Search This Blog

12.8.13

தெலங்கானா - சரிதானா? பிறக்குமா புதிய மாநிலங்கள்?

தலங்கானா - சரிதானா?

தெலுங்கு பேசிய மக்கள்தான் ஆந்திர மாநில மக்களும், தெலங்கானா பகுதி மக்களும் என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தெலங்கானா மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இந்தி பேசும் மக்கள் எல்லாம் ஒரே மாநிலத்திலா இருக்கிறார்கள்? அந்தக் கண்ணோட்டத்தில் இதனையும் பார்க்கலாமே!
அய்தராபாத் சமஸ்தானத்தில் இடம் பெற்ற பகுதிதான் தெலங்கானா. இந்தியாவிடம் வெள்ளைக்காரர்கள் நாட்டை ஒப்படைத்துச் சென்ற நிலை யில் இந்திய இராணுவம்தான் அய்த ராபாத் சமஸ்தானத்தை இந்தியாவின் கூட்டுக்குள் அடைத்தது.
மொழிவாரி மாநிலங்கள் அமைப் பதுபற்றி 1953இல் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் தெரிவித்த கருத்துக் கவனிக்கத்தக்கது.
அய்தராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக் கொண்டு 1961 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அய்தராபாத் மாநில மக்களவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இணைய விரும்பினால் ஒரே மாநிலமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது என்றாலும் மத்திய அரசு அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
அப்பொழுது முதலே தனி தெலங்கானா கோரிக்கை வெடித்துக் கொண்டுதான் இருந்தது. உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் தனி மாநில உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்தனர்.
360 மாணவர்கள் தங்கள் இன்னு யிரைப் பலி கொடுத்தனர். சென்னா ரெட்டி தெலங்கானா கோரிக்கையை முன்னிறுத்தி தெலங்கானா பிரஜாசமிதி என்ற ஒரு கட்சியினைத் தொடங் கினார்.

பதவிப் பேரம் பேசப்பட்டது. முதல் அமைச்சர் நாற்காலி சென்னா ரெட்டிகாருவிடம் நகர்ந்து வந்தது. தனித் தெலங்கானா தரைக்குள் புதைந்தது.
தெலுங்குத் தேச கட்சியின் பிரமுகராக இருந்த கல்வகுன்ட்லி சந்திரசேகர் ராவ், அக்கட்சியிலிருந்து பிரிந்து தெலுங்கானா ராஷட்டிர சமிதி என்ற புதிய கட்சியைத் தொடங்கி, தனித் தெலங்கானா மாநிலத்திற்குக் கொடி யேற்று விழா நடத்தினார். அவர் நடத் திய உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து தெலங்கானாவே திகுதிகு என்று எரிந்தது.
வழக்கமான பாணியில் காங்கிரஸ் அவரையும் வளைத்தது; காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் நின்று மத்திய அமைச்சர் ஆனார் சந்திர சேகரராவ்.
குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தெலங்கானா  இடம் பெற்றிருந்தது.

ஈராண்டுகள் ஓடியும் இதைப் பற்றிய அறிவிப்பு காங்கிரஸ் தரப்பிலிருந்து வரவில்லை என்று கூறி சந்திர சேகரராவ் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை, தெலங்கானாவுக்குப் பச்சைக் கொடி காட்டியதுண்டு (1990) மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்ததும் அதன் கூட் டணிக் கட்சியான தெலுங்கு தேசத் தின் எதிர்ப்புப் பார்வை  தெலுங் கானா செடியைக் கருக்கி விட்டது

இதெல்லாம் கடந்த கால வரலாறு என்றாலும் தனித் தெலங்கானா கேட் பதில் உள்ள நியாயத்தை யாராலும் நிராகரித்துவிட முடியாது.
அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், ஸாரங்கப், மேடக், ரங்காரெட்டி, அய்த ராபாத், கம்மம், மகபூப்நகர், நல கொண்டா ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலங்கானாவாகும். ஆந்திர மாநிலத்தில் 41.74 சதவீதம் நிலப்பரப்பைக் கொண்டது தெலங்கானாவாகும். மக்கள் தொகையிலோ 40--.54 விழுக்காடு கொண்டதுமாகும்.

1956இல் 11 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏரிப் பாசனம் மூலம் அப்பகுதி பயன டைந்து வந்தது. 2004ஆம் ஆண் டிலோ இது 2.4 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது.
முக்கிய நதிகள் எல்லாம் தெலங்கானா பகுதியில் இருந்தும், அங்குக் கட்டப்பட்டுள்ள அணைகள் வழியாகப் பலன் அடைவதோ ஆந்திரப் பகுதியில்தான்.
கிருஷ்ணா ஆற்றின் 68 சதவீத நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், கோதாவரி யின் 69 சதவீத நீர்ப்பிடிப்புப் பகுதி களும் தெலங்கானா பகுதிக்குள் வந்தாலும் கிருஷ்ணாநதி யின் 32 சதவீத அளவில் தான் தெலங்கானா பெற்று வருகிறது. நிலத்தடி நீரை நம்பும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் ஆழ் குழாய் கிணறுகளை அமைக்க அப்பகுதி மக்கள் செல வழிக்கும் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாம்!
700 அடிக்கும் கீழ்தான் தண்ணீர் கிடைக்கும் பரிதாபம்; நலகொண்டா மாவட்டத்தில் நுசம்பள்ளி கிராமத்தில் மட்டும் 6000 குழாய்க் கிணறுகள் உள் ளன. இது அக்கிராம மக் களின் எண்ணிக்கையை விட அதிகமாம்.
அரை நூற்றாண்டு காலமாக தெலங்கானா சுரண்டப்பட்டு ஆந்திரா சொகுசு பூமியாக்கப் பட்டுள்ளது என்ற மனக் குமுறல் இப்பொழுது எரிமலையாக எழுந்து நிற்கிறது.
புரட்சிப் பாடகர் கத்தார் என்ன கூறுகிறார்?
இது மூன்றரைக் கோடி மக்களுக்கான போராட்டம். ஒட்டு மொத்தமான ஆந்திர மக்கள் தொகையில் நான்கு சதவீத மட்டுமே கொண்ட ரெட்டிகளும், சவுத்ரிகளும் வளமான தெலங்கானா பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அடிமையாக்கப்பட்டனர். இந்த ஆதிக்கத்தை எதிர்த்துதான் நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்தோம். (நக்கீரன் பேட்டி 12.12.2009 பக்கம் 6)
தெலங்கானாவுக்கு தொடக்கத்தில் ஆதரவு நிலையை எடுத்து  தெலுங் கானா பகுதியில் உள்ள காங்கிரஸ் காரர்கள் போர்க் கொடி தூக்க ஆரம் பித்து விட்டனர். தாங்கள் வகித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்துள்ளனர்.
தெலங்கானா தனி மாநிலம் என்ற முடிவை மத்திய அமைச்சர் ப. சிதம் பரம் அறிவித்தார் (9.12.2009).

தெலுங்கானாவின் ஆதரவு நிலையை எடுத்தவுடன் ஆந்திரப் பகுதியிலுள்ள காங்கிரஸ்காரர்கள் போர்க் கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர். தாங்கள் வகித்து வந்த சட்டமன்ற நாடாளுமன்ற பதவிகளைத் தூக்கியெறிந்துள்ளனர்.
மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்ற நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது.
எது எப்படியாக இருந்தாலும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்படும் மக்கள் சமுத்திரமா வார்கள். எரிமலையாவார்கள் - _ அதனை எந்தச் சாமர்த்தியத்தாலும் -_ சாதுர்யத் தாலும், படை பலத்தாலும் அடக்கிவிட முடியாதே!

பிறக்குமா புதிய மாநிலங்கள்?
மேற்கு வங்கத்தில் கூர்க்காலேண்ட், உத்தரப்பிரதேசத்தில் ஹரித்பிரதேசம் உட்பட நான்கு புதிய மாநிலங்கள் (மாயாவதி கோரிக்கை), பீகாரில் மிதிலாஞ்சல், கருநாடகாவில் கூர்க், குஜராத் தில் சவுராஷ்ட்ரா, மகாராஷ்டிரத்தில் விதர்பா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சில பகுதிகளை இணைத்து கூச்பெகார் என்று புதிய மாநிலங்களை உருவாக்கும் குரலும் வேகமாக பரவி வருகிறது.

 ----------------- மின்சாரம்- அவர்கள் எழுதிய கட்டுரை -”விடுதலை” ஞாயிறுமலர்  10-8-2013

26 comments:

தமிழ் ஓவியா said...


கொலை செய்வது தான் கடவுளா?



தமிழில் பக்தி நுரை தள்ளும் ஏடுகள் உண்டு. ஒன்றை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஏனோ அவர்கள் கருதுவதில்லை.
இதோ ஒரு பட்டியல். சிவபெருமானின் வீரச் செயல்கள் நடந்த தலங்கள்
திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
திருப்பறியல் - தக்கன் தலை கொய்தது
திருவதிகை - திரிபுரம் எரிப்பு
திருக்குறுக்கை - காமன் எரிப்பு
திருக்கடவூர் - காலனை உதைத்தது
திருவிற்குடி - க(ச)ந்தராசுரன் சம்ஹாரம்
திருக்கோவிலூர் - அந்தகாசுரன்வதம்
இப்படி கொலை செய்வதும், எரிப்பதும், வதம் செய்வதும்தான் கடவுளா?
இந்தக் கடவுளை நம்பும், பக்தி செலுத்தும் பக்தனின் புத்தி விளங்குமா?
தான் நம்பும் கடவுளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வதால்தான் நாட்டில் இத்தனைக் கொலை பாதகங்கள் - வன்முறைகள் என்பதை ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பிரச்சினை



மானமிகு திராவிடர் கழக தலைவர் அவர் களுக்கு என் ஆசான் பொருளாளராக இருந்து வரும் கோ.சாமிதுரை அவர்களின் குமாஸ்தா பாலு பணிவன்புடன் எழுதிக்கொண்டது. நானும் என் ஆசான் அவர்களிடமும், அவரின் குமாரர் ஜி.எஸ்.பாஸ்கர் அவர்களிடமும் சுமார் 1962 முதல் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

அய்யா நானும் சபரிமலைக்கு 48 ஆண்டுகள் சென்றுள்ளேன். கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் ஆலயமும் பலர் உதவியுடன் கட்டியுள்ளேன். அர்ச்சகர் பிரச்சினைபற்றி தங்களின் விளம்பரம் டீ..வி. பேப்பர் மற்றும் செய்திகள் மூலம் கேள்வி பட்டேன். தங்களின் நல்லதொரு கோரிக்கை அற்புதம், போராட்டம் அற்புதம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை போற்றத்தக்கது. மேலும் ஊர் என்றால், பள்ளிக்கூடம், குளம் மற்றும் கோவில் இருக்க வேண்டும் என்பார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கள் என அனைத்து ஜாதியினர் இருக்கிறார்கள். குளம் இருப்பின் அனைவரும் தண்ணீர் அருந்து கிறர்கள், கோவில் என்றால் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம். அவர்களன்றி மற்ற இனத்தினர் அவர் களுக்கு அடிமைபோல் இருந்துவர வேண்டியுள்ளது. இதனை தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் முதல் அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடினார்கள். அதே போல் தாங்கள் தற்போது நடத்தும் போராட்டம் போற்றக்கூடியது. எல்லா மதத்தினரும் நன்றாகவே ஆதரவு அளிப்பார்கள். தாங்கள் நடத்தும் இந்த போராட்டம் எல்லாம் வல்ல நம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தினாலும், அனைத்து ஜாதியினர்கள் ஆதரவாலும், நான் வணங்கும் என் தாய் தந்தையர்கள் ஆசீர்வாதத் தினாலும் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

- கே.பி. பாலு (வக்கீல் கிளர்க்) கள்ளக்குறிச்சி

தமிழ் ஓவியா said...

பெயர் நிலைக்க வேண்டுமானால் பேராசிரியர் ஞான.அய்யாசாமி போல் பொதுப்பணி ஆற்றவேண்டும்


தமிழர் தலைவர் சூட்டிய புகழாரம்

சென்னை, ஆக. 11- ஒருவர் பெயர் நிலைக்க வேண்டுமானால் பொதுத் தொண்டு ஆற்ற வேண்டும்; அதற்கு எடுத்துக்காட்டானவர் மறைந்த பேராசிரியர் பொறியாளர் ஞான.அய்யாசாமி (தமிழக மூதறிஞர் குழுத் தலைவராக இருந்து பணியாற்றியவர்) அவர்கள் ஆவார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழக மூதறிஞர் குழு சார்பில் சென்னை பெரி யார் திடல் - அன்னை மணியம்மையார் நினைவு அரங்கில் நேற்று (10.8.2013) மாலை நடைபெற்ற பேராசிரியர் ஞான.அய்யா சாமி அவர்கள் நினை வேந்தல் நிகழ்ச்சியில் அவரின் படத்தினைத் திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இந்த நிகழ்ச்சி நமது வீர வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்ளும் நிகழ்ச்சி. இன்னொரு பக்கத்தில் துயரம் சூழ்ந்த நிகழ்ச்சியும்கூட. மறைந்த பொறி யாளர் பேராசிரியர் ஞான.அய்யாசாமி அவர்கள் பெரியார் திடலுக்குக் கிடைத்த அரிய செல்வம் - கருவூலம்.

பெரியார் திடலில் இயங்கும் அமைப்புகள்

பெரியார் திடலில் பல அமைப்புகள் இயங்கு கின்றன. பெரியார் நூலக வாசகர் வட்டம் மானமிகு மயிலை நா.கிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடக்ககால செயலாளராக மறைந்த மாணிக்க சண்முகம் சிறப்பாக நடத்தினார். தொடர்ந்து சத்தியநாராயண சிங் அவர்களும், அவரின் தோழர்களும் தொய் வின்றி நடத்தி வருகின்றனர்.

தமிழக மூதறிஞர் குழு

புதுமை இலக்கியத் தென்றலை வழக்குரைஞர் மானமிகு வீரமர்த்தினி நல்ல முறையில் நடத்தி வருகிறார். இவற்றிற்கு அடுத்த நிலையில் சிறப்பாக நடைபெறுகின்ற அமைப்பு தமிழக மூதறிஞர் குழு ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பி.வேணுகோபால் அவர்கள் தலைவராகவும், நமது பேராசிரியர் ஞான.அய்யாசாமி அவர்கள் செயலாளராகவும் இருந்து சிறப்பாக நடத்தினர்.

நீதிபதி வேணுகோபால் அவர்களின் மறைவிற் குப் பிறகு அய்யா ஞான.அய்யாசாமி அவர்கள் தலைவராகவும், பொறியாளர் சுந்தரராஜுலு செயலாளராகவும் இருந்து சிறப்பாக நடத்தி வந்தனர்.

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் அய்யாசாமி அவர்களின் மறை வினைத் தொடர்ந்து வரியியல் அறிஞர் ச.ராஜரத் தினம் அவர்களும், அவர்களைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைவ ராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி அவர்கள் செயலாளராகவும் இருந்து நடத்தி வருகின்றனர். நீதியரசர் மோகன் அவர்கள் வெளியூர் சென்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நீதியரசர் மோகன் அவர்களும் பேராசிரியர் ஞான.அய்யாசாமி அவர்களும் உடு மலைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள்.

இந்த நேரத்தில் பெரியார் திடலில், ஓய்வுக்குப் பிறகு தங்கி எங்களுக்குப் பெரும் அளவில் துணையாக இருந்த பெருமக்களை எல்லாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம்.

பல்வேறு பெருமக்களின் கடும் பணிகள்

ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுக்குப் பிறகு பெரியார் திடலில் மேலாளராக இருந்து பணி யாற்றிய அய்யா ஆளவந்தார் அவர்களை நினைத் துப் பார்க்கிறோம். இது அவரின் நூற்றாண்டு ஆகும். அவருக்கு கழகம் தனியே விழா எடுக்கும்.

பெரும்புலவர் பேராசிரியர் இராமநாதன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். அவர் குடையை விரித்துக் கொண்டு வெளியில் வந்தார் என்றால் நண்பகல் 12 மணி என்று பொருள்.

பெரியார் பேருரையாளர்கள் பேராசிரியர் இறையன் - கு.வெ.கி.ஆசான், எஸ்.பகீரதன், நீடாமங் கலம் சரவணன் அவர்களின் உதவிகளையெல்லாம் இன்றைக்கு நாம் இழந்து நிற்கிறோம். இறையனார் அவர்களின் குடும்பம் இயக்கத்துக்குப் பயன்படு கிறது.

டி.கே.போரூரான் அவர்களின் பணியும் குறிப்பிடத்தக்கது. இந்த இழப்புகளையெல்லாம் தாங்கிக் கொண்டு, புதுப்புது துணைகளைத் தேட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

தமிழக மூதறிஞர் குழுவை உண்டாக்கியதன் நோக்கம் ஓய்வு பெற்ற மூத்த அறிஞர்களின் அனுபவங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டும்; ஏன், அரசுக்குக் கூட ஆக்கரீதியான யோசனை களைச் சொல்லும் வாய்ப்பு.

வெளியுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி.வெங்க டேசன் அய்.எப்.எஸ். அவர்கள் கூட தமிழக மூதறி ஞர் குழுவின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் - சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் முடங்கி விடாமல் நாட்டுக்குப் பயன்படவேண்டும்.

அய்யாசாமி அவர்களின் பண்பும் - பணியும்

பேராசிரியர் அய்யாசாமி அவர்கள் எதையும் குறிப்பிட்ட நேரத்தில் குறித்து வைத்துக் கொண்டு செயல்படக் கூடியவர். பணி முடித்துத் திடலின் படிக்கட்டை மிதித்து கீழே அடி எடுத்து வைக் கிறார் என்றால் இது மதியம் ஒரு மணி என்று அர்த் தம். யாரும் கடிகாரத்தைப் பார்க்கத் தேவையில்லை.

அந்தக் காலத்தில் பொறியியல் படித்துப் பட்டம் பெறுவது என்றால் சாதாரணமானதல்ல. இன்று தடுக்கி விழுந்தால் பொறியாளர் மீதுதான் விழ வேண்டும். படித்து விட்டு வெளிநாடுகளில் நம் மக்கள் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

கல்வி வளர்ச்சி!

தங்கள் பிள்ளை இருக்கும் நாட்டின் பெயர்கூட படிக்காத பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. இந்த நிலை வரவேற்கத் தகுந்த மாற்றம்தான்.
எல்லோரும் என்ஜினீயர் ஆக முடியுமா? அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டம் எல்லாம் மறைந்து தந்தை பெரியார், பச்சைத் தமிழர் காமராசர் ஆகிய தலைவர்களின் உழைப்பால், முயற்சியால் நம் மக்கள் கல்வியில் சிறந்தோங்கி ஒளி வீசுகிறார்கள்.

அந்தக் காலத்தில் மேல் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் பார்ப்பனர்கள்தான். நம் மக்களை வறுத் தெடுத்து விடுவார்கள். அந்தச் சோதனைகளை யெல்லாம் சந்தித்து, ஈடு கொடுத்து தலைமைப் பொறியாளராக வர முடிந்தது என்றால், அது பேராசிரியர் அய்யாசாமி அவர்களின் தனித் தன் மைக்கும், ஆற்றலுக்கும், உழைப்புக்கும் தலை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக அவர் இருந்த காலத்தைப் பற்றி எல்லோரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஓய்வு பெற்றபின் பெரியார் திடலுக்கு வந்து அடக்கமாக அதே நேரத்தில் அழகான ஆக்கப் பூர்வமான பணியை செய்து வந்தார். எத்தனையோ பேர்கள் அவர் உதவியால் பலன் பெற்றார்கள். விளம்பரமின்றிச் செய்வார் எத்தனைப் பேர் நன்றியுடன் இருக்கிறார்கள் என்று தெரியாது.

தமிழ் ஓவியா said...

நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய உணர்வே தவிர, உதவி செய்பவன் எதிர்பார்ப்பது சிறுமைக் குணம் என்றார் தந்தை பெரியார். அந்த வகையில்தான் நம் பணிகள் அமைந்து வருகின்றன.

பார்ப்பனர்களைப் பாரீர்!

அலுவலகங்களில் நம் மக்களுக்குச் சில சங்கடங்கள் வரும், அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கும் வழிகளையெல்லாம், தம் அனுபவத்தின் மூலம் சொல்லக் கூடியவர்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பார்ப்பனர் கள் நேராக காஞ்சி சங்கர மடம் செல்லுவார்கள். பேராசிரியர் ஞான.அய்யாசாமி அவர்களைப் போல விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தான் நாம் காண முடிந்தது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்து அண்மையில் மறைந்த கே.சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., வா.செ.குழந்தைசாமி போன்றவர்கள் எல்லாம் இவரின் முக்கிய நண்பர்கள்.

நிறை வாழ்வு வாழ்ந்தவர்

88 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து மறைந் துள்ளார். கடந்த 8 ஆண்டு காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரைக் கண்ணிமை போல் பராமரித்துக் காத்த அவரின் இணையரையும், குடும்பத்தாரையும் எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

தமிழ் ஓவியா said...

நல்ல குடும்பம் - சுற்றம்!

நல்ல சுற்றத்தைக் கொண்டவர் அவர். இணையர், மகன், மகள், மருமகன், பேரப் பிள்ளைகள் அனைவரும் மிகச் சிறந்தவர்கள். மகன் அருண் அய்யாசாமி அமெரிக்காவில் பொறியாளராக இருக்கிறார். மருமகன் டாக்டர் திருநாவுக்கரசு புருணேயில் மிகச் சிறந்த மருத்துவர். புருணே அதிபருக்குத் தனிப்பட்ட மருத்துவர்.

தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றில்லா மல் பொதுத் தொண்டு செய்பவர்கள் நிரந்தரமாக வாழக் கூடியவர்கள். இல்லறம் என்பது தனி நலம், தொண்டறம் என்பதோ பொதுத் தொண்டின் விரிவாக்கம் ஆகும்.

அய்யா அய்யாசாமி அவர்கள் மறைந்தாலும் அவரின் குடும்பத்தவர்கள் எப்பொழுதும் பெரியார் திடலோடு தொடர்புடன் இருக்க வேண்டும். வெளி நாட்டிலிருந்து வரும்பொழுதெல்லாம் பெரியார் திடலுக்கு வரவேண்டும் அதன்மூலம்தான் அய்யா அய்யாசாமி அவர்கள் கட்டிக்காத்த அந்த உறவுக் கும் அர்த்தமாக இருக்கும்.

அவர் விரும்பியதைச் செய்ய உறுதி கொள்வோம்!

அவர் எதைச் செய்ய விரும்புவாரோ, அதனை நாமும் தொடர்ந்து செய்வோம், அதுதான் பேரா சிரியர் ஞான.அய்யாசாமி அவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதையாகும் என்றார்.

டாக்டர் திருநாவுக்கரசு (புருணே) (இவர் தந்தையார் திராவிடர் கழகப் பெருமகனார்)

பேராசிரியர் ஞான.அய்யாசாமி அவர்களின் மருமகன் டாக்டர் திருநாவுக்கரசு (புருணே) அவர்கள் குறிப்பிட்டதாவது:-

என் மாமனார் அவர்களின் மறைவு, நாங்கள் எதிர்பாராதது. என்றாலும் இந்த நிகழ்ச்சி எங்களின் சோகத்தைக் குறைக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது
என்றார் திருவள்ளுவர்.

பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்யக் கூடியவர். பொறுமையில் சமுத்திரம். புகழில் கோடி யாம். எத்தனை சாமி வந்தாலும் போனாலும் அத் தனை சாமிகளும் எங்கள் அய்யாசாமிக்கு ஈடாகாது என்று கூறினார்.

அருள் அய்யாசாமி

(பேராசிரியர் அய்யாசாமி அவர்களின் மகனா கிய இவர், கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மகன் அசோக் ராஜோடு பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். அதேபோல அருள் அய்யா சாமி அவர்கள் இணையர் அசோக்ராஜின் இணை யரும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது).

பேராசிரியர் அய்யாசாமி ஃபவுண்டேசன்

என் தந்தையாரிடத்தில் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் மதிப்பிற்கும் நன்றி கூறுகிறேன். எங்கள் தந்தையார் நினைவாக அய்யாசாமி ஃபவுண் டேஷன் என்ற பெயரில் வல்லம் பெரியார் மணி யம்மைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை நிறுவிட விரும்புகிறோம். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்போம் என்று கூறினார் பேராசிரியர் அய்யாசாமி அவர்களின் மகன் பொறியாளர் அருள் அய்யாசாமி (அமெரிக்கா).

தமிழக மூதறிஞர் குழு செயலாளர் நீதிபதி பரஞ் சோதி தொடக்கத்தில் நன்றி கூறினார். மூதறிஞர் குழுத் துணைத் தலைவர் வரியியல் அறிஞர் ச.இராச ரத்தினம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேராசிரியர் ஞான. அய்யாசாமி அவர்களின் பெரும் பண்புகளையும் திறமைகளையும் எடுத்துக் கூறினர்.

படத்திறப்பு

பேராசிரியர் அய்யாசாமி அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து நினைவுரை ஆற் றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். பெரியார் நுலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணசிங் நன்றி கூறிட கூட்டம் இரவு 7.45 மணிக்கு நிறைவுற்றது.

கூட்டத்தின் முடிவில் அனைவரும் இரு நிமிடங்கள் எழுந்து நின்று அமைதி காத்து இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


வீட்டுக்கு வீடு விடுதலை - வீட்டில் கழகக் கொடி! இவையே கழகத் தோழரின் அடையாளங்கள்!


- நமது சிறப்புச் செய்தியாளர்

உயர்ந்த கொள்கையும் உன்னத ஒழுக்கமும்தான் நம் இரு விழிகள் - அணிகலன்கள்!
வேலூர் மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் வகுத்துத் தந்த இலக்கணம்


நமது சிறப்புச் செய்தியாளர் வேலூர், ஆக.12- திராவிடர் கழகத் தோழர் என்பதற்கான அடையாளத்தையும் அணிகலன் களையும் வரையறுத்துத் தந்தார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

வேலூர் மண்டல திராவிடர் கழகக் கலந் துரையாடல் மண்டலக் கழக தலைவர் செய்யாறு பா. அருணாசலம் அவர்களின் தலைமையில் வேலூர் சிந்தனைக் கூடத்தில் அண்ணா சரவணன் கடவுள் மறுப்புடன் நேற்று மாலை தொடங்கப் பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது: கழகக் குடும்பத்தினர்களாகிய நாம் சந்திப்பது, உரையாடுவது என்பது நீங்கள் உங்களுக்கும் நான் எனக்கும் பாட்டரி ரீசார்ஜ் செய்யப்படுவதாகும்.

எடுத்துக்காட்டான திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் வெளிநாட்டில் இருக்கக் கூடிய ஒரு சூழல் இருந்தாலும், தொய்வின்றிக் கழகப் பணிகள் சிறப்புடன் நடைபெற சிறப்பான அணி ஒன்று அங்கு உள்ளது.
இந்த நேரத்தில் ஒன்றை நான் வலியுறுத்திக் கூறுகிறேன். அது தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் உறுதியாக இருக்க வேண்டும்.



முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூரில் திராவிடர் கழக மாநில மாநாடு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

ஏலகிரியில் மகளிருக்கென்றே இரண்டு நாள்கள் பயிற்சிப் பட்டறை நடைபெறும்.

சால்வைகள் பொன்னாடைகளைத் தவிர்ப்பீர்!

விடுதலை சந்தா சேகரிப்புக்கு முன்னுரிமை!

கழக வீடு என்றால் கழகக் கொடி பறக்க வேண்டும்!

விடுதலை கண்டிப்பாக வர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு (வேலூர் - 11.8.2013)



சால்வை, பொன்னாடைகளை நிறுத்துவீர்!

சால்வைகள், பொன்னா டைகள் போர்த்துவதை நிறுத் துவோம்; தவிர்க்க முடியாத சமயத்தில் வேண்டுமானால் பயனாடை அணிவிக்கலாம். மற்றபடி நமது இயக்க ஏடுகள், இதழ்களுக்குச் சந்தா அளிப் பதை ஒரு முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இந்தப் பகுதிக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது; அது - மகளிர் அணியின் பலமும் செயல்பாடுகளும் ஆகும். எந்த ஒரு கருத்து வெற்றி பெறுவது என்றாலும் அதில் மகளிரின் பங்களிப்பு இருந்தாக வேண் டும்.

மகளிர் தெளிவு பெற்றால்...

மகளிர் தெளிவு பெற்றால் அங்கே மூடநம்பிக்கைகளுக்கு இடம் இருக்காது, கோயில் களுக்கு இடம் இருக்காது; மூடப் பண்டிகைகள் விடை பெறும்.

நமது கழக மகளிர் அணி யும், மகளிர் பாசறையும் சிறப் பாகப் பணியாற்ற வேண்டும். மகளிர் பேச்சாளர்கள் பெருக வேண்டும்.

ஏலகிரியில் மகளிர் பயிற்சிப் பட்டறை!

இதற்காக விரைவில் ஏலகிரி யில் மகளிர்க்கென்றே இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறும். பேச்சுப் பயிற்சி களப் பயிற்சி, கலைப் பயிற்சி கள் அளிக்கப்படும்.
மக்களிடம் நேரடியாகச் சென்று ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், இயக்க ஏடுகளைப் பரப்புதல் போன்ற பணிகளை மகளிர் மேற்கொள்ள வேண் டும். அதற்கான பயிற்சிகள் அவர் களுக்குத் தேவைப்படுகின்றன.

பெரியார் தொண்டர் களுக்கு ஈடு இணையானவர் களை உலகில் எங்கும் காண முடியாது. நம் வீட்டுச் சோற் றைத் தின்று, நம் கைக் காசைச் செலவு, செய்து போராட்டம் என்றால் சிறை என்று, தம் வாழ்வையே பொதுத் தொண் டுக்காக ஒப்படைக்கக்கூடிய தொண்டர்கள் சீலர்கள் தான் திராவிடர் கழகத்தவர்கள்.

திரட்டப்படும் கூட்டமல்ல!

நமது கூட்டங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்குத் தானே உவந்து முன்வரக் கூடியவர்கள், - திரட்டப்படும் கூட்டமல்ல நமது கூட்டம்.

தமிழ் ஓவியா said...

டில்லியில் சில நிகழ்ச்சிக ளைக் கழகம் நடத்துவதுண்டு; நமது கழகக் குடும்பத்தினர் அங்கு வருவார்கள். வட நாட்டைச் சேர்ந்த தலைவர்கள், பொறுப்பாளர்கள் நம் தோழர் களிடம் உரையாட நேரும் போது கேட்பார்கள். உங்களை எல்லாம் எப்படி அழைத்து வருகிறார்கள்? செலவு யாரு டையது என்பது போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். நமது தோழர்கள் உண்மை நிலவரத்தைச் சொன்ன போது அவர்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியம்! மூக்கின்மேல் விரலை வைத்துக் கொள்வார்கள்.

கழகம் பனை மரம்!

தந்தை பெரியார் சொல்லு வார். நமது இயக்கம் பனைமரம் மாதிரி, பனை மரத்துக்கு யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள்? யார் எரு போடுகிறார்கள்? யார் வேலி வைக்கிறார்கள்? தானே வளர்ந்து தேவையான பலன் களை நமக்குக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. அது போலவேதான் நமது கழ கமும் என்று தந்தை பெரியார் கூறுவார்கள்.

நமக்கு நாமே பெருமை யாக - நமது முதுகை நாமே தட்டிக் கொள்ள வேண்டிய வர்களாவோம்!

சரியான தலைவரை அடை யாளம் கண்டு ஏற்றுக் கொண் டோமே - சரியான கொள் கையை ஏற்றுக் கொண் டோமே - சரியான இயக்கத்தில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டோமே - என்பதை எண்ணி எண்ணி நம்மை நாம் பாராட்டிக் கொள்ளலாம், நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாம் (பலத்த கரஒலி!)

பொது மக்களின் மகத்தான ஆதரவுக் கரம்!

நமக்குள்ள பொது மரி யாதை சாதாரணமானதல்ல; நாம் சொல்லுவதெல்லாம் நடக்கிறது. பெரியார் மருத்துவ அணி என்று சொன்னோம். மருத்துவ முகாம் நடத்த வேண் டும் என்று சொன்னோம். எப் படி எப்படியெல்லாம் ஒத்து ழைப்பு கிடைக்கிறது - யார் யார் எல்லாம் முன்வந்து உதவு கிறார்கள் - எவ்வளவு சிறப்பாக நடந்தது? நமக்குள்ள பொது மரியாதைக்கு நம்மிடம் மக்கள் எதிர்பார்க்கும் தன்மைக்கும் இவையெல்லாம் சிறப்பான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

ராஜபாளையத்தில் நான்கே தோழர்கள் உள்ளனர். மாநில இளைஞரணி மாநாடு என்று துணிவாக அறிவித்தோம்; எவ் வளவு வெற்றிகரமாக நடை பெற்றது! நன்கொடைகளைப் பொது மக்கள் வாரி வழங் கினார்களே - செலவு போக மீதிப் பணத்தைத் தலைமைக் கழகத்திடமும் ஒப்படைத் தார்களே!

எதை நம்பி இறங்குகிறோம்?

எதை நம்பி இறங்கினோம்? தந்தை பெரியாரை நம்பி, அவர் தந்த கொள்கைகளை நம்பி நம் இயக்கத்தால் மக்கள் அடைந் திருக்கும் பலன்களை நம்பி; நம் தோழர்கள் களத்தில் இறங் கினர்! வெற்றி பெற்று விட்டார் களே!

கொள்கை மட்டுமல்ல; பொது வாழ்விலும் தனி வாழ் விலும் நாம் பேணும் ஒழுக்கம் - மக்கள் எடை போட்டுப் பார்க்கிறார்கள்.

மதுவாடை இல்லாத மாண்பு!

தேனி மாவட்டம் சுருளியில் கடந்த வாரம் இரு நாட்கள் பயிற்சிப் பட்டறையை நடத்தி னோம். அதற்காக ஒரு மண்ட பத்தை வாடகைக்கு எடுத்தார் கள் நமது தோழர்கள்.
கணவன் - மனைவி இரு வரும் தம் பொறுப்பில் அந்த மண்டபத்தை நிர்வகித்து வரு கிறார்கள்.

நேற்று நம் மாவட்டக் கழகத் தலைவர் தொலைப் பேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு ஒரு தகவலைச் சொன்னார் - எனக்கு மிகவும் பூரிப்பாக இருந்தது.

அந்த மண்டபத்தை நிரு வகிக்கும் அந்த இணையர்கள் சொன்னார்களாம்.
அய்யா இந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்துத் தங்கி சுருளி நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதற்கு வெளியூர் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார் கள்.
எங்கள் அனுபவத்தில் உங்கள் கட்சிக்காரர்கள் தங்கி இருந்த இரு நாட்களில்தான் மது வாடையே இல்லாதிருந் தது என்று சொல்லியிருக் கிறார்கள்.

உயர்ந்த கொள்கை உன்னத ஒழுக்கம்!

உயர்ந்த கொள்கை, உன்னத ஒழுக்கம் இரண்டும் நம் இரு விழிகள் நமது அணிகலன்கள்! இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தோல்வி இல்லை - வெற்றி பெறும் வாழ்க்கை வழி முறை நம் முடையது.

பெரியார் பிஞ்சுகள் முகாம்

குழந்தைகள் முதல் பயிற்சி கொடுத்து வருகிறோம். நாம் நடத்தும் பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு வந்து சென்ற குழந் தைகளைக் கேட்டுப் பாருங் கள்.
விடியற்காலையில் எழுந்தி ருப்பது, உடற்பயிற்சி செய்வது, குளிப்பது, உண்பது, பல்வேறு பாடங்கள், பயிற்சிகளைப் பெறுவது - இவை எல்லாம் நமது பழகு முகாமில் கிடைக் கின்றன. பெற்றோர்களே ஆச் சரியப்படுகிறார்கள். நம் பிள் ளைகளா இவர்கள்? பெரிய மாற்றம் காணப்படுகிறதே என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
எங்கள் பிள்ளைகளா?

எங்கள் பிள்ளைகளை எப்படி உங்களால் இந்த அளவு மாற்ற முடிந்தது என்று பெற் றோர்கள் எங்களைக் கேட் கின்றனர்.

தமிழ் ஓவியா said...

இவ்வளவு நாள் கல்லைக் கடவுள் என்று சொல்லி நீங் களும் நம்பி எங்களையும் நம்ப வைத்து விட்டீர்களே! - பெற் றோர்களைப் பிள்ளைகள் கேட்கும் அளவுக்கு நமது பெரி யார் பிஞ்சு முகாம் சாதித் துள்ளது.

நம் வீட்டுப் பிள்ளைகளை இத்தகைய முகாமுக்கு அனுப் புங்கள்; வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பு இன் னொரு புரத்தில்; திருப்பத்தூ ரில்கூட சடுகுடுப் போட்டி நடத்தி இளைஞர்களை நல் வழிப்படுத்துகிறோம்.

நமது கழகம் என்றால் நமது கழகத் தோழர்கள் என்றால் கண்டிப்பாக நமது வீடுகளில் கழகக் கொடி பறந்தே தீர வேண்டும். கழகத் தோழர் வீட் டிற்கு விடுதலை கண்டிப்பாக வர வேண்டும்.

விடுதலைதான் நமது தலைசிறந்த போர் ஆயுதம் கொள்கைப் பரப்புச் சாதனம்! நமது விடுதலையைப் படிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக இடையில் நிறுத்திவிட மனம் வராது. நம் தோழர்கள் தொடர்ந்து விடுதலை வாசகர் களுடன் தொடர்புடன் இருக்க வேண்டும் விடுதலை வாசகர் வட்டத்தை நடத்த வேண்டும்.

ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்தால்தான் சந்தாக்கள் புதுப்பிக்கப்படக் கூடிய வாய்ப்பு அமையும் இத னைத் தோழர்கள் முதலாவது கடமையாகக் கருதிப் பணி யாற்ற வேண்டும்.

எத்தனை எத்தனைப் போதைகள்!

நாட்டில் எத்தனை எத்த னையோ போதைகள் உண்டு; கடவுள் போதை, மதப் போதை, பக்திப் போதை, கிரிக்கெட் போதை, மதுப் போதை என்று ஏராளமான போதைகள் உண்டு. இவற்றிலிருந்து விடுபட விடுதலை என்னும் ஈரோட்டு மூலிகை தேவை!

தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவுக் கொள் கையில் சிக்கனத்துக்கு முக்கிய இடம் உண்டு, எளிமையே வலிமை என்னும் கருத்துண்டு. கடன் தொல்லையின்றி வாழ இவை அவசியம் தேவை.
அன்னை மணியம்மையாரே நமது ரோல் மாடல்!

வேலூர் நமது அன்னை மணியம்மையார் பிறந்த ஊர்! அவர்கள்தான் நமக்கு ரோல் மாடல்! அந்த எளிமை நம் கண் முன் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
செய்யாறு பா. அருணாசலம் அவர்களைப் பாருங்கள்!

நமது மண்டலத் தலைவர் செய்யாறு பா. அருணாசலம் அவர்களை எடுத்துக் கொள் ளுங்கள்.

90 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்; உழைப் பால் உயர்ந்த பெரியார் பெருந் தொண்டர் அவர்! மற்றவர் களுக்குக் கொடுக்கும் இடத் தில்தான் இருக்கிறார்; இயக்கத் திற்கு எப்பொழுதும் கொடுத் துக் கொண்டே இருக்கக் கூடி யவர். எவ்வளவு எளிமையாக வாழ்ந்து காட்டுகிறார்; நமது இளைஞர்கள் இத்தகைய பெரு மைமிகு பெருந் தொண்டர் களைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது தமிழர் களின் தேசியத் திருவிழா! குறிப் பாக, நம் குடும்பத்தில் அத னைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
திருப்த்தூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் மக்கள் விழாவாக நடத்தி வருவது பாராட்டத்தக்கது. இவ்வாண்டு கடந்த ஆண்டு களைவிட விரிவாக நடத் துங்கள்.

திருப்பத்தூரில் திராவிடர் கழக மாநில மாநாடு

திருப்பத்தூரில் திராவிடர் கழக மாநில மாநாடு அனேக மாக பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன் (பலத்த கரஒலி)
திருப்பத்தூர் மாநாடு திருப் பம் தரும் மாநாடாக வரலாற் றுச் சிறப்பு மிக்க மாநாடாக நடைபெறும் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நிகழ்ச்சி

வேலூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட் டம் வேலூர் மண்டல திரா விடர் கழகத் தலைவர் செய் யாறு பா. அருணாசலம் அவர் களின் தலைமையில் வேலூர் சிந்தனைக் கூடத்தில் 11.8.2003 பிற்பகல் 4.30 மணிக்குத் தொடங்கப்பட்டது.

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன் கடவுள் மறுப்புக் கூறினார். மண்டல கழக செயலாளர் பழ. வெங் கடாசலம் வரவேற்றார்.

மண்டலத் தலைவர் செய்யாறு பா. அருணாசலம், திருப்பத்தூர் மாவட்டத் திரா விடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், (பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை யொட்டி திருப்பத்தூர் மாவட் டம் முழுவதும் பரவலாக பெரியார் மருத்துவ அணி துணையுடன் மருத்துவ முகாம் நடந்த இருப்பதாகத் தெரிவித் தார்).

வேலூர் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வி. சடகோபன், திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பட்டாபி ராமன், பன்னீர்செல்வம் (சென்னை) மகளிர் பாசறை மாநிலப் பொருளாளர் அகிலா, குடியாத்தம் தேன்மொழி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். வேலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறிட மாலை6 மணிக்குக் கூட்டம் நிறைவுற்றது. ஏராளமான கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தது சிறப்புக்குரியது.

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயத்தில்...



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் குழப்பமும்


21.7.2013 அன்று TRB,, 2800 முதுகலை ஆசிரியர் களைத் தேர்வு செய்வதற்காக நடத்திய தேர்வில் 150 மதிப்பெண்களுக்கான வினா பட்டியல் வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. இதுபற்றிய செய்திகள் ஒரு சில நாளிதழ்களில் அப்போதே வெளிவந்தது. அனைவருக்கும் தெரிந்ததே!

மேலும் குறிப்பாக, பிரதமர் பெயர் டாக்டர் மன்மோகன் சிது என்றும், இந்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிது அலுவாலியா என்றும், நிதிக் குழு தலைவர் பெயர் ரெதுகராஜன் என்றும், தவறாக எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டு இருந்தது.
மேலும், பல்வேறு கேள்விகளில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருந்தன. இதனால் தேர்வு எழுதியவர் களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டன. தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்குரிய விடைகள் (Answer Key) TRB மூலம் இணையதளத்தில் வெளியிடப் பட்டன. அதில் பல்வேறு கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டு: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் பெயர், மான்டெக் சிங் அலுவாலியா என்பதற்குப் பதிலாக ரெங்கராஜன் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது நமது பிரதமருக்கு அடுத்த, முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவியாகும். இவர் பெயரையே TRB தேர்வு வாரியம் தவறாக வெளியிட் டுள்ளது. இதனால் தேர்வு எழுதியோர் மத்தியில் மிகவும் வியப்பும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் ஓவியா said...


கிராமப்புறங்களில்... ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு


ஆய்வுத் தகவல்

புதுடில்லி, ஆக.11-இந்தியாவில் ஏழைகள் கடந்த 2004-05 இருந்த அளவைவிட 2011-2012இல் குறைந் துள்ளனர். இருந்தபோதிலும் கிராமப் பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணக்காரர்களுடன் அவர்களது இடைவெளி அதிகரித்துள்ளது. அதேபோல், நகர்புறங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2011-2012ஆம் ஆண்டில் வீட்டு உபயோகப்பொருள் செலவு பற்றிய தேசிய மாதிரி ஆய்வு நடத்தப் பட்டது. புள்ளிவிவர ஆய்வில் கடைப்பிடிக்கப்படும் கினி விகிதம் அடிப்படையில் கணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கினிவிகிதம் 2011 2012இல் 0.28 ஆக அதிகரித்துள்ளது. இது 2004-2005ல் 0.26 ஆக இருந்தது. நகர் பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 0.35லிருந்து 0.37 ஆகி உயர்ந்துள்ளது. கினிவிகிதம் பூஜ்யத்திலிருந்து ஒன்று என்று வரிசைப் படுத்தப்படுகிறது. பூஜ்யம் என்பது சரி சமமானது என்பதை குறிக்கும். ஒன்று என்பது சரிசம மற்றது என்பதை குறிக்கும்.

ஏழை பணக்காரர் இடைவெளி உயர்ந்து உள்ளது குறித்து பொரு ளாதார நிபுணர்கள் வியப்பு தெரி வித்துள்ளனர். அரசு பல்வேறு நலத் திட்டங்களை கிராமங்களில் செயல் படுத்தி வந்தபோதிலும் இந்த இடை வெளி அதிகரிப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று டில்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிராந்திய மேம்பாடு பற்றிய கல்வி மய்யத்தின் பேராசிரியர் அமிதாப் குந்து தெரிவித்துள்ளார். கிராமப் பகுதியில், வேளாண்மை துறையைத் தவிர பிற தொழில்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்று மேலும் கூறினார்.
1977 -1978ஆம் ஆண்டுக்கு பிறகு கிராமப் பகுதிகளில் சரி சமமற்ற நிலைமை அதிகரித்துள்ளது. 1973 -1974இல் 0.27 ஆக இருந்த கினிவிகிதம் அப்போது 0.34 ஆக அதிகரித்தது. இது கடந்த 1993 -1994ஆம் ஆண்டில் இது 0.28 ஆக இருந்தது. விவசாய தொழிலாளர்களின் நுகர்வு முறையில் சுணக்கம் இருந்தது. இது எதைக் காட்டுகிறது என்றால், நுகர்வு செலவு அதிகரித்துள்ளது சரிசமமற்ற வினி யோகம் மற்றும் திட்டங்களின் பயன் பாடு வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதைக் காட்டு கிறது என்றும் குந்து கூறினார்.

வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வருமான பகிர்வு ஆகியவை சரிசமமற்ற நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து சமு தாயத்தில் சரிசமமற்ற நிலைமை அதிகரித்து வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசி யம். நகர்புறங்களில் இருப்பதைவிட கிராமப் பகுதிகளில் வறுமை சத வீதம் குறைந்துள்ளது. சரிசமமற்ற நிலைமை, நகரங்களைவிட கிராமங் களில் குறைவு என்பதையே இது உணர்த்துகிறது.

திட்ட கமிஷன் புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 2004-2005ஆம் ஆண்டில் கிராமப்பகுதிகளில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். ஆனால், 2011-2012ல் 25.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் நகரங்களில் 25.5 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சரிசமமற்ற நிலை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை என்றுதான் சொல்லலாம். பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப் ரிக்கா) கினி விகிதம், தென் ஆப்ரிக்கா வில் கடந்த 2008இல் அதிகபட்சமாக 0.67 ஆக இருந்தது. இதற்கு அடுத்த படியாக பிரேசிலில் (2012இல் 0.51), சீனாவில் (2012இல் 0.47), ரஷ்யாவில் (2011ல் 0.41) என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சரிசமமற்ற நிலைமை வருமானத்தை வைத்து கணக்கிடுவது இல்லை. நுகர்வு செலவை வைத்து கணக்கிடப்படு கிறது. கினிவிகிதம் தேசிய புள்ளி விவரம் கடந்த 2011-2012இல் கணக் கிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு கலைஞர் கடிதம்


சென்னை, ஆக.12- தமிழகத்தில் வசிக்கும் நரிக் குறவர்கள் இனத்தை, அவர்களுடைய சமூக, கல்வி முன் னேற்றத்திற்காக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச் சர் வி. கிஷோர் சந்திரதோவ்வுக்கு 11.8.2003 அன்று அவர் எழுதிய கடிதத்தில்

கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நரிக்குறவர் என்ற இனம் பரிதாபகரமான, இரக்கப் படக் கூடிய வாழ்க்கை நிலைகளை கொண்டுள்ளனர். அவர்கள் வசிப் பதற்கு நிலையான இருப்பிடம் இன்றி அடிக்கடி இடங்களை மாற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண் டுள்ளனர்.

அவர்கள் சமூகம் மற்றும் கல்வியில் மற்ற இனத்தவரை விட பின்தங்கி இருப் பதுடன் பழங் குடியினத்தவருக்கு சமமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இரக்கத்து டன் இந்த இனத்த வர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தி.மு.க. அரசானது அவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா உதவி களையும் செய்துள்ளது. 1970-இல் நரிக்குறவர்கள் ஒரே இடத்தில் வசிக்கவும் வாழ்வாதாரங்களுக் காகவும் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 2008-2009இல் நல வாரியங்கள் தி.மு.க. அரசால் உருவாக்கப் பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன.

சமூகம் மற்றும் கல்வியில் முன்னேற்றமடைய தங்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் வசிக்கும் நரிக்குறவர் கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும் அவர்கள் பழங்குடி யினர் ஆவார்.

பழங்குடியினரின் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ்நாட்டில் வசிக்கும் நரிக் குறவர்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கோரிக் கைகளை கனிவுடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய உடன் நடவடிக்கையை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அக்கடிதத் தில் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


அமர்த்தியாசென் சொன்னதும் சோக்களின் புழுக்கமும்!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி குறித்து கருத்தினை வெளியிட்டார். அமர்த்தியாசென் அவர்கள் எந்த அரசியல் கட்சியின் வண்ணத்துக்கும் ஆட்பட்டவர் அல்லர்.

பொது நிலையில் நின்று நாட்டுப் போக்குகளைக் கணித்துக் கருத்துகள் சொல்பவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை. மத நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை இந்தியாவின் பிரதமராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஓர் இந்தியக் குடிமகன் என்கிற முறையில் அவர் பிரதமர் ஆவதைக் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் மோடி எதையுமே சொல்லவில்லை. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களுக்கும்தான் மோடி அப்படி என்னதான் செய்து விட்டார்? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.

இப்படி கூறும் பொருளாதார நிபுணருக்கு எந்தவித அரசியல் வண்ணமும் பூச முடியாது. அமர்த்தியாசென்னின் இந்தக் கருத்து இந்தி யாவைத் தழுவி மட்டுமல்ல; உலகம் முழுவதும் பேசப்படும் - பெரும் அளவுக்குத் தாக்கத்தையும் உண்டாக்கும். இதனைப் புரிந்து கொண்ட பிஜேபியைச் சேர்ந்தவர்களும், பிர்மா முகத்தில் பிறந்ததாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களும், அமர்த்தியாசென் அவர்கள் கூறிய கருத்துக்களுக்குத் தக்கவகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில் அவரை சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

பார்ப்பன சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவராக விளங்கிக் கொண்டுள்ள திருவாளர் சோ ராமசாமி தமது இதழில் (துக்ளக் 7.8.2010) தலையங்கம் தீட்டியுள்ளார். அமர்த்தியா சென் கூறிய கருத்து இந்த இந்த வகையில் தவறு? மோடி உண்மையிலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள் கையில் நூற்றுக்கு நூறு உடன்பாடு உடைய பிடிவாதக்காரர் - அடுத்து அவர் பிரதமர் நாற் காலியில் சட்டமாக உட்கார்ந்தால் தான் மதச் சார்பின்மை என்பது முழுமையடைந்து மணம் வீசும் என்று எழுதியுள்ளாரா?

மோடி என்ற பெயரைச் சொன்னாலே, எல்லோரும் ஏன் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்று புரியவில்லை. அவ்வளவு சக்தி படைத்தவரா மோடி! அவரை விமர்சிக்கும் உரிமையோ, அவரை ஏற்க முடியாது என்று கூறுகிற உரிமையோ கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உண்டு. அமர்த்தியாசென் அப்படிப் பேசியதால் என்ன வந்து விட்டது. மோடிக்கு ஒரு ஓட்டுக் குறைவு அவ்வளவு தானே! இதுதான் அறிவு ஜீ(சீ)வி திரு சோ. ராமசாமி அய்யரின் பதில்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. அமர்த்தியா சென் அவர்கள் ஆழமாக எடுத்து வைத்த குற்றச்சாற்றுக்கு பி.ஜே.பி. மற்றும் பார்ப்பனர் தரப்பில் எந்தவித உருப்படியான பதிலும் இல்லை - கை வசம் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
அமர்த்தியசென் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிற ஏளனம்தானே இதில் தொக்கி நிற்கிறது. துக்ளக் வாங்கும் தமிழர்கள் இந்த இடத்தை நிதானமாக, ஆழமாக நோக்கட்டும்!
சோ வகையறாக்கள் மோடியைப் பிரதமராகக் கொண்டு வரத் தவிப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனராக ஒரு பிரதமர் வந்து இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதைவிட பார்ப்பனர் அல்லாதாரான மோடி. அதனைச் செய்தால் அவர்களுக்கு மிகவும் வசதியாகும். பார்ப்பனர் பிரதமராக இருந்து அதனைச் செய்தால் மிக எளிதில் முத்திரை குத்திக் கீழே தள்ளி விடுவார்கள்.

மோடி என்னும் பார்ப்பனர் அல்லாதாரைப் பிரதமர் ஆக்கினால். அவர்மீது அத்தகு முத்திரையைக் குத்தி வீழ்த்தி விட முடியாதே! இந்தத் தந்திரம் தான் மோடியை முன்னிலைப்படுத்துவதன் பின்னணியில் பதுங்கியுள்ள சூழ்ச்சியாகும். அதுவும் குஜராத்தில் மோடி அரங்கேற்றிய அந்தப் பாணி சூரத்தனம் - மனித வேட்டை இந்தியா முழுமையும் நடைபெற்றால் அது பிஜேபி சங்பரிவார்க் கும்பலுக்கும், பார்ப்பனர்களுக்கும் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அல்லவா!

மோடி பிரதமர் ஆனால் ஏதோ சிறுபான்மை மக்களுக்குத்தான் ஆபத்து என்று மேம் போக்காக கருதிவிட வேண்டாம்; ஒட்டு மொத்த சமூகத்தையே அமளிக்காடாக்கும் ஆபத்தான ஒரு நிலை என்பதை மறந்துவிட வேண்டாம்.
அமர்த்தியாசென்கள் கொடுக்கும் குரல் பொது நிலையானது. வழிகாட்டும் திசை விளக்குப் போன்றது - கவனியுங்கள்! கருத்தூன்றுங்கள்!

தமிழ் ஓவியா said...


அடேடே, கிடுகிடு அரசியல் பிரளயம் இதோ!

- ஊசி மிளகாய்


இந்திய அரசியலில் மிகப் பெரியதொரு அரசியல் பூகம்பம் விரைவில் ஏற்படவிருக்கிறது!
நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது;

ஜக்கம்மா குறி சொல்லுதாயே

ஆமாம். சு.சாமி,யே - அவருடைய மிகப் பெரிய பல கோடி மக்களையும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து, விரிந்து பல லட்சக் கணக்கான கிளைகள், இலைகள், தழைகள் எல்லாம் உடைய - மாபெரும் தனி (ஆளான) தன்மையுடைய வம்படி வழக்குப் புகழ் வாய் வீச்சு வல்ல சாமியான சு.சாமியே அவருடைய ரத, கஜ, துரக, பதாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு வந்து விட்டார்! பராக்! பராக்!!

இனி என்ன கவலை?

ஏற்கெனவே மோடியைப் பிரதமராக்கும் அறிவிப்பையே ஆர்.எஸ்.எஸ். தள்ளி தள்ளி மற்ற நான்கு, மாநிலத் தேர்தல்கள் நவம்பரில் முடிந்த பிறகே, வாக்காளர் தலையில் மிளகாய் அரைக்க முற்படுவதுபோல - அறிவிக்கவிருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்!
இந்த நிலையில் அந்தக் கட்சி மேலும் பலங் கொண்டு வெற்றி மேல் வெற்றி குவிக்க சு.சாமியும் சோ சாமிகளும், குருமூர்த்தி ஜீகளும் சேர்ந்து எப்படியும் மோடிஜியை பிரதமராக்கியே தீருவது என்று வீரசவர்க்கார், நாதுராம் விநாயக் கோட்சே அஸ்தி முன்னால் பஸ்கி போட்டு ச...ப...தம் எடுத்துள்ளார்கள் எனத் தெரிய வருகிறது!
இந்த லட்சணத்தில் மோடி தலைமையில் அடுத்துவரும் ஆட்சி பி.ஜே.பி. கூட்டணியோ, குழம்பணியோ கொண்ட ஆட்சி எப்படி ஊழலை அறவே ஒழிக்கும் ஆட்சியாக அமைக்கப்பட வேண் டும் என்பதை முன்னிலைப்படுத்த பெங்களூரு எடியூரப்பா என்ற பரிசுத்த பரமாத்மாவை பாவ மன்னிப்புக் கொடுத்து தீட்சை தந்து மீண்டும் பா.ஜ.க.வில் சேர்த்து விடப் போகிறார்களாம்!

பலே பலே!

இதற்கு, முன்பே சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்கு பா.ஜ.க.வுக்கு குறைந்து கொண்டே வருவதாக பல நாளேடுகள் எழுதுகின்றன.

எடுத்துக்காட்டாக
மக்களவை தேர்தலில் (பா.ஜ.க. வாக்குகள் தமிழ்நாட்டில்)

1998 6.9%

2004 5.07%

2009 2.33%

2014 ???

- டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற நாளேடு இப்படி சொல்லுகிறது.

பா.ஜ.க. எத்தனை அழைப்பு விடுத் தாலும் அதனுடன் கூட்டுச் சேர எந்த தமிழ் நாட்டுக் கட்சியும் தயாராக இல்லை!

ஏதோ சில லட்டர்பேடு கட்சிகள் வடக்கே யிருந்து வரும் லாபமான வரவுக்காக கூட்டு சேருகிறோம் என்று கூறி சேரக் கூடும்!

போதாக் குறைக்கு அரசியல் புரோக்கர்களும் இப்படிச் சேருவதன்மூலம், முயற்கொம்பு வாங்க மூணே முக்கால் பணம் முன் பணமாகக் கேட்ட பழைய பழமொழியை ஞாபகப்படுத்தும் நிலைதான் இன்று!

புருடா சாமிகள் வரவு சில செய்தி தேடி பசியோடிருந்த பசியேப்ப ஏடுகளுக்கு மிரட்டுக் கடை அல்வா போல் இனிப்பாக இருக்கும் என்பது உறுதி! உறுதி!!
உன் நண்பன் யார் என்று சொல்! பிறகு
உன்னை யார் என்று சொல்கிறேன்
என்பது ஆங்கிலப் பழமொழி.
பா.ஜ.க.வை ஒரு வழியாக
வழி பண்ணிட்டார்கள்! பலே, பலே!

தமிழ் ஓவியா said...


தேன்மொழி


வேலூர் மண்டல திரா விடர் கழகக் கூட்டத்தில் (11.8.2013) கழகத் தலைவர் கூறிய கருத்துக்களை கழ கத் தோழர்களே கவனித் தீர்களா?

ஒவ்வொரு சொல்லும் முத்து தான் - நாம் கடைப் பிடிக்க வேண்டிய கருத்துக் கள்தான் - கொடுக்கப்பட்ட வரைபடம்தான் - நம் நாள் குறிப்பின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட வேண் டியவைதான்.

காலத்திற்கேற்ப கழகச் செயல்பாட்டின் முறைகளில் மாற்றங்கள் தேவைதான் - வேகக் கூடுதலும் அவசியம் தான். கழகத்திற்கு மகளிர் பேச்சாளர் கூடுதலாகத் தேவைப்படும் (கழகப் பிரச் சார வழக்குரைஞர் அருள் மொழியின் கவனத்திற்கு இது) நேரம் இது.
சொன்னதோடு மட்டு மல்லாமல் உடனடியாக அறிவிப்பும்கூட; ஏலகிரியில் மகளிருக்கென்று மட்டும் இரு நாள் பயிற்சிப் பட்டறை.

தமிழ்நாடெங்கும் உள்ள கழகத் தோழர்கள் அடை யாளம் கண்டு பேச்சில் ஆர்வமுடைய மகளிரை, மாணவிகளை அனுப்பி வைப்பது அவசியம்.

ஏன் ஏலகிரியை நமது தலைவர் தேர்வு செய்தார்? கழக மகளிர் அணியினரும், பாசறையினரும் கணிச மான அளவுக்கு நிறைந் திருக்கும் பாசறைப் பகுதி இது! வேலூர் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் அடையாளம் காணப்பட்டது - அதனுடைய தொடர்ச்சி யாக இதனைக் கருதலாம்.

குடியாத்தம் சகோதரி தேன்மொழியார் வேலூர் கலந்துரையாடல் கூட்டத் தில் பேசினார்.
பெரியார் பிறந்த நாள் விழாவை வீட்டுக்கு வீடு கொண்டாடுவோம் - இதில் மகளிரின் பங்கு மகத்தான தாக இருக்க வேண்டும்; ஒவ்வொருவர் வீட்டு முகப் பிலும் ஊரின் முக்கிய பகுதிகளிலும் அறிவுலக ஆசானின் உருவப் படத்தை மின் விளக்குகளால் அலங் கரித்து வைப்போம்!

கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைப் போம் - அவரவர்களின் கருத்துக்களைக் கேட்போம்; ஒலி பெருக்கி வைத்து அய்யாவின் உரைகளை ஒலி பரப்புவோம், கழகப் பாடல் களை ஒலி பரப்புவோம்.

நம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இனிப்புகளை வழங்குவோம்! பேச்சுப் போட்டிகளை நடத்துவோம்! பெரியார் வினா விடைப் போட்டிகளை நடத்த ஆவன செய்வோம்.

இது பெரியார் நாடு என் பதை உறுதிபடுத்துவோம்.

தமிழனுக்கென்று ஒரு விழா - தேசிய விழா - அது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பதை நிலை நிறுத்துவோம்! இந்தக் கால கட்டம்தான் இதற்குப் பொருத்தமானது!
காலம் கெட்டுப் போய் விட்டது; இளைஞர்கள் திசை மாறிச் செல்லு கிறார்களே என்று ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. தந்தை பெரியார் சிந்தனை களை மூளைகளில் ஊடுரு வச் செய்வோம்! நோய்கள் ஓடும் நொடிப் பொழுதில்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விடுதலை! விடுதலை!! விடுதலை!!!


விடுதலை நமது போர்வாள்! என்றார் தந்தை பெரியார்! 78 ஆண்டுகளைக் கடந்து ஆனை நடைபோட்டுச் செல்லுகிறது.

இந்த வீரன் சந்தித்த களங்கள் எத்தனை எத்தனையோ! குவித்த சாதனை முத்துக்கள் கணக்கில் அடங்கா.

இவன் ஏறிய உயரத்தை அளக்க எவரால்தான் முடியும்?

பஞ்சமனையும். சூத்திரனையும் அவர்களுக்குக் கீழே இடித்துத் தள்ளப்பட்ட மகளிரையும். தன் தோளை ஏணியாக்கி உயர்த்திப் பிடித்தவன் இந்தப் பெருமை மிக்க விடுதலை வீரன்.

சமூகக் களமா?

பொருளாதாரக் களமா?

அரசியல் தளமா?

சமத்துவத் திசையா?

அப்பப்பா! இந்த மாவீரனின் வாள் வீச்சுமுன் ஆதிக்கக் கோட்டைகள் சரிந்தன! ஆன்மீகப் போர்வையில் ஆட்டம் போட்ட ஆரியத்தின் ஆணி வேர்கள் அறுந்து வீழ்ந்தன.

சுருக்கமாகச் சொன்னால் பிற்போக்கு சாம்ராஜ்ஜியக் கோட்டைகள் இந்தச் சூரிய நெருப்பால் சாம்பல் மேடாகின!

சமூகநீதித் திசையில் இவன் படைத்த சரித்திரத்தை சரித்திரம், தன் பேழையில் பத்திரமாக வைத்துக் கொள்ளும்.

எவ்வளவோ எழுதலாம்! என்றாலும் நம் தமிழர்கள் இதன் அருமையை முற்றிலும் உணர்ந்தனர் என்று மார்தட்டிக் கொள்ள முடியவில்லை.

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

இந்த அளவுகோலில் இன்னும் தமிழன் இல்லங்களாக இல்லாதது கோடானுகோடியே! நன்றியை எதிர் பார்க்காது, நாட்டுக்கும், இனத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையில் சோர்ந்ததில்லை.

எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இந்த ஏட்டின் ஆசிரியர்கள்! டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமிப்பிள்ளை, அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார், அ. பொன்னம் பலனார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற பட்டியலை ஒரு தரம், ஆம் ஒரே ஒரு தரம் மீண்டும் கவனித்துப் பாருங்கள்.

இவர்களை மிஞ்சி யார் எழுத்தாளர்கள்? யார் கருத்தாளர்கள்? அறிவுலகச் சூரியன் அய்யாவின் சிந்தனைத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சி மலர்கள் அல்லவா இவர்கள்!

ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உலகில் ஒரு நாத்திக ஏடு - இத்தனை ஆண்டுகள் ஏறு நடை போட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டா? அத்தகைய புரட்சி ஏட்டில் அரை நூற்றாண்டு காலம் ஒருவர் தொடர்ந்து ஆசிரிய ராக இருந்தார் என்பதற்குத்தான் ஆதாரம் உண்டா? இது ஒருகின்னஸ் சாதனையே!

ஆசிரியர் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அது விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிப்பது ஏன்?

ஆம், ஆசானாக - ஆசிரியனாக இருந்து இந்த ஒரு ஏடு தானே தமிழர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அறியாமை இருளை விரட்டியடிக்கும் ஆதவனாக சுடர் விடுகிறது! அதனால்தான் ஆசிரியர் என்றால் விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிக்கிறது.

வேறு எந்த ஒரு கட்சியும், இயக்கமும் சாதிக்க முடியாத இவற்றை நாம் சாதித்துள்ளோம்.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நமது ஆசிரியர் சொன்னது வெற்றுச் சொற்கள் அல்ல என்பதை - விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் சாதனை பொறித்த அவர் விஷயத்திலேயே அதனை நிரூபித்துக் காட்டினோம்.

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்தோமே. ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் - நம்மை அறியாமலேயே நம் தோள்கள் நிமிர்கின்றன - மார்பு புடைக்கிறது - கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்புகிறது.

அதனைத் தொடர வேண்டாமா? அந்தச் சந்தாக்களின் எண்ணிக்கையில் ஒரு தொய்வு ஏற்படலாமா?

நம் எதிரிகள் ஏதோ புதுவாழ்வு வந்ததுபோல ஆட்டம் போடும் ஒரு கால கட்டத்தில் விடுதலை வீரனின் அம்பறாத் தூணியில் கணைகள் பூட்டப்பட வேண்டாமா?

பெருமைகள் தேவைதான் - அது வீண் பெருமையாக ஆகிவிடக் கூடாதல்லவா! செயலில் பூத்து நறுமணம் கமழும் போதுதானே அந்தப் பெருமைக்குப் பீடு மிகு பொருள் கிடைக்கும்.

இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!

1927ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடிஅரசு பிரதியின் எண்ணிக்கை 5,000த்தை யாவது தாண்டிவிட வேண்டாமா! அப்படியானால் ஒவ்வொருவரும் மும்மூன்று புது சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுங்கள். அப்படிக்கில்லாமல், குடிஅரசே! குணக் குன்றே! அஞ்சாவீரமே!

உண்மை அவதாரமே!

சுயமரியாதைச் சூரியனே!

...என்று கவி பாடுவதில் ஒரு பலனுமில்லை.

காரியத்தில் காட்டுங்கள்

(குடிஅரசு 26.12.1926)

அன்று பெரியார் சொன்னதை இன்று சொன்னதாகவும் எடுத்துக் கொள்வோம்.

நாம் வாய்வீச்சு வீரர்களா? காரியத்தில் சாதித்துக் காட்டும் தீரர்களா?

எங்கே பார்ப்போம்!



13.8.2013
சென்னை

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,திராவிடர் கழகம்

குறிப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஜவகர் அவர்கள் தன் மூலம் முன்பு சேர்த்துக் கொடுத்த 30 சந்தாக்களையும் மீண்டும் புதுப்பித்துக் கொடுத்து வழி காட்டுகிறார். கடந்த முறை சேர்க்கப்பட்ட சந்தாதாரர்களின் முகவரிப் பட்டியல் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்பு கொள்வீர்! தொடர் சந்தாதாரர்களாக ஆக்குவீர்! ஆக்குவீர்!!

தமிழ் ஓவியா said...

மதுரை மீனாட்சிமீது நம்பிக்கை இல்லை!

மதுரை மீனாட்சியம்மனை இந்து அறநிலையத்துறை அவமானப்படுத்துவது போல, வேறு யாராலுமே, அவமானப்படுத்திட முடியாது.

பக்தர்களின் உடைமைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள, ரூ.85 லட்சத்தில் நவீன ஸ்கேனர்கள் பொருத் தப்படும். 24 மணி நேரமும் 150 காவலர் நிறுத்தப் பட்டுள்ளனர். நாள்தோறும் மூன்று முறை வெடிகுண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மேற்கு தெற்கு மற்றும் வடக்கு கோபுரவாசல் களில் மெடல் டிடக்டர் வைத்து சோதனை செய்து பக்தர் களைக் கோயிலுக்குள் அனுப்புகின்றனர். மீனாட்சியாவது வெங்காயமாவது அது வெறும் பொம்மை என்று சொல் லாமல் சொல்லி விட்டதே - இந்து அறநிலையத்துறை - ஆகா! மீனாட்சியம்மன் மகிமையே மகிமை.

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். கல்கி இதழ் (18.8.2013 பக்கம் 3) ஒரு பக்கம் அளவுக்கு சிலாகித் துள்ளது படத்துடன்.
சரி, இருக்கட்டும். சந்தடி சாக்கில் கந்தப் பொடி.. குசும்பு என்ன தெரியுமா? நிதித்துறையில் ராமராஜ்ஜியம் ஆரம்பமாகப் போகிறதாம்.. புரிகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் பெயர் ரகுராம் - அதனால்தான் இந்தக் கு(சு)றும்பு! சம்பூகன் தலைகள் வெட்டப்படுமா/ தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

நியாயமான கேள்வி...

2002இல் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இனக் கலவரம் மூட்டப்பட்டது. வெளியார் யாரையும் குஜராத்துக்குள் அனுமதிக்கவில்லை குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அப்படியானால் குஜராத் மாநிலமே நரேந்திரமோடிக்குச் சொந்தமானதா?
- மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே! ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு - முடிவு


ராச்செஸ்டர், ஆக.13- நாத்திகர்களைவிட மத வாதிகளின் அறிவு குறை வானதே என்று ராச் செஸ்டர் (அமெரிக்கா) பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.
பல பத்தாண்டு களாகத் தொடர்ந்த அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பாக, மத நம்பிக்கையுடைய மக்கள், மதநம்பிக்கை இல்லாதவர்களைவிடக் குறைந்த அறிவாற்றல் உடையவர்கள் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

மிரான் ஜீக்கர்மேன் என்ற, ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியரின் தலை மையின்கீழ் நடத்தப் பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட் டுள்ள வேறுபாடு களைப் பற்றிய 63 ஆய்வு களில் 53, ஆய்வுகள் மத நம்பிக்கையுடையவர்கள் குறைந்த அளவு அறி வாற்றல் உடையவர்கள் எனக் கருத்து தெரிவித் துள்ளது. வயது அதிக மானதன் காரணமாக, அதிக மூளை ஆற்றல் கொண்டவர்கள், நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள். ஏன் என்பதற்கான காரணங் கள், நாம் முன்பு நினைத் திருந்ததைவிட எளிதாக இருந்தது.

உதாரணமாக, அதிக அறிவாற்றல் உள்ளவர் கள், திருமணம் செய்து கொள்பவர்களாகவும், வாழ்வில் வெற்றி அடைந்தவர்களாகவும், இருப்பதால், அவர் களுக்கு மதம் மிகக் குறைந்த அளவில் தான் தேவைப்படுகிறது.
இதுபற்றிய ஆய்வுகள் ஜீக்கர் மேனின் ஆய்வுக் கட்டுரையையும் சேர்ந்து 135 அய்.க்யூ புள்ளிகளுக்கு மேல் உள்ள 1500 அறி வாளிக் குழந்தைகளுடன் 1921இல் ஆரம்பிக்கப் பட்டு இன்றளவும் தொடர்ந்து வரும் ஆய் வுகளைச் சார்ந்ததாகும்.
மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, கடவுள் நம்பிக்கை அதி கரிக்கும் என்ற பொதுக் கருத்துக்கு மாறாக லூயி டெமானின் ஆராய்ச்சி முடிவுகள் 75-லிருந்து 91 வயது வரை மத நம்பிக் கைகள் குறைந்து வரு வதைத் தெரிவிக்கின்றன. மதம் தொடர்பான ஈடு பாடுகள் வயது ஆக ஆகக் குறைந்து வருகின் றன என்பதை நிரூபிக்க வேறு ஆய்வுகள் தேவைப் படும்.

1958-லேயே மைக் கேல் ஆக்கியேல், மத நம்பிக்கையுடைய குழந் தைகள் முற்காலத்தில் மதம் தொடர்பான வற்றை எளிதில் கிர கித்து விடுகின்றன. ஆனா லும், அவர்கள்தான் அது தொடர்பான அய் யங்கள் எழுப்புபவர் களாகவும், புத்திசாலி மாணவர்கள் பழங்கால நம்பிக்கைகளை ஏற்க இயலாதவர்களாகவும், மத நம்பிக்கை தொடர் பானவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர் களாகவும் உள்ளனர்.

ஜீக்கர் மேனின் 1916ஆம் ஆண்டு ஆய் வில் பொதுப் படை யாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 58 விழுக்காடு அமெரிக்க அறிவியலா ளர்கள் கடவுள் இருப்பை அய்யப்படுகிறவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் இந்த அளவு எழுபது விழுக் காடாக ஆக, மிக வல்லுநர்களாக உள்ள அறிவியலாளர்களிடம் உயர்ந்து உள்ளது. ஆளு மையும் சமூக மனவியல் பற்றியுமான மறு கண் ணோட்டம் என்ற கல்வி ஏட்டில் இந்தக் கட்டுரை வெளியா யிற்று. அதிகம் அறிந் திருந்த அறிவாளி களுக்கு, மதநம்பிக்கை கள் அறிவுக்கேற்றதாக இல்லாததாலும், அறி வியலில் பொருந்தாததாக வும், ஆய்வுக்கு உட் படுத்த முடியாதனவாக வும் இருந்த காரணத் தால் சுவையற்றுப் போயிருந்தது.
அறிவாளிகள் இயற் கையாகவே பள்ளிகளில் அதிக நேரத்தைச் செல வழிக்கக் கூடியவர் களாக இருக்கிறார்கள்.

அவை ஒருவித தன்னடக் கத்திற்கும், நீண்ட கால லாபத்திற்கும் பயன ளிப்பன. ஆய்வாளர்கள் அதிக அறிவு படைத்த வர்கள் உயர்ந்த உத்தி யோகங்களையும், அதனால் அதிக வரு வாய், சுயமரியாதையை யும், கொண்டிருப்ப தனால் நம்பிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இளவயதிலேயே அறி வில் சிறந்து விளங்குப வர், முதியவனாகும் போது, அதிகப் பலன் பெறுகின்றனர். மதத்தின் செயல் பாடுகள்பற்றிய மேலும் ஆய்வுகள் தேவை என்று வல்லுநர்கள் கருது கின்றனர். ஆய்வாளர் கள், மதம் அளிக்கின்ற செயல்பாடுகளை ஏற்பவர்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் அவை குறைந்தவர்கள், உதவியற்றோர் ஏழைகள் ஆகியோர், கடவுள் நம்பிக்கைகளைக் கைக் கொள்கிறார்கள் என் றும், ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி...



மதங்களுக்கு உயிர் நாடியா யிருப்பது பிரச்சாரமும், பணமுமே யல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரத்திற்கான துருப்புச் சீட்டா?


பாரதீய ஜனதாவுக்கு ஏதாவது பிரச்சினை என்னும் தீனி அவசியமாகிறது. அதுவும் அவர்களின் அடிப்படைவாதமான சிறுபான்மையினர் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஒன்று கிடைத்து விட்டால் அல்வா சாப்பிட்ட மாதிரிதான்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினரால் 5 இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன், இந்தியப் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர்கள் கூட பாகிஸ்தானோடு இந்தியா பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது இந்தியாவின் சுயமரியாதைக்குக் கேடானது என்றெல்லாம் நீட்டி முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானோடு எப்பொழுதுமே பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று சொல்கிறார்களா? அல்லது இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது காலக்கெடு நிர்ணயித்துள்ளார்களா? எவ்வளவுக் காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தினால் இந்தியாவின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று கருதலாம் என்பதுபற்றி திட்டவட்டமாக பிஜேபி தரப்பில் சொல்லப்படவில்லை.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கையை யாரும் நியாயப்படுத்த முடியாது.

ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு மிடையே உள்ள பிரச்சினையைப் பேச்சு வார்த்தை யால்தான் தீர்க்கப்பட முடியும் என்பது, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகும்.

பாகிஸ்தான் என்பது முஸ்லிம் நாடு என்பதை மனதிற் கொண்டு, அதற்கு எதிர்ப்பான ஒன்றைப் பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் பிஜேபியின் யுக்தியாகும்.

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதுண்டு. இந்திய தரப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீரவிவாதி களால் காந்தகாருக்குக் கடத்தப்பட்டது. தீவிர வாதிகளால் வைக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று, இந்தியச் சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுதலை செய்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கே உடன் சென்று அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்து விட்டு வந்தார்.

இவற்றோடு இணைத்துப் பார்க்கும் போது, இப்பொழுது எல்லையில் நடைபெற்ற நிகழ்வு பெரியது என்று கூறிவிட முடியாது. பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற மிக மோசமான அதிர்ச்சியளிக்கக்கூடிய தாக்குதலுக்குப் பிறகு வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லையா?

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்த்து சீனா வரைபடம் (ஆஹஞ) வெளியிட்டுள்ளது. விசாக்களை வழங்கிக் கொண்டு இருக்கிறது. எவ்வளவுத் தலைபோகும் பிரச்சினை என்றாலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டே தீர்வு காணப்பட வேண்டிய கால கட்டம் இது.
யுத்தத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பித்தால், இன்றைய அணுயுகத்தில் வெற்றி என்று சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கப் போவதில்லை. இதையெல்லாம் புறந்தள்ளி சிறுபிள்ளைத்தனமாக பிஜேபியின் மூத்த தலைவர்களே பேசுவது அந்தக் கட்சியின் பொறுப்பற்ற தன்மையையும், எதனையும் அரசியலாக்கி இலாபம் என்ற குளிர்காய வேண்டும் என்கிற அவர்களின் குறுகிய சுயநல நோக்கத்தை யும்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனப்பான்மையில், அடுத்த ஆட்சி என்கிற போதை ஏறி பிஜேபி யூகங்களை வகுப்பதில் வெகு மக்கள் ஏமாந்து விடக் கூடாது! கூடாது!!

தமிழ் ஓவியா said...


ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!


ஆசிரியருக்குக் கடிதம்

ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
15.6.2013-இல் நிறைவேற்றிய திண்டுக்கல் தீர்மானம் மிகவும் அற்புதமான தீர்மானம். விஞ்ஞானமும் நாகரிகமும் வளர வளர அதற் கேற்ற மாற்றங்களைக் கொண்டு வரவேண் டியது நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் இந்தியன் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று கூடும்போது தமிழன், தனித்தனியாக பிரிந்து செல்லும் போது தமிழன் இல்லை. எல்லாம் இந்த பாழாய்ப் போன ஜாதி வந்து இன்னமும் இந்த நாட்டைக் கேடுகெட்ட நிலைக்குக் கொண்டு செல்லு கிறது. ஜாதி வன்மம் சில அரசியல்வாதி களாலும் தூண்டப்பட்டு கோரத் தாண்ட வமாடுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் திண்டுக்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்னுடைய நீண்டகால அவாவும் இது தான். பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க் கையின் போது, இடஒதுக்கீடு காரணத்திற்காக மட்டுமே ஜாதிப்பெயர்களுக்குப் பதிலாக குறியீடுகளை SC, ST.SC(A). MBC, OBC, OBC(M) போன்று குறிப்பிட வேண்டும் - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தை களுக்கு ஜாதியற்ற பிரிவினர் I.C. (Quota) என்பதை சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக உயர்த்தலாம். ஒரே ஜாதியில் திருமணம் புரிந்தோர், மனமாற்றமடையும் போது, அவர்களது குழந்தைகள் ஜாதி யற்றோர் என்று பதிவு செய்யலாம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது. காலப்போக்கில் ஜாதியற்றோர், ஜாதியற்ற பிரிவினர்I.(Inter Caste Quota)சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே போகலாம். முன் னேறிய வகுப்பினர் ஜாதியற்றோர் பட்டி யலில் விரும்பினால் சேரலாம். முன்னேறிய வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு கூடவே கூடாது. 69 சதவீதம் + 31 (ஜாதியற்றோர் + ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்) சதவீதம் என்று அரசு அறிவிக்கலாம். இந்த 31 சதவீதம் காலப்போக்கில் அதிகரித்து 100 சதவீதத்தை எட்டினால, நாட்டில் ஜாதி ஒழிந்து விட்ட தாகக் கருதலாம். இந்த இடஒதுக்கீடு எல்லாத் துறைகளிலும் - நீதித்துறை, அறநிலையத்துறை உட்பட பின்பற்ற வேண்டும்.

நாட்டிற்கு நல்வழிக்காட்டும் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திண்டுக்கல், தீர்மானம். பாராட்டுக்குரியது. வரவேற்கத் தக்கது. நன்றி! வணக்கம்.

வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!

-கா.நா.பாலு (தலைவர், இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...


தினமணியின் பத்திரிகா தர்மம்

துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டம் நிறுத்தப்படலாம் என்பது தினமணியின் தலைப்பு (13.8.2013 பக்கம்-4) உள்ளே என்ன தெரியுமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டத்தில் இப்போதுள்ள நிலையே நீடித்தால் அந்தத் திட்டத்தை நிறுத்தும் நிலைக்கு தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டு ஆணையம் தள்ளப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காணத் தவறக்கூடாது.

தலைப்பு என்ன சொல்லுகிறது? மத்திய அரசே முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

உள்ளே செய்தி எப்படி இருக்கிறது... மத்திய அரசு அந்த நிலைக்கு தள்ளப்படுவதாக இருக்கிறது.

இரண்டும் ஒன்றுதானா? முடிவு எடுப்பதற்கும், தள்ளப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு - தினமணிக்குத் தெரியாதா? இந்த மேம்பாலம் உருவாவதற்கு தடையாக அதிமுக அரசு இருப்பதைத் திசை திருப்பும் வேலையைக் கவனிக்கவும்.