Search This Blog

20.11.11

பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்?

இன்று நம்நாட்டில் காங்கிரஸ் பிரசாரம் அடக்கப்பட்டதும், பல காங்கிரஸ் வாலிபர் கள் பொது உடைமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்தப் பொது உடைமை வேடக்காரர் சர்க்காருக்குத் தாங்கள் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கிறபடியால், சர்க்கார் மற்றப் பொது உடைமைப் பிரசாரர்களைப் போல் இவர்களைக் கருதாமல் இருக் கிறார்கள். ஆனால் இந்தக் காங்கிரஸ் வாலிபர்கள் பொது உடைமைக்காரர் என்று பெயர் வைத்துக்கொண்டு, மேடைகளில் உலக சண்டைக்கு ஆக சர்க்காருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரண் டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காங்கிரஸையும், காந்தியாரையும் பற்றிப் புகழ்ந்துவிட்டு கடைசியாக ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளை வைவதையே முக்கிய வேலையாய்க் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பொது உடைமைக்காரர்கள் பிரசாரங் களில் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சி களைப் பற்றிக் குறை கூறிப் பேசியதைக் கூட்டத்திலிருந்தவர்கள் கண்டித்ததோடு, பேசிய பேச்சுக்களையும் வாபீசு வாங்கிக் கொள்ளும்படி செய்திருப்பதாகவும் தெரி கிறது. அப்படி இருந்தும், பொதுஉடைமைப் பிரசாரக்காரர்கள் தட்டிப் பேச ஆளில்லாத கூட்டங்களில் தங்கள் இஷ்டப்படி பேசி ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றித் தாறுமாறாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரசாரக் காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால் நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது: உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டும் பாடுபடாமல் இராஜ போகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப் பனர்கள் இந்த நாட்டுப் பொது உடைமைக் காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தமென்ன? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்.

அது போல் பார்ப்பனர்கள் பாடுபடா மலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரசாரத்தில் காங்கி ரசையும் பார்ப்பனியத்தையும் கண்டிக் காமல், அவற்றைக் கண்டிக் கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனி த்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களுக்கு நன் றாய் தெரியும். என்னவென் றால் வருணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப் படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொது உடை மையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பனரிடம் தானாகவே வந்து விடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடு களவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

ஆதலால், பார்ப்பனர் பேசும் பொது வுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு, உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அத னால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது வுடைமைப் பிரசாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக் காரணமாகும்.
நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் ஏமாந்து மயங்கி விடுகிறார்கள்.

பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும், பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

இந்நாட்டில் பார்ப்பனியத்தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை இருந்தாலும், சம உடைமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து ஜில்லா கலெக்டர் ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங் கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயா னால் தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடா மலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார் கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரண மாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.

ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்த வனுக்குத் தான் உண்டு; பிறக்காத வனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (ஊயளவந) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (ஊடயளள கபைவ) துவக்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி (ஊயளவந) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (ஊயளவந கபைவ) துவக்க வேண்டியதாகும். பார்ப்பானும், பார்ப்பன சம்பந்தமும், பார்ப்பனிய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொது உடைமை வேஷம் போடுவதால் ஜாதி சங்கதியை மூடிவிட்டு ஆகாத காரியமான - ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு (ஊடயளள) உணர்ச்சியைப் பற்றிப் பேசி ஜாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோத விடுகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனர் களுக்கும் மற்றும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொது உடைமை நமக்கு ஏற்பட்டு விடும். அதாவது ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியி னால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களி டமிருந்து மறைந்து விடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக் குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுப காரியம் என்பவை எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும் சிலர் சுரண்டுபவர்களாய் இருப்பதாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய, அவர்களுக் காகவே இருந்து வருபவைகளே ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதியாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

திராவிட நாடு பிரிந்து கிடைத்து, சுரண்டும் ஜாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்து கொள்ள முடியும். அந்தக் காரியத்திற்கு ஆகத்தான் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகள் முயலுகின்றன. இந்தக் கட்சிகளில் இன்று மேல் ஜாதி யானுக்கோ அல்லது ஜாதிப் பேய், பார்ப்பனியப் பேய் பிடித்த பெரிய மனிதர் கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப் படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இவ்விரண்டு கட்சி களும் ஜாதியிலேயே தொழிலாளர்களாக வும் உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும் பான்மையான மக்களுடைய கட்சி என்ப தாக பாமர மக்கள் உணர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆகவே நம் பாமர மக்கள் இக்கட்சிகள் தோல்வியுறும் படியாகவோ தங்கள் கையிலிருந்து போய்விடும்படியாகவோ அல்லது எதிரிகள் விஷமப் பிரசாரத்தால் அழியும்படியாகவோ விட்டுவிடுவார்களேயானால் பிறகு ஜாதியில், கல்வி யில், தொழிலில், செல்வத்தில் கீழ்நிலை யில் இருக்கும் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இடமில்லாத மக்களுக்கு விமோசனமே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------------- தந்தை பெரியார் - "குடிஅரசு" - தலையங்கம் - 25.03.1944

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.