Search This Blog

1.4.15

பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்டதற்கான சான்று

பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்டதற்கான சான்றுகள் இதோ:

36 comments:

தமிழ் ஓவியா said...

இனி பெண்கள் ஆம்ஆத்மி சின்னத்தை கையில் எடுக்க வேண்டியது தானா?


- ஊசிமிளகாய்

அரசியல் தலைவர்களும் சரி, சில சமூக அமைப்பின் தலைவர்களும் சரி, மகளிரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதில், ஒரு வகை இன்பம் காணும் போக்கு அண்மையில் மிகவும் மலிந்து வருவது வேதனையானதும், வெட்கக்கேடானதும் ஆகும்.

இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மகளிர்கள் எக்கட்சியினர் - கட்சியேயல்லாத வர்களானாலும் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணி நடத்தப்படல் வேண்டும். நடத்துகிறார்கள்.

பாலின வன்புணர்ச்சியைவிட மனோதத் துவப் போர் போல இது கிளம்பியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஏற்பட்ட பிறகு தான் இப்போக்கு மிக அதிகமாக தலை தூக்கி நிற்கிறது. ஒரு மத்திய (பா.ஜ.க.) இணையமைச்சர் பீகார் கிரிராஜ் சிங் என்பவர் மிகவும் வாய்க் கொழுப்புடன் சோனியா காந்தி நிறம் கருப்பாக இருந்தால் அவர் காங்கிரசுத் தலைமைக்கு வந்திருப்பாரா? என்று பேசியுள்ளார்!

ஒரு அரசியல் தலைவரைப்பற்றி இப்படி பேசுவதா?

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் மாநிலங்களவையில் இதேபோல் தென்னாட்டு மகளிர் நிறம் அழகு பற்றியெல் லாம் பேசி, அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வருத்தம் தெரிவித்தார்.

அதுபோலவே கோவாவின் முதல் அமைச்சர் (பா.ஜ.க.) பெண்கள் வெயிலில் நின்று போராடினால் அவர்கள் நிறம் கறுத்து விடும்; பிறகு அழகு போய் விடும் என்று கூறி அவர்களது போராட்டத்தைக் கிண்டலும் கேலியும் செய்துள்ளார்!

இப்படிப்பட்ட நவீன மனுதர்ம, கிருஷ்ணா வதாரங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது என்பது மிகப் பெரிய தேசிய அவமானம் அல்லவா?

இவர்களது வக்கிர புத்தியும், கீழ்த்தர ரசனையும் இப்படியா நாளும் பெருகுவது?

கிருஷ்ணன் பெண்களையும், சூத்திரர் களையும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறிய பாணியை இவர்கள் வேறு வகையில் கூறுகின்றனரோ? இவர்களது, கிருஷ்ண கடவுளே கறுப்புதானே!

பத்து பிள்ளைகள் பெற சங்கராச்சாரிகள் அருளுபதேசம் செய்வது,

ஒரு பெண் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத் தில் நீங்கள் (டில்லி வாக்காளர்கள்) பா.ஜ.க. வுக்கு வாக்களித்தால் இராமனுக்குப் பிறந்த வர்கள்; மாறி வாக்களித்தால் கண்டவர்களுக் குப் பிறந்தவர்கள் என்று தேர்தல் மேடையில் பேசி, இன்னமும் அந்த ஆர்.எஸ்.எஸ். அம் மணி பதவியில் தொடருகிறாரே, இதைவிட அரசியல் அநாகரிகம் வேறு உண்டா?

இப்படியே இவர்களைப் பேச விடாமல் தடுக்க ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தை கையில் எடுத்துக் கூட போராடும் நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுமே!

அந்த அளவுக்கு நாடு போகுமுன் மோடிகளும், அவர்களை ஆட்டி வைக்கும் அரசியல் பொம்மலாட்டக்காரர்களும் சிந்திக்கட்டும்.

மாற்றம் வரும்! மாற்றம் வரும் என்றனரே, வந்த மாற்றம் இதுதானா?

அவமானம்! அவமானம்!!

Read more: http://viduthalai.in/e-paper/98963.html#ixzz3W9xlqxTh

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி கிடைக்காமல் வாட வேண்டுமாம்! சொல்வது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அங்ரேல், ஏப்.2 அங்ரேல் (மே.வ) மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து விடுங்கள் அவர்கள் மாட்டிறைச்சி கிடைக்கா மல் பட்டினிகிடக்கட்டும் என்று உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்ததில் இருந்தே பாஜக தலைவர்கள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல கேபினெட் தகுதியுள்ள அமைச்சர் களும் தங்களின் பதவியை கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பேசி வருகின்றனர்.

மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிதோஷம் விலகவேண்டுமென்றால் அனைத்துப் பெண்களும் கருப்பு உளுந்தை சேலை யில் கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விதர்பா விவசாயிகளின் தற் கொலையைத் தடுக்க யோசனை கேட்டால் விதர்பா விவசாயிகள், விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு சாலை யோர நிலங்களில் மால்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை கட்டி அதன்மூலம் அதிகவருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

மற் றொரு புறம் கோவாவை ஆளும் பாஜக முதல் அமைச்சர் லட்சுமிகாந்த பரேஷ்கர், கருப்பான பெண்களைப் பிறர் தவறாகப் பார்ப்பார்கள் அவர்களுக்குத் திருமணம் ஆகாது என்று பேசி வருகிறார்.

இந்த வரிசையில் உள்துறை அமைச்சரின் பேச்சு, மிகவும் மட்டமான தாக இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் உள்ள எல்லை மாவட்டமான அங்ரேல் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது: பக்கத்து நாடான வங்க தேசத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படு வதை எல்லைப் பாது காப்புப் படையினர் தடுக்க வேண்டும் வங்கதேசத் திற்குள் ஒரு மாடு கூட போகக் கூடாது. இதை இந்திய, _ வங்கதேச எல் லையில் குவித்து வைக் கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.

அங்கே மாட்டுக் கறிக்குப் பஞ்சம் வரட்டும் மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்பட்டு அவர்கள் பட் டினியால் வாடட்டும் என்று எல்லைப் பாது காப்புப் படைவீரர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

தொடர்ந்து இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை, கேபினெட் அமைச்சர்களே பேசிவரு வது மக்களிடையே அமைச்சர்கள் மீதான மரியாதை தரம் தாழ்ந்து வருகிறது. 1958-ஆம் ஆண்டே மாட்டிறைச்சி உணவு தொடர்பான வழக்கொன் றில் தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம் தனிமனித உணவு உரிமையில் தலை யிடுவதை இந்திய அரச மைப்புச் சட்டம் அனுமதிக் காது, மாட்டிறைச்சி உண்பதும், உண்ணாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந் நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச் சியை தடை செய்யும் வகையில் பல்வேறு மறை முக திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் பக்கத்து நாட்ட வரான வங்கதேசத்தவரும் மாட்டிறைச்சி கிடைக் காமல் தவிக்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச் சரே பேசி இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டு மன்றி அயல்நாட்டு நட்புறவுக் கொள்கைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும்.

Read more: http://viduthalai.in/e-paper/98952.html#ixzz3W9yOx9nh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தனிக்கோயில்

மார்க்கண்டேயனுக்காக திருக்கடையூரையடுத்த மணல் மேட்டில் தனிக் கோயில் இருக்கிறதாம்.

அவன்தான் சிவனிடம் என்றும் பதினாறு என்று வரம் பெற்று விட் டானே அவன் அந்தப் பக்கத்தில்தானே பதினாறு வயதுள்ளவனாக நட மாடிக்கொண்டு இருக்க வேண்டும்; பக்தர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/98954.html#ixzz3W9yZEWIf

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க முடியாதாம்
மத்தியப்பிரதேச முதல்வர் சவ்கான்

போபால், ஏப்.2 மத்தியப்பிரதேச மாநி லத்தில் மாட்டிறைச்சிக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கான் எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனு மதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சுவேதாம்பரர்கள் மத்தியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான் கூறும்போது, எங்கள் அரசு பால் உற்பத்தி, காய்கறி, பழங்கள், தானியங்கள் உற்பத்தியை அதிகரிப் பதன்மூலம் காய்கறி உணவுமுறையை முன்னெ டுக்கிறோம். எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றார்.

மத்தியப்பிரதேசத்தில் மக்கள் நவீன இறைச்சிக் கூடங்களை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால், அது நடைபெறாது. எங் கள் அரசு இருக்கும்வரை நவீன இறைச்சிக்கூடங் களுக்கு அனுமதி அளிக் கப்பட மாட்டாது.

மத்தியப்பிரதேசத்தில் 1992ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான சுந்தர்லால் பட்வா அரசு பசுவைக் கொல்லத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. நீண்ட காலத்துக் குப் பிறகு அந்தச் சட் டத்தில் கூடுதலாக அதி காரங்கள் அளிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.

பசுக்கொலைத் தடுப் புச்சட்டத்தை கடுமை யாக்கினோம். பசுவைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு ஒப்பாக தண்டனைகள் கொண்டு வரப்பட்டது என்றார்.

மாட்டிறைச்சி வணிகம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் மாட் டிறைச்சி எடுத்துக்கொள் வது உள்ளிட்ட அனைத் தும் மத்தியப்பிரதேசத்தில் கடுமையான தண் டனைக்கு உள்ளதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/98953.html#ixzz3W9ynVIfx

தமிழ் ஓவியா said...

பெருமை



மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/98948.html#ixzz3W9zbvS5e

தமிழ் ஓவியா said...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடடே, உலகிலேயே மிகப் பெரிய கட்சி பிஜேபியாமே!

8.8 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி உலகிலேயே பிஜேபி என்று பிஜேபி அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொதுக் கூட்டங்களில் ஒரு கருத்தைத் தவறாமல் சொல்லி வருகிறார்.

மிஸ்டு கால் மூலம் பிஜேபியினர் உறுப்பினர்களை சேர்க்கிறார்களாம். சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் மிஸ்டு காலில் நிற்கப் பார்க்கிறார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் பொழுதெல்லாம் மக்கள் மத்தியில் பலத்த கரவொலி வெடிக்கிறது.

பிஜேபியின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களுக்கே ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிஜேபியின் ஆரம்ப உறுப்பினராகி (Primary Membership) உள்ளீர்கள், உங்களடைய மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று நாடறிந்த கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருக்கே இப்படி வந்துள்ளது என்றால், பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் பித்தலாட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் - வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/page-5/98969.html#ixzz3WA1omQrm

தமிழ் ஓவியா said...

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும் உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை, ஏப்.2_ பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தர வுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தர விட்டது.

தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளி யிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இதனிடையே, மீண்டும் 2012-_2013-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு அரசுப் பணியா ளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில், பணி யிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின் பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி. எஸ்.சி. செயலர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற் கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தர விடப்பட்டது.

இந்த வழக்கு விசா ரணை நீதிபதி எஸ்.நாக முத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பணி நியமனம் தொடர் பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணி யாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடை பெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின் றன.

மனுதாரர் நீதிமன்ற அவ மதிப்பு வழக்குத் தொடர வில்லையெனில் உயர் நீதிமன்ற உத்தரவை டி.என். பி.ஸ்.சி. முழுமை யாக நிறை வேற்றி இருக் காது. நீதிமன்ற உத்தரவுகள், விதிமுறைகளை முழுமை யாகப் பின் பற்றுவதாக அரசு தலைமை வழக் குரைஞர் உறுதி அளித்துள் ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடை பெறாது எனவும், நிபந் தனையற்ற மன்னிப்பையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் கோரியுள்ளார்.

இதேபோன்று மீண்டும் நடைபெறாது என நீதி மன்றம் நம்புகிறது. கருணை அடிப்படையில் அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/98987.html#ixzz3WA29ss6r

தமிழ் ஓவியா said...

பாண்டேஜ் பாண்டே ........ இறுதியில் வெல்வது பெரியார்தான்!

பார்ப்பானுக்கு புத்தி கிடையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. தனது ஆர்எஸ்எஸ் எஜமானர்களை திருப்தி செய்யவேண்டும், தமிழர் தலைவர் மற்றும் திராவிடர் கழகத்தினை கொச்சைப்படுத்தவேண்டும் என்கிற நப்பாசையில் நிகழ்ச்சி நடத்தப் போய் ஆப்படித்துக் கொண்ட குரங்காய் தந்தி தொலைக்காட்சி பாண்டே மாட்டிக் கொண்டது நல்ல வேடிக்கை.

இருந்தாலும் ஒரு வகையில் நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியதை பார்த்தவர்களை விட இணையதளம்மூலம் பார்த்தவர்கள் மிக அதிகம். குறைந்தது நான்கு முதல் அய்ந்து இலட்சம் பேர் இணையத்தின்மூலம் பார்த்திருப்பார்கள் என ஊடகத் துறை நண்பர் ஒருவர் கூறினார்.

கழகத்தைச் சாராத நடுநிலையாளர்கள் மற்றும் நம்மீது பெரிய அபிப்பிராயம் இல்லாதவர்கள்கூட இந்தப் பேட்டியை பார்த்தவுடன் தமிழர் தலைவர்மீதும். நமது கழகத்தின் செயல்பாடுகள்மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்பது நிதர்சனமான உண்மை.

தங்களை எப்பொழுதும் மெத்தப் படித்தவர்கள், அறிவு ஜீவிகள் என எண்ணிக்கொள்ளும் மற்றும் அங்ஙனம் செயல்படும் பார்ப்பனர்களுக்கு பாண்டேயின் முட்டாள்தனமான கேள்விகள், ஆசிரியரின் பளீர் பளீர் பதில்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதுதான் உண்மை.

தந்தி தொலைக்காட்சி பார்ப்பன மயமாகும் இச்சூழலில், இத்தகைய நிகழ்வு அதன் முதலாளிகளுக்கு கண் திறந்திருக்கும் என நம்புகிறோம்.

அதன் வெளிப்பாடே அவர்கள் திரும்பத் திரும்ப நமது மறுப்பினை ஒளிப்பரப்பியது. ஆனால், இன்னொரு தொலைக்காட்சியில் பெரும் பொறுப்பில் உள்ள நண்பர் ஒருவர் கூறிய வேறொரு காரணம்கூட உண்மையாக இருக்கலாம்.

பாண்டேவின் தில்லுமுல்லு இந்திய ஊடக வரலாற்றில் முதன்முறையாக காணப்பட்ட ஒன்று, நிச்சயம் பாண்டேவின் இந்த செயல் கிரிமினல் வழக்காகப் பதிவுச் செய்ய முடியம். அந்த அச்சத்தின் காரணமாகவே இந்த மறுப்பு ஒளிப்பரப்பு நடவடிக்கை என்றார். எதுவோ, ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்திற்கு பாண்டேவுக்கும் அவர் சார்ந்த காவிக் கூட்டத்திற்கும் கிடைத்த பரிசு.

- வெளிச்சம்

Read more: http://viduthalai.in/page-8/98993.html#ixzz3WA2La7I8

தமிழ் ஓவியா said...

சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதில்லை நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவரின் பேச்சிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு

மும்பை, ஏப்.2_ பாஜக எம்பியும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரு மான டி.கே.காந்தி புகை யிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தார். அதில் புகைபிடிப்ப தாலோ அல்லது வேறு ஏதாவது வகையில் புகை யிலையை உட்கொள்வ தாலோ புற்றுநோய் ஏற் படாது. அப்படி புற்று நோய் ஏற்படும் என்று இதுவரை எந்த ஒரு உறு தியான ஆய்வு முடிவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இதுவரை நாடு முழுவதும் புற்று நோய் ஏற்படக்காரணம் புகையிலைதானா என்று கருத்துக்கணிப்புகள் எடுக் கப்படவில்லை. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகை யிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப் பில்லை என்றே தெரிகி றது எனவும் தனது அறிக் கையில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து சிகி ரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளின்மீது அச்சிடப்படும் எச்சரிக்கை வாசகமும், படமும் விலக் கப்படும் என்பது உறுதியா னது. இந்நிலையில் மத்திய சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சகம் நிலைக்குழுத் தலைவரின் இந்த அறி விப்பு அவரது சொந்தக் கருத்து என்று கூறியுள் ளது.

கடந்த வாரம் புகை யிலை உற்பத்தியாளர்கள் வர்த்தக அமைப்பு மத்திய அரசுக்கு சில நிபந்தனை களை விதித்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதா வது: தற்போது புகையிலைப் பொருள்களின்மீது அச் சிடப்பட்டுவரும் படங் கள் மிகவும் விகாரமாக உள்ளன. இதனால், குழந் தைகள் மனநிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதேவேளை யில், மக்களிடையே ஒரு அச்ச உணர்வும் ஏற்படும்.

இதனால் புகையிலை தொடர்பான வர்த்தகத் தில் சரிவு ஏற்பட வாய்ப் புள்ளது. அப்படி சரிவு நேர்ந்தால் புகையிலை தொடர்பான வணிகத்தில் இருக்கும் தொழிற்சாலை கள் கடுமையான பொரு ளாதார இழப்பைச் சந் திக்க நேரிடும். இதனால், இதை நம்பி வாழும் லட் சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.

ஆகவே, புதிய நிதியாண்டு முதல் (2015_2016) ஏப்ரல் ஒன் றிலிருந்து எச்சரிக்கைப் படங்கள் மற்றும் வாச கங்களை அகற்றவேண் டும் என்று கேட்டிருந்தது. இதனை அடுத்து நாடா ளுமன்ற நிலைக்குழுத் தலைவரின் பேட்டி

Read more: http://viduthalai.in/page-8/98992.html#ixzz3WA2gAIyf

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தேசியக் கொடியில் காந்தியார் ராட்டை சின்னம்தான் இடம்பெற வேண்டும் என்று போராடிய நேரத்தில், அசோகச் சக்கரம் இடம்பெறச் செய்த பெருமைக்குரியவர் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு

தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!


உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து..

தமிழ் ஓவியா said...

கிறித்தவர்களின் புனித வெள்ளி நாளில்
நீதிபதிகளின் மாநாட்டை நடத்த வேண்டுமா?

தீபாவளியன்று இதுபோல் நடத்துவீர்களா?

சிறுபான்மையினர் மத்தியில் தவறான எண்ணம் ஏற்படும்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மற்றொரு நீதிபதி கடிதம்


புதுடில்லி, ஏப். 3_ உச்சநீதிமன்ற நீதிபதி புனிதவெள்ளி தினத் தன்று மாநாட்டை நடத் துவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். மற்றொரு நீதிபதி இதனால் நீதிபதி களிடையே மதவேறுபாடு வெடிக்கத்துவங்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன், இவர் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல். தத்து அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது:

புனித வெள்ளியன்று மாநாடா?

கிறிஸ்தவர்களின் விழாவான புனிதவெள்ளி யன்று நீதிபதிகளின் மாநாடு ஒன்றை தாங்கள் நடத்தப்போகும் அறிவிப்பு எனக்கு வந்திருக்கிறது, புனித வெள்ளி கிறிஸ்த வர்களின் முக்கிய விழாக் களில் ஒன்றாகும், இந் தியா மட்டுமல்ல, உலகி லுள்ள அனைத்து கிறிஸ் தவர்களும் இந்த நாளை கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்ததாக முக்கியத் துவம் கொடுத்து கொண் டாடுகிறார்கள்.

இந்த நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங் களுக்குச்சென்று வழி படுவர், குடும்பத்தாருடன் இணைந்து விழாக்களை கொண்டாடி மகிழ் வார்கள், நானும் கிறிஸ் தவ மதத்தைச் சேர்ந்த வனாகையால் புனித வெள்ளி எனக்கும் ஒரு முக்கியமான நாளாகும், அன்றைய தினம் எனது குடும்பத்தாருடன் சேர்ந்து விழாவில் கலந்து கொள் வேன், இன்றைய காலக் கட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருக்க இதுபோன்ற விழாக்கள் ஒரு முக்கிய காரணியாக உள்ளன. ஆனால் தாங் கள் புனிதவெள்ளியன்று மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்று குறிப் பிட்டிருந்தார். தீபாவளியன்று நடத்துவீர்களா?

மேலும் அதில் குறிப் பிட்டுள்ளதாவது தீபா வளி, ஹோலி தசரா (நவராத்திரி) சங்கராந்தி போன்ற விழா நாட்களில் எந்த ஒரு அலுவல் நிகழ்ச்சியும் நடக்காத போது, புனிதவெள்ளி யன்று மட்டும் ஏன் மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்தக்கடித்தில் புனித வெள்ளி போன்ற முக் கியமான விழாக்காலங் களில் அலுவல் தொடர் பான மாநாட்டை நடத் துவது நீதிமன்றத்தின் மீதான சிறுபான்மையி னரின் பார்வை தவறாகப் படும், இது போன்ற முக் கியமான மாநாடுகள் புனித வெள்ளிதினம் தான் வைக்க வேண்டும் என்றில்லை.

தலைமை நீதிபதி பதில் கடிதம்

18 மார்ச் அன்று ஜோசப் குரியன் எழுதிய இந்த கடிதத்திற்கு எச்.எல். தத்து பின்வருமாறு பதி லளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: முக்கிய மான அலுவல்கள் சமூ கத்தின் நலன் கருதியே எடுக்கப்படுகின்றன. சமூ கத்தின்நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், மேலும் சமூக நலன் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடையே முக்கிய பணி யில் உள்ளவர்கள் ஈடு கொடுத்துச் செல்ல வேண்டும், என்று பதி லளித்திருந்தார்.

புனிதவெள்ளியன்று நடைபெறும் இந்த மாநாடு நீதிமன்ற அலு வல்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் மத்திய அரசின் கொள்கைசார்ந்த முடிவு குறித்து ஆய்வு செய்யும் மாநாடாகும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். விரைவில் கோடைவிடுமுறை மற்றும் நீதிமன்ற புதிய ஆய்வுக் கொள்கைகள் வகுக்கும் பணிகள் தொடர்ந்து இருக்கும் போது மத்திய அரசு உச்சநீதிமன்றம் விரைவில் கொள்கை சார்ந்த முடிவை நடத்தி முடிக்க அழுத்தம் கொடுத் ததன் காரணமாக புனிதவெள்ளி தினத்தை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு எச்.எல். தத்து ஆளானார் என்று சட்டவல்லுநர்கள் தங்கள் கருத்தைக் கூறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்திலேயே மத சர்ச்சை

உச்சநீதிமன்ற நீதிபதி களின் இடையேகூட மதத் தொடர்பான சர்ச்சைகள் தோன்றி விட்டன. பிஜேபி என்று ஆட்சிக்கு வந் ததோ அன்று முதல் மதப் பிரச்சினைகள் பலவகை களிலும் தலை தூக்கி நிற் கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/99010.html#ixzz3WFvl1Wxa

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் கங்கைக் கரைக்கு வந்தபோது, ஒரு புலையனும் (சுடுகாட்டில் பணிபுரிபவர்) அவரது மனைவியும் குறுக்கிட் டனர். ஒரு சீடன் அவர்களிடம், தாழ்ந்த ஜாதியில் பிறந்த நீங்கள், குருநாதர் வரும் போது இப்படி குறுக்கே போகி றீர்களே? என்றார். அதற்கு அவன், எல்லா உயிர்களி லும் கடவுளே குடியிருக் கிறார் என்பது தெரி யாதா? எனக் கோபித் தான்.

உடனே சங்கரர், நீ சொல்வது சரியே! அறி யாமல் சொன்ன சீடனை மன்னித்து விடு என்றார். அப்போது புலையனும், அவன் மனைவியும் சிவ பார்வதியாக காட்சி தந்தனர். அங்கு தான் சங்கரர், மனித தர்மம் பற்றிய மானிஷா பஞ்ச கம் என்னும் நூலை இயற்றினார்.

எல்லா உயிர்களிலும் கடவுளே இருக்கிறார் என்று சொன்னது சிவன் என்றால் அந்த சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்ட தோழன் ஏன் அர்ச்சக னாகக் கூடாது? ஆகமங் களைத் தூக்கிக் கொண்டு ஏன் உச்சநீதிமன்றத்திற்கு ஓடுகிறார்கள்?

Read more: http://viduthalai.in/e-paper/99017.html#ixzz3WFvuvvsv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் நகைகள் கோவிந்தா



சென்னை, ஏப்.3- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் கொள்ளை யர்கள் புகுந்து 9 பெண் களிடம் தங்க சங்கிலி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறித்துச்சென்று விட் டனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. பக் தர்கள் கூட்டம் அதிகமி ருந்தது. இணை ஆணை யர் சிறீதர், துணை ஆணை யர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளை யத்தையும் மீறி பக்தர்கள் கூட்டத்தில் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் புகுந்து விட்டனர்.

9 பெண்களிடம் 55 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்ட தாக புகார்கள் வந்தன. கோவிலுக்கு உள்ளேயே 2 பெண்கள் கூட்ட நெரி சலில் சிக்கியதை பயன் படுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றனர். கண வன் கண் முன்னேயே பெண் ஒருவர் தாலி சங் கிலியை பறிகொடுத்தார்.

மயிலாப்பூர் பஜார் வீதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பையில் வைத் திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளைக்கும்பல் பறித் துச் சென்று விட்டனர்.

மயிலாப்பூர் கோவில் திருவிழாவில் பெரிய கலவரம் நடக்கிறது என் றும், கழுத்தில் தங்க சங்கிலி போட்டு செல்லா தீர்கள் என்று ஏமாற்றி அபிராமபுரத்தில் இளம் பெண் ஒருவர் அணிந் திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை அதே பகு தியைச் சேர்ந்த நபர் ஒருவர் அபகரித்து சென்று விட்டார். இதுதொடர் பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/99014.html#ixzz3WFw1u5G1

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர் களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/99000.html#ixzz3WFwHQUUE

தமிழ் ஓவியா said...

நிலவை விழுங்கும் பார்ப்பனியப் பாம்பு

4.4.2015 சந்திர கிரகணம்

பூமி சூரியனைச் சுற்றிவரும் 12 மாதங்களில், 12 முறை பூமியைச் சுற்றிவரும் நிலவு, 12 முறை சூரிய ஒளியை முழுமையாக பிரதிபலிக்கும்போது வெள்ளுவா அல்லது பௌர்ணமி.

12 முறை முழுமையாக பிரதிபலிக்காதபோது காருவா அல்லது அமாவாசை. பூமி 23 டிகிரி சாய்ந்திருப்பதுபோல், நமது பூமியைச் சுற்றிவரும் ஒரே ஒரு துணைக்கோளான நிலவு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது.

நிலவு பூமியின் ஒரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும், மற்றொரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும் ஆகிறது. நிலவில் ஒரு இரவு என்பது 14 நாள்கள் ஒரு பகல் என்பது 14 நாள்கள். 24 மணி நேரத்தில் இரவையும், பகலையும் உணர்ந்து வாழப்பழகிவிட்ட மனிதன், நிலவில் குடியேற முடியாததற்கு அதுவும் ஒருகாரணம்.

பூமியில் வாழும் அனைவரும் நிலவை மேலே பார்க்கவில்லை பக்கவாட்டில்தான் பார்க்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும் 5 டிகிரி சாய்வாக உள்ள நிலவு சூரியனை நோக்கி எத்தனை அளவு கோணத்தில் திரும்பி, ஒவ்வொரு நாளும் நாளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறதோ அதைத்தான் வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள். நிலவு வளர்வதோ தேய்வதோ இல்லை. சூரிய ஒளியின் பிரதி பலிப்பின் அளவீடுதான் அந்த தோற்றத்திற்கு காரணம் நிலவின் பூமியைச்சுற்றும் பெயர்ச்சியானது சுருள் வடிவ நீள்வட்ட பாதையாகும். பூமிக்கும், சூரியனுக்கும் ஆன நேர்கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும்போது சூரிய ஒளியை நிலா மறைத்து நகரும். அப்போது நிலவின் நிழல் பூமியின் மீது விழுந்து நகர்ந்து கொண்டே செல்லும். இது கதிரொளி மறைப்பு அல்லது சூரியகிரகணம்.

பூமி ஒரு நிமிடத்திற்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. ஆனால் நிலவு ஒரு நிமிடத்திற்கு 1 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச்சுற்றுகிறது. அந்த அடிப்படையில் நிலவின் நிழல் பூமியில் நேர்க்கோட்டு நாடுகளின் மேல் நகர்ந்து கொண்டே இருக்கும். எல்லா நாடுகளின் மீதும் விழாது.

அதேபோல் நிலவுக்கும் சூரியனுக்குமான நேர் கோட்டில் நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அதாவது நிலவொளி மறைப்பு அல்லது சந்திரகிரகணம். நிலவின் சூரியஒளி பிரதிபலிப்பை பூமியின் நிழல் மறைத்துக் கொணடே நகரும். இதுவும் எல்லா நாடுகளிலும் தெரியாது.

இப்படி கதிரெளி மறைப்பும் (சூரிய கிரகணம்) நிலவொளி மறைப்பும் (சந்திரகரணகம்) எந்தெந்த ஆண்டு, எந்தெந்த மாதம், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை வரும் 2100 ஆம் ஆண்டுவரை வானியல் அறிவியல் துல்லியமாக குறித்து வைத்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி நிகழ்ந்த கதிரொளி மறைப்பை அய்ரோப்பிய நாடுகளில் கண்டுகளித்தார்கள்.

இந்தியாவின் மீது நிலவின் நிழல் அந்த நாளில் விழாததால் இந்தியாவில் அதைப்பற்றி ஒன்று கண்டு கொள்ளாமல்விட்டது ஆன்மிகம். ஆனால் ஏப்ரல் 4 ஆம்தேதி நிலவொளி மறைப்பு (சந்திரகிரகணம்). இந்தியாவில் தெரிவதால் இந்திய மக்கள் மீது ஆரியப் பார்ப்பனியம் அடுக்கடுக்காக அமோக ஆதிக்கம் செலுத்தி, மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்க தயாராகி வருகிறது.

நிலாவைப் பாம்பு விழுங்குகிறது என்றும் கிரகணத்தின் போது கோவில் நடைச்சாத்து என்றும், கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்றும் சமைத்த உணவை அந்த நேரத்தில் மூடி வைக்கவேண்டும் என்றும் அந்த நேரத்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ?

இந்தியாவில் தெரியாத கதிரொளி மறைப்பைக் கண்டுகொள்ளாத பார்ப்பனியமே, பூமியின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் நிலவின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லாத சனிப்பெயர்ச்சியையும், குருப் பெயர்ச்சியையும் மக்கள் பண்பாட்டின் மீது கட்டிப் போட்டிருக்கும் உனது கற்பனைக் கயிற்றை வருங்கால தலைமுறையினர் பூமி சுழற்சி பெயர்ச்சி புரிந்தறி வாளர்களாக மாறி உன்னை பொசுக்கும் காலம் தொடங்கி விட்டது. பூணூலும், குடுமியும் பூமிக்குள் புதையும் காலம் கனிந்து விட்டது.

- செந்தமிழ்ச்செல்வன், சேகுவேரா

Read more: http://viduthalai.in/page-2/99003.html#ixzz3WFwTnwx6

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

-குடந்தை கருணா

தந்தி டிவியில், கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே,சில வாசகங்களை பெரியார் சொன்னதாக எடிட் செய்து வெளியிட்டார்; அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொன்னார் என்றெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டா யத்தை உண்டு பண்ணியுள்ளது.

நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டி ருக்கிறது என்றால், எந்த அளவு, அந்த நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சி நடத்திய ரங்கராஜ் பாண்டேயின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டுவிட்டது. பாண்டேவை தயார் செய்த சங் பரி வாரங்களுக்கு சரியான பதிலடி யாகவும் அமைந்து விட்டது.

இன்னொரு தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் வரக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து, தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வெடிகுண்டு வீசிய கலவரக்காரர்களுக்கும்,

தந்தை பெரியார் சொல்லாததை சொன்னதாக திரிபுவாதம் செய்த பாண்டேவின் செய்கையை அதே தந்தி டிவி மூலம், மறுப்பு வாதத்தை வெளியிட செய்த திராவிடர் கழகத்தின் அணுகுமுறைக்கும், உள்ள வேறுபாட்டையும், ஜனநாயக பண்பையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நல்ல வாய்ப்பையும், விளம்பரத்தையும் அளித்த ரங்கராஜ் பாண்டேவிற்கு நன்றி.

பாண்டேவின் முகத்திரையை கிழித்து எறிந்த தந்தி டிவிக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page-2/99006.html#ixzz3WFwhwjWn

தமிழ் ஓவியா said...

மகளிரைக் கொச்சைப்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடந்த போது மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைப்பார்த்து அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத்யாதவ் உங்களுடைய குணநலன்கள் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன் முதல் பல்வேறு பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சரத்யாதவ்மீது மகளிர் உரிமை ஆணையம் வழக்கு தொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜீவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் பெண் உறுப்பினர்களும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி சந்தோஷ் அஹல்வாட் என்ற பாஜக எம்பி பேசும் போது சில நேரங்களில் வாய்தவறி சில வார்த்தைகள் வந்துவிடும், இது மனித இயல்பு; இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே ஊடகங்களின் உதவியால் பெரிதுபடுத்து கின்றன என்று கூறினார். இதே வாதம் சரத்யாதவுக்குப் பொருந்தாதா? மேலும் அன்று சரத்யாதவ் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று பேசிய பாஜக பெண் உறுப்பினர்கள் சோனியா குறித்து கிரிராஜ் சிங் பேசிய விவகாரத்தில் முக்காடிட்டுக்கொண்டு அமைதி காத்துக் கொண்டு வருகின்றனர்.

பெண் உரிமைத்தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முதலாவதாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பெண் எம்பி மஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் விரைவில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது, ஆகவே, பதவிக்காக பெண்ணுரிமையை தூக்கிஎறியவும் அவர் தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. சோனியா குறித்து அவதூறாகப் பேசிய கிரிராஜ் சிங் நைஜீரியப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து இந்தியாவுக்கான நைஜீரியத் தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார். இது குறித்து அவர் ஊடகவியலாளர் களிடம் கூறும் போது அமைச்சரின் கருத்து விரும்பத் தக்கதல்ல, மிக மோசமானது! இது தொடர்பாக வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம் எனக் கூறி உள்ளார்.

புதன் கிழமை உள்துறை அமைச்சர் அயல்நாட்டி னருக்கு மாட்டிறைச்சிகொண்டுசெல்வதை தடை செய்ய வேண்டும் அந்நாட்டினர் மாட்டிறைச்சி கிடைக்காமல் வாடவேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இவர்களின் பேச்சால் அயல்நாட்டு நட்புறவிற்கும் பங்கம் வரும் என்றே கருதப்படுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லியுள்ளான். அத்தகைய நூலை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும் கூறியுள்ளார்.

இது மேற்கண்ட எல்லாவற்றையும்விட கொடுமை யானது - கண்டிக்கத்தக்கது.

காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஆனால், ஒரே ஒரு வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காரைக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு பெண் முதல் அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில் (மக்கள் முதல்வர் தானே) இந்தக் கொடுமைகளைத் தடுக்க, கொடுமைகளைச் செய்தோர்மீது கடுமையாகத் தண்டிக்க போதிய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டாமா!?

திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்தப் பிரச்சினைகளைக் கடுமையாகக் கருதுகிறது; பெண்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் படும். கொடுமைகள், பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவைகளைக் கண்டித்தும் எதிர்த்தும் உரிய முறையில் போராட திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிர் மற்றும் பாசறை அணி தயங்காது.

வரும் ஞாயிறன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ள மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/99001.html#ixzz3WFwrWISe

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப் பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக் கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார். அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxeiZ6p

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்!

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை.

உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவு தான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFxnygkf

தமிழ் ஓவியா said...

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்

பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.

’கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா
வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா’

பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா ஆண், பெண் குறியையும் மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

’ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே
ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்’

பொருள்: நடுக்காட்டில் அச்சப்பட்டாலும் திருடர்கள், எதிரிகள் நடுவில் மாட்டிக் கொண்டாலும், ஆயுதத்தால் தாக்கப்படும்போதும் போரிலும், விஷம் குடித்திருந்தாலும் இதைப் பாராயணம் செய்தால் உடனே காப்பாற்றப் படுகிறார்கள்.

’போஜயேத் ப்ராஹ்ணாம் ஸ்சைவ
லக்ஷ்மீர்வஸ்தி ஸர்வதா
பதிதம் கவசம் நித்யம் பக்த்யா தவ மயோதிதம்’

பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.

ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் VIII சோட்டானிக்கரை பகவதி அம்மன்.

-போத்தனூர் இரா. உமாபதி

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFy2E3dQ

தமிழ் ஓவியா said...

கம்பன் புலமையில் சிறந்தவனா?

கம்பராமாயண இன் சுவைப் பெருநாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங்களாகும். அவைகளை அவர் கடவுளின்பமாகவே கண்டாரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக நம் அடிகளோ,

கம்பர் பாடல்கள் சிறந்த நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும்,

கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.

கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார். சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையாசிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதியுள்ளார்.

அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என்றெண்ணுதல் பொருந்தாது. சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.

இதனை அடிகளின் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் சாகுந்தல நாடக ஆராய்ச்சி முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.

மறைமலை அடிகள் வரலாறு (மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)

Read more: http://viduthalai.in/page-7/99053.html#ixzz3WFyAD1IJ

தமிழ் ஓவியா said...

மோடி கடைப்பிடிக்கும் மதச் சார்பின்மை இதுதான்!
ராமன் கோயில் கட்டி முடிப்பதில் பிரதமர் தீவிரமாம்

ராமஜென்மபூமி அமைப்பின் தலைவர் கூறுகிறார்

லக்னோ, ஏப்.3_ இங் கிலாந்திலிருந்து வெளி வரும் டெய்லி மெயில் (30.3.2015) ஏட்டுக்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் அளித்த பேட்டியில் ராமன் கோயில் கட்டு வதற்காக முகாமடித்துக் காத்திருக்கும் காலம் முடிந்து விட்டது. ராமன் கோயில் கட்டுவதில் தீவிர மான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துவருகிறார் என்று கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைதி யாக இருக்கின்ற நேரத் தில், அயோத்தியில் விரை வில் ராமன் கோயில் கட்டுவதற்கான முடிவை பிரதமர் மோடி எடுக்க உள்ளதாக ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் நம்பிக்கை வெளிப்படுத்தி யுள்ளார்.

பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அயோத் திப் பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயன்று வருகிறது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் சட்டத்தை கொண்டுவர உள்ளது. ராமன் கோயில் கட்டுவதற்கான காலம் கனிந்து வருகிறது என்று தாஸ் கூறுகிறார்.

மேலும் தாஸ் கூறும் போது,கடவுள் ராமனை கூடாரத்துக்குள் அடைத்து வைத்து காத்திருக்கும் காலம் முடிந்துவிட்டது. அயோத்தியில் அற்புதமாக ராமன் கோயிலைக் கட்ட பிரதமர் மோடி தீவிர நட வடிக்கைகளை எடுத்துவரு கிறார் என்றார்.

விஸ்வஹிந்து பரி ஷத்தை வழிநடத்திவரும் அமைப்பான ராம் ஜென்மபூமி நியாஸ் ஏற் கெனவே ஆயிரக்கணக் கான தூண்களை அயோத் திக்கு அருகில் உள்ள கர்சேவாக் புரம் என்கிற பகுதியில் அமைத்துள் ளது. அந்தத் தூண்களைக் கொண்டு ராமன் கோயில் கட்ட அனுமதி கிடைக் கும் சில நாள்களிலேயே அயோத்தியில் ராமன் கோயில் கட்டி முடிக்கப் பட்டுவிடும்.

மோடியின் பதவிக்காலத்தில்

தாஸ் கூறுகையில் இந்த விவகாரத்தில் மோடியை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நாங் கள் எதிர்பார்க்கிறோம். மோடியின் பதவிக்காலத் திலேயே ராமன் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, இப்போதைக்கு இந்தப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவர கட்சி விரும்பவில்லை. ராமன் கோயில் விவகாரம் உணர்ச்சிபூர்வமானது. இப்போது சீர்திருத்தங் களையும், நில சட்ட வரைவுகுறித்துமே அரசு முன்னிறுத்தும்என்றார்.

இதனிடையே சாமி யார்களின் பெரிய அமைப் பாக உள்ள அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் கூறும்போது, மத்திய அரசு கோயில் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமான முடிவை எடுப் பதை அனுமதிக்கமாட் டோம் என்கிறார்கள்.

அதிக கூட்டங்கள்

அகாரா பரிஷத் அமைப்பில் புதிதாக தேர்வாகியுள்ள தலைவ ரான மகந்த் நரேந்திர கிரி கூறும்போது, ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தொடக் கத்தில் இருந்து உள்ள மதத் தலைவரான ஹஷீம் அன்சாரியை விரைவில் சந்தித்து திட்டத்தில் முழு வடித்தை கொடுப்பதற்காக பேச உள்ளேன் என்றார்.

பிரச்சினைக்குரிய இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவதற்கு, ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு முசுலீம் களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அகாரா பரி ஷத் பங்களிப்பு இருக்கும். அனைத்து (நான்கு) சங்கராச்சாரியார்கள், முக்கிய முசுலீம் மதத் தலைவர்களுடன் கோயி லுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பின்னர் இந்து மதத் தலைவர்களின் உதவி பெற்று மஸ்ஜித்தும் கட்டப்படும்.

மேலும் கிரி கூறுகை யில், இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் நாடு முழுவதுமிருந்து நாசிக் கில் நடைபெற உள்ள கும்பமேளாவில் கூடும் சாமியார்களிடம் முழு வடிவத்துடன் உள்ள திட் டத்தை அளிக்க உள் ளோம் என்றார்.

அன்சாரியிடம் இது குறித்துக் கேட்டபோது, ராமன் சிலையை கூடா ரத்துக்குள் வைத்திருப்ப தற்கு எதிரானவன் நான். அதற்காக முசுலீம்களின் கருத்தை புறக்கணிப்பதற் கும் அரசை அனுமதிப்ப தாக பொருள் கிடையாது. பிரதமர் மோடியை சந் திப்பதற்கு விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுள்ளோம்.

நரேந்திர கிரி இந்த விவகாரத்தில் விவாதிப்பதை நான் வர வேற்கிறேன். மதப் பிரச் சினைகளில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் அகாரா பரிஷத் அமைப்பை, தீர்மானிக்கக்கூடிய முக் கிய அமைப்பாக நான் கரு துகிறேன். ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் பிரச் சினை மதப் பிரச்சினை. கேலிப் பொருளாக்கும் சூழலை தேவையின்றி உருவாக்குகிறார்கள். இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தையின் மூல மாகவே பிரச்சினையில் தீர்வை எட்ட முடியும் என்று அன்சாரி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தின் கூடுதல் வழக் குரைஞர் மற்றும் சன்னி வக்ப் வாரியம் வழக்குரை ஞருமாகிய சவர்யாப் ஜிலானி இந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர் ஆவார். அவர் ஏற்கெனவே இவ் விவகாரம் குறித்துக் கூறும்போது, நாங்கள் உச்சநீதிமன் றத்தின் முடிவையே இந்த வழக்கில் எதிர்பார்க்கி றோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/99060.html#ixzz3WFyO76fV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ருத்ராட்சம்

கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக் காலம் நெருங் குவதால், என் கட மையைச் செய்ய அனு மதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளை யாடுகிறாயா?

ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகைகூட உன்னால் என்னை நெருங்க முடி யாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுய ரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார்.

ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித் தார் சனீஸ்வரர்.

யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலை நாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத் ராட்சம் அணிந்து சிவ நாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப் பட்டார்.

சிவபெருமானே ஏழரை நாட்டுச் சனிக்கு ஆளாவான் என்றால் அவன் என்ன சர்வ சக்தி வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/99083.html#ixzz3WLGrxS7F

தமிழ் ஓவியா said...

இளநீர் அபிஷேகம் செய்தால் மழை வருமா?


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மழைக்கு வேண்டி 1008 இளநீரை அபிஷேகம் என்ற பெயரில் அந்த சாமி பொம்மைமீது கொட்டி வீணாக்கி உள்ளனர்.

சாமி என்ற கல்பொம்மைமீது இளநீரைக் கொட்டினால் மழை வருமா? மழைக்கும்- அந்த கல் பொம்மைக்கும் என்ன தொடர்பு? உணவில்லாமல் பல கோடி மக்கள் பசியில் தவிக்கையில் அந்த உணர்ச்சியற்ற பொம்மைக்கு இளநீர் அபிஷேகம் தேவையா?

Read more: http://viduthalai.in/e-paper/99086.html#ixzz3WLGzh8Ua

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்றவர்கள்

எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் மக்கள் தொகையில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முதல் இடம் கிறித்துவர்கள் - 290 கோடி. இரண்டாம் இடம் முசுலீம்கள் - 280 கோடி.

எச்சரிக்கை

சென்னையில் உள்ள புற்று நோயாளிகள் புகையிலையைப் பயன்படுத்தியதால் புற்று நோய்க்கு ஆளானோர் 38.6 விழுக்காடாகும்.

த(க)ண்ணீர்!

சென்னையில் இப்பொழுதே குடிநீர்ப் பஞ்சம் வந்துவிட்டது. கவியரசு கண்ணதாசன் நகரில் ஒரு குடம் குடிநீர் ரூபாய் ஏழுக்கு விற்பனையாம்!

அதிர்ச்சி

மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கோவா சென்றபோது துணிக் கடையில் ஆடையை மாற்றும் போது, அங்கு ரகசிய காமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றாராம்.

கோவாவில் ஆள்வது பிஜேபிதான்.

பிஜேபியில் உள்ள பெண் அமைச்சர்களாவது பெண்களுக்கு எதிரான போக்குகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டக் கூடாதா!

Read more: http://viduthalai.in/e-paper/99095.html#ixzz3WLH9dDv9

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பி.ஜே.பி.யின் சமூகநீதி

செய்தி: ஜாட் இட ஒதுக் கீட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல்.

சிந்தனை: முசுலீம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; அதே நேரத்தில் இந்துக்களில் ஆதிக்க உயர் ஜாதி ஜாட்களுக்கு இடஒதுக்கீடு. இதுதான் பிஜேபியின் சமூகநீதியோ!

Read more: http://viduthalai.in/e-paper/99084.html#ixzz3WLHGklTL

தமிழ் ஓவியா said...

அழைக்கிறது பெரியார் திடல்!


இந்துத்துவா போர்வையில் உலவும் சில காவிகளும், சில உதிரிகளும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் இருபெரும் நிகழ்ச்சிகளைக் கண்டு, அறிவைச் செலுத்தாமல், வெறும் விளம்பர வெளிச்சத்துக்காக எதிர்ப்பு அரட்டைக் கச்சேரிகளை அரங்கேற்றுகின்றனர். காவல் நிலையத்திற்குக் காவடி எடுக்கின்றனர். சட்டப்படி நாம் செய்கின்ற கொள்கைப் பூர்வமான செயல்களில் யார்தான் தலையிட முடியும்?

மாட்டுக்கறி விருந்து சட்டப்படி குற்றம் அல்லவே! தாலி அகற்றலும் அந்த வகையைச் சார்ந்தது தானே? இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டன இந்தக் கொழுக்கட்டைகள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெகு மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடுபவர்கள் தான், அவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் - சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்.

மாட்டுக் கறியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாமாம்! அதற்கு ஆட்சேபணை கிடையாதாம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியதுபோல அதிலும்கூட எருமை கருப்பு என்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள் போலும்! அதிலும் வர்ண தர்மம்தான் போலும்!

மத்தியில் உள்ள ஆட்சி என்னதான் மூடி மறைத்தாலும், அது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி என்பதை இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டார்கள்; பசு புனிதம் என்று இந்து மதம் சொல்லுவதாக அவர்கள் கூறுகிறார்கள்; அதன் மூலம் பசு உணவுப் பிரச் சினையில் அவர்கள் இந்துத்துவா மத மூக்கை நுழைய விடுகிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

அப்படியே பார்த்தாலும், அவர்களுக்குச் சாட்சி யமாக அவர்களின் இந்து மத சாத்திர நூல்களேகூட ஒத்துழைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!

சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் யாகத் தீயில் பசுவைப் போட்டுப் பொசுக்கி, வயிறு முட்ட சாப்பிட்டு, மது குடித்து உண்டாட்டில் திளைத்துக் கிடந்தவர்கள் தான் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரக் குவியல்கள் வண்டி வண்டியாக இறைந்து கிடக்கின்றனவே!

இவர்களின் சங்கராச்சாரியாரே பசுவதையை சாஸ்திர ரீதியாக அங்கீகரித்துள்ளாரே! பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டதற்குச் சான்று கூறுகிறாரே - பின் எந்த யோக்கியதையில் கோட்டான்கள்போல சிலர் குதிக்கிறார்களோ தெரியவில்லை. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி காண்க)

அனாமதேயங்களுக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிற பொறுப்பற்ற ஏடுகள் நாட்டில் இருப்பதால் சிலர் முண்டாதட்டிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசப் பேச, புகார்கள் கொடுக்க, கொடுக்க 14ஆம் தேதி நிகழ்ச்சி மிகவும் களைகட்டப் போகிறது. எளிமையாக நடத்த இருந்த நிகழ்வுகளை பொலிவு மிக்கதாக, மக்கள் வெள்ளம் திரண்டு வரும் அரும்பெரும் நிகழ்ச்சிகளாக உருமாற்றி விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூடக் கூறத்தயார்!

மாட்டுக் கறிப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால் அடிமைச் சின்னமாம் தாலி என்ற தளையை அகற்றிக் கொள்ள முன் வருவதும் அவரவர்களின் தனி உரிமையைப் பொறுத்ததேயாகும்.
இன்னும் சொல்லப் போனால் சட்ட அங்கீகாரம் பெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயம் ஆக்கப்படவில்லையே!

அப்படி இருக்கும் பொழுது இதில் மூன்றாவது பேர் வழிகள் தலையிட உரிமையும் இல்லை - அதற்கான சட்டமும் அவர்கள் வசம் கிடையாதே!

தமிழ்நாட்டில்கூட வைதிகத் திருமணங்களில் எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டுகிறார்களா என்றால் அதுதான் கிடையாது. தாலி என்றால் என்ன என்றே பல மாவட்டக்காரர்களுக்குத் தெரியாதே!

தாலி அணியும் பெண்கள்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும்; கணவன் மரணம் அடைந்து விட்டால் பெண்ணை அவமானப்படுத்துவதற்காகவே தாலி அறுப்பு என்னும் அவமானச் சடங்கை நடத்து கிறார்கள்.

பெண்களின் வளையல்களை உடைத்து, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் அதனை அழித்து, கூந்தலில் பூ வைத்திருந்தால், அதனையும் பிடுங்கித் தூக்கி எறிந்து, அந்தப் பெண்ணை விதவை என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தத்தானே இந்தச் சடங்கை வைத் திருக்கிறார்கள்?

அதே நேரத்தில் மனைவியை இழந்தால் அந்த ஆணுக்கு எந்த சடங்கை வைத்துள்ளனர்?

மனைவி செத்து அவரின் கல்லறையின் ஈரம் உலருவதற்கு முன்னதாகவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அகலமான கதவைத் திறந்து வைத்திருப்பதுதானே இந்த அர்த்தம் கெட்ட இந்து மதம்? இல்லை என்று மறுக்க முடியுமா?

கணவன் இறந்தாலும், அந்தப் பெண்ணின் வாழ்வு மரணம் அடைந்து விடக் கூடாது; இன்னொரு வாழ்வும் இருக்கிறது என்ற துணிச்சலைக் கொடுக்கும் சுய மரியாதை உணர்வை ஊட்டுவதுதான் தாலி தேவை யில்லை என்ற கருத்து என்பதை - சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாமே!

அடிமைத்தளையை அகற்றிட விரும்பும் அருமைமிகு பெண் குலத்தை அன்புடன் வரவேற்கிறது பெரியார் திடல்!

Read more: http://viduthalai.in/page-2/99076.html#ixzz3WLHW0ckH

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/99071.html#ixzz3WLHpS9kk

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி விருந்து நமக்குப் புதிதல்ல


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


தந்தை பெரியார் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மாபெரும் மாநா டும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும் நம் இயக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் பெண்ணடிமையை ஒழிக்கும், பெண் விரும்பினால் தனக்கு மண விலக்கு பெறவும், மறுமணம் செய்து கொள்ள வும் உரிமை வேண்டும் என்ற கருத் தமைந்த மய்யமாக வைத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும் ஆனால், இத்தீர்மானத்தை பார்ப்பன ஏடுகள் யார் வேண்டுமானலும் யார் மனைவி யையும் அடித்துக்கொண்டு போகலாம் என்று திரித்து எழுதி புழுதிவாரித் தூற்றினர். நம் கழகச் சார்பில் இந்து ஏட்டின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. வழக்கு தொடர்ந்து நடை பெற்றது, நமது ஆசிரியரே வாதாடி னார். இந்து ஏடு நிபந்தனையற்ற மன்னிப் புக்கோரியது வழக்கு முடிவுக்கு வந்தது.

அதுபோலவே இன்று பார்ப்பன ஏடுகள் நம் கழகத்தின் மீது புழுதிவாரித் தூற்றி தங்கள் வயிற்றெரிச்சலைக் காட்ட தொடங்கிவிட்டன. வருகிற ஏப்ரல்-14 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாட்டுக்கறி விருந் தையும், பெண்களின் அடிமைச் சின்ன மான தாலியைத் தாங்களே விருப்புக் கொண்டு அகற்றும் நிகழ்ச்சியைத் தூற்றத் தொடங்கிவிட்டன. ஏதோ தெருவில் போகும் பெண்களின் தாலியை திராவிடர் கழகத்தினர் அறுப்பார்கள் என்கிற உணர்வு வரும்படியான நாணயமற்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி விட்டனர். இது போன்ற அறிவு நாணயமற்ற பிரச்சாரத்திற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தினமணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

24.2.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றி விளக்கமளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் யார் தாலியை அகற்ற முன்வந்தாலும், யாருடைய கட்டாயத்திற்காகச் செய்கிறீர்களா? என்று கேட்டு பிறகு தான் அகற்ற அனு மதிப்பேன் என்று விளக்கமளித்தார்கள். இவ்விளக்கத்திற்குப் பின்பும், மதவெறி யர்களின் கூப்பாடு, பூச்சாண்டி தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் தடம் மாறாமல் செல்கிறார், என்பதைத்தான் காட்டுகிறது.

ஏதோ, மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி இப்பொழுதுதான் முதன் முதலாக நடைபெறுவதுபோல மத வெறியர்கள் கூச்சலிடுகின்றனர். 1970-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச் சியில் ஆந்திராவைச் சேர்ந்த கோரா போன்ற அறிஞர்கள் கலந்து கொண் டனர். பிறகு தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இச் செய்திகள் மதவெறி என்ற கண்ணாடி அணிந்துள்ள சங்பரிவார் அமைப்புக் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, தந்தை பெரியார் வழியில் தடம் மாறா மல் ஆசிரியர் செல்கிறார், கழகத்தை வழி நடத்துகிறார், என்பதற்கான எடுத்துக்காட்டாகு

Read more: http://viduthalai.in/page-2/99077.html#ixzz3WLHz4Y79

தமிழ் ஓவியா said...

மோடியின் செல்வாக்கு சரிவும், மதசார்பற்ற அமைப்புகளின் கடமையும்

- குடந்தை கருணா

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி ஆட்சியில் மத வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டி யுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட் சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல் வாக்கு எப்படி? அரசின் செயல் பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடி யின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் பிரமாதம் என்று தெரிவித்து உள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந் தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி னால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப் பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரி வித்தனர். தற்போது அது 61 சதவீத மாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரி வித்து இருந்தனர். அது 26 சதவீத மாக அதிகரித்து உள்ளது.

வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந் துள்ளது. மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப் போது 39 சதவீதமாக அதிகரித் துள்ளது. சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதரீதி யான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

இவற்றில் தலை யிட்டு தீர்வு காண பிரதமர் மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப் போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்று பட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத் தால் மாநிலம் முழுவதும் நடை பெற்று வரும் திராவிடர் விழிப் புணர்வு மாநாடும், ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடை பெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமை யாகும்

Read more: http://viduthalai.in/page-2/99081.html#ixzz3WLIIIgRv

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகல் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்க வேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்த மானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட் டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படு கிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKpgn8k

தமிழ் ஓவியா said...

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.

- கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.


உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

- எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் நீர்க் கொள்ளை!

கோகோ கோலா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஸனன்த் என்ற பகுதியில் 500 கோடி மதிப்பில் தொடங்கியுள்ள பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, சர்தார் சரோவர் அணையிலிருந்து நாளொன்றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க ஒப்புக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அஹ்மத் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன் னுரிமை அளித்துத் தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்தார் சரோவர் அணைத் திட்டம், வறட்சி நிலவும் வடகுஜராத், சௌ ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை வழங்குவதற்காகவே திட்ட மிடப்பட்டிருந்தது. அப்படியிருக்க, கோகோகோலா போன்ற பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நாளொன் றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அரசு எடுத்துள்ள முடிவு வியப்பைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்ன என்பது அஹ்மத் படேலுக்குத் தெரி யாது போலும்.

Read more: http://www.viduthalai.in/page8/99112.html#ixzz3WLWbY95H