Search This Blog

10.1.13

மடம் அல்லவா! ஹி.... ஹி... ஹி... நன்னா மாட்டினுட்டாள்


தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல என்று சொல்லி விட்டாராம் - விட்டேனா பார் அத்ரிபாட்சா கொழுக் கட்டை! என்று ஒரு வீராதி வீரர் புறப்பட அதனை ஜூனியர் பார்ப்பன விகடன் இரண்டு பக்கம் தாராளமாக இடம் ஒதுக்கிக் கொடுத்து சலாம் வரிசை ஆடச் செய்துள்ளது.

சங்கரமடம் என்றால் சாதாரணமா? அடுத் தடுத்து சங்கராச்சாரியார்கள் எப்படியெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தெரியுமா? என்று கேள்வி மேல் கேள்வி போட்டு மூச்சு முட்டப் பேசி இருக்கிறார் அந்த மடப்பக்தர். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி  தமக்குச் சீடராக ஜெயேந் திரசரஸ்வதியை எப்படித் தேர்வு செய்தாராம்?

இந்தியாவில் உள்ள எல்லாப் பாட சாலைகளி லும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட பரீட்சை யில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தவர்தான் ஜெயேந்திரர்.

வேதம், வேதாந்தம், இதிகாசம், புராணம், தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ் கிருதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி சன்னியாசி யோகம் இருக்கிறதா என்று ஜாதகமும் பார்ப்பார்கள் - அதற்குப் பிறகுதான் மடத் தில் பட்டம் சூட்டப்படும் என்று அப்படியே பொரிந்து தள்ளியுள்ளார் காஞ்சி மடப் பக்தர். அதெல்லாம் இருக்கட்டும்; அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட ஜெயேந்திரர் கதை  ஏன் கூவத்தையும் குப்புறத் தள்ளி நாற்ற மெடுப்பானேன்?

பெரியவாளின் செலக் ஷன் சோடை போனது ஏன்? ஜாதகம் எல்லாம் பார்த்துத்தானே செலக்ட் பண்ணினார்; இரவோடு இரவாகத் தண்டத்தை விட்டு விட்டு மடத்திலி ருந்து கம்பியை நீட்டியது ஏன்? ஏன்?? ஏன்???
எப்ப தண்டத்தை விட்டு விட்டுப் போனாளோ அந்தக் கணம் முதல் மடத்துக்கும், ஜெயேந்திரருக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று மூத்த சங்கராச் சாரியார் சொன்னாளோ, இல்லையோ? எப்படி மறுபடியும் ஜெயேந்திரர் மடத்தில் வந்து  ஒட்டினுட் டார்?
அதோடு நின்னாலும் ஏதோ தோஷம் கழிச் சிட்டான்னு சமாதானம் சொல்லிக் கலாம்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலை யறாளே....
குற்றமற்றவா என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல் லும் வரையிலாவது மடத்திலிருந்து சஸ்பென்டு செய்திருக்க வேண்டாமோ!

அதற்கு அடுத்த பாலப் பெரியவாள் தான் லேசுப் பட்டவரா? அவரும் ஜெயி லுக்கன்னா போய்ட்டு வந்துட்டா?

எந்த சாஸ்திரத்தில் இப்படி தப்புப் பண்ணினவா எல்லாம் சங்கராச்சாரியாரா இருக்கலாமுன்னு இருக்கு..

ஹி.... ஹி... ஹி... நன்னா மாட்டினுட்டாள்.

---------------   மயிலாடன் அவர்கள் 10-1-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...


தெற்கு ரயில்வேயின் கவனத்திற்கு...


திருச்செந்தூர் - சென்னை - இடையே இயங்கும் செந்தூர் எக்ஸ்பிரஸ் என்கின்ற தொடர் வண்டி, தினசரி இயங்கத் தொடங்கியபிறகு சென்னை யிலிருந்து திருச்செந்தூர் செல்கின்ற தொடர் வண்டி காலை 8 மணிக்கு திருச்செந்தூரை அடைந்ததும் பயணி களை இறக்கி விட்டு விட்டு காலி வண்டித் தொடர் திருநெல்வேலி நிலையத்துக்குச் செல்லும். அங்கே அந்தவண்டியை சுத்தம் செய்து, தேவை யான தண்ணீரை நிரப்பி இரவு ஏழு மணிக்கு அதை திருச் செந்தூர் நிலையத்துக்குக் கொண்டு வருவார்கள்.

ஆனால், தற்பொழுது நிலைமை மாறி விட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் காலை 8 மணிக்கு திருச்செந்தூரை அடைந்தபிறகு அங்கேயே நிறுத்தப்பட்டு விடுகின்றது. இது வரவேற்கத் தக்க ஏற்பாடுதான். எரிபொருள் சேமிப்பு போன்ற நலன்கள் ரயில்வேக்கு கிடைக்கின்றன. ஆனால், இங்கே சிக்கல் என்ன தெரியுமா?

பல பெட்டிகளில் - குறிப்பாக பெண் கள் பெட்டியில் தண்ணீரே இருப்ப தில்லை. கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு விட்டது. பெண்கள் பெட்டிகள் தொடர்ந்து தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டதும், இனி இந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்யக் கூடாது; திருநெல்வேலி சென்று நெல்லை எக்ஸ்பிரசில் போக வேண்டி யதுதான் என்று திருச்செந்தூர், காயல் பட்டினம், குரும்பூர், நாசரேத், ஸ்ரீவை குண்டம் போன்ற நிலையங்களிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்து கின்ற பெண்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.

இந்தச் சமயத்தில் திராவிடர் கழகம் இதில் தலையிட்டது. நிலைமையை மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் கோட்ட மேலாளரும் மக்களும் குறை தீர்க்கும் அலுவலருமான அஜித்குமார் அவர் களின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தது. கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் விரைந்து செயல்பட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் தண்ணீர் இல்லாத நிலை இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார். அவருக்கு எமது நன்றி!

ஆனால், புதிய சிக்கல் ஒன்று தற் போது தலை தூக்கிவிட்டது. திருச்செந் தூர் - திருநெல்வேலி இடையே இயங் குகின்ற பயணிகள் ரயிலில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஏன் இந்த நிலை?

திருநெல்வேலியிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்கின்ற ரயில்கள் அதிகரித்து விட்டதும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதும் இதற்குக் காரணம் எனலாம். இதற்குத் தீர்வு காண முடியுமா என்று யோசித்த பொழுது திருச்செந்தூரிலேயே அதற் கான வசதி இருப்பது தெரிய வந்தது.
திருச்செந்தூரில் 90,000 லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இருக்கின் றது. தண்ணீரும் தாராளமாக இருக்

கின்றது. திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர் வண்டிகளில் தண்ணீரை ஏற்றுவதற்கு தேவையான குழாய் அமைப்புகளை உருவாக்கி விட் டால், திருச்செந்தூர் நிலையத்திலிருந்து புறப்படுகின்ற அனைத்து வண்டிகளுக் கும் தேவையான தண்ணீரை ஏற்ற முடியும். மேலும், தொடர் வண்டிகளிலுள்ள கழிப்பறைகளையும் இங்கேயே சுத்தம் செய்து விடலாம்.

தெற்கு ரயில்வே இதை கவனத்தில் கொண்டு உடனடியாக செயல்பட்டு, திருச்செந்தூர் நிலையத்தில் மேற்படி வசதியைச் செய்துதர முன்வர வேண்டும்.

இன்னும் ஒரு முக்கியமான செய் தியை தெற்கு ரயில்வேயின் கவனத் துக்குக் கொண்டு வருகின்றோம். திருச்செந்தூர் ஒரு சுற்றுலா இடமாக மாறி வருவது உண்மை. பல ஆயிரம் மக்கள் இங்கே தினமும் வந்து செல் கின்றனர். இவர்களில் 80 விழுக்காடு பேர் தொடர் வண்டிகளையே பயன்படுத்துகின் றனர். இவ்வாறு வருகின்றவர்களில் முதியவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். ஆனால் முதியவர்கள் படும்பாடு பரிதாபமாக உள்ளது. ஏன் தெரியுமா?

தற்பொழுது முதல் நடைமேடையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி காலை 8 மணி முதல் இரவு 7.45 மணி வரை நிறுத்தப்பட்டு விடுகின்றது. அதனால் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் திருச்செந்தூருக்கு வருகின்ற - திருச்செந்தூரிலிருந்து புறப்படுகின்ற பயணிகள் தொடர் வண்டிகள் 2 மற்றும் 3 ஆவது நடைமேடைகளையே பயன்படுத்து கின்றன. இதனால் படியேறி இறங்கி முதல் நடைமேடைக்கு வர முதியவர்கள் சிரமப்படுகின்றனர். நடை மேடையின் இறுதியிலுள்ள சாய்தளம் வழியாக நடந்து முதலாவது நடை மேடைக்கு வருவதென் றால், இங்கே ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். முதியவர்களால் இது முடியாத காரியம். எனவே, தெற்கு ரயில்வே இதற்குத் தீர்வு காண வேண்டும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் என்கின்ற தொடர்வண்டியை நிறுத்த நான்காவது நடைமேடை வசதியை உடனே தெற்கு ரயில்வே உருவாக்க வேண்டும். அவ் வாறு செய்தால் முதல் நடைமேடையில் வரு கின்ற - புறப்பட்டுச் செல்கின்ற வண்டி களை நிறுத்தி, பயணிகளுக்கு பயன்படும் படிச் செய்யலாம்.

இந்தத் தேவையும் திருச்செந் தூரைப் பொறுத்த வரையில் அவசர - அவசியத் தேவையாகும். இதையும் உடனடியாக நிறை வேற்ற வேண்டியது தெற்கு ரயில்வேயின் முதன்மையான கடமையாகும்.

- அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...


விலைவாசி உயர்வு


மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு விலைவாசி உயர்வுக்கான பட்டத்தை வானத்தில் பறக்க விட்டுக் கொண் டுள்ளன.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலை என்று அன்றாடம் பயன்படுத்தப்படும் இன்றியமையாத பொருள்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தி, நடுத்தர மக்கள் உட்பட பெருஞ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திடீர்த் தாக்குதல் போல மக்களின் குரல் வளையை நெரித்தது. எதிர்க்கட்சிகள், பொது மக்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று அடம் பிடித்தது. இதுவரை அந்த வலியிலிருந்து மக்கள் மீண்டார்கள் இல்லை.

மாநில அரசு இப்படியென்றால் மத்திய அரசு தம் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?

பெட்ரோல், டீசல் என்பது அடிப்படையானது. விலைவாசி என்பது இந்த மூக்கணாங் கயிற்றைச் சுழற்றுவதைப் பொறுத்ததுதான்.

எண்ணெய் நிறுவனங்கள் இப்பொருள்களின் விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு விட்டது.

நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஏறிய விலை வாசியும், ஏறிய வயதும் இறங்காது என்பதுதான் அந்தப் பழமொழி.

நேற்று வந்த தகவல்படி ஒரு லிட்டர் டீசல் விலை மாதந்தோறும் ஒன்றரை ரூபாய் அதிகரிக்குமாம். அதுபோல மண்ணெண்ணெய் மாதந்தோறும் லிட்டருக்கு 35 காசுகள் வீதம் உயர்த்தப்படுமாம்.

மற்றொரு அவசியமான பொருள் சமையல் எரிவாயு. அது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.130 உயர்த்தப்படு மாம். மான்ய விலை சிலிண்டர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஆறுதான் அளிக்கப்படுமாம்.

போகிற போக்கைப் பார்த்தால் நகர்ப்புறத்து மக்கள் கூட விராட்டி, விறகுகளைத் தேடிக் கொண்டு தான் போக வேண்டும் போல் தோன்றுகிறது.

மாதம் ஒன்றுக்கு ஒரு சிலிண்டர் என்று வைத்துக் கொண்டால்கூட ஆறு சிலிண்டர் ஆறு மாதத்தோடு முடிந்து விடும். மீதி 6 சிலிண்டர்கள் மான்யமின்றி என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்?

விலைவாசிகள் உயரும் அளவுக்கு வருமானம் உயர வழியில்லையே. அரசு ஊழியர்களுக்காவது விலைவாசி உயர்வைக் கணக்கிட்டு சம்பள உயர்வு கிடைக்கிறது.

அரசு அல்லாத நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களில் கூலி, வேலை செய்வோர் வருமானம் விலைவாசி உயரும் அளவுக்கு ஈடுகட்டி அளிக்கப் படுவதில்லையே!

இன்று ஓர் அபாய அறிவிப்பு - ரயில் கட்டணம் உயர்த்தப்படுமாம். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனைமீது விழுந்த கதையாக அல்லவா இருக்கிறது!

ஏற்கெனவே விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரம், பால், பேருந்துக் கட்டணம், ரயில் கட்டணம், சமையல் எரிவாயு விலை என்று விலைவாசி இறக்கையைக் கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்தால் மக்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்துப் புரள வேண்டியதுதான்.

எந்தப் புத்திசாலி அரசாங்கம் பொதுத் தேர்தலை தலைக்குமேல் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், வெகு மக்களைப் பாதிக்கச் செய்யக் கூடிய அத்தியாவசிய பொருள்களின் விலைவாசியை ஏற்றக் கூடிய காரியத்தில் ஈடுபடுமா?

தேர்தல் வரும் ஆண்டின் நிதி நிலை அறிக்கை கூட (க்ஷரனதநவ) சற்று வித்தியாசமாகத்தானே இருக்கும். ஆனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எல்லாம் தலைகீழ்தான்!

மெத்த படித்த பொருளாதார மேதைகளின் கையில் அதிகாரம் இருந்தால் இப்படித்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் போக்கை அரசியல் இலாபகரமாக மாற்றப் போவது மதவாத சக்திகள்தான். வரி உயர்வு போன்ற விடயங்களில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்சம் கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கூடக் கேட்காதது - கூட்டணித் தர்மத்துக்கேகூட எதிரானது அல்லவா!

கூட்டணி ஆட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால், தனித்த பெரும்பான்மை ஆட்சியாக வந்தால் நாடு தாங்கவே தாங்காது என்று மக்கள் நினைக்க மாட்டார்களா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் (தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ரயில்வே கட்டணத்தை எதிர்த்துள்ளார்) உரத்த முறையில் தங்களின் குரலை உயர்த்தட்டும்!

தமிழ் ஓவியா said...


மற்ற மக்கள்...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர் கள்தான். இதை அவர்கள் பின்பற்று கிற கலாச்சாரப்படிக் கூறுகின்றோம். (விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி


பிற இதழிலிருந்து

பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி

எல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.

அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பாரதிதாசன் எழுதினார்.

குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம் என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது.

கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்து கொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது

மிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம் சேரன்மாதேவி, காஞ்சிபுரம் மாவட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.

இவை அனைத்தையும் ஒரு சேரப் படித்தால் உணர முடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந் திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை!) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன!

- புத்தகன்


நன்றி : “ஜூனியர் விகடன் 9.1.2013

தமிழ் ஓவியா said...


வீதிக்கு வாருங்கள் வீராங்கனைகளே!


பெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவியைத் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே!

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே!

காஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே!

மகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே! (9.3.1998).

விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.

ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே! இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.

பிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்!) உட்கார வைத்துப் பேசவில்லையா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.

ஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா?

அந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா?

அதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா? (தி இந்து 12.4.2005 பக்கம் 11)

சுதர்சனையடுத்து ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீட்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்!

இந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே!

நீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே!
அக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது!

ஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ!

கருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!! வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள்! கூறுங்கள்!! (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)

தமிழ் ஓவியா said...


முழக்கங்கள்!
சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?

(பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கென்று கொச்சைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!) (12.1.2013)

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வாழ்க வாழ்க வாழ்கவே!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

4. வெல்க வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

5. வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பெண்ணுரிமைப் புரட்சி
பெண்ணுரிமைப் புரட்சி
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்

6. பெண்கள் என்றால் பேதைகளா?
ஆண்கள் கண்ணில்
ஆண்கள் கண்ணில்
போதைகளா, போதைகளா?

7. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
வீட்டு வேலைக்கே
வீட்டு வேலைக்கே
பெண்கள் லாயக்கென்று பெண்கள் லாயக்கென்று
கொச்சைப்படுத்தும் கொச்சைப்படுத்தும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோகன் பகவத்தை
மோகன் பகவத்தை
கண்டிக்கிறோம்
கண்டிக்கிறோம்!

8. வேலைக்காரியா -
வேலைக்காரியா?
கூலிப் பெறாத
கூலிப் பெறாத
வேலைக்காரியா-
வேலைக்காரியா?
பெண்கள் வேலைக்காரியா-
வேலைக்காரியா?

9. சமையல்காரியா -
சமையல்காரியா?
சம்பளம் இல்லாத
சம்பளம் இல்லாத
சமையல்காரியா?
சமையல்காரியா?
பெண்கள் சமையல்காரியா-
சமையல்காரியா?

10. ஒழிக ஒழிக ஒழிகவே!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்
ஒழிக, ஒழிக, ஒழிகவே!

11. கொளுத்துவோம், கொளுத்துவோம்!
மனுநீதியை மனுநீதியை
கொளுத்துவோம், கொளுத்துவோம்!
பேயென்று பேயென்று
பெண்களை பெண்களை
சாற்றுகின்ற சாற்றுகின்ற
சாத்திரங்களை சாத்திரங்களை
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!
கொள்கைத் தீயால், கொள்கைத் தீயால்
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!

12. வேண்டும் வேண்டும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
பெண்களுக்கு பெண்களுக்கு
50 விழுக்காடு, 50 விழுக்காடு
வேண்டும், வேண்டும்!

13. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே
மதத்தின் பேராலே, மதத்தின் பேராலே
சாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே
போட்டிடும் தடைகளை
போட்டிடும் தடைகளை, பூட்டிடும் விலங்குகளை, பூட்டிடும் விலங்குகளை
உடைப்போம், உடைப்போம்
உறுதியாய் உடைப்போம்-
உறுதியாய் உடைப்போம்!

14. தடை செய், தடை செய்!
விளம்பரம் என்ற பேராலே
விளம்பரம் என்ற பேராலே
பெண்கள் உடலை, பெண்கள் உடலை
வணிகப்படுத்தும், வணிகப்படுத்தும்
விளம்பரங்களை, விளம்பரங்களை
தடை செய்! தடை செய்!!

15. கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
இந்துத்துவா வாதிகளை
இந்துத்துவா வாதிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

16. வேண்டும் வேண்டும்
துப்பாக்கி வேண்டும்
துப்பாக்கி வேண்டும்

17. மத்திய அரசே, மாநில அரசே
அனுமதி கொடு, அனுமதி கொடு!
துப்பாக்கிக்கு அனுமதி கொடு!

18. பயிற்சி கொடு, பயிற்சி கொடு
பள்ளிகளில் பள்ளிகளில்
பெண்களுக்கு, பெண்களுக்கு
பயிற்சி கொடு, பயிற்சி கொடு!
கராத்தே பயிற்சி கொடு -
கராத்தே பயிற்சி கொடு!

19. வாழ்க, வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. வெடிக்கட்டும், வெடிக்கட்டும்
பெண்கள் புரட்சி, பெண்கள் புரட்சி!
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்!

- திராவிடர் கழக மகளிரணி -மகளிர் பாசறை

தமிழ் ஓவியா said...

அடிக்கு மேல் அடி! மக்கள் தாங்குவார்களா? 20ரூ ரயில் கட்டணமும் உயர்கிறது


புதுடில்லி, ஜன.10- வரும் 21ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர் கிறது. ஏற்கெனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள் மேலும் திணறக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நேற்று திடீ ரென்று ரயில் கட்டணத்தை உயர்த்தியது. ரயில் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பை அந்தத் துறை அமைச் சர் பவன்குமார் பன்சால் நேற்று (9.1.2013) டில்லியில் வெளியிட்டார்.

2-ஆம் வகுப்பு கட்டணம், ஏ.சி. வகுப்பு கட்டணம், புறநகர் ரயில் கட்டணம் போன்றவை உயர்த்தப் பட்டு உள்ளன. ஏறத்தாழ 20 சதவீதம் அளவுக்கு ரயில் கட்டணம் உயர்ந்து இருக்கிறது. விரைவு வண்டி

புறநகர் ரயிலில் (மின்சார ரயில்) சாதாரண 2-ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப் பட்டு உள்ளது.

புறநகர் அல்லாத பாசஞ்சர் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 காசு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

2-ஆம் வகுப்பு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் கிலோ மீட்டருக்கு 6 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. ட ஏ.சி. சேர் கார் மற்றும் ஏ.சி. மூன்று அடுக்கு வகுப்புக்கான கட்ட ணம் கிலோ மீட்டருக்கு 10 காசு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 காசு உயர்ந்து இருக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் முதல் வகுப்பு கட் டணம் 10 காசு உயர்த்தப்பட்டது. அந்த கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தமிழ் ஓவியா said...

ஏ.சி. இரண்டு அடுக்கு

ஏ.சி. இரண்டு அடுக்கு வகுப்புக் கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 6 காசு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்புக்கான கட்டணம் ஏற்கனவே கடந்த ரயில்வே பட்ஜெட்டில் கிலோ மீட்டருக்கு 15 காசு உயர்த்தப்பட்டது.

ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 காசு உயர்ந்து இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ரயில்வே பட் ஜெட்டில் ஏ.சி.முதல் வகுப்பு மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கான கட்டணம் 30 காசு உயர்த்தப்பட்டது.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

கட்டண உயர்வு எவ்வளவு?

இந்த கட்டண உயர்வின் மூலம் 2-ஆம் வகுப்பு மின்சார ரயில் கட் டணம் 35 கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கும். அதாவது 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயரும். பாசஞ்சர் ரயில் கட்டணம் 135 கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் கூடும்.

தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு கட்டணம் 770 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் கூடும். அதாவது 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாக அதிகரிக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் 387 கிலோ மீட்டருக்கு 40 ரூபாய் கூடும். அதாவது 345 ரூபாயில் இருந்து 385 ரூபாயாக அதிகரிக்கும்.

ஏ.சி. 3 அடுக்கு வகுப்புக்கான கட்டணம் 717 கிலோ மீட்டருக்கு 76 ரூபாய் அதிகரிக்கும். அதாவது 724 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கும்.
ஏ.சி. 2 அடுக்கு வகுப்புக்கான கட் டணம் 721 கிலோ மீட்டருக்கு 48 ரூபாயும், ஏ.சி. முதல் வகுப்பு கட் டணம் 547 கிலோ மீட்டருக்கு 56 ரூபாயும் அதிகரிக்கும். சென்னையில் இருந்து நெல் லைக்கு தூங்கும் வசதி கொண்ட 2-ஆம் வகுப்பு கட்டணம் தற்போது ரூ.282 ஆகும். இப்போது புதிதாக கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் இனி இந்த கட்டணம் 39 ரூபாய் அதிகரிக்கும். அதாவது சென்னையில் இருந்து நெல்லைக்கு இனி கட்டணம் 321 ரூபாயாக இருக்கும்.

21-ந்தேதி முதல்

நேற்று அறிவிக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு வருகிற 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகள் கட்டணம் அதிகரிக்கப் பட்டு உள்ள போதிலும், பிளாட் பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப் படவில்லை. ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பேட்டியின் போது ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறிய அவர், அடுத்த மாதம் (பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட இருக்கும் ரயில்வே கட்டணத்தில் பயணிகள் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு எதுவும் இருக்காது என் றும் தெரிவித்தார்.

வருவாய் எவ்வளவு?

இந்த கட்டண உயர்வின் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.6,600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், இந்த நிதி ஆண்டில் ஜனவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் பவன்குமார் பன்சால் கூறினார்.

பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளை செய்து கொடுப்ப தற்காக வருவாயை பெருக்கும் முயற்சி களை ரயில்வே இலாகா மேற் கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.

சரக்கு கட்டணம் உயருமா?

ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுமா? என்று கேட்டதற்கு; அதுபற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்று பதில் அளித்தார்.

தமிழ் ஓவியா said...


வியாழ பகவான்?


தொலைநோக்கியின் வழியாக வியாழனில் நான்கு துணைக் கோள் களை இன்றுதான் கண்டு பிடித்து அறிவித்தார் விஞ்ஞானி கலிலியோ (1610) ஆனால் நம் நாட்டு ஜோதிட சிகாமணி என்ன சொல்கிறார்கள்? வியாழன் - குரு - சுபக் கிரகமாம். பூமியிலிருந்து 39 கோடியே 3 லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் அந்தக் கிர கத்தைப் பற்றி இந்த ஜோதிட சிகாமணி களுக்கு என்ன தெரியும்? வியாழனின் வெப்பம் எவ்வளவு தெரியுமா? 54 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட். 1994இல் ஷு மேக்கர் என்ற வால் நட்சத்திரம் வியா ழனில் மோதிட, அதன் விளைவாக 20 லட்சம் டன் தண்ணீரைக் கெட்டியதே -அதுபற்றி எந்த ஜோதிட ராவது முன்கூட்டியே சொன்னதுண்டா?

தமிழ் ஓவியா said...


இது உண்மையா?


சிறீரங்கத்தில் மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் கொடுமை நடப்பது உண்மையா? அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கக் காவல் துறையிடம் அனுமதி பெற்று, அப்போராட்டத்தை நடத்த இருந்த காலகட்டத்தில் அந்த அனுமதியைக் காவல்துறை ரத்து செய்தது என்பதும் உண்மையா? முதல் அமைச்சர் தொகுதி இது - முதல் அமைச்சர் கவனிப்பாராக!

தமிழ் ஓவியா said...


உயர்நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழி:


மத்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்
தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜன.10- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகப் பயன்படுத்திட மத்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டு கொண்டுள்ளார். (9.1.2013) முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

உடன்பிறப்பே,

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகப் பயன் படுத்த அங்கீகாரம் வழங்கும்படி தமிழக ஆளுநரிடம் வழக்கறிஞர்கள் எல்லாம் சென்று மனு கொடுத்துள்ளார்கள். தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோது, 22-11-2006 அன்று என்னைச் சந்தித்த பத்திரி கையாளர்களிடம், சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும், இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 348ல் உயர் நீதிமன் றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக் கைகளும் நடத்தப்பட வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.


தமிழ் ஓவியா said...

தமிழக அரசின் முடிவு

அதன்படி ஆங்கில மொழியே சென் னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உபயோ கப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக் கைகள் அனைத்தும் நடைபெற வேண்டு மென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நட வடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள் ளது. மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கை களிலும் வழக்கு மொழியாக தாய்மொழி தமிழை அறிமுகப் படுத்திட தமிழக அரசு முடிவெடுத் துள்ளது என்று அறிவித்தேன். இந்த என் அறிவிப்பு தமிழக அரசின் செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர் கள் சங்கமும் வரவேற்புத் தெரிவித்தது. உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இந்த முடிவினை ஆத ரித்ததோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறைகளையும் அவரே தெரிவித்திருந்தார். நான் அதற்கு நன்றி தெரிவித் துக் கடிதமும் அவருக்கு அப்போதே எழுதினேன்.


கலைஞரை விட்டால்...

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று, உத்திரப் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது. அந்த அறிவிப்பு வந்தவுடன் அன்றைய டாக்டர் ராமதாஸ் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைப்பாட்டை கலைஞரை விட்டால் வேறு யார் நிறைவேற்ற முடியும்? அதன் தொடக்கத்தை அவர் ஆரம்பித்துவிட்டார் என்று அறிக்கை விடுத்தார்.

உயர்நீதிமன்றத்திலே உள்ள வழக் கறிஞர் களின் தமிழ் மன்றத்தின் சார்பில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இதே பிரச்சினைக்காக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் அப்போது அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்போது என்ன காரணம் சொன்னார்கள் என்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் ஆணை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டும் தான் உள்ளது, எனவே அவர் ஆணை பிறப்பிக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் வாதாடிப் பயனில்லை என்று கூறினார்கள். அப்போது ஆட்சியிலே அ.தி.மு.க. இருந்தது எனினும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

சட்டசபையில் முன்மொழிவு

22-11-2006 அன்று நான் செய்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 6-12-2006 அன்று உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்கு மொழி என்ற அரசினர் தீர்மானத் தை நானே தமிழகச் சட்டப்பேரவையில் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானம், நிகழ்ச்சி நிரலில் கடைசியாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனால் அன்றைய தினம் பிற்பகலில் பிரதான எதிர்க்கட்சிக்காரர் களான அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப் பினர்கள் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். சிலை திறக்கின்ற விழாவிற்கு டெல் லிக்குத் தனி விமானத்தில், செல்லவிருந் ததால், முற்பகலிலேயே தமிழ் மொழி பற்றிய முக்கியமான தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், அவர்களும் அவையிலே இருந்து இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று நானும் அவை முன்னவராக இருந்த பேராசிரியரும் கலந்து பேசி, அதற் காகவே நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து, தீர்மானத்தை முன்னதாகவே எடுத்து விவாதித்தோம்.

நாங்கள் அவ்வாறு செயல்பட்ட போதி லும், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்று கின்ற நேரத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று கருதியோ என்னவோ, அ.தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சி யாக அப்போது இருந்த ம.தி.மு.க.வும் அவையிலேயும் இல்லை, விவாதத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும், அந்த முக்கியமான தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது, காங் கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கோ.க. மணியும், தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தை கள் சார்பில் கு.செல்வமும் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ் ஓவியா said...

தீர்மான வாசகம்

கழக ஆட்சியில் 6-12-2006 அன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புக் குரிய அந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் வருமாறு :-
சென்னை உயர்நீதிமன்ற நடவடிக் கைகள் அனைத்திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்துவருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 (1) ஆவது பிரிவின்படி உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தி லும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருந்திட வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப்பிரிவு 7இன்படி, உயர்நீதிமன்ற நடவடிக் கைகள் அனைத் தையும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கொள் கையின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டப்பிரிவு 348 உட் பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7ன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப் பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக் கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழி யாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக் கப்பட வேண்டிய இம்முடிவினை செயற்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர் களைக் கேட்டுக் கொள்வ தென இந்தச் சட்டமன்றப் பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

குடியரசுத் தலைவர்

இந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசுவதற்கு முன்பு அப்போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் என்னை வாழ்த்திப் பேசினார். இந்த முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் தானும் இந்த அவையிலே இருந்ததாக, தன் சந்ததியினர் பேசுவார்கள் என்றெல்லாம் பெருமைப் பட்டுக் கொண்டார். நாடாளுமன்ற வளா கத்தில் தம்பி முரசொலிமாறனின் திரு வுருவச் சிலை 8-12-2006 அன்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்காகச் சென்றி ருந்த நான், 6ஆம் தேதியன்று நிறைவேற் றப்பட்ட உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி எனும் அரசின் தீர்மான நகலை, தமிழக ஆளுநர் அவர்களின் பரிந்துரை யுடன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கியதோடு; அந்தத் தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை முறைக்குக் கொண்டு வர அனுமதி வழங் கும்படி கேட்டுக் கொண்டேன். குடியரசுத் தலைவர் அவர்களும் அதனைக் கவனிப்ப தாக உறுதி அளித்தார்கள். ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை 27-2-2007 தேதிய கடிதத்தில், உச்ச நீதிமன்றத் துடன் கலந்தாலோ சித்து இந்தப் பிரச் சினை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர் நீதி மன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத் துவது உகந்ததாக இருக்காது என்று இந்தியத் தலைமை நீதிபதி கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 11-3-2007 அன்று நான் இதுபற்றி விளக்கமாக பிர தமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், உள் துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல், சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ் ஆகியோருக்கும் கடிதம் எழுதி னேன். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான், பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழியான இந்தி மொழி பயன் படுத்தப்பட்டு வருகிற முன் மாதிரிகளை யெல்லாம் சுட்டிக் காட்டிவிட்டு, இறுதி யாக தமிழக மக்களின் நீண்ட கால விருப்பத் திற்கு வடிவம் கொடுக்க அவசர நடவடிக் கைகளை எடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரை வாகப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.

மத்திய சட்டத்துறை அமைச்சர்
11ஆம் தேதி நான் எழுதிய கடிதத் திற்கு, அடுத்த நாளான 12ஆம் தேதியே மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ் அவர்கள் எழுதிய பதிலில் நான் தங்கள் கடிதத்தைக் கவன மாகப் படித்து, இந்த விஷயத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கருத்துக்களை மனதில் கொண்டு இந்த விஷயத்தைப் புதிதாகப் பரிசீலித்து, கூடிய விரைவில் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறு மாறு என்னுடைய துறையை நான் கேட் டுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித் திருந்தார்.

தமிழ் ஓவியா said...

12-3-2007 அன்று மத்திய அமைச் சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.இரா சா, எஸ்.ரகுபதி, க.வேங்கடபதி, சுப்பு லட்சுமி ஜெகதீசன், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் மொழி என்பதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரை தமிழக நாடாளு மன்ற உறுப்பி னர்கள் சந்தித்து மனுக் கொடுத்தனர்.

கோவை செம்மொழி மாநாட்டு தீர்மானம்

கழக அரசு இந்தப் பிரச்சினையில் மேற் கொண்டு வந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சி யாக 2010ஆம் ஆண்டு சூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சென்னை உயர்நீதி மன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரையினையும், மாண் பமை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரை யினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே தாமதமின்றி உடனடி யாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று இந்த மாநாடு; மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதே மாநாட்டில், மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும், மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படு மேயானால், முதற்கட்டமாக - செம்மொழியாம் எம் தமிழ்மொழியை மத்திய ஆட்சிமொழியாக ஆக்க வேண்டு மென்று மத்திய அரசை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

இவ்வளவிற்குப் பிறகும், உச்ச நீதி மன்றம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க முடிய வில்லை. இருந் தாலும் தமிழகத்திலே அப்போது தி.மு.கழக அரசு இருந்த காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்திலே பெரும்பாலான வழக்கு களின் விசாரணைகள் எல்லாம் தமிழிலேயே நடைபெற்றன. தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய் இக்பால் அவர்களும் கழக ஆட்சி யிலே இருந்த காலத் தில், 2010ஆம் ஆண்டு, உயர் நீதி மன்றத்தில் தமிழில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஜனவரி 3ஆம் தேதியன்று ஒரு வழக்கறிஞரிடம் தமிழில் வாதம் செய்ய அனுமதி மறுத்ததோடு; தமிழில் வாதம் செய்ய அரசியல் சட்டத்தில் அனு மதி வழங்கப்படவில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதனை எதிர்த்துத்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக்கோரி, வழக்கறிஞர் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் போராட்டம் மிகவும் நியாய மான போராட்டம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய அரசு இந்தப் பிரச்சினை யிலே தலையிட்டு, வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடைமுறையிலே உள்ளதைப்போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழி யாக தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவை யிலே உள்ள சட்டத்திருத்தத்திற்கு அனு மதி பெற்றுத்தர வேண்டும் என்று மீண் டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். (முரசொலி, 10.1.2013)

தமிழ் ஓவியா said...


கணினி வைத்துத் தொழில் செய்யும் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள்


ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும், உண்மைதான். எங்கே? என்றும் பதினாறு வயது வரம் பெற்றானாமே மார்க்கண்டேயன் - அந்தத் திருக்கடையூரில்தான் இந்தத் தொழில் ஓகோவென்று நடைபெறுகிறது.

ஆயுள் நீட்டிப்புக்காக 60 வயது அடைந்த கணவன் - மனைவியர் அங்கு சென்று மணிவிழா கொண்டாடுவர்.

30 ஆண்டு சராசரியாக வாழ்ந்து வந்த இந்தியக் குடிகள் இப்பொழுது சராசரியாக 70 அய் (ஆண்கள் 68; பெண்கள் 71) தாண்டிவிட்டனர். இதற்குக் காரணம் விஞ்ஞான ரீதியான மருத்துவ வளர்ச்சியா? கடவுள் பக்தியா? சக்தியா? சராசரி வயது 30 என்ற காலத்தில் கடவுள் சக்தி எங்கே போச்சு?

எல்லாம் இரட்டைப் புத்திதான்; சரி சங்கதிக்கு வருவோம் - ஒவ்வொரு மணிவிழாவுக்கும் அடிக்கும் கொள்ளை கொஞ்ச நஞ்சமன்று. ஒரு கால பூஜைக்கு ரேட் ரூ.8,000; 64 கலசம் வைத்து இருகால பூஜைக்கு ருத்ராபிஷேகம் வகையறாக்களுக்கு ஒரு லட்சம் ரூபாயாம்.

நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 300 மணிவிழாக்களாம் - கணக்குப் போட்டுப் பாருங்கள்.

அர்ச்சகர்கள் கணினியுடன் கூடிய தனி அலுவலகம் வைத்துத் தொழில் நடத்துகிறார்கள் என்றால் தெரிந்துகொள்ளலாமே! இந்து சமய அறநிலையத் துறை -வருமான வரித்துறை என்ன செய்கின்றன என்று தெரியவில்லை.

ஒரு டெயில் பீஸ்: பாம்பைக் கயிறாக்கி, மலையை மத்தாக்கி திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்த கலசத்திலிருந்து தோன்றிய கடவுளான அமிர்தகடேசுவரர் அங்குக் குடிகொண் டுள்ளானாம்.

16 வயதுடைய மார்க்கண்டேயர் எனும் பக்தனின் உயிருக்கு வலை வீச, எமதர்மன் அங்கு வந்தபோது, அந்தப் பதினாறு வயது பொடியன் கடவுளைக் கட்டிப் பிடித்துக் கொண்டானாம். எமன் பாசக் கயிறை வீசியபோது, அந்தக் கயிறு அமிர்தகடேசுவரரையும் சுற்றி வளைத்ததாம்.

அடப் பயலே, எனக்குமா பாசக் கயிறு? என்று கோபங்கொண்டு சூலத்தினால் எமனைக் குத்தி சம்ஹாரம் செய்தானாம். அத்தோடு நின்றானா அந்த அமிர்தகடேசன்? தன்னிடம் சரணடைந்த அந்தப் பக்தன் மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயது என்று நிரந்தரமாக வாழும் வரமும் கொடுத்தானாம்.

பக்த கே()டிகளுக்கு ஒரு விண்ணப்பம், என்றும் 16 வயது வரம் பெற்றதால், அந்தப் பொடியன் எப்படியும் அங்குதான் சுற்றித் திரிந்து கொண்டிருப்பான். அவனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் பரிசு!

தமிழ் ஓவியா said...

விவேகானந்தர் - 150


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.

பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங் கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடு களிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.

ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.

பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.

வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?

பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக் கப்படும் இடுகாடு - சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.

மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.

விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத் தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அமெரிக்கா சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே - அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!

ஆதி சங்கரர் ஆணவக்காரர் - இதயமில் லாதவர் - புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!

தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.

இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.

மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் - மனிதனுக்கு வேண்டாம்!12-1-2013

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்


இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதை யாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...


சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்


1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...


பெரியாரின் இலட்சியங்கள்! -ஜி.டி.நாயுடு-


பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை.

அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கை களை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன். இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...


தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம்


இ.பி.கோ. 124-ஹ செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள, பொதுவுடமை பிரசாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காக வுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக் கப்பட்டபோது தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் G.W.வெல்ஸ் I.C.S. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-

என் பேரில் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.

2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.1933 தேதி குடிஅரசின் தலையங்கத்தை இப் போது பல தரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.

3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.


தமிழ் ஓவியா said...

4. என்ன காரணத்தைக்கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி யிருக்கிறது. வியாசத்தின் விஷயத் திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.

5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாகாவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளை வதில்லை என்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறை யால் லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லு வதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளவேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.

6. நான் 7, 8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரசாரம் செய்துவருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரசாரத் தின் முக்கிய தத்துவமாகும்.

7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக் காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.

தமிழ் ஓவியா said...

8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரசாரத்திலோ அதற்காக நடைபெறும் குடிஅரசுப் பத்திரிகை யிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை, இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்துவைத்திருக்கும் அறிக்கைகளையும் சுமார் பத்து வருஷத்திய குடிஅரசு பத்திரிகையின் வியாசங்களை யும் சர்க்கார் கவனித்துவந்தும் என்மேல் இத்தயை வழக்கு இதற்குமுன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்கவேண்டுமென்று முயற்சி எடுத்துக்கொண்டிருப் பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர் களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாக வும் உதவிசெய்து தீரவேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத்தப் பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தி யாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில்போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக்கொள்ளக்கூடாது; என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக்கூடாது.

இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாக கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டுவேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கிவிட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமா வதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலமேற்படக் கூடுமாதலால் என்மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்துவிட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்தப் பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து, வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர் களுக்கு வழிகாட்ட எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

- புரட்சி, 21.01.1934

தமிழ் ஓவியா said...

8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரசாரத்திலோ அதற்காக நடைபெறும் குடிஅரசுப் பத்திரிகை யிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை, இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்துவைத்திருக்கும் அறிக்கைகளையும் சுமார் பத்து வருஷத்திய குடிஅரசு பத்திரிகையின் வியாசங்களை யும் சர்க்கார் கவனித்துவந்தும் என்மேல் இத்தயை வழக்கு இதற்குமுன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்கவேண்டுமென்று முயற்சி எடுத்துக்கொண்டிருப் பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர் களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாக வும் உதவிசெய்து தீரவேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத்தப் பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தி யாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில்போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக்கொள்ளக்கூடாது; என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக்கூடாது.

இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாக கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டுவேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கிவிட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமா வதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலமேற்படக் கூடுமாதலால் என்மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்துவிட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்தப் பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து, வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர் களுக்கு வழிகாட்ட எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

- புரட்சி, 21.01.1934

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


- மறைமலையடிகளார்

வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரி வான ஆராய்ச்சி செய்து, திருக் குறளாராய்ச்சி என்று முன்னர் எழு திய முற்பகுதியிலும், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி கார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றை இயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக்கூறி, அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும், ஊழ் வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ், சூழ் வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரமென் னும் பெயரானாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரிய தடி கணீரே யருளுக என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன், என் பது உற்று நோக்கற்பாலது.

சாத்தனார் பாண்டியன் அவைக் களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப்புகுவராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங் கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும், துறவிக்கு வேந்தன் துரும் பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த் துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்குமுரிய தடிகணீரே யருளு கென்றாற்கு என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின் சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனக் கூறினாரென்க என் சொல்லியவாறோவெனின் இச்செய் கின்ற காப்பியம் மூவேந்தர்க்குமுரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே, அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டாரென் பதாயிற்று என ஊரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.

இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட் டுவனின் இளவல் ஒரு நாள் அரச வையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்தகன் வந்து இவரை அடி முதல் முடி வ ரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அதுகேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை, நோக்குவதைக் கண்ட இவர். உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு.

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத்தரைசார் வேந்த ராயினார். இத்தகைய பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, சிலப் பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும்.

அக்காலத்தே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலை யுமாகும். அம்மணி மேக லையில், தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழு வாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.

எனவே, திருவள்ளுவனார் காலம் 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 31ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி மக்கள்


சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டு பிறப்பும்ஆயிற்று.
- விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
- முனைவர் சி. இலக்குவனார்

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


இந்த 60 ஆண்டு சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ் அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண் டைத் தொடங்கி வைத்தார். 1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


தைத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்!


- தமிழ் நம்பி

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஒரு மனதாக வரையறை செய்து வெளியிட்ட வரலாற்று சாசனம்தான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது.

கிருஷ்ணன் - நார தருக்குப் பிறந்ததாகக் கூறும் 60 ஆபாச ஆண்டுகளை அப்புறப் படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே, சித்திரை முதல் நாளில் தொடங் கும் புத்தாண்டு என்பது இந்துத்துவாவாதிகள் தமிழர்கள்மீது நடத் திய திணிப்பே ஆகும்.

திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள் வது; திருவள்ளுவர் காலம் கி.மு.31; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று மறைமலையடிகளார் 18.1.1935இல் உறுதி செய்துள்ளார்.

1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும், 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது.

ஆனால், சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, தமிழக அரசு தொடர்ந்து விடுமுறையும் அளித்து வருகிறது.

தமிழக அரசு அதி காரபூர்வமாக, தை முதல் நாளைத் தமி ழாண்டுத் தொடக்க மாக அறிவித்து, அந் நாளில் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி - பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சென்னை பல்லாவரத்தில் 16.12.2000 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது.

அவ்வண்ணமே, மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று உலகப் பரிந்துரை மாநாட்டினை மலேசியா திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் போன்ற இயக்கங்கள் முகாமையாக இருந்து மேலும் தமிழின உணர்வடைய 15 இயக்கங்களும் சேர்ந்து இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

அய்ந்தாம் முறை யாக அரியணை ஏறி யுள்ள கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டு என அறி வித்தது தமிழை அரியணை ஏற்ற மறுத்தே வந்துள்ளார். 2007ஆம் ஆண்டு விடுமுறை நாள்களை அறிவித்த தமிழக அரசு சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து அந்நாளில் விடுமுறையும் அளித் துள்ளது.

கடந்த 15.12.2006 அன்று மதுரை காம ராசர் பல்கலைக் கழகம், கலைஞருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழில் கையொப்ப மிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் இதன் மூலம் கலை ஞருக்கு உணர்த்து வதுதான் என்ன?

நான் தமிழராக வாழத் தொடங்கி விட்டேன், தமிழக முதல்வராகிய தாங்கள் இனியேனும் தமிழை வாழச் செய்யும் தமிழ ராக, முதல்வராக மாற வேண்டும் என்பதுதான், சரிதானே, தமிழர்களே!

- மறைமலையடிகளார்
யாதும் ஊரே மார்கழி 2036 - சனவரி 2007