Search This Blog

16.10.13

முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் - பெரியார்



சகோதரர்களே!

இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன்.

ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறை கள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன்.

அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா?

நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்” என்று சொல்லப் படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு விடமாட்டார்கள். அது மாத்திர மல்லாமல் அவர்கள் பக்கத்தில் நீங்கள் இருக்கவும் சம்மதிக்க மாட்டார்கள். உங்களைத் தொட்டுவிட்டால் மறுபடியும் குளிக்காமல் அங்கு போக மாட்டார்கள். அவ்வளவு தூரம் போவானேன்; என்னையே கூப்பிட மாட் டார்கள். மற்றும் எந்த நாயன்மாருக்கும், எந்த ஆழ்வாருக்கும் குரு பூசை யும், திருநக்ஷத்திரமும் நடத்துகின்றார்களோ அவர்கள் ஜாதி யாரையே கூப்பிடவோ, பக்கத்தில் வைத்து சாப்பிடவோ, தொடவோ சம்மதிக்க மாட்டார்கள்.

ஏனெனில், அந்தப்படி தொடாமலும், பக்கத்தில் வைத்துச் சாப் பிடாமலும் இருந்து கொண்டு, மற்றவர்களை வெறுப்பாகவும், இழிவாகவும் கருதுவதுமேதான் அவர்களது மதம் (இந்துமதம்) என்று கருதிக் கொண்டி ருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அநேகமாய் என்னை மதத் துரோகி என்று அழைப்பதாக நான் அறிந்து வருகின்றேன்.

பொதுவாகவே உலகத்தில் அநேகமான மக்களுக்கு “மதம்” பிரதானமென்று கற்பிக்கப்பட்டிருக்கின்றதே தவிர மதம் என்றால் என்ன? அது எதற்கு? என்கின்ற அறிவே மதபக்தர்கள்-மதத்திற்காக பிராணனைக் கொடுக்க இருக்கின்றவர்கள் என்பவர்களிலுங்கூட ஆயிரத்தில் ஒருவருக் கும் தெரியாதென்றே நான் தைரியமாய்ச் சொல்லுவேன். என்னைப் பற்றியே மதஞானமில்லாத மக்கள் பலவிதமாகப் பேசுவதையும், எழுது வதையும் நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் வரு கின்றேன்.

அதாவது பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அவற்றில் காணப்படும் ஏதாவது விஷயங்களைப்பற்றியும் பேசும்போது “மதமே தப்பானது, மதமே கூடாது என்று சொல்லுகின்ற சுயமரியாதைக்காரன் எப்படி இந்த மதங்களைப் பற்றி மாத்திரம் பேசலாம்?” என்பதாகச் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்களை ஒருவித தெளிவற்றவர்களும், ஆத்திரத்தால் அறிவிழந்தவர்களும் என்று சொல்லு வதைவிட வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை.

மதத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்த காலத்திலேயே நான் நன்றாய் விளக்கிவிட்டே பேசுகின்றேனேயொழிய பேசிவிட்ட பிறகு தத்துவார்த்தம் சொல்ல வருவதில்லை.

அதாவது ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப் பிற்கு ஒரு வழிகாட்டியானக் கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேசவர்த்தமானப் படி மக்கள் சௌகரியத்திற்காக திருத்தியமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது’ என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின்மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகாறாரே கிடையாது.

அப்படிப்பட்ட மதம் என்பது வேண்டியதேதான். அதாவது ஒரு பொதுசங்கமோ, ஒரு வாசகசாலையோ, ஒரு வியாபாரச் சங்கமோ, ஒரு வக்கீல் சங்கமோ, ஒரு விளையாட்டுச் சங்கமோ, ஒரு சீட்டாட்ட சபையோ என்பதாக ஒரு ஸ்தாபனமிருந்தால் அந்த ஸ்தாபனத்திற்குச் சில விதிகள் இருக்க வேண்டியது அவசியமேயாகும். அந்த விதி அந்த ஸ்தாபன மக்கள் நன்மைக்கும், ஸ்தாபனம் சரிவர நடந்தேறுவதற்கும் அனுகூலமானதாகவும், அந்த ஸ்தாபனக்காரர்களால் ஏற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர், கொள்கை என்றாலும், திட்டம் என்றாலும், மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான்.

நமது நாட்டில் பல பாஷைகள் வந்து கலந்து விட்டதால் கொள்கை களுக்கு மதமென்றும், சமயமென்றும், மார்க்கம் என்றும் சொல்லப்படு கின்றது என்பதாகப் பண்டிதர்கள் சொல்லுகின்றார்கள். ஆதலால் அந்த அளவில் நான் எந்த மதத்துடனும் தகறாருக்கு வரக்கூடியவனல்ல. இதில் ஒன்றும் ஒளிமறைவோ, தத்துவார்த்தமோ இல்லை. வெளிப்படையாகவே சொல்லுகின்றேன்.

ஆனால் ‘மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது - கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது-அதை உண்டாக் கினது கடவுள், அல்லது கடவுள் அவதாரம், அல்லது கடவுள் தன்மை, அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்குமேற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மை -அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் மனிதனால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள் சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பித்தானாக வேண்டும்- தனக்கு விளங்காததை யெல்லாம் நம்பித்தானாக வேண்டும்-அதில் ஒரு விஷயத்தைக் கூட நழுவவிடக்கூடாது-மாற்றவும் கூடாது-புதிய மாதிரி சௌகரியத்திற்குத் தகுந்தபடி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது’ என்பது போன்ற ‘நீதியையும், நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம்’ என்று சொல்லப்படுமெதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக்கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திரத்திற்கும், முற்போக்கிற்கும், சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவ தோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகின்றேன். அன்றியும் நான் எந்த மதம் என்பதைப் பற்றிப் பேசும் போதும் இந்த விஷயங்களுக்கு மாறாக நான் எப்போதும் பேசினதே கிடையாது. நான் பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பேசும் போதெல்லாம் இந்த முடிவின் பேரிலேயே பேசுகின்றேன். இந்த உண்மைப் படியுள்ள தாரதம்மியங்களைப் பற்றிதான் ஒரு மதத்திற்கும் மற்ற மதத்திற் கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றியும் பேசுகின்றேன். இந்த உண்மையின் பேரில்தான் எந்தமதத் தலைவர்களைப் பற்றியும் நான் பேசுகின்றேன்.

திரு.முகமது நபியவர்களையும் மற்றபடி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும் மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் (ஆணும் பெண்ணும்) கூடிக் கருத்தரித்து பிறந்த பிள்ளையென்றும் கருதிதான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அநேகத்தை நான் புகழ்கின்றேன். அதற்காகவே அவரை யும் பாராட்டுகிறேன். அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த மார்க்கத் திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கின்றேன். பௌத்தரும் அப்படித்தான். ஆனால் மற்ற மதக்காரர்களோ தங்கள் மதத்தலைவரை ஒரு மனிதர் என்று சொன் னாலே கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.

கழுதையினுடையவோ, குதிரையினுடையவோ, நாயினுடையவோ வயிற்றிலிருந்து தோன்றினார் என்றாலும் ஒப்புக்கொள்வார்கள். மனிதனுக் கும் மனுஷிக்கும் (கலந்து) பிறந்தது என்றால் அதில் கௌரவமில்லை என்றே கருதுவார்கள். மனிதத்தன்மைக்கும் மனிதன் அறிவிற்கும் மேற் பட்டதாக மக்களுக்குப் புரியாத ஏதாவது ஒன்றைச் சொல்லாமல் ஒரு மதத்தை நிர்ணயிக்க அநேக மக்கள் சம்மதிப்பதேயில்லை.

இஸ்லாம் இந்து வித்தியாசம்

நிற்க, நான் இந்து மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப்பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீக்ஷை மாணவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் பேசுவது என்பது இரண்டு மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை யான மக்களிடை இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமானக் காரியங்களையும் அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்து வரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகின்றேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக் கொள்ளும் வேஷமே தான் மதம் என்றாலும் அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள்? அதனால் அந்த சமூகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங்களில் இந்து மதத்தைவிட (கொள்கைகளைவிட) இஸ்லாம் மதமே (கொள்கைகளே) மேன்மையான தென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இஸ்லாமானவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாத மேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும். அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் இலக்ஷியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு - தாழ்வு இல்லை அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக்கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப் பூஜை நைவேத்தியம் உற்சவம் நகை துணிமணி முதலியவற்றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை. மற்றும் அவர்களது பெண்களுக்கு சொத்துரிமை கல்யாண ரத்து விதவைமணம் ஆகியவை களும் உண்டு. அவர்களுக்குள் அன்பையும், வீரத்தையும் பார்த்து நாம் அவர்களை முறடர்கள் என்கின்றோம். அதுபோலவே இந்துக்களுக்குள் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தையும் பயங்காளித்தனத்தையும் நாம் பார்த்து அவற்றை நாம் சாதுத்தன்மை என்று சொல்லிக்கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில் ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லா மானவர்கள் வந்து விழுந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாம் முறட்டுத் தனம் என்கின்றோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால் மற்ற இந்துக்கள் “அவன் யாரோ அடிபடுகிறான், நமக்கென்ன கவலை” யென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப் பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான் சாதுத்தனம் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறோம். அன்பும் சகோதரத்தன்மையும் இந்துவிடம் எங்கிருக் கின்றது? “ஆடு கோழி தின்னாதே” என்று சொல்லுவதில் மாத்திரம் இருக் கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப் பது கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்ப வன்தான் “அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!!” என்று பேசுகிறான். அன்பின் உண்மையை அறியவே இல்லை. இஸ்லாம் கொள்கையில் வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமூக வாழ்விலும், ‘ஆண்டவன்’ முன்னிலை என்பதி லும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் ‘கடவுள்’ முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட, மலத்தை வாயில் கௌவிக்கொண்டு சொல்லும் மிருகத்தை விடக் கேவல மாய் மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியக்ஷத்தில் காண்கின்றோம். இதைத் தான் அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை-வேதம் என்பதை இஸ்லாம் மார்க்கம் செருப்புத் தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும் என்று சொல்லி கற்றுக் கொடுப் பதையும் பார்க்கின்றோம். இந்துமார்க்க வேதம் என்பதை ஒரே ஒரு சிறுகூட்டம் தவிர (பார்ப்பனன் தவிர) மற்றயாவரும் அவன் பிரபுவானாலும் சரி ஏழையானாலும் சரி யோக்கியனானாலும் சரிஅயோக்கியனானாலும் சரி ஒருவனுமே பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் கூடாது என்று இன்னும் நிர்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான் சமத்துவ நோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள். ‘மொண்டி முடம், கூன் குருடு ஆகியவர்களுக்கே உதவி செய்’ என்று இஸ்லாம் மதம் பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது. ‘சோம்பேரிகளுக்கே - ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவர்க்கே உதவி செய்’என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லீம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து இருக்கின்றார்கள். இன்றும் யாவரையும் எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ள கையைநீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்ட வனையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில் காவல்காக்கின்றது. தன்ன வனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப் பற்றி வாய்த் தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை முஸ்லீம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கி யிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை அடித்துக் கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக்கடையில் நின்று மறியல் செய்யும் இந்து கொள்கையானது இந்துக்களில் 100க்கு 51 பேர்களுக்கு மேல் குடிகாரர்களாகச் செய்திருப்பதோடு இந்து கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில்களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படு கின்றன. இந்து கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாகியுள்ள நாட்டை ‘அன்னியர்கள்’ஆளுகின்றார்கள்.

இந்தப்படியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கைகளாலேயே இந்துக் கொள்கைகளை விட இஸ்லாம் கொள்கைகள் எவ்வளவோ மேன்மையான பலன் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் படி நான் சொல்லுவதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பிறகு பேசுங்கள். பிறகு ‘கொள்கைக்காக உயிரை விடுங்கள்’.

ஏன் சொல்லுகிறேன்

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண் டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர் களையும், கிறிஸ்துவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவுபடுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லாமானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே, அவனெ நோக்குன்னு” என்று கேட்டான். அதாவது “என் னடா? பன்றி தேவடியா மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள்.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் எம்மீது கோபித்துக் கொண்டு பாமர மக்களைத் தூண்டி விட்டு வையும்படியும் ‘சாபம்’ கொடுக்கும்படியும் செய்தார்கள். இதன் பயனாகவே இந்தத் தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர் தேர்தலுக்குக்கூட ஓட்டு கிடைக்காது. அது எப்படியோ போகட்டும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ்வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்கிவரத் தயாராயிருக்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்திற்கு அடிமைப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். மனித சமூகம் அடையவேண்டிய சீர்திருத்தம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றது என்பது உறுதி.

மனிதன் காலதேசவர்த்தமானத்திற்கு கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்ப தைக் கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக்கூடியதே யாகும். கால்நடை வழி, ஆடு, கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டை வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமானவழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்கு தகுந்ததுபோல் வழி திருத்தப் படவேண்டும். அதுபோலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம்கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.

உதாரணமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், துருக்கி இஸ்லாம் சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் சமூக நடவடிக்கையும், இந்தியா இஸ்லாம் சமூக நடவடிக்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே ஈரோட்டுக்கும், தஞ்சைக்கும், சாத்தான் குளத்திற்குமே அனேக வித்தியாசம் காணப்படுகின்றது. இவைகள் மூன்றும் ஒன்றுபடும்போது யாராவது இருவரோ அல்லது மூன்றுபேரும் ஆளுக்குக் கொஞ்சமோ தங்கள் பழக்க வழக்கங்களை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நான் சொல்லும் மாற்றமெல்லாம் முக்கியமாய் நடை உடை பாவனையைப் பொருத்ததேயாகும். மனமாற்றத் தைப் பற்றி இப்போது சொல்ல வரவில்லை. அவை அவரவர்கள் சொந்த சொத்து. மற்றவர்களுக்குத் துன்பமோ தொல்லையோ இல்லாத வழியில் எவ்வித அபிப்பிராயத்தையும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. அறிவு பெருக்கமும் அதனால் மனமாறுதலும் சுபாவமேயாகும்.

ஆகவே சகோதரர்களே! நான் சொன்னவை எனது சொந்த அபிப் பிராயம். என் சொந்த அனுபவ வாயிலாகக் கண்டது என்பவைகள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால் இதையே முழு உண்மையென்று கருதி விடாமல் உங்கள் அறிவு அநுபவம் ஆகியவைகளைக் கொண்டு முடிவுபெற்று உங்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

----------------------28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தந்தைபெரியார் தலைமையேற்று ஆற்றிய உரை.குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931

32 comments:

R.Puratchimani said...

சில குறைகள் இருப்பினும் நல்ல கட்டுரை.

மதமாற்றம் தீண்டாமையை ஒழிக்கும் என்று பெரியார் நம்பியுள்ளார். ஆனால் அவர் நம்பிக்கை வீண் போய்விட்டது, போய்விடும்.
சாதி தீண்டாமை ஒழிந்தாலும் இசுலாமினாலும் மத தீண்டாமை உருவாகும் என்பதை பெரியார் உணரவில்லை.
இன்று பெரியார் இருந்தால் இசுலாமியர்களையும் சாடுவார்என்று நினைக்கின்றேன் .
பகிர்வுக்கு மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்



பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
(விடுதலை, 30.12.1972)

தமிழ் ஓவியா said...


அம்புலி மாமா!


அம்புலி மாமா என்ற பத்திரிகை சிறுவர்கள் இதழ் என்பது எல்லோருக்கும் தெரி யும். சிறுவர்களுக்கு அந்த இதழ் எப்படிப்பட்டவற்றைச் சொல்லிக் கொடுக்கிறது என்பதுதான் முக்கியம்.

சிறு வயது பிள்ளை களின் நெஞ்சில் உண்மை விதைகளைத் தூவவேண் டாமா?

நல்லனவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திற்குத் தண் ணீர் ஊற்றவேண்டாமா?

இம்மாத இதழில் காவிரி பிறந்தது என்பது முதல் படைப்பு.

காவிரி எப்படிப் பிறந்த தாம்? சூரபதுமன் என்றொரு ராட்சசன் இருந்தான் (பார்ப் பனர்கள் எதற்கெடுத்தாலும், ராட்சசன், அரக்கன், அசுரன் என்பவற்றைச் சொல்லாமல் இருக்கவேமாட்டார்கள் - இவ்வாறு குறிக்கப்படுகிறார் கள் திராவிடர்கள் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு) அவன் ஆட்சி ஈரெழு உலகெங்கும் நடந்து வந்ததாம். தேவேந்திரன்கூட அவனுக்குப் பயந்து ஓடி பூலோகத்தில் மூங்கிலாக வளர்ந்து விட்டானாம்.

கோடையில் எல்லா மரங்களும் பட்டுவிட்டனவாம் - ஆனால், இந்த மூங்கில் மட்டும் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்ததாம். தேவேந் திரனாகிய அந்த மூங்கி லுக்குப் பயம் வந்து பிடித்து விட்டதாம்.

இதனைப்பார்த்தால் சூரபதுமன் வெட்டச் சொல்லி விடுவானோ என்ற பயம் தான்! மற்ற மரங்களையும் பசுமையாகக் கொழிக்கச் செய்துவிட்டால்... தன்னைக் கண்டுகொள்ள மாட்டான் அல்லவா! உடனே என்ன செய்தான்? விநாயகனைத் தொழுதானாம்.

விநாயகனும் தோன்றினானாம்; அவனிடம் தனது நிலையை தேவேந்தி ரனாகிய அந்த மூங்கில் மரம் கூறிற்றாம்.

எல்லா மரங்களையும் பசுமையாக இருக்கச் செய் யத் தண்ணீர் வேண்டுமே என்று யோசித்தாராம் விநா யகர். பொதியமலையில் உள்ள அகத்தியர் நினை வுக்கு வந்தாராம். அகத்திய ரின் கமண்டலத்தில் தண் ணீர் இருக்கிறதல்லவா? அந்தக் கமண்டலத்தை நான் கவிழ்த்துவிட்டால் தண்ணீர் ஆறாக ஓடும் - இம்மரங்கள் எல்லாம் தழைத்து விடும் என்றாராம் விநாயகக் கடவுள்.

அகத்தியர் தியானத்தில் இருக்கும்போது விநாயகன் காக்கை உருவத்தில் பறந்து சென்று அந்தக் கமண்டலத் தைக் கவிழ்த்து விட்டாராம்.

கமண்டலத்தில் இருந்த தண்ணீர் நதியாக ஓடிற்றாம் - அதுதான் காவிரியாம்.

கொஞ்சம்கூட ஈவு இரக் கமின்றி, அறிவு நாணய மின்றி பச்சைப் பிள்ளை களின் சிறுவர்களின் நெஞ் சில் இந்த மூடத்தனமான நச்சு விதைகளைத் தூவு கிறார்களே - இது மன்னிக் கத் தகுந்ததுதானா?

இப்படியெல்லாம் கற்பித் தால் ஒரு கலிலியோவோ நியூட்டனோ தோன்ற முடி யுமா?

விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மனதில் தூண்ட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் ஒரு பக் கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் சிறுவர்களின் புத்தியை நாசப்படுத்தி வரு கிறது இன்னொரு கூட்டம்.

இந்த நேரத்தில்தான் ஒன்றை நினைக்கவேண்டும் - பெரியார் திடலிலிருந்து குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாத இதழ் எத்தகைய சமூகப் பொறுப் போடு வெளிவந்து கொண் டிருக்கிறது.

பார்ப்பான் எதைச் செய் தாலும், அது பாழாகத்தானி ருக்கிறது.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இன்று உறவினர் ஏற்றதை... நாளை உலகமே ஏற்கும்!...



அய்யா ஆசிரியர் அவர்கட்கு வணக்கம். 30.9.2013 விடுதலை இதழில் தாங்கள் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டினை யொட்டிய கருத்தரங்கில் ஆற்றிய நிறைவுரையையும், கைமேல் பலன் என்று தலைப்பிட்டு வந்த பெட்டிச் செய்தியினையும் இல்லத்தில் எல்லோரும் படித்தோம்!.

படித்து முடித்ததும், எனது இணை யர் அந்த இதழினை பழைமையில் ஊறித் திளைத்த, எங்கள் தெரு விலேயே வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவரிடம் தந்து, தயவு செய்து இதனைப் படித்துப்பாருங்கள் என அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்!.

இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலை இதழோடும், தனது இளைய மகளோடும் எங்கள் இல்லத் திற்கு வந்தார்.

அம்மா எங்களிடம் கொடுத்து வந்த விடுதலையை நான் படித்து விட்டு, வீட்டிலுள்ளோரையும் படிக்கச் சொன்னேன். மறுப்பு சொல்லாமல் அனைவரும் படித்தார்கள். காரணம் அண்மையில் ஒரு சோதிடரை நம்பி, ஏமாந்து, பணத்தை இழந்ததுதான். எங்களுக்கு இரண்டும் பெண் குழந்தை கள்; அதனால் மற்றவர்கள் மூட்டிய அச்சத்தினால் தான் நாங்கள் பூசாரியை, சோதிடரை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது கைமேல் பலன் என்ற செய்தியைப் படித்த பிறகு தான், எங்களது அறியாமை எங்களுக்குப் புரிகிறது. என் இளையமகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். கையிலே நிறைய மந்திரித்த கயிறு கட்டியிருப்பாள். இப் போது அதையெல்லாம் அறுத்தெறிந்து விட்டாள். நான் பணம் தருகிறேன் எனக்கும் விடுதலை கிடைக்க வழி செய்யுங்கள் என்றார். எனக்கு அளவிலா மகிழ்ச்சி, ஆம்! ஒரு பெட்டி செய்திக்கே இத்தகைய ஆற்றல் இருக்கிறதென்றால் இவர்கள் தொடர்ந்து விடுதலை இதழைப் படித்து சிந்திக்க ஆரம்பித்தால்?

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு இறை நம்பிக்கை தேவையில்லை என்ற அய்யாவின் கருத்துகளை அவர் களுக்கு விளக்கிவிட்டு... அய்யாவின் நூல்கள் சிலவற்றை அவரிடம் தந்து அனுப்பி வைத்தேன். இனி அவர்கள் தெளிவு பெறுவதோடு தங்களைச் சார்ந் தோரையும் பகுத்தறிவாளர்களாக மாற்று வார்கள் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

ஆனால் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஒருவர் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கி யதிலிருந்து தமிழகம் சிறப்பாக உள்ளது என மிகப் பரவசத்தோடு பேசி இருக் கிறார். இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் பாராட்டுரை வழங்கி இருக்கிறார்! ஆனால்

அதே நாளில் தமிழ்நாட்டில் நடந்த கொலைகள் அய்ந்து, கொள்ளை, திருட்டு, தற்கொலை, பாலியல் வன்கொடுமை களால் செய்தி ஏடு நிரம்பி இருந்தது! வீதியில் நடமாடவே மக்கள் அஞ்சி அஞ் சிச் சாகும் நிலை! இதுதான் தமிழ்நாடு சிறப்பாக உள்ளதற்கான இலக்கணமா?
திராவிடர் கழகத்தினரைவிட தேவ நாதன் போன்ற குருக்கள் தான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை! என்பதை தெளிவாக மக்களிடத்திலே, கர்ப்பக்கிரகத் திலேயே காம லீலைகளை நடத்தி, மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!

தாங்கள் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல இதனை முறியடித்து, அய்யா வின் பகுத்தறிவு பூமியிலே, பார்ப்பனீ யத்திற்கு இனி வேலையில்லை என்பதை தெளிவாக்க, இன்று துறவிகளைவிட மேலான தொண்டறச் செம்மல்களான திரா விடர் கழகத் தோழர்களின் பரப் புரைகளே, பெருவெற்றியைக் குவிக்க இருக்கிறது. வீதிக்கொரு பஜனை மடம் அன்று செய்த வேலையை... வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி இன்று செய்து பார்ப்பனீயத்தைப் பாதுகாத்து வருகிறது!

சிறிய வெடிகுண்டு - பெரிய மலையைத் தகர்த்தெறிவதைப் போல.... அய்யாவின் கொள்கைகளை...

இன்று என் உறவினர் ஏற்றதைப் போல.. நாளை உலகமே எற்கும் என்பது உறுதி! ஆம்.
அய்யாவின் கொள்கைகள் என்றுமே தோற்காது!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கை படுத்தும் பாடு! பிணங்களை நதியில் தூக்கி எறிந்த கொடூரம்!

போபால் அக்.16- மத்தியபிரதேச மாநி லம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன் கட் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கர நெரிசல் காரணமாக சுமார் 115 பேர் மரணமடைந்தது அனை வரும் அறிந்ததே. ஆனால் சம்பவம் நடந்த பிறகு அதை மூடிமறைக்க காவ லர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல் நாட்டையே வேதனையில் ஆழ்த் தியுள்ளது, அங்கிருந்த பார்வையாளர்கள் கூறும் போது, நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடலை ஆற்றில் தூக்கி எறிந்தனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததை பார்த்ததாகவும், மேலும் காவலர்களும் அங்கிருந்த சிலரும் பிணங்களில் இருந்த நகைகள் மற்றும் பணங்களை எடுத்து தங்கள் பைகளில் போட்டுக்கொண்டு இருப்ப தையும் பார்த்ததாக கூறினர்.

ஆற்றில் தூக்கி எறிந்தனர்!

இந்தச் சம்பத்தை கண்ணால் பார்த்த ரகுவன்ஷி யாதவ் என்பவர் நவ்பாரத் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்த பயங்கர சம்பவம் நடந்த பிறகு பலர் அங்கும் இங்கும் ஒடிக்கொண்டு இருந்தனர்; எங்கும் மரண ஓலம் தான் எனது அன்னை மற்றும் எனது ஊர்க் காரர்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் நான் பிணக்குவியலில் அவர்களைத் தேடிக்கொண்டு இருந் தேன். கடுமையான காயங்களுடன் பலர் முணங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது சில காவலர்களும், வேறு சிலரும் குழந்தைகள் மற்றும் சிறுவர் களை ஆற்றில் தூக்கிப்போட்டுக் கொண்டு இருந்தனர். அதில் பலர் உயி ருடன் இருந்தனர். இந்தக் காட்சியை கண்டு பதைபதைத்து நான் 5 குழந்தை களை அந்த பிணக்குவியலின் மத்தியில் இருந்து மீட்டு வந்தேன். ரகுவன்ஷி மற்றும் அவரது ஊர்க்காரர் பிரஜாபதி இருவரும் சேர்ந்து உயிருடன் வீசப்பட்ட ஒரு குழந்தையை ஆற்றிலிருந்து காப்பாற்றியதாகவும் கூறினார்கள். இது குறித்து மத்தியபிரதேச டி.ஜி.பி. நந்தன் குமார் டுபே கூறிய தாவது:

இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை நான் மறுக்கவில்லை. இது நடந்த போது உள்ளூர் ஆட்கள் சிலர் தான் இப்படி செய்திருக் கலாம். எப்படியோ இது காவல்துறை மீது புகாராக வந்துவிட்டது. காவல் துறையில் யாராவது இந்த பாதகச் செயலை செய்திருந்தால், அது கடுமை யாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரத்தன்கட் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிந்தா நதியின் மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விட்டதாக யாரோ வதந்தி கிளப்பிவிட, பாலத்தின் மீது சென்றுகொண்டு இருந்த சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் (இதில் அதிக அளவு பெண்கள் மற்றும் குழந் தைகள் இருந்தனர்) முண்டியடித்துக் கொண்டு ஓட எத்தனித்தனர்.

இதனை அடுத்து பாதுகாப்பிற்கு நின்றுகொண்டு இருந்த காவல் துறையினர் தடியடி நடத்தத் துவங்கி யதால், நெரிசல் கட்டுக்கடங்காமல் போனது. பலர் நெரிசலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். ஆற்றில் தண்ணீர் குறைவாகச் சென்றதாலும், புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்காக தூண்கள் மற்றும் கட்டுமானப் பொருட் கள் தண்ணீருக்கடியில் இருந்ததால் பலர் தலை சிதறி கட்டுமான கம்பிகள் குத்தி இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை பெருந்தொகையில் உள்ளதென்றும், ஆனால் அரசும், காவல்துறையும் சேர்ந்து இந்தச் செய் தியை மறைத்து விட்டது.

லாரியில் அள்ளிக்கொண்டு சென்றனர்...

மற்றொரு நேரடி சாட்சி இந்தேல் அஹிராவ் என்பவர் கூறியதாவது:

காவல்துறையினர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் காயமுற்றவர்கள், இறந்தவர்கள் என அனைவரையும் ஒரு லாரியில் அள்ளி வீசி எங்கோ கொண்டு சென்றனர். அப்படி கொண்டு சென்ற உடல்களின் எண்ணிக்கை 200-க்கு மேலிருக்கும் என்றார்.

மற்றொரு பெண் நேரடி சாட்சி கூறியதாவது:

நான் அந்த சமயத்தில் பாலத்தின் இடையில் உள்ள தூண்களில் நின்று கொண்டேன், என் கண் எதிரே பலர் நசுங்கி உயிரிழந்தனர், சம்பவம் நடந்த சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து குழந்தைகள் மற்றும் சிறுவர்களை ஆற்றில் தூக்கி எறிவதைப் பார்த்தேன் என்றார். ஆற்றில் வீசிய நிலையில் காயத் துடன் காப்பாற்றப்பட்ட 15 வயது ஆஷிஸ் என்பவர் கூறியதாவது:
எனது அம்மா மற்றும் உறவினர் களுடன் கோவிலுக்கு வந்தேன். ஆனால் நெரிசலில் அனைவரும் இறந்து விட்டனர். என்னுடைய 6 வயது தம்பியும் இறந்து விட்டான். என்னால் நடக்க முடியாத நிலையில், திடீரென காவல் துறையினர் இறந்து கிடந்த தம்பியையும், என்னையும், ஆற்றில் தூக்கி வீசினர். நான் எவ்வளவோ மன்றாடியும் காதில் கேட்காமல் நீ இருந்தால் எங்களுக்கு பிரச்சினைதான் என்று கூறி ஆற்றில் தூக்கி வீசினர். அதன் பிறகு கீழே இருந்த சிலர் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் என்றார்

தமிழ் ஓவியா said...

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான அய்.நா. தீர்மானம்: ஆதரித்து கையெழுத்திட இந்தியா மறுப்பாம்!

ஜெனிவா, அக்.16- குழந்தைத் திருமணங்களை தடுக்கும் வகையிலான அய்.நா., மனித உரிமை சபையின் தீர்மா னத்தை ஆதரிக்க, இந்தியா மறுத்துள்ளது.

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும், 6 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறு கின்றன. இதனால், பெண் குழந்தைகள், சிறு வயதிலேயே, தங்கள் உரிமைகளை இழந்து, கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமலும், உடல் நலனை பேண முடியாமலும் அவதிப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்க, அய்.நா., மனித உரிமை சபையில், குழந்தைத் திருமணத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உறுப்பு நாடுகள் பலவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும், எத்தி யோபியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் கூட இந்த தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிப்பதாக தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன. உலகின், 107 நாடுகள், இத்தீர்மானத்தை ஆதரித்துள்ள நிலையில், இந்தியா, இத் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுப்பு தெரிவித் துள்ளது. ஆசிய நாடுகளிலேயே, இந்தியாவும், வங்கதேசமும் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்துள்ளன. இந்தியாவின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும், உலகெங்கும் நடத்தப்படும், 6 கோடி குழந்தை திரு மணங்களில், இந்தியாவில் மட்டும், 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இது மொத்த எண்ணிக் கையில், 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பணி: ராஜஸ்தானில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு:

கர்நாடகாவில் பூசாரிகளாக விதவைகள் நியமனம்!

தமிழ்நாட்டில்....?

ஜெய்பூர், அக்.16- ராஜஸ்தான் மாநிலத்தில் கோயில் பூசாரி, மேலாளர், உதவியாளர் பணியிடங்களில் 30 சதவிகித இடஒதுக்கீட்டில் பெண்களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள 65 காலியிடங்களில், 7 மேலாளர், 47 பூசாரிகள், 11 உதவியாளர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை உதய்பூர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதுகுறித்து தேவஸ்தானத்துறை ஆணையர் பவானி சிங் கூறுகையில், இதற்கு முன் இந்தத் துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தற் போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் தேவஸ்தானத்துறை பணியிடங்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரப்பப்படுகின்றன என்றார்.

பூசாரிகளாக விதவைகள் நியமனம்!

மங்களூரு அருகே உள்ள குத்ரோலி கிராமத்தில் இருக்கும் கோகர்ணநாத ஈஸ்வரன் கோவிலில் இரு விதவைப்பெண்கள் மூலவருக்கு அர்ச்சனை நடத்தியுள்ளனர். அம்பாள் அன்னபூரணேஷ்வரிக்கும் அவர்கள் பூசை நடத்தினர். அவர்கள் கோவிலுக்கு வந்த பக் தர்களுக்கு தீர்த்தமும் பிரசாதமும் அளித்துள்ளனர். வெளிர் மஞ்சள் புடவைகள் அணிந்து வந்த விதவைப் பெண்கள் இருவரும் மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனார்த்தன பூசாரி தலைமையேற்று நடத்தினார். ஒரு பெண் பூசாரி புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா சாந்தி என்றும் மற்றொருவர் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த மூடா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சாந்தி என்றும் அவர் அடையாளம் கூறினார். இவர்கள் இருவரும் மங்களூருவில் உள்ள குரு மந்திராவில் வேதபாடங்களைக் கற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்திரா சாந்தி பீடி சுற்றும் தொழில் செய்து வந்தவர் என்று கோவில் வட்டா ரங்கள் கூறின. இருவரும் கோவிலுக்குள் நுழைந்த வுடன் கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்த வாதியும், கோவிலின் நிறுவனருமான சிறீநாராயண குருக்களின் சிலைக்கு முதலில் பூசை செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கு பூசை செய்தனர்.

சமூகநீதிக்கு மூலகாரணமாக தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டும், அச்சட்டம் நடை முறைப்படுத்துவதற்குமுன் பார்ப்பன சக்திகள் உச்ச நீதிமன்றம் சென்று முட்டுக்கட்டைப் போட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழக அரசும் நாங்கள் வெளியில் பேசித் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, மாதங்கள் பல ஆகியும் இன்னும் அச்சட்டம் நடைமுறைப்படுத் தாத நிலை உள்ளது.

திராவிடர் கழகம்

இதற்காக திராவிடர் கழகம் பல போராட் டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


தீ...பா...வளி!

தீபாவளி பட்டா சால் தீ விபத்து நடக் கும் என்பதால், சென் னையில் ஏற்கெனவே உள்ள 33 தீயணைப்பு நிலையங்களைத் தவிர்த்து 54 இடங் களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக் கப்பட உள்ளனவாம்.

ஏன், கிருஷ்ண பர மாத்மாவால் தீ ஏற்படா மல் தடுக்க முடியாதா?

தமிழ் ஓவியா said...

அச்சுறுத்தும் இ-கழிவுகள்


பழுதடைந்த கணினி, வீடியோ கேம், செல்பேசிகள், குறுந்தகடுகள், டி.வி.டி.கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளாலும் குளிர்சாதனப் பெட்டி, ஓவன், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற எலக்ட்ரிக் பொருட்களின் கழிவுகளாலும் நிலர், நீர், காற்று, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இ_கழிவுகள் என்றழைக்கப்படும் இவை மக்காத தன்மை உடையன.

இ_கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும் தீமை தரும் காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன.

மும்பையில் மட்டும் ஓர் ஆண்டிற்கு 25,350 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்திய அளவில் இ_கழிவுகளைக் கொட்டுவதில் மகாராட்டிரம் முதல் இடத்திலும் தமிழகம் 2ஆவது இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. 5 சதவிகித இ_கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

எந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்ததோ அவர்களிடமே பழுதடைந்த பொருள்களைக் கொடுக்க வேண்டும். இவற்றை முழுமையாகப் பிரித்து, பின்பு மறுசுழற்சிக்கு அனுப்பி உலோகங்களைக் காய்ச்சி வடித்துப் பிரித்தெடுக்கலாம். வெளிநாடுகளில் இருந்து இ_கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இ_கழிவுகளினால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அய்.நா. சபையின் தென்கிழக்காசிய இயற்கை வளப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் துறையின் தலைவருமான முத்துச்செழியன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஆபத்தான விஷயங்கள்



மோடிக்கு குற்ற உணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களைக் கொலை செய்வது அரசியலில் நியாயமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. மோடி பிரதமர் ஆவதற்கு அவசரப்படுகிறார். ஆபத்தான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவமும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங்கள்தான் அவரைப் பெரிதுபடுத்தி வருகின்றன.

-_ சாகித்ய அகாடமியின்
ஜன்பித் விருது பெற்ற
கன்னட எழுத்தாளர்
ஆனந்தமூர்த்தி

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1927-இல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கடவுளா? கழிப்பறையா?


வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்று சொல்வார்கள். அதற்குச் சரியான உதாரணமாக அமைந்துவிட்டது இந்த வாயாடித்தனம். அதிகப் பிரசங்கியாக அண்மைக்காலத்தில் விளங்குபவர் பா.ஜ.க.வின் நரவேட்டை மோ(ச)டி. 2.10.2013 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி, நான் இந்துத்துவா தலைவராக அறியப்படுகிறேன். என் மீதான பிம்பம் தற்போது ஒரு கருத்தைக் கூற அனுமதிக்காது. இருப்பினும் தைரியமாகச் சொல்கிறேன். கழிப்பறை கட்டுவதற்கே முக்கியத்துவம், கோவில் கட்டுவது இரண்டாம்பட்சம்தான் எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ``பிரதமர் பதவியின் மேலுள்ள கண்மூடித்தனமான ஆசையின் காரணமாக மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். வேண்டாவெறுப்பாகவே அவர் இதைக் கூறியுள்ளார். இந்த ஞானோதயம் 1992ஆம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று நெற்றியடியாய் அடித்துவிட்டார். இதற்குப் பின் எந்த இந்துத்துவ வாயாடியும் இக்கருத்துக்குப் பதில் அளிக்கவில்லை.

மோ(ச)டியின் இந்த உளறலில் இருந்து ஒரு செய்தி தெளிவாகிறது. இந்தியாவில் இனி ராமன் கோவில் பருப்பு வேகாது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் மதங்களோ, கோவில்களோ இல்லை. கடவுள் பெயரால் ஏமாற்றுவது இனி இயலாத செயல். ஆனால், இவையெல்லாம் இந்துத்துவாக்களின் மறைமுகத் திட்டங்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத உணர்வைத் தூண்டினால் வாக்குக் கிடைக்காது என்பதால்தான் காங்கிரஸ் அரசின் தவறுகளையும், இந்தியாவிற்குப் பழக்கப் பட்டுப் போன பழைய தேர்தல் ஆயுதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மோ(ச)டிகள் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்துகின்றன.

தமிழ் ஓவியா said...

கடவுளை மறுக்கும் துகள் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு


ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் ரோத்மேன், ரேன்டி ஷேக்மன், தாமஸ் சுடாப் ஆகிய மூவருக்கு வழங்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு கடவுளை மறுக்கும் துகளான நிஷீபீபீணீனீஸீ ஜீணீக்ஷீவீநீறீமீ என்ற துகளைக் கண்டுபிடித்து, ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றி ஆராய்ச்சி செய்த ஃபிரான்காய்ஸ் எங்லெர்ட், பீட்டர் ஹிக்ஸ் ஆகிய இருவருக்கு வழங்கப்பட உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஏரியே வார்ஷெல் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...

கருத்து


குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது அவரிடம் ஏற்பட வேண்டிய மாறுதலையே. எனவே குற்றம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைக்குப் பதில் மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம். தண்டனைக்கு உள்ளாகுபவரால் அவரின் குடும்பம், அவரைச் சார்ந்திருப்பவர்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.

- சுஷில்குமார் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர்

அய்.நா.வின் செயல்பாடுகளை உள் ஆய்வு செய்தபோது இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது அமைப்புரீதியாக அய்.நா. தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உறுப்பு நாடுகள், தாங்கள் நிர்ணயித்த பணிகளை அய்.நா. செய்வதற்குப் போதிய ஆதரவை அளிக்கவில்லை. அய்.நா.வும் உரிய முறையில் செயல்படவில்லை.

- பான் கீ மூன், அய்.நா. பொதுச்செயலாளர்

நரேந்திர மோடியைத் தூற்றுவதற்கு நீங்கள் ஒரு இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ அல்லது இந்துமத எதிர்ப்பாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானமுடைய மனிதராக இருப்பதே போதுமானது.

- நவீன் மூடர் கூடம் திரைப்பட இயக்குநர்

பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை வெற்றிபெறச் செய்வதும்கூட சில நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நடப்பதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடருமானால் டாக்டரைச் சந்திக்கச் செல்லும் நோயாளிகள் அந்த டாக்டர் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது சான்றிதழை வாங்கிச் சரிபார்க்கும் நிலை ஏற்படலாம்.

- நீதிபதி கே.கே.சசிதரன், சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ் ஓவியா said...

செய்திக் குவியல்


ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கினார்

நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் ஆள்வைத்து ராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சியம் அளித்துள்ளார்.

எனது தந்தை சங்கரராமன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்துவந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்புத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனால், எனது தந்தைக்கும் ஜெயேந்திரருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச்சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண்டித்து வந்தார். இதையடுத்து, 2002இல் நசரத்பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர்வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன் ஆகியோரை வரச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதினார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு தபால் மூலம் அனுப்பினார்.

நான்தான் அந்த தபால்களை அனுப்புவேன். அந்தக் கடிதங்களை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப்பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத்தியநாதன் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ்ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கியுள்ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ்ணன் எழுதியதாக தவறாகப் புரிந்துகொண்டு அவரைத் தாக்கியுள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடிதம் எழுத வேண்டாம் என்று எனது தந்தையிடம் கூறினோம். அதனால் 6 மாதங்கள் கடிதம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் போலீசில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்துத் தாக்கியுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து வந்தால் அதற்கு ஜெயேந்திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவலகத்தில் எனது தந்தையைக் கொலை செய்தனர். போலீஸ் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரிவித்தேன் என்று 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 22ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

தமிழ் ஓவியா said...

காவல்துறையால் தேடப்படும் ஆசாராம் பாபுவின் மகன்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் இருவரும் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த நாராயண் சாய் தலைமறைவாக உள்ளார். வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக குடியுரிமை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாராயண் சாய்க்கு நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

தலைவர்களுக்கே பாதுகாப்பில்லை... மக்களுக்கு...?


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 அன்று நடைபெற்ற தி.க.மாணவரணி மண்டல மாநாட்டிற்குச் சென்றிருந்த தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது காவி(லி)க்கும்பல் தாக்குதல் நடத்தியது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் கண் முன்னேயே நடந்த இந்தத் தாக்குதலை ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.



கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சுவரை, வன்முறை சிறிதும் கலக் காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

- தி.மு.க. தலைவர் கலைஞர்

கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரிகமான செயல் அல்ல. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதர்களிடையே ஜாதி பார்த்து அவர்களுக்கிடையே பகைமையை வளர்த்துக் கொண்டிருந்த ஜாதி வெறியர்கள் தமது ஆதாயத்துக்காக இப்போது கடவுளுக்கும் ஜாதி கற்பித்து வன்முறையைத் தூண்டுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.

- தொல். திருமாவளவன்

கருத்துகளை வன்முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்கக் கூடாது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப்பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின்றன என்பதற்கு அடையாளம்தான் இந்த வன்முறை. - பேராசிரியர்

கே.எம்.காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்

தமிழக அரசு இத்தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த வன்முறைக் கும்பலைக் கைது செய்யவும் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில் தமிழகத்தில் மக்கள் மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என உலக நாடுகள் கருதக் கூடும். - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா இப்போதே மத்திய அரசில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு சிலர் ஆடும் ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கரடுமுரடான பாதை களைக் கடந்து வந்த திராவிடர் கழகத்திற்கு இவையெல்லாம் புதிதல்ல. தாக்குதல்களிலேயே வளர்ந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

- திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்
பேரா. சுப.வீரபாண்டியன்

தமிழ் ஓவியா said...


``ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளை தந்தை பெரியாரின் காலந்தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துகளைப் பிரச்சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச்சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன என பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை), அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி), பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), பேரா. பிரபா.கல்விமணி, (பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்) உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மேலும், அகில இந்திய யாதவ மகாசபையாக இயங்கிவரும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால், யாதவ மகா சபையைச் சார்ந்த எம்.கோபாலகிருஷ்ணன், சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ், திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.

விருத்தாசலம் கண்ட அதிசயம்

- எழுத்தாளர் இமையம்

கடலூர் மண்டல மாணவரணி மாநாடு செப்டம்பர் 28-ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்றது. எந்த அரசியல் கட்சிக் கூட்டத்திலும் காணக்கிடைக்காத அரிய காட்சி- இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டதுதான். அதே அளவுக்கு மாணவர்களும் கலந்து கொண்டனர். மற்றொரு அரிய நிகழ்வு திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, பள்ளி மாணவ, மாணவிகளும் இடையிடையே எழுந்து மாநாட்டுப் பந்தலைவிட்டு வெளியே செல்லாதது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அச்சு ஊடகங்களில் மூடநம்பிக்கை, மின்னணு ஊடகங்களில் மூடநம்பிக்கை, அரசு செயல்பாடுகளில் மூடநம்பிக்கை, பாடநூல்களில் மூடநம்பிக்கை என்ற தலைப்புகளில் பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர். இந்த நான்கு தலைப்புகளுமே நடைமுறை கால சமூகத்தில் ஊன்றி நிற்கின்றன. மக்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சங்களாகிவிட்ட செயல்களையும், அச்செயல்களின் வழியாக எவ்வாறு சமூகவிரோத செயல்- மூடநம்பிக்கையை விதைப்பது என்பது- தீவிரவாத செயலைவிட கொடூரமானது என்பதைப் பேச்சாளர்கள் நிறுவிக்காட்டினர்.

காலையில் எழுந்ததும் நாளேடுகளைப் படிப்பது நம் அறிவுக்கு உகந்த செயல், அறிவை வளர்த்துக் கொள்கிற செயல் என்று நினைப்பது சரியா? நம்முடைய நாளேடுகள் அறிவுக்கு, உண்மைக்கு, அறிவியல்பூர்வமான செய்திகளையா வெளியிடுகின்றன. கிரக ராசி பலன்களைப் படித்து, அல்லது ராமர் விஜயம் படித்து ஒருவன் அறிவாளியாக முடியுமா? நம்முடைய நாளேடுகள் உருவாக்குகிற செய்திகள் என்பது கிட்டத்திட்ட கட்டுக்கதைகள்தான். கட்டுக்கதைகளைப் படிக்கிறவன் கட்டுக்கதைகளை நம்பாமல் வேறு எதை நம்புவான்? நாளேடுகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவது. தமிழ் நாளேடுகள் அனைத்துமே தனது அடிப்படைக் கடமையைத் தவறியவைதான். அச்சு ஊடகங்கள் நாள்தோறும் மக்களை மடைமையில் மூழ்கச்செய்கிற காரியங்களை எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன என்பது குறித்தும், அச்சு ஊடகங்கள் எவ்வாறு நச்சு விதைகளைச் சமூகத்தில் விதைக்கின்றன என்பது குறித்தும் பேசப்பட்டது.

அச்சு ஊடகங்கள்தான் மோசம், காட்சி ஊடகங்கள் பரவாயில்லை என்று சொல்ல முடியுமா? அச்சு ஊடகத்தைவிட படுமோசம் காட்சி ஊடகம். மின்னணு ஊடகங்கள் வேகமாக வேலை செய்கின்றன. அச்சு ஊடகத்தைவிட கூடுதலான கெடுதலைச் செய்கிறது. அச்சு ஊடகத்தால் படித்தவர்கள்தான் கெட்டுப்போவார்கள். காட்சி ஊடகத்தில் படிக்காதவர்களும் கெட்டுப்போகிறார்கள். பழமைவாதியை மேலும் பழமைவாதியாக்குகிற செயலை மின்னணு இயந்திரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன. அச்சு ஊடகங்களின் கருவிகளையும், மின்னணு ஊடகங்களின் கருவிகளையும் கண்டுபிடித்தது யார்? மாணவர்கள் பதில் கூறினர். மனிதர்கள், விஞ்ஞானிகள், கடவுள் அல்ல என்று. நோயைக் குணப்படுத்துவது யார்? மருத்துவர்கள்- மாத்திரைகள். குழந்தைகள் பதில் சொல்லுகின்றன. இது பெரியவர்களுக்குத் தெரியவில்லை. மின்னணு ஊடகங்கள் எவ்வாறெல்லாம் மனித மூளையை மழுங்கச் செய்கின்றன, அறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்குத்தனமான காரியங்களைச் செய்யவும், பின்பற்றவும் செய்கின்றன என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் தனியார். ஆனால், அரசு என்பது தனியார் அல்லவே. அரசு செயல்பாடுகள் ஒரு மத நிறுவனத்தின் செயல்பாடுகளாக ஏன் மாறுகின்றன என்பதுதான் ஆச்சரியம். இந்தியா ஜனநாயக நாடு. அதை நிர்வாகம் செய்கிற அரசு என்பதும் ஜனநாயகத்தன்மை பொருந்தியதாக இருப்பது அவசியம். கடமை. ஆனால் அரசு அலுவலகங்களில் பூஜைகள் நடக்கின்றன. ஆயுதபூஜை கொண்டாடாத அரசு அலுவலகம் இந்தியாவில் உள்ளதா? அய்யப்ப பக்தர்களாக இருக்கிற காவல்துறையினர் பூட்ஸ் அணியாமல் கருப்புத் துண்டு அணிந்து பணி செய்கின்றனர். இவ்வாறு பணி செய்வதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இது சட்டவிரோதச் செயல் அல்லவா? சட்ட விரோதச் செயல்களை அனுமதிக்கிற அரசும் சட்ட விரோதமானது, மக்களுக்கு விரோதமானதுதானே. அரசு அலுவலகங்களில் மதச்சடங்குகளைச் செய்யவும், பின்பற்றவும் அனுமதிப்பது என்பது ஜனநாயக விரோதச் செயல்களையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் ஊக்குவிக்கிறது. இப்படியான அரசு நிர்வாகத்திற்கு சமூக நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இருக்கிறதா? இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்ற செயல் எது? பள்ளிக் கூடங்களைக் கட்டுகிற அதே அரசுதான் கோவில் கும்பாபிசேகங்களையும் நடத்துகின்றது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை, மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கான கருவியாக மாற்றிய பெருமை இந்தியர்களுக்கே உண்டான தனிப்பெருமை. இழிவையே பெருமையாக எடுத்துக்கொள்கிற நம்முடைய மனோபாவம் விநோதமானது என்பதோடு நம்முடைய அரசுகள் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் மத நிறுவனங்களோடு எவ்வாறெல்லாம் போட்டியிடுகிறது என்பது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.

நம்முடைய பாடப் புத்தகங்கள் அறிவை வளர்ப்பதாக _ ஆளுமையை வளர்ப்பதாக இருக்கிறதா? பாடப் புத்தகங்கள் திட்டமிட்டே அறிவுக்கு ஒவ்வாத, அறிவியல் பார்வைக்கு எதிரான, பழமைவாதத்தைப் போற்றுகிறவிதமாக உருவாக்கப்படுகிற ஒரு சமூகத்தில் குழந்தைகளின் மனதில் அறிவியல் மனப்பான்மை எவ்வாறு வளரும்? நம்முடைய பாடப் புத்தகங்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாக்கியதுதானா? பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் எவ்வாறெல்லாம் மூடநம்பிக்கை நிறைந்த, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாடங்கள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன என்று மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டது.

மாநாட்டின் நிறைவுரையாகப் பேசிய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பேச்சு மிக முக்கியமானது. அச்சு ஊடகங்களை ஒருவர் விரும்பினால் தவிர்த்துவிட முடியும். அதே மாதிரி மின்னணு ஊடகங்களையும் ஒருவர் தவிர்த்துவிட முடியும். அரசின் மூடநம்பிக்கை வளர்ப்பு செயல்பாடுகளிலிருந்து ஒருவர் விலகியிருக்க முடியும். ஆனால், பாடப் புத்தகங்களிலிருக்கும் மூடநம்பிக்கைக் கருத்துகளை ஒரு மாணவன் படிக்காமலோ பரிட்சையில் எழுதாமலோ இருக்க முடியுமா? நம்முடைய பாடத்திட்டங்களும் பள்ளிக்கூடங்களும் அறிவியலுக்கு _ உண்மைக்கு எதிரான செயல்களை அல்லவா கற்றுத் தருகின்றன. நல்ல குடிமகனை உருவாக்க வேண்டிய அரசு, நல்ல பாடத்திட்டத்தினை வழங்க வேண்டிய அரசு என்ன செய்கிறது? என்று கேட்ட ஆசிரியர், பாடப் புத்தகங்களில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கை சார்ந்த இடங்களையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டினார், அந்த விஷயங்களைக் கேட்ட மாணவ மாணவிகள் ஆச்சர்யப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

அதோடு நிற்காமல் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளையெல்லாம் வரிசையில் வந்து அறுத்து எறிந்தனர். சாமிக்கயிறுகளெல்லாம் கொளுத்தப்பட்டது. இதுதான் மாநாட்டின் உச்சம். மாணவ மாணவிகளை யாருமே கேட்கவில்லை, யாருமே கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே வந்து கையிலிருந்த அழுக்குக் குப்பைகளை _ மனதிலிருந்த அழுக்குக் குப்பைகளையும்-நமது அரசின் செயல்பாடுகளின் மீதும், பாடத்திட்டத்தின் மீதும்-, பள்ளிச் சுவர்களின் மீதும், சமூகத்தின் நம்பிக்கைகள், மடமைகள் மீதும் விட்டெறிந்தனர். நாம் நம்முடைய சமூகத்தில் விஷவிதைகளை மட்டுமே ஊன்றி வளர்ப்பவர்களாக இருக்கிறோம். குழந்தைகளை, குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்வது எது என்ற கேள்வி மாநாட்டில் எழுப்பப்பட்டது.

மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடந்தது. பேரணியில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண் விடுதலை, சமதர்மம், ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு குறித்த முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பெண்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். ஆண்கள் அலகு குத்தி கார் இழுத்து வந்தனர். சிறுவர்கள்கூட கையில், நாக்கில் கற்பூரம் ஏற்றி சாமி இல்லை என்று நிரூபித்தனர். இது விருத்தாசலம் நகர மக்கள் கண்ட வியப்பு- அதிசயம். விரதம் இருக்காதவர்கள், சாமி பிடிக்காதவர்கள், பூசாரிகள் அல்லாத சாதாரண மனிதன் கூட தீச்சட்டி ஏந்த முடியும், அலகு குத்த முடியும், கையிலும் நாக்கிலும் கற்பூரத்தை எரிய வைக்க முடியும் என்ற உண்மை விருத்தாசலம் நகர மக்களின் மனதில் விதையாக முளைத்தது.

விருத்தாசலம் நகர மக்கள் நாள்தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகளை பல கட்சிகள் நடத்தியதைப் பார்த்திருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்டதாக திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் இருந்தது என்பதை விருத்தாசலம் மக்கள் என்றும் நினைவில் கொள்ளும்விதமாக அமைந்துவிட்டது.

போலி ஜாதியப் பெருமை

- கவிஞர் கரிகாலன்

முதுகுன்றத்தில் நடந்த திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாடு இந்தப் பகுதியில் மட்டுமன்றி, தமிழகம் தழுவிய அளவில் கவனம் பெற்றதாக அமைந்திருக்கிறது. இப்பகுதியில் மாநாட்டு வேலைகளை தோழர்கள் உற்சாகத்தோடு கவனித்து வந்தபோதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற்போக்கு ஜாதி அமைப்புகள் இதை எரிச்சலோடு உற்றுநோக்கி வந்தன. இதன் எதிர்வினை மிகுந்த அநாகரிக வடிவில் மாநாடு நடந்த மாலைப் பொழுதில் வெளிப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வந்துகொண்டிருந்த போது மேற்குறிப்பிட்ட பிற்போக்கு சக்திகள் அவரது வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு கடுமையான முறையில் தாக்கினர்.

காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அலட்சிய முறையில் செய்யப்பட்டிருந்தது. எதிர்க்கருத்து உடையவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட கருப்புக்கொடி காட்டுவது போன்ற வழிமுறைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிஸ்ட்டுகள் மற்றும் அடிப்படைவாத சக்திகளோ எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களையே அழித்துவிடும் நோக்கத்துடன் நடந்துகொள்ளும் அநாகரிகத்தை முதுகுன்றம் மக்களும் நாடெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தின் போலி பெருமிதங்களைக் கூறி சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது இந்துத்துவாவின் முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்று. தன்னைத் தாழ்த்தப்பட்டவனாக, சூத்திரனாக, வேசிமகனாக வைத்திருப்பது இந்து மதம்தான் என்று உணராமல் போலி ஜாதியப் பெருமைகளைப் பேசும் ஜாதித் தலைவர்கள் பின்னால் செல்லும் கூட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்பதை யாதவ மகா சபை எனும் பெயரில் அமைந்த ஒரு அமைப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. (இந்த அமைப்பு முகவரியற்றவர்களால் உருவாக்கப்பட்டது என யாதவர்கள் சங்கம் கூறியிருப்பதுடன், தி.க.தலைவர் அவர்களைத் தாக்கியவர்களையும் கண்டித்திருக்கிறது) யாதவர்களை ஒத்த பிற்படுத்தப்பட்ட மக்களின் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் என பாடுபட்ட இயக்கத்தின் தலைவரைத் தாக்கியிருப்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் உணர வேண்டும்.

- தொகுப்பு : இளந்திரையன்

தமிழ் ஓவியா said...

நான் ஏன் பெரியாரிஸ்ட் ஆனேன்?


என் தந்தை கடவுள் மறுப்பாளர்... 20 வருடம் ஆன்மீக குடும்பத்தில் வளர்ந்த தாயின்மீது தன்கொள்கையைத் திணிக்காமல்.. தாயின் விருப்பப்படி கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவார்.. திருப்பூருக்கு நாங்கள் குடிவந்த புதிதில்.. அம்மா பெருமாள் கோவிலுக்குச் செல்ல விருப்பப்பட.. நான் அம்மா புறப்பட, அப்பா அழைத்துச் சென்றார்..

கடவுள் வழிபாடு முடிந்து, துளசி இலை கொடுத்தபின்.. வெள்ளியாலான கிரீடம் போல் உள்ள ஒன்றை எல்லார் தலையிலும் வைத்து வைத்து எடுத்தார் அர்ச்சகர்.. நான் இதைக் கவனியாது துளசியைத் தின்று கொண்டிருந்தபோது.. என் தலையிலும் அதை வைக்க வந்தார். நான் ஏதோவென்று திடுக்கிட்டு அதைக் கையால் தடுக்க, அந்தப் பாத்திரம் கீழே விழ.. அர்ச்சகர் என்னைச் சூத்திரவாள் என்று சொல்ல.. என் தந்தை அர்ச்சகரை அடிக்கப்போக.. சின்ன பரபரப்பு ஏற்பட்டு அமைதியானது.. வீட்டுக்கு வந்த என் தந்தை "இதனால்தான் நான் கடவுளை மறுக்கிறேன் என்றார்... சூத்திரன் என்றால் வெப்பாட்டிமகன், திருடன், ஓடிப்போனவன்" என்று பல மோசமான அர்த்தங்கள் இருப்பதைச் சொன்னார்.

"அம்மா அன்று முதல் பெருமாள் கோவிலுக்குப் போவதில்லை" "பின்னாளில் என் மனம் பெரியாரின் வசம் சென்றது"

- இளஞாயிறு மலர்கள்
(இணையத்தில் உலவியபோது முகநூலில் படித்தது)

தமிழ் ஓவியா said...

நீதி


அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம்.
புது மணமகள் போல
கை நிறைய கண்ணாடி வளையல்கள்...
அவசரக் கோலத்தில் வைக்கப்பட்டதாய் தெரியும்
தலை நிறைய பூங்கொத்துக்கள்...
வீங்கிய முகம்....
பதினாறாம் நாளுக்கன்னு
எழவு வீழ்ந்து...
ஓலமாய் கத்துகிறார்
அம்மாவைப் பெற்றவள். இவன் செத்தான்
தாலியறுத்தான்...
பதிலுக்கு எம்பொண்ணு செத்திருந்தா
புதுத் தாலி கட்டியிருப்பான்
கிடுகிடுக்கிறாள் பாட்டி

சார்மினார் பந்தலில் கிழவன்
என்னா பேச்சு பேசுறா பாத்தியா
ஆம்பளைக்கூட்டம்
நெளிகிறது...

- மணிவர்மா

தமிழ் ஓவியா said...

நூல்

நூல்: மெக்காலே
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி
வெளியீடு: சாளரம்,
854 (ப.எண்.387)
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை _ 15.
பக்கங்கள்: 120
விலை: ரூ.15/-

சமூக விழிப்புணர்-வுக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட மெக்காலே கல்வித் திட்டம் தோன்றிய விதம், இந்தியாவுக்கு மெக்காலே அனுப்பப்பட்ட சூழ்நிலை, அவரது வாழ்க்கைக் குறிப்பு, சாதனைகள் வரலாற்றுப்பூர்வமாக தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி உருவாகக் காரணம், காரணமாக இருந்தவர்கள், வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள், இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி, கற்பிக்கப்பட்ட பாடங்கள், பயின்ற மாணவர்கள், கிறித்தவ மதகுருமார்கள், மத அமைப்புகளின் பங்கு ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன.



அய்ரோப்பாவின் மொழிகள் ரஷ்யாவை நாகரிகமடையச் செய்த விதம் மற்றும் சாக்சான் மற்றும் நார்மனின் மூலத்தைவிட சமஸ்கிருதம் தாழ்வானது என்ற கருத்துகள் விளக்கமாக இடம் பெற்றுள்ளன. மெக்காலே கல்வித் திட்டத்திற்கு ஏற்பட்ட ஆதரவு எதிர்ப்பு அலைகள், இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே கருத்து மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளைத் தாங்கி நிற்கிறது.

தமிழ் ஓவியா said...

குறும்படம்

பீ...

-அமுதன்

செல்பேசி : 86952 79353

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும்கூட, வீதிகளில், கால்வாய்களில் குழந்தைகள் கழித்துள்ள மலத்தை அள்ளும் அவலமான நிலைக்குத் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆளாகின்றனர். பொதுக் கழிப்பிட வசதி போதுமான அளவில் இல்லாதது காரணமாக இருப்பினும், கழிப்பிட வசதி இருக்கும் இடங்களிலும் மக்கள் முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தெருக்களைத் துப்புரவு செய்யும் பெண் கால்களுக்குப் பாதுகாப்புத் தரும் செருப்பைப் பத்திரமாக கழற்றி வைத்துவிட்டு வீதியில் கிடக்கும் மலங்கள்மீது சாம்பல் போட்டுக் கூட்டி அள்ளுகிறார். அந்த வேலையைச் செய்வதால் அவருக்கு வரும் நோய்த்தொற்றுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

துப்புரவுத் தொழிலாளர்களும் மனிதர்கள்தான் என்பதை மனிதாபிமானத்தோடு சிந்திக்க வைத்துள்ளது. இந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் முக்கியமான படமாகத் திகழ்கிறது.

தமிழ் ஓவியா said...

இணையதளம் www.rtoaifmvd.com

இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம்.

வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, NOC, சான்றிதழைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் (duplicate) சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் (download) செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரி தொடர்பான விவரம், தொடர்புடைய ஆர்டிஓ அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களின் அட்டவணை, பயனாளர் (Member) மின் அஞ்சல் (e-mail) பகுதி என பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


விளங்க முடியும்

எண்ணெய் இருந்தால் தான் விளக்கு எரியும் என்பது போல சிந்தனை இருந்தால் தான் உண்மை விளங்க முடியும். - (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாடு

இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (15.10.2013)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த வகையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தோழர் தியாகு இதற்காக பட்டினிப் போராட்டம் இருந்தார். சட்டக் கல்லூரி மாணவர்களும் அதனை ஆதரித்துப் பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

5 முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த - பழுத்த மூத்த அரசியல் தலைவரான கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பிரதமருக்குக் கடிதம் எழுதினார், தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., அவர்கள் மூலம்; பிரதமரும், கலைஞர் அவர்களுக்குப் பதில் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து; கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் அதில் தெரிவித்திருப்பது திருப்தியை அளிக்கிறது.

இரண்டு வாரங்களாக இதற்காக பட்டினிப் போராட்டம் இருந்த தோழர் தியாகு அவர்களும், பிரதமரின் நம்பிக்கை மிகுந்த உறுதியை ஏற்று பட்டினிப் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அவர்களும் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் பிரதமர் தயங் குவதோ, காலங் கடத்துவதோ வீணாக ஊடகங் களுக்கும் தேவையற்ற விமர்சனங்களுக்கும் தான் இடம் கொடுக்கும். கனடா நாடுகூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்ட மாகவே அறிவித்துவிட்டது. இதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய இந்திய அரசு, முதல் குரல் கொடுத்திருக்க வேண்டாமா?

லட்சத்திற்கும் மேற்பட்ட குடி மக்களாகிய ஈழத் தமிழர்கள் - யுத்த நியதிகள் எல்லாம் புழக் கடையில் தூக்கி எறிந்துவிட்டு கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டது தமிழர்களாக இல்லாமல் வேறு இன மக்களாக இருந்தாலும்கூட, இந்தியா மனித உரிமையின் அடிப்படையில் இலங்கையைக் கண்டிக்கக் கடமைப்பட் டுள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் இந்திய அரசு இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான நியாயமோ, கூறுகளோ கிடையவே கிடையாது.
இவ்வளவுக்கும் இலங்கை அரசு இந்தியா வின் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் எதிரி நாடுகளுக்குத்தான் கைலாகு கொடுத்து வந்துள்ளது.

பாகிஸ்தான் யுத்தமாக இருந்தாலும் சரி, சீன யுத்தமாக இருந்தாலும் சரி, நம் எதிரி நாடு களின் தோள்களில் கை போட்டுக் கொண்டு திரிந்தது தான் இலங்கை.

இந்த நிலையில் இந்திய அரசு, தம் அதிருப்தியைத் தெரிவித்து கொள்ள, ராஜ தந்திர முறையில் பார்த்தாலும் இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதற்கான ஒரு நல்வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நழுவ விட வேண்டாம், நழுவ விட்டால் உள் நாட்டிலும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


குல்லா

குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு என்ற பாடல்தான் நரேந்திர மோடியை நினைத்தால் நினைவுக்கு வருகிறது.

தன்னைப்பற்றிப் புதிது புதிதாக அவிழ்த்து விட்டு, நாட்டு மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தும், ஜிகினா வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2இல்) காந்தி குல்லா 25 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை என்று விளம் பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகாவின் போது அணி யும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்ற சொல்லி தள்ளுபடி விலை யில் விற்பனை செய்துள் ளனர். மோடி குல்லா என்று பெயர் சூட்டியுள் ளனர் - எத்தகு பித்த லாட்டம் இது!

காந்தியாருக்கும், இந்த மோடிக் கும்பலுக் கும் என்ன ஒட்டு உறவு? காந்தியைக் கொன்ற கோட்சேயின் உறவுக்கா ரர்கள் என்கிற முறையில் ஓர் உறவு உண்டு என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

மோடி குர்தா என்று ஓர் சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். எப்படி உடை உடுத்துவது, எந்த வண்ணத்தில் உடுத் துவது என்பது வரை திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துவதே உள் நோக்கம். பிபி சவுகான், ஜிதுபாய் சவுகான் சகோ தரர்கள் இவருக்கு உடை தைத்துக் கொடுப்பவர் களாம்.

மோடி அணியும் உடையை விளம்பரப் படுத்த ஆரம்பித்து விட்டனர். மோடி குர்தா என்று அதற்குப் பெயர். பருத்தி குர்தா ரூ.1895 (பேட்டா விலை மாதிரி) லினன் குர்தா ரூ.1900/-
முஸ்லீம்கள் அணி வது போன்ற தோற்றம் - அந்த வகையிலும் அம் மக்களைக் கவரலாம் அல்லவா! (மோடி கலந்து கொண்ட ஒரு கூட்டத் தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர் அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவரும் இவர் தான் என்பதை மறக்க வேண்டாம்!) நமோ தேநீர் கடைகள் (நரேந்திர மோடிக்குத்தான் நமோ என்று குறுக்கம்) நமோ இனிப்புக் கடைகளாம்.

இப்படி எல்லாம் விளம்பரம் செய்வதற் கென்றே ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனத்தோடு (Apcoworld in India) ஒப் பந்தம செய்துள்ளனர். அதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் தேடுதல் வரிசையில், ஒபாமாவைத் தாண்டி விட்டார் என்று அவிழ்த்து விடுவதெல் லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக் குத்தான்; மோடிப் புளுகு எத்தனை நாளைக்கு? - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நாமக்கல்லில் பூசாரிகளால் அடிபடும் பெண்கள்!

பேய் ஆட்டம் என்பது பொய்! அது ஒரு மன நோயே!

மருத்துவர் விளக்கம்

நாமக்கல், அக்.17- கோவில் விழாவில் பெண் களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் கொடுமை நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு மன நோய்தான் - பேய் என்பதெல்லாம் பொய் என்கிறார் மருத்துவர்.

அச்சப்பன் கோவில்: நாமக்கல் மாவட்ட எல் லையில் பவித்திரம் அருகே உள்ள வெள் ளாளப்பட்டி கிராமத் தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் குரும்பர் இன மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் விஜய தசமியை முன்னிட்டு சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் கொடுமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று அச்சப் பன் கோவில் திருவிழா பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் சாமியை அலங்கரித்து, காட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனராம். ஊர்வலத் தின் முன்பு பக்தர்கள், குரும்பர்களின் பாரம் பரிய ஆட்டமான தப் பாட்டம், கோலாட்டம் ஆடியபடி சென்றனராம்.

பேய் ஓட்டும் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து சாட்டை யால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. காட்டு கோவில் முன்பு வரிசை யாக பெண்களும், ஆண் களும் தரையில் மண்டி யிட்டு, கைகளை உயர்த் தியபடி இருந்தனர். தலைமைப் பூசாரி மண்டியிட்டு, நின்ற பெண்களின் கைகளில் சாட்டையால் ஓங்கி அடித்து, பேய் ஓட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெரும்பா லான பெண்கள் ஒரே அடியில் கைகளை உத றியபடி எழுந்து விட் டனராம். சில பெண்கள் 4, 5 அடி வரை வாங்கிக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தன ராம். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கினர்.

பக்தர்கள் குவிந்த னர்: சாட்டையடி வாங் கிய ஒரு பெண் கூறும் போது, பேயின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப் பட்டவர்கள் மட்டு மின்றி, திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், கொடிய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கவும் பெண்கள் சாட்டை அடி பெறுவது வழக்கம் என்றாராம். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேய் ஓட் டும் நிகழ்ச்சி தொடங் கும் முன்பு பூசாரியின் தலையில் அடித்து, தேங் காய் ஒன்று உடைக்கப் பட்டது.

மனநோய் பாதிப்பு என்கிறார் மருத்துவர்

இதை நம்ப முடியா மல், நாமக்கல்லைச் சேர்ந்த மனநல மருத் துவர் சங்கரிடம் கேட் டோம், பேய் என்ற ஒன்று கிடையாது. பொதுவாக பேய், கடவுள் என்பது ஒருவித மனநோய், யாரையும் பாதிக்காத வகையில் இருப்பது மட்டுமே நம்பிக்கை. ஆனால், சாமியாடுவது, தீ மிதித் தல் போன்றவையெல் லாம் மனநோயின் அடையாளம். பணம் இருந்தாலும் வாழ்க்கை யில் போதுமான எது வும் கிடைக்காதது போன்ற பூர்த்தியடை யாத விஷயத்தால் சாமி யாடுதல் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.

இது ஒரு பிரெய்ன் மெக்கானிசமாகும். சாட்டையால் அடித்து துன்புறுத்தும் விழா விற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்க சட் டத்தில் இடம் உள்ளது. குறிப்பாக பொதுநல வழக்கு தொடருதல் போன்றவற்றின் மூலம் இதுபோன்ற நடவடிக் கையை எடுக்க முடியும். அதே வேளையில் சம் பந்தப்பட்டவர்களையும் ஆலோசனை மூலம் நல்வழிக்கு கொண்டுவர இயலும் என்றார்.

தமிழ் ஓவியா said...


ஜாதி, மதத்தின் பெயரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : சித்தராமையா


பெங்களூரு . அக்.17- ஜாதி, மதத்தின் பெய ரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருநாடக முதல்வர் சித்தராமையா தெரிவித் தார்.

பெங்களூருவில் புதன் கிழமை பன்னரகட்டா சாலையில் நடந்த பக்ரீத் திருநாள் தொழுகையில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

மாநிலத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து உள் ளிட்ட பல்வேறு மதங் களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற் கான சூழ்நிலை கருநாட கத்தில் உள்ளது. அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக் கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநிலத்தில் சிறுபான்மை சமுதா யத்தைச் சேர்ந்த மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வருகின்றனர். நமது மாநி லத்தில் வாழும் அனைத்து சமுதாயத்தின் மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சமுதாய மக்கள், மற்ற சமுதாயத்தை சேர்ந் தவர்கள் மரியாதையு டனும், கவுரவத்துடன் நடத்த வேண்டும். காந்தி யார் உள்ளிட்ட மகான் கள் இதனையே வலி யுறுத்தி உள்ளனர். இதனை புரிந்து மக்கள் அனைத்து சமுதாயத் தினருடன் அரவணைத் துச் செல்ல வேண்டும். ஜாதி, மதத்தின் பெய ரால் சமூக ஒற்றுமையை குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


குஜராத் மாடல் - என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை மத்திய அமைச்சர் கபில்சிபல் பேட்டி

டில்லி,அக்.17- நரேந்திர மோடி குறித்த பில்டப் பேச்சுக்கள் அத்தனையும் நீர்க்குமிழி போல.. சீக்கிரமே இவை உடைந்து விடும் என்று கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நரேந்திர மோடி குறித்து ஏகப்பட்ட பில்டப் பேச்சுக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அத்தனையும் நீர்க்குமிழி போல. சீக்கிரமே இவை உடைந்து விடும். குஜராத் குறித்து தொடர்ந்து புனைக் கதைகளையே அவர் பரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், இணையதளத்திலும் தவறான தகவல்களால் அவர் நிரப்பி வருகிறார். இயற்கையின் விதி என்னவென்றால் எது ஒன்று மேலே செல்கிறதோ அது நிச்சயம் கீழே வரும். அதேசமயம், எது ஒன்று வேகமாக மேலே செல்கிறதோ, அதே வேகத்தில் அது கீழே வரும். மோடி விவகாரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் அவரைச் சுற்றிலும் நீர்க்குமிழிகள்தான் இப்போது சூழ்ந்து நிற்கின்றன. அத்தனையும் கட்டாயம் சீக்கிரமே உடைந்து போகும். குஜராத் மாடல் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. இல்லாத ஒரு பொருளை நீங்கள் எப்படி விற்க முடியும்... அப்படித்தான் குஜராத் மாடலும் என்றார் சிபல்.

தமிழ் ஓவியா said...


மோடியா? நவீன் எதிர்ப்பு


பாஜகவின் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க மாட் டேன் என்று பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

இது குறித்து அய்பி என்7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதம ராவதை, என்னைப் போலவே பலரும் விரும்பவில்லை. நான் ஏன் விரும்ப வில்லை என்பது உங்களுக்கே (பத்திரி கையா ளர்கள்) தெரியும். மோடி பிரத மராவதற்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப் பீர்களா எனக் கேட்டபோது, காங் கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளிட மிருந்தும் சம அளவில் விலகியிருக் கவே விரும்புகிறேன் என்றார் பட்நாயக்.

பிரதமராக நீங்கள் முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது, ஒடிசா வில் நான் ஆற்றிவரும் பணியே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிலளித்தார்.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்தப் பேட்டி, அந்த எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது.

சமீபத்தில் பாஜகவின் ஒடிசா மாநிலப் பிரிவைச் சேர்ந்த தலை வர்கள், மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் எவ்வாறு (எந்த அணி யில் இடம்பெறப் போகிறது) எதிர் கொள்ளப் போகிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரி யிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் இவ்வாறு கூறியுள்ளார்.