Search This Blog

5.10.13

போதையை ஏற்றியதுபோல, பக்தி போதையை ஏற்றினான்

நாங்கள் இல்லையென்றால் மீண்டும் குலக்கல்வி - எச்சரிக்கை! 

1952இல் ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தாரே - இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
அதை ஒழித்தது தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அல்லவா?
நாங்கள் இல்லையென்றால் மீண்டும் குலக்கல்வி - எச்சரிக்கை!
விருத்தாசலம் மாணவர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் விடுத்த எச்சரிக்கை!

விருத்தாசலம், அக். 4- ராஜாஜி முதல் அமைச்ச ராக தமிழ்நாட்டிற்கு வந்தபோது அரை நேரம் படிப்பு. அரை நேரம் குலத்தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை ஒழித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா? நாங்கள் ஒழிந்தால் மீண்டும் குலக் கல்வித் திட்டம் வருமே என்றார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார். அவ ரது நேற்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:
மான வாழ்வை தந்தது திராவிடர் இயக்கம்
நாளைக்கு நீங்கள் ஏமாந்து வாக்களித்தால், 18 வயது பிள்ளைகள் இருக்கிறார்களே, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது; இப்பொழுது மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்டிருக் கின்ற பிரச்சினைகளை வைத்து திசை திருப்பலாம் என்று நினைத்துக்கொண்டு, திசை திருப்பி, நீங்கள் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதுபோல, மீண்டும் மோடி ராஜ்ஜியங்கள் வந்தால், மனுதர்ம ராஜ்ஜியம்தான் வரும். அப்பொழுது என்னாகும்? நீங்கள் தோளில் துண்டு போட்டு நடக்க முடியாது. இன்றைக்கு முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டிக் கொண்டு நடக்கிறார்கள் பாருங்கள், முத்தன், முனியன்; அது யாரால் வந்தது? தந்தை பெரியாரால் வந்தது. அதற்கு முன்பு, முழங்காலுக்குக் கீழே வேட்டிக்கட்ட முடியாது; தோளுக்குமேல் துண்டு போட முடியாது. இன்னும் சொல்கிறேன் வெட்கத்தை விட்டு, என்னுடைய சமுதாயத்து சகோதரிகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரிகள், நீ என்னதான் ஜாதியைப்பற்றி சொன்னாலும், உன்னுடைய ஜாதி, என்னுடைய ஜாதி, அவன் ஜாதி, எல்லா ஜாதியும் கீழ்ஜாதி என்று வைத்திருக்கிறானே, அத்தனை ஜாதியையும் சேர்த்து, அவர்கள் வீட்டுப் பெண்கள்கூட தங்களுடைய மார்பகங்களை மறைப்பதற்கு ரவிக்கை போட முடியாது. அந்த ரவிக்கைப் போடுவதற்கே போராட்டம் நடத்தித் தான், நூறாண்டுகளுக்கு முன்பு, மார்பை மறைக்கக் கூடிய மான வாழ்வை தந்தது இந்த இயக்கம் - திராவிடர் இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எங்களுக்கு உயிர் வெல்லமல்ல!
எனவே, இந்த இயக்கம் விளையாட்டு இயக்க மல்ல; இந்த இயக்கம் வேடிக்கைக்காக அல்ல; இந்த இயக்கம் எங்களைப் பதவிக்கு அனுப்புங்கள் என்று சொல்லக்கூடிய இயக்கமல்ல; நாங்கள் நன்றி பாராட்டாத தொண்டர்கள்; நன்றியை எதிர்பார்க் கின்றவர்கள் அல்ல; மானம் பாராத தொண்டர்கள்; அடக்குமுறைக்கு அஞ்சாத தோழர்கள். எங்களை ஒழித்துவிட்டால் போதுமா? எனக்கு இது போனஸ் வாழ்க்கை; ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எங்களைத் தாக்கலாம்; அதற்குக் காவல் துறை உடந்தையாக இருக்கலாம்; காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாகவோ அல்லது திட்ட மிட்டோ இருக்கலாம். ஆனால், ஒன்று எங்களோடு முடிந்துவிடக் கூடிய செய்தியா? நாங்கள் இருக் கின்ற காரணத்தால், இவ்வளவு இளைஞர்களும் கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். இந்தக் கட்டுப் பாடு இல்லையென்றால், இந்த இளைஞர்கள் யார்? எங்களுக்கு உயிர் வெல்லமல்ல! அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே சொன்னார்களே, இதுவரையில் நான் மூன்று முறை கொலை முயற்சியில் இருந்து தப்பித் திருக்கிறேன்; எங்காவது எனக்குப் பாதுகாப்பு என்று யாரையாவது வைத்திருக்கிறேனா? நான் என்ன மோடியா? அய்யாயிரம் போலீசை வரவழைத்து, அதற்குமேலே பாதுகாப்பை வைத்துக்கொண்டு, மக்களையே பார்ப்பதற்குப் பயப்படுபவனா நான்? எங்களுக்குப் பாதுகாப்பு உண்டு! யாரால்? இதோ எதிரில் அமர்ந்திருக்கிறீர்களே, நீங்கள்தான் பாது காப்புக்குரியவர்கள்; பாதுகாத்தால் உங்களுக்குப் பயன்; பாதுகாக்கவில்லை என்றால், என்ன? மாட் டுக்கு ஏன் புண்ணாக்கு வைக்கிறோம்; மாட்டுக்கு எதற்கு நிறைய பருத்திக் கொட்டை கொடுக்கிறோம்; அய்யோ மாடு பட்டினியாக இருக்கிறது என்கிற காரணத்தினாலா? இல்லை, நிறைய தீனி வைத்தால் தான் பால் கறக்கலாம் என்கிற காரணத்தினால்தான்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்

அதுமாதிரி, இவர்களைப் பாதுகாத்தால்தான், நம்முடைய சமுதாயத்திற்காக இவர்கள் பாடுபடு வார்கள்; இவர்கள் இல்லையென்றால், இன்றைக்கு உத்தியோகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு கிடையாதே! வகுப்புவாரி உரிமைக்குப் பாதுகாப்பு கிடையாதே! இன்றைக்கு உச்சநீதிமன்ற வரலாற்றி லேயே ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார் என்று சொன்னால், இது யாருடைய உழைப்பு! உன்னுடைய கிருஷ்ணனாலா? உன்னுடைய இராமனாலா? உன்னுடைய கந்தனாலா? முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலாவது இதில் சம்பந்தம் உண்டா? நாங்கள் உழைத்தது; நாங்கள் போராடியது; எங்கள் இயக்கம் போராடியது; அத்தனை மக்களுக்கும் அறிவூட்டியதன் விளைவு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அனைவரையும் பண்படுத்துவதற்காக பாடுபடுகின்ற இயக்கம்!
உன்னை கிருஷ்ணனைக் காட்டி, இராமனைக் காட்டி, கந்தனைக் காட்டி, பிள்ளையாரைக் காட்டி, கடவுளைக் காட்டி கீழே கொண்டு போய்விட் டானே! எவ்வளவு பெரிய அறிவியல் போராட்டம்! அதற்காகத்தானே நாங்கள், உன்னுடைய மூளையில் போடப்பட்டிருக்கின்ற விலங்கை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியை இங்கே நடத்தினோம்; இந்தப் பேரணியில் கலவரம் ஏதாவது நேர்ந்ததா? யாருக்காவது அதனால் ஒரு சிறு சங்கடமாவது ஏற்பட்டதா? தீச்சட்டி ஏந்தி வந்தார்களே, எங்களது மகளிரணி தோழியர்கள்; கடவுள் இல்லை! கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு வந் தார்களே, உன் கடவுள் அங்கே வந்து தீச்சட்டியைத் தூக்கவேண்டியதுதானே! அவர்கள் தூக்கிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், என்னிடமும் அந்தத் தீச்சட்டியைக் கொடுத்தார்கள்; நான் அந்தத் தீச்சட்டியைத் தூக்கிக் காட்டினேன்; யார் எடுத் தாலும் சுடாது அந்தத் தீச்சட்டி. நீயும் அதை எடுக்கலாம்; அதனைக் காட்டி உன்னை பக்தியின் பெயரால் ஏமாற்றி இருக்கிறானே! அலகு குத்தி ஏமாற்றி இருக்கிறானே! அலகு குத்தி கார் இழுத் தார்களே எங்களுடைய தோழர்கள்; எனக்கு என்ன ஒரு வருத்தம் என்றால், காட்டுமிராண்டிகளைத் திருத்துவதற்காக, நாங்கள் காட்டுமிராண்டி வேஷம் போடவேண்டியிருக்கிறதே என்பதுதான் வருத்தம்; சங்கடம்; அதற்காக நாங்கள் பெருமையாக நினைக்கவில்லை. எங்களால் யாருக்காவது சங்கடம் உண்டா? அல்லது எங்களது தோழர்கள் யாரை யாவது புண்படுத்தி இருக்கிறார்களா - மாறாக, அனைவரையும் பண்படுத்துவதற்காக பாடுபடுகின்ற இயக்கம் இந்த இயக்கம்.
இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை கடமைகள் என்று இருப்பதில், ஒவ்வொருவருக்கும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவது கடமை என்றிருக்கிறதே, அந்தக் கடமையை திராவிடர் கழகத்தினைத் தவிர, வேறு யாராவது செய்கிறார் களா? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும்!
ஆகவே, இது அறிவு இயக்கம்; பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்கின்ற இயக்கம்; ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உயர் நிலைக்கு வரவேண்டும்; எல்லோருக்கும் எல்லாமும்; தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், அனைவருக்கும் அனைத்தும் என்பதைத்தான் வலியுறுத்தினார்கள். அதனுடைய விளைவாகத்தான் அனைத்து ஜாதி யினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு!
இன்றைக்கு எல்லா ஜாதியிலிருந்தும் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகிறார்கள்; ஆதிதிராவிடர் அய்க்கோர்ட் ஜட்ஜ் ஆகிறார்; அய்.ஏ.எஸ். அதிகாரி ஆகிறார். ஆனால், அதே ஆதிதிராவிடர் இன் றைக்கு அர்ச்சகர் ஆக முடியுமா? இந்தக் கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைய முடியுமா? இந்தக் கோவிலைக் கட்டியது யார்? இந்த ஊரையே பெயர் மாற்றிவிட்டானே பார்ப்பான். திருமுதுகுன்றம் என்ற ஊர் விருத்தாசலமாக மாறியது எப்படி? மயிலாடுதுறை எப்படி மாயவரம் ஆயிற்று? குடமூக்கு எப்படி கும்பகோணமாயிற்று? மரைக்காடு என்ற மான்கள் நிறைய புழங்கிய அந்தப் பகுதி எப்படி வேதாரண்யமாயிற்று? பார்ப்பன பண் பாட்டுப் படையெடுப்பு. அவன் மூளையைத் தாக் கினான்; அதனுடைய விளைவாகத்தான் சில பேர் போதையை ஏற்றியதுபோல, பக்தி போதையை ஏற்றினான். வேட்டி அவிழ்ந்து கிடக்கும் அவன், நம்மைப் பார்த்து கேட்பான், உனக்கு வேட்டி இருக்கிறதா? என்று. காரணம் என்ன? போதை! போதைகளிலேயே குடி போதை பொழுது விடிந்தால் போய்விடும்; ஆனால், இந்த பக்தி போதை இருக்கிறதே, அது மிகப்பெரிய அளவிற்கு கேவலமாக இருக்கின்ற காரணத்தினால்தான், மற்றவர்களுக்கு மூக்குச் சொரிந்துவிட்டு, மற்றவர் களைத் தூண்டிவிடுகிறார்கள்.
அதேநேரத்தில் எப்படி பார்ப்பான் உள்ளே நுழைந்தான்; இதை நாங்கள் சொல்லவில்லை. பார்ப்பனர்கள் சொல்வதை கேளுங்கள். நாங்கள் சொன்னால் உனக்கு ஆத்திரம் வரும். ஆகா, எங்கள் இந்து மதம் என்னாவது? எங்கள் கடவுள் என்னாவது? என்று சொல்வார்கள்.

இந்து மதம் எங்கே போகிறது?
இதோ கையில் வைத்திருக்கிறேனே, இந்து மதம் எங்கே போகிறது? இந்தப் புத்தகத்தினை யார் எழுதியது? பெரியாரா? கலைஞரா? வீரமணியா? இல்லை; இந்தப் புத்தகத்தை எழுதியது அக்னி ஹோத்திரம் இராமனுஜ தாத்தாச்சாரியார். 101 வயது வரை வாழ்ந்து, நக்கீரன் பத்திரிகையில் பேட்டியாக வந்து, அந்தப் பேட்டி புத்தகமாக வந்ததுதான் இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக் கிறார் என்றால்,
பூசை என்பது வடமொழி சொல் அல்ல; வந்தவர் மொழியல்ல; செந்தமிழ்ச் சொல்; அப்படிப்பட்ட பூசை என்று சொன்னால், பூவை தூக்கிப் போடு என்று அர்த்தம். அது தமிழ்ச் சொல்.
இந்தப் பண்பாட்டின் குறுக்கே வந்தார்கள்; பிராமணர்கள்; சொல்வது யார்? பெரியார் அல்ல; கலைஞர் அல்ல; வீரமணி அல்ல; அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார்.
உள்ளே நீ பூப்போட்டுக் கொண்டே இரு; நான் வெளியில் இருந்து வேதம் சொல்கிறேன் என்று சொன்னார்கள் பிராமணர்கள்.
எங்கள் அளவிற்கு இதெல்லாம் படித்தவர்கள் இந்த நாட்டில் வேறு யாரும் கிடையாது. எங்களுக்கு வேறு வழியில்லையே, இதனை ஆதாரப்பூர்வமாகச் சொல்லியாகவேண்டும் என்பதால், 24 மணிநேரமும் இதைக் கட்டிக்கொண்டல்லவா இருக்கிறோம்.
வெளியில் நின்று கொண்டிருந்த பிராமணன் சொல்கிறான்; நீ பூபோட்டுக்கொண்டே இரு; நான் வெளியில் இருந்து வேதம் சொல்கிறேன்; காரணம், நீ பகவான் பக்கத்தில் நின்று ஏதாவது சொன்னால், அவன்மீது எச்சில் தெறிக்கும்; எவ்வளவு தந்திரமாக சொல்கிறான் பாருங்கள்; அதனால், நீ பூப் போட்டுக்கொண்டே இரு; நான் வேதம் சொல் கிறேன். இதற்குப் பெயர் அத்தியாயனபட்டர்; கொஞ்ச நாள் சென்றது, அத்தியாயனபட்டரே உள்ளே வந்துவிட்டார்; வெளியே நின்னான்; கொஞ்சம் நகர்ந்து வந்தான்; பிறகு உள்ளே வந்து விட்டான்; உள்ளே என்றால் இவரே கேள்வி கேட் கிறார், பதிலும் சொல்கிறார்; கர்ப்பக்கிரகத்திற்குள்.
இனி நான் பார்த்துக்கொள்கிறேன்; நீ வெளியில் உள்ள வேலைகளைப் பார் என்று சொன்னான்; அடுத்து ஆகமக்காரர்களின் ஆதிக்கம்; அவர்கள் முழுமுதற் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால், தமிழன் வேறு; ஆகமஞ் சொல்லக்கூடிய ஆரியன் வேறு; தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான்; தமிழ்ப் பூக்களைத் தூவி, சமஸ்கிருத அர்ச்சனை நடத் தினார்கள். எப்படி இந்த ஊடுருவலைப் பார்த் தீர்களா? இதுதான் பண்பாட்டுப் படையெடுப்பு.
அரசியல் படையெடுப்பைவிட, பொருளாதாரப் படையெடுப்பைவிட, ஆபத்தான பண்பாட்டுப் படையெடுப்பு இதுதான். இப்படி சமஸ்கிருத சர்க்கார் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான், நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள் என்று நீண்ட கதையைச் சொல் கிறார்; மற்ற செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்.
அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆதிதிராவிடர் ஆக முடிகிறது. ஆனால், அர்ச்சகராக ஆக முடிய வில்லையே! அதேபோல், அய்.பி.எஸ். அதிகாரியாக, அய்க்கோர்ட் ஜட்ஜாக ஆக முடியும். ஆனால், அர்ச்சகராக முடியவில்லையே. அது என்ன அவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்த வேலையா?
தீண்டாமை அங்கே பாதுகாக்கப்படுகிறது.
Untouchability is abolished and its practice in any form is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law.
அரசியல் சட்டம் 17 ஆவது விதியிலே இருக் கிறதே, அந்த விதி அங்கே கடைபிடிக்கப்படுகிறதா?
பழைய குன்றக்குடி அடிகளார் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு கேள்வியை கேட்டார்.
ஆதிதிராவிட அமாவாசை என்ற தோழர், உள்ளே போய் சாமியைத் தொட்டால், அந்த சாமி செத்துப் போகிறது; தீட்டாகிறது என்று சொன் னால், ஆதிதிராவிட அமாவாசை தோழருக்கு அதிக சக்தியா? அந்த சாமிக்கு அதிக சக்தியா? என்று கேட்டார். நன்றாக நீங்கள் சிந்திக்கவேண்டும்.
நம்முடைய மூளையை கெடுத்து வைத்திருக் கிறான்; நம்முடைய உரிமையை பறித்து வைத்திருக் கிறான். சிலர் கேட்கலாம், ஏங்க நீங்கள் தான் கடவுளே இல்லை என்று சொல்கிறவர் களாயிற்றே! யார் அர்ச்சகராக இருந்தால் உங்களுக்கு என்ன? என்று.
தந்தை பெரியார் மான வாழ்வு கேட்டார்!
நாங்கள் அர்ச்சகர் வேலைக்குச் செல்வதற்காகக் கேட்கவில்லை. அதேநேரத்தில், என்னுடைய அண்ணன் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக் கிறான்; என் தம்பி கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறான்; இதோ நீ சத்தம் போடுகிறாயே, உனக்கு கடவுள் நம்பிக்கை என்ற போதை உள்ள தால்தானே, உன்னை அப்படி ஆக்கி வைத்திருக் கிறான்; நீ கோவிலுக்குப் போனால், வெளியே நில் என்று சொல்கிறானே, ஏன் நிற்கவேண்டும் என்று கேட்டால், நீ சூத்திரப் பயல் என்கிறான்! சூத்திரன் என்றால் என்ன? பாரத ரத்னா பட்டமா? சூத்திரன் என்றால், பார்ப்பானுக்குத் தேவடியாள் மகன் என்கிறார்கள். பார்ப்பானுக்குத் தேவடியாள் மகன் என்றால், என் தாய், அவன் தாய், எல்லோருக்கும் ஒரு தாய்தானே! எங்கள் தாயை தேவடியாள் என்றால், நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்கமுடியுமா? அதனால்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் மான வாழ்வு கேட்டார்.
திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்றிக் காட்டக்கூடிய அந்த வலிமை - அதனைச் செய்யவேண்டிய பணி என்னுடைய பணி என்று சொன்னார்.
திருச்சியிலே மோடி வித்தைகளைக் காட்டியிருக்கிறார்கள்
அந்தப் பணியைத்தான் பெரியார் தொண்டர்கள் நாங்கள் செய்கின்றோம். இதற்கு என்ன எதிர்ப்பு? நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா? ஜாதியைக் காப்பாற்றுகின்ற கடவுளாக இருந்தாலும்; ஜாதி யைக் காப்பாற்றுகின்ற சட்டமாக இருந்தாலும்; ஜாதியைக் காப்பாற்றுகின்ற அர்ச்சகத் தன்மையாக இருந்தாலும், அதனை எதிர்த்து, மாற்றி அழித்தா லொழிய, மனிதத் தன்மை, சமத்துவம் நிலைக்குமா? சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியுமா? இந்த மூடநம்பிக்கையை வைத்துக்கொண்டுதானே இவ் வளவையும் செய்துகொண்டிருக்கிறான். தெளிவாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா? ஆகவே, நண்பர்களே, உங்களுக்குத் தெளிவாக ஒன்றை சொல்கிறேன், இந்த விருத்தாசலத்திலே ஒரு அற்புதமான மாநாட்டினைக் கூட்டி, பல்லாயிரக் கணக்கிலே, மற்றவர்கள் எல்லாம் மாநாட்டினை கூட்டுவதற்கு என்று சொன்னால், அதுவும் இப்பொழுது திருச்சியிலே நடைபெற்ற மாநாடு என்று சொல்லும்பொழுது கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து, மோடி வித்தைகளைக் காட்டியிருக்கிறார்கள். அந்த மாதிரி வித்தைகளை நாங்கள் காட்டவில்லை. தானாக வந்திருக்கின்ற கூட்டம் இது. நாங்கள் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறோம்! நீங்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறீர்கள். இன்னுங்கேட்டால், எங்களது இளங்கோவிடம் கேட்டேன், என்னய்யா, மிக நீண்ட நாள்களுக்குப் பிறகு என்னை கூப்பிட்டிருக்கிறீர்களே என்று. அவர் உடனே சொன்னார், அதைத்தான் பொதுமக்களும் கேட்டார்கள் என்று சொன்னார்.
இது தொடக்கம்தான்!
கச்சிராயநத்தம் தர்மலிங்கம், அவர் ஆசிரியராக இருந்தவர்; அந்த ஆசிரியராக இருந்த அந்த நண்பர், சபாபதிக்குத் துணையாக அவர்தான் வந்தார். இன்றைக்கு இளந்திரையன் தலைமையில் எண்ணற்ற இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இது தொடக்கம்தான்; இந்த மாநாட்டிற்குப் பிறகு ஏராளமான இளைஞர்கள் இங்கே வரப் போகிறார்கள்; அடிக்கடி வருவோம் நாங்கள்; நேரம் அதிகமாகி விட்ட காரணத்தினால், உரையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு மிகுந்தவர்கள் நாங்கள். எனவேதான் சொல்கிறோம், மற்றவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ, அதைப்பற்றி கவலைப்படவில்லை. வீட்டை விட்டுப் புறப்படும்போதே, செலவுக் கணக்கு எழுதிவிட்டு வருகிறவர்கள் நாங்கள்; மறுபடியும் திரும்பினால்தான் வரவு. திரும்பவேண்டிய அவசியம் இல்லை. எனக்கு 80 வயது முடியப் போகிறது; எனக்கும், சகோதரர் சாமிதுரைக்கும் சில மாதங்கள்தான் வித்தியாசம்; நாங்கள் எல்லாம் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.
இயற்கையான சாவைவிட...
எனக்கு மூன்று முறை கொலை முயற்சி; மம்சாமபுரத்தில், வண்ணாரப்பேட்டையில், ஆத்தூர் தம்மம்பட்டியில்! எத்தனை முறை நடந்தால் என்ன? நான் ஒருவன் போய்விட்டால், எல்லாம் முடிந்து போய்விடுமா? பெரியாரோடு முடிந்துவிட்டது என்று சொன்னான்; இப்பொழுது என்ன சொல்கிறான், பெரியாருக்கு அடுத்தபடியாக நான் ஒழியவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமா? மூன்று முறை என்னுடைய இருதயத்தை கழற்றி, பக்கத்தில் வைத்துவிட்டு, மூன்றாவது முறை இருதயத்தை மாற்றி ரிப்பேரோடு வேலை செய்கிறவன் நான். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எனக்கு இயற்கையான சாவு வரலாம்; ஆனால், இயற்கையான சாவைவிட, இப்படி ஒரு சாவு வந்தால், அதுதான் பிரச்சினைக்கு முடிவு கட்டும் என்பது இருக்கிறது பாருங்கள், அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
அதனால் நாங்கள் கோழைகள் அல்ல; ஓடி ஒளியமாட்டோம்; நாங்கள் மோடிகள் அல்ல; அய்யாயிரம் போலீஸ் பாதுகாப்புடன் ஆவேச மாகப் பேசுவதற்கு. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது; நாங்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருக்கக் கூடியவர்கள். நாங்கள் எதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்காதவர்கள். எங்களுக்கு அடுத்த தேர்தல் முக்கியமல்ல நண்பர்களே, ஆனால், அந்தத் தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுக் கவேண்டும் என்று அடையாளங்காட்டுவது எங்கள் கடமை; அது வேறு செய்தி. ஆனால், அடுத்த தலைமுறை எங்களுக்கு மிக முக்கியம். அதனைப் புரிந்துகொண்டு, நீங்கள் எல்லோரும் பாடுபடவேண்டும் என்று கேட்டு, இவ்வளவு பெரிய மாநாட்டை, மிகச் சிறப்பாக நடத்திய அருமை மாவட்டத் தலைவர் இளங் கோவன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் இளந்திரையன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்கதிரவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பெரியார் செல்வன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் சிலம்பரசன், இராமராஜ், ஒன்றிய மாணவரணி தலைவர் குமரேசன், அனைத்து மாவட்ட மாணரவணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் இளவரசன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவு, மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கட்ட ராஜா, மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜமாணிக்கம், தமிழ்ச் செல்வன் போன்ற அத்துணைத் தோழர்களுக்கும் எங்களுடைய அற்புதமான நன்றியை, பாராட் டினைத் தெரிவித்து, தோழர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆவேசப்படாமல், உணர்ச்சிவயப் படாமல், சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை; தயவு செய்து நாம் ஒருபோதும் அமைதியை இழக்க வேண்டாம்; அவரவர்கள் அமைதியாக, இளைஞர்கள் இதைவிட தீவிரமாக, இந்த ஒரு கூட்டத்தைத் தடுத்தால், இந்த மாவட்டம் முழுவதும் ஏராளமான கூட்டங்களைப் போடுவோம் என்று ஏராளமான கூட்டங்களைப் போடுங்கள்; அதுதான் எதிரிகளை மட்டப்படுத்துவதற்கு, எதிரிகளின் தன்மையை, ஆட்களைப்பற்றி கவலைப்படாமல், கொள்கையைப் பரப்புவதற்கு வழி என்று கூறி, அனைவருக்கும், ஒத்துழைப்புக் கொடுத்த பெரியவர்களுக்கு, அனைத் துக் கட்சி நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
------------------------------ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.            ------------------”விடுதலை” 4-10-2013

35 comments:

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர்மீது மதவெறிக் கும்பல் தாக்குவதா?


பிரபஞ்சன், எஸ்.வி. இராசதுரை, பேரா. அ. மார்க்ஸ் உள்ளிட்ட பெரு மக்கள் கண்டனம்!

சென்னை அக். 05- திராவிடர் கழகத் தலைவரைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சமூக ஆர்வலர் கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று விருத்தாச்சலத்தில் நடை பெற்ற கடலூர் மண்டல மாணவர் மாநாட்டிற்குச் சென்ற தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை காவிக் கொடி ஏந்திய வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கியுள் ளது. தேசிய யாதவர் மகாசபை என் னும் அமைப்புடன், இந்து முன்னணி முதலான இந்துத்துவ அமைப்புகள் இதில் பங்குபெற்றுள்ளன.

தாக்கியவர்களை ஒன்றும் செய் யாத காவல்துறையினர், ஆசிரியரைக் காப்பாற்ற ஓடி வந்த தி.க தொண் டர்களைத் தாக்கியுள்ளனர். எனினும் அமைதியாக இருக்குமாறு கி.வீரமணி அவர்கள் வேண்டிக் கொண்டதை ஏற்று மாநாடு சிறப்புற நடந்துள்ளது.
வீரமணி அவர்கள் வந்த வாக னத்தை மதவெறியர்கள் தாக்கியது, காப்பாற்ற ஒடி வந்த தொண்டர்களை காவல்துறையினர் தாக்கியது என இரு புகார்கள் கொடுக்கப்பட்டும், காவல் துறையினர் முதல் புகாரை மட்டுமே பதிவு செய்துள்ளதாக அறிகிறோம். அந்தப் புகாரின் அடிப்படையிலும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.

காவல்துறையினரின் ஒப்புதலுடன்

காவல்துறையினரின் ஒப்புதலு டனேயே இத் தாக்குதல் நடைபெற் றுள்ளது என்கிற அய்யம் உள்ளது. முன்னதாக அப்பகுதி டி.எஸ்.பி வெங்கடேசன், ஊர்வலத்திற்கு அனு மதி மறுத்துள்ளார். எனினும் மேலதி காரிகளைத் தொடர்பு கொண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. விருத் தாச்சலம் என்பது ஒரு சிறிய ஊர். தாக்குதல் நடத்திய கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்வது மிக எளிதான ஒன்று. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந் திக்கு அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தபோது வீரமணி அவர்கள் மட்டும் வருணாசிரமத் தையும், வருண அடிப்படையிலான தொழில் மற்றும் ஏற்றத் தாழ்வு களையும் நியாயப்படுத்திய கிருஷ்ண னின் பிறந்த நாளை ஏன் தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்கிற பொருள்பட வெளியிட்ட அறிக்கையே தாக்குதலின் உடனடிக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த அறிக்கையைக் கண்டித்துக் கடுமையாக ஒரு சிலர் தொலைக் காட்சியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியும் உள்ளனர். தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம், சுமார் ஒரு நூற் றாண்டு காலமாக வருணாசிரம எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் ஒரு முன்னுதாரணமாகச் செய்து வருகிறது. எந்நாளும் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததாக வரலாறே கிடையாது. எனினும் ஆணித்தரமான அவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல இயலாதவர்கள் இப்படியான வன்முறைகளைப் தந்தை பெரியாரின் காலந் தொட்டே மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மாநாடு நடத்துவது, கருத்துக்களைப் பிரச் சாரம் செய்வது என்பதெல்லாம் நமது அடிப்படை உரிமைகள். மதவெறிக் கும்பல்கள் இவ்வாறு கருத்துப் பிரச் சாரங்களுக்கு எதிராக வன்முறை விளைவிப்பதும் அதற்குக் காவல் துறையினர் துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன,

தமிழக அரசு உடனடியாக நட வடிக்கை மேற்கொண்டு வன்முறை யாளர்களைக் கைது செய்ய வேண் டும். வன்முறையாளர்களுக்கு ஆதர வாக மெத்தனம் காட்டும் காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சமூக ஆர்வலர்கள்

பிரபஞ்சன், (மூத்த எழுத்தாளர், சென்னை),

அறிஞர் எஸ்.வி. இராசதுரை, (மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி),

பேரா. அ.மார்க்ஸ், (மனித உரிமை களுக்கான மக்கள் கழகம், சென்னை),

கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி),

பேரா. பிரபா.கல்விமணி, (பழங் குடி இருளர் பாதுகாப்பு சங்கம், திண்டிவனம்),

வழக்குரைஞர் பொ.இரத்தினம், (உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர், மதுரை)

வழக்குரைஞர் ரஜினி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை)

வழக்குரைஞர் தய்.கந்தசாமி, ( தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப் பூண்டி)

வழக்குரைஞர் மனோகரன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை)

வழக்குரைஞர் கி. நடராசன், (மக்கள் வழக்குரைஞர் சங்கம், சென்னை),

கல்வியாளர் முனைவர் ப.சிவகுமார், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

கல்வியாளர் பேரா.மு. திருமாவள வன், (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை),

சுகுணா திவாகர், (பத்திரிகை யாளர், சென்னை)

பேரா. சே.கோச்சடை, (மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி)

விடுதலை வீரன், (அமைப்புச் செய லாளர், ஆதித் தமிழர் பேரவை, மதுரை) தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5.முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை- 20. செல்: 9444120582

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தாக்கப்பட்டது ஜனநாயக விரோத செயல் சி.பி.எம். கண்டனம்



சென்னை, அக். 5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி மீது நடந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற் குழுக்கூட்டம் 2 நாள் கூட்டம் சென்னையில் வியாழனன்றுதுவங்கியது. மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் கூட் டத்திற்கு தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., பி.சம்பத், உ.வாசுகி, அ.சவுந்தர ராசன்எம்எல்ஏ, கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற் குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் பின்வருமாறு: திராவிடர் கழகத் தலை வர் திரு.கி.வீரமணி அவர்கள் விருத்தாச்சலத் தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது பாலக் கரை அருகே அவரு டைய வாகனத்தையும் உடன் வந்த வாகனங் களையும் தாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கிறார் கள். கருத்துக்களை வன் முறையின் மூலம் எதிர் கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்க கூடாது. கி.வீரமணி தாக் கப்பட்ட இந்த ஜன நாயக விரோதச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில காவல்துறையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தோழர் இந்திரஜித் கண்டனம்

திருச்சியில் நேற்று (4.10.2013) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாவட்ட சி.பி.அய். செயலாளர் இந்திரஜித் தம் கண்ட னத்தைப் பதிவு செய்தார். திராவிடர் கழகத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் சிலைகள் கொள்ளை



கோபி, அக்.5- கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் அய்யப்பா நகர் பகுதியில் சுமார் 100 ஆண்டு பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறீதேவி, பூதேவி மற்றும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சுமார் 1.5 அடி உயரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அய்ம்பொன் சிலைகள் இருந்தன. ஆண்டு தோறும் புரட்டாசி மற்றும் முக்கிய நாட்களில் அய்ம்பொன் சிலைகளை வைத்து வழிபடுவதும் பிறகு அவற்றை மடப்பள்ளிகளில் பாதுகாப்பாக வைப்பதும் வழக்கமாம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அர்ச்சகர் கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். மாலை வந்து பார்த்த போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு 3 அய்ம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையில் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின் றனர். தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பார்வையிட்டு விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் கொள்கை வாரிசு மானமிகு வீரமணி அவர்களைத் தாக்குவதா?


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கண்டனம்

சென்னை, அக்.5- திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணிமீது தாக்குதல் நடந்துள்ள முயற்சிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ் லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநி லத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விருத்தாசலத் தில், சமூக விரோதி களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி அறிய மிகவும் வேதனையாக இருக்கிறது.

பகுத்தறிவு சிந்த னையை தமிழக மக் களுக்கு பாலூட்டும் தாயைப் போல் இருந்து பரப்பி வந்தவர் பெரி யார் அவர்கள். அந்தப் பெரியார் இல்லாதிருப் பராகில், தமிழ்நாடு பண்பாடற்ற காடாகத் தான் காட்சி தந்திருக் கும். பகுத்தறிவு ஒளி விளக்கை ஊரெல்லாம் உள்ளமெல்லாம் ஏற்றி வைத்துச் சென்ற பெரி யாரின் வாரிசானவர் அவரின் கொள்கையை பரப்புவதே தனது வாழ்க்கை லட்சியம் என வாழும் மானமிகு வீரமணி அவர்களை தாக்குவதற்கு மனம் எப்படித் துணிந்தது என்று தெரியவில்லை.

தேவை நடவடிக்கை

தமிழகத்திலும், அமைதியைக் கெடுத்து, அட்டூழியத்தை வளர்ப் பதற்கு மதவாத சக்திகள் தலையெடுத்து வருகின் றன என்பதற்கு அடை யாளம்தான் இந்த வன் முறை. இத்தகைய பண் பாடற்ற வன்முறையை இந்திய யூனியன் முஸ்லீ ம் லீக் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வு ஒரு போதும் நடக்க விடாது தடுப்பதும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதும் தமிழக காவல்துறையின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


ஏழமலையானுக்குச் சிக்கல்!

தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஆந்திரா வில் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் வருவதில் சிக்கலாம் (வசூல் குறைந்து விடும் என்ற கவலை! தீராத வினைகளைத் தீர்க்கும் கோவிந்தம் தனக்கு வந்த வினையைத் தீர்க்க மாட்டாரோ!)

தாக்கியவர் பெண்

சென்னையை அடுத்த ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாக்கியம் என்ற பெண்மணி தன் மகனுக்காக ஜாதி சான்றிதழ் கேட்டார் கிராம நிர்வாக அதிகாரியிடம். காலதாமதம் செய்ததால் அதிகாரியை ஜெயபாக்கியம் தாக்கியுள்ளார். (தாக்கியது தவறுதான். ஆனாலும் அதிகாரிகள் உரிய நேரத்தில் தன் கடமையைச் செய்யத் தவறினால், இத்தகு அசம்பாவிதங்கள் தவிர்க்க முடியாததாகி விடும். பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதே).

மூக்கறுப்பு

அச்சிறுபாக்கம் அருகே மூதாட்டியின் காது, மூக்கை அறுத்து நகைகளைப் பறித்துச் சென்றனர் என்பது செய்தி. (மூதாட்டிக்கு மூக்கறுப்பு என்பதை விட நாட்டின் சட்டம் ஒழுங்குக்குத்தான் மூக்கறுப்பு!)

தேவேகவுடா

ஊழல் கறை படிந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன், ஊடகங்கள் நரேந்திர மோடியை வளர்த்து வருகின்றன. மதவாதம் மற்றும் ஊழல் வாதத்தில் கவலைதான் நரேந்திரமோடி. இவை இரண்டும் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்.
(மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் என்பதைக் காலந் தாழ்ந்தாவது நிரூபித்து விட்டார் - சபாஷ்!)

தடுப்பு

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நீரைத் தடுக்க 7 ஆம் தேதி போராட்டம் நடத்திட ஆந்திரப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. (தமிழ்நாட்டின் வயிற்றில் அடிப்பதற்கென்று நாலு திசையிலும் ஆசாமிகள் இருக்கிறார்கள்).

ஒழுக்க சீலர்கள்!

நண்பர்களைத் திருப்திபடுத்த இளம் பெண்களின் அரை நிர்வாண நடனத்தை கருநாடகாவில் பீதர் மாவட்ட பிஜேபி செயலாளர் பாபு வாலி ஏற்பாடு! (தார்மீகப் பண்பு மிகுந்தது - பிஜேபி என்பதை நம்பித் தொலையுங்கள்)

தமிழ் ஓவியா said...


செயங்கொண்டம் வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்

செயங்கொண்டம், அக். 5- விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்குரைஞரைத் தாக்கியதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்
3.10.2013 அன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் எஸ்.எம்.அன்புமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் கடந்த 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடை பெற்ற அரசியல் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு 11 மணியளவில் ஜெயங்கொண்டம் திரும்புவதற்கு விருத்தாசலம் பாலக்கரையடுத்த நான்கு ரோட்டில் அரியலூர் மாவட்டம், உடை யார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எம்.இராசா அவர்கள் வரும்போது அங்கிருந்த விருத்தாசலம் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் வழக்கறிஞர் என நன்கு தெரிந்து ஒருமையில் காமக் குரோத வார்த்தைகளால் திட்டி, நெட்டித் தள்ளி அவமானப்படுத்தி, வழக்கறிஞர் என்றால் பெரிய கொம்பா என திட்டியபோது, அவருக்கு உடந்தை யாக உடனிருந்த பண்ருட்டி துணைக் கண்காணிப் பாளர், மற்றும் காவல்துறை உயரதிகாரிகளையும் கண்டிக்கும் வகையிலும், முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியும் 3.10.2013 அன்று ஒரு நாள் மட்டும் நீதிமன்றப் புறக்கணிப்பினை நமது சங்கமும் மேற்கொள்வதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்குரைஞர் புகார்

அய்யா, வணக்கம்.

நான் செயங்கொண்டத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறேன். திராவிடர் கழகத்தில் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறேன். கடந்த 28.9.2013 அன்று நான் விருத்தாசலத்தில் நடந்த கடலூர் மண்டல மாண வரணி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு செயங் கொண்டம் திரும்பிக் கொண்டிருந்தபோது விருத்தாசலத்தைச் சேர்ந்த இளந்திரையன், கதிரவன் என்ற தோழர்கள் தங்களை காவல்துறையினர் வழிமறித்து மிரட்டுவதாக போனில் தெரிவித்தனர். நான் மீண்டும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டு இளந் திரையன் மற்றும் கதிரவன் ஆகியோரை பார்த்து னுளுஞ வெங்கடேசன் என்னடா? விருத்தாசலத்தில் தி.கா.காரன் எல்லாம் ரவுடியிசம் செய்கிறீர்களா நான் நினைத்தால் உங்களை உள்ளூர் ரவுடிகளை வைத்தே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் அருகிலேயே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது காரில் அமர்ந்திருந்தார். அப்போது, நான் னுளுஞ வெங்கடேசன் அவர்களை பார்த்து சார் என்ன பிரச்சினை ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் நீ யாருடா என்னை கேட்பதற்கு என்று என்னை நோக்கி வந்தார். நான் வழக்குரைஞர் என்றேன். அதற்கு அவர் நீ என்னடா பெரிய வக்கீல், உன்னால் என்ன செய்ய முடியும் நீ வக்கீல் என்றால் கோர்ட்டில் தான் உன்னை இங்கேயே காலி செய்து விடுவேன் என்று என் நெஞ்சில் கை வைத்து நெட்டித் தள்ளினார். அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஏய் என்று சொல்லி கையை ஓங்கிக் கொண்டு வந்தார். பின்னர் விசாரித்த போது அவர் பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் என தெரியவந்தது. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கண் பார்வை யிலேயே நடைபெற்றது. எனவே என்னை வழக் குரைஞர் என்றும் பாராமல் பேசி அதிகார துஷ்பிர யோகம் செய்து கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்ற விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப் பாளர் வெங்கடேசன், பண்ருட்டி துணை கண் காணிப் பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
எம்.இராசா

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்


சென்னை அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரி பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லால் அந்த மந்திரி பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மாதிரி பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டி பார்ப்பன ரல்லாதாரை காட்டிக்கொடுக்க வேண்டியது தான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ்வாரானால் அம்மனிதருடைய யோக்கி யதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக மலம் நல்ல வாசனை யாயிருக்கிறதென்று ஒருவர் சொல்லுவாரா னால் அவர் மூக்கின் யோக்கியதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? என்ற பழமொழி ஒன்றுண்டு.

அதுபோலவே ஸ்ரீமான் சத்திய மூர்த்தியின் யோக்கியப் பொறுப்பும், நாணயமும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அவரைப் புகழ்வதும் சுயராஜ்யக் கட்சியின் யோக்கிய தையும், தென்னாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கி யதையும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு இவைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசவதுமானால் பீசு இல்லாமல் பேசுகிறார் என்று யாராவது நினைக்க முடியுமா? இதன் பயனாக கிறிஸ்தவர் என்கிற முறையில் ஸ்ரீமான் ஜோசப்புக்கு ஒரு சமயம் மந்திரி உத்தியோகம் அல்லது அதற்குச் சமானமான பதவி கிடைப்பதாயிருந்தாலும் ஸ்ரீமான்ஜோசப்பின் வாழ்க்கையின் பெருமை அடியோடு ஒழிந்து போகுமென்றே பயப்படு கின்றோம்.

இந்து மதம் என்கிற புரட்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், தாங்கள் பெரிய ஜாதியார்கள் என்று சொல்லிக் கொண்டும் அம்மதத்தினர் என்பவர்களுக் குள்ளாகவே தாங்களொழிந்த மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாராக்கி நிரந்தரமாய்ப் பிழைக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கம் என்பவைகளிலுள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்ப்பனரல்லாதார் பார்ப்ப னருடன் சண்டை இடும் போது ஸ்ரீமான் ஜோசப் போன்றவர்கள் இரு (ஆட்டுக்குட்டி) வர் சண்டை யிலிருந்து ஒழுகும் இரத்தத்தைக் குடிக்கும் (குள்ளநரியாக) வீரராகத் தோன்றியது மிகவும் பழிசொல்லத்தக்க காரியம்.

தேசாபிமானம் என்பதற்கு ஸ்ரீமான் ஜோசப் என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. தென்னாட்டுப் பார்ப்பனர்களின் அயோக் கியத் தனத்தைத்தான் ஸ்ரீமான் ஜோசப் அவர்கள் தேசாபிமானம் என்று கொள்வாரா னால் அவரையும் பார்ப்பனக் கூட்டத்தில் சேர்த்துத்தான் கணக்கு பார்க்கவேண்டும், ஏனெனில் ஸ்ரீமான் ஜோசப்புக்கும் பார்ப்பன ருடன் சேருவதற்கு உரிமையுண்டு.

என்ன வென்றால் இந்துக்களில் பார்ப்பனரல்லா தார் அதிகமானவர்கள், பார்ப்பனர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள், அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் எய்தி ஆதிக்கம் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு சூழ்ச்சியின் மூலம் தான் முடியும் என்பது பார்ப்பனர்களின் முடிவு.

அது போலவே ஸ்ரீமான் ஜோசப் அவர்களும் தங்கள் குறைந்த எண்ணிக் கையை உத்தேசிக்கும் போது தாங்களாகத் தனித்த ஒரு தந்திரமோ அல்லது பார்ப்பனர் களின் தந்திரத்தில் கூட்டு வியாபாரமோ செய்ய வேண்டியதுதான் கிரமமானது என்கிற முடிவுக்கு வரவேண்டியவர்தான். ஆனால் யோக்கியமான முறையில் கிடைக்காத எந்த ஆதிக்கமும் நிலைக்காது என்பதும், நிலைத் தாலும் வாசனையுள்ளதாயிருக்காது என்பதும் எமது துணிவு.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...


மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்


சேலம் ஜில்லாபோர்டு தலைமைப் பதவிக்குத் திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதற்காக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப்-பிடித்துக்கொண்டு திரியும் சில பார்ப்பனரல் லாதார்களும் ஒன்றுகூடிச் சுயமரியாதைக்குப் பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டு மென்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனையோ அக்கிரம மான உத்தரவுகைளப் போடச்செய்து கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயரின் மந்திரி தன்மை தன்மானங்கெட்டு நாடு சிரிக்கயேற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு. எல்லப்ப செட்டியாருக்காவது ஒருவித நஷ்டமும் ஏற்பட்டு விடவில்லை.

நமது நாட்டுச் சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாகவாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ருஜுப்பிக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த பார்ப்பனரல்லா தார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்படாமலும், தூஷிக்கப் படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகைகளாலும் வசை கேட்டுக் கொண்டிருக்கும் தேசிய வீரர்கள்.

தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை ஆயுதங்களாக இருந்து கொண்டு தேச பக்தர்கள், தேசாபிமானிகள் தலைவர்கள் பிரமரிஷி ராஜரிஷி என்கிற பெருமையை அடைந்து கொண்டு இருந்தவர்கள்தான் ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை முடிந்தவுடனே திடீரென்று கீழே தூக்கிப்போட்டு மிதித்து விடுகிறார்கள். உதாரணமாக இப்பொழுது நமது நாட்டிலுள்ள பார்ப்பனர்களெல்லாம் ஒரே அடியாய் ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, எஸ்.முத்தையா முதலியார் ஆகியவர்களை வைத வண்ணமாக இருக்கிறார்கள்.

இவர்களை இதே பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் தூக்கிவைத்து கவி பாடிக்கொண்டு பின்னால் திரிந்தார்கள் என்பது ஜனங்கட்குத் தெரியும். பார்ப்பனர்கள் தனியாய் எங்கேயாவது போனால் பொது ஜனங்களால் கல்லடி சாணி உருண்டை முதலிய மரியாதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிற இடங்களுக்கெல்லாம் மேற்படி கனவான்களைக் கூட்டிக்கொண்டு போவதும் அவர்களை வண்டியில் வைத்து இழுப்பதும், ஜே! போடுவதும் அவர்களது படங்களை பள்ளி அறையில் வைத்துப் பூஜித்து விட்டும் கொஞ்சமாவது இவர்களுடைய அக்கிரமங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டால் உடனே அவர்கள் மேல் கத்தி தீட்டுவதுமான செய்கைகளை நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம்.

அல்லாமலும் சுயமரியாதையுள்ள எந்தப் பார்ப்பனரல்லாதாரை யாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டோ அல்லது வையாமலாவது இருக் கிறார்களா என்பதைப் பார்த்தால் இது அனுபவத்தில் தெரியவரும். இவற்றை எதற்காகச் சொல்லுகிறோமென்றால் இதே ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கட்கும் சேலத்தில் உள்ள அவரது கோஷ்டிக்கும் கொஞ்சம் சுயமரியாதை உதயமான உடனே இவர்கள் பேரிலும் இதே பார்ப்பனர்கள் கத்தி தீட்டுவார்களென்பதை அறிவுறுத்துவதற்காகவேயன்றி வேறல்ல.

திரு. எல்லப்ப செட்டியார் வெற்றியானது பார்ப்பன சூழ்ச்சியின் தன்மையை வெளிப்படுத்தவும், பார்ப்பன சூழ்ச்சியின்று தப்புவதானால் எவ்வளவு பிரயாசை இருக்கிறதென்பதை வெளிக்காட்டவும் ஒரு அறி குறியாகக் கொள்ளலாமே யல்லாமல் மற்றபடி பிரமாதமாய் பாராட்டத்தகுந்த விஷயம் அதில் ஒன்று மில்லை என்பதே எமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது, சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியம் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிடவேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5.30 மணிக்கு கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறுயாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்றுகொண்டு இருந்ததும், கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங்களைப் பற்றி ஒரு நிருபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம்.

இப்போது அதற்கேற்றார்ப் போலவே, இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குக்கு வராததால் அவர் நீக்கப்பட்டுவிட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன் சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண் டிருக்கையில் அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கி விட்டு தனது சவுகரியத்திற்கேற்றபடி இரண்டொரு தீர்மானத்தைச் செய்து பலனடைந்து கொண்டார்.

அது எப்படியோ இருக்கட்டும். வெளிப்படுத்தப்பட்ட கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று அய்க்கோர்ட்டில் விண்ணப்பம் போட்டு சேர்மென் நடவடிக்கை சரியில்லை என்பதாக வாதாடி தாம் கவுன்சிலராக இருக்கலாம் என்பதாக உத்தரவு பெற்று வந்து விட்டார்.

இது மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுயஆட்சிக்கு அருகதை உள்ளவர்கள் என்பதும், வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்க யோக்கியதை உள்ள தர்மகர்த்தர்கள் என்பதும் ருஜுவு செய்ய நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள் நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன்சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள சிப்பந்திகள் நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர்களே போதுமான அத்தாட்சி ஆவார்கள். இந்தியாவின் மானகேட்டுக்கும், இந்தியர்களின் இழிதன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...


கோவை: தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு, நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர் கைது


வடவள்ளி, அக். 5-கோவை வடவள்ளியில் தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடக மாடிய பா.ஜனதா பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வடவள்ளி, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 35). பாரதீய ஜனதா பிரமுகர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், மேல் தளத்தில் ராம நாதனும் வசித்து வந்தனர்.

கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர் களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

பெட்ரோல் குண்டு

இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் 'டமார்' என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாது காப்புக்கு நின்றிருந்த காவலர் சென்று பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவருடைய வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஒருசிலர் போஸ்டர்களை ஒட்டியதால், அதுதொடர்பாக ராமநாதன் காவல்துறையில் புகார் செய்து இருந்தார். எனவே அவர்கள் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராமநாதன் மீது காவல்துறையின ருக்குச் சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தனக்கு கட்சியில் குறைந்துவிட்ட செல் வாக்கை அதிகரிக்க தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டை வீசியதை அவர் ஒப்புக் கொண்டார்.

சிறையில் அடைப்பு!

அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது மதக் கலவரத்தை தூண்டுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவு பிணையில் வெளியே வரமுடி யாதது ஆகும். பின்னர் ராமநாதனை காவல் துறையினர் கோவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ் ஓவியா said...

அது எந்த மதத்துல இருந்தா என்ன?


நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம்? மற்ற மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?

என் அம்மா தீவிர கிறிஸ்டியன். காட் ப்ளஸ் யூ மை சைல்டுனு அவங்க சொல்லும்போது, ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்துல எங்க தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கிட்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா, வாராவாரம் போற சர்ச்ல ஃபாதர் அவர். என் தோட்டத்துல இருக்கிற செடிகளை ஆசீர்வாதம் பண்றதுக்காக வந்திருக்கேன்னு சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியைத் தெளிச்சிட்டு, கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்னு சொன்னப்ப, எனக்குச் சிரிப்பு வந்துடுச்சி. என் அம்மாவுக்கு என் மேல கோபம். எல்லாருடைய தோட்டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்ல காய்கறி விலையாவது குறையுமேனு நான் சொன்னதும் என்னைத் திட்டினாங்க. இயேசுவே, என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சிடுங்கனு பிரார்த்தனை பண்ணாங்க.

சின்ன வயசுல இருந்து இந்தச் சண்டை, என் வீட்ல நடந்துக்கிட்டேதான் இருக்கு. மூடநம்பிக்கை கண்டிப்பா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அது எந்த மதத்துல இருந்தா என்ன?

உங்களின் உண்மையான அக்கறையையும் மனதையும் கண்டுகொள்ளாமல், ஆயிரம்தான் இருந்தாலும் நீ தமிழனில்லை என்று உங்களை யாரேனும் காயப்படுத்தியது உண்டா? அது யார் எவரென்று சொல்லாவிடினும், என்ன நிகழ்வு என்று சொல்லுங்களேன்!?

சில நேரங்கள்ல அப்படி, முட்டாள்தனமா யாராவது சொல்வாங்க. அதுக்கெல்லாம் காயப்பட்டா, அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் மேல் அரசாங்கமே குண்டு போட்டு கொத்துக் கொத்தா மக்கள் இறந்துட்டு இருந்த நேரம். அந்த சமயம் அமெரிக்காவுல நியூ ஜெர்ஸி தெலுங்கு அசோசியேஷன்ல என்னைச் சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டிருந்தாங்க.

அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தெலுங்கு மக்கள் கூடி இருந்த சபை அது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, போரில் அநியாயமா சாகடிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தலாம்னு சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்னாங்க. நீங்க கர்நாடகா, தெலுங்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. தமிழர்களுக்கு எதுக்காக அஞ்சலி செலுத்துறீங்க-னு புலனாய்வு செஞ்சு கேட்டார் ஒருத்தர்.

சக மனுஷனா, யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம். எந்த மொழியா இருந்தா என்னனு நான் சொன்னேன். காவிரி நீர் பிரச்சினை வரும்போதெல்லாம், உங்க கருத்து என்ன?னு கேட்பாங்க. அரசியல்வாதிகளும், அறிஞர்களும், மக்களும் கருத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, ஒரு நடிகன்கிட்ட ஏன் கேட்கிறாங்கனு தெரியலை.

தெரிய வேண்டியவர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சா போதும். எல்லார்கிட்டயும், நன்னடத்தைச் சான்றிதழ் கேட்டுட்டும் இருக்க முடியாது. நம்மளை விமர்சிக்கிறவங்ககிட்ட, அதைக் காட்டிட்டும் இருக்க முடியாது!

நன்றி : ஆனந்த விகடன், 25.9.2013

தமிழ் ஓவியா said...

இவர்தான் பாரதியார்


தமிழர்களில் யாரொருவர் அறிவாளியாக இருந்தார்களோ அவர்களைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனர்களின் சுபாவம். அதற்கு பாரதியாரும் விதிவிலக்கல்ல. பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) சமூகம் என்ற தலைப்பில் பக்கம் 74இல் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து... என்று எழுதியிருக்கிறார். பாரதியார் ஒரு கவிஞர்; ஆராய்ச்சியாளர் அல்ல. ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்தது வரலாறு. அவரவர் இயற்றிய பாடல்களைத் தவிர அவர்களைப் பற்றிய வேறு சான்றுகள் யாதும் கிடையாது.

குறிப்பாக அவர்கள் பிறந்த வருடம், மாதம், தேதி, பெற்றோர் பெயர் போன்ற எதுவும் ஆதாரப்பூர்வமாகக் கிடையாது. அவ்வாறிருக்க அவர்களின் தகப்பனார் பார்ப்பனன் என்று கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.

மேலும் பாரதியாரின் ஜாதி வெறி எவ்வளவு என்பதை மேற்படி புத்தகத்தின் 79ஆம் பக்கத்தில் பார்க்கலாம். அது அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம் என்று கூறியுள்ளார். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி ஆரியர்கள் வந்தேறிகள். அதாவது, ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்கு வந்தவர்கள். திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள். இனத்தால் ஆரியர்கள், மனுதர்ம சாஸ்திரப்படி பிராமணர்கள். அதாவது நான்கு வர்ணத்தில் முதல் வர்ணம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பார்ப்பனர்கள். அதைப் பாரதியாரே ஒப்புக் கொண்டு அவருடைய கவிதைகள் அனைத்திலும் பார்ப்பனன் என்றுதான் பாடியிருக்கிறார். இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் ஆவர்.

அவ்வாறு 100க்கு 3 வீதம் உள்ள மக்கள் பெயரால் 100க்கு 97 வீதம் வாழும் மக்கள் உள்ள நாட்டை (அதிலும் முகம்மதியர், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர் மேலும் மதநம்பிக்கை அற்றவர்கள் கணிசமாக வாழும் நாட்டை) பிராமண தேசமாக மாற்றிவிட வேண்டும் என்று தன் ஜாதி அபிமானத்தை/அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்.

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

உடல் உறுப்புதானம் தமிழ்நாட்டிற்குப் பெருமை!


உடல் உறுப்பு தானத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 2,076 பேர் பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 83 சதவீதம் பேரும், தீவிர நோயினால் மூளைச்சாவு அடைந்த 17 சதவீதம் பேரும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இவர்களில் 64 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் 80 சதவீதம் பேர் ஆண்களாகவே உள்ளனர். 10 லட்சம் பேரில் 1.1 சதவீதம் பேர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 34 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2008 முதல் இதுவரை 689 சிறுநீரகம், 339 கல்லீரல், 58 இதயம், 24 நுரையீரல் என 1,110 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 578 கண்கள், 380 இதய வால்வுகள், 1 தோல் தானமாகப் பெற்று 969 திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 800 பேர் சிறுநீரகத்துக்காகவும், 80 பேர் கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

உயர் கல்வியின் நிலை


மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களும, பல்கலைக்கழகங்களும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. மத்திய அரசும் உயர் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவுசெய்து வருகிறது.

எனினும், உலக அளவில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் டில்லி அய்.அய்.டி.க்கு 222ஆவது இடமே கிடைத்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இருப்பதாக லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குவாகுரேலி சைமன்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மும்பை அய்.அய்.டி. 233ஆம் இடத்தையும் சென்னை அய்.அய்.டி. 331ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய அளவில் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், ஹாங்காங் பல்கலைக்கழகமும் இரண்டாம் இடத்தையும், சியோல் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. டில்லி அய்.அய்.டி. 38ஆம் இடத்தையும் மும்பை 39ஆம் இடத்தையும் சென்னை 49, கான்பூர் 51, காரக்பூர் 58, ரூர்க்கி 66ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவில் 600க்கும் அதிகமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

உயிர்களின் பிறப்பிடம் செவ்வாய் கிரகம்?


உலகம் எப்படித் தோன்றியது? படைத்தது யார்? உயிர்கள் தோன்றியது எப்படி? போன்ற பல வினாக்கள் நம்முன் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. இந்த வினாக்களுக்கு விடைதேடி விஞ்ஞானிகள் பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இப்படி ஆய்வுசெய்துவரும் அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர், ஃப்ளோரன்சில் நடைபெற்ற 23ஆவது கருத்தரங்கில், மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எங்கும் வடமொழி; எதிலும் வடமொழியா?


கேள்வி கேட்கும் இந்தி அல்லாத மாநிலங்கள்

தாய் மொழி, வடமொழி என்றெல்லாம் பேசினாலே திராவிட இயக்கங்கள் இப்படித்தான் பேசும் என்று கடந்து போய்விடுவார்கள் சிலர். ஆனால், பின்வரும் கட்டுரை ஆங்கில இதழான அவுட்லுக்கில் பிரணாய் சர்மா என்பவர் எழுதியது.

பெயரில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இந்திய கப்பற்படை விரும்பாது. அண்மையில் அய்.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் துண்டுதுண்டாக சிதறிப்போனது.

சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நமது பல கப்பல்கள், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் பெரும்பாலும் இந்துமதக் கட்டுக்கதைகளிலிருந்தோ சமஸ்கிருதத்திலிருந்தோதான் பெயரிடப்பட்டு உள்ளன.

1948லிருந்து புதுப்படைக் கப்பல்களுக்குப் பெயர் வைப்பதில் இந்தியா தனக்காக ஒரு கொள்கையை வகுத்திருந்தது. இந்தியாவில் தோன்றிய பெயர்களை அவை கொண்டிருக்க வேண்டும். அதன்படி இலகுரக கப்பல்கள் மலைகளின் பெயர்களையோ _ அதன் உச்சிகளின் பெயர்களையோ கொண்டுள்ளன. பெரும் போர்க் கப்பல்கள் தேசியத் தலைநகரங்களின் பெயர்களைக் கொண்டிருக்கும். தாக்கி அழிக்கும் கப்பல்கள் ஒரே முன்னெழுத்துக்களைக் கொண்டிருக்கும். பல ஆயுதங்களைக் கொண்ட விமானங்கள் ஆறுகளின் பெயர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிகள் இந்திய ஆயுதங்கள் பெயரிலும், நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வகை மீன்கள் பெயரிலும், புதைகுண்டுகள் அழிப்பான்கள், இந்திய மாநிலங்கள் பெயரிலும் அழைக்கப்படுகின்றன.

அரிஹந்த், விக்ரந்த் போன்ற பெயர்களை வடமொழியிலிருந்து எடுப்பது சில ஆண்டுகளாக இந்திய கப்பற்படை கடைப்பிடித்துவரும் முறைகளில் ஒன்றாகும்.
சில கப்பல்களின் பெயர்கள், சக்ரா, விக்கிரமாதித்யா, சிந்துகோஷ், சிந்துத்வாஜ், ஷங்குல், ஷால்கி, சங்குஷ், ஷிவாலிக், அய்ராவத், திரிசூல், நிர்பிக், வினாஷ், பிரபால் மற்றும் பிரளயா என்று உள்ளன. அவை முழுதும் வடமொழியே; சில மட்டும் இந்துக் கட்டுக்கதைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. நமது ஏவுகணைகள் பிரித்வி, ஆகாஷ், திரிசூல், மற்றும் நாக் என்று பெயரிடப்பட்டுள்ளன. நமது போர் டாங்கி அர்ஜுன் என்றும் பல்முனைத் திறன் கொண்ட ஜெட் போர் விமானம் தேஜாஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அண்டையில் உள்ள பாகிஸ்தான் மத அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நாடு. கடந்த 60 ஆண்டுகளில் தனது இஸ்லாமியத்தனத்தைக் காட்ட அது தவறியதே இல்லை. நாட்டில் ஆயுதங்கள் முதலியவற்றிற்குப் பெயரிடும்போது, இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லிம் மன்னர்களின் பெயர்கள் இடப்படுகின்றன. ஆனால் அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட மன்னர்கள் இந்துக்களை மட்டும் அல்லாது, ஏராளமான முஸ்லிம் குடிமக்களையும் வேதனைப்படுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தானின் செயல்களை ஒரு கண்ணாடி போல் பிரதிபலிக்க விரும்புகிறதா? இந்தியா அதிக அளவில் இந்துக்களைக் கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் மதச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இன்று பேசப்படும் பல மொழிகளுக்கு வடமொழி பெற்ற மொழியாக இருக்கலாம். ஆனால் நமது பல மொழிகள், வடமொழியுடன் சிறிதும் தொடர்பில்லாதவை. நவீன, மதச்சார்பற்ற, இந்தியாவை பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளும், மதங்களும் உண்டாக்கியிருக்கின்றன. நாம் ஏன் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை, அவர்களது பெயர்களை வைத்துக் கவுரவப்படுத்தக் கூடாது? வடமொழியைப் பற்றி நாம் கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
உண்மையில் மதச்சார்பற்ற பன்முக இந்தியாவின் உண்மையான கொண்டாட்டமாக, இனி நாம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைத் தாங்கிகளுக்கு, பரந்த, ஆழமான சொற்களைக் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெயர் பொறுக்குவோமாக.

மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல கடற்படையில் மட்டுமல்ல; விமானங்கள், விண்கலங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என எல்லாமே சமஸ்கிருதப் பெயர்களுடனேயே உலா வருகின்றன என்பது கண்கூடு. அண்மையில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள விண்கலத்துக்கு செவ்வாய் என்பதன் சமஸ்கிருதப் பெயரான மங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. திட்டங்களுக்கேற்ற பெயர்களை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் சுழல் முறையில் ஏன் வைக்கக் கூடாது என்னும் கேள்வி இன்றைய இளைய தலைமுறையினரால் சமூக ஊடகங்களில் எழுதப்படுகிறது. இந்தி ஆதிக்கமும், சமஸ்கிருதத் திணிப்பும் பல்வேறு வழிகளில் நடப்பதை இன்று தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களும் கவனித்து வருகின்றன. இதற்கென தனித்தனிக் குழுமங்களில் மொழிச் சமஉரிமைக்காக விவாதங்களும் நடக்கின்றன. இந்த உணர்வு வரவேற்கத்தக்கதேயாகும். இன்னும் இதை உணராமல் மத்திய அரசு செயல்படுமானால் வலுவான குரல்கள், போராட்டங்கள் எழும் என்பதே உண்மை.

- சமன், தமிழில் ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

சமாதி ஆதல் எனும் ஏமாற்று வேலை


இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் சென்றார். அதற்காக ஒரு பூனையை நரபலியிட்டார்.

பிறகு வீட்டருகே சிறிய குழிதோண்டி அதற்குள் சமாதியிலிருந்து மீண்டு வருவேன் என்றும், குழிக்குள் இருந்து வாளை நீட்டி சிக்னல் கொடுத்த பிறகே மண்ணைத் தோண்டவேண்டும் என்றும் கூறினார். அதுபோலவே குழிக்குள் அவரை வைத்து மண்ணைப் போட்டு மூடினர். 3 மணி நேரமாகியும் வாள் வெளியே தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குழியைத் தோண்டியபோது மந்திரவாதி மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த விவரம் போலீசுக்குத் தெரியவரவே பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துகிறார்கள்.

இப்படி ஒரு செய்தி தினத்தந்தியில் வந்துள்ளது. சமாதியிலிருந்து மீண்டு வரலாம் என்று யாரோ சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

சமாதியிலிருந்து உயிரை விடலாமே தவிர உயிரோடு மீண்டும் திரும்பிவர முடியாது. இதுவும் ஒரு வகையான தற்கொலை மாதிரித்தான். துறவிகள் இந்தத் தற்கொலையைச் செய்து கொள்வதால் அது சமாதி என்ற பெயரைப் பெற்றுக் கொள்கிறது.

மனிதர்களைப் போலவே துறவிகளுக்கும் சலிப்பு உண்டாகும். அந்தச் சமயத்தில் சமாதியாகப் போகிறேன் என்று பக்தர்களிடம் தெரிவித்து விட்டு, தனியறையில் போய் அமர்ந்து கொண்டு மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கி உயிரை விட்டு விடுவார்கள். இதற்கும் பெரிய மன உறுதி வேண்டும். என்றாலும் சில துறவிகள் பேர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் தான் சமாதியாக வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தினால் எந்தச் சாமியாராலும் சமாதி ஆக முடியாது. வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களில் சிலர் உயிர் போகவில்லை என்று தெரிந்தால் மூச்சை அடக்கி செத்துப் போவார்கள். எனவே சமாதி என்பது பெரிய ஏமாற்று வேலைதான்.

- தேன் தினகரன்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுப் பூந்தோட்டம்


துண்டு போடுவதை - தோளில்
துண்டு போடுவதை
அனுமதித்தவன் நீ.
ஆனால் தமிழன்
துண்டு படுவதை
ஆட்சேபித்தவனும் நீயே.

நீ ஓட்டுக் கேட்க வரவில்லை - செய்திகளை
ஒட்டுக் கேட்கவும் இல்லை - ஆனால்
ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின் விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்து
ஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்ட
ஒரே தலைவன் நீதான்.

முகத்தைப் பார்த்தாலே
பணம் வாங்கும்
பல வைத்தியர்களிடையே -
பணம் வாங்காமலேயே
சமுதாய வைத்தியம் செய்த
அதிசய வைத்தியன் நீ - தமிழினத்தின்
அன்புத் தந்தையும் நீயே.

மூட நம்பிக்கை என்ற
ஒட்டடை படிந்து இருந்த
ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் இருந்த
தூசியை அகற்றி - தூய்மைப்படுத்தி
பகுத்தறிவு ஓவியம் வரைந்திட்ட
பைந்தமிழ் லியனார்டோ-டா-வின்சியும் நீயே.

நீ தோழமையின் தொங்குந் தோட்டம்
தினமும் பார்க்க வேண்டிய
தித்திக்கும் தேரோட்டம்.
நீ இங்கு தோன்றவில்லை என்றால்
இருந்திருக்காது தமிழருக்கு
இரத்தத்தில் இன உணர்வோட்டம்.
என்றுமே நீ(ங்கள்)
பகுத்தறிவுப் பூந்தோட்டம்.

தமிழ் ஓவியா said...

பிஞ்சுகளைப் பலி வாங்கிய ஊர்வலம்


சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ஏரிக்குச் சென்று கரைக்கப் போறோம். வர்றவங்க ஏறி வேன்ல பிள்ளையார் பக்கத்தில் உட்காருங்க என்று ஒர் இளைஞன் சொன்னதும் சிறுவர்கள் ஓடிச் சென்று ஏறினர்.

வழக்கமாக 2, 3 காகிதப் பிள்ளையார் இருக்கும் கிராமத்தில் இந்த ஆண்டு 7 பிள்ளையார் கள் உருவெடுத்திருந்தனர். அதில் மூன்றைக் கொண்டு சென்று கரைத்துவிட்டுத் திரும்பினர். சென்ற சிறுவர்களுள் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் 9 வயது கணேச மூர்த்யையும் 14 வயது சந்தோஷ்குமாரும் வீட்டிற்கு வரவில்லை. எங்கே சென்றாலும் ஒன்று போல் செல்லும் இவர்களைக் காணாமல் ஏரிக்குத் தேடி ஓடினர்.

பூக்கள், மாலைகள், காகித அட்டைகளுடன் இரண்டு பிஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் ஊராரும் கதறி அழுதுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடி விளம்பரம் : தேன் தடவிய விஷ உருண்டை

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயாவாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு - உருவாக்கம்தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!



அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து தோற்றுவிட்ட நிலையில்தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.

அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படுமோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.

மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!

பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை -_ சமூகநீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன்னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!

பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (விறீவீஸீணீவீஷீஸீணீறீ) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.

அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டுத் திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.

தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங்கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக்கப்பட்டுவிட்டது போல், பார்ப்பன பனியா _- ஊடகங்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!

பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் -_ பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் _ -ஹிந்து மதம் ஒரு மொழி _- சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் _- பார்ப்பனீய _ ஆரிய சனாதன மதக் கலாச்சாரம்,

(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)

18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள் _ வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத்தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!

மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை -_ எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களைத் தெருப் பிச்சைக்காரர்களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று கேட்கும், மைனாரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவதுதானா வளர்ச்சி? (Growth) அப்படியும் அங்கு _- மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!

தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணையதளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வரதட்சணைக் கொடுமை


ஆணுக்குப் பெண் சமம்; எந்த விதத்திலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்று நிரூபித்து வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை மட்டும் பெண்களை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை.

2012ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சம்பந்தப்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் பலியாகிறாள். 2007_2011க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை தொடர்புடைய இறப்புகள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதமோ 35.8லிருந்து 32 ஆகக் குறைந்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து, 1983ஆம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வரதட்சணை இறப்புகளில் பிடுபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமீனில் வெளியில் வரவும், தண்டனையில் இருந்து தப்பிவிடவும் காரணமாக உள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன என்று சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


புராதனம்?


சிதம்பரம் நடராசன் கோயில்பற்றி தினமணி ஏட்டில் (5.10.2013) பக்கம் 3இல் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.

சிதம்பரம் ஸ்ரீநடராசர் கோயிலில் உள்ள கனக சபையில் நடைபெற்று வந்த எக்ஸாஸ்டர்ஃபேன் பொருந்தும் பணி, தீட்ச தர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் வீற்றுள்ள சித்சபைக்கு முன்புள்ள கனகசபையில் எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணி கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த ஃபேனை மும் பையைச் சேர்ந்த பக்தர் உபயமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இக்கருவி பொருத்தப் படுவதால் கோயிலில் கனக சபை மற்றும் சித்சபையின் புராதனம் கெட்டு விடும் எனக் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பொது தீட்ச தர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணி தற் காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற தீட்சதர்கள் கூட்டத்தில் எக்ஸாஸ்டர் ஃபேன் பொருத்தும் பணியை முழு வதுமாக நிறுத்தி விடுவ தென முடிவெடுக்கப்பட் டது - என்பதுதான் தினமணியில் வெளிவந்த தகவலாகும்.
இதைவிடப் படு தமாஷ் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

கோயில்களில் ஒரு கால கட்டத்தில் தீவட்டிப் பிடித் துத்தான் வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டு இருந்தார்கள் இப்பொழுது அந்தத் தீவட்டியைக் கோயில்களில் காண முடியுமா?
திருப்பதி கோயில் கருவறை ஏர் கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதே - அது எந்த ஆகமத்தில் கூறப்பட் டுள்ளது - இதன் மூலம் புராதனம் கெட்டுப் போய் விடவில்லையா?

தேருக்குக் கட்டை களால் முட்டுக்கட்டை கொடுத்து வந்ததுதானே புராதனம் - அய்தீகம். திரு வாரூர் தேருக்கு ஹைட் ராலிக் பிரேக் (திருவெறும் பூர் பெல் நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது) பயன்படுத்தப்படுகிறதே - அது எந்த சிவாகம ஆகமத் தில் சிலாகிக்கப்பட்டுள்ளது.

கோயில் படையல் கோயிலின் மடப் பள்ளியில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதானே அய்தீகம் இப்பொழுதெல்லாம் என்ன நடக்கிறது?

மாமி தானே சமைத்து கொடுத்து அனுப்புகிறார் அதனால் எல்லாம் கெட்டுப் போகாத புராதனம், நவீன முறையில் காற்றை சுத்தி கரிக்கக் கூடிய எக்ஸாஸ்டர் ஃபேன் வைப்பதால் புரா தனம் கெட்டு விடும் என் றால் எவ்வளவுப் பிற் போக்கான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

தீட்சதர்கள் வீட்டைப் போய்ப் பாருங்கள் எவ் வளவு ஹைடெக் வசதி யோடு வாழ்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர்மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கைது


விருத்தாசலம், அக். 6- விருத்தாசலத்தில் கடந்த 28ஆம் தேதி நடை பெற்ற திராவிடர் கழக கடலூர் மண்டல மாண வரணி மாநாட்டில் பங்கேற்க வந்த திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்ன ணியைச் சேர்ந்தவர் களை காவல்துறை நேற்று (5.10.2013) கைது செய் துள்ளது. இத்தாக்குத லில் மேலும் தொடர் புடைய 28 பேரை தேடி வருகின்றனர்.

விருத்தாசலத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாடு நடை பெற்றது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியான திறந்தவெளி மாநாட் டில் கலந்து கொள்வ தற்காக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது வாகனத் தில் மாநாட்டு மேடையை நோக்கி வந்துகொண்டி ருந்தார். அப்போது, பாலக்கரை மேற்கு பகுதியில் தலைவர் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய தேசிய யாதவ மகா சபை மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பாஜக ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணியைச் சேர்ந்த கமலக்கண்ணன் ஆகி யோர் தலைமையிலான கொலை வெறி கும்பல் பைலட் வண்டியைத் தாக்கி அந்த வண்டியில் பறந்து கொண்டிருந்த திராவிடர் கழகக் கொடியை கிழித்து எறிந்தது. மேலும், தமிழர் தலைவர் இருந்த வாகனத்தை கைகளா லும், கம்புகளாலும் தாக்கி தலைவரை கொலை செய்யும் முயற்சியில் அந்த கும்பல் ஈடுபட் டது. இதுகுறித்து, திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில் 30 பேர் மீது (147, 148, 341,294 , 427, 506/2) 6 பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்த காவல் துறையினர் சனிக்கிழமை மங்கலம்பேட்டை கணேசன் மகன் ராஜேந் திரன் (வயது 48), ராம நாதன் மகன் கமலக் கண்ணன் (வயது 35) ஆகியோரை கைது செய் தனர். இதில், ராஜேந் திரன் என்பவர் பாஜக ஒன்றியத் தலைவர் என் பதும், கமலக்கண்ணன் இந்து முன்னணி ஒன்றிய அமைப்பாளர் என்ப தும் குறிப்பிடத் தக்கது. இவ்வழக்குத் தொடர் பாக மேலும், 28 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் யாதவ சமுதாய மக்கள் நன்றி மறவாதவர்கள்

யாதவ மகாசபை தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் என்று அன்போடு மதிக்கப்படும் மானமிகு கி.வீரமணி அவர்கள் கடந்த சனியன்று தாக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை, மன வேதனையையும் அளிக்கிறது. அதற்குக் காரணமானவர்களை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயலை யாதவ மகா மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழர் தலைவர்மீது நடந்த தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கின்றோம். சமூக நீதிக்காக தனது 95 வயதிலும் தளராது பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக மண்டல் குழுப் பரிந் துரைகளை அமலுக்குக் கொண்டு வர இந்தியா முழுவதும் ஓடி ஓடிப் பணியாற்றி, 27 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த வீரமணி அவர்களின் சேவையை மறந்தோர் நன்றி கெட்டவர்கள் ஆவார்கள்.

யாதவர்கள், தந்தை பெரியாருக்கும், தமிழர் தலைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் - நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தில் கி.வீரமணி மீது தாக்குதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன தீர்மானம்


விருத்தாசலம், அக். 6- விருத்தாசலத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி காரை வழிமறித்து தாக் குதல் சம்பவத்திற்கு, நடவடிக்கை எடுக்க தவறிய காவலரைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் தமிழினியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர் தமிழ்மாறன், நகர செயலாளர் சோதிபாசு மற்றும் ஒன்றிய நிர்வாகி கள் இளையபெருமாள், அம்பேத்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கங்கைகொண்டான் நகர அமைப்பாளர் அசு ரன் வரவேற்றார். கூட் டத்தில் சிறப்பு அழைப் பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் தயா.தமிழன்பன், பொருளாளர் அய்யா யிரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாக்குதல்

இதில் கடந்த 28-ஆம் தேதி விருத்தாசலம் வந்த திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி காரைத் தாக்க முயன்ற சம்ப வத்தை வன்மையாக கண்டிப்பது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட் டவர்கள் குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத காவலருக்கும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

வருகின்ற 26-ஆம் தேதி நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகப் பனாருக்கு சிலை திறப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவது, இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் குரு, மணிவாசகம், அங்க அருள், ரவி, நிர் வாகிகள் குமார், ஆறு முகம், எஸ்தாக்கி, உட் பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் நகர அமைப்பாளர் மருதை யன் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


ஹிட்லர், முசோலினி போன்றவர் நரேந்திரமோடி, அவர் பிரதமராகக் கூடாது


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி பேட்டி


பெங்களூரு, அக்.6- குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி ஹிட்லர், முசோலினி போன்றவர். அவர் பிரதமராகக் கூடாது என்று கருநாடகாவை சேர்ந்த சாகித்ய அகா டமியின் ஜன்பித் விருது பெற்ற எழுத் தாளர் ஆனந்தமூர்த்தி கூறினார்.

சமீபத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானால் அப்படிப்பட்ட நாளில் நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றுகூறினார். இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி யிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மோடிபிரதமராவதற்கு முன் நான் இறந்துவிட விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவரது பேட்டி விவரம்வருமாறு-

கேள்வி: மோடி பிரதமரா னால் நான் நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன? பதில்: அப்படி நான் கூறியதற்கு நான் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. எனக்கு குடியேற வேறு நாடு இல்லை. உண்மையை கூறினால் கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியே போகவும் விருப்பமில்லை. எனது உடல் ஆரோக்கிய நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. அதை மன தில் வைத்து மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இறந்துவிடுவேன் என்று கூறினேன்.

கேள்வி: மோடி பிரதமர்ஆகக்கூடாது என்று குறிப்பாக சொல்ல காரணம் என்ன?

பதில்: மோடிக்கு குற்றஉணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களை கொலை செய்வது அரசியலில் நியாயமா னது என்று அவர்கள் கருதுகிறார் கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாச மும் இல்லை. இந்தியாவுக்கு லால் பகதூர் சாஸ்திரி, பி.ஆர். அம்பேத் கர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் ஏ.பி. வாஜ்பாயி போன்ற வர்கள் தான் தேவை. அவர்கள் சாதி, மதம், கலாச் சாரம் போன்ற விஷயங்களில் வெளிப் படையாக பணியாற்றினார்கள். தற்போது இந்தியாவில் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கேள்வி: நீங்கள் மோடியை எதிர்த்து பேசியதிலிருந்து பி.ஜே.பி. உங்களை காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறி வருகி றது.

பதில்: நான் நீண்ட காலமாக காங் கிரசை எதிர்த்து வந்தேன். நான் ஒரு சோசலிஸ்ட். கடந்த நாடாளுமன்ற தேர் தலில், நான் காங்கிரசை ஆதரித்து பிரச் சாரம் செய்தேன். அது பற்றி எனக்கு வருத்தமில்லை. காங்கிரஸ் கட் சிக்கு மாற்றான கட்சி இல்லை என்று நான் உறுதியாக கருது கிறேன். செய்தியாளர்களிடம் ஆனந்தமூர்த்தி மேலும் கூறிய தாவது-

மோடி பிரதமர் ஆவதற்கு அவ சரப்படுகிறார். ஆபத்தான விஷ யங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோ சனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவ மும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங் கள் தான் அவரை பெரிதுபடுத்தி வருகின்றன என்று ஆனந்த மூர்த்தி கூறியுள்ளார்

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில்களில் உண்டியல், பணம் கொள்ளை


கோவை, அக். 6- கோவை பாப்ப நாயக்கன் பாளையம் குட்டை பார்க் அருகில் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன் தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜை முடிந்து இரவு 9.30 மணி அளவில் கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பூசாரி கோவி லுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. மற்றொரு உண்டியலை காணவில்லை.

மேலும் பீரோவில் இருந்த அம்மன் பட்டு சேலைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை அப்படியே கிடந்தது. இதே போல அதன் அருகில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவிலிலும் கதவை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென் றுள்ளனர். ஒரு டி.வி.டி. பிளேயரையும் எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் சிறுகாளியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில்களிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கோவில் உண்டியல்களிலும் ரூ. 10 ஆயிரம் வரை திருட்டு போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளை குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

தமிழ் ஓவியா said...


Banner
திருச்சியில் பா.ஜ.க., காட்டிய மோடி வித்தை (உடனிருந்து கண்டு எழுதுபவன்)


பெரியார் பூமியாம் தமிழகத்தில் மதவாத சக்திகள் தங்களது காலை ஊன்றத் துடிக் கின்றன. ஆர்.எஸ்.எஸ்., போன்ற பார்ப்பன சக்திகளால் மதவாதத்தைத் திணிக்க முடிய வில்லை என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சுக்ரீவன் மோடியை முன் நிறுத்தி மறைந்திருந்து அம்பு தொடுக்கிறது.

கடந்த 26.9.2013 அன்று திருச்சியில் அழைத்து வரப்பட்ட கூட்டத்தை வைத்து வெற்றி பெற்று விட்டோம் என கொக்கரிக்கிறது. மிகப் பெரிய கூட்டம் என மகிழ்கிறது. ஒரு காலத்தில்
பழனி பாபாவுக்குக் கூடாத கூட்டமா?

சினிமாக்காரர்களுக்குக் கூடாத கூட்டமா?

டில்லியில் அன்னா ஹசாரேவுக்குக் கூடாத கூட்டமா?

டில்லியில் பாபா ராம்தேவுக்குக் கூடாத கூட்டமா?

ஏன்?

ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டிற்குக் கூடாத கூட்டமா?

4½ இலட்சம் பேர் கூடினார்கள் என்று பா.ஜ.க. கூறுகிறது.

1½ இலட்சம் பேர் கூடினார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

உண்மை நிலை என்ன?

கார், வேன், பேருந்துகள் என்று திருச்சி மாநாட்டுக்காக கொண்டு வரப்பட்ட வாகனங் களின் எண்ணிக்கை சுமாராக 3000 இருக்கும். (நேரில் எண்ணிப் பார்த்தது) மூவாயிரம் வாகனங் களும் வந்து போக ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு? வரும் ஆட்கள் உணவு செலவு உட்பட ரூ.10,000 செலவு செய்துள்ளனர். எனில் மொத்தம் வாகனங்களுக்காக மட்டும் மூன்று கோடி செலவு செய்துள்ளார்கள்.

ஒரு வாகனத்திற்கு 15 பேர் என வைத்துக் கொண்டால் கூட அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,000 பேர் மட்டுமே. இவர்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாகனங்களிலேயே தங்கி உணவு உண்டு, சீட்டுக் கச்சேரி நடத்தி பொழுதை கழித்தனர். திருச்சி மன்னார்புரம் நால்ரோடில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அலை மோதியது. இதுதான் நடந்த உண்மை.

மேலும் இன்னொரு உண்மைக் கணக்கை சொல்கிறேன். மாநாடு நடந்த ஜி. கார்னர் மைதானம் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

5 ஏக்கர் = 5 X 45,000 சதுர அடி
= 2,25,000 சதுர அடி

இதில் 10 சதவீத இடம் மேடை, நடைபாதைக்கு கழித்து விட்டால் மீதமுள்ள இடம் 202500 ச.அடி., ஒரு ஆள் நாற்காலி போட்டு உட்காருவதற்கு தேவையான இடம் குறைந்தது 6 ச.அடி.

எனவே மைதானத்தில் எத்தனை பேர் அமர முடியும் என்றால்

= 202500 6
= 33750 பேர்

எனவே, அந்த மைதானத்தில் 33750 பேர் மட்டும் தான் அமர முடியும். மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை பார்க்கும்போது 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாக இருந்தன. ஆனால்
பா.ஜ.க. 4ஙூ இலட்சம் என்கிறது.

ஊடகங்கள் 1ஙூ இலட்சம் என்கின்றன.

உண்மை நிலை என்ன என்று ஊகித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!

தமிழ் ஓவியா said...


இடியும், அடியும் இனி யாருக்கு?


புலியை இடறப்
புளியோதரைகள் புறப்பாடா?

சிங்கத்தைச் சீண்டிட
சிறுநரிகள்
சேட்டையா?

எதிர்ப்பு எரிமலை
இடுப்பில் தவழ்ந்த
இயக்கமடா இது!

எதிர்ப்புப் பாஷாணம்
எங்களின் இனிப்புப்
பண்டம்!

இடையூறு
எங்களுக்கு
இன்பச் சுற்றுலா

கல்லடி
எங்களுக்குக்
கற்கண்டு

தடியடிகள்
தாவும்
பூச்செண்டு!

தாக்குதல் ஏற்று
தோள்களால்
சிரிப்போம்!

வன்முறை கண்டு
வாய்விட்டு
நகைப்போம்!

மலிவாகவா
பெற்றோம்
உரிமைகளை?

விலைமிகையாய்
அன்றோ
கொடுத்தோம்!

தூக்கில் ஏற்றினாய்
ஆசிரியர்
வேலாயுதத்தை

துவண்டு போனதா
தூய திராவிடர்
இயக்கம்?

நடராசன்
ஈந்த உயிர்
நட்ட மானதா?

தாலமுத்து
தந்த உயிர்தான்
பொய்த்ததா?

இந்தியின்
வாலை
நறுக்கியதே!

இருமொழிதான்
என்ற சட்டம்
நடக் கிறதே!

மம்சாபுரம்
என்ன செய்யும்?

மண்டல்
பரிந்துரைகள்
மலர்ந்ததே!

தாதம்பட்டி
தாக்குதல்
வென்றதா?

தலைவரின்
நடையைத்தான்
தடுத்ததா?

விருத்தாசலத்தில்
சலசலப்பு
காட்டினாய்

உலகெங்கும்
புதுத்தெம்பை
ஊட்டினாய்!

ஆயிரங்கால்
முளைத்ததடா
அறிவிலியே!

புதுத் தெம்பும்
பிறந்ததடா
பித்துக் குளியே!

அடித்தவன் பெயர்
யாருக்கடா
தெரியும்?

அடிபட்டவர்
அல்லவா
ஒளிர்கிறார்

எண்பது வயதை
இளமை
யாக்கினாய்

இனி விழும்
இடியெலாம்
ஆரியத்துக்கே!

வைக்கும் அடிகளோ
வைதிகத்தை
நொறுக்கவே!

தனி மனிதரல்ல
தமிழர் தலைவர் வீரமணி

தரணி மாந்தர்
தழு தழுக்கச்
சொல்லுகின்றார்

துரோகியே
துக்கப்படு
அழு! அழு!!

உமக்காக
உழைப்பவரைத்
தீண்டினாய்

உம்மை நோக்கியா
எங்களின்
உரிமைப் போர்?

மூலபலத்தின்
வேரினை
முறிக்கவே!

அடி இனிமேல்
விழும் விழும்
கனமாய்!

அடிதான் நீ எடுத்துக்
கொடுத்து விட்டாயே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


இணைய வாசகர் கருத்து

எந்த ஒரு இனம் தன் வரலாற்றினைத் தொலைக்கின்றதோ அந்த இனம் வரலாற்றிலும் தொலைந்துவிடும் என்பதனை உணர்ந்து, என்னருந் இளந் தமிழ்க் குமுகாயமே தமிழ் மொழியின் தூய்மை காத்து, மூட நம்பிக்கைகளை விட்டொழித்து, பகுத்தறிவு துணைகொண்டு, பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேலை நாட்டவர் போல் நிகழ்த்தி, மாந்த இனம் அனைத்தும் பயன்பட உழைப்பதோடல்லாமல், தமிழர்கள் இழந்த பழம் பெருமையை இந்நானிலம் அறிய நிகழ்த்திட அனைவரும் கூட்டாய் முயன்றிடுவீர்! திரைப் பட பித்து, பிற இன்னோரன்ன தடைகளை தவிர்த்து, விடுதலை, உண்மை போன்ற இதழ்களுடன் அறிவு சார்ந்த வேறு பல இணைய தளங்களிலும் நாட்டம் செலுத்தி(எ.கா. நாசா,நேச்சர், சைன்டிபிக் அமெரிக்கன்....) தமிழிலும் இவை போன்ற அறிவியல் இணையதளங்களை அமைத்து அனைவரும் இவ்வியக்கத்தில் பங்கேற்கும் வண்ணம் செயல் பட முன்வாருங்களென ஒரு தமிழினப் பற்றாளன் என்ற வகையில் வேண்டுகின்றேன்! உங்கள் நண்பர்கள்,தோழர், தோழியர் அனைவருக்கும் விடுதலை, உண்மை இதழ்களைப் பற்றி எடுத்துச்சொல்லி இவைகளே தமிழர்களின் பாது காப்பு அரண் என்பதனை அவர்களுக்கும் உணர்த்துவீர்! நன்றி.

- எத்திராஜ்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் பற்றி....


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே
சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய
நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள்
விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி
வைத்தார்கள். இந்த கற்பனைக்கதைகள்
அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட
எண்ணத்துடன், சாமர்த்தியமாய்ப் பிறரை
அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக்
கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.

- ஹென்றி பெவரிட்ஜ் (விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம் 1895)

தமிழ் ஓவியா said...


பாதிரியார் இவர்!


வழிபட வந்தவர்களையே உணவாக்குவதா? பாதிரியார் பக்தர்களையே உணவாக்கிக் கொண்டதாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டியுள்ளது.

20 பெண்களுக்கு மேல் பாதிரியார் வன்புணர்ச்சி செய்ததாகவும், அவர்களில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசும் ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர் ஆவர்.

2004 அக்டோபரிலேயே இந்தத் தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. நார்வாக்கிலுள்ள லாஸ் பியூனஸ் நவாஸ் தேவாலயத்தில் காஸ்ட்ரோ துணைப் பாதிரியாராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து 2012 செப்டம்பர் வரை தொடர்ந்து இந்த தவறுகள் நடந்து வந்துள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சென்ற வெள்ளிக்கிழமை காஸ்ட்ரோ நார்வாக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சிறையில், 2 மில்லியன் டாலர் பிணைத் தொகைக்குப் பதிலாக அடைக்கப்பட்டிருக்கிறார். 18லிருந்து 39 வயதுக் குட்பட்ட பெண்கள், காஸ்ட்ரோவை மூன்றாவது நபர் ஒருவருடன் தொடர்புபடுத்த, அவர் துப்பறி பவர்களிடம் கூறியதாக அதிகாரிகள் கூறினர்.

அந்தப் பெண்களின் ஏதுமிலா நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு பாதிரியார் அவர்களைப் பாழ்ப் படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் அந்தப் பெண்களின் மனங்களில் அச்சத்தை ஊட்டி, அவர்களைப்பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் கூறினால், அவர்கள் நாடு கடத்தப்படு வார்கள்; அத்துடன் பொது மக்களிடையே அவமானத்துக்கும் கேலிக்கும் ஆளாவார்கள் என்று பயமுறுத்தி உள்ளார்.

வன்புணர்ச்சி, வாய் வழிப்புணர்ச்சி உட்பட்ட ஆறு கடும் குற்றச்சாட்டுகள், காஸ்ட்ரோ மீது கூறப்பட்டுள்ளன. வேறு யாரும் இவ்வாறு பாதிரியாரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பற்றி துப்பறிவாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


விநாயகர் சதுர்த்தியின் பயன்


விநாயகர் சதூர்த்தியை இங்கும் பலர் நீண்டகாலமாக சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு வராமல் கொண்டாடி வருகின்றனர், களிமண்ணில் அச்செடுத்து கண்களுக்கு குன்றிமணி குத்தி விற்பனை செய்வார்கள், அதை கொண்டு வந்து டி .ஆர்.ஓ குளத்தாங்கரையில் போட்டுவிட்டு மறுநாளே எந்த தொந்தரவும் இல்லாமல் குளித்தது ஒரு காலம் (இப்போது டி ஆர் ஓ காலனி குளம் எல்லாம் மறைந்து ந்யூகாலனியாகிவிட்டது. ஆனால் தற்போது வம்பை விலைக்கு வாங்கும் விதமாக புதிதாக ஊர்வலம் என்ற பெயரில் கடந்த சில வருடமாக கிளம்பிவிட்டார்கள், சில பகுதிகளில் குருபூசை? டென்சனை கொண்டு வந்துவிடுவார்கள், சென்னையில் பல இடங்களில் கணபதி ஊர்வலம் என்றாலே பொது மக்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் விதமாக மாறிவருகிறது, அதில் ஒன்று கண்பதி பப்பா மோரியா என்ற கோசமும் சேர்ந்து வருகிறது, நாம் எப்போதும் போல் அப்படி என்றால் என்ன? என்று கேட்டுவிடக்கூடாது கேட்டால் தெய்வ குற்றமாகிவிடும். அந்த மோரியா என்பது ஒரு இளவரசனின் பெயர் சாளுக்கிய மன்னர்களின் குறுநில மன்னனான திகம்பர் என்பவரின் புதல்வன் இவன் தான் கணபதியை மராட்டிய மாநிலத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றவர், 7 ஆம் நூற்றாண்டில் வாதாபியில்(கலிங்கம்) இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்ததைப்போல் அதே காலவேளையில் நாக்பூரை ஆண்ட(சாளுக்கியர்களின் குறுநில மன்னர்) திகம்பர் என்ற குறுநில மன்னனின் புதல்வரால் மராட்டியத்திற்கு கொண்டுவரப்பட்டது, அவரின் பெயர் மோரியா. நமது ஊரில் கணபதியை சண்டையில் பெற்ற வெற்றியின் சின்னமாக கொண்டு வந்து தொலைத்தார்கள் அங்கே நட்பு முறையில் கொண்டு வந்தார்கள் அப்படி கொண்டு வரும் போது வழக்கம் போல் மன்னர் வருவதை அறிவிக்க கணபதி சிலையை கொண்டு வரும் இளவரசர் மோரியா வாழ்க என்று கூறிக்கொண்டு வந்தனர், இதுவே நாளடைவில் கணபதி கொண்டு செல்லும் போது கணபதி பப்பா மோரியா என்றாகிவிட்டது, மோரியா என்பது சூரியனின் புதல்வனையும் குறிக்கும், அதா வது தலைவரின் மகன் (543757) எல்லாவற்றை யும் விட மிகவும் முக்கியமான ஆதாரமாக யுவாங் சுவாங் தனது பயண அறிகையில் திகம்பர புத்திரன் மோரியன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
(Tamil Pressinto mumbai)

நவிமும்பை வாஷி கழிமுகத்தில் கணபதி கரைத்த பிறகு தேங்கி இருக்கும் அசுத்தம் கடந்த வருடம் எடுத்த படம் (கழிமுகப்பகுதியில் தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க கூடுமிடம் ஆனால் கடந்த 30 வருடங்களாக மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள கடற்பகுதியில் மீன்களும் கிடையாது, மாங்குரோவ்களும் அழிந்துவருகிறது

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கத்தின் நீதி வாக்கியங்கள்!



1) அறிவைக் கெடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப் படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
அய்யம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்
அவ்வை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.
2) கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக்காதே.
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்விலகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே.
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதில கற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவல மாக்கும்.
3) சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்க்கை கைக்கொள்வாயே
சீற்றம் ஒழிந்தால் ஏற்ற முறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்றறிந்துகொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கம் என்பது துட்டுப் பறிப்பதே,
சோதிடமகற்றின் நீதிடம் பெறலாம்.
4) தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியிலில்லை.
திருவிழா, மனிதரைத் தெருவில் விடுவதே
தீர்த்தமென்று நீ திரிந் தலையாதே.
துக்கமென்பதை இக்கணம் அகற்று.
தூய மனத்தால் தீயவை அகற்று.
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.

- குடியரசு (30.3.1930)