Search This Blog

14.10.13

ஆர்.எஸ்.எஸ். புனிதமானதல்ல -அசிங்கமானது - ஆபத்தானது! - அருவருப்பானது!! -அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா!

அந்தரங்கம் புனிதமல்ல


இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 

2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).

எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?

5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு 

Sangh My Soul 

என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.

பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!

ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!

ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!! - 

---------------------------------மின்சாரம் அவர்கள் 12-10-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

15 comments:

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்



நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரையும் பொறுத் ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


பிராமின் டுடே!


பிராமின் டுடே என்ற ஒரு இதழைப் பார்ப்பனர்கள் நடத்தி வருகிறார்கள். அதனைப் புரட்ட நேர்ந்தபோது பிரா மணர்களும் உயர் கல்வியும் எனும் தலைப்பில் ஒரு கட் டுரை.

கடந்த 5 வருடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி களில் தகுதியான அடிப் படையில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பிராமணர் கள் ஒற்றை இலக்கத்தை ஒரு போதும் தாண்டியதில்லை

பணம் படைத்த பார்ப் பனர்கள் தனியார் கல்லூரி களில் தகுதியின் அடிப் படையில் படித்து மருத்துவ ராக முடியுமேயன்றி, தன் மான இனக்குஞ்சுகளுக்குக் கிட்டியதுபோக மருத்துவக் கல்லூரியை ஏழைப் பிராம ணர்கள் எட்டிப் பார்க்க முடி யாது என்று எழுதுகிறது. அந்த ஏடு.

அவர்களை அறியாம லேயே, ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டுமே! கடந்த 5 ஆண் டுகளாகத்தான், அவாளுக்கு மருத்துவக் கல்லூரியில் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியவில்லை - அப்படியானால் 5 ஆண்டு களுக்குமுன் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டன என்பது சொல்லாமலே விளங்கும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த வர்களை எப்படி அடைமொழி கொடுத்து அந்த ஏடு எழுது கிறது என்பதைக் கவனித் தீர்களா?

தன்மான இனக்குஞ்சு களாம் இதற்குள்தான் எவ் வளவு ஆத்திரமும் ஏகடியமும் அலை அடித்து நிற்கின்றன!

தன்மான இனக்குஞ்சு என்பதில் உள்ள தன்மானம் என்பது பார்ப்பனர் அல்லா தார் உணர்வினைத் தட்டி எழுப்பிய இயக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது - இனக்குஞ்சு என்பது அவாள் வேறு இனம், திராவிடர்கள் வேறு இனம் என்பதை இனம் பிரித்துக்காட்டுகிறதா இல்லையா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்தி ருக்க வேண்டும், என்று நிபந்தனை வைத்திருந்த போது, எந்த இனக்குஞ்சுகள் மருத்துவக் கல்லூரி இடங் கள் முழுவதையும் முழுச் சுளையாக முழுங்கின?

இந்த நேரத்தில், தமிழர் செல்வம் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் கூறியதை, நினைத் துப் பார்க்க வேண்டும்.

திரு. பனகல் அரசர் காலத்தில்தான், மருத்துவ இலாக்கா வெள்ளையரிட மிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட் டது. ஆனால் அதன் பயன் என்ன ஆயிற்று என்றால் டாக்டர் ராஜன் அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரி யாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக் கிறேன் என்கிற பெயரால், ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களைக் கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பேர்களில் 125 பேர் பார்ப்பனர்கள்; இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியேற்றி விட்டு, அவருக்குப் பதி லாக, மூன்று பார்ப்பனர் களைத் திணித்தார். இவ்வித ஆட்சியை இனி நடத்தவிட மாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சொன் னதைக் கொஞ்சம் நினைத் துப் பார்த்தால் பிராமின் டுடேயின் அங்கலாய்ப்பில் சற்றும் நியாயம் இல்லை என்பது விளங்காதா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கருணையே வடிவானவன் கடவுளா? ம.பி.யில் பக்தர்கள் 120 பேர் பலி!

ரத்தன்கர், அக்.14- மத்தியப் பிரதேச மாநி லம் ரத்தன்கர் கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந் தது 120 பேர் உயிரிழந் திருப்பர் என்று அஞ்சப் படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நீதி விசா ரணைக்கு உத்தரவிட் டுள்ளார். மேலும், டிஜிபி, தலைமைச் செயலர் ஆகியோரை தாதியா பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறும், பாதுகாப்பில் ஈடுபடு மாறும் உத்தரவிட் டுள்ளார்.

தேர்தல் கால நன்ன டைத்தை நெறிமுறை கள் அமலில் உள்ள மாநிலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இழப் பீடு அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுஹான். உடனடி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் உயிரிழந் தோரின் குடும்பத்தின ருக்கும், ரூ. 50 ஆயிரம் பலத்த காயமடைந்தோ ருக்கும், ரூ. 25 ஆயிரம் லேசான காயமடைந் தோருக்கும் என அறி வித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்

ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா பூஜை நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் சிந்த் ஆற்றின் பாலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அப் போது நெரிசல் அதிக ரித்து உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது. அதேநேரத் தில், கூட்டத்தைக் கட் டுப்படுத்தி கோயிலுக்கு வரிசையாகச் செல்ல வைக்க காவல்துறையி னர் முயன்றுள்ளனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டுள் ளது. இதனால், நூற்றுக் கும் அதிகமான பக்தர்கள் அலறியடித்து, சிந்த் ஆற்றின் பாலத்தை நோக்கி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் சிக்கியும் சிலர் உயிரிழந் தனர் என்று கூறப்படு கிறது.

ஆனால், காவல்துறை யினர் லேசான தடியடி நடத்தினர் என்று கூறப் படுவதை டிஜிபி சம்பால் ரான்சே மறுத்துள்ளார். இது, கூட்டத்தில் குழப் பத்தை ஏற்படுத்தி நெரி சலை ஏற்படுத்த ஒரு சில ரால் பக்தர்களிடையே பரப்பட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட் டனர். நிலைமை சீரடைய சுமார் 2 மணி நேரம் ஆனது. இந்தக் களேபரத்தில் ஆற்றினுள் சுமார் 40 பக்தர்கள் விழுந்திருக்கலாம் என் றும் அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டி ருப்பதாகவும் கூறப்படு கிறது.

தமிழ் ஓவியா said...


நீதிப் போதனையா?


மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு தலை விரித்தாடுகிறது, பள்ளியில் படிக்கும் மாண வர்களே ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய் விட்டது என்று பொதுவான அலறல் சத்தம் நாடு எங்கும் கேட்கிறது.

மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப் பத்திரிகை படிப்பதில் பயனில்லை; ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேகூட ஒரு வகையில் பொறுப்புதான்.

ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்? வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஏன், சில நீதிபதிகளே எப்படி நடந்து கொள் கிறார்கள்?

உலகத்துக்கே புத்திமதி சொல்லப் புறப் பட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை தான் என்ன?

மதவாதிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்? காவி வேடம் தரிக்கும் சாமியார்களின் லீலைகள் தான் சாதாரண மானவையா? அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் எப்படி நடந்து கொண்டான்? லோகக் குரு சங்கராச்சாரியாரின் உண்மை சுயரூபம் தான் என்ன... என்ன?

நாம் வணங்கும் கடவுள்களின் கதை என்ன? கற்பழிக்காத கடவுள் உண்டா, சண்டை போடாத கடவுள் உண்டா? திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன் னாலான புத்தர் சிலையைத் திருடித்தானே சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு மதிற் சுவர் எழுப்பினான்? இப்படிப்பட்டவன்முக்கிய ஆழ்வார் பட்டியலில் இடம் பிடித்து விட்டானே.

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் தருவாயாக என்று கடவுளிடம் விண்ணப்பம் போடுபவன் தானே சைவ சமயக் குரவனான திருஞானசம்பந்தன் - இவன் சாதாரணமானவனா? பார்வதித் தேவியாரின் ஞானப் பால் உண்டவனாயிற்றே!

சர்வமும் கந்தையாக ஒழுக்கக் கேடாக மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் மாணவர்களை மட்டும் பிரித்துப் பார்ப்பதில் பயன் என்ன?

பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தானே அரைகுறை ஆடை ஆபாசப் படக் காட்சிகளைப் பார்க்கிறார்கள் பெற் றோர்கள்.

தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவும், மனிதநேயம், ஒழுக்கம் இவை சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்டாலொழிய மீட்சிக்கு மார்க்கம் இல்லை.

பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு முன்பு போல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிலர் இதோபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

முன்பு இத்தகு வகுப்புகள் இருந்ததுதான்; அந்த வகுப்பில் எதைச் சொல்லிக் கொடுத் தார்களாம்? புராண இதிகாச மூடத்தன கதாபாத்திரங்கள் பற்றித்தானே சொல்லிக் கொடுத்தார்கள் - கிருஷ்ண பகவானைப்பற்றி சொல்லிக் கொடுத்தால் மாணவன் திருடாமல் இருப்பானா? பெண்களைக் கேலி செய் யாமல்தான் இருப்பானா?

தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல மாணவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது என்ற பெயரால் நமது புராணக் குப்பைகளை மாணவர்கள் மூளையில் திணித்தால் அறிவு வளர்ச்சி ஏற்படுமா? ஒழுக்க ரீதியான மனப்பான்மை தான் வருமா?

இவற்றிற்கும் பதிலாக நூலகம், உடற்பயிற்சி, அறிவியல் கண்காட்சி இவற்றில் ஈடுபடுத் தினால் மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புண்டே!

பாடத் திட்டத்தில் ஒழுக்க நெறியும், அறிவு நெறியும், பயிற்சியும் அளிக்கப்படுவது அவசியம்.

குளிக்கப் போய்ச் சேற்றில் விழுந்த கதையாக ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக் கிறேன் என்று கூறி நீதி போதனை என்ற பெயரால் பழைய குப்பைகளை மாணவர்களின் மூளையில் கொட்ட வேண்டாம் -வேண்டவே வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


புகைஞ்சர்களே, ஏன் வீணே 10 ஆண்டு ஆயுளை இழக்கிறீர்கள்?


ஆஸ்திரேலியாவில் சாக்ஸ் என்ற மருத்துவ ஆய்வு அமைப்பு ஒன்று சுமார் 2,00,000 பேர்களை வைத்து - அவர்கள் எல்லாம் புகைஞ்சர்கள் (Smokers) - வயது 45க்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வுபற்றி ஆஸ்திரேலிய மருத்துவப் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் (Emily Banks) என்பவர் கொடுத் துள்ள பேட்டி 12.10.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தியாக வெளி வந்துள்ளது!

அதில் அவர்கள் இப்படி புகை பிடிக்கும் புகைஞ்சர்கள் - வாழ்வில் அகால மரணமடைகிறார்கள்; சுமார் 10 ஆண்டுகள் தங்கள் ஆயுளை இழக்கின்றனர்; லேசான புகையிலையின் தாக்கமே - பழக்கமே இவர்களது ஆயுள் குறைப்பானாக ஆகி விடுகிறதாம்.

இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் நாகரிக உணர்வைக் காட்டி பெண்களும்கூட புகைஞ்சர்களாக, குடிகாரர்களாக மாறி வரும் கொடுமை நாளும் அதிகமாகி வருகிறது.

கணினியுகத்தில் பொறியாளர்களாகி, திடீரென்று அளவுக்கு மீறிய சம்பளத்தைப் பார்க்கையில் திசை தடுமாறி, குடி, புகைத்தல் மற்றும் சில ஒழுக்கக் கேடுகளில் இளைஞர்கள் பலியாகி விடும் கொடுமை - மிக அதிகமாகி வருகிறது!

புகைபிடிக்கும் பழக்கம் ஒருமுறை ஏற்பட்டு விட்டால் எளிதில் அதைக் கைவிட்டு விட முடிவதில்லை பலரால்; தேவையின்றி தானே இப்படி தற்கொலை மாத்திரைகளை ஒவ்வொரு புகைப்பிடித்தலின் போதும் விழுங்குகின்றனரே! இழுக்க இழுக்க இன்பம்; இன்னும் வேகமாக விரட்டும் துன்பமும் முடிவும் என்பது செத்த பின்பு தான் தெரியும்!

புற்று நோய் அபாயம் போன்றவை புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் போன்ற பழக்க வழக்கங்களால் என்பது ஒரு புறம்.

அது இல்லாமல் இது சாதா ரணமாக புகைஞ்சர்கள் ஆயுளே 10 ஆண்டு குறைகிறது.

அதைவிட பொருளாதாரத் தினைக் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?

என் வாழ்நாளில் நான் புகைஞ்சனாகியிருந்தால் எவ்வளவு அனாவசியப் பொருள் விரையம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

உடலையும் வாழ்வையும் காப்பாற்றிட நீங்கள் புகைஞ்சர்களாக இருந்தால் உடனே கை விடுங்கள்;

நமது மதிப்பிற்குரிய தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கூட நாம் இழந்துள்ளோமே!

அதனால் அவர்கள் வீட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை விட நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் மிகவும் அதிகம் அல்லவா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இசையமுது முதல் தொகுதியில் இந்த ஆபத்தினை நன்றாக புகைச் சுருட்டு என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கியுள்ளாரே!

புகைச் சுருட்டு

புகைச்சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும் - பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல்சீறும் - நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக் கொண்டே விரலிடையில் தாங்கி - நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

தமிழ் ஓவியா said...


தொண்டறம் தொடரும்!... முடிவில் வெல்லும்!!...

மதிப்பிற்குரிய தமிழினத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாண வரணி கடலூர் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்தபோது கருத்துக் குருடர்கள் சிலர் காரை மறித்துத் தாக்கியதாக வந்த செய்தி கேட்டு ம

னிதநேயம் கொண்ட அத்தனை உள்ளங்களும் துடிதுடித்துப் போயின!.

21-ஆம் நூற்றாண்டிலும், ஏனிந்த கொலை வெறி? நம் நாடு குடியரசு நாடே தவிர கொடுங்கோல் மன்னர்கள் வாழ்ந்த அரசியல் பண்பாடே அறியாத காட்டுமிராண்டிகள் வாழ்கின்ற நாடல்லவே!

நாட்டின் வரலாறோ... மொழியின் வரலாறோ... இனத்தின் வரலாறோ சிறிதும் அறியாத சில மதவெறியர்கள் தான் இத்தகைய கீழ்த்தரமான செயல் களிலே ஈடுபட்டு அவமானத்தைத் தேடிக்கொள்கிறார்கள்!...

வன்முறை சிறிதும் கலவாது அறப் போராட்டங்களின் வாயிலாகவே ஒரு பெரிய சமுதாய மாற்றத்தையே உருவாக் கிக் காட்டினாரே தந்தை பெரியார்! அன்று கற்களை வீசியும் முட்டைகளை வீசியும், செருப்பை வீசியும் அவரை அவமானப்படுத் முனைந்தவர்கள் எல் லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்! ஆனால்

தந்தை பெரியாரின் புகழோ இன்று உலக மயமாகி வருகிறது! அவருடைய பகுத்தறிவுக் கருத்துக்களை மதித்துப் போற்றி பாராட்டாத நாடுகளே, இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறதே. இது யாரால்?

தன்னலம் கருதாது... உடல் நலத் தையும் பாராமல் தமிழினத்தின் மேன் மைக்கு உழைத்துக் கொண்டிருக்கிற அய்யா ஆசிரியர் அவர்களது அயராத தொண்டறத்தால் தானே!

திராவிடர் கழகம் என்ற சமுதாய இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பும் இல்லை யென்றால்... தமிழ்ச் சமுதாயமே இன்று பூண்டற்றுப் போயிருக்குமே!. அமெரிக்கர் களின் வருகையால் அமெரிக்க ஆதி குடிகளான செவ்விந்தியர் அடியோடு அழிந்து போனதுபோல...

ஆரியர்களின் வருகையால் தமிழினம் அழிந்து ஒழிந்து போயிருக்குமே! அந்த அழிவைத் தடுத்து நிறுத்தி தமிழி னத்தைக் காத்தது மட்டுமல்ல; இன்று வரை காப்பாற்றி அவர்களை மீண்டும் உச்சிக்கு உயரச்செய்ய இன்றுவரை களத் திலே நின்று போராடிக்கொண்டிருப்பது இவ்விரு இயக்கங்களும், அதன் தலை வர்களும் தானே! அதற்குப் பரிசா இது? சிந்திக்க வேண்டாமா?

மதத்தையோ, கடவுளையோ, காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் இவர்களுக்கு அந்த அதிகாரத்தைத் தந்தவர்கள் யார்? இவர்கள் காப்பாற்றித் தீரவேண்டிய அளவுக்கு அவ்வளவு பலவீனமானவையா அவைகள்?

கருவறையில் தேவனாதனே கடவுள் இல்லை என்பதை தனது செய்கையால் நிரூபித்துக் காட்டி விட்டதற்குப் பிறகுமா இத்தகைய கொலை வெறி? இந்து மதத்தின் அதாரிட்டி காஞ்சிப் பெரியவாள் (!) ஜெயிலுக்கும் பெயிலுக் குமாக அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட பிறகுமா கருத்துக்குருடர்களாக இருப்பது? சிறிதேனும் சிந்திக்க வேண் டாமா? அய்யனார் கோயில் குதிரை சவாரிக்கு உதவாது! பந்தயத்திற்கும் பயன்படாது!!

சினத்தை ஒதுக்கிவிட்டு.. சற்று சிந்திப்பார்களா? அதுவரை திராவிட இயக்கங்களின் தொண்டரம் தொடரும்!

முடிவில் வெல்லும்!!

- குடந்தை நெய்வேலி தியாகராசன்

தமிழ் ஓவியா said...


சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரித்த உணவாம்


திருவனந்தபுரம், அக்.14 சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரிக்கும் உணவை குறைந்த விலையில் விற்க கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

திருவனந்தபுரம் மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைதி கள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை தொடங்கப்பட்டது. 1 சப்பாத்தி ரூ.2 என மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும், தரமானதாக இருந்ததாலும் பொது மக்களிடையே இந்த சப்பாத்திக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்களின் ஆதரவு அதிக ரித்ததை தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளான கண்ணூர், திருச்சூர், பத்தனம்திட்டா உட்பட மேலும் பல சிறைகளிலும் உணவு தயா ரிக்கப்பட்டது. சப்பாத்தி, இட்லி, சிக்கன் ஆகிய வற்றை வாங்க சிறை வாசலில் நீண்ட வரிசை யில் மக்கள் நின்றனர். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதி கம் கூடும் இடங்களில் கைதிகள் தயாரிக்கும் உணவு விற்பனை தற் போது அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு கேரள சிறைகளில் 4 லட்சம் சப்பாத்தியும், 1 டன் கோழிக் குழம்பும் விற்கப்படுகிறது. திருவனந்த புரத்தில் மட்டும் தினமும் 1 லட்சம் சப்பாத்தியும், 30 ஆயிரம் இட்லியும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்ய கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பத்தனம் திட்டா சிறையில் நடந்து வருகிறது.

தற்போது முதல்கட்டமாக சபரிமலை செல்லும் வழியில் மைலப்ரா, வடசேரிக்கரை மற்றும் நிலைக்கல் ஆகிய இடங்களில் வாகனங்கள் மூலம் இட்லி, சாம்பார், சப்பாத்தி மற்றும் காய் கறிக் குழம்பு ஆகிய வற்றை விற்பனை செய்ய தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

ரூ.2க்கு சப்பாத்தி, இட்லி கிடைக் கும். காய்கறிக் குழம்பு ரூ.10-க்கும், சாம்பார் ரூ.5-க்கும் கிடைக்கும். பம்பையில் தேவசம் போர்டு இடம் கொடுத்தால் அங்கும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக சிறைத் துறை இயக்குநர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

விண்வெளிக்குச் சென்றது கடவுளுக்கு விரோதம்: விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்


விண்வெளியில் கடவுளைக் காணவில்லை - யூரி ககாரின்

- நி.சித்து முருகானந்தம் எம்.எஸ்.சி., (இயற்பியல்)


பெரியார் நூலக வாசகர் வட்ட சார்பில் நடை பெற்ற பெரியார் - அண்ணா விழாவில் பாராட்டப் பெற்ற அறிவியல் அறிஞர்களில் ஒருவரான நி.சித்து முருகானந்தம் அவர்கள் ஆற்றிய முக்கியவுரையின் முக்கிய தகவல்கள்:-

அறிவியல் பணிக்காக நாங்கள் இந்தக்கூட்டத்தில் பாராட்டப்படுகிறோம். தகுதியானவர்களிடமிருந்து, பொருத்தமானவர்களிடமிருந்து, நாத்திகர்களிட மிருந்து, பகுத்தறிவு வாதிகளிடமிருந்து இந்தப் பாராட்டு எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யாகவும், பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கிறது. விஞ்ஞானிகளில் இரண்டுவகையுண்டு. நாத்திக விஞ்ஞானிகள், ஆத்திக விஞ்ஞானிகள். ஆத்திக விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைச் செய்யும்போது அவை அவர்கள் இது நாள்வரை நம்பிய மத, கடவுட்கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறபோது சங்கடத்துடன் நெளிவார்கள்.

நமது நாட்டிலேயே இது நடந்திருக்கிறது. சர்.சி.வி.ராமன். இவர் 1930-இல் நோபல் பரிசு வாங்கியவர், 1961-இல் யூரி ககாரின் உலகின் முதல் மனிதராக விண்வெளிக்குச் செல்கிறார். 1930-க்கும், 1961-க்கும் இடையில் 31 வருடங்கள். எந்த மனிதருக்கும் வயது ஆக ஆக அறிவும், அனுபவமும், பக்குவமும் வளரும். அதுதான் இயற்கை. ஆனால் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றதைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பார்ப்பனர்களின் மதக்கோட்பாட்டின்படி விண்ணுலகு கடவுள்கள் வாழ்கிற இடமாதலால், கடவுள்கள் வாழ்கிற விண்வெளிக்கு மனிதன் இந்த பூத உடலுடன் செல்வது மிகப்பெரிய பாவம் என்று பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுத்துவிட்டார். விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்? நேரே யூரி ககாரினிடம் சென்று கேட்டுவிட்டார்கள், விண் வெளி கடவுள்கள் வாழ்கிற இடமென்றும் மனிதன் தன் பூத உடலுடன் அங்கு செல்வது பெரிய பாவம் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் சொல்கிறாரே என்று. இதற்கு யூரி ககாரின் என்ன சொன்னார் தெரியுமா? நானும் விண்வெளியில் சுற்றிப்பார்த்தேன் அங்கு எந்தக்கடவுளும் இல்லை என்றார் சாட்டையால் அடித்தது போல் இதைவிட பெரிய சங்கடம் சர்.சி.வி.ராமனுக்கு வேண்டுமா? இது சாதாரணக் சங்கடம் இல்லை, இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம். அவாளின் தர்மத்துக்கே ஏற்பட்ட சங்கடம், இந்த மாதிரி சங்கடங்களெல்லாம் நாத்திக விஞ்ஞானிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடனேயே விஞ்ஞான உண்மை களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ராங்க் வில்செக் என்பவர் ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானி, 2004-இல் அசிம்டோடிக் ப்ரீடம் என்ற அணுவுக்குள் இருக்கும் ஒரு இயக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். தன்னைப்பற்றி எழுதும்போது தான் ஒரு பாதிரியாரின் மகனென்றும் மதக்கருத்துகளால் வளர்க்கப்பட்டவனென்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு விஞ்ஞான உண்மைகளை படிப்படியாகத் தெரிந்து கொண்டபோது மதக்கருத்துகள் எவ்வளவு மோசடியாகவும் மக்களை ஏமாற்றுபவையாகவும் இருக்கின்றன என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்து அவற்றைப் புறக்கணித்து விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

சமீபத்தில் நீங்கள் ஒரு செய்தியைப் படித்திருப் பீர்கள். வாயேஜர் 1, என்ற விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது என்பது பற்றி 1977-இல் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 36 வருடங்கள், ஏறக்குறைய 1900 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து இப்போதும் சென்று கொண்டிருக்கிறது. அதில் நமது பூமியைப் பற்றிய விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன. நமது விண்மீனாகிய சூரியன் இந்த பால்வெளி மண்ட லத்தில் எந்த இடத்தில் இருக்கிறது. இந்த பூமி என்ற கோள் சூரியனின் மூன்றாவது கோளாக இருப்பது, பூமியில் ஆறுகள் ஓடுகிற சத்தம், பிரபலமான இசை, இங்கு மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றிய ஆண், பெண் படம் அதிகமாக மக்கள் பேசக்கூடிய பல மொழிகளைத் தேர்ந்தெடுத்து அந்தந்த மொழிகளின் வாழ்த்துச் செய்திகள் போன்ற பல சிறப்பான செய்திகளை ஒரு தங்க ரிக்கார்டில் பதிவு செய்து அணுப்பியிருக்கிறார்கள். மிகவும் பிரபலமான விண்வெளி அறிஞர் கால் சேகன் தான் இந்த செயல்களுக்கு பொறுப்பேற்று செய்திருக்கிறார். யாராவது வெளியுலகவாசிகள் இருந்தால் நமது பூமியைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அப்படிப் பதிவு செய்யப்பட வாழ்த்துச் செய்திகளில் இந்திய மொழிகளில் மட்டும் 9 வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் 1999-இல் நாசாவின் வாயேஜர் இணைத்தளத்தைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அந்த இந்திய மொழிகளில் நமது தமிழ் இல்லை. எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏழுகோடி மக்கள் பேசுகிற மொழி, 4 நாடுகளின் ஆட்சி மொழியாக இருபது, உலகின் தொன்மையான மொழி எப்படி விடுபட்டுப் போனது என்று இந்த விவரங்களைச் சொல்லி நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அது ஏற்புடையது அல்ல என்று சற்றுக்கடுமையாகவே அவர்களுக்கு இமெயில் கடிதம் எழுதினேன்.

உடனேயே ஒன்றரை மணி நேரத்துக்குள் இரண்டு பக்கத்துக்கு அவர்கள் எனக்கு பதில் அனுப்பியிருந் தார்கள். அந்த பதில் ஒரு விஷயத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பார்ப்பனர்கள் சூழ்நிலையை, சின்ன புத்தியை. அவர்கள் சொன்னது இதுதான். தமிழ் எங்கள் பட்டியலில் இருந்தது. இங்கிருக்கும் இந்தியச் சங்கங்களைத் தொடர்புகொண்டு வணக்கம் என்ற தமிழ் வாழ்த்துச் சொல்லை பதிவு செய்வதற்கு நேரம் குறித்து வரச்சொல்லியிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்த்திலிருக்கும் இந்தியச் சங்கங்கள் இதை வேண்டுமென்றே புறக் கணித்துவிட்டனர். ஏனென்றால் ஹிந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி இவையெல்லாம் இருக் கின்றன தமிழ் மட்டும் இல்லை. அது சூழ்ச்சி இல்லாமல் வேறென்ன?

திராவிட மொழியான தமிழுக்கு இந்தச் சிறப்பு ஒரு போதும் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக்குறியாக இருந்திருக்கிறார்கள். நாசா நிறுவனத் தினர் சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்து போன மொழியாதலால், அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அவர்கள் அதை தேர்ந்தெடுத்திருந்தால் சமஸ்கிருதத்தில் வாழ்த்துச் சொல்லை சொல்வதற்கு அங்கு கியூவில் நின்றிருப்பார்கள். வணக்கம் என்று ஒரு சொல்லைச் சொல்வதற்கு ஒரு ஆளும் இல் லாமல் போய்விட்ர்களா அதற்கு நேரம் தான் இல்லையா? உண்மை அதுவல்ல. மனம் இல்லை.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்; என்பது நமது ஆசை ஆனால் இந்தப்போராட்டம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்பதற்கான வாய்ப்பைத் திட்டம் போட்டுக்கெடுத்துவிட்டார்கள். ஒரு வெளிஉலக மனிதனுக்கு இந்தச்செய்தி போய்ச்சேர்ந்தால் அது அங்கு வாழும் கோடிக்கணக்கானவர்களைப் போய்ச் சேர்ந்ததற்குச் சமம். பொறுக்குமா இவர்களுக்கு? எவ்வளவு குறுகிய புத்தி பாருங்கள்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் கடமை


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மை யோடும் நின்று விசயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்துக்கும், அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டி யது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

- (குடிஅரசு, 20.1.1935)

தமிழ் ஓவியா said...


ராமன் கோயில்


கேள்வி:ராமர் கோயில் பிரச்சினை தேர்தலில் முக் கியத்துவம் பெறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஏதோ சில மேடை களில் இது பேசப்படலாம் சம்பிரதாயத்துக்காக; பா.ஜ.க. வின் தேர்தல் பிரகடனத் திலும்கூட இது ஒரு சிறிய இடத்தைப் பெறலாம். மற்றபடி தேர்தலில் இந்த விஷயத் திற்கு எந்த முக்கியத்துவமும் கிட்டாது என்றே நான் நினைக்கிறேன்.
- துக்ளக் 16.10.2013 பக்கம் 2

ராமன் கோயில் பிரச் சினை தேர்தலில் முன்னி றுத்தப்படக் கூடாது; தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறக் கூடாது என்று சொல்லும் அறிவு நாணயம் இந்த சோ அய்யருக்கு இல்லை என்பது இதன்மூலம் வெளியாக வில்லையா?

மேடைகளில் பேசுவார் களாம், தேர்தல் அறிக்கை யிலும்கூட ஒரு சிறிய இடத்தைப் பெறலாமாம் -ஆனாலும் அதற்கு எந்தவித முக்கியத்துவம் கிட்டாதாம்.

எந்தவித முக்கியத்துவ மும் கிட்டாத ஒன்றை எதற்குத்தான் மேடையில் பேச வேண்டும்? எதற்காகத் தான் அது சிறிய இடத்திலும் இடம் பெற வேண்டும்? விளக் குவாரா வேதியபுரத்தார்.

ராம பக்தர்களையும் குறிப் பாக சங்பரிவார்க் கும்பலை யும் ஏமாற்ற வேண்டும்; இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற இரட்டை நாக்குப் புத்திதான் இது.

ராமன் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று காலங் கடந்தாவது சோ ஒப்புக் கொண்டதற்காகக் கொஞ்சம் பாராட்டலாம் தான்!

சேலம் 1971அய் அவர் மறந்திருக்க மாட்டார் அல்லவா!

ராமன் கோயில் கட்டு வதுதான் எங்கள் கொள்கை, பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில் ராமன் கோயிலை எழுப்பியே தீரு வோம் என்று மார்தட்டித் தேர்தலைச் சந்திக்கும் திராணி, அறிவு நாணயம் பி.ஜே.பி.க்கு உண்டா? அதைத் தேர்தல் பிரச்சினை யாக வைத்துத்தான் தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் திரில் ஆர்.எஸ். எசுக்குத்தான் உண்டா?

பிரதமர் வாஜ்பேயி அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசும்போது, நாங்கள் பெரும்பான்மை பெற்றால் ராமன் கோயிலைக் கட்டு வோம் என்றாரே - அதையே தேர்தல் பிரச்சாரக்களத்தில் முன் வைப்பார்களா?

பெரும்பான்மை தாருங் கள் ராம பிரான் கோயிலைக் கட்டிக் காட்டுகிறோம் என்று இந்திய வாக்காளர்கள் மத்தியில் வைக்க வேண்டி யது தானே - யார் தடுத்தது?

இரட்டை நாக்கில் பேசு வதில் இவர்களை அடித்துக் கொள்ள யார் இருக்க முடியும்?

காசியும், மதுராவும் எங்கள் அஜண்டாவில் இல்லை. ஆனால் இவை இரண்டும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஸ்திரமான, நேர்மையான அரசு என்பது தான் பிரதான அஜண்டா வாக இருக்கும் என்றார் அத்வானி (இந்து 30.12.1997)

அத்வானி பேசியது குறித்து வாஜ்பேயிடம் கேட்ட போது அவர் என்ன சொன் னார்? அஜண்டாவில் இல்லையென்றால் அதன் பொருளென்ன? தற்சமயம் அஜண்டாவில் இல்லை; அவ்வளவுதான். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் உறுதி யிட்டுக் கூற முடியாது. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 8.1.1998) பேசு நா இரண்டு டையாய்ப் போற்றி என்று ஆரிய மாயையில் அண்ணா அர்ச்சித்ததுதான் நினை விற்கு வந்து தொலைக்கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவரைத் தாக்குவதா?

மக்களாட்சியின் அடிப்படையே புரியாத காட்டுமிராண்டிகளின் தடித்தனம்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்

கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் இயக்க மாணவர் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை இதழாசிரியரும், சமூக நீதிக்காகவும் மூடத்தன ஒழிப் புக்காகவும் தம் வாழ்வு முழுவதும் துணிந்து போராடிப் பல வெற்றிகளை நமக்கு ஈட்டித்தந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கிச் சேதப்படுத்தியிருக் கிறது என்ற செய்தி அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அளிக்கிறது. மதவெறியும், ஜாதி வெறியும் கைகோர்த்து இந்த மிருக வெறித் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது மக்க ளாட்சிக் கோட்பாட்டுக்கே முற்றி லும் முரணான பாசிச வழிமுறை.

இதில் மேலும் அதிர்ச்சி தரும் காரியம் என்னவென்றால், வீரமணி அவர்களைப் பாதுகாக்க ஓடி வந்த திராவிடர் இயக்கத் தொண்டர் களைக் காவல்துறையினரே தடுத்துத் தாக்கியிருக்கிறார்கள் என்ற சேதி, வீரமணி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அதைச் செய்யாமல் பாதுகாக்க ஓடிவந்த திராவிட இயக்கத் தொண்டர்களை தாக்கியிருக்கிறார்கள் என்று அறியும் போது மனம் கொந்தளிக்கிறது.

இன்னும் ஒரு கொடுமை இந்தக் கொடுஞ்செயல்களைப் பற்றிப் புகா ரளிக்கக் காவல் நிலையத்துக்குச் சென்ற திராவிடர் கழகத் தோழர் களிடமிருந்து தோழர் வீரமணியின் கார் தாக்கப்பட்டது பற்றிய புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் தாக்குதல் பற்றிய புகார் மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்ட தாகவும் அறியவரும் செய்தி.

மக்களாட்சியின் அடிப்படைப் பண்பே சமூக மனிதர்களுக்குரிய கருத்துச் சுதந்திரம். நீண்ட வரலாற் றுக்குரிய திராவிட இயக்கம் இந்த நாட்டின் ஆகப்பெரிய நோயான வர்ணாசிரம் நோயையும் அதன் உள் நோய்களான மூடத்தனங்களையும் ஒழித்து அறிவு பூர்வமான ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்தக் கொள்கைகளை ஏற் றுக் கொள்ளாதவர்கள் இவற் றைச் சனநாயக வழிகளில் எதிர்த் துப் பிரச்சாரங்கள் செய்யலாம். அதை விட்டு வன்முறையில் ஈடுபடுவது அவர்களுடைய கொள்கைகளின் உள்அழுகலை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் நம்பும் அடிப்படை ஆயுதமான வன்முறையின் வெளிப்பாடும் ஆகும்.

இந்தக் கொடூரமான சட்ட மீறலுக்கும், வம்முறைக்கும் எதி ரான கடுமையான சட்டபூர்வ மான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தமிழக அரசைக் கோருகிறேன்.

தமிழ் ஓவியா said...


கலைஞர் சார்பில் பிரதமரிடம் டி.ஆர். பாலு முறையீடு


புதுடில்லி, அக். 15- இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! என்ற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களின் கோரிக்கையினை இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களி டம், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு நேற்று நேரில் உறுதிபட எடுத்துரைத் தார்.

இந்தக் கோரிக்கை யினை வலியுறுத்தி தொடர் பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு வின் மோசமான உடல் நிலை குறித்தும் டி.ஆர். பாலு, பிரதமரிடம் எடுத்துவிளக்கினார்.

அதனைக் கனிவுடன் கேட்டறிந்த இந்தியப் பிரதமர் அவர்கள், இவ் விஷயத்தில் தி.மு.க. மற்றும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவு எடுப்போம்! என்று உறுதியளித்தார். தியாகு பட்டினிப் போராட் டத்தைக் கைவிட கலை ஞர் அவர்கள் நடவ டிக்கை எடுக்க வேண் டும்! என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அதனை பிரதமர் மன்மோகன்சிங் அவர் கள், கடிதமாகவே வடித்து கலைஞர் அவர்களுக்கு டி.ஆர்.பாலு மூலம் கொடுத்தனுப்பினார்.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில், நேற்று இரவு 8 மணியளவில் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் சந்தித்துப் பேசினார்.

சுமார் 25 நிமிடத் திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது டி.ஆர்.பாலு இந்த ஆண்டு நவம்பர் திங் களில் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர் களின் கூட்டத்தில் இந் தியா கலந்துகொள்ளக் கூடாது என்கின்ற கோரிக் கையினை கலைஞர் அவர் கள் சார்பில் வைத்து, அதனை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஓரணியில் நின்று தமிழ் இன உணர்வாளர்கள் நடத்தும் போராட்டம்!

நான்கு ஆண்டுக ளுக்கு முன்னால் இலங் கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள் நாட் டுப் போரின் போது, ஒரு இலட்சத்து அய்ம் பதாயிரத்திற்கும் மேற் பட்ட அப்பாவி இலங் கைத் தமிழர்களின் உயிரைப் பறித்த சிங்கள இனவெறி அரசு நடத் தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் ஒரு மித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டும் என்றுதமிழகத்தின் பல்வேறுஅரசியல் இயக் கங்களும் - நாடாளு மன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்பு களும் பல்வேறு கால கட்டங்களில்தொடர்ந்து போராடி வருவதை கலைஞர் அவர்களின் சார்பில் டி.ஆர். பாலு சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...


தீர்வு காண முடியாத பிரச்சினையே கிடையாது

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி

சென்னை, அக். 15- ஈழப் பிரச்சினை மட்டுமல்ல; எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இன்று (15.10.2013) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கேள்வி: காமன்வெல்த் மாநாட்டு அமைப் பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள்; அது எந்த அளவிற்குச் சாத்தியமாகும்?

பதில்: சட்டத்திற்காக மனிதர்கள் அல்ல; மனிதர்களுக்காகத்தான் சட்டம். இதற்கு முன்னால் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெற்றது கிடையாது. ஆகவே, அந்தக் கொடுமைகள் இலங்கையில் நடைபெற்றதின் காரணமாக, நீக்கக் கூடிய அளவிற்கு அய்.நா.விற்கு சக்தி இருந்து, நியாயங்கள் தோன்றுமேயானால், நிச்சயமாக அதனை செய்யவேண்டும். சமூகத்திற் காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக சமூகம் கிடையாது.

கேள்வி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் குற்றம் சொல்வதுபற்றி...?

பதில்: எல்லை தாண்டி செல்கிறார்கள் என் றால், காஷ்மீரில் பாகிஸ்தான் பக்கத்தில் முள் வேலி போட்டிருப்பதைப்போல, கடலில் ஒன்றும் முள்வேலி போட முடியாது. எல்லோரும் தெரிந்த ஒன்று என்னவென்றால், காற்றடித்தால், தானாக அந்தப் படகுகள் நகர்ந்து போகும். உடனடியாக அதனைத் தடுக்கவேண்டியதும், பாதுகாக்கவேண்டியதும் நம்முடைய கப்பற் படையின் கடமையாகும். தமிழக மீனவர்களின் வலைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள்; இரண்டு நாள்களுக்கு முன்னாலேகூட தமிழக மீனவரை கத்தியைக் கொண்டு வெட்டி இருக்கிறார்கள். இதைவிட வெட்கக்கேடு வேறு எதாவது உண்டா?

கேள்வி: இரு தரப்பு மீனவர்களும் (தமிழக - இலங்கை) பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வு ஏற்படும் என்று சொல்கிறார்களே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இரு தரப்பு அமைச்சர்களே பேசி முடிவுக்கு வரவில்லையென்றால், இரு தரப்பு மீனவர்கள் பேசி என்ன முடிவிற்கு வர முடியும்? இது ஒரு சடங்காச்சாரமாக இருக்குமே தவிர, இதனால் எந்தவித பயனும் ஏற்படாது. சட்ட பூர்வமாக எப்படி மற்றவர்களைக் கண்டிக்கிறீர் களோ, அதுபோல சட்டபூர்வமாக செய்யுங்கள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொடுப் பதை நிறுத்துங்கள்; போர்க் குற்றம் இன்னும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு, பயிற்சிக்கு போர்க் கப்பல்களை அனுப்புவோம் என்று சொல்வதையெல்லாம் முதலில் நிறுத்திவிட் டோம்; உங்களுடைய செயல்பாடுகளில் எங் களுக்கு திருப்தி இல்லை என்று அழுத்தந்திருத்த மாக வார்த்தைகள் இருக்கவேண்டும். ஆனால், இதுவரையில், கவலைப்படுகிறோம், அதனைப் பற்றி யோசிக்கிறோம், இது தடுக்கப்பட வேண்டும் என்று எவ்வளவு மென்மையான மொழியிலே, செல்லக் கோபமாகத்தான் காட்டு கிறார்களே தவிர, அவர்கள் அழுத்தந்திருத்த மாக தமிழக மீனவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செய்வதில்லை.
கேள்வி: தமிழக மீனவர் பிரச்சினை என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டு வருகின்றது; இதற்கு ஒரு தீர்வு என்பது உண்டா?

பதில்: தீர்வு இல்லாத பிரச்சினைகளே உலகத் தில் கிடையாது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அண்மையில், ரசாயனக் குண்டு வைத்திருக்கிறது என்று சொல்லி, சிரியாமீது அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்கிற வுடன், மற்ற நாடுகள் அதனைத் தவிர்த்து, போர் வரக்கூடாது என்று ஒரு தீர்வு கண்டார்கள். ஆகவே, மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அறி விருக்கிறதுபொழுது தீர்வுக்குப் பஞ்சமிருக்காது. அதை செய்வதற்கு தெம்பும், திராணியும், மன உறுதியும் அரசாங்கத்திற்கு வேண்டும்.
கேள்வி: அடுத்த கட்ட நடவடிக்கையாக திராவிடர் கழகம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளது?

பதில்: டெசோ அமைப்பிலும் திராவிடர் கழகம் அங்கம் வகிக்கிறது. இந்த நேரத்தில், மற்றவர்கள் தெளிவான ஒரு சூழ்நிலையில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை அணுகு கிறபொழுது, தமிழகத்தில் இருக்கின்றவர்கள் தனித்தனியாக இந்தக் காரியங்களைச் செய் கிறார்கள்; எல்லோரும் ஒன்றுபடமாட்டார்கள் என்கிற நிலையை மாற்றக்கூடியது மிகமிக முக் கியம். குறைந்தபட்சம் அதற்கு ஒத்தக் கருத்துள்ள வர்கள் அவரவர்கள் அவரவர் இடத்திலிருந்து ஆதரவு கொடுத்தால்கூட போதும் ஒருவருக்கொ ருவர் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

இரண்டாவதாக, அடுத்தகட்டமாக எதைச் செய்தால், மத்திய அரசுக்கு மிகப்பெரிய அள விற்கு உரைக்குமோ, மத்திய அரசு நல்ல இணக்க மாக சிந்திக்கிறோம் என்று ஒரு உறுதியை கலைஞர்மூலமாக அளித்திருக்கிறார்கள். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு அடுத்தபடி யாக நேரிடையாக நடவடிக்கைகள் இருக்கும். திண்டிவனத்தில் வருகிற 20 ஆம் தேதி கூடவிருக் கின்ற திராவிடர் கழக மத்தியக் குழுவில் அறி விப்போம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

சென்னை, அக்.15- ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (15.10.2013) காலை தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் 7.10.2013 அன்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று (15.10.2013) தமிழகம் முழுவதும் கழக மாவட்டங்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னைமாவட்டஆட்சியர் அலுவலகம் முன் இன்று (15.10.2013) காலை 11 மணியளவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர் தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன!

மத்திய அரசே புறக்கணிப்பாய், இலங்கையில் கூடுகின்ற, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பாய்.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே தலைமை யில் கூடுகின்ற காமன்வெல்த் மாநாட்டை புறக் கணிப்பாய்,

மத்திய அரசே, வழங்காதே இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்காதே,

தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி அரசுக்கு போர்க்கப்பலா? தமிழன் என்றால் நாதியற்ற கும்பலா,

மத்திய அரசே, தடுத்து நிறுத்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து,

கச்சத்தீவை மீட்டெடு, தமிழக மீனவர்களை காத்திடு.

போராடுவோம், வெற்றி கிட்டும் வரை போராடுவோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.