Search This Blog

18.4.13

பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் நூல்கள் பற்றிய சிந்தனை


எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத் திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம்
                               ------------------------------- டாக்டர் அம்பேத்கர்


தான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்
                            ------------------------------------------------ பகத்சிங்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்
                                  ------------------------------------- சார்லி சாப்ளின்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப் படுகின்றனவோ, அங்கே விரை வில் நல்ல மனிதர்களும் எரிக்கப் படுவார்கள்.              
                              ------------------------------------- சேகுவாரா
ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்.
                         ------------------------------- தோழர் சிங்காரவேலர்

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும், சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.
                              -------------------------------------- சி.கே.செஸ்டர்டன்
புத்தகங்கள் மிகவும் ஆபத் தானவை. அவற்றின் மேல் கவனம், இது உங்கள் வாழ்வை மாற்றி விடக்கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது.
                                              ---------------------------------- எலன்எக்ஸ்லே
உங்களது தலைசிறந்த புத்தகங் களைத் திருடிச்செல்பவர்கள், உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்.

                                           ---------------------------------------- வால்டேர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

-                                 ----------------------------------------------- காந்தியார்

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட போது புத்தகங்களு டன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்
                                               ----------------------------------------------- நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று

                                          ------------------------------------ பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப்பதிலளித் தார்.           
                                        ---------------------------- - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்

கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்.

                                            --------------------------------- தந்தை பெரியார்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்.

                                      -------------------------- நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங் கள் பல லட்சம்.              
                         -------------------------------------- வரலாறு
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.                         
                                         -------------------------------- வரலாறு
பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம்.                 

                            ------------------------------------------------------- போவீ
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக் கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம்.      -                        ---------------------------------------சீனப் பழமொழி

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்

                                      --------------------------------- கிறிஸ்டோபர் மார்லே

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்.

                                              --------------------------------------- அரேபியப் பழமொழி

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது

                                                   --------------------------------------- கூகிவா திவாங்கோ

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது.

                                                                      -----------------------  எல்பர்ட்கிரிக்ஸ்

புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது.

                                                         ------------------------------------------ மாவீரன் பகத்சிங்

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே 
ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது. - பிரடெரிக் எங்கெல்ஸ்
காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்          
                           -------------------------------------------------- எட்வின் பி.விப்பிள்

ஒரு நாட்டின் வருங்காலச் சந்த தியினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் புத்த கங்களே.          

                                                          ---------------------------------- ஹென்றிதொறோ

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார்.

                                       ---------------------------- வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.

                                              ------------------------------------ மார்டின் லூதர்கிங்

புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்.

                                     --------------------------------------------------- சீனப் பழமொழி

ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை.

                                              --------------------------------------- ஆர்.டி.கம்மிஸ்

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை.

                                         ---------------------------------- சார்லஸ் இலியட்

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம்.

                                                ---------------------------------- அறிஞர் அண்ணா

ஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்.

                                                               -------------------------------- டோனி மாரிஸன்
ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

                                                          ------------------------------------ ஆர்.டி.கம்மிங்

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காத வன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத் திலும் உயர்ந்தவன் அல்லன் 
                                             ------------------- மார்க் ட்வைன்.       - ஜேம்ஸ்ரஸல்

உன் மூளைக்குள் இருக்கும் சிந் தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்.
                                                ----------------------------------------- ஜேம்ஸ்ரஸல்

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.
                                             ----------------------------------------- கரோலின் கோர்டன்

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது
                                      -------------------------------------- ஜார்ஜ் பெர்னாட்ஷா

தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை, கரூர் மாவட்டம்.
நன்றி: விடுதலை - ஞாயிறு மலர், சனி: 11.08.2012

தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள், செக் குமாடாக இருக்க வேண்டாம், பந்தயக் குதிரையாக இருக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்: அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.
படிப்பு என்பது இந்நாட்டில் வயிறு வளர்ப்ப தற்காகவே பயன்படுத்தப்படுகிறது. படிப்பின் பயனெல்லாம் அறிவு பெறுவதற்காகவே இருக்க வேண்டும்.
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப் பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பகுத்தறிவு மாறானதும், மூடநம்பிக்கையை வளர்ப்பதுமான எந்தச் செய்தியும் கல்வியில் பாடமாகக் கற்பிக்கக்கூடாது.
                                 ------------------------------------- தந்தை பெரியார்


உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.

புத்தகங்களைப் படிப்பதை விட மனிதர்களை படிப்பது மிகமிக முக்கியம்.
மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த சாணை தீட்ட, அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.

நூலைப் படித்து தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால் தான் மூளை, இன்றேல் அது வெறும் ஈளை


எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.

- கி.வீரமணி
                         -------------------------------”விடுதலை” 18-4-2013

19 comments:

தமிழ் ஓவியா said...

பதில் சொல்லுமா அதிமுக ஏடு?

மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.

அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்?

இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு.

திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா?

பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா?

அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா?

திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு.

அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன?

மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா?

வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா?

மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா?

ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்?

போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா?

மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம்.

கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும்.

@@@@@@

தமிழ் ஓவியா said...

மழை பொழிய....

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்?

கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா?

மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும்.

திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள்.
இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா?

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள்.
மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்!

@@@@@@

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால்...

பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார்.

இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது.

சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது.

அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் ஓவியா said...


பயன்படவேண்டும்


சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...


யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள்?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சரத் யாதவின் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் முக்கிய இடம் பெற்றுள்ளது. பீகாரில் பி.ஜே.பி.யும், அய்க்கிய ஜனதா தளமும் இணைந்த கூட்டாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அதே போல பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அய்க்கிய ஜனதாதளம், தன் திரண்ட ஆதரவை அட்டியின்றித் தந்து உதவியிருக்கிறது.

இப்பொழுதுகூட மக்களவையில் அய்க்கிய ஜனதாதளத்திற்கு 20 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே பிஜேபிக்கும், அய்க்கிய ஜனதா தளத்துக்கும் இடையே பிளவு மூண் டுள்ளது. 15ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை முன்னிறுத் தும் நிலையில், பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அதனை எதிர்த்து போர்க் கொடி உயர்த்தி வருகிறார்.

இன்னும் சொல்லப் போனால், மோடியைப் பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்துவ தற்கு முன்பாகவேகூட மோடியைப் பற்றிய நிதிஷ்குமாரின் கருத்துக் கணிப்பு தெளிவாகவே இருந்து வந்திருக்கிறது. பீகார் சட்டப் பேரவைத் தேர்தலின் போதுகூட நரேந்திரமோடி, தமது மாநிலத்திற்குத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டியதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

பிஜேபிக்கு, மோடியின் முகம் தேவை என்ப தெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை என்பதை பீகார் தேர்தலில் தெரிந்து விட்டது.

அய்க்கிய ஜனதா தளத்தில் பிரதமருக்கான வேட்பாளர் என்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மதச் சார்பின்மைக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கையுள்ள ஒருவர்தானிருக்க வேண்டும் என்று வெளிப்படுத்தி வருபவர் நிதிஷ்குமார்.

குஜராத், வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றும், மோடி பிரதமரானால், இந்தியாவையே குஜராத் ஆக்குவார் என்ற பிரச்சாரத்தைக்கூட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கிண்டலடித்துள்ளார். அப்படிப் பார்க்கப் போனால் குஜராத்தைவிட, பீகார் மாநிலம் வளர்ச்சி அடைந்த ஒன்று என்று பதிலடி கொடுத்தார் பீகார் முதல் அமைச்சர்.

அதற்குப் பிறகு பிஜேபியின் வட்டாரத்தி லிருந்து நிதிஷ்குமாருக்குக் கடுமையான தாக்குதல்கள், சாடுதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இதைப்பற்றி விமர்சன நோக்கில், செய்தி வெளியிட்டுள்ள தினமலர் ஏடு, ஏதோ புத்திசாலித் தனத்தோடு எழுதுவதாக நினைத்துக் கொண்டு மோடியை ஆதரித்தால், பீகாரில் உள்ள முஸ் லிம்கள் ஓட்டு அய்க்கிய ஜனதாதளத்திற்குக் கிடைக்காமல் போகும் என்பதால்தான் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாக எழுதி இருக்கிறது - யார் அந்த ஆய்வாளர்களோ!

அது உண்மையாகவே இருக்கட்டும்; அந்த வகையில் நிதிஷ்குமார் சிந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்றுதானே அரச மைப்புச் சட்டம் கூறுகிறது? சிறுபான்மையினரான முசுலிம்களுக்கு இங்கு வாழும் உரிமை கிடை யாதா? அவர்களின் மக்கள் தொகை அலட்சியப் படுத்தப்படக் கூடியதும் அல்லவே! 13.5 விழுக்காடு அளவு அவர்கள் இருக்கிறார்களே!

அவர்களைப் பற்றிய அபிப்பிராயம் பிஜேபிக்கும் அதன் சங்பரிவாரங்களுக்கும் என்ன? இந்தியா வில் வாழும் முசுலிம்கள் தங்களை இந்துமய மாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக் கடவுள்களை அவர்கள் வணங்க வேண்டும் என்றும் சொல்லுவதெல்லாம் பாசிசப் புத்திதானே?

மதச் சார்பின்மையை ஆதரிக்கக் கூடிய நிதிஷ்குமாரோ அவரது அய்க்கிய ஜனதா தளமோ மோடியை எதிர்ப்பதில் என்ன குற்றம்? முசுலிம் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

ஒரு வகையில் பிஜேபி, மோடியை முன்னி றுத்துவது நல்லதுதான். அதன் மூலம் மதச் சார்பின்மைச் சக்திகள், மதவாத சக்திகளை அம்பலப்படுத்துவதற்கு வசதியாகப் போய் விடும் அல்லவா! 18-4-2013

தமிழ் ஓவியா said...


நமது கல்வி நிறுவனம் சபாஷ்!


கடந்த சில வாரங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் பகுதியில் பத்தாம் வகுப்பிற்கான தமிழ் வார்த்தைகளை சரியாகச் சொல்லும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திருக்குறள், வார்த்தைகளை மாற்றிச் சொல்லுதல், ஒரு ஊர் பற்றிய விவரங்கள் போன்றவை அவை. திரு. ஜேம்ஸ் வசந்தன் என்பவர் நடத்தி வருகிறார். கால் இறுதிச் சுற்றுக்கு நமது திருச்சி பெரியார் மெட்ரிக்குலேஷன் மாண வியர் இருவர், சென்னை DAV மாணவியர் இருவருடன் போட்டிப் போட்டு, அபாரமாக வார்த்தை களைச் சரியாகக் கூறி வெற்றி பெற் றுள்ளனர் என்று கூறிக் கொள்ள ஆவலாக உள்ளேன். ஞாயிறன்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சி தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது என்பதோடு, நமது பெரியார் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவியர் முதலிடத்தில் உள்ளனர் என்பதையும் நினைத்து பூரிப்பும், பெருமையும் அடை கிறோம். தொடர்ந்து வருகின்ற வாரங்களிலும் அவர்கள் வெற்றியே பெறுவர் என்ற நம்பிக்கை எங்க ளுக்கு இருக்கிறது! தமிழ்மொழிக்கும், தந்தை பெரியார் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் மாணவியரை போற்றிப் பாராட்டுவோம். ஊக்கமும் அளிப்போம்! வாழ்க பெரியார் மெட் ரிக்குலேஷன் பள்ளி! தொடரட்டும் வெற்றிகள்! இந்நிகழ்ச்சியை அனை வரும் பார்க்க வேண்டும்.

வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! அன்புடன், விடுதலை வாசகர் சித்ரா சுந்தரம்

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?


இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக் காவைச் சுற்றிப் பார்க்கப் போனாராம். இறங்கியதுமே அமெரிக்கப் பெண் கேட்ட முதல்கேள்வி, நான் மகாபாரதம் படித்திருக்கிறேன், உங்களுடைய மற்ற கணவர்கள் எங்கே? அங்கேயே விட்டு வந்து விட்டீர்களா? என்பதுதானாம். இப்படி இந்தியாவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ராணி பத்திரிகையாசிரியர் சொன்னதும், அனுராதா ரமணன் எழுந்து... என்னை அப்படி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அய்ந்தாவது நபர் தான் தாலி கட்டிய கணவனென்று... இவ்வாறாக 21.8.1983 நாளிட்ட தாய் இதழில் ஒரு பெட்டிச் செய்தி வந் துள்ளது.

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?

திருமதி அனுராதா ரமணன் கூற்றுப்படி ஒரு பெண்ணானவள் தாலி கட்டிய ஒரு கணவனையும், தாலி கட்டாத நான்கு ஆண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாரா? மகாபாரதத்தைக் காப்பாற்ற போய் தன் மானத்தைப் பறக்க விட்டு விட்டாரே!
(உண்மை, 1.8.1983)

தமிழ் ஓவியா said...


நெய்வேலியும் திருவெறும்பூரும்



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம்.

இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது.

என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.

இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம் பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தமே செய்யும்.

பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம்.

பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம் பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.

பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.

நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன.

1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.

1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில் பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத் தான் (முதலாளிக்குத் தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக பச்சை மையால் கையொப்பமிட மனம் மறுக்கிறது.

நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது. திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா? 19-4-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சாஸ்திரம்

செய்தி: இன்று ராமநவமி. சிந்தனை: ராமன் பிறந்த நவமியும், கிருஷ் ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாளாம் - சொல்லு கிறது சாஸ்திரம்.

கேட்டீர்களா சேதியை?

அட்சய திருதியையில் நகை வாங்கினால் அதிர்ஷ் டம் குவியும், செல்வ தேவதை வந்து குடியிருப் பாள் என்று கிளப்பிவிட் டார்கள் அல்லவா?
இப்பொழுது புதாஷ்டமி யில் வீடு, நிலம் வாங் குங்கள் - விளங்குவீர்கள் என்று கிளப்பி விட்டுள்ளனர்.
முன்னது நகைக்கடைக் காரர்களின் சரடு - பின் னது ரியல் எஸ்டேட்கா ரர்கள் கட்டிவிட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?


மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.

குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.

வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?

இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே... அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

மனைமாட்சியருக்கு விழா!


ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.

அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.

மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!

இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!

தமிழ் ஓவியா said...

மாற்றம்


வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.

பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.

வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.

அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.

கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.

கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.

பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.

அய்யனார்க்கே இந்த நிலைமையா?

இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.

அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.

பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.

_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை; தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகாமையிலே கோடியக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதம் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையைப் பார்த்ததார் என்று சொல்கிறார்கள்.

திரவுபதி மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்லபுரம்; மகாபலுபுரம் என்று தான் சொல் வழக்கு ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்டநகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளைப் பார்த்தால் அங்கே ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும் அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டுப் பார்த்து பாறையையும் தொட்டுப்பார்த்தது அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம்- ஒரு விளக்கம். இவை அத்தனையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக்கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.83 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


எங்கே செல்லுகிறது சமூகம்?


ஒரு மாத விடுமுறை.. தற்காலிக மனைவி.. போகும் போது விவாகரத்து!

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா விலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் பாலியலுக் காக இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம். 17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவி யாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாலியலுக்கான டூரிசம் இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் பாலியல் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற் கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவி களாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.

ஹைதராபாத்தில்தான் அதிகம்

இந்த அக்கிரமச் செயல் ஹைத ராபத்தில்தான் அதிகமாக நடக் கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களைக் குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.

வறுமையைப் பயன்படுத்தி...

குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென் டுளும் கை கோர்த்து செயல்படு கின்றனர்.

அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம் 17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல் யாணத்தை வெளியில் அம்பலப் படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியி லிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.

நான்கு வார மனைவி

கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப் பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.

44 வயது சூடான் பணக்காரர்...

நடந்தது குறித்து காவல்துறையில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன ராம்.

கல்யாணம் செய்து வைத்து...

கமிஷன் அடித்து.. பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாரா பாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்

திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.

ஆப்பிரிக்கர்களே அதிகம்

தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக் கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நட வடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

மதம், பக்தி என்று எவ்வளவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதே - இவை எல்லாம் இதற்குள் அடங்குமோ!

பாரத புண்ணிய பூமியின் 22 காரட் பண்பாடு இது தானோ!

ஓ, அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி தானே பாரதப் பண்பாடு?

தமிழ் ஓவியா said...


தமிழன் தொடுத்த போர்


(தமிழன் தொடுத்த போர் நூலில், 10ஆம் பக்கத்தில் இருப்பது)

சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழி, அதனைத் தாய்மொழியாகக்கொண்ட ஆரியர், அந்த ஆரியர் போற்றி வளர்த்த வேத புராண இதிகாசக்கலை, அந்தக் கலையிற் பிறந்த ஆரிய வருணாசிரம நாகரிகம் - இவற்றின் கூட்டுத் தொகைதான் தமிழன் சீர்கேடு.

இதை எந்தத் தமிழனும் - அவன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி - மறந்து விட முடியாது. ஒரு வேளை சூழ்நிலையின் காரணத்தால் மறுக்க நேர்ந்தாலும் மறுக்க முடியாது. தவறி மறுப்பானாயின் அவன் தமிழனாய் இருக்க முடியாது. எதை வேண்டுமானாலும் தமிழன் பொறுத் துக் கொண்டிருப்பான்.

ஆனால் யாரேனும் தன் உயிர் நாடியை அழிக்கத் தொடங்கினால் - தன் தாய் மொழியை வளமிழக்கச் செய்தால் - தமிழுக்கு ஆபத்துச் சூழ்ந்தால் - அதை மட்டும் அவன் பொறுக்க மாட்டான்.

இது அவனுக்கு வரலாறு புகட்டிய பாடம்.

ஆரிய நாகரிகம் தமிழன் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் முதன்முதல் ஆரியத்தின் நோக்கம் தமிழன் மொழி மீதுதான் பாய்ந்தது.

தமிழன் தன் மொழியை இழந்தால் பிறகு தன் கலையை, வாழ்வை, நாக ரிகத்தை, நாட்டை ஆகிய அத்தனை யையும் இழந்து விடுவான் என்பதை நன்குணர்ந்த அந்த நாள் ஆரியம் எடுத்த எடுப்பில் தமிழ் மொழியை வீழ்த்தத்தான் திட்டமிட்டது,
ஆரியச் சூழ்ச்சியின்

விளைவாகத் திருமுதுகுன்றங்கள்
விருத்தாசலங்களாயின.

மறைக்காடுகள் வேதாரண் யங்களாய் உருவெடுத்தன.

திருக்கழுக்குன்றங்களும் திருவானைக்காக்களும், பஷி தீர்த்தங்களாய் ஜம்பு கேஸ்வரங்களாய் மாற்று வடிவம் அடைந்தன.
நெடுஞ்செழியன் என்றும்

செங்குட்டுவன் என்றும்.

இளமுருகன், இளவழகன், இளஞ் செழியன், இளவெயினி, இராவணன் (இரா. வண்ணன் - கருப்பு நிறத்தான்) என்றும் கண்ணகி காவற் பெண்டு காக்கை பாடினியார் ஒக்கூர் மாசாத் தியார் வெண்ணிக்குயத்தியார் என்றும், கீரன் இளங்கீரன் நச்சினார்க்கினியன் மாறன் பொறையன் ஒரே ருழவன் பிசிராந்தை என்றும், பாசி ஓரி ஆய் அதியமான்

கோச்செங்கணான் கோவூர் கிழான் கரிகாலன் என்றும்,

மாவளவன் மலையமான் மதியழகன் மணிமொழியன் மணக்குடவன் என்றெல்லாம் இனிய அழகிய தூய தண்தமிழ்ப் பெயர் வாய்ந்திருந்த தமிழர்.

ஆரியருடைய மயக்குரையால் ஏமாந்து, அவர்தம் மொழிவழிச் சென்று, அவர் இசைத்ததை இன சத்துத் தம் பெயரைச் சடாசூடி ரரூபன் என்றும்,
சஹஸ்ரநாமம் என்றும்,

ஸ்வயம்பு என்றும்

லஷ்மிகாந்தன் என்றும்

- க.பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


தூக்கமும் சோர்வின்மையும்


சரியான தூக்கமில்லாதவர்கள், சோர்வுடனும், வேலையில் ஆர்வம் இல்லாமலும், அலுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கமுடியும். ஆனால் விஞ்ஞானிகள், சில இரவில் 4 அல்லது 5 மணிநேரமே தூங்குபவர்கள், உடல் நலத்துடனும், சோர்வு இல்லாமலும், எரிச்சல்பட்டு செயல்படாமலும், நம்பிக்கையாளர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் பருமன் இல்லாத மனிதர்களைக் கண்டு ஆய்வு நடத்தினர். இப்படிப்பட்ட மனிதர்கள், தேனீர், காப்பி போன்றவற்றை குடிக்காமலும், ஒரு நாளில் இடை சிறு தூக்கமில்லாமலும், சலைக்காமல் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பதை, அமெரிக்க நாட்டு கலிபோர்னியா விஞ்ஞானிகள், கலிபோர்னியாவிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ளவரிடம் ஆய்வு செய்தனர். டி.என்.ஏ. சோதனையில் இத்தகையவரிடம் அவர்களின் மரபணுவில் சிறுமாற்றம் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இல்லாத வகையில் உள்ளதைக் கண்டனர். இப்படி குறைந்த தூக்கத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர் 100க்கு 1 இருந்து 3 பேராக உள்ளனர். இவர்கள் டி.என்.ஏ. சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மூலம் குறைந்த தூக்கமுள்ளவர்கள் மேலும் சில மணி நேரம் தூங்குவதற்கு, உடல் பாதிப்பு ஏதுமில்லாத மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
- மு.வி. சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...

எங்கே போகிறது பகுஜன்?

15ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 36 பேர்களில் 18 பேர் பார்ப்பனர்களாம்.

கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கியதன் நோக்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான்; இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். அந்த அடிப்படையில்தான் மாயாவதி, உ.பி. முதல்வரும் ஆனார். ஆனால் இப்பொழுது என்னடா என்றால் 50 விழுக்காடு இடங்கள் பார்ப்பனர்களுக்காம்! நாடு எங்கே போகிறது? பதவி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அது இதுதானோ!

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.
(குடிஅரசு, 26.1.1946)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


பாலியல் வன்கொடுமைகள்

அண்மையில் திருமதி சுனிதா அவர்களின் சொற்பொழிவைக் கேட் டேன். நான்கு வயது சிறுமி யைச் சின்னா பின்னப் படுத்திய வன்கலவிக் கொடுமைக்காரன் பற்றிக் கேட்க நேர்ந்தது.

இதே மாதிரி நிகழ்வுகள் தமிழகத் திலும் நடை பெறுவதை அறிந்து துடிக்காத நல்ல நெஞ்சங்களே இல்லை.விடுதலை, உண்மையிலும் இது பற்றிய செய்திகளைப் பார்த்தேன். பல்லாயிரக் கணக்கானோர் வருத்தப் படுவதுடன் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்திருப்பார்கள்.

திராவிடர் கழகம் மக்கள் கழகம். முன்னோடியாகச் சிந்தித்துச் செயல் படும் சமுதாய அமைப்பு. நாம் இந்தக் கொடுமைகளை வேரோடு சாய்க்க பகுத்தறிவுடன் சிந்தித்து, சிந்திக்க வைத்துச் செயல் பட வேண்டும்.

சிறு வயதில் பாலியல் கொ டுமைக்கு ஆனவர்கள் தான் இந்த மாதிரி மனித நேயமற்றக் கொடுமை களைச் செய்பவர்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர். இதில் நெருங்கிய உறவினர்களின் திருட்டுத் தனமான பாலியல் வன்முறைகள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மனக்காயத்தை ஏற்படுத்துவ்தும் அதுவே பிற்காலத்தில் இவர்கள் கொடுமைகள் செய்வதற்கு அடிப்படை என்றும் கருதுகிறார்கள்.

சிறு வயதில் பாதிக்கப்பட்டவர்கள் மனக் கொடுமைகளைப் பேசிக் கொட்ட ஒரு அமைப்பு தேவை.மருத்துவர்கள் என்று இல்லாமல் சமூக நீதி ஆர்வலர்கள் ஆங்காங்கே வாரம் ஒரு முறை சந்திக்கவும் , விரும்பியவர்கள் பெயரைச் சொல்லவும், விரும்பாதவர்கள் பெயரைச் சொல்லாமல் குழப்பத்தை மட்டும் எழுதிக் கொடுத்து அதைப் பற்றி அனைவரும் பேசுவதும் பலன் தரும். மன அமைதிக் குழுக்கள் என்று பொதுவாக இருந்தால் அனைவரும் பங்கேற்க முடியும்.
குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழில் போட்டிகள் வைத்து சிறந்த வற்றை ஒவ்வொரு இதழிலும் போட்டுப் பரிசும் கொடுக்கலாம். திருக்குறள் கதைகள் ,கட்டுரைகள் போட்டிகள் வைத்து ஆங்காங்கே " பெரியார் பிஞ்சு" நிகழ்ச்சிகள் நடத்தினால் பெரியார் பிஞ்சுக்கும் விளம்பரம் கிடைக்கும், செய்திகளும் போய்ச் சேரும்ஆங்கே குழந்தைகள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதையும் சொல்லிக் காட்டலாம்.

இங்கு அமெரிக்காவிலே பல நகரங்களில், தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளிப்பதில் குழந்தைகளின் பங்கேற்பு பெரிதும் வளர்ந்துள்ளது.

இதைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றால் நல்லது. நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் போலத் திருக்குறள் கதை நூல்கள் பல வரவேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் படியான சிறு நூல்கள் நல்ல பலன் தரும். சிறந்த நூல்களுக்குப் பரி சளிப்போம்.

என்னை இந்த அளவிற்குச் சமுதாயப் பணிகளில் ஈடு படத் தூண்டிய பெரியார் அய்யாவின் எழுத்துக்களுக்கும், அயராத உழைப் பால் அனைவரையும், முக்கியமாக என்னுடைய சிந்தனை செயல்பாடு களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும், தங் களையே அர்ப்பணித்துக் களப்பணி செய்யும் கருப்பு மெழுகுவர்த்தி களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெரியார் மகளிர் அணியின் சாதனைகளுக்குத் தலை வணங்கு கின்றேன். கோவை மாநாட்டின் பலன் பலருக்குக் கிடைக்கட்டும்.

- சரோ இளங்கோவன்
அமெரிக்கா