Search This Blog

18.8.13

நாஸ்திகர் ஆவதற்கு அஞ்சாதீர்கள் -- பெரியார்


பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! டாக்டர் நாயுடு அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். இன்று புத்தரின் 2500ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் கடைசி நாள். இதைப் பொதுக் கூட்டமாக வைத்து இதில் அநேக தோழர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமானவர்கள் எல்லாம் பேச இருக்கிறார்கள். ஆகவே நான் கடைசியில் பேசுவதாகவே இருக்கிறேன். இங்கு பலதரப்பட்டவர்கள், பல கருத்துடைய தோழர்கள் பேசுவார்கள். எந்தக் கருத்துக்களைப் பேசினாலும் நீங்கள் அமைதியாக இருந்து பொறுமை, அன்பு இவைகளைக் கடைப்பிடித்து, இங்கு விளையாட்டு எதுவும் விளையாடாமல், கைத்தட்டுதலைக் குறைத்துக்கொண்டு கடைசி வரை அமைதியாய் இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
புத்தரைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் புத்தரின் சரித்திரம் சரிவரச் சொல்லவில்லை. என்னமோ திண்ணை வேதாந்தம் பேசுகிற மாதிரிப் பேசுகிறார்கள். யாரும் சொல்லாததை புத்தர் ஒருவர்தான் சொன்னார்.

 அவருடைய கொள்கைகளைக் கட்டாயம் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். புத்தரைப்பற்றி பலர் பலவிதமாகச் சொன்னார்கள். புத்தர் ஒருவர் தான், தான் (புத்தர்) சொன் னதைச்கூட தட்டிக்கேட்க உரிமை கொடுத்தவர். நான் சொன்னதை நம்பாமற் போனால் நாசமாகத்தான் போவாய் என்பதைத்தான் வேதம் சொல்லுகிறது. நாரதர், தேவர், உப நிஷத்து முதலிய எல்லாமுமே அதுதான் சொல்லுகின்றன. இவைகள் எல்லாம் சொந்த அறிவைத் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவேதான் தீண்டப்படாதவரை வண்டியில் கொண்டு வந்து நடுப்பந்தியில் உட்கார வைத்தால் எப்படியோ அதுபோல இதுவரை தீண்டப்படாதவனாகவும், அயோக்கியன், நாத்திகள் என்று கூறப்பட்டு வந்த புத்தரை இன்று நாடெங்கும் போற்றி விழா கொண் டாடுகிறார்கள்.
2000 வருடங்களாக தீண்டப் படாதவன், தாழ்த்தப்பட்டவன், தேவடி யாள் மகன், சூத்திரன் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டேபோனால், எத்தனை நாளுக்குத் தான் பொறுத்துக் கொண்டு வருவான். கோடி கடவுள், ஆயிரம் மகான்கள் இவர்களுக் கெல்லாம் கோயில்கள் கட்டி, அவை களுக்கு வேளா வேளைக்குச் சோறு போட்டு, கல்யாணம் பண்ணி ஒரு வருடம் கல்யாணம் செய்தால் போதாது என்று வருடா வருடம் செய்து, கருமாதி செய்தும் பார்த் தாயிற்று. இவ்வளவும் செய்த நாம் சூத்திரன்தான் என்றால் என்ன அர்த்தம்? இதை யார் மறுக்க முடியும், பார்ப்பனர்களைத் தவிர? இதுதான் கடவுள் விசுவாசமா? இப் படியே எத்தனை நாளைக்கு இருப்பது? 1953ஆம் வருடத்திலும் இப்படியே சொல் லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

இந்த புத்தர் விழா பெரும்பாலான ஊர்களில், நாடுகளில் 60 கோடி மக்களுக்குக் குறையாமல் கொண்டாடு கிறார்கள். நாம் தனியாகக் கொண் டாடிய அன்று ஒரு சிலர் ஆத்திரம் அடைந்தார்கள். இப்பொழுது சைனா, ஜப்பான், பர்மா, இலங்கை முதலிய இடங்களில் கொண்டாடுகிறார்கள்.

இங்கு இருக்கிற மாதிரி, பார்ப்பான், சூத்திரன், பறையன் அங்கு இல்லை. இராமன், கிருஷ்ணன், பிள்ளையார் போன்ற ஆயிரக்கணக்கான கடவுள்கள் இல்லை. மூத்திரத்தைக் கரைத்துக் குடிக்கும் மூட வழக்கம் அங்கு இல்லை. எனவே அங்கு புத்தநெறிக்கு ஆதரவு வளர்கிறது. புத்தர் கொள்கைகள் வாழ, புத்தர் சங்கம் வாழ, அன்பு, அஹிம்சை வேண்டுமென்கிறார், புத்தர்.
அன்பு, அஹிம்சையெல்லாம் சூழ் நிலைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் அநேக வருடங்கள் சென்ற பிறகு சொல்ல வேண்டும். புலி அருகில் சென்று அஹிம்சை, அஹிம்சையென்று சொன்னால் என்ன நடக்குமோ அதே போன்றதுதான், நாம் பார்ப்பனரிடம் போய் ஜாதி பேதம் நமக்குள் வேண்டாம் என்று கூறிக் கொண்டுவருவதும். அவன் சூத்திரன் என்று சொன்னால், நாம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நமக்குப் புத்தி யில்லை, மானமில்லை என்றுதானே அர்த்தம்?
நமக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, இழிவுகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் பிறருக்கு நாம் அன்புகாட்ட முடியும். ஒரு மனிதனை 2000 வருடங்களாக கீழ்ஜாதி, வைப்பாட்டி மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மடத்தனமாய், அறிவில்லாதவனாய், ரோஷமில்லாதவனாய் இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்? கவர்னர் முதல் மந்திரிவரை பைத்தியக் காரத் தனமாய்க் கூறிக் கொண்டு வரு கிறார்கள்.
அய்க்கோர்ட் ஜட்ஜுகள், கடவுள் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆயிரக்கணக்கான வழக்கில் அவர்கள் தீர்ப்புக் கூறியிருப்பார்கள் பலரகக் குற்றவாளிகளைக் கண்டு இருப் பார்கள். மக்களிடம் நாணயம், ஒழுங்கு இல்லையென்று, அவர்களுக்குத் தெரியாதா? இப்படி இருந்தும் கடவுள் பக்தி வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எத்தனை அயோக்கியத் தனம் செய்தாலும் ஒருவனுக்குக் கடவுள் பக்தி இருந்தால் போதும் என்று தானே பொருள்?

யாருக்கு இல்லை பக்தி? இந்த சென்னை மாகாணத்தில் இருக்கும் எல்லா சென்டிரல் ஜெயில்களிலும் சுமார் பத்தாயிரம் கைதிகள் இருப் பார்கள். அவர்களில் என்போல் பத்து பேர் இருக்கலாம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். மற்றவர்கள் எல்லோ ரும் காலையில் எழுந்த உடனே திரு நீற்றுப் பட்டையை நெற்றியில் தடவிக்கொண்டு, பகவானே, விடுதலை சீக்கிரம் செய் என்றுதானே வேண்டுகிறார்கள் கடவுளை? ரிமாண் டில் இருப்பவன்  தண்டனை கொஞ்ச மாக இருக்க வேண்டுமென்றும், கடவுளே என் மேல் கேசே போடக் கூடாதென்றும் தானே ஒவ்வொருவனும் வேண்டிக் கொள்கிறான்? இதெல்லாம் பக்தி இல்லாமலா நடக்கிறது?

புத்தர் எவ்விடத்திலும் கடவுளைத் தாக்கிப் பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இப்படிப் பேசுகிறவர்களுக்கு இந்து மதம் என்றால் என்ன என்பதே தெரியாது. வேதத்தை ஏற்று நடந்துவருவதுதான் இந்து மதம். உபநிஷத்துக்கள், மந்திர சாஸ்திரங்கள்படி நாம் நடப்ப தனால் தான் இங்கு பார்ப்பான் - பறையனும், மேல்சாதி - கீழ்சாதியும், எண்ணற்ற கடவுள்களும் இலட்சக்கணக்கான கோவில்களும், குப்பைகூளங்களும் இருக்கின்றன.

எல்லாவற்றையும் கற்று, எது உண்மை? எது பொய்? என்று யார் தெரிந்து வைத்திருக்கிறானோ அவன் தான் புத்தன் திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாத்திகனுக் கும் வித்தியாசமில்லை. ஆகையால் அவனை நாட்டில் விட்டு வைக்காதே என்று இராமன் பரதனுக்குச் சொல்லி யிருக்கிறான். மற்றொரு இடத்தில் பரதா, பவுத்தர்கள் எல்லாம் நாத்தி கர்கள்; அவர்களோடு பழகாமலிருக் கிறாயா? தங்களுடைய சாமர்த்தியத் தால் வேத, புராணங்களையும் சாஸ் திரங்களையும் பெரியோர் ஏற்படுத்தி வைத்த மத சம்பிரதாயங்களையும் அர்த்தம் செய்ய மாட்டார்கள். கேள்வி ஞானங்கொண்டு தங்கள் கருத்துக் களைச் சொல்லி மக்களை மாற்றி விடுவார்கள். அவர்களை நாட்டை விட்டுத் துரத்தி விட்டாயா? என்று இராமன் கூறுகிறான். கேவலம் தன் சொந்தப் புத்தியைக் கொண்டு, அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு வேதங்களை, புராணங்களை, ரிஷிகள் எனப்படுபவர்களை ஆராய்ச்சி செய் கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாஸ்திகன் என்று சொல்கிறார்கள்.

இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப் படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது? நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா? அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா? இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள்! புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக் கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள்? இம்மாதிரி எழுதிவைத் திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா?

நேற்று எந்தப்பத்திரிகை என் பேச்சை வெளியிட்டது? பார்ப்பனர் களின் பத்திரிகைகள் தங்களுக்குள் கட்டுப்பாடு செய்து கொண்டன. என் பேச்சைப் போட்டால் தன் தலை மேலேயே கொள்ளியை எடுத்து வைத்துக்கொண்ட மாதிரி ஆகி விடாதா? கவர்னர் பேச முடியாமல் போய் விட்டதைப் பெரிதாக்கிப் போட்டிருக்கிறார்கள். புத்தர் விழாவுக்கு இழுக்கு கற்பிப்பதில் அவ்வளவு அக்கறை. கூட்டம் மறுநாள் நன்கு நடந் ததே அதைப்பற்றி ஏன் போடவில்லை? இராமசாமி வேண்டாதவன். அதனால் போடவில்லை.
சுமார் 500, 1000 வருடங்களுக்கு முன் மேல்நாடுகளில் யாராவது மதத் திற்கு விரோதமாகப் பிரச்சாரம் செய் தால் கொன்று போட்டுவிடுவார்கள்.
இங்கு அரசாங்கமும், பார்ப்பனரும் உள்ள ஆதரவும் போதாமல் திண் ணைக்குத் திண்ணை இராமாயண காலட்சேபம் செய்கிறார்கள். இவை களுக்கெல்லாம் அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. நாம் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல முன் வந்தால் தடையுத்தரவு போடுகிறார்கள். குப்பை கூளத்திற்கெல்லாம் 3, 4 தடவை ஆதரித்துப் பொம்மை போட்டு ஆதரவு கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.
புத்தன், வள்ளுவன், என்னைத் தவிர வேறு யார் சொல்லியிருக் கிறார்கள் ஜாதி ஒழிய வேண்டு மென்று? நேற்று இருந்தாரே ரமண ரிஷி, ஒரு வார்த்தை ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்லி இருப்பாரா? நாயன்மார், ஆழ்வார்கள் சொல்லியி ருப்பார்களா? மகாத்மாதான் சொன் னாரா? 1956ஆம் வருடம் வரை எங்களைத் தவிர வேறு யாராவது சொன்னார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?
சில பார்ப்பனர்கள் புத்தர் கடவுளைத் திட்டிப் பேசவில்லை என்று பேசுகிறார்கள். இம்மாதிரியாக சிலர் பெரிய விஷயங்களில் தலை கொடுத்து விடு கிறார்கள். புத்தர், உன் புத்தியைக் கொண்டாடு; ஆராய்ச்சி செய். மூடக்கொள்கை களை, மூடத்தன பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்காதே என்று கூறி யிருக்கிறார். அப்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு கடவுள் மிஞ்சுமோ? இராமன், கிருஷ்ணன் எல்லோரும் பறந்து விடமாட்டார்களா? புத்தர் கூறிய ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு கடவுளைக் கண்டுபிடியுங்களேன், பார்ப்போம்!

புத்தர் சிலையின் முகத்தைப் பாருங்கள், அன்பு, அமைதி, சாந்தம் இருக்கிறது. கிருஸ்துவின் முகத்தைப் பாருங்கள், பார்த்தவுடன் நமக்கே ஒரு சக்தி ஏற்படுகிறது. இங்கு இருக்கிற கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்கள். 5,6 முகங்கள்! 10, 20 கைகள்! கண்கள் வெளியே வந்து விடுகிற மாதிரி இருக்கும் கோரமான முகம்! கையில் அரிவாள் கத்தி, பெரியவயிறு இவைகள்தானே நம் கடவுள்கள்?
21 லட்ச வருடங்களுக்கு முன் திரோதாயுகத்தில் இராமாயணம் நடந்தென்று எழுதப்பட்டிருக்கிறது. 2000 - 3000 ஆண்டுகட்கு முன் இருந்த தமிழன் கதையே நமக்கு அகப்படவில்லை. இராமாயணம் மாத்திரம் அப்படியேயிருக்குமா? 21 லட்ச வருடங்களுக்கு முன் டார்வின் ஆராய்ச்சிப்படி மனிதன் குரங்காகத் தானே இருந்திருப்பான். 5000, 6000 வருடங்களுக்கு முன்பே நான்கைந்து தடவைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொ ல்லியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மதுரை, சேர, சோழ பாண்டியர் முதலிய அரசர்கள் இருந்திருப்பார்களா? இவை களை நாம் எப்படி ஒப்புக் கொள்வது? சில வருடங்களுக்குமுன் தேவடியாள் பட்டம் பொட்டுக்கட்டி கோவிலில் விடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் இருந்தன. நாம் தானே அவர்கள் ஒரு வகுப்பாக மாறிவிடக் கூடாது என்றும் சமுதாயத்தில் ஒருவராக ஆகி சம மதிப்புப் பெற வேண்டும் என்றும் கருதி ஒழிக்கப் பாடுபட்டோம்.
கக்கூஸ், எடுத்தலும் பியூன் வேலை பார்ப்பதும் நம்மவர்களுக்கே; அதற் கெல்லாம் மேல் ஜாதியார் வர மாட் டார்கள். கீழ்த்தரமான வேலைகளை நமக்குக் கொடுத்து விட்டு, பெரிய உத் யோகங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விகிதாச்சாரப்படி என்று கூறிவிடுவார்கள்.
கிருஷ்ணன் பல்லாயிரக்கணக்கான கோபிகா ஸ்திரிகளுடன் விளையாடி னான். அதைக்கண்ட நாரதருக்கும் பெண்ணாசை பிடித்துக்கொண்டது. அதற்குக் கிருஷ்ணன், நான் இல்லாத வீட்டில் நீ போய் இரு என்று சொன் னான். நாரதர் எங்குபோய்ப் பார்த் தாலும் கிருஷ்ணன் இருந்தானாம். இதுதான் கடவுள்களின் லட்சணம் போலும்?
இன்று நாம் எல்லோரும் இவ் விழாவைக் கொண்டாடியதனால் ஒரு படிப்பினையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு இங்கு வந் திருக்கும் தாய்மார்கள் வாசற்படியில் குங்குமம் தடவுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு ஏன் போகவேண்டும். அக்காலத்தில் சுங்கம் வரி போட்டிருந்தான். இக்காலத்தில் கோயிலில் பணம் பிடுங்குகிறான். அம் மாதிரி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து அதன்படி நடந்தால் 25 வருடத்திற்குள்ளாக பார்ப்பான்-பறையன் பூண்டே இருக்காது.
எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? நான் அவர்கள் சொல்லு கிறபடியே தலையாட்டி விட்டால், பார்த்தீர்களோ! கடவுள், நாயக்கருக்கு கட்டாயம் நல்ல அறிவு கொடுப்பார் என்று அப்பொழுதே சொன்னேனே என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுவானே! திடீர் என்று நான் சாமியாராகிவிட்டால் எல்லோருடைய வீட்டிலும் என் படம் தொங்குமே! 
 
எனக்கு வயது 77 முடிந்து 78 பூர்த்தி யாகப் போகிறது. இப்பொழுது தலை நடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். சாகும் வரை இப்படியே இருப்பதாக உத்தேசம். அடிமையாக விலைக்கு வாங்கப்பட்ட நீக்ரோக்கள் இப்பொழுது 100க்கு 80 பேர் படித்துப்பட்டம் பெற்று இருக்கின்றார்கள். இப்பொழுது அவர் களும் வெள்ளையர்களுடன் சம உரிமை யுடன் வாழ்கிறார்கள்.

நாம் நன்றாக வாழ்ந்தபொழுது வெள்ளையருக்கு வேட்டிக் கட்டக்கூடத் தெரியாது. பச்சை மாமிசத்தை அப்படியே தின்று கொண்டிருந்தார்கள்! இப்பொழுது ஆகாயத்தில் ஏரோப் ளேனில் பறக்கிறான்! நாம் கட்டைத் தேரில் கடவுளை வைத்து ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டேயிருக் கிறோம். முஸ்லிம்கள்கூட 1000 வருடங்களுக்கு முன் காட்டுமிராண்டித் தனமாக மூடத்தனமான பழக்க வழக் கங்களைக் கையாண்டு வந்தனர். நபி தோன்றினார். சீர்திருத்தம் செய்தார். அதேபோல் கிருஸ்தவர்களுள் இயேசு வந்தார். உருவத்தைக் கும்பிடுபவர்கள் சண்டாளர்கள் என்று சொல்லிவிட்டார்.
இவைகளைப் பார்த்தாவது நமக்கு இனிமேல் புத்திவர வேண்டாமா? சொந்தப் புத்திதான் இல்லையென்றால் புத்தர் சொன்னபிறகாவது வரவேண் டாமா? அப்படியும் வரவில்லையானால் 10 - 15 ஆண்டுகளுக்குப்பின் பார்ப் பனர் ஆட்சி ஏற்பட்டு நம்மையெல்லாம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளச் செய்வார்கள். நமக்கு எவ்வித உத்தியோகமும் இல்லையென்று சொல்லிவிடுவார்கள். ஆகவே நீங்கள் எல்லோரும் பகுத்தறிவு வழி, புத்தர் சொன்ன வழிகளைப் பின்பற்றினால் உங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்குப் பெருத்த நிதி சேர்த்து வைத்தவராவீர்கள்.
                         -----------------------27.5.1956 சென்னை கடற்கரையில் நடைபெற்ற புத்தர் விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு,  (விடுதலை 2.6.1956)

31 comments:

தமிழ் ஓவியா said...


431 பெண்கள்


சென்னைப் பல் கலைக் கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா கலந்து கொண்டு பட்டமளிப்புரை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்ன? முனைவர் பட்டம் (ஞா.ன) பெற்றவர்கள் மொத்தம் 980 என்பதில் பெண்கள் மட்டும் 431 எனும் தேனினும் இனிக் கும் சுவைக்கும் தகவ லாகும்.

ஒரு கணம் நினைப் போம்! அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்கு என்றனர். (இன்று ஊது கிற அடுப்பே கிடையாது - அது வேறு!)
பெண்களும், வைஸ் யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை. (அத்தியாயம் 9 - சுலோ கம் 3)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுவது பாதகமா காது என்கிறது மனு தர்மம்.
(அத்தியாயம் 11 -சுலோகம் 65)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரிகள், தன் சுவாதீன மாக ஒரு போதும் இருக் கக் கூடாது என்று கூறு வதும் மனுதர்மம் தான். (அத்தியாயம் 5 சுலோகம் 148).
பொதுவாக இந்து சமூகத் தத்துவப்படி எல்லா ஜாதி பெண்களும் பஞ்சமர்களுக்குக் கீழ்ப் பட்டவர்கள்தான்.
இத்தகு ஒரு சமூக அமைப்பில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் ஒரே பாய்ச்சலாக டாக்டரேட்! பட்டம் பெறுகிறார்கள் என்றால் இதன் விளைச் சலை ஒரு கணம் எண் ணிப் பார்ப்போம்.

மனுதர்மத்தைக் கொளுத்திய தந்தை பெரியாரை நன்றியுடன் நினைவு கூர்வோம். பெண்ணுரிமை பற்றி 1925-களில் பேசிய தன்மான இயக்கத்தை நினைவுத்துப் பார்ப்போம்!

கல்விக் கண்களைத் திறந்தவர் என்று தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட பச்சைத் தமிழரை நெஞ்சில் நிறுத்துவோம்.
சமூக நீதிக்கான விதை விதைத்து வளர்த்த திராவிட இயக்கத்தை நீதிக்கட்சியை நினைத்து நெக்குறுவோம்!
வாழ்க பெரியார்!
குறிப்பு: உலகில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி யான பெரியார் மணி யம்மை மகளிர் பொறி யியல் கல்லூரி தஞ்சை வல்லத்தில் 1988இல் துவக்கப்பட்டது. - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பகத் சிங் சர்ச்சை தேவையற்றது பிரதமர் கருத்து


புதுடில்லி, ஆக. 18- இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத் தில் பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது என்றும் அவரது தியாகி அந்தஸ்து பற்றிய சர்ச்சை தேவையற்றது என்றும் பிரதமர் மன் மோகன் சிங் கூறியி ருக்கிறார்.

புதுடில்லியில் இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்திருப் பதாவது: தேசத்தின் நலனுக்காக பகத் சிங் செய்த மகத்தான தியா கத்தை யாரும் மறுக்க முடியாது.

இது தொடர்பாக ஆவணங்கள் இருக் கிறதா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. அவரது தியாகம் ஆவ ணங்களைச் சார்ந்த விஷயமல்ல.
இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத்தை பற்றிப் பேசும்போது பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது. பெருமை மிகுந்த நமது தேசிய பாரம்பரி யத்தின் ஒரு பகுதியாக அவர் இருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தையொட்டி, பகத்சிங்கும் மற்ற சுதந் திரப் போராட்ட வீரர் களும் செய்த உயிர் தியா கத்துக்காக நம் நாடு என் றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சர்ச்சை எழுவது அர்த்த மற்றது. அது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட துன்பத் தையும், செய்த தியாகத் தையும், புண்படுத்துவ தாக அமைந்துவிடும். இது போன்ற சர்ச்சை யைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் தமது அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறார்.
முன்னதாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தியாகிகளாக அறிவிக்கப்பட்டார்களா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக எந்த ஆவ ணமும் இல்லை என்று பதில் அளித்தது. இத னைத் தொடர்ந்து பிர தமர் அறிக்கை அளித் திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்... தமிழர் இல்லங்களில், வணிக நிலையங்களில் கறுப்புக் கொடி! மாபெரும் இரயில் நிறுத்தப் போராட்டம்!



- டெசோ தலைவர் கலைஞர் போர்ப் பிரகடனம்!

சென்னை, ஆக.18- தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மத்திய அரசு மதித்திட வேண்டும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது எனவும் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழர்கள் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், ரயில் மறியல் நடைபெறும் என்றும் மத்திய அரசுக்கு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின் னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற் றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண் ணோட்டத்தில் நம்பகத் தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்கும், தமிழக மீனவர் களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.

13ஆவது சட்டத் திருத்தம்

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி உருவான இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய் வதற்கான அனைத்து வகை முயற்சி களையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடு தலை செய்யப் பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களைக் கைது செய் வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கைக் கடற்படை யினர் கடைப்பிடித்து வரும் நடை முறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூது வரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவுகூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை. இந்தச் சூழ்நிலையிலேதான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது. இந்திய அரசு புறக்கணித்தால்... இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட் சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்ட மாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக் கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத் தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடு பட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் எனும் பெயரில் ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதா?

தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நீதிப் பிரச்சாரம்

மாநில இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்பான தீர்மானங்கள்



தஞ்சாவூர், ஆக. 18- தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சமூக நீதிக்கான பிரச்சாரத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நேற்று (17.8.2013) மாலை தஞ்சையில் நடைபெற்ற கலந் துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1: தந்தை பெரியார் 135ஆவது பிறந்தநாள்

அறிவுலகப் பேராசான் உலகத்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழா வினை தமிழர்களின் தேசிய திருவிழாவாக கொண் டாடும் வகையில் கழக இளைஞரணி மாணவரணி சார்பில் இல்லங்கள் தோறும் புத்தாடை உடுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, கிளைக்கழகம் தோறும் கழக லட்சிய கொடியேற்றுவது, குருதிக்கொடை, உடற்கொடை, மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய அம்சமான மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட மனித நேயப் பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 2: பெரியார்-1000 வினா விடை போட்டி

தந்தை பெரியார் அவர்களின் 135ஆவது பிறந்தநாளையொட்டி கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களின் பெரும் முயற்சியால் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சும் இணைந்து தமிழகம் முழுவதும் கழக மாவட்ட அளவில் 61 மாவட்டங்களில் ஆகஸ்ட் 31 செப்டம் பர் 1 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவ மாணவி களுக்கான பெரியார்-1000 வினா விடை எழுத்துத் தேர்வு போட்டியை கழக பொறுப்பாளர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் கழக இளைஞரணி மாணவரணி பொறுப்பாளர்கள் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 3: இளைஞரணி மாணவரணி சார்பில் கருத்தரங்கம்

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி கழக இளைஞரணி சார்பில் (1) ஜாதிதீண்டாமை ஒழிப்பு எனும் தலைப்பிலும் கழக மாணவரணி சார்பில், (2) ஆசிரியர் தகுதித் தேர்வு, I.I.T நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதி என்னும் தலைப்பிலும், தமி ழகம் முழுவதும் கருத்தரங்கங்களை நடத்தி இளை ஞர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம் - 4: பள்ளிக் கல்லூரிகளில் வாயிற்கூட்டம்

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை விதைக்கும் வகையில், பள்ளிக் கல்லூரிகளில் வாயிற் கூட்டங்களை நடத் துவது, பள்ளிக் கல்லூரி விடுதிகளில் மாணவர்களி டம் கலந்துறவாடி கழக அமைப்புகளை உருவாக் குவது எனவும் பொது இடங்களில் பகுத்தறிவு தகவல் பலகையை நிறுவி நாள்தோறும் கருத்துப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 5: திராவிடர் மாணவர் கழக மண்டல மாநாடு

தந்தை பெரியார் 135ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிடர் மாணவர் கழக கடலூர் மண்டல மாநாட்டினை மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்து டன் செப்டம்பர் 28 அன்று விருத்தாச்சலத்தில் மிக எழுச் சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் - 6: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான ஜாதி தீண்டாமை ஒழிப்பிற்கு அடிப்படை பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத் தும் வகையில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இடைவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அனைத்து க் கட்சி களும் ஆதரவு தருகின்றனர். திராவிடர் கழகத்தின் சார்பில் நாடு தழுவிய பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. தமிழக அரசு குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் அலட்சியப்படுத்தாமல் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்துவதுடன் அடுத்தகட்டமாக தமிழர் தலைவர் அவர்கள் அறிவிக்கும் எந்தவகையான போராட்டத்திற்கும் கழக இளைஞரணி மாணவரணி பொறுப்பாளர் கள், தோழர்கள் தயார்! தயார்! என இக்கூட்டத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் - 7: பெரியாரியல் பயிற்சி முகாம்

திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் சமூக காப்பு அணியிலும், பெரியாரியல் பயிற்சி வகுப்பிலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வாய்ப்புள்ள இடங்களில் இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்தி கழக இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்று பயிற்சி பெறச் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் இக்கமிட்டி இருபால் கழகப் பொறுப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 8: ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் படிப்பு (D.Ted., B.Ed.,) முடித்தவர் களுக்கு ஏற்கெனவே இருந்த முறையை மாற்றி தகுதித் தேர்வு ஒன்றினை வைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவைத் தேவை யற்றது என தொடக்கத்திலேயே திராவிடர் கழகம் எதிர்த்தது. எனினும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதில் சமூகநீதிக்கான வாய்ப்பும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில்(NCTE)மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு சமூகநீதி அடிப்படையிலான தனித்தனி மதிப்பெண்களை அந்தந்த மாநிலங்களே வரைய றுத்துக் கொள்ளும் விதத்தில் 11.2.2011இல் வெளி யிடப்பட்ட (NCTE)-இன் வழிகாட்டுதல் நெறிமுறை எண் 9 (அ) உரிமை வழங்குகிறது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆந்திரா, கேரளா, பீகார், ஒரிசா, அஸ்ஸாம் உள்ளிட்ட பிற மாநிலங்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண் அளவுகோலில் தளர்வு வழங்கியிருக்கும் சூழலில் சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாடில் 60 என்பது அனைத்துப் பிரிவினருக்குமானது; இதில் ஏதும் மாற்றமில்லை என்று அறிவித்திருப் பதும், சமூக நீதிக்கு எதிரான இந்த முடிவைத் தங்கள் கொள்கை முடிவென்று தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு கூறுவதும் யாராலும் ஏற்க முடியாத ஒன்றாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கும், சமூகநீதிக்கும், இந்திய அரசியல் அமைப்புக்குமே மாறாக, இட ஒதுக்கீட்டை கொல்லைப் புற வாயிலாக ஒழிக்கும் நடைமுறையினைத் தமிழக அரசு பின்பற்றுவதை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை மூலமாக முதல மைச்சருக்கு எடுத்துக்காட்டியும், உரிய ஆதாரங் களுடன் விரிவான கட்டுரைகளை வெளியிட்டும் கேளாக்காதினராக இருப்பது வருந்தற்குரியதாகும்.
திராவிடர் கழக மாணவரணியின் சார்பில் ஒத்த கருத்துடைய அமைப்புகளின் தலைவர்களையும், சமூகநீதியில் அக்கறையுடைய கல்வியாளர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும், பல்வேறு இயக்கங்களும், தலைவர்களும் சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் அறிக்கைகளும், போராட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கும் சூழலிலும், இது குறித்து தமிழக முதலமைச்சர் மவுனமாக இருப்பதும், அடுத்தடுத்த தேர்வுகளையும் அதே போக்கில் நடத்தி வருவதும் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தமிழக அரசு எதிர்த் திசையில் செல்வதையே காட்டுகிறது. கடந்த ஆண்டு (2012) இறுதியில் செய்யப்பட்ட பணிநியமனங்களும் இதே சமூகநீதிக்கு எதிரான தகுதித் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

இதனை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, சூஊகூநு வழிகாட்டலின்படி, ஆசிரி யர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண்களை அறிவிக்க வேண்டும் என்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என்னும் பெயரில் ஆசிரியர் கல்வி கற்றவர்களின் எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 252-அய் முற்றிலுமாக ரத்து செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் முன்னு ரிமை வழங்கப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டுமென்றும், சமூக நீதி பின்பற்றப்படாமலும், முறையான அறிவிக்கை கூட வெளியிடப்படா மலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட பணிநியமனங் களை ரத்து செய்து மீண்டும் அந்த நடைமுறை முறையாக நடைபெற்று, அதிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற வேண்டிய பணிநியமனங் களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இக்கலந்து ரையாடல் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் - 9: சமூகநீதி குறித்த தெளிவை உண்டாக்குதல்

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், வடநாட்டில் அண்ணல் அம்பேத்கரும் உண்டாக் கிய உணர்வினாலும், அவர்களது அளப்பரிய போராட்டத்தின் காரணமாகவும், அதன் தொடர்ச் சியாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் சமூகநீதித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து ஆற்றிவரும் பணிகளாலும் பெற்ற சமூகநீதியினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், தாம் பெற்ற வாய்ப்புகள் எல்லாம் சமூகநீதிப் போராட்டங்களின் காரணமாகவே என்னும் உண்மையை உணராமல், பார்ப்பன ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் மாயை காரண மாக, கிளை மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதைப் போல சமூகநீதிக்கு எதி ராகக் கருத்து கொண்டிருக்கும் போக்கு பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில், குறிப் பாக இளைய சமுதாயத்தினர், மாணவர்கள் மத்தி யில் இருப்பதை உணர முடிகிறது. இந்தப் போக்கு எதிர்மறையான விளைவுக ளையே எதிர்காலத்தில் உருவாக்கும். எனவே, சமூகநீதி - ஜாதி ஒழிப்பு குறித்தும் இளைஞர்களுக் கும், மாணவர்களுக்கும் உரிய வகையில் விளங்க வைக்கவும், சமூகநீதி குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு உண்டாக்கவும் பல்வகையிலும் பிரச் சாரத்தினை மேற்கொள்வது எனவும், திண்ணைப் பிரச்சாரத்தினைப் போல கல்லூரிகளிலும், விடுதி களிலும் நேரடியாக மாணவர்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தெளிவை உண்டாக்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானம் - 10: சமூக நீதிக்களத்தில் வெற்றி பெறுவோம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூகநீதியை நிலை நாட்ட தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, திராவிடர் கழக மாணவரணி இந்த களத்தில் தொடர்ந்து போராட ஆணையிட்டு, வழிகாட்டி வரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்தப் பணியை இன்னும் வெகுமக்களுக்கு எடுத்துச் சென்று ஆசிரியர் கல்வி கற்ற மாணவர்களையும் ஒருங்கிணைத்து சமூகநீதிக் களத்தில் வெற்றியைப் பெற உழைப்போம் என்றும் உறுதிகொள்கிறது.
தீர்மானம் - 11: இராஜபாளையம் இளைஞரணி மாநாட்டு வெற்றிக்கு நன்றி

2013, மே 4 அன்று இராஜபாளையத்தில் நடை பெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிலும் இளைஞரணி சீருடை அணிவகுப்பு மற்றும் பெரியார் சமூக காப்பு அணி வகுப்பிலும் பெருந்திரளாக பங்கேற்று மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைத்து மாவட்ட இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இளைஞரணி சீருடை அணிவகுப்பில் பரிசு பெற்ற மாவட்டத் தோழர் களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...




தஞ்சாவூர், ஆக. 18- கடவுள், போதை உள்ளிட்ட அனைத்துப் போதைகளையும் ஒழிக்கச் சூளுரை எடுப்போம் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் நேற்று (17.8.2013) நடைபெற்ற மாணவரணி, இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தலை மையேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்ட தாவது:

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏராள மான கருத்துகளைக் கூறினர். சில இளைஞர்கள் சிறை போக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒரு இயக்கத்திற்கான சரியான அடையாளம் இதுதான். இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டங்களில் உங்கள் கருத்துகளைக் கேட்பதுதான் முக்கியம். உங்களின் பேச்சுகளைக் கேட்பதோடு, உங்களின் ஆர்வம், உற்சாகம், எழுச்சி போன்றவற்றை இங்கே காண முடிகிறது. பலரும் சுருக்கமாகவே பேசினா லும் "சுருக்கென்று" பேசினீர்கள். அற்புதமான தீர்மானங்கள் இங்கே இயற்றப்பட்டன. நம்முடைய தீர்மானங்களே நாட்டின் கலங்கரை விளக்காக இருந்து வருகிறது. பெரியாரின்றி வேறு யார்? சமூகப் புரட்சியில் தந்தை பெரியாரை தவிர்த்து வேறு யாரை நாம் காண முடியும்? பெரியார் மறைந்த காலத்திற்கு என் நினைவுகள் செல்கின்றன. அய்யா அவர்கள் மறைந்தவுடன், நம் இன எதிரிகள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இனி இயக்கமில்லை, கொள்கை இல்லை என முடிவு செய்தார்கள். ஆனால் பெரியார் அவர்கள் உயிரால் மறைந் தார்கள்; கொள்கையால் இவ்வுலகையே நிறைத்தார் கள் என்பதை இன்றைக்கு அவர்கள் புரிந்து கொண்டார்கள். மனிதன் வாழ மூச்சுக் காற்று அவசியம். சமூகம் வாழ பெரியார் கொள்கை எனும் மூச்சுக் காற்றும் அவசியம் தேவை. இளைஞர்கள், மாணவர்கள் விடுதலை மற்றும் பெரியார் நூல்களை நிறைய வாசிக்க வேண்டும். பெரும் விளைவை ஏற்படுத்தும் பெரியார் 1000 நிகழ்ச்சி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் சேர்த்துதான் என்பதை நாம் அறிய வேண்டும். அதில் உள்ள கேள்விகளை வாசித்து, பதில் களைப் நாம் பெற வேண்டும். அப்போதுதான் நமக்கு வரலாறு தெரிய வரும். வரலாறு அறியும் போது நமக்கான வேர்கள் தெரிய வரும். வேர்கள் தெரிந்து விட்டால் விழுதுகள் பாதிப்படையாமல் இருக்கும். நம் பணி என்பது சாதாரண பணியல்ல. பெரியார் கொள்கை என்பது உலக நெறி. பெரியாருக்கு இல்லாத வசதி, வாய்ப்புகளே கிடையாது. ஆனாலும் அவற்றிற்கு ஆளாகாமல் அரும்பாடு பட்டு நமக்குக் கொடுத்துச் சென்றுள்ள பணிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அவர் கொள்கை என்பது கசப்பு மருந்துதான். அது தெரிந்துதான் நீங்களும் வந்துள்ளீர்கள்.

தூக்குமேடையும் தூசு

அப்பேர்ப்பட்ட கொள்கை கொண்டவர்கள் சிறைச்சாலை என்ன, தூக்குமேடைக்கும் அஞ்சமாட் டார்கள். இளமை வளமையை விரும்பும் நேரத்தில், நம் தோழர்கள் புதுமையை விரும்பி வந்துள்ளனர். எண்ணிக்கையில் நாம் சற்றுக் குறைவாக இருக் கலாம். இந்தியாவின் 121 கோடி மக்களை 1 அல்லது 2 விழுக்காடு இராணுவத்தினரே பாதுகாக்கின்றனர். கடுமையான பனி பிரதேசத்தில், சீருடை மற்றும் துப்பாக்கிகளோடு எப்போது விழிப்பாக இருப்பவர்கள் அவர்கள். நாமும் நம் சிந்தனை மூலம் வீழ்ந்து கிடக்கும் இச் சமுதாயத்தை சீர் செய்பவர்கள். உலகின் 600 கோடி பேர் இருக்கிறார்கள். அதில் நோபல் பரிசு பெற்றவர்கள் 1000 பேர் இருக்கலாம். அதற்காக அதை சிறுபான்மை என்று நினைக்க முடியுமா? நாம் ஒரு பெரியார் தொண்டன் என்ப தைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளுங்கள். நாம் நல்ல தலைவர், நல்ல கொள்கை, நல்ல இயக்கம் பெற்றுள்ளோம் என்பதைவிட, வேறென்ன சிறப்பு இருக்க முடியும்? நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கொள்கையும், ஒப்புக் கொண்ட தலைமையும் நம்மை ஒருபோதும் தவறு செய்ய விடாது. பெரியா ரிடத்தில் பல்துறைக் கருத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர்கள் எடுத்துப் படிக்க வேண்டும். நான் பெரியாரை இன்னமும் தொடர்ந்து படித்து வருகிறேன். யாருக்கும் கிடைத்திராத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அண்மையில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், துரை.சந்திரசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்த பயிற்சி முகாம் தேனியில் ஒரு மண்டபத்தில் நடை பெற்றது.

அம்மண்டபத்தின் உரிமையாளர்கள் நம்மைச் சந்தித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மண்டபத்தை வாடகைக்கு விடுகிறோம். போதைகள் பல விதம்
ஆனால் இப்போதுதான் மது வாடை, மாதுவாடை, ஜாதி வாடை என இல்லாத ஒரு நிகழ்ச்சியைக் காண்கிறோம் என்றார்கள். அந்த அளவிற்கு நம் தோழர்கள் சிறப்போடு செயல்படு கிறார்கள். தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை நாம் மிகச் சிறப்போடு செய்ய வேண்டும். அய்ம் பெரும் போதை ஒழிப்பை நம் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். கடவுள் மறுப்பு, மதுபோதை, ஜாதி போதை, பக்திப் போதை, கிரிக்கெட் போதை ஆகியவற்றை ஒழிப்பதற்கு அய்யா பிறந்த நாளில் நாம் சபதமேற்போம். பெரியார் எண்ணங்கள் நம்மை எப்போதும் மேம்படுத்தும்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



பு(யு)த்தி!

செய்தி: பிஜேபி வெற்றி பெற சிறுபான் மையினரின் ஆதரவும் தேவை!
-நரேந்திரமோடி

சிந்தனை: அடடே! எப்படிப்பட்ட ஞானோ தயம்! இது தேர்தல் கால பு(யு)த்தி என்று யாருக் குத் தான் தெரியாது!

தமிழ் ஓவியா said...


இதுதான் பிஜேபி



மத்திய பிரதேசத்தில், பிஜேபி ஆட்சியில் இருக் கிறது. பழங்குடியின மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் விஜய்ஷா.

முதல் அமைச் சரின் மனைவியை இவர் ஆபாசமாக விமர்சித்தார் என்பதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்பொ ழுது மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் மனை வியைப் பற்றி சொன்ன ஆபாசம் என்னாயிற்றோ!

தமிழ் ஓவியா said...


பட்டுப் புடவையை இரவல் கொடுத்து பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை கச்சத்தீவை ஒப்படைக்க முடியாதாம்! இலங்கை அமைச்சர் பெரீஸ் திமிர்


புதுடில்லி, ஆக.19- கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப்ப டைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார்.
இலங்கைத் தலை நகர் கொழும்பில் காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் நாடு கள் கூட்டத்தில் பங் கேற்க வருமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற் காக பெரீஸ் ஞாயிற்றுக் கிழமை டில்லி வந்தார். அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளி யுறவு அமைச்சர் சல் மான் குர்ஷிதை பிற்பக லிலும் சந்தித்துப் பேச வுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர் களிடம் பெரீஸ் ஞாயிற் றுக்கிழமை கூறியது:

"காமன்வெல்த் நாடு கள் அமைப்பில் அங் கம் வகிக்கும் ஆசியா வின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரத மர் என்ற முறையில் கொழும்பில் நடை பெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங் கேற்பதை முக்கியமான தாகக் கருதுகிறோம்.

கச்சத்தீவு விவகா ரம்: கச்சத்தீவு ஒப் பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப் படி அப்போதைய இந் தியப் பிரதமர் இந்திரா காந்தி தான் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குள் பட்ட கச்சத் தீவு இலங் கையின் கட்டுப்பாட் டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத் தில் இலங்கை மீனவர் களுக்கும், இலங்கைக் கும் கச்சத் தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த விஷ யத்தில் இந் திய அரசின் நிலை தெளி வாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப் படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் விவ காரம்: இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அள வுக்குத் தமிழக மீனவர் கள் வந்து மீன்பிடிக்கின் றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட் டுப் போரின் போது கடற்புலிகளால் (விடு தலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமி ழக மீனவர்கள் பாதிக் கப்பட்டனர். போருக் குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகு திக்குத் தமிழக மீன வர்கள் வருவதால், தங் களின் மீன்பிடி வாழ்வா தாரம் பாதிக்கப்படுவ தாக எங்கள் நாட்டு மீன வர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷ யத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண் டும் என்றார் பெரீஸ்.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


சபாஷ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!

இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடிய ப. சிதம்பரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் - தமிழர்! அந்த வகையில் நமக்குப் பெருமை உண்டு.
நீடாமங்கலத்தையடுத்த வையகளத்தூர் எனும் ஊரில், நீதிக்கட்சித் தலைவராக விளங்கி அரும் பெரும் சாதனைகளைக் குவித்த - பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்குப் பல நன்மைகளைச் செய்த பெருமகன் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர் களின் சிலையைத் திறந்து வைத்து, உரையாற்றி யுள்ளார், இந்தியாவின் நிதி அமைச்சர் (17.8.2013).

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் சில முக்கியமான கருத்துகளும், அறி விப்புகளும் சமூகநீதிச் சிந்தனையாளர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

முதலாவதாக உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சில வாரங்களுக்குமுன் அளித்த தீர்ப்பைப் பற்றியதாகும்.

அந்தத் தீர்ப்பு இந்தியா முழுமையும் உள்ள சமூக நீதியாளர்கள் மத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்தது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் டில்லியில் போராட்டம் நடத் துவோம் என்று அறிவித்தார். நாடாளுமன்றத் திலும் உறுப்பினர்கள் கொந்தளித்து எழுந்தனர் - நாடாளுமன்றமே முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவையில் முக்கிய அறிவிப்பினை உறுதியைக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும்; அதிலும் நியாயம் கிடைக்காவிடின் இந்திய அரசமைப்புச் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும் அதற்கு உறுதியளித்து, உரை யாற்றியது வரவேற்கத்தக்கது.

தன் பொது வாழ்வை சமூகநீதிக்காக ஒப்படைத்த தலைவர் ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் சிலை திறப்பு விழாவில் அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு விழாவில் உரையாற் றுகையில் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தது மிக மிகப் பொருத்தமே!

இரண்டாவதாக இடஒதுக்கீடு கூடாது என்பவர்கள் யார் என்பதை நம்மைப் போல் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் காட்டிப் பேசினார். பல யுக்திகளைக் கையாளக் கூடியவர்களாகவும், நீதிமன்றத்திற்கும் சென்று காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். நிருவாகத்தில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இருந்து கொண்டு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை அவருக்கே உரித்தான முறையில் நயமாகச் சுட்டிக் காட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களே; அந்த அளவுக்குத் தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், நம் மக்கள் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் தானே!

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (16.3.2013) ஏடுகள் எல்லாம் அவாள் ஆதிக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேசியிருந் ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலே, டில்லியிலே ஒரு கணிப்பு உண்டு. அவர்கள் பெரியாரின் தாக்கத்தைப் பெற்றவர்கள் - பார்ப்பனர் அல்லாதார் எனும் உணர்வை ஏதோ ஒரு வகையில் உள் வாங்கிக் கொண்டவர் களாகவே இருப்பார்கள் என்ற கணக்கு - மதிப்பீடு உண்டு.

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் உரையில் அந்த உணர்வு மேலிட்டது - வரவேற்கத் தக்கது. உண்மை நிலையைத்தான் அவருக்கே உரிய தனித்தன்மையில் பேசி இருக்கிறார். அதற் காக அவரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்; மிக முக்கியமான பொறுப்பில் இருப்போர்க்கு இத்தகு உணர்வு இருந்தால் கோடானு கோடி மக்களின் மத்தியிலே நல்ல நம்பிக்கை ஏற்படும் அல்லவா!

தமிழ் ஓவியா said...


பைலட்டாக விரும்பிய எனது கனவு நிறைவேறவில்லை : அப்துல்கலாம்


புதுடில்லி, ஆக.19- இந்திய விமானப் படை பைலட்டாக விரும் பியதாகவும், ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் முன் னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

"கனவுகளை நனவாக்குவதற்கான எனது பயணம்' என்ற அவரது புதிய புத்தகத்தில் இந்தத் தகவலை தெரி வித்துள்ளார். புத்தகத்தில் அவர் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

இந்திய விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனக்கு டேராடூனில் உள்ள இந்திய விமா னப்படை அலுவலகத்திலிருந்தும், டில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் டில்லி யில் தொழில்நுட்ப மேம் பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (டிடிடிபி) ஆகியவற்றிலிருந்து நேர் முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தது.

இதில், டிடிடிபி நடத் திய தேர்வில் எளிதாக வெற்றி பெற்றேன். ஆனால், இந்திய விமானப் படை நடத்திய தேர்வில் பங்கேற்ற 25 பேரில் நான் 9-ஆவது இடத்தைப் பிடித்தேன்.

மொத்தம் 8 இடங்களே இருந்த தால், விமானப்படை பைலட்டாக வேண்டும் என்ற எனது கனவு தோல் வியடைந்தது' என குறிப் பிட்டுள்ளார் கலாம்.
147 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், தன் மீது ஆழமான அன்பு வைத்திருந்தவர்களைப் பற்றி கலாம் எழுதியுள் ளார். தன் தந்தை ஒரு படகை உருவாக்கியதைப் பார்த்த அனுபவம், தனது 8 வயதில் நாளிதழ்கள் விற்பனையில் ஈடுபட்ட அனுபவம் உள்ளிட்ட பல விஷயங் களை இந்நூலில் குறிப் பிட்டிருக் கிறார் கலாம்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு சமுதாயம் மலர...


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்

நூலகத்தில் படித்துக் கொண்டி ருந்த போது, நண்பர், ஒரு பார்ப்பன இதழைத்தந்து என்னய்யா இது... பெரிய மோசடியா இருக்கு. இதைப் படித்துப் பாருங்கள் என கோபம் கொப்பளிக்கக் கூறினார்.

பார்த்தேன், படித்தேன் அதில் திராவிட மாயை - ஒரு பார்வை - 73 அபத்தமான கொள்கை என்ற தலைப் பில் ஒரு கட்டுரை. தென்னாட்டில் சாதி வேற்றுமையே இல்லாமல் இருந்ததென்றும், வட நாட்டு ஆரியர் களாகிய பிராமணர்கள் அதைக் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதைப் போன்ற அபத்தமான கொள்கை வேறு எதுவும் இருக்க முடியாது என ஒரு பச்சைப் புளுகை கல்கி எழுதியதாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டி ருந்தது!
அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்த இன்னொரு தோழர், அது உண்மை தானே சார்! எனக்கேட்க.. நான் உடனே அவரிடம் கூறினேன். இது ஒரு பார்ப்பனர் ஏடுதானே? இது ஒரு பொது நூலகம் தானே? மக்கள் வரிப்பணத்தில், இயங்குவது தானே? அப்படியானால், இந்த நூலகத்திற்கு ஏன், பகுத்தறிவு இதழ்களான விடுதலை வருவதில்லை? உண்மை வருவதில்லை? முரசொலி வருவதில்லை? தினமணி, தினமலர் விகடன், கல்வி மற்றும் பக்தியின் பெயரால் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் யாருமே பிரித்துக்கூட பார்க்காமல் மூலையில் கிடக்கிற ஏராளமான மாத, வார, நாளிதழ்கள் மட்டும் மேசையில் கிடக்கிறதே... இதற்கு என்ன பொருள்? அவைகள் திராவிடர் நலன்காக்கும் ஏடுகள்! இவைகள் பார்ப்பனர்களை கொழுக்க வைக்கும் ஏடுகள். இது தானே பொருள்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! என்றேன்.

அதோடு மட்டுமல்ல, மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றனார் எழுதிய பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்ற என்னிடமிருந்த நூலை அவரிடம் தந்து இதையும் படியுங்கள் உங்கள் சந்தே கத்தைத் தீர்க்கும் பதில்கள் இதில் ஆதா ரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன என வேறொரு நண்பருக்கு எடுத்துச் சென்ற புத்தகத்தை அவரிடம் தந்தேன்! நூலகத்தில் (அது கிராம நூலகமாக இருந்ததால் எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்ததால் தான் நூலகரும் எனக்கு நண்பர் என்பதாலே தான் இப்படி மனம் திறந்து பேச முடிந்தது) இது கிடைக்குமா அய்யா? என ஒருவர் கேட்க திராவிடர் ஆண் டால் இது கிடைக்கும்! என்றேன். அனை வரும் சிரித்தனர்! அந்தச் சிரிப்பிலே... சிந்தனையும் கலந்திருந்தது!

ஆம்! கொள்கைப் பரப்புரையே... நமது தலையாய தொண்டறமாக இருந்தால் விரைவிலே தமிழினம் மீண்டும் விழித் தெழும்! மறுநாள் மாலை அந்த புத்தகத் தோடு வந்த நண்பர், அய்யா இது போன்ற நூல் வேறு ஏதாவது இருந்தால் தாருங் கள் எனக்கேட்க என்னிடமிருந்த அய்யா, ஆசிரியர், அண்ணா, கலைஞர் ஆகி யோர் நூல்களைக்காட்டி ஒவ்வொன் றாகப் படியுங்கள் என்று சொன்னேன். ஒரு நூலே ஒருவரது உள்ளத்தை மாற்றும் திறன் படைத்தது என்றால் ஏனைய நூல்கள்?
போகின்ற கூட்டங்களிளெல்லாம், அய்யா புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும், இப்பொ ழுது தாங்களும் அதனை பின்பற்றி வருவதும் எதற்கென்பது இது போல், அனுபவப்பட்டவர்கள் நன்கு உணர் வார்கள்! படித்து தெளிவும் பெறு வார்கள்.

எழுத்தும், பேச்சும், ஏடுகளும் தான் திராவிடர் இயக்கங்களின் ஆணிவேர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வார்களேயானால் பார்ப் பனீயம் வெகு விரைவில் இந்நாட்டை விட்டு ஒழியும்! பகுத்தறிவு சமுதாயம் மலரும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆடி மூடநம்பிக்கை ஆயுளை முடித்ததே!


ஆம்பூர், ஆக. 19- ஆம்பூர் அருகே கார்மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த ஒரே குடும் பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்.
சென்னை, ராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பிரியங்கா (வயது 19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் களது மகன் கார்த்திக் (வயது 25) என்பவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த கீதா (வயது 23) என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆடி மாதம் வந்ததை அடுத்து கார்த்திக் குடும்பத்தினர் கீதாவை தாய் வீட் டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்த தால், கீதாவை தாய் வீட்டிலிருந்து கூட்டி வர நேற்று கார் ஒன்றில் ஜெயச்சந்திரன், சாந்தி, பிரியங்கா, மற்றும் கார்த்திக் ஆகிய நால்வரும் பெங்களூவுருக்கு பயணித்தனர். காரை கார்த்திக் ஒட்டி சென்றார்.

பிறகு பெங்களூருவிலிருந்து கீதாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கார் ஆம்பூரை கடந்து வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப் பாட்டிழந்து சாலையை பிரித்திருக் கும் சிறிய தடுப்புச் சுவர்மீது ஏறியது. அப்போது எதிரே சென்னையி லிருந்து பெங்களூர் சென்று கொண் டிருந்த கண்டெய்னர் லாரிமீது மோதியது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த ஆம்பூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா மற்றும் கீதா ஆகியோர் மரணம் அடைந்தனர். ஜெயச்சந்திரனும், கார்த்திக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூழ்குவதும் சாவதும் தொடர் கதையா?



சுற்றுப் பயணம் செய்வோர், நீர் நிலை களில் மூழ்குவதும், சாவதும் தொடர் கதையாக உள்ளனவே.

கும்பகோணம் அருகே, குணசீலம் கோயிலுக்கு வந்த மூன்று இளைஞர் கள் காவிரியில் குளிக்கச் சென்று, சுழலில் சிக்கி, மரணம் அடைந்தனர். பழவேற்காடு ஏரியில் சாவு; சென்னை கோவளம் கடலில் குளிக்கச் சென்றோர் சாவு; என்று தொடர்கின்றனவே - இதன்மீது அரசு கவனம் செலுத்து கிறதா? தடுப்பு நடவடிக்கையை மேற் கொள்கிறதா? என்று தெரியவில்லை. மனித உயிர்கள் அதுவும் பொறியியல் படிக்கும் இளைஞர்கள் மரணம் என்பது எத்தகைய கொடுமை!

தமிழ் ஓவியா said...


சிறுமியைச் சீரழித்த சாமியார்


சென்னை, ஆக.19-மெரினாவில் 6 பேரால் பாலியல் வன்முறை செய் யப்பட்ட சிறுமி பர பரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிறு மியை பாலியல் தொழி லுக்கு தள்ளிய சித்தர் கைது செய்யப்பட்டுள் ளர். சிபிசிஅய்டி காவல் துறையினரிடம், சிறுமி கொடுத்த வாக்குமூலம்:

என் பெயர் சுதா (14). (பெயர் மாற்றப்பட் டுள்ளது) தந்தை இறந்து விட்டார். என் அம்மா திருமலர் என்னை வளர்த் தார். கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பு படித்தேன். படிப்பு சரியாக வர வில்லை என்று கூறி வயா சர்பாடி பி.வி. காலனி 24 ஆவது தெருவில் ஜோதிட நிலையம் மற்றும் ஆசி ரமம் அமைத்து குறி சொல்லும் அறவழி சித்தர் (48) என்பவரிடம் என் அம்மா அழைத்து சென்றார்.

அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய் வதாகக் கூறி, தனி அறை யில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூ தியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் வன்முறை செய்து விட் டார்.

அப்போது, என் அம்மா வீட்டுக்கு வெளி யில் காத்திருந்தார். நடந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார் என்று கூறினார். இதன் பின்னர், அடிக்கடி என்னை சித்தரிடம் என் அம்மா அழைத்து செல்வார்.

அவரும் என்னை அடித்து மிரட்டி பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலை யம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்ப டைத்தார்.

செல்வம் குடிபோதை யில் என்னுடன் பல முறை தவறாக நடந்து கொண்டார். பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுபடுத் தினர்.

இந்த நிலையில், கடந்த மாதம் செல்வத் தின் வீட்டில் இருந்த போது, அதிகாலையில் எழுந்து, அவர் சட்டைப் பையில் இருந்து ரூ.300 அய் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன்.

கையில் வைத்திருந்த பணத்தில் மாங்காய் வாங்கி, கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன் றுக்கு ரூ.200வரை சம் பாதித்தேன். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, இர வில் சாமி தரிசனம் செய் யும் வரிசையில் சென்று தூங்கிவிடுவேன்.

தினமும் சாமி தரி சனத்துக்கு இரவில் வரி சையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந் தேகப்பட்டு என்னை காவல்துறையில் பிடித் துக் கொடுத்து விட்ட னர். அவர்கள் மூலம் சைல்டு ஹெல்ப் லைன் நிர்வாகிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டு, சென் னைக்கு அழைத்து வரப் பட்டேன். என்னை அம் மாவிடம் ஒப்படைக்கா தீர்கள். அவர் என்னை மீண்டும் பாலியல் கும்ப லிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங் கள். இவ்வாறு சிறுமி சுதா கூறி, கதறி அழுத தாக காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து, சிபிசி அய்டி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அறவழி சித்தரையும் கைது செய்து தீவிர விசா ரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை 4வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதை யடுத்து அறவழி சித்தர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக் கப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்


சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சினையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப் பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட், பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் சத்தும், சிட்ரேட் சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறு நீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கரைக் கும் தன்மை கொண்டுள் ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்ற வற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!


ஜோதிடம், குறி சொல்லுதல் என்ற பெயரில் போதை ஊசிகளைப் போட்டு பெண்களை மயக்கும் - சீரழிக்கும் கும்பல்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்

பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும், தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு! - விபச்சாரம் முதலியவற்றில் ஈடுபடுத்தி, கூட்டு வன்புணர்ச்சி, அதையே தொழிலாக்கி, கமிஷன் பெற ஏஜெண்டுகளை அமர்த்தி, இப்படி பல பெண்களை மயக்க ஊசிகளைப் போட்டு, அருவருப்பும் ஆபாசமும் வழியும் இத்தொழிலை நடத்தி வந்துள்ளான். (இதுபற்றி பிற ஏடுகளில் வந்துள்ள கொடுமையான செய்தியை அப்படியே 3ஆம்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்). பாராட்டத்தக்க காவல்துறையின் நடவடிக்கை!

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருப்பதிக்கு ஓடிப்போய் மாங்காய் வியாபாரம் செய்ததையும் கண்டுபிடித்து, இந்த ஜோதிட வேடமணிந்த மானிடக் கழுகு மற்றும் இவன் கூட்டாளிகள் உட்பட 5 பேர்களை கைது செய்துள்ளார்கள் - தமிழக காவல்துறையினர்.

தமிழ் ஓவியா said...

தமிழகக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) திரு. ராமானுஜம் அவர்கள் ஆணைப்படி, சி.பி.சி.அய்.டி. விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் பாராட்டத் தகுந்தது.

டி.ஜி.பி. அவர்களும், காவல்துறை யினரும் இதில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது வற்புறுத்தல் - வேண்டுகோள் ஆகும்.
வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இதில் ஒரு பெரிய ராக்கெட்டே இருந்திருக்கும் போலிருக்கிறது.

முக்கிய புள்ளிகள்சிக்குவார்களா?

அறவழி சித்தர் (செருப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று பெயர்! - மகா வெட்கக்கேடு) வீட்டைச் சோதனையிட்டு, ஆபாச சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர்.

அந்த ஆவணங்களின் மூலம் அவருக்குப் பல அரசியல் பிரமுகர்கள், பணபலம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பட்டியலையும் தயாரித்து வரு கின்றனர் என்பது மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய செய்தியாகும்.

தேவை - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரிவு!

இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல் லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை - Q பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு - மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன் வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமை யிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று - முக்கியமானது.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.

Article 51a(h) “It shall be the duty of every citzen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.

கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரிய வில்லை!
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு...

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்; அவர் களைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.8.2013

தமிழ் ஓவியா said...


அட, கடவுளே!



பிகார் - சாகர் சாவில் இருந்து பாட் னாவை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த விரைவு ரயில் வண்டியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 37 பேர் பலியானார்கள் என்ற செய்தி குருதியை உறை யச் செய்யக் கூடிய அதிர்ச்சியூட்டுவதாகும்.

இவர்கள் யார் என்றால் தமரா என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயி லுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிவபக்தர் களாம்.

இந்தச் செய்தியை விடுதலை சொல்ல வில்லை. அனேகமாக எல்லா ஏடுகளும், தொலைக்காட்சிகளும் கூட்டியோ குறைக் கவோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே தெரிவித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் உத்தரகாண்டில் வழி படச் சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் மழை யிலும், வெள்ளத்திலும் சிக்கிப் பரிதாபகரமான முறையில் தங்கள் இன்னுயிரைப் ப(றி)லி கொடுத்தனர்.

பெங்களூருவில் ஆடி மாதத்தில் அம்மா வீட்டுக்குச் சென்ற புதுமண மகளை, ஆடி முடிந்து அழைத்து வரு கையில் மூன்று பெண் கள் உட்பட சாலை விபத்தில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர் என்பது செய்தி.

பழனி முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் பலி என்று மற்றொரு பக்கத்தில் செய்தி!

இப்படி நாள்தோறும் செய்திகள்.

இவற்றையெல்லாம் படித்து பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் மனம் மகிழ்ந்து போய் விடவில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் - கடவுளைக் கும்பிடுவதாக சென்ற நிலையில் பலியாகி இருக்கிறார்களே! இதற் குப் பிறகாவது கடவுள் நம்மைப் படைப்பித்தார் காப்பாற்றுகிறார் - அவர் கருணையே கருணை என்று நம்பும் மூடத்தனத்திலிருந்து அப்பாவித்தனத்திலிருந்து விடுபட மாட்டார்களா? என்ற பரிதாப உணர் வோடு, மனிதநேய நெகிழ்ச்சியோடுதான் இதனை அணுகுகி றோம்.
ஏழுமலையானின் பாதார விந்தத்தில் ஆவணங்களை வைத்து விண்ணுக்கு ராக் கெட்டை ஏவுகிறார் - அதன் இயக்குநர் இராதா கிருஷ்ணன் - இந்த முறை ஊத்திக்கிட்டதே - என்ன பதில்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வரவேற்புக்கு ஏன் கேரள ஜெண்டா மேளக் குழு? தமிழ்நாட்டில் ஒரு புதிய படையெடுப்புத் தேவையா?


பண்பாட்டுப் படையெடுப்பைப் பல துறைகளிலும் முறியடிக்கவே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைத் திருமணத்தை உருவாக் கினார்கள்.
ஆரியப் பண்பாட்டு முறையில் திருமணங்கள் தமிழர் வீட்டில் நடைபெற்று வந்தன. தமிழன் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில் அவனது தாய் மொழியான தமிழில் நிகழ்வுகள் இல்லை; தமிழர்களல்லாதவர்கள்தான் நடத்தி வைக்கிறார்கள் - அதுவும் யாருக்கும் புரியாத மொழியில், செத்த மொழியான சமஸ்கிருதத்தில் மந்திரங்கள்.

கடவுள்களில்கூட கொஞ்ச காலமாக கேரளத்து அய்யப்பன் தேவைப்படுகின்றான் தமிழனுக்கு!

கர்நாடக மூகாம்பிகைக் கடவுள் தேவைப்படுகிறாள்,

தமிழ்நாட்டில் என்ன கடவுளுக்கா பஞ்சம்? டஜன் கணக்கில் குரோஸ் கணக்கில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனவே. இவை தவிர, தெருவெல்லாம் நடைபாதைகளில் எல்லாம்கூட கடவுள்கள்!

அப்படியிருக்கையில் கேரளக் கடவுள், கர்நாடகக் கடவுளுக்கு என்ன தேவை? தவித்த வாய்க்குத் தண்ணீர் ஒரு சொட்டுக் கூடத் தர முடியாது என்கிறவர்களுக்கு, கோடி கோடியாக தமிழ்நாட்டுப் பணத்தை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று கொட்டிக் கொடுப்பது நியாயம்தானா?

பாடல் என்றால் தெலுங்கு இசை தியாகய்யர்வாள் கீர்த்தனங்களே நம்பர் ஒண்ணாம்! அதில் பாடினால் தான் கர்நாடக இசைக் கலைஞர் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியுமாம்!

இப்போது மற்றொரு வகை ஒரு புதிய படையெடுப்பு - ஊடுருவல்!

கட்சித் தலைவர்களை வரவேற்க, நம்மூர் நாதஸ்வர வித்வான்கள் உள்ளனர்; தவில் மேள தாளக்காரர்கள் உள்ளனர்.

பாரம்பரியமாக அவர்களை அழைத்தே விழாக் களை நடத்தியதைக் கைவிட்டு விட்டு, கேரள ஜண்டா மேளக்காரர்களை வரவழைக்கும் ஒரு கலாச்சாரம் வேகமாகப் புகுந்து வருகிறது! நமது நாதஸ்வர மேளதாளக் கச்சேரி வாத்தியக்காரர்களை ஒதுக்கி விட்டு, இவர்களை அழைத்துப் பயன்படுத்தும் போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் காணப் படுகிறதே - நியாயந்தானா?

நமது இயக்கத்தவர்கள் கட்சிக்காரர்கள் - தமிழ் நாட்டவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா?

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையம் நையாண்டி மேள பக்கவாத்தியக்காரர்கள் எதில் குறைந்தவர்கள்? நமது வாடிப்பட்டி மேளம் மட்டமா? ஏன் அவர்களை நாம் ஒதுக்கி, கேரளத்து வாத்தியமுறைக்காரர்களுக்கு அழைப்புத் தந்து, இவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டுமா? இன்னொரு கலாச்சாரத்துக்கு அடிகோல வேண்டுமா?

எனவே இதை நிறுத்தி, வரவேற்புகளில் - விழாக் களில் நமது இசைக் கருவியாளர்களையே, கலைஞர் களையே பயன்படுத்தும் இயக்கம் ஒன்றை, நாம் துவக்கி அவர்களது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் போலும்! ஒரு புதிய ஊடுருவலுக்கு வழி திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் மணவிழாவில் தமிழர் தலைவர் உரையிலிருந்து (18.8.2013) ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...


பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுவோம்!


வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, நம்மில் பலர் அஞ்சி நடுங்கி, ஒதுங்கி, பதுங்கி ஓடித் தப்பித்துக் கொள்ளலாமா என்று தான் நினைக்கிறோம்!
இன்னும் சிலர், அற்ப நிகழ்வு களைக் கூடத் தாங்க முடியாத, கோழிக் குஞ்சு இதயம் படைத்தவர் களாக மாறி, தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்ற தவறான முடிவுகள் அவசர முடிவுக்கு வந்து, பிரச்சினை களிலிருந்து தப்புவதாக தவறாக எண்ணிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுக் கொள்கிறார்கள்.

முதிர்ச்சியில்லாத நிலைதான் பிரச்சினைகள் கண்டு அஞ்சுவது; எதிர்கொள்ள பயப்படுவதும் ஆன மனநிலை.

மனிதர்களிடம் உள்ள பகுத் தறிவைவிட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா?

அதைப் பயன்படுத்தினால், மலை போல் வரும் பிரச்சினைகளையெல் லாம் பனி போல் போகும்படித் தீர்த்து விடலாமே!

வரும் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள் நமது மூளைக்கு - இதோ ஒரு அரிய வாய்ப்பு என்று நினைத்து துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்; எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் நம்முடைய அறிவால் - அனுபவத்தால் - ஆற்றலால் இவையெல்லாம் கலந்த அணுகுமுறையினால் தீர்க்க - விடை காண நம்மால் முடியும் என்ற நம்பிக்கை யுடன் அதனை அணுகுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பிரச்சினையோ அதன் பரிமாணத்திற்கு மகிழ்ச்சி பொங்க வரவேற்று, தீர்வு காண உங்கள் மூளையை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
பிரச்சினைகளைக் கண்டு தீர்க்க முயலுமுன், அவற்றை ஒரு தொல்லையாக நினையாதீர், மாறாக, புதிய வரவாகக் கொள்ளுங்கள்.

பல நேரங்களில் நல்ல மகிழ்ச்சியோடு நாம் இருக்கும்போது, நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் வகையில் சோக நிகழ்வுகள் - இழப்புகள் ஏற்படலாம். இது கண்டு மன முடைந்து மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருந்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியுமா? அந்த சோகத்தினால் - இழப் பினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நமது ஆக்க பூர்வ வழியென்று சிறிது உணர்ச்சி வயப்பட்ட துக்கத்திலிருந்து மீண்டு விட்டு, ஆழ்ந்து துணிவுடன் நின்று அந்த இழப்பைத் தாண்டியும் வாழ்ந்து காட்ட முடியும் என்று இழந்தோர், கதறியோர், பதறியோர் உள்ளங்களில் ஆழப் பதியும் வண்ணம் ஆக்க சிந்தனை களை விதையுங்கள்; துக்கம் துயரம் தானே புதையும்; அவைகளையே எருவாக்கிக் கொண்டு, நம்பிக்கைப் பயிர் செழித்தோங்கி வளரவே செய்யும்.
பிரச்சினை இல்லை என்றால் மூளைக்கு வேலை கொடுக்கவே முடியாது; மூளைக்கு வேலை கொடுக்கவில்லை யானால்; உடல் எப்படி ஊளைச் சதையினால் பல்வேறு பருமன் முதல் நோய்கள் வரை ஆகிறதோ அதுபோன்று மூளையும் பழுதடைந்து சோம்பல் நோய் தாக்கப்பட்ட மூளையாகி விடும்! முழு மூளையை இன்னும்கூட 21ஆம் நூற்றாண்டில் மனிதன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாது குறைந்த அளவு விழுக்காடுதானே இன்னமும் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
எண்ணிப் பார்த்தீர்களா? பயம், கவலை, - இவைகளால் எந்தப் பிரச் சினையும் தீர்ந்து விடாது. மாறாக, பிரச் சினையை ஒரு வாய்ப்பாகக் கருதி(Opportunity)என்று எண்ணி, முன்னேறிட இதையே தடைக்கல் என்று நீங்கள் பயந்ததைப் படிக்கல் நினைத்து, அதனை மிதித்து, மதித்து, (ஆனால் மிதிக்கும் போது எச்சரிக்கையுடன் கால் வைப்பது எவ்வளவு அவசியமோ அது போல) அதன்மீது ஏறி, வெற்றியின் தீர்வின் உச்சத்தை அடையுங்கள்.

சிறைச் சாலையும் அதன் மூலம் துன்பப்படுத்தப்படுவதும் பலருக்கு வாய்ப்பாக அமைந்த காரணத்தால் தானே பல அரிய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன! பகத்சிங், நேரு போன்றவர்களின் சிந்தனைகள் காலமெல்லாம் அழியாதவைகளாகப் போற்றப் படவில்லையா?

நெருக்கடி கால சிறைக் கொடு மைகள் எங்களைப் போன்ற மிசாக் கைதிகளுக்கு - பக்குவப்படுத்தியே - பழுக்கக் காய்ச்சி கொல்லன் உலைக் களத்தில் அடிக்கப்பட்ட - வார்ப் படங்களாக ஆவதற்கு வழிகாட்ட வில்லையா?

1. பணமில்லை - பலருக்குப் பிரச்சினை

2. உருத் தோற்றம் - சிலருக்குப் பிரச்சினை

3. தொடர் நட்டங்கள் - பலருக்கு நம்பிக்கையை அடியோடு இழக்கும் அவலப் பிரச்சினை.

4. உடல் நோய் - நலம் கெடுதல் எனும் உளைச்சல்.

இந்த நான்குதான் அடிப்படையாக அமைந்து பலருக்குத் தீராப் பிரச்சினை களாகி அவர்களை மனந் தளர வைக்கிறது.

அவற்றை வெல்ல வழி உண்டா? உண்டு! உண்டு! அடுத்து விளக்கு வோம்.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி. இயக்குநர் நியமனம் நடுவண் அமைச்சகப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவையில்லையா?


சென்னை இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவிக்கு, அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவை யில்லை என்று சென்னைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் தெரிவித் துள்ளது. த நியூ இந்தியன் எக்ஸ் பிரஸ் இதழின் 26 ஜூலை இதழில் அது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தின், வர இருக்கின்ற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராம மூர்த்தி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்கு இந்திய தொழில் நுட்பக் கழகப் பதிவாளர் பூமா, இந்தப் பணி நியமனத்துக் குழு மத்திய அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் பெறத் தேவை யில்லை என்று சொல்லியுள்ளார்.

அய்.அய்.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர்கள் நியமனம் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் சட்டம் பிரிவு 17(1)இன் பாற்பட்டதாகும். அந்தச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்கூட்டிய அனுமதியுடன் அய். அய்.டி. குழுவினரால் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதிவாளர் பூமா, 3.7.2006 தேதியின் படி, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 28/13/2006 - ளுஆ ஐஐ பத்தி ஏஐஐஐஇன்படி, இந்த நியமன ஆணைகள் பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவில் குறிப்பிடப்பட்ட தாகாது என்று கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ், பேரா. இராமமூர்த்தியின் நியமன ஆணை அமைச்சரவை பணி நிய மனக் குழுவின் அனுமதி பெறப்படாதது என்று குறிப்பிட்டு இருந்தது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்) அய்.அய்.டி.க்களின் குழுக்களின் நிலைப்பாட்டிற்கு பதிவாளரின் விளக்கம் முரண்பட்டு நிற்பதாகவும், அய்.அய்.டி. யின் குழுக்கள் தான் அவற்றின் உயர்நிலை நிர்வாக அமைப்பு என்றும், அது, தொழில் நுட்பக் கழகத்தின் 1961ஆம் ஆண்டு சட்டப்படி, நடுவண் மனித வள முன்னேற்ற அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுவதாகும்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று புதுடில்லியில் அன்றைய மனிதவள மேம்பாட்டு நடுவண் அமைச்சர் அர்ஜூன்சிங், அய்.அய்.டி. குழுக்களின் தலைமையை ஏற்றுப் பேசு கையில், அமைச்சரவை பணி நியமனக் குழுவின் பங்கு இயக்குநர்களை நியமிப்பது தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் பத்திரிகை செய்திக் குறிப்பில், ஆந்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய ஆறு அய்.அய்.டி.க் களின் ஆணையர் பெயர்களைக் கொண்டுள்ள நியமனம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப் பிட்டுச் சொல்லியிருக்கிறது.

தவிர, பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவின் சுற்றறிக்கை பற்றி ஆறில், இந்த ஆணைகள், எல்லாவித அமைச் சர்களின் தன்னாட்சி நிறுவனங்களுக் கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள் ளது. பணியாளர் மற்றும் பயிற்சி இலா காவினால் தொகுக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிறுவனங்களுள் சென்னை அய்.அய்.டி. 172-ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இன்று ஆவணி அவிட்டமாம் விவேகானந்தர் விழா கொண்டாடுவோரே - உங்களைத்தான்! பூணூல் அல்ல-கோவணக் கயிறு!


இந்துமதத் துறவி என்று கூறப்படும் விவே கானந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பார்ப்பனர்களே - சங்பரிவார்க் கும்பலே, உங்களைத் தான்.. உங்களைத் தான்...

இன்று ஆவணி அவிட்டம் என்று கூறிப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறீர்களே - இந்தப் பூணூல் குறித்து விவேகானந்தர் என்ன கூறு கிறார்? இதோ கேளுங்கள்! கேளுங்கள்!!

இன்று வங்காள சகம் 1303ஆம் ஆண்டு வைசாக மாதம், 19ஆம் தேதி சுவாமிஜி சிஷ்யருக்கு தீக்ஷை செய்ய உடன்பட்டிருக்கிறார். ஆனபடியால், அவர் அதிகாலையில் ஆலம் பஜார் மடத்தை அடைந்தார். சுவாமிஜி சிஷ்யரை நோக்கிக பரிகாசமாக, இன்று நீ பலியாக்கப்படப் போகிறாய் அல்லவா? என்றார்.

இந்தக் குறிப்புக்குப் பின்பு சுவாமிஜி புன்னகை யோடு அமெரிக்க நாட்டைக் குறித்த விஷயங் களைப் பற்றிப் பிறரோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த சம்பாஷணையிலே ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கு விரும்பும் ஒருவன் பக்தியோடும், முழு மனத்தோடும் இருக்க வேண்டும் என்பதும், குரு பக்தியானது எவ்வளவு உறுதி பெற்றிருக்க வேண்டும் என்பதும், குருவினுடைய வார்த்தையிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதும், குருவுக்காக வேண்டுமாயின் உயிரையும் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் பேசப்பட்டன. சிஷ்யருடைய மனத்தைப் பரிசோதிக்கும் பொருட்டுச் சுவாமிஜி சில வினாக்களை வினவினார்.

என்ன நேர்ந்தாலும், எதுவாயிருந்தாலும், என்னுடைய கட்டளையை உன்னால் இயன்றவரை கைக்கொண்டு ஒழுக ஆயத்தமாயிருக்கிறாயா? உன்னுடைய நலத்தைக் கருதி உன்னைக் கங்கையில் குதிக்கச் சொன்னாலும், வீட்டுக் கூரையிலிருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் தடையின்றி அவற்றைச் செய்வாயா? இவற்றை எல்லாம் இப்பொழுது சிந்தித்துப் பார். இந்தக் கணத்தில் உன் உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் எண்ணத்தினாலே என்னைக் குருவாகக் கொள்ள வேண்டும் என்று அவசரப்படாதே இந்த வினாக்களுக்கெல்லாம் சிஷ்யர் ஆம் என்று தலையசைத்தார்.

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனு டைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத் தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

(ஆதாரம் நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

மேலே எடுத்துக் காட்டப்பட்டது ஈரோட்டுக் கைச் சரக்கல்ல; விடுதலை ஏட்டின் விடுகதையல்ல. சாட்சாத் விவேகானந்தர் கூறியதுதான் - ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ளது.

பூணூல் என்பது கோவணம் கட்டும் வெறும் அரை ஞாண் கயிறு தானே? இது எப்படி பார்ப்பனர்கள் தோளில் அணியும் பூணூல் ஆயிற்று? பார்ப்பனர் பதில் சொல்ல மாட்டார்கள் - சொல்லவும் முடியாது. பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர் - சீர் தூக்கிப் பார்த்து!

தமிழ் ஓவியா said...


மராட்டிய மாவீரர் - கொள்கைக்காக உயிர் ஈந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் போர்த் தளபதி - நரேந்திர தபோல்கருக்கு வீர வணக்கம்!


மராத்தியம் தந்த மாவீரர்; சீரிய பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் (65) அவர்கள் நேற்று புனேயில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இவரை நோக்கி இருமுறை சுட்டுள்ளனர்.

குண்டுகள் பாய்ந்து இவர் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார் என்ற அதிர்ச்சியான சோகச் செய்தியை நேற்றே விஜயவாடாவிலிருந்து கோரா நாத்திக மய்யத்தின் இயக்குநர் நண்பர் டாக்டர் விஜயம் அவர்கள் நமக்கு தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் துக்கத்தை, துயரத்தை ஆற்றிடும் வகையில் இதுபற்றிய வேதனையைப் பகிர்ந்துகொண்டோம்.

மதவெறி சக்திகளின் சதியினால்...

சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் (இவர் ஒரு மருத்துவர்) மராத்திய மாநிலத்தின் தலைசிறந்த பகுத்தறிவாளர்; மூட நம்பிக்கைகள், கடவுளர் அவதாரமாகக் கூறிக்கொண்ட மோசடிப் பேர்வழிகளின் முகமூடிகளைக் கிழிப்பவர்; பில்லி சூன்யம் மற்றும் மாந்திரீகவாதிகளை அம்பலப்படுத்த அயராதவர். 1989 இல் மகாராஷ்டிர அந்தராஷ்டிராத நிர்மூலன் சமிதி - மகாராஷ்டிர மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கம்மூலம் இவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்ட மதவெறி சக்திகளின் சதியினால் இவர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்தவர்

விழியற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுக் கொண்டு வருவதாக புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்து அத்தகைய தெய்வீக புருஷர்களை அம்பலப்படுத்தியதுதான் முக்கிய காரணம்.

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மசோதா கொணரக் காரணமானவர் இவரும், இவரது பகுத்தறிவு இயக்கமும்!
இவரது குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம்!

மகாராஷ்டிர, அகமது நகரில் உள்ள ஷானி சிங்கனாப்பூர் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை எதிர்த்து 2000 ஆம் ஆண்டில் போராடி, வெற்றி கண்டவர். பிற்போக்குப் பக்தர்கள் வழக்குப் போட்டு, தோற்றார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் இவர்!

இவரது துணைவியார் ஒரு டாக்டர். திருமதி ஷர்மிளா தபோல்கர் ஒரு பகுத்தறிவுவாதி. இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர். மொத்தக் குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம் ஆகும்!

இவருக்குப் பலமுறை அச்சுறுத்தல் வந்தும், காவல்துறை யினரின் பாதுகாப்பை மறுத்து, தனது பணி அறியாமையை எதிர்ப்பதே என்று காவல்துறையினரின் பாதுகாப்பை ஏற்க மறுத்தார்.

ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே இழப்பு!

அவரது மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டும். ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல; மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே - (நம்மைப் போன்றவர்கள் உள்பட) மிகப்பெரிய இழப்பு!

பகுத்தறிவை வளர்க்க மூட நம்பிக்கைகளை, அறியாமையை, பக்திப் போதையை அழிக்க தன்னைத்தானே ஈந்துகொண்ட மாபெரும் லட்சிய வீரர் நரேந்திர தபோல்கருக்கு நமது வீரவணக்கம்!

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகங்கள் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நரேந்திர தபோல்கர் சட்டம்

அந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை விரைந்து சட்டமாக்குவதோடு, அச்சட்டத்தின் பெயராக நரேந்திர தபோல்கர் சட்டம் என்றே பெயர் சூட்ட வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வரை, அந்த அரசினை நாம் கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
21.8.2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள் தந்தை பெரியார் கொள்கைக்கு எதிரானவை

தி.மு.க. தலைவர் கலைஞர் குற்றச்சாற்று

சென்னை, ஆக.21- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.தி. மு.க. அரசின் செயல்பாடுகள் தந்தை பெரியார் அவர் களின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானவை என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ள கடிதம் வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே?
கலைஞர்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென் பது, இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படியான விதியாகும். அரசுப் பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர் வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித் ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப் படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெறவேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவி னருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க் கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத் துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் கூறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகி யோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோத மானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும்- ஒரிசாவில் உயர் ஜாதியி னருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சத விகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கு விரோதமானதுமாகும்.

தமிழர் தலைவர் கண்டனம்

எனவே தமிழக அரசு இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, சமூக நீதி காத்திட முன்வர வேண்டும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், தம்பி தொல். திருமாவளவன், எம்.பி., அவர்களும் அறிக்கை விடுத்திருந்தார்கள். ஆனாலும் தமிழக அரசின் சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் திரு. எஸ். கருப்பையா பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசா ரணைக்கு வந்து, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கா விட்டாலும், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இப்படி யொரு சோதனை ஏற்பட்டுவிட்டதே என்று சமூக நீதி ஆர்வலர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சரியான முடிவை எடுக்குமா இந்தியா?



இலங்கை அரசின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அரசின் அயலுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோரின் பேட்டி ஒரே சமயத்தில் வெளிவந்துள்ளது.

இன்றைய ராஜபக்சே தலைமையிலான அரசின் நிலையைக் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. என்றாலும் தேர்தல் அங்கு நியாயமாக நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால், முறையான வாக்காளர் பட்டியலை அரசு வெளியிடவில்லை. தேர்தலுக் கான சிறப்புப் பார்வையாளர்களை இன்னும் நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிலரும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைப் போன்ற பார்வையாளர்கள் ராணுவ சார்பு இல்லாமல் சிவிலியன்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி ராணுவ சார்புடையவர்களாகவே நியமிக்கப் பட்டுள்ளனர். இப்படி இருந்தால் தேர்தல் எப்படி அமைதியாக, நேர்மையாக நடக்கும்? என்ற நியாயமான சந்தேகத்தையும், வினாவையும் எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாடுகளை ஏமாற்றிட காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க இருக்கும் சூழலில், தமது அரசு ஜனநாயக நடைமுறைகளைக் கடைப் பிடிக்கிறது என்று

காட்டிக் கொள்ளவும், பிற நாடுகளை நம்பச் செய்யவும், இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார் ராஜபக்சே என்பது வெளிப்படை.

தேர்தலை அறிவித்துள்ள சூழ்நிலையில், மாநிலங்களுக்குள்ள உரிமை பறிக்கப்படக் கூடிய அறிவிப்புகளையும் இன்னொரு பக்கத்தில் அறிவித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்துத் தேர்தல் நடத்தாமலும், தேர்தல் நடக்கும்முன்பே சிங்களக் குடியேற்றத்தைத் திட்டமிட்டுச் செய்வதும், ராஜபக்சேவின் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கான செயல்முறையாகும். இவ்வளவையும் திட்டமிட்டுச் செய்துவிட்டு, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு, இந்தியப் பிரதமரை அழைக்க இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி வைக்கிறார் என்றால், இதன் பொருள் என்ன?
இந்தியாவைக் கேலி செய்யும் செயல் இல்லாமல், இது வேறு என்னவாம்?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டுமே - அதனைச் செய்யாமல் இந்தியாவுக்கு இன்றைய சூழலில் அழைப்புக் கொடுப்பது விருந்துக்கு இலை போட்டுப் பக்கத்தில் அசிங்கத்தை வைப்பது போன்றதேயாகும்.

இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அழைப்புக் கொடுத்துவிட்டு, இந்தியாவின் தலைநகரிலேயே இந்திய நாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிரடியாகப் பேசுகிறார் என்றால், இந்தியாவைப்பற்றி சிங்கள அரசுக்கு இருக்கும் இளக்காரத்தைத்தானே இது காட்டுகிறது!

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தூக்கி எறிந்து, இந்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது எவ்வளவுப் பெரிய தவறு என்பதை இப்பொழுதாவது இந்தியா உணருமா என்று தெரியவில்லை.

உணரவேண்டும்; உணர்ந்த நிலையில் மீண்டும் அத்தீவை மீட்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்; அதுதான் 120 கோடி மக்களுக்கான சுய மரியாதையாகும். அப்படி இல்லையென்றால், இலங்கைத் தீவு இளக்காரமாக இந்தியாவை எடை போடுவது சரியானதுதான் என்பதை ஏற்றாக வேண்டும்.

உள்நாட்டிலும் கெட்ட பெயர், வெளிநாட்டு விவகாரத்திலும் அவமானம் என்கிற இரு தண்ட வாளத்தில் இந்திய அரசு பயணிக்கப் போகிறதா?

கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திராவிடர் கழகம், டெசோ, தமிழக அரசு போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்திய அரசு சரியான முடிவை எடுக்குமானால், நீதிமன்றத்திலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். இதுவரை எப்படியோ இந்தியா தவறு செய்தது; நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்; இப்பொழு தாவது சரியானதொரு முடிவை எடுக்குமா? எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


நல்லாசிரியர்



சரியான தலைவரை அடையாளம் கண்டு ஏற்றுக் கொண்டோமே - சரியான கொள்கையை ஏற்றுக் கொண்டோமே - சரியான இயக் கத்தில் நம்மை நாம் ஒப்படைத்து கொண்டோமே... என்பதை எண்ணி எண்ணி நம்மை நாம் பாராட்டிக் கொள்ளலாம்... (12.8.2013 விடுதலை யில்) வேலூர் கலந்துரையாடலில் நம் தலைவர் ஆற்றிய சத்தான சொல் லாடல் இது. பலத்த கர ஒலி! இருக் காதா பின்னே...

படித்தேன். மெய் சிலிர்த்தேன். கற்றுத் தருபவரே நல் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர்.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


உடலில் தீப்பிடிக்கும் குழந்தை குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை 30 வகையான பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தகவல்


சென்னை, ஆக.21- உடலில் தீப் பிடிக்கும் இரண்டரை மாதக் குழந்தை ராகுல் சிகிச்சை முடிந்து அடுத்த வார இறுதியில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்து வமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

உடலில் தீப்பிடிப்பதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த குழந்தை சேர்க்கப்பட்டது.

குழந்தையின் உடலில் இருந்து தீப்பிடிக்கக் கூடிய வாயுக்கள் வெளி யாகவதாக முதலில் கூறப்பட்டது. உல கிலேயே அரிதான நோய் என்றும் அதற்கான சிகிச்சை முறைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைக்கு சுமார் 30 வகையான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. மேற் கொள்ளப் பட்ட அனைத்து பரிசோதனைகளிலும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இறுதியாக ரத்தத்தில் கீடோன் பரிசோதனை (ரத்தத்தில் அமிலங்களின் அளவை தெரிந்து கொள்ளும் பரி சோதனை) முடிவு மட்டும் தெரிய வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை கீடோன் பரிசோதனை முடிவும் வெளியானது.

இது குறித்து மருத்துவர் நாராயண பாபு கூறியது: ரத்த கீடோன் பரிசோதனையிலும் குழந்தைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. குழந்தையின் தீக்காயங்கள் முழுவதுமாக ஆறி விட்டன. குழந்தையை அடுத்த வார இறுதியில் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனி னும் அரசு அதிகாரிகள், மருத்துவ மனை நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக் கப்படும்.

குழந்தையின் பெற்றோர், பாட்டிக்கு தொடர்ந்து மனோவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரு கின்றன என்றார் அவர்.