Search This Blog

28.9.13

பெரியார் கடவுள் கற்பனை என்றது உண்மையா? இல்லையா?


கடவுள் கல்லு என்னோடு வா - கோயிலுக்குள் சென்று தட்டிக் காட்டுகிறேன் என்று பார்ப்பனர் ஒருவரின் கேள்விக்குத் தந்தை பெரியார் அளித்த பதில், புகழ் பெற்ற ஒன்று.
இப்பொழுது ஒரு தகவலை தினமணி - வெள்ளி மணி (13.9.2013) படக்காட்சிகளுடன் சாங்கோ பாங்கமாக வெளியிட் டுள்ளது.
சிவாலயங்களின் மண்டபத் தூண்களில் கலை புகழுக்காகப் பெரிய அளவில் தெய்வத் திருவுருவங்கள் அமைக்கப் பட்டன. காலப் போக்கில் இந்தத் திருவுருவங்கள் தனித் தன்மை பெற்று வழிபாட்டுக்கு உரியதாகி விட்டன. இவற்றில் சிலவற்றைக் காணலாம்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக் கம்பத்தடி மண்டபத் தூணில் நெடும் சிலைகளாக அமைந்துள்ள அகோர வீரபத் திரர், அகோர காளி, அக்னி வீரபத்திரர், அக்னி காளி ஆகிய உருவங்கள் இப்பொழுது வழி பாட்டுக்குரியதாக உள்ளன. மஞ்சள் வெண்ணெய் உருண் டைகளை இவற்றின்மீது வீசி பிரார்த்தனைகளை நிறைவேற் றுகின்றனர்.
தொண்டை மண்டலத்தில் ஆலயத் தூண்களில் விளங்கும் சரபேசுவரருக்கு சிறப்பு வழி பாடுகள் செய்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர். கோயம்பேடு குசலவிபுரீசுவரர் ஆலயத்தின் முன்னேயுள்ள 16 கால் மண்டபத்தில் அமைந் துள்ள சரபேசுவரர் தனிச் சிறப்புடன் வழிபடப்படுகின்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் பிரதோஷ வேளையிலும் ஏராள மான மக்கள் இங்கு வழிபடு கின்றனர்.
சிதம்பரம் நடராசர் ஆலயத் தில் தூண்களில் எழுந்தருளி யுள்ள சோமாஸ்கந்தர், தண்ட பாணி ஆகிய திருமேனி களுக்கு சிறப்பு அபிஷேகங் களும், வழிபாடுகளும் நடத் தப்படுகின்றன  இதுபோல திருவாரூர், திருவண்ணாமலை, திருப்புகலூர், ஆவுடையார் கோயில் முதலிய கோயில்களில் தூண்களில் உள்ளவைகளும் வழிபாடு செய்யப்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளது தினமணி வெள்ளிமணி
இதற்குப் பெரிய விளக் கங்கள் தேவைப்படாது. சிற்பி களால் வடிக்கப்பட்ட வெறும் சிலைகள்தான் இவை என் பதைத் தெரிந்து கொண்டால் அதற்குமேல் சக்தி எங்கே இருந்து குதித்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
கல்கியில் தொ.மு. பாஸ் கரத் தொண்டைமான் எழுதி இருந்ததுதான் நினைவிற்கு வருகிறது.
இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும் அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனையில் பின்னியிருக்கிறார்கள் - அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்று மில்லாத இறைவன், இப்படித் தான் ஆயிரம் திருநாமங் களுடனும் இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகி இருக்கிறான் - மனிதன் கற் பனையிலே. கற்பனை செய் ததையெல்லாம் கல்லிலும் வடித்தெடுத்திருக்கிறார்கள்.
கல்லிலும், செம்பிலும் வடித் தெடுத்திருக்கிறார்கள் - நம் நாட்டுச் சிற்பிகள்.
அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே, இன்று நமது தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன என்கிறார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

 இப்பொழுது சொல்லுங்கள் பெரியார் கடவுள் கற்பனை என்றது உண்மையா? இல்லையா?
--------------------- மயிலாடன்  அவர்கள் “விடுதலை” 27-9-2013 இல் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந் தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை)

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

தமிழ் ஓவியா said...


செப் 27: (இன்று) : உலக சுற்றுலா தினம்


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொரு ளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக்கருத்து.

சுற்றுலா பலவிதம்

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட் டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங் களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010 ஆம் ஆண் டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகை ஈர்க்கும் நாடு எத்தனை பேர்

பிரான்ஸ் 8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா 6 கோடியே 70 லட்சம்
சீனா 5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின் 5 கோடியே 77 லட்சம்
இத்தாலி 4 கோடியே 64 லட்சம்
துருக்கி 3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி 3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து 2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா 2 கோடியே 57 லட்சம்
மலேசியா 2 கோடியே 50 லட்சம்

தமிழ் ஓவியா said...


சாயிபாபா பக்தரின் கண் இப்பொழுதுதான் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.

சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம்.

அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலாளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


அறிவியல் சிந்தனை



பண்டைய கிரேக்கத்தில் அறிவியல் சிந்தனை தழைத்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல் சூழல்தான். கிரேக்கத்தின் நகர அரசுகள் அறிவியல் சிந்த னைகளுக்குத் தடை விதிக்க வில்லை. கிரேக்க அறிவியல் தத்துவ ஞானிகள் இயற்கையையும், இயற்கை நிகழ்வுகளையும் புதிய கோணத்தில் அணுகுவதற்கு இந்த நகர அரசுகள் தந்த சுதந்திரம் பெரும் உதவியாக இருந்தது.

எனினும் இங்கும் அரசியல் செயல்கள் ஒரு சில சமயங்களில் அறிவியலை பாதித்தன என்பதற்கு ஆர்க்கிமிடிஸின் இறப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.

உரோமானிய மன்னன் கிரேக் கத்தின் மீது படையெடுத்தபோது உரோமானியத் தளபதி ஆர்க்கி மிடிஸிக்கு எந்த வித பாதிப்பும் ஏற் படக் கூடாது என்று கட்டளை யிட்டிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் மணலில் வடிவக் கணிதவியல் (Geometry) படத்தை வரைந்து கொண்டிருந்த போது ஒரு போர் வீரன் அவரை யாரென்று அறியாமல் கொன்று விட்டான்.

தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுபோர் வீரனை விலகுமாறு அவர் செய்த சைகையைத் தவறாகப் புரிந்து கொண்டயோர் வீரன் அவரைக் கொன்றது அறிவியலுக்கு செய்த மிகவும் பாதகமான செயலாகும்.

(அறிவியலின் வரலாறு பேரா கு.வி. கிருஷ்ணமூர்த்தி பக்.36).
- _ க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்


தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது. ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் பிறந்ததால்...

சுய மரியாதைச் சொரனை பிறந்தது
சூது மதியாளர் சூழ்ச்சி தெரிந்தது
பார்ப்பாரப் புளுகு பஞ்சாய் பறக்குது
பகுத்தறிவு தெளிவு பாங்காய் சிறக்குது
ஆன்மீகப் பயிரு காய்ந்து கருகுது
ஆரிய வயிரு வெந்து ஏறியது

பள்ளிக்கூடம் பல்கிப் பெருகுது
கல்லூரிக்கல்வி கடல்போல் வளருது
எல்லார்க்கும் படிப்பு இலட்சிய மானது
இல்லார்க்கும் படிப்பு எளிதாய் ஆனது
பஞ்சமர் சூத்திரர் அறிவு வென்றது
பார்ப்பனர் சாத்திரம் அழிந்து ஒழிந்தது

திராவிடர் இனத்திற்கு முகவரி பிறந்தது
ஆரியர் இனத்திற்கு ஆணிவேர் அறுந்தது
ஜாதி சனாதனம் தூக்கில் தொங்குது
சங்கர ஆச்சாரிக்கு தூக்கு நெருங்குது
பெரியார் கொள்கை உலகம் சுற்றுது-சுய
மரியாதை உலகம் இனிதான் பிறக்குது -
- அதிரடி க.அன்பழகன்

தமிழ் ஓவியா said...


சந்திரனில் நீர்


இந்திய செயற்கைக்கோள் சந்திராயன் சேகரித்து கொடுத்து தகவல்களின் அடிப்படையில் சந்திரனில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது என்று யு.எஸ். வான்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா கூறியுள்ளது. சந்திரனின் தரைக்குள் கண்டறியப்படாத ஆழத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களை அதன் தரையில் காணப்படும் கனிம துகள்கள் காட்டுகின்றன என்றும் அது கூறுகிறது. இந்த ஆய்வு தகவல் நேச்சர் ஜியாகிராபிக் இதழில் வெளியாகியுள்ளது. சந்திரனின் உள்பகுதி முன்பு நினைத்தது போல் வறண்டு போய் கிடக்கவில்லை என்பதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கிரகங்களின் புவியியல் நிபுணர் ரேச்சல் கில்மா கூறுகிறார். இவர் லாரல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் சோதனைச்சாலை யில் பணியாற்றுகிறார்.

சந்திரனில் உள்ள பாறைகள் எலும்பு போல் காய்ந்து போய் உள்ளன என்று நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். அப்போல்லோ செயற்கைக் கோளில் கிடைத்த மாதிரிகளில் காணப்பட்ட நீர்த்திவலைகள் பூமியின் மிச்ச சொச்சங்கள் என்றும் கூறினர்.

இதுவெல்லாம் தவறு என்று தற்போதைய சந்திராயன் கொடுக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் சொன்னார். அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய புதிய சோதனைச்சாலை தொழில் நுட்பங்கள் சந்திரனின் உட்பகுதி முன்னர் நினைத்தது போல் காய்ந்து போய் கிடக்கவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை



பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

தமிழ் ஓவியா said...


மோடியின் முகத்திரை கிழிந்தது



குஜராத்தைப் பாருங்கள், மோடியின் நிகரற்ற ஆற்றலால், இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் வளங் கொழிக்கும் பூமியாக ஜொலிக்கிறது பாரீர்! பாரீர்!! என்று இந்தியா முழுவதும் செய்து வந்த பிரச்சாரப் பலூன் உடைந்து சிதறி விட்டது - அது ஒரு திட்டமிட்ட உயர் ஜாதி இந்துத்துவா - மற்றும் பெரு முதலாளி களின் பெரும் பிரச்சாரம் என்பது அதிகார பூர்வமான ஒரு அறிக்கையின் மூலம் அம்பலமாகி விட்டது.

பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோச கராக இருந்த ரகுராம்ராஜன் (இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர்) தலைமையில், அமைக்கப்பட்ட குழு இந்திய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார நிலைகள்பற்றி ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றினைக் கொடுத்துள்ளது.

மூன்று வகை நிலைகளை அது அட்டவணைப் படுத்தியுள்ளது.

முதல் நிலையில், சிறப்பாக உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட ஏழு. இந்த ஏழு மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை என்பதை, நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் 10 என்ற அட்டவணையில், குஜராத் இல்லை என்று வேண்டுமானால், முதுகைத் தட்டிக் கொள்ளலாம்.

குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பதினொன்று. அதில் 7ஆவது இடத்தில், குஜராத் மாநிலம் இருக்கிறது.

இந்த ஆய்வு என்பது, அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல; பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுதான் வெளியில் கொண்டு வந்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, நரேந்திர மோடி பிரதமராக வந்தால் இந்தியாவைக் குஜராத் ஆக்குவார் என்று தம்பட்டம் அடிப்பது ஏன்?

வேண்டுமானால் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளலாம்; இந்தியா, குஜராத் மாநிலம் போல குறைவான வளர்ச்சியுடைய நாடாகப் பந்தயம் கட்டி மாற்றிக் காட்டுவோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார மேதையும், அதற்காக நோபல் பரிசு பெற்றவருமான, அமர்த்தியாசென், அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவரல்லர்.

பொதுக் கண்ணோட்டத்தில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தினார்.

Modi could have also taken both of the facts, that Gujarat record in education and health care is pretty bad and he has to concentrate on that என்றாரே!

குஜராத் மாநிலத்தில் கல்வி வளர்ச்சியிலும், சுகாதார வளர்ச்சியிலும் முதல் அமைச்சர் மோடி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவை இரண்டிலும் குஜராத் மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினாரே - இதற்கு எந்த வகையிலும் அரசியல் முத்திரை குத்த முடியாதே!

இராமச்சந்திரகுகா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்களுக்கும் மோடி பற்றிய கணிப்பு என்ன என்பது ஊரறிந்த உண்மையாகும்.

ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, மோடிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் ஆட்சி குறித்து வழக்கம்போல வாய்த்துடுக்காக மோடி பேசியதற்குத்தான் ஆந்திர முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

அறியாமை பாவமல்ல; ஆனால் திட்டமிட்ட அறியாமை பாவமேதான்! அதுதான் பொய் கூறிய மோடி! ஆந்திரா, குஜராத் திறமை வளர் நிலைபற்றி முழு அளவில் அறிந்திருந்தும், மக்கள் முன்பு பல தவறான தகவல்களை அளித்துள்ளார் மோடி. அவருடைய தரத்துக்கு அது நல்லதல்ல.

ஆந்திர மாநிலம் 3.25 லட்சம் இளைஞர்களுக்கு திறமை வளர் பயிற்சிகளை அளித்துப் பணிகளில் அமர்த்தியுள்ளது. குஜராத் 52,000 இளைஞர்களுக் கும், தமிழ்நாடு 1.6 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளன. ஆனால் வேலைகள் கொடுக்கப்பட வில்லை என்று ஓங்கி அடித்தார் ஆந்திர முதல் அமைச்சர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பார்கள்; மோடியின் பொய்ப் பிரச்சாரமும் உரிய காலத்தில் அம்பலமாகி விட்டதே!

தமிழ் ஓவியா said...


பாரதத்தாயின் துயரம்

- சித்திரப்புத்திரன்

ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய்.

என் மக்களில் பெரும்பாலோரை அயோக் கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேக அயோக்கி யர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால், எனது அருமைப் புத்திரனான காந்திமகான் எனக்காகச் செய்த தவமும், தியாகமும், ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா?

நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால், எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்கார முடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப்பேசிய அயோக்கியர்களும், சுயநலக்காரர்களும், துரோகிகளும் ஜனப்பிரதிநிதிகள் ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தைக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி?

காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன். விடுதலை பெறுவேன். சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.

பாரதத்தாய் தனது மக்களுக்குச் சொல்வது.

ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும், உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னைப் பாழாக்குகிறது. காலரா, பிளேக், வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது,

ஆனால் காங்கிரஸ் சுயராஜ்யம் தேசியம் என்னும் வியாதிகளோ எனது, முப்பத்து முக்கோடி மக்களையும், அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும், அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளைகொண்டு பாழ்பண்ணிக் கொண்டு வருகிறதே, இதை கவனிப்ப தில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இது தானா அடையாளம்?

இவ்வியாதிகளின் பேரால் வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன் இன்னும் வை இன்னும் வை என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?

எவனாவது ஒரு காங்கிரஸ்காரன், இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேண்டுமென்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன், மக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்கள் அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியுள்ள வர்களாகிறீர்கள்.

பிராமணியம், பிரிட்டாணியம் இந்த இரண்டைவிட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டாணியத்தை கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசியமும், இரண்டாவது ஆக பிராமணியத்தையும் தொலைக்க வேண்டும். பிராமணியத்தை நிதானமாகக்கூட ஒழிக்கலாம்.

அவசரமாக தேசியத்தைத் ஒழிக்க வேண்டும். ஏனெனில், தேசியமே பிரிட்டானியத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசியத்தை இடித்து விட்டால் பிரிட்டானியம் ஆடிப்போகும். தேசியமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானியம் உண்மையான சுதேசியமாய் விட்டிருக்கும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.06.1927

தமிழ் ஓவியா said...


ஒரு சமாதானம்

சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் நாயக்கரின் நய வஞ்சகம் என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்த கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்கு கொஞ்சகாலத்திற்கு முன் எழுதியதாக காட்டப்பட்டிருந்த கடிதத்திற்குச் சமாதானமாகவும் அடுத்த வாரம் எழுதுவதாக பதில் எழுதியிருந்தோம்.

அதை உத்தேசித்து அநேக கனவான்கள் நமக்கு பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது, நாம் எழுதப்போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் இஷ்டப்படி கண்டித்து நாயுடுவுக்கு பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்;

இவ்விதம் இருவர் சண்டை போட்டுக்கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும், இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையின் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன.

இவ்வளவும் நாம் இந்த வாரத்தில் பிரசுரிக்கும் போது பதில்களுடன் சேர்ந்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன. நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே, நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாக நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ் விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக்கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்திவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்.

ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்கு கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்ததோடு, அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும், ஸ்ரீலஸ்ரீ கைவல்யசாமிகள் முதல் பல பெரியவர்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலே தான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும், அவசியமில்லா வீரியமும் பெரியதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிருப நேயர்கள் மன்னிக்க வேண்டும்.

இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாக கூறுவோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 29.05.1927

தமிழ் ஓவியா said...


மித்திரன் நிருபரின் அயோக்கியத்தனம்


நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிருபர் ஒருவர் மிகவும் அயோக்கியத்தனமான ஒரு நிருபத்தை மித்திரனுக்கு அனுப்பியிருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும், அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிருபர்களும் மானம், வெட்கம், சுத்த ரத்தவோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்ப தாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிருபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை.

இதன் காரணமும் நமக்குத் தெரிவ தில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும், யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோப்போர் கோக்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.

நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியா லயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும், அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தை வியக்க வைத்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்



நேற்று (28.9.2013) விருத்தாசலத் தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டையொட்டி மாலை நடை பெற்ற மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

திராவிடர் கழக மாநாடு என்றால் ஊர்வலம் இல்லாமலா? அதிலும் மாணவர் கழக மாநாடு. குறிப்பாக, இளைய தலைமுறையிடம் தானே இயக்கத்தின் கொள்கைகள், இமயமாய் உயர்ந்து நிற்கின்றன; நிற்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அருகே தொடங் கிய ஊர்வலத்தை கடலூர் மண்டல திக செயலாளர் அரங்க.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க, மாவட்ட மாண வரணி தலைவர் த.தமிழ்செல்வன் தலை மையில் கடலூர் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் சி.மணிவேல், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.அறிவு, கடலூர் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அ.முத்துராஜா, சிதம்பரம் மாவட்ட மாணவரணி செய லாளர் ச.செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்ட மாணவரணி தலைவர் ச.எடிசன், விருத்தாசலம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சிலம் பரசன், விருத்தாசலம் மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வெங்கட்ராசா, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணி தலைவர் கூ.தமிழ்மணி, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணிச் செயலாளர் செ.திலீபன், திண்டிவனம் மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரா.சீனிவா சன் முன்னிலையில் மாணவர் கழகத் தோழர்கள் கழகக் கொடிகளைக் கையி லேந்தி விருத்தாசலத்தின் மிக முக்கிய வீதிகளில் முழங்கி வந்த காட்சி மூடநம் பிக்கையின் முதுகெலும்பைத் தேடித் தேடி ஒழிக்கும் வகையில் அல்லவா இருந்தது!

கூத்தனூர் பறையாட்டம், கூடியிருந்த வர்களை குதூகலிக்கச் செய்தது. மாலை நேரம், முக்கிய கடைவீதிகள், மக்களோ ஆயிரம் ஆயிரமாய் ஆர்வத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்த காட்சி என்னே! என்னே!! உலகில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்ற ஒரு இயக்கம், அதன் கொள்கைகளை மக்களிடையே நேரடியாகச் சென்று, மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் வண்ணம் (DEMO) விளக்க நிகழ்ச்சிகளை செய்துகாட்டும் அறிவியல் இயக்கம், நம்மை விட்டால் வேறு உண்டா?

கழக மகளிரணியின் கைகளிலே ஏந்தி வந்த தீச்சட்டியைக் கண்டு விருத்தாசலம் மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தை கள் வியந்து போயினர். தீச்சட்டி இங்கே! மாரியத்தா எங்கே? என்ற முழக்கம் பக்தர்களின் காதில் இடியெனப் பாய்ந் தது. பதிலைத்தான் காணோம். அரிவாள் மீது ஏறி நின்று, கறம்பக்குடி முத்து - சண்முகசுந்தரம் குழுவினர் கேட்டபோது திகைத்து நின்றனர்.

கழகத் தோழர்கள் அலகு குத்தி கார் (டாடா சுமோ) இழுத்த காட்சி காண் போரை, பக்தர்களை வெட்கப்படச் செய்தது. மடையரைத் திருத்ததங்களை வருத்திக்கொண்ட கழகத் தோழர் களைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? ஆம்; திண்டிவனம் சக்திவேல், முருகன் என்கிற சிந்தனைச் சிற்பி, ரமேஷ் ஆகிய தோழர்கள் தான் அந்த மாவீரர்கள்.

சடையார் கோயில் நாராயணசாமி குழுவினரின் ஆடல், பாடலுடன் கூடிய கோலாட்ட நிகழ்ச்சி அதுவும் பெரியார் பிஞ்சுகளைக் கொண்ட அந்த எழில் கொஞ்சும் நிகழ்ச்சி காண்போரின் மனதைக் கொள்ளை கொண்டது. மாண வர்களின் அணிவகுப்பு, அலகுக் காவடி, சரசுவதி அறிவாலயப்பள்ளி மாண வர்கள், சிதம்பரம் கழக மாணவரணி, திண்டிவனம் கழக மாணவரணி, கல்லக் குறிச்சி கழக மாணவரணி, ஊர்வலத்தில் பதாகை தாங்கிய பேரணியும் இடம் பெற்றது. கடலூர் மாவட்டம் வேகாக் கொல்லையைச் சேர்ந்த மா.மணிமொழி - மா.வெண்மணி ஆகிய பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் அனை வரையும் ஈர்த்தது. பாலக்கரை அருகில் அமைக்கப்பட்ட தனிமேடையில் தமிழர் தலைவர், கழகத் தலைவர் பார்வையிட் டார். அப்போது கழக மகளிரணியினர் கைகளிலே ஏந்திவந்த தீச்சட்டி தலை வரது கரத்திற்கு மாறியது. பொதுமக்கள் இதனைப் பார்த்து தெளிவுற்றனர்.
அரசு கலைக்கல்லூரி தொடங்கி ஜங்சன் சாலை, பங்களாத் தெரு, ஆவடி சாலை, கடலூர் சாலை, மணிமுத்தாறு வழியாக மாநாட்டுத் திடல் - வானொலித் திடலை அடைந்தது. நமது இயக்கப் பேரணி களைத் தவிர, வேறு எந்தக் கட்சியின் ஊர்வலம், பேரணிகளில் இவ்வளவு கட்டுப்பாட்டை தொடக்கம் முதல் இறுதி வரை, கடைப்பிடித்திருக்க முடியுமா? என்று காவல்துறையினரே வியந்து போகும் வண்ணம் கழகத்தின் ஊர்வலம் அமைந்தி ருந்தது. மேற்கண்ட வீதிகளில் மட்டுமல்ல, விருத்தாசலத்தின் நகரெங்கும் நம் மாநாட்டை பற்றியே பேச்சு. அதன் எதி ரொலி இன்னும் கேட்டுக் கொண்டு தானிருக்கப் போகின்றது.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


வன்முறையால் கழகத்தை ஒடுக்கிவிட முடியாது!


கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு விருத்தாசலத்தில் 28.9.2013 அன்று வெகுநேர்த்தியாக - எழுச்சியாக நடைபெற்றது. ஊர் எங்கும் மாநாட்டைப்பற்றிப் பேசும் அளவிற்குச் சுவர் எழுத்து விளம்பரங்களும், பதாகைகளும், ஃபிளக்சுகளும் பளிச் பளிச்சென்று ஒளிர்ந்தன! கழகக் கொடிக்காடாகக் காட்சியளித்தது.

முற்பகலில் மிகச் சிறப்பான அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தத்தம் தலைப்புக்கேற்ப கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மக்கள் மன்றமே நிரம்பி வழிந்தது. மாணவர் கழக மாநாடு என்பதற்குப் பொருத்தமாக ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டிருந்தனர்.

தமிழர் தலைவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. எந்த அளவுக்கு அந்த உரை அமைந்தது? அவர் பேச்சு மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கைகளில் வண்ண வண்ணமாகக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றிய மூட நம்பிக்கை, நாள் கணக்கில் கட்டியிருப்பதால் அழுக்குகள் சேர்வது, கிருமிகள் சேர்வது உள்பட அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொன்னதுதான் தாமதம் - இருபால் மாணவர்கள் பலரும் மேடைக்கு வந்து தாங்களாகவே கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தனர் - அதாவது கைமேல் பலன் கிடைத்தது!

விருத்தாசலம் மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி - பொதுமக்கள் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய அலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும்.

20 ஆண்டுகளுக்குமுன் இதே விருத்தாசலத்தில் நடத்தப்பட்ட திராவிடர் கழக வட்டார மாநாட்டையொட்டிக் கூட பேரணி நடத்தப்படவில்லை. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய - பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பேரணி அவ்வூர் மக்களை அதிசயிக்க வைத்துவிட்டது.

கழகத் தோழர்களின் கட்டுப்பாடான அணிவகுப்பைப் பார்த்து, காவல்துறையினரே வியந்தனர் என்றே கூறவேண்டும்.

திறந்தவெளி மாநாடு வானொலிதிடலில் வீதி நாடகங்களோடு தொடங்கப்பட்டது. அந்த வானொலித் திடலில் - அதற்குமுன் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில்லை என்று கூறுகிற அளவுக்குப் பொதுமக்கள் கடல்! பெரும்பாலும் இளைஞர்களைக் காண முடிந்தது.

இவ்வளவு சிறப்பாக எழுச்சியாக திராவிடர் மாணவர் கழக மாநாடு நடைபெற்றதைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு சிறு கும்பல் மாநாட்டு மேடைக்கு வந்து கொண்டிருந்த கழகத் தலைவரின் வாகனத்தை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

திராவிடர் கழகத் தலைவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று காவல் நிலையத்திற்குக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தும், காவல்துறை அதிக கவனமாக இருக்கத் தவறியது ஏன்? என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

குறிப்பிட்ட இடத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக் காட்சியினர் எப்படி வந்திருந்தனர்? அப்படியென்றால், ஏற்கெனவே திட்டமிட்டு இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது என்பது வெளிப்படை! பத்திரிகைக்காரர்கள் வரை தெரிந்திருந்த ஒரு முக்கியமான நிகழ்வு - காவல்துறைக்குத் தெரியாது - காவல்துறை எதிர்பார்க்கவில்லை என்று எவரேனும் சொல்ல முடியுமா? காவல்துறையின் கவனத் துக்கே வராமல் நடந்துவிட்டது என்றால், அதைவிட காவல்துறையின் செயலின்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? காவல்துறையில் உளவுப் பிரிவு என்பது இல்லையா?

ஏற்கெனவே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்தவர் களைக் கண்காணித்து இருக்கவேண்டாமா? அவர்களை அழைத்து எச்சரித்து இருக்கவேண்டாமா?

ஒரு முக்கியமான தலைவர் வந்திருக்கும்பொழுது காவல் துறையினர் அவருக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படைகூட தெரியாமல் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

மாநாடு நடைபெறக்கூடாது; மாநாடு நடந்தாலும் பேரணி நடைபெறக்கூடாது என்று, மனப்பால் குடித்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்போடு, பெரும் வீச்சில் நேர்த்தியாக நடைபெற்றது - கழகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் தெரிவித்ததுபோல எதிர்ப்புகளுக் கிடையே வளர்ந்து வந்ததுதான் இந்த இயக்கம் - எங்கள் பயணத்தை, செயல்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது!

வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது முறைப்படி காவல் துறையினரிடம் புகார் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் - அதன் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும், காவல்துறையின் போக்கிற்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தோழர்கள், தமிழர்கள் பதற்றமாக விசாரித்து வருகின்றனர்.

தோழர்களே, பொறுமையுடன் நம் பணிகளை மேலும் எழுச்சியுடன் நடத்துவதன்மூலம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் உரிய பாடத்தைக் கற்பிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் சேலத்தில் தமிழர் தலைவர் பேட்டி


சேலம், செப். 30- விருத் தாசலத்தில் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்ற மூலம் தீர்வு காண்போம் என்று சேலத்தில் திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

சேலத்தில் பெரியார் படிப்பகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கலந்து கொண் டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விருத்தாசலத்தில் நடந்த திராவிடர் கழக இளைஞர் அணி கூட் டத்தில் கலந்து கொள் வதற்காக சென்றேன். அப்போது ஒரு கும்பல் என்னுடைய வாக னத்தை மறித்து என்னை தாக்க முயன்றது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறை யினரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது.

இது கண்டிக்கத்தக் கது. இந்த சம்பவத்தால் தொண்டர்கள் எழுச்சி யால் வேறு எந்த ஒரு அசாம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப் படுத்தி வைத்துள்ளோம்.

விருத்தாசலம் சம்ப வம் தொடர்பாக காவல் துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண்போம். தமிழகத் தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்ப வங்கள் நடந்து வருகின்றன.

சினிமா நூற்றாண்டு விழா என்பது ஒரு விழாவே கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அவர்க ளுக்கு எங்களது ஆதரவு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மீது தாக்குதல் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்தல் வழக்கு தொடர்பாக ஆஜரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- விருத்தாச்சலத்தில் நடந்த கடலூர் மண்டல திராவிடர் கழக மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர் களை தாக்க முயற்சித்தது, கண்டிக்கத்தக்கது, கருத்துக்கு கருத்துதான் மோத வேண்டுமே தவிர கற்களால் மோதுவது நாகரீகமான செயல் அல்ல, இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

" ஆரியம், தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப்போர்வை தரித்துக் கொண்டு, வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத்தெரிய வொட்டாது தடுத்து, நாசத்தை, நமது இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது. அந்த நஞ்சினை உண்ணாதீர், என்று கூறும், சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள், ஏசுகின்றனர், ஏளனம் பேசுகின்றனர். ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சுயமரியாதைக்காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம், இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே” என்று ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும் ! "

= அறிஞர் அண்ணா , 17 - 10 - 1943 , திராவிடநாடு இதழில்