Search This Blog

30.9.13

ஆண் - பெண் வேறுபாடற்ற உடை தேவை


* சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை மாற்றிடுக!


* ஆண் - பெண் வேறுபாடற்ற உடை தேவை - அழகு சாதனங்கள், நிலையங்களைப் புறக்கணித்திடுக!

மதவாத சக்திகளை முடியடிக்கும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும் 

விருத்தாசலம் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டின் தீர்மானங்கள்
விருத்தாசலம், செப்.29- ஆண் - பெண் சமத்து வத்தை வலியுறுத்தியும், மதவாதசக்திகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
28.9.2013 சனி அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானங்கள்


1.    தமிழ்நாட்டில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை மீண்டும் அதன் உண்மையான தமிழ்ப் பெயர்களாக மாற்றிட ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. குறிப்பாக விருத்தாசலம் என்று சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட பெயரை அதன் உண்மைப் பெயரான திருமுதுகுன்றம் என்று மாற்றிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.    தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில்  உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசை வலியுறுத்துமாறு இம்மாநாடு தமிழக முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

3.    தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துப் போராடிய தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விரைந்து முடித்து, தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பத்தினை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4.    (அ)    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றி பெற்றதற்கு இம்மாநாடு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 13ஆவது திருத்தத்தைச் செயல்படுத்தி, மாநிலத்திற்கு அனைத்து உரிமைகளும் கிட்டும் வண்ணம் இலங்கை அரசு நடந்துகொள்ள போதுமான அழுத் தத்தை அளிக்குமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தலைமை இயக்குநர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவுக்குச் சென்று, தமிழர்கள் வாழும் பகுதிகளையும் பல நாட்கள் சுற்றுப் பயணம் செய்த நிலையில் நேரிடையாக உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து அங்கே நிலவும் சூழலைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இராணுவ கெடுபிடிகள் இன்னும் நீடிக்கிறது என்பது உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார். மனித உரிமை ஆணையரின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில், சட்ட ரீதியாக நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளுமாறு அய்.நா.வை இம்மாநாடு வலியுறுத்து கிறது.

5.    தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல், சிறைப்பிடித்தல் என்பது தொடர்ந்து இலங்கை அரசால் தொடரப்படுகிறது. வழக்கம்போல இதில் கவனம் செலுத்தப்படுகிறது. கவலை தெரிவித்துக் கொள்ளப்படு கிறது என்ற மத்திய அரசின் வாக்குறுதிகள் வெற்றுச் சொற்களாகிவிட்டன. பல மாதங்கள் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அவதிப்படும் கொடுமை தொடர் கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிடும் அளவுக்கு இந்தப் பிரச்சினை விபரீதமான ஒரு கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


கச்சத் தீவை மீட்பதுதான் இதற்கு நிரந்தரப் பரிகாரமாக இருக்க முடியும். ஆதலால், அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.    காவிரி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் ஆகியவை தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றின் அடிப்படையில் கருநாடக அரசைச் செயல்பட வைப்பது மத்திய அரசின் கடமை என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

மேலும் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல முற்றிலும் சட்ட விரோதமாக, கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக கருநாடக அரசு அறிவித்துள்ளது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கியே தீருவது என்ற முடிவில் கருநாடக அரசு இருப்பதாகத் தெரிகிறது.

மத்திய அரசு இதனை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் சட்டரீதியாக கருநாடக மாநில அரசை நீதிமன்றத் தீர்ப்புகளின்படி செயல்பட வைக்க ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7.    சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துக் கொடுத்த 6ஆவது தடத்தில் நிறைவேற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்தி, இறுதித் தீர்ப்பைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

8.    ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தகுதி - திறமை என்பதில் சமரசத்துக்கே இடமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கும் விதம் - சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து விட்டதாகவே கருத இடம் இருக்கிறது.

திராவிடர் இயக்கம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலிய தலைவர்கள் அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்து வரும் தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதியைப் புறந்தள்ள முயன்றால் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

9.    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் நாளும் அதிகரித்து, சட்டம் ஒழுங்குக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டி    , இந்தப் பிரச்சினையில் போதுமான கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல் அமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

10.    மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் பல்வேறு போதைகளுக்கான எதிர்ப்புப் பிரச்சாரத்தை - விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று இம்மாணவர் மாநாடு முடிவு செய்கிறது. தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இவ்வாண்டு பெரியார் பிறந்தநாளில் அறிவித்தபடி மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்றும் குறிப்பாக ஜாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

11.    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  பின்னர் மாணவர் களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது. எனினும் இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூடுதலாகத் தெரிவித்திருப்பது, மாணவர்களின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற அறிவிப்பு போதாது; தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் உயர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12.    நாடெங்கும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணங்கள், குழந்தை வளர்ப்பு முதல் இருபால் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகமான பாலின வேறுபாடுகளை உருவாக் குவது ஒன்று; பாலியல் குறித்த புரிதலை உருவாக்காதது மற்றொன்று. எனவே பாலின வேறுபாடுகளைக் கடந்து இருபால் இளைஞர்களும் நட்புறவுடன் பழகும் பாங்கை உருவாக்குவது, பாலியல் கல்வியைக் கற்பிப்பது உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தேவை என்பதால் இவற்றை முதன்மைப்படுத்திக் கல்விமுறை அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதெனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

13.    மாணவர்கள், இளைஞர்களுக்கு உடைக் கட்டுப்பாடு, கண்ணியம் குறித்து பரவலாக இப்போது பேசப்படுகிறது; அரசும் அது குறித்து ஆணைகளையும் வகுக்கிறது. உடைக் கட்டுப்பாடு என்பது பிற்போக்குத் தனமானதாக ஆகிவிடக்கூடாது. ஆண், பெண் இருபாலரும் வேறு பாடற்ற உடைகளை அணிய வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்தே இந்த விசயத்தில் சரியான தீர்வாகும். அதே நேரத்தில், இருபால் இளைஞர்கள் மத்தியிலும் அலங்கரித்துக் கொள்ளுதல், சிவப்பு நிறத் தோல் வேண்டும் என்று களிம்புகளைப் பூசிக் கொள்ளுதல், அழகு நிலையம் என்பனவற்றில் பணத்தையும், நேரத் தையும் விரயமாக்குதல் போன்றவை அதிகரித்துள்ளதை இம் மாநாடு கவலையுடன் நோக்குகிறது. உடை, நகை யலங்காரமும், சிவப்புத் தோலுமே நாகரிகம் என்ற சிந்தனையைப் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்களும், ஊடகங்களும் தொடர்ந்து பரப்பு கின்றன. இத்தகைய அடிமைப் போக்கைக் கைவிட்டு, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஏற்று, போலி அழகுச் சிந்தனை களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் மாணவர் களையும், இளைஞர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

14.    மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத் துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (AGENDA)
கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப் பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப்பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்களும், இந்துத்துவா சக்திகளும், பெரு முதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டினைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கை யாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

15.    திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக் கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளா வார்கள் என்பதையும் இம்மாநாடு தொலைநோக்கோடு வெளிப் படுத்துகிறது.


முன்மொழிந்தவர்:- விருத்தாசலம் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் பெரியார் செல்வம்.
பலத்த கரஒலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

10 comments:

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


வன்முறையால் கழகத்தை ஒடுக்கிவிட முடியாது!


கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு விருத்தாசலத்தில் 28.9.2013 அன்று வெகுநேர்த்தியாக - எழுச்சியாக நடைபெற்றது. ஊர் எங்கும் மாநாட்டைப்பற்றிப் பேசும் அளவிற்குச் சுவர் எழுத்து விளம்பரங்களும், பதாகைகளும், ஃபிளக்சுகளும் பளிச் பளிச்சென்று ஒளிர்ந்தன! கழகக் கொடிக்காடாகக் காட்சியளித்தது.

முற்பகலில் மிகச் சிறப்பான அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தத்தம் தலைப்புக்கேற்ப கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மக்கள் மன்றமே நிரம்பி வழிந்தது. மாணவர் கழக மாநாடு என்பதற்குப் பொருத்தமாக ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டிருந்தனர்.

தமிழர் தலைவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. எந்த அளவுக்கு அந்த உரை அமைந்தது? அவர் பேச்சு மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கைகளில் வண்ண வண்ணமாகக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றிய மூட நம்பிக்கை, நாள் கணக்கில் கட்டியிருப்பதால் அழுக்குகள் சேர்வது, கிருமிகள் சேர்வது உள்பட அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொன்னதுதான் தாமதம் - இருபால் மாணவர்கள் பலரும் மேடைக்கு வந்து தாங்களாகவே கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தனர் - அதாவது கைமேல் பலன் கிடைத்தது!

விருத்தாசலம் மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி - பொதுமக்கள் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய அலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும்.

20 ஆண்டுகளுக்குமுன் இதே விருத்தாசலத்தில் நடத்தப்பட்ட திராவிடர் கழக வட்டார மாநாட்டையொட்டிக் கூட பேரணி நடத்தப்படவில்லை. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய - பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பேரணி அவ்வூர் மக்களை அதிசயிக்க வைத்துவிட்டது.

கழகத் தோழர்களின் கட்டுப்பாடான அணிவகுப்பைப் பார்த்து, காவல்துறையினரே வியந்தனர் என்றே கூறவேண்டும்.

திறந்தவெளி மாநாடு வானொலிதிடலில் வீதி நாடகங்களோடு தொடங்கப்பட்டது. அந்த வானொலித் திடலில் - அதற்குமுன் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில்லை என்று கூறுகிற அளவுக்குப் பொதுமக்கள் கடல்! பெரும்பாலும் இளைஞர்களைக் காண முடிந்தது.

இவ்வளவு சிறப்பாக எழுச்சியாக திராவிடர் மாணவர் கழக மாநாடு நடைபெற்றதைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு சிறு கும்பல் மாநாட்டு மேடைக்கு வந்து கொண்டிருந்த கழகத் தலைவரின் வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

திராவிடர் கழகத் தலைவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று காவல் நிலையத்திற்குக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தும், காவல்துறை அதிக கவனமாக இருக்கத் தவறியது ஏன்? என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

குறிப்பிட்ட இடத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சியினர் எப்படி வந்திருந்தனர்? அப்படியென்றால், ஏற்கெனவே திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது என்பது வெளிப்படை! பத்திரிகைக்காரர்கள் வரை தெரிந்திருந்த ஒரு முக்கியமான நிகழ்வு - காவல்துறைக்குத் தெரியாது - காவல்துறை எதிர்பார்க்கவில்லை என்று எவரேனும் சொல்ல முடியுமா? காவல்துறையின் கவனத் துக்கே வராமல் நடந்துவிட்டது என்றால், அதைவிட காவல்துறையின் செயலின்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? காவல்துறையில் உளவுப் பிரிவு என்பது இல்லையா?

ஏற்கெனவே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்தவர் களைக் கண்காணித்து இருக்கவேண்டாமா? அவர்களை அழைத்து எச்சரித்து இருக்கவேண்டாமா?

ஒரு முக்கியமான தலைவர் வந்திருக்கும்பொழுது காவல் துறையினர் அவருக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படைகூட தெரியாமல் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

மாநாடு நடைபெறக்கூடாது; மாநாடு நடந்தாலும் பேரணி நடைபெறக்கூடாது என்று, மனப்பால் குடித்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்போடு, பெரும் வீச்சில் நேர்த்தியாக நடைபெற்றது - கழகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் தெரிவித்ததுபோல எதிர்ப்புகளுக் கிடையே வளர்ந்து வந்ததுதான் இந்த இயக்கம் - எங்கள் பயணத்தை, செயல்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது!

வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது முறைப்படி காவல் துறையினரிடம் புகார் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் - அதன் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும், காவல்துறையின் போக்கிற்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தோழர்கள், தமிழர்கள் பதற்றமாக விசாரித்து வருகின்றனர்.

தோழர்களே, பொறுமையுடன் நம் பணிகளை மேலும் எழுச்சியுடன் நடத்துவதன்மூலம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் உரிய பாடத்தைக் கற்பிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் சேலத்தில் தமிழர் தலைவர் பேட்டி


சேலம், செப். 30- விருத் தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்ற மூலம் தீர்வு காண்போம் என்று சேலத்தில் திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

சேலத்தில் பெரியார் படிப்பகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கலந்து கொண் டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விருத்தாசலத்தில் நடந்த திராவிடர் கழக இளைஞர் அணி கூட் டத்தில் கலந்து கொள் வதற்காக சென்றேன். அப்போது ஒரு கும்பல் என்னுடைய வாக னத்தை மறித்து என்னை தாக்க முயன்றது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறை யினரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது.

இது கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவத்தால் தொண்டர்கள் எழுச்சி யால் வேறு எந்த ஒரு அசாம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப் படுத்தி வைத்துள்ளோம்.

விருத்தாசலம் சம்ப வம் தொடர்பாக காவல் துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண்போம். தமிழகத் தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்ப வங்கள் நடந்து வருகின்றன.

சினிமா நூற்றாண்டு விழா என்பது ஒரு விழாவே கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அவர்க ளுக்கு எங்களது ஆதரவு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மீது தாக்குதல் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்தல் வழக்கு தொடர்பாக ஆஜரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- விருத்தாச்சலத்தில் நடந்த கடலூர் மண்டல திராவிடர் கழக மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர் களை தாக்க முயற்சித்தது, கண்டிக்கத்தக்கது, கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரீகமான செயல் அல்ல, இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

" ஆரியம், தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப்போர்வை தரித்துக் கொண்டு, வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத்தெரிய வொட்டாது தடுத்து, நாசத்தை, நமது இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது. அந்த நஞ்சினை உண்ணாதீர், என்று கூறும், சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள், ஏசுகின்றனர், ஏளனம் பேசுகின்றனர். ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சுயமரியாதைக்காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம், இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே” என்று ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும் ! "

= அறிஞர் அண்ணா , 17 - 10 - 1943 , திராவிடநாடு இதழில்

தமிழ் ஓவியா said...


மோடியின் உரையும் விருத்தாசலம் மாநாடும்


வருங்காலப் பிரதமர் இவர்தான் என்று மிகப் பெரிய அளவு - பணத்தை வெள்ளமாகப் பாய்ச்சி ஆள் பிடித்துக் கூட்டத்தைச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு கூட்டம்! அப்படி ஒரு கூட்டம் திருச்சியில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.

பிரம்மாண்டமான ஏற்பாடு என்பது உண்மைதான். கொட்டிக் கொடுக்கத்தான் பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள் இருக்கிறார்களே - அவர்கள் தானே மோடி பிரதமராக வரவேண்டும் என்பதில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

என்னதான் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், மோடி தன் உரையின் மூலம், தான் யார் என்பதை தன்னைத்தானே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

சுதந்திர நாள் என்று கூறப்படும் நாளில் பிரதமரை மோசமாக விமர்சித்தார். திருச்சி உரையும் அப்படித்தான்! நம் வீரர்களைப் பாகிஸ்தானில் கொல்லும்போது நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பிரியாணி சாப்பிடுகிறார் என்று எவ்வளவு கண்ணியமாகப் பேசி இருக்கிறார்.

குஜராத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரும் துயரத்திற்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டுள்ளாரே! மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் எழுப்பிய குற்றச்சாற்றை அலட்சியப்படுத்த முடியுமா?

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளும் காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழி வாரியாக மக்களைப் பிரிக்கும் பாவத்தைச் செய்தது - என்று திருச்சியில் மோடி முழங்கி இருக்கிறார்.

இது ஒன்றே போதும் மோடியைத் தூக்கி எறிவதற்கு! ஆர்.எஸ்.எஸின் கொள்கை, மாநிலங்களே கூடாது - ஒற்றை ஆட்சி முறைதான் இருக்க வேண்டும், ஒரே மொழிதான் ஆட்சி மொழி - அது சமஸ்கிருதம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை; கோணிப்பைக்குள் இருந்த பூனை இப்பொழுது வெளியே வந்துவிட்டது.

மொழிவாரி மாநிலம் கூடாது என்பதுதான் பிஜேபியின் - நாளைய பிரதமர் என்று கனவு காணும் நரேந்திரமோடியின் முடிவு என்றால் இதுபற்றி அனைத்து மாநில மக்களும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

தங்களின் மொழி, இனம், பண்பாடு இவற்றை இழந்து எல்லோரும் இந்துத்துவா என்ற இந்து மகா சமுத்திரத்தோடு கரைந்து போய் விட வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமும், ஏக்கமுமா?

இந்த நாட்டில் இருக்கக் கூடிய கிருஸ்தவர்களும், முசுலிம்களும் - தங்களை இந்துமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுளான, கிருஷ்ண னையும், இராமனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறக் கூடியவர்கள் இதனையும் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிஜேபியோடு கூட்டு சேரலாம் என்று அசை போட்டுக் கொண்டிருப்போர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அப்படி கூட்டுச் சேர்ந்தால் மொழிவாரி மாநிலமே கூடாது என்பவர்களோடு கை கோர்த்துக் கொண்டு வரலாமா என்று கேட்க மாட்டார்களா தமிழர்கள்? தமிழர்கள் என்ன சுயமரியாதையற்றவர்கள் என்ற நினைப்பா?

இன்னொரு குற்றச்சாற்றையும், ஆளும் காங்கிரஸ்மீது வைத்துள்ளார். மதத்தின் பெயரால் பிளவுபடுத்துபவர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுக்காக வக்காலத்து வாங்கிப் பதில் சொல்வது நம்முடைய வேலையல்ல; ஆனால் அதே நேரத்தில் இப்படிச் சொல்பவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டாமா?

இந்துத்துவா என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டவர்களா இதைப் பேசுவது? நான் ஒரு இந்துத் தேசியவாதி! (Hindu Nationalist) என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்த பேர் வழியா இப்படி ஒரு குற்றச்சாற்றை வைப்பது?

குஜராத்து மாநிலத்தில் சிறுபான்மை மக்களைத் தேடித் தேடிச் சென்று கொலை வேட்டை ஆடிய ஆசாமிகளா இந்தக் குற்றச்சாற்றை வைப்பது?

வாக்காளப் பெரு மக்கள் ஏதோ ஒரு காரணத் தால் தவறான முடிவை மேற்கொள்வார்களேயானால் குஜராத்தில் அவர்கள் நடத்திக் காட்டிய அதே வேட்டையை இந்தியா முழுமையும் நடத்திக் காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை! விருத்தாசலம் திராவிடர் கழக மாநாடும் இந்த எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


இன்று (அக். 1) சர்வதேச முதியோர் தினம்


இன்றைய சூழலில் முதி யோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. 2050ஆம் ஆண் டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடு களிலும் முதியோரின் எண் ணிக்கை இருமடங்காக உயரும் என அய்.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர் களை நன்றாக கவனிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ஆம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளை களால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப் பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளை யும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர் களின் செயல்பாடுகள் மாறி விடும். முதியோரின் அறிவு மற் றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதா மல், வரமாக கருதுங்கள். குடும் பத்தில் முதியோரை அரவ ணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக் காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

பிள்ளைகள் நல்ல வசதி யோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதி யோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற் றோராவது முதியோர் இல்லத் தில் இருந்தால், மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர இத்தி னத்தை பயன்படுத்திக் கொள் ளுங்கள். அரசும் முதியோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா... முதியவர்கள்?

கொடிது கொடிது... முதுமை கொடிது; அதனினும் கொடிது... முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதர வின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், காவல்துறையினர் உறவினர் களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன் றைய இளமை நாளைய முது மையாய் மாறித் தானே ஆக வேண்டும்?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பெரியார் பொன்மொழிகள் போட்டி

சிங்கப்பூர், அக்.1- தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் போட்டிகள் 2013 என்ற தலைப்பில் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் போட்டி மற்றும் தமிழ் கட்டுரைப் போட்டிகளை லிட்டில் இந்தியாவில், உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 28 ஆம் நாள் சனிக்கிழமை நடத்தியது.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து போட்டிகளில் பங்கேற்ப தற்காக தொடக்க நிலை 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர் களும், உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி, காலை சிற்றுண்டியுடன் தொடங்கியது. போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி வகுப்பு அறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக் கும் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரி யர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை வழி நடத்தினார்கள்.

பெரியார் பொன்மொழிகள்!

பெரியாரின் பொன்மொழிகளை மாணவர்கள் வாசித்து ஒரு பொன்மொழியினை விளக்கிக் கூறும் போது மாணவர்களின் அறிவுக் கூர்மையும், தெளிவான சிந்தனையும் நடுவர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் பாடும்போது மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், குரலும் இனிமையாக இருந்தது. கட்டுரைப் போட்டியில் ஆர்வமுடன் மற்றும் குறித்த நேரத்தில் எழுதி முடித்து தொடக்க நிலை மாணவர்கள் எழுதும் திறனை வெளிப்படுத்தினார்கள்.

போட்டி முடிந்த பின் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் மதிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தார் கள். மூன்று பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 12 வெற்றி யாளர்கள், 6 ஊக்கப் பரிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். போட்டிகளின் முடிவு உடனடியாக அறிவித்ததை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி, சான்றிதழ்களையும், ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ள திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

வெற்றியாளர்களை அறிவிக்கும்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தமிழில் பேசுவது, எழுதுவது மற்றும் பாடுவது பற்றி வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக மன்றத்தின் செயலாளர் க.பூபா லன் நன்றி கூறி வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் பரிசுப் பொருள்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும், பெற்றோர்களும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றார்கள்.

நிகழ்ச்சியில், பெரியார் சமூகசேவை மன்ற உறுப்பி னர்கள், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
//

தமிழ் ஓவியா said...

காப்போம், காப்போம்! தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்!!
கழகத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை - குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் கட்சிக் கொடியுடன் அன்பு தழுவ வரவேற்றனர்.

காப்போம்! காப்போம்!! தமிழர் தலைவரைக் காப்போம்!

காப்போம், காப்போம், தமிழர் தலைவரை உயிர் கொடுத்தும் காப்போம்! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.

அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குக் கழகத் தலைவர் மாலை அணிவித்தார்.