Search This Blog

17.2.08

வருமானவரி பற்றிய விளக்கம்

இந்த மாதம் அரசு ஊழியர்கள் சம்பளப்பட்டியலுடன் அவரவர்களது வருமானம் பற்றிய விபர அறிக்கையை தாக்கல் செய்தால்தான் இம்மாதம் ஊதியம் பெறமுடியும் என்ற நிலையில் அது பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் எவை எவை வருமானத்துக்கு உட்பட்டவை என்பது பற்றி விரிவாக விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.வருங்கால வைப்பு நிதி வட்டி வருமானத்தில் வருமா வராதா? என்பது உட்பட காரசார விவாத்திற்கிடையில் "வருமானவரி"விலக்கு எதுக்கெல்லாம் உண்டு என்பது பற்றி "நாணயம் விகடன்" இதழ் வெளியிட்டுள்ளது. நமது அன்பர்களின் பயன் கருதி அதை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் (1961)படி, உருவானதுதான் 80---சி பிரிவு. இதன்கீழ் ஒரு நிதி ஆண்டில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குப் பெறமுடியும்.

பணியாளர்கள் பிராவிடன்ட் ஃபண்ட்

அரசுத்துறை ஊழியர்கள் அவர்களுக்கான அரசு பிராவிடன்ட் ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு. பொதுத்துறை, தனியார் நிறுவனங்-களில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளத் தொகை-யில் 12%, பணியாளர் பிராவிடன்ட் ஃபண்டாக (E.P.F. -Employees Provident Fund) பிடிக்கப்படுகிறது. வருமான வரி கட்டுவதிலிருந்து இந்தத் தொகைக்கு முழுவிலக்குப் பெறலாம். தனியார் நிறுவனம் என்கிறபோது, பிடிக்கப்படும் தொகைக்கு இணையாக நிறுவனமும் பணம் செலுத்தும் என்பதால், இது பணியாளர்களுக்கு இரட்டை லாபத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த முதலீடு மற்றும் சேமிப்பு, வரிச் சலுகையை அளிப்பதோடு, வரி கட்டுபவர் மற்றும் அவரது குடும்-பத்துக்கு நிதிப் பாதுகாப்பையும் அளிப்பதாக இருக்கிறது. மேலும், விரும்பும்பட்சத்தில் தனியார் நிறு-வன ஊழியர், இந்த 12%-க்கு இணையாக மேலும் 12%-ஐ தன் சம்பளத்தில் பிடித்துக்கொள்ள நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளலாம். இந்தக் கூடுதல் தொகைக்கு நிறுவனம் தன் பங்காக எதையும் செலுத்தாது. அதே நேரத்தில், இந்தக் கூடுதல் முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இதுபோன்ற சலுகை அரசு ஊழியர்-களுக்கும் இருக்கிறது. இப்படிச் சேரும் பி.எஃப். தொகையை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டுக்கு தற்போது 8.5% வட்டி தரப்-படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான ரசீதை பி.எஃப். அலுவலகம் அளிக்கிறது. இதைப் பெற்று பணியாளர்கள், தங்களிடம் பிடிக்கப்படும் தொகை கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

தனியார் துறை பணியாளர்களைப் பொறுத்தவரை, சம்பளம் 6,500 ரூபாய்க்கு மேற்படும்போது, பிராவிடன்ட் ஃபண்டுக்கு பணம் செலுத்துவது கட்டாயமில்லை. ஆனால், எல்லோரும் செலுத்துவது நல்லது. இந்த முதலீடு மற்றும் அதன் மூலமான லாபத்துக்கும் வரி கிடையாது!

பொது பிராவிடன்ட் ஃபண்ட்

பணியில் இல்லாத சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம் பொது பிராவிடன்ட் ஃபண்ட் (P.P.F- Public Provident Fund). இந்தத் திட்டத்தில், ஏற்கெனவே நிறுவனத்தால் பி.எஃப். பிடிக்கப்படும் பணியாளர்களும் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி 8%. இதில் முதலீடு செய்யும் அனைவரும் வருமான வரிச் சலுகையைப் பெறலாம்.

இந்த முதலீட்டை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளலாம். நிதி ஆண்டில் குறைந்த-பட்சம் 100 ரூபாய், அதிகபட்சம் 70,000 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து, வரிவிலக்குப் பெறலாம். இந்தக் கணக்கை தனிநபர்கள், மைனர்கள், ஹெச்.யூ.எஃப். பெயரில் தொடங்கலாம். தனி நபர்கள், தங்கள் பெயர், மனைவி பெயர், குழந்தைகளின் பெயரில் செலுத்-தப்படும் பி.பி.எஃப். தொகைக்கு வரு-மான வரிவிலக்குப் பெறலாம்.

பி.பி.எஃப். முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கிடையாது. நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே (ஏப்ரல்) முதலீடு செய்ய ஆரம்பித்தால், முழு ஆண்டுக்கும் வரி இல்லாத வட்டி லாபத்தை அனு-பவிக்க முடியும். பி.பி.எஃப். முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு முன் முடிக்க முடியாது. அதே நேரத்-தில், ஆறு ஆண்டுகள் கழித்து முதலீட்டில் ஒரு பகுதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுத்துக்-கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோல், இத்தொகை-யிலிருந்து கடனும் வாங்கமுடியும்.

ஆறாவது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பி.பி.எஃப். திட்டத்தில் மறு முதலீடு செய்வது மூலம் வருமான வரிச்சலுகையைப் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் (Life Insurance Policies) என்பது முதலீடு, குடும்-பத்தினர் பாதுகாப்பு, வரிச் சேமிப்பு கருவி என மூன்-றும் கலந்ததாக இருக்கிறது. இதனால், பாலிசி முடி-வில் பணப்பலன் கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள்தான் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன.

பாலிசி இறுதியில் பணப் பலன் எதுவும் இல்லாத டேர்ம் பாலிசியை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால், இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு. பாலிசி க்ளைம் மூலம் கிடைக்கும் தொகை அல்லது பணப் பலனுக்கு வருமான வரி கிடையாது. மேலும், தன் பெயரில், மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில், ஹெச்.யூ.எஃப். பெயரில் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கும் தனிநபர் விலக்குப் பெறலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாலிசித் தொகையில் 20%-க்கு மேல் பிரீமியம் இருந்தால், வரு-மான வரிவிலக்குப் பெறமுடியாது.

இந்த பாலிசிகளை அட-மானம் வைத்து கடன் வாங்குவது மூலம் சொத்து வாங்குவது, கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான தேவையை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். பர்சனல் லோனுக்கான வட்டியோடு ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான கடன் வட்டி குறைவாகவே இருக்கிறது.

யூலிப்

பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் முதலீட்டாளருக்கு ஆயுள் காப்பீட்டை அளிப்பதோடு, வருமானத்தையும் அளித்து வருகின்றன. இந்த பாலிசிகள் முற்றி-லும் பங்குச் சந்தை சார்ந்தது, முற்றிலும் கடன் சார்ந்தது, இரண்டும் கலந்தது என்பன போன்று பல வாய்ப்புகளுடன் இருக்கின்றன. முதலீட்டாளர் தன் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன் இருக்கும். நிதி முதலீடு, பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் மட்டும் இந்த யூலிப் பாலிசிகளை எடுப்பது நல்லது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, இந்த யூலிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் யூனிட்களின் என்.ஏ.வி. மதிப்பைக் கவனித்துவருவது அவசியம்!

தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வரிச் சேமிப்புக்காக இந்தியர்கள் அதிக முதலீடு செய்தது தேசிய சேமிப்புப் பத்திரங்களில்தான் (National Saving Certificates). வட்டி விகிதக் குறைவுக்கு பிறகு அதில் முதலீடுசெய்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. 8% வட்டி வருமானம் அளிக்கும் இதில் செய்யப்படும் முதலீட்டை ஆறு ஆண்டுகள் கழித்துதான் எடுக்கமுடியும். வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பதும் இதனைப் பலரும் விரும்பாததற்கு முக்கியக் காரணம். இதில் தனிநபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப்-கள் முதலீடுசெய்து வரிச்சலுகை பெறலாம்.

வருமான வரியைச் சேமிக்க 80-சி பிரிவின் கீழ் இருக்கும் இதர திட்டங்கள் பற்றி...!

வரி சேமிப்பு வங்கி டெபாசிட்கள்

வங்கிகளில் செய்யப்படும் ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தை அனைத்து வங்கிகளும் கொண்டுள்ளன. வட்டிவிகிதம் சுமார் 8.5% தொடங்கி 10.5% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. டெபாசிட் மூலமான வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். இதில், தேசிய சேமிப்புப் பத்திர முதலீட்டைவிட வட்டி அதிகமாகக் கிடைக்கும். பி.எஃப். முதலீட்டைவிட, அதிக வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், வட்டி வருமானத்துக்கு வரிகட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம்!

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடும் இ.எல்.எஸ்.எஸ் (E.L.S.S) ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும் வரிச்சலுகையைப் பெறமுடியும். இதனை தனி நபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப். பெயரில் மேற்கொள்ளலாம். இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கமுடியாது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 65% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், மேலே கூறப்-பட்ட முதலீட்டுத் திட்டங்களைவிட, அதிக ரிட்டர்னைக் கொடுத்துவருகிறது. அதேநேரத்தில், பங்குச் சந்தைக்கான ரிஸ்க்கையும் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. மேலும் முதலீட்டை மூன்றாண்டு கழித்து எடுக்கும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, பூஜ்ய சதவிகிதம்தான்.

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துதல்

வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தப்படும், அசலில் ஒரு நிதி ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை, வரிச்சலுகை பெறலாம். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும்போது மனைக்குக் கட்டும் முத்திரைத்-தாள் கட்டணத்துக்கும் வரிச்சலுகை இருக்கிறது. இதனைப் பத்திரப்பதிவு நடந்த நிதி ஆண்டில் கோரிப் பெறவேண்டும். வீட்டை மாற்றிக் கட்டுதல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கான கடனுக்கு வரிச்சலுகை கிடையாது. மேலும், மனை வாங்குவதற்கும் வரிச் சலுகை இல்லை.

வீட்டுக் கடனுக்கான வட்டியில், ஓராண்-டில் 1.5 லட்சம் ரூபாய்வரை, வரிச்சலுகை பெறலாம்.

இதர சேமிப்புத் திட்டங்கள்

இந்த வாய்ப்புகளைப் போலவே, தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen Savings Scheme) மற்றும் தபால் அலுவலக டைம் டெபாசிட் (Post Office Time Deposit) ஆகிய இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் 80-சியின் கீழ் வருமான வரிச்சலுகை உண்டு என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 55-60 வயதுக்கு உட்பட்ட விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்கள், 60 வயதான மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். பொதுத்துறை வங்கிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆண்டுக்கு 9% வருமானம் அளிக்கும் இந்த முதலீடு ஐந்தாண்டுகளுக்கானது. ஒரு ஆண்டில் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய். அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் வரி-விலக்குப் பெற முடி-யும். இத்திட்டத்தின் மூலமான வட்டி வருமானத்-துக்கு வரி பிடித்தம் இருக்-கிறது.

இந்தத் திட்டம் வங்கிகளின் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும்போது, சற்று லாபகரமானது என்று சொல்லாம்.

தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்த-பட்ச முதலீடு 200 ரூபாய். அதிகபட்சத்துக்கு எல்லை இல்லை. இந்தத் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என முதிர்வுக் காலம் இருக்கிறது. இவற்-றுக்கு முறையே 6.25%, 6.5%, 7.25% மற்றும் 7.5% வட்டி தரப்படுகிறது. ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு மட்-டுமே வரிச்சலுகை தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை விட, வழக்கமான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமானதாக இருக்கும்.

கல்விக் கட்டணம்

கல்விக்காகச் செலவிடுவதை ஒரு முதலீடாக மத்திய அரசு கருதுவதால், அதற்கும் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. தனிநபர், அவருடைய துணை, குழந்தைகள் அல்லது ஹெச்.யூ.எஃப். உறுப்பினர் போன்றோருக்கு கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. மேலே குறிப்பிட்டவர்கள் இந்தியாவில் ஏதாவது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி அமைப்பில் முழு நேரமாகப் படிப்பதற்காகச் செலுத்தும் கல்விக் கட்-டணத்துக்கு வரிவிலக்குக் கோரலாம். தனிநபரின் இரு குழந்தைகளுக்குத்தான் இவ்வாறு வரிச்சலுகை கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்களுக்கும் பிப்ரவரி மாதத்திலேயே ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கு தேர்வு ஜுரம் என்றால், மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமான வரி ஜுரம்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற அளவுக்குக் குழம்பிப் போயிருக்கிறார்கள். வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி-யின் கீழ் வரும் முதலீட்டுத் திட்டங்கள் தவிர, வேறு சில முதலீடு மற்றும் செலவுகளுக்கும் வருமானவரி விலக்குப் பெறமுடியும். அவை பற்றிய விவரங்கள்..!

மருத்துவக் காப்பீடு 80 D

மருத்துவச் செலவு மிகவும் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், மாதச் சம்பளக்காரர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகியிருக்கிறது. வருமானவரிச் சட்டப் பிரிவு 80 D-ன் கீழ், தனி நபர் அல்லது ஹெச்.யூ.எஃப்-க்காக ஓராண்டில் இந்த பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில், 15,000 ரூபாய்க்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெறலாம். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 20,000 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவர், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலுத்தும் மெடிக்ளைம் பாலிசிக்கான பிரிமீயத்துக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். சில பெரிய நிறுவனங்கள், தங்களின் ஊழியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் சொந்தச் செலவிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துத் தருகிறார்கள். அதுபோன்ற நிலையில், அலுவலகம் எடுத்துள்ள பாலிசியின் மூலம் எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்ற விவரத்தை அறிந்து, அதில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிசியை எடுத்து, அதற்கான பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம். வரிவிலக்குப் பெற பிரீமிய ரசீதின் நகலை பணிபுரியும் நிறுவனத்திடம் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவச் சிகிச்கைக்கான செலவு - 80 DD

தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ (Dependant) அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்பத்தில் யாராவது உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று (Disability) அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச்சலுகை பெறலாம். இந்தவகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். மிகவும் தீவிரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் (Dependant) அவருடைய மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர-சகோதரிகள் போன்ற-வர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்-பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே வரிச்சலுகை பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்-துவ அதிகாரியிடமிருந்து, அதற்குரிய படிவத்தில் சான்-றிதழ் வாங்கி கொடுக்கும்பட்சத்தில்தான் இந்த வரிச்-சலுகையைப் பெறமுடியும்.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை - 80 DDB

மத்திய நேரடி வரி வாரியம், சில தீவிர நோய்களுக்குப் பெறப்படும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு வரிவிலக்கு பெறலாம் எனச் சொல்லியுள்ளது. அந்த வகை நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓராண்டில் அதிகபட்சம் 40,000 ரூபாய்க்கு வரிச்சலுகை பெறமுடியும். இதுவே, மூத்த குடிமக்கள் என்கிறபோது, 60,000 ரூபாய் வரை சலுகை இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், எய்ட்ஸ், கேன்சர், சிறுநீரகக் கோளாறு போன்றவை தீவிர நோய்கள் பட்டியலில் இருக்கின்றன. இப்பிரிவில் வரிச்சலுகை பெற, வருமான வரி தாக்கல் படிவத்துடன் அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்றிதழையும் இணைத்துக் கொடுப்பது அவசியம்.

கல்விக் கடனுக்கான வட்டி - 80 E

தனி நபர் ஒருவர் தனக்காகவோ, உறவினர்களுக்காகவோ இந்தியாவில் உயர்கல்வி படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கியிடமிருந்து வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதில் 80 E பிரிவின் கீழ் வரிச்-சலுகை பெறலாம். உயர்கல்வி என்பது பட்டப்-படிப்பு, பட்டமேற்படிப்பு (பொறியியல், மருத்துவம், மேலாண்மை) போன்றவற்றைக் குறிக்கும். வட்டி கட்டத் தொடங்கியதிலிருந்து 7 ஆண்டு வரை, வட்டி கட்டி முடிக்கும் வரைக்கான காலம்... இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை வரிச்சலுகை உண்டு.

உடல் ஊனமுற்றவர்களுக்கு வரிச்சலுகை - 80 U

வரி கட்டும் ஒருவர் உடல் ஊனமுற்று இருந்தால், அவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரித் தள்ளுபடி பெறமுடியும். மிகவும் தீவிரமான உடல் ஊனமானால் இந்தத் தொகை 75,000 ரூபா-யாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரித் தள்ளுபடியைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி-யிடமிருந்து அதற்-குரிய ஆவணத்தில் சான்-றிதழ் பெறுவது அவசியம்!

-------------- ----------------நன்றி : நாணயம் விகடன்

0 comments: