Search This Blog

26.5.10

அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள்

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் தனி ஒரு அமைப்புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்

சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி!

சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக எதிர்-பார்த்ததற்கு மேலாக வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்

இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை.

இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்துள்ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள்.

உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே!

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவையொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசாரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்!

அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது.

முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை.

அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான அறிவுபூர்வமான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை

இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள் பா.ஜ.க., அ.தி.மு.க., இடது சாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது!

இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவரமில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்!

ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன?

இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்தறிவாளர்.

இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது!

இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்!

பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது!

ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்முறைமூலம் (நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்றமடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

-------------------"விடுதலை” 26-5-2010

3 comments:

tamil4true said...

pogkata devatiya peththa pottikal

தமிழ் ஓவியா said...

உங்களைப் பற்றி நீங்களே செய்து கொண்ட சுயவிமர்சனம் அசிங்கமாக இருக்கு ravikumar

நம்பி said...

//Blogger ravikumar said...

pogkata devatiya peththa pottikal

May 26, 2010 10:15 PM//

...இது பொறப்பின் ரகசியத்தை வெளியே சொல்லினதுமில்லாமல் இதை பெத்த தாயையும், பெண்ணினத்தையும் கொச்சை படுத்திவிட்டது. இது பொறப்பு அப்படி....