Search This Blog

30.5.15

அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்வதா?போராட்டம் வெடிக்கும்!-கி.வீரமணி

மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு  அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்வதா?
தடையை விலக்கிக் கொள்ளாவிட்டால்
பெரியார், அம்பேத்கரிஸ்டுகளை இணைத்து
மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சென்னை அய்.அய்.டி.,யில் மாணவர்கள் அமைப் பான அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பினை மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் தடை செய் துள்ளதைக் கண்டித்தும், போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மீண்டும் குலக்கல்வித் திட்டமா?  பிஜேபி அரசின் அபாய அறிவிப்பு!  கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை! தமிழர் தலைவரின் தணல் பொங்கும் அறிக்கை
சென்னை அய்.அய்.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் (தொடக்கம் 14.4.2014). ஜாதி ஒழிப்பு, சமூகநீதி இவற்றை மய்யப்படுத்திக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உயர் சிந்தனை அமைப்பு இது.
முக்கிய பதவிகளில் உயர்ஜாதியினர் - கீழ்மட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்டவரா?
இந்த அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில், எண்ணிக் கையில் சிறிய அளவு உள்ளவர்கள் முக்கியமான பதவி களைப் பெரும்பாலான அளவுக்கு ஆக்கிரமித்துக் கொண் டுள்ளார்கள் என்றும், அதேநேரத்தில் கீழ்மட்ட உடலுழைப் புப் பணிகளில் நூற்றுக்கு நூறு தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்படுகிறது என்றும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதில் என்ன குற்றம்?
இதில் என்ன குற்றம் நேர்ந்துவிட்டது? இந்தப் பணியைத்தானே - பிரச்சாரத்தைத் தானே திராவிடர் கழகமும், சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் செய்துவருகின்றன. இதில் சட்ட மீறலோ - வெறுப்போ எங்கே இடம்பெற்று இருக்கிறது?
மாட்டிறைச்சியும் -மதச்சார்பின்மையும்!
அதேபோல, மாட்டிறைச்சி தடை குறித்தும், மதச் சார்பின்மைக்கு விரோதமாக மத்திய ஆட்சி செயல்படுவது குறித்தும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்களாம்.
இதிலும் குற்றம் காண இடம் எங்கே இருக்கிறது? நடப்பைத்தானே விமர்சித்து வருகிறார்கள்? மாணவர் களுக்குச் சமுதாய அக்கறை இல்லையா? கருத்துக் கூறும் உரிமை கிடையாதா?
மாணவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் முழு வாழ்க்கையையே ஒப்படைத்துக்கொண்டு ஓயாது உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைப்பினை நடத்திட மாணவர்களுக்கு உரிமை கிடையாதா?
இந்தத் தலைவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா?
மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் பெயரில் மாணவர் சமுதாயம் ஓர் அமைப்பை ஏற்படுத்துவது பாராட்டுக் குரியதே - சட்டப்படியும் சரியானதே!
மதவாதத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான ஏபிவிபி செயல்படலாம்; பெரியார் அம்பேத்கர் பெயரில் முற்போக்குச் சிந்தனை அமைப்புகள் செயல்படக்கூடாதா?
மொட்டைக் கடித அடிப்படையில் தடை போடுவதா?
இதுகுறித்து மொட்டைக் கடிதம் ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளனராம். அதன் அடிப்படையில் அம்பேத்கர் - பெரியார் பெயரில் உள்ள அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். முதலாவதாக கையொப்பம் போடாத மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கை எடுப்பதே சட்ட விரோதமும், நியாய விரோதமும், நடைமுறை விரோதமும் ஆகும்.
விளக்கம் கேட்காதது ஏன்?
அதுமட்டுமல்ல; ஓர் அமைப்பைத் தடை செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.
இரண்டையும் பின்பற்றாமல் நியதிகளுக்கு விரோதமாக மனித வள மேம்பாட்டுத் துறையும், அய்.அய்.டி. நிருவாகமும் நடந்துகொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையாகும்.
இந்த நடவடிக்கைமூலம் என்ன தெரிகிறது? அம்பேத்கர் பெரியார்  அமைப்பு மிகவும் தேவை என்பதைத்தான் புலப் படுத்துகிறது. அய்.அய்.டி.,யும், மனித வள மேம்பாட்டுத் துறையும் சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக நடந்துகொண்டுள்ளது. அதேநேரத்தில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் சட்டப்படியான சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்குமாகப் பாடுபடுகிறது என்பது விளங்கவில்லையா?
தடையை உடனே நீக்குக! - இன்றேல் போராட்டம்!
மனிதவள மேம்பாட்டுத் துறை - அம்பேத்கர் பெரியார் பெயரால் அமைந்த வாசகர் வட்டத்தின்மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லையெனில், திராவிடர் மாணவர் கழகம்  ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளின் தலைவர்களையும், மாணவர்களையும் கூட்டி, இணைந்து உரிய வகையில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளர்களுக்கு, சமூகநீதி அமைப்புகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இதனைக் கருத வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்நாட்டின் பெரும்பான்மையினர் ஆவர். அவர்களுக் கான சவாலை எதிர்கொள்வோம்.
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்!!

     ------------கி.வீரமணி,  தலைவர்,  திராவிடர் கழகம். சென்னை 30.5.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102352.html#ixzz3bchI0URo

10 comments:

விஸ்வேஸ்வரன் said...

பிரச்னை வரும் போது மட்டும் வெடித்தால் போதுமா? தமிழ் மக்களை இணைத்துச் செயல்பட தொடர திட்டங்கள் என்ன உண்டு. ஏபிவிபி ஆர் எஸ் எஸ் .... போன்ற அமைப்புகள் பார்ப்பனரை முழுமையாக இணைத்துக் ஒத்த கருத்துடன் இயங்கி ஆட்சியில் உள்ளனர்.1992 இரத யாத்திரை அன்றே திட்டமிட்டு அரசியல் தீண்டத் தகாதவராய் இருந்த பிஜேபி இன்று நம்மை ஆள்கிறது. அதிக அளவில் பிராமணரல்லாதோர் இருந்தும் இன்னொரு வ பி சிங் ஏன் ஆட்சிக்கு வரவில்லை. தி மு க ஏன் ஆட்சி இழந்தது. இதைப் பற்றிக் கருத்தரங்கள் நடத்துங்கள். விழித்துக் கொள்ளாவிட்டால் வீழ்ந்து விடுவோம்.
சாதி மதம் இல்லா சமுதாய இலக்கு சரிதான். அவை மறைந்த பின்தான் தமிழர் இணைந்து செயல்பட முடியுமா?
அது வரை பொது அடையாளமற்ற சமூகமா தமிழினம். வடமொழியும் வேதமும் எல்லாப் பார்ப்பனரையும் காஷ்மீர் முதல் குமரி வரை இணைக்கிறது. பல மொழிகள் பேசும் பிராமணர் தங்களுக்குள் ஒற்றுமை காணும்போது ஒரே மொழி பேசும் தமிழர்..... வேதனை.
அவர்களை தமிழமறை திருக்குறள் வழி இணைப்போம் என்பது என் சிந்தனை.

தமிழ் ஓவியா said...

மாணவர் அமைப்புக்குத் தடை விவகாரம்: சென்னை அய்.அய்.டி.க்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை

புதுடில்லி, ஜூன் 1_ "அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம்' அமைப் புக்கு தடை விதிக்கப்பட் டுள்ள விவகாரத்தில், சென்னை அய்.அய்.டி. யிடம் விளக்கம் கேட்டு தாழ்த்தப்பட்டோர் களுக்கான தேசிய ஆணை யம் (என்.சி.எஸ்.சி.) அறி விக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் அந்த ஆணை யத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யுமான பி.எல். புனியா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கல்லூரி வளாகங் களில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை. அதற்கு தடை விதிப்பது, அவர்களின் குரல் வளையை நசுக் குவது போன்றதாகும்.

இது தவறான நடவடிக்கை ஆகும். இந்த விவகா ரத்தை நானே கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு சென்னை அய். அய்.டி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப் படும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. மத்தியில் பிரதமர் நரேந் திர மோடி தலைமையி லான அரசு அமைந்த பிறகு, தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான சம்ப வங்கள் அதிகரித்து விட் டன. ராஜஸ்தான் மாநி லம், நாகோர் மாவட் டத்தில் 4 தாழ்த்தப் பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பவ இடத்துக்கு 3 நாள்களுக்குப் பிறகு நான் சென்றபோதுதான், மாவட்ட துணை ஆட்சியர் உடன் வந்தார். இதிலிருந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு அரசு நிர்வாகத்தில் இருப் போர் முக்கியம் கொடுக்க வில்லை என்பது தெரிய வருகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் புனியா. பிரதமர் மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளை யும் விமர்சித்ததாக, சென்னை அய்.அய்.டி.யைச் சேர்ந்த அம்பேத்கர் - பெரியார் மாணவர் வட்டம் அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை அய்.அய்.டி. ரத்து செய்தது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102499.html#ixzz3bpa6zPKk

தமிழ் ஓவியா said...

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா



வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்

ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே

பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!

திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல் (குறள் 200)

பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.

அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு

ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (குறள் 199)
இதன்

பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!

அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).

Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.

ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?



Read more: http://www.viduthalai.in/page-2/%20102506.html#ixzz3bpalBzNp

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page-2/102504.html#ixzz3bpbBJDBu

தமிழ் ஓவியா said...

புதினாக் கீரையின் மருத்துவ குணங்கள்

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.



வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-7/102523.html#ixzz3bpbpYRvI

தமிழ் ஓவியா said...

வாத பித்த நோய்களை குணப்படுத்தும் தூதுவளை

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.



தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியை யும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவை பலப்படுத்தும். தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும். தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் ஆகியவை நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும். தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.



Read more: http://www.viduthalai.in/page-7/102527.html#ixzz3bpcArCCi

தமிழ் ஓவியா said...

மருத்துவ ஆலோசனை

சூவிங்கம் மெல்வதால் உணவு சாப்பிடுவது குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புண்டா?

அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சூவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சூவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங் களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.

பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் உண்டா?

பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட் கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.

உடல் பருமனுக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு?

டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் அய்ந்து மரணங் களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.



Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpcQJU8S

தமிழ் ஓவியா said...

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

மும்பை, ஜுன்1_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவு _- எதிரொலியாக மும்பை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

சென்னை அய்.அய்.டி மாணவர்களின் அமைப் பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையைக் கண் டித்து ஜனநாயக உரிமை கோருபவர்களும், கருத்து ரிமை கோருபவர்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதலா?

தேசிய அளவில் அந் தத் தடையை கண்டித்து மாணவர் அமைப்புகள் கிளர்ந்து எழுந்து போராட் டத்தில் குதித்துள்ளனர். புதுடில்லியில் இந்திய தேசிய மாணவர் ஒன்றியம் சார்பில் புதுடில்லியில் போராட்டத்தை நடத்தி னார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாண வியர்மீது காவல்துறை யினர் கடுமையாக நடந்து கொண்டு தாக்கி உள்ள னர். அத்தாக்குதல்களைக் கண்டித்து சென்னை அய்.அய்.டி மாணவர்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மாணவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்

தேசிய அளவில் விவா தமாக உருவாகி இருப்பது என்னவென்றால், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் தலைவராக இருப்பவரிடம் எந்த விதத்திலும் நீதி, நேர்மை ஏதும் கிடையாது. நிர்வாக ரீதியாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு தடைவிதிப்பதற் கான உரிமை அல்லது தனிப்பட்ட மாணவரின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை என்று எதுவுமே அவருக்கு கிடையாது.

அவருடைய தனிப் பட்ட வலதுசாரி சிந் தனைகளுடன், தன்னு டைய அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்துவதா கவே அவருடைய செயல் இருக்கிறது. மாணவர்கள் தங்களின் கருத்துகளை நிகழ்ச்சிகளின் வாயி லாகவோ, துண்டறிக்கை களை வழங்குவதன் வாயி லாகவோ இன்னும் பிற வகையிலோ கருத்து தெரி விப்பதைக் கண்காணிப்ப தற்கோ, கட்டுப்படுத்துவ தற்கோ நிர்வாகத்துக்கு எவ் வித அதிகாரமும் இல்லை.

அய்.அய்.டி நிறுவப் பட்ட காலத்திலிருந்து சர்வாதிகார முறையில் இது போன்ற கருத்துகளுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேநேரத்தில் வலது சாரிக் குழுக்களாக உள்ள பார்ப்பனீய கொள்கை களைப் பரப்புவதற்கு மட்டும் அனுமதிக்கும் நிலை இருந்துவருகிறது.

விவேகானந்தா வாசகர் வட்டம் Vivekananda study circle (VSC) வந்தே மாத ரம் உள்ளிட்டவை மற்றும் அலுவலக ரீதியில் இல் லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா ஆகிய வற்றைச் செய்து வருகின் றது. விவேகானந்தா வாசகர் வட்ட அமைப்பு செயல்படுவதற்காக தனியே பிரம்புத்திரா விடுதியில் இணைந்துள்ள நூலகத்துடன் கூடிய ஓர் அறையும், அய்.அய்.டி. இணைய தளத்தின்மூலம் இணைந்திருக்கும் வசதி யும், அதன் தொடர்புடைய மின்னஞ்சல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதுடன், நிதிவசதியும், அய்.அய்.டி அரங்குகளையும் பயன் படுத்திக்கொள்ளவும் உள் ளட்ட பல்வேறு வகை யிலும் விவேகானந்தா வாசகர் வட்டம் அமைப்பு செயல்படுவதற்கான அனைத்துவகையிலான வாய்ப்புகளும் சென்னை அய்.அய்.டியில் வழங்கப் பட்டுள்ளன.

ஆகவே, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்தின் சார்பில் கீழ்க் காணும் வசதிகளை அளிக் குமாறு கேட்டுக்கொள் கிறோம். சென்னை அய். அய்.டி. வளாகத்துக்குள் எந்த ஒரு மாணவர் அமைப்பாக இருப்பினும் எவ்வித கேள்விகளும், இடையூறுமின்றி, சுதந் திரமாக இயங்க வேண்டும்.

விவாதங்கள் நிகழ்ச் சிகளை நடத்திட அய். அய்.டியின் எந்த விடுதி யிலாவது நிரந்தரமான அறை ஒதுக்கப்பட வேண்டும். நூலகத்துக்கு போதிய இடத்தை அளிக்க வேண்டும். மாணவர்களின் தகவல்களை அளிப்பதற்கு அய்.அய்.டியின் இணைய தளத்தில் இடம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் தொடர்பு கொள்ள மாண வர்மின்னஞ்சல் (SMail) கணக்குகள் தொடங்குவ தற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். மாண வர் அமைப்புகளுக்கு என ஒதுக்கப்படும் நிதியை சம அளவில் அனைத்து மாண வர் அமைப்புகளுக்கும் வழங்கிட வேண்டும்

இந்த கோரிக்கைகளை சென்னை அய்.அய்.டி மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் கோரி உள்னர்.

மும்பை அய்.அய்.டி.யில் புதிய அமைப்பு

சென்னை அய்.அய்.டி. யின் தடையை எதிர்த்து மும்பையில் மும்பை அய். அய்.டி மாணவர்கள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மனிதச் சங்கிலிப் போராட் டத்தை நடத்தி உள்ளனர்.
சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடையின் எதிரொலியாக சமுதாயத் தில் அரும்பெரும் பணி களை ஆற்றியுள்ள தலை வர்களின் பெயரில் மும்பை அய்.அய்.டி. மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரி யார் புலே வாசகர் வட்டம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102547.html#ixzz3bungdqxe

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.க்கு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் மீண்டும் கடிதம் : விளக்கம் அளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும்

புதுடில்லி, ஜூன்.2- அம்பேத்கர்- _ பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஏற்கெனவே அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சென்னை அய்.அய்.டி.யின் இயக்கு நருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர்-_ பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர் சனம் செய்ததாக நிகழ்வு கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்வு தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவின் பல் வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தேசிய ஆதிதிராவி டர் நல ஆணையத்தின் சார்பில் அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.எல்.புனியா தன்னிச் சையாக விளக்கம் கேட்டு சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அனுப்ப வேண்டும் என்றும் குறிப் பிட்டு இருந்தார்.

இந்த கடிதத்திற்கு எந்த விளக்க மும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் சென்னை அய்.அய்.டிக்கு ஒரு கடிதத்தை தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் அனுப்பியுள்ளது.

அதில், ஏற்கெனவே அனுப்பப் பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்பட வில்லை. தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை உடனடியாக அனுப்பாவிட்டால் சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறைக்கும் இதே போன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



Read more: http://www.viduthalai.in/page-2/102568.html#ixzz3bup0PS1K

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)



Read more: http://www.viduthalai.in/page-2/102561.html#ixzz3bupUpewS