Search This Blog

18.2.13

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை எப்போது?

அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சாமியார்கள் கூட்டத்தில் ராமன் கோயில் கட்டும் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விசுவ ஹிந்து பரிஷத் நிருவாகிகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் செய்தி வந்துள்ளது.

சமுதாயத்தில் முற்போக்கான பல பணிகளை போராட்டங்களைக் கையில் எடுத்துக் கொள்ளும் பொழுதெல்லாம் சில மேதாவிகள் என்ன சொல் லுவார்கள்? நாட்டில் எத்தனையோ அவசியமான, முக்கியமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது, இவையெல்லாம் அவசியமா என்று திசை திருப்புவார்கள். பாமரத்தனம் மிகுந்த நாட்டில் அதற்கு ஆமாம் சாமியும் போடுவார்கள்.

அதே மேதாவிகள் கிடப்பது கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை என்பதுபோல இப்பொழுது ராமன் கோயில் கட்டுவதை முன்னி றுத்துகிறார்களே - இதைப்  பற்றி அந்தத் தோரணை யில் கருத்துக் கூறுவார்களா?கூறவே மாட்டார்கள்.

காரணம் இந்த மேதாவிகள் மனதுக்குள் குடிபுகுந்து குடும்பம் நடத்தும் மதவாதச் சிந்தனை கள்தான்.

மதவாதத்திற்கு எதிரான கருத்துக்களை முன் வைக்கும்போது, அதற்கு முகம் கொடுக்க  முடி யாதவர்கள் அதனைத் திசை திருப்புவதற்கே இப்படியெல்லாம் கூறுவார்கள்.

உண்மையில் அவசர அவசரமாக செய்ய வேண்டியது ராமன் கோயில் கட்டுவதல்ல; 450 ஆண்டுக் கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கை விரைவு படுத்தி, தண்டிக்க வேண்டியதுதான்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் வெட்கக் கேடு என்னவென்றால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இந் தியாவின் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தனர் என்றால் இதைவிட வெட்கக் கேடும், தலைகுனிவும் வேறு இருக்க முடியுமா?
குற்றங்கள் என்றால் சாதாரணமானவையல்ல; இந்தியக் குற்றவியல் பிரிவு 147,153 (ஏ) 153(பி) 295(ஏ) 505, 120 (பி) என்ற பிரிவுகள் சாதாரணமானவையா?
கலகம் விளைவித்தல், குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என்ற குற்றங்கள் சாதாரண மானவைதானா?

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்பு என்று வார்த்தையளவில் சொன்னால் போதுமா? பாபர் மசூதி இடிப்பு வழக்கின்மீது 21 ஆண்டுகள் ஓடிய பிறகும் தீர்ப்புக் கிடைக்கவில்லை என்றால் மறுக்கப்பட்ட தீர்ப்புதானே?
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தச் சூழ் நிலையில் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டப் போகிறோம் என்று திரிசூலங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கின்றனர் என்றால், இது என்ன நாடா? அரசமைப்புச் சட்டத்தின் செயல் பாடுகள் உயிரோட்டமுடன் தான் இருக்கின்றனவா? நிருவாகம் என்பது தன் முதுகெலும்பை இழந்து விட்டதா?

நீதியை நிலைநாட்டத் துடிக்கும் சக்திகள், ஊடகங்கள் ஊனமுற்றுப் போய் விட்டனவா என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால்தான் அடுத்த கட்டத்திற்குத் தாவி எழும் முரட்டுத் துணிவைப் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா? திருடன் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப் படவில்லையானால் அவன் மேலும் திருடிக் கொண்டேதானே இருப்பான்?
தண்டனை என்பது தவறைத் தடுப்பதற்கான ஏற்பாடு; பாபர் மசூதி இடிப்பில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலக நாடுகள் முன் இந்தியாவைத் தலைகுனிய வைத்த தேசிய குற்றம் என்று கருதப்படுகிற பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்காதவரை சட்டம் நீதி நியாயம் பற்றிப் பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமே!

               -----------------------------"விடுதலை” தலையங்கம் 18-2-2013

18 comments:

தமிழ் ஓவியா said...


சி.நடேசனார்


பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!

இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).

62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.

ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.

1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.

டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.

அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.

சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.

பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).

கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.

ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)

வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி


இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.

- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.

இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).

மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.

(குடிஅரசு, 18.12.1927)

Seeni said...

sariyaana adi...!

தமிழ் ஓவியா said...

வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.


சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.

ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?

மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.

இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).

(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது



பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!


பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!

பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.

இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...

அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.

மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு

கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.

பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?

ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.

கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

28இல் முற்றுகைப் போராட்டம்!

இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.

ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.

வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இறுதிப் போரில் சிங்கள வீரர்கள் வெறியாட்டம்: சானல்-4 தொலைக்காட்சியிடம் புதிய வீடியோ ஆதாரம்


லண்டன், பிப்.21- பிரபாகரன் மகன் பால சந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது. தற்போது இந்த நிறு வனம் புதிய ஆவண படம் ஒன்றை தயாரித் துள்ளது. நோ பயர் சோன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம் 90 நிமிடம் ஓடுகிறது. இலங்கை இறுதிகட்ட போரின்போது நோ பயர்சோன் என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக் குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங் களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணப் படத்தை கெல்லம் மெக் கரே என்பவர் தயாரித் துள்ளார். அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இது வெளியிடப்பட உள்ளதாக கெல்லம் மெக்கரே தெரிவித்துள் ளார். இந்தப் படத்தின் பல்வேறு புதிய காட் சிகளும், போரின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களும் இணைக் கப்பட்டிருப்ப தாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இந்த ஆவணப் படம் இலங்கையில் போர் குற்றம் நடந்த தற்கான முழு ஆதார மாக இருக் கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க் குற்றங்கள் நடந் தன என்பது தெளிவாக தெரியும் என்றும் கூறினார். இந்த ஆவண படத்தின் முக்கிய காட்சி களை அடுத்த வாரம் டில்லியில் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் காண்பிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர்மானம் : மத்திய அரசு ஆதரிக்கும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல், பிப்.21- மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திண்டுக்கல்லில் 19ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்களர்களை போலவே இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடி அமர்த்த வேண்டும். தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தில், அதற்கு எதிராக மத்திய அரசு வாக்களித்தது போல அய்.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும், தமிழர்களின் நலன் கருதி அதை எதிர்த்து வாக்களிக்க இந்தியா தயங்காது. மத்திய அரசை பொறுத்த வரையில், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசை தட்டிக்கேட்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ராஜபக்சே இந்தியா வருவது என்பது தனிப்பட்ட விஷயம். எதிர்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் தான், அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வரவேற்கவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...



இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன.

- விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...



இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன.

- விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை அரசு மேலும் அதிகப்படுத்தி வருகிறது


வரலாறு மீண்டும் திரும்பும் - ஈழப் படுகொலை ஆவணப்பட இயக்குநர் கருத்து

ராஜபக்சே கும்பல் இனியும் நீடித்தால் இலங்கையில் மீண்டும் ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று ஈழப்படுகொலை ஆவணப்பட இயக்குநர் காலும் மக்ரே கூறியுள்ளார் .

சேனல் - 4 தொலைக்காட்சி ராஜபக்சே அரசு அரங்கேற்றிய கொடூர நிகழ்வுகளை ஒளிபரப்பி யுள்ளது . காலும் மக்ரே தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அவர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . இதுதொடர்பாக ஏற்கெனவே பல பதிவுகளை அவர் வெளியிட்டுள் ளார். நோ பயர் சோன்: த கில்லிங் பீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா என்ற பெயரில் ஆவணப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெனிவா நகரில் அடுத்த மாதம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்ட காலும் மக்ரே முடிவு செய்துள்ளார். காலும் மக்ரே , கடந்த கால நினைவுகள், நிகழ்கால சம்ப வங்கள் மற்றும் எதிர் காலம் குறித்து அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், இலங்கை குற்ற நிகழ்வு கள் குறித்த கடினமான கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர் . ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை அரசுக்கும் , ராணு வத்துக்கும் இடையே வித்தியாசம் ஏதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்று இலங்கை அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினர் மனித வெடிக் குண்டுகளாக இயங்கினார் கள் . சிறுவர்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாற்றுகளை சுமத்துவதால் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

ஒரு தரப்பின் குற்றத்தால், மற்றொரு தரப்பின் குற்றத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது . சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றுகிறோம் என்கிற அரசு, விடுதலைப்புலிகள் குற்றம் செய் தார்கள் என்று கூறி அந்தக் குற்றச்சாற்றின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவுக்கும் கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்பதால் மட்டும் ஏற்பட்ட சங் கடம் அல்ல இது. இந்த கேள்வி களை எழுப்புகிறவர்கள் யார் என்ப தாலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை இது . இவற்றிற்கு எல்லாம் மய்யப் புள்ளியாக இந்தியா இருக்கிறது.

இது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மை தான். ஆனால், இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இதை சொல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது . நீதியின்றி அமைதியோ, இணக்கமோ சாத்தியம் இல்லை. அதைப்போல உண்மையின்றி நீதியும், சாத்தியம் இல்லை .இது கல்வியியல் சார்ந்த வாசகம் அல்ல . இது வரலாற் றின் குரலாகும் . இதை தட்டிக்கழித் திட முடியாது, இலங்கையில் கொடூரங்களை அரங்கேற்றிய வர்களே, இப்போது ஆட்சிப்பீடத் தில் அமர்ந்திருக்கிறார்கள். இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழர் களை இப்போதும் கொடூரமாக ஒடுக்கி வருகிறார்கள். அரசை யார் விமர்சித்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு இலக்காக்கப்படு கிறார்கள். இலங்கையின் தலைமை நீதிபதி, இலங்கை அரசுக்கு உடன் பாடில்லாத சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை இலங்கை அரசு தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டது. உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை,

தமிழர்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையை இலங்கை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறது. தொலை நோக்கில் பார்த்தால் வரலாறு மீண் டும் திரும்பும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இலங்கையில் மிகவும் உக்கிரமாக மீண்டும் ரத்தக் களரி ஏற்படும். வட்டார உறுதித் தன்மை குலையும் . இலங்கை குற்ற நிகழ்வுகள் குறித்து நம்பத்தகுந்த, பார பட்சமற்ற சுயேச்சையான சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அய்.நா. வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது . இதற்கு ஏற்பாடு செய்வதுதான் தீர்வுக்கு வழிவகை செய்யும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள மனித உரிமை ஆர்வலர் களின் எண்ணமாகும். வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, இருதரப்பினர் செய்ததாக சொல் லப்படும் எல்லா குற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் .இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அது, இலங்கைக்கு மிகவும் இன்றியமை யாத ஆனால் இதுவரை நடை முறைப்படுத்தப்படாமல் தாமதிக்கப் பட்டுவரும், அரசியல் நீதி, அமைதி, இணக்கம் ஆகியவற்றை நிலைநாட் டுவதற்கான தொடக்கமாக அமையும். இவ்வாறு காலும் மக்ரே தமது கட்டுரரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை அரசு மேலும் அதிகப்படுத்தி வருகிறது


வரலாறு மீண்டும் திரும்பும் - ஈழப் படுகொலை ஆவணப்பட இயக்குநர் கருத்து

ராஜபக்சே கும்பல் இனியும் நீடித்தால் இலங்கையில் மீண்டும் ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று ஈழப்படுகொலை ஆவணப்பட இயக்குநர் காலும் மக்ரே கூறியுள்ளார் .

சேனல் - 4 தொலைக்காட்சி ராஜபக்சே அரசு அரங்கேற்றிய கொடூர நிகழ்வுகளை ஒளிபரப்பி யுள்ளது . காலும் மக்ரே தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அவர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . இதுதொடர்பாக ஏற்கெனவே பல பதிவுகளை அவர் வெளியிட்டுள் ளார். நோ பயர் சோன்: த கில்லிங் பீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா என்ற பெயரில் ஆவணப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெனிவா நகரில் அடுத்த மாதம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்ட காலும் மக்ரே முடிவு செய்துள்ளார். காலும் மக்ரே , கடந்த கால நினைவுகள், நிகழ்கால சம்ப வங்கள் மற்றும் எதிர் காலம் குறித்து அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், இலங்கை குற்ற நிகழ்வு கள் குறித்த கடினமான கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர் . ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை அரசுக்கும் , ராணு வத்துக்கும் இடையே வித்தியாசம் ஏதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்று இலங்கை அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினர் மனித வெடிக் குண்டுகளாக இயங்கினார் கள் . சிறுவர்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாற்றுகளை சுமத்துவதால் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

ஒரு தரப்பின் குற்றத்தால், மற்றொரு தரப்பின் குற்றத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது . சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றுகிறோம் என்கிற அரசு, விடுதலைப்புலிகள் குற்றம் செய் தார்கள் என்று கூறி அந்தக் குற்றச்சாற்றின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவுக்கும் கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்பதால் மட்டும் ஏற்பட்ட சங் கடம் அல்ல இது. இந்த கேள்வி களை எழுப்புகிறவர்கள் யார் என்ப தாலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை இது . இவற்றிற்கு எல்லாம் மய்யப் புள்ளியாக இந்தியா இருக்கிறது.

இது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மை தான். ஆனால், இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இதை சொல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது . நீதியின்றி அமைதியோ, இணக்கமோ சாத்தியம் இல்லை. அதைப்போல உண்மையின்றி நீதியும், சாத்தியம் இல்லை .இது கல்வியியல் சார்ந்த வாசகம் அல்ல . இது வரலாற் றின் குரலாகும் . இதை தட்டிக்கழித் திட முடியாது, இலங்கையில் கொடூரங்களை அரங்கேற்றிய வர்களே, இப்போது ஆட்சிப்பீடத் தில் அமர்ந்திருக்கிறார்கள். இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழர் களை இப்போதும் கொடூரமாக ஒடுக்கி வருகிறார்கள். அரசை யார் விமர்சித்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு இலக்காக்கப்படு கிறார்கள். இலங்கையின் தலைமை நீதிபதி, இலங்கை அரசுக்கு உடன் பாடில்லாத சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை இலங்கை அரசு தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டது. உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை,

தமிழர்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையை இலங்கை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறது. தொலை நோக்கில் பார்த்தால் வரலாறு மீண் டும் திரும்பும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இலங்கையில் மிகவும் உக்கிரமாக மீண்டும் ரத்தக் களரி ஏற்படும். வட்டார உறுதித் தன்மை குலையும் . இலங்கை குற்ற நிகழ்வுகள் குறித்து நம்பத்தகுந்த, பார பட்சமற்ற சுயேச்சையான சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அய்.நா. வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது . இதற்கு ஏற்பாடு செய்வதுதான் தீர்வுக்கு வழிவகை செய்யும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள மனித உரிமை ஆர்வலர் களின் எண்ணமாகும். வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, இருதரப்பினர் செய்ததாக சொல் லப்படும் எல்லா குற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் .இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அது, இலங்கைக்கு மிகவும் இன்றியமை யாத ஆனால் இதுவரை நடை முறைப்படுத்தப்படாமல் தாமதிக்கப் பட்டுவரும், அரசியல் நீதி, அமைதி, இணக்கம் ஆகியவற்றை நிலைநாட் டுவதற்கான தொடக்கமாக அமையும். இவ்வாறு காலும் மக்ரே தமது கட்டுரரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.

அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.

நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!

அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?

டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?

இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!

ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).

அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!

திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!

கூடுதல் தகவல் (Tail - Piece)

அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.

அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.

நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!

அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?

டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?

இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!

ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).

அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!

திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!

கூடுதல் தகவல் (Tail - Piece)

அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது

அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:

யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)

இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.

இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-

தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான். அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.

இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:

பார்வை நியாமான; ஸம்ருத்யும் ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி

(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.

தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.

பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.

தொகுப்பு: பெ.சுந்தரராசன்.

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?



தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 1948 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி(ரெட்டியார்)ஒரு குழு அமைத்தார்.அந்தத் திட்டத்தைப் பின்னால் முதலமைச்சரான ராஜகோபாலாச்சாரியார் கை கழுவினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?