Search This Blog

1.10.13

பார்ப்பன அயோக்கியத்தனம்

அகில இந்திய பிராமண சம் மேளனம் என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலை கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடை பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து அகில இந்தியப் பிராமண சம்மேளனம் என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவிலுள்ள இந்துக் கள் என்று சொல்லப்படும் 25 கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும் படி சூழ்ச்சி  செய்து இருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல் லாதார்களின் இரத்தம் கொதிக்காம லிருக்கவே முடியாது. அவ்விருவர் பிர சங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப் படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத்தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் சத்திரியரும் வைசியரும் கிடை யாது என்றும் பேசியிருக்கிறார்கள், சத்திரியரும் வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்தவரையில் நமக்கு சந்தோஷமே. நாமும் அப்படித் தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக்கொண்டு திரிகிறார் களோ அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் சத்திரிய வைசிய உரிமைகளைக் காப்பாற்றிப் பார்ப் பனர்களின் சத்திரியர் மக்கள் அல்ல என்பதை நிருபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர் கள் சூத்திரர்கள் என்று சொன்னது தான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பையும் உண்டாக்குகிறது.
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குக் பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இருக்க நியாயமில்லை. நமது அகாரதிகளிலேயே ஆரியர் என் றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் அதுவும் அவர்களால் ஒப்புக் கொண்ட அகராதிகளில் காணப்படு வதும் அவர்களது நாகரிகமோ அவர் களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி புராணம், இது களால், அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்பட்டது என்பதும் அருவருக்கத் தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர் களுக்கு நன்றாகத் தெரியும் அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால் கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்குத் தூரமானவுடன் அந்தத் தோஷம் தீர்ந்து விடுகிறது என்ற பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 1வது காண்டம் 2வது சுலோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதே சுலோ கத்திற்கு விரிவுரை எழுதுகை யில் பிராமண ஸ்திரீ சூத்தி ரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அதுவும் தினம் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கும் குறைத்துக் கொண்டு வந்து 16ல் நாள் முதல் தினம் ஒரு கவள அன்னம் வீதம் உயர்த் திக்கொண்டு வந்து விட்டால் போதுமானது என்று இருக் கிறது இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமான தென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகத்தில் பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத் தக்கவர்கள் அல்லர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படி சுத்தி செய்வதன் மூலம் அங்கிகரிக்கப் பட்டிருக்கிறதோ அப் படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதி இருக்கிறது.
அன்றியும் எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசமிருப்பதால் சுத்தனா கிறான் என்று அதேஸ்மிருதி அதே அத்தியாயம் 14வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும் குமாரத்தியையும் சகோதரி முதலியவர்களையும் புணரும் படியான திலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்துகொள்ளும் விஷ யத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறது.

இப்பிராயச்சித்தங்களில் பெரும் பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும் பட்டினி முதலியவை இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான், இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதின் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர்களுடைய வைப் பாட்டி மக்கள், பார்ப்பனருக்குத் தொண்டு செய்யக் கடவுளால் பிறப்பிக் கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது நாகரிகங் களுக்கும், அவர்களது நாகரிகங்களுக்கும் உள்ளவித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டி இருக்கிறோம்.
தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் பார்ப்பன மகாநாடு கூட்டி நாம் பிராமணர்கள்தான் மற்ற வர்கள் நமது வைப் பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத் துவார்களானால், அவர்களின் தைரியத்யும் அயோக்கியத்தனத்தை யும் என்னவென்று சொல்வது இன் னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனிய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர் மானங்கள் செய்யப்பட்டி ருப்பதுடன் மகாத் மாவின் சமூகத்திருத்தக் கொள்கை களையும் கண்டித்துப் பேசப் பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ் தர்களும் நீதி நிர்வாக இலாக்காகளில் தீர்ப்புச் சொல்லக்கூடிய அதிகாரி களும் சம்பந்தப்பட்டிருப் பார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொருத்த அல்லது சுயமரியாதை விஷ யம் சம்பந்தப்பட்ட விஷயங் களில் இவர்களுடைய தீர்ப்பு கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேட்கிறோம். இந்தக் கூட்டத்தார் தானே அரசிய லிலும் நமக்குச் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக்கொடுக்கும் சுயராஜ் ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர் களால் வரக்கூடும், என்பது நமக்கு விளங்கவில்லை.
மகாத்மா கேட்கும் சுயராஜ்ஜியமே இந்த பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய் பார்ப்பனத்துரோகமாய் இந்து மதத் துவேஷமாய் போய்விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர்கோரும் சுயராஜ் ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது. என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டில் துர திஷ்டமாயிருக்கிறது, அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பனசம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக்கொடுமையில் இருந் தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகி றீர்கள்? கிராமங்கள் தோறும் சுய மரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறுகதியில்லை, சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக்கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டுத் தேசத்தின் பேரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும் சுயமரியாதையில் கவலை யில்லை. உள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.
------------------------------- தந்தைபெரியார் -” குடிஅரசு ”- துணைத் தலையங்கம் - 19.06.1927

8 comments:

தமிழ் ஓவியா said...


மோடியின் உரையும் விருத்தாசலம் மாநாடும்


வருங்காலப் பிரதமர் இவர்தான் என்று மிகப் பெரிய அளவு - பணத்தை வெள்ளமாகப் பாய்ச்சி ஆள் பிடித்துக் கூட்டத்தைச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு கூட்டம்! அப்படி ஒரு கூட்டம் திருச்சியில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.

பிரம்மாண்டமான ஏற்பாடு என்பது உண்மைதான். கொட்டிக் கொடுக்கத்தான் பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள் இருக்கிறார்களே - அவர்கள் தானே மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

என்னதான் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், மோடி தன் உரையின் மூலம், தான் யார் என்பதை தன்னைத்தானே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

சுதந்திர நாள் என்று கூறப்படும் நாளில் பிரதமரை மோசமாக விமர்சித்தார். திருச்சி உரையும் அப்படித்தான்! நம் வீரர்களைப் பாகிஸ்தானில் கொல்லும்போது நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பிரியாணி சாப்பிடுகிறார் என்று எவ்வளவு கண்ணியமாகப் பேசி இருக்கிறார்.

குஜராத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டுள்ளாரே! மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் எழுப்பிய குற்றச்சாற்றை அலட்சியப்படுத்த முடியுமா?

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழி வாரியாக மக்களைப் பிரிக்கும் பாவத்தைச் செய்தது - என்று திருச்சியில் மோடி முழங்கி இருக்கிறார்.

இது ஒன்றே போதும் மோடியைத் தூக்கி எறிவதற்கு! ஆர்.எஸ்.எஸின் கொள்கை, மாநிலங்களே கூடாது - ஒற்றை ஆட்சி முறைதான் இருக்க வேண்டும், ஒரே மொழிதான் ஆட்சி மொழி - அது சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை; கோணிப்பைக்குள் இருந்த பூனை இப்பொழுது வெளியே வந்துவிட்டது.

மொழிவாரி மாநிலம் கூடாது என்பதுதான் பிஜேபியின் - நாளைய பிரதமர் என்று கனவு காணும் நரேந்திரமோடியின் முடிவு என்றால் இதுபற்றி அனைத்து மாநில மக்களும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

தங்களின் மொழி, இனம், பண்பாடு இவற்றை இழந்து எல்லோரும் இந்துத்துவா என்ற இந்து மகா சமுத்திரத்தோடு கரைந்து போய் விட வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமும், ஏக்கமுமா?

இந்த நாட்டில் இருக்கக் கூடிய கிருஸ்தவர்களும், முசுலிம்களும் - தங்களை இந்துமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுளான, கிருஷ்ண னையும், இராமனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறக் கூடியவர்கள் இதனையும் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிஜேபியோடு கூட்டு சேரலாம் என்று அசை போட்டுக் கொண்டிருப்போர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அப்படி கூட்டுச் சேர்ந்தால் மொழிவாரி மாநிலமே கூடாது என்பவர்களோடு கை கோர்த்துக் கொண்டு வரலாமா என்று கேட்க மாட்டார்களா தமிழர்கள்? தமிழர்கள் என்ன சுயமரியாதையற்றவர்கள் என்ற நினைப்பா?

இன்னொரு குற்றச்சாற்றையும், ஆளும் காங்கிரஸ்மீது வைத்துள்ளார். மதத்தின் பெயரால் பிளவுபடுத்துபவர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுக்காக வக்காலத்து வாங்கிப் பதில் சொல்வது நம்முடைய வேலையல்ல; ஆனால் அதே நேரத்தில் இப்படிச் சொல்பவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டாமா?

இந்துத்துவா என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டவர்களா இதைப் பேசுவது? நான் ஒரு இந்துத் தேசியவாதி! (Hindu Nationalist) என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்த பேர் வழியா இப்படி ஒரு குற்றச்சாற்றை வைப்பது?

குஜராத்து மாநிலத்தில் சிறுபான்மை மக்களைத் தேடித் தேடிச் சென்று கொலை வேட்டை ஆடிய ஆசாமிகளா இந்தக் குற்றச்சாற்றை வைப்பது?

வாக்காளப் பெரு மக்கள் ஏதோ ஒரு காரணத் தால் தவறான முடிவை மேற்கொள்வார்களேயானால் குஜராத்தில் அவர்கள் நடத்திக் காட்டிய அதே வேட்டையை இந்தியா முழுமையும் நடத்திக் காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை! விருத்தாசலம் திராவிடர் கழக மாநாடும் இந்த எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


இன்று (அக். 1) சர்வதேச முதியோர் தினம்


இன்றைய சூழலில் முதி யோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. 2050ஆம் ஆண் டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடு களிலும் முதியோரின் எண் ணிக்கை இருமடங்காக உயரும் என அய்.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர் களை நன்றாக கவனிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ஆம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளை களால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப் பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளை யும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர் களின் செயல்பாடுகள் மாறி விடும். முதியோரின் அறிவு மற் றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதா மல், வரமாக கருதுங்கள். குடும் பத்தில் முதியோரை அரவ ணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக் காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

பிள்ளைகள் நல்ல வசதி யோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதி யோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற் றோராவது முதியோர் இல்லத் தில் இருந்தால், மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர இத்தி னத்தை பயன்படுத்திக் கொள் ளுங்கள். அரசும் முதியோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா... முதியவர்கள்?

கொடிது கொடிது... முதுமை கொடிது; அதனினும் கொடிது... முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதர வின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், காவல்துறையினர் உறவினர் களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன் றைய இளமை நாளைய முது மையாய் மாறித் தானே ஆக வேண்டும்?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பெரியார் பொன்மொழிகள் போட்டி

சிங்கப்பூர், அக்.1- தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் போட்டிகள் 2013 என்ற தலைப்பில் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் போட்டி மற்றும் தமிழ் கட்டுரைப் போட்டிகளை லிட்டில் இந்தியாவில், உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 28 ஆம் நாள் சனிக்கிழமை நடத்தியது.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து போட்டிகளில் பங்கேற்ப தற்காக தொடக்க நிலை 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர் களும், உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி, காலை சிற்றுண்டியுடன் தொடங்கியது. போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி வகுப்பு அறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக் கும் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரி யர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை வழி நடத்தினார்கள்.

பெரியார் பொன்மொழிகள்!

பெரியாரின் பொன்மொழிகளை மாணவர்கள் வாசித்து ஒரு பொன்மொழியினை விளக்கிக் கூறும் போது மாணவர்களின் அறிவுக் கூர்மையும், தெளிவான சிந்தனையும் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் பாடும்போது மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், குரலும் இனிமையாக இருந்தது. கட்டுரைப் போட்டியில் ஆர்வமுடன் மற்றும் குறித்த நேரத்தில் எழுதி முடித்து தொடக்க நிலை மாணவர்கள் எழுதும் திறனை வெளிப்படுத்தினார்கள்.

போட்டி முடிந்த பின் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் மதிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தார் கள். மூன்று பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 12 வெற்றி யாளர்கள், 6 ஊக்கப் பரிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். போட்டிகளின் முடிவு உடனடியாக அறிவித்ததை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி, சான்றிதழ்களையும், ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ள திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

வெற்றியாளர்களை அறிவிக்கும்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழில் பேசுவது, எழுதுவது மற்றும் பாடுவது பற்றி வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக மன்றத்தின் செயலாளர் க.பூபா லன் நன்றி கூறி வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் பரிசுப் பொருள்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும், பெற்றோர்களும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றார்கள்.

நிகழ்ச்சியில், பெரியார் சமூகசேவை மன்ற உறுப்பி னர்கள், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
//

தமிழ் ஓவியா said...

காப்போம், காப்போம்! தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்!!
கழகத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை - குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் கட்சிக் கொடியுடன் அன்பு தழுவ வரவேற்றனர்.

காப்போம்! காப்போம்!! தமிழர் தலைவரைக் காப்போம்!

காப்போம், காப்போம், தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.

அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குக் கழகத் தலைவர் மாலை அணிவித்தார்.

தமிழ் ஓவியா said...


காந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்!


- ஊசிமிளகாய்

அண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா?
125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன்? எதற்காக? சுட்டவன் யார்? யாரிடம் பயிற்சி பெற்றவன்?
இந்நாளிலாவது உரக்கச் சிந்திக்கவேண்டாமா?

எந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன!

காந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது!

அதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன!

பெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்!

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்!

திராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா?
அவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா? பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே! கதவு மட்டுமா? கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்!

ஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது!

காங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது!

மதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா? மதக் கலவரங்கள் பெருகுவதா?

வன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை?

கோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே!

வேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்!
எனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

- (விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

இந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.

இன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.

எல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.

சுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.

பணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.