Search This Blog

3.4.15

பசு இந்துக்களின் புனிதம் அதனைக் கொல்லலாமா?


பசு இந்துக்களின் புனிதம் அதனைக் கொல்லலாமா? என்று கேள்வி களை எழுப்பும் இந்துத் துவவாதிகள் முன் நாம் கொண்டு வந்து நிறுத் துவது யாரைத் தெரியுமா?


மறைந்த மகா பெரியவர் என்று அக்கிரகாரம் போற்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைத் தான்.


மற்றவர்கள் சொன்னால் அது சாதாரண குரல், அவர் சொன்னால், அதற்குப் பெயர் தெய்வத்தின் குரல் அந்தத் தெய்வத்தின் குரல் என்ன சொல்லு கிறது?


தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப் படியிருந்தாலும் பண்ண வேண்டும்; ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப் புக் கொள்ளவில்லையா? அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை.

பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான   வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப் படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அசுவ மேதத்துக்குக்கூட100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி - யக்ஞம் எனும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட் டுள்ளது)

அவர்களின் ஜெகத் குருவே மட்டை ஒன்று கீற்று இரண்டாக பசுக் களைக் கொல்லுவதில் குற்றமில்லை என்று அடித்துச் சொல்லி விட் டார்.

அவர் படிக்காத சாஸ்திரங்களா? அவருக்கு இல்லாத நம்பிக்கையா - இந்த ராமகோபாலன் வகையறாக்களுக்கு?

பசு புனிதம் அதனால் சாப்பிடக் கூடாது என்கி றார்களே - அதாவது சரியா? பசு புனிதம் என்ப தால்தான் சாப்பிட வேண் டும் என்கிறது அவர் களின் இந்து மத சாத்திரம்.

இதை சமஸ்கிருத மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற அண்ணல்அம்பேத்கர் அவர்களே எடுத்துக் காட்டுகிறார்.

வேத காலத்தில் பசு புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத் தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி-சம்ஹிதை யில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(நூல்: தீண்டப் படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயி னர்? பக்கம் மகாராட்டிர அரசு வெளியீடு 1948)

இதற்குமேலும் பசு புனிதம் புடலங்காய் என்பதெல்லாம் எடுபடுமா?

  --------------- மயிலாடன் அவர்கள் 3-4-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26 comments:

தமிழ் ஓவியா said...

கிறித்தவர்களின் புனித வெள்ளி நாளில்
நீதிபதிகளின் மாநாட்டை நடத்த வேண்டுமா?

தீபாவளியன்று இதுபோல் நடத்துவீர்களா?

சிறுபான்மையினர் மத்தியில் தவறான எண்ணம் ஏற்படும்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மற்றொரு நீதிபதி கடிதம்


புதுடில்லி, ஏப். 3_ உச்சநீதிமன்ற நீதிபதி புனிதவெள்ளி தினத் தன்று மாநாட்டை நடத் துவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். மற்றொரு நீதிபதி இதனால் நீதிபதி களிடையே மதவேறுபாடு வெடிக்கத்துவங்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன், இவர் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல். தத்து அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது:

புனித வெள்ளியன்று மாநாடா?

கிறிஸ்தவர்களின் விழாவான புனிதவெள்ளி யன்று நீதிபதிகளின் மாநாடு ஒன்றை தாங்கள் நடத்தப்போகும் அறிவிப்பு எனக்கு வந்திருக்கிறது, புனித வெள்ளி கிறிஸ்த வர்களின் முக்கிய விழாக் களில் ஒன்றாகும், இந் தியா மட்டுமல்ல, உலகி லுள்ள அனைத்து கிறிஸ் தவர்களும் இந்த நாளை கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்ததாக முக்கியத் துவம் கொடுத்து கொண் டாடுகிறார்கள்.

இந்த நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங் களுக்குச்சென்று வழி படுவர், குடும்பத்தாருடன் இணைந்து விழாக்களை கொண்டாடி மகிழ் வார்கள், நானும் கிறிஸ் தவ மதத்தைச் சேர்ந்த வனாகையால் புனித வெள்ளி எனக்கும் ஒரு முக்கியமான நாளாகும், அன்றைய தினம் எனது குடும்பத்தாருடன் சேர்ந்து விழாவில் கலந்து கொள் வேன், இன்றைய காலக் கட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருக்க இதுபோன்ற விழாக்கள் ஒரு முக்கிய காரணியாக உள்ளன. ஆனால் தாங் கள் புனிதவெள்ளியன்று மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்று குறிப் பிட்டிருந்தார். தீபாவளியன்று நடத்துவீர்களா?

மேலும் அதில் குறிப் பிட்டுள்ளதாவது தீபா வளி, ஹோலி தசரா (நவராத்திரி) சங்கராந்தி போன்ற விழா நாட்களில் எந்த ஒரு அலுவல் நிகழ்ச்சியும் நடக்காத போது, புனிதவெள்ளி யன்று மட்டும் ஏன் மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்தக்கடித்தில் புனித வெள்ளி போன்ற முக் கியமான விழாக்காலங் களில் அலுவல் தொடர் பான மாநாட்டை நடத் துவது நீதிமன்றத்தின் மீதான சிறுபான்மையி னரின் பார்வை தவறாகப் படும், இது போன்ற முக் கியமான மாநாடுகள் புனித வெள்ளிதினம் தான் வைக்க வேண்டும் என்றில்லை.

தலைமை நீதிபதி பதில் கடிதம்

18 மார்ச் அன்று ஜோசப் குரியன் எழுதிய இந்த கடிதத்திற்கு எச்.எல். தத்து பின்வருமாறு பதி லளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: முக்கிய மான அலுவல்கள் சமூ கத்தின் நலன் கருதியே எடுக்கப்படுகின்றன. சமூ கத்தின்நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், மேலும் சமூக நலன் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடையே முக்கிய பணி யில் உள்ளவர்கள் ஈடு கொடுத்துச் செல்ல வேண்டும், என்று பதி லளித்திருந்தார்.

புனிதவெள்ளியன்று நடைபெறும் இந்த மாநாடு நீதிமன்ற அலு வல்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் மத்திய அரசின் கொள்கைசார்ந்த முடிவு குறித்து ஆய்வு செய்யும் மாநாடாகும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். விரைவில் கோடைவிடுமுறை மற்றும் நீதிமன்ற புதிய ஆய்வுக் கொள்கைகள் வகுக்கும் பணிகள் தொடர்ந்து இருக்கும் போது மத்திய அரசு உச்சநீதிமன்றம் விரைவில் கொள்கை சார்ந்த முடிவை நடத்தி முடிக்க அழுத்தம் கொடுத் ததன் காரணமாக புனிதவெள்ளி தினத்தை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு எச்.எல். தத்து ஆளானார் என்று சட்டவல்லுநர்கள் தங்கள் கருத்தைக் கூறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்திலேயே மத சர்ச்சை

உச்சநீதிமன்ற நீதிபதி களின் இடையேகூட மதத் தொடர்பான சர்ச்சைகள் தோன்றி விட்டன. பிஜேபி என்று ஆட்சிக்கு வந் ததோ அன்று முதல் மதப் பிரச்சினைகள் பலவகை களிலும் தலை தூக்கி நிற் கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/99010.html#ixzz3WFvl1Wxa

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர் களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/99000.html#ixzz3WFwHQUUE

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

-குடந்தை கருணா

தந்தி டிவியில், கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே,சில வாசகங்களை பெரியார் சொன்னதாக எடிட் செய்து வெளியிட்டார்; அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொன்னார் என்றெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டா யத்தை உண்டு பண்ணியுள்ளது.

நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டி ருக்கிறது என்றால், எந்த அளவு, அந்த நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சி நடத்திய ரங்கராஜ் பாண்டேயின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டுவிட்டது. பாண்டேவை தயார் செய்த சங் பரி வாரங்களுக்கு சரியான பதிலடி யாகவும் அமைந்து விட்டது.

இன்னொரு தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் வரக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து, தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வெடிகுண்டு வீசிய கலவரக்காரர்களுக்கும்,

தந்தை பெரியார் சொல்லாததை சொன்னதாக திரிபுவாதம் செய்த பாண்டேவின் செய்கையை அதே தந்தி டிவி மூலம், மறுப்பு வாதத்தை வெளியிட செய்த திராவிடர் கழகத்தின் அணுகுமுறைக்கும், உள்ள வேறுபாட்டையும், ஜனநாயக பண்பையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நல்ல வாய்ப்பையும், விளம்பரத்தையும் அளித்த ரங்கராஜ் பாண்டேவிற்கு நன்றி.

பாண்டேவின் முகத்திரையை கிழித்து எறிந்த தந்தி டிவிக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page-2/99006.html#ixzz3WFwhwjWn

தமிழ் ஓவியா said...

மகளிரைக் கொச்சைப்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடந்த போது மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைப்பார்த்து அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத்யாதவ் உங்களுடைய குணநலன்கள் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன் முதல் பல்வேறு பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சரத்யாதவ்மீது மகளிர் உரிமை ஆணையம் வழக்கு தொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜீவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் பெண் உறுப்பினர்களும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி சந்தோஷ் அஹல்வாட் என்ற பாஜக எம்பி பேசும் போது சில நேரங்களில் வாய்தவறி சில வார்த்தைகள் வந்துவிடும், இது மனித இயல்பு; இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே ஊடகங்களின் உதவியால் பெரிதுபடுத்து கின்றன என்று கூறினார். இதே வாதம் சரத்யாதவுக்குப் பொருந்தாதா? மேலும் அன்று சரத்யாதவ் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று பேசிய பாஜக பெண் உறுப்பினர்கள் சோனியா குறித்து கிரிராஜ் சிங் பேசிய விவகாரத்தில் முக்காடிட்டுக்கொண்டு அமைதி காத்துக் கொண்டு வருகின்றனர்.

பெண் உரிமைத்தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முதலாவதாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பெண் எம்பி மஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் விரைவில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது, ஆகவே, பதவிக்காக பெண்ணுரிமையை தூக்கிஎறியவும் அவர் தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. சோனியா குறித்து அவதூறாகப் பேசிய கிரிராஜ் சிங் நைஜீரியப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து இந்தியாவுக்கான நைஜீரியத் தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார். இது குறித்து அவர் ஊடகவியலாளர் களிடம் கூறும் போது அமைச்சரின் கருத்து விரும்பத் தக்கதல்ல, மிக மோசமானது! இது தொடர்பாக வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம் எனக் கூறி உள்ளார்.

புதன் கிழமை உள்துறை அமைச்சர் அயல்நாட்டி னருக்கு மாட்டிறைச்சிகொண்டுசெல்வதை தடை செய்ய வேண்டும் அந்நாட்டினர் மாட்டிறைச்சி கிடைக்காமல் வாடவேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இவர்களின் பேச்சால் அயல்நாட்டு நட்புறவிற்கும் பங்கம் வரும் என்றே கருதப்படுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லியுள்ளான். அத்தகைய நூலை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும் கூறியுள்ளார்.

இது மேற்கண்ட எல்லாவற்றையும்விட கொடுமை யானது - கண்டிக்கத்தக்கது.

காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஆனால், ஒரே ஒரு வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காரைக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு பெண் முதல் அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில் (மக்கள் முதல்வர் தானே) இந்தக் கொடுமைகளைத் தடுக்க, கொடுமைகளைச் செய்தோர்மீது கடுமையாகத் தண்டிக்க போதிய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டாமா!?

திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்தப் பிரச்சினைகளைக் கடுமையாகக் கருதுகிறது; பெண்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் படும். கொடுமைகள், பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவைகளைக் கண்டித்தும் எதிர்த்தும் உரிய முறையில் போராட திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிர் மற்றும் பாசறை அணி தயங்காது.

வரும் ஞாயிறன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ள மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/99001.html#ixzz3WFwrWISe

தமிழ் ஓவியா said...

புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற நாடாளுமன்ற குழு தலைவர் கருத்து முழுமையான தவறு

மருத்துவர் வி.சாந்தா பேட்டி

சென்னை,ஏப்.3- புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற கருத்து முழுமையான தவறு என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா கூறினார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழு தலைவர் திலீப் குமார் காந்தி புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி உள் ளார்.

மேலும் புகையிலை விளைவிப் பதை தடை செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து இருக் கிறார். புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற அவரது கருத்து ழுமுக்க முழுக்க தவறானது. டில்லியில் உள்ள டாடா இன்ஸ்டி டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனமும், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அதன் பயனாகத்தான் புற்றுநோய் வந்தவர் களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. விளம்பரத்தை 85 சதவீதமாக்கவேண்டும் இந்தியாவில் ஆண்டிற்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் 10 லட்சம்பேர் இறக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள்.

பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. நுரை யீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர் களுக்கே வருகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று வாசகம் எழுதினால் அது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை படிக்காத பாமரர்கள் படித்து பார்க்காமல் புகையிலை பொருட்களை பயன்படுத் துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட தாளில் அல்லது கவரில் அச்சிட்டால் நல்லது. குறிப்பாக அந்த விளம்பரம் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்தது. ஆனால் அது உயர்த்தப்படவில்லை. மாறாக இப்படி எம்.பி. திலீப்குமார் காந்தி கூறியிருப் பது வேதனை தருகிறது.

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் களில் 40 சதவீதத்தினர் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கு விழிப் புணர்வு ஏற்பட்டதால் நிறையபேர் புகையிலை பொருட்களை பயன்படுத் துவதை நிறுத்தி விட்டனர். புதிதாக பயன்படுத்துவோரும் குறைந்துவிட் டனர். அதனால் அமெரிக்காவில் இப்போது 40 சதவீதம் என்பது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவேண்டாம். பீடியும் குடிக்கவேண்டாம்.

ஏனென்றால் பீடி குடித்தாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. புகையிலைவேறு புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பேன். இவ்வாறு மருத்துவர் சாந்தா கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/99005.html#ixzz3WFx3Loum

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப் பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக் கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார். அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxeiZ6p

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்!

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை.

உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவு தான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFxnygkf

தமிழ் ஓவியா said...

கம்பன் புலமையில் சிறந்தவனா?

கம்பராமாயண இன் சுவைப் பெருநாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங்களாகும். அவைகளை அவர் கடவுளின்பமாகவே கண்டாரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக நம் அடிகளோ,

கம்பர் பாடல்கள் சிறந்த நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும்,

கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.

கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார். சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையாசிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதியுள்ளார்.

அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என்றெண்ணுதல் பொருந்தாது. சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.

இதனை அடிகளின் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் சாகுந்தல நாடக ஆராய்ச்சி முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.

மறைமலை அடிகள் வரலாறு (மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)

Read more: http://viduthalai.in/page-7/99053.html#ixzz3WFyAD1IJ

தமிழ் ஓவியா said...

மோடி கடைப்பிடிக்கும் மதச் சார்பின்மை இதுதான்!
ராமன் கோயில் கட்டி முடிப்பதில் பிரதமர் தீவிரமாம்

ராமஜென்மபூமி அமைப்பின் தலைவர் கூறுகிறார்

லக்னோ, ஏப்.3_ இங் கிலாந்திலிருந்து வெளி வரும் டெய்லி மெயில் (30.3.2015) ஏட்டுக்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் அளித்த பேட்டியில் ராமன் கோயில் கட்டு வதற்காக முகாமடித்துக் காத்திருக்கும் காலம் முடிந்து விட்டது. ராமன் கோயில் கட்டுவதில் தீவிர மான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துவருகிறார் என்று கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைதி யாக இருக்கின்ற நேரத் தில், அயோத்தியில் விரை வில் ராமன் கோயில் கட்டுவதற்கான முடிவை பிரதமர் மோடி எடுக்க உள்ளதாக ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் நம்பிக்கை வெளிப்படுத்தி யுள்ளார்.

பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அயோத் திப் பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயன்று வருகிறது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் சட்டத்தை கொண்டுவர உள்ளது. ராமன் கோயில் கட்டுவதற்கான காலம் கனிந்து வருகிறது என்று தாஸ் கூறுகிறார்.

மேலும் தாஸ் கூறும் போது,கடவுள் ராமனை கூடாரத்துக்குள் அடைத்து வைத்து காத்திருக்கும் காலம் முடிந்துவிட்டது. அயோத்தியில் அற்புதமாக ராமன் கோயிலைக் கட்ட பிரதமர் மோடி தீவிர நட வடிக்கைகளை எடுத்துவரு கிறார் என்றார்.

விஸ்வஹிந்து பரி ஷத்தை வழிநடத்திவரும் அமைப்பான ராம் ஜென்மபூமி நியாஸ் ஏற் கெனவே ஆயிரக்கணக் கான தூண்களை அயோத் திக்கு அருகில் உள்ள கர்சேவாக் புரம் என்கிற பகுதியில் அமைத்துள் ளது. அந்தத் தூண்களைக் கொண்டு ராமன் கோயில் கட்ட அனுமதி கிடைக் கும் சில நாள்களிலேயே அயோத்தியில் ராமன் கோயில் கட்டி முடிக்கப் பட்டுவிடும்.

மோடியின் பதவிக்காலத்தில்

தாஸ் கூறுகையில் இந்த விவகாரத்தில் மோடியை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நாங் கள் எதிர்பார்க்கிறோம். மோடியின் பதவிக்காலத் திலேயே ராமன் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, இப்போதைக்கு இந்தப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவர கட்சி விரும்பவில்லை. ராமன் கோயில் விவகாரம் உணர்ச்சிபூர்வமானது. இப்போது சீர்திருத்தங் களையும், நில சட்ட வரைவுகுறித்துமே அரசு முன்னிறுத்தும்என்றார்.

இதனிடையே சாமி யார்களின் பெரிய அமைப் பாக உள்ள அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் கூறும்போது, மத்திய அரசு கோயில் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமான முடிவை எடுப் பதை அனுமதிக்கமாட் டோம் என்கிறார்கள்.

அதிக கூட்டங்கள்

அகாரா பரிஷத் அமைப்பில் புதிதாக தேர்வாகியுள்ள தலைவ ரான மகந்த் நரேந்திர கிரி கூறும்போது, ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தொடக் கத்தில் இருந்து உள்ள மதத் தலைவரான ஹஷீம் அன்சாரியை விரைவில் சந்தித்து திட்டத்தில் முழு வடித்தை கொடுப்பதற்காக பேச உள்ளேன் என்றார்.

பிரச்சினைக்குரிய இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவதற்கு, ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு முசுலீம் களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அகாரா பரி ஷத் பங்களிப்பு இருக்கும். அனைத்து (நான்கு) சங்கராச்சாரியார்கள், முக்கிய முசுலீம் மதத் தலைவர்களுடன் கோயி லுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பின்னர் இந்து மதத் தலைவர்களின் உதவி பெற்று மஸ்ஜித்தும் கட்டப்படும்.

மேலும் கிரி கூறுகை யில், இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் நாடு முழுவதுமிருந்து நாசிக் கில் நடைபெற உள்ள கும்பமேளாவில் கூடும் சாமியார்களிடம் முழு வடிவத்துடன் உள்ள திட் டத்தை அளிக்க உள் ளோம் என்றார்.

அன்சாரியிடம் இது குறித்துக் கேட்டபோது, ராமன் சிலையை கூடா ரத்துக்குள் வைத்திருப்ப தற்கு எதிரானவன் நான். அதற்காக முசுலீம்களின் கருத்தை புறக்கணிப்பதற் கும் அரசை அனுமதிப்ப தாக பொருள் கிடையாது. பிரதமர் மோடியை சந் திப்பதற்கு விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுள்ளோம்.

நரேந்திர கிரி இந்த விவகாரத்தில் விவாதிப்பதை நான் வர வேற்கிறேன். மதப் பிரச் சினைகளில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் அகாரா பரிஷத் அமைப்பை, தீர்மானிக்கக்கூடிய முக் கிய அமைப்பாக நான் கரு துகிறேன். ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் பிரச் சினை மதப் பிரச்சினை. கேலிப் பொருளாக்கும் சூழலை தேவையின்றி உருவாக்குகிறார்கள். இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தையின் மூல மாகவே பிரச்சினையில் தீர்வை எட்ட முடியும் என்று அன்சாரி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தின் கூடுதல் வழக் குரைஞர் மற்றும் சன்னி வக்ப் வாரியம் வழக்குரை ஞருமாகிய சவர்யாப் ஜிலானி இந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர் ஆவார். அவர் ஏற்கெனவே இவ் விவகாரம் குறித்துக் கூறும்போது, நாங்கள் உச்சநீதிமன் றத்தின் முடிவையே இந்த வழக்கில் எதிர்பார்க்கி றோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/99060.html#ixzz3WFyO76fV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ருத்ராட்சம்

கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக் காலம் நெருங் குவதால், என் கட மையைச் செய்ய அனு மதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளை யாடுகிறாயா?

ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகைகூட உன்னால் என்னை நெருங்க முடி யாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுய ரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார்.

ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித் தார் சனீஸ்வரர்.

யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலை நாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத் ராட்சம் அணிந்து சிவ நாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப் பட்டார்.

சிவபெருமானே ஏழரை நாட்டுச் சனிக்கு ஆளாவான் என்றால் அவன் என்ன சர்வ சக்தி வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/99083.html#ixzz3WLGrxS7F

தமிழ் ஓவியா said...

இளநீர் அபிஷேகம் செய்தால் மழை வருமா?


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மழைக்கு வேண்டி 1008 இளநீரை அபிஷேகம் என்ற பெயரில் அந்த சாமி பொம்மைமீது கொட்டி வீணாக்கி உள்ளனர்.

சாமி என்ற கல்பொம்மைமீது இளநீரைக் கொட்டினால் மழை வருமா? மழைக்கும்- அந்த கல் பொம்மைக்கும் என்ன தொடர்பு? உணவில்லாமல் பல கோடி மக்கள் பசியில் தவிக்கையில் அந்த உணர்ச்சியற்ற பொம்மைக்கு இளநீர் அபிஷேகம் தேவையா?

Read more: http://viduthalai.in/e-paper/99086.html#ixzz3WLGzh8Ua

தமிழ் ஓவியா said...

அழைக்கிறது பெரியார் திடல்!


இந்துத்துவா போர்வையில் உலவும் சில காவிகளும், சில உதிரிகளும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் இருபெரும் நிகழ்ச்சிகளைக் கண்டு, அறிவைச் செலுத்தாமல், வெறும் விளம்பர வெளிச்சத்துக்காக எதிர்ப்பு அரட்டைக் கச்சேரிகளை அரங்கேற்றுகின்றனர். காவல் நிலையத்திற்குக் காவடி எடுக்கின்றனர். சட்டப்படி நாம் செய்கின்ற கொள்கைப் பூர்வமான செயல்களில் யார்தான் தலையிட முடியும்?

மாட்டுக்கறி விருந்து சட்டப்படி குற்றம் அல்லவே! தாலி அகற்றலும் அந்த வகையைச் சார்ந்தது தானே? இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டன இந்தக் கொழுக்கட்டைகள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெகு மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடுபவர்கள் தான், அவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் - சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்.

மாட்டுக் கறியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாமாம்! அதற்கு ஆட்சேபணை கிடையாதாம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியதுபோல அதிலும்கூட எருமை கருப்பு என்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள் போலும்! அதிலும் வர்ண தர்மம்தான் போலும்!

மத்தியில் உள்ள ஆட்சி என்னதான் மூடி மறைத்தாலும், அது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி என்பதை இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டார்கள்; பசு புனிதம் என்று இந்து மதம் சொல்லுவதாக அவர்கள் கூறுகிறார்கள்; அதன் மூலம் பசு உணவுப் பிரச் சினையில் அவர்கள் இந்துத்துவா மத மூக்கை நுழைய விடுகிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

அப்படியே பார்த்தாலும், அவர்களுக்குச் சாட்சி யமாக அவர்களின் இந்து மத சாத்திர நூல்களேகூட ஒத்துழைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!

சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் யாகத் தீயில் பசுவைப் போட்டுப் பொசுக்கி, வயிறு முட்ட சாப்பிட்டு, மது குடித்து உண்டாட்டில் திளைத்துக் கிடந்தவர்கள் தான் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரக் குவியல்கள் வண்டி வண்டியாக இறைந்து கிடக்கின்றனவே!

இவர்களின் சங்கராச்சாரியாரே பசுவதையை சாஸ்திர ரீதியாக அங்கீகரித்துள்ளாரே! பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டதற்குச் சான்று கூறுகிறாரே - பின் எந்த யோக்கியதையில் கோட்டான்கள்போல சிலர் குதிக்கிறார்களோ தெரியவில்லை. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி காண்க)

அனாமதேயங்களுக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிற பொறுப்பற்ற ஏடுகள் நாட்டில் இருப்பதால் சிலர் முண்டாதட்டிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசப் பேச, புகார்கள் கொடுக்க, கொடுக்க 14ஆம் தேதி நிகழ்ச்சி மிகவும் களைகட்டப் போகிறது. எளிமையாக நடத்த இருந்த நிகழ்வுகளை பொலிவு மிக்கதாக, மக்கள் வெள்ளம் திரண்டு வரும் அரும்பெரும் நிகழ்ச்சிகளாக உருமாற்றி விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூடக் கூறத்தயார்!

மாட்டுக் கறிப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால் அடிமைச் சின்னமாம் தாலி என்ற தளையை அகற்றிக் கொள்ள முன் வருவதும் அவரவர்களின் தனி உரிமையைப் பொறுத்ததேயாகும்.
இன்னும் சொல்லப் போனால் சட்ட அங்கீகாரம் பெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயம் ஆக்கப்படவில்லையே!

அப்படி இருக்கும் பொழுது இதில் மூன்றாவது பேர் வழிகள் தலையிட உரிமையும் இல்லை - அதற்கான சட்டமும் அவர்கள் வசம் கிடையாதே!

தமிழ்நாட்டில்கூட வைதிகத் திருமணங்களில் எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டுகிறார்களா என்றால் அதுதான் கிடையாது. தாலி என்றால் என்ன என்றே பல மாவட்டக்காரர்களுக்குத் தெரியாதே!

தாலி அணியும் பெண்கள்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும்; கணவன் மரணம் அடைந்து விட்டால் பெண்ணை அவமானப்படுத்துவதற்காகவே தாலி அறுப்பு என்னும் அவமானச் சடங்கை நடத்து கிறார்கள்.

பெண்களின் வளையல்களை உடைத்து, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் அதனை அழித்து, கூந்தலில் பூ வைத்திருந்தால், அதனையும் பிடுங்கித் தூக்கி எறிந்து, அந்தப் பெண்ணை விதவை என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தத்தானே இந்தச் சடங்கை வைத் திருக்கிறார்கள்?

அதே நேரத்தில் மனைவியை இழந்தால் அந்த ஆணுக்கு எந்த சடங்கை வைத்துள்ளனர்?

மனைவி செத்து அவரின் கல்லறையின் ஈரம் உலருவதற்கு முன்னதாகவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அகலமான கதவைத் திறந்து வைத்திருப்பதுதானே இந்த அர்த்தம் கெட்ட இந்து மதம்? இல்லை என்று மறுக்க முடியுமா?

கணவன் இறந்தாலும், அந்தப் பெண்ணின் வாழ்வு மரணம் அடைந்து விடக் கூடாது; இன்னொரு வாழ்வும் இருக்கிறது என்ற துணிச்சலைக் கொடுக்கும் சுய மரியாதை உணர்வை ஊட்டுவதுதான் தாலி தேவை யில்லை என்ற கருத்து என்பதை - சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாமே!

அடிமைத்தளையை அகற்றிட விரும்பும் அருமைமிகு பெண் குலத்தை அன்புடன் வரவேற்கிறது பெரியார் திடல்!

Read more: http://viduthalai.in/page-2/99076.html#ixzz3WLHW0ckH

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/99071.html#ixzz3WLHpS9kk

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி விருந்து நமக்குப் புதிதல்ல


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


தந்தை பெரியார் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மாபெரும் மாநா டும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும் நம் இயக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் பெண்ணடிமையை ஒழிக்கும், பெண் விரும்பினால் தனக்கு மண விலக்கு பெறவும், மறுமணம் செய்து கொள்ள வும் உரிமை வேண்டும் என்ற கருத் தமைந்த மய்யமாக வைத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும் ஆனால், இத்தீர்மானத்தை பார்ப்பன ஏடுகள் யார் வேண்டுமானலும் யார் மனைவி யையும் அடித்துக்கொண்டு போகலாம் என்று திரித்து எழுதி புழுதிவாரித் தூற்றினர். நம் கழகச் சார்பில் இந்து ஏட்டின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. வழக்கு தொடர்ந்து நடை பெற்றது, நமது ஆசிரியரே வாதாடி னார். இந்து ஏடு நிபந்தனையற்ற மன்னிப் புக்கோரியது வழக்கு முடிவுக்கு வந்தது.

அதுபோலவே இன்று பார்ப்பன ஏடுகள் நம் கழகத்தின் மீது புழுதிவாரித் தூற்றி தங்கள் வயிற்றெரிச்சலைக் காட்ட தொடங்கிவிட்டன. வருகிற ஏப்ரல்-14 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாட்டுக்கறி விருந் தையும், பெண்களின் அடிமைச் சின்ன மான தாலியைத் தாங்களே விருப்புக் கொண்டு அகற்றும் நிகழ்ச்சியைத் தூற்றத் தொடங்கிவிட்டன. ஏதோ தெருவில் போகும் பெண்களின் தாலியை திராவிடர் கழகத்தினர் அறுப்பார்கள் என்கிற உணர்வு வரும்படியான நாணயமற்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி விட்டனர். இது போன்ற அறிவு நாணயமற்ற பிரச்சாரத்திற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தினமணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

24.2.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றி விளக்கமளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் யார் தாலியை அகற்ற முன்வந்தாலும், யாருடைய கட்டாயத்திற்காகச் செய்கிறீர்களா? என்று கேட்டு பிறகு தான் அகற்ற அனு மதிப்பேன் என்று விளக்கமளித்தார்கள். இவ்விளக்கத்திற்குப் பின்பும், மதவெறி யர்களின் கூப்பாடு, பூச்சாண்டி தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் தடம் மாறாமல் செல்கிறார், என்பதைத்தான் காட்டுகிறது.

ஏதோ, மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி இப்பொழுதுதான் முதன் முதலாக நடைபெறுவதுபோல மத வெறியர்கள் கூச்சலிடுகின்றனர். 1970-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச் சியில் ஆந்திராவைச் சேர்ந்த கோரா போன்ற அறிஞர்கள் கலந்து கொண் டனர். பிறகு தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இச் செய்திகள் மதவெறி என்ற கண்ணாடி அணிந்துள்ள சங்பரிவார் அமைப்புக் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, தந்தை பெரியார் வழியில் தடம் மாறா மல் ஆசிரியர் செல்கிறார், கழகத்தை வழி நடத்துகிறார், என்பதற்கான எடுத்துக்காட்டாகு

Read more: http://viduthalai.in/page-2/99077.html#ixzz3WLHz4Y79

தமிழ் ஓவியா said...

மோடியின் செல்வாக்கு சரிவும், மதசார்பற்ற அமைப்புகளின் கடமையும்

- குடந்தை கருணா

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி ஆட்சியில் மத வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டி யுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட் சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல் வாக்கு எப்படி? அரசின் செயல் பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடி யின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் பிரமாதம் என்று தெரிவித்து உள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந் தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி னால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப் பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரி வித்தனர். தற்போது அது 61 சதவீத மாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரி வித்து இருந்தனர். அது 26 சதவீத மாக அதிகரித்து உள்ளது.

வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந் துள்ளது. மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப் போது 39 சதவீதமாக அதிகரித் துள்ளது. சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதரீதி யான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

இவற்றில் தலை யிட்டு தீர்வு காண பிரதமர் மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப் போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்று பட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத் தால் மாநிலம் முழுவதும் நடை பெற்று வரும் திராவிடர் விழிப் புணர்வு மாநாடும், ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடை பெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமை யாகும்

Read more: http://viduthalai.in/page-2/99081.html#ixzz3WLIIIgRv

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டிய காலம் ஆரம்பித்துவிட்டது

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் அறைகூவல்

புதுடில்லி, ஏப்.4_ மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானத் தேவையாகும். மதக்கருத்துகள் குறித்து கேள்வி எதுவும் எழுப்பக்கூடாது என்றும், அப்படி கூறப்படும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். மூடநம்பிக்கைளுக்கு எதிராக வெடிக்க வேண்டிய புரட்சிக்கான காலமாக இன்று உள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் கூறியுள்ளார்.

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசியக்குழுவின்சார்பில் நடைபெற்ற அற்புதங்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள் பயிற்சிப்பட்டறையில் பேசும்போது டாக்டர் நரேந்திர நாயக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீலகண்டநகரில் உள்ள சிசு வித்யாமந்திர் பள்ளியில் அய்ந்து நாள்கள் நடைபெற்ற அறிவியல் பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அற்புதங்களின் பின்னணியில் அறிவியல் உள்ளது என்பதை நரேந்திர நாயக் இப்பயிற்சி முகாமில் விளக்கினார்.

அறிவியல் விளக்க பயிற்சி முகாம்குறித்து டாக்டர் நரேந்திர நாயக் கூறும்போது, மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று நம் அரசமைப்புச் சட்டத்தில் 51 எச் பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது.

51(h) To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.

மதங்களை உயர்த்திப்பிடிப்போரின் அற்புதங்கள் என்று சொல்லப்படுவதன் பின்னணியில் இருக்கும் தந்திரங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி முகாம் மூலம் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் சமுதாய அளவில் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை பரப்புவார்கள் அல்லவா?



கஞ்சம் மாவட்டத்தில் கதா வித்யா என்கிற முறையில் இந்திய சமூகத்தில் இன்னமும் எண் ணிலடங்காத அளவில் ஏராளமான மூட நம்பிக் கைகள் இருந்துவருகின்றன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தாந்திரீகர்கள் கதா வித்யா முறையில் திருடர்கள் அல்லது மந்திரவாதிகள் என்பவர்களை மக்களிடத்தில் களமிறக்கியுள்ளனர்.

இதற்கு ஒரே தீர்வு கண்மூடித்தனமான நம்பிக்கை களை விலக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். கடவுளின் பெயராலும், அற்புதங்கள் என்கிற பெயராலும் மதவாதிகள் என்ன வித்தைகளை எல்லாம் செய்துவருகிறார்கள் என்பதுகுறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கைளுக்கு எதிரான இந்த புரட்சிகரமான செயலில் ஒவ்வொரு வரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். வெறும் சட்டங்களினால் மட்டும் மூடநம்பிக்கை களை நம்பக்கூடாது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. எங்களோடு இணைந்து போராடுவதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று நரேந்திர நாயக் கூறினார்.

இப்போது நரேந்திர நாயக் செய்துவரும் மூடநம்பிக்கைகளுக்குஎதிரான விழிப்புணர்வுப் பணிகளை தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் ராணாசிங் நிர்மன்லெண்டு ராய் தொடங்கினார். பகுத்தறிவாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்களிலும், பள்ளிகளிலும் நடத்த வேண்டும்.

டாக்டர் ராய் குறிப்பிடும்போது, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்வைமட்டும் பாதிக்கவில்லை. மாறாக, மக்களின் உடல்நலப் பிரச்சினைகளிலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன. இன்றுவரை இதுபோன்ற பயிற்சி முகாம்களை 40 மாவட்டங்களில் நடத்திவருகிறோம். மேலும் பல மாவட்டங்களில் நடத்தவும் திட்டமிட்டுவருகிறோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99106.html#ixzz3WLIfXlR7

தமிழ் ஓவியா said...

பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்டவிபரம்

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள்.

விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக் கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது.

இந்தச் சட்டப் படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகி விடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும்.

இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவை யான ஒரு மருமகளுக்கும், தாய்க்கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்திலிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.

இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டி ருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.

கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட் சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதர னுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.

இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயா தீனமும் ஏற்பட்டிருக்கிறது. சீதன விஷயமான பாத்திய தையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.

முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது.

இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

- புரட்சி - கட்டுரை - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKGBpTI

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகல் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்க வேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்த மானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட் டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படு கிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKpgn8k

தமிழ் ஓவியா said...

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.

- கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.


உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

- எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.

தமிழ் ஓவியா said...

இப்படியும்கூட....

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படம் இது. எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை தன்னுடைய பைக் பில்லியனில் கட்டி வைத்து சாலையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தார் இந்த மனிதர்.

பார்த்ததுமே பதறிப் போனவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக் கிறார்கள்.

காவல் விசாரணையில் கிடைத்த தகவல்தான் ட்விஸ்ட்.

அந்த குழந்தை, அவருடைய சொந்த மகள். செக்யூரிட்டி கார்டாக பணியாற்றும் அவர், பரீட்சை எழுத அடம்பிடித்து மறுத்த மகளை இப்படி கட்டி வைத்து பள்ளிக்கு இழுத்துச் சென்றதாக வாக்கு மூலம் கொடுத்தார்.

இப்படி என் குழந்தையைக் கட்டி வைத்து அழைத்துச் செல்வதால் அவள் செத்துவிட மாட்டாள். ஆனால், கல்வி கற்காவிட்டால் அவளுக்கு எதிர் காலமே இருக்காது.... என்று அந்த மனிதர் சொன்னபோது விசாரித்த காவல்துறையினருக்கே கண்கள் கலங்கியிருக்கிறது.

இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று தெரியாமல், சிறிய வழக்காகப் பதிவு செய்து இனிமேல் இப்படியெல் லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த செய்தியை என்னவென்று விளங்கிக் கொள்வது?

Read more: http://www.viduthalai.in/page8/99110.html#ixzz3WLWQjLZs

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் நீர்க் கொள்ளை!

கோகோ கோலா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஸனன்த் என்ற பகுதியில் 500 கோடி மதிப்பில் தொடங்கியுள்ள பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, சர்தார் சரோவர் அணையிலிருந்து நாளொன்றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க ஒப்புக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அஹ்மத் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன் னுரிமை அளித்துத் தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்தார் சரோவர் அணைத் திட்டம், வறட்சி நிலவும் வடகுஜராத், சௌ ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை வழங்குவதற்காகவே திட்ட மிடப்பட்டிருந்தது. அப்படியிருக்க, கோகோகோலா போன்ற பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நாளொன் றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அரசு எடுத்துள்ள முடிவு வியப்பைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்ன என்பது அஹ்மத் படேலுக்குத் தெரி யாது போலும்.

Read more: http://www.viduthalai.in/page8/99112.html#ixzz3WLWbY95H

தமிழ் ஓவியா said...

ஆதாரப்பூர்வ மறுப்பு

அவதூறு செய்யத் துடிக்கும் ஆரியம்

- கி.வீரமணி

அம்பேத்கரைப் போய் அரசமைப்புச் சட்ட மேதை; அரசமைப்புச் சட்டக் கர்த்தா என்று சொல்கின்றார்களே; இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்தான் உருவாக்கினாரா?

அவர் ஒன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லையே. அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லையே என்று சொன்னார்கள்.

நண்பர்களே! இதற்குப் பதில் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அம்பேத்கர் அவர்கள் அவருடைய உரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய பேருள்ளம் படைத்தவர் என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து-கொள்ளலாம்.

அவருடைய டிபேட்ஸ் எல்லா வால்யூம்-களும் என்னிடத்திலே இருக்கின்றன. அதிலே அவர் புரிந்த வாதங்களிலேயே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, கெய்த்தான், முகமது சாதுல்லா, இப்படி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏழு பேரைப் போடுகிறார்கள். அதிலே ஒருவர் அமெரிக்காவில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் விலகி விடுகிறார். ஆக, அந்த இடத்திற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போடப்படுகின்றார். ஆகக் கடைசியில் அது ஆறு பேரோடு நிற்கின்றது.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலே கடைசியாக 6 பேர் இருந்தார்கள். அந்த 6 பேரில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒருவர்; டி.டி.கிருஷ்ணமாச்சாரியாருடைய உரையோ என்னிடத்தில் இருக்கின்றது. இதுவே மிகப்பெரிய ஆதாரமாகும்.

டி.டி.கிருஷ்ணமாச்-சாரியார் என்ன சொன்னார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.

நாங்கள் இத்துணைபேர் இருந்தாலும், எங்களால் இந்தப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. இதனை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் இத்துணைத் திருத்தங்களையும், இத்துணை வரைவுகளையும் செய்த பெருமை அம்பேத்கர் அவர்களையே சாரும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

ஆனால், அம்பேத்கர் என்ன சொல்கின்றார்? அதைக் கவனியுங்கள். நான்தான் இதை எல்லாம் செய்தேன் என்று என்னைப் பாராட்டாதீர்கள். எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது பி.என். ராவ் என்று சொல்லுகின்றார்.

அவர்தான் அரசமைப்புச் சட்ட ஆலோசகர். அவருடைய அறிவுத்துணைதான் எனக்கு ரொம்ப அளவுக்குப் பயன்பட்டது. அவருக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைச் சொல்கின்றார். கடைசியில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியைச் சொல்லுகின்றார். தான் மட்டுமே இதை எல்லாம் செய்யவில்லை என்று மற்றவர்-களையும் பெருமைப்பட உயர்த்திச் சொல்லுகின்றார்.

நூல் : அம்பேத்கர்பற்றிய அருண்ஷோரி நூலுக்கு மறுப்பு

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மூடத்தனம்

சாமி சிலைகள் திருட்டு என்பது அன் றாடம் வெளிவரும் செய்தியாகும். இதற்கு மேலும் கோயில்களுக் குச் செல்லுவதும், கும் பிடுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், உண்டி யலில் பணம் போடுவதும், கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதும் முரட்டு மூடத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

Read more: http://viduthalai.in/e-paper/99161.html#ixzz3WQzdGLtC

தமிழ் ஓவியா said...

கிறிஸ்தவ ஆலயம் - கோவில் பூசாரி வீட்டில் கொள்ளை


சிறீவைகுண்டம், ஏப்.5 சிறீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சாலையில் சி.எஸ்.அய். ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்ததும் அங்கு தங்கி யிருக்கும் பெண் ஊழியர் ஒருவர் கதவை லேசாக மூடிவிட்டு தூங்கினார். அப்போது ஆலயத்திற்குள் புகுந்த நபர்கள் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி யுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் கூச்சலிடவே அந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர். உண்டியல் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சோமசுந்தரம் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொண்ட திருடர்கள் வீடு புகுந்து தங்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். அவர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மோதிரம் மற்றும் வெள்ளி பொருட் களை திருடி சென்றுள் ளனர். இந்த சம்பவங்கள் குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99160.html#ixzz3WQzlCoPl

தமிழ் ஓவியா said...

ஊடக விவாதமும், நடுநிலை நக்கிகளும்

-குடந்தை கருணா

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முன் கூட்டியே தமிழகத்தில் தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் என ஒரு விவாதம். அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில் ஒருவர், இன்னொருவர் ஞானி, அடுத்தவர் மணி. இதில் ஞானி, ஆம் ஆத்மி கட்சியில் சென்ற தேர்தலுக்கு முதல் நாள் சேர்ந்து, அடுத்த நாள் தேர்தலில் நின்று, தோற்று, அதற்கு அடுத்த நாள், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியவர். அது அவர் சொந்த விருப்பம். அடுத்தவர் மணி. இவர் சமூக சிந்தனையாளராம்? எல்லாம் இவங்களே ஒரு பட்டத்தை வச்சிக்கிறாங்க.

முதல்ல முன்கூட்டியே தேர்தல் ஏன் வரணும்? 2014 தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகள் எதுவும் இல்லாம, சில சின்ன அமைப்புகளை சேர்த்துக் கொண்டு, 44% வாக்கு வாங்கியுள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து மிக அதிகமான இடங்களை வைத்துள்ளது. பின்னர் அவர்களை அடித்து விரட்டிவிட்டது வேறு விஷயம். பண பலத்தைக் கொண்டும், ஊடகங்களை, விளம்பரம் என்ற தூண்டிலை வைத்து, மிரட்டியும், ஆசைகாட்டியும் தங்கள் ஆட்சிமீது எந்தவித எதிர்ப்பும் தோன்றாத வகையில் ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த நிலையில் இப்படி திடீர் என முன் கூட்டியே தேர்தல் என்கிற ஓர் பேச்சை ஏன் துவங்க வேண்டும்?

ஞானி சொல்கிறார்: ஜெயலலிதா மீதான வழக்கைப் பொறுத்து இது முடிவாகும் என்கிறார்; அத்துடன் நின்றால் பரவாயில்லை; 2ஜி வழக்கின் முடிவையும் சேர்த்து, அது திமுகவை பாதிக்கலாம் என்கிறார்.

மணி சொல்கிறார்: ஜெயலலிதாவின் அதிமுக வின் எதிர்ப்பை, திமுக சரியாக கொண்டு செல்ல வில்லை; ஆகவே, அதிமுகவிற்கு சாதகம் என்கிறார்.

ஆனால், அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சியில், மிகப் பெரும்பான்மையான என்பதை விட, மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சியில், நடந்த திட்டங்கள் எது? சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த கதியில் உள்ளன? மெட்ரோ ரயில் முதல் கொண்டு, இவர்கள் சொன்ன மோனோ ரயில் திட்டம் வரை என்ன நிலையில் உள்ளது? 2023 விஷன் என்று பிரம்மாண்டமாக அறிவித்த தொழிற்புரட்சி என்ன ஆனது? மைனாரிட்டி திமுக ஆட்சியில் பதிமூன்று விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த தொழில் வளர்ச்சி, தற்போது மிருக பலம் கொண்ட அதிமுக ஆட்சியில் நான்கு சதவிகிதத்திற்கும் குறைவாக ஆனதே ஏன்?

இரண்டு மணி நேர மின்வெட்டிற்கு குதித்த ஜெயலலிதா, தற்போது இந்த நான்காண்டில் மின்சாரம் கிடைத்திட செய்த திட்டங்கள் என்ன?

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்றைக் காவது இந்த ஊடகங்கள் ஏதேனும் ஒரு விவாதம் நடத்தியது உண்டா?

மைனாரிட்டி திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி களுக்கு அய்ந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் ஒதுக்கப் பட்டது? எந்தெந்த பிரச்சினைகளில் வெளி நடப்பு நடந்தது? இப்போது, மிருகபலம் கொண்ட அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நான்காண்டுகளில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் கொடுக்கப்பட்டது; எந்தெந்த காரணத் திற்காக, எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டன என்ற விவரங்கள் எல்லாம் இந்த ஊடகங்கள் எங்கேயாவது ஒப்பிட்டது உண்டா?

சொத்துக் குவிப்பு வழக்கு என்று கூட சொல்லமுடியாமல், சொத்து வழக்கு என்று தொடர்ந்து சொல்லி, ஏதோ ஒரு சொத்து பிரிப்ப தில் தகராறு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சிதானே நடந்து கொண் டிருக்கிறது.

சமூக சிந்தனையாளர் மணியும்? சரி, ஆக பெரும் அரசியல் விற்பன்னரான ஞானியும் சரி, அதிமுகவை விமர்சிப்பதைவிட, திமுகவிற்கு எந்த நிலையிலும் ஆதரவு இல்லை என்று சொல்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கேட்டால், அவ்வப்போது அவர்களே, தாங்கள் நடுநிலையில்? நின்று பேசுவதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வருத்தம். இந்த நடுநிலை நக்கிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, மக்கள் கணிப்பில், இப்போது தேர்தல் வந்தால், திமுகவிற்கு சாதகம் என 47% மக்களும், அதிமுகவிற்கு சாதகம் என 36% விழுக்காடு மக்களும் சொல்லிவிட்டார்கள். அல்லது ஒருவேளை, இப்படி கணிப்பு சொல்லி, திமுகவினர் மகிழ்ச்சியடைந்து, மல்லாக்கப் படுத்துக்கிடப்பார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தெரிந்து அதிமுக சார்பில் ஒருவர், மறைமுகமாக இருவர், திமுக சார்பில் ஒருவர் என்று விவாதம் சுபமாக முடிந்தது

Read more: http://viduthalai.in/page-2/99165.html#ixzz3WR0bbV22

தமிழ் ஓவியா said...

வட்டார மாநாட்டின் கொடியினை வழக்குரைஞர் கி.தணிகாசலம் ஏற்றினார். கூட்ட நிகழ்வில் வாலாசா நகர திமுக நகரச் செயலாளர் த.க.பா.புகழேந்தி தலைமையில் இராணிப்பேட்டை நகரச் திமுக நகர செயலாளர் பிஞ்சி டி.பிரகாஷ் முன்னிலையில் கவிஞர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் இயக்க நூல்களைப் பரிசாக வழங்கினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக அரக்கோணம் கழக மாவட்டத் துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் இணையரின் பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கழக துணைத் தலைவர் கவிஞர் தன் சிறப்புரையில், திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களோடு எடுத்துரைத்தார்.

பாசிச வெறிபிடித்த இந்து மதவெறியன் கோட்சே காந்தியாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியபோது மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம்! ராம் என்று கூறிக்கொண்டே இறந்தார்.

காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம் ராம் என்று கூறியது அயோத்தி ராமனை அல்ல! இந்து மதத்தை தாக்கிப் பேசினால் உங்களை உயிரோடு விடமாட்டார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் 1927 இல் பெங்களூரில் காந்தியாரிடமே நேருக்கு நேராகக் கூறியதை நினைத்து, இருந்த ராமசாமியைத்தான் ராம்! ராம் என்று கூறினார் காந்தியார். ராமசாமி கூறியதை நான் கேட்காமல் போயிட்டேனே என்று சாகும் போது காந்தி வருத்தப்பட்டுக் கூறியதாக நயமாக எடுத்துரைத்தார்.

Read more: http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/99140-2015-04-04-12-20-03.html#ixzz3WR2UlI9r