Search This Blog

7.10.13

பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்

பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்


இந்தத் திருமணம் சுயமரியாதைக்காரர் திருமணமேயொழிய, சுயமரியாதைத் திருமணமல்ல. உண்மையான சுயமரியாதைத் திருமண முறை வர இன்னும் நாளாக வேண்டும். இம்முறை என்னால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொன்னாலும், இது பழைய முறைக்கு மாறுதல் முறையாகும்.
இம்மாறுதல் முறையைக் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம், பெண்களின் அடிமைத் தன்மையைப் போக்க வேண்டும். சடங்குகளை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவேயல்ல. பெண்கள் ஆண்களைப் போன்று அடிமை நீங்கி சமத்துவமாக வாழ வேண்டுமென்பதை முக்கியமாகக் கொண்டதாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள், ஆண்களுக்குத் தொண்டூழியம் செய்யக் கூடியவர்கள், ஆண்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றிருக்கிற அடிமைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதற்காகவேயாகும். திருமணம் என்கின்ற இம்முறையானது தமிழனுக்குக் கிடையாது. தமிழனுக்கு இருந்தது என்பதற்கு ஆதாரமில்லை. வாழ்வின் முக்கியமான இம்முறையைக் குறிப்பிடக் கூடிய தமிழ்ச் சொல் தமிழில் கிடையாது. நாம் ஏற்படுத்திய சொல் தான் திருமணம் என்பதாகும். இப்பெயருக்கும், இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. நம் நாட்டிற்குப் பார்ப்பனர்கள் வருவதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையே கிடையாது.
தமிழர்கள் ஆண்களும், பெண்களும் அன்பால், காதலால் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவியாக வாழவில்லை. இம்முறையானது பார்ப்பனருடைய நாட்டிலிருந்து வந்தது என்பதற்கும், இம்முறை பார்ப்பனர்களால் அவர்களிடையே ஒழுக்கம் குன்றியபோது ஏற்பாடு செய்யப்பட்டது என்பதற்கும், தமிழர்களின் பழைய நூலான தொல்காப்பியத்தில் ஆதாரங்களிருக்கின்றன. மனுதர்ம சாஸ்திரத்தின்படி சூத்திரர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. பார்ப்பான் சூத்திரன் வீட்டிற்கு வந்து சூத்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது சாஸ்திரமாகும். எனவேதான் பார்ப்பான் சூத்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கிறபோது அவர்களுக்குப் பூணூலை மாட்டி பார்ப்பானாக்கித் திருமணம் செய்து வைப்பான். தாலி கட்டுவது என்பது பெண்களின் அடிமையை வலியுறுத்தக் கூடியதேயாகும். நம்முடைய நல் வாய்ப்பின் காரணமாக இன்றைய அரசு அமையப் பெற்றதால் அண்ணா அவர்கள் முதல் காரியமாக, சட்டப்படிச் செல்லாதென்றிருந்த இம்முறையினைச் சட்டப் பூர்வமாக்கினார்கள்.
இரண்டாவது, இம்முறையானது பகுத்தறிவுள்ள மனிதர்களை மடையர்களாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். பொருத்தம், ஜாதகம், ஜோசியம், நேரம், நாள், நட்சத்திரம் என்பவையும், பகலில் விளக்கு வைப்பது, அம்மி, அரசாணி போன்றவை வைப்பதெல்லாம் தேவைக்கும், அவசியத்திற்கும், அறிவிற்கும் சம்பந்தமற்றதாகும். உலகிலுள்ள 400 கோடி மக்களில் 370 கோடி மக்களுக்கு இந்தச் சடங்குகள் எதுவும் கிடையாது. இதெல்லாம் மனிதனை மடையனாக்குவதற்காகவேயாகும்.
மூன்றாவது பெரிய கேடு மதம், ஜாதி பார்ப்பதாகும். மக்களை ஒதுக்கிப் பிரிவுபடுத்துவதாகும். இம்மூன்றையும் ஒழிப்பதே சுயமரியாதை இயக்கமாகும். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து செய்யவேண்டும். பொருத்தம் என்பது ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் விரும்புவதே தவிர, எவனோ போடுகிற முடிச்சியிலோ, ஜாதகத்திலோ இல்லை.
பெண்களை 20 வயதுவரை படிக்க வைக்கவேண்டும். பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளவேண்டும்.  உலகில் மனித சமுதாயத்தைப் பற்றி எவனுமே சிந்திக்கவில்லை. வந்த பெரியவர்கள், இலக்கியங்கள் எல்லாம் பெண்களை அடிமையாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்று தான் சொல்கின்றன. பொது இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற திருக்குறள் கூட, பெண்களை இழிவுபடுத்துவதாக, அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றது. மனித சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமானால், பெண்கள் அறிவுபெற வேண்டும். மனிதன் சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் பார்த்து நடக்காமல் தங்களின் அறிவைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும்.
ஆண்களும், பெண்களும் பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கு ஏற்பாடு செய்ய ஏனோ தயங்குகின்றது.  ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகினால்தான் அவர்கள் அனுபவம் பெற முடியும்.
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவியைச் செய்ய வேண்டும். வரவிற்கு அடங்கி வரவிற்குள் செலவிட்டுச் சிறிதாவது மிச்சம் செய்ய வேண்டும். கடன் வாங்குவதால் மனிதன் தன்மானத்தையும், சுதந்திரத்தையும் இழக்க நேரிடுகிறது. பெண்கள் ஆடம்பரமாக வாழக் கூடாது. நிறைய நகை போட்டுக் கொள்வது உயர்ந்த விலையுள்ள உடைகள் அணிவது, சிங்காரம் செய்து கொள்வதுகூடாது. சாதாரணமாக வாழவேண்டும்.
அரசாங்கத்திற்கு இன்னும் துணிவு வரவில்லை. துணிவு வந்தால் ஒரு பெண் மீது இத்தனை கிராம் தங்கத்திற்கு மேலிருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்று, தப்பினால் இரண்டு அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசாங்கம் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். இரண்டிற்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் பிரமோசன் கொடுக்கக் கூடாது.
-------------------------(22.8.1971 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)விடுதலை, 28.9.1971


மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் - என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.
அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.
மணமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கோவிலுக்கோ, குளத்திற்கோ, குப்பைத் தொட்டிக்கோ போகக் கூடாது. வேண்டும் என்றால், வெளி மாநிலங்களுக்கோ  வெளிநாட்டிற்கோ சென்று சுற்றிப் பார்த்து உலக அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். சிறீரங்கத்திற்கோ, காசிக்கோ சென்றால், எதைப் பார்க்க முடியும்? அந்த அழுக்குருண்டை `சாமியைத்தானே பார்க்க முடியும்? இதனால் `கடுகு அளவு முன்னேற்றமாவது ஏற்படுமா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.
-----------------(14.7.1971 அன்று மாப்படுகையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) விடுதலை, 23.7.1971.

41 comments:

தமிழ் ஓவியா said...


புராதனம்?


சிதம்பரம் நடராசன் கோயில்பற்றி தினமணி ஏட்டில் (5.10.2013) பக்கம் 3இல் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.

சிதம்பரம் ஸ்ரீநடராசர் கோயிலில் உள்ள கனக சபையில் நடைபெற்று வந்த எக்ஸாஸ்டர்ஃபேன் பொருந்தும் பணி, தீட்ச தர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்புள்ள கனகசபையில் எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணி கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த ஃபேனை மும் பையைச் சேர்ந்த பக்தர் உபயமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இக்கருவி பொருத்தப் படுவதால் கோயிலில் கனக சபை மற்றும் சித்சபையின் புராதனம் கெட்டு விடும் எனக் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பொது தீட்ச தர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணி தற் காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற தீட்சதர்கள் கூட்டத்தில் எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணியை முழு வதுமாக நிறுத்தி விடுவ தென முடிவெடுக்கப்பட் டது - என்பதுதான் தினமணியில் வெளிவந்த தகவலாகும்.
இதைவிடப் படு தமாஷ் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

கோயில்களில் ஒரு கால கட்டத்தில் தீவட்டிப் பிடித் துத்தான் வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டு இருந்தார்கள் இப்பொழுது அந்தத் தீவட்டியைக் கோயில்களில் காண முடியுமா?
திருப்பதி கோயில் கருவறை ஏர் கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதே - அது எந்த ஆகமத்தில் கூறப்பட் டுள்ளது - இதன் மூலம் புராதனம் கெட்டுப் போய் விடவில்லையா?

தேருக்குக் கட்டை களால் முட்டுக்கட்டை கொடுத்து வந்ததுதானே புராதனம் - அய்தீகம். திரு வாரூர் தேருக்கு ஹைட் ராலிக் பிரேக் (திருவெறும் பூர் பெல் நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது) பயன்படுத்தப்படுகிறதே - அது எந்த சிவாகம ஆகமத் தில் சிலாகிக்கப்பட்டுள்ளது.

கோயில் படையல் கோயிலின் மடப் பள்ளியில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதானே அய்தீகம் இப்பொழுதெல்லாம் என்ன நடக்கிறது?

மாமி தானே சமைத்து கொடுத்து அனுப்புகிறார் அதனால் எல்லாம் கெட்டுப் போகாத புராதனம், நவீன முறையில் காற்றை சுத்தி கரிக்கக் கூடிய எக்ஸாஸ்டர் ஃபேன் வைப்பதால் புரா தனம் கெட்டு விடும் என் றால் எவ்வளவுப் பிற் போக்கான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

தீட்சதர்கள் வீட்டைப் போய்ப் பாருங்கள் எவ் வளவு ஹைடெக் வசதி யோடு வாழ்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர்மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது


விருத்தாசலம், அக். 6- விருத்தாசலத்தில் கடந்த 28ஆம் தேதி நடை பெற்ற திராவிடர் கழக கடலூர் மண்டல மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்ன ணியைச் சேர்ந்தவர் களை காவல்துறை நேற்று (5.10.2013) கைது செய் துள்ளது. இத்தாக்குத லில் மேலும் தொடர் புடைய 28 பேரை தேடி வருகின்றனர்.

விருத்தாசலத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாடு நடை பெற்றது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியான திறந்தவெளி மாநாட் டில் கலந்து கொள்வ தற்காக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது வாகனத் தில் மாநாட்டு மேடையை நோக்கி வந்துகொண்டி ருந்தார். அப்போது, பாலக்கரை மேற்கு பகுதியில் தலைவர் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய தேசிய யாதவ மகா சபை மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பாஜக ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணியைச் சேர்ந்த கமலக்கண்ணன் ஆகி யோர் தலைமையிலான கொலை வெறி கும்பல் பைலட் வண்டியைத் தாக்கி அந்த வண்டியில் பறந்து கொண்டிருந்த திராவிடர் கழகக் கொடியை கிழித்து எறிந்தது. மேலும், தமிழர் தலைவர் இருந்த வாகனத்தை கைகளா லும், கம்புகளாலும் தாக்கி தலைவரை கொலை செய்யும் முயற்சியில் அந்த கும்பல் ஈடுபட் டது. இதுகுறித்து, திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில் 30 பேர் மீது (147, 148, 341,294 , 427, 506/2) 6 பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்த காவல் துறையினர் சனிக்கிழமை மங்கலம்பேட்டை கணேசன் மகன் ராஜேந் திரன் (வயது 48), ராம நாதன் மகன் கமலக் கண்ணன் (வயது 35) ஆகியோரை கைது செய் தனர். இதில், ராஜேந் திரன் என்பவர் பாஜக ஒன்றியத் தலைவர் என் பதும், கமலக்கண்ணன் இந்து முன்னணி ஒன்றிய அமைப்பாளர் என்ப தும் குறிப்பிடத் தக்கது. இவ்வழக்குத் தொடர் பாக மேலும், 28 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் யாதவ சமுதாய மக்கள் நன்றி மறவாதவர்கள்

யாதவ மகாசபை தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் என்று அன்போடு மதிக்கப்படும் மானமிகு கி.வீரமணி அவர்கள் கடந்த சனியன்று தாக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை, மன வேதனையையும் அளிக்கிறது. அதற்குக் காரணமானவர்களை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயலை யாதவ மகா மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழர் தலைவர்மீது நடந்த தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கின்றோம். சமூக நீதிக்காக தனது 95 வயதிலும் தளராது பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக மண்டல் குழுப் பரிந் துரைகளை அமலுக்குக் கொண்டு வர இந்தியா முழுவதும் ஓடி ஓடிப் பணியாற்றி, 27 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த வீரமணி அவர்களின் சேவையை மறந்தோர் நன்றி கெட்டவர்கள் ஆவார்கள்.

யாதவர்கள், தந்தை பெரியாருக்கும், தமிழர் தலைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் - நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தமிழ் ஓவியா said...


ஹிட்லர், முசோலினி போன்றவர் நரேந்திரமோடி, அவர் பிரதமராகக் கூடாது


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி பேட்டி


பெங்களூரு, அக்.6- குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி ஹிட்லர், முசோலினி போன்றவர். அவர் பிரதமராகக் கூடாது என்று கருநாடகாவை சேர்ந்த சாகித்ய அகா டமியின் ஜன்பித் விருது பெற்ற எழுத் தாளர் ஆனந்தமூர்த்தி கூறினார்.

சமீபத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானால் அப்படிப்பட்ட நாளில் நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றுகூறினார். இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி யிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மோடிபிரதமராவதற்கு முன் நான் இறந்துவிட விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவரது பேட்டி விவரம்வருமாறு-

கேள்வி: மோடி பிரதமரா னால் நான் நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன? பதில்: அப்படி நான் கூறியதற்கு நான் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. எனக்கு குடியேற வேறு நாடு இல்லை. உண்மையை கூறினால் கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியே போகவும் விருப்பமில்லை. எனது உடல் ஆரோக்கிய நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. அதை மன தில் வைத்து மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இறந்துவிடுவேன் என்று கூறினேன்.

கேள்வி: மோடி பிரதமர்ஆகக்கூடாது என்று குறிப்பாக சொல்ல காரணம் என்ன?

பதில்: மோடிக்கு குற்றஉணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களை கொலை செய்வது அரசியலில் நியாயமா னது என்று அவர்கள் கருதுகிறார் கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாச மும் இல்லை. இந்தியாவுக்கு லால் பகதூர் சாஸ்திரி, பி.ஆர். அம்பேத் கர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் ஏ.பி. வாஜ்பாயி போன்ற வர்கள் தான் தேவை. அவர்கள் சாதி, மதம், கலாச் சாரம் போன்ற விஷயங்களில் வெளிப் படையாக பணியாற்றினார்கள். தற்போது இந்தியாவில் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கேள்வி: நீங்கள் மோடியை எதிர்த்து பேசியதிலிருந்து பி.ஜே.பி. உங்களை காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறி வருகி றது.

பதில்: நான் நீண்ட காலமாக காங் கிரசை எதிர்த்து வந்தேன். நான் ஒரு சோசலிஸ்ட். கடந்த நாடாளுமன்ற தேர் தலில், நான் காங்கிரசை ஆதரித்து பிரச் சாரம் செய்தேன். அது பற்றி எனக்கு வருத்தமில்லை. காங்கிரஸ் கட் சிக்கு மாற்றான கட்சி இல்லை என்று நான் உறுதியாக கருது கிறேன். செய்தியாளர்களிடம் ஆனந்தமூர்த்தி மேலும் கூறிய தாவது-

மோடி பிரதமர் ஆவதற்கு அவ சரப்படுகிறார். ஆபத்தான விஷ யங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோ சனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவ மும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங் கள் தான் அவரை பெரிதுபடுத்தி வருகின்றன என்று ஆனந்த மூர்த்தி கூறியுள்ளார்

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில்களில் உண்டியல், பணம் கொள்ளை


கோவை, அக். 6- கோவை பாப்ப நாயக்கன் பாளையம் குட்டை பார்க் அருகில் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன் தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜை முடிந்து இரவு 9.30 மணி அளவில் கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பூசாரி கோவி லுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. மற்றொரு உண்டியலை காணவில்லை.

மேலும் பீரோவில் இருந்த அம்மன் பட்டு சேலைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை அப்படியே கிடந்தது. இதே போல அதன் அருகில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவிலிலும் கதவை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென் றுள்ளனர். ஒரு டி.வி.டி. பிளேயரையும் எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் சிறுகாளியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில்களிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கோவில் உண்டியல்களிலும் ரூ. 10 ஆயிரம் வரை திருட்டு போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளை குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

தமிழ் ஓவியா said...


Banner
திருச்சியில் பா.ஜ.க., காட்டிய மோடி வித்தை (உடனிருந்து கண்டு எழுதுபவன்)


பெரியார் பூமியாம் தமிழகத்தில் மதவாத சக்திகள் தங்களது காலை ஊன்றத் துடிக் கின்றன. ஆர்.எஸ்.எஸ்., போன்ற பார்ப்பன சக்திகளால் மதவாதத்தைத் திணிக்க முடிய வில்லை என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சுக்ரீவன் மோடியை முன் நிறுத்தி மறைந்திருந்து அம்பு தொடுக்கிறது.

கடந்த 26.9.2013 அன்று திருச்சியில் அழைத்து வரப்பட்ட கூட்டத்தை வைத்து வெற்றி பெற்று விட்டோம் என கொக்கரிக்கிறது. மிகப் பெரிய கூட்டம் என மகிழ்கிறது. ஒரு காலத்தில்
பழனி பாபாவுக்குக் கூடாத கூட்டமா?

சினிமாக்காரர்களுக்குக் கூடாத கூட்டமா?

டில்லியில் அன்னா ஹசாரேவுக்குக் கூடாத கூட்டமா?

டில்லியில் பாபா ராம்தேவுக்குக் கூடாத கூட்டமா?

ஏன்?

ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டிற்குக் கூடாத கூட்டமா?

4½ இலட்சம் பேர் கூடினார்கள் என்று பா.ஜ.க. கூறுகிறது.

1½ இலட்சம் பேர் கூடினார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

உண்மை நிலை என்ன?

கார், வேன், பேருந்துகள் என்று திருச்சி மாநாட்டுக்காக கொண்டு வரப்பட்ட வாகனங் களின் எண்ணிக்கை சுமாராக 3000 இருக்கும். (நேரில் எண்ணிப் பார்த்தது) மூவாயிரம் வாகனங் களும் வந்து போக ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு? வரும் ஆட்கள் உணவு செலவு உட்பட ரூ.10,000 செலவு செய்துள்ளனர். எனில் மொத்தம் வாகனங்களுக்காக மட்டும் மூன்று கோடி செலவு செய்துள்ளார்கள்.

ஒரு வாகனத்திற்கு 15 பேர் என வைத்துக் கொண்டால் கூட அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,000 பேர் மட்டுமே. இவர்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாகனங்களிலேயே தங்கி உணவு உண்டு, சீட்டுக் கச்சேரி நடத்தி பொழுதை கழித்தனர். திருச்சி மன்னார்புரம் நால்ரோடில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அலை மோதியது. இதுதான் நடந்த உண்மை.

மேலும் இன்னொரு உண்மைக் கணக்கை சொல்கிறேன். மாநாடு நடந்த ஜி. கார்னர் மைதானம் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

5 ஏக்கர் = 5 X 45,000 சதுர அடி
= 2,25,000 சதுர அடி

இதில் 10 சதவீத இடம் மேடை, நடைபாதைக்கு கழித்து விட்டால் மீதமுள்ள இடம் 202500 ச.அடி., ஒரு ஆள் நாற்காலி போட்டு உட்காருவதற்கு தேவையான இடம் குறைந்தது 6 ச.அடி.

எனவே மைதானத்தில் எத்தனை பேர் அமர முடியும் என்றால்

= 202500 6
= 33750 பேர்

எனவே, அந்த மைதானத்தில் 33750 பேர் மட்டும் தான் அமர முடியும். மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை பார்க்கும்போது 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாக இருந்தன. ஆனால்
பா.ஜ.க. 4ஙூ இலட்சம் என்கிறது.

ஊடகங்கள் 1ஙூ இலட்சம் என்கின்றன.

உண்மை நிலை என்ன என்று ஊகித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!

தமிழ் ஓவியா said...


இடியும், அடியும் இனி யாருக்கு?


புலியை இடறப்
புளியோதரைகள் புறப்பாடா?

சிங்கத்தைச் சீண்டிட
சிறுநரிகள்
சேட்டையா?

எதிர்ப்பு எரிமலை
இடுப்பில் தவழ்ந்த
இயக்கமடா இது!

எதிர்ப்புப் பாஷாணம்
எங்களின் இனிப்புப்
பண்டம்!

இடையூறு
எங்களுக்கு
இன்பச் சுற்றுலா

கல்லடி
எங்களுக்குக்
கற்கண்டு

தடியடிகள்
தாவும்
பூச்செண்டு!

தாக்குதல் ஏற்று
தோள்களால்
சிரிப்போம்!

வன்முறை கண்டு
வாய்விட்டு
நகைப்போம்!

மலிவாகவா
பெற்றோம்
உரிமைகளை?

விலைமிகையாய்
அன்றோ
கொடுத்தோம்!

தூக்கில் ஏற்றினாய்
ஆசிரியர்
வேலாயுதத்தை

துவண்டு போனதா
தூய திராவிடர்
இயக்கம்?

நடராசன்
ஈந்த உயிர்
நட்ட மானதா?

தாலமுத்து
தந்த உயிர்தான்
பொய்த்ததா?

இந்தியின்
வாலை
நறுக்கியதே!

இருமொழிதான்
என்ற சட்டம்
நடக் கிறதே!

மம்சாபுரம்
என்ன செய்யும்?

மண்டல்
பரிந்துரைகள்
மலர்ந்ததே!

தாதம்பட்டி
தாக்குதல்
வென்றதா?

தலைவரின்
நடையைத்தான்
தடுத்ததா?

விருத்தாசலத்தில்
சலசலப்பு
காட்டினாய்

உலகெங்கும்
புதுத்தெம்பை
ஊட்டினாய்!

ஆயிரங்கால்
முளைத்ததடா
அறிவிலியே!

புதுத் தெம்பும்
பிறந்ததடா
பித்துக் குளியே!

அடித்தவன் பெயர்
யாருக்கடா
தெரியும்?

அடிபட்டவர்
அல்லவா
ஒளிர்கிறார்

எண்பது வயதை
இளமை
யாக்கினாய்

இனி விழும்
இடியெலாம்
ஆரியத்துக்கே!

வைக்கும் அடிகளோ
வைதிகத்தை
நொறுக்கவே!

தனி மனிதரல்ல
தமிழர் தலைவர் வீரமணி

தரணி மாந்தர்
தழு தழுக்கச்
சொல்லுகின்றார்

துரோகியே
துக்கப்படு
அழு! அழு!!

உமக்காக
உழைப்பவரைத்
தீண்டினாய்

உம்மை நோக்கியா
எங்களின்
உரிமைப் போர்?

மூலபலத்தின்
வேரினை
முறிக்கவே!

அடி இனிமேல்
விழும் விழும்
கனமாய்!

அடிதான் நீ எடுத்துக்
கொடுத்து விட்டாயே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


இணைய வாசகர் கருத்து

எந்த ஒரு இனம் தன் வரலாற்றினைத் தொலைக்கின்றதோ அந்த இனம் வரலாற்றிலும் தொலைந்துவிடும் என்பதனை உணர்ந்து, என்னருந் இளந் தமிழ்க் குமுகாயமே தமிழ் மொழியின் தூய்மை காத்து, மூட நம்பிக்கைகளை விட்டொழித்து, பகுத்தறிவு துணைகொண்டு, பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேலை நாட்டவர் போல் நிகழ்த்தி, மாந்த இனம் அனைத்தும் பயன்பட உழைப்பதோடல்லாமல், தமிழர்கள் இழந்த பழம் பெருமையை இந்நானிலம் அறிய நிகழ்த்திட அனைவரும் கூட்டாய் முயன்றிடுவீர்! திரைப் பட பித்து, பிற இன்னோரன்ன தடைகளை தவிர்த்து, விடுதலை, உண்மை போன்ற இதழ்களுடன் அறிவு சார்ந்த வேறு பல இணைய தளங்களிலும் நாட்டம் செலுத்தி(எ.கா. நாசா,நேச்சர், சைன்டிபிக் அமெரிக்கன்....) தமிழிலும் இவை போன்ற அறிவியல் இணையதளங்களை அமைத்து அனைவரும் இவ்வியக்கத்தில் பங்கேற்கும் வண்ணம் செயல் பட முன்வாருங்களென ஒரு தமிழினப் பற்றாளன் என்ற வகையில் வேண்டுகின்றேன்! உங்கள் நண்பர்கள்,தோழர், தோழியர் அனைவருக்கும் விடுதலை, உண்மை இதழ்களைப் பற்றி எடுத்துச்சொல்லி இவைகளே தமிழர்களின் பாது காப்பு அரண் என்பதனை அவர்களுக்கும் உணர்த்துவீர்! நன்றி.

- எத்திராஜ்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் மனித சமத்துவக் கோட்பாடு


சாதாரண குக்கிராமத்தில், அதிகம் படிப்பறிவில்லாத பெற் றோர்க்கு, நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கணிப்பொறி அறிவியலில் அறிவியல் நிறைஞர் எனும் உயர் பட்டம் பெற்ற நான்; வேலை வாய்ப்பு நாடிச் செல்வதில் ஆர்வமில்லாமல், பன்னாட்டுக் கம்பெனிகளில் அடிமையாக வேலை பார்ப்பதைவிட, உள்நாட்டிற்குள் முதலாளியைப் போல் விவசாயம் பார்ப்பதே மேலானது! என்ற முடிவின்படியும்; மேலும் மனிதன் மேற்கொள்ளும் தொழில்களிலேயே ஏமாற்றுதல் - வஞ்சகம் - அநியாயக் கொள்ளை - சுற்றுச்சூழல் கேடு போன்ற ஏதுமில்லாத் தொழில் வேளாண்மை என்பதாலும், அதில் 20-ஆண்டுகளாக அதிக ஈடுபாடு காட்டி முன்னேறினேன் என்பதில் மனநிறைவும் பெருமையும் கொள்கிறேன்.

வலியில்லா வாழ்க்கை இல்லை! வலிக்கிறதே என்று அழுவதும் வாழ்க் கையில்லை!! வலியை மீறி தன்னம் பிக்கையோடு நிற்க வேண்டும்; அது தான் இல்லற வாழ்க்கை எனத் திட்ட மிட்டு குடும்ப வாழ்க்கையில் காலம் கடந்து ஈடுபட்டேன். எவர் ஒருவரும் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி அடைய வேண்டுமானால், ஒரே குறிக்கோள் - அளவற்ற ஊக்கம் - நேர் மையான பாதை - தளராத நெஞ்சுறுதி, பேச்சில் இனிமை, - கொள்கையில் தெளிவு, - செயலில் உறுதி, - சளைக்காத மனம், - துடிப்பான உழைப்பு -_ கொண் டால் வெற்றி கிட்டாமலா போய்விடும்? என உறுதி கொண்டேன். மகிழ்வான வாழ்வும் கண்டேன்.

தமிழ் ஓவியா said...

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது தந்தை பெரியாரின் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் குவித்து வாசிக்கத் தொடங்கினேன். அதன் விளைவுதான் பல அறிவார்ந்த சிந்தனைகள் எனக்குள்ளே உருவாகி என் மனதைக் கிளறியது. வேறு எந்த சக்தியாலும் சாதிக்க முடியாத பல சாதனைகளை பெரியாரின் புத்தகங்கள் உருவாக்கிக் காட்டும்! என்பதன் வெளிப்பாடும், விளைவும்தான் என் இந்த ஆய்வுப் பணியும் என்றால் அது மிகையாகாது. இப்புவியில் தோன்றிய நான் வாழ்ந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஓர் நற்செயல் புரிந்திட வேண்டும்! இதை தள்ளி வைப்பதற்ககோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை!! ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் இப்புவியில் வரப் போவ தில்லை என்ற என் எண்ண அலை களோடு, நிறைந்த வாசிப்பு - குறைந்த பேச்சு - குறையாக்கவனம் செலுத்தி என் அறிவைக் கூட்டினேன். அறிவு ஆசான் தந்தை பெரியார் மட்டும் இம் மண்ணில் பிறக்காவிட் டால்...? நெடுஞ்சாலைக் கல்லெல்லாம் சாமியன்றோ! நீள்மயிர் ஏற்றுதற்கும் கப்பல் ஏது! நிலத்தை உழுவோன் நீதிபதியாவது எந்நாள்? என்பது போன்ற கவிதை வரிகளும்; நீரெல்லாம் அவர் வியர்வை; தமிழகத்தின் நில மெல்லாம் அவர் நடந்த பாதை; வாழும் ஊரெல்லாம் அவர் மூச்சின் காற்று; நம்மோர் உயர்வெல்லாம் அவர் தந்த பிச்சை அன்றோ? என்பன போன்ற வைர வரிகளும் நான் படித்ததில் பிடித்தது; என்னைப் பெரிதும் ஈர்த்தது. சங்குகள் நிறமும் மாறி - சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி - தெங்குநீர் குளிரும் மாறி - தெவிட்டமு தினிப்பும் மாறி - சங்கமும் மாறினாலும் தந்தை பெரியார் சொல் வாழும் _ நாளும் என தளராத நெஞ்சுறுதி கொண்டேன். இப்படியாக உண்மையான பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து, தெளிந்து பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தில் (தி.க.) 1993-இல் சேர்ந்ததால், உண்மையை உணர்ந்து பெரியாரின் கொள்கையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணித் துணிந்தேன். ஏராள மான எதிர்ப்புகள் வந்த போதிலும், மலை போன்ற கஷ்ட நஷ்டங்கள் தோன்றிய போதிலும் அவற்றைக் கிஞ் சிற்றும் பொருட்படுத்தாமல், எதற்கும் அஞ்சாமல், என் வாழ்வின் இறுதி மூச்சு அடங்கும்வரை பெரியாரின் உண்மைத் தொண்டறப் பணிக்கே உழைப்பது எனத் தளராது உறுதி கொண்டேன்.

நாம் ஒவ்வொருவரும் தேவைகளைக் குறைத்துக்கொண்டு எளிய வாழ்வு வாழ்வதுதான் என்றைக்கும் நல்லது. அதுவே வாழ்வின் முதன்மையான தவமும் கூட. கவலையின்றி வாழ்வதற்கு இதுவும்கூட ஒரு வழிதானே என தெளிந்தேன். உடல் நோயற்று இருப் பதும் - மனம் கவலையற்று இருப்பதும் - பிறருக்கு உதவியாக வாழ்வதுமே வாழ்வின் இன்பமாக வகுத்துக் கொண் டேன். யான் பெற்ற இன்பமாம் என் நெஞ்சைக் கவர்ந்த அறிவுலக ஆசான் அய்யா தந்தை பெரியாரின் சிந்தனைக் கருத்துகளையும், வாழ்வியல் நெறி களையும் உள்ளக் கிடங்கில் தேக்கிக் கொள்வதோடின்றி, அடுத்து வரும் புதிய தலைமுறைக்கும் அவற்றைக் கொண்டு சேர்ப்பதன் தலையாய கடமையே இந்த முயற்சியாகும். தமிழக வரலாற்றை ஆழ்ந்து - அகன்று ஆராயும்போது, பெரியாருக்கு முன் (பெ.மு) அல்லது பெரியாருக்குப் பின் (பெ.பி) என்றவாறு வரையறுக்க லாம். இதன்படி தந்தை பெரியார் வருகையால் தமிழகம் பெற்ற அளப் பரிய மாற்றங்களையும், சீர்திருத்தங் களையும் நன்குணரலாம். பெரியார் அவர்களை வெறுமனே கடவுள் மறுப்பாளர் என்றவாறு மட்டுமே, ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி அவரது அபரிமிதமான தொண்டுகளையும், உயர்ந்த மனிதநேயப் பண்புகளையும் அடியோடு இன்றளவும் சிலர் மறைத்து வருகின்றனர். அதனை மாற்றி உலகிற்கு வெளிப்படுத்த என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியே இந்த ஆய்வுகூட எனலாம். நான் பெரியார் திடலில் குடும்பத்துடன் தங்கி இயக்கத் தொண்டாற்றும் வாய்ப்பு கிடைத்த 3 ஆண்டுகளையும் (2008-_2010) இவ் ஆய்வுக்கு முழுமையாய் ஒப்படைத்து வெற்றி கண்டேன். பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தில் பெரி யாரின் சிந்தனைகளைப் பதப்படுத்திய வீரிய விதைகளாக எண்ணற்ற நூல்கள் பொக்கிஷமாக அணிவகுத்ததைக் கண்ணுற்றேன். அதனைப் பயன்படுத்தி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் படிக்கப் படிக்க என் எண்ணக் களஞ்சியம், சிந்தனைக் குவியல்களே பெரியார் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியது.

தமிழ் ஓவியா said...

மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது. கோயிலுக்கும் போகக்கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிழம்பில் அமிழச் செய்யாமலோ, சண்டமாருதத் தால் துகளாக்காமல் விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான என்றும், சர்வ தயாபரம் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? எனும் தந்தை பெரியார் அவர்களின் இச் சிந்தனையின் தாக்கம் காரணமாகவே, பெரியாரின் மனித சமத்துவச் சிந்தனைகள் பற்றிதான் ஆய்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.

பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி யன்றோ! மனித சமுதாயத்தில் ஜாதி ஒழிந்த சமத்துவம் காண கடவுள் ஒழிப்புதான் சரியான தீர்வு என்பதனை காரண காரியங்களோடு ஒன்றுக் கொன்று உள்ள தொடர்புகளையும், ஒன்றை விட்டு மற்றொன்றை செய்வது முழுமையான சமத்துவத்துக்கு வழி வகுக்காது என்பதனை பெரியார் நாள்தோறும் தவறாது விளக்கியும், எழுதியும், போராடியும் வந்தது, எனது அறிவியல் சிந்தனைக்கு தீனியானது. விஞ்ஞான உண்மை விதிகளுக்கு, அய்சக் நியூட்டன், ஆர்க்கிமிடிஸ், ஃபிளம்மிங், பித்தாகரஸ், எபிகுரஸ், ஹெகல் போன் றவர்கள் பெயரில் உலகப் பொதுவிதி உள்ளதுபோல; சமத்துவத்திற்கு பெரியார் மனித சமத்துவக் கோட்பாடு றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ணிரீணீறீவீணீக்ஷீவீணீஸீ ஞிஷீநீக்ஷீவீஸீமீ என்று உருவாக்கினால் என்ன? என்று தோன்றியதன் வெளிப்பாடே சிறப்பான இத்தலைப்பினை தேர்வு செய்து இவ்ஆய்வுக் கோவையை உருவாக் கினேன். இதில் ஏராளமான சிறப்பான செய்திகளைச் செம்மையாய் தொகுத்து எளிய நடையில் இனிமையான போக்கில், பகட்டில்லாப் பாங்கில், உலகளாவிய நிலையில் பயனறிவும் - பட்டறிவும் - பகுத்தறிவில் பளிச்சிட்டு எழுதியதோடு; பயனுறு பல்கலைக் கல்வியிலும் முத்திரை பதித்திட்ட திருப்தி எனக்கு ஏற்பட்டது. பெரியார் குறித்த பல நூல்களை இதற்காக கற்றும், பொருள் உணர்ந்தும், செய்தித் தரவுகளைத் திரட்டியும், தொகுத்தும், கற்போர் மகிழவும், நெகிழவும் காட் டியுள்ளேன். எனது இப் பகுத்தறிவுசார் கல்விப்பணி உலகெங்கும் பரவி நிச்சயமாக பெரியாரை உலகமயமாக்கிப் பெருமை சேர்க்குமாக!

தமிழ் ஓவியா said...

முனைவர் பட்டம் பெற மெத்த படிப்பும், முதிர்ந்த அறிவையும் விட கடுமையான உழைப்புதான் முதன்மை யான தேவை என்பதனை இந்த ஆய்வின் வாயிலாக நான் நன்கறிந்தேன். நாள் முழுவதும் அலுவலகப் பணி, நேரம் கிடைத்த போதெல்லாம் நூலகத்தில் நூல் தேடல் - கருத்து திரட் டல். இரவில் அவை சார்ந்த சிந்தனை களை அசைபோட்டு தெளிவுறுவேன். அதனூடே அதிகாலையே அதனைக் கட்டுரையாக்கி மகிழ்வேன். நான் ஆய்வு மேற்கொண்ட 5 ஆண்டுகளில் (2008_- 2012) உறக்கம் பாதியாகக் குறைந்து, உடல் எடை உடற்பயிற்சி யின்றியே 10-இல் 1 பங்கு குறைந்து, கண் ஒளிப்பார்வையும் மங்கியது. அதன் விளைவு உடல் ஆரோக்கியமானது. மூளை சுறுசுறுப்பானது. இதற்காக பல நாட்கள் என் வாழ்விணையருடன் ஊடல்கொண்டு பேசாமலேயே ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்தலும், நெறிப் படுத்தலும், பிழை திருத்துதலும் மேற்கொண்டு முடித்திருக்கிறேன்! சென்னை - தஞ்சை பலமுறைப் பயணம் மேற்கொண்டு, பல்கலைக்கழகத்தோடு அய்க்கியமானேன். இதன் விளைவுதான், சோம்பிக் கிடக்காமல் உருப்படியான சமுதாய ஆய்வுப்பணி மேற் கொண்டதன் மூலம் ஆய்வறிஞர் முனைவர் பட்டம் பெருமையோடு பெற்றேன். அதுவும் பெரியாரைப் பற்றி மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில்.
பல நூற்றாண்டுகள், பல தலை வர்கள் தோன்றிச் செய்ய வேண்டிய சமுதாய சீர்திருத்தம் - மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவு பிரச்சாரம் என்ற பல பணிகளை, தனி ஒருவராய், அதுவும் தான் வாழ்ந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே (1879_1973) செய்து முடித்ததோடு, தம் வாழ் நாளிலேயே வெற்றியும் கண்டு, தொடர்ந்து அவர்தம் பணிகள் தொய் வின்றி சமுதாயத்திற்கு தொடர்ந்திட தமது தத்துவ வாரிசாக தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்களையும், அவருக்கு பின்னால் அணிவகுக்க ஒரு மாபெரும் பட்டாளத்தையும் உருவாக்கிவிட்டுப் போயிருக்கும் தலைவர் தந்தை பெரியார் ஒருவரே! நுண்ணறிவும் - பேரறிவும் - பட்டறிவும் - பகுத்தறிவும் போன்ற பேராற்றலைப் பெற்றிருந்த பெரியார்: ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அறிஞர்கள் வரிசையில் தோன்றியவராவார்!

பெரியார் நோக்கில் மனித சமத் துவத்தை அணுகி ஆராயும்போது, ஒரு ஆழமான நெறி உருவாக்கப்பட் டுள்ளது. அது கடவுள் எனும் கற்பனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள் ளது. வாசகர்கள் அருள்கூர்ந்து இவ்ஆய்வுப் பொத்தகத்தை மேலோட் டமாக வாசிக்காமல், ஆழ்ந்தும் - ஊன்றியும் படித்து உண்மையை உண ருங்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரண ஒரு முட் டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லை என்று மறுத்துக் கூற ஒரு அறிவாளியால் மட்டும்தான் முடியும்! அதுவும் மறுப்பதற்கான பல ஆதாரங்களையும், காரணங்களையும் கூறவேண்டும். அதேபோன்று, ஒரு சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துவதால்தான் தான் உணர்த்த விரும்பும் கருத்தானது மக்களை உடனே சென்றடையும் என்ற எண்ணத்திலும், மேலும் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும்போது அதன் கருத்தின் முக்கியத்துவம் நன்கு புலப்படும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் கடவுள் மறுப்பையும், அக்கற்பனை ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியமும் ஆராய்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எதையும் அறிவு என்பதை அளவு கோலாகக் கொண்டு திறனாய்வு முறையில் உற்று நோக்கி, சுதந்திரமாகச் சிந்தித்தால் ஆராய்ச்சி முடிவுகளைக் காணலாம்.

தந்தை பெரியாரின் மனித சமத் துவக் கோட்பாடு எனும் இவ்ஆய்வுப் பொத்தகத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்குவதன் வாயிலாக, எனது பெரியாரின் தொண்டறப் பணியில் பல மைல்கள் கடந்து உச்சத்தை எட்டிய திருப்தி எனக்கு. பெரியாரைப் பற்றி நாம் மட்டும் பயின்று வருவதோடல்லாமல், நமது அடுத்த தலைமுறைக்கும் பெரியாரைப் பற்றி அறியச் செய்வதனை எனது கடமையாகக் கொண்டே இந்நூலாக்கம். சுயமரியாதைக் குடும்பங்களின் பரம் பரை பெருகிட இது பயன்படட்டும். இதனை அடக்கத்தோடு எண்ணித் திளைத்து, இன்புற்று, மகிழ்ந்து, அறிவு லகிற்குத் தலைவணங்கி மனநிறைவு கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்! ---த.ஜெயக்குமார்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் பற்றி....


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே
சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய
நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள்
விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி
வைத்தார்கள். இந்த கற்பனைக்கதைகள்
அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட
எண்ணத்துடன், சாமர்த்தியமாய்ப் பிறரை
அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக்
கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.

- ஹென்றி பெவரிட்ஜ் (விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம் 1895)

தமிழ் ஓவியா said...


பாதிரியார் இவர்!


வழிபட வந்தவர்களையே உணவாக்குவதா? பாதிரியார் பக்தர்களையே உணவாக்கிக் கொண்டதாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டியுள்ளது.

20 பெண்களுக்கு மேல் பாதிரியார் வன்புணர்ச்சி செய்ததாகவும், அவர்களில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசும் ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர் ஆவர்.

2004 அக்டோபரிலேயே இந்தத் தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. நார்வாக்கிலுள்ள லாஸ் பியூனஸ் நவாஸ் தேவாலயத்தில் காஸ்ட்ரோ துணைப் பாதிரியாராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து 2012 செப்டம்பர் வரை தொடர்ந்து இந்த தவறுகள் நடந்து வந்துள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சென்ற வெள்ளிக்கிழமை காஸ்ட்ரோ நார்வாக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சிறையில், 2 மில்லியன் டாலர் பிணைத் தொகைக்குப் பதிலாக அடைக்கப்பட்டிருக்கிறார். 18லிருந்து 39 வயதுக் குட்பட்ட பெண்கள், காஸ்ட்ரோவை மூன்றாவது நபர் ஒருவருடன் தொடர்புபடுத்த, அவர் துப்பறி பவர்களிடம் கூறியதாக அதிகாரிகள் கூறினர்.

அந்தப் பெண்களின் ஏதுமிலா நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு பாதிரியார் அவர்களைப் பாழ்ப் படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் அந்தப் பெண்களின் மனங்களில் அச்சத்தை ஊட்டி, அவர்களைப்பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் கூறினால், அவர்கள் நாடு கடத்தப்படு வார்கள்; அத்துடன் பொது மக்களிடையே அவமானத்துக்கும் கேலிக்கும் ஆளாவார்கள் என்று பயமுறுத்தி உள்ளார்.

வன்புணர்ச்சி, வாய் வழிப்புணர்ச்சி உட்பட்ட ஆறு கடும் குற்றச்சாட்டுகள், காஸ்ட்ரோ மீது கூறப்பட்டுள்ளன. வேறு யாரும் இவ்வாறு பாதிரியாரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பற்றி துப்பறிவாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


விநாயகர் சதுர்த்தியின் பயன்


விநாயகர் சதூர்த்தியை இங்கும் பலர் நீண்டகாலமாக சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு வராமல் கொண்டாடி வருகின்றனர், களிமண்ணில் அச்செடுத்து கண்களுக்கு குன்றிமணி குத்தி விற்பனை செய்வார்கள், அதை கொண்டு வந்து டி .ஆர்.ஓ குளத்தாங்கரையில் போட்டுவிட்டு மறுநாளே எந்த தொந்தரவும் இல்லாமல் குளித்தது ஒரு காலம் (இப்போது டி ஆர் ஓ காலனி குளம் எல்லாம் மறைந்து ந்யூகாலனியாகிவிட்டது. ஆனால் தற்போது வம்பை விலைக்கு வாங்கும் விதமாக புதிதாக ஊர்வலம் என்ற பெயரில் கடந்த சில வருடமாக கிளம்பிவிட்டார்கள், சில பகுதிகளில் குருபூசை? டென்சனை கொண்டு வந்துவிடுவார்கள், சென்னையில் பல இடங்களில் கணபதி ஊர்வலம் என்றாலே பொது மக்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் விதமாக மாறிவருகிறது, அதில் ஒன்று கண்பதி பப்பா மோரியா என்ற கோசமும் சேர்ந்து வருகிறது, நாம் எப்போதும் போல் அப்படி என்றால் என்ன? என்று கேட்டுவிடக்கூடாது கேட்டால் தெய்வ குற்றமாகிவிடும். அந்த மோரியா என்பது ஒரு இளவரசனின் பெயர் சாளுக்கிய மன்னர்களின் குறுநில மன்னனான திகம்பர் என்பவரின் புதல்வன் இவன் தான் கணபதியை மராட்டிய மாநிலத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றவர், 7 ஆம் நூற்றாண்டில் வாதாபியில்(கலிங்கம்) இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்ததைப்போல் அதே காலவேளையில் நாக்பூரை ஆண்ட(சாளுக்கியர்களின் குறுநில மன்னர்) திகம்பர் என்ற குறுநில மன்னனின் புதல்வரால் மராட்டியத்திற்கு கொண்டுவரப்பட்டது, அவரின் பெயர் மோரியா. நமது ஊரில் கணபதியை சண்டையில் பெற்ற வெற்றியின் சின்னமாக கொண்டு வந்து தொலைத்தார்கள் அங்கே நட்பு முறையில் கொண்டு வந்தார்கள் அப்படி கொண்டு வரும் போது வழக்கம் போல் மன்னர் வருவதை அறிவிக்க கணபதி சிலையை கொண்டு வரும் இளவரசர் மோரியா வாழ்க என்று கூறிக்கொண்டு வந்தனர், இதுவே நாளடைவில் கணபதி கொண்டு செல்லும் போது கணபதி பப்பா மோரியா என்றாகிவிட்டது, மோரியா என்பது சூரியனின் புதல்வனையும் குறிக்கும், அதா வது தலைவரின் மகன் (543757) எல்லாவற்றை யும் விட மிகவும் முக்கியமான ஆதாரமாக யுவாங் சுவாங் தனது பயண அறிகையில் திகம்பர புத்திரன் மோரியன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
(Tamil Pressinto mumbai)

நவிமும்பை வாஷி கழிமுகத்தில் கணபதி கரைத்த பிறகு தேங்கி இருக்கும் அசுத்தம் கடந்த வருடம் எடுத்த படம் (கழிமுகப்பகுதியில் தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க கூடுமிடம் ஆனால் கடந்த 30 வருடங்களாக மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள கடற்பகுதியில் மீன்களும் கிடையாது, மாங்குரோவ்களும் அழிந்துவருகிறது

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கத்தின் நீதி வாக்கியங்கள்!



1) அறிவைக் கெடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப் படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
அய்யம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்
அவ்வை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.
2) கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக்காதே.
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்விலகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே.
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதில கற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவல மாக்கும்.
3) சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்க்கை கைக்கொள்வாயே
சீற்றம் ஒழிந்தால் ஏற்ற முறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்றறிந்துகொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கம் என்பது துட்டுப் பறிப்பதே,
சோதிடமகற்றின் நீதிடம் பெறலாம்.
4) தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியிலில்லை.
திருவிழா, மனிதரைத் தெருவில் விடுவதே
தீர்த்தமென்று நீ திரிந் தலையாதே.
துக்கமென்பதை இக்கணம் அகற்று.
தூய மனத்தால் தீயவை அகற்று.
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.

- குடியரசு (30.3.1930)

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


மோடியின் கர்மயோக்!



திடீரென்று குஜராத் முதல் அமைச்சர் மோடிக்குக் கழிவறை பற்றிய கவலை, கூரையைப் பிய்த்துக் கொண்டு குதிப்பது ஏன்?

தன், மதம் சார்ந்த முகமூடியைக் கொஞ்ச காலத்திற்குக் கழற்றி வைத்துவிட்டு, வெகு மக்களின் அடிப்படை நலனில் அக்கறையும், கவலையும் கொண்டவர் போல பாவனை செய்து பாமர மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நப்பாசைதான் காரணம்.

இதே மோடி, மலம் எடுப்பவர்களைப்பற்றி என்ன சொன்னார்? நினைவிருக்கிறதா?

‘Karmayok’ என்ற நூல், மோடியால் எழுதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டது மாநில அரசின் செய்தி விளம்பரத் துறையாகும்.

அந்த நூலில் அவர் என்ன எழுதியிருக் கிறார்?

Scavenging must have been a spiritual
experience for the valmiki caste. at some time some body have got enlightment in scavenging, they must have tought that it is their duty to work for the happiness of the entire society and the gods

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம்; அவர்கள் செய்யும் வேலை சமூகத்தில் மகிழ்ச் சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகவும் கருதலாம் - இதுதான் கர்மயோக் என்ற நூலில் மோடி குறிப்பிட் டுள்ள பகுதியாகும்.

மலம் எடுக்கும் தொழிலைக் கேவலமாகக் கருதிய காலம் உண்டு. மலம் எடுப்பதற்கென்றே தனி ஜாதியும் இந்து வருணாசிரம அமைப்பு முறையிலும் உண்டு; அதைத்தான் வால்மீகி ஜாதி என்று மோடி குறிப்பிடுகிறார்.

அந்தத் தொழிலை, இழிவு என்று கருதி, அம்மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அரும்பும் நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகப் போராடி, அதனைப் பெற்று வரும் ஒரு கால கட்டத்தில், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, அரசே வெளியிட்ட நூலில், மலம் எடுப்பதை இழிவான தொழிலாகக் கருதாதீர்கள். அந்தத் தொழிலைச் செய்வதானது கடவுளுக்குச் சந்தோஷத்தைத் தரக் கூடியது என்று சொல்ல முன் வருகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மற்றபடி மோடி மட்டுமல்ல, இந்துத்துவாவின் அடிப்படை ஞானம் என்பது கர்மா கொள்கை யாகும். போன ஜென்மத்தில் செய்தவைகளுக்கு ஏற்ப பலா பலன்கள் அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும். அதற்கான ஏற்பாட்டை ஆண்டவன் அவனவன் நெற்றியிலே எழுதி வைத்து விட்டான் என்பதுதான் இந்து மதத்தின் கர்மா தத்துவமாகும்.

அந்த வகையில் பார்த்தால் மலம் எடுக்கும் தொழிலைச் செய்யக் கூடிய தோழன், போன ஜென்மப் பலனின் அடிப்படையில் இந்த மலம் எடுக்கும் தொழிலைச் செய்கிறான் என்பது தான் இந்து மதத் தத்துவம்.

பிறப்பின் அடிப்படையிலே ஒவ்வொரு ஜாதி அதன் அடிப்படையிலே குலத் தொழில் என்பது தான் இந்து மதம் உருவாக்கி வைத்திருக்கும் கேவலமான சமூக அமைப்பு முறையாகும்.

இந்த இந்துத்துவாவை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களுக்கு இப்பொழுது என்ன நவீன கழிவறையைப் பற்றிய கவலை?

எண்ணெய் ஆட்டுபவனும், மளிகைக் கடை வைத்திருப்பவனும் எதற்குப் படிக்க வேண்டும்? சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட பாலகங்காதர திலகர்தானே இவர்களின் இந்துத்துவா குருநாதர்?

மோடி கர்மயோக் என்ற நூலை வெளி யிட்டபோது அதனைக் கொளுத்தும் போராட் டத்தைத் திராவிடர் கழகம் நடத்தி, திராவிடர் கழகத் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனரே! (11.12.2007).

இந்த வரலாற்றை எல்லாம் மக்கள் மறந் திருக்கலாம், திராவிடர் கழகம் மறக்காது - அம்பலப்படுத்தும் - இன்னும் மோடியைப்பற்றி நிறையவே இருக்கிறது - தேவைப்படும் பொழு தெல்லாம் அம்பலப்படுத்துவோம்!

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

முக்கியமாக சர்க்கரை நோயாளி கள் தங்களுடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு (Blood Sugar), பட்டினியாக இருந்து அளந்து பார்க் கையில் 110 மி.கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதாகும்! சாப்பிட்டு பின் எடுக்கப்படும் Post Praudial
உணவுக்குப்பின் அளவு 140-க்கு மேல் இருக்கக் கூடாது என் றும் கூறி, அதனை உணவுப் பழக்கங் கள், உடற்பயிற்சி, மருந்துகள் ஆகிய மும்முனைகளில் விழிப்புடன் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்களின் அறிவுரையாகும்!

இதில் சர்க்கரை அளவு திடீரென்று மிகவும் குறைந்தால் (அதாவது 60-க்கும் கீழே போய் விட்டால்) ‘Hypoglazemia அய்ப்போகிளேசிமியா என்று கூறுவர். அதனால் இந்த Low Sugar
சர்க்கரை அளவு திடீர்க் குறை வினால், கைகளில் உதற ஆரம்பித்து, படபடப்பு ஏற்பட்டு, மயக்கம் ஏற்பட்டு விழுந்து விடக் கூடிய ஆபத்து உண்டு. அவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதை எப்போதும் ஒரு அட்டையில் எழுதி வைத்திருப்பது நல்லது இது மாரடைப்பு வரை கொண்டு சென்று உயிர்க் கொல்லியாகவும் மாறி விடக் கூடும்! சர்க்கரை இரத்தத்தில் மிகுதியாக இருப்பின்கூட அது உடனடியாக உயிர்க்கு ஆபத்தை உண்டாக்காது! சர்க்கரை குறைவுதான் அதனை ஒப்பிடுகையில் மிகவும் ஆபத்து,

உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உள்ள இவ்வகை நோயாளிகள் இந்த சர்க்கரைக் குறைவு காரணமாக விபரீத விளைவுகளில் சிக்கி விடக் கூடும்!

இன்சுலின் மருந்தை, தினமும் ஊசி போட்டுக் கொள்ளுவோருக்கு வசதியாக இப்போது மருத்துவ தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புதுப்புது கருவிகள் தடுப்பணைகளாக நிற்க கண்டுபிடிக்கப் பட்டு, சர்க்கரை நோயாளிகளைக் காப்பாற்ற வருகின்ற நல்ல செய்திபற்றி இன்றைய இந்து (ஆங்கில) நாளேட்டில்,மும்பையைச் சேர்ந்த டாக்டர் சதிஷ்குமார் கர்க் என்ற சர்க்கரை நோய் நிபுணர், டாக்டர் மோகன் சர்க்கரை ஆய்வு நிலைய தங்க மெடல் சொற்பொழி வில் குறிப்பிட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது!

இன்சுலினின் அளவு உடலுக்குள் ஏற்றப்பட, ஒரு வகை பம்பு மூலம் செலுத்தப்படும்போது அதுவே சர்க்கரை அளவு குறையாது பாதுகாக்கும் கருவியாகவும் பயன்படுமாம்! இக் கருவியை அய்ரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் மருத்துவ நிபுணர்களும் குழுவும் அங்கீகரித்து விட்டனராம்!

இன்னும் அமெரிக்கா தனது அங்கீ காரத்தை வழங்கவில்லையாம்!

5 லட்சம் சர்க்கரை நோயாளிகள் அமெரிக்காவில் - இன்சுலின் பம்பு களைப் பயன்படுத்தி வருகின்றனராம்!

HBAIC - என்ற சர்க்கரை அளவு ஒழுங்குப்படுத்தப்படும் பம்புகளாகவும் அமைக்கப்பட்டு சிறு சிறு துளிகளாக உள்ளே செலுத்தப்படுகிறதாம்!

விரைவில் - 5 ஆண்டுகளுக்குள் செயற்கை கணையம் (Artificial Pancreus)வந்து விடுமாம்! அதில் இன்சுலின் பம்ப்பும் சென்சரும் (Sensor) இணைக்கப்பட்டு, அளவு குறையும்போது எச்சரிக்கை மணி ஒலிப்பது போல் உடனே குறிப்புக் கூறுமாம்! உடனே சரி செய்ய வாய்ப்பும் ஏற்படுமாம்!

இது இரண்டாவது புத்தாக்க மாகும் (Second innovations)

மூன்றாவதும் தயார் நிலையில் உள்ளதாம்! முன்கூட்டியே கணக் கிட்டே எச்சரிக்கை ஒலி வருமாம்!

என்னே மருத்துவ மின்னணு தொழில் நுட்பச் சாதனை!

பாராட்டுங்கள் - பழைமையைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

புதுமையை வரவேற்கக் கற்றுக் கொள்வோம்.

தமிழ் ஓவியா said...


மழைவேண்டி பாடைகட்டி ஒப்பாரியாம்!


கலசப்பாக்கம், அக்.7- கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் மழைவேண்டி, பொதுமக்கள் பாடை கட்டி ஒப்பாரிவைத்து, கொடும்பாவி எரித்தனராம்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழையில்லாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் குடும்பத்துடன் திருப்பூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்குக் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் நெல்விதை பயிர் செய்துள்ளனர். ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் மேற்கொண்டு பயிர் செய்ய முடியாமல் உள்ளனர்.

இதனால் தேவனாம்பட்டு கிராம பொதுமக்கள், பெண்கள் ஒன்றுகூடி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உருவப்பொம்மை ஒன்றைச் செய்து அதை பாடையில் வைத்து மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்தனராம். பின்னர் பொம்மையை பாடையில் வைத்து மேள தாளத்து டன் தூக்கிச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்தனராம்.

தமிழ் ஓவியா said...


மஞ்சள் காமாலை வருவது ஏன்?


மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத் தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை.

நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத் திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?

வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப் படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரைச் சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது செல்லும் பித்தநாளத் தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர். அப்ஸ்ட்ரக்டிவ் என் றால் அடைப்பு என்று பெயர்.

பாதிக்கப் பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்

ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்

தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்


தசை மற்றும் எலும்புகளின் ஆரோக் கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமா கலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவ தில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப் படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்சினை இது... என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய வலிகள், அவற்றைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், சிகிச்சைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். தசைகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான கால்சியம் சத்தை உருவாக்க வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டியானது சூரியஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. நம் சருமமானது, சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி சத்தை தானே தயாரித்துக் கொள்ளும்.

அதுதான் உடலில் கால்சியம் சத்தைத் தக்க வைக்க உதவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும், கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்சினை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.

தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறி குறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள். எதிலுமே பலன் இருக்காது.

சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடிபட்டாலே தொடை எலும்புகளும், முது கெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்கு வதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம்.

24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்...

என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி


நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்ற நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்ச்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும். முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும், பற்களும் உறுதியாகும்.

தமிழ் ஓவியா said...


மோடி ஆளும் ஆட்சியின் பரிதாபம் குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவு மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தகவல்


ஆமதாபாத், அக்.8- குஜராத் மாநிலத்தில், மூன்றில் ஒரு குழந்தை, எடை குறைவாக பிறப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஜி., சார்பில், குஜராத் சட்டசபை யில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கை: குழந்தைகள், ஊட்டச் சத்து குறைவாக இருப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. குஜராத்திலும், இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஆனாலும், குஜராத்திலும், 63 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை.

குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 75 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தேவை. ஆனால், 50 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தான் செயல்படுகின்றன. குஜராத்தில், மூன்று குழந்தைகள் பிறந்தால், அதில் ஒரு குழந்தை, எடை குறைவாகப் பிறக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், சரியாகச் செயல்படாதது தான், இதற்கு காரணம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட் டுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இதன்மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மோடியின் மாதிரி இப்போது வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காந்தி நகருக்கு மிக அருகிலுள்ள அகமதாபாத் நகரிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கட்டடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்கள் - ஒரு ஜெர்மானியர் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 8- அறிவி யல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத் துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகை யில், இந்த ஆண்டின் மருத்துவத் துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்குத் தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம், உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.

இந்த துல்லியமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அமைப் பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் தாமஸ் சுடாப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண் டறிந்து வெளியிட்டுள்ளனர். நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் ஜேம்ஸ் ராத்மேன், யாலே பல்கலைக்கழகத்திலும், ஷேக்மேன் கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும், சுடோப், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத் திலும் பேராசிரியர்களாக பணி யாற்றி வருகின்றனர்.

இயற்பியல், வேதியியல், இலக் கியம், அமைதி மற்றும் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத் திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ் வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோனா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.7 கோடி) மதிப்புடையதாகும்.

தமிழ் ஓவியா said...

சங்கரராமன் படுகொலை மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு உண்டு
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகன் சாட்சியம்

சென்னை, அக். 8- எனது தந்தையார் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டதிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்டதிலும் காஞ்சி புரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வ திக்குத் தொடர்பு உண்டு என்று படுகொலை செய் யப்பட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெளி வாக சாட்சி சொன்னார்.

ஜெயேந்திரர் ஆள் வைத்து தாக்கினார் என்று ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் சாட்சியம் அளித்தார்.

2002 செப்டம்பர் 20ஆம் தேதி மந்தை வெளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ ரது மனைவி, வேலைக் காரர் ஆகியோர் தாக் கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது.

ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உள் ளிட்ட 17 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று (7.10.2013) 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா ஆஜராகி சாட்சி அளித்தார். அவ ரிடம் அரசு சிறப்பு வழக் குரைஞர் என். விஜயராஜ் விசாரணை நடத்தினார். ஆனந்த் சர்மா அளித்த சாட்சியம் வருமாறு:

எனது தந்தை சங்கர ராமன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்து வந்தார். இதனால் இரு வருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், எனது தந்தைக்கும், ஜெயேந்திர ருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச் சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண் டித்து வந்தார். இதை யடுத்து, 2002இல் நசரத் பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர் வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் ஆகி யோரை வரச்சொல்லி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற் படவில்லை.

இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதி னார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப் பினார். நான்தான் அந்த அஞ்சல்களை அனுப் புவேன். அந்த கடிதங் களை ரிசர்வ் வங்கி வைத்தியநாதன், ராதா கிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப் பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத் தியநாதன் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பப் பட்டன.

இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ் ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்து தாக்கியுள் ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ் ணன் எழுதியதாக தவ றாக புரிந்துகொண்டு அவரை தாக்கியுள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடி தம் எழுத வேண்டாம் என்று எனது தந்தை யிடம் கூறினோம். அத னால் 6 மாதங்கள் கடி தம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் பட்டினப் பாக்கம் காவல் நிலை யத்தில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்து தாக்கியுள்ளனர்.

எனக் கும் எனது குடும்பத் தினருக்கும் ஆபத்து வந் தால் அதற்கு ஜெயேந் திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவல கத்தில் எனது தந்தையை கொலை செய்தனர். காவல்துறையினர் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரி வித்தேன்.இவ்வாறு சாட்சியம் அளித்தார்.

விசாரணை முடிந்தவு டன், சாட்சி ஆனந்த் சர்மாவிடம் வேறொரு நாள் குறுக்கு விசாரணை நடத்துமாறு நீதிபதி யிடம் ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வெங்கட்ராமன் கோரி னார். அதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், காலதாமதம் செய்தால் சாட்சியை மிரட்டு வதற்கு வாய்ப்பு ஏற் படும். முடிந்தால் நாளை குறுக்குவிசாரணை நடத்தட்டும் என்றார்.

ஆனால், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே சாட்சியம் அளித்த ராதாகிருஷ் ணனிடம் குறுக்கு விசா ரணை நடத்தியபிறகு தான் ஆனந்த் சர்மா விடம் குறுக்கு விசா ரணை நடத்துவோம் என்று கூறி ஒரு மனு வைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, விசா ரணையை நீதிபதி வரும் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அன்று ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

தமிழ் ஓவியா said...


அக்டோபர் எழுச்சி


உலகில் அக்டோபர் புரட்சி பற்றிப் பேசுகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இந்த அக்டோபர் மாதம் பல முக்கிய நிகழ்வுகளின் சங்கமமாக அமைகிறது.

செப்டம்பரின் இறுதிப் பகுதி அதற்கான தொடக்கத்தைக் கொடுத்து விட்டது என்று சொல்லலாம்; செப்டம்பர் 28இல் விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணியின் மண்டல மாநாடும் அதனையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலும் பெரிய அலைகளை நாட்டில் எழுப்பி விட்டன.

திராவிடர் கழகத் தலைவர் மீது தொடுக்கப்பட்ட அந்தத் தாக்குதல் தனி நபர் மீதான ஒன்றல்ல - ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு மற்றும் பிற்போக்குச் சக்தி களை நோக்கிய எதிர்ப்பு என்கிற வகையில் கட்சி களைக் கடந்து பேரலையைத் தட்டி எழுப்பி விட்டது.

இவற்றின் குறியீடாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், அதன் தலைவர் மீதான தாக்குதலை முற்போக்குச் சக்திகள் தங்களுக்கான ஒன்றாகக் கருதி எடுத்துக் கொண்டது - நல்லதோர் அறிகுறி யாகும். தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஒன்றும் கெட்டுப் போகவில்லை; தந்தை பெரியார் விதைத்த வித்து, வீறு கொண்ட எழுச்சியாக - சில நேரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பச்சையான அரசியல் நோக்கு என்ற சுயநலச் சிறையில் சிக்கிக் கொண்ட ஒரு சிறு எண்ணிக்கை கொண்டவர்களைத் தவிர, மற்றபடி பொதுவாகத் தமிழ் மண்ணில் முற்போக்குச் சிந்தனை வீறு கொண்டு இருப்பதை இந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்திக் காட்டி விட்டன.

குறிப்பாக ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி ஏதோ பெரிய புரட்சி நடத்தப் போவதாக தத்தம் முதுகுகளில் தம்பட்டங்களைக் கட்டிக் கொண்டு டாம் டாம் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் நோக்கம் எல்லாம் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நாக்கில் எச்சில் ஊறிக் கிடக்கும் சமாச்சாரம் தான்.

அற்பக் கணக்கில்கூட ஜாதிக் கூட்டங்கள் வெற்றி பெற முடியாது தமிழ்நாட்டில் என்பது - இதற்கு முன்பும் எத்தனையோ முறை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் பாடம் புகட்டி இருந்தும், இதுவரை புத்திக் கொள் முதல் பெறவில்லை என்பது பரிதாபமே!

இன்னும் - சிலருக்கு மதவாத சக்திகளோடு ஆலிங்கனம்! அவர்கள் பெரியார், அண்ணா பெயரைக் கூட உச்சரிப்பார்கள். ஏன் சில நேரங்களில் பகுத்தறிவு கூடப் பேசுவார்கள்; மேலும் மதச் சார்பின்மை பற்றியும் ஆவேசமாக பேசுவார்கள். இவர்கள் அத்தனைப் பேர்களும் முகத்திரை கிழிந்து பரிதாபகரமான பள்ளத்தாக்கில் விழுந்து எலும்புகளை இழந்து விடப் போகிறார்கள்.

தேர்தலுக்குமுன் ஒரு கூட்டு - தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டு என்ற முதுகுக்குப் பின்னால் முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். அதில்கூட அறிவு நாணயம் இல்லையே!

என்னதான் மோடிகளை முன்னிறுத்தினாலும், கோடி கோடியாகப் பண வெள்ளத்தை கரை உடைத்து ஓடச் செய்தாலும் பிள்ளை பிழைக்கப் போவதில்லை.

விருத்தாசலம் மாநாடு எடுத்துக் கொடுத்து விட்டது - அக்டோபர் 20 திண்டிவனம் கழகப் பொதுக் குழுவும் சங்கநாதம் செய்யும் - திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடும் - இந்தியாவுக்கே பல செய்திகளைக் கொடுக்கப் போகிறது.

பிஜேபிக்கான, குறிப்பாக அவர்களின் பிரதம ருக்கான வேட்பாளர் திரு. நரேந்திரமோடி, மதச் சார்பின்மை என்பதை வேறு ஒரு தடத்திற்கு இழுத் துச் சென்று, ஏதேதோ தமது மனதிற்குப்பட்டவற்றை எல்லாம் சம்பந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதச் சார்பின்மையை மறு தலிக்கவும் முடிய வில்லை. அதே நேரத்தில் ஒப்புக் கொள்ளவும் மனம் இல்லை; ஆகவே மதச்சார்பின்மை என்பதற்கு தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் சொல்ல முற்பட் டுள்ளனர்.

மதச் சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் இல்லை என்பதுதான். அதனை மறைத்து விட்ட நிலையில், தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கான அடிப்படைத் தகுதியை எப்படிப் பெற முடியும்?

இந்த அடிப்படையை இந்தியாவிலேயே சற்றும் பிசிறு இல்லாமல் செவ்விய முறையில் சொல்லிக் கொடுக்கும் பாடம் நமது இயக்கத்திற்குத்தான், நமது தலைவருக்குத் தான் உண்டு.

அக்டோபர் மாதம் நமது கழகத்திற்கு முக்கிய மானது. திண்டிவனம் பொதுக் குழுவில் அதற்கான வெளிச்சம் கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களைச் சந்திப் பார்கள் சந்திப்போம்!

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்.

விடுதலை, 22.9.1972

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களுக்கு அரணாவோம்!


தந்தை பெரியார் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து அதன் மூலம் நம்மையெல்லாம் மனிதர்களுக்கு பாதுகாப்பாய் வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அவர்கள் போட்டுத் தந்த பாதை யில் எந்த வித சபலத்திற்கும் ஆளா காமல், ஆளாக்காமல் நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள்.

தலைவர் அவர்களின் பெருமை களைப் பொறாதவர்கள் அவர்கள் மீது அபாண்டமாய் பழிகளை வீசி வருகின்றனர். அவற்றால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், அப்பழிகளே பூமராங் போல வீசியவர்களிடமே சென்றடைகின்றன.

மனைவிமீது கோபங் கொண்ட பார்ப்பனன், தன் மனைவியை பார்த்து, உனக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை உடுத்தி மூலை யில் உட்கார வைக்க வேண்டுமடி என்றானாம். கோபத்தின் உச்சியிலி ருந்த பார்ப்பனன் தான் செத்தால் தான் இது நடக்கும் என்பதைக் கூட உணர முடியவில்லை.

இது போலவே மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகன் தாலியறுக்க வேண்டும் என்றெண்ணுகிற மாமியார் களும் உண்டு. இப்படிப்பட்ட அவலச் சிற்றின்பக்காரார்கள் நாட்டில் நிறைய உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசு இயந்திரங்களிலும், ஆட்சியிலும் அமர்ந்துவிடுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு விருத்தாசலத்தில் நடந்த விரும்பத் தகாத நிகழ்ச்சியாகும்.

இக்கொடுஞ்செயலைச் செய்தவர்கள், தந்தை பெரியார் அவர்களின் பேராற்ற லால், மானமிகுவாளர்கள் முத்தையா முதலியார், கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட் சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்றோரின் முயற்சியால் கிடைத்த பட்டம் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, மேற்சொன்ன தலைவர்களைப் பின்பற்றி வரும் ஆசிரியர் அவர்களை பயணத்தின்போது தாக்கு கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதற்குத் தூண்டு கோலாய் இருந்தவர்களை என்ன செய்வது? இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடுவதா? அல்லது அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதா?

சட்டத்திற்குட்பட்ட கத்தியை எப்போ தும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைத் தாக்கவருபவனைக் கொல்லும் முயற்சியில் செத்துப் போனாலும் பரவா யில்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் வழியா? நீதிமன்றம் வழியா? மக்கள் மன்றம் வழியா? அல்லது மூன் றையும் கொண்ட வழியா என்பதை யோசிக்க வேண்டும்.

எதற்கும் ஆயத்தமாகவே திராவிடர் கழகத்தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்டளை கிடைத்தவுடன் அதனைச் செயல்படுத்த ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் என்பது இருபாலரையும் சேர்த்துத்தான்.

மம்சாபுரம் நிகழ்ச்சியை இலேசாக விட்டு விட்டதால் தான் இப்போதைய நிகழ்வு. இரண்டுமே அண்ணாவை கொடியிலும் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, அவரது கொள்கைக்கு நாமம் போடுபவர்கள் ஆட்சியில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர், அவர் களது கொள்கைகளைத் தெரியாதவர் களை; தொ(கு)ண்டர்களாகக் கொண்ட கட்சி, தெரிந்தும் தெரியாதவர்கள் போலிருக்கும் குட்டித்தலைவர்களைக் கொண்ட கட்சி, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவ மானப்படுத்தும் மனோநிலை கொண்ட தலைமை இப்படிப்பட்ட அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழகம். ஏ தாழ்ந்த தமிழகமே என்ற அண்ணாவின் தலைப்புத்தான் நினைவிற்கு வருகிறது.

இக்கொடிய செயலில் ஈடுபட்ட குண்டர்கள், அவர்களுக்குத் துணை போன காவல்துறை மண்டையர்கள் அனைவரும் தண்டனைக்கு உட் பட்டே ஆகவேண்டும். நம் முயற்சி களால் பட்டம், பதவி கிடைத்த அலுவலர்கள் தம்மைத் தாக்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும்.

நம்முடைய பிரச்சாரங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும். சாதிச் சங்கங்கள் அரசியலில் ஈடுபடு வதைத் தடுத்தாக வேண்டும். சாதிச் சங்கங்கள் செயல்பட முடியாத அளவிற்கு நம் பிரச்சாரங்களை, முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்.

பாடுபடுவோம், வெற்றி பெறு வோம்; சாதிப்பகைவர்களைப் புறங் காண்போம்.

- ப. சங்கரநாராயணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், நாகர்கோயில்-2)

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அன்றும் - இன்றும்


- சிவ. பாலசுப்ரமணியன், கண்ணந்தங்குடி மேலையூர்

28.9.2013 சனிக்கிழமையன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திரா விடர் கழக மண்டல மாணவரணி மாநாடு, காலை நிகழ்ச்சிகள் மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. முற்பகல் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் நல்ல உணவு பொட்டலத்தில் கொடுத்தும், தட்டுப்பாட்டின்றி அதனைப் பகிர்ந்து கொண்டதும் வியப்பு. மாணவரணி யினரின் இச்சிறப்பு ஏற்பாடு போற்று தற்குரியதே. அதே போல பல பொது நிகழ்ச்சிகள் நடத்த இடம் கொடுத்து உதவும் மக்கள் மன்றம் பொறுப்பாளர் களுக்கும் நன்றி.

கருத்தரங்கம், பேரணி, திறந்த வெளி மாநாடு இவைகளை முன் னிட்டு, நகரத்தின் தெற்கு நுழை வாயிலிலிருந்து வழி நெடுக இரு புறமும் மிக நெருக்கமாக மக்கள் மன்றம் வரை சுமார் 5 கி.மீ. தொலை வுக்குக் கழகக் கொடிகளும், விளம் பரங்களும், பொதுமக்களுக்கும், எதிரிகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். மாலையில் அரசுக் கல்லூரி வாயிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரைச்சுற்றி வந்து வானொலித் திடலை அடைந் தது.

ஊர்வலத்தில் எப்போதும் நாம் எடுத்துவரும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளான, பெண்கள் தீச்சட்டி எடுத்தல், அரிவாள் மீது ஏறி நிற்பது, எரியும் சூடத்தை வாயில் போடுவது வீரவிளையாட்டுகள், பள்ளி மாணவ மாணவியரின் அணிவகுப்பு, சடை யார் கோயில் சிறுவர்கள் கோலாட்டம் இறுதியில் டாடா சுமோ கார் இழுத்தல் இவை எல்லாம் நமக்குப் பழமை.

கட்டுப்பாட்டுடன் எந்தவித வீண்ஆரவாரமும், போதை ஆட்டமும், கூச்சல் குழப்பமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற இந்த ஊர் வலத்தை நகர மக்களே பார்த்து வியந்து ஆர்வத்துடனும் ஆச்சரியத் துடனும் மூழ்கியது என்றால் மிகை யல்ல.

பேண்டு வாத்திய நிகழ்ச்சியில் ஒருவர் புகுந்து போதையில் ஆடி யதை ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அந்த ஆளை வெளியே இழுத்து விடுங்கள் என்று என்னிடம் கூறிக்கொண்டிருந்த போதே நமது தோழர் அவரை வெளியே இழுத்து விட்டார். இந்நிகழ்ச்சியானது மக்கள் நமது தோழர்களிடம், கழகத் திடம் எவ்வளவு மதிப்பு கொண் டிருக்கின்றனர் என்பது புலனாகவில்லையா?

மேலும் ஒளிவிளக்குகள், ஒலி பெருக்கி, மேடையின் சிறப்பு இப்படி மாநாட்டினை இளைஞரணியினர் பார்த்து வியப்படையும்படி செய்து விட்டிருந்தது மிக மிக நேர்த்தி. பாராட்டுதலுக்குரிய வர்கள்.

ஆசிரியர் அவர்கள் பேசும் போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். விருத்தாசலம் வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன என்றார். அது பற்றிய சில நினைவுகளை குறிப்பிட விரும்புகின்றேன்.

சிவ.பாலசுப்ரமணியன் ஆகிய நான் 1978-ஆம் ஆண்டு இறுதியில் பூதலூரி லிருந்து விருத்தாசலம் ரயில்வே சந்திப்பிற்கு நிலைய அதிகாரியாக மாற்றுதலில் வந்தேன். எந்த ஊரில் பணிபுரிந்தாலும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை அங்கே ரயில்வே குடி யிருப்பில் சிறப்பான முறையில் கொண் டாடுவது வழக்கம்.

விருத்தாசலத்திலும் 1979, 80 ஆண்டுகளில் நான் எனது ரயில்வே குடியிருப்பில் சிறப்பாகக் கொண்டாடினேன். அங்கு சென்றபோதே மாயவரத்தார் உணவு விடுதி என்று அழைக்கப்பட்ட பெரியவர் மதிப்பிற்குரிய நினைவில் நிற்கும் சபாபதி அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. அச்சமயம் விருத் தாசலத்தில் கழகம் இல்லை.

எனது இந்த ஏற்பாட்டினை ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ரயில்வேத் தோழர்கள் 1981-ஆம் ஆண்டை முப்பெரும் விழாவாக நடத் துவது என்று ஒத்துழைத்து நடத்தினோம். பின்னர் அத்தோழர்களே முன்வந்து தந்தை பெரியார் அவர்களின் சிலையை வைப்பது என்று முடிவெடுத்து என் னுடைய கருத்தையும் ஒத்துழைப்பையும் முன்னெடுத்து துரிதமாகச் செயல்பட் டோம். மானமிகு சபாபதி அவர்கள் வழிகாட்டுதலின்படி எல்லோரும் செயல் பட்டோம்.

நான் ரயில்வேயில் அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர் சங்கத்தின் திருச்சி டிவிஷன் தலைவராகவும் மண்டல் கமிஷன் செயல்பாடுகளை முன்னிறுத்தி பிசி அசோசியேஷன் தலைவராகவும் இருந்ததால், பல அதிகாரிகள், உடன் பணியாற்றும் தோழர்கள், தொழிலாளத் தோழர்களின் அனைவரின் ஆதரவுடனும் தற்போதுள்ள இடத்தில் தந்தை பெரி யாரின் சிலையை சிறப்பான முறையில் வைத்தோம்.

அப்போது மன்னை ப.நாரா யணசாமி அவர்கள் சிறப்பு விழா நிகழ்ச் சியை நடத்தினார்கள். அச்சிலை நிறுவு வதற்கு முன் மங்கலம் பேட்டைக்குச் சென்று தான் பெரியார் சிலைக்கு மாலையிட முடிந்தது

தமிழ் ஓவியா said...

விருத்தாசலத்தில் கழகம் இல்லாத நிலையில், அதை மாற்று முகத்தான், விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் அதிகாரியான ஜெயமோகன் அவர்கள் விடுதலையில் ஓர் அறிக்கை வெளியிட் டார். அதாவது திராவிடர் கழகம் துவக்க ஆர்வமுள்ளவர்கள் தன்னைச் சந்திக் கவும் என்பதாக. மறுநாளே அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன்.

இருவரும் கலந்து பேசினோம். பல தோழர்களைச் சந்தித்தோம். அவர்கள் தற்போது கும்பகோணம் வட்ட தலை வராக உள்ள இளங்கோவன் (இபி), வயலூர் சர்வேயர் ராஜாராமன், ஆசிரியர் கள் வெங்கடேசன், ராமசாமி, வட்டாட் சியர் அலுவலக அக்னி, நைனார், விசுவ நாதன், கச்சிராய நத்தம் தர்மலிங்கம், அந்த ஊர் தோழர்கள், கருவேப்பிலங் குறிச்சி டாக்டர் அன்பினுருவன், இன்னும் பலர். இவர்களை ஒருங் கிணைத்து பெரியவர் சபாபதி அவர்களைத் தலைவராகக் கொண்டு திராவிடர் கழகமும், என்னைத் தலைவராகக் கொண்டு பகுத்தறிவாளர் கழகமும் துவக்கப்பட்டன.

திராவிடர் கழகம் துவக் கப்பட்டு பல பொதுக் கூட்டங்கள் நடந்தன. பின் சுளுளு எதிர்ப்பு ஊர்வலம் தற்போது ஊர்வலம் ஆரம்பித்த அதே இடத்திலிருந்து ஊர்வலம் முடிந்த வானொலித்திடலிலே முடிவுற்றது. ஊர்வலப் பாதை யில் மட்டும் சில மாற்றங்கள். ஆசிரியர் அவர்களையும் சபா பதி அவர்களையும் டிராக்டரில் சிறப்பாக அமைத்து ஊர்வலம் நடைபெற்றது.

மீண்டும் ரயில்வே படிப்பகத் தில் ஆசிரியர் தலைமையில் ஒரு திருமணம், இடஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கம் ரயில்வே நிலையத்தின் அரு கில், பின் மாலை வானொலித் திடலில் பொதுக்கூட்டம் என இரு முறை சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு கொடுத்துப் பாடுபட்டவர்களில் பெண் ணாடம் தோழர்களும் அடங்குவர். குறிப்பாக ஆ.வந்தியதேவன் அவர் களின் பணி அளவிடற்கரியது. அவர் ரயில்வே குடியிருப்பை ஒட்டி குடியி ருந்ததால் பெரிதும் துணையாகவும் செயல்படவும் துணை நின்றார்.

1985-ஆம் ஆண்டின் முற்பகுதி யில் விருத்தாசலத்திலிருந்து மாற்ற லாகி தஞ்சாவூரை அடுத்த நிலைய மாகிய மாரியம்மன் கோவிலில் பணிபுரிந்து 1989-இல் பணி ஓய்வு பெற்று சொந்த கிராமமாகிய ஒரத்த நாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரில் தங்கியுள்ளேன். விருத் தாசலம் நிகழ்ச்சிகளைக் காணவும் தோழர்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன்.

மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர் களை மட்டும் சந்தித்தேன். நீங்கள் விதைத்த விதை தான் என்றார். 30 ஆண்டுகளுக்குப் பின் மரமாகிக் கனி கொடுத்திருப்பது எனக்குப் பூரிப்பாக வும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இளைஞர்களின் சுறுசுறுப்பும் ஆர்வ மும், துடிப்பும் எழுத வார்த்தைகள் போதாது.

தமிழ் ஓவியா said...


உ.பி. உயர்நீதிமன்றத்தின் விசித்திர உத்தரவு

அலகாபாத், அக்.8- உத்தரபிரதேசத்தில் காவலர் பணியில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ள பிற் படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 17 ஆயிரம் இடங்கள் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் ஆஹிர், யாதவ், யாதுவன்ஷி மற்றும் குவாலா ஆகிய ஜாதியை சேர்ந்தவர் களும், எஸ்சி பிரிவில் சாமர், துரியா மற்றும் ஜாதவ் ஜாதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இடஒதுக்கீடு பலன்களை பெற்றிருப்பதாக மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையில் ஏறக்குறைய 60 சதவீதம் அளவுக்கு நிறைந்திருப்ப தாகவும், இவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படு வார்கள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் அகர்வால் விசாரித்து, போதிய பிரதிநிதித்துவம் பெற் றுள்ள ஜாதியினருக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டார்.

இது அரசி யல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்தாரி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பிரசாத் மவுரியா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பகதுர் பதக் கூறினார். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்ட பின்னர் உயர்நீதிமன் றத்தில் உ.பி. அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் படும் என மூத்த அமைச்சரும் சமாஜ் வாடி மாநில செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதற்கு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிப்பார்களா?

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்



பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். - (விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...


அக்டோபர் 15 இல் ஆர்ப்பாட்டம்!


7.10.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினை களை வலியுறுத்தி முக்கிய தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளுக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டும், தமிழ்த் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், மாநில அரசுக்குக் காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளை யும் வழங்கப் போவதில்லை.

13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்திருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்ப தோடு இதனை அடிப்படையாகக் கொண்டு காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜூனியர் ரிச்சர்ட் (ஜெ.ஆர்.) ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை யின் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைப்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றி ருந்தன.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை உச்சநீதிமன் றத்தின் வாயிலாக ஒரு தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு இணைப்பு இல்லை என்றாகி விட்டது.

(நியாயமாக ஒப்பந்தப்படி 1988 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கவேண்டும் - ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வடக்கு மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது).

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்காஸ் ஆகிய இன மக்களைக் கொண்ட பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்யப் பட்டதா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப் பிறகும்கூட ஜெயவர்த்தனே என்ன மனவோட்டத்தில் இருந்தார்?

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழிகளாகும் என்ற ஒப்பந்தப் பிரிவுபற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அதிபர் ஜெயவர்த்தனே கூறினார். அப்படி இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பதைப்பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 30.7.1987, பக்கம் 9) என்று கூறியவர்தானே!


13 ஆவது திருத்தப்படி தமிழர்களுக்கு ஓரளவு சுயாட்சி மணம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவ்வாறு திருத்த இலங்கை அரசு தயாராகவில்லை.

இதனை எதிர்த்து புத்தத் துறவிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தச் செய்திருப்பதும் இலங்கை அரசுதான்.

நிலவுரிமை, காவல்துறை அதிகாரம் போன்றவைகூட இல்லாமல் ஒரு மாநிலத்தின் ஆட்சி என்பது நகைப்புக் குரியதாகவே இருக்கும். மாநில முதலமைச்சரைவிட ஆளுநருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்ற ஒரு நிலை சட்ட ரீதியாக உருவாக்கி வைக்கப் பட்டுள்ளது.

நியாயமாக 13 ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்றிச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கையை வலியுறுத்த இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. ஏனெனில், இந்தியப் பிரதமரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் அது.

இரத்து செய்வதாக இருந்தால்கூட இரண்டு நாடுகளும் இணைந்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஒரு சார்பாக (Unilateral) முடிவு எடுப்பது சட்ட விரோதமாகும்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிடவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதே தவிர, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் மனப்பான்மை இலங்கை அரசுக்குக் கிடையவே கிடையாது.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையில் அழுத்தம் கொடுத்தார் - எந்த அளவுக்கு இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தியே 61 கழக மாவட்டங் களில் திராவிடர் கழகம் வரும் 15 ஆம் தேதி ஆர்ப் பாட்டத்தை நடத்துகிறது. தோழர்களே, எழுச்சியோடு செயல்படுத்துவீர்!

தமிழ் ஓவியா said...


இயற்பியல் நோபல் பரிசு: இரு விஞ்ஞானிகளுக்கு!


ஸ்டாக்ஹோம், அக்.9- கடவுள் துகளைக் கண் டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியை இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் பீட்டர் க்ஸ் (வயது 84), பெல்ஜியத்தின் பிராங் கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார்கள்.

இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படுகிற கடவுள் துகளை கண்டு பிடித்து உலகுக்கு முதலிலேயே சொன்ன சாதனை யாளர்கள் இவர்கள்.

அதென்ன கடவுள் துகள் என்ற கேள்வி எழு கிறது அல்லவா? அதற்கு முதலில் இந்த பிரபஞ்சம் உருவானது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பிக் பேங் என்றழைக்கப்பட்ட பெருவெடிப்பு ஏற்பட்டது. அப்போது வாயுக்கள் தோன்றி அதில் இருந்த அணுக்கள் ஒன்றுசேர்ந்துதான் இந்தப் பிரபஞ்சம் உண்டானது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ஒட்டும் பொருள் அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டு பிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரயில் என அனைத்து பொருள்களின் உருவாக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.

ஆனால் இந்த 16 துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டும்பொருள் ஒன்று உண்டு என்று அரை நூற்றாண்டுக்கு முன்பாக 1964-ம் ஆண்டு உலகுக்கு சொன்னவர்கள் பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கி லெர்ட் ஆவார்கள். பீட்டர்க்ஸ் பெயரால் அது க்ஸ்போஸான் என அழைக்கப்படுகிறது. இதை கடவுள் துகள் என கருதுகின்றனர்.

போஸான்க்ஸ் இதைக் கண்டறிவதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஜெனீவா அருகில் 574 அடி ஆழத்தில், 27 கி.மீ. நீளத்தில் ஒரு சுரங்கப்பாதையில் செர்ன் என்ற அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப் பட்டது. இதில் அதிவேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர்.

அதில் இதுவரை பார்த்திராத துகளின் தடயம் காணப்பட்டது. அதன் நிறை, இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கணித்து கூறிய அதே வரையறைக்குள் இருந்தது. அதுதான் க்ஸ் போஸான் துகள். இந்த போஸான் துகள் கண்டு பிடித்தவரின் பெயரால் போஸான்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணமான விஞ் ஞானி பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் விஞ்ஞானிகள் இருவரும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதைக் காரணமாக்கக் கூடாது என்ற தீர்ப்பு சிறப்பானது

கடவுளை மற - மனிதனை நினை என்ற பெரியார் கொள்கைக்கு வெற்றி!

தமிழர் தலைவரின் மனிதநேய அறிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டியது கட்டாயம் ஆகும். இன்னும் 3 மாதங்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கக் கூடாது. அதற்குமேல் என்றாலும், மூன்று விழுக்காடு தர மறுக்கக் கூடாது.

- இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு ஆணையிட்டு இருப்பது,

தமிழ் ஓவியா said...

பல லட்சணக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களுக்கு ஒரு புது வாழ்வையும், புத்தாக்கத்தையும் தரும் சமூகநீதிப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல் ஆகும்!

கலைஞர் உருவாக்கிக் கொடுத்த சொல்லாக்கமே மாற்றுத் திறனாளிகள்!

ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக சென்ற முறை இருந்தபோது, ஒரு புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்தார்கள்; முதன்முதலில் அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் தருவதற்கு ஏற்பாடு செய்து நடை முறைப்படுத்தினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளைக் காக்க நடத்திய போராட்டத் தின்போது, காவல்துறையினர் அவர்களிடம் சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்; உயர்நீதிமன்ற நெருக்குதல் காரணமாகவே பிறகு அவர்களது உரிமைக் குரலுக்குச் சற்று பயன் ஏற்பட்டது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இந்திய நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சட்டபூர்வமான உரிமையாகவே - சலுகையாக அல்ல - வேலை வாய்ப்பை இனி மத்திய - மாநில அரசுகளிடம் பெற்று சுயமரியாதை யோடு வாழ வழி ஏற்படும்.

வெளிநாடுகள் காட்டும் மனிதாபிமானம்

வெளிநாடுகளில் குறிப்பாக, மாற்றுத் திறனாளி களுக்கு எதிலும் முன்னுரிமை, சலுகை, வாகனங்கள் நிறுத்தப்படும் இடம் தொடங்கி, அலுவலகம், கல்வி நிலையங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும்.

இப்போது நம் நாட்டிலும் அந்த நிலை செயல்படத் தொடங்கியுள்ளது, மகிழ்ச்சிக்குரியது.

உச்சநீதிமன்ற ஆணையில், ஒரு செய்தியை தெளிவு படுத்தியுள்ளார்கள் நீதியரசர்கள்; அது மிகவும் பாராட்டத் தக்கது!

50 விழுக்காடுப் பிரச்சினை - உண்மை நிலை என்ன?

50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற விதியைக் காரணம் காட்டி, இந்த மூன்று விழுக்காடு மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் எந்த அரசும் விடக்கூடாது என்று கூறி இந்த 3 விழுக்காடு காரணமாக இட ஒதுக்கீடு வரையறை 50-க்கு மேலாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்!

1. 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவிலும் கூறப்படவே இல்லை.

பாலாஜி ஏள (கர்நாடகா) மாநிலம் என்ற வழக்கில் போகிற போக்கில் கூறப்பட்ட கருத்தை ஏதோ மிகப்பெரிய ஆணைபோல ஆதிக்க சக்திகள் காட்டி விட்டன.

2. இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் குழுவின் வழக்கில் (9 நீதிபதிகள் கொண்ட அமர்வு) 50 சத விகிதத்திற்குமேல் விலக்காக இருக்கலாம் என்றும், விளக்கம் தரப்பட்டது இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித சட்டம், அத் தீர்ப்புக்கு முன்னதாகவே செயல்படுத்தப்பட்ட ஒன்று. சட்டம், அது சட்ட வலிமையைப் பெற்று, 9 ஆவது அட்ட வணைப் பாதுகாப்பினைப் பெற்றுள்ளது என்பதும் முக்கியம்.

இதனை ஒழிக்க இங்குள்ள உயர்ஜாதி பார்ப்பனீயம் எத்தனையோ முயற்சிகளை இன்னும் செய்து வந்த வண்ணமே உள்ளது! ஆனால், இது செயலில் 33 ஆண்டு களாக இருக்கும் நிலையில், இனி எந்த அரசும் இதில் கை வைக்க முடியாது; கை வைத்தால் குளவிக் கூட்டி னைக் கலைக்க கை வைத்தவர் கதையாகிவிடும்.

பெரியார் சொன்ன கடவுளை மற; மனிதனை நினை!

எனவே, 50 விழுக்காடு பற்றிக் கவலைப்படாமல், இந்த 3 விழுக்காடு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு (கூடுதலாகவே) வழங்க உச்சநீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது என்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதிக் கொடி அங்கேயும் இப்போதுதான் உயர்ந்து பறக்கத் தொடங்குகிறது என்று உலகம் தெரிந்து கொள்கிறது!

நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி, கடவுளர்கள் அவர்களை அப்படிப் படைத்தனர் என்பதாகும். இத் தகைய நீதியரசர்களோ (மனிதர்கள்) அவர்களை வாழ வைக்கின்றனர்!

தந்தை பெரியார் கூறிய கடவுளை மற; மனிதனை நினை! எப்படி செயல் வடிவம் பெறுகிறது பார்த்தீர்களா?

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
9.10.2013

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....


1987 இல் இதே நாளில்தான் புதுக்கோட் டையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஒரு மாநில அரசே இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின்படி சட்ட மியற்றலாம் என்ற கருத் துருவைத் தீர்மானமாக வடித்துக் கொடுக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் 69 சத விகிதம் நிலைபெற்றதற்கு இந்த அடிப்படையில் செயல்படுத்துவதுதான் காரணம்!

தமிழ் ஓவியா said...


கருங்காலிகள் கூட்டம்

கடந்த 28.9.2013 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல மாணவர் அணி மாநாட்டுக்கு செல்லும் வழியில் சில காவி காலிகளும், ஜாதி சங்கத் தினரும் சேர்ந்து, கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களை தாக்க முயன்றனர். கழகத் தோழர் களைத் தாக்கினர் மற்றும் தமிழர் தலைவரின் வாகனத்தை சேதப் படுத்தினர் என்பது, தமிழ் சமுதா யமும், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும். 80 ஆண்டு வாழ்வு முற்றுப் பெற்று 81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள 73 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தமான தமிழகத்தின் மூத்த தலைவரை, ஒரு காவிக் கும்பல் தாக்கியதும், அதைக் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும், அநாகரி கமான செயல்.

வீரமணி என்பவர் தனிப் பட்ட மனிதரல்ல. அவர் நம் இனத்தின் முகவரி, சமூகநீதியின் தலைமகன், ஒட்டுமொத்தத் தமி ழர்களின் உரிமைக் காவலர். சிறு வயதில் யாரும் ஏற்றுக் கொள்ளத் துணியாத கொள்கையினை ஏற்று, கல்லூரிப் பருவத்தில் தங்கப்பதக்கம் பெற்று, இளம் பருவத்தில் நாடெங்கும் பகுத்தறிவுக் கொள்கையினைப் பரப்பியவர். 1980-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ரூ. 9000/- வருமான வரம்பு) என்ற அரசு ஆணையை எதிர்த்து, களம் கண்டு 31 சதவிகிதமாக பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர்; காவிரி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என, 1982 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து பிரச்சாரம் செய்து, போராடி வந்த தலைவர்; 1983 ஆம் ஆண்டு இலங் கையில் இன அழிப்பு போர் நடை பெற்ற நிலையில் சரியான அமைப்பை, சரியான தலைவரை அடையாளம் கண்டு தமிழர்களுக்கு அறிவித்த தலைவரை, பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை பற்றி அறிய அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் தலைவர் மண்டல் அவர்கள், பரிந்துரையை நான் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டேன். அதனை செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் திடலே, சமூகநீதிக்குச் சொந்தமான பெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் வீர மணியே என தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய மண்டல் அவர்களின் வாக் கிற்கு ஏற்ப நாடெங்கும் 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தியவர். மண்டல் குழுவை நடைமுறைப் படுத்திய முன்னாள் பிரதமர் மாண்பு மிகு வி.பி.சிங் அவர்கள் சமூகநீதி பாடத்தை எனக்கு கற்று தந்த தலைவர் வீரமணியே! என சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பிரகடனப்படுத்தப் பட்ட தலைவரை, அனைத்து சாதி யினரும், அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வரும் தலைவரை, இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இட்டபோது அதற்கு எதிராக 31சி என்ற சட்டத்தை கண்டெடுத்து அதனை அரசியல் அமைப்பு சட்டத் தின் 9 ஆவது அட்டவணையில் வைத்துவிட்டால் இடஒதுக்கீட்டிற்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைத்து விடும் என தமிழக அர சிற்கே சட்டத்தை எடுத்துக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் (சங்கர் தயாள் சர்மா), பிரதமர் (பி.வி.நரசிம் மராவ்), முதலமைச்சர் (ஜெ.ஜெய லலிதா) என்ற மூன்று பார்ப்பனர் களைக் கொண்டே நிறைவேற்றச் செய்து இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த தலை வரை, வடநாட்டு தலைவர்களான சந்திரஜித், பி.பி.மவுரியா, ராம்விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, கன்சிராம், லாலு பிரசாத், முலாயம்சிங், மாயா வதி போன்ற தலைவர்களின் அன்பை யும், அமெரிக்கா, கனடா, சிங்கப் பூர், மலேசியா, இலங்கை, மியான்மா, லண்டன், குவைத் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது உயிராகப் போற்றும் தலைவரை, உலக நாத்திகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவரை, இருதய மாற்று அறுவை சிகிச்சை மூன்று முறை செய்து இருந்த நிலையிலும், ஓய்வு எடுக்க வேண்டிய நிலையிலும், தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராமல் இடைய றாது உழைத்துவரும் தலைவரை, நான் தற்போது வாழ்வது போனஸ் வாழ்க்கையே என்று அறிவித்து ஓய்வில்லாது உழைக் கும் தலைவரின் உயிருக்கு குறி என்பது நமது இன எதிரிகளுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், துணைபோன கருங் காலி தமிழினத் துரோகிகளுக்கும், சமூக நீதியை, உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கு இவரைவிட்டால் பட்டம், பதவி, ஓய்வு, சலிப்பு இல் லாது உழைக்கக்கூடிய இன் னொரு தலைவர் யார் என்பதை இரவில் உறங்கப் போகும் போது, ஒரு கணம் சிந்தித்துப் பார், நாதியற்ற தமிழினமே!

- இரா.நீலகண்டன், திராவிடர் கழகம், பேராவூரணி

தமிழ் ஓவியா said...


ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல்: தலைவர்களுக்கு கலைஞர் கடிதம்


சென்னை, அக். 9- தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர் தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிடுங்கள்! என தி.மு.க. தலைவர் கலைஞர், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சி களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4.12.2013 அன்று நடை பெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேர வைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத் துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொ டர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக் கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து நல்கிடும் உறுதியான ஆதர வோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமான தென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திட வும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திட வும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாள ருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,

(ஒப்பம்)
( மு. கருணாநிதி )

இந்தக் கடிதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், தமிழகச் சட்டப்பேரவை யின் எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க.வின் நிறுவனருமான விஜயகாந்த், பா.ஜ.க. வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண் டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார், பெருந் தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர். தனபாலன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது , சிறுபான்மையினச் சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கா.லியாகத் அலிகான், எஸ்.டி.பி.அய்., கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் எல்.சந்தானம், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக் குழுவின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மா வாசி ஆகியோர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அறிவுலக ஆசானுக்கு அமீரகத் தமிழர்கள் எடுத்த விழா

துபை, அக். 9- அமீரகத் தமி ழர்கள் அமைப்பின் (அஜ்மான்) சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 03.10.2013 மாலை 7.00 மணியளவில் அஜ்மான் சிவ்ஸ் டார் பவனில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந் தினர்களாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநிலத் துணை கொள்கை பரப்புச்செயலாளர் திரு. சங்கத்தமிழன், உம்-அல் குவைன் நேஷனல் ஏஜென்சி பொது மேளாளர் திரு. லிங்கண் ணன் ஆகியோர் கலந்துகொண் டனர்.

அமீரகத் தமிழர்கள் அமைப் பின் நிறுவனத் தலைவர் திரு. ஏ.எஸ்.மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வளைகுடா நாடுகளில் தமிழர் களுக்கென ஒரு வாரியம் அமைக்க திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் முயற்சி எடுத்திருப் பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செயல் என்றும், வெளிநாடு களில் வாழும் தமிழர்கள் சமத் துவத்தோடு வாழ வழிவகுத் துள்ள தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை அமீரகத் தமிழர்களோடு கொண்டா டுவது பெருமிதத்தை அளிக் கிறது என்றும் அவர் தனது வரவேற்புரையில் கூறினார்.

மேலும், அமீரகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக திராவிடர் கழகத் துடன் அஜ்மான் தமிழர்கள் அமைப்பு திகழ்கிறது என்றும் கூறினார். இதுபோன்ற சமூக ஆர்வமுள்ள நிகழ்ச்சிகளை நடத்த இடமும், அனைவருக் கும் விருந்தும் வழங்கும் புரவ லர் சிவ்ஸ்டார் பவனின் நிறு வனர் திரு. எல்.கோவிந்தராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண் டார்.

இந்த நிகழ்ச்சியோடு அமைப் பின் பொருளாளர் திரு. அப் துல் லத்தீப் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழாவும் இணைந்து நடப்பதில் பெருமிதம் கொள் வதாக தெரிவித்தார். தொடர்ந்து திரு. லிங்கண்ணன், திரு. மதியழ கன், திரு. சங்கத்தமிழன் ஆகி யோர் உரை நிகழ்த்தினர்.

இவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் தமது சிறப்புரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், தந்தை பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா தமிழகம், புதுச்சேரி, புதுதில்லி, கொல் கத்தா, மும்பை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களிலும், சிங் கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா (கானா), துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுக ளிலும் சிறப்பாக நடைபெறு வது குறித்து மகிழ்ச்சி தெரி வித்தார்.

பெரியார் மற்றும் அவரது தத்துவங்கள் உலகமயமாக்கப் படுவது பற்றியும் அதற்காக தமிழர் தலைவர் மேற்கொண் டிருக்கும் முயற்சிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் அவர்களின் 75ஆம் பிறந்தநாளை அஜ்மான் தமிழர்கள் அமைப்பு அமீரகத் திலுள்ள பெரியார் தொண்டர் களுடன் இணைந்து கொண் டாடியதை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் அவர் களின் பல்வேறு கருத்துகளை விளக்கியும் குறிப்பாக இல்ல றம், துறவறம் தவிர்த்து தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்திய தொண்டறத்தின் தேவை பற்றியும் விரிவாக கூறினார். பள்ளி மாணவர்களிடையே பெரியார் பற்றி அறிந்து கொள் ளும் வகையில் தமிழகம் முழு வதும் சிறப்பாக நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டியின் பயன் பற்றி கூறி யதுடன், வெளிநாடுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத் தார்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ் வாக அமீரகத் தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு அவரின் சமூக சேவையைப் பாராட்டி மனிதநேய பண் பாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றார். அஜ் மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பை நிறுவி வெற்றிகர மாக நடத்திட பல்லாண்டு களாக உழைத்த திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு பிரிவு உப சரிப்பு விழா இனிதே நடை பெற்றது.

இவ்விழாவில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலை வர் திரு. சிவ்ஸ்டார் எல்.கோவிந் தராஜன், அஜ்மான் தமிழர்கள் அமைப்பின் துணைத் தலைவ ரும் ஆர்யா கிரைன்டிங் பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர். மதி யழகன், அமைப்பின் செயலா ளரும் சஃபையர் ரெஸ்டா ரண்ட்டின் உரிமையாளருமான திரு. இரா.சாமிநாதன், எமி ரேட்ஸ் ஏர்லைன்ஸ் திரு. சதீஷ்ராஜ், துபாய் மினரல் வாட்டர் திரு. செல்வதுரை, குலாம் முஸ்லீம் அமைப்பின் திரு.ஜான், ஓவியர்கள் ரவிச்சந் திரன், குமார் உள்ளிட்ட ஏராள மான அமீரகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிவ்ஸ்டார் பவன் நிறுவனத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பெரியார் கல்வி நிறுவன முன்னாள் மாணவி செல்வி. நிவேதிதா ஆனந்த் இந்நிகழ்ச் சியை இனிதே தொகுத்து வழங்கினார்.