Search This Blog

28.5.11

தனி அறையில் உதட்டோடு உதடாக முத்தமிட்ட சாய்பாபாவின் காம லீலைகள்!

சாய்பாபாவின் மறுபக்கம் 3

இந்தியாவில் தற்போதைக்கு பாபா மீது குற்றச்சாற்றுகள் எதுவும் பதிவாக வில்லை. அப்படியெனில் பெரும் பாலான பாபாவின் பாலியல் ஒழுங்கீனங்கள் மேற்கத்திய நாட்டினருடன் மட்டுமே நடந்ததா? அமெரிக்கரான ஜெட் கேயெஹார்ன் இதை மறுக்கிறார்.

பாபா தன்னை 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லும் அவர் மேற்கத்திய இளைஞர்கள் பயமின்றி வெளியே சொல்கிறார்கள். இந்திய சிறுவர்கள் உள் நாட்டிலேயே இருப்பதால் பயத்தில் மூச்சு விடுவ தில்லை; அவ்வளவுதான் என்கிறார். பாபாவிற்கு இந்தியாவெங்கும் செல்வாக்கு இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேற்கத்திக்காரர்களில் கூட ஒருவரைத் தவிர வேறு யாரும் பாபாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வில்லை. எல்லா குற்றச்சாற்றுகளும் இந்திய சட்ட வரம்பிற்கு உட் பட்ட வையாதலால் பாபாவை நீதிமன்றத்துக்கு இழுக்கும் செல்வாக்கு தங்களுக்கு இல்லை என்பதை பாதிக்கப்பட்ட வர்கள் உணர்ந்திருப்பதே காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

தவிர, இந்தியாவில் வழக்கை பதிவு செய்தாலும் ஓரினச் சேர்க்கை வன்முறையை நிரூபிப்பது கடினம். அத்தகைய குற்றம் இ.பி.கோ. பிரிவு 377_இன் கீழ் வரும் என்றும் இதன்படி ஹோமோ செக்ஸூவல் வன்முறை (ஸோ டோமி) உறவு சட்டப்படி தவறு என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது என்று கிரிமினல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் எழுந்துள்ள புகார்களில் எதுவுமே வன்முறை பற்றிச் சொல் லாததால் முறைகேடாக நடந்து கொண்டதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள்.

ஆனால் முன்னாள் சாய்பாபா பக்தர்கள் விடுவதாக இல்லை என் கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டால் நெருக்கடி தாங்காமல் ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பாபாவின் பக்தராக 26 வருடங்கள் இருந்த க்ளென் மெலாய் என்பவர் தற்போது பாபாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி வருகிறார் ஒரு காலத்தில் பாபாவை கடவுளுக்கும் கடவுளாக ஈடுபாடு காட்டி மதித்தேன். இப்போது அவரது முகத்திரையைக் கிழிப்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிறார் உறுதியோடு. ஆனால் உண்மைதான் பிடிபடாமல் நழுவுகிறது.

_ சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து ஆர்தர் ஜே. பயஸுடன்.

சிட்னியைச் சேர்ந்த ஹனஸ் டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார்.

நவம்பர் 12 தேதியிட்ட த சண்டே ஏஜ் என்ற பத்திரிகையில் முதல்முதலில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): நான் அவர் காலைத் தொட்டு வணங்கியபோது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக எழும்பியிருந்த அதைக் காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம்தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளை களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார்.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் பாபா

என்ன நிலை? பாபாவுக்கு எதிராக க்ரேகர் காவல் துறையில் புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை. ஆசிரம நிருவாகமோ பதில் சொல்ல மறுக்கிறது.

ஜேன் சேத்தி ம்யூனிச்சுக்குக் குடி யேறிய ஜெர்மானியர். பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர், 18 தேதியிட்ட ஃபோகஸ் என்ற இதழில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி):

ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச் சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். பயப்படாதே, இது நல்ல வாய்ப்பு, இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தப் பாகத்தில் கை வைத்தார். ஆனால் என்னுடைய அது எழும்பவில்லை. காரணம் எனக்கு செக்ஸில் ஆர்வ மில்லை.

நான் மிகவும் வெறுத்துப் போனேன். அது ரொம்ப தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுய ரூபத்தைப் புரிந்துகொண்டேன்.

என்ன நிலை: சேத்தி ம்யூனிச்சில் பாபாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய் திருக்கிறார். ஆசிரமம் இந்த விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

ஸ்வீடனின் கானி லார்சான் 21 வருடங் களாக பாபா பக்தர். அவரது குற்றச்சாற்றுகளின் ஒரு பகுதி லண்டன் த டெய்லி டெலிகிராப் நாளிதழில் அக்டோபர் 20 அன்று வெளியானது.
குற்றச்சாற்றுகள் (இந்தியா டுடேயிடம் கூறியபடி):

பாபா என்னை பல தனிப்பட்ட நேர்காணலுக்காக அழைத்தார். அவர், தான் கடவு ளென்றும் எனது பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்ன போது நம்பினேன். ஆனால் அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசிவிட்டார். மைதுனம் செய்துவிட்டார்.

அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈடுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படி கேட்டபோது நான் பின்வாங்கினேன்.

நிலைமை: முறையான புகார் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரமம் வாய் திறக்க மறுக்கிறது.

நிழல் ஆட்டம்


சர்ச்சை என்பது சாய்பாபாவுக்கு இன்னொரு பெயர். ஒன்றுகூட நிரூபிக் கப்படவில்லையென்றாலும் அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ளன.

கோடையில் ரத்தக்களரி: 1993 ஜூன் 6 அன்று பாபாவின் ஆசிரமத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பறந்தன. அசம்பாவிதத்தால் நான்கு பக்தர்கள் கொல்லப்பட்டார்கள். அது தெய்வீக மனிதன்மீதான கொலை முயற்சி என்று கூறப்பட்டது.

இதுபற்றி ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போலீஸ் ஏன் நால்வரைக் கொன்றது? நீண்ட கால பக்தர்கள் 4 பேர் திடீரென தங்கள் கடவுளுக்கெதிராகத் திரும்பிய தேன்? 4 கொலையாளிகளும் பாபாவின் அறையில் கத்தியோடு நின்றிருந்ததால் தங்களுக்கு வேறு வழியில்லை என்று போலீஸ் தமது செயலை நியாயப் படுத்துகிறது. வழக்கம்போல் பாபா மவுனம் சாதித்தார்.

புத்தகப் பதிவு


1980_களின் நடுவில் தான் ப்ரூக் அவதார் ஆஃப் நைட் நூலை எழுதி னார். பாபாவின் 20 வருடங்களுக்கு முந்தைய காம லீலைகளை அவர் விவரித்திருந்தார். பாபாவின் பக்தர்கள் அதை மறுத்தார்கள். பணம் சம்பாதிக் கும் குறுக்கு வழி என்று குறிப்பிட் டார்கள்.

இப்போது அதன் இரண் டாம் பதிப்பு வந்திருக்கிறது.

பாபாவுக்கு எதிராக செக்ஸ் குற்றம் சுமத்தும் முன்னாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. வெளி நாட்டவர்கள் மட்டுமின்றி இந்தியர் களும்கூட அவ்வாறு புகார் கூறுகி றார்கள். ஆனால், புகார் கூறும் யாரும் இந்தியாவில் வசிக்கவில்லை.

எந்தக் குற்றச்சாற்றுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.
(இந்தியா டுடே டிசம்பர் 6, 2000)

எவ்வளவு அருவருப்பான மனிதத் தன்மைக்குச் சற்றும் பொருந்தாத கேவலமான மனிதர் இந்தப் பேர் வழி என்று உணர்ந்து கொள்ள இன்னும் தயக்கமா?

ஒழுக்கத்தைப் பாழடிக்கும் பக்தி, அறிவை அபகரித்து அறியாமைக் குழிக்குள் நம்மைத் தள்ளும் பக்தி போதை யிலிருந்து விடுபட வேண்டாமா? ஆண் சேர்க்கையில் ஈடுபடும் அசல் அய்யப்பன் - இந்த சாய்பாபா

எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரச்சாரம் ஒருபுறம்; மற்றொருபுறம் ஆணை ஆணே விரும்பி குழந்தை பெற்றதாக அரி _ அரன் _ புத்திரன் அய்யப்பன் என்ற ஆபாச அய்யப்பன் பூஜை அவனி எங்கும்! புட்டபர்த்தி சாய்பாபா என்ப வர் நிஜ அய்யப்பனாகவே _ அதிலும் உலக மயம், தாரளமயம், (புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு உரியதான) தனியார் மயம் என்பதுபோல வெளிநாட்டு ஆசாமி தேர்வு செய்து தேசிய , பன்னாட்டு அமலாக்கம் செய்து வருகிறார் போலும்!

இந்தியர்கள் என்பவர்களின் கடவுள் அவதாரங்களும், குரு, சிஷ்ய பாரம் பரியமும் எப்படிப்பட்ட யோக்கியதை உடையவர்களாக இருக்கின்றனர் என்று உலகம் நம்மீது காரித் துப்பாதா என்பதை உண்மையாக தேச பக்தி மனித பக்தி கொண்ட மக்கள், விருப்பு, வெறுப்பின்றி சிந்தித்து பக்தி போதை யிலிருந்து தெளிவு பெறவேண்டும்.

ஆரிய காட்டுமிராண்டித்தனம்


ஆண் ஆணுடன் இச்சை கொண்டு தனது காம விகாரத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்கு புட்டபர்த்தி சாயிபாபா என்ற பெயரில் உலவும் பழைய சத்திய நாராணராஜு அர்த்தமுள்ள இந்து மதத்தினையேகூட முன் மாதிரியாகக் காட்டக் கூடும்.

இதோ சில ஆதாரங்கள்:


1. சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து வந்த இவன் இந்திர சபை வினோதங் காண் பதற்கென்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியில் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் _ இதனால் சுக்ரீவன் என்பவன் பிறந்தான்.

2. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தார்கள்.

3. தவ வலிமை மிக்க பஸ்மாசுரன், சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது மகா விஷ்ணு, மோகினி வேடம் பூண்டு பஸ்மாசுரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்து விஷ்ணுவை உயிருக் குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண்புணரும் வழக்கம் ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகள் என்பது புரியவேண்டும்.

திருவண்ணாமலையில் ஓர் ஏமாற்றுப் பேர்வழி!


இன்னொரு செய்தி: திருவண்ணா மலை விசிறி சாமியார் என்ற ஒரு வடநாட்டுச் சாமியாரிடம் ஓடும் நீதிபதிகளும், நிருவாக அதிபதிகளும். தலைவர்களும், டாக்டர்களும், ஏராளம் ஏராளம்! அவருக்குப் புற்றுநோய் வந்து, அவர் தனியார் மருத்துவ மனையொன்றில் அறுவைச் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

அவர் திரும்பும்போதும், அந்த மருத்துவமனைக்கே பக்தர்கள் படையெடுத்து அவரிடம் ஆசி வழங்கக் கேட்டு, ஆசி பெற்றார்களாம்.

தன்னுடைய நோயையே அவர் குணப்படுத்த முடியாமல்தானே, அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ மனைக்கு வந்தார். அவரிடம் உள்ள சக்தி புரியவில்லையா?

மழைக்காகக் கழுதைக்கும் -
கழுதைக்கும் கல்யாணமாம்!


மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் செய்திடும் மக்கள் திருமணத் தடையின்றி பெண் கிடைக்க, கல்யாணி கழுதையைத் தேடி ஓடிட ஆலோசனை கூறும் கேரள ஜோதிடம், தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியமே மழை வேண்டி யாகம் மற்றும் சில தலைவர்கள் தங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய யாகம் என்பதெல்லாம் எவ்வளவு கேலிக் கூத்து!

21ஆம் நூற்றாண்டில் காலடி வைக்கவேண்டிய நாம் மீண்டும் இரண்டாம் நூற்றாண்டுக்கல்லவா பின்னோக்கிச் செல்லுவதாக உள்ளது! மகாமகா வெட்கக்கேடு!


மக்களே சிந்தியுங்கள்!

ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், அறிவுக்கும் கேடு பயக்கும் பக்தி தேவையா? சிந்தியுங்கள் _ எனதருமை தமிழ்ப் பெரு மக்களே!

---------------------திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய
சாய்பாபாவின் மறுபக்கம் எனும் நூலிலிருந்து

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது" என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்

தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லசயம் செய்யாமல் ஒரே அடியாய் "சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்" என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத்தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்.

இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?

"மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்" என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?

அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை

தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோக்ஷத்தில் இடம்" தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு" மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்

அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி "விடுதலை" பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள "ஒரு ஒழுக்கங் கெட்ட" பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் விஷயமாய் "ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு "தவசிரேஷ்ட" பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது.

ஹிந்திப்போர் நோக்கம்

இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின் தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

1922-ல் ஆச்சாரியார்

இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.)

அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜணலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீயத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது "பார்ப்பன ஆதிக்கம் நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா" என சொன்னதோடு "அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்" என்றும் சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் "ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அரிய சந்தர்ப்பம்

ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது. அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்.

சென்னை எதிர்ப்பு

சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் - கூடிய சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்.

இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர் விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.

பண உதவி

பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம் வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.

எதிர்ப்பு முறை

ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும். அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும். தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்!! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!!

---------------"குடி அரசு" - தலையங்கம் - 15.05.1938

27.5.11

தற்காலம் நமக்கு வேண்டியதென்ன? - பெரியார்



தற்காலம் நமது நாட்டிற்கு வேண்டியது. வர்ணாசிரமமாகிற மக்களுக்குள் (ஆண்டானடிமை உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாடுகளை விருத்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப் பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற சமத்துவக் கொள்கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக் குள் பரப்பி வரவேண்டுமா? ஆகிய இந்த இரண்டு கேள்விகளைப் பற்றி நமது மக்கள் நிலைமையையும், அந்தஸ்தையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் அந்தஸ் தையும் கவனித்துப் பார்த்தால் நம் நாட்டின் மக் களுக்கு இத்தருணத்திற்கு வேண்டியது எது என்பது விளங் காமற் போகாது.

ஆகையால் வர்ணாசிரம ஒழிந்த சமத்துவக் கொள்கையாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும். ஏனெனில். நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பிடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய்வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், ஜாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தற்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந் தேயாகும். உதாரணமாக வர்ணாசிரமப் பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லாத) கிறிஸ்தவ, முகம்மதிய, புத்த என்கிறவைகளுக்குட்பட்ட ஜன சமூகத்தார் இன்றைக்கும் அரசாட்சி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்று மைக்குட்படாத முன் சொன்னவர்களால் ஆளப்படு வோர்களாக வாழ்விலும், பேச்சிலும், எழுத்திலும் நடத்தை அனுபவம் முதலியவைகளிலும் சுதந்திரங் களை இழந்து அடிமைகளாகவும் அறியாமையில் சூழப்பட்டவர்களுமாக வாழ்ந்து வருவது நிதர்சன மாகப் பார்த்து வருகிறோம். இன்னமும் சொல்லப் போனால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரிக முதிர்ச்சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதேயில்லாமல் ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த்தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு இல்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடுகூட ஒழிந்து யாவரும் சமமென்பதைக் காண்கிறோம்.

இப்படியாக மேன்மேலும் நாகரிகம் விருத்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலையடைந்து சமுகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்திகளுக்கு முள்வேலி இட்டது போலுள்ள தற்கேற்றபடியாகிற வர்ணாசிரம தர்மம் இருக்க வேண்டுமென்றும் அதன்பயனாக ஒரு சிலர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டுவிட்டார்கள், அவர் களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணாசிரமத் துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டுமென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களாலியன்றவைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வஸ்துவென்று சொல்லப்படுகின்றதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவராயினும் அவரை நம்நாடு தற்போதிருக்குமிவ் வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பகிஷ்கரிக்கலாமா? வென்பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்.

இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக் கிறோமா வென்றால் வர்ணாசிரமங்களை நிலை நாட்டி வைப்பதற்கென்றே பரம்பரையாக இருந்து வருபவர்களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச்சாரியாரும் கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார், உதாரணமாக,

பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

அதாவது காந்தி ஒரு இந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லையென்று வேதங்களில் 259 ஆதாரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆராதனையொழிப்புக் காரரான ஆர்ய சமாஜத்தாரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஆலய பிரவேசம் வேண்டுமென பலத்த பிரச்சாரம் செய்கிறார் களென்றும், மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன். என் அபிப்பிராயம், அப்படித்தான் செய்ய வேண்டு மென்பதுதான் வீரர்கள் வழக்கமென்றும் இயேசு கிறிஸ்து, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தியோ வருணா சிரமம் உண்டு, ஆதி திராவிடருக்குக் கோவில் பிரவேச உரிமையும் வேண்டும் என்று சொல்லுவது வீரர் வாழ்க்கையாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக்கூடாதென்றும், கூறி மேலும் குறிப்பிட்டதாவது நாஸ்திகத் தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையைப் பிரச்சாரம் செய் திருக்கிறார்கள். பூரி சங்கராச்சாரியார் அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார் என்பதாகும்.

மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப் போகிறார்களோ, அத் திருக்குலத்தடியார்களையே ஹரிஜனங்களென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னையிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலையாள நாடுகளிலும் விருதுநகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்கத் தாங்கள் வேண்டுவதில்லை. எண்ணாயிரம், பதினாயிரம், லட்சம் கையெழுத்திட்ட அறிக்கைப் பத்திரங்களை யும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக் கிறது. இது மட்டுமல்ல இன்னும் இப் பெரியாருக்கு இவர் செல்லுமிடங்களிலெல்லாம் பகிஷ்காரங்களும் நிகழுமென்பதற்கு அநேக அறிகுறிகளும் காணப் படுகின்றன.

நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டிருக்கிற இப்பெரியார் பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்விதச் சுற்றுப் பிரயாணங்களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல்களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டுவது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

------------------- தந்தைபெரியார் - “ புரட்சி” - தலையங்கம் - 04.02.1934

26.5.11

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் ஏன்? - புரட்சிக்கவிஞர்

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்


தமிழருக்கு புரட்சி மனப்பான்மை அவர்கள் தம் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும்; ஆகையால் தமிழர் தம் பகையால் அடையும் எவ்விதத் தொல்லைகளையும் நான் வரவேற்கின்றேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டு களாகவே தமிழர் சீரழிந்து வருகின்றார்கள்; தம் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்பதை அவர்கள் அறிந்து வந்தும் அவர்களின் மிதமிஞ்சிய ஆத்திகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடைய வைத்தது.

அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்தற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் _ இந்த நோயில் தமிழர்களை ஆதி தொடங்கியே அமிழ்த்தி வந்தனர் தமிழர்களின் எதிரிகள்;

ஆதி முதல், தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிட நேரம் வஞ்சகத்தால் செல்வாக்கைடந்த ஒரு மூளை திரைமறைவில் வேலை செய்யும்! அதன் விளைவாகப் பகிரங்க ஏதேச்சதிகாரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும், அரச வணக்கம் _ வறுமையிற் செம்மை _ விதி இந்த நம்பிக்கை! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற ஜபம்! நெஞ்சு , பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக்குச்சி!

சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர் மேலும், ஏமாற்றுகிறவர் மேலும் ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறியச் சிறிது வெளிச்சமும் தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபம் ஏற்படலாயிற்று.

இப்போது தமிழர் அத்தனை மோசமில்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும் இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான்!

தமிழரின் எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு:

அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவை இன்றைக்கும் தமிழன் சொத்து.

அந்தக் காலத்தில், தமிழனின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல் கொண்டு போனதாகத் தமிழர் களைக் கொண்டே சொல்லி வைக்க, அதை நம்பினார்கள்.

தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு, 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து வெற்றி பெறவில்லையா? தமிழர்களைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்ற நினைத்ததில் இன்றுவரை வெற்றி காண வில்லை.

தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நம் சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றி மேல் வெற்றி.

சில ஆண்டுகளாகக் கூடத் தமிழருக்குத் தைத்த குல்லாய்களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக்கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள்.

காசைப் பிடுங்கிக்கொண்டு காற் செருப்பைக் காட்டும் ஆளுக்கு. எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம் என்று சொல்லும் இருட்டில் தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்.

வந்தால் அரசபோகம், இல்லாவிடில் சென்னை கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக் கொரு பித்தளைச் செம்பு பார்ப்போம் ஒரு கை! எதிரிகளின் இந்த சிந்தனைகள் காலந்தவறியவை என்பது எனது அபிப்பிராயம்.

தமிழரை வஞ்சித்து வஞ்சித்து அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள், இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் இந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஒரு புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனிமனிதன் செத்துப் போவான்; ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா: எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம். எனது இன்பக் கனவு!

கனம் எஸ். இராமநாதன், கனம் சுப்ராயன், வரதராசலு, தோழர் திரு. வெ. கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் தங்களைத் தமிழர் என்று சரியாகவே நினைத்திருந்த காலம் உண்டு. அப்போது அவர்களால் தமிழர்கட்கு அதிக நன்மை யில்லை.

நல்ல வேளையாக இப்போது தம்மைத் தமிழரின் எதிரிகள் என்று தப்பாக நினைக் கிறார்கள். இந்தக் காலத்தில் தான் அவர்களால் தமிழர்கட்கு விசேட நலன்கள் ஏற்படப் போகிறது. ஏனெனில் இப்படிப் பட்ட கனவான்கள் தமிழர்களின் எதிர்க்கட்சியில் இல்லாவிடில் தமிழரின் உயிராகிய தமிழைக் கொல்லத் தமிழரின் இயற் பகை நாயன்மார்கட்கு ஆணவம் தோன்றியிருக்குமா? அந்த ஆணவம் இல்லாவிடில் தமிழர் மனம் துடிக்க வழியேற்படுமா?

துடிக்காத தமிழர்கள் ஒன்று படுவார்களா? நமது கனம் முதன் மந்திரியார் தமிழரின் உயிரின் மேல் தமது ஆக்ஞா சக்கரத்தை விடுவதையும் மேற்படி இந்தியைக் கட்டாய மாக்குவதையும் நான் வரவேற் கிறேன்; ஆனால் அவர் ஓர் அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண் டதாக நினைக்கலாம்.

ஏற்றசமயம் வாய்த்த போது தமிழ்த் தன்மையின் ஆணி வேரைக் களைந்துவிட வேண்டும் என்பதும் அவர் மதத்தின் ஒரு கிளை. அவ்வாறு ஆணி வேரைப் பறிப்பதன் மூலம் அடியோடு தமது செல்வாக்கைப் பறிகொடுத்து விடலாகாது என்பதும் அம்மதத்தின் மற்றொரு சாகை!

கனம் ஆச்சாரியார் ஆண் டார், அனுபவித்தார். பிள்ளை குட்டிகளைப் பெற்றார். கிருகஸ்தாச்சிரமம் திருப்தி கரமாகத் தீர்ந்தது. இனி வானப்பிரஸ்தாஸ்ரமம், பற்றற்ற இடம்! தியாகத்திற்கு ஏற்ற சந்தர்ப்பம்!

அவர் சரியாக நினைப்பதா யிருந்தால்,

விரோதிகளை அழிப்பதன் மூலம் எதுவரினும் வருக என்ற முடிவுக்குத்தான் அவர் வந்தாக வேண்டும். தமிழகத்தில் தமது செல்வாக்கை எண்ணி எத்தனை தியாகம் புரிந்தார்கள் ஆரியர்கள். ஆரிய ரத்தம் மாறிற்றா?

கடித்துக் குடிக்கும் காப்பி ஏனத்தைக் கழுவும் ஆளும் இன்னும் ஆரிய ரத்தம் இருப்பதாகக் கூறுகிறான்! முதல் மந்திரியார் தமது லட்சியத்தில் பின்னடைவார் என்று நான் வருந்தவேயில்லை.

-----(அன்றைய சென்னை ஆட்சியில் ராஜாஜி, இந்திமொழித் திணிப் புச்சட்டம் கொணர்ந்த போது எழுதப்பட்டது.) ------


------------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்(குடிஅரசு 10.10.1937 இதழில் வந்தது)

ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன்,


குற்றாலத்தில் பொதுக் கூட்டம்

தோழர்களே!

இன்று இங்கு பேசிய தோழர்களான பொன்னம்பலம், ஜீவானந்தம் ஆகியவர்கள் வெகு விளக்கமாகவும், எழுச்சியாகவும் பேசியதைக் கேட்டீர்கள். அவர்கள் பெரிதும் கடவுள், மதம், ஜாதி, செல்வவான்கள் ஆகிய தன்மைகள் ஒழிபட வேண்டும் என்று கருத்துப்படப் பேசினார்கள். இப்படிப் பேசியது உங்களில் அநேகருக்குப் பிடிக்காமலிருக்கலாம். சிலருக்கு மன வருத்தமும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர்கள் உங்களுக்கு வெறுப்போ, அதிருப்தியோ ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையையும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து இன்று நடைமுறையிலுள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோச்சனமும், சாந்தியும் இல்லை என்பதை உணர்ந்து அதற்காகப் பேசினார்களே ஒழிய வேறில்லை.

என்னைப் பொருத்தவரை நானும் அவைகள் ஒழியப்பட வேண்டும் என்று சொல்வதோடு அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லுபவன். ஏனெனில் அரசியலும், அரசியல் கிளர்ச்சிகளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.

இந்தப்படி சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.

இந்த தேசத்து கடவுள்களின் யோக்கியதைகளை நீங்கள் சிறிது யோசித்துப் பாருங்கள். அவைகள் தானாகவே உண்டானவைகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாலேயே உண்டாக்கப்பட்டவைகளாகவே இருந்தாலும் சரி அவைகளால் நமது நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் எவ்வளவு கேடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

இந்த நாட்டுப் பொருளாதாரக் கேட்டுக்கும் கல்வி அறிவற்ற தன்மைக்கும் யார் ஜவாப்தாரி? என்பதை யோசியுங்கள்.

கடவுள்

இந்தக் கடவுள்கள் நம் நாட்டுச் செல்வங்கள் எவ்வளவை பாழ்படுத்துகின்றன. தென்னாட்டு கோவில்களுக்கு வருஷம் 2 1/2 கோடி ரூபாய் வருமானம். இது சர்க்கார் கணக்கு. அதற்காக மக்களுடைய பணம் செலவாவது மேற்கொண்டு 4, 5 கோடி ரூபாயாக இருக்கலாம். உங்கள் திருநெல்வேலி, மதுரை, ராமனாதபுரம், தஞ்சை ஆகிய ஜில்லாக் களை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் வரும்படிகளும் அதற்காக மக்கள் செய்யும் செலவுகளும் என்ன பயன் அடைகின்றன? இவ்வளவு பணம் பாழாகியும் இந்த நாட்டில் 100க்கு 8 பேர் தானே கையெழுத்து போடத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள். 100க்கு 75 பேருக்கு மெய் உழைப்பாளிகள் தரித்திரர்களாய் இருக்கிறார்கள். இத்தனை கோடி ரூபாய் பாழாகும்படியாக இருந்து கொண்டு, அனாவசியமான போக போக்கியத்தை அனுபவித்து வரும் கடவுள்கள் இந்த நாட்டு மக்களில் 100க்கு 92 பேர்களை தற்குறிகளாக வைத்து இருக்கின்றன என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்கள் நன்றி கெட்டவைகள் அல்லவா என்று கேட்கின்றேன். கல்விக்கும், கடவுளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்களுக்காக இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவாகும்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். வீணாக பகுத்தறிவும், யோசனையும் இல்லாமல் "சுயமரியாதைக்காரர்கள் கடவுளை வைகிறார்கள்" என்று சொல்லுவதில் பயன் என்ன? இந்திய நாட்டையே இந்தக் கடவுள்கள் தானே இக்கதியாக்கி இருக்கின்றன. கடவுள்களுக்கு பெண்டு பிள்ளை, வீடு வாசல், சொத்துக்கள், நகைகள், தாசி வேசிகள், வைப்பாட்டிகள் எல்லாம் எதற்கு? இதைப் பார்த்துத் தானே ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளுகிறான். நமது கடவுள்களுக்கு உர்ச்சவம் என்பதெல்லாம் பெரிதும் வருஷம் தோறும் கல்யாணம் செய்வது என்பதற்கு ஆகவே நடைபெறுகின்றன. கடவுளுக்கு கல்யாணம் எதற்கு? சென்ற வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று. ஏதாவது தவரி விட்டதா? அல்லது எந்தக் கோர்ட்டின் மூலமாவது கல்யாண ரத்து ஆகி விட்டதா? இது சிரிப்புக்கிடமான கல்யாணமல்லவா? இந்தக் கல்யாணங்கள் சுயமரியாதை முறைப்படி நடப்பதாயிருந்தால் நமக்கு கவலையில்லை. அப்படிக்கில்லாமல் எவ்வளவு செலவு எத்தனை கால மெனக்கேடு, எத்தனை பேர்களுக்கு கஷ்டம். பெரிய ராஜா வீட்டுக் கல்யாணத்துக்கு மேல் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் இந்தக் கடவுள்கள் எல்லாம் ஒழியாமல் எப்படி மனிதன் சீர்பட முடியும்? எப்படி அறிவு பெற முடியும்? எப்படி இந்த நாட்டு செல்வமும், நேரமும் பயனுள்ள காரியத்துக்கு உபயோகப்படுத்தப்பட முடியும்? கோபிப்பதில் பயன் என்ன? எங்களை நாஸ்திகர்கள் என்று சுலபமாக சொல்லிவிடலாம். மற்ற நாட்டார்கள், மற்ற மதக்காரர்கள் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் பார்த்து நாஸ்திகர்கள், அஞ்ஞானிகள் என்று சொல்லுவதோடு மாத்திரமல்லாமல், காட்டுமிராண்டிப் பிராயமுள்ளவர்கள் என்று சொல்லுகிறார்களே. யாருக்காவது மானமோ, வெட்கமோ இருக்கின்றதா? எந்தக் கடவுளாவது இதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துவிட்டதா? அல்லது அவர்களை இப்படிச் சொல்ல வேண்டாம் என்றாவது சொல்லி வைத்ததா?

ஒன்றும் இல்லையே. ஆஸ்திகம், நாஸ்திகம் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் கையில் வலுத்தவன் கதையாகத்தானே இருக்கின்றது. ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத்தானே மக்கள் நடந்து காட்டுகின்றார்கள். ஆதலால் தோழர்களே இந்தக் கடவுளையும், இந்த ஆஸ்திகத் தன்மையையும் ஒழிக்கப்படாமல் மனிதன் மனிதத்தன்மையை அடைய முடியாது என்பது எங்களது அபிப்பிராயமாகும். மற்றும் மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக் கொண்டு, உழைத்தவனை தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும் கடவுள் செயல் என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளையாவது ஒழிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கின்றேன்.

ஆகவே நீங்கள், சுயமரியாதைக்காரர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனாவசியமாய் உங்களுக்கே புரியாத வார்த்தையாகிய கடவுள் என்கின்ற வார்த்தையைக் கட்டி அழுது கொண்டு "எல்லாம் இருக்கட்டும். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?" என்கின்ற அசட்டுத்தனமும், முட்டாள்தனமுமான கேள்வியை கேட்பதில் உங்கள் புத்தியை செலவழிக் காதீர்கள். அதனால் எங்களை மடக்கி விடலாம் என்றோ எங்களை பழிப்புக்கு உள்ளாக்கி விடலாம் என்றோ கருதி விடாதீர்கள்.

உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

நீங்கள் எப்படிப் பிறந்திருந்தால்தான் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

உலகில் உள்ள வஸ்துக்கள், உலகில் நடக்கும் செய்கைகள் எல்லாம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, எப்படி நடைபெறுகின்றது என்பதை எந்த மனிதனாவது அறிந்திருக்கின்றான் என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா? அது யாரால் எப்படி நடந்தால்தான் என்ன?

உங்களுக்கும் எனக்கும் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது. இன்று பாடுபட்டாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிய வேண்டும் என்று ஆசைபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் சமுத்திரத்து அலைகளையும், மணலையும், மழைத் துளிகளையும் எண்ண ஆசைப்படும் மூட சிகாமணி களுக்கே ஒப்பாவார்கள்.

மக்கள் படும் கஷ்டங்கள், நமது கண்களுக்குத் தெரிகின்றன.

மற்ற மக்களால் நாம் இழிவும், துன்பமும் அனுபவிப்பதை நாம் உணர்கின்றோம். இதுவே முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தாலானாலும் சரி, இவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் கடவுள் உள்பட எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் சொல்லுகின்றோம்.

இது சரியா? தப்பா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். ஆகுமா? ஆகாதா? என்பதைப் பற்றிப் பிறகு யோசிப்போம்.

மதம்

கடவுளைப் போலவே நமது மதங்களும் இருந்து வருகின்றன.

ஒரு மதத்துக்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன என்றால், "அவைகள் இருக்க வேண்டியதுதான்" என்றால், அப்படிப்பட்டவர்கள் ஒரு கடவுளுக்கு மேற்பட்ட கடவுள்களையும் ஒப்புக் கொண்டோ, அனுமதித்தோ தான் ஆக வேண்டும்.

வேண்டுமென்றால் ஒரு மதத்தைப் பார்த்து மற்ற மதக்காரன், "உன்னுடைய மதம் மதமல்ல. என்னுடைய மதம் தான் உண்மையான மதம். கடவுளால் அனுப்பப்பட்ட அல்லது சொல்லப்பட்ட மதம்" என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஒரு மதக்காரனின் கடவுள் போலவேதான் மற்ற மதக்காரனின் கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

அவற்றிற்கு ஏதாவது பரீக்ஷைக் கருவி உண்டா?

ஒருவனுடைய கடவுளின் குணம் போலவே மற்றவனுடைய கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? அதற்கு ஏதாவது நிபந்தனை உண்டா? ஒரு கடவுளை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உரிமை இருந்தால் பல கடவுள்களை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்க முடியும்? யாருக்கு அதிகாரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?

ஆதலால் ஒரு கடவுள் மதக்காரனே மகா உத்தமமானவன் என்றும் பல கடவுள் மதக்காரன் மோசமானவன் என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

நாம் இங்கு மதத்தைப் பற்றி கவனிக்க வேண்டியதெல்லாம் எந்த மதமாவது மக்கள் எல்லோரையும் இன்பமாய், செழுமையாய், சமத்துவமாய் வாழ வைத்திருக்கிறதா? வாழ வைக்க முடிந்ததா? என்பதுவே யாகும்.

உலகிலுள்ள எந்த மதத்தை அனுசரிக்கின்ற மக்களுக்குள்ளும், எந்த மதத்தை அனுசரிக்கிற தேசத்திற்குள்ளும், ஏழை பணக்காரன், எஜமான் அடிமை, உழைப்பாளி உழைப்பான் பயனை அனுபவிக்கிறவன், பிரபு பிச்சைக்காரன், வித்துவான் முட்டாள், படித்தவன் தற்குறி, மெத்தை வீட்டில் இருப்பவன் ஓட்டைக் குடிசைகூட இல்லாதவன், சுகாதார வசதி உள்ளவன் சுகாதார வசதியில்லாதவன், மேல்மகன் கீழ்மகன், உழைக்காமல் சாப்பிடுபவன் உழைத்தும் பட்டினி கிடப்பவன், அளவுக்கு மிஞ்சி வேலை செய்து சம்பாதித்து பணம் மீத்து வைப்பவன் வேலையே இல்லாமல் திண்டாடுகின்றவன் என்பது போன்ற வித்தியாசங்கள் இல்லை என்று யாராவது சொல்லக் கூடுமா. இது முன் ஜன்ம கர்ம வினை என்றால் என்ன? அல்லது கடவுள் சித்தம் என்றால் என்ன? கஷ்டம் வித்தியாசம் எல்லாம் ஒன்று போல் தானே இருக்கிறது?

ஒரு மதத்தில் "ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசமில்லை" என்று சொல்லப்படுமானால், மற்றொரு மதத்தில் "கழுதைக்கும், மகான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா உள்ளத்திலும் நானே ஆத்மாவாய் இருக்கிறேன்" என்று கடவுளே சொன்னதாக அவர்கள் வேதங்கள் வேதாந்தங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட சிங்காரப் பேச்சுகளால் பயனென்ன?

இவற்றால் எல்லாம் மக்களை மக்கள் ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய ஒரு வேளைக் கஞ்சிக்குப் போட வேண்டிய உப்பு மண்ணுக்குக்கூட உதவாது என்றுதான் சொல்லுவேன்.

நான் அனேக தேசம் பார்த்து இருக்கிறேன், பல மத மக்களையும் சந்தித்திருக்கின்றேன். எங்கும் பசிக் கொடுமை பிச்சைக்காரர் தொல்லை, பணக்காரர்கள் கொள்ளை, ஆண் பெண் பேதம், மனிதனுக்கு மனிதன் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய காரியங்கள் இருந்துதான் வருகின்றன.

இதற்கு எந்த மதமானாலென்ன? பட்டினி கிடப்பவனும், பட்டினி ஆக்குபவனும் இந்து மதத்தின் பேரால் இருந்தாலென்ன? கிருஸ்து மதத்தின் பேரால் இருந்தால் என்ன? இஸ்லாம் மதத்தின் பேரால் இருந்தால் என்ன? பார்சி மதத்தின் பேரால் இருந்தால் என்ன? சீக் மதத்தின் பெயரால் இருந்தால் என்ன? ஆரிய சமாஜ்யத்தின் பேரால் இருந்தால் என்ன? பிரமசமாஜ மதத்தின் பேரால் இருந்தால் என்ன? அல்லது சைவ, வைணவ, ஸ்மார்த்த முதலிய எந்தப் பிரிவு மதங்களின் பேரால் இருந்தால் என்ன? எல்லாம் மக்கள் வாழ்க்கை நிலையை ஒன்றுபோல் தானே நடத்துகின்றன.

இந்துமதமானது ஏழ்மைக்கும் கொடுமைக்கும் "அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயன்" என்றால் மற்ற மதங்கள் "கடவுள் சித்தத்தின் பயன்" என்றுதான் சொல்லுகின்றனவே ஒழிய அதை நான் தீர்த்து விடுகின்றேன் என்னிடத்தில் ஏழை பணக்காரர் என்கின்ற பிரிவு இல்லை என்று எந்த மதமும் சொல்லுவதே கிடையாது. வேண்டுமானால் ஒவ்வொரு சிறு காரியங்களுக்கு ஒவ்வொரு மதம் அனுகூலமாக இருக்கலாம்.

ஒரு மதத்தில் தீண்டாமை இருந்தால் மற்றொரு மதத்தில் பாராமை இருக்கலாம். இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொன்று அனுகூல மானதாக இருக்கலாம். ஆனால் இன்று உலகம் பூராவும் இருந்து வரும் பொருளாதார பேதம், சமூகக் கொடுமை முதலியவைகளுக்கு மதங்கள்தான் அனுகூலமாயும் ஆதரவாயும் இருந்து வருகின்றன என்பதை நான் உணர்கிறேன்.

மதத்தோடு சம்பந்தப்படாத ஏழ்மையும் தரித்திரமும் கொடுமையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எல்லா மதமும் சகல காரியத்தையும் ஆண்டவன் செயல் என்றுதான் சொல்லுகின்றன.

ஆனால் தனக்கு இஷ்டமில்லாத காரியங்களை மாத்திரம் அந்த குறிப்பிட்ட மனிதன் செயல் என்று சொல்லி ஆத்திரப்படுகின்றன.

இப்படிப்பட்ட குளறுபடியான மதங்கள் மக்களுக்கு என்ன பயனைத் தரும்? இது வரையாவது என்ன பயனைத் தந்து வந்தது? ஆதலால் தான் சமதர்மத்துக்கு மதம் விரோதம் என்று சொல்ல வேண்டி வருகிறது.

செல்வவான்

மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் செல்வவான் என்கின்ற தன்மையும் ஒழிந்தால்தான் பொருளாதாரக் கஷ்டம் ஒழியும் என்றார்.

நான் அதுவும் சரி என்றே சொல்லுவேன்.

செல்வவான்களின் செல்வங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதையும் அது எப்படி செலவழிக்கப்படுகின்றது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு ஏழை உழைப்பாளி மக்களின் உழைப்பின் பயனை கொள்ளைக் கொண்டால் ஒருவன் செல்வவானாக முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட பணம் அனாவசியமான கட்டடங் களுக்கும், கல்லுருவங்களுக்கும், கோட்டைகள் கட்டுவதற்கும், உலோக உருவங்களுக்கும், கல்யாண உர்ச்சவம் தேர் திருவிழா செய்வதற்கும், சோம்பேரிகளுக்கு சோறு போட்டு தடி ராமன்கள் ஆக்குவதற்கும், பால், நெய், எண்ணெய் குடம் குடமாகக் கல்லிலும், நெருப்பிலும் கொட்டுவதற்கும் வீணாக்கப்படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் கல்யாணம், கருமாதி, பிறந்த நாள், புதுமை, 60ம் கல்யாணம், திவசம், பண்டிகை முதலிய காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் தாசிகள், வேசிகள், சாராயன வகைகள், சூதாட்ட வகைகள், மோட்டார் கார்கள் என்பன போன்ற காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

செல்வங்களை இந்தப்படி பாழாக்கும் செல்வவான்கள் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?

இந்தக் குற்றாலத்தில் நான் பார்க்கின்றேன். இன்று சுமார் 100 தாசிகளுக்கு மேல் குடியேறி இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் 4, 2 நாட்டுக்கோட்டை செல்வவான் உள்பட பல பிரபுக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் கூட்டிக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

சூதாடியதற்காக போலீசார் இரண்டொரு தடவை பிடித்தும் அவர்களுக்கு கப்பம் கட்டி விட்டு மறுபடியும் அதே காலக்ஷேபமாக இருக்கிறார்கள்.

இன்னும் என்ன என்னமோ நடக்கின்றன. மற்றபடி பெரிய பெரிய ஜமீன்தார், மிட்டாதார், ராஜா பட்டக்காரர், சர் பட்டக்காரர் முதலியவர்களின் யோக்கியதையை சொல்ல வேண்டுமா?

மற்றும் சுதேச ராஜாக்கள் முதலியவர்கள் சங்கதி சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட செல்வவான்கள் ஒழிவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள்.

மடாதிபதிகள்

கடவுளையும், மதத்தையும், செல்வவான்களையும் காப்பாற்றும் மடாதிபதிகள், குருமார்கள் யோக்கியதையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு மடத்துக்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்களும் வருஷம் பதினாயிரம் ரூபாய், லட்சம் ரூபாய் என்று சொல்லும்படியான வரும்படிகளும் இருந்து வருகின்றன.

இவை மக்களுக்கு என்ன பயனைத் தருகின்றன. அயோக்கியர்களுக்கும், சோம்பேரிகளுக்கும் குடி கேடர்களுக்குமே பயன் அளிக்கின்றன. இப்படிப் பட்ட மடங்கள் தன்மையும் குருமார் தன்மையும் அனுமதிக்கப்படலாமா?

5 லட்ச ரூபாய் செலவிட்டு ஒரு தொழிற்சாலை வைத்தால் தினம் சராசரி 2500 பேர்களுக்கு தொழிலும் நல்ல ஜீவனமும் இருக்கும்படி தொழிற்சாலைகள் கட்டலாம்.

நமது நாட்டு கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மடங்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து தொழிற்சாலைகள் கட்டினால் இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ, ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரி நிகர் சமானமான மனிதர்களாகவே காணப்படலாம்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாத்திரம் வருஷம் 20 லட்ச ரூபாய் வரும்படி வருகின்றது. எனவே இந்த வரும்படியில் வருஷம் 4 தொழில்சாலை கட்டி 10000 பேர்கள் வீதம் நிரந்தரமாய் வேலைகள் கொடுத்துக் கொண்டே போகலாம்.

நமது தொழில்சாலை சாமான்கள் உலக சந்தைகளில் எல்லாம் கேட்ட விலைக்கு விற்கலாம்.

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் ஏழை மக்கள், பாமர மக்கள் இருக்கும் நிலைமையையும், படும் கஷ்டத்தையும் உணர்ந்து இதற்கு என்ன காரணம் என்பதை துருவிக் கண்டு பிடித்து, பிறகு தான் கடவுள், மதம், செல்வவான் மடாதிபதிகள் என்பவற்றைப் பற்றி குறை கூற முன் வந்தார்களே ஒழிய மற்றபடி அவர்களால் கடவுளாகவோ மத கர்த்தாக்களாகவோ, செல்வவான்களாகவோ ஆவதற்கு அல்ல என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்ளுகிறேன்.

தோழர்களே, நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைச் சொன்னோம். நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரி என்று பட்டபடிக்கு நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக இந்தக் கூட்டம் கூட்டி வைத்த தோழர் சிங்காரவேலு பாண்டியன் அவர்களுக்கும், இங்கு பேசிய தோழர்கள் ஜீவானந்தம், பொன்னம்பலம் அவர்களுக்கும், இவ்வளவு நேரம் மழைத் தூரலிலும், குளிரிலும் பொறுமையாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும் எனது நன்றியறிதலையும் வந்தனத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-------------------------- 06.08.1935 ஆம் நாள் குற்றாலம் அய்ந்தருவி சாலை வடபுரம் தெப்பக்குள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தந்தைபெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய உரை. - ”குடி அரசு” சொற்பொழிவு 11. 08.1935