Search This Blog

15.9.13

அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்

          அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்

அண்ணாவிடம் - கி. வீரமணி வேண்டுகோள்



(தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.

நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குத் தொல்லை  கொடுத்தேன்.

ஏனென்றால், அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்து ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன். செப் டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக் கொண்டு இருந்தார். நான் போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே, கட்டுரை தானே  எழுதி கொடுத்துவிடுகிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.

அண்ணா அவர்கள் அடுத்து மதுரைக்குச் சென்றார். அண்ணா அவர்களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வர வேண்டியது முக்கியம்.

மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர் களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.

அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்து விட்டு அய்யா அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம். அந்தக் கட்டுரை வருமாறு:)

கலவரம் நடக்காத பொதுக்கூட்டம் எது?

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஆண்டு பலவற்றுக்குப் பிறகு  அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடு களில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும்  தாடி போகும் தடி போகும்  உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண் டிய நிலை.

பெரியாரால் திருந்திய

தமிழரோ பலப்பலர்!


அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்  வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந் திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டு தான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்!

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங் கும் இருந்ததில்லை.
அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழே டுகள் புதிதுபுதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப் பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.

எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என் பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.

கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக் கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டி ருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப் போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத் தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.

தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச் சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்! அவருடைய பேச்சோ  அது தங்கு தடை யின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது  மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு ஓசை நயத்துடன்  ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்  என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.

பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!

மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்  எது நேரிடினும்  என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர்கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவு களை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண் டின் அளவு, மிகப் பெரியது.

பெரியார் கண்ட தமிழகம்!

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட் டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!  முடிகிறதா! நடக்கிறதா!  விட்டு வைத் திருக்கிறார்களா!  என்று கேட்கிறார்கள்  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!

அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்  பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரை களை; கூடிப் பேசுவார்கள் சிறிய மண்ட பங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!

இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக்கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றா லும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம்  ஒரு கால கட்டம்,  ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.

அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.

நேர்மைக்காகப் போராடிய பெரியார்!

பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப் படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்தி டினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.

அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!!

அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று  குறிப்பிட்டேன். மேலும் பல ஆண்டுகள் அவர் நம் முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண் டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமை வதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவ தற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்ய மில்லை. வாழ்க பெரியார்!

-----------------------------------பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு விடுதலை மலருக்கு எழுதிய கட்டுரை

55 comments:

தமிழ் ஓவியா said...

இவ்வாண்டு அண்ணா பிறந்த நாளில் முக்கிய நிகழ்வு


தமது விடுதலைக்குக் காரணமான அண்ணாவின் பிறந்த நாளில் குவைத் தோழர்கள் மூலம் மலர் வளையம் வைக்கச் சொன்னார் கோவா விடுதலை வீரர் ரானடே!

அந்தக் கடமையை இன்று திராவிடர் கழகம் செய்கிறது

இவ்வாண்டு அண்ணா பிறந்த நாளில் முக்கிய நிகழ்வு

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் ரானடேயின் விடுதலைக்காக போப்பைச் சந்தித்து வேண்டுகோள் வைத்தார் முதல் அமைச்ச ராகவிருந்த அறிஞர் அண்ணா - அந்த ரானடே புனேயில் வாழ்ந்து வருகிறார். அவரைச் சந்திக்கச் சென்ற குவைத் தோழர்கள் செல்ல பெருமாள், லியாகத் அலி ஆகியோரிடம் தனது நன்றியின் அடையாளமாக அண்ணா அவர்களின் பிறந்த நாளான இன்று அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கச் சொல்லியுள்ளார். அந்த அன்பு வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இன்று அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைக்கப்படுகிறது என்று கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். (தோழர்கள் குவைத் செல்ல பெருமாள், லியாகத் அலி ஆகியோர் வந்துள்ளனர்).

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது தலை சிறந்த மாணாக்கர்களில் முதன்மையினரான அறிஞர் அண்ணா அவர்களின் 105ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா - இன்று!
கொள்கை மாறாத அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் தமது இறுதி மூச்சடங்கும் வரை கொள்கை, லட்சியம் என்பதை விட்டுக் கொடுக்காது, அரசியலுக்குச் சென்ற நிலையில் கூட - கூடுமான வரை நெளிவு - சுளிவுகளை லாவகமாக ஏற்படுத்தி, அடிப் படையான இன உணர்வு, பகுத்தறிவு, சமூகநீதி, பெண் விடுதலை, மூடநம்பிக்கையொழிப்பு, மனிதநேயம், சுயமரியாதை - இவைகளைக் கட்டிக் காத்து அறநெறி அரசியலை வளர்த்தார்!

அவரது 105ஆம் ஆண்டு பிறந்த நாளில் ஒரு புதிய செய்தி.

அண்ணாவின் மனிதநேயப் பணி

முதல்வராக இருந்தபோது அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்று யேல் பல்கலைக் கழகத்தில் உரையாற்றி, அங்குள்ள அறிஞர்கள், பேராசிரியர்கள் மாணவ மணிகளையெல்லாம் சந்தித்து கலந்துரையாடி திரும்பும் வழியில், ரோம் நகரில் உள்ள வாட்டிகன் என்ற போப் அவர்களின் ஆளுமைக்கான நாட்டிற்கும் சென்று போப் அவர்களைச் சந்தித்தார் - மோட்சம் பெற விரும்பி அல்ல; ஒரு மனிதநேயப் பணிக்காக!
போர்ச்சுக்கல் தேச ஆதிக்கத்திலிருந்த கோவா, டையு, டாமன் பகுதிகளின் விடுதலைக்கான வெகு மக்கள் போராட்டம் அப்பகுதியில் நடைபெற்றபோது, எத் தனையோ பேர் சிறைச்சாலைகளில் போர்ச்சுக்கல் நாட்டின் அரசின் குற்றவாளிகளாக, கைதிகளாக - நமது விடுதலைப் போர் வீரர்கள் சிறையில் இருந்தனர்.

அவர்களில் மகராஷ்டிரப் பகுதியைச்

தமிழ் ஓவியா said...

சேர்ந்த திரு. ரானடே என்பவருக்கு (கோவா விடுதலைப் போராட்ட வீரர் அவர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அவர் வாடிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, அறிஞர் அண்ணா, அவரது விடுதலைக்காக போப்பைச் சந்தித்தார். போப் அவர்கள் கத்தோலிக்க மதகுரு; போர்ச்சுக்கல் நாடு கத்தோலிக்கர்களால் ஆளப்படும் நாடு; அதற்கு போப் அவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து கருணை காட்டி, விடுதலை செய்யுமாறு வேண்டிய கருணை மனுவினை மோகன் ரானடேவை (பார்ப்பனர்) யார் என்று தெரியாமலேயே போப் அவர்களை அண்ணா கேட்டுக் கொண்டார்.

மதிப்பிற்குரிய போப் அவர்களும்கூட மனித நேயத் துடன் அந்தக் கைதியை - போர்ச்சுக்கல் சிறையிலிருந்து விடுதலை செய்ய போர்ச்சுக்கல் அரசுக்குத் தாக்கீது கொடுத்தார்.

அதன்பின் அண்ணா சில திங்களில் மறைவுற்றார். அந்த தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய திரு ரானடே அவர்களை போர்ச்சுக்கல் அரசு விடுதலை செய்தது!

அவருக்கு அண்ணா அவர்கள் எடுத்த முயற்சி பற்றி ரானடே அவர்களுக்கு. பிறகே தெரிந்தது; அவர் மிகவும் அதிர்ந்தார்; வியந்தார், இப்படி ஒரு மாமனிதர் தனது விடுதலைக்காக, இந்திய அரசோ, அல்லது மகாராஷ்டிர மாநில அரசோ, கோவாவைச் சேர்ந்தவர்களோ காட்டாத மனிதநேயத்தை தமிழ்நாட்டில் ஒரு மனிதநேய மிக்க தலைவர் செய்துள்ளாரே என்று நன்றி உணர்ச்சியுடன், சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த நிலையில், சென்னைக்கு நன்றி தெரிவிக்க ஆயத்தமானார்.

ரானடேக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

ஆனால் அண்ணா அவர்கள் மறைந்து, வரலாறாகி விட்டார் என்ற செய்தி அவரை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது, பிறகு அண்ணா அவர்களது படத்தை வரவழைத்து அதற்கு மாலை சூட்டி நன்றி தெரிவித்தார்.

இதை அவர் தன் வரலாற்று நூலில் (ஆங்கிலத்தில்) எழுதியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட குவைத் நாட்டில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் செல்லப் பெருமாளும் அவரது நெருங்கிய நண்பரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் குவைத் துணைத் தலைவருமான திரு. லியாகத் அலி அவர்கள் (இவர் ஆடுதுறை திருமங்கலக் குடியைச் சார்ந்தவர்) நேரில் சென்று மும்பையில் தேடி, பிறகு புனேயில் தற்போது வாழும் திரு. மோகன் ரானடேவை எப்படியோ கண்டு பிடித்து, ஒரு பேட்டி எடுத்து, அவருக்கு மலர்ச் செண்டு கொடுத்து, தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைத்துத் திரும்பியுள்ளனர்.

அவரது முதுமை காரணமாக அவரால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய இயலவில்லை. என்றாலும் அண்ணாவின்மீதும், திராவிடர் இயக்கத்தின்மீதும் ஆழ்ந்த பற்றும் நன்றியும் செலுத்த அவர் சார்பில் அண்ணாவின் நினைவிடத்தில் நினைவு மலர் வளையம் வைத்து, அண்ணாவுக்கும் திராவிடர் இயக்கத்திற்கும் மிகவும் நன்றி பாராட்டி தன்னிடமிருந்த அவரது பழைய ஆங்கில தன் வரலாறு நூலையும் தந்து அனுப்பியுள்ளார் ரானடே.

அதை இவ்வாண்டு செய்ய அவ்விருவரும் பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து இன்று அவர் சார்பில் அண்ணாவுக்கு மரியாதை செய்ய முன் வந்துள்ளதை விட அண்ணாவுக்கு பெரும் விருது ஏது?

இது பாரத ரத்னாக்களுக்கும் மேலானது அல்லவா!

முத்திரை பதித்த செயல்

இவ்வாண்டின் முத்திரை பதித்த செயல் அல்லவா இது?

அத்தகைய மாமனிதர் அறிஞர் அண்ணாவின் எளிமை, கனிவு, பணிவு, துணிவு - எல்லாவற்றையும் விட பதவியை மேல் துண்டாகவும், லட்சியத்தையே வேட்டியாகவும் அண்ணா கருதியது - அரசியல்வாதிகள் கொள்கை பேசி முழக்குவோருக்குப் பாடம் அல்லவா?

எனவே அண்ணாவைப் படமாகப் பார்க்காதீர்!

அண்ணாவைப் பாடமாகப் படியுங்கள்!

பெரியார் வாழ்க!

அண்ணா வாழ்க!



கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
15.9.2013

தமிழ் ஓவியா said...


இரயிலைத் தவற விட்டார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களுடன் நான் என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து தொடர்பு கொண்டு தொண்டாற்றியவன் என்றால் அது மிகையாகாது. என்றாலும் காலத்தை கண் இமைபோல் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். சீமானாக வாழ்ந்தவர் என்றாலும் அவர்கள் பொதுத் தொண்டிற்கு வந்தபின்பு, மிகவும் சிக்கனமாகவும், எளிய வாழ்வு வாழ்ந்தும் காட்டியவர் ஆவார்கள் ஒரு சமயம் 4-0 ஆண்டுகட்கு முன்பு நானும் தந்தை பெரியாரவர்களும், திருக்க்யிலூர், திருவாளர் மா.நா. குமாரசாமிப் பிள்ளை அவர்களின் இறுதி முடிவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அதன்பின், அங்கிருந்து திருக்கோயிலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காலை 4 மணிக்கு புறப்படுகிற வண்டிக்காக ஸ்டேஷனில் தங்கினோம். நாங்கள் இருவரும் தூங்கி விட்டோம். வண்டி வந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று விட்டது; விடிந்து காலை 4 மணிக்கு எழுந்தோம்.

வண்டி சென்று விட்டது தெரிந்ததும் அய்யா அவர்கள் என்னை பார்த்து காளியப்பா என்னுடைய வாழ்நாளில் ரயில் வண்டியை தவற விட்டது இதுதான் முதல் தடவை இதுதான் கடைசித் தடவையாகவும் இருக்கும் என்றார். அடுத்த ரயில் வண்டியில் புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சேலம் சென்றோம்; அங்கு பொது மக்கள் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டு, ஈரோடு பயணம் ஆனோம். இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாக பெரியார் தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருந்தார். அடிக்கடி அய்யா இதை சொல்லு வார்கள். கடிகாரம் பார்த்து ரயிலுக்கு போகக் கூடாது. ரயில் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன்பு போக வேண் டும் என்பார்கள். அந்த அறிவு மொழியை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

-_ நாகை என்.பி. காளியப்பன்

தமிழ் ஓவியா said...


இரயிலைத் தவற விட்டார் பெரியார்

தந்தை பெரியார் அவர்களுடன் நான் என்னுடைய பதினெட்டாவது வயதிலிருந்து தொடர்பு கொண்டு தொண்டாற்றியவன் என்றால் அது மிகையாகாது. என்றாலும் காலத்தை கண் இமைபோல் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். சீமானாக வாழ்ந்தவர் என்றாலும் அவர்கள் பொதுத் தொண்டிற்கு வந்தபின்பு, மிகவும் சிக்கனமாகவும், எளிய வாழ்வு வாழ்ந்தும் காட்டியவர் ஆவார்கள் ஒரு சமயம் 4-0 ஆண்டுகட்கு முன்பு நானும் தந்தை பெரியாரவர்களும், திருக்க்யிலூர், திருவாளர் மா.நா. குமாரசாமிப் பிள்ளை அவர்களின் இறுதி முடிவுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அதன்பின், அங்கிருந்து திருக்கோயிலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காலை 4 மணிக்கு புறப்படுகிற வண்டிக்காக ஸ்டேஷனில் தங்கினோம். நாங்கள் இருவரும் தூங்கி விட்டோம். வண்டி வந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று விட்டது; விடிந்து காலை 4 மணிக்கு எழுந்தோம்.

வண்டி சென்று விட்டது தெரிந்ததும் அய்யா அவர்கள் என்னை பார்த்து காளியப்பா என்னுடைய வாழ்நாளில் ரயில் வண்டியை தவற விட்டது இதுதான் முதல் தடவை இதுதான் கடைசித் தடவையாகவும் இருக்கும் என்றார். அடுத்த ரயில் வண்டியில் புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சேலம் சென்றோம்; அங்கு பொது மக்கள் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டு, ஈரோடு பயணம் ஆனோம். இந்த நிகழ்ச்சியை ஒரு பாடமாக பெரியார் தன் வாழ் நாளெல்லாம் கொண்டிருந்தார். அடிக்கடி அய்யா இதை சொல்லு வார்கள். கடிகாரம் பார்த்து ரயிலுக்கு போகக் கூடாது. ரயில் புறப்பட ஒரு மணி நேரத்திற்கு முன்பு போக வேண் டும் என்பார்கள். அந்த அறிவு மொழியை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

-_ நாகை என்.பி. காளியப்பன்

தமிழ் ஓவியா said...


புத்துலகக் குழந்தையின் பெயர் என்ன?


அய்யா
வாழ்ந்தபோதும்
ஜீவ நதி நீ;
மறைந்த நிலையிலும்
ஜீவித்திருக்கும் நீ;
சித்தாந்தத்தின்
இரகசியம் என்ன?
இன எதிரிகளின்
அணுக்களில் எல்லாம்
நித்தம், நித்தம்
சூடு போடுகிறாயே!
எப்படி? எப்படி?
எதிரும், புதிருமாய்
இருக்கும் இரு முனைகள்கூட,
தவிர்க்க முடியாத
அழுத்தத்தின் பிதுக்கலால்
உமது தொலைநோக்கு
முத்திரை அடிகளுக்கு
முத்தம் பொழியும்
முகாமை என்ன?
காரணம் தெரிகிறது
உன் தத்துவ மூலிகை
காயங்களுக்கு
மருந்தாகிறது
தவித்த வாய்களுக்கு
தண்ணீர்ப் பந்தல்!
அறியாமை இருட்டில்
அகப்படுபவர்களுக்கு - உன்
அறிவுச் சுடர்
உதவும் கரம்!
நம்பிக்கை இழந்த
நரம்புகளுக்கு - தன்
நம்பிக்கை என்னும்
தாது புஷ்டி!
உன்னை ஒதுக்க
முடியவில்லை
ஒதுக்கினால், அவர்கள்
ஒதுக்கப்படுவார்கள்
எந்தப் பிரச்சினையையும்
எடை போட,
ஈரோட்டுத் தராசைத்
தேடுகிறார்கள்
பெரியார் சொல்லி இருக்கிறார்
என்று சொன்னால்போதும்
ஆவேசப் புயல்களும்
அடங்கி விடும்
அப்படி ஒரு அங்குசம்
நீங்கள்!
அப்படி ஒரு
சித்தாந்தம் நீங்கள்!
அமெரிக்கா செல்லவில்லை
நீங்கள்
ஆனாலும் அங்கு
அய்யா விழா!
ஆப்பிரிக்காவிலும்
பெரியார் ஃபவுண்டேஷனாம்
ஆஸ்திரேலியாவிலும்கூட
உங்கள் பேரர்கள்
பெரியார் என்னும்
உயிர் மெய்யெழுத்துக்களை
போதிக்கிறார்கள்
மதம் ரொம்பவே
படுத்துகிறது!
நதிகள் எல்லாம்
மனித ரத்தத்தால்
நிரம்பி, நுரைதள்ளி,
ஓடுகின்றன.
போதுமடா சாமி!
மதத்திற்கு விடை கொடு!
மதமற்ற புத்துலகை
மனம் தேடுகிறது
அங்கு அன்பு நதி உண்டு
அறிவு ஒளி உண்டு
பேதச் சரக்குகள்
விற்பனைக்குத் தடை!
எல்லார்க்கும்
எல்லாம்
சண்டை ஏது?
சழக்கு ஏது?
பொறாமை ஏது?
புகைச்சல் எது?
தொண்டறம் எனும்
தூயமணம் எங்கும்
எல்லார்முகத்திலும்
புன்னகைப் பூக்கள்!
சமநிறை சமன்முறை
சமத்துவ மூச்சுக் காற்று!
அந்த உலகக் குழந்தைக்கு
அய்யா உங்கள் பெயர்தான்
பெரியார் ஈ.வெ.ரா.!

-கவிஞர்
கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


அப்பாடி ஈ.வெ.ரா. தொலைந்தார்!


நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் உடல் நலம் இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக் கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் சிவநேசர்கள் என்றும் தேசியவாதிகள் என்றும் சைவப் பெரியார் என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக் கும் அயோக்கியர்கள் சிலரும் ஈ.வெ.ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும். போய்விட் டால் நாடு நன்மை அடை யும் என்று முட்டாள் தனமாகவும் சிறிதும் உலக ஞானமில்லாமலும் பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு ஈ.வெ.ராமசாமி அய்ரோப்பா சுற்றுப் பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள் ஆனந்தக் கூத்தாடி னார்கள். நமது இயக்கம் செத்துப் போய் விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாமென்று கும்மாளம் போட்டார்கள். இதனால் இத்தகைய பேட்டிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதி லிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் நமது இயக்கம் பொது ஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள் சுயநலத் திற்கான இயக்கம் அல்லவென்பதையும் உணர்ந்து வாயடங்கு வார்களென்று நினைக்கிறோம்.

(ஈ.வெ.ரா. அவர்கள் அய்ரோப்பா சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது சென்னை மகாநாடு சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழ் ஓவியா said...

ஒருதோப்பில்பலகனிகள்.....


குரங்கு பாலம் கட்டுமா?

இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் (வானரங்கள்) பாறை களையும் சால் மரக்கட்டைகளையும் கடலில் போட்டு இலங்கைக்கு பாலத்தை கட்டினவாம்.

பாறைகளின் மேல் 'ராம்! ராம்!' என எழுதிப் போட்டதனால் பாறைக ளெல்லாம் கடலில் மிதந்து பாலம் போல் ஆனதாம்!

எழுதத் தெரிந்த குரங்குகள்! பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குரங்குகளுக்கு எழுதவும் பாலங்கட்டவும் தெரிந்திருக்கிறது! சிரிப்பு தான் வருகிறது! அடக்கத் தான் முடியவில்லை!

(கி.மு. 2650ஆ-ம் ஆண்டில் தான் எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் குறுக்கே மெனிஸ் மன்னரால் உலகிலேயே முதன் முதலாக பாலம் என்ற ஒன்றே கட்டப்பட்டது.)

அப்போது மிதந்த பாலம் இப்பொ ழுது மிதக்காமல் கடலுக்கடியில் போனது ஏனோ தெரியவில்லை ?

இராமன் சக்தி அவ்வளவு தானோ?

அணில் முதுகில் கோடு போட்டது யார்? இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் பாலம் கட்டிக் கொண்டி ருந்த போது அணிலும் பாலம் கட்ட உதவியதாம்!

அணில் கடலில் குதித்து உடலை நனைத்துக் கொண்டு வந்து மணலில் புரளுமாம்! இதனால் உடலில் ஒட்டிக் கொண்ட மணலை பாலத்தின் அருகில் சென்று உதிர்க்குமாம்! இப்படியே செய்து கொண்டிருந்த அணிலைப் பார்த்த இராமன் அன்போடு அணிலின் முதுகில் தனது முன்று விரல்களால் தடவிக்கொடுத் தானாம்! உடனே அணிலின் முதுகில் மூன்று கோடுகள் பதிந்து விட்டனவாம்! இத னால் அனைத்து அணில்களின் முது கிலும் மூன்று கோடுகள் வந்துவிட் டனவாம்!

இந்தக் கதை எந்த இராமாயணத் திலும் கிடையாது எனபது பலருக்குத் தெரியாது. இதே போல் இராமாய ணங்களில் இல்லாத பல கதைகள் இராமாயணத்தில் இருப்ப தாகச் சொல்லப்படுகின்றன.

அமெரிக்கா, மெக்சிகோ, இங்கி லாந்து போன்ற பகுதிகளில் உள்ள அணில்களின் முதுகில் கோடுகளே கிடையாது. அங்குள்ள அணில்களின் மேல் இராமன் சக்தி பலிக்கவில்லையா?
இராமன் (அ)யோக்கியனா?

தமிழ்நாடு முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, இராமாயணப்படி இராமன் குடிகாரன், மாமிசம் சாப்பிட்டவன் என்று சொன்னவுடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யான இராம்விலாஷ் வேதாந்தி என்கிற பார்ப்பன பண்டார பரதேசி ''கலைஞரின் தலையையோ, நாக்கையோ வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 'பரிசுத் தொகை' வழங்கப்படும்'' என அறிவித்தான்.

உண்மையை சொன்னால் மதவெறி தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.

யோக்கியனை அயோக்கியன் என்று சொன்னால் தான் தப்பு! அயோக்கியனை அயோக்கியன் என்று தானே சொல்ல முடியும்! யோக்கிய சிகாமணி என்றா சொல்ல முடியும்?

இராமாயணத்தில் வரும் இராமன் குடிகாரனாகவும், பல மனைவிகள் உள்ளவனாகவும், பல பெண்களுடன் கூத்தடித்தவனாகவும் (சரச சல்லாபி), கொலைகாரனாகவும், பேடியாகவும் மற்றும் வேட்டையாடி விலங்குகளை கொன்று தின்றவனாகவும் தான் இருக்கிறான். இவ்வளவு அயோக்கியத் தனங்களையும் செய்தவனை மாறாக யோக்கிய சிகாமணியாக பிரச்சாரம் செய்தால் சும்மாவா இருக்கமுடியும்?

இராமன் குடிகாரன்! ''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும். அள வுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக் கத்தை கொண்டிருந்தான். அப்படி குடித்துவிட்டு அவன் போடும் கூத் தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான்.''

தமிழ் ஓவியா said...

(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சர்க்கம்- 43, சுலோகம்-1 )

நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர் இராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்! ''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''

(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)

இராமாயணத்தில் பல இடங்களில், இராமனின் மனைவிமார்கள் என்றே வருகிறது. நூல்: 'இராமாயணப் பாத்திரங்கள்'- தந்தை பெரியார்

இராமன் சரச சல்லாபி (பெண் பித்தன்)! ''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)

நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்

இராமன் பேடி! - கொலைகாரன்! மரங்களுக்கு பின்னால் மறைந் திருந்து திடீர் என அம்பெய்தி வாலியைக் கொல்கிறான்!

தவமிருந்த சம்பூகனை துடிக்கத் துடிக்க வாளால் வெட்டிக்கொன்றான்!

குடியையும், உயிர்க்கொலை புரியும் யாகத்தையும் எதிர்த்த பெண்களையும் அசுரர்களையும் (சுராபானம் குடிக் காதவர்கள்-திராவிடர்கள்) கொன்றான்.
இராமன் இன வெறியன்! '

'சம்பூகன்' என்கிற சூத்திரன் (திரா விடன்) காட்டில் உள்ள ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஆண்டவனை நோக்கி தவமிருந்தான், இதை அறிந்த இராமன் (ஆரியன்) காட்டிற்கு சென்று 'சம்பூக'னைக் கண்டு 'சூத்திரன் ஆண்டவனை நோக்கி தவ மிருக்க எனது இராஜ்ஜியத்தில் இட மில்லை' என்று கூறி வாளை உருவி 'சம்பூக'னின் தலையை வெட்டிக் கொன்றான்.'' (வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம், பிரிவு-64, பக்கம்-208 -ஆ.க.கணேசன், இக்கிம்பாதம்ஸ் வெளியீடு)

இராமன் விலங்குகளை கொன்று தின்றவன்! ''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும்.''

(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -43, சுலோகம் -1)

நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்

''ராகவன் (இராமன்) தங்களை (சீதையை) காணாமல் துக்கத்தால் தவிக் கிறார். இராமன் மது மாம்ஸங்களை விட் டார்.'' (அதாவது தற்காலிகமாக மது, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட் டார்) (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், சுந்தரகாண்டம், பக்கம்- 148 ஸ்ரீ உ.வே. சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு- தி லிட்டில் பிளவர் வெளியீடு)
''இராமனும் இலட்சுமணனும் அம்பெய்தி ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய குரு ஆகிய நான்கு விலங்கு களை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்து சீதையுடன் உண்டனர்.''

(வால்மீகி ராமாயணம், அயோத் தியா காண்டம், சர்க்கம்-52 பாடல் 102 ) நூல்: ''ராமாயணமும் லங்கையும்''- டி. பரமேசுவர அய்யர்

''இவ்விடத்திலும் இன்னும் பல விடங்களிலும் ராமலஷ்மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த வேட்டை யாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் பாடியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வியத்த மாகப் பாடியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.'' ('இராமாயணம்' (சக்ரவர்த்தி திருமகன்), பக்கம் - 134 ) -இராஜாஜி எழுதியது.

இராமன் ''அயோக்கியன்'' என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறோம். இராமன் பிறந்த இடம் எது? இராமன் பிறந்த இடம் 'அயோத்தி' என்றும், அங்குள்ள 'பாபர் மசூதியில் தான் இராமன் பிறந்தான்' என்றும் கூறி, அந்த மசூதியையே பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இந்த இழிச்செயலால் இந்தியா முழு வதும் கலவரங்கள் எற்பட்டு, {தமிழ் நாட்டை தவிர} பல மனித உயிர்கள் பலியாயின, உடமைகளும் பறிபோயின.

தமிழ் ஓவியா said...

ஆனால் அயோத்தியில், சுமார் 40 இடங்களில் உள்ள இராமன் கோயில் களில்; 'இங்கு தான் இராமன் பிறந்தான்' என்று கூறுகின்றனர். உண்மையில் அயோத்தி எது? இராமாயணத்தில் அயோத்தியில் இராமன் பிறந்ததாக சொல்லப்பட் டுள்ளது. பழைய (முதன்மை) இராமா யணக் கதையான 'புத்த இராமாயணத் தில் 'வாரணாசி'யில் (காசி) இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. (காசி கங்கை ஆற்றங்கரையில் உள்ளது)

வால்மீகி இராமாயணத்திலோ 'அயோத்தி'யில் பிறந்த்தாகவும், 'அயோத்தி' கங்கை ஆற்றங்கரையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள அயோத்தியோ 'சரயு' ஆற்றங்கரையில் உள்ளது.

'கங்கை' ஆற்றை தாண்டி, வடக்கு பக்கமாக 'சரயு' ஆறு உள்ளது; அதை யும் தாண்டி அடுத்த பகுதியில் தான் தற்போது உள்ள அயோத்தி உள்ளது.

அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து வந்த பிறகு தான் 'கங்கை' ஆறு வரும். ஆனால் வால்மீகி இராமாயணத் திலும் மற்ற இராமாயணங்களிலும், அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து இராமன் வந்ததாக சொல்லப் படவில்லை. அயோத்தியிலிருந்து நேரே கங்கை ஆற்றை கடந்து வந்ததாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 'வாரணாசி' (காசி) தான் பழைய 'அயோத்தி' என்று 'இராமனும் கிருஷ் ணனும் ஒரு புதிர்' என்ற தமது நூலில் கூறியுள்ளார்.

''மன்னர் ஜனகரின் தலைநகரம் 'விதேகம்'; அதே பெயரில் ஒரிடம் பீகாரில் உண்டு. முன்பு அயோத்தியாக சொல்லப்படுகிற இப்போதைய அவுத்திலிருந்து (அயோத்தி) வெகு தொலைவில் அமைந்துள்ளது அந்த இடம். இராமனும் அவனுடன் சென்றவர்களும் நடந்து நான்கு நாள்களில் சென்றடைந்ததாக சொல்லப் படுகின்ற அந்த இடத்திற்கு குதிரையின் மீது போனால் கூட அதைவிட இரண்டு மடங்கு நாள்கள் ஆகும்'' என்று _ 'ஜோசப் இடமருகு' அவர்கள் 'சபரிமலை அய்யப்பன் உண்மையும் கதைப்பும்' என்ற நூலில் கூறுகிறார். காசியிலிருந்து தான் 'பீகார்' அருகில் உள்ளது. அயோத்தியிருந்து பீகாரோ வெகு தொலைவில் தான் உள்ளது. ஆகையால் டாக்டர் அம்பேத் கர் அவர்கள் கூறுவது போல் 'பழைய அயோத்தி' 'வாரணாசி'(காசி) தான் என்பது தெளிவாகிறது.

இராமாயணக்கதைப்படி 'இராமன்' பிறந்தது வாரணாசியில் தஈன்! தற் போதைய அயோத்தி அல்ல!

தொகுப்பு: செ.ர. பார்த்தசாரதி, செயலாளர், தென் சென்னை, திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் உழைப்பினால் பயன்பெற்ற பார்ப்பனர்கள்!




- இரா. இரத்தினகிரி

நான் அரசுப் பணி ஓய்வு பெற்ற பின்னர், டெல்லி அரசின் சுற்றுச் சூழல் வனவளத்துறையின், நிலக்கரி, இரும்புத்தாது முதலான சுரங்கங்களின் சுற்றுச் சூழல் ஆய்வு மதிப்பீட்டு வல்லுநர் குழு உறுப்பினராக 5 ஆண்டு காலம் சேவையாற்றினேன்.

ஒருமுறை 2003 ஆம் ஆண்டில் அந்த வல்லுநர் குழுக் கூட்டம் முடிந்து சென்னை திரும்பி வரும் போது விமானத்தில் சக பயணியிடம், என்னை 'தஞ்சாவூர் ரத்தினகிரி' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தேன். விமானப் பணிப்பெண் மதிய உணவுக்கு விவரம் கேட்டபோது சைவ உணவைக் கேட்டேன், சகபயணியும் அவ்வாறே கேட்டார். பார்வைக்கு அவர் 45 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவரைப் போல வெள்ளையாக இருந்தார். உணவு வேளையின் போது அவர் தனது மெல்லிய குரலில், 'நானும் தஞ்சாவூர்க்காரன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று ஆங்கிலத்தில் சொன்னார். எங்கள் உரையாடல் தொடர்ந்தது. தஞ்சாவூரில் எந்தத் தெருவில்? என்று கேட்டேன். அதற்கு அவர், "சரியாக தஞ்சாவூர் என்று இல்லை, பக்கத்தில் திருவையாறு தான்" என்றார். உடனே திருவையாறில் எந்த வீதி? என்றேன். அவர் "அதுவும் இல்லை! பக்கத்தில் கிராமம் தில்லைஸ்தானம்" என்றார். நான் உடனே தில்லைஸ்தானம் அக்ரகாரமா? என்று கேட்டேன். அவர் ஆமாம்! என்று தலையசைத்ததும் நான் 1970களில் திருவையாறு கால்நடை மருந்தகத்தில் பணியாற்றிய போது அங்கெல்லாம் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அந்த தெருவிற்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி அங்கே யார் வீடு? என்று விசாரித்தேன். "இப்போது நாங்கள் அங்கே இல்லை. 60 ஆண்டுகளுக்கு முன்னாலேயே என் பாட்டனார் சென்னை வந்து விட்டார். அவர் அங்கே ஆசிரியராக இருந்தார். என் தகப்பனார் இரயில்வேயில் உயர் அதிகாரியாக இருந்து ரிட்டையர்டு ஆகி டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். நானும் என் மனைவியும் குழந்தைகளும் இப்போது வாஷிங் டனில் இருக்கிறோம். இப்போது நான் ஒரு அலுவலக வேலையாக சென்னை சென்று உடனே திரும்ப வேண்டும், அதனால் தான் உங்களோடு சென் னைக்குப் பயணம் செய்யும் நல்வாய்ப்பு கிடைத்தது" என்றார்.

தமிழ் ஓவியா said...

உரையாடல் தொடர்ந்தது... "சமீபத்தில் எப்போதாவது திருவையாறு வந்திருக்கின்றீர்களா"? என்று கேட் டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் உறவினரின் திருமணத்திற்காக வந்து திரும்பினேன்' என்றார். அவர் பார்ப் பனர் என்பதைப் புரிந்து கொண்ட பின், நான் யார் என்பதை அவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், "திருவையாறு பஸ் ஸ்டாண்டில் ஒரு பெரியார் சிலை இருக்கிறதே அதைப் பார்த்தீர்களா?" அது, நான் திருவையாற்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது பொது மக்களிடம் நன்கொடை வசூலித்துச் செய்து வைத்த வெண்கலச்சிலை என்று சொன்னேன். "அதைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது" என்று சொல்லி சிறிது யோசனையில் ஆழ்ந்து, பிறகு பேசினார். "நீங்கள் எப்படி நினைக் கிறீர்களோ? அது எனக்குத் தெரியாது; என் மனதில் உள்ள ஒரு உண்மையைச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்தார், பின்னர், "பெரியாருக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கிறது" என்பது ஒரு முக்கிய மான விஷயம். ஆனால் "யார் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக் கிறார்களோ இல்லையோ; பார்ப்பனர்கள் தான் எல்லோரையும் விட அவருக்கு அதிகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்!" என்றார். எனக்கு வியப்பு மேலிட்டு உடனே 'அது எப்படி?'" என்று கேட்டேன்.

அதற்கு அவர், பெரியார் என்று ஒருவர் தோன்றியிராவிட்டால் அவர் பிரச்சாரம் செய்யாதிருந்தால் நாங்கள் (பார்ப்பனர்கள்) கோயில்களின் நெடிய பிரகாரங்களின் பெரிய பெரிய மதில் சுவர்களுக்குள்ளேயும், மடப்பள்ளி களுக்குள்ளேயும், கர்ப்பக்கிரகங்களுக்கு உள்ளேயும் தான் முடங்கிப் போயிருப் போம். (மியீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ஷ்ஷீறீபீ லீணீஸ்மீ ஸீஷீ நீஷீனீமீ, ஷ்மீ ஷ்ஷீறீபீ லீணீஸ்மீ நீஷீஸீயீவீஸீமீபீ ஷீக்ஷீமீறீயீ ஷ்வீலீவீஸீ லீமீ ளீணீக்ஷீஜீஜீணீரீரீக்ஷீணீலீணீ & விணீபீணீஜீஜீணீறீறீவீமீ லீமீக்ஷீமீமீறீயீ ஷ்வீலீவீஸீ லீமீ றீஷீஸீரீ றிக்ஷீணீரீணீக்ஷீணீனீ ஷீயீ லீமீ ஜிமீனீஜீறீமீ) பெரியார் வந்ததால், அவர் பிரச்சாரத் தினால் தான் எங்களின் புரோகிதத் தொழிலை விட்டு விட்டு, நாங்கள் பலபேர் தில்லைஸ்தானத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு வந்தோம். பள்ளிக் கூடங்களுக்குச் சென்று படிக்க ஆரம் பித்தோம். என் தாத்தா சென்னையில் ஆசிரியரானார். என் அப்பா டெல் லியில் அதிகாரியானார். நானும் என் குடும்பமும் அமெரிக்காவில் இருக் கிறோம் என்றால் அது பெரியார் அவர் களின் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட மற்றொரு திசை விளைவு தான்!" என்றார். அவர் சொன்னது உண்மையே ஆயினும் எனக்கு ஒரு பார்ப்பனர் பெரியார் கொள்கையில் நன்றி உணர் வுடன் பேசியது வியப்பாகவே இருந்தது! என்னிடம் அவருக்கு ஆக வேண்டியது

தமிழ் ஓவியா said...

ஒன்றுமில்லை; அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வெறும் இரண்டரை மணி நேர விமானப் பயண உரையாடல்கள் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மேலும் அவர் சொன்னார் "நீங்கள் வயதானவர் தெரிந்திருப்பீர்கள், திருவையாறு கீழ வீதி - அக்ரகாரத்தில் தஞ்சாவூர் மேல வீதி - அக்ரகாரத்தில் எத்தனை நூற்றுக்கணக்கான மொட் டைப் பாப்பாத்திகளைப் பார்த் திருப்பீர்கள்! பார்ப்பனப் பெண்கள், விதவையானால் அவர்களுக்கு மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை கொடுத்து வீட்டுக்கு வெளியே திண்ணை ஓரத்தில் படுக்கப்போட்டு விடுவார்கள். சில வீடுகளில் வீட்டுக் குள்ளேகூட அனுமதிக்க மாட்டார்கள். ஆண்கள் கண்களிலே கூட அவர்கள் படக்கூடாது. 'அபசகுனம்' என்பார்கள். பொழுது விடியும் முன்பாகவே அவர் கள் ஆற்றில் போய்க்குளித்துவிட்டு ஈரத்துணியோடு வந்து வீட்டுத் திண் ணையின் ஓரத்திலே ஒதுங்கி சுருண்டு படுத்து முடங்கிப் போவார்கள். பொழுது விடிந்த பின் தெருவிலே நடக்கக் கூடாது. "வேலைக்குப் போகிறவர் விதவைப் பெண்ணைப் பார்த்தால் விடியாது" என்று சொல்லி அவர்களை மகா வெறுப்போடு பார்ப்பார்கள், இப்படியெல்லாம் சம்பிரதாயம்." இன்று இந்த இடங்களில் உங்களால் ஒரே ஒரு மொட்டை பாப்பாத்தியையாவது காண்பிக்க முடியுமா?" (சிணீஸீ ஹ்ஷீ லீஷீஷ் னீமீ ணீ ஷிவீஸீரீறீமீ விஷீணீவீ றிணீஜீஜீணீலீவீ ழிஷீஷ்?) என்று கேட்டார். இது யாருடைய உழைப் பால்? வயதான பெரியாரின் உழைப் பினால் அல்லவா? டெல்லியில் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அது சங்கரராமன் கொலை வழக்கைப் பற்றியது. அவர்மனைவிக்கு ஏதோ உதவித்தொகை கொடுத்தபோது கூட அவர் மொட்டை ஏதும் அடிக்கவில்லை, கலர் புடவை தான் கட்டிக்கொண்டு வந்து தான்அந்த உதவித் தொகையை வாங்குகிறார் பார்த்தேன் என்றும் சொன்னார். மேலும் "எங்கள் சமூகத் தலை வர்கள் எல்லாம் மக்களிடம் கோடி கோடியாய் வசூலித்து கோயில்களுக்கு உயர உயரமான கோபுரங்கள் கட்டுவார்கள், கும்பாபிஷேகம் செய் வார்கள். கோபுரங்களுக்கு தங்கத் தகட்டிலே கூரை போடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட சமூகக் கொடுமைகள் பற்றிப் பேசியதே கிடையாது. பெரியவர் பெரியாரின் பிரச்சாரத்தினால் தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன; இதை எவராலும் மறுக்க முடியாது" என்றார். மேலும் "பார்ப்பனப் பெண்கள் நாற்பது வயது வரைக் கூட வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் வாடினார்கள், அப்போது பெரியார் பிரச்சாரத்தால் நிறைய பேர் கலப்புத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். இதைப் பார்த்தபின் இப்பொழுதெல்லாம் அப்படி நிறைய வரதட்சணை விவகாரம் இல்லை விரைவாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். இவை மட்டுமல்ல, இந்த எங்களின் விழிப்புணர்ச்சிக்கு காரணம் பெரியார். பெரியாரின் தொண்டை எவரும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. இது என் மனதின் ஆழமான உணர்வு. "நீங்கள் இப்போது தான் அறிமுகம் ஆனீர்கள். உங்களிடம் உண்மையான எனது உணர்ச்சியைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடை கிறேன்". என்று சொல்லும் போது சென்னை விமான நிலையம் வந்து விட்டது. பரஸ்பரம் நன்றி தொவித்து விடைபெற்றோம்!.
இருபதாம் நூற்றாண்டின் இணை யற்ற மனித நேயர் தந்தை பெரியார் அவர்கள் தொண்டினால் 'பார்ப் பனர்கள் பெற்ற பயன்கள்'என்று எண்ணிப் பார்க்கிற போது நம்மை வியப்படையச் செய்கிறது.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்


தந்தை பெரியாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் புகழாரம்

2009 டிசம்பர் 11 அன்று தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதித்து அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாபெரும் தலைவரின் சிலையை வைப்பதால் மட்டுமே பள்ளிக் குழந்தை கள் தாங்களாகவே நாத்திகர்களாக மாறி விடுவார்கள் என்று மனுதாரர் எவ்வாறு கூறமுடியும்? என்று தனது வியப்பைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

அதற்கு மாறாக, பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது சேவை பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனால், தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைவரின் கோட்பாட்டை, தத்துவத்தை நன்கு புரிந்து கொள்வது, அரசமைப்பு சட்ட 51-கி பிரிவில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வு, சீர்திருத்தம் ஆகிய வற்றை வளர்க்கும் அடிப்படைக் கடமையை ஆற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நீதியரசர் கூறினார்.

2008 செப்டம்பர் 4 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்த பிறகுதான் சிலை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உள்ளூர் பா.ஜ.கட்சித் தலைவர்கள்தான் பெரியார் சிலை அமைப்பதை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ். தோற்றுநர் ஹெட்கேவரின் சிலையை அங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினார்கள். அதனால், மனுதாரர் இந்த மனுவை ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்தான் தாக்கல் செய்துள்ளார் என்பதும், இந்தக் கட்சியினர் நேரடியாக வழக்காட முன் வராமல், சட்டப்படி செல்லத் தகாதது மட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்தால் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்பட இயலாத காரணங்களைக் கூற மனுதாரர் போன்றவர்களை நிர்ப்பந்தித்து உள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கோ, பள்ளி மாணவர் களுக்கோ எந்த இடையூறும் இன்றி, வெண்கலச் சிலை ஒன்றை நிறுவி, அதனை பராமரிக்க ஒரு தனியார் அமைப்புக்கு அனுமதி அளித்து இந்த அரசாணையை பிறப்பித்ததன் மூலம் அரசு எந்த தவறையும் சட்டத் திற்குப் புறம்பாகச் செய்து விடவில்லை.

உண்மையைக் கூறுவதானால், சமூக அடக்குமுறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதிலும் போரிட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு அரசு பெரிய மரியாதை செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பெரியாரின் போதனைகள் பற்றி மனுதாரர் தனது மனுவில் தெரிவித்தி ருப்பவையே, தமிழ் சமூகத்தைப் பல வழிகளிலும் மறு மலர்ச்சி பெறச் செய்வதில் ஒரு மாபெரும் தலைவர் ஆற்றிய பெரும் பங்கினை அறியாதவர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன என்று நீதியரசர் கே. சந்துரு கூறினார்.

(காவேரிப்பட்டினம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் பெரியார் சிலை நிறுவுவது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு)

தமிழ் ஓவியா said...


புரியாத புதிர்


பிள்ளையாருக்கு வடநாட்டில் இரண்டு மனைவிகள்!

தென்னாட்டில் கல்யாணம் ஆக வில்லை! என்கிறது ஆரியம்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

எப்படி என்று கேட்டால்?

ஆத்திகர்களிடம் இருந்து அது அப்படித்தான் என்று பதில். ஆத்திக அன்பர்களே!

ஒருவன் வடநாட்டில் இரு திருமணம் அல்ல.

ஒரு திருமணம் செய்து கொண்டு வந்து,

தென்னாட்டிலும் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பெண்ணையோ, உங்களுக்குத் தெரிந்த பெண்ணையோ திருமணம் செய்து கொடுப்பீர்களா?

- ம. சீனிவாசன், பிள்ளையார் தோப்பு, இலுப்பூர்

தமிழ் ஓவியா said...


எரிதழலாய்ப் பெரியார் வந்தார்



- பாவலர் பெரு. முல்லையரசு

பாராண்ட தமிழ்மறத்தை வீழ்த்து தற்குப்
படைகொண்டு பகைமுறிக்க இயலா தென்றே
போராட வக்கற்ற பேடி யர்கள்
பொய்விரித்து மெய்விரித்துக் கடைவி ரித்தார்!
யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த
ஏமாளித் தமிழர்க்குள் சண்டை மூட்டி
போராட்டக் களத்தினிலே குளிரும் காய்ந்தார்
போக்கற்ற பேதையராய் மகிழ்ந்தார் நெஞ்சம்!

ஆண்டவனின் பெயராலே ஏய்த்த வர்கள்
அஞ்சாமல் அறச்செயல்கள் பலவ கற்றி
ஆண்டிட்ட தமிழ்மரபை அடிமை கொள்ள
அன்றாடம் நிகழ்த்திவரும் நச்சு வேலை
மாண்டிட்டு மண்மூடிப் போதல் வேண்டி
மறத்தமிழர் இனவெழுச்சி கூட்டி இங்கே
மூண்டெழுந்த எரிதழலாய்ப் பெரியார் வந்தார்
முழங்கிட்டார் தன்மானம் எழுச்சி பொங்க!

ஆர்த்தெழுந்த பெரியாரின் எழுச்சி யாலே
அணிதிரண்டார் தன்மானத் தமிழ ரெல்லாம்
ஈர்த்திட்ட பெரியாரின் கொள்கை யிங்கே
எத்தர்களை முனைமழுங்க வைத்த தய்யா!
போர்ப்பரணி பாடிட்ட பெரியார் பின்னே
பைந்தமிழர் படைகிளம்பிப் புயலாய் மாறி
பார்வியக்கப் பகையொடுங்க முரசு கொட்டிப்
பாய்ந்ததுவே பகுத்தறிவு இயக்கம் இங்கே!

தமிழ் ஓவியா said...


பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்!


- எஸ்.கே. கங்கா

ரசூல், வணக்கம்! உங்களுடைய பெரியார்தாசன் பற்றியக் குறிப்புகளைப் படித்தேன். பெரியார்தாசன் என்ற சமூகப் பண்பாட்டுப் போராளிக்கு உரிய மரியாதை உங்கள் அஞ்சலி வாசகங்கள். அவருடைய ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை அழகாகச் சித்திரப்படுத்தியுள்ளீர்கள்.

எனினும் பெரியாரைப்பற்றிய உங்களின் ஆதங்கம் என்னைக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது இன இழிவு நீங்க இஸ்லாத்தில் இணையுங்கள் என முழக்கமிட்ட பெரியார் இறுதி வரை இஸ்லாத்தில் இணையவில்லை. ஆனால் பெரியாரின் பெயரைச் சூடிக் கொண்ட பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்தார் என நீங்கள் ஒப்பீட்டுள்ளீர்கள். இந்த ஆதங்கத்துக்கு காலப் பொருத்தம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண் டில் எந்த முன்னுதாரணமும் இல்லாத மகத்தான பேராளுமை என ஜெர்மன் பேரறிஞர் வால்டர் ரூபன் வியந்து பாராட்டிய பெரியார் இனமான சுயமரியாதைக் காரராக வாழ்ந்தவர். பகுத்தறிவுப் பகலவனாக பரிணமித்தவர். பார்ப்பனியத்துக்கு எதிராக இறுதிமூச்சு வரை வியூகம் அமைத்த பெரும் போராளி. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காத முழு நாத்திகராக வாழ்ந் தவர் இந்த பெரியார் இஸ்லாத்தைத் தழுவவில்லை என ஆதங்கப் படுவதில் வரலாற்று நியாயம் ஏதேனும் இருக்கிறதா?

ரசூல், பெரியார் பெரியாராகவே இருக்கட்டும்! அந்தப் பேரொளி இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு வேண்டும்!

(கவிஞர் ஹெக் ஜி. ரசூல் பெரியார்தாசன் பற்றி முகநூலில் 20.08.2013 அன்று எழுதிய குறிப்புகள் மீதான ஒரு எதிர்வினை).

தமிழ் ஓவியா said...


மதுரைக் கோவிலுக்குள் புரட்சி!



நேற்றிரவு 8 மணிமுதல் நடுராத்திரி 12 மணி வரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோயிலின் வாயிற் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பந்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததினால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோயில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன், பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனையையும் கவனியாமல் கணேசருக்குத் தாமாகவே தேங்காய் உடைத்து கற்ப்பூர ஹ--ரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீ மீனாக்ஷி கோயிலுக்குச் சென்றதாகவும், பிறகு அவர்கள் ஸ்ரீ மீனாக்ஷியம்மனின் கர்ப்பக் கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடிவிட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும், அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபணைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற்கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9.30 மணி வரை வெளியே வர முடியவில்லை. நிற்க. வெளியிலிருந்தவர்கள் இரவு 12 மணிவரை உள்ளே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள். ஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்தபொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோஷ ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12.30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்நியாசம் செய்தார். _ குடிஅரசு 6.2.1927 பக்கம் 8

தமிழ் ஓவியா said...

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்


திராவிட நாடு இதழில் (16.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத் திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந் ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத் திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13) அதற்குப் பெண்டு பிள்ளை களும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள் கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித் தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித் தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22) சமயாச்சாரிகள் என்போர் களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர் களையும், சமணர்களையும் துன் புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர் களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?

தமிழ் ஓவியா said...

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46) அவை தனித்தனி கடவுள் களா?
47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திரு விளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55) மலையரசன் மகனென்றால் என்ன?
56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69) வருணாசிரமம் உண்டா?
70) உண்டென்றால் ஆதாரம் எது?
71) இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73) சைவ மடங்கள் எதற்கு?
74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

அடுத்த வீட்டு அகிலாண்டம்

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக் கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால். எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்த... கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர் களா? இல்லையே! வழியிலே குடியி ருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங் களின் கருத்து குருடானதைக் கூறி னாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

- அண்ணா
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)

தமிழ் ஓவியா said...


விநாயகப் புராணம்


விநாயகனுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு - அதில் ஒன்று பிரளயம் காத்த விநாயகராம்; கும்பகோணம் அருகே திருப்புறம் பியத்தில் இப்படி ஒரு விநாயகர் இருக்கிறார்.

இருக்கட்டும்! இருக்கட்டும்! சுனாமி வந்து பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தபோது - இந்தப் பிரளயம் காத்த விநாயகர் எங்கே போனாராம்.

சுயம்பு விநாயகர்

வேலூர் அருகே சேண்பாக்கம் என்னும் ஊரில் விநாயகர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் சுயம்பு 11 விநாயகர்கள் இருக்கிறார்களாம்.

சுயம்பு என்றால், தானாக பூமியை வெடித்துக் கிளம்புவது என்று பொருள்.

சென்னை தியாகராய நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் 1970 செம்டம்பரில் இப்படித்தான் திடீர் விநாயகர் என்று பொய்யை முதலீடாக வைத்து, புரளியைக் கிளப்பி உண்டியல் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அந்த இடத்திலேயே பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவேன் என்று தந்தை பெரியார் அறிவித்தார். அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் பொருத்தமாக முதல் அமைச்சராக இருந்த காரணத்தால் உடனே தலையிட்டு உண்டியலையும் பறி முதல் செய்து, அந்தப் பித்தலாட்டத்துக்கும் மூடு விழா நடத்தினர்.

விசாரணையின் போது தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனரின் தூண்டுகோல்படி செல்வராஜ் என்ற போலீஸ் கான்ஸ்டபுள்தான் பூமியில் இரவோடு இரவாக, பிள்ளையாரைப் புதைத்து, பூமிக்குள் பருத்திக் கொட்டையையும் தண்ணீரையும் ஊற்றி, வெளியில் வரச் செய்த பித்தலாட்டம் வெளியானது.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தத் திடீர் பிள்ளையார் சுயம்புவானது உண்மைதான் என்று அன்றைய சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பொய் சொல்லிக் காப்பாற்ற முற்பட்டதுதான். அந்தப் பகுதியில் மசூதி கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை தடுக்கத்தான் இந்தப் பித்தலாட்டம்.
வேலூர் சேண்பாக்கம் 11 சுயம்புப் பிள்ளையாரிலும் இது போன்ற சதிகள் இருக்கவே செய்யும்.

கடலில் கரைப்பது ஏன்?

கடலில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குத் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். விநாயகருக்குப் பார்வதி எப்படி அன்னையோ, அதுபோல கங்கையும் ஒரு அன்னைதானாம் அதனால் அவரோடு அய்க்கியமா கிறாராம். அக்னி பகவானுக்கு விநாயகர் என்ன உறவு! நெருக்கமான உறவு இருந்தால் எரித்திருப்பார்களோ?

கடல் நீர் உப்பு கரிப்பதற்குக் காரணம் விநாயகன் சிறுநீர் கழித்ததுதான் என்று புராணம் கூறுகிறது.

கடல் நீரைக் குடிநீராக்க பன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து சுத்திகரித்துக் கொண்டு இருக்கிறார்களே. இது விநாயகன் செயலுக்கு விரோதம் என்று விநாயகப் பக்தர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

தேங்காய் உடைப்பது ஏன்?

அகங்காரம் என்னும் ஓடு சுக்கல் நூறாகி அமிர்தம் என்ற இளநீர் கிடைக்குமாம். அதுதான் தேங்காய் உடைப்பதன் புடலங்காய் தத்துவமாம்.

தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கிற பக்தர்கள் எல்லாம் ஆணவம் அற்றவர்களா?

நான் ஆயிரம் விவேகானந்தருக்கு மேலே என்று காஞ்சி சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திர சரஸ்வதி சொல்கிறாரே - இது ஆணவம் அல்லாமல் வேறு என்னவாம்?

இவர் தேங்காய் உடைப்பது இல்லையா? பிள்ளையா ருக்கு நான் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும் என்று அவர் சொன்னால் அதுவும் ஆணவம் தான்! பிள்ளை யாரையே கருப்புச்சட்டைக்காரர்கள் வீதிக்கு வீதி போட்டு உடைத்தார்களே - உண்மையில் அவர்கள் தான் ஆணவம் அற்றவர்கள்.

வினை தீர்க்கும் விநாயகளாம். அவனுக்காக சென்னையில் பத்தாயிரம் போலீஸ் பாதுகாப்பாம்!

பேஷ்! பேஷ்!! இதைவிட விநாயகன் சக்தியை எப்படி கேலி செய்ய முடியும்? 9-9-2013

தமிழ் ஓவியா said...


விநாயகன் பிறந்தானா?

கடவுள் பிறந்தார் என்று சொன்னாலே மதவாதி கள் சொல்லும் கடவுள் தத்துவம் அடிபட்டு, ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைந்து விடுகிறதே.

கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்கிற சங்கதியும் சகட்டுமேனிக்குப் பெரும் பொய் என்பதும் புலப்படவில்லையா?

ராம நவமி என்பதும், கிருஷ்ணஜெயந்தி என்பதும் இந்த ரகத்தைச் சார்ந்ததுதானே.

இன்று விநாயக சதுர்த்தியாம். இவன் உரு வத்தைப் பார்த்து புராணக் கடவுளான சந்திரனே கேலி செய்தான் என்று எழுதி வைத்துள்ளனர். விநாயகன் உருவத்தைப் பார்ப்பவர் யார்தான் கேலி செய்யாமல் இருப்பார்கள்?

பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்தவன் இந்தப் பிள்ளையார் என்றால் மனிதன் காட்டு விலங் காண்டிப் புத்தியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது தான் இந்தக் கடவுள் வகைகள் என்பது விளங்கவில்லையா?

இப்பொழுது விநாயக ஊர்வலத்தில் விநாயகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து கார்கில் விநாயகர் என்று பெயர் கொடுப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்பட்டு இருக்க வேண்டுமே! மனிதன்தான் அந்தந்த காலத்தின் பக்குவத்துக்கு ஏற்ப இந்தக் கடவுள்களைக் கற்பித்தான் என்பது விளங்கிடவில்லையா?

கடவுள் ஒருவர் பிறந்தார் என்று வாதத்திற் காகவே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள் வோம். அதற்கென்று எதாவது ஒன்றே ஒன்றைச் சொன்னாலாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டுத் தொலைக்கலாம்.
விநாயகன் பிறப்புக்கு எத்தனை எத்தனைக் கதைகள்! கழுதை களமாடும் குப்பைத் தொட்டிகூட வெட்கப்படும் அளவுக்கு அசிங்கமாகவும் ஆபாச மாகவும் உளறிக் கொட்டி வைத்துள்ளார்களே.

சண்டை போட்டது கடவுள், எதிரிகளைக் கொன்றது கடவுள், கற்பழித்தது கடவுள் என்றால் அதன் யோக்கி யதைதான் என்ன? கருணை உடையவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில், தன் சகோதரன் சுப்பிரமணியனுக்காக விநாயகன் சண்டை போட்டு எதிரிகளைக் கொன் றான் என்றும், வல்லபை என்ற அரக்கக் குலப் பெண்ணின் குறியிலிருந்து உற்பத்தி யாகி வந்த அசுரர்களை தம் துதிக்கையால் பெண் குறியை அடைத்துத் துவம்சம் செய்தான் என்றும் அதனாலே வல்லபைக் கணபதி என்று பெயர் பெற்றான் என்றும் சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கொஞ்சம்கூடக் கூச்சப்படவில்லையே!

தருமபுரி மாவட்டம், மத்தூர் கோயிலில் பெண் குறியில் விநாயகன் தன் துதிக்கையை வைத் திருக்கும் பிரம்மாண்டமான சிலை வைக்கப் பட்டுள்ளதே.

கோயில் தேர்களிலும் இந்தக் கண்ணராவிக் காட்சியைக் காண முடியுமே! தம் வீட்டுப் பிள்ளை களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் போது, இந்தக் காட்சியைக் காட்டி இது என்ன? என்று கேட்டால் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும்?

இந்து மதம் என்று எடுத்துக் கொண்டால் எதைத் தொட்டாலும் இந்த ஆபாசம்தான் - அசிங்கச் சாக்கடைதான்.

இதைப் பகுத்தறிவாளர்கள் எடுத்துச் சொன் னால் சிந்திப்பதற்குப் பதிலாக சிறீ விழுகிறார்கள் என்றால் பக்தியின் பெயரால் இவர்களின் புத்தியும் நாசமாகப் போய் விட்டது - ஆபாசத்தில் இலயித்து விட்டது என்று தானே பொருள்?

இந்த விநாயகனுக்காக ஒரு பண்டிகை. அதற்கு அரசு விடுமுறையாம்! இந்த விநாயகன் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்றால் இது என்ன நிலைப்பாடு?

மும்பையில் இந்து மதவெறியை ஊட்டுவதற்கும் பாலகங்காதரர் கிளப்பி விட்ட இந்தச் சதித் திட்டம் இப்பொழுது வேறு பகுதிகளில் பரவி, பொது மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. மதக் கலவரங்களுக்கு இந்த ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடவுளை உண்மையில் நிந்திப்பவர்கள் இந்தப் பக்தர்கள்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

விநாயகன் பிறப்பு - அவனைப்பற்றிச் சொல்லப்படுகிற புராண சங்கதிகள் இவற்றைப் பார்க்கும்பொழுது இந்து மதவாதிகளும், சனாதனி களும் தான் கடவுளைக் கேவலப்படுத்துகிறார்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!

அழுக்குருண்டைப் பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க; பிள்ளையார் போல் பிள்ளை பிறந்தால் கொஞ்சுவோமா சொல்லுங்க என்று திராவிடர் கழகப் பேரணியில் முழங்கிச் செல்லுவதற்கு இதுவரை பதில் இல்லையே!
9-9-2013

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கத் துடன் எழுதிக்கொண்டது. கடந்த 25.8.2013 விடுதலை நாளிதழில் தங்கள் அறிக்கையைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மராத்திய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ் நாட்டிலும் அச்சட்டம் கொண்டு வரவேண்டும். மத்திய அரசும் அச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமூகசீர்திருத்தக்குழு ஒன்றை உரு வாக்கினார். அதிமுக ஆட்சியில் அந்தத்துறை செயல்படவே இல்லை. பின்னர் எப்படி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவார்?

தாங்கள் கூறியவாறு மத்திய அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்தால், இந்தியா முழுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். நரபலிகள் தடுக்கப்பட்டு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகியவற்றில் அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற, மூடநம்பிக்கை பிரச்சாரம் தடுக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே அச்சட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வாய்ப்புள்ளது. செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அச்சட்டத்தால் மொத்தத்தில் மனித சமுதாயத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டு, தந்தை பெரியார் கூறியவாறு மனிதன் மனிதனை நினைப்பான்.

இச்சட்டம் கொண்டு வருவதற்காக ஒரு தீவிரப்பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை தெரிவித்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

- எஸ்.என்.அசோகன் (திமுக மாவட்ட பிரதிநிதி)
நகராட்சி நியமனக் குழு உறுப்பினர், திருவாரூர்

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்


புற்றுநோயைக் காட்டிக் கொடுக்கும் கண்கள்

கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.

கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சினை இப்படி வயசான வர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தற வங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம் தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கி யிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.

நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும்.

தமிழ் ஓவியா said...

திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..



சிலருக்குன்னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறி களாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சி னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங் கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற, டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.

தமிழ் ஓவியா said...

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிருங்கள், டென்சன் படாதீர்கள் என்று எல்லா மருத்துவர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.

உண்ணும் உணவு பழக்கத்தை சத்துள்ளதாக மாற்றிக்கொண்டால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் அலுவலக வேலைக்கு செல்லும் போது சிறிது தூரம் காலார நடைபயிற்சி செய்யுங்கள். தினசரி வைட்டமின் ஈ யை உணவில் எடுத்து கொள்பவர் களுக்கு இதயநோய் வர வாய்ப்பில்லை என்று ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400யுனிட் வைட்டமின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதயநோய்களே வருவ தில்லையாம். வைட்டமின் டி உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், கோதுமை மாவு, முளைக்கட்டிய தானியங்கள், கொட்டை உள்ள உணவுகள் கீரைகள், கடுகு, தாவர எண்ணெய் போன்றவைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் ஆசிட் நல்ல இதயநோய் தடுப்பாக செயல்படுகிறது. ஒமேகா3 உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவு, வால்நட், பருப்பு, சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளில் ஒமேகா 3 இருப்பதால் இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம். டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இவைகளை உபயோகித்து செய்யும் உணவுப் பண்டங்களை தவிர்க் கவும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடை கட்டி, அய்ஸ்கீரிம் போன்றவற்றை குறைவாகவே உபயோகி யுங்கள். இதனால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும் என்கிறது ஆராய்ச்சி. அதிக உப்புள்ள ஊறுகாய், சமையலில் மசாலா பொருட்கள் சோடா ஆகியவற்றை, முடிந்தவரை தவிர்ப்பது நல் லது. உப்பிற்கு பதிலாக வெங் காயம், எலுமிச் சை, பூண்டு, சேர்த்த உணவு கள் தரமானவை. அளவோடு உண்பது, நேரத்துடன் உணவு உட்கொள்வது போன்றவை இதயத்திற்கு நன்மை பயக்கும். எப்போதும் புதியதாக தயாரித்த உணவுகளே சிறந்தவை.

புதிய பழங்கள், ஓட்ஸ். கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு சப்பாத்தி எல்லாமே இதயநோயை தடுக்கும். மாதுளம் பழச்சாறு இதயத்திற்கு வலுவூட்டும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நமது உணவு பழக்கங்கள் உடலுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். உணவே நோயை தருவதாக இருந்துவிடக் கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந் தெடுத்து இதயத்தை காப்போம்.

தமிழ் ஓவியா said...


அல்லவே அல்ல!


மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமும் அல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


உ.பி. குஜராத் ஆகிறதா?



உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான கலகம் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனராம். கலவரத்தை அடக்க இராணுவம் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளது.

முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கம்பெனி இராணுவம் மற்றும் துணை இராணுவ அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஹூக்கும் சிங், சங்கீத் ஷோம், சுரேஷ் ரானா, பர்தேண்டு சிங் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறிய கருத்துக் கவனிக்கத்தக்கது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அதற்கு முன்பாகவே உத்தரப் பிர தேசத்தில் பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்டி விடத் தொடங்கி விட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க.வினர் துடிக் கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.

இதே கருத்தினை சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நரேஷ் அகர்வாலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் சிறு பான்மை அல்லாதார் என்று உத்தி பிரிக்கும் வேலை யில் (Polarisation) இறங்கி அதில் வெற்றி பெற்றதன் அறுவடையை நரேந்திரமோடி அனுபவித்துக் கொண்டுள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு நிகழ்வை அதற்குச் சாதகமாக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இரயில் பெட்டி எரிப்பில் மரணம் அடைந்தவர் களின் உடல்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லவிருந்த திட்டத்தை மாற்றி, அனைத்து உடல்களையும் அணி வகுக்கச் செய்து அகமதாபாத் நகரில் ஊர்வலம் நடத்தச் செய்ததன் பின்னணி நோக்கம் எளிதிற் புரிந்து கொள்ளத் தக்கதே!

எதற்கும் எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் தத்துவத்தை அதற்கு எடுத்துக் காட்டினார். அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த சிறுபான்மை மக்களை மிகவும் கேவலமான முறையில், கொச்சைப் படுத்தும் வகையில் தங்கள் ஜனத் தொகையைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்.

இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டும், பிரதமர் வாஜ்பேயி செவி சாய்க்கவில்லை. இத்தகவலை கே.ஆர். நாராயணன் அவர்களே பிற்காலத்தில் கூறி, தம் வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

பாபர் மசூதி இடிப்பு நடந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் மிகவும் கூர்மையாயின. அதற்குக் காரணமான குற்றவாளிகள் - பிஜேபியில் உள்ள பெரிய மனிதர்கள், சங்பரிவார்த் தலைவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் மேலும் முரட்டுத் துணிவு ஏற்பட்டு விட்டது.

காவி பயங்கரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சொன்னபோது எகிறிக் குதித்தனர்; உள்துறைச் செயலாளரோ, காவிகள் கலவரத்தின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் அரசு வசம் உள்ளன என்று அதிகார பூர்வமாக தெரிவித் துள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடக்கத்தில் சிறுபான்மையினர் மீது கண்கள் பாய்ந்தன. பலர் கைது செய்யவும் பட்டனர். பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. காவிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சந்தேகத்துக்குரிய வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின் மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொம்பைச் சீவிக் கொண்டு புறப்பட்டுள்ளனர். இதனை இந்திய வாக்காளர்கள் அடையாளம் காணாவிட்டால் அதற்கான விலையைப் பிற்காலத்தில் கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


வேப்பமரத்துக்கும், அரச மரத்துக்கும் டும் டும் டும்!


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியாரும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும் சொன்னால் சுர்ரென்று மூக்குப் புடைக்கும் ஆசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லு வார்களாம்?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யடுத்த டி.எடையார் கிராமத்தில் மாணிக்க விநாயகர் கோவில் அருகே வேப்பமரமும், அரச மரமும் பின்னிக் கொண்டு இருக்கிறதாம்.

விட்டுவிடுமா புரோகிதம்? சுரண்டலுக்கு மறு பெயர்தானே பக்தியும் - அதன் தகப்பனாகிய புரோகிதமும்?

இது ஓர் அபூர்வ காட்சி - இந்த இரண்டு மரங் களுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் ஊரே சுபீட்சம் அடையும் என்றனர் குருக்கள் பார்ப்பனர்கள்!

குருக்களே சொல்லிவிட்டார் - வேறு அட்டி யென்ன? மேளதாளத்துடன் கல்யாண திருக்கோலம் - புரோகிதர்கள் தட்டுகளை மாற்றிக் கொண் டார்களாம் - மொய் எழுதப்பட்டது - உண்டியலும் நிரம்பி வழிந்தது.
மொட்டை சாமி தலையில் உட்கார்ந்த காக்கை எச்சமிட்டால் அதிலிருந்து விழும் விதையில் மரம் முளைப்பது இயல்பான ஒன்றுதானே. இதில் என்ன அதிவிசேஷம் வாழுது?

இந்தப் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவன் கவுடில்யன் என்னும் இவர்களின் முன்னோரான மற்றொரு பார்ப்பனன்.

அவன் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில், அரசன் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம்? வரி போடலாம்? என்று விலாவாரியாக எழுதி வைத்து விட்டுச் சென்றான்.

ஒரு மரத்தில் பிசாசு தோன்றிவிட்டதாக முதலாவது பொது ஜனங்களிடையே பீதியை உண்டு பண்ணிவிட வேண்டும். இந்த மரத்துக்குள் ஒருவனை நுழையச் செய்து பயங்கரமான கூச்சல் இடும்படியாக அரசன் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தத் துஷ்ட தேவதையைச் சாந்தப்படுத்தி அனுப்பாவிட்டால் ஊருக்குப் பெருங்கேடு ஆகும் என்று கூறி மக்களை நம்ப வைக்கவேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசிபோல வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து குடிகளிடம் பணம் வசூல் பண்ணவேண்டும்.

பிசாசு நகரத்தைவிட்டுப் போய்விடுகிறது. பணம் அரசனின் பொக்கிஷத்தைப் போய் அடைகிறது.

அதேபோல, அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது மக்களிடம் காட்டிப் பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை உடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்கிறான் கவுடில்யன்.

எந்தப் புரட்டையாவது செய்து குடிமக்களை ஏமாற்றி அரசன் பணம் பறிக்கலாம் என்னும் வஞ்சக தந்திரங்களை கூடை கூடையாக எழுதி வைத்துச் சென்று இருக்கிறான் சாணக்கியன் என்று கூறப்படும் கவுடில்யன் தன் அர்த்தசாஸ்திர நூலில்!

இன்று அரசன் இல்லை; ஆனால், அதேநேரத்தில் அர்ச்சகப் பார்ப்பான் இருக்கிறான் சுரண்டிக் கொழுக்க - திடீரென்று ஒரு நாள் பிள்ளையார் பால் குடித்தார் என்று புரளி கிளப்பவில்லையா? ஒரு நாள்தான் குடித்தானா? ஏன் மறுநாள் குடிக்கவில்லை? குட்டு வெளிப்பட்டு உள்ளி மூக்கு உடைந்துவிட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், சந்திராசாமியும் இருந்தனர் என்று பிறகு அம்பலமாகிடவில்லையா?

பிள்ளையார் பால் குடிப்பார் என்றால், கொழுக்கட்டை சாப்பிடமாட்டாரா?

பிள்ளையார் பால் குடித்தார் என்று நிரூபித்தால் ஒரு லட்சமும், கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்துக் காட்டினால் இரண்டு லட்ச மும் ரூபாய் பரிசு என்றும் சென்னை அண்ணா சாலையில் (23.9.1995) திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித் தாரே - அந்தச் சவாலை யாராவது ஏற்றார்களா?

பக்தியின் பேரால் மோசடி செய்யும் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் தள்ளவேண்டாமா?

மகாராட்டிர மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டப்படி எடுத்த எடுப்பிலேயே பில்லி சூன்யக்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளார்களே!

அண்ணா பெயரைச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு செய்யுமா? எங்கே பார்ப்போம்!

குறிப்பு: சாணக்கியனின் மோசடிகளை மேலும் தெரிந்து கொள்ள தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட - கழக வெளியீடான கோவில்கள் தோன்றியது - ஏன்? என்ற நூலை வாங்கிப் படியுங்கள்!

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம். (விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள நிலை, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு எதிரான தீர்ப்பு, எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை - இவற்றை எதிர்த்தும், கண்டித்தும் வரும் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கருநாடக மாநில அரசைப் பொறுத்தவரையில் எந்தவித சட்ட திட்டங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை! உச்சநீதிமன் றத்திற்கு நிகரான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எல்லாம்கூட கருநாடகம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் வருகிறது. மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதில்லை.

எந்த ஓர் அணையைக் கட்டுவதானாலும் கீழ்ப்படுகையில் உள்ள மாநிலத்தின் ஒப்புதலையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற்றுத்தான் செய்யவேண்டும்.

ஆனால், 1959 இல் கபினி அணையையும், 1965 இல் சுவர்ணவத் அணையையும் கட்டியதே கரு நாடகம் - எந்தச் சட்டம் அம்மாநிலத்தின் கழுத்தை நெரித்தது?

இப்பொழுதும் அதே பாணியில் அணைகளைக் கட்ட முடிவெடுத்துவிட்டது, கருநாடகம். தேசிய நீரோட்டம் என்பதெல்லாம் காகிதக் கப்பலோட்டம் தான். மாநிலக் கட்சிகள் பேசினால் பிரிவினை வாதம் - அதைத்தானே தேசிய கட்சிகளும் செய் கின்றன - அது என்ன வாதம் - பக்கவாதமோ!

1924 ஆம் ஆண்டு ஒப்பந்த காலத்தில் கருநாடகத்தில் காவிரி பாசனப் பகுதி 6 லட்சம் ஏக்கராக இருந்தது. இப்பொழுது அது 25 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? 25 லட்சம் ஏக்கர் என்ற நிலை மாறி இப்பொழுது வெறும் 14 லட்சமாகத் தேய்ந்து கருவாடாகி விட்டது.

விவசாயம் இனி கைகொடுக்காது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள். விவசாய நிலங்கள் எல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டு வருகின்றன. ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங் களுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, இன்று வெளி மாநிலத்தை நோக்கிக் கையேந்தி நிற்கும் அவலம்.

கருநாடக மாநிலத்தில் காவிரி ஓடும் தூரம் 320 கிலோ மீட்டர்தான். தமிழ்நாட்டிலோ தலைக் காவிரியில் புறப்பட்டு 800 கி.மீட்டர் பயணம் செய்து பூம்புகார் கடலில் சங்கமம் ஆகிறது.

இதிலிருந்தே நியாயப்படி அதிக பலன் தமிழ்நாட்டிற்கே என்பது வெளிப்படையாகும். கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் வந்து அணைகள் உடையும் நிலை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் பயன்படுத்திக் கொள்கிறது.

உள்நாட்டிலும், தமிழர்களுக்கு வஞ்சனை; இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தமிழர் களுக்கு வஞ்சனைதானா என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

இந்த வஞ்சனையை எதிர்த்துப் போராடித்தான் தீரவேண்டும். தொடர்ந்து திராவிடர் கழகம் குரல் கொடுத்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும், போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் வருகிறது.

பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதையொட்டி, தமிழ்நாடு அளவில் தொடர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறோம்.

வருகின்ற 19 ஆம் தேதி நன்செய் பூமியாம் தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப் பாட்டம்! கழகத் தோழர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே அணிதிரள்வீர்! திரள்வீர்!!

தமிழ் ஓவியா said...


எளிமை, சிக்கனம், நாணயம், ஒழுக்கம், மனிதநேயம் இவைதான் பெரியார் கொள்கை

பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி இல்லம் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

பேராவூரணி, செப்.11- பேராவூரணியில் 8.9.2013 அன்று காலை பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் புதிய இல்ல அறிமுக விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய இந்த புதிய இல்ல அறிமுக விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, ஜெயராமு ஆகியோருடைய இந்த இல்லம் புதுமனையாக நல்ல அளவிற்கு கட்டி அதை அறிமுகப்படுத்தி இது எங்களுடைய இல்லம் என்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்துகின்ற இந்த விழா விற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய மாவட்ட தலைவர் ஆர்பிஎஸ் சித்தார்த்தன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, கழக பொதுச் செயலாளர் ஜெயகுமார் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, தோழர் சிதம்பரம், நீலகண்டன் அவர்களே மற்றும் கழக பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களை சேர்ந்தவர்களே, பொதுமக்களே, பேராசிரியர் கிருட்டிணமூர்த்தியின் அன்பு சகோதரர் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியை இணைந்து அமைத்துள்ள பாப்பம்மாள் அவர்களே, கார்த்தி கேயன், சரோஜா, டாக்டர் சிவசங்கரி அவர்களே, அவருடைய குடும்ப பிள்ளைகள் பார்கவி, செய மூர்த்தி, சித்தார்த்தன் அவர்களே, பெரியோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

வரவேற்புரை ஆற்றிய சகோதரர் மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சிறப்பாக ஒன்றை சுட்டிக் காட்டினார். நல்ல சீரிய பகுத்தறிவாளரான இல்லத் திற்கு உரியவர்களாக இருக்கக்கூடிய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, இந்த இயக்கத்தின் கொள்கை களை பின்பற்றிய காரணத்தாலே இன்றைக்கு தலைசிறந்து நான் முன்னேறி இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்துகின்ற விழாதான் இது. (கைதட்டல்) இந்த விழா என்பது வீட்டுக்காக மட்டுமல்ல. வீட்டுக்கு வந்து விட்டாலே அறிமுகமாகி விடும். விழாவிற்கு வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் அறிமுகமாகிவிட்டது. பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் தாழ மாட்டார்கள். அவரும் அவரது சகோதரரும் இந்த அழைப்பிதழை எவ்வளவு சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். மாணவர் பருவத்திலிருந்து கிருட்டிணமூர்த்தி அவர்கள் எனக்கு அறிமுகம். அவர் மாணவர் பருவம், கல்லூரி பருவம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியராக இருந்து இப்போது பேராசிரியராக ஆகி இருக்கிற வரை இவ்வளவு வளர்ந்துள்ள காலம், இன்று வரை இவர் என்ன ஜாதி என எனக்கு தெரியாது. இதன் பெயர் தான் திராவிடர் கழகம். அதுதான் பெருமை.

நாங்கள் எல்லாம் ஒரே கொள்கை உடையவர்கள். இது ஜாதி, இரத்த உறவை விட ஆழமானது. பிரிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்று எளிமை, சிக்கனம், வருவாய்க்கு உட்பட்டு வாழ்வது, நாணயமாக வாழ்வது, ஒழுக்கமாக வாழ்வது, பிற மக்களுக்கு தொண்டாற்றுவது இதுதான் பெரியார் கொள்கை. கடவுளை மற என்ற பெரியார் மனிதனை நினை என சொன்னார். மனிதனை நினை என்பதில் எல்லாமே அடக்கம். இந்த குடும்பம். நல்ல பல்கலைக் கழகமாக இருக்கிறது. நம்முடைய பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பெருமையாக உள்ளது.

அவரின் வாழ்விணையர் ஜெயராமு நிறைய டிகிரி வாங்கியுள்ளார். பெரியார் பிறந்திருக்காவிட்டால் திராவிடர் கழகம் தோன்றியிருக்காவிட்டால், சுய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த இயக்க கொள்கை பரவாமல் இருக்குமானால் இன்றையக்கு ஜெயராமு இத்தனை டிகிரி பெற்றிருக்க முடியுமா? அதைவிட இந்த குடும்பத்திலே கார்த்திகேயன், சரோஜா ஆகியோரின் குழந்தைகள் டாக்டர் க.சிவசுந்தரி எம்டி., படிக்கிறார். அடுத்த பெண் எம்.இ. படிக்கிறார்.

அனைவரும் சிறப்பாக படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த குடும்பத்திலே டாக்டர், பொறியா ளருக்கு பஞ்சமில்லை, பேராசிரியருக்கு பஞ்சமில்லை. இவ்வளவும் தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என பயமுறுத்தி விட்டான் - கிருட்டிணமூர்த்திக்கு இரண்டையும் நாம் பண்ணிட்டோம். திருமணத்தையும் நாம்தான் நடத்தி வைத்தோம். வீட்டையும் நாம்தான் இப்போது அறிமுகப்படுத்தி யுள்ளோம். நல்ல பகுத்தறிவாளராக இருப்பவர் முன்னேற முடியும். இந்த இல்லம் கிருட்டிணமூர்த்தி இல்லமாக இருந்தாலும் பெரியார் இல்லமாக அமைந்திருக்கிறது என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.

முன்னதாக புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். அனைவரையும் வரவேற்று மதியழகன் உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் இராச கிரி கோ.தங்கராசு, ஆர்பிஎஸ் சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!



இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக் கிறார்கள்!

(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


உயர் நிலைக் கல்வியிலும் தேவை இட ஒதுக்கீடு


வரும் 19ஆம் தேதி காலை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற உள்ளது. கருநாடகத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டப்படுவது குறித்து நேற்று எழுதி இருந்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டாவது காரணம் - உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது - பேராசிரியர்கள் நியமனத்தில் டில்லி எய்ம்ஸில் இடஒதுக்கீடு கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப்பட்டவரும் மற்றும் சிறுபான்மையினரும் ஆவார்கள்.

நீண்ட காலமாக இந்தப் பெரும்பான்மை மக்களுக் குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு போராடிப் போராடிப் பெறப்பட்டது.
மாநில அளவில் இந்த இடஒதுக்கீடுகள் இருந் தாலும் மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு கிடைக்கப் பெறவில்லை.

அதற்காகவும் திராவிடர் கழகம் பெரும் அளவில் போராடி வந்திருக்கிறது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து 1990 வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதானது மாபெரும் சமூக அநீதியாகும்.

மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, போராட்டங்கள் - 16.

1990இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் (கல்வியில் அல்ல) 27 சதவீதத்திற்கு வழி செய்யப் பட்டது. அதனை எதிர்த்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர் கூட்டம் நீதிமன்றம் சென்று முடக்கியது. 1992-க்குப் பிறகுதான் ஏதோ நடைமுறைக்கு வந்துள்ளது.

20 ஆண்டுகள் கழிந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களும் கிடைக்க வில்லை. 7 சதவீதத்தைத் தாண்டவில்லை.

கல்வியில் இடஒதுக்கீடு 27 சதவீதம் என்பதைக் கூட ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் வழங்குவது என்று தான் கூறப்பட்டது. இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எந்த வகையில் நியாயம்?

இலையைப் போடுவதற்கு முன்னதாகவே வெளியே தள்ளி விடுவதா? மிகவும் வளர்ந்த நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில்கூட ஒடுக்கப்பட்ட மக்களான நீக்ரோக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சங்கம் (National Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ் என்பவர் (Charles Lyons) சென்னைக்கு வந்தபோது (அவருடன் 10 பேர் வந்தனர்) 1.2.81 அன்று பேட்டி ஒன்று அளித்தார். அச்செய்தி ஏட்டிலும் 2.2.1981 வெளிவந்தது. .

எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளன. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலேயே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேல் நிலைக் கல்வி எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே வந்த குழு அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மேல் நிலைக் கல்வி, உத்தியோகம் உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் வகையில் உத்தேச சட்டம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
மக்களின் இந்த மக்கள் நாயகக் குரலை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க் கிறோம். இல்லையேல் அகில இந்திய அளவில் போராட்டத்தை நகர்த்தி செல்லும் திராவிடர் கழகம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 19ஆம் தேதி தயாராவீர் தோழர்களே!

தமிழ் ஓவியா said...


வாழ்க முத்தையா!


இன்றைக்குத் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடு; சட்டப்படி இன்றைக்கு மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக் கீடு - இவை எல்லாம் இம்மக்களின் வளர்ச்சிக்கு இடப்பட்ட அடி உரம்.

இந்த அடி உரம் தந்த வர்கள் மேன் மக்களே! ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றிக்கும், போற்றுதலுக் கும் உரிய பெரு மக்களே!

அந்த உன்னத ஒப்பரிய பட்டியலில் பெருந்திரு எஸ். முத்தையா முதலியார் அவர் களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆண் குழந்தை பிறந் தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முத் தையா என்று பெயர் சூட் டுமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்திருந் தார் என்றால், அது என்ன சாதாரணமா?

இதே நாளில்தான் (13.9.1928) டாக்டர் சுப்ப ராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவை யில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர் கள் முதல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்து நடைமுறைக்கும் கொண்டு வந்தார். (அரசு ஆணை எண் 744 நாள்: 13.9.1928).

அரசு நியமனத்திற்கும் 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றில்

இந்து பார்ப்பனரல்லா தாருக்கு - 5

பார்ப்பனர்களுக்கு - 2
இசுலாமியர்க்கு - 2
கிறித்தவர்களுக்கு - 2

ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு (ஆதி திராவிடர் உட்பட) - 1

இந்த வகையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றது அமைச் சர் முத்தையா அவர்களால் கொண்டு வரப்பட்ட ஆணை.

இந்த வகையில் பார்த் தாலும்கூட 3 சதவீதமுள்ள பார்ப்பனர்களுக்கு 17 சத வீதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் கூடப் பொறுக்காத பார்ப்பன ஏடான சுதேசமித்திரனோ முத்தையா முதலியா ருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று எழுதியதே!

முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம், மக்கள் இதனைக் கண்டிக் கின்றனர் என்று இந்து ஏடு எகிறியதே!

உண்மையில் இப்படி எழுதிய பார்ப்பன ஏடு களின் எழுத்துக்களே அவர்களுக்கு வகுப்புப் பித்தம் எந்த அளவுக்குத் தலைக்கேறியது என்பதற் கான அளவுகோலாகும்.

முத்தையா அவர்கள் மறைந்தபோது அண்ணா அவர்கள் எழுதியது. தனக் குக் கிடைத்த சந்தர்ப் பத்தை (அமைச்சர்) கித் தாப்புக்கும், திறப்பு விழா வுக்கும் மட்டுமே கிடைத் தது எனக் கருதாமல் திராவிட இன மக்களின் துயர் துடைக்கும் திட்டங் களுக்காகப் பயன்படுத்தி யவர் என்று எழுதியதைப் பதவியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வாழ்க எஸ். முத்தையா முதலியார்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பொறுத்திருந்து பார்ப்போம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பிஜேபி சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர் ஜாதி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்பொழுதே மோடி வெற்றி பெற்று பிரதமராகவே ஆகி விட்டதுபோல குதிகால் தரையில் படாமல்கூடக் குதிக்கிறார்கள்.

கோட்டைக்குள் இப்பொழுது குத்து வெட்டுக் கிளம்பி விட்டது. மூத்த தலைவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் முற்றி வெடித்து வருகின்றன.

பி.ஜே.பி. பிரச்சாரக் குழுத் தலைவராக, பிஜேபி கோவா செயற்குழுவில் மோடி அறிவிக்கப்பட்ட போதே, பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அத்வானி தம் எதிர்ப்பை, அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்பின், அத்வானியின் கையில் - காலில் விழுந்து ஏதோ சமாதானம் படுத்தினார்கள்.
உள் காயத்துக்கு மேலே களிம்பு பூசி மெழுகினர் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குமுன், நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கட்டளை.

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கலாம் என்பது, அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி போன்றவர்களின் நிலைப்பாடு.

வயதான காலத்திலும்கூட அத்வானிக்குப் பதவி ஆசை போகவில்லை என்று மோடியின் ஆட்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியெல்லாம் திட்டமிடு வதில் தான் மோடி (மஸ்தான்) கில்லாடி ஆயிற்றே!

பிஜேபியைப் பொறுத்தவரை, வாஜ்பேயியாக இருந்தாலும் சரி அத்வானியாக இருந்தாலும் சரி, முரளி மனோகர் ஜோஸியாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உத்தம புத்திரர் என்று அவர்கள் வட்டாரத்தால் புகழப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி லக்னோ பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை ஒரே ஒரு முறை நினைத்துப் பார்க்கட்டும்.

நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முள்ளின்மீதும் கூரிய கற்களின் மீதும் அமர்ந்தா கரசேவை செய்ய முடியும்? எல்லா வற்றையும் சமன் செய்து அதன் மேல் அமர்ந்துதான் கரசேவை செய்ய முடியும் என்று வாஜ்பேய் சொல்ல வில்லையா? அவர் ஒரு கவிஞர் என்று கூறப்படுவ தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சமன் செய்து அதன் மேல் கரசேவை நடைபெறும் என்று மறைமுகமாக கூறினார் என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியாதா?

நரேந்திரமோடி அளவுக்குப் பச்சையாக சிறுபான் மையினரைக் கொன்று குவிக்கும் அளவுக்கு அவர் களின் அணுகுமுறை மதம் கொண்ட யானைபோல் திமிர் முறித்து எழாது என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

கோத்ரா அளவுக்கு நிலைமையைக் கொண்டு செல்லத் தயங்குவார்கள் என்று வேண்டுமானால் கருதலாம்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அரசியல் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப கொண்டு செலுத்த வேண்டும் என்கிற அணுகுமுறை அவர்களிடம் இருக்கும்.

ஆனால் மோடியோ நேரடியாகவே களத்தில் இறங்கி துப்பாக்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்குச் செல்லும் வெறித்தனம் தூக்கலான மனப்பான்மை கொண்டவர்.

இந்தியா முழுமைக்கும் மோடியின் பிம்பம் விகாரப்பட்டுப் போயிருக்கிறது. அவரை பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்தால் அது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் அனுபவத் தன்மையோடு அத்வானி கூறக் கூடும். ஆனாலும் ஆர்.எஸ்.எஸின் முடிவு தானே இறுதி முடிவு! ஆர்.எஸ்.எஸ். யாரைத் தேர்வு செய்யும்? நரேந்திர மோடி போன்றவர்களைத் தான் தேர்வு செய்யும் என்பது எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றே!

நரேந்திர மோடி நிறுத்தப்பட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எதிர் விளைவை உண்டாக்கும்; ஒருவகையில் மதவாத சக்தி மத்தியில் ஆட்சியில் வராமல் இருக்க ஒரு வகையில் நல்லது தானே என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. நடக்கட்டும்; பிஜேபிக்குள் இன்னும் என்னென்ன உட்குத்துகளோ!

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சித்திரவதைக்கு...



நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...




விநாயகரை மறந்த இந்து முன்னணி

பாரத் இந்து முன்னணி என்று ஏதோ ஒரு அமைப்பாம். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 21 அடி விநாயகர் சிலையை வைத்து அதன் முன்பு யாகம் நடத்தியுள்ளனர். இலஞ்சம் ஊழலுக்கு எதிராக இந்த யாகமாம்!

யாகமும், பிரார்த்தனையும்கூட ஒரு வகையான லஞ்சம்தானே நான் உனக்கு சுண்டல், கொழுக்கட்டை செய்து வைக்கிறேன் எனக்கு இவற்றை எல்லாம் கொடு என்பதும் கையூட்டுதானே! கடைசியாக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்து மதத்தை இழிவு செய்யும் கி.வீரமணியைக் கைது செய்ய வேண்டுமாம்! ஏன் விநாயகரிடம் இந்த வேண்டுகோளை வைக்கவில்லை யாம்? அவர்களுக்குத் தெரியாதா - அது வெறும் களி மண்ணுதான் என்று.

சண்டித்தனம்!

வழக்கம்போல சண்டித்தனம் செய்து தற்காலிக விளம்பரத்தைத் தேடிக் கொள்வதில் ராமகோபால அய்யருக்கு நிகர் அவரேதான். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் காவல்துறை அனுமதி கொடுத்துள்ள பாதையை புறக்கணித்து ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ள மசூதி தெருவிற்குள் ராம-கோபாலன் தலைமையில் 65 பேர் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே வேலை - இதே விளம்பரம்! 15 நாள் உள்ளே வைத்தால் தெரியும் சேதி!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் சதி



பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.
(விடுதலை, 14.7.1961)

தமிழ் ஓவியா said...


திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?


மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந் தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்னு "வாமனன்" அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்னு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தம ரானார். அதைக் கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என் றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்த மனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலி யின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம்.

- தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?

விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்ணு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்றுகொண்டிருந்தான்?

தினமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால் தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூணுல் சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புளகாங்கிதம் அடைந்திருக் கிறதா?

வாமனன் உருவத்தில் தானம் கேட் டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிக் கேட்டால் மகாபலி மகன் மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

- கி. தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...


தி இந்து தமிழ் பதிலளிக்குமா தமிழில்?


தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள்.தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத் துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.

நான் தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன்.பார்ப்பவனல்ல! ஆங்கில நாளிதழில் பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளி தழ்கள் மொழி பெயர்த்து வெளி யிட்டுள்ளன.

இப்போது ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய் வாங்கி படித்தேன். நல்ல பல கட்டு ரைகள். கவர் ஸ்டோரி,விளையாட்டு, இன்னும்பல..ஆனால்தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. இது தொடர்பான சைக்கிள்பந்தயம் என்ற ஒரு செய் தியை தவிர.. தங்களின் தலையங்கத் தில் தமிழ் மொழியின் சிறப்பிற்கு மேலும் அழகூட்ட நாங்களும் வந் துள்ளோம் என்று எழுதி விட்டு அன்னை தமிழ் மொழிக்கு எப்படி யெல்லாம் சிறப்பை சேர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்த தமிழ்த்தாயின் மூத்த குடிமகன் என்று தமிழர்களால் அடையாளம் காணப் பட்ட அந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செய்தியை விட்டு விட்டீர்களே! அரசியல் கட்சியினர் நடத்தும் அண்ணா பிறந்தநாள் செய்திகள் இடம்பெற வில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலாவது செய்தி வெளியிட்டு சிறப்பை சேர்த்திருக்கலாமே! ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததுதான் தவறு என நினைக்கின்றேன்.

ஆம். சென்னை உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.திராவிட இயக்கப் புறக்கணித்தலை கைவிட்டால்தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக் கணிக்க மாட்டார்கள்.

- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட தி.க.செயலாளர் காரைக்குடி-630002

தமிழ் ஓவியா said...


துவக்கத்தில் தோடி முடிவில் முகாரி!


- ஊசி மிளகாய்

முன்பு திராவிட நாடு ஏட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அக்கால காங்கிரஸ் - பார்ப்பனர் கூட்டு பற்றி எழுதுகையில், துவக்கத்தில் மகிழ்ச்சி இன்பம்; முடிவில் துயரம் - துன்பம் - என்ற கருத்து வரும் வகையில்,
ஆரம்பத்தில் அடானா (ராகம்)

முடிவில் முகாரி (ராகம்) என்று தலைப் பிட்டு எழுதுவார்!

அண்ணாவின் எழுத்துக்களை மேலும் மெருகூட்டி வாசகர்களுக்குத் தந்து வசியப் படுத்துவது அவர் தந்த தலைப்புகளேயாகும்!

சீடர் சிலம்பம் எடுக்கிறார்!

இரு கொடி ஏந்திகள்!

அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!

இது சகஜம் இது சகஜம்

விதைக்காது விளையும் கழனி!

அதிசயம் ஆனால் உண்மை

இப்படி பலப்பல என்றென்றும் நினைவில் நிற்கும் தலைப்புகள் தனி ரகமானவை.

அதுபோல் இன்று ஒரு தலைப்பு இது!

துவக்கத்தில் தோடி, முடிவில் முகாரி

குஜராத் மக்களுக்காகவே சேவை செய்ய 2016 வரை, தம்மைத் தேர்ந்தெடுத்த குஜராத் வாக்காளர்களுக்கே சேவை செய்வேன் என்று பேசி, ஒரு வாரம் கூட ஆகவில்லை; இப்போது, அத்வானிகளின் அங்கலாய்ப்பு களைக் கூட பொருட்படுத்தாமல் திடீரென்று, கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதற்கொப்ப, மோடியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் ஏற்று அதன்படி ஆடும் - ஆட்டி வைக்கப்படும் ராஜ்நாத்சிங் அறிவித்துவிட்டார்!

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வட்டாரத்தில்தான் இதுகுறித்து பெரு மகிழ்ச்சி வரவேற்பு எல்லாம்!

காரணம், மணி சங்கர்(அய்யர்) கூறிய படி, இதனால் காங்கிரஸ் வெற்றி உறுதி யாகி விட்டது என்று பல அரசியல் வட்டாரங் களில் ஒரு குரலில் ஓசை கேட்கிறது!

ஒரு வாரத்திற்குள் என்னே மனமாற்றம் - மோடிக்கு!

குஜராத்திற்குப் பதில் தேச முழுவ தற்குமே சேவை செய்து, பாரதத்தினை முழுக்க ஹிந்துத்தாயாக இராமன், கிருஷ்ணன் தவிர வேறு எந்த கடவுளுக்கும் இடமில்லாத, இந்த அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மனுதர்மத்தையே மீண்டும் நமது ஹிந்துத்துவ சர்க்காரின் அரசியல் சட்டமாகப் பிரகடனப்படுத்து வதற்கு, மோடியை விட்டால் வேறு யார்தான் கிடைப்பர்?

குறி வைத்து சிறுபான்மையினரான இஸ்லாமிய, கிறித்துவர்களை வேட்டை யாடு, விளையாடு என்று புகுந்து அழித்து, ஒரு தடாவை, பொடாவை யெல்லாம் மிஞ்சும் ஹிட்லரிசதர்பார் நடத்தி நாட்டை இந்து நாடாக்க வருகிறார் மோடி!

பராக்! பராக்!!

ஒரு வாரத்திற்குள் இரு முடிவுகள் அல்லது இரு வகை மோடி வித்தைகள்!

அடடா! என்னே ஜால வித்தை!

இதோ சோ ஒருபுறம், குருமூர்த்திகள் மறுபுறம் புடைசூழ, வரவிருக்கிறார்! சோ அய்யர் கதவு தட்ட கோட்டைக்கே கிளம்பி விட்டார்!

இதற்காக, தமிழ்நாட்டில் திருச்சியில் பண மழை கொட்டுகிறது! விளம்பரங்கள் தூள் பறக்கிறது!

இணைய தளப் பிரச்சாரம் என்ற புது வகை மோ(ச)டிப் பிரச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது!
மீடியாக்கள் எல்லாம் நம்மவாள் தானே - பின் என்ன ஜமாயுங்கள் என்று அவாள் மகிழ்ந்து குலாவிட எல்லாம் துவஜாரோ கணம் நடக்கிறது! ஆலோப ஆரோகரன சங்கீதங்கள் எல்லாம் மோடி பற்றியே!

ஆனால் தோடியில் ஆரம்பிக்கிறது! முடிவில் முகாரியில் முடிந்து விடுவது உறுதி என்கின்றனர். மோடி விளைவுபற்றி தேடி ஓடி, நாடி ஆராய்ச்சி செய்த அரசியல் விற்பன் னர்கள்!

பொறுத்திருந்து பார்க்கத்தானே போகி றோம்; பெங்களூரு - கர்நாடகத் தேர்தல் முடிவில் என்ன பதில்? நினைவிருக்கிறதா?

தமிழ் ஓவியா said...


டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்


வரவேற்கத்தக்க முடிவு

டில்லி எய்ம்ஸ்' மருத்துவமனையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்

மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி, செப்.16- டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ("எய்ம்ஸ்') காலியாக உள்ள 148 அதி சிறப்பு (சூப்பர் ஸ்பெஷா லிட்டி) பணியிடங்களை தற்போதைய இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி நிரப்பலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத் தியுள்ளது.

இதுபோன்ற சிறப் புப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டு முறை யைப் பின்பற்றத் தேவை யில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எய்ம்ஸ்க்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுரை

இந்தப் பணியிடங் களை நிரப்புவது தொடர் பாக எய்ம்ஸ் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநருக்கு மத்திய சுகாதார அமைச் சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப் பிட்டுள்ளதாவது: மருத்துவ உதவிப் பேரா சிரியர்கள், நர்சிங் விரை வுரையாளர்கள் உள் ளிட்ட 148 பணியிடங் களுக்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட விளம்பரத்தின்படியும், இட ஒதுக்கீடு அடிப் படையிலும் தகுதியான வர்களைத் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். எனி னும், இந்தப் பணியி டங்கள் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பைப் பொறுத்து அமையும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லி எய்ம்ஸ் உள் பட அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப் படும் சிறப்பு மற்றும் அதி சிறப்பு படிப்புகளுக் கான உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்பும் போது, இட ஒதுக்கீட்டுக் கொள் கையைப் பின்பற்றத் தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலை மையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதி சிறப்புப் பணியிடங்களைப் பொறுத்த வரையில் திறமைக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்; இந்த விஷயத் தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கடந்த 1992 ஆண்டைய மண்டல் வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஏற்கெனவே தெளிவு படுத்தியுள்ளது. இதற்கு மாறான நிலையை எடுக்கத் தாங்கள் விரும் பவில்லை என்றும் அல் தமஸ் கபீர் தலைமையி லான அமர்வும் உறுதி படத் தீர்ப்பளித்தது.

மறு ஆய்வு மனு!

இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மத்திய அரசு மனு தாக் கல் செய்தது. அதன் பிறகு, மூன்று நாள்கள் கழித்து இந்த மனுவை அவசரமாக விசார ணைக்கு எடுத்துக் கொள் ளக் கோரி, மற்றொரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல் லாததாக்க வகை செய் யும் அரசியல் சட்டத் திருத்த மசோதவை, மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விரைவில் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு அரசி யல் கட்சிகளும் வலியு றுத்தின. மத்திய அரசும் இத்தகைய மசோதா வைக் கொண்டு வருவ தாக உறுதியளித்தது. ஆனால், மத்திய அரசு இதற்கான நடவடிக் கையை எடுக்கவில்லை.

தற்போதைய நிலை தொடரும்

இட ஒதுக்கீடு தொடர் பான தற்போதைய கொள்கை நிகழ்காலத் துக்கும், வருங்காலத்துக் கும் செல்லுபடியாகும் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், அண்மையில் முடிவ டைந்த மக்களவைக் கூட்டத்தில் தெரிவித் தார். மறு ஆய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளிக்காவிட்டால், அட்டார்னி ஜெனரலுடன் கலந்தாலோசித்து, இட ஒதுக்கீடுக் கொள்கை வருங்காலத்திலும் செல் லத்தக்க வகையிலான அரசாணையை மத்திய அரசு வெளியிடும் என் றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எய்ம்ஸ் மருத்து வர்களின் பதவி உயர்வை எந்தவிதத்திலும் பாதிக் காது என்று, அதை நிர்வகிக்கும் அமைப் பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதவெறி சக்திகளை முறியடிக்கும் ஒரே மாமருந்து தந்தை பெரியார்தான்


வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி விழா எடுப்பீர்! தமிழர் தலைவர் வேண்டுகோள்!

மண் புழுவைவிடக், கேவலமாக மதிக்கப் பட்ட மக்களுக்கு விடுதலை உணர்வைப் பெற்றுத் தந்த, தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை, திருவிழாவாக வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி கொண்டாடுவீர்! மதவாத சக்திகளை முறியடிக்கும் மாமருந்து, தந்தை பெரியார் என்பதை மறவாதீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாளை (17.9.2013) அறிவு ஆசானின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திராவிடர் இனத்தின் திருவிழா!

மண் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்ட அடிமை இனத்திற்கு விடுதலை தேடித் தந்து அவர்கள் மானமும் அறிவும் பெற, தமது 95ஆம் வயதிலும் - தளர்ந்து தள்ளாடிய நிலையிலும், தளரா முயற்சியோடு உழைத்த தகைசால் பெருந்தகைக்குப் பிறந்த நாள் விழா என்பது இனத்தின் மீட்சிக்குரிய தனி விழா - தரணியெங்கும் கொண்டாடப்படுகிறது! உலக நாடுகளில் பற்பலவற்றிலும், பார் போற்றும் பகுத் தறிவுப் பகலவனுக்கு விழா எடுக்கப்படுகிறது. ஆம்; அது நன்றித் திருவிழா! நானிலம் போற்றும் நாயகரின் தொண்டினைத் தொடர சூளுரைத்து சுயமரியாதை உலகு அமைக்க, சோர்விலா உழைப் பைத் தரும் உன்னதத் தொண்டர்களுக்கு, உற்சாக மூட்டும் உயர் தனி விழா!

மதவெறி சக்திகளுக்கு எதிராக...

ஒவ்வொரு ஆண்டும், அவரது வெற்றிகள் பரந்து விரிகின்றன; சிறந்து உயர்கின்றன!

இன்றைய கால கட்டத்தில் இனத்தின் எதிரிகளும், மத வெறி சக்திகளும் கைகோர்த்து களம் வரும் நிலையில், அவர்களின் அதி சக்தி வாய்ந்த கூட்டணியை, முறியடித்து, மனிதநேயம் தழைக்கச் செய்யும் ஒரே மாமருந்து, பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

பெரியார் என்பவர் தனி மனிதர் அல்லர்; தத்துவங்கள்! கொள்கைகள்!! லட்சியங்கள்!!!

அவற்றை அமுல்படுத்தி, முழுப் புரட்சி - ஆயுத மேந்தாத அறிவுப் புரட்சியை, வன்முறைக்கு இடந்தராத வைக்கம் முறை புரட்சியைச் செய்து, வாகை சூடிடுவர் அவர்தம் வாரிசுகள்!

இது உறுதி! உறுதி!! உறுதி!!!

நமது பணிகள் இரண்டே முனைகளில்; ஒன்று பிரச்சாரம், இரண்டு போராட்டம்!!

வீட்டுக்கு வீடு

சாதிக்க முடியாதவை என்று பிறரால் கருதப் பட்டவைகளைச் சாதித்துக் காட்டி, சரித்திரம் படைக்க நாம் என்றென்றும் உழைப்போம்! வெற்றி பெறுவோம்!!

உறுதி பொங்க, உற்சாகம் மிளிர, உவகை வழிய, பணி முடிக்க வாரீர்! வாரீர்!!

மத விழாக்களை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், புத்தாடை வரை வழங்குவீர்!

பல வழிகளில் பெரியார் தத்துவங்களை மய்யப் படுத்தும் விழாக்கள் செப்டம்பர் தாண்டியும் தொடரட்டும்! தொடரட்டும்!!

தோழர்களே, தோழர்களே! பணி முடிப்பீர்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
16.9.2013

தமிழ் ஓவியா said...


பெரியார் 135


இன்று தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள்; இது ஒரு தனி மனிதர் பிறந்த குறிப்பு நாள் அல்ல.

தமிழ் நாட்டின் வரலாற்றை பெ.மு., பெ.பி. (பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின்) என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது அறிஞர் பெரு மக்களின் ஆய்வுக் கருத்தாகும்.

பெரியாருக்கு முன், நாம் நாலாஞ் ஜாதிப் பட்டியலில்; இப்பொழுதும் சாஸ்திரப்படி சட்டப்படி அந்த நிலைதான் என்றாலும் நடப்பில் மிகப் பெரிய மாறுதல்!

சூத்திரச்சி வேலைக்கு வந்து விட்டாளா? என்று பார்ப்பனர்கள் இன்று கேட்க முடியாது - முன்பு வெளிப்படையாகவே கேட்பார்கள்.

பெரியாருக்கு முன் சூத்திரனுக்குக் கல்வி கூடாது - கிடையாது - பெரியாருக்குப் பின் ஆச்சாரியார் அந்த வழியில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது அது கடைத்தேறவில்லை - இன்னும் சொல்லப் போனால் அந்தத் திட்டத்தை கொண்டு வந்த ஆச்சாரியாரின் அரசியல் பொது வாழ்வின் கடை கட்டப்பட்டு விட்டது. பெரியாருக்கு முன், ஜாதி, நம் மக்களை இழிவுபடுத்தியது - இன்றைக்கு ஜாதி இழி வானது என்பது உண்மைதான் என்றாலும் அந்த ஜாதி ஓர் அளவுகோலாக்கப்பட்டு, ஆண் டாண்டு காலம் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்களுக்கு ஏணிப்படி கட்டுகளாக்கப்பட்டது.
பெரியாருக்குப் பின்பு எங்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை- கருணை காட்டுக என்று மனு போடும் ஒரு நிலை பார்ப்பனர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

பெரியாருக்கு முன், பெயர்களுக்குப் பின் ஜாதிவால் போட்டுக் கொள்ளுவது பெருமை! பெரியாருக்குப்பின், பெயருக்குப் பின் ஜாதி வாலைப் போட்டுக் கொள்வது இழிவு - அவமானம் - அநாகரிகம் என்ற மனப்பான்மை.

ஜாதி பட்டத்துக்குப் பதிலாகக் கல்விப் பட்டங்களை போடும் தலைகீழ் மாற்றம்!

பெண் என்றால் பிள்ளைப் பெறும் இயந்திரம், அடுப்பூதும் வெறும் ஜடம் என்ற கணிப்பு. இன்றோ தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை எனும் புரட்சிக் கவிஞரின் வயிர, வரிகளுக்கான அடையாளங்கள் எங்குப் பார்த்தாலும்!

சிந்தனையில் மாற்றம், செயல்பாடுகளில் மாற்றம் - எல்லாம் தலையெழுத்து என்னும் குன்றிப் போன முதுகு எலும்புகள் இன்றைக்கு செங்குத்தாக எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை எழுச்சி மனப்பான்மை.

திருவள்ளுவருக்குக்கூட ஏழு சொற்கள் தேவைப்பட்டன.

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று நான்கே சொற்களில் மனிதன் என்றால் யார்? எத்தகையவனாக இருக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறி விட்டாரே அய்யா!

கடவுளை மற - மனிதனை நினை! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! என்ற வரிகள் குறளைவிட குறுகிய சொற்கள் - ஆனால் விரித்த பொருள் கொண்ட மனிதத் தின் மகத்துவத்தைச் செழுமைப்படுத்தும் - நெறிபடுத்தும் அறிவு மொழிகள்! மதத்தால் மனித சமூகம் வதைப்பட்டது போதும் போதும்! மத மற்ற உலகு ஒன்றைப் படைப்போம் - அங்கே மனிதநேயம் என்ற மூச்சுக் காற்று உலவும் தொண்டறம் என்னும் பயிர் செழித்து வளரும்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற சமத்துவ அடிக்கட்டுமானம் அமையட்டும்! அமையட்டும்! அறிவு வழி காட்டட்டும் - அன்பு அரவணைக் கட்டும் - அய்யா, காண விரும்பிய அந்தச் சுய மரியாதை உலகைப் படைக்க அறிவு ஆதவன் பிறந்த இந்நாளில் உறுதி ஏற்போம்!

தமிழ் ஓவியா said...


திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்


தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றனர்.


சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு!

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்

தந்தை பெரியார் பிறந்த நாளில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, செப்.17- திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளையும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டினையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை உடனே செயல்படுத்த மாநில அரசிற்கு கோரிக்கையினையும் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மலர்வளையம் வைத்து உறுதிமொழி!

தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் புடைசூழ மாலை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தொண்டர்கள், மகளிரணியினர் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

பின்பு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் பேட்டியளித் தார். பேட்டி வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இந்த நாளில், பெரியாருடைய புகழ் பாடுவது மட்டும் நம் முடைய நோக்கமல்ல; பெரியாரால் பயன் பெற்றவர்கள் இந்நாளை நன்றித் திரு நாளாக இதனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஓங்கிய கல்வி அறிவு, சிறந்த பகுத்தறிவாக மாறவேண்டும் என்பதற்காக, மீண்டும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு போன்ற லட்சி யங்கள் இன்னும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையில், பெரியார் பிறந்த நாள், மீண்டும் அக்கொள் கைகளைப் பரப்புவதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாகும்.

முக்கியமான கோரிக்கை!

பெரியாருடைய உழைப்பை, உலக நாடுகள் முழுவதும் பாராட்டிப் பெரு மைப்படுத்துகின்ற இவ்வேளையில், மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு முக்கி யமான கோரிக்கையை, உலகம் முழு வதும் உள்ள பெரியார் தொண்டர்கள் சார் பில் மட்டுமல்ல, பெரியார் பற்றாளர்கள் சார்பாகவும் வெளியிட விரும்புகிறோம்.

பெரியார் பிறந்த நாளில் கிடைத்த பரிசு!

மத்திய அரசைப் பொறுத்தவரையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதே வழித் தடத்தில் நிறைவேற்று கிறோம் என்ற அறிவிப்பு, பெரியார் பிறந்த நாள் விழாவிலே கிடைத்த ஒரு நல்ல பரிசு என்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. ஆயிரம் எதிர்ப் புகள் வந்தாலும், மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண் டும். திருச்சி விமான நிலையத் திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் மத்திய அரசு என்பதை நாங்கள் முழுமையாக இன்றைக்குத் துவக்குகிறோம். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அத்துணை பேருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் - தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலை வர்கள் அனைவருக்கும்.

தமிழ் ஓவியா said...

காரணம், தந்தை பெரியார் அவர்கள் திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். எனவே, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றுவதில் இன்றைய அரசும் பங்குபெறவேண்டும்!

அதுபோலவே, மாநில அரசைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றி, அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு - 206 பேர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து வந்த நிலை யில், இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை காரணமாக, செயல்படுத் தப்படாமல் முடக்கப்பட்டு இருக்கிறது.

வெளியிலேயே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொன்ன இன்றைய தமிழக அரசு, இன்னமும் முழு முயற்சி எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இந்தப் பெரியார் பிறந்த நாளில், பெரியா ருடைய படத்திற்கு மாலை சூட்டினால் மட்டும் போதாது; பெரியாருடைய நெஞ் சில் தைத்த முள்ளினை அகற்றுகின்ற பணியில் தமிழக அரசினுடைய பங்கும் உண்டு. அதனை நாங்களும் செய்திருக் கிறோம் என்ற பெருமையை, இந்த அரசும் சேர்த்துப் பெறவேண்டும். அதன் மூலமாக தீண்டாமை, ஜாதிக் கொடுமை, ஜாதி ஒழிய அவர்கள் உதவியதாக ஆகும்.

எனவே, ஜாதி ஒழிய, தீண்டாமை அறவே அழிக்கப்பட, இந்த நாட்டில் மிகத் தேவையான ஒன்றுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கருவறை தீண்டாமையை ஒழிக்கக்கூடிய சிறப்பான இந்த முயற்சி - அதனை இந்தப் பெரியார் பிறந்த நாளிலே செயல்படுத்தவேண்டும்.

குறிப்பாக, மாநில அரசு அதிலே அதிக கவனம் செலுத்தவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டு சாதகமாக இருக்கின்றன. எல்லாமே தெளிவாக இருக்கிறது. எனவே, இதில் தயக்கம் காட்டக்கூடாது என்பதை வேண்டு கோளாக - பெரியார் பிறந்த நாள் விழா வேண்டுகோளாக மாநில அரசுக்கு வைக்கிறோம். அதுபோல, மத்திய அர சினை சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்திற்காகப் பாராட்டுகின்ற நேரத்திலே, திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் என் கிற கோரிக்கையையும்முன் வைக்கிறோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார்


பெரியார் என்றும் பெரியார்!
பகுத்தறிவு சொன்னதால் பெரியார்!
பெரியார் சுயசிந்தனை சொன்னதால் பெரியார்!
பெரியார் ஒழுக்கம் பண்பு சொன்னதால் பெரியார்!
பெரியார் என்றும் பெரியார்!
ஆண்டுகள் பல உருண்டோடினும்
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!
வெண்தாடி வேந்தருக்கு
நூற்றி முப்பத்து அய்ந்தாவது பிறந்த நாள்
அய்யா, உமது ஆயிரமாவது
பிறந்த நாளையும்
தமிழ் மண் மறவாது
கொண்டாடும்!
உன்னை முன் வைத்தே
அரசுக் கட்டில் அகப்பட்டது வந்தேறிகள் ஆளும் நாட்டில்.
அய்யா, உம்மை அறிந்ததால்
மங்கையர்கள் பாழும் புகையை விட்டு
படித்துயர்ந்தனர்.
உம்மை புரிந்தால் மாளும்
மங்கையர் உயிர் வாழும்.
ஆயினும், ஆயிரம் ஆண்டுகள் ஆயினும்,
பகுத்தறிவுப் பகலவன் நீரே!
பகுத்தறிவு ஒளி விளக்கும் நீரே!

= வசந்தகுமாரி செல்லையா, வழக்குரைஞர்

தமிழ் ஓவியா said...


ஆத்திகமா? நாத்திகமா? சொல்லுங்கய்யா!

ஆத்திகமா நாத்திகமா சொல்லுங்கய்யா - பார்ப்பன
ஆதிக்கத்தைப் பெரியாராலே வெல்லுங்கய்யா!
அப்பன் தொழிலைச் செய்யச் சொன்னது ஆத்திகந்தான் நம்
அனைவரையும் படிக்க வைத்தது நாத்திகந்தான்
அம்மா விதவை என்றொதுக்கிய தாத்திகந்தான் - அவரை
அவைக்குள்வந்து அமரவைத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பெண்கள் படிக்கக் கூடாதென்றது ஆத்திகந்தான் - வீட்டுப்
பெட்டைக்கோழி யாக்கிவைத்தது ஆத்திகந்தான்
பொட்டுக்கட்டித் தாசியாக்கிய தாத்திகந்தான் அதைப்
பொசுக்கிப் பெண்ணியம் மீட்டெடுத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
ஆடுமாடு பலிகொடுத்தது ஆத்திகந்தான் சாமி
ஆடுவதைக் கேலிசெய்வது நாத்திகந்தான்
மனிதனையே பலிகொடுப்பது ஆத்திகந்தான் அவன்
மானம், அறிவை மீட்டுத் தந்தது நாத்திகந்நாதன்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
சாதிகளை வகுத்ததுவும் ஆத்திகந்தான் - மூடச்
சடங்குகளைப் புகுத்தியதும் ஆத்திகந்தான்
சாமியார்கள்; சல்லாபங்கள் ஆத்திகந்தான் - அந்தச்
சாக்கடைகளை அகற்றுவது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பக்திப் போதை ஏற்றுவது ஆத்திகந்தான் மானிடப்
பண்பொழுக்கம் பேணுவது நாத்திகந்தான்
கத்தி எடுத்து ரத்தம்குடிப்ப தாத்திகந்தான் நம்மைக்
கருணையோடு வாழ வைப்பது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
உலகம்தட்டை என்று சொன்னது ஆத்திகந்தான் - கலிலியோ
உருண்டைஎன்று ஆய்ந்துசொன்னது நாத்திகந்தான்
உலகம் அழியப் போகுதென்றது ஆத்திகந்தான் - அது
உண்மை இல்லை என்று சொன்னது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)


- திருவாரூர் பாவலர் க. முனியாண்டி

தமிழ் ஓவியா said...


எனது கருத்து



மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

தமிழ் ஓவியா said...


பெரியார் அம்மானை!


வெண்தாடி வேந்தரென்றும் ஈரோட்டுச் சிங்கமென்றும்
தென்னாட்டில் மாப்புகழ் பெற்றவரார்? அம்மானை!
தென்னாட்டில் அப்புகழ் பெற்றவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே அய்யமில்லை அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

வைக்கத்தில் போர்நடத்தி வாகைசூடி வந்ததனால்
வைக்கம்வீ ரர்எனவே ஆனவரார்? அம்மானை!
வைக்கம்வீ ரர்எனவே வையப் புகழ்பெற்ற
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

சூத்திரன் என்றுன்னைச் சொன்னவனை நீஎதிர்த்தே
ஆத்திரம் கொண்டெழுவாய் என்றவர்யார்? அம்மானை!
ஆத்திரம் கொண்டெழச் சொன்னவர் யாரெனிலோ
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

தன்மானம் காக்கத் தமிழ்நாட்டில் அந்நாளில்
தன்மானப் பேரியக்கம் கண்டவர்யார்? அம்மானை!
தன்மானப் பேரியக்கம் கண்டவர் யாரெனிலோ
தன்மானத் தந்தை பெரியாரே அம்மானை!
தன்மானத் தந்தையைப் பாடேலோர் அம்மானை!

இந்தித் திணிப்பை எதிர்த்துப் படைதிரட்டி
நற்றமிழைக் காத்திட்ட நாயகர்யார்? அம்மானை!
நற்றமிழ் காத்திட்ட நாயகர் யாரெனிலோ
தந்தை பெரியாரே என்பதறி அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

திருமணத்தில் சீர்திருத்தக் கொள்கை மணக்கத்
திருமணமு றைகண்டார் யாராவார்? அம்மானை!
கொள்கைத் திருமணம் கண்டவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே! நாடறியும் அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடச் செய்துநம்
கண்திறக்கச் செய்தவர் யாராவார் அம்மானை!
கண்திறக்கச் செய்தவர் யாரெனிலோ அய்யா
அறிவாசான் நம்பெரியார் என்றறிக அம்மானை!
நம்பெரியார் பேர்சொல்லிப் பாடேலோர் அம்மானை!

இரு பெண்கள் எதிரெதிரே அமர்ந்து காயைத் தூக்கிப் போட்டு ஏந்திப் பிடித்து விளையாடுவது ஒருவகை விளையாட்டு. அப்போது அவர்களில் ஒருவர் வினாத்தொடுத்தும் மற்றவர் விடையளித்தும் பாடுவதற்கு அம்மானை என்று பெயர்.

இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து தளை தட்டாமல் செப்பலோசையுடன் அமையக்கூடியது இப்பாடல்.

சிலப்பதிகாரத்தில்தான் அம்மானை முதன்முதலாக இடம்பெற்றதாக தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் உள்ள நினைவு கல்வெட்டு அருகில், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

* தந்தை பெரியார் பிறந்த நாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட முதல் பிரதியை இருதய நோய் தடுப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.

* உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி - 1 பதிப்பாசிரியர் கி.வீரமணி) நூலை தமிழர் தலைவர் வெளியிட வரியியல் அறிஞர் ச.ராஜரத்தினம் பெற்றுக்கொண்டார்

* பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை எழுதிய எது வகுப்புவாதம்? என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட திராவிட மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை பெற்றுக்கொண்டார்.

* திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ) என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, பெரியார் நூலகர் வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். (61 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்)

* திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ஒற்றைப்பத்தி (தொகுதி 2) நூலை, தமிழர் தலைவர் வெளியிட, மும்பை த.மு.ஆரிய சங்காரன் பெற்றுக்கொண்டார். புலவர் அறநெறியன் எழுதிய பெரியார் புரட்சி மொழிக்குறள் என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் பெற்றுக் கொண்டார். டாக்டர் மு.கன்னியப்பன் அவர்கள் எழுதிய ஒரு நாத்திகனின் பவுத்தனின் அம்பேத்கர் வாதியின் இறுதி எச்சரிக்கை! என்ற நூலை நூலாசிரியர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய 39 புத்தகங்கள் அடங்கிய ரூ. 6135 மதிப்புள்ள பெரியார் ஆண்டிராய்டு செயலி பெரியார் - கையடக்க நூலகம்)த்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, டாக்டர் சரோஜா, நாகரசன்பட்டி யைச் சேர்ந்த பொறியாளர் என்.எல். ஏகாம்பரம், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் அரிமா ஒளிவண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுச் சிங்கம்
- உவமைக் கவிஞர் சுரதா

நூற்றாண்டு பிறப்பதொன்றும் புதுமை இல்லை
நூற்றாண்டில் மிகச்சிறந்தோர் பிறந்தால், அந்த
நூற்றாண்டு பெருமைபெறும், எனவே, சென்ற
நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தோன்றி
நூற்றாண்டைச் சிறப்பித்தார். அதுபோல் சென்ற
நூற்றாண்டில் நம்பெரியார் தோன்றி, இந்த
நூற்றாண்டில் புரட்சிபல செய்து, இந்த
நூற்றாண்டில் மேதையென விளங்குகின்றார்.
நாத்திகச் சிங்கமவர், பெரியார் என்னும்
நான் கெழுத்துத் தலைவரவர். நாட்டிலுள்ள
ஆத்திக வாதிகளின் கொட்டம் தன்னை
அன்றாடம் அடக்கியவர், நம்மை யெல்லாம்
சூத்திரனென் றழைத்தோரை ஓட ஓடத்
துரத்தியவர் தமிழர்க்கு வாழ்வு தந்த
மூர்த்தியவர் தமிழகத்தில் முதல்வ ராகா
முதல்வரவர் நம்பெரியார் அறிவின் உச்சி!
தம்முடைய கருத்துக்கள் பலவற் றுக்கும்
தாமேவோர் களமமைத்துத் தலைமை தாங்கி
தம்முடைய குறிக்கோளுக் காக வேண்டித்
தாமேபோர்க் களஞ்சென்றும் சிறைக்குச் சென்றும்,
தம்முடைய தள்ளாத வயதில் கூடத்
தளராமல் போராடிச் சாகு மட்டும்
தம்வாழ்வைத் தமிழ்நாட்டுக் கர்ப்ப ணித்த
தன்மானப் பகுத்தறிவுச் சிங்க மன்றோ?
சாக்கிரட்டீஸ் இல்லையென்றால் பிளாட்டோ இல்லை;
ஜங்என்பான் இல்லையென்றால் ஃராய்டு இல்லை;
சாக்கியராம் புத்தர்பிரான் இல்லை யென்றால்
சத்யகுண போதனெனும் அசோகன் இல்லை;
நாக்கரசன் நக்கீரன் இல்லை என்றால்,
நம்நாட்டில் ஓர் ஓட்டக் கூத்த னில்லை;
பாக்கியவான் நம் பெரியார் இல்லை என்றால்,
பாவேந்தர் பேரறிஞர் இவர்கள் இல்லை.
தந்தை பெரி யாரைப்போல் நீண்ட நேரம்
தமிழ்நாட்டில் பேசியவர் யாரு மில்லை
எந்தவிதக் கேள்விக்கும் பதில் சொல் லாமல்
இவரெழுந்து சென்றதில்லை. தம்மை யாரும் நிந்திப்பார் என்பதற்கோ, இவற்றைச் சொன்னால்
நெருக்கடிகள் ஏற்படுமே என்ப தற்கோ,
தந்தை பெரி யாரென்றும் அஞ்ச வில்லை.
தம் கருத்தைக் கூறாமல் இருந்த தில்லை.
நினைவாற்றல் சர்ச்சிலுக்கும் சீச ருக்கும்
நிச்சயமாய் அதிகந்தான். தமிழர் நெஞ்சில்
நிலைபெற்ற ஈரோட்டுப் பெரியா ருக்கு
நினைவாற்றல் அதிகந்தான் தமிழர் கட்கு
தனியாற்றல் பலவுண்டு; இவரைப் போன்று
தங்குதடை இல்லாது பேசும் ஆற்றல்
இனியொருவர்க் கமைந்திடுமா? பெரியார் போன்று
எதிர்வாதம் செய்வதற்கு நம்மால் ஆமோ?
பெண்ணுரிமை பெறவேண்டும்; விதவை யான
பெண்ணுக்கு மறுவாழ்விங் களிக்க வேண்டும்
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்
குண்டர்களின் வஞ்சகமும், ஜாதி பேதக்
கொடுமைகளும் மனுநீதி முறையும், இந்த
மண்டலத்தில் ஒழிந்தாக வேண்டும் என்று
வாதித்தார், சாதித்தார், வெற்றி பெற்றார்.
உலகிலுள்ளோர் அனைவர்க்கும் உரியார் சற்றும் ஒடுங்காத புகழ்பெற்ற பெரியார்; வாழ்வில்
பலதுறைக்கும் வழிகாட்டி; உலகத் திற்கோர்.
பகுத்தறிவுப் படகோட்டி; நமக்கோர் ஈட்டி;
மலைநிலத்து வரிவேங்கைப் புலியைக் கொன்ற
மாவீரன்; வைதீக வேட்டைக்காரன்
தலைசிறந்த எழுத்தாளர் பெரும்பேச்சாளர்
தன்மனைவி இறப்புக்கும் அழாத தீரர்.
கூறுமடி யார்கள் வினை தீர்த் தானாமே,
குன்றுருவ வேல்வாங்கி நின்றானாமே,
மாறுபட சூரரைவ தைத்தா னாமே
வடிவேலன்! அன்னவனை பக்தரெல்லாம்
ஆறுமுறை நினைத்திட்டால், புரட்சி செய்த
அய்யாவை நீங்களெலாம் ஒவ்வோர் நாளும்
நூறுமுறை நினையுங்கள்! நினைக்கா விட்டால்
நுரையைப்போல் நாமெல்லாம் கரைந்தே போவோம்
சமுதாயம் திருந்துவதற்கும், நமது நாட்டில்
சாதிமதம் ஒழிவதற்கும் பாடுபட்ட
இமயமலை! ஈரோட்டுப் பெரியார் என்னும்
எரியீட்டி அன்றிருந்தார். இன்றோ இல்லை
நமைவிட்டு நம்பெரியார் மறைந்த போதும்
நாமவரை ஒரு போதும் மறக்கவில்லை
இமயத்தை வடநாட்டான் மறந்திட்டாலும்
ஈரோட்டை நாமென்றும் மறக்க மாட்டோம்.
கடுகுண்டு, மிளகுண்டு, பூண்டு முண்டு,
கத்தரிக்காய் அவரைக்காய் இவையு முண்டு
கடலுண்டு ஆறுண்டு குளங்கள் உண்டு;
கடவுளுண்டா என்றொருவர் கேட்ட போது,
கடவுளில்லை என்று சொன்னார் விவேகா னந்தர்
கடைசிவரை சொன்னாரா? சொல்லவில்லை
கடவுளில்லை கடவுளில்லை இல்லை என்று
கடைசிவரை பெரியார் தான் சொல்லி வந்தார்.
பெரியாழ்வார் ஆத்திகர்; நமது தந்தை
பெரியாரோ நாத்திகர். இரண்டு பேரும்
சரியான சத்துருக்கள்; இரண்டு பேரில்
சமூகத்திற் கார் தேவை? ஆழ்வா ரெல்லாம்
மரியாதைக் குரியவர்தாம்.அவர்கள் பாடல்
மறுமலர்ச்சிக் குதவிடுமா? நமது தந்தை
பெரியாரின் போதனைத்தான் இந்த நாட்டின்
பிரச்சினைகள் தீர்வதற்கு உதவி செய்யும்.

நன்றி: வள்ளுவர் தமிழ்ப்பீடம், 1.9.2013

தமிழ் ஓவியா said...


ஒழுக்கம்பற்றி பெரியார்...

உண்மையான ஒழுக் கம், நாணயம் வேண்டுமா னால் தேவை குறைய வேண் டும். அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவ சியமும் அதிகமாக அதிக மாக நாணயக்கேடும், ஒழுக்கக் கேடும் வளர்ந்து கொண்டுதான் போகும்.

- (விடுதலை, 22.7.1969)

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல், அவனைச் சுற் றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும்.

- (விடுதலை, 30.7.1969)

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

- (குடிஅரசு, 22.12.1929)

உங்கள் மனதை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு, தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மன மறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- (குடிஅரசு, 30.9.1944)

பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லுவதை விடத் தன்னிடத்து அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

- (விடுதலை, 20.11.1958)
//