Search This Blog

29.1.08

டாக்டர் கோவூரின் சவாலை ஏற்கத்தயாரா?

கடவுள் சக்திக்கு வக்காலத்து வாங்கும் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை மதவாதிகள் எவரும் சந்திக்க முடியாத கோவூரின் சவால்கள் வருமாறு :

1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.

2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.

3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.

4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.

5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.

6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.

7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.

8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.

9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.

10. நீரில் நடந்து காட்டுக.

11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.

12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.

13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.

15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.

16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.

17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.

18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.

19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.

20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

21. ஜோதிடமும், கைரேகை சா°திரமும் விஞ்ஞான ரீதியிலானவை என்று உரிமை பாராட்டி ஏராளமான ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி வரும் ஜோதிடர்களும், கைரேகை வல்லுநர்களும் பின்வரும் சவாலை ஏற்பார்களா? மிகச் சரியாக அட்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றோடு கணிக்கப்பட்டு தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லத கைரேகை பதிவுகளிலிருந்து இவை ஆண்களுடையன, இவை பெண்களுடையன, இவை இறந்தவர்களுடையன, இவை உயிரோடு இருப்பவர்களுடையன என்று அய்ந்த விழுக்காடு பிழைக்குட்பட்டு தேர்ந்ததெடுத்துக்காட்டுக.

என் சவால்களை ஏற்க அற்புதம் செய்பவர்கள் எனப்படுவோர் எவரேனும் முன் வருக. ஏற்ற என்னை வென்று ரூ.நூறாயிரம் பரிசு பெறுக.-டாக்டர் கோவூர்.

தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்ர்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!-டாக்டர். கோவூர்.

0 comments: