Search This Blog

3.10.13

உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! -கி.வீரமணி

எங்களைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களே, நீங்கள் யார்? நாங்கள் யார்? 

வன்முறையை வன்முறையால் சந்திக்க கூடியவர்கள் நாங்கள் அல்ல - பிரச்சாரத்தால் அடக்குவோம்!
நாங்கள் சொல்லவந்த கருத்துகளைச் சொல்லாமல் போகமாட்டோம்!
விருதுநகர், அக். 2- வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை தக்க பிரச்சாரத்தின் மூலம் அடக்கக்கூடியவர்கள் நாங்கள் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நீண்ட இடைவெளி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்களை யெல்லாம் இந்த விருத்தாசலம் நகரிலே சந்திக் கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, இயக்கத் தோழர்கள் இதற்கு முன்னாலே, பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது நடத்திக் கொண்டிருந்தாலும்கூட, என்னைப் பொறுத்த வரையிலே, நான் இந்த விருத்தாசலம் நகருக்கு வருவது என்பது ஏறத்தாழ ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று உங்களைச் சந்திக்கக் கூடிய ஒரு நீண்ட இடைவெளி. சாதாரணமாக எப்பொழுதுமே தமிழ்நாடு முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பவன். அடிக்கடி இந்தப் பகுதிக்குத் திருமணங்கள் மற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும்கூட, ஒரு மாநாடு, ஒரு பேரணி, அதன்மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கே அன்போடு திரண்டு, ஆர்வத் தோடு எங்களுக்குத் தருகின்ற வரவேற்பு இவை யெல்லாம் பெறக்கூடிய வாய்ப்பு, ஒரு நீண்ட இடைவெளி என்று அதற்காகத்தான் நான் சொன்னேன்.
நாங்கள் இங்கே வருவதற்கு, பல பேர் மிகப்பெரிய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இந்த மாநாடு நடைபெறக்கூடாது; மாநாட்டில் ஊர்வலம் நடைபெறக்கூடாது; ஊர்வலம் நடைபெற்று வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது என்று தெரிந்தவுடனே, ஊர்வலத்திலே கலந்துகொள்ள வருகின்ற நான், இங்கே வந்து சேரக்கூடாது. ஆகவே, என்னுடைய வண்டி தாக்கப்படலாம்; காவல்துறை அதனைத் தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ, நேரிடையாகவோ, அலட்சியத்தாலோ அல்லது என்ன காரணத்தினாலோ, அவர்களுக்கும் ஜனநாயக உரிமைகளைத் தந்திருக்கிறார்கள்.
எதிர்க்க, எதிர்க்க வளரக்கூடிய இயக்கம் இந்த இயக்கம்
ஆனால், ஒன்றைச் சொல்கிறேன், நம்முடைய தோழர்கள், அதிலும் குறிப்பாக இங்கே எனக்கு முன்பாகப் பேசிய அத்துணை தோழர்களும் கொதித்து ஆவேசமாகப் பேசினார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன், நம்முடைய இயக்கம் மானம் பாராத இயக்கம்; இந்த இயக்கம் எதிர்ப்பிலேயே வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு இயக்கம். எப்பொழுதுமே, எதிர்க்க, எதிர்க்க, அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, எதிர்க்க, எதிர்க்க வளரக்கூடிய இயக்கம் இந்த இயக்கம். இந்த இயக்கத்தினுடைய வரலாறு தெரியாத, நேற்று, பெய்த மழையிலே இன்று முளைத்த காளான்கள் சில எங்களையெல்லாம் எதிர்த்துப் பூச்சாண்டி காட்டினால், நாங்கள் இதைவிட்டுப் போய்விடுவோம் அல்லது நடத்தமாட்டோம் என்று நினைக்கக்கூடாது.
நாங்கள் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொள்வதெல்லாம், அடிக்கடி இந்த எதிர்ப்பைத் தொடர்ந்துகொண்டே இருங்கள்; இன்றோடு நிறுத்திவிடாதீர்கள்; இன்றோடு நிறுத்திவிட்டால், எங்கள் இளஞ்சிங்கங்களுக்கு உற்சாகம் குறைந்துவிடும். இப்பொழுதுதான் அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுதுதான் மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். மாணவர்கள், பொதுமக்கள், திராவிட முன்னேற்றக் கழகச் சகோதரர்களும், பொறுப்பாளர்களும் எங்களை வந்து இங்கே வரவேற்றார்கள். அதுபோல, அத்துணைக் கட்சி நண்பர்களும் எங்களை வரவேற்கிறார்கள். எங்களுக்கு என்று இருக்கின்ற எதிரி, பார்ப் பானைத் தவிர, பார்ப்பனக் கூலிகளைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியார் என்பவர் மூச்சுக்காற்று!
பட்டை போட்டவராக இருந்தாலும், விபூதி அல்லது நாமம் போட்டவராக இருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கையாளராக இருந்தாலும் அவர் வீட்டிலும் பெரியார் இருக்கிறார். அவரும் பெரியார்தான் என்னுடைய கடவுள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருக்கு இருக்கின்ற கடவுள் நம்பிக்கையை அவர் பயன்படுத்துகின்றார். ஏனென்று சொன்னால், பெரியார் என்பவர் மூச்சுக்காற்று.
இப்பொழுது நான் வருகின்ற அந்த வழியில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கின்றது, எடுக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் பிறகு! அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. நான் சொல்லவேண்டிய கருத்துகள் மிக முக்கியம். எதற்காக இந்தக் கருத்துக்கள் பரவக்கூடாது என்று நினைத்தார் களோ, அதனை இடையறாமல் செய்யவேண்டும் என்ற உற்சாகத்தோடு நாங்கள் இங்கே வந்து உங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். திராவிடர் கழகம் ஒரு கட்டுப்பாடான இயக்கம்.
அதேநேரத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் வேறு ஒரு அரசியல் கட்சிக்கோ மற்றவர்க ளுக்கோ நடந்திருக்குமேயானால், இந்நேரம் கலவரம் இல்லாமல், இந்த விருத்தாசலம் ஒரு அமைதியான கூட்டத்தைக் கேட்டுக்கொண் டிருக்க முடியாது. இந்தக் கூட்டத்திற்கு ஆத்திரம் உண்டு; ஆனால், அதற்குமேல் அறிவும் உண்டு. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்துகின்ற அளவிற்கு. எனவே, ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு என்று சொல்லக்கூடிய அளவிலே, எங்கள் தோழர்கள் ஒருபோதும் ஆத்திரமடையமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில், எனக்கு மிக மகிழ்ச்சி. எப்பொழுதுமே எதிர்ப்பைக் கண்டால், எங்களுக்குத் தனி உற்சாகம் பிறக்கும்.
வீரமணி ஒழிக! ஒழிக!! என்று சொன்னார்கள்!
அந்த வகையிலே நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம்; வீழ்ந்துவிடமாட்டோம். மாநாடு மேடைக்கு வருகின்றபொழுது, யாரோ சிலர், 10, 15 பேர் நின்றுகொண்டு, அனாமேதயங்கள், விலாசம் இல்லாதவர்கள், புதிதாக பார்ப்ப னர்களாலே தூண்டிவிடப்பட்டிருப்பவர்கள். அவர்கள் பாவம் வெறும் ஏவுகணைகள்; ஏவியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். பார்ப்பனியம் இவர்களைப் பிரித்தாண்டு, ஜாதிகளால் பிரித்தாண்டது மட்டும் போதாது என்று சொல்லி, சில ஜாதி முத்திரைகளைக் குத்திக் கொண்டு, ஏதோ அந்த ஜாதிக்கே இவர்கள்தான் மிகப்பெரிய ஆதாரங்கள்போல் நினைத்துக் கொண்டு, என்னைப் பார்த்து, பைத்தியக்காரர் களைப்போல, ஏதோ மதுக் குடித்தவர்களைப் போல வீரமணி ஒழிக! ஒழிக!! என்று சொன்னார்கள்.
வீரமணி ஒழிவான்! எப்பொழுது கடைசி மூட நம்பிக்கையாளன் ஒழிந்த பிறகு! வீரமணி ஒழிவான்! நிச்சயமாக, எப்பொழுது - கடைசி பார்ப்பான ஆதிக்கத்தினுடைய சின்னம் துடைத்து எறிந்த பிற்பாடு! அதைத்தான் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
சொல்லவேண்டிய கருத்துகளை நாங்கள் சொல்லாமல் போகமாட்டோம்!
எங்களுடைய ஆதிக்கம் என்பதிருக்கிறதே, உனக்கும் சேர்த்துதான் நான் பாடுபடுபவன்; இந்தக் கூட்டம் வெறும் திராவிடர் கழகத்துக் காரர்கள் மட்டுமா கூடியிருக்கின்ற கூட்டம். காவல்துறையும் இந்தக் கூட்டத்தைப் பதிவு செய்கிறது. அரசாங்கத்தினுடைய காதுகளுக்கும் எங்களுடைய உரைகளெல்லாம் போய்ச் சேருகின்றன. எங்களுக்குத் தெரியும், மத்திய - மாநில அரசுகளுக்கு எல்லாம் இந்த உரைகள் போய்ச் சேருகின்றன; சேரவேண்டும். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம்.
எவ்வளவு சிறப்பான ஒரு இயக்கம், இந்த இயக்கம் என்பதற்கு அடையாளமாக ஒன்றே ஒன்றைச் சொல்லுகிறேன், நண்பர்களே!
வெறும் ஆத்திரத்தினாலே, சொல்ல வேண்டிய கருத்துகளை நாங்கள் சொல்லாமல் போகமாட்டோம்; செய்யவேண்டிய பிரச் சாரத்தை விட்டுவிட்டு, வேறு எங்கோ திசை திருப்பலாம் - எங்களை ஆத்திரமூட்டி என்று நினைத்தால், அவர்களைவிட பைத்தியக் காரர்கள் வேறு யாரும் கிடையவே கிடையாது.
ஜட்கா வண்டியில் செல்லக்கூடிய காலம் அது
எங்கள் இயக்கத்தின் வரலாறு தெரியாத அவர்கள் சாதாரணங்கள்; அந்தக் காலத்தில், இதே விருத்தாசலத்தில், எப்பொழுது? இப்படிப் பட்ட பலர் பிறக்காத காலத்தில், பழைய நண் பர்கள் பலருக்குத் தெரியும். இங்கே, அய்யா காலத்திலிருந்து இயக்கம் என்று சொன்னால், தாஸ் சைக்கிள் கம்பெனி என்று சி.முனுசாமி அவர்கள் இந்தப் பகுதியிலே இருப்பார்கள் - மாவட்டச் செயலாளராக - அப்பொழுது எனக்கு 10 வயது - என்னுடைய ஆசிரியர் திராவிடமணி யோடு வந்துதான் - இதே வானொலி திடலிலே மேடையிலே எத்தனையோ முறை மாணவர் கழகம் அமைத்து, இங்கே நாங்கள் பேசியிருக் கிறோம். அப்பொழுது இவ்வளவு ஒளி விளக்கு கள் கிடையாது - பெட்ரோமாஸ் விளக்குகள் தான், அந்தக் காலத்தில். இங்கே இருந்து சேலத்திற்குப் போகவேண்டுமானால், இரவு 2 மணிக்கு ஜட்கா வண்டியில் செல்லக்கூடிய காலம் அது.
எனவே, அதற்குப் பிறகு நண்பர் சபாபதி போன்றவர்கள் மயூரா கேப் என்ற ஒன்றை நடத்திக் கொண்டிருந்த இளங்கோ அவர்களு டைய மாமா அவர்கள் தலைவராக இருந்து இந்த நகரத்திலே வளர்த்த இயக்கம். அதுபோல, நம்முடைய எண்ணற்ற தோழர்கள் - இன்றைக் கும் இளைஞர்களை ஏராளமாகப் பார்க்கிறோம்.
மோடி வித்தைகளைக் கையாண்டாலும்கூட, அவர்கள் நேரடியாக வர முடியாது!
இங்கே நண்பர்கள் சொன்னாரே, முருகங்குடி தோழர் இராஜவேலு போன்றவர்கள் - இப்படி ஏராளமான தோழர்கள், இளைஞர்கள் வந்து, இதே கல்லூரியில் மாணவர் கழகம் அமைக்கப் பட்டு, இவ்வளவு வேகமாக நடக்கக்கூடிய இந்த இயக்கம் - இந்த இயக்கத்தினுடைய பணி காரண மாகத்தான், பெரியார் காலத்திலே இல்லாத மத்திய அரசின் இட ஒதுக்கீடு - பெரியாருக்குப் பிறகு இன்றைக்கு, இந்தச் சமுதாயத்திலே பெரியார் ஊட்டிய, அவர் விதைத்த விதை இருக்கிறதே, அது ஆல்போல் தழைத்து, அருவி போல் வேரோடி நாடெல்லாம் பரவி இருக்கும்; பெரியார் ஏதோ முடிந்துவிட்டார் என்று நினைக்கும் ஆரியத்திற்கு, ஆப்பு அடிப்பதுபோல, பெரியார் காலமே பரவாயில்லை போல் இருக்கிறது; இவர்கள் அகில இந்திய அளவில் மட்டுமல்ல; அகில உலகத்திற்கும் பெரியார் குரலை பரப்பிக் கொண்டிருக்கிறார்களே என்ற ஆத்திரம் பார்ப்பனியத்திற்கு இருக்கிறது. பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. அவர்களால் நேரிடையாக எங்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. என்னதான் அவர்கள் மோடி வித்தைகளைக் கையாண்டாலும்கூட, அவர்கள் நேரடியாக வர முடியாது. நாங்கள் வன்முறையை, வன்முறையால் சந்திக்கக் கூடியவர்கள் அல்ல!
ஆகவேதான், அப்பாவி கூலிகளைப் பிடித்து, அவர்கள் தூண்டி விடுகிறார்கள். ஏதோ ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு, ஆ! இப் படியா? அப்படியா? கடவுள் பக்தர்கள், கடவு ளைப்பற்றிச் சொல்லிவிட்டார்கள் என் றெல்லாம் வேகமாக இவர்கள் பேசுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் வன்முறையைத் தூண்டிதான், அதன் மூலமாக இதனைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது; நாங்கள் வன்முறையை, வன்முறையால் சந்திக்கக் கூடியவர்கள் அல்ல; வன்முறையை பிரச்சாரத் தினாலே அடக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டு. மக்களை எங்கள் வயப்படுத்திக்கொண்டு, அதனை செய்யக்கூடிய ஆற்றல் உண்டு.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்: இவர்களுடைய சக்தி எவ்வளவு தவறானது என்பதை, காவல்துறை உள்பட, அரசு உள்பட, எதிரிகள் உள்பட, துரோகிகள் உள்பட தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஒன்றைச் சொல்கிறேன் நண்பர்களே, இதிலிருந்தே, இந்த இயக்கம் எவ்வளவு கட்டுப்பாடான இயக்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தயவு செய்து அமர்ந்திருக்கின்ற தோழர்கள் அனைவரும் கட்டுப்பாடாக எழுந்து நிற்க வேண்டும்; அனைத்துத் தோழர்களும் எழுந்து நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (கழகத் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைவரும் எழுந்து நின்றனர்). இவ்வளவு பெரிய கூட்டம் எழுந்து நிற்கிறது. தயவு செய்து அமைதியாக அமருங்கள்.
வன்முறையில் துளியும் நம்பிக்கை உடையவர்கள் அல்ல!
இப்படி எல்லோரையும் எழுந்து நிற்கச் சொல்லி, அமைதியாக அமர வைக்கக்கூடிய ஆற்றலுடைய எங்களால், திசை திருப்ப முடியும் என்றால், மற்றவர்களைப் பஞ்சு பஞ்சாக ஆக்குவதற்கு எவ்வளவு நேரமாகும். ஆனால், நண்பர்களே, அதைச் செய்யக்கூடிய பைத்தியக் காரர்களாக நாங்கள் ஒருபோதும் மாறமாட் டோம். காரணம், நாங்கள் வன்முறையில் துளியும் நம்பிக்கை உடையவர்கள் அல்ல!
அதுமட்டுமல்ல, இன்னும் சொல்லுகிறேன், எங்களுக்குக் கூலிகள் எதிரிகள் அல்ல; கூலிகள் பரிதாபத்திற்குரியவர்கள்; அவர்கள் தாக்கப்படக் கூடியவர்கள் அல்ல; திருத்தப்பட வேண்டியவர் கள். அதுதான் மிக முக்கியமானது. ஆகவே, அவர்களைத் திருத்தவேண்டும். அவர்கள் புரியாமல் இருக்கிறார்கள்; அவர்களை நல்வழிப் படுத்தவேண்டும்.
மண்டல் கமிசன் என்ற ஒன்று உங்களுக்குத் தெரியுமா? பி.பி.மண்டல் யார்? ஏதோ ஒரு சமுதாயத்தைச் சொல்லி, யாதவ சமுதாயத் திற்கே நாங்கள்தான் வீராதி வீர சூரப் பிரதா பர்கள் என்று பேசுகிறீர்களே, அந்த மண்டல் பெரியார் திடலுக்கு வந்தார். உனக்கு மண்டலும் தெரியாது; பாவம், கமண்டலங்கள் உங்களைத் தூண்டி விட்டிருக்கிறது, ஏவி விட்டிருக்கிறது; அந்தக் கமண்டலங்களின் கூலிகளாக நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம், மண்டல் கேட்டார், காகாகலேல்கர் ஆணையம், முதல் பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் அறிக்கையை வாங்கி, அப்படியே கிடப்பில் போட்டுவிட் டார்கள். நாடாளுமன்ற விவாதத்திற்குக்கூட அது வரவில்லை.
நண்பர்களே, பெரியாருக்குப் பிறகு, திராவிடர் கழகம் இவ்வளவு வலிமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான், நாங்கள் யார்மீதும் நம்பிக்கை வைத்திருக்கவில்லை; திராவிடர் கழகத்தின்மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உங்களால்தான் மண்டல் கமிசனை அமல்படுத்த முடியும் என்று சொன்னோம்; சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அதை செயல்படுத்தக் கூடிய அளவிற்குச் செய்த இயக்கம் திராவிடர் கழகம்.
இன்றைக்கு அதன் காரணமாகத்தான், பிற் படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும், சாதாரணமாக அய்.ஏ.எஸ்., அதிகாரிகளாக, அய்.பி.எஸ்., அதிகாரிகளாக, இன்னும் அய்.எஃப்.எஸ். அதிகாரிகளாக, கலெக் டர்களாக, போலீஸ் அதிகாரிகளாக நேரிடை யாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அளவிற்கு இருக்கிறார்கள். இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த இயக்கம் என்ன செய்திருக் கிறது என்று.
உங்களுக்கு என்ன தெரியும்?
உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!
ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட் டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ் ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்ட னையும் எங்களுக்குத் தெரியும்!  ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட் டிருக்கிறார்கள் யாரோ!
நான் ஒரு நாள் எழுதிய அறிக்கையை, நீங்கள் 100 நாள் பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள்.
இதிலிருந்தே உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு என்பது தெரியவில்லையா! எங்களுக்கு எவ்வளவு பெரிய வெற்றி அது! இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!
ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்!
கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கோழைகள்போல், எங்கோ நின்று கொண்டு, காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், என்ன அர்த்தம்! இந்தப் பிரச்சாரம், நாங்கள் வழக்கமாக எல்லா இடங்களிலும் செய்கின்ற பிரச்சாரம் தான். இராமனுடைய யோக்கியதைப்பற்றி, இரா மாயணப் பாத்திரங்களில் எழுதியிருக்கிறோம்.
நாங்கள் படித்த அளவிற்கு, யாராவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? சிந்தித்திருக்கிறார்களா? நாங்கள் சவால் விட்டு சொல்கிறோம்.
                                                        ----------------------------- ”விடுதலை”2-10-2013

சூத்திரன் என்றால் என்ன? - மனுதர்மம் கூறும் விளக்கம்! 

சாஸ்திரப்படி - சட்டப்படி இன்னும் சூத்திரர்கள்தானே! இந்த இழிவை ஒழிக்கத்தானே நாங்கள் பாடுபடுகிறோம்

விருத்தாசலம் மாநாட்டில் தமிழர் தலைவரின் போர் முழக்கம்


விருத்தாசலம், அக். 3- எங்களை ஒழிக்கலாம் கொல்லலாம் என்று நினைக்கிறவர்கள் சூத்திரர்களே - சூத்திரன் என்பது இழிவானது அல்லவா! பார்ப்பனர்களின் வேசி மக்கள் என்று பொருள் அல்லவா! இதனை ஒழிக்கத்தானே நாங்கள் பாடுபடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார். அவ ரது நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

கீதையின் மறுபக்கம்!

இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!
கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் - யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!
எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறா ராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் - 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற் கின்றதாம்.

கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது.

நீங்கள் யாரும் உணர்ச்சிவயப்படக் கூடாது;
அவர் வரட்டும் பார்க்கலாம்!

இந்நூலைப் பார்த்து ஆத்திரமடைந்த - இவர்களைத் தூண்டிவிடுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய இராமகோபாலன் போன்ற பார்ப்பனர்கள், ஒரு நாள் திடீரென்று கலைஞர் வீட்டிற்கு நேராக வருகிறோம் என்று சொல்கிறார்; அப்பொழுது கலைஞர் அவர்கள் பதவியில் இல்லை. கலைஞரை சந்தித்து, கீதை நூலை கொடுக்கப் போகிறார் என்ற தகவல் வந்திருக்கிறது. தி.மு.க. தோழர்கள் கோபத்துடன் கலைஞரின் வீட்டருகே நின்று கொண்டிருக்கிறார்கள். உடனே கலைஞர் அவர்கள், நீங்கள் யாரும் உணர்ச்சிவயப்படக் கூடாது; அவர் வரட்டும் பார்க்கலாம்; நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஏனென்றால், பெரியாரிடத்தில் பாடம் பயின்ற வர்கள் நாங்கள்; நாங்கள் உணர்ச்சிவயப்பட மாட்டோம்; பெரியாருடைய குருகுலம் இருக் கிறதே, நாங்களெல்லாம் அதில் பயிற்சி பெற்ற வர்கள். அதனால் கலைஞர் அவர்கள் இராம கோபாலனை வரச் சொன்னார்.

இராமகோபாலன்  பெரிய அளவில் கலைஞரை மடக்கிவிட்டதாக நினைத்து, இதோ பகவத் கீதை; இதைப் படியுங்கள்! என்று கீதை நூலினை கொடுத்தார்.
கலைஞர் அவர்கள் கோபப்படாமல், ஆத்திரப் படாமல், அதனை வாங்கிக்கொண்டு, நீங்கள் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தீர்கள்; நான் உங்களுக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறேன். வீரமணி எழுதியிருக்கிறார், கீதையின் மறுபக்கம் என்று; இதனை நீங்கள் படியுங்கள் என்று கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்டு போன இராம கோபாலன் இன்றுவரையில் பதிலையே காணோம்!

கீதையின் மறுபக்கம் நூலினை படித்து, இதில் என்னென்ன தவறு இருக்கிறது என்பதை மறுபடியும் எழுதியிருக்கலாமே! நாளைக்குக்கூட சொல்லலாம்;
நான் கீதையைப் படித்த அளவிற்கு வேறு யாரும் படித்திருக்க முடியாது!
கீதை படிக்க முடியாத ஒரு புத்தகம்; நான் கீதையைப் படித்த அளவிற்கு வேறு யாரும் படித் திருக்க முடியாது. சில நேரங்களில் மூளையே குழம்பிப் போகிற அளவிற்கு இருக்கும். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சொல்லியிருப்பார்கள், அதுவும்தானே, இதுவும்தானே என்று.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டவுடன் ஒருவர் சொல்கிறார்:
கீதையில் சொல்லியிருக்கிற கருத்துப்படி, சங்கராச்சாரி இப்போது கைது செய்யப்பட்டிருக் கிறாரே, அதுப்படி என்ன என்று. கீதையில் நடந்ததாக ஒன்றைச் சொல்கிறார்கள்; ஆனால், அப்பகுதி கீதையில் இல்லை. ஏனென்றால், நான் அதிலுள்ள எல்லா பகுதிகளையும் படித்திருக் கிறேன். நான் உடனே அப்பொழுது சொன் னேன், எது நன்றாக நடந்ததோ, அது நன்றா கவே நடந்தது; எது இனி நடக்கவேண்டுமோ, அது நன்றாகவே நடக்கும் என்று.

இந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடான கூட்டம்

கீதையில் இருக்கிறதோ, இல்லையோ, இப்பொழுது நடந்தது நன்றாகவே நடந்தது என்று லயோலா கல்லூரியில் உரையாற்றும் பொழுது நான் சொன்னேன்.

எதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றால், இந்த எதிர்ப்பு, சலசலப்பு இவைகளால் எங்களை நீங்கள் முறியடிக்க முடியாது. இந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடான கூட்டம்; எவ்வளவு அறிவுபூர்வமான கூட்டம்.
நாங்கள் எங்கள் தோழர்களோடு மோதிக் கொள்ளமாட்டோம்; அவர்களைத் திருத்து வோம்.

இந்த இயக்கத்தில் நடந்த சம்பவங்கள் - பெரியார்மீது கல் வீசியவர்கள்; பெரியார் மீது செருப்பு வீசியவர்கள்; பெரியார்மீது கடலூரில் மலத்தை வீசியவர்கள் போன்ற சம்பவங்களை யெல்லாம் நாங்கள் சந்தித்திருக்கிறோம். எங்களுடைய வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் அதிகமாக சந்தித்திருக்கிறோம். இதே உளுந்தூர்பேட்டையில் மிகப்பெரிய அளவிற்கு கல்லை எடுத்து அடித்தவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள் எல்லாம் எங்கள் இயக்கத்தில் தலைவர்களாக மாறினார்கள்.

என்னிடம் ஒருவர் சொன்னார், அய்யா உங்கள் கூட்டத்தில் கலவரம் செய்தவன்தான் நான்; கல்லெடுத்து அடித்தவன்தான் நான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை  தளபதி அழகிரிசாமி

அதேபோல், அண்ணன் அழகிரி அவர்கள்; தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் கல் வந்து விழுந்தால், அழகாகச் சொல்வார், ஏ, பார்ப்பனீயமே, நீ எவ்வளவு பேரை தூண்டி விட்டு, கற்களை வீசினாலும்கூட அந்த ஒவ் வொரு கல் வீசும்பொழுதும், நான் உன்னுடைய மடமைக்கு, வைதீகத்திற்கு கட்டப் போகின்ற கல்லறைக்கு அந்தக் கற்களையெல்லாம் பயன் படுத்திக்கொள்வேன் என்று சொல்வார்கள்.

ஈட்டி இருக்கிறதே, எட்டிய வரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்; ஆனால், பெரியாரின் கொள்கை இருக்கிறதே, அது அண்ட சண்ட சராசரங்களிலும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும் என்று சொல்லுகின்ற இயக்கம் இந்த இயக்கம்.

மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறது?

ஆகவே, இந்த இயக்கத்திலே, அதுவும் இந்த ஊரைச் சார்ந்தவன்; என்னைப் பார்த்து நீ வராதே என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை உண்டு. யார் எழுதிக் கொடுத்தார்கள். இந்த மண்ணிலே நாங்கள் அடக்குமுறைகளை எவ்வளவோ சந்தித்தவர்கள். நான் இங்கு வரும்பொழுது நண்பர்கள் வரவேற்றார்கள். நாங்கள் மிசா காலத்தில் இருந்தபொழுது, இந்த ஊர் கிருஷ்ணமூர்த்தி, மறைந்த மாயவன், அதேபோல், இஸ்லாமியத் தோழர் ரசாக், பண்ருட்டி நடேசன் போன்ற நாங்களெல்லாம் சிறைகளில் மிசா காலத்தில் அடிபடவில்லையா! எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், 1975 ஆம் ஆண்டு; அதற்குப் பிறகும் இந்த இயக்கம் இருக்கிறதா, இல்லையா? அதற்குப் பிறகும் இந்த இயக்கம் வலிமையாக இருக்கின்ற காரணத் தினாலேதானே, பெரியாரோடு முடிந்துவிட்டது என்று சொல்கிறவர்கள்,  இன்றைக்கு நீங்கள் வேறொரு முழக்கத்தைக் கொடுக்கவேண்டிய அளவிற்கு பார்ப்பான் உங்களைத் தூண்டி விட்டிருக்கிறான். அதன் காரணமாகத்தான் அதனை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால், உங்களுக்கும் சேர்த்து, உங்களுடைய சூத்திரப் பட்டம்; நீ என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நாலாஞ்ஜாதி. நாலாஞ்ஜாதி! நாலாயிரஞ்ஜாதியும் சேர்த்து, இருக்கிற பட்டம் சூத்திரப் பட்டம்; என்னுடைய கையில் இருப்பது மனுதர்மம்; இந்த மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறது?
உன்னுடைய கிருஷ்ணன் கடவுள், இதே கீதையில் சொல்லும்பொழுது, சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நாலு ஜாதிகளை நானே உண்டாக்கினேன்.

ஜாதியை உண்டாக்குவது ஒரு கடவுளா?

அந்த ஜாதியை உண்டாக்கினான்; நாலாவது ஜாதியாக இருக்கின்ற நீ, என்ன ஜாதி? நீ உன்னுடைய ஜாதியை மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! எல்லா ஜாதியும் சேர்த்து - நம்முடைய அண்ணன், தம்பி அத்தனை பேரையும் இவன் பிரித்தானே தவிர, நாலு ஜாதியில், நாலாவது ஜாதியாக அடக்கம் செய்து வைத்திருக்கிறான்.

சூத்திரன் என்றால் என்ன?

இதோ, அசல் மனுதர்மம்; இந்த மனுதர் மத்தில் எட்டாவது அத்தியாயத்தில் தெளிவாக இருக்கக் கூடிய சுலோகத்தில் என்ன சொல்லி யிருக்கிறான்.
எட்டாவது அத்தியாயம்; 415 சுலோகம்;

சூத்திரன் என்றால் என்ன?

சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். தன்னுடைய தேவடியாள் மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என ஏழு வகைப்படுவர்.

இந்த சூத்திரப்பட்டம் ஒழியவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
இந்த இயக்கம் இல்லை என்றால், நாங்கள் இல்லை என்றால், என்னை ஒழியச் சொல்கிறாய் அல்லவா - நாங்கள் ஒழிந்தால் என்னாகும் தெரியுமா? உன் நெற்றியில் பச்சை குத்துவான் சூத்திரன் என்று.

அந்தச் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்பதற்காகத்தானே நாங்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

95 வயது ஆனபொழுதும்கூட, போராட்டக் களத்தில் நின்றார் பெரியார்!

இன்னமும் சட்டத்தில் இருக்கிறது; சாஸ்திரத் தில் இருப்பதோடு மட்டுமல்ல, நடைமுறையில் இருக்கிறது. அந்த நடைமுறையில் இருப்பதை ஒழிப்பதற்குத்தான், கடைசி காலகட்டத்தில் பெரியார் அவர்கள் 95 வயது ஆனபொழுதும் கூட, அவர் போராட்டக் களத்தில் நின்றார்.

கோவில் கட்டுபவன் தமிழன்; சிலை வடிப் பவன் தமிழன்; மானியம் கொடுப்பவன் தமிழன்; இந்த வேலைகள் எல்லாம் முடிந்தவுடன், கடைசியில் ஒரு சின்ன சொம்பினைத் தூக்கிக் கொண்டு வந்து, நகருங்கோ, நகருங்கோ, பிள்ளைவாள் நகருங்கோ, கோனார்வாள் நகருங்கோ, உடையார்வாள் நகருங்கோ என்று எல்லா ஜாதிக்காரர்களையும் நகரச் சொல்லி விட்டு, மேலே ஏறி ஒரு சொம்பை ஊற்றுகின்ற வன் யாரு? பார்ப்பான்தானே! அவன்தானே கர்ப்பக்கிரகத்திற்குள் போகவேண்டும்.

இதுவரையில் நீ என்னதான் கிருஷ்ண பக்திக்காக வேஷம் போட்டு, உன்னை மூக்கைச் சொறிந்துகொண்டு அனுப்புகிறான்; உனக்கு தைரியம் இருந்தால், நேராக கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் போ! பார்ப்பான் உன்னை உள்ளே விடுவானா? நாங்கள் சொன்ன பிறகுதான், உன்னை உள்ளே விடுவான். அதற்காக நாங்கள் போராடுகிறோம் என்பதற்காக, போராட்டத் தினை திசை திருப்புவதற்காக, உன்னை ஏமாற்றி, உங்களை மாதிரி கூலிகளைப் பிடித்து, இந்தப் பிரச்சாரம் நடக்கக்கூடாது என்பதற்காக, அவர்களின் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று தந்தை பெரியார் போராட விருப்பதாக கலைஞரிடம் சொன்னார்.

சட்டம் கொண்டு வந்தார் கலைஞர்

கலைஞர் அவர்கள் உடனே, அய்யா, இது உங்கள் அரசாங்கம்; இந்த அரசாங்கத்தினை எதிர்த்து நீங்கள் போராடுவதா? என்றார்.
உடனே அய்யா அவர்கள், இல்லை, இல்லை, என்னுடைய கொள்கைக்காக நான் போராடுகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னார்.
கலைஞர் அவர்கள் இதற்காக சட்டம் ஒன் றினை கொண்டு வந்தார். உச்சநீதிமன்றத்திலே சட்டம் செல்லுபடியாகும் என்று சொன்னார் கள். ஆனால், அந்தச் சட்டத்தில் ஒரு சின்ன இக்கு வைத்தார்கள் நீதிபதிகள்.

என்ன சொன்னார்கள்?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆனால், ஆகம விதியை அவர்கள் படித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சட்டம் செல்லுபடியாகும்; ஆனால், அதனை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு நிலைமை இருந்தது.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நிலையில், நெஞ்சில் ஒரு முள்ளோடு புதைத்தேன்; அந்த முள்ளை எடுக்கவேண்டும் என்று, மீண்டும் அய்ந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராக வந்த கலைஞர் அவர்கள், முதல் கையெழுத்துப் போட்டது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்ற கோப்பில்தான். உடனே உச்சநீதிமன்றத்திற்குப் போய், அதனை முடக்கி வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாக இருந்தாலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராக வேண்டும் என்றாலும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுப்பார்கள். ஆனால், என்னதான் நீங்கள் படையெடுத்தா லும், இறுதியில் வெற்றி பெறப்போவது நாங்கள் தான் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

குலதர்மத்திற்கு இடமில்லை; சமதர்மக் கொடி பறந்துகொண்டிருக்கின்ற காலம்!

இது அந்தக் காலத்துக் கதையல்ல; இது மனுதர்மக் காலமல்ல; இது மனித தர்மம் ஆளக்கூடிய காலம்; குலதர்மத்திற்கு இட மில்லை; சமதர்மக் கொடி பறந்துகொண்டிருக் கின்ற காலம். இதனைத்தான் நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

எவ்வளவு தைரியம் இருந்தால், இதனை எழுதியிருப்பான்: பிராமணன் மேற்சொன்ன ஏழு வித தொழிலாளியான சூத்திரனிடத்தில் இருந்து, பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ள லாம்; எஜமானன் எடுத்துக்கொள்ளத்தக்க பொருளுடைய அந்த சூத்திரன், தன் பொருளுக்கு கொஞ்சமும் சொந்தக்காரன் அல்ல என்று சொல்லியிருக்கிறான்.

உதைத்துப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறான்.

மீண்டும் பழைய கதை தொடரும்!

நாம் சொத்து சேர்த்தாலும்கூட, நாம் சம் பாதித்தாலும்கூட, அந்தச் சொத்து நமக்குரியது அல்ல; சூத்திரனுக்கு உரியது அல்ல, காரணம், சூத்திரன் அடிமை; சூத்திரனுக்குப் படிப்புரிமை கிடையாது; சூத்திரனுக்கு திருமண உரிமை கிடையாது; சூத்திரனுக்கு சொத்துரிமை கிடை யாது. இவ்வளவும் இப்பொழுது கிடைக்கிறது என்றால், நாங்கள் இருக்கிறோம், அதனால் கிடைக்கிறது; நாளைக்கு நாங்கள் இல்லை என்றால் நண்பர்களே, மீண்டும் பழைய கதை தொடரும்!

இங்கே உரையாற்றும்பொழுது எங்கள் துணைத் தலைவர் சொன்னாரே, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்!

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் களுக்கு, முண்டங்களுக்கு இவையெல்லாம் தெரிவதற்கு வாய்ப்பே கிடையாது!

மூளை; மூளையைப் பயன்படுத்தவில்லை என்றால், முண்டம் என்று அர்த்தம்!

என்னடா, இவர் முண்டம் என்று கடுமையான வார்த்தையைச் சொல்கிறாரே என்று நினைக்கலாம்; இவர் கடுமையாகப் பேசமாட் டாரே என்று நீங்கள் நினைக்கலாம். நான் தவறாகச் சொல்லவில்லை, தலைக்கு மேலே இருந்தால்தான் மூளை; மூளையைப் பயன்படுத்த வில்லை என்றால், முண்டம் என்று அர்த்தம்; அது தண்டம்; அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடையாது. ஆகவே, நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
நாம் மானத்தோடு வாழ உரிமை கொடுக்கப் படவில்லையே! அதற்காகத்தான் பெரியார் போராடினார்.

இன்றைக்கு நம் பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். எங்கே பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள்.

குலக்கல்வி திட்டம்!

இதெல்லாம் முன்பு உண்டா? இராஜகோப லாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் என்ற ஒன்று இருந்ததே, இன்றைய தலை முறையினருக்கு, இளைஞர்களுக்கு தெரியுமா? 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் அதுபற்றி தெரியும்.

இராஜகோபாலாச்சாரியார் என்ற பார்ப் பனத் தலைவர் 1952 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு கொல்லைப்புறமாகப் புகுந்து, 6000 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி, எஞ்சியிருக்கின்ற பள்ளிக்கூடங்களில் அரை நேரம் படிக்கவேண்டும்; அரை நேரம் அவரவர் குலத்தொழிலைச் செய்யவேண்டும்.

பெரியார்! பெரியார்!! பெரியார்!! 

சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்கவேண்டும்; வெளுக்கின்றவன் பிள்ளை வெளுக்கவேண்டும்; கறக்கின்றவன் பிள்ளை கறக்கவேண்டும்; மிதிக் கின்றவன் பிள்ளை மிதிக்கவேண்டும் இதுதான் குலக்கல்வித் திட்டம்! இதனை எதிர்த்துக் குரல் கொடுத்த இயக்கம்தான், தலைவர் தந்தை பெரியாருடைய கருப்புச் சட்டை இயக்கம்; திராவிடர் இயக்கம். இந்த இயக்கம் இல்லை என்றால், அப்படியே அந்தக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், முத்தன் மகன் முனியன், குப்பன் மகன் சுப்பன், இன்றைக்கு இங்கிலாந்தில் இருக்கிறான்; சுவிட்சர்லாந்தில் இருக்கிறான்; எந்த நாட்டில் இருக்கிறான் என்றே என் வாயில் அந்த நாட்டின் பெயர் நுழையவில்லை என்று சொல்கிறீர்களே, என் மகன் கம்ப்யூட்டர் படித்திருக்கிறான் என்று சொல்கிறீர்களே, இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது, கடவுள் சரசுவதி அல்ல நண்பர்களே, ஏனென்றால், வருடா வருடம் சரசுவதி பூஜை கொண்டாடு கிறீர்களே, பாட்டி சரசுவதிக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது; பெயர்த்தி சரசுவதிதான் பொறியாளர் சரசுவதி; மருத்துவர் சரசுவதி; நீதிபதி சரசுவதி; வழக்குரைஞர் சரசுவதி; இதைச் செய்தது யார்? பெரியார்! பெரியார்!! பெரியார்!! இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.


நாங்கள் இல்லை என்றால்; நாங்கள் ஒழிந்தால் வரும்!

எனவே, அறிவுபூர்வமான ஒரு மிகப்பெரிய வாய்ப்பை, இந்தக் குலக்கல்வித் திட்டத்தை வைத்து முடக்கலாம் என்று பார்த்தார்கள். பெரியார்
எதிர்த்ததினால்தான், அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சிக்கு வந்ததினால், அந்தக் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. மறுபடியும் அந்தக் குலக்கல்வித் திட்டம் வரும்! எப்பொழுது? நாங்கள் இல்லை என்றால்; நாங்கள் ஒழிந்தால் வரும்.

அதற்கு உதாரணம் வேறொன்றும் வேண்டாம்; இப்பொழுது மோடியை தூக்கிப் பிடிக்கிறார்களே, மோடியினுடைய குஜராத் - குஜராத் அப்படி இருக்கிறது! இப்படி இருக்கிறது என்று சொல்கிறார்களே, அந்தக் குஜராத்திலே மோடி வைத்த பாடத் திட்டம் என்ன தெரியுமா? நான் இங்கே காட்டினேனே, மனுதர்மம்; இது அங்கே பள்ளிக்கூடத்தில் பாடத் திட்டம்.

மதுரையில் காவிக் கூட்டம் நடத்திய மாநாட்டில் என்ன தீர்மானம் போட்டது? இந்திய அரசியல் சட்டத்தினை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்த மனுதர்மம் அரசியல் சட்டமாக வரவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

                                ----------------- தொடரும் -- “விடுதலை”  03-10-2013

27 comments:

தமிழ் ஓவியா said...


நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானங்கள்


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.

முதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.

விருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.

மயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.

திமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா? அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.

நான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).

இந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக!

தமிழ் ஓவியா said...


தெலுங்கானாவிலும் பெரியார் விழா


வெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்
மதம் அன்டேனே மாண யாகம்
மூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி

என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.

- வேலை.பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...

வினை விதைத்த விநாயகன்

விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.

பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.

- இளங்குமரன், திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...



இதுதான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா? பூனைக்குட்டி வெளியில் வந்தது!


விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள்! தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.

ஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் காட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்? நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி? தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி?

ஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.

வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா?

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே!

தலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்!

1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்...! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.

விருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே! என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.

எதிலும் அரசியல்தானா? ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).

அதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்?

காவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது! - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.

அ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக! தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

3.10.2013
சென்னை

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர்மீது மதவெறிக் கும்பல் தாக்குவதா?


பிரபஞ்சன், எஸ்.வி. இராசதுரை, பேரா. அ. மார்க்ஸ் உள்ளிட்ட பெரு மக்கள் கண்டனம்!

சென்னை அக். 05- திராவிடர் கழகத் தலைவரைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சமூக ஆர்வலர் கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று விருத்தாச்சலத்தில் நடை பெற்ற கடலூர் மண்டல மாணவர் மாநாட்டிற்குச் சென்ற தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை காவிக் கொடி ஏந்திய வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கியுள் ளது. தேசிய யாதவர் மகாசபை என் னும் அமைப்புடன், இந்து முன்னணி முதலான இந்துத்துவ அமைப்புகள் இதில் பங்குபெற்றுள்ளன.

தாக்கியவர்களை ஒன்றும் செய் யாத காவல்துறையினர், ஆசிரியரைக் காப்பாற்ற ஓடி வந்த தி.க தொண் டர்களைத் தாக்கியுள்ளனர். எனினும் அமைதியாக இருக்குமாறு கி.வீரமணி அவர்கள் வேண்டிக் கொண்டதை ஏற்று மாநாடு சிறப்புற நடந்துள்ளது.
வீரமணி அவர்கள் வந்த வாக னத்தை மதவெறியர்கள் தாக்கியது, காப்பாற்ற ஒடி வந்த தொண்டர்களை காவல்துறையினர் தாக்கியது என இரு புகார்கள் கொடுக்கப்பட்டும், காவல் துறையினர் முதல் புகாரை மட்டுமே பதிவு செய்துள்ளதாக அறிகிறோம். அந்தப் புகாரின் அடிப்படையிலும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.

காவல்துறையினரின் ஒப்புதலுடன்

காவல்துறையினரின் ஒப்புதலு டனேயே இத் தாக்குதல் நடைபெற் றுள்ளது என்கிற அய்யம் உள்ளது. முன்னதாக அப்பகுதி டி.எஸ்.பி வெங்கடேசன், ஊர்வலத்திற்கு அனு மதி மறுத்துள்ளார். எனினும் மேலதி காரிகளைத் தொடர்பு கொண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. விருத் தாச்சலம் என்பது ஒரு சிறிய ஊர். தாக்குதல் நடத்திய கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்வது மிக எளிதான ஒன்று. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந் திக்கு அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தபோது வீரமணி அவர்கள் மட்டும் வருணாசிரமத் தையும், வருண அடிப்படையிலான தொழில் மற்றும் ஏற்றத் தாழ்வு களையும் நியாயப்படுத்திய கிருஷ்ண னின் பிறந்த நாளை ஏன் தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்கிற பொருள்பட வெளியிட்ட அறிக்கையே தாக்குதலின் உடனடிக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த அறிக்கையைக் கண்டித்துக் கடுமையாக ஒரு சிலர் தொலைக் காட்சியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியும் உள்ளனர். தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம், சுமார் ஒரு நூற் றாண்டு காலமாக வருணாசிரம எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் ஒரு முன்னுதாரணமாகச் செய்து வருகிறது. எந்நாளும் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததாக வரலாறே கிடையாது. எனினும் ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளைப் தந்தை பெரியாரின் காலந் தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துக்களைப் பிரச் சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச் சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன,

தமிழக அரசு உடனடியாக நட வடிக்கை மேற்கொண்டு வன்முறை யாளர்களைக் கைது செய்ய வேண் டும். வன்முறையாளர்களுக்கு ஆதர வாக மெத்தனம் காட்டும் காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சமூக ஆர்வலர்கள்

பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை),

அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி),

பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை),

கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி),

பேரா. பிரபா.கல்விமணி, (பழங் குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்),

வழக்குரைஞர் பொ.இரத்தினம், (உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர், மதுரை)

வழக்குரைஞர் ரஜினி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை)

வழக்குரைஞர் தய்.கந்தசாமி, ( தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப் பூண்டி)

வழக்குரைஞர் மனோகரன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை)

வழக்குரைஞர் கி. நடராசன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை),

கல்வியாளர் முனைவர் ப.சிவகுமார், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

கல்வியாளர் பேரா.மு. திருமாவள வன், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

சுகுணா திவாகர், (பத்திரிகை யாளர், சென்னை)

பேரா. சே.கோச்சடை, (மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி)

விடுதலை வீரன், (அமைப்புச் செய லாளர், ஆதித் தமிழர் பேரவை, மதுரை) தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5.முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை- 20. செல்: 9444120582

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தாக்கப்பட்டது ஜனநாயக விரோத செயல் சி.பி.எம். கண்டனம்



சென்னை, அக். 5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி மீது நடந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற் குழுக்கூட்டம் 2 நாள் கூட்டம் சென்னையில் வியாழனன்றுதுவங்கியது. மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் கூட் டத்திற்கு தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., பி.சம்பத், உ.வாசுகி, அ.சவுந்தர ராசன்எம்எல்ஏ, கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற் குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் பின்வருமாறு: திராவிடர் கழகத் தலை வர் திரு.கி.வீரமணி அவர்கள் விருத்தாச்சலத் தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது பாலக் கரை அருகே அவரு டைய வாகனத்தையும் உடன் வந்த வாகனங் களையும் தாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கிறார் கள். கருத்துக்களை வன் முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்க கூடாது. கி.வீரமணி தாக் கப்பட்ட இந்த ஜன நாயக விரோதச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில காவல்துறையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தோழர் இந்திரஜித் கண்டனம்

திருச்சியில் நேற்று (4.10.2013) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் தம் கண்ட னத்தைப் பதிவு செய்தார். திராவிடர் கழகத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் சிலைகள் கொள்ளை



கோபி, அக்.5- கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் அய்யப்பா நகர் பகுதியில் சுமார் 100 ஆண்டு பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறீதேவி, பூதேவி மற்றும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சுமார் 1.5 அடி உயரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அய்ம்பொன் சிலைகள் இருந்தன. ஆண்டு தோறும் புரட்டாசி மற்றும் முக்கிய நாட்களில் அய்ம்பொன் சிலைகளை வைத்து வழிபடுவதும் பிறகு அவற்றை மடப்பள்ளிகளில் பாதுகாப்பாக வைப்பதும் வழக்கமாம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அர்ச்சகர் கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். மாலை வந்து பார்த்த போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு 3 அய்ம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையில் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின் றனர். தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பார்வையிட்டு விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் கொள்கை வாரிசு மானமிகு வீரமணி அவர்களைத் தாக்குவதா?


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கண்டனம்

சென்னை, அக்.5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணிமீது தாக்குதல் நடந்துள்ள முயற்சிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ் லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநி லத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விருத்தாசலத் தில், சமூக விரோதி களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி அறிய மிகவும் வேதனையாக இருக்கிறது.

பகுத்தறிவு சிந்த னையை தமிழக மக் களுக்கு பாலூட்டும் தாயைப் போல் இருந்து பரப்பி வந்தவர் பெரி யார் அவர்கள். அந்தப் பெரியார் இல்லாதிருப் பராகில், தமிழ்நாடு பண்பாடற்ற காடாகத் தான் காட்சி தந்திருக் கும். பகுத்தறிவு ஒளி விளக்கை ஊரெல்லாம் உள்ளமெல்லாம் ஏற்றி வைத்துச் சென்ற பெரி யாரின் வாரிசானவர் அவரின் கொள்கையை பரப்புவதே தனது வாழ்க்கை லட்சியம் என வாழும் மானமிகு வீரமணி அவர்களை தாக்குவதற்கு மனம் எப்படித் துணிந்தது என்று தெரியவில்லை.

தேவை நடவடிக்கை

தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப் பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின் றன என்பதற்கு அடை யாளம்தான் இந்த வன் முறை. இத்தகைய பண் பாடற்ற வன்முறையை இந்திய யூனியன் முஸ்லீ ம் லீக் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வு ஒரு போதும் நடக்க விடாது தடுப்பதும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதும் தமிழக காவல்துறையின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


ஏழமலையானுக்குச் சிக்கல்!

தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஆந்திரா வில் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் வருவதில் சிக்கலாம் (வசூல் குறைந்து விடும் என்ற கவலை! தீராத வினைகளைத் தீர்க்கும் கோவிந்தம் தனக்கு வந்த வினையைத் தீர்க்க மாட்டாரோ!)

தாக்கியவர் பெண்

சென்னையை அடுத்த ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாக்கியம் என்ற பெண்மணி தன் மகனுக்காக ஜாதி சான்றிதழ் கேட்டார் கிராம நிர்வாக அதிகாரியிடம். காலதாமதம் செய்ததால் அதிகாரியை ஜெயபாக்கியம் தாக்கியுள்ளார். (தாக்கியது தவறுதான். ஆனாலும் அதிகாரிகள் உரிய நேரத்தில் தன் கடமையைச் செய்யத் தவறினால், இத்தகு அசம்பாவிதங்கள் தவிர்க்க முடியாததாகி விடும். பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதே).

மூக்கறுப்பு

அச்சிறுபாக்கம் அருகே மூதாட்டியின் காது, மூக்கை அறுத்து நகைகளைப் பறித்துச் சென்றனர் என்பது செய்தி. (மூதாட்டிக்கு மூக்கறுப்பு என்பதை விட நாட்டின் சட்டம் ஒழுங்குக்குத்தான் மூக்கறுப்பு!)

தேவேகவுடா

ஊழல் கறை படிந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன், ஊடகங்கள் நரேந்திர மோடியை வளர்த்து வருகின்றன. மதவாதம் மற்றும் ஊழல் வாதத்தில் கவலைதான் நரேந்திரமோடி. இவை இரண்டும் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்.
(மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் என்பதைக் காலந் தாழ்ந்தாவது நிரூபித்து விட்டார் - சபாஷ்!)

தடுப்பு

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீரைத் தடுக்க 7 ஆம் தேதி போராட்டம் நடத்திட ஆந்திரப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. (தமிழ்நாட்டின் வயிற்றில் அடிப்பதற்கென்று நாலு திசையிலும் ஆசாமிகள் இருக்கிறார்கள்).

ஒழுக்க சீலர்கள்!

நண்பர்களைத் திருப்திபடுத்த இளம் பெண்களின் அரை நிர்வாண நடனத்தை கருநாடகாவில் பீதர் மாவட்ட பிஜேபி செயலாளர் பாபு வாலி ஏற்பாடு! (தார்மீகப் பண்பு மிகுந்தது - பிஜேபி என்பதை நம்பித் தொலையுங்கள்)

தமிழ் ஓவியா said...


செயங்கொண்டம் வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்

செயங்கொண்டம், அக். 5- விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்குரைஞரைத் தாக்கியதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்
3.10.2013 அன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் எஸ்.எம்.அன்புமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் கடந்த 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடை பெற்ற அரசியல் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு 11 மணியளவில் ஜெயங்கொண்டம் திரும்புவதற்கு விருத்தாசலம் பாலக்கரையடுத்த நான்கு ரோட்டில் அரியலூர் மாவட்டம், உடை யார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எம்.இராசா அவர்கள் வரும்போது அங்கிருந்த விருத்தாசலம் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் வழக்கறிஞர் என நன்கு தெரிந்து ஒருமையில் காமக் குரோத வார்த்தைகளால் திட்டி, நெட்டித் தள்ளி அவமானப்படுத்தி, வழக்கறிஞர் என்றால் பெரிய கொம்பா என திட்டியபோது, அவருக்கு உடந்தை யாக உடனிருந்த பண்ருட்டி துணைக் கண்காணிப் பாளர், மற்றும் காவல்துறை உயரதிகாரிகளையும் கண்டிக்கும் வகையிலும், முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியும் 3.10.2013 அன்று ஒரு நாள் மட்டும் நீதிமன்றப் புறக்கணிப்பினை நமது சங்கமும் மேற்கொள்வதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்குரைஞர் புகார்

அய்யா, வணக்கம்.

நான் செயங்கொண்டத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறேன். திராவிடர் கழகத்தில் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறேன். கடந்த 28.9.2013 அன்று நான் விருத்தாசலத்தில் நடந்த கடலூர் மண்டல மாண வரணி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு செயங் கொண்டம் திரும்பிக் கொண்டிருந்தபோது விருத்தாசலத்தைச் சேர்ந்த இளந்திரையன், கதிரவன் என்ற தோழர்கள் தங்களை காவல்துறையினர் வழிமறித்து மிரட்டுவதாக போனில் தெரிவித்தனர். நான் மீண்டும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டு இளந் திரையன் மற்றும் கதிரவன் ஆகியோரை பார்த்து னுளுஞ வெங்கடேசன் என்னடா? விருத்தாசலத்தில் தி.கா.காரன் எல்லாம் ரவுடியிசம் செய்கிறீர்களா நான் நினைத்தால் உங்களை உள்ளூர் ரவுடிகளை வைத்தே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் அருகிலேயே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது காரில் அமர்ந்திருந்தார். அப்போது, நான் னுளுஞ வெங்கடேசன் அவர்களை பார்த்து சார் என்ன பிரச்சினை ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் நீ யாருடா என்னை கேட்பதற்கு என்று என்னை நோக்கி வந்தார். நான் வழக்குரைஞர் என்றேன். அதற்கு அவர் நீ என்னடா பெரிய வக்கீல், உன்னால் என்ன செய்ய முடியும் நீ வக்கீல் என்றால் கோர்ட்டில் தான் உன்னை இங்கேயே காலி செய்து விடுவேன் என்று என் நெஞ்சில் கை வைத்து நெட்டித் தள்ளினார். அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஏய் என்று சொல்லி கையை ஓங்கிக் கொண்டு வந்தார். பின்னர் விசாரித்த போது அவர் பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் என தெரியவந்தது. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கண் பார்வை யிலேயே நடைபெற்றது. எனவே என்னை வழக் குரைஞர் என்றும் பாராமல் பேசி அதிகார துஷ்பிர யோகம் செய்து கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்ற விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப் பாளர் வெங்கடேசன், பண்ருட்டி துணை கண் காணிப் பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
எம்.இராசா

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்


சென்னை அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரி பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லால் அந்த மந்திரி பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மாதிரி பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டி பார்ப்பன ரல்லாதாரை காட்டிக்கொடுக்க வேண்டியது தான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ்வாரானால் அம்மனிதருடைய யோக்கி யதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக மலம் நல்ல வாசனை யாயிருக்கிறதென்று ஒருவர் சொல்லுவாரா னால் அவர் மூக்கின் யோக்கியதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? என்ற பழமொழி ஒன்றுண்டு.

அதுபோலவே ஸ்ரீமான் சத்திய மூர்த்தியின் யோக்கியப் பொறுப்பும், நாணயமும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அவரைப் புகழ்வதும் சுயராஜ்யக் கட்சியின் யோக்கிய தையும், தென்னாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கி யதையும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு இவைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசவதுமானால் பீசு இல்லாமல் பேசுகிறார் என்று யாராவது நினைக்க முடியுமா? இதன் பயனாக கிறிஸ்தவர் என்கிற முறையில் ஸ்ரீமான் ஜோசப்புக்கு ஒரு சமயம் மந்திரி உத்தியோகம் அல்லது அதற்குச் சமானமான பதவி கிடைப்பதாயிருந்தாலும் ஸ்ரீமான்ஜோசப்பின் வாழ்க்கையின் பெருமை அடியோடு ஒழிந்து போகுமென்றே பயப்படு கின்றோம்.

இந்து மதம் என்கிற புரட்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், தாங்கள் பெரிய ஜாதியார்கள் என்று சொல்லிக் கொண்டும் அம்மதத்தினர் என்பவர்களுக் குள்ளாகவே தாங்களொழிந்த மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாராக்கி நிரந்தரமாய்ப் பிழைக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கம் என்பவைகளிலுள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்ப்பனரல்லாதார் பார்ப்ப னருடன் சண்டை இடும் போது ஸ்ரீமான் ஜோசப் போன்றவர்கள் இரு (ஆட்டுக்குட்டி) வர் சண்டை யிலிருந்து ஒழுகும் இரத்தத்தைக் குடிக்கும் (குள்ளநரியாக) வீரராகத் தோன்றியது மிகவும் பழிசொல்லத்தக்க காரியம்.

தேசாபிமானம் என்பதற்கு ஸ்ரீமான் ஜோசப் என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. தென்னாட்டுப் பார்ப்பனர்களின் அயோக் கியத் தனத்தைத்தான் ஸ்ரீமான் ஜோசப் அவர்கள் தேசாபிமானம் என்று கொள்வாரா னால் அவரையும் பார்ப்பனக் கூட்டத்தில் சேர்த்துத்தான் கணக்கு பார்க்கவேண்டும், ஏனெனில் ஸ்ரீமான் ஜோசப்புக்கும் பார்ப்பன ருடன் சேருவதற்கு உரிமையுண்டு.

என்ன வென்றால் இந்துக்களில் பார்ப்பனரல்லா தார் அதிகமானவர்கள், பார்ப்பனர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள், அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் எய்தி ஆதிக்கம் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு சூழ்ச்சியின் மூலம் தான் முடியும் என்பது பார்ப்பனர்களின் முடிவு.

அது போலவே ஸ்ரீமான் ஜோசப் அவர்களும் தங்கள் குறைந்த எண்ணிக் கையை உத்தேசிக்கும் போது தாங்களாகத் தனித்த ஒரு தந்திரமோ அல்லது பார்ப்பனர் களின் தந்திரத்தில் கூட்டு வியாபாரமோ செய்ய வேண்டியதுதான் கிரமமானது என்கிற முடிவுக்கு வரவேண்டியவர்தான். ஆனால் யோக்கியமான முறையில் கிடைக்காத எந்த ஆதிக்கமும் நிலைக்காது என்பதும், நிலைத் தாலும் வாசனையுள்ளதாயிருக்காது என்பதும் எமது துணிவு.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...


மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்


சேலம் ஜில்லாபோர்டு தலைமைப் பதவிக்குத் திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதற்காக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப்-பிடித்துக்கொண்டு திரியும் சில பார்ப்பனரல் லாதார்களும் ஒன்றுகூடிச் சுயமரியாதைக்குப் பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டு மென்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனையோ அக்கிரம மான உத்தரவுகைளப் போடச்செய்து கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயரின் மந்திரி தன்மை தன்மானங்கெட்டு நாடு சிரிக்கயேற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு. எல்லப்ப செட்டியாருக்காவது ஒருவித நஷ்டமும் ஏற்பட்டு விடவில்லை.

நமது நாட்டுச் சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாகவாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ருஜுப்பிக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த பார்ப்பனரல்லா தார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்படாமலும், தூஷிக்கப் படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகைகளாலும் வசை கேட்டுக் கொண்டிருக்கும் தேசிய வீரர்கள்.

தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை ஆயுதங்களாக இருந்து கொண்டு தேச பக்தர்கள், தேசாபிமானிகள் தலைவர்கள் பிரமரிஷி ராஜரிஷி என்கிற பெருமையை அடைந்து கொண்டு இருந்தவர்கள்தான் ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை முடிந்தவுடனே திடீரென்று கீழே தூக்கிப்போட்டு மிதித்து விடுகிறார்கள். உதாரணமாக இப்பொழுது நமது நாட்டிலுள்ள பார்ப்பனர்களெல்லாம் ஒரே அடியாய் ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, எஸ்.முத்தையா முதலியார் ஆகியவர்களை வைத வண்ணமாக இருக்கிறார்கள்.

இவர்களை இதே பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் தூக்கிவைத்து கவி பாடிக்கொண்டு பின்னால் திரிந்தார்கள் என்பது ஜனங்கட்குத் தெரியும். பார்ப்பனர்கள் தனியாய் எங்கேயாவது போனால் பொது ஜனங்களால் கல்லடி சாணி உருண்டை முதலிய மரியாதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிற இடங்களுக்கெல்லாம் மேற்படி கனவான்களைக் கூட்டிக்கொண்டு போவதும் அவர்களை வண்டியில் வைத்து இழுப்பதும், ஜே! போடுவதும் அவர்களது படங்களை பள்ளி அறையில் வைத்துப் பூஜித்து விட்டும் கொஞ்சமாவது இவர்களுடைய அக்கிரமங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டால் உடனே அவர்கள் மேல் கத்தி தீட்டுவதுமான செய்கைகளை நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம்.

அல்லாமலும் சுயமரியாதையுள்ள எந்தப் பார்ப்பனரல்லாதாரை யாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டோ அல்லது வையாமலாவது இருக் கிறார்களா என்பதைப் பார்த்தால் இது அனுபவத்தில் தெரியவரும். இவற்றை எதற்காகச் சொல்லுகிறோமென்றால் இதே ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கட்கும் சேலத்தில் உள்ள அவரது கோஷ்டிக்கும் கொஞ்சம் சுயமரியாதை உதயமான உடனே இவர்கள் பேரிலும் இதே பார்ப்பனர்கள் கத்தி தீட்டுவார்களென்பதை அறிவுறுத்துவதற்காகவேயன்றி வேறல்ல.

திரு. எல்லப்ப செட்டியார் வெற்றியானது பார்ப்பன சூழ்ச்சியின் தன்மையை வெளிப்படுத்தவும், பார்ப்பன சூழ்ச்சியின்று தப்புவதானால் எவ்வளவு பிரயாசை இருக்கிறதென்பதை வெளிக்காட்டவும் ஒரு அறி குறியாகக் கொள்ளலாமே யல்லாமல் மற்றபடி பிரமாதமாய் பாராட்டத்தகுந்த விஷயம் அதில் ஒன்று மில்லை என்பதே எமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது, சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியம் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிடவேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5.30 மணிக்கு கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறுயாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்றுகொண்டு இருந்ததும், கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங்களைப் பற்றி ஒரு நிருபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம்.

இப்போது அதற்கேற்றார்ப் போலவே, இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குக்கு வராததால் அவர் நீக்கப்பட்டுவிட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன் சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண் டிருக்கையில் அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கி விட்டு தனது சவுகரியத்திற்கேற்றபடி இரண்டொரு தீர்மானத்தைச் செய்து பலனடைந்து கொண்டார்.

அது எப்படியோ இருக்கட்டும். வெளிப்படுத்தப்பட்ட கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று அய்க்கோர்ட்டில் விண்ணப்பம் போட்டு சேர்மென் நடவடிக்கை சரியில்லை என்பதாக வாதாடி தாம் கவுன்சிலராக இருக்கலாம் என்பதாக உத்தரவு பெற்று வந்து விட்டார்.

இது மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுயஆட்சிக்கு அருகதை உள்ளவர்கள் என்பதும், வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்க யோக்கியதை உள்ள தர்மகர்த்தர்கள் என்பதும் ருஜுவு செய்ய நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள் நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன்சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள சிப்பந்திகள் நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர்களே போதுமான அத்தாட்சி ஆவார்கள். இந்தியாவின் மானகேட்டுக்கும், இந்தியர்களின் இழிதன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...


கோவை: தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு, நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர் கைது


வடவள்ளி, அக். 5-கோவை வடவள்ளியில் தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடக மாடிய பா.ஜனதா பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வடவள்ளி, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 35). பாரதீய ஜனதா பிரமுகர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், மேல் தளத்தில் ராம நாதனும் வசித்து வந்தனர்.

கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர் களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

பெட்ரோல் குண்டு

இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் 'டமார்' என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாது காப்புக்கு நின்றிருந்த காவலர் சென்று பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவருடைய வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஒருசிலர் போஸ்டர்களை ஒட்டியதால், அதுதொடர்பாக ராமநாதன் காவல்துறையில் புகார் செய்து இருந்தார். எனவே அவர்கள் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராமநாதன் மீது காவல்துறையின ருக்குச் சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தனக்கு கட்சியில் குறைந்துவிட்ட செல் வாக்கை அதிகரிக்க தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டை வீசியதை அவர் ஒப்புக் கொண்டார்.

சிறையில் அடைப்பு!

அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது மதக் கலவரத்தை தூண்டுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவு பிணையில் வெளியே வரமுடி யாதது ஆகும். பின்னர் ராமநாதனை காவல் துறையினர் கோவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ் ஓவியா said...

அது எந்த மதத்துல இருந்தா என்ன?


நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம்? மற்ற மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் ப்ளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது, ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்துல எங்க தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கிட்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா, வாராவாரம் போற சர்ச்ல ஃபாதர் அவர். என் தோட்டத்துல இருக்கிற செடிகளை ஆசீர்வாதம் பண்றதுக்காக வந்திருக்கேன்னு சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியைத் தெளிச்சிட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்னு சொன்னப்ப, எனக்குச் சிரிப்பு வந்துடுச்சி. என் அம்மாவுக்கு என் மேல கோபம். எல்லாருடைய தோட்டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்ல காய்கறி விலையாவது குறையுமேனு நான் சொன்னதும் என்னைத் திட்டினாங்க. இயேசுவே, என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சிடுங்கனு பிரார்த்தனை பண்ணாங்க.

சின்ன வயசுல இருந்து இந்தச் சண்டை, என் வீட்ல நடந்துக்கிட்டேதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அது எந்த மதத்துல இருந்தா என்ன?

உங்களின் உண்மையான அக்கறையையும் மனதையும் கண்டுகொள்ளாமல், ஆயிரம்தான் இருந்தாலும் நீ தமிழனில்லை என்று உங்களை யாரேனும் காயப்படுத்தியது உண்டா? அது யார் எவரென்று சொல்லாவிடினும், என்ன நிகழ்வு என்று சொல்லுங்களேன்!?

சில நேரங்கள்ல அப்படி, முட்டாள்தனமா யாராவது சொல்வாங்க. அதுக்கெல்லாம் காயப்பட்டா, அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் மேல் அரசாங்கமே குண்டு போட்டு கொத்துக் கொத்தா மக்கள் இறந்துட்டு இருந்த நேரம். அந்த சமயம் அமெரிக்காவுல நியூ ஜெர்ஸி தெலுங்கு அசோசியேஷன்ல என்னைச் சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டிருந்தாங்க.

அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தெலுங்கு மக்கள் கூடி இருந்த சபை அது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, போரில் அநியாயமா சாகடிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தலாம்னு சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்னாங்க. நீங்க கர்நாடகா, தெலுங்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. தமிழர்களுக்கு எதுக்காக அஞ்சலி செலுத்துறீங்க-னு புலனாய்வு செஞ்சு கேட்டார் ஒருத்தர்.

சக மனுஷனா, யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம். எந்த மொழியா இருந்தா என்னனு நான் சொன்னேன். காவிரி நீர் பிரச்சினை வரும்போதெல்லாம், உங்க கருத்து என்ன?னு கேட்பாங்க. அரசியல்வாதிகளும், அறிஞர்களும், மக்களும் கருத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, ஒரு நடிகன்கிட்ட ஏன் கேட்கிறாங்கனு தெரியலை.

தெரிய வேண்டியவர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சா போதும். எல்லார்கிட்டயும், நன்னடத்தைச் சான்றிதழ் கேட்டுட்டும் இருக்க முடியாது. நம்மளை விமர்சிக்கிறவங்ககிட்ட, அதைக் காட்டிட்டும் இருக்க முடியாது!

நன்றி : ஆனந்த விகடன், 25.9.2013

தமிழ் ஓவியா said...

இவர்தான் பாரதியார்


தமிழர்களில் யாரொருவர் அறிவாளியாக இருந்தார்களோ அவர்களைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனர்களின் சுபாவம். அதற்கு பாரதியாரும் விதிவிலக்கல்ல. பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) சமூகம் என்ற தலைப்பில் பக்கம் 74இல் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து... என்று எழுதியிருக்கிறார். பாரதியார் ஒரு கவிஞர்; ஆராய்ச்சியாளர் அல்ல. ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்தது வரலாறு. அவரவர் இயற்றிய பாடல்களைத் தவிர அவர்களைப் பற்றிய வேறு சான்றுகள் யாதும் கிடையாது.

குறிப்பாக அவர்கள் பிறந்த வருடம், மாதம், தேதி, பெற்றோர் பெயர் போன்ற எதுவும் ஆதாரப்பூர்வமாகக் கிடையாது. அவ்வாறிருக்க அவர்களின் தகப்பனார் பார்ப்பனன் என்று கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.

மேலும் பாரதியாரின் ஜாதி வெறி எவ்வளவு என்பதை மேற்படி புத்தகத்தின் 79ஆம் பக்கத்தில் பார்க்கலாம். அது அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம் என்று கூறியுள்ளார். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி ஆரியர்கள் வந்தேறிகள். அதாவது, ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்கு வந்தவர்கள். திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள். இனத்தால் ஆரியர்கள், மனுதர்ம சாஸ்திரப்படி பிராமணர்கள். அதாவது நான்கு வர்ணத்தில் முதல் வர்ணம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பார்ப்பனர்கள். அதைப் பாரதியாரே ஒப்புக் கொண்டு அவருடைய கவிதைகள் அனைத்திலும் பார்ப்பனன் என்றுதான் பாடியிருக்கிறார். இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் ஆவர்.

அவ்வாறு 100க்கு 3 வீதம் உள்ள மக்கள் பெயரால் 100க்கு 97 வீதம் வாழும் மக்கள் உள்ள நாட்டை (அதிலும் முகம்மதியர், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர் மேலும் மதநம்பிக்கை அற்றவர்கள் கணிசமாக வாழும் நாட்டை) பிராமண தேசமாக மாற்றிவிட வேண்டும் என்று தன் ஜாதி அபிமானத்தை/அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்.

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

உடல் உறுப்புதானம் தமிழ்நாட்டிற்குப் பெருமை!


உடல் உறுப்பு தானத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 2,076 பேர் பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 83 சதவீதம் பேரும், தீவிர நோயினால் மூளைச்சாவு அடைந்த 17 சதவீதம் பேரும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இவர்களில் 64 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் 80 சதவீதம் பேர் ஆண்களாகவே உள்ளனர். 10 லட்சம் பேரில் 1.1 சதவீதம் பேர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 34 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2008 முதல் இதுவரை 689 சிறுநீரகம், 339 கல்லீரல், 58 இதயம், 24 நுரையீரல் என 1,110 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 578 கண்கள், 380 இதய வால்வுகள், 1 தோல் தானமாகப் பெற்று 969 திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 800 பேர் சிறுநீரகத்துக்காகவும், 80 பேர் கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

உயர் கல்வியின் நிலை


மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களும, பல்கலைக்கழகங்களும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. மத்திய அரசும் உயர் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவுசெய்து வருகிறது.

எனினும், உலக அளவில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் டில்லி அய்.அய்.டி.க்கு 222ஆவது இடமே கிடைத்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இருப்பதாக லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குவாகுரேலி சைமன்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மும்பை அய்.அய்.டி. 233ஆம் இடத்தையும் சென்னை அய்.அய்.டி. 331ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய அளவில் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், ஹாங்காங் பல்கலைக்கழகமும் இரண்டாம் இடத்தையும், சியோல் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. டில்லி அய்.அய்.டி. 38ஆம் இடத்தையும் மும்பை 39ஆம் இடத்தையும் சென்னை 49, கான்பூர் 51, காரக்பூர் 58, ரூர்க்கி 66ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவில் 600க்கும் அதிகமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

உயிர்களின் பிறப்பிடம் செவ்வாய் கிரகம்?


உலகம் எப்படித் தோன்றியது? படைத்தது யார்? உயிர்கள் தோன்றியது எப்படி? போன்ற பல வினாக்கள் நம்முன் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. இந்த வினாக்களுக்கு விடைதேடி விஞ்ஞானிகள் பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இப்படி ஆய்வுசெய்துவரும் அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர், ஃப்ளோரன்சில் நடைபெற்ற 23ஆவது கருத்தரங்கில், மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எங்கும் வடமொழி; எதிலும் வடமொழியா?


கேள்வி கேட்கும் இந்தி அல்லாத மாநிலங்கள்

தாய் மொழி, வடமொழி என்றெல்லாம் பேசினாலே திராவிட இயக்கங்கள் இப்படித்தான் பேசும் என்று கடந்து போய்விடுவார்கள் சிலர். ஆனால், பின்வரும் கட்டுரை ஆங்கில இதழான அவுட்லுக்கில் பிரணாய் சர்மா என்பவர் எழுதியது.

பெயரில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இந்திய கப்பற்படை விரும்பாது. அண்மையில் அய்.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் துண்டுதுண்டாக சிதறிப்போனது.

சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நமது பல கப்பல்கள், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் பெரும்பாலும் இந்துமதக் கட்டுக்கதைகளிலிருந்தோ சமஸ்கிருதத்திலிருந்தோதான் பெயரிடப்பட்டு உள்ளன.

1948லிருந்து புதுப்படைக் கப்பல்களுக்குப் பெயர் வைப்பதில் இந்தியா தனக்காக ஒரு கொள்கையை வகுத்திருந்தது. இந்தியாவில் தோன்றிய பெயர்களை அவை கொண்டிருக்க வேண்டும். அதன்படி இலகுரக கப்பல்கள் மலைகளின் பெயர்களையோ _ அதன் உச்சிகளின் பெயர்களையோ கொண்டுள்ளன. பெரும் போர்க் கப்பல்கள் தேசியத் தலைநகரங்களின் பெயர்களைக் கொண்டிருக்கும். தாக்கி அழிக்கும் கப்பல்கள் ஒரே முன்னெழுத்துக்களைக் கொண்டிருக்கும். பல ஆயுதங்களைக் கொண்ட விமானங்கள் ஆறுகளின் பெயர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிகள் இந்திய ஆயுதங்கள் பெயரிலும், நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வகை மீன்கள் பெயரிலும், புதைகுண்டுகள் அழிப்பான்கள், இந்திய மாநிலங்கள் பெயரிலும் அழைக்கப்படுகின்றன.

அரிஹந்த், விக்ரந்த் போன்ற பெயர்களை வடமொழியிலிருந்து எடுப்பது சில ஆண்டுகளாக இந்திய கப்பற்படை கடைப்பிடித்துவரும் முறைகளில் ஒன்றாகும்.
சில கப்பல்களின் பெயர்கள், சக்ரா, விக்கிரமாதித்யா, சிந்துகோஷ், சிந்துத்வாஜ், ஷங்குல், ஷால்கி, சங்குஷ், ஷிவாலிக், அய்ராவத், திரிசூல், நிர்பிக், வினாஷ், பிரபால் மற்றும் பிரளயா என்று உள்ளன. அவை முழுதும் வடமொழியே; சில மட்டும் இந்துக் கட்டுக்கதைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. நமது ஏவுகணைகள் பிரித்வி, ஆகாஷ், திரிசூல், மற்றும் நாக் என்று பெயரிடப்பட்டுள்ளன. நமது போர் டாங்கி அர்ஜுன் என்றும் பல்முனைத் திறன் கொண்ட ஜெட் போர் விமானம் தேஜாஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அண்டையில் உள்ள பாகிஸ்தான் மத அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நாடு. கடந்த 60 ஆண்டுகளில் தனது இஸ்லாமியத்தனத்தைக் காட்ட அது தவறியதே இல்லை. நாட்டில் ஆயுதங்கள் முதலியவற்றிற்குப் பெயரிடும்போது, இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லிம் மன்னர்களின் பெயர்கள் இடப்படுகின்றன. ஆனால் அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட மன்னர்கள் இந்துக்களை மட்டும் அல்லாது, ஏராளமான முஸ்லிம் குடிமக்களையும் வேதனைப்படுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தானின் செயல்களை ஒரு கண்ணாடி போல் பிரதிபலிக்க விரும்புகிறதா? இந்தியா அதிக அளவில் இந்துக்களைக் கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் மதச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இன்று பேசப்படும் பல மொழிகளுக்கு வடமொழி பெற்ற மொழியாக இருக்கலாம். ஆனால் நமது பல மொழிகள், வடமொழியுடன் சிறிதும் தொடர்பில்லாதவை. நவீன, மதச்சார்பற்ற, இந்தியாவை பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளும், மதங்களும் உண்டாக்கியிருக்கின்றன. நாம் ஏன் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை, அவர்களது பெயர்களை வைத்துக் கவுரவப்படுத்தக் கூடாது? வடமொழியைப் பற்றி நாம் கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
உண்மையில் மதச்சார்பற்ற பன்முக இந்தியாவின் உண்மையான கொண்டாட்டமாக, இனி நாம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைத் தாங்கிகளுக்கு, பரந்த, ஆழமான சொற்களைக் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெயர் பொறுக்குவோமாக.

மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல கடற்படையில் மட்டுமல்ல; விமானங்கள், விண்கலங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என எல்லாமே சமஸ்கிருதப் பெயர்களுடனேயே உலா வருகின்றன என்பது கண்கூடு. அண்மையில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள விண்கலத்துக்கு செவ்வாய் என்பதன் சமஸ்கிருதப் பெயரான மங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. திட்டங்களுக்கேற்ற பெயர்களை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் சுழல் முறையில் ஏன் வைக்கக் கூடாது என்னும் கேள்வி இன்றைய இளைய தலைமுறையினரால் சமூக ஊடகங்களில் எழுதப்படுகிறது. இந்தி ஆதிக்கமும், சமஸ்கிருதத் திணிப்பும் பல்வேறு வழிகளில் நடப்பதை இன்று தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களும் கவனித்து வருகின்றன. இதற்கென தனித்தனிக் குழுமங்களில் மொழிச் சமஉரிமைக்காக விவாதங்களும் நடக்கின்றன. இந்த உணர்வு வரவேற்கத்தக்கதேயாகும். இன்னும் இதை உணராமல் மத்திய அரசு செயல்படுமானால் வலுவான குரல்கள், போராட்டங்கள் எழும் என்பதே உண்மை.

- சமன், தமிழில் ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

சமாதி ஆதல் எனும் ஏமாற்று வேலை


இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் சென்றார். அதற்காக ஒரு பூனையை நரபலியிட்டார்.

பிறகு வீட்டருகே சிறிய குழிதோண்டி அதற்குள் சமாதியிலிருந்து மீண்டு வருவேன் என்றும், குழிக்குள் இருந்து வாளை நீட்டி சிக்னல் கொடுத்த பிறகே மண்ணைத் தோண்டவேண்டும் என்றும் கூறினார். அதுபோலவே குழிக்குள் அவரை வைத்து மண்ணைப் போட்டு மூடினர். 3 மணி நேரமாகியும் வாள் வெளியே தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குழியைத் தோண்டியபோது மந்திரவாதி மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த விவரம் போலீசுக்குத் தெரியவரவே பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துகிறார்கள்.

இப்படி ஒரு செய்தி தினத்தந்தியில் வந்துள்ளது. சமாதியிலிருந்து மீண்டு வரலாம் என்று யாரோ சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

சமாதியிலிருந்து உயிரை விடலாமே தவிர உயிரோடு மீண்டும் திரும்பிவர முடியாது. இதுவும் ஒரு வகையான தற்கொலை மாதிரித்தான். துறவிகள் இந்தத் தற்கொலையைச் செய்து கொள்வதால் அது சமாதி என்ற பெயரைப் பெற்றுக் கொள்கிறது.

மனிதர்களைப் போலவே துறவிகளுக்கும் சலிப்பு உண்டாகும். அந்தச் சமயத்தில் சமாதியாகப் போகிறேன் என்று பக்தர்களிடம் தெரிவித்து விட்டு, தனியறையில் போய் அமர்ந்து கொண்டு மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கி உயிரை விட்டு விடுவார்கள். இதற்கும் பெரிய மன உறுதி வேண்டும். என்றாலும் சில துறவிகள் பேர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் தான் சமாதியாக வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தினால் எந்தச் சாமியாராலும் சமாதி ஆக முடியாது. வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களில் சிலர் உயிர் போகவில்லை என்று தெரிந்தால் மூச்சை அடக்கி செத்துப் போவார்கள். எனவே சமாதி என்பது பெரிய ஏமாற்று வேலைதான்.

- தேன் தினகரன்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுப் பூந்தோட்டம்


துண்டு போடுவதை - தோளில்
துண்டு போடுவதை
அனுமதித்தவன் நீ.
ஆனால் தமிழன்
துண்டு படுவதை
ஆட்சேபித்தவனும் நீயே.

நீ ஓட்டுக் கேட்க வரவில்லை - செய்திகளை
ஒட்டுக் கேட்கவும் இல்லை - ஆனால்
ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின் விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்து
ஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்ட
ஒரே தலைவன் நீதான்.

முகத்தைப் பார்த்தாலே
பணம் வாங்கும்
பல வைத்தியர்களிடையே -
பணம் வாங்காமலேயே
சமுதாய வைத்தியம் செய்த
அதிசய வைத்தியன் நீ - தமிழினத்தின்
அன்புத் தந்தையும் நீயே.

மூட நம்பிக்கை என்ற
ஒட்டடை படிந்து இருந்த
ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் இருந்த
தூசியை அகற்றி - தூய்மைப்படுத்தி
பகுத்தறிவு ஓவியம் வரைந்திட்ட
பைந்தமிழ் லியனார்டோ-டா-வின்சியும் நீயே.

நீ தோழமையின் தொங்குந் தோட்டம்
தினமும் பார்க்க வேண்டிய
தித்திக்கும் தேரோட்டம்.
நீ இங்கு தோன்றவில்லை என்றால்
இருந்திருக்காது தமிழருக்கு
இரத்தத்தில் இன உணர்வோட்டம்.
என்றுமே நீ(ங்கள்)
பகுத்தறிவுப் பூந்தோட்டம்.

தமிழ் ஓவியா said...

பிஞ்சுகளைப் பலி வாங்கிய ஊர்வலம்


சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ஏரிக்குச் சென்று கரைக்கப் போறோம். வர்றவங்க ஏறி வேன்ல பிள்ளையார் பக்கத்தில் உட்காருங்க என்று ஒர் இளைஞன் சொன்னதும் சிறுவர்கள் ஓடிச் சென்று ஏறினர்.

வழக்கமாக 2, 3 காகிதப் பிள்ளையார் இருக்கும் கிராமத்தில் இந்த ஆண்டு 7 பிள்ளையார் கள் உருவெடுத்திருந்தனர். அதில் மூன்றைக் கொண்டு சென்று கரைத்துவிட்டுத் திரும்பினர். சென்ற சிறுவர்களுள் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் 9 வயது கணேச மூர்த்யையும் 14 வயது சந்தோஷ்குமாரும் வீட்டிற்கு வரவில்லை. எங்கே சென்றாலும் ஒன்று போல் செல்லும் இவர்களைக் காணாமல் ஏரிக்குத் தேடி ஓடினர்.

பூக்கள், மாலைகள், காகித அட்டைகளுடன் இரண்டு பிஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் ஊராரும் கதறி அழுதுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடி விளம்பரம் : தேன் தடவிய விஷ உருண்டை

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயாவாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு - உருவாக்கம்தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!



அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து தோற்றுவிட்ட நிலையில்தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.

அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படுமோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.

மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!

பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை -_ சமூகநீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன்னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!

பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (விறீவீஸீணீவீஷீஸீணீறீ) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.

அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டுத் திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.

தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங்கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக்கப்பட்டுவிட்டது போல், பார்ப்பன பனியா _- ஊடகங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!

பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் -_ பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் _ -ஹிந்து மதம் ஒரு மொழி _- சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் _- பார்ப்பனீய _ ஆரிய சனாதன மதக் கலாச்சாரம்,

(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)

18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள் _ வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத்தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!

மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை -_ எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களைத் தெருப் பிச்சைக்காரர்களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று கேட்கும், மைனாரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவதுதானா வளர்ச்சி? (Growth) அப்படியும் அங்கு _- மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!

தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணையதளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வரதட்சணைக் கொடுமை


ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை.

2012ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சம்பந்தப்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் பலியாகிறாள். 2007_2011க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை தொடர்புடைய இறப்புகள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதமோ 35.8லிருந்து 32 ஆகக் குறைந்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து, 1983ஆம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வரதட்சணை இறப்புகளில் பிடுபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமீனில் வெளியில் வரவும், தண்டனையில் இருந்து தப்பிவிடவும் காரணமாக உள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன என்று சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.