Search This Blog

9.2.10

சோ வின் அக்கிரகாரக் கீழ்ப்புத்தி!

சோவின் கீழ்க் குணம்!

கேள்வி: ரிமாண்ட் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு கிராமியக் கலைகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கனிமொழி எம்.பி., யோசனை தெரிவித்துள்ளதுபற்றி?

பதில்: சரி தான் சொன்னபடி நடக்க வேண்டிய, அடிமை நிலையில் இருக்கிறவார்கள்தான் இந்தப் பயிற்சியை ஏற்பார்கள் என்று அவரே தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. கல்லுடைக்கச் சொன்னால் உடைக்க வேண்டியவர்கள் இதைச் செய்ய மாட்டார்களா என்ன? கலை, கைதி சங்கமம்!

(துக்ளக் 3.2.2010)

கிராமியக் கலைகள் என்றால் இந்த மண்ணுக்குரியது. தமிழர்களுக்குரியது. அதனை அழித்துவிட்டு அதன் மேல் ஆரியப் பார்ப்பனக் கலாச்சார சங்கதிகள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. ஆத்திரம் வராதா அக்கிரகார சிகாமணிகளுக்கு?

ஆத்திரத்தை ஏதோ ஒரு வகையிலே வெளியேற்றாவிட்டால் அவாளுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடுமே. அந்தப் பாணிதான் சோவின் பதிலும்.

சரி, அவர் விவாதப்படியே வருவோம்.

கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்னபடி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்னபடி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?

கலை - சதி - சங்கமம் என்று இவாள் சொல்லும் முறை கிராமியக் கலையைக் கொச்சைப்படுத்தும் மேல் ஜாதி ஆணவச் சிந்தனைப் போக்கு என்பதை உணர வேண்டும். சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியக் கிருஷ்ணனைப்பற்றி நாட்டியம் ஆடினால் தானே அவாளுக்கு இனிக்கும்!

*******************************************

கேள்வி: ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் துணிந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்களே! பெண்களின் துணிச்சலை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதே?

பதில்: ஒரு வியப்பும் இல்லை. பேசாமல், ஆண்கள் வாங்குகிற லஞ்சத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரலாம். அது பெண்மைக்கும் பெருமை; நாட்டிற்கும் கவுரவம்; சமநீதி; சம உரிமை... எல்லாம்.

(துக்ளக் 3.2.2010 பக்கம்13)

எப்பொழுதுமே பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் குறியாக இருப்பவர்தான் இந்த சோ ராமசாமி. காரணம் அவாளின் மனுதர்மச் சிந்தனை.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)

இந்த மனுதர்மத்தை அடேயப்பா, எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறார் இந்த சோ.. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற சோவின் தொடரைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். அவாள் வீட்டுப் பெண்களையும் இப்படி ஆபாசமாகத்தான் நடத்துவார்கள் போலும்!

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்ணுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையைக் கொச்சைப்படுத்துவதற்காகவே லஞ்சம் வாங்குவதில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமே என்று பேனா பிடிக்கிறார்.

பெண்களையும் மட்டம் தட்ட வேண்டும் இடஒதுக்கீட்டையும் கொச்சைப்படுத்த வேண்டும் ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்ற அக்கிரகாரக் கீழ்ப்புத்திதான் சோ வின் இந்தப் பதிலில் வழிகிறது.

---------------நன்றி:- விடுதலை” ஞாயிறு மலர் 6-2-2010

3 comments:

தஞ்சாவூர்க்காரன் said...

பார்பீனியம் அதிகமாக உள்ள துக்ளக்கை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.அப்போதுதான் வெறும் சாம்பாரும், தயிர்சாதமும் திண்ட (FUCK)"சோ"க்களுக்கு உரைக்கும்.

விஜய் said...

//கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்னபடி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்னபடி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?//

நல்ல பதிலடி...

//படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)//

(மேற்கோள் காட்டும் அளவிற்கு) நாத்திகர்கள் படித்த அளவிற்கு வேதோபனிஷத்துக்களை இன்றைய ஆத்திகன் படிப்பதில்லை! கண்மூடிகளாய் செயல்பட்டு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்!

நல்ல பதிவு... நானும் ஒரு பிராமணன், ஆத்திகனும் கூட (என்று இங்கே சொல்லிக்கொண்டால் என் பாராட்டுக்கு மதிப்பு கூடும் என்று நினைத்து சொல்லிக்கொள்கிறேன்!)

Inside Story said...

இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட இங்கே அழுத்துங்கள்:
http://www.clixofchange.com/index.php?ref=kaviyan