Search This Blog

7.4.15

அண்ணல்அம்பேத்கர் பற்றி தந்தைபெரியார்



டாக்டர் அம்பேத்கர்
- தந்தை பெரியார்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.


அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத்தக்கதுமான காரியமாகும்.


நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும்.  அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை.  பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் - என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார்.  அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.


அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால் அது பூஜ்ஜியம் என்பதோடு இனத்தார் அத்தனை பேரும் தனக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை.  இனத்தின் தக்க செல்வமோ செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடியது ஆளுகளும் மிகக்குறைவு.


100 க்கு 99 பேர் ஏழை, கூலி தரித்திர மக்கள்.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்குக் கிடைக்கத்தக்க விதமாக தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க -_ அவர்கள் மெச்சும்படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும், இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவைகளையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது கண்டித்து சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலவற்றைத் தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும், தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரைவிட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும் பேசி வருகிறார்.  மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால்,  எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாசிரம, சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்டதிட்டங்களை லட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.


இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம், காங்கிரசுக்காரர்கள் வையலாம், தேசியம் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில்லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று பதவிக்குப் போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆக பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப்பட்டு இந்தச் சனியன் பிடித்த டாக்டர் அம்பேக்கர் நம்ம யோக்கியதை வெளியாகும்படி நடக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம். ஆனால் தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும் நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமுதாயத்தைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களின் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல.  ஆனால் மற்றவர்களைவிட இவர் சற்று வெளிப்படையாய் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  உதாரணமாக டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்குப் பதில் சொல்லும்போது பேசியதைக் கவனிப்போம்.


ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில் இந்த வரவேற்பு சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும் எனக்கு வரவேற்புக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றிபெற்று எனக்குக் காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.


அடுத்தார்போல் தேசியப் பித்தலாட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கினார்.
என்னவெனில், தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே!  1937இல் தேசியம் வெற்றிபெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்? இது மாத்திரமா, பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்;  தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள்.  இதுமாத்திரமா, தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்துவைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர வேறு யார் வருகிறார்கள்?  ஆகவே தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார். இதற்குப் பார்ப்பனர்கள் தானாகட்டும் தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக் கூடும்?


நான்சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்து தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றிபெற்றது) கடவுள் செயல், அந்தராத்மா கட்டளை என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர இதற்கு வேறு பதில் இல்லை.

            -------------------------தந்தை பெரியார்   "குடிஅரசு" - தலையங்கம் - 30.09.1944
----------------------------------------------------------------------------------


பேரறிஞர் அம்பேத்கர்



இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.


உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துகளைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்துமதம் என்பதான ஆரிய_ஆதிக்க மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாகொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.


இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துகள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.


அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக்கூடும் என்பதே ஆகும்.


                    --------------------------- - தந்தை பெரியார்-  "விடுதலை"-08.12.1956

13 comments:

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம்


மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி யாக ஆக்குவதுதான் என் றார் ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ்.கோல் வால்கர்.

ஜனகல்யாண் - ஜன ஜாக்ரன் என்ற ஓர் அமைப்பை காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி துவங்கினார் அல்லவா - அதன் குறிக் கோள்கள் என்ன தெரி யுமா? பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், இந்தியாவை ஹிந்துஸ்தான் ஆக்க வேண் டும், சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண் டும். சத்யமேவ ஜயதே என்ற வாசகத்துடன் தர் மோர க்ஷ்தி, ரக்ஷ தஹ என்ற வாக்கியமும் அரசு இலச்சினையில் இடம் பெற வேண்டும். அனைவருக் கும் பொதுவான சிவில் சட்டப்படி இயற்றப்பட வேண்டும் என்பதுதான் ஜெயேந்திர சரஸ்வதியால் தொடங்கப்பட்ட அந்த அமைப்பின் நோக்கம். அதுபற்றி தினமணி அன்று எழுதிய தலையங்கத்தில் (5.101987) இவ்வாறு குறிப் பிடப்பட்டிருந்தது.

இந்த அம்சங்களை உற்று நோக்கினால், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற தீவிர மதவாத இயக்கங்களின் கொள்கையின் தாக்கம் இத்திட்டத்தின்மீது ஏற்பட் டுள்ளது தெளிவாகத் தெரி கிறது என்று தினமணியே தலையங்கத்தில் ஆதங்கப் பட்டு எழுதி இருந்தது.

இப்பொழுதுகூட மத்திய பிஜேபி அரசு இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் சமஸ்கி ருதத் துறையைத் துவக்கு கிறது - மத்திய அமைச்சர் ஸ்ருதிராணியே அறிவித் தார். உண்மையிலேயே இப்படி தொடங்கப்படும் சமஸ்கிருதத் துறைகளின் நிலைதான் என்ன? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோ வைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெய கிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங் கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் டாக்டர் நரசிம்மாச் சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உட்பட 12 ஆசிரியர்கள் இருந்தார் கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900, மாதம் ஒன் றுக்குச் சம்பளம் மட்டம் ரூ.11,100. ஒரு முறை பல் கலைக் கழகத்தில் சமஸ் கிருதம் படிக்க ஒரு மாண வர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே - என்ன செய்ய? என்று குறைபட் டுக் கொண்டார்கள்.

துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக் கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமா னால், பல்கலைக் கழகத் தில் உள்ள பெரிய சமஸ் கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்!

எப்படி? செத்த மொழி பெயரால் எவ்வளவுப் பணம் விரயம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/99288.html#ixzz3Wcj5vqH2

தமிழ் ஓவியா said...

பசுக்கள், எருதுகள் மட்டும்தான் கொல்லப்படக் கூடாதா?

எருமைகள், ஆடுகள் கொல்லப்படலாமா?

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் மும்பை, ஏப். 7 பசு, எருது கொல்லப்படக் கூடாது என்று தடை விதிக்கும் சட்டம், எருமைகள், ஆடுகளை தவிர்த்தது ஏன் என்று வினா எழுப்பினார் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி.

-மகாராஷ்டிர மாநிலத் தில் பசுக்கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல் லப்படுவதற்கு தடை விதித்திருப்பது ஏன்? என்று அம்மாநில அரசி டம் மும்பை உயர் நீதி மன்றம் கேள்வியெழுப் பியுள்ளது. அண்மையில் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி செய்யும் மகாராஷ் டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச் சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப் படுவார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர்கள் பிணையிலும் வெளிவர முடியாது. இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 5 ஆண்டுகள் தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்த வர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவற்றின் மீதான விசா ரணை, நீதிபதிகள் வி.எம். கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு முன் மும்பை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் மகாராஷ்டிரத்தில் பசுக் கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவ தற்கு தடை விதிக்கப்பட் டிருப்பது ஏன்? ஆடுகள் எருமைகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படு வதில் ஆட்சேபம் இல் லையா? என கேள்வி யெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக் குரைஞர் சுனில் மனோகர் அரசின் இந்த நடவ டிக்கை ஒரு தொடக்கம் தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல் லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீ லிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படு வது அவசியமானதென அரசு கருதுகிறது என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்த மூத்த வழக்குரை ஞர் அஸ்பி சினாய் அரசின் இந்த நடவ டிக்கை தன்னிச்சையா னது. மேலும், குடிமக் களின் அடிப்படை உரி மைக்கு எதிரானது. குறிப்பாக, வெளி மாநி லங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த மனுக் கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வரப்படுவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99289.html#ixzz3WcjIvtPD

தமிழ் ஓவியா said...

பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் லட்சணம் இதுதான்!


ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வட்டியில்லாக் கடன் கிடைக்குமாம். பிஜேபியில் சேருவதற்குக் கொள்கைகள் தேவையில்லை. வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படு மாம்!

அப்படி கொடுப்பவர்கள் யார்? ஆட்சியின் வங்கிகளே இத்தகைய கடனைக் கொடுக்குமா? அல்லது பிஜேபி குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்திலிருந்து வட்டியில்லாக் கடன் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/99290.html#ixzz3WcjY1KBi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

பாம்பின்மீது உள்ள பயத்தால் பாம்பை நாக ராஜனாக்கிக் கும்பிட ஆரம் பித்தார்கள். பேராசைமீது கொண்ட ஆர்வத்தால் கற்பனை சொர்க்கத்தை உருவாக்கி விட்டார்கள் ஆக பயமும் பேராசையும் சேர்ந்த கவலை தான் பக்தி ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/99293.html#ixzz3Wcjmpi4m

தமிழ் ஓவியா said...

காசிருந்தால் கபாலி!


இந்தத் தலைப்பு விடு தலையில் வெளி வந்த தல்ல - தினமலர் இன்று வெளியிட்ட தலைப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில் விழாவில் ஏகப்பட்ட குளறுபடிகளாம்.

காசிருந்தால் தான் கபாலியாம் சொல்லுவது தினமலர்

Read more: http://viduthalai.in/e-paper/99292.html#ixzz3Wck0bvc6

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WckICcdO

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/99278.html#ixzz3WckSvEcC

தமிழ் ஓவியா said...

ஆரியர் - திராவிடர் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியாழனன்று நிறுவனங்கள் விவகாரத்துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14இல் தான் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண்டாடியிருக்கிறது.

அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் பி.கே. பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாட வேண்டும் என்றும், இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தமிழ் மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.

இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள்ளார்.

2014 மே 22ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்த பிஜேபி அரசு அடுத்த அய்ந்தாம் நாளிலேயே (மே 27) இந்தி மொழி பற்றிய ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பியது.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், சமூக ஊடகங்களைக் கையாளும் அதி காரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் முழுக்க இந்தி மொழியையே பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இது முதல் சுற்றறிக்கை அதற்கு அடுத்த மாதம் ஜூனில் (2014) வெளிவந்த அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சிறப்பு இந்தி பயிற்சி, சுற்றறிக்கைகள் இந்தியில் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த மாதமான ஜூலையிலோ மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றி தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் சுற்றறிக்கை கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இத்தகு சமஸ்கிருத வாரக் கொண் டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறி முறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்திட அது வழி வகுக்கும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் வியாக்கியானமும் செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் கொண்டாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

அவ்வப்போது கடும் எதிர்ப்பு குறிப்பாக தமிழ் நாட்டில் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் பொருத்த மில்லாத வகையில் வெண்டைக்காய் விளக்கெண் ணெய் வழ வழா குழ குழா விளக்கங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமஸ்கிருதம், சீனம், ருசிய மொழி, உருது, அய்ரோப் பிய மொழிகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பதற்கான மய்யங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்கிறதா என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் உதாசி வினா ஒன்றை எழுப்பினார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் கவனிக்கத் தக்கது.

சமஸ்கிருதத் துறை இல்லாத மத்தியப் பல்கலைக் கழகங்களில் அத்துறையை உருவாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அய்ந்து சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களுக்கும் இரண்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் திட்டம் சார்ந்த, திட்டம் சாராத மானியங்களை பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

தமிழ் ஓவியா said...


கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இன்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இந்தப் போக்குகள் எல்லாம் எதை நோக்கி என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனீய ஆதிக்கக் கலாச்சாரத்திற்கான கால்கோள் விழாக்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பாரதிய ஜனதா என்றாலே பார்ப்பனீய ஆதிக்க நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஆரிய ஆட்சி என்பதை உணர்ந்து, ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதை அய்யமறந் தெளிந்து, களத்தில் சந்திக்கத் தயாராக வேண்டும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்று தந்தை பெரியார் அழுத்தத்திருத்தமாகச் சொன்னதை இப்பொழுது பொருத்திப் பாருங்கள் - புரியும்.

Read more: http://viduthalai.in/page-2/99280.html#ixzz3WckdE72f

தமிழ் ஓவியா said...

நான் பசுமாமிசம் சாப்பிட்டவன், இன்றும் சாப்பிடுவேன், தேவைப்பட்டால் நாளையும் சாப்பிடுவேன்

மார்கண்டேய கட்சு பேச்சு


புதுடில்லி, ஏப்.7_ பசு மாமிசத்தில் அதிகப்படி யான புரதச்சத்து உள்ளது, என்னிடம் யாரும் நீ இதைச்சாப்பிடாதே, நான் சொல்வதை மாத்திரம் சாப்பிடு என்று கூற உரிமையில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுமாமிசம் தொடர்பான சர்ச்சைகிளம்பிக்கொண்டு இருக்கும் போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்சு பரபரப் பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு பசுமா மிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிப் பட்ட உரிமையாகும். இந்த அரசியல் சாசனம் இந்தி யாவில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட உணவு விவகாரம் குறித்து சிறப்பான விதிகளை வகுத் துள்ளது. அரசு சட்ட மியற்றி ஒருவரின் தனிப் பட்ட உணவு விவகாரத் தில் தலையிடமுடியாது. நான் பசுமாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன், இன்றும் சாப்பிடுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் நாளையும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை தவ றானது என்று குறிப்பிட் டுள்ளார்.

உலகில் அதிகம் பேர் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சியாகும் மாட்டிறைச்சி உண்பதில் தவறு ஒன்றுமில்லை. மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அதிக மானோர் உண்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக உண்ணப்படு கிறது. நான் பசுமாமிசம் சாப்பிடுபவன் தான், எனது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதால் வீட்டில் சாப்பிடமாட்டேன் ஆனால் உணவகங்களில் நான் செல்லும் போது எனது முதல் தேர்வு மாட் டிறைச்சியில் செய்யப்பட்ட உணவுதான் இருக்கும் மத ரீதியான விவகாரங்களில் நுழைந்து மாட்டிறைச்சியை தடைசெய்வது தவறான தாகும் வேண்டுமென்றால் உலகமெங்கும் உங்கள் பிரச் சாரத்தை முன்னிலைபடுத்தி மாட்டிறைச்சி சாப்பிடு வதை கைவிட முயற்சி செய்யலாம், ஆனால் அது இயலாத காரியம் மட்டு மல்ல சர்வதேச அளவில் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் பசு மாமிசம் தொடர்பாக தொண்டை வற்ற கத்தும் நபர்கள் முதலில் பட்டினி யால் குப்பைகளையும் சில சமயங்களில் அசிங்கமான வைகளையும் உண்ணும் பசுக்கள் பற்றி கவலையடை யட்டும். நான் பலமுறை பசுக்கள் குப்பைகளை தின்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குப்பைகள் மூலம் அசிங்கங் களும் பசுக்களின் வயிற்றில் செல்கிறது.

நரேந்திர மோடி தலை மையில் ஆன அரசு முக்கிய மாக அரசியல் காரணத் தினால் மாத்திரமே இந்த பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரப்பார்க்கிறது. 1950-களிலேயே நீதிமன்றம் தனிமனித உணவு விவகா ரத்தில் அரசின் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மாட் டிறைச்சி தடைச்சட்டத் தால் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/99298.html#ixzz3Wcli6aS6

தமிழ் ஓவியா said...

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் மட்டுமே நீதிவிசாரணை நடத்திடவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

ஆந்திர மாநிலத்தில், ஆந்திர காவல்துறையினரால் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு உடனடியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்றவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் 12 பேர்கள் உள்பட, மொத்தம் 20 பேர்கள் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி - நம் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாகும்!

இது ஒரு அரச பயங்கரவாதம்!

அவர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்கள்; தவறு செய்தவர்களை சட்டப்படி ஆந்திர அரசும், அதன் காவல்துறையும் தண்டிக்கவேண்டுமே தவிர, இப்படி என்கவுண்டர் என்று சொல்லி, திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தாக்கினார்கள் என்று பழி போடுவது, எவ்வகையில் ஏற்கத்தக்கது? தமிழர்கள் என்றால் நாதியற்ற மக்களா?

அண்டை மாநிலங்களில் இப்படிப்பட்ட அவலங்களும், அக்கிரமமான முறையில் உயிர்ப் பறிப்புகளும் ஏற்பட்டால், அதன் எதிர்வினை இங்கே தொடங்கப்பட்டால் என்ன வாகும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும், முதல மைச்சரும் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
தமிழர்கள் என்று பார்ப்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அவர்கள் மனிதர்கள் அல்லவா?
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை!

மனித உயிர்களைப் பறிப்பது என்ன ஆந்திரக் காவல்துறைக்குப் பிள்ளை விளையாட்டா?

தவறு செய்தவர்கள் என்றால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமே தவிர, இப்படி ஒரு பாசிசப் போக்கினை மேற்கொண்டிருப்பது எவ்வகையில் ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது?

ஆந்திரக் காவல்துறை நினைத்திருந்தால் சம்பந்தப் பட்டவர்களை சுட்டுக்கொல்லாமல் சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியாதா? சுட்டுத் தள்ளவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன்தான் திட்டமிட்டே இதில் செயல் பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இது அப்பட்டமான படுகொலை என்று தமிழகக் காவல்துறை மாத்திரமல்ல; ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அமைச்சர் சிந்தாமோகன் போன்றவர்களும், ஏனைய நடுநிலையாளர்களும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - (ஜாலியன் வாலாபாக் போன்ற) என்றே கூறியுள்ளனர்!

1. உடல்களுக்குப் பக்கத்தில் தண்ணீர்ப் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அறுபடாத செருப்புகள் திட்ட மிட்டு வைக்கப்பட்டவை - எல்லாம் ஜோடிக்கப்பட்டவை!

2. பழைய செம்மரக்கட்டைகளை உடல்களுக்கு அருகில் வைத்துள்ளனர்; அவை புதிதாக வெட்டப் பட்டவை அல்ல.

3. சுடப்பட்டவர்கள் 20 பேர்களும் நெற்றிப் பொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன!

4. பெருங்கூட்டம், பெரும் கலவரங்களில்கூட முதலில் எடுத்த எடுப்பிலேயே, துப்பாக்கிச் சூடு என்று நடத்தி விடுவதில்லையே!

காவல்துறையினரைத் தாக்க வந்திருந்தால், அவர்களை அடக்க இப்படியா நெற்றிப் பொட்டில்; மார்பில் குறி வைத்துச் சுட முடியும்?

இந்த ஆந்திராவின் அத்தை - பாட்டிக் கதையை அறிவுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்!

உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றம் அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும்.

தமிழ்நாடு அரசும் - ஆந்திர அரசும் இழப்பீடு வழங்குக!

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இங்கு சட்ட நடவடிக்கைகளை ஆந்திரக் காவல்துறை, பொறுப்பாளர் கள்மீது தொடங்கவேண்டும்.

இவர்களுக்கு ஆந்திர அரசும், தமிழ்நாடு அரசும் பெருந்தொகைகளை, உயிர் இழந்த ஏழைத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்குத் தர முன்வரவேண்டும் (பணம் உயி ருக்கு ஈடாகாது என்ற போதிலும்கூட, ஏழைக் குடும்பத்தி னரின் வாழ்வாதாரத்திற்கு அது ஓரளவு உதவக்கூடும்).

அண்டை மாநிலம், இப்படி நடந்துகொள்ளலாமா? உயிர் இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள், திருப்பதிக்குச் செல் வதை இனி புறக்கணிக்கவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
8.4.2015

Read more: http://viduthalai.in/e-paper/99313.html#ixzz3Widxkatd

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி தகர டப்பா சத்தம் போடுவோர்க்கு அர்ப்பணம்!

அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

வேத சடங்குகளுடன் தாலி கட்டி நடைபெற்ற கூத்து!

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின்மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பனர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக தொடங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிஃபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், புரோகிதர் வேத சடங்குகளுடன் தாலி கட்டித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99323.html#ixzz3Wie5vJWp

தமிழ் ஓவியா said...

ஏழைகளின் புரோட்டின் சத்துணவு மாட்டிறைச்சியைத் தடை செய்வதா?
மகாராட்டிர பால்வளர்ச்சித் துறையின் எதிர்ப்பு

மும்பை, ஏப்.8_ ஏழை களின் சத்துணவு மாட்டி றைச்சியைத் தடை செய்வதா? என்று மகாராட் டிர மாநிலத்தில் மாட்டி றைச்சித் தடைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும்வகையில் கேரளாவிலும், டில்லியிலும் இளைஞர்கள் மாட்டி றைச்சித் திருவிழா நடத்தி உள்ளனர்.

மாட்டிறைச்சித் திரு விழா கடந்த மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்) கேரளா வைத் தொடர்ந்து டில்லி யிலும் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப் பட்டுள்ள விற்பனை மற்றும் நுகர்வுக்கான தடையை எதிர்த்தே மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரளா, டில்லி கடந்த மாதம் பத்தாம் தேதி அன்று கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று டில்லியிலும் மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

மாட்டிறைச்சித் திரு விழா, சுதந்திரம்குறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைவருமாகிய எம்.பி. ராஜேஷ் கூறும்போது, எதை ஒருவர் உண்பது? எதை உடுப்பது? அல்லது எந்த மொழியில் பேசுவது-? என்பதை தாங்களாக தேர்வு செய்து கொள்வ தாகும். அதை எவரும் திணிக்கக் கூடாது. எங்களு டைய கவலை எல்லாம் இத்தடை நாடுமுழுவதும் பரவிவிடக்கூடாது என்பது தான் என்றார்.

மனுஸ் மிருதியில் மாட்டிறைச்சி

மேலும், எம்.பி.ராஜேஷ் கூறும்போது, இந்த மாட் டிறைச்சித் திரு விழாவுக்கு கட்சிகளைக் கடந்து அனைத்துதரப்பினரையும் அழைத்தோம். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்டி றைச்சித் திருவிழாவில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். காய்கறி உண வை மட்டுமே உண்ணக் கூடியவர்களுக்குகூட இந்தப் பிரச்சினையில் ஒற் றுமையைக் காட்டும்வகை யில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். மாட்டிறைச்சித் தடை என்பது மதத்தின் அடிப் படையில் விதிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமான தாக இல்லை.

மனுஸ்மிருதியில், ஒட் டகத்தைத் தவிர, அனைத்து விலங்குகளையும் உண்ண லாம் என்று வெளிப்படை யாகவே கூறப்பட்டுள்ளது. வலதுசாரிகளின் தலைவர் வினாயக் தாமோதர் சா வர்க்கார் மாட்டிறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தர்ம சாஸ்திரங்களிலும்கூட மாட்டிறைச்சி உண்பது குறித்து குறிப்புகள் உள் ளன என்று கூறினார்.

மாட்டிறைச்சிகுறித்த ஆய்வு அரசியல்தான்: கோல்வால்கர்

கேரளாவின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பி னரான வழக்குரைஞர் ஜாய்ஸ் ஜார்ஜ் கூறும் போது, ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.கே.சர்க்கார் குழுவை அமைத்தார். அக்குழுக் கூட்டத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும் கொள்கை வகுத்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் அதில் ஒன்றுமே கிடை யாது. முற்றிலும் அரசியல் தான் உள்ளது என்று கூறியது புகழ்பெற்றதாகும் என்று கூறினார்.

ஏழைகளின் புரோட்டின் சத்து

அண்மையில் மாநிலங் களவையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரான தேரேக் ஓபி ரையன் மாட்டிறைச்சி குறித்து பிரச்சினை எழுப் பியபோது, இந்த பிரச்சி னையில் மதக் கண்ணோட் டத்துடன் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான சிறு பான்மை மக்கள், தாழ்த் தப்பட்டவர்கள் மாட்டி றைச்சியை சாப்பிடுகி றார்கள். இது ஏழைகளின் புரோட்டின் சத்தாகும் என்றார்.

மாடுகளைப் பராமரிக்கும் கோகுல் கிராமம்

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பால் வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறும்போது, மகாராட்டிர மாநிலத்தில் கோரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள ஆரே குடியிருப்புப் பகுதி யில், பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கோகுல் கிராமம் எனும் பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பழைய பசுக்கள், எருதுகள் ஆகிவைகளுக்கு மறுவாழ்வு அளித்திட, அவைகளின் பராமரிப்புக்காக பயன் படுத்துவதற்காக ஒதுக்கப் பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கோகுல் கிராமம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்லபடுத்தப் பட உள்ளது. மாட்டிறைச் சித் தடையால் வயதான மாடுகள் தொடர்பாக அரசு அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய தாகவுள்ளது.

வீண் வேலை கோகுல் கிராமம் திட்டம் ஆரே பாது காப்புக்குழுவின் சார்பில் விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. வயதான மாடு களைவைத்து பராமரிப்பது, பசும்புல் வளர்ப்பது வீணான வேலை என் கிறார்கள். கட்சே கூறும் போது, பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங் களில் தப்சேரி பகுதிகளில் கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99346.html#ixzz3Wifbkm7x