Search This Blog

31.1.08

மோடிக்கு பதிலடி

கேள்வி: `மனித மலத்தை சுமந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மோடி சொன்னது பற்றி?

பதில்: தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழக சட்டமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, `தேவதாசி முறை கலாச்சார அடையாளம், நம் பண்பாடு, அதை ஒழிக்கக் கூடாது என்றார்.

கோபமாக எழுந்த முத்துலட்சுமி ரெட்டி `இத்தனை நாள் அந்த கலாச்சாரத்தை நாங்கள் சுமந்தோம், கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்கள் சுமக்கட்டும் என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார்.

மோடிக்கும் அதே பதில்தான். மோட்சம் கிடைப்பதற்கு நீங்களும் கொஞ்ச காலம் மலம் சுமந்து பாருங்களேன் .

-----------"குமுதம்"-30.1.2008 இதழில் அரசு பதில்கள் பகுதியிலிருந்து

0 comments: