களின் வழியாக பிற மாவட்டங்களுக்குச் செல்ல வோ அனுமதி மறுக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் காரணமாக அங்கே பொதுக் கூட்டங்களோ, கண்டன ஆர்ப் பாட்டங்களோ நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது. அதாவது தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருக்கிறதோ என்று அய்யுறும்படியாக நிலைமை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

இத்தகைய அராஜக நடவடிக்கை களை தி.மு. கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் 144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிக் கொண்டு ஜனநாயக நடைமுறைகளுக்கு வழி விட வேண்டு மென்றும் வற்புறுத்துகிறது.

தீர்மானம்: 7 விலைவாசி உயர்வு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய பிரச் சினைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குறிப்பாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெச வாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரி யர்கள், அரசு அலுவலர்கள் போன்றவர்களை நேரடியாக புண்படுத்தக்கூடிய செயல்கள் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகின்றன. பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் திடீரென உயர்த்தப் பட்டுள்ளது.

விலைவாசியோ கேட்கவே வேண்டிய தில்லை. மேலும் குடிநீர், சாலை மற்றும் கழிப் பறை வசதிகள், போக்குவரத்து போன்ற அடிப் படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக ஆங்காங்கே பொதுமக்களே முன் வந்து சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது நாள் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றை ஒருங்கிணைக்கக் கூடிய முறையில் ஆங்காங்கே உள்ள கழகத் தோழர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தங்கள் தங்கள் பகுதிகளிலே கோரிக்கைகளை வலியுறுத்தும் அறப் போராட்டங்களில் ஈடுபடுவதென்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 8 தேர்தல் கூட்டணி

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் வரவிருக்கின்ற 16 ஆவது நாடாளு மன்றத் தேர்தல் குறித்தும், அந்தத் தேர்தலில் கழகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

மேலும் எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடி வெடுக்கத் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் அதிகாரம் வழங்குவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப்பேன் தொல்.திருமாவளவன் அறிவிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகள் வழங்கப்பட்டது (சென்னை, 16.8.2013).

சென்னை, ஆக.17- ஏழை-எளிய மக்களுக் காக, சமூக நல்லிணக்கத் திற்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக புரட் சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழி யில் தொடர்ந்து உழைப் பேன் என்று தொல். திருமாவளவன் எம்.பி. அறிவித்தார்.

விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பொன்விழா சென்னை யில் நேற்று (16.8.2013) நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்ற விழாவில் விடு தலை களத்தில் வெடித்த கிழக்கு எனும் தலைப் பில் பாவலர் தணிகைச் செல்வன் தலைமையில் கவியரங்கம் நடைபெற் றது. இதில் கவிஞர்கள் யுகபாரதி, அண்ணா மலை, தமிழமுதன், இளையகம்பன், நந்த லாலா, கிருதியா ஆகி யோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஜெயா குழுவினரின் நாட்டிய அரங்கமும், ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசையரங்கமும் நடை பெற்றது. தொல்.திரு மாவளவனுக்கு எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகளும் வழங் கப்பட்டன.

விழாவில் மறைந்த திரைப்பட பாடலாசிரி யர் கவிஞர் வாலி உரு வப் படம் திறக்கப்பட் டது. உருவப் படத்தினை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் தொல். திரு மாவளவனின் பொன் விழா மலரும் வெளி யிடப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆகஸ்டு 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை பொன்விழாவாக கொண்டாடப்பட்டு, பொற்காசுகள் திரட்டப் பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்பதற்காக இந்த பொன்விழாவை பயன் படுத்தி, இதுவரை 22 கிலோ தங்கம் திரட் டப்பட்டு இருக்கிறது. பொன்விழாவின் நிறைவு விழாவாக வருகிற 31 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கில் தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி, கவிகோ அப்துல் ரகுமான் ஆகி யோர் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக் கிறது.

நாளை (இன்று) என்னுடைய 51 ஆவது பிறந்தநாள். ஏழை-எளிய மக்களுக்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தமிழக மாநில உரிமை களுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப் பேன் என்ற உறுதியை பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு கொண்டு வருகிற உணவு பாதுகாப்பு சட்ட மசோ தாவை விடுதலை சிறுத் தைகள் கட்சி ஆதரிக் கிறது. ஆனால் அந்த சட் டத்தில் உள்ள தானிய கையிருப்பு இல்லாத நிலையில், சப்டியூட் டாக பணம் வரும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நபருக்கு 5 கிலோ வில் இருந்து 10 கிலோ வாக உயர்த்தி வழங்க வேண்டும். எந்த நிலை யிலும் தானியமாகவே வழங்க வேண்டும்.

இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.

தமிழ் ஓவியா said...


431 பெண்கள்


சென்னைப் பல் கலைக் கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா கலந்து கொண்டு பட்டமளிப்புரை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்ன? முனைவர் பட்டம் (ஞா.ன) பெற்றவர்கள் மொத்தம் 980 என்பதில் பெண்கள் மட்டும் 431 எனும் தேனினும் இனிக் கும் சுவைக்கும் தகவ லாகும்.

ஒரு கணம் நினைப் போம்! அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்கு என்றனர். (இன்று ஊது கிற அடுப்பே கிடையாது - அது வேறு!)
பெண்களும், வைஸ் யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை. (அத்தியாயம் 9 - சுலோ கம் 3)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுவது பாதகமா காது என்கிறது மனு தர்மம்.
(அத்தியாயம் 11 -சுலோகம் 65)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரிகள், தன் சுவாதீன மாக ஒரு போதும் இருக் கக் கூடாது என்று கூறு வதும் மனுதர்மம் தான். (அத்தியாயம் 5 சுலோகம் 148).
பொதுவாக இந்து சமூகத் தத்துவப்படி எல்லா ஜாதி பெண்களும் பஞ்சமர்களுக்குக் கீழ்ப் பட்டவர்கள்தான்.
இத்தகு ஒரு சமூக அமைப்பில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் ஒரே பாய்ச்சலாக டாக்டரேட்! பட்டம் பெறுகிறார்கள் என்றால் இதன் விளைச் சலை ஒரு கணம் எண் ணிப் பார்ப்போம்.

மனுதர்மத்தைக் கொளுத்திய தந்தை பெரியாரை நன்றியுடன் நினைவு கூர்வோம். பெண்ணுரிமை பற்றி 1925-களில் பேசிய தன்மான இயக்கத்தை நினைவுத்துப் பார்ப்போம்!

கல்விக் கண்களைத் திறந்தவர் என்று தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட பச்சைத் தமிழரை நெஞ்சில் நிறுத்துவோம்.
சமூக நீதிக்கான விதை விதைத்து வளர்த்த திராவிட இயக்கத்தை நீதிக்கட்சியை நினைத்து நெக்குறுவோம்!
வாழ்க பெரியார்!
குறிப்பு: உலகில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி யான பெரியார் மணி யம்மை மகளிர் பொறி யியல் கல்லூரி தஞ்சை வல்லத்தில் 1988இல் துவக்கப்பட்டது. - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பகத் சிங் சர்ச்சை தேவையற்றது பிரதமர் கருத்து


புதுடில்லி, ஆக. 18- இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத் தில் பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது என்றும் அவரது தியாகி அந்தஸ்து பற்றிய சர்ச்சை தேவையற்றது என்றும் பிரதமர் மன் மோகன் சிங் கூறியி ருக்கிறார்.

புதுடில்லியில் இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்திருப் பதாவது: தேசத்தின் நலனுக்காக பகத் சிங் செய்த மகத்தான தியா கத்தை யாரும் மறுக்க முடியாது.

இது தொடர்பாக ஆவணங்கள் இருக் கிறதா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. அவரது தியாகம் ஆவ ணங்களைச் சார்ந்த விஷயமல்ல.
இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத்தை பற்றிப் பேசும்போது பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது. பெருமை மிகுந்த நமது தேசிய பாரம்பரி யத்தின் ஒரு பகுதியாக அவர் இருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தையொட்டி, பகத்சிங்கும் மற்ற சுதந் திரப் போராட்ட வீரர் களும் செய்த உயிர் தியா கத்துக்காக நம் நாடு என் றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சர்ச்சை எழுவது அர்த்த மற்றது. அது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட துன்பத் தையும், செய்த தியாகத் தையும், புண்படுத்துவ தாக அமைந்துவிடும். இது போன்ற சர்ச்சை யைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் தமது அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறார்.
முன்னதாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தியாகிகளாக அறிவிக்கப்பட்டார்களா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக எந்த ஆவ ணமும் இல்லை என்று பதில் அளித்தது. இத னைத் தொடர்ந்து பிர தமர் அறிக்கை அளித் திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்... தமிழர் இல்லங்களில், வணிக நிலையங்களில் கறுப்புக் கொடி! மாபெரும் இரயில் நிறுத்தப் போராட்டம்!



- டெசோ தலைவர் கலைஞர் போர்ப் பிரகடனம்!

சென்னை, ஆக.18- தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மத்திய அரசு மதித்திட வேண்டும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது எனவும் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழர்கள் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், ரயில் மறியல் நடைபெறும் என்றும் மத்திய அரசுக்கு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின் னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற் றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண் ணோட்டத்தில் நம்பகத் தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்கும், தமிழக மீனவர் களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.

13ஆவது சட்டத் திருத்தம்

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி உருவான இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய் வதற்கான அனைத்து வகை முயற்சி களையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடு தலை செய்யப் பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களைக் கைது செய் வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கைக் கடற்படை யினர் கடைப்பிடித்து வரும் நடை முறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூது வரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவுகூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை. இந்தச் சூழ்நிலையிலேதான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது. இந்திய அரசு புறக்கணித்தால்... இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட் சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்ட மாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக் கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத் தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடு பட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



பு(யு)த்தி!

செய்தி: பிஜேபி வெற்றி பெற சிறுபான் மையினரின் ஆதரவும் தேவை!
-நரேந்திரமோடி

சிந்தனை: அடடே! எப்படிப்பட்ட ஞானோ தயம்! இது தேர்தல் கால பு(யு)த்தி என்று யாருக் குத் தான் தெரியாது!

தமிழ் ஓவியா said...


இதுதான் பிஜேபி



மத்திய பிரதேசத்தில், பிஜேபி ஆட்சியில் இருக் கிறது. பழங்குடியின மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் விஜய்ஷா.

முதல் அமைச் சரின் மனைவியை இவர் ஆபாசமாக விமர்சித்தார் என்பதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்பொ ழுது மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் மனை வியைப் பற்றி சொன்ன ஆபாசம் என்னாயிற்றோ!

தமிழ் ஓவியா said...


பட்டுப் புடவையை இரவல் கொடுத்து பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை கச்சத்தீவை ஒப்படைக்க முடியாதாம்! இலங்கை அமைச்சர் பெரீஸ் திமிர்


புதுடில்லி, ஆக.19- கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப்ப டைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார்.
இலங்கைத் தலை நகர் கொழும்பில் காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் நாடு கள் கூட்டத்தில் பங் கேற்க வருமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற் காக பெரீஸ் ஞாயிற்றுக் கிழமை டில்லி வந்தார். அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளி யுறவு அமைச்சர் சல் மான் குர்ஷிதை பிற்பக லிலும் சந்தித்துப் பேச வுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர் களிடம் பெரீஸ் ஞாயிற் றுக்கிழமை கூறியது:

"காமன்வெல்த் நாடு கள் அமைப்பில் அங் கம் வகிக்கும் ஆசியா வின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரத மர் என்ற முறையில் கொழும்பில் நடை பெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங் கேற்பதை முக்கியமான தாகக் கருதுகிறோம்.

கச்சத்தீவு விவகா ரம்: கச்சத்தீவு ஒப் பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப் படி அப்போதைய இந் தியப் பிரதமர் இந்திரா காந்தி தான் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குள் பட்ட கச்சத் தீவு இலங் கையின் கட்டுப்பாட் டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத் தில் இலங்கை மீனவர் களுக்கும், இலங்கைக் கும் கச்சத் தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த விஷ யத்தில் இந் திய அரசின் நிலை தெளி வாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப் படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் விவ காரம்: இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அள வுக்குத் தமிழக மீனவர் கள் வந்து மீன்பிடிக்கின் றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட் டுப் போரின் போது கடற்புலிகளால் (விடு தலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமி ழக மீனவர்கள் பாதிக் கப்பட்டனர். போருக் குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகு திக்குத் தமிழக மீன வர்கள் வருவதால், தங் களின் மீன்பிடி வாழ்வா தாரம் பாதிக்கப்படுவ தாக எங்கள் நாட்டு மீன வர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷ யத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண் டும் என்றார் பெரீஸ்.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


சபாஷ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!

இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடிய ப. சிதம்பரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் - தமிழர்! அந்த வகையில் நமக்குப் பெருமை உண்டு.
நீடாமங்கலத்தையடுத்த வையகளத்தூர் எனும் ஊரில், நீதிக்கட்சித் தலைவராக விளங்கி அரும் பெரும் சாதனைகளைக் குவித்த - பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்குப் பல நன்மைகளைச் செய்த பெருமகன் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர் களின் சிலையைத் திறந்து வைத்து, உரையாற்றி யுள்ளார், இந்தியாவின் நிதி அமைச்சர் (17.8.2013).

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் சில முக்கியமான கருத்துகளும், அறி விப்புகளும் சமூகநீதிச் சிந்தனையாளர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

முதலாவதாக உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சில வாரங்களுக்குமுன் அளித்த தீர்ப்பைப் பற்றியதாகும்.

அந்தத் தீர்ப்பு இந்தியா முழுமையும் உள்ள சமூக நீதியாளர்கள் மத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்தது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் டில்லியில் போராட்டம் நடத் துவோம் என்று அறிவித்தார். நாடாளுமன்றத் திலும் உறுப்பினர்கள் கொந்தளித்து எழுந்தனர் - நாடாளுமன்றமே முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவையில் முக்கிய அறிவிப்பினை உறுதியைக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும்; அதிலும் நியாயம் கிடைக்காவிடின் இந்திய அரசமைப்புச் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும் அதற்கு உறுதியளித்து, உரை யாற்றியது வரவேற்கத்தக்கது.

தன் பொது வாழ்வை சமூகநீதிக்காக ஒப்படைத்த தலைவர் ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் சிலை திறப்பு விழாவில் அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு விழாவில் உரையாற் றுகையில் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தது மிக மிகப் பொருத்தமே!

இரண்டாவதாக இடஒதுக்கீடு கூடாது என்பவர்கள் யார் என்பதை நம்மைப் போல் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் காட்டிப் பேசினார். பல யுக்திகளைக் கையாளக் கூடியவர்களாகவும், நீதிமன்றத்திற்கும் சென்று காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். நிருவாகத்தில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இருந்து கொண்டு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை அவருக்கே உரித்தான முறையில் நயமாகச் சுட்டிக் காட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களே; அந்த அளவுக்குத் தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், நம் மக்கள் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் தானே!

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (16.3.2013) ஏடுகள் எல்லாம் அவாள் ஆதிக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேசியிருந் ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலே, டில்லியிலே ஒரு கணிப்பு உண்டு. அவர்கள் பெரியாரின் தாக்கத்தைப் பெற்றவர்கள் - பார்ப்பனர் அல்லாதார் எனும் உணர்வை ஏதோ ஒரு வகையில் உள் வாங்கிக் கொண்டவர் களாகவே இருப்பார்கள் என்ற கணக்கு - மதிப்பீடு உண்டு.

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் உரையில் அந்த உணர்வு மேலிட்டது - வரவேற்கத் தக்கது. உண்மை நிலையைத்தான் அவருக்கே உரிய தனித்தன்மையில் பேசி இருக்கிறார். அதற் காக அவரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்; மிக முக்கியமான பொறுப்பில் இருப்போர்க்கு இத்தகு உணர்வு இருந்தால் கோடானு கோடி மக்களின் மத்தியிலே நல்ல நம்பிக்கை ஏற்படும் அல்லவா!

தமிழ் ஓவியா said...


பைலட்டாக விரும்பிய எனது கனவு நிறைவேறவில்லை : அப்துல்கலாம்


புதுடில்லி, ஆக.19- இந்திய விமானப் படை பைலட்டாக விரும் பியதாகவும், ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் முன் னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

"கனவுகளை நனவாக்குவதற்கான எனது பயணம்' என்ற அவரது புதிய புத்தகத்தில் இந்தத் தகவலை தெரி வித்துள்ளார். புத்தகத்தில் அவர் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

இந்திய விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனக்கு டேராடூனில் உள்ள இந்திய விமா னப்படை அலுவலகத்திலிருந்தும், டில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் டில்லி யில் தொழில்நுட்ப மேம் பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (டிடிடிபி) ஆகியவற்றிலிருந்து நேர் முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தது.

இதில், டிடிடிபி நடத் திய தேர்வில் எளிதாக வெற்றி பெற்றேன். ஆனால், இந்திய விமானப் படை நடத்திய தேர்வில் பங்கேற்ற 25 பேரில் நான் 9-ஆவது இடத்தைப் பிடித்தேன்.

மொத்தம் 8 இடங்களே இருந்த தால், விமானப்படை பைலட்டாக வேண்டும் என்ற எனது கனவு தோல் வியடைந்தது' என குறிப் பிட்டுள்ளார் கலாம்.
147 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், தன் மீது ஆழமான அன்பு வைத்திருந்தவர்களைப் பற்றி கலாம் எழுதியுள் ளார். தன் தந்தை ஒரு படகை உருவாக்கியதைப் பார்த்த அனுபவம், தனது 8 வயதில் நாளிதழ்கள் விற்பனையில் ஈடுபட்ட அனுபவம் உள்ளிட்ட பல விஷயங் களை இந்நூலில் குறிப் பிட்டிருக் கிறார் கலாம்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு சமுதாயம் மலர...


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்

நூலகத்தில் படித்துக் கொண்டி ருந்த போது, நண்பர், ஒரு பார்ப்பன இதழைத்தந்து என்னய்யா இது... பெரிய மோசடியா இருக்கு. இதைப் படித்துப் பாருங்கள் என கோபம் கொப்பளிக்கக் கூறினார்.

பார்த்தேன், படித்தேன் அதில் திராவிட மாயை - ஒரு பார்வை - 73 அபத்தமான கொள்கை என்ற தலைப் பில் ஒரு கட்டுரை. தென்னாட்டில் சாதி வேற்றுமையே இல்லாமல் இருந்ததென்றும், வட நாட்டு ஆரியர் களாகிய பிராமணர்கள் அதைக் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதைப் போன்ற அபத்தமான கொள்கை வேறு எதுவும் இருக்க முடியாது என ஒரு பச்சைப் புளுகை கல்கி எழுதியதாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டி ருந்தது!
அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்த இன்னொரு தோழர், அது உண்மை தானே சார்! எனக்கேட்க.. நான் உடனே அவரிடம் கூறினேன். இது ஒரு பார்ப்பனர் ஏடுதானே? இது ஒரு பொது நூலகம் தானே? மக்கள் வரிப்பணத்தில், இயங்குவது தானே? அப்படியானால், இந்த நூலகத்திற்கு ஏன், பகுத்தறிவு இதழ்களான விடுதலை வருவதில்லை? உண்மை வருவதில்லை? முரசொலி வருவதில்லை? தினமணி, தினமலர் விகடன், கல்வி மற்றும் பக்தியின் பெயரால் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் யாருமே பிரித்துக்கூட பார்க்காமல் மூலையில் கிடக்கிற ஏராளமான மாத, வார, நாளிதழ்கள் மட்டும் மேசையில் கிடக்கிறதே... இதற்கு என்ன பொருள்? அவைகள் திராவிடர் நலன்காக்கும் ஏடுகள்! இவைகள் பார்ப்பனர்களை கொழுக்க வைக்கும் ஏடுகள். இது தானே பொருள்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! என்றேன்.

அதோடு மட்டுமல்ல, மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றனார் எழுதிய பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்ற என்னிடமிருந்த நூலை அவரிடம் தந்து இதையும் படியுங்கள் உங்கள் சந்தே கத்தைத் தீர்க்கும் பதில்கள் இதில் ஆதா ரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன என வேறொரு நண்பருக்கு எடுத்துச் சென்ற புத்தகத்தை அவரிடம் தந்தேன்! நூலகத்தில் (அது கிராம நூலகமாக இருந்ததால் எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்ததால் தான் நூலகரும் எனக்கு நண்பர் என்பதாலே தான் இப்படி மனம் திறந்து பேச முடிந்தது) இது கிடைக்குமா அய்யா? என ஒருவர் கேட்க திராவிடர் ஆண் டால் இது கிடைக்கும்! என்றேன். அனை வரும் சிரித்தனர்! அந்தச் சிரிப்பிலே... சிந்தனையும் கலந்திருந்தது!

ஆம்! கொள்கைப் பரப்புரையே... நமது தலையாய தொண்டறமாக இருந்தால் விரைவிலே தமிழினம் மீண்டும் விழித் தெழும்! மறுநாள் மாலை அந்த புத்தகத் தோடு வந்த நண்பர், அய்யா இது போன்ற நூல் வேறு ஏதாவது இருந்தால் தாருங் கள் எனக்கேட்க என்னிடமிருந்த அய்யா, ஆசிரியர், அண்ணா, கலைஞர் ஆகி யோர் நூல்களைக்காட்டி ஒவ்வொன் றாகப் படியுங்கள் என்று சொன்னேன். ஒரு நூலே ஒருவரது உள்ளத்தை மாற்றும் திறன் படைத்தது என்றால் ஏனைய நூல்கள்?
போகின்ற கூட்டங்களிளெல்லாம், அய்யா புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும், இப்பொ ழுது தாங்களும் அதனை பின்பற்றி வருவதும் எதற்கென்பது இது போல், அனுபவப்பட்டவர்கள் நன்கு உணர் வார்கள்! படித்து தெளிவும் பெறு வார்கள்.

எழுத்தும், பேச்சும், ஏடுகளும் தான் திராவிடர் இயக்கங்களின் ஆணிவேர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வார்களேயானால் பார்ப் பனீயம் வெகு விரைவில் இந்நாட்டை விட்டு ஒழியும்! பகுத்தறிவு சமுதாயம் மலரும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆடி மூடநம்பிக்கை ஆயுளை முடித்ததே!


ஆம்பூர், ஆக. 19- ஆம்பூர் அருகே கார்மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த ஒரே குடும் பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்.
சென்னை, ராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பிரியங்கா (வயது 19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் களது மகன் கார்த்திக் (வயது 25) என்பவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த கீதா (வயது 23) என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆடி மாதம் வந்ததை அடுத்து கார்த்திக் குடும்பத்தினர் கீதாவை தாய் வீட் டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்த தால், கீதாவை தாய் வீட்டிலிருந்து கூட்டி வர நேற்று கார் ஒன்றில் ஜெயச்சந்திரன், சாந்தி, பிரியங்கா, மற்றும் கார்த்திக் ஆகிய நால்வரும் பெங்களூவுருக்கு பயணித்தனர். காரை கார்த்திக் ஒட்டி சென்றார்.

பிறகு பெங்களூருவிலிருந்து கீதாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கார் ஆம்பூரை கடந்து வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப் பாட்டிழந்து சாலையை பிரித்திருக் கும் சிறிய தடுப்புச் சுவர்மீது ஏறியது. அப்போது எதிரே சென்னையி லிருந்து பெங்களூர் சென்று கொண் டிருந்த கண்டெய்னர் லாரிமீது மோதியது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த ஆம்பூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா மற்றும் கீதா ஆகியோர் மரணம் அடைந்தனர். ஜெயச்சந்திரனும், கார்த்திக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூழ்குவதும் சாவதும் தொடர் கதையா?



சுற்றுப் பயணம் செய்வோர், நீர் நிலை களில் மூழ்குவதும், சாவதும் தொடர் கதையாக உள்ளனவே.

கும்பகோணம் அருகே, குணசீலம் கோயிலுக்கு வந்த மூன்று இளைஞர் கள் காவிரியில் குளிக்கச் சென்று, சுழலில் சிக்கி, மரணம் அடைந்தனர். பழவேற்காடு ஏரியில் சாவு; சென்னை கோவளம் கடலில் குளிக்கச் சென்றோர் சாவு; என்று தொடர்கின்றனவே - இதன்மீது அரசு கவனம் செலுத்து கிறதா? தடுப்பு நடவடிக்கையை மேற் கொள்கிறதா? என்று தெரியவில்லை. மனித உயிர்கள் அதுவும் பொறியியல் படிக்கும் இளைஞர்கள் மரணம் என்பது எத்தகைய கொடுமை!

தமிழ் ஓவியா said...


சிறுமியைச் சீரழித்த சாமியார்


சென்னை, ஆக.19-மெரினாவில் 6 பேரால் பாலியல் வன்முறை செய் யப்பட்ட சிறுமி பர பரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிறு மியை பாலியல் தொழி லுக்கு தள்ளிய சித்தர் கைது செய்யப்பட்டுள் ளர். சிபிசிஅய்டி காவல் துறையினரிடம், சிறுமி கொடுத்த வாக்குமூலம்:

என் பெயர் சுதா (14). (பெயர் மாற்றப்பட் டுள்ளது) தந்தை இறந்து விட்டார். என் அம்மா திருமலர் என்னை வளர்த் தார். கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பு படித்தேன். படிப்பு சரியாக வர வில்லை என்று கூறி வயா சர்பாடி பி.வி. காலனி 24 ஆவது தெருவில் ஜோதிட நிலையம் மற்றும் ஆசி ரமம் அமைத்து குறி சொல்லும் அறவழி சித்தர் (48) என்பவரிடம் என் அம்மா அழைத்து சென்றார்.

அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய் வதாகக் கூறி, தனி அறை யில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூ தியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் வன்முறை செய்து விட் டார்.

அப்போது, என் அம்மா வீட்டுக்கு வெளி யில் காத்திருந்தார். நடந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார் என்று கூறினார். இதன் பின்னர், அடிக்கடி என்னை சித்தரிடம் என் அம்மா அழைத்து செல்வார்.

அவரும் என்னை அடித்து மிரட்டி பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலை யம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்ப டைத்தார்.

செல்வம் குடிபோதை யில் என்னுடன் பல முறை தவறாக நடந்து கொண்டார். பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுபடுத் தினர்.

இந்த நிலையில், கடந்த மாதம் செல்வத் தின் வீட்டில் இருந்த போது, அதிகாலையில் எழுந்து, அவர் சட்டைப் பையில் இருந்து ரூ.300 அய் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன்.

கையில் வைத்திருந்த பணத்தில் மாங்காய் வாங்கி, கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன் றுக்கு ரூ.200வரை சம் பாதித்தேன். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, இர வில் சாமி தரிசனம் செய் யும் வரிசையில் சென்று தூங்கிவிடுவேன்.

தினமும் சாமி தரி சனத்துக்கு இரவில் வரி சையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந் தேகப்பட்டு என்னை காவல்துறையில் பிடித் துக் கொடுத்து விட்ட னர். அவர்கள் மூலம் சைல்டு ஹெல்ப் லைன் நிர்வாகிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டு, சென் னைக்கு அழைத்து வரப் பட்டேன். என்னை அம் மாவிடம் ஒப்படைக்கா தீர்கள். அவர் என்னை மீண்டும் பாலியல் கும்ப லிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங் கள். இவ்வாறு சிறுமி சுதா கூறி, கதறி அழுத தாக காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து, சிபிசி அய்டி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அறவழி சித்தரையும் கைது செய்து தீவிர விசா ரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை 4வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதை யடுத்து அறவழி சித்தர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக் கப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்


சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சினையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப் பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட், பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் சத்தும், சிட்ரேட் சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறு நீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கரைக் கும் தன்மை கொண்டுள் ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்ற வற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!


ஜோதிடம், குறி சொல்லுதல் என்ற பெயரில் போதை ஊசிகளைப் போட்டு பெண்களை மயக்கும் - சீரழிக்கும் கும்பல்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்

பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும், தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு! - விபச்சாரம் முதலியவற்றில் ஈடுபடுத்தி, கூட்டு வன்புணர்ச்சி, அதையே தொழிலாக்கி, கமிஷன் பெற ஏஜெண்டுகளை அமர்த்தி, இப்படி பல பெண்களை மயக்க ஊசிகளைப் போட்டு, அருவருப்பும் ஆபாசமும் வழியும் இத்தொழிலை நடத்தி வந்துள்ளான். (இதுபற்றி பிற ஏடுகளில் வந்துள்ள கொடுமையான செய்தியை அப்படியே 3ஆம்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்). பாராட்டத்தக்க காவல்துறையின் நடவடிக்கை!

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருப்பதிக்கு ஓடிப்போய் மாங்காய் வியாபாரம் செய்ததையும் கண்டுபிடித்து, இந்த ஜோதிட வேடமணிந்த மானிடக் கழுகு மற்றும் இவன் கூட்டாளிகள் உட்பட 5 பேர்களை கைது செய்துள்ளார்கள் - தமிழக காவல்துறையினர்.

தமிழகக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) திரு. ராமானுஜம் அவர்கள் ஆணைப்படி, சி.பி.சி.அய்.டி. விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் பாராட்டத் தகுந்தது.

டி.ஜி.பி. அவர்களும், காவல்துறை யினரும் இதில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது வற்புறுத்தல் - வேண்டுகோள் ஆகும்.
வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இதில் ஒரு பெரிய ராக்கெட்டே இருந்திருக்கும் போலிருக்கிறது.

முக்கிய புள்ளிகள்சிக்குவார்களா?

அறவழி சித்தர் (செருப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று பெயர்! - மகா வெட்கக்கேடு) வீட்டைச் சோதனையிட்டு, ஆபாச சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர்.

தமிழ் ஓவியா said...

அந்த ஆவணங்களின் மூலம் அவருக்குப் பல அரசியல் பிரமுகர்கள், பணபலம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பட்டியலையும் தயாரித்து வரு கின்றனர் என்பது மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய செய்தியாகும்.

தேவை - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரிவு!

இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல் லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை - Q பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு - மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன் வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமை யிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று - முக்கியமானது.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.

Article 51a(h) “It shall be the duty of every citzen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.

கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரிய வில்லை!
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு...

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்; அவர் களைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.8.2013

தமிழ் ஓவியா said...


அட, கடவுளே!



பிகார் - சாகர் சாவில் இருந்து பாட் னாவை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த விரைவு ரயில் வண்டியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 37 பேர் பலியானார்கள் என்ற செய்தி குருதியை உறை யச் செய்யக் கூடிய அதிர்ச்சியூட்டுவதாகும்.

இவர்கள் யார் என்றால் தமரா என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயி லுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிவபக்தர் களாம்.

இந்தச் செய்தியை விடுதலை சொல்ல வில்லை. அனேகமாக எல்லா ஏடுகளும், தொலைக்காட்சிகளும் கூட்டியோ குறைக் கவோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே தெரிவித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் உத்தரகாண்டில் வழி படச் சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் மழை யிலும், வெள்ளத்திலும் சிக்கிப் பரிதாபகரமான முறையில் தங்கள் இன்னுயிரைப் ப(றி)லி கொடுத்தனர்.

பெங்களூருவில் ஆடி மாதத்தில் அம்மா வீட்டுக்குச் சென்ற புதுமண மகளை, ஆடி முடிந்து அழைத்து வரு கையில் மூன்று பெண் கள் உட்பட சாலை விபத்தில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர் என்பது செய்தி.

பழனி முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் பலி என்று மற்றொரு பக்கத்தில் செய்தி!

இப்படி நாள்தோறும் செய்திகள்.

இவற்றையெல்லாம் படித்து பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் மனம் மகிழ்ந்து போய் விடவில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் - கடவுளைக் கும்பிடுவதாக சென்ற நிலையில் பலியாகி இருக்கிறார்களே! இதற் குப் பிறகாவது கடவுள் நம்மைப் படைப்பித்தார் காப்பாற்றுகிறார் - அவர் கருணையே கருணை என்று நம்பும் மூடத்தனத்திலிருந்து அப்பாவித்தனத்திலிருந்து விடுபட மாட்டார்களா? என்ற பரிதாப உணர் வோடு, மனிதநேய நெகிழ்ச்சியோடுதான் இதனை அணுகுகி றோம்.
ஏழுமலையானின் பாதார விந்தத்தில் ஆவணங்களை வைத்து விண்ணுக்கு ராக் கெட்டை ஏவுகிறார் - அதன் இயக்குநர் இராதா கிருஷ்ணன் - இந்த முறை ஊத்திக்கிட்டதே - என்ன பதில்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வரவேற்புக்கு ஏன் கேரள ஜெண்டா மேளக் குழு? தமிழ்நாட்டில் ஒரு புதிய படையெடுப்புத் தேவையா?


பண்பாட்டுப் படையெடுப்பைப் பல துறைகளிலும் முறியடிக்கவே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைத் திருமணத்தை உருவாக் கினார்கள்.
ஆரியப் பண்பாட்டு முறையில் திருமணங்கள் தமிழர் வீட்டில் நடைபெற்று வந்தன. தமிழன் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில் அவனது தாய் மொழியான தமிழில் நிகழ்வுகள் இல்லை; தமிழர்களல்லாதவர்கள்தான் நடத்தி வைக்கிறார்கள் - அதுவும் யாருக்கும் புரியாத மொழியில், செத்த மொழியான சமஸ்கிருதத்தில் மந்திரங்கள்.

கடவுள்களில்கூட கொஞ்ச காலமாக கேரளத்து அய்யப்பன் தேவைப்படுகின்றான் தமிழனுக்கு!

கர்நாடக மூகாம்பிகைக் கடவுள் தேவைப்படுகிறாள்,

தமிழ்நாட்டில் என்ன கடவுளுக்கா பஞ்சம்? டஜன் கணக்கில் குரோஸ் கணக்கில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனவே. இவை தவிர, தெருவெல்லாம் நடைபாதைகளில் எல்லாம்கூட கடவுள்கள்!

அப்படியிருக்கையில் கேரளக் கடவுள், கர்நாடகக் கடவுளுக்கு என்ன தேவை? தவித்த வாய்க்குத் தண்ணீர் ஒரு சொட்டுக் கூடத் தர முடியாது என்கிறவர்களுக்கு, கோடி கோடியாக தமிழ்நாட்டுப் பணத்தை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று கொட்டிக் கொடுப்பது நியாயம்தானா?

பாடல் என்றால் தெலுங்கு இசை தியாகய்யர்வாள் கீர்த்தனங்களே நம்பர் ஒண்ணாம்! அதில் பாடினால் தான் கர்நாடக இசைக் கலைஞர் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியுமாம்!

இப்போது மற்றொரு வகை ஒரு புதிய படையெடுப்பு - ஊடுருவல்!

கட்சித் தலைவர்களை வரவேற்க, நம்மூர் நாதஸ்வர வித்வான்கள் உள்ளனர்; தவில் மேள தாளக்காரர்கள் உள்ளனர்.

பாரம்பரியமாக அவர்களை அழைத்தே விழாக் களை நடத்தியதைக் கைவிட்டு விட்டு, கேரள ஜண்டா மேளக்காரர்களை வரவழைக்கும் ஒரு கலாச்சாரம் வேகமாகப் புகுந்து வருகிறது! நமது நாதஸ்வர மேளதாளக் கச்சேரி வாத்தியக்காரர்களை ஒதுக்கி விட்டு, இவர்களை அழைத்துப் பயன்படுத்தும் போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் காணப் படுகிறதே - நியாயந்தானா?

நமது இயக்கத்தவர்கள் கட்சிக்காரர்கள் - தமிழ் நாட்டவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா?

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையம் நையாண்டி மேள பக்கவாத்தியக்காரர்கள் எதில் குறைந்தவர்கள்? நமது வாடிப்பட்டி மேளம் மட்டமா? ஏன் அவர்களை நாம் ஒதுக்கி, கேரளத்து வாத்தியமுறைக்காரர்களுக்கு அழைப்புத் தந்து, இவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டுமா? இன்னொரு கலாச்சாரத்துக்கு அடிகோல வேண்டுமா?

எனவே இதை நிறுத்தி, வரவேற்புகளில் - விழாக் களில் நமது இசைக் கருவியாளர்களையே, கலைஞர் களையே பயன்படுத்தும் இயக்கம் ஒன்றை, நாம் துவக்கி அவர்களது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் போலும்! ஒரு புதிய ஊடுருவலுக்கு வழி திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் மணவிழாவில் தமிழர் தலைவர் உரையிலிருந்து (18.8.2013) ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...


பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுவோம்!


வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, நம்மில் பலர் அஞ்சி நடுங்கி, ஒதுங்கி, பதுங்கி ஓடித் தப்பித்துக் கொள்ளலாமா என்று தான் நினைக்கிறோம்!
இன்னும் சிலர், அற்ப நிகழ்வு களைக் கூடத் தாங்க முடியாத, கோழிக் குஞ்சு இதயம் படைத்தவர் களாக மாறி, தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்ற தவறான முடிவுகள் அவசர முடிவுக்கு வந்து, பிரச்சினை களிலிருந்து தப்புவதாக தவறாக எண்ணிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுக் கொள்கிறார்கள்.

முதிர்ச்சியில்லாத நிலைதான் பிரச்சினைகள் கண்டு அஞ்சுவது; எதிர்கொள்ள பயப்படுவதும் ஆன மனநிலை.

மனிதர்களிடம் உள்ள பகுத் தறிவைவிட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா?

அதைப் பயன்படுத்தினால், மலை போல் வரும் பிரச்சினைகளையெல் லாம் பனி போல் போகும்படித் தீர்த்து விடலாமே!

வரும் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள் நமது மூளைக்கு - இதோ ஒரு அரிய வாய்ப்பு என்று நினைத்து துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்; எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் நம்முடைய அறிவால் - அனுபவத்தால் - ஆற்றலால் இவையெல்லாம் கலந்த அணுகுமுறையினால் தீர்க்க - விடை காண நம்மால் முடியும் என்ற நம்பிக்கை யுடன் அதனை அணுகுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பிரச்சினையோ அதன் பரிமாணத்திற்கு மகிழ்ச்சி பொங்க வரவேற்று, தீர்வு காண உங்கள் மூளையை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
பிரச்சினைகளைக் கண்டு தீர்க்க முயலுமுன், அவற்றை ஒரு தொல்லையாக நினையாதீர், மாறாக, புதிய வரவாகக் கொள்ளுங்கள்.

பல நேரங்களில் நல்ல மகிழ்ச்சியோடு நாம் இருக்கும்போது, நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் வகையில் சோக நிகழ்வுகள் - இழப்புகள் ஏற்படலாம். இது கண்டு மன முடைந்து மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருந்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியுமா? அந்த சோகத்தினால் - இழப் பினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நமது ஆக்க பூர்வ வழியென்று சிறிது உணர்ச்சி வயப்பட்ட துக்கத்திலிருந்து மீண்டு விட்டு, ஆழ்ந்து துணிவுடன் நின்று அந்த இழப்பைத் தாண்டியும் வாழ்ந்து காட்ட முடியும் என்று இழந்தோர், கதறியோர், பதறியோர் உள்ளங்களில் ஆழப் பதியும் வண்ணம் ஆக்க சிந்தனை களை விதையுங்கள்; துக்கம் துயரம் தானே புதையும்; அவைகளையே எருவாக்கிக் கொண்டு, நம்பிக்கைப் பயிர் செழித்தோங்கி வளரவே செய்யும்.
பிரச்சினை இல்லை என்றால் மூளைக்கு வேலை கொடுக்கவே முடியாது; மூளைக்கு வேலை கொடுக்கவில்லை யானால்; உடல் எப்படி ஊளைச் சதையினால் பல்வேறு பருமன் முதல் நோய்கள் வரை ஆகிறதோ அதுபோன்று மூளையும் பழுதடைந்து சோம்பல் நோய் தாக்கப்பட்ட மூளையாகி விடும்! முழு மூளையை இன்னும்கூட 21ஆம் நூற்றாண்டில் மனிதன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாது குறைந்த அளவு விழுக்காடுதானே இன்னமும் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
எண்ணிப் பார்த்தீர்களா? பயம், கவலை, - இவைகளால் எந்தப் பிரச் சினையும் தீர்ந்து விடாது. மாறாக, பிரச் சினையை ஒரு வாய்ப்பாகக் கருதி(Opportunity)என்று எண்ணி, முன்னேறிட இதையே தடைக்கல் என்று நீங்கள் பயந்ததைப் படிக்கல் நினைத்து, அதனை மிதித்து, மதித்து, (ஆனால் மிதிக்கும் போது எச்சரிக்கையுடன் கால் வைப்பது எவ்வளவு அவசியமோ அது போல) அதன்மீது ஏறி, வெற்றியின் தீர்வின் உச்சத்தை அடையுங்கள்.

சிறைச் சாலையும் அதன் மூலம் துன்பப்படுத்தப்படுவதும் பலருக்கு வாய்ப்பாக அமைந்த காரணத்தால் தானே பல அரிய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன! பகத்சிங், நேரு போன்றவர்களின் சிந்தனைகள் காலமெல்லாம் அழியாதவைகளாகப் போற்றப் படவில்லையா?

நெருக்கடி கால சிறைக் கொடு மைகள் எங்களைப் போன்ற மிசாக் கைதிகளுக்கு - பக்குவப்படுத்தியே - பழுக்கக் காய்ச்சி கொல்லன் உலைக் களத்தில் அடிக்கப்பட்ட - வார்ப் படங்களாக ஆவதற்கு வழிகாட்ட வில்லையா?

1. பணமில்லை - பலருக்குப் பிரச்சினை

2. உருத் தோற்றம் - சிலருக்குப் பிரச்சினை

3. தொடர் நட்டங்கள் - பலருக்கு நம்பிக்கையை அடியோடு இழக்கும் அவலப் பிரச்சினை.

4. உடல் நோய் - நலம் கெடுதல் எனும் உளைச்சல்.

இந்த நான்குதான் அடிப்படையாக அமைந்து பலருக்குத் தீராப் பிரச்சினை களாகி அவர்களை மனந் தளர வைக்கிறது.

அவற்றை வெல்ல வழி உண்டா? உண்டு! உண்டு! அடுத்து விளக்கு வோம்.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி. இயக்குநர் நியமனம் நடுவண் அமைச்சகப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவையில்லையா?


சென்னை இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவிக்கு, அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவை யில்லை என்று சென்னைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் தெரிவித் துள்ளது. த நியூ இந்தியன் எக்ஸ் பிரஸ் இதழின் 26 ஜூலை இதழில் அது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தின், வர இருக்கின்ற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராம மூர்த்தி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்கு இந்திய தொழில் நுட்பக் கழகப் பதிவாளர் பூமா, இந்தப் பணி நியமனத்துக் குழு மத்திய அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் பெறத் தேவை யில்லை என்று சொல்லியுள்ளார்.

அய்.அய்.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர்கள் நியமனம் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் சட்டம் பிரிவு 17(1)இன் பாற்பட்டதாகும். அந்தச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்கூட்டிய அனுமதியுடன் அய். அய்.டி. குழுவினரால் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதிவாளர் பூமா, 3.7.2006 தேதியின் படி, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 28/13/2006 - ளுஆ ஐஐ பத்தி ஏஐஐஐஇன்படி, இந்த நியமன ஆணைகள் பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவில் குறிப்பிடப்பட்ட தாகாது என்று கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ், பேரா. இராமமூர்த்தியின் நியமன ஆணை அமைச்சரவை பணி நிய மனக் குழுவின் அனுமதி பெறப்படாதது என்று குறிப்பிட்டு இருந்தது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்) அய்.அய்.டி.க்களின் குழுக்களின் நிலைப்பாட்டிற்கு பதிவாளரின் விளக்கம் முரண்பட்டு நிற்பதாகவும், அய்.அய்.டி. யின் குழுக்கள் தான் அவற்றின் உயர்நிலை நிர்வாக அமைப்பு என்றும், அது, தொழில் நுட்பக் கழகத்தின் 1961ஆம் ஆண்டு சட்டப்படி, நடுவண் மனித வள முன்னேற்ற அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுவதாகும்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று புதுடில்லியில் அன்றைய மனிதவள மேம்பாட்டு நடுவண் அமைச்சர் அர்ஜூன்சிங், அய்.அய்.டி. குழுக்களின் தலைமையை ஏற்றுப் பேசு கையில், அமைச்சரவை பணி நியமனக் குழுவின் பங்கு இயக்குநர்களை நியமிப்பது தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் பத்திரிகை செய்திக் குறிப்பில், ஆந்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய ஆறு அய்.அய்.டி.க் களின் ஆணையர் பெயர்களைக் கொண்டுள்ள நியமனம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப் பிட்டுச் சொல்லியிருக்கிறது.

தவிர, பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவின் சுற்றறிக்கை பற்றி ஆறில், இந்த ஆணைகள், எல்லாவித அமைச் சர்களின் தன்னாட்சி நிறுவனங்களுக் கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள் ளது. பணியாளர் மற்றும் பயிற்சி இலா காவினால் தொகுக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிறுவனங்களுள் சென்னை அய்.அய்.டி. 172-ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இன்று ஆவணி அவிட்டமாம் விவேகானந்தர் விழா கொண்டாடுவோரே - உங்களைத்தான்! பூணூல் அல்ல-கோவணக் கயிறு!


இந்துமதத் துறவி என்று கூறப்படும் விவே கானந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பார்ப்பனர்களே - சங்பரிவார்க் கும்பலே, உங்களைத் தான்.. உங்களைத் தான்...

இன்று ஆவணி அவிட்டம் என்று கூறிப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறீர்களே - இந்தப் பூணூல் குறித்து விவேகானந்தர் என்ன கூறு கிறார்? இதோ கேளுங்கள்! கேளுங்கள்!!

இன்று வங்காள சகம் 1303ஆம் ஆண்டு வைசாக மாதம், 19ஆம் தேதி சுவாமிஜி சிஷ்யருக்கு தீக்ஷை செய்ய உடன்பட்டிருக்கிறார். ஆனபடியால், அவர் அதிகாலையில் ஆலம் பஜார் மடத்தை அடைந்தார். சுவாமிஜி சிஷ்யரை நோக்கிக பரிகாசமாக, இன்று நீ பலியாக்கப்படப் போகிறாய் அல்லவா? என்றார்.

இந்தக் குறிப்புக்குப் பின்பு சுவாமிஜி புன்னகை யோடு அமெரிக்க நாட்டைக் குறித்த விஷயங் களைப் பற்றிப் பிறரோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த சம்பாஷணையிலே ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கு விரும்பும் ஒருவன் பக்தியோடும், முழு மனத்தோடும் இருக்க வேண்டும் என்பதும், குரு பக்தியானது எவ்வளவு உறுதி பெற்றிருக்க வேண்டும் என்பதும், குருவினுடைய வார்த்தையிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதும், குருவுக்காக வேண்டுமாயின் உயிரையும் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் பேசப்பட்டன. சிஷ்யருடைய மனத்தைப் பரிசோதிக்கும் பொருட்டுச் சுவாமிஜி சில வினாக்களை வினவினார்.

என்ன நேர்ந்தாலும், எதுவாயிருந்தாலும், என்னுடைய கட்டளையை உன்னால் இயன்றவரை கைக்கொண்டு ஒழுக ஆயத்தமாயிருக்கிறாயா? உன்னுடைய நலத்தைக் கருதி உன்னைக் கங்கையில் குதிக்கச் சொன்னாலும், வீட்டுக் கூரையிலிருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் தடையின்றி அவற்றைச் செய்வாயா? இவற்றை எல்லாம் இப்பொழுது சிந்தித்துப் பார். இந்தக் கணத்தில் உன் உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் எண்ணத்தினாலே என்னைக் குருவாகக் கொள்ள வேண்டும் என்று அவசரப்படாதே இந்த வினாக்களுக்கெல்லாம் சிஷ்யர் ஆம் என்று தலையசைத்தார்.

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனு டைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத் தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

(ஆதாரம் நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

மேலே எடுத்துக் காட்டப்பட்டது ஈரோட்டுக் கைச் சரக்கல்ல; விடுதலை ஏட்டின் விடுகதையல்ல. சாட்சாத் விவேகானந்தர் கூறியதுதான் - ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ளது.

பூணூல் என்பது கோவணம் கட்டும் வெறும் அரை ஞாண் கயிறு தானே? இது எப்படி பார்ப்பனர்கள் தோளில் அணியும் பூணூல் ஆயிற்று? பார்ப்பனர் பதில் சொல்ல மாட்டார்கள் - சொல்லவும் முடியாது. பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர் - சீர் தூக்கிப் பார்த்து!