Search This Blog

22.2.10

உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடிதுடித்த சோ


இனப் பற்று

கேள்வி: தமிழ்ச் சமுதாயம் முன்னேற ஜாதி உணர்வை அகற்றவேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை குறித்து?

பதில்: நீதிபதி தினகரன் முதல் மத்திய அமைச்சர் ராஜா வரை குற்றம் சாற்றப்பட்டவர்களின் ஜாதியை முன்னிறுத்தி வாதம் புரிகிறவருக்கு,இப்படியும் பேச மனம் வருவது ஒரு விசித்திரம் தான். தான் என்ன பேசினாலும் மக்கள் ஏற்பார்கள் என்ற நினைப்பு முதல்வருக்கு முழுமையாக வந்துவிட்டது.

------------------------------(துக்ளக் 24.2.2010)

இப்படி எழுதுகிறவர் யார் தெரியுமா? ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பித்துக்கொள்கிற சோ ராமசாமி தான்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதியாக இருந்த நேரத்திலும் அவர் மீது பாயாத குற்றசாற்று, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார் என்றவுடன் அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி பதவியை நீட்டிக்கொண்டபோது, நேர்மையான முறையில் பார்ப்பனர்கள் எதிர்த்திருந்தால் அவர்களுக்கு ஜாதிப் புத்தி இல்லை போலும் என்று நினைத்திருக்கலாம், கண்டு கொள்ளவில்லையே.

கொலைக்குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு 61 நாள் சிறையில் இருந்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, அவரைப் பற்றி ஊரு உலகத்துக்கே தெரியும்.

இருந்தும் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று இந்தியா டுடேக்கு (9.2.2005) பேட்டி கொடுத்தாரே, திருவாளர் சோ இதற்குப் பெயர் ஜாதிப் புத்தி இல்லாமல் வேறு என்ன புத்தியாம்?

வீரமணியிடம் சோவை நான்தான் அனுப்பினேன். நான் தயாரித்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சின்னக்குத்தூசியிடம் ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன குட்டை எதிரொலி ஏட்டிலே (3.4.1983) சின்னக்குத்தூசி போட்டு உடைத்துவிட்டார். மற்றவர்களுக்குக் கையாளாக செயல்படக் கூடியவர் சோ என்று அம்பலமானதும், உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடிதுடித்தார் சோ.

நியாயமாக சோ என்ன செய்திருக்க வேண்டும்?. சங்கராச்சாரி சொன்னது உண்மைக்கு மாறானது என்றால் அவரிடம் சண்டைக்குத் தானே போயிருக்க வேண்டும்?.

அவாளின் ஆதர்ஷப் பெரியவாளாயிற்றே! என்ன எழுதினார் சோ?.

இப்பொழுது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என்று நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பெக்ட் ஃபார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் என்றாரே பார்க்கலாம்.

மறுக்க வேண்டிய இடத்தில் மறுக்காததோடு அந்த மடத்தினிடத்தில் மரியாதை வைத்துள்ளேன் என்றாரே! இதற்குப் பெயர் என்னவாம்?.

இந்த ஜாதிப் புத்தியும், இனவெறியும் கொண்டவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வக்காலத்து வாங்கும் கலைஞரைத் தூற்றுகிறார்.

---------------- மயிலாடன் அவர்கள் 22-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

priyan said...

avan thirudinane, naan thirudinaal mattum enna kutramaa? enru ketkadheergal.
naan thirudave illai aanal ennai kuttram solgiraargal enru sollungal, aetrukkolgirom.

cho aiyokkiyan enbadhil sandhegamillai,

karunanidhiyum,veeramaniyum,raasavum enna makkal nalan onre karuthil kondu vaazhbavargala....?
cho chinna thirudan... ivargal periya thirudargal.

cho thamizhinathin ethiri enral... ivargal dhrogigal.

cho vai ethirgondu thamizhanal vella mudiyum, ivargal irukkum varaiyil mudiyadhu...

priyan said...

enna ennoda commenta yum kanom....
adhukku badhilaiyum kanom.......
suyamariyadhai singangale enge olindhu kondeergal....

Naayaiyum vida naara pozhappu idhu.
veeramani initial onnu pudhusa add pannirukkarame apdiya....?

Ennala periyaarai thalaivaraga aerka mudiyum.....
adharku piragu avaradhu iyakkam asthamanamagivittadhu.
Idhu thamizhanukku avamanam, nattam.
idhai aerpaduthiyadhu karunanidhiyum veeramaniyumdhan.

admk sekkalaiye nnu paakadheenga...
andhamma opena saami kumbidudhu...
adhanala indhammava cho kooda sethitten.

oorukku theriyama girivalam poradhu...
kula samikku pongal vaikaradhu ellam panradhu kidayadhu.

Thirundhunga....
En mana pakkuvam , ellaa thamizhargalukkum vandhuvittadhu....
eppadi theriyuma... ungal nadavadikkaigalal dhan.

Cho amma koshtinnu unakkum theriyum....
aatchi maarina veeramani enna seivaarunnu unakku theriyuma...?
andhammavukku seruppa aavar iruppar,
andhammavukku mandhiriya cho iruppan... enna naan solradhu...

appayum idhe madhri paesa mudiyuma...?