Search This Blog

7.10.13

ஈழப் பிரச்சினை : பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக்கும் வித்தியாசம் என்ன? ஜாதி சங்கங்களின் கூட்டம் பற்றி...கி.வீரமணி



ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி
அக்டோபர் 15 அன்று அனைத்து கழக மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்

சென்னை, அக்.7- ஈழத் தமிழர் பிரச் சினையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அற்ற தன்மையில், ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான நட வடிக்கைகளை வலியுறுத்தியும் அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க் காலை 11 மணிக்கு அனைத்துக் கழக 61 மாவட்ட தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை பெரியார் திடலில் இன்று காலை 11 மணிக்குத் செயற்குழுக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 2

அக்டோபர் 15 - ஆர்ப்பாட்டம்

(அ)    ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலைதான் நாளும் தொடர்கிறது.

மனித உரிமை ஆணையத்தின் தலைமை இயக்குநர் இலங்கைத் தீவுக்கு நேரில் சென்று உண்மை நிலைகளை நேரில் கண்டறிந்து வெளியிட்ட அறிக்கை, - ராஜபக்சே அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஈழத் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கு உத்தர வாதம் அளிக்கப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகவே உணர்த்துகிறது.
ஏற்கெனவே ஈழப் போரில் தன் கடமையை அய்.நா. செய்யவில்லை என்று அய்.நா.வின் செயலாளர் பான் கீ மூன் அவர்களே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தத் தவறுக்குப் பரிகாரம் தேடும் வகையில், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கெனவே 2011 ஏப்ரலில் தரூஸ்மன் தலைமையில் அய்.நா. நியமித்த மூவர் குழு தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அய்.நா. மன்றத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

(ஆ)    இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவ கெடுபிடிகளுக்குமிடையே தேர்தல் நடத்தப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் மாநில அரசுக்கு காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளையும் வழங்கப் போவதில்லை; - 13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்து இருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்பதோடு, இதனை அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் அமைப்பி லிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும். நிறவெறி குற்றச்சாட்டின் பேரில் தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த் அமைப்பிலிருந்து இதற்கு முன் நீக்கப்பட்டுள்ளது (1961 முதல் 1994 வரை நீக்கியது) 1995இல் நைஜீரியா நான்கு ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டதுண்டு. 1999 இல் பாகிஸ்தான் இடை நீக்கம் செய்யப்பட்டது. 1987 முதல் 1997 வரை பிஜி தீவும் நீக்கி வைக்கப்பட்டது. 2002இல் ஜிம்பாப்வேயும் காமன் வெல்த்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்த நாடுகளில் நடைபெற்ற போர்க் குற்றங்களைவிட இன ஒழிப்பு உள்ளிட்ட (GENOCIDE) பல மடங்கு கொடுமைகள் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டியதே காமன்வெல்த் அமைப்பின் நேர்மையை நிலைநிறுத்தும்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

அல்லது குறைந்தபட்சம் உடனடியாக இலங்கையில் காமன்வெல்த் நடைபெறுவதை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு காமல்வெல்த் அமைப்பினைக் கேட்டுக் கொள்கிறது. இந்த இரண்டு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள இயலாவிட்டால்  இலங்கையில் நடக்க உள்ள காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாகவே கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

(இ)    ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழித்து இலங்கையில் தமிழினம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று ஆக்குவதற்கான மூர்க்கத்தனமான செயல்பாட்டில் இறங்கி இருக்கும் ராஜபக்சே அரசுக்கு போர்க் கப்பல்களை வழங்குவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவ தாகும். இந்தத் திட்டத்தை அறவே கைவிடுமாறு இந்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பு!

(ஈ)    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் அன்றாட செயல்பாடாகவே ஆகிவிட்டன.

தமிழ்நாட்டு மக்கள் பல வகைகளிலும் தம் அதிருப்தியை வெளிப்படுத்தியும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருமனதாகவே உரத்த முறையில் குரல் கொடுத்துவரும் நிலையிலும், இந்தியப் பிரதமர் அடிக்கடி வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கிளிப்பிள்ளை போல பாடம் படித்து வந்தும் - எல்லாவற்றையும் துச்சமாக மதிக்கும் போக்கை இலங்கை இனவெறி அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்த வகையில் ஒரு சுண்டைக்காய்த் தீவு - வல்லரசாக ஆகப் போவதாகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை அலட்சியப்படுத்துவது -இந்தியத் துணைக் கண்டத்தின் சுயமரியாதைக்குப் பேரிழுக்காகும்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவை, சட்ட விரோதமாக இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததுதான் தமிழக மீனவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு முக்கிய காரணமாகும் என்பதால் கச்சத் தீவினை மீட்பது என்று முடிவு செய்து, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வரும் 15.10.2013 காலை 11 மணிக்கு, 61  கழக மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3
திருச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு

திருச்சியில் வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று திராவிடர் எழுச்சி மாநாட்டினை சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்துத்துவாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவும், மக்கள் மத்தியில் மதச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை, - அவசி யத்தைப் புரியவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத் திடவும், திராவிடர் இயக்கம் கட்டிக் காத்து வந்த உணர்வுகளை நிலைநிறுத்தவும் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இம்மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்திட அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்குமாறு கழகத் தோழர்களையும், தமிழினப் பெருமக்களையும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களையும் மற்றும் சிறு பான்மை மக்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 4 (அ)
உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங் களில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டுள்ள அதே வாய்ப்பு தமிழுக்கும் தரப்படவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4 (ஆ)
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துவோருக்கு வசதியாக தென்மாநிலங்களில் குறிப்பாக சென்னை யில் உச்சநீதிமன்றக் கிளை ஒன்றினை உருவாக்க அனுமதி வழங்குமாறு உச்சநீதிமன்றத்தை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

உயர்நீதிமன்றக் கிளைகளை மாநிலங்களில் அமைப்பதுபோல, உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைத்தால் வழக்கு நடத்து வோருக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
************************************************************************************
 


செய்தியாளர்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஜாதி சங்கங்களின் கூட்டம் நடைபெற்றுள்ளதே?

பதில்: கனவு காணுங்கள் என்று குடியரசு தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் சொன்னதுண்டு. அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் அரசியலில் ஓர் அங்கீகாரம் கிடைக்காதா என்ற நப்பாசையிலும் இப்படி ஜாதிகளை முன்நிறுத்துகிறார்கள்;  தமிழ் நாட்டில் அது எடுபடாது; முதுகில் மூன்றாவது கை முளைத் தால் என்று தந்தை பெரியார் சொன்னதுண்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது அணியும் அது போன்றதே!

கேள்வி: இந்துக் கடவுளைத் தாங்கள் தாக்குவதாகவும் உங்கள்மீது புகார் கொடுத் திருக்கிறார்களே?

பதில்: நன்றாக வழக்குத் தொடுக்கட்டும், அதனை வரவேற்கிறேன். நானே ஒரு வழக்கறி ஞர்தான்; வீதி மன்றத்தில் பேசிக் கொண்டு இருப்பவைகளை - நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துப் பேச நல்ல வாய்ப்பு - அதனை வரவேற் கிறேன்.

@@@@

திருச்சி விமான நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்டுக!
தந்தை பெரியார் தம் தலைமை இடமாகக் கொண்டு பணியாற்றிய இடம் திருச்சி. ஈரோட் டிலிருந்து திருச்சிக்குத் தலைமை இடத்தை மாற்றிக் கொண்டார்.

தந்தை பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் - சிறை சென்றவர் என்ற முறையில் மத்திய அரசு அவருக்குக் தாமிரப் பட்டயம் வழங்கியது. இரண்டு பேருக்கு வழங்கப்பட்டதில் மற்றொருவர் ராஜாஜி.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. 125ஆம் ஆண்டில் மத்திய அரசு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுக் கவுரவித்தது.

யுனஸ்கோ மாமன்றம் விருது வழங்கிச் சிறப் பித்தது. உலகத்தில் பல்வேறு பல்கலைக் கழகங் களிலும் பெரியார் சிந்தனை பாடங்களாக வைக்கப் பட்டுள்ளன; ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன.
அத்தகைய ஒரு சமுதாய விஞ்ஞானியின் பெயர் - அவர் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத் திற்கு சூட்டப்பட வேண்டியது மிக அவசியம். இதற்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு உண்டு, திமுக தலைவர் கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முதலியோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

ஈழப் பிரச்சினை : பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக்கும் வித்தியாசம் என்ன?


கேள்வி: பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர் வாழ்வுக்கு விடிவு கிடைக்கும் என்கிறார்களே?

பதில்: பி.ஜே.பி. ஆட்சி காலத் தில் ஈழத் தமிழர் பிரச்சினையே இல்லையா? அப்பொழுது என்ன செய்தார்கள்? இன்னும்  சொல்லப் போனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு (பிஜேபி தலைமை - என்.டி.ஏ.) அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் (காங்கிரஸ் தலைமை) வெளி யுறவுக் கொள்கையில் எந்த வேறு பாடும் கிடையாதே!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பாது காப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டசு அவர் களின் தனிப்பட்ட ஆர்வம் காரண மாக ஈழத் தமிழர் பிரச்சினையில் நடந்து கொண்டார் என்று சொல் லலாமே தவிர பிஜேபி தலைமை யிலான ஆட்சியின் கொள்கை என்று கூற முடியாது.

நானும், நண்பர் நெடுமாறன் அவர்களும் அந்தத் தூண்டுதலுக்குக் காரணமாக இருந்தோம் என்பதுதான் உண்மை. நண்பர் வைகோ அவர்கள் மத்திய பிரதேசத்துக்குச் சென்று மறியல் நடத்தச் சென்றார் தோழர் களுடன்; அங்கு ராஜபக்சேவை அழைத்ததே பிஜேபியின் சுஷ்மா ஸ்வராஜ்தானே!

பிஜேபி தனியீழத்தை ஆதரிக் கிறதா? அப்படி இருக்கும் பொழுது பிஜேபி வந்தால் தங்கள் எண்ணம் நிறைவேறும் என்று நண்பர் வைகோ போன்றவர்கள் சொல்லு வது எப்படி சரி?

டெசோவுக்குத் தனியீழக் கொள்கை உண்டா என்ற செய்தி யாளர் கேட்ட கேள்விக்கு டெசோ என்ற சொல்லிலேயே தமிழீழம் இருக்கிறதே என்றார்.

- சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 7.10.2013
***********************************************************************************
 
விருத்தாசலத்தில் தமிழர் தலைவர்மீது தாக்குதல்:
அ.தி.மு.க. ஆட்சியில் இதற்குமுன் நான்குமுறை தாக்கப்பட்ட வழக்குகள் போலில்லாமல்
இந்த வழக்கை சரியாக-முறையாக நடத்துக! திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்
சென்னை, அக்.7- விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது நடத்தப்பட்ட தாக் குதல் குறித்த வழக்கை - இதற்குமுன் அ.தி.மு.க. ஆட்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தாக்கப்பட்டபோது வழக் கினைச் சரியாக நடத்தாமல்விட்டதுபோல அல்லாமல், இந்த முறை வழக்கினை சரியாக, முறையாக நடத்த வேண்டும் என்று  தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் இன்று (7.10.2013) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:

விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாணவரணி மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களை 30 பேர் கொண்ட ஜாதிவெறி - மதவெறிக் கும்பலின் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

காவிக்கொடி காட்ட இருப்பதாக மேற்கண்ட கும்பல் காவல்துறைக்குத் தெரிவித்திருந்தும், காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, அவர்கள் ஜாடை காட்டியே இந்த வன்முறை நடந்திருக்கிறது என்று நம்புவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகவே இச்செயற்குழு உறுதியாகக் கருதுகிறது. மாநாட்டுக்கும், பேரணிக்கும் காவல்துறை அனுமதி அளித்த நிலையில், மாநாட்டுக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலை வருக்குப் போதுமான பாதுகாப்பு அளிப்பது தனது கடமை என்பதைக் காவல்துறை மறந்ததா?- திட்டமிட்டு வன் முறைக்குத் துணைபோனதா? என்பது முக்கியமான தாகும். தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தாக்கப்பட்ட காட்சி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் படங்களுடன் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் தங்கள் கண்டனங்களையும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகும் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. முறையாக விருத்தாசலம் காவல் துறை ஆய்வாளரிடத்திலும் மாவட்ட காவல்துறைக் கண் காணிப்பாளரிடமும் (கடலூர்) புகார்கள் கொடுக்கப்பட்டும் அவற்றின்மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்த பிறகு, தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்திய பிறகு, காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து, தலை மைக் கழகத்தின் சார்பில் புகார் கொடுத்து வலியுறுத்திய பிறகு, மிகவும் காலந்தாழ்ந்து ஒரு வாரத்திற்குப் பின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் பா.ஜ.க., மற்றொருவர் இந்து முன்னணி என்பதிலிருந்து, விருத் தாசலத்தில் தமிழர் தலைவர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு காவல்துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
அ.இ.அதிமுக ஆட்சியில் இதற்கு முன் நான்குமுறை கழகத் தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றது; அவற்றின் மீது உரிய முறையில் வழக்குகள் நடைபெறவில்லை; எந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்படவும் இல்லை; அதே நிலை இந்த வழக்கிலும், இந்த அ.இ.அதிமுக ஆட்சியில்  தொடரக்கூடாது என்பதையும் இச்செயற்குழு வலியுறுத்து கிறது.

கழகத் தலைவருக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை அளிக்கத் தவறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கழகமே மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

கழகத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும், அமைப்புகளுக்கும் இச்செயற்குழு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. நலம் விசாரித்த பெருமக்களுக்கும் நன்றியினை வெளிப்படுத்திக் கொள் கிறது.

துண்டறிக்கைகள்
தமிழர் தலைவர் தாக்கப்பட்டது குறித்து உண்மை நிலையையும், பின்னணியையும் விளக்கும் வண்ணம் துண்டறிக்கைகள் தயாரித்து தமிழ்நாடு தழுவிய அளவில் பொதுமக்களுக்கு வழங்குவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

உண்ணாவிரதத்தைக் கைவிடுக!

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, குறிப்பாக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் உண்ணாவிரதம் மேற் கொண்டுள்ளார். அவர் நோக்கம் சரியானதே - ஆதரிக்கிறோம்.

இன்றுதான் வெளியூர்ப் பயணத்திலிருந்து சென்னை வந்தேன். அவரைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கும். அதேநேரத்தில், உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வேறு வகையான போராட்ட முறைகளை மேற்கொள்ளலாம். தோழர் தியாகு போன்றவர்களின் உயிர் மிக முக்கியமானது. மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தருமபுரியில் தடை உத்தரவை நீக்குக!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இவ்வளவு காலம் தடை நீடிப்பது ஏன்? தடையுத்தரவு பிறப்பிப்பதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. அசாதாரண சூழலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இத்தகைய ஆணைகளைப் பிறப்பிக்கலாம். அதேநேரத்தில், 10 மாதங்களுக்குமேல் தடை என்பது எப்படி சரி? ஏதோ ஒரு மினி எமர்ஜென்சி நாட்டில் நடைபெறுகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு அல்லவா இருக்கிறது!
பேச்சுரிமை, கருத்துத் தெரிவிக்கும் உரிமை, பொதுக்கூட்டங்கள் நடத்தும் அடிப்படை உரிமைகளை காலகெடுவின்றி தடுப்பது சரியல்ல - உடனே நீக்கிக் கொள்ளப்படவேண்டும்.
                  --------------------------------”விடுதலை”  7-10-2013

41 comments:

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


மோடியின் கர்மயோக்!



திடீரென்று குஜராத் முதல் அமைச்சர் மோடிக்குக் கழிவறை பற்றிய கவலை, கூரையைப் பிய்த்துக் கொண்டு குதிப்பது ஏன்?

தன், மதம் சார்ந்த முகமூடியைக் கொஞ்ச காலத்திற்குக் கழற்றி வைத்துவிட்டு, வெகு மக்களின் அடிப்படை நலனில் அக்கறையும், கவலையும் கொண்டவர் போல பாவனை செய்து பாமர மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நப்பாசைதான் காரணம்.

இதே மோடி, மலம் எடுப்பவர்களைப்பற்றி என்ன சொன்னார்? நினைவிருக்கிறதா?

‘Karmayok’ என்ற நூல், மோடியால் எழுதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டது மாநில அரசின் செய்தி விளம்பரத் துறையாகும்.

அந்த நூலில் அவர் என்ன எழுதியிருக் கிறார்?

Scavenging must have been a spiritual
experience for the valmiki caste. at some time some body have got enlightment in scavenging, they must have tought that it is their duty to work for the happiness of the entire society and the gods

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம்; அவர்கள் செய்யும் வேலை சமூகத்தில் மகிழ்ச் சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகவும் கருதலாம் - இதுதான் கர்மயோக் என்ற நூலில் மோடி குறிப்பிட் டுள்ள பகுதியாகும்.

மலம் எடுக்கும் தொழிலைக் கேவலமாகக் கருதிய காலம் உண்டு. மலம் எடுப்பதற்கென்றே தனி ஜாதியும் இந்து வருணாசிரம அமைப்பு முறையிலும் உண்டு; அதைத்தான் வால்மீகி ஜாதி என்று மோடி குறிப்பிடுகிறார்.

அந்தத் தொழிலை, இழிவு என்று கருதி, அம்மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அரும்பும் நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகப் போராடி, அதனைப் பெற்று வரும் ஒரு கால கட்டத்தில், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, அரசே வெளியிட்ட நூலில், மலம் எடுப்பதை இழிவான தொழிலாகக் கருதாதீர்கள். அந்தத் தொழிலைச் செய்வதானது கடவுளுக்குச் சந்தோஷத்தைத் தரக் கூடியது என்று சொல்ல முன் வருகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மற்றபடி மோடி மட்டுமல்ல, இந்துத்துவாவின் அடிப்படை ஞானம் என்பது கர்மா கொள்கை யாகும். போன ஜென்மத்தில் செய்தவைகளுக்கு ஏற்ப பலா பலன்கள் அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும். அதற்கான ஏற்பாட்டை ஆண்டவன் அவனவன் நெற்றியிலே எழுதி வைத்து விட்டான் என்பதுதான் இந்து மதத்தின் கர்மா தத்துவமாகும்.

அந்த வகையில் பார்த்தால் மலம் எடுக்கும் தொழிலைச் செய்யக் கூடிய தோழன், போன ஜென்மப் பலனின் அடிப்படையில் இந்த மலம் எடுக்கும் தொழிலைச் செய்கிறான் என்பது தான் இந்து மதத் தத்துவம்.

பிறப்பின் அடிப்படையிலே ஒவ்வொரு ஜாதி அதன் அடிப்படையிலே குலத் தொழில் என்பது தான் இந்து மதம் உருவாக்கி வைத்திருக்கும் கேவலமான சமூக அமைப்பு முறையாகும்.

இந்த இந்துத்துவாவை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களுக்கு இப்பொழுது என்ன நவீன கழிவறையைப் பற்றிய கவலை?

எண்ணெய் ஆட்டுபவனும், மளிகைக் கடை வைத்திருப்பவனும் எதற்குப் படிக்க வேண்டும்? சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட பாலகங்காதர திலகர்தானே இவர்களின் இந்துத்துவா குருநாதர்?

மோடி கர்மயோக் என்ற நூலை வெளி யிட்டபோது அதனைக் கொளுத்தும் போராட் டத்தைத் திராவிடர் கழகம் நடத்தி, திராவிடர் கழகத் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனரே! (11.12.2007).

இந்த வரலாற்றை எல்லாம் மக்கள் மறந் திருக்கலாம், திராவிடர் கழகம் மறக்காது - அம்பலப்படுத்தும் - இன்னும் மோடியைப்பற்றி நிறையவே இருக்கிறது - தேவைப்படும் பொழு தெல்லாம் அம்பலப்படுத்துவோம்!

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

முக்கியமாக சர்க்கரை நோயாளி கள் தங்களுடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு (Blood Sugar), பட்டினியாக இருந்து அளந்து பார்க் கையில் 110 மி.கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதாகும்! சாப்பிட்டு பின் எடுக்கப்படும் Post Praudial
உணவுக்குப்பின் அளவு 140-க்கு மேல் இருக்கக் கூடாது என் றும் கூறி, அதனை உணவுப் பழக்கங் கள், உடற்பயிற்சி, மருந்துகள் ஆகிய மும்முனைகளில் விழிப்புடன் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்களின் அறிவுரையாகும்!

இதில் சர்க்கரை அளவு திடீரென்று மிகவும் குறைந்தால் (அதாவது 60-க்கும் கீழே போய் விட்டால்) ‘Hypoglazemia அய்ப்போகிளேசிமியா என்று கூறுவர். அதனால் இந்த Low Sugar
சர்க்கரை அளவு திடீர்க் குறை வினால், கைகளில் உதற ஆரம்பித்து, படபடப்பு ஏற்பட்டு, மயக்கம் ஏற்பட்டு விழுந்து விடக் கூடிய ஆபத்து உண்டு. அவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதை எப்போதும் ஒரு அட்டையில் எழுதி வைத்திருப்பது நல்லது இது மாரடைப்பு வரை கொண்டு சென்று உயிர்க் கொல்லியாகவும் மாறி விடக் கூடும்! சர்க்கரை இரத்தத்தில் மிகுதியாக இருப்பின்கூட அது உடனடியாக உயிர்க்கு ஆபத்தை உண்டாக்காது! சர்க்கரை குறைவுதான் அதனை ஒப்பிடுகையில் மிகவும் ஆபத்து,

உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உள்ள இவ்வகை நோயாளிகள் இந்த சர்க்கரைக் குறைவு காரணமாக விபரீத விளைவுகளில் சிக்கி விடக் கூடும்!

இன்சுலின் மருந்தை, தினமும் ஊசி போட்டுக் கொள்ளுவோருக்கு வசதியாக இப்போது மருத்துவ தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக புதுப்புது கருவிகள் தடுப்பணைகளாக நிற்க கண்டுபிடிக்கப் பட்டு, சர்க்கரை நோயாளிகளைக் காப்பாற்ற வருகின்ற நல்ல செய்திபற்றி இன்றைய இந்து (ஆங்கில) நாளேட்டில்,மும்பையைச் சேர்ந்த டாக்டர் சதிஷ்குமார் கர்க் என்ற சர்க்கரை நோய் நிபுணர், டாக்டர் மோகன் சர்க்கரை ஆய்வு நிலைய தங்க மெடல் சொற்பொழி வில் குறிப்பிட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது!

இன்சுலினின் அளவு உடலுக்குள் ஏற்றப்பட, ஒரு வகை பம்பு மூலம் செலுத்தப்படும்போது அதுவே சர்க்கரை அளவு குறையாது பாதுகாக்கும் கருவியாகவும் பயன்படுமாம்! இக் கருவியை அய்ரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் மருத்துவ நிபுணர்களும் குழுவும் அங்கீகரித்து விட்டனராம்!

இன்னும் அமெரிக்கா தனது அங்கீ காரத்தை வழங்கவில்லையாம்!

5 லட்சம் சர்க்கரை நோயாளிகள் அமெரிக்காவில் - இன்சுலின் பம்பு களைப் பயன்படுத்தி வருகின்றனராம்!

HBAIC - என்ற சர்க்கரை அளவு ஒழுங்குப்படுத்தப்படும் பம்புகளாகவும் அமைக்கப்பட்டு சிறு சிறு துளிகளாக உள்ளே செலுத்தப்படுகிறதாம்!

விரைவில் - 5 ஆண்டுகளுக்குள் செயற்கை கணையம் (Artificial Pancreus)வந்து விடுமாம்! அதில் இன்சுலின் பம்ப்பும் சென்சரும் (Sensor) இணைக்கப்பட்டு, அளவு குறையும்போது எச்சரிக்கை மணி ஒலிப்பது போல் உடனே குறிப்புக் கூறுமாம்! உடனே சரி செய்ய வாய்ப்பும் ஏற்படுமாம்!

இது இரண்டாவது புத்தாக்க மாகும் (Second innovations)

மூன்றாவதும் தயார் நிலையில் உள்ளதாம்! முன்கூட்டியே கணக் கிட்டே எச்சரிக்கை ஒலி வருமாம்!

என்னே மருத்துவ மின்னணு தொழில் நுட்பச் சாதனை!

பாராட்டுங்கள் - பழைமையைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

புதுமையை வரவேற்கக் கற்றுக் கொள்வோம்.

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணிய சுவாமிக்குப் போட்டியாக புறப்பட்டிருக்கும் தமிழருவி மணியன்


- ப.கவிதாகுமார்

காந்தீய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக் கூட்டம் மதுரையில் காந்தி பிறந்த நாளான அக்டோபர்-2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை விளக்கி திராவிட கட்சிகளுக்கு இணையாக காந்திய மக்கள் இயக்கம் பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தது. திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே திராவிடக் கருத்தாக்கத்திற்கு எதிராக எழுதி வரும் தமிழருவி மணியனோடு, தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற வைகோவும் முழங்குவார் என்ற முழக்கங்களோடு இருந்த போர்டுகள் ஒரு தினுசாகவே இருந்தது. மகாத்மா காந்தியை பெயரில் மட்டுமின்றி தனது இயக்கக் கொடியிலும், வலை தளத்திலும் பயன்படுத்தி வரும் தமிழருவி மணியன் பெயர், நரேந்திர மோடி நாமாவளியைத் தொடர்ந்து பாடுவதால் என்னவோ பாஜக கலரில் சுவரொட்டிகளில் எக்குத்தப்பாக காட்சி தந்தது. காந்தி பிறந்த நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழருவி மணியன் தங்கு தடை யின்றி பேசிய பேச்சு மாற்று அரசி யலைப் பற்றித்தான். அந்த மாற்று என்னவென்றால் மகாத்மா காந் தியைச் சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் என்ற நச்சுப் பாம்பின் குட்டியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான்.

தமிழ் ஓவியா said...


நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும் என்றார் மகாத்மா காந்தி. தமிழருவி மணியனிடம் துவங்கிய மாற்றம் 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் துவங்கி காற்றில் அலையும் காகிதம் போல, 40 ஆண்டு காலமாக காங்கிரஸ், பின் ஜனதா, அதன் பின் ஜனதாதளம், அதன் பின் தமாகா, மீண்டும் காங்கிரஸ் என தான் விரும் பிய மாற்றத்தை அவரிடம் இருந்தே துவக்கினார். இதன் பின் காந்திய அறிவியல் இயக்கமாகத் துவங்கி தற்போது 4 ஆம் ஆண்டு கொண் டாடும் காந்தீய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மாவீரன் நெப்போலி யனின் நான் மற்றவர்களைப் போல மனிதன் இல்லை என்ற முழக்கத்தை தனது வலைத்தளத்தில் எழுதி வைத்த தில் இருந்து தமிழருவியை புரிந்து கொள்ள முடியும் அவர் ஒரு வித்தி யாசமானவர் என்பதை.ஊருக்கு நல்லது சொல்வேன் என்று இலக்கிய மேடைகளில் முழங்கிய தமிழருவி மணியன் அக்டோபர்-2ஆம் தேதி மதுரையில் என்ன பேசினார்? அவரது இயக்கத்தின் கொள்கையான இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, அகண்ட பாரதம் பற்றி கனவு காணும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசினார். காந்திய மக்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சியின் நலனுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இயங்காது என்று கூறி விட்டு மோடிக்கு ஆள் பிடிக்கும் வேலை யில் ஏன் தமிழருவி இறங்கினார்? மனித குலத்திற்கு அமைதியையும், நல்வழியை யும் கொண்டு சேர்ப்பதே அனைத்து மதங்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்ற சமய நல்லிணக்கத்தை தனது இயக்கத்தின் கொள்கையாய் வரிந்து வைத்துள்ள இவர் மதச்சார்ப்பற்ற கொள் கைக்கு வேட்டு வைக்கும் பாஜகவுக்கு எப்படி ஜால்ரா தட்டிப் பேசினார்? வர்ணாச்சிரம மதத்தின் கேடுகெட்ட சாதியபடிநிலை, மனிதர்களை சாதிகளின் கூறுகளாகப் பிரித்துப்போட்டுள்ளது. பிராமணீய மேலாதிக்க இந்துத்துவா கொள்கைகளைத் தனது கொள்கை யாகக் கொண்ட பாஜகவின் மோடியை ஆதரிக்கும் தமிழருவி, அவரது இயக்கத் தின் கொள்கையான இரட்டைக்குவளை போன்ற தீண்டாமை அடையாளங்களை மோடிக்காக அடகு வைத்து விடுவாரா? பாஜகவின் ஞானகுருவான சங்கரச்சாரி யின் சொல்லில் சொல்வதென்றால், வீட்டை விட்டு வெளியே போகும் பொம் பளைங்க கெட்டவங்க என்ற இந்துத்துவா வின் கருத்தாடலை ஆண்- பெண் சமத்துவம் பேசும் தமிழருவி, இனி மேடை மேடையாய் எப்படி தனது குரலில் பேசு வார்? தமிழ் நீச பாஷை, சமஸ்கிருதமோ சிறந்த பாஷை எனக்கூறி பாஜக

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியில் இருந்த போது சமஸ்கிருத ஆண்டு கொள்கைவாதிகளை தற்போது தாங்கிப் பிடித்திருக்கும் தமிழருவி, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை பேச முடியுமா?தமிழகத்தில் மாற்று அரசியல் அணி அமைவதற்கு பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் முதலில் நெருங்கி வரவேண்டும் என்று ஜோசியக்காரன் குருவும், கேதுவும் கொஞ்சம் நெருங்கனும் என்பது போல பேச துவங்கியுள்ள தமிழருவி, 15 விழுக்காடு வாக்காளர்கள் தமிழகத்தில் மோடியை பிரதமராக்க விரும்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பை வெளியிட் டுள்ளார்.

சன் தொலைக்காட்சியும், ஏ.சி. நீல்சன் குழுவையும் கொண்டு ஏதாவது கருத்துக்கணிப்பை தமிழருவி மணியன் நடத்தினாரா என்று தெரியவில்லை! மோடி இந்தியாவின் பிரதமர், வைகோவை தமிழகத்தின் முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என சண்டமாருதம் செய்யும் தமிழருவி மணியன், மதிமுகவும், தேமுதிக வும் ஒரே அணியில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் விஜய காந்த், முதலமைச்சராக ஆகமாட்டேன் என்று பாலில் அடித்து தமிழருவி மணி யனிடம் சத்தியம் செய்து கொடுத்தாரா என்று தெரியவில்லை. இரண்டு பேரிடமும் பேசிவிட்டேன் என்று பேசும் தமிழருவி, என்ன பேசினார் என்று தெரிவிக்கத் தயாராக இருக்கிறாரா? மாற்று அணியை உருவாக்க கம்யூனிஸ்டுகளை அணுகி னேன். ஆனால், அவர்கள் அதற்கு ஆதரவு தரவில்லை என்று பேசிய தமிழருவி, ஆறு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் மாற்று அரசியலை உருவாக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்பதற்கு இதைவிட வேறு சான்று சொல்ல முடியுமா? தேசிய அளவில் ஒரு மாற்றை உருவாக்க தமிழருவி மணியன் என்ன ராஜ தந்திரியா? காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் தன்னுடைய ஒரேவேலை என்று மதுரை மேடையில் முழங்கிய தமிழருவி மணியன், மதுரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரின் விடுதியில் தான் வசதியாகத் தங்கியிருந்தார் என்பதை பகிரங்கமாக சொல்லத்தயாரா? இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றிலும், இந்திய அரசியலிலும்

தமிழ் ஓவியா said...

பல தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் ஆட்சியை உருவாக்கிய வரலாற்றை மறந்து விட்டு, வானுலகத்தில் இருந்து குதித்து வந்த தேவமகனைப் போல, தமிழருவி மணியன் சொன்னவுடன், இந்தியாவில் மோடியை பிரதமராக்கி விட்டு தான் மக்கள் அடுத்த வேலை பார்க்கப்போவார்கள் என்பது போல பேசுகிறார்.யாருக்கும் புரோக்கர் வேலை செய்யவில்லை என்று கூறும் தமிழருவி, தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை பார்த்து பேசிவிட்டு தனது மோடிபுராண ஊர்வ லத்தை ஆரம்பித்ததற்கு என்ன பெயர்? காமராசரின் காலடியில் பாடம் படித்தவன் என்று கூறிய தமிழருவி, காமராசரை கொல்ல முயன்ற இந்துத்துவாக் கூட் டத்தை ஆதரித்து என்ன பேசினார் தெரியுமா? இந்திரா காந்தியிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இந்துமதவாதி களுடன் காமராசர் கூட்டணி அமைத் தார். அவர் என்ன மதவாதியா ? எனக் கேள்வி எழுப்பிய தமிழருவி, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நீதிமன் றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை ஒப்பித்து விட்டு காந்தியை உயர்சாதி யினரும் ஏற்கவில்லை.

தலித்துகளும் ஏற்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். அவர் பெயரில் இயக்கத்தை வைத்துக்கொண்டு கோட் சேக்கு ஆதரவாக எப்படி பேச முடிந்தது தமிழருவி மணியனால்? கடைசியாக பேசிய அவரின் பேச்சுகள் தான் ஆபத்தின் உச்சமாக இருந்தது. பாஜக, மாற்று அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்வதுடன், காங்கிரஸ் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மை உணர்வை எப்படி காயப்படுத்தக் கூடாதோ, அதே போல இந்துத்துவா உணர்வையும் காயப்படுத்தக்கூடாது. என்னை வகுப்புவாதி என்றோ, மத வாதி என்றோ சொன்னால் எனக்கு கவலையில்லை. ஆயிரம் பழிகளை சுமக்கத் தயாராக இருக்கிறேன் என்று வியாக்கியானம் பேசினார். ஆயிரக்கணக்கான அப்பாவி மக் களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றுகுவித்த நரமோடியின் நவீன தூதர் ஆயிரம் பழிகளை என்ன, இலட் சம் பழிகளையும் சுமக்கத்தயாராகத் தான் இருப்பார்.இத்தோடு விட்டாரா என்றால் இல்லை.மோடி மீது இளை ஞர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள் ளது. படித்த நடுத்தரவர்க்கத்திற்கு கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடந்த கலவரம் தெரியாது என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.படித்த இளை ஞர்களை இவரை விட யாரும் இவ் வளவு கேவலப்படுத்த முடியாது. உலகமே கிராமமாய் சுருங்கியுள்ள நிலையில், அடுத்த நாட்டில் நடை பெறுவதை அடுத்த நொடியில் கையில் உள்ள அய்போனில் பார்த்துக் கொண் டிருக்கும் இளைஞர்களை எதுவும் தெரியாதவர்களாக நினைக்கும் தமிழருவி மணியன், மறதியை வைத்து அரசியல் நடத்தலாம் என நினைக் கிறார். தமிழருவி மணியனுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? பாஜகவின் மோடிக்காக பிரச்சா ரத்தை துவக்கியுள்ள தமிழருவி கொள்கையற்றவர். என்பதற்கு, அவ ரின் எழுத்தே சான்றாக இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் நட்புக்கு முதலிடமளித்து மோடி ஒரு மூன்று தொகுதிகளுக்காக பாஜகவை போயஸ் தோட்டத்தில் அடகுவைக்கப் போகலாம். விஜயகாந்த் ஏதோவொரு கணக்குப் போட்டு திமுக - காங்கிரஸ் வலையில் விழலாம். ஒன்றும் சரிப்பட்டு வராத நிலையில் வைகோ தனிவழி நடக்கலாம். அவர்கள் முடிவில் தலை யிட நான் யார்? பாழ்பட்ட அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியல் திசை வழியறியாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியன் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் இடத்தைப் பிடிக்காமல் விடமாட்டார் போலிருக் கிறது!

- நன்றி: தீக்கதிர் 7.10.2013

தமிழ் ஓவியா said...


மழைவேண்டி பாடைகட்டி ஒப்பாரியாம்!


கலசப்பாக்கம், அக்.7- கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் மழைவேண்டி, பொதுமக்கள் பாடை கட்டி ஒப்பாரிவைத்து, கொடும்பாவி எரித்தனராம்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழையில்லாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் குடும்பத்துடன் திருப்பூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்குக் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் நெல்விதை பயிர் செய்துள்ளனர். ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் மேற்கொண்டு பயிர் செய்ய முடியாமல் உள்ளனர்.

இதனால் தேவனாம்பட்டு கிராம பொதுமக்கள், பெண்கள் ஒன்றுகூடி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உருவப்பொம்மை ஒன்றைச் செய்து அதை பாடையில் வைத்து மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்தனராம். பின்னர் பொம்மையை பாடையில் வைத்து மேள தாளத்து டன் தூக்கிச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்தனராம்.

தமிழ் ஓவியா said...


மஞ்சள் காமாலை வருவது ஏன்?


மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத் தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை.

நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத் திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?

வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப் படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரைச் சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது செல்லும் பித்தநாளத் தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர். அப்ஸ்ட்ரக்டிவ் என் றால் அடைப்பு என்று பெயர்.

பாதிக்கப் பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்

ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்

தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்


தசை மற்றும் எலும்புகளின் ஆரோக் கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமா கலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவ தில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப் படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்சினை இது... என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய வலிகள், அவற்றைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், சிகிச்சைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். தசைகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான கால்சியம் சத்தை உருவாக்க வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டியானது சூரியஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. நம் சருமமானது, சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி சத்தை தானே தயாரித்துக் கொள்ளும்.

அதுதான் உடலில் கால்சியம் சத்தைத் தக்க வைக்க உதவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும், கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்சினை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.

தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறி குறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள். எதிலுமே பலன் இருக்காது.

சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடிபட்டாலே தொடை எலும்புகளும், முது கெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்கு வதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம்.

24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்...

என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி


நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்ற நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்ச்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும். முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும், பற்களும் உறுதியாகும்.

தமிழ் ஓவியா said...

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து,
'உன் மகளுக்கு எப்போது திருமணம்?'என்று கேட்டால்,
'ஏன் என்னைக் கேட்கிறாய்?- என் மகளைக் கேள்' என்பான்.
'உன் மகனுக்கு எப்போது கல்யாணம்?'என்றால்,
'அவனைக் கேள்' என்பான்.
அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.'' - (14.7.1971 அன்று மாப்படுகையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) விடுதலை, 23.7.1971.

தமிழ் ஓவியா said...

" நம் நாட்டு அரசியல்,கழுதை புரண்ட களமாகி விட்டது.என்ன செய்தாவது பதவிக்கு வர வேண்டும், பணம் கொடுத்து பதவிக்கு வர வேண்டுமென்று பாடுபடுகிறான். இன்னும் கொஞ்சம் நாள் போனால் தனது மனைவியை விட்டுக் கூட ஓட்டுப் பெறுவான் அவ்வளவு கேவலமாகப் போய் விட்டது.15 ஆயிரம், 20ஆயிரம், 50ஆயிரம் ரூபாய் என்று சாதாரண பஞ்சாயத்து எலக்ஷ னுக்குச் செலவு செய்கிறான். ஏண்டா இவ்வளவு செலவு செய்கிறாயே என்றால் இதைப் போல பல மடங்கு சம்பாதிக் கலாம் என்கின்றான்.
எந்தக் கட்சிக்காரனும் தனது கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்பதில்லை. பணத்தைக் கொடுத்துத் தான் ஓட்டு வாங்குகிறான் இப்படி பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறவன் எப்படி லஞ்சம் வாங்காம லிருப்பான். இந்த முறை ஒழி யாதவரை இந்தக் கோளாறுக ளெல்லாம் இருந்து கொண்டு தானிருக்கும். இதை ஒழிக்க முடியாது ! "

= 09-.09.-1970 அன்று தொட்டியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 17.-09.-1970)

தமிழ் ஓவியா said...

இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம்.அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம்.நாளை நம் இளைஞகர்கள் இப்படியே இருந்துவிட மாட்டார்கள்.இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்.கத்திமுனையில் பிரிவினை கேட்பார்கள்.ஆட்சியாளர்கள் இப்படியெல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்கு பிரித்து கொடுத்துவிட வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன்.

- பெரியார்(விடுதலை - 27.01.1950)

தமிழ் ஓவியா said...


மோடி ஆளும் ஆட்சியின் பரிதாபம் குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவு மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தகவல்


ஆமதாபாத், அக்.8- குஜராத் மாநிலத்தில், மூன்றில் ஒரு குழந்தை, எடை குறைவாக பிறப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஜி., சார்பில், குஜராத் சட்டசபை யில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கை: குழந்தைகள், ஊட்டச் சத்து குறைவாக இருப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. குஜராத்திலும், இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஆனாலும், குஜராத்திலும், 63 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை.

குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 75 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தேவை. ஆனால், 50 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தான் செயல்படுகின்றன. குஜராத்தில், மூன்று குழந்தைகள் பிறந்தால், அதில் ஒரு குழந்தை, எடை குறைவாகப் பிறக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், சரியாகச் செயல்படாதது தான், இதற்கு காரணம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட் டுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இதன்மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மோடியின் மாதிரி இப்போது வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காந்தி நகருக்கு மிக அருகிலுள்ள அகமதாபாத் நகரிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கட்டடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்கள் - ஒரு ஜெர்மானியர் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 8- அறிவி யல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத் துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகை யில், இந்த ஆண்டின் மருத்துவத் துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்குத் தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம், உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.

இந்த துல்லியமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அமைப் பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் தாமஸ் சுடாப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண் டறிந்து வெளியிட்டுள்ளனர். நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் ஜேம்ஸ் ராத்மேன், யாலே பல்கலைக்கழகத்திலும், ஷேக்மேன் கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும், சுடோப், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத் திலும் பேராசிரியர்களாக பணி யாற்றி வருகின்றனர்.

இயற்பியல், வேதியியல், இலக் கியம், அமைதி மற்றும் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத் திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ் வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோனா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.7 கோடி) மதிப்புடையதாகும்.

தமிழ் ஓவியா said...


அக்டோபர் எழுச்சி


உலகில் அக்டோபர் புரட்சி பற்றிப் பேசுகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இந்த அக்டோபர் மாதம் பல முக்கிய நிகழ்வுகளின் சங்கமமாக அமைகிறது.

செப்டம்பரின் இறுதிப் பகுதி அதற்கான தொடக்கத்தைக் கொடுத்து விட்டது என்று சொல்லலாம்; செப்டம்பர் 28இல் விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணியின் மண்டல மாநாடும் அதனையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலும் பெரிய அலைகளை நாட்டில் எழுப்பி விட்டன.

திராவிடர் கழகத் தலைவர் மீது தொடுக்கப்பட்ட அந்தத் தாக்குதல் தனி நபர் மீதான ஒன்றல்ல - ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு மற்றும் பிற்போக்குச் சக்தி களை நோக்கிய எதிர்ப்பு என்கிற வகையில் கட்சி களைக் கடந்து பேரலையைத் தட்டி எழுப்பி விட்டது.

இவற்றின் குறியீடாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், அதன் தலைவர் மீதான தாக்குதலை முற்போக்குச் சக்திகள் தங்களுக்கான ஒன்றாகக் கருதி எடுத்துக் கொண்டது - நல்லதோர் அறிகுறி யாகும். தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஒன்றும் கெட்டுப் போகவில்லை; தந்தை பெரியார் விதைத்த வித்து, வீறு கொண்ட எழுச்சியாக - சில நேரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பச்சையான அரசியல் நோக்கு என்ற சுயநலச் சிறையில் சிக்கிக் கொண்ட ஒரு சிறு எண்ணிக்கை கொண்டவர்களைத் தவிர, மற்றபடி பொதுவாகத் தமிழ் மண்ணில் முற்போக்குச் சிந்தனை வீறு கொண்டு இருப்பதை இந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்திக் காட்டி விட்டன.

குறிப்பாக ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி ஏதோ பெரிய புரட்சி நடத்தப் போவதாக தத்தம் முதுகுகளில் தம்பட்டங்களைக் கட்டிக் கொண்டு டாம் டாம் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் நோக்கம் எல்லாம் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நாக்கில் எச்சில் ஊறிக் கிடக்கும் சமாச்சாரம் தான்.

அற்பக் கணக்கில்கூட ஜாதிக் கூட்டங்கள் வெற்றி பெற முடியாது தமிழ்நாட்டில் என்பது - இதற்கு முன்பும் எத்தனையோ முறை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் பாடம் புகட்டி இருந்தும், இதுவரை புத்திக் கொள் முதல் பெறவில்லை என்பது பரிதாபமே!

இன்னும் - சிலருக்கு மதவாத சக்திகளோடு ஆலிங்கனம்! அவர்கள் பெரியார், அண்ணா பெயரைக் கூட உச்சரிப்பார்கள். ஏன் சில நேரங்களில் பகுத்தறிவு கூடப் பேசுவார்கள்; மேலும் மதச் சார்பின்மை பற்றியும் ஆவேசமாக பேசுவார்கள். இவர்கள் அத்தனைப் பேர்களும் முகத்திரை கிழிந்து பரிதாபகரமான பள்ளத்தாக்கில் விழுந்து எலும்புகளை இழந்து விடப் போகிறார்கள்.

தேர்தலுக்குமுன் ஒரு கூட்டு - தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டு என்ற முதுகுக்குப் பின்னால் முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். அதில்கூட அறிவு நாணயம் இல்லையே!

என்னதான் மோடிகளை முன்னிறுத்தினாலும், கோடி கோடியாகப் பண வெள்ளத்தை கரை உடைத்து ஓடச் செய்தாலும் பிள்ளை பிழைக்கப் போவதில்லை.

விருத்தாசலம் மாநாடு எடுத்துக் கொடுத்து விட்டது - அக்டோபர் 20 திண்டிவனம் கழகப் பொதுக் குழுவும் சங்கநாதம் செய்யும் - திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடும் - இந்தியாவுக்கே பல செய்திகளைக் கொடுக்கப் போகிறது.

பிஜேபிக்கான, குறிப்பாக அவர்களின் பிரதம ருக்கான வேட்பாளர் திரு. நரேந்திரமோடி, மதச் சார்பின்மை என்பதை வேறு ஒரு தடத்திற்கு இழுத் துச் சென்று, ஏதேதோ தமது மனதிற்குப்பட்டவற்றை எல்லாம் சம்பந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதச் சார்பின்மையை மறு தலிக்கவும் முடிய வில்லை. அதே நேரத்தில் ஒப்புக் கொள்ளவும் மனம் இல்லை; ஆகவே மதச்சார்பின்மை என்பதற்கு தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் சொல்ல முற்பட் டுள்ளனர்.

மதச் சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் இல்லை என்பதுதான். அதனை மறைத்து விட்ட நிலையில், தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கான அடிப்படைத் தகுதியை எப்படிப் பெற முடியும்?

இந்த அடிப்படையை இந்தியாவிலேயே சற்றும் பிசிறு இல்லாமல் செவ்விய முறையில் சொல்லிக் கொடுக்கும் பாடம் நமது இயக்கத்திற்குத்தான், நமது தலைவருக்குத் தான் உண்டு.

அக்டோபர் மாதம் நமது கழகத்திற்கு முக்கிய மானது. திண்டிவனம் பொதுக் குழுவில் அதற்கான வெளிச்சம் கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களைச் சந்திப் பார்கள் சந்திப்போம்!

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்.

விடுதலை, 22.9.1972

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களுக்கு அரணாவோம்!


தந்தை பெரியார் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து அதன் மூலம் நம்மையெல்லாம் மனிதர்களுக்கு பாதுகாப்பாய் வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அவர்கள் போட்டுத் தந்த பாதை யில் எந்த வித சபலத்திற்கும் ஆளா காமல், ஆளாக்காமல் நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள்.

தலைவர் அவர்களின் பெருமை களைப் பொறாதவர்கள் அவர்கள் மீது அபாண்டமாய் பழிகளை வீசி வருகின்றனர். அவற்றால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், அப்பழிகளே பூமராங் போல வீசியவர்களிடமே சென்றடைகின்றன.

மனைவிமீது கோபங் கொண்ட பார்ப்பனன், தன் மனைவியை பார்த்து, உனக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை உடுத்தி மூலை யில் உட்கார வைக்க வேண்டுமடி என்றானாம். கோபத்தின் உச்சியிலி ருந்த பார்ப்பனன் தான் செத்தால் தான் இது நடக்கும் என்பதைக் கூட உணர முடியவில்லை.

இது போலவே மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகன் தாலியறுக்க வேண்டும் என்றெண்ணுகிற மாமியார் களும் உண்டு. இப்படிப்பட்ட அவலச் சிற்றின்பக்காரார்கள் நாட்டில் நிறைய உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசு இயந்திரங்களிலும், ஆட்சியிலும் அமர்ந்துவிடுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு விருத்தாசலத்தில் நடந்த விரும்பத் தகாத நிகழ்ச்சியாகும்.

இக்கொடுஞ்செயலைச் செய்தவர்கள், தந்தை பெரியார் அவர்களின் பேராற்ற லால், மானமிகுவாளர்கள் முத்தையா முதலியார், கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட் சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்றோரின் முயற்சியால் கிடைத்த பட்டம் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, மேற்சொன்ன தலைவர்களைப் பின்பற்றி வரும் ஆசிரியர் அவர்களை பயணத்தின்போது தாக்கு கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதற்குத் தூண்டு கோலாய் இருந்தவர்களை என்ன செய்வது? இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடுவதா? அல்லது அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதா?

சட்டத்திற்குட்பட்ட கத்தியை எப்போ தும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைத் தாக்கவருபவனைக் கொல்லும் முயற்சியில் செத்துப் போனாலும் பரவா யில்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் வழியா? நீதிமன்றம் வழியா? மக்கள் மன்றம் வழியா? அல்லது மூன் றையும் கொண்ட வழியா என்பதை யோசிக்க வேண்டும்.

எதற்கும் ஆயத்தமாகவே திராவிடர் கழகத்தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்டளை கிடைத்தவுடன் அதனைச் செயல்படுத்த ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் என்பது இருபாலரையும் சேர்த்துத்தான்.

மம்சாபுரம் நிகழ்ச்சியை இலேசாக விட்டு விட்டதால் தான் இப்போதைய நிகழ்வு. இரண்டுமே அண்ணாவை கொடியிலும் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, அவரது கொள்கைக்கு நாமம் போடுபவர்கள் ஆட்சியில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர், அவர் களது கொள்கைகளைத் தெரியாதவர் களை; தொ(கு)ண்டர்களாகக் கொண்ட கட்சி, தெரிந்தும் தெரியாதவர்கள் போலிருக்கும் குட்டித்தலைவர்களைக் கொண்ட கட்சி, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவ மானப்படுத்தும் மனோநிலை கொண்ட தலைமை இப்படிப்பட்ட அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழகம். ஏ தாழ்ந்த தமிழகமே என்ற அண்ணாவின் தலைப்புத்தான் நினைவிற்கு வருகிறது.

இக்கொடிய செயலில் ஈடுபட்ட குண்டர்கள், அவர்களுக்குத் துணை போன காவல்துறை மண்டையர்கள் அனைவரும் தண்டனைக்கு உட் பட்டே ஆகவேண்டும். நம் முயற்சி களால் பட்டம், பதவி கிடைத்த அலுவலர்கள் தம்மைத் தாக்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும்.

நம்முடைய பிரச்சாரங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும். சாதிச் சங்கங்கள் அரசியலில் ஈடுபடு வதைத் தடுத்தாக வேண்டும். சாதிச் சங்கங்கள் செயல்பட முடியாத அளவிற்கு நம் பிரச்சாரங்களை, முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்.

பாடுபடுவோம், வெற்றி பெறு வோம்; சாதிப்பகைவர்களைப் புறங் காண்போம்.

- ப. சங்கரநாராயணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், நாகர்கோயில்-2)

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அன்றும் - இன்றும்


- சிவ. பாலசுப்ரமணியன், கண்ணந்தங்குடி மேலையூர்

28.9.2013 சனிக்கிழமையன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திரா விடர் கழக மண்டல மாணவரணி மாநாடு, காலை நிகழ்ச்சிகள் மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. முற்பகல் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் நல்ல உணவு பொட்டலத்தில் கொடுத்தும், தட்டுப்பாட்டின்றி அதனைப் பகிர்ந்து கொண்டதும் வியப்பு. மாணவரணி யினரின் இச்சிறப்பு ஏற்பாடு போற்று தற்குரியதே. அதே போல பல பொது நிகழ்ச்சிகள் நடத்த இடம் கொடுத்து உதவும் மக்கள் மன்றம் பொறுப்பாளர் களுக்கும் நன்றி.

கருத்தரங்கம், பேரணி, திறந்த வெளி மாநாடு இவைகளை முன் னிட்டு, நகரத்தின் தெற்கு நுழை வாயிலிலிருந்து வழி நெடுக இரு புறமும் மிக நெருக்கமாக மக்கள் மன்றம் வரை சுமார் 5 கி.மீ. தொலை வுக்குக் கழகக் கொடிகளும், விளம் பரங்களும், பொதுமக்களுக்கும், எதிரிகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். மாலையில் அரசுக் கல்லூரி வாயிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரைச்சுற்றி வந்து வானொலித் திடலை அடைந் தது.

ஊர்வலத்தில் எப்போதும் நாம் எடுத்துவரும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளான, பெண்கள் தீச்சட்டி எடுத்தல், அரிவாள் மீது ஏறி நிற்பது, எரியும் சூடத்தை வாயில் போடுவது வீரவிளையாட்டுகள், பள்ளி மாணவ மாணவியரின் அணிவகுப்பு, சடை யார் கோயில் சிறுவர்கள் கோலாட்டம் இறுதியில் டாடா சுமோ கார் இழுத்தல் இவை எல்லாம் நமக்குப் பழமை.

கட்டுப்பாட்டுடன் எந்தவித வீண்ஆரவாரமும், போதை ஆட்டமும், கூச்சல் குழப்பமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற இந்த ஊர் வலத்தை நகர மக்களே பார்த்து வியந்து ஆர்வத்துடனும் ஆச்சரியத் துடனும் மூழ்கியது என்றால் மிகை யல்ல.

பேண்டு வாத்திய நிகழ்ச்சியில் ஒருவர் புகுந்து போதையில் ஆடி யதை ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அந்த ஆளை வெளியே இழுத்து விடுங்கள் என்று என்னிடம் கூறிக்கொண்டிருந்த போதே நமது தோழர் அவரை வெளியே இழுத்து விட்டார். இந்நிகழ்ச்சியானது மக்கள் நமது தோழர்களிடம், கழகத் திடம் எவ்வளவு மதிப்பு கொண் டிருக்கின்றனர் என்பது புலனாகவில்லையா?

மேலும் ஒளிவிளக்குகள், ஒலி பெருக்கி, மேடையின் சிறப்பு இப்படி மாநாட்டினை இளைஞரணியினர் பார்த்து வியப்படையும்படி செய்து விட்டிருந்தது மிக மிக நேர்த்தி. பாராட்டுதலுக்குரிய வர்கள்.

ஆசிரியர் அவர்கள் பேசும் போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். விருத்தாசலம் வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன என்றார். அது பற்றிய சில நினைவுகளை குறிப்பிட விரும்புகின்றேன்.

சிவ.பாலசுப்ரமணியன் ஆகிய நான் 1978-ஆம் ஆண்டு இறுதியில் பூதலூரி லிருந்து விருத்தாசலம் ரயில்வே சந்திப்பிற்கு நிலைய அதிகாரியாக மாற்றுதலில் வந்தேன். எந்த ஊரில் பணிபுரிந்தாலும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை அங்கே ரயில்வே குடி யிருப்பில் சிறப்பான முறையில் கொண் டாடுவது வழக்கம்.

விருத்தாசலத்திலும் 1979, 80 ஆண்டுகளில் நான் எனது ரயில்வே குடியிருப்பில் சிறப்பாகக் கொண்டாடினேன். அங்கு சென்றபோதே மாயவரத்தார் உணவு விடுதி என்று அழைக்கப்பட்ட பெரியவர் மதிப்பிற்குரிய நினைவில் நிற்கும் சபாபதி அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. அச்சமயம் விருத் தாசலத்தில் கழகம் இல்லை.

எனது இந்த ஏற்பாட்டினை ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ரயில்வேத் தோழர்கள் 1981-ஆம் ஆண்டை முப்பெரும் விழாவாக நடத் துவது என்று ஒத்துழைத்து நடத்தினோம். பின்னர் அத்தோழர்களே முன்வந்து தந்தை பெரியார் அவர்களின் சிலையை வைப்பது என்று முடிவெடுத்து என் னுடைய கருத்தையும் ஒத்துழைப்பையும் முன்னெடுத்து துரிதமாகச் செயல்பட் டோம். மானமிகு சபாபதி அவர்கள் வழிகாட்டுதலின்படி எல்லோரும் செயல் பட்டோம்.

நான் ரயில்வேயில் அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர் சங்கத்தின் திருச்சி டிவிஷன் தலைவராகவும் மண்டல் கமிஷன் செயல்பாடுகளை முன்னிறுத்தி பிசி அசோசியேஷன் தலைவராகவும் இருந்ததால், பல அதிகாரிகள், உடன் பணியாற்றும் தோழர்கள், தொழிலாளத் தோழர்களின் அனைவரின் ஆதரவுடனும் தற்போதுள்ள இடத்தில் தந்தை பெரி யாரின் சிலையை சிறப்பான முறையில் வைத்தோம்.

அப்போது மன்னை ப.நாரா யணசாமி அவர்கள் சிறப்பு விழா நிகழ்ச் சியை நடத்தினார்கள். அச்சிலை நிறுவு வதற்கு முன் மங்கலம் பேட்டைக்குச் சென்று தான் பெரியார் சிலைக்கு மாலையிட முடிந்தது

விருத்தாசலத்தில் கழகம் இல்லாத நிலையில், அதை மாற்று முகத்தான், விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் அதிகாரியான ஜெயமோகன் அவர்கள் விடுதலையில் ஓர் அறிக்கை வெளியிட் டார். அதாவது திராவிடர் கழகம் துவக்க ஆர்வமுள்ளவர்கள் தன்னைச் சந்திக் கவும் என்பதாக. மறுநாளே அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன்.

தமிழ் ஓவியா said...

இருவரும் கலந்து பேசினோம். பல தோழர்களைச் சந்தித்தோம். அவர்கள் தற்போது கும்பகோணம் வட்ட தலை வராக உள்ள இளங்கோவன் (இபி), வயலூர் சர்வேயர் ராஜாராமன், ஆசிரியர் கள் வெங்கடேசன், ராமசாமி, வட்டாட் சியர் அலுவலக அக்னி, நைனார், விசுவ நாதன், கச்சிராய நத்தம் தர்மலிங்கம், அந்த ஊர் தோழர்கள், கருவேப்பிலங் குறிச்சி டாக்டர் அன்பினுருவன், இன்னும் பலர். இவர்களை ஒருங் கிணைத்து பெரியவர் சபாபதி அவர்களைத் தலைவராகக் கொண்டு திராவிடர் கழகமும், என்னைத் தலைவராகக் கொண்டு பகுத்தறிவாளர் கழகமும் துவக்கப்பட்டன.

திராவிடர் கழகம் துவக் கப்பட்டு பல பொதுக் கூட்டங்கள் நடந்தன. பின் சுளுளு எதிர்ப்பு ஊர்வலம் தற்போது ஊர்வலம் ஆரம்பித்த அதே இடத்திலிருந்து ஊர்வலம் முடிந்த வானொலித்திடலிலே முடிவுற்றது. ஊர்வலப் பாதை யில் மட்டும் சில மாற்றங்கள். ஆசிரியர் அவர்களையும் சபா பதி அவர்களையும் டிராக்டரில் சிறப்பாக அமைத்து ஊர்வலம் நடைபெற்றது.

மீண்டும் ரயில்வே படிப்பகத் தில் ஆசிரியர் தலைமையில் ஒரு திருமணம், இடஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கம் ரயில்வே நிலையத்தின் அரு கில், பின் மாலை வானொலித் திடலில் பொதுக்கூட்டம் என இரு முறை சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு கொடுத்துப் பாடுபட்டவர்களில் பெண் ணாடம் தோழர்களும் அடங்குவர். குறிப்பாக ஆ.வந்தியதேவன் அவர் களின் பணி அளவிடற்கரியது. அவர் ரயில்வே குடியிருப்பை ஒட்டி குடியி ருந்ததால் பெரிதும் துணையாகவும் செயல்படவும் துணை நின்றார்.

1985-ஆம் ஆண்டின் முற்பகுதி யில் விருத்தாசலத்திலிருந்து மாற்ற லாகி தஞ்சாவூரை அடுத்த நிலைய மாகிய மாரியம்மன் கோவிலில் பணிபுரிந்து 1989-இல் பணி ஓய்வு பெற்று சொந்த கிராமமாகிய ஒரத்த நாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரில் தங்கியுள்ளேன். விருத் தாசலம் நிகழ்ச்சிகளைக் காணவும் தோழர்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன்.

மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர் களை மட்டும் சந்தித்தேன். நீங்கள் விதைத்த விதை தான் என்றார். 30 ஆண்டுகளுக்குப் பின் மரமாகிக் கனி கொடுத்திருப்பது எனக்குப் பூரிப்பாக வும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இளைஞர்களின் சுறுசுறுப்பும் ஆர்வ மும், துடிப்பும் எழுத வார்த்தைகள் போதாது.

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படையின் வன்முறை இந்திய இறையாண்மைக்குச் சவால் பிரதமருக்குக் கலைஞர் கடிதம்


சென்னை, அக். 8- இலங்கைக் கடற் படையின் வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இக்கடிதத்தினை புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களி டம் கலைஞர் அவர்கள் சார்பில் கவி ஞர் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களை கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் நேற்று முன்தினம் மாலை புதுடில்லியில் சந்தித்து, இம்மனுவின் நகலை வழங்கி அக் கோரிக்கை களை வலியுறுத்தினார்.

(இலங்கையில் சல்மான் குர்ஷித் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்னதாக, அவரிடம் இம்மனுவின் நகலை வழங்கியது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.)

இப்பிரச்சினை குறித்து அக்டோபர் 6 அன்று கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டு பிரதமர் மன் மோகன் சிங் அவர்களிடம் கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களால் அளிக்கப்படும் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது :-

தமிழக மீனவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண தங்களது உடனடி நடவடிக்கைக்காக தி.மு.க சார்பில் இந்த மனு தங்களிடம் சமர்ப்பிக்கப் படுகிறது. கடந்த 28.9.2013 அன்று, தமிழ்நாட்டின் ஆறு கடலோர மாவட்டங்களின் மீனவர் அமைப் புகள் சென்னையில் தி.மு.க.விடம் முறையிட்டனர்.

அலை அலையாய்த் துயரங்கள்!

அப்போது அவர்கள், மீனவர்கள் சந்தித்து வரும் அண்மைக்காலப் பிரச்சினைகளை விவரித்ததுடன், இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் படும் கொடுமைகளையும், அவர்களது உயிர்கள் எவ்வாறு பாதுகாப்பின்றியும் வாழ்க்கை நிச்சயமற்றதாகியும் ஆகிவிட்டதை விவரித்தனர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றி நிறுத்தமுடியாத துயரத்துக்கு ஆட் படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

தமிழக மீனவர் கள் மீது இடைவிடாத அச்சுறுத் தலும், கடுமையான சித்திரவதையும் கொடுமையும் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதன் விளைவாக அவர்களது வாழ்க்கை மிகவும் துயரமாகிவிட்டது. தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் ``துயரங்கள் தனியாக வருவதில்லை.

ஆனால் படைகளாக வருகின்றன. சில ஆண்டுகள் முன்புவரை, தமிழக மீன வர்கள் மீது இலங்கைக் கடற்படை யினர்; துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்கள் பிடித்த மீன் களையும், வலைகளையும், படகுகளையும் கைப்பற்றி அடித்து விரட்டுவது என்று அவ்வப்போது நடைபெற்று வந்த சம்ப வங்கள், அண்மைக் காலத் தில், குறிப்பாக 2009ஆம் ஆண்டு இலங்கை யில் போர் நின்றபிறகு, மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் ஓவியா said...

நமது மீனவர்களைக் கைது செய்து இலங் கையிலுள்ள சிறைகளுக்கு அனுப் புவது என்பது தங்குதடையின்றி குறையாமல் நடைபெற்று வருகிறது. அவர்களது படகுகளும் இலங்கைக் கடற்படையால் பிடித்துவைத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. இலங் கைக் கடற்படையின் அணுகுமுறை தமிழ்ச் சமுதாயத்தின் கூட்டு மன சாட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.

படகுகளைத் திருப்பி தருவதில்லை!

20.9.2013 வரையில், நாகை, காரைக்கால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 112 மீனவத் தமிழர்கள் பல்வேறு இலங்கைச் சிறைகளில் ஜாமீன் அல்லது வழக்கு விசாரணையின்றி அவதிப்படுகிறார்கள். 18.9.2013 அன்று, இந்தியக் கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேர் இலங்கைக் கடற் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டப் பட்டு இலங்கைக் கடற்படையால் அவர்களது 5 படகுகளுடன் பிடிக்கப் பட்டனர்.

21.9.2013 அன்று, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களது 14 நாள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்ற பின், கச்சத்தீவு அருகில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடலோரக் காவல்படை அவர்களைக் கடுமை யாகத் தாக்கி, அவர்களது வலைகள் மற்றும் இதர மீன்பிடிக் கருவிகளை மோசமாகச் சேதப்படுத்தி அவர்களில் 20 பேரைக் கைது செய்ததுடன் 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங் களில் கைது செய்யப்பட்ட மீனவர் கள் சிலர் 23.9.2013 மற்றும் 25.9.2013 தேதிகளில் சிறைகளிலிருந்து விடு தலை செய்யப்பட்டபோது அவர்க ளது படகுகள் அவர்களுக்கு திருப்பித் தரப்படவில்லை.

நாகை, காரைக்கால் பகுதி மீனவர் கள் இலங்கைச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின் அவர் களது படகுகளின்றி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் அவர்கள் 21.9.2013 அன்று இலங்கைக் கடற் படையால் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசந்துறையில் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஏழு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாக இலங்கை நிர்வாகத்தினர், தாங்கள் கைது செய்த மீனவர்களை, அவர்களது படகுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு திருப்பி அனுப் புவது என்று கூறப்படுகிறது. பிடித்து வைக்கப்பட்ட விசைப் படகுகள் இலங்கை அரசால் கையகப்படுத்தப் பட்டுள்ளன என்று காணப்படுகிறது.

400 மீனவர்கள் கொலை! ஆயினும் துப்பாக்கிச் சூட்டின் ஓசை குறையவில்லை!

இலங்கைக் கடற்படையினர் வேண்டுமென்றே நடத்தும் துப்பாக் கிச் சூடு சம்பவங்களில் ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மிகமோசமான துயரமாகும். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங் களின்படி 1983க்குப் பிறகு, 1991 முதல் 2008 வரை கொல்லப்பட்ட 118 பேர் உட்பட, 400 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் மீனவர்கள் மீது 480 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1983ஆம் ஆண்டு தமிழ் மீனவர்கள் மீது தொடங்கிய துப்பாக்கிச் சூட்டின் துயரமான ஓசை இன்னமும் ஓயவில்லை.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை

மீனவர்களுக்குப் படுகாயம் ஏற் படுத்துதல், அவர்களைக் கொல்லுதல், அவர்களது படகுகளைக் கையகப் படுத்துதல் ஆகியவை அனைத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரா னவை, இலங்கைக் கடற்படையினர் இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோதமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இத்தகைய காட்டு மிராண்டித்தனம் சர்வதேச சமுதாயத் தால் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்படவேண்டும்.

இந்தக் கொடுமைக்கு இந்திய அரசு மவுன சாட்சியாக இருக்கக்கூடாது. 28.9.2013 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக வழக்கம் போல மத்திய அரசைக் குற்றம்சாட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் 136 மீனவர்களையும் 29 படகுகளையும் விடுவிப்பதுபற்றி எழுதியுள்ளார். பின்னர், நாகை, காரைக்கால், பாம்பன் பகுதி மீனவர்கள் 66 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களும் அவர்களது விசைப் படகுகள் இல்லாமல் திரும்புவதால் கவலை அடைந்துள்ளனர். 3.10.2013 அன்று, நான்கு ராமேஸ்வரம் மீனவர் கள் அவர்களது படகுகளுடன் இலங்கை காவல்துறை யினரால் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.

படகுகள்தான் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாகும். மீனவர்களை விடுவித்து விட்டு அவர்களது படகு களைப் பிடித்து வைத்துக்கொள்வது, அவர்கள் வாழவும் வாழ்க்கைக் காக வருமானம் ஈட்டுவதற்குமான அடிப் படை உரிமையை மறுப்பதாகும். இது மிகவும் மனிதாபி மானமற்ற செயலா கும். `இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவால் இது உணர்த்திடுக!

இந்தக் கொடுமைகளை உடனடி யாகத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தாங்கள் தூதரகத் தொடர்புகள் மூலமாக அனைத்து தீவிரமான, தீர்மானகரமான நடவடிக்கைகளை யும் எடுத்து, தமிழ் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாத்து, அவர்களது வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டு கிறேன்.

கையகப்படுத்தப்பட்ட மற்றும் பிடித்துவைக்கப்பட்ட அவர்களது படகுகளை மீட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கவும், மீனவர்கள் அனைவரையும் நிபந்த னையின்றி விடுவிக்கவும் வேண்டு மென்று நாங்கள் கோருகிறோம். இலங்கைக் கடற்படையினரின் வன் முறை நடவடிக்கைகள் இந்திய நாட் டின் இறையாண்மைக்கு விடப்படும் சவால்கள் என்று, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவரது கொழும்புப் பயணத்தின் போது இலங்கை அரசுக்குத் தெளி வாக உணர்த்தவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கு தி.மு.க நன்றியுடை யதாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

குடும்ப வன்முறை என்றால் என்ன?


உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமலோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை.

இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உற வினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ஆம் ஆண்டு அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் இதை உறுதி செய்தி ருக்கிறது. பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்கவேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும், பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம் என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?

நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போன்ற சட்டங்கள் ஏற்கெனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டு கள் பலவாகின்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடை முறையில் வெளியே தெரியாதவாறு இயங்குகின்றன. குழந்தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களிலும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போலவே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டமும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

தமிழ் ஓவியா said...

இதற்கு என்ன காரணம்?

இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களது வளர்ப்பு முறையும் இடம் தரவில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவதில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை என்ன?

கடந்த ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டுமே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டுமொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார்களில் 80 சத விகிதத்துக்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக்கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்தத் தன்னார்வ அமைப்பும் அல்ல. கடந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 6 அன்று, கேள்வியொன்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?

அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், பிகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார், டில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார்கள் பதியப்பட்டன என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை. தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பொருள் கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங்கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழு பொருளையும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடும்பங்கள். பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரிமை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழுவீச்சில் செயலுக்கு வரவில்லை. வெற்று முழக்கங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்களை சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இதை எதிர்க்கவேண்டும் என்றுகூட பல பெண்கள் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள்.

தமிழகம் முன்னுதாரணமா?

ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோமோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதுதான் இது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்துவிடவில்லை. தந்தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக போராடி வந்ததன் விளைவைத்தான் இந்தத் தலைமுறையை சேர்ந்த பெண்கள் அனுபவிக்கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; மறுக்கப்படுவதை கேட்டுப் பெறுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


உ.பி. உயர்நீதிமன்றத்தின் விசித்திர உத்தரவு

அலகாபாத், அக்.8- உத்தரபிரதேசத்தில் காவலர் பணியில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ள பிற் படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 17 ஆயிரம் இடங்கள் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் ஆஹிர், யாதவ், யாதுவன்ஷி மற்றும் குவாலா ஆகிய ஜாதியை சேர்ந்தவர் களும், எஸ்சி பிரிவில் சாமர், துரியா மற்றும் ஜாதவ் ஜாதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இடஒதுக்கீடு பலன்களை பெற்றிருப்பதாக மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையில் ஏறக்குறைய 60 சதவீதம் அளவுக்கு நிறைந்திருப்ப தாகவும், இவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படு வார்கள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் அகர்வால் விசாரித்து, போதிய பிரதிநிதித்துவம் பெற் றுள்ள ஜாதியினருக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டார்.

இது அரசி யல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்தாரி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பிரசாத் மவுரியா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பகதுர் பதக் கூறினார். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்ட பின்னர் உயர்நீதிமன் றத்தில் உ.பி. அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் படும் என மூத்த அமைச்சரும் சமாஜ் வாடி மாநில செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதற்கு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிப்பார்களா?

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்



பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். - (விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...


அக்டோபர் 15 இல் ஆர்ப்பாட்டம்!


7.10.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினை களை வலியுறுத்தி முக்கிய தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளுக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டும், தமிழ்த் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், மாநில அரசுக்குக் காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளை யும் வழங்கப் போவதில்லை.

13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்திருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்ப தோடு இதனை அடிப்படையாகக் கொண்டு காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜூனியர் ரிச்சர்ட் (ஜெ.ஆர்.) ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை யின் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைப்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றி ருந்தன.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை உச்சநீதிமன் றத்தின் வாயிலாக ஒரு தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு இணைப்பு இல்லை என்றாகி விட்டது.

(நியாயமாக ஒப்பந்தப்படி 1988 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கவேண்டும் - ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வடக்கு மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது).

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்காஸ் ஆகிய இன மக்களைக் கொண்ட பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்யப் பட்டதா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப் பிறகும்கூட ஜெயவர்த்தனே என்ன மனவோட்டத்தில் இருந்தார்?

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழிகளாகும் என்ற ஒப்பந்தப் பிரிவுபற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அதிபர் ஜெயவர்த்தனே கூறினார். அப்படி இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பதைப்பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 30.7.1987, பக்கம் 9) என்று கூறியவர்தானே!


13 ஆவது திருத்தப்படி தமிழர்களுக்கு ஓரளவு சுயாட்சி மணம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவ்வாறு திருத்த இலங்கை அரசு தயாராகவில்லை.

இதனை எதிர்த்து புத்தத் துறவிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தச் செய்திருப்பதும் இலங்கை அரசுதான்.

நிலவுரிமை, காவல்துறை அதிகாரம் போன்றவைகூட இல்லாமல் ஒரு மாநிலத்தின் ஆட்சி என்பது நகைப்புக் குரியதாகவே இருக்கும். மாநில முதலமைச்சரைவிட ஆளுநருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்ற ஒரு நிலை சட்ட ரீதியாக உருவாக்கி வைக்கப் பட்டுள்ளது.

நியாயமாக 13 ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்றிச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கையை வலியுறுத்த இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. ஏனெனில், இந்தியப் பிரதமரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் அது.

இரத்து செய்வதாக இருந்தால்கூட இரண்டு நாடுகளும் இணைந்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஒரு சார்பாக (Unilateral) முடிவு எடுப்பது சட்ட விரோதமாகும்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிடவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதே தவிர, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் மனப்பான்மை இலங்கை அரசுக்குக் கிடையவே கிடையாது.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையில் அழுத்தம் கொடுத்தார் - எந்த அளவுக்கு இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தியே 61 கழக மாவட்டங் களில் திராவிடர் கழகம் வரும் 15 ஆம் தேதி ஆர்ப் பாட்டத்தை நடத்துகிறது. தோழர்களே, எழுச்சியோடு செயல்படுத்துவீர்!

தமிழ் ஓவியா said...


இயற்பியல் நோபல் பரிசு: இரு விஞ்ஞானிகளுக்கு!


ஸ்டாக்ஹோம், அக்.9- கடவுள் துகளைக் கண் டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியை இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் பீட்டர் க்ஸ் (வயது 84), பெல்ஜியத்தின் பிராங் கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார்கள்.

இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படுகிற கடவுள் துகளை கண்டு பிடித்து உலகுக்கு முதலிலேயே சொன்ன சாதனை யாளர்கள் இவர்கள்.

அதென்ன கடவுள் துகள் என்ற கேள்வி எழு கிறது அல்லவா? அதற்கு முதலில் இந்த பிரபஞ்சம் உருவானது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பிக் பேங் என்றழைக்கப்பட்ட பெருவெடிப்பு ஏற்பட்டது. அப்போது வாயுக்கள் தோன்றி அதில் இருந்த அணுக்கள் ஒன்றுசேர்ந்துதான் இந்தப் பிரபஞ்சம் உண்டானது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ஒட்டும் பொருள் அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டு பிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரயில் என அனைத்து பொருள்களின் உருவாக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.

ஆனால் இந்த 16 துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டும்பொருள் ஒன்று உண்டு என்று அரை நூற்றாண்டுக்கு முன்பாக 1964-ம் ஆண்டு உலகுக்கு சொன்னவர்கள் பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கி லெர்ட் ஆவார்கள். பீட்டர்க்ஸ் பெயரால் அது க்ஸ்போஸான் என அழைக்கப்படுகிறது. இதை கடவுள் துகள் என கருதுகின்றனர்.

போஸான்க்ஸ் இதைக் கண்டறிவதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஜெனீவா அருகில் 574 அடி ஆழத்தில், 27 கி.மீ. நீளத்தில் ஒரு சுரங்கப்பாதையில் செர்ன் என்ற அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப் பட்டது. இதில் அதிவேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர்.

அதில் இதுவரை பார்த்திராத துகளின் தடயம் காணப்பட்டது. அதன் நிறை, இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கணித்து கூறிய அதே வரையறைக்குள் இருந்தது. அதுதான் க்ஸ் போஸான் துகள். இந்த போஸான் துகள் கண்டு பிடித்தவரின் பெயரால் போஸான்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணமான விஞ் ஞானி பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் விஞ்ஞானிகள் இருவரும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதைக் காரணமாக்கக் கூடாது என்ற தீர்ப்பு சிறப்பானது

கடவுளை மற - மனிதனை நினை என்ற பெரியார் கொள்கைக்கு வெற்றி!

தமிழர் தலைவரின் மனிதநேய அறிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டியது கட்டாயம் ஆகும். இன்னும் 3 மாதங்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கக் கூடாது. அதற்குமேல் என்றாலும், மூன்று விழுக்காடு தர மறுக்கக் கூடாது.

- இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு ஆணையிட்டு இருப்பது,

பல லட்சணக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களுக்கு ஒரு புது வாழ்வையும், புத்தாக்கத்தையும் தரும் சமூகநீதிப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல் ஆகும்!

கலைஞர் உருவாக்கிக் கொடுத்த சொல்லாக்கமே மாற்றுத் திறனாளிகள்!

ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக சென்ற முறை இருந்தபோது, ஒரு புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்தார்கள்; முதன்முதலில் அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் தருவதற்கு ஏற்பாடு செய்து நடை முறைப்படுத்தினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளைக் காக்க நடத்திய போராட்டத் தின்போது, காவல்துறையினர் அவர்களிடம் சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்; உயர்நீதிமன்ற நெருக்குதல் காரணமாகவே பிறகு அவர்களது உரிமைக் குரலுக்குச் சற்று பயன் ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...


இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இந்திய நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சட்டபூர்வமான உரிமையாகவே - சலுகையாக அல்ல - வேலை வாய்ப்பை இனி மத்திய - மாநில அரசுகளிடம் பெற்று சுயமரியாதை யோடு வாழ வழி ஏற்படும்.

வெளிநாடுகள் காட்டும் மனிதாபிமானம்

வெளிநாடுகளில் குறிப்பாக, மாற்றுத் திறனாளி களுக்கு எதிலும் முன்னுரிமை, சலுகை, வாகனங்கள் நிறுத்தப்படும் இடம் தொடங்கி, அலுவலகம், கல்வி நிலையங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும்.

இப்போது நம் நாட்டிலும் அந்த நிலை செயல்படத் தொடங்கியுள்ளது, மகிழ்ச்சிக்குரியது.

உச்சநீதிமன்ற ஆணையில், ஒரு செய்தியை தெளிவு படுத்தியுள்ளார்கள் நீதியரசர்கள்; அது மிகவும் பாராட்டத் தக்கது!

50 விழுக்காடுப் பிரச்சினை - உண்மை நிலை என்ன?

50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற விதியைக் காரணம் காட்டி, இந்த மூன்று விழுக்காடு மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் எந்த அரசும் விடக்கூடாது என்று கூறி இந்த 3 விழுக்காடு காரணமாக இட ஒதுக்கீடு வரையறை 50-க்கு மேலாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்!

1. 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவிலும் கூறப்படவே இல்லை.

பாலாஜி ஏள (கர்நாடகா) மாநிலம் என்ற வழக்கில் போகிற போக்கில் கூறப்பட்ட கருத்தை ஏதோ மிகப்பெரிய ஆணைபோல ஆதிக்க சக்திகள் காட்டி விட்டன.

2. இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் குழுவின் வழக்கில் (9 நீதிபதிகள் கொண்ட அமர்வு) 50 சத விகிதத்திற்குமேல் விலக்காக இருக்கலாம் என்றும், விளக்கம் தரப்பட்டது இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித சட்டம், அத் தீர்ப்புக்கு முன்னதாகவே செயல்படுத்தப்பட்ட ஒன்று. சட்டம், அது சட்ட வலிமையைப் பெற்று, 9 ஆவது அட்ட வணைப் பாதுகாப்பினைப் பெற்றுள்ளது என்பதும் முக்கியம்.

இதனை ஒழிக்க இங்குள்ள உயர்ஜாதி பார்ப்பனீயம் எத்தனையோ முயற்சிகளை இன்னும் செய்து வந்த வண்ணமே உள்ளது! ஆனால், இது செயலில் 33 ஆண்டு களாக இருக்கும் நிலையில், இனி எந்த அரசும் இதில் கை வைக்க முடியாது; கை வைத்தால் குளவிக் கூட்டி னைக் கலைக்க கை வைத்தவர் கதையாகிவிடும்.

பெரியார் சொன்ன கடவுளை மற; மனிதனை நினை!

எனவே, 50 விழுக்காடு பற்றிக் கவலைப்படாமல், இந்த 3 விழுக்காடு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு (கூடுதலாகவே) வழங்க உச்சநீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது என்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதிக் கொடி அங்கேயும் இப்போதுதான் உயர்ந்து பறக்கத் தொடங்குகிறது என்று உலகம் தெரிந்து கொள்கிறது!

நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி, கடவுளர்கள் அவர்களை அப்படிப் படைத்தனர் என்பதாகும். இத் தகைய நீதியரசர்களோ (மனிதர்கள்) அவர்களை வாழ வைக்கின்றனர்!

தந்தை பெரியார் கூறிய கடவுளை மற; மனிதனை நினை! எப்படி செயல் வடிவம் பெறுகிறது பார்த்தீர்களா?

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
9.10.2013

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....


1987 இல் இதே நாளில்தான் புதுக்கோட் டையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஒரு மாநில அரசே இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின்படி சட்ட மியற்றலாம் என்ற கருத் துருவைத் தீர்மானமாக வடித்துக் கொடுக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் 69 சத விகிதம் நிலைபெற்றதற்கு இந்த அடிப்படையில் செயல்படுத்துவதுதான் காரணம்!

தமிழ் ஓவியா said...


கருங்காலிகள் கூட்டம்

கடந்த 28.9.2013 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல மாணவர் அணி மாநாட்டுக்கு செல்லும் வழியில் சில காவி காலிகளும், ஜாதி சங்கத் தினரும் சேர்ந்து, கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களை தாக்க முயன்றனர். கழகத் தோழர் களைத் தாக்கினர் மற்றும் தமிழர் தலைவரின் வாகனத்தை சேதப் படுத்தினர் என்பது, தமிழ் சமுதா யமும், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும். 80 ஆண்டு வாழ்வு முற்றுப் பெற்று 81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள 73 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தமான தமிழகத்தின் மூத்த தலைவரை, ஒரு காவிக் கும்பல் தாக்கியதும், அதைக் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும், அநாகரி கமான செயல்.

வீரமணி என்பவர் தனிப் பட்ட மனிதரல்ல. அவர் நம் இனத்தின் முகவரி, சமூகநீதியின் தலைமகன், ஒட்டுமொத்தத் தமி ழர்களின் உரிமைக் காவலர். சிறு வயதில் யாரும் ஏற்றுக் கொள்ளத் துணியாத கொள்கையினை ஏற்று, கல்லூரிப் பருவத்தில் தங்கப்பதக்கம் பெற்று, இளம் பருவத்தில் நாடெங்கும் பகுத்தறிவுக் கொள்கையினைப் பரப்பியவர். 1980-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ரூ. 9000/- வருமான வரம்பு) என்ற அரசு ஆணையை எதிர்த்து, களம் கண்டு 31 சதவிகிதமாக பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர்; காவிரி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என, 1982 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து பிரச்சாரம் செய்து, போராடி வந்த தலைவர்; 1983 ஆம் ஆண்டு இலங் கையில் இன அழிப்பு போர் நடை பெற்ற நிலையில் சரியான அமைப்பை, சரியான தலைவரை அடையாளம் கண்டு தமிழர்களுக்கு அறிவித்த தலைவரை, பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை பற்றி அறிய அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் தலைவர் மண்டல் அவர்கள், பரிந்துரையை நான் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டேன். அதனை செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் திடலே, சமூகநீதிக்குச் சொந்தமான பெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் வீர மணியே என தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய மண்டல் அவர்களின் வாக் கிற்கு ஏற்ப நாடெங்கும் 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தியவர். மண்டல் குழுவை நடைமுறைப் படுத்திய முன்னாள் பிரதமர் மாண்பு மிகு வி.பி.சிங் அவர்கள் சமூகநீதி பாடத்தை எனக்கு கற்று தந்த தலைவர் வீரமணியே! என சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பிரகடனப்படுத்தப் பட்ட தலைவரை, அனைத்து சாதி யினரும், அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வரும் தலைவரை, இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இட்டபோது அதற்கு எதிராக 31சி என்ற சட்டத்தை கண்டெடுத்து அதனை அரசியல் அமைப்பு சட்டத் தின் 9 ஆவது அட்டவணையில் வைத்துவிட்டால் இடஒதுக்கீட்டிற்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைத்து விடும் என தமிழக அர சிற்கே சட்டத்தை எடுத்துக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் (சங்கர் தயாள் சர்மா), பிரதமர் (பி.வி.நரசிம் மராவ்), முதலமைச்சர் (ஜெ.ஜெய லலிதா) என்ற மூன்று பார்ப்பனர் களைக் கொண்டே நிறைவேற்றச் செய்து இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த தலை வரை, வடநாட்டு தலைவர்களான சந்திரஜித், பி.பி.மவுரியா, ராம்விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, கன்சிராம், லாலு பிரசாத், முலாயம்சிங், மாயா வதி போன்ற தலைவர்களின் அன்பை யும், அமெரிக்கா, கனடா, சிங்கப் பூர், மலேசியா, இலங்கை, மியான்மா, லண்டன், குவைத் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது உயிராகப் போற்றும் தலைவரை, உலக நாத்திகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவரை, இருதய மாற்று அறுவை சிகிச்சை மூன்று முறை செய்து இருந்த நிலையிலும், ஓய்வு எடுக்க வேண்டிய நிலையிலும், தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராமல் இடைய றாது உழைத்துவரும் தலைவரை, நான் தற்போது வாழ்வது போனஸ் வாழ்க்கையே என்று அறிவித்து ஓய்வில்லாது உழைக் கும் தலைவரின் உயிருக்கு குறி என்பது நமது இன எதிரிகளுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், துணைபோன கருங் காலி தமிழினத் துரோகிகளுக்கும், சமூக நீதியை, உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கு இவரைவிட்டால் பட்டம், பதவி, ஓய்வு, சலிப்பு இல் லாது உழைக்கக்கூடிய இன் னொரு தலைவர் யார் என்பதை இரவில் உறங்கப் போகும் போது, ஒரு கணம் சிந்தித்துப் பார், நாதியற்ற தமிழினமே!

- இரா.நீலகண்டன், திராவிடர் கழகம், பேராவூரணி

தமிழ் ஓவியா said...


ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல்: தலைவர்களுக்கு கலைஞர் கடிதம்


சென்னை, அக். 9- தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர் தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிடுங்கள்! என தி.மு.க. தலைவர் கலைஞர், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சி களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4.12.2013 அன்று நடை பெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேர வைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத் துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொ டர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக் கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து நல்கிடும் உறுதியான ஆதர வோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமான தென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திட வும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திட வும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாள ருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,

(ஒப்பம்)
( மு. கருணாநிதி )

இந்தக் கடிதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், தமிழகச் சட்டப்பேரவை யின் எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க.வின் நிறுவனருமான விஜயகாந்த், பா.ஜ.க. வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண் டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார், பெருந் தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர். தனபாலன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது , சிறுபான்மையினச் சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கா.லியாகத் அலிகான், எஸ்.டி.பி.அய்., கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் எல்.சந்தானம், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக் குழுவின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மா வாசி ஆகியோர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அறிவுலக ஆசானுக்கு அமீரகத் தமிழர்கள் எடுத்த விழா

துபை, அக். 9- அமீரகத் தமி ழர்கள் அமைப்பின் (அஜ்மான்) சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 03.10.2013 மாலை 7.00 மணியளவில் அஜ்மான் சிவ்ஸ் டார் பவனில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந் தினர்களாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநிலத் துணை கொள்கை பரப்புச்செயலாளர் திரு. சங்கத்தமிழன், உம்-அல் குவைன் நேஷனல் ஏஜென்சி பொது மேளாளர் திரு. லிங்கண் ணன் ஆகியோர் கலந்துகொண் டனர்.

அமீரகத் தமிழர்கள் அமைப் பின் நிறுவனத் தலைவர் திரு. ஏ.எஸ்.மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வளைகுடா நாடுகளில் தமிழர் களுக்கென ஒரு வாரியம் அமைக்க திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் முயற்சி எடுத்திருப் பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செயல் என்றும், வெளிநாடு களில் வாழும் தமிழர்கள் சமத் துவத்தோடு வாழ வழிவகுத் துள்ள தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை அமீரகத் தமிழர்களோடு கொண்டா டுவது பெருமிதத்தை அளிக் கிறது என்றும் அவர் தனது வரவேற்புரையில் கூறினார்.

மேலும், அமீரகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக திராவிடர் கழகத் துடன் அஜ்மான் தமிழர்கள் அமைப்பு திகழ்கிறது என்றும் கூறினார். இதுபோன்ற சமூக ஆர்வமுள்ள நிகழ்ச்சிகளை நடத்த இடமும், அனைவருக் கும் விருந்தும் வழங்கும் புரவ லர் சிவ்ஸ்டார் பவனின் நிறு வனர் திரு. எல்.கோவிந்தராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண் டார்.

இந்த நிகழ்ச்சியோடு அமைப் பின் பொருளாளர் திரு. அப் துல் லத்தீப் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழாவும் இணைந்து நடப்பதில் பெருமிதம் கொள் வதாக தெரிவித்தார். தொடர்ந்து திரு. லிங்கண்ணன், திரு. மதியழ கன், திரு. சங்கத்தமிழன் ஆகி யோர் உரை நிகழ்த்தினர்.

இவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் தமது சிறப்புரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், தந்தை பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா தமிழகம், புதுச்சேரி, புதுதில்லி, கொல் கத்தா, மும்பை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களிலும், சிங் கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா (கானா), துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுக ளிலும் சிறப்பாக நடைபெறு வது குறித்து மகிழ்ச்சி தெரி வித்தார்.

பெரியார் மற்றும் அவரது தத்துவங்கள் உலகமயமாக்கப் படுவது பற்றியும் அதற்காக தமிழர் தலைவர் மேற்கொண் டிருக்கும் முயற்சிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் அவர்களின் 75ஆம் பிறந்தநாளை அஜ்மான் தமிழர்கள் அமைப்பு அமீரகத் திலுள்ள பெரியார் தொண்டர் களுடன் இணைந்து கொண் டாடியதை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் அவர் களின் பல்வேறு கருத்துகளை விளக்கியும் குறிப்பாக இல்ல றம், துறவறம் தவிர்த்து தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்திய தொண்டறத்தின் தேவை பற்றியும் விரிவாக கூறினார். பள்ளி மாணவர்களிடையே பெரியார் பற்றி அறிந்து கொள் ளும் வகையில் தமிழகம் முழு வதும் சிறப்பாக நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டியின் பயன் பற்றி கூறி யதுடன், வெளிநாடுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத் தார்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ் வாக அமீரகத் தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு அவரின் சமூக சேவையைப் பாராட்டி மனிதநேய பண் பாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றார். அஜ் மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பை நிறுவி வெற்றிகர மாக நடத்திட பல்லாண்டு களாக உழைத்த திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு பிரிவு உப சரிப்பு விழா இனிதே நடை பெற்றது.

இவ்விழாவில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலை வர் திரு. சிவ்ஸ்டார் எல்.கோவிந் தராஜன், அஜ்மான் தமிழர்கள் அமைப்பின் துணைத் தலைவ ரும் ஆர்யா கிரைன்டிங் பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர். மதி யழகன், அமைப்பின் செயலா ளரும் சஃபையர் ரெஸ்டா ரண்ட்டின் உரிமையாளருமான திரு. இரா.சாமிநாதன், எமி ரேட்ஸ் ஏர்லைன்ஸ் திரு. சதீஷ்ராஜ், துபாய் மினரல் வாட்டர் திரு. செல்வதுரை, குலாம் முஸ்லீம் அமைப்பின் திரு.ஜான், ஓவியர்கள் ரவிச்சந் திரன், குமார் உள்ளிட்ட ஏராள மான அமீரகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிவ்ஸ்டார் பவன் நிறுவனத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பெரியார் கல்வி நிறுவன முன்னாள் மாணவி செல்வி. நிவேதிதா ஆனந்த் இந்நிகழ்ச் சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


பட்டாச்சார்யாக்கள்

பெண்கள் பெரும் பதவிகளுக்கு வருவதில் லையே என்ற ஆதங்கங் கள் அவ்வப்பொழுது எழுவதுண்டு.

இப்பொழுது கொஞ் சம் கொஞ்சம் வர ஆரம் பித்துள்ளனர். அவர்கள் எல்லாம் யார்? யார்?
பாரத ஸ்டேட் வங்கி யின் முதல் பெண் தலை வர் அருந்ததி பட்டாச் சார்யா, அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பான்சே, பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் விஜயலட்சுமி ஆர்அய்யர், யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வின் தலைவர் அர்ச்சனா பார்க்கவா, அய்.சி.அய். சி.அய். வங்கியின் தலை வர் சந்தா கோச்சார், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் சிகா சர்மா.

இந்தப் பெயர்களை பார்க்கும் பொழுதே இவர்கள் எல்லாம் யார்? எந்தப் பிரிவைச் சேர்ந்த வர்கள் என்பது வெளிப் படை! கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப் படாது அல்லவா!

என்னதான் சமூக நீதி, இடஒதுக்கீடு என்று நாம் குரல் கொடுத்தா லும், பாடுபட்டாலும் அவா ளின் ஆதிக்கம் இன் னொரு வகையில் வளர்ந்து கொண்டேதான் இருக் கிறது.

அதுவும் தனியார்த் துறைகள் வளர்ந்து வரும் இந்தக் கால கட்டத்தில் அவற்றில் தலைமைப்பீட இயக்குநர்கள் எல்லாம் யார்? பெரும்பாலும் பார்ப்பனர்களே! பணிய மர்த்தம் செய்யும் இடத் திலே பத்திரமாக உட் கார்ந்து கொண்டு முதுகைத் தட்டிப் பார்த்து, பூணூல் தட்டுப்படுகிறதா என்று அடையாளம் கண்டு, ஆயிரக்கணக்கில் தனியார்த் துறைகளில் அவாளைத் திணித்துக் கொண்டு தானிருக் கிறார்கள். இது அடக்க மாக, ஆர்ப்பாட்டம் இல் லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது.

சமூகநீதியில் நமது அடுத்தக் கட்ட களம் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறு வதே என்று திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர் கள் கூறியிருப்பது எவ் வளவுத் தொலைநோக்கு!

சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தேவை என்று திராவிடர் கழகம் வலி யுறுத்துவதன் முக்கியத் துவத்தை இந்தக் கண் ணோட்டத்தில் பார்த்தால் தான் பளிச் சென்று துல்லியமாகப் புரியும்.

உள் ஒதுக்கீடு இல்லை யென்றால் வங்கிகளில் தலைமைப் பொறுப்பு களில் உயர் ஜாதி பெண் களின் ஆக்கிரமிப்புப் போலவே இதுவும் அவா ளின் (கிராப்பு தலை வாசிகள்) ஏகபோகக் காடாகத்தான் மாறும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமா னால் ஈரோட்டுக் கண் ணாடி தேவைப்படும்!

- மயிலாடன் 10-10-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


கடமை தவறாத மனிதநேயர் ஓட்டுநர் சம்பத் ஓர் எடுத்துக்காட்டு!


நெஞ்சுவலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு இறந்தார்

துரைப்பாக்கம் அக்.10- ஓடும் பஸ்சில் திடீர் நெஞ்சு வலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு பலியானார். சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (45). இவர் பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் வந்த விமானி மற்றும் பணிப்பெண்களை ஏற்றிக் கொண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக் குத் திரும்பிக் கொண்டு இருந்தார். மீனம்பாக்கத்தில் இருந்து எழும்பூருக்குத் திரும்பி வரும்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பஸ்ஸில் இருந்த கிளீனரிடம் சம்பத் கூறி, தண்ணீர் அருந்தியதும் நெஞ்சு வலி குறைந்ததால், மீண்டும் பஸ்ஸை இயக்கினார்.
கத்திப்பாரா மேம்பாலம் அருகே பஸ் வந்தபோது, மீண்டும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சம்பத் கூறினார். ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் பஸ்ஸை இயக்கி, சாலையோரமாக நிறுத் தினார்.

இந்நிலையில் மீண்டும் மயக்க மடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்ஸில் இருந்த விமானி, பணிப்பெண்கள் ஓடிவந்து சம்பத்தை மருத்துவர்களிடம் கொண்டு சென்றதில் அவர் இறந்து போனது தெரிய வந்தது அனைவரும் அதிர்ச்சிகுள்ளாயினர்.

மேலே காட்டிய செய்தி மிகவும் நெஞ்சை உருக்கும், துயரத்திற்குரிய செய்தி!

வெறும் உரிமைகளை மட்டும் பேசிப் பேசி, கடமைகளை - பொறுப்புகளைக் காற்றில் பறக்கவிடும் மக்களே, பெரிதும் நிறைந்த இந்த பாலைவனச் சமுதாயத் தில் ஓர் ஒயாசிஸ் - சோலைவனமாக திகழும், இந்த சம்பத் போன்ற ஓட்டு நர்கள், மனித குலத்தில் நல்லவர்களும், பொறுப்பை உணர்ந்து கடமையாற்றும் சீலர்களும், இன்னும் இருந்து வருவதால் இந்த உலகம் மனித நேயத்தை மரண மடையச் செய்யாமல், காத்து வருகிறது போலும்!

பாராட்டுதலுக்குரிய அந்த ஓட்டுநர் ஒரு ஓரத்தில் அவர் ஒட்டி வந்த பேருந்தை நிறுத்தாமல், நெஞ்சு வலியுடன் ஒட்டி வந்திருப்பாரேயானால் என்ன நிகழ்ந் திருக்கும்?

அதுவும் நெருக்கடி மிகுந்த அண்ணா சாலையில்? வண்டி, தானே ஓடி பெரும் விபத்து ஏற்பட்டு, பல உயிர்களும் - பேருந்தில் விமான நிலையத்திலிருந்து வந்த விமானி பணிப் பெண்கள் உட்பட பலரும் சிக்கியிருப்பார்களே, எதிரே வந்த வாகனங்களும் தப்பி இருக்க முடியாதே!

அவர்தம் பொறுப்புணர்ச்சியை நாடும் அரசும், சமூக நல அமைப்புகளும் பாராட்டி, அவர் தம் குடும்பத்திற்கு ஆறுதல் - இரங்கல் கூறுவதோடு, பரிசும் விருதும் அளிக்க முன்வர வேண்டும். நமது கழகமும் சிறப்புச் செய்யும்!

இதுபோல முன்பு, மின்சார ரயிலை ஒட்டி வந்த அரக்கோணம் அருகே ராஜூ என்ற ஓட்டுநர் (டிரைவர்) நெஞ்சு வலி ஏற்பட்டதைச் சமாளித்து நடு வழியில் நிறுத்திடாமல் அரக்கோணம் நிலையம் வந்து நிறுத்திய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தார்!

அதில் பயணம் செய்த அவ்வளவு ரயில் பயணிகளையும் காப்பாற்றிய பொறுப்புணர்ச்சியின் சின்னமாக அவர் வாழ்ந்து காட்டி மறைந்தார்.


அதை நாம் பாராட்டி எழுதினோம்; கழகச் சார்பில் பாராட்டுத் தீர்மானம் கும்மிடிப்பூண்டி மாநாட்டில் போட்டு அக்குடும்பத்தினரைக் கழகத்த வர்கள் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவரை ரயில்வே துறை பாராட்டி விருது (மறைந்தாலும்) அக்குடும்பத் தினருக்கு வழங்கி சகோதரர் டி.ஆர். பாலு - எம்.பி. மூலம் ஏற்பாடும் செய்தோம்!

இந்த முறை மறைந்தும் மறை யாதவராக உயர்ந்த ஓட்டுநர் சம்பத் அவர்களின் குடும்பத்தினருக்கு, அரசும் பாராட்டு வழங்க வேண்டும்.

அடுத்த விழாவில் அவர்தம் குடும்பத்தினரை அழைத்து பெரியார் மனிதநேய விருது அளித்துப் பாராட் டுவோம்!

தம் உயிர் பெரிது - எனினும்
கடமை அதனினும் பெரிது!

- எனக் காட்டிய அத்தகைய மா மனிதர்கள்!

அவர்தம் புகழ் வாழ்க! வாழ்க!!

தமிழ் ஓவியா said...


சபாஷ்! கருநாடக முதல் அமைச்சர் மூடநம்பிக்கையை உடைத்து எறிந்தார்


பெங்களூரு, அக்.10- பெங்களூரு சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தால் பதவி பறி போகும் என்ற மூடநம்பிக்கையை முறியடித்தார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கர்நாடக மாநில முதல்வர் சித்த ராமையா திங்கட்கிழமை சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தார். சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் கர்நாடகத்தின் முன் னாள் முதல்வர்கள் பலர் தங்கள் பத வியை பறி கொடுத்திருக்கிறார்களாம்.

கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ''தைரியம் இருந் தால் எங்க ஊர் மண்ணை மிதித்துப் பாருங்கள். இல்லையென்றால் சாம் ராஜ் நகரை கர்நாடகத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக்கித் தாருங் கள்'' என முதல்வர்களை சீண்டும் வகையில் சவால் விடுவார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் ஆட்சியை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குண்டு ராவ் 1982-ஆம் ஆண்டு சாம் ராஜ் நகருக்கு வந்தார். அவருடைய முதல்வர் பதவி ஒரே மாதத்தில் பறி போனது. ராமகிருஷ்ண ஹெக்டே, சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்து வைத்த 15 நாள்களில் ஊழல் புகாரில் சிக்கி முதல்வர் பதவியைப் பறி கொடுத்தார்.

இப்படி சாம்ராஜ் நகருக்குள் நுழைந்து ஆட்சியை பறி கொடுத்த முதல்வர்களின் பட்டியல் சதானந்த கவுடா வரை நீள்கிறது.

இதனால், சில முதல்வர்கள் சாம் ராஜ் நகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்து விட்டு, நொண்டிச் சாக்குகளை சொல்லி மாதேஸ்வரன் மலை அடிவாரத்திலே நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூரு திரும்பி விடுவர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சாம்ராஜ் நகருக்கு சென்ற சித்தராமையா ''நான் ஆட் சிக்கு வந்தால், தைரியமாக சாம்ராஜ் நகருக்கு வரு வேன்'' என அறிவித்தார். பதவியேற்று 5 மாதங் களானாலும் சாம்ராஜ் நகருக்கு செல்லாமல் இருந்தார். இதனால் எதிர் கட்சியினர் 'பதவிக்கு ஆசைப்பட்டே சித்தராமையா சாம்ராஜ் நகருக்கு வருவதை தவிர்த்து வருகிறார் 'எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

சித்தராமையா ஏற்கெனவே தேதி குறித்தபடி கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11.35 மணிக்கு சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தார். ரூ. 1,700 கோடி செலவில் நலத்திட்டங்களை அறிவித் தார். சட்டமேதை அம்பேத்கர் பவன் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி, அம்பேத்கரின் ஆளுயர சிலையைத் திறந்து வைத்து முழங்க ஆரம்பித்தார்.

கர்நாடக மாநிலத்தின் எல்லைக் குள் இருக்கும் சாம்ராஜ் நகருக்கு நான் வந்ததில் எந்த பெருமை யும் இருப்பதாகக் கருத வில்லை. ஏனென்றால் எனக்கு மூடநம்பிக்கை இல்லை. இந்திய மக்க ளிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க, அறிவே சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் போராடினார். கர்நாடகத் திலும் சமூக சீர்திருத்தவாதிகளான பசவண்ணரும், மகாகவி குவெம்புவும் தொடர்ந்து போராடினர். இனியும் தொடர்ந்து சாம்ராஜ் நகருக்கு வந்து மூடநம்பிக்கைகளின் கோட்டையை தகர்த்தெறிவேன்''எனச் சூளுரைத்தார்.

முந்தைய முதல்வர்களின் நாற்காலி களை காவு வாங்கிய சாம்ராஜ் நகர், சித்தராமையாவின் நாற்காலியையும் காவு வாங்குமா என்ற கேள்வி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


வேதியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்கள் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 10-அமெ ரிக்காவை சேர்ந்த மைக் கேல் லெவிட், மார்டின் கர் பிளஸ் மற்றும் அரை வார் செல் ஆகியோ ருக்கு வேதியிய லுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக த்தை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெ ரிக்க ஆஸ்திரியரான மார்டின் கர்பி ளஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெ ரிக்க இஸ்ரேலியரான அரை வார்செல் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

வேதியல் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடைபெறும். எலக்ட் ரான்கள் அணுவின் மய்யப்பகுதியை நோக்கி பாய்ந்து வருவது வழக்கம். இவை கண்களுக்கு புலப்படாது. இந்த வேதியல் மாற்றங்களை கணினிகள் புரிந்து கொள்ளும் வகையில் அவற் றை தயார்படுத்தியுள்ளனர். இது சிக்கலான மருந்து தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதற்காக இவர் களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.