எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.
ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :
“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.
இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.
நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்
ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.
-------- நன்றி: www.indianchaplin.blogspot.com
Search This Blog
17.2.08
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்
மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (முதலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு, 23.4.1957 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தைபெரியார் அளித்த வாக்கு மூலம்
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு, 23.4.1957 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தைபெரியார் அளித்த வாக்கு மூலம்
Labels:
பெரியார்
16.2.08
ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்?
இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் சட்டத்தில் இருந்து வருகின்றன அவை: 1. "பிராமண' சாதி 2. "சூத்திர' சாதி. அதாவது மேல் சாதி; கீழ் சாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம், அந்த இரு ஜாதிகளின் அதாவது "பிராமண ஜாதி', "சூத்திர ஜாதி' என்பதன் உட்பிவுகள் தானே அல்லாமல் தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. எனவே, இன்று ஒழிக்கப்பட வேண்டிய ஜாதிகள், மேற்கண்ட"பிராமணன்' "சூத்திரன்' எனப்பட்ட ஜாதிகளே ஆகும்.
அதாவது, மொத்த ஜனத் தொகையில் 100க்கு 3 பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100க்கு 75க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணர்' 100க்கு 50க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, 100க்கு 97 விகிதம் உள்ள "சூத்திரர்'கள் இத்துறைகளில் தலை எடுக்கவிடாமல் அழுத்தி வரப்படுகிறது.
இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக் கேட்டைப் பெருமளவு ஒழிக்க முடியும்.
இதற்கு அரசாங்க, அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால், ஒரே ஒரு காயம்தான் உண்டு. அதாவது, இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, ஜாதிவாரி உரிமை அளித்து, அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காயம் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுக்கோ போவதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது.
""இந்தக் காயங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ' என்று தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: "தம்பீ! ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியம், முதலாவதுமான காரியம் என்று நீ நினைக்கிறாயா?'' என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்' என்றால், "அதற்காக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜு (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?' என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும். "அதற்காக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன், பார்லிமெண்டுக்குப் போனேன்'' என்று நீ சொல்லக்கூடும்.
சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா? ""கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை'' என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல. ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. பிறகு, இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி மறந்தே விட்டாய் அவ்வளவுதான்.
"அந்தப் பேச்சு' என்பதற்கு ஒரு கதை உண்டு. அதாவது: ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?'' என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன், ""நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது தெரியுமா?'' என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன், ""கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்'' என்ற மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்று கொண்டு சுருட்டைப் பற்ற வைக்க, ஒரு பெட்டி நெருப்புக் குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான்.
சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப் பெட்டி நெருப்புக் குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே இதுதான் யோக்கியமா? என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்குமேல் ஆத்திரம் கோபம் வந்து, ""அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தப் பேச்சே இங்குப் பேசக்கூடாது'' என்று சொன்னேனே; அப்புறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?'' என்று கேட்டான்.
உடனே சுருட்டு வாங்கினவன், ""சரி! சரி! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போடவேண்டும் பழைய செருப்பாலே'' என்று சொல்லிக் கொண்டு, குளத்துக்குச் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி, அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு, தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்கும் போனான்'' என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) "உனக்குப் புத்தி இல்லையா?'' என்கிறான்.
.ஆகவே, என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை. ஆனால், முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு! இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து; முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காயங்களை உடல் பொருள் "ஆவி'யைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.
------தந்தைபெரியார் அவர்கள் 13.12.1960 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்
அதாவது, மொத்த ஜனத் தொகையில் 100க்கு 3 பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100க்கு 75க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணர்' 100க்கு 50க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, 100க்கு 97 விகிதம் உள்ள "சூத்திரர்'கள் இத்துறைகளில் தலை எடுக்கவிடாமல் அழுத்தி வரப்படுகிறது.
இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக் கேட்டைப் பெருமளவு ஒழிக்க முடியும்.
இதற்கு அரசாங்க, அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால், ஒரே ஒரு காயம்தான் உண்டு. அதாவது, இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, ஜாதிவாரி உரிமை அளித்து, அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காயம் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுக்கோ போவதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது.
""இந்தக் காயங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ' என்று தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: "தம்பீ! ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியம், முதலாவதுமான காரியம் என்று நீ நினைக்கிறாயா?'' என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்' என்றால், "அதற்காக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜு (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?' என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும். "அதற்காக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன், பார்லிமெண்டுக்குப் போனேன்'' என்று நீ சொல்லக்கூடும்.
சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா? ""கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை'' என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல. ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. பிறகு, இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி மறந்தே விட்டாய் அவ்வளவுதான்.
"அந்தப் பேச்சு' என்பதற்கு ஒரு கதை உண்டு. அதாவது: ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?'' என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன், ""நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது தெரியுமா?'' என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன், ""கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்'' என்ற மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்று கொண்டு சுருட்டைப் பற்ற வைக்க, ஒரு பெட்டி நெருப்புக் குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான்.
சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப் பெட்டி நெருப்புக் குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே இதுதான் யோக்கியமா? என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்குமேல் ஆத்திரம் கோபம் வந்து, ""அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தப் பேச்சே இங்குப் பேசக்கூடாது'' என்று சொன்னேனே; அப்புறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?'' என்று கேட்டான்.
உடனே சுருட்டு வாங்கினவன், ""சரி! சரி! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போடவேண்டும் பழைய செருப்பாலே'' என்று சொல்லிக் கொண்டு, குளத்துக்குச் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி, அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு, தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்கும் போனான்'' என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) "உனக்குப் புத்தி இல்லையா?'' என்கிறான்.
.ஆகவே, என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை. ஆனால், முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு! இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து; முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காயங்களை உடல் பொருள் "ஆவி'யைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.
------தந்தைபெரியார் அவர்கள் 13.12.1960 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்
Labels:
பெரியார்
15.2.08
நாம் செய்யப்போவது என்ன ?
நாம் செய்யப்போவது என்ன என்பது மிகவும் பொறுப்போடு பொறுமையோடு யோசித்துச் செய்யவேண்டியிருக்கிறது, இன்று நம் நாட்டில்,
1. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமும்,
2. படித்தவன் படிக்காதவன் என்ற தன்மையும்,
3. பணக்காரன் ஏழை என்ற நிலைமையும்,
4. முதலாளி அல்லது எஜமான் தொழிலாளி அல்லது கூலி என்கின்ற முறைமையும் இருந்து வருகின்றன.
இதனால் ஏற்படும் குறைபாடு கொடுமை என்பவைகளைத் தவிர உலகில் மக்களுக்கு வேறு தொல்லை இல்லை என்றும், தொல்லைக்கு அடிப்படை இல்லை என்றும் சொல்லலாம். இவற்றுள் முற்கூறிய பெரிய ஜாதி, சின்ன ஜாதி, படித்தவன், தற்குறி (படிக்காதவன்) என்கின்ற கொடுமை அதாவது சகல குறைபாடுகளுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் கேடுகள் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லலாம் ஆதலால் இந்த நாட்டில் இப்போது உடனடியாக ஒரு யோக்கியன், ஒரு வீரன், ஒரு “தெய்வீக சக்தி கொண்ட மகான்” என்பவன் செய்யவேண்டிய வேலை இந்த இரண்டுமேயாகும். இந்த இரண்டிலும் முதன்மையானதாகச் செய்யவேண்டி யது முதலாவதான மேல் ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழிப்பதேயாகும் ஆகவேதான், அந்தக் கருத்தின்மீதே நம் திராவிடர் கழகம் முதலாவதாக இதனையே கருதி இதை முதல் வேலைத் திட்டமாகவும் கைக்கொண்டு இருக்கிறது.
எளவே இது விஷயத்தில் காங்கிரஸ் செய்யப்போவதைப் பொருத்தே அதோடு நாம் வைத்துக் கொள்ளும் சம்பந்தம் இருந்துவரும் என்று மேலே சொன்னோம். 78 வயது ஆனபின்பு இப்போது தான் காந்தியார் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்னும் தன்மையில் “பறச்சேரியில்” போய் குடிக் இருக்கப் போகிறேன் என்று சொல்லி அங்கு குபேரர்களை விட்டு “குடிசை” கட்டச் சொல்லி இருக்கிறார். இந்தச் சூழ்ச்சியை அறிந்து சேரிக்காரர்கள் காந்தியார் “குடிசை” மீது கற்கள் போட்டு, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்து இருக்கிறார்கள் அங்குக் காந்தியாருக்கே இந்தக் கதியானால் இங்கு இந்தச் சாதாரண காந்தி பூசாரிகளுக்கு நடக்கக்கூடிய காரியம் நடக்கவேண்டிய காரியம் என்ன என்பது யாவரும் அறிந்திருப்பார்கள்.
ஆதலால் காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்கின்ற ஜாதி ஆணவம் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணாள் ஒட்டல், பிராமணாள் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம், என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பனவாகியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக்கூடாது. “இந்து லா” விலும் உள்ள இக்கொடுமைகள் உடளே மாகாண கவர்னர்களுக்கும், மாகாண சர்க்கார்களுக்கும் உள்ள அதிகாரங்களைப் பொருத்தவரை திருத்தப்பட வேண்டும். இவைகளைச் செய்தால் திராவிடர் கழகத்தார் காங்கிரசின் நண்பர்களேயாவார்கள். இந்தக் காரியம் செய்தால் உத்தியோகங்களைப் பற்றிக் கூட கவலை இல்லை. பார்ப்பனர்களே எல்லா உத்தியோகமும் பார்த்தாலும் சம்மதிப்பார்கள். திராவிடர்கள் தங்கள் பெரும் உத்தியோகத்தின் மூலம் இன உணர்ச்சியோடு திராவிடர்களைக் காப்பாற்றும், திராவிடர்களுக்கு உழைக்கும் தகுதி பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தி படிப்பித்தலும் கூட இன்று குற்றமில்லை என்போம். தமிழர்களுக்கு மானம் வந்தபிறகு ஒழிக்கப் பார்த்துக் கொள்ளலாம்.
இனி சர்.ராமசாமிக்கு மேல் சர்.ஷண்முகத்திற்குமேல் யார்தான் எந்த உத்தியோகம்தான் பார்க்க முடியும்? இவர்களால் திராவிடர்கள் வாழ்ந்த தென்ன? திராவிடர்கள் வாழ்வு உயர்ந்ததென்ன?
ஒரு சர்.சி.பி, ஒரு கனம் சாஸ்திரி, ஏன் ஒரு ஆர்.வி.கிருஷ்ணய்யர் இவர்களால் பார்ப்பனர் அடைந்ததெவ்வளவு? தமிழர்தானாகட்டும் ஒரு சாமி வேதாசலம், ஒரு மீனாட்சிசுந்தரம், ஒரு மகாமகோ கதிரேசன் இவர்கள் தமிழ்படித்த தெவ்வளவு? இவர்களால் திராவிடர் வாழ்ந்ததென்ன? ஆனால் ஒரு மு.ராகவய்யங்கார், ஒரு ரா.ராகவய்யங்கார், ஒரு மகா சாமிநாதய்யர் இவர்களால் பார்ப்பனர் தமிழ் படித்ததன்மூலம் வாழ்ந்த தெவ்வளவு?
ஆகவே இன்றைய தன்மையில் உத்தியோகமும் தமிழும் தனிப்பட்ட குடும்பத்துக்குப் கம்பெனிக்கு லாபமே தவிர, திராவிடத்திற்கு திராவிடருக்குப் பயனற்றதாகவே இருக்கிறது. எனவே திராவிடன்மந்திரி ஆக வேண்டுமென்ற கவலையும் இன்று நடக்கு இல்லை. ஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்க்காமைக் கொடுமை முதலில் ஒழியட்டும். இதை காங்கிரஸ் செய்தால் நாம் காங்கிரஸ் தொண்டர்கள் என்று சொல்லிப் பெருமை அடைவோம். இல்லாலிட்டால் ஒரு மூச்சு அதுவும் சற்றேறக்குறைய கடைசி மூச்சாகவே பார்த்து விடப்போகிறோம். இதுதான் நாம் செய்யப்போவது.நம் திராவிட மாணவ, இளைஞர் தோழர்களுக்குச் சொல்லுகிறோம்.
இதே இறுதிப் போராட்டமாகக் கருதுங்கள்.இதில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்.கம்யூனிஸ்டுகளுனும் நமக்குத் தகராறு இல்லை. அவர்கள் பார்ப்பனர்கனைத் தலைவர்களாகக் கொண்டு இருக்கிறார்கள்; கதர் போடுகிறார்கள்; காந்திக்கு ஜே சொல்லுகிறார்கள்; மூவர்ணக் கொடியின் நிழலின் கீழ் நிற்கிறார்கள். தொலைந்து போகட்டும் அவர்கள் மானத்தின் வலிமை எவ்வளவு என்று கொள்ளுவோம்.
ஆனால் கம்யூனிஸ்ட் என்பவர்கள் கடவுளை, மதத்தை, பார்ப்பானை சாஸ்திரத்தை, கோயிலை, கோயில் செலவை, பார்ப்பானச் சடங்கை, கோவில், மடப்பொருளை, மடாதிபதிகளைப் பற்றி மறந்தும் பேசமாட்டோம் என்கிறார்கள். இவர்களைத் தான் நாம் “நீங்கள் எப்படி நாணயமான கம்யூனிஸ்டுகளாவீர்கள்?” என்கிறோம். ஆகையால் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார், திராவிடர்கள் ஆகியவர்களை வையாமல் இதன்மூலம் பார்ப்பனர் களுக்குக் காங்கிரசாருக்கு நல்ல பிள்ளைகளாகப் பார்க்கும் கீழ்மையை உதறித்தள்ளி விட்டு உண்மை கம்யூனிஸ்டுகளாகட்டும். நாமும் கொடி தூக்கி அவர்கள் பின் தொடரத் தயாராய் இருக்கிறோம். இல்லாவிட்டால் அதோடும் போராட முடிவு செய்துள்ளோம்.இதுதான் இன்று திராவிடர் கழகம் கைக்கொள்ளவேண்டிய கடமை என கருதுகிறோம்.,
ஆகவே நம் போராட்டத்தின் போது காங்கிரசிலும் கம்யூனிசத்திலும் இருக்கும் திராவிட தோழர்களை ஏமாந்து போய் நாம் ஒருவருர்கொருவர் முட்டிக் கொள்ளும் மூடத்தனத்தில் இறங்கித் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
------------- தந்தைபெரியார் "குடிஅரசு" தலையங்கம் 6-4-1946
1. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமும்,
2. படித்தவன் படிக்காதவன் என்ற தன்மையும்,
3. பணக்காரன் ஏழை என்ற நிலைமையும்,
4. முதலாளி அல்லது எஜமான் தொழிலாளி அல்லது கூலி என்கின்ற முறைமையும் இருந்து வருகின்றன.
இதனால் ஏற்படும் குறைபாடு கொடுமை என்பவைகளைத் தவிர உலகில் மக்களுக்கு வேறு தொல்லை இல்லை என்றும், தொல்லைக்கு அடிப்படை இல்லை என்றும் சொல்லலாம். இவற்றுள் முற்கூறிய பெரிய ஜாதி, சின்ன ஜாதி, படித்தவன், தற்குறி (படிக்காதவன்) என்கின்ற கொடுமை அதாவது சகல குறைபாடுகளுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் கேடுகள் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று சொல்லலாம் ஆதலால் இந்த நாட்டில் இப்போது உடனடியாக ஒரு யோக்கியன், ஒரு வீரன், ஒரு “தெய்வீக சக்தி கொண்ட மகான்” என்பவன் செய்யவேண்டிய வேலை இந்த இரண்டுமேயாகும். இந்த இரண்டிலும் முதன்மையானதாகச் செய்யவேண்டி யது முதலாவதான மேல் ஜாதி, கீழ்ஜாதி என்பதை ஒழிப்பதேயாகும் ஆகவேதான், அந்தக் கருத்தின்மீதே நம் திராவிடர் கழகம் முதலாவதாக இதனையே கருதி இதை முதல் வேலைத் திட்டமாகவும் கைக்கொண்டு இருக்கிறது.
எளவே இது விஷயத்தில் காங்கிரஸ் செய்யப்போவதைப் பொருத்தே அதோடு நாம் வைத்துக் கொள்ளும் சம்பந்தம் இருந்துவரும் என்று மேலே சொன்னோம். 78 வயது ஆனபின்பு இப்போது தான் காந்தியார் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்னும் தன்மையில் “பறச்சேரியில்” போய் குடிக் இருக்கப் போகிறேன் என்று சொல்லி அங்கு குபேரர்களை விட்டு “குடிசை” கட்டச் சொல்லி இருக்கிறார். இந்தச் சூழ்ச்சியை அறிந்து சேரிக்காரர்கள் காந்தியார் “குடிசை” மீது கற்கள் போட்டு, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்து இருக்கிறார்கள் அங்குக் காந்தியாருக்கே இந்தக் கதியானால் இங்கு இந்தச் சாதாரண காந்தி பூசாரிகளுக்கு நடக்கக்கூடிய காரியம் நடக்கவேண்டிய காரியம் என்ன என்பது யாவரும் அறிந்திருப்பார்கள்.
ஆதலால் காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்கின்ற ஜாதி ஆணவம் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணாள் ஒட்டல், பிராமணாள் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம், என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பனவாகியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக்கூடாது. “இந்து லா” விலும் உள்ள இக்கொடுமைகள் உடளே மாகாண கவர்னர்களுக்கும், மாகாண சர்க்கார்களுக்கும் உள்ள அதிகாரங்களைப் பொருத்தவரை திருத்தப்பட வேண்டும். இவைகளைச் செய்தால் திராவிடர் கழகத்தார் காங்கிரசின் நண்பர்களேயாவார்கள். இந்தக் காரியம் செய்தால் உத்தியோகங்களைப் பற்றிக் கூட கவலை இல்லை. பார்ப்பனர்களே எல்லா உத்தியோகமும் பார்த்தாலும் சம்மதிப்பார்கள். திராவிடர்கள் தங்கள் பெரும் உத்தியோகத்தின் மூலம் இன உணர்ச்சியோடு திராவிடர்களைக் காப்பாற்றும், திராவிடர்களுக்கு உழைக்கும் தகுதி பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தி படிப்பித்தலும் கூட இன்று குற்றமில்லை என்போம். தமிழர்களுக்கு மானம் வந்தபிறகு ஒழிக்கப் பார்த்துக் கொள்ளலாம்.
இனி சர்.ராமசாமிக்கு மேல் சர்.ஷண்முகத்திற்குமேல் யார்தான் எந்த உத்தியோகம்தான் பார்க்க முடியும்? இவர்களால் திராவிடர்கள் வாழ்ந்த தென்ன? திராவிடர்கள் வாழ்வு உயர்ந்ததென்ன?
ஒரு சர்.சி.பி, ஒரு கனம் சாஸ்திரி, ஏன் ஒரு ஆர்.வி.கிருஷ்ணய்யர் இவர்களால் பார்ப்பனர் அடைந்ததெவ்வளவு? தமிழர்தானாகட்டும் ஒரு சாமி வேதாசலம், ஒரு மீனாட்சிசுந்தரம், ஒரு மகாமகோ கதிரேசன் இவர்கள் தமிழ்படித்த தெவ்வளவு? இவர்களால் திராவிடர் வாழ்ந்ததென்ன? ஆனால் ஒரு மு.ராகவய்யங்கார், ஒரு ரா.ராகவய்யங்கார், ஒரு மகா சாமிநாதய்யர் இவர்களால் பார்ப்பனர் தமிழ் படித்ததன்மூலம் வாழ்ந்த தெவ்வளவு?
ஆகவே இன்றைய தன்மையில் உத்தியோகமும் தமிழும் தனிப்பட்ட குடும்பத்துக்குப் கம்பெனிக்கு லாபமே தவிர, திராவிடத்திற்கு திராவிடருக்குப் பயனற்றதாகவே இருக்கிறது. எனவே திராவிடன்மந்திரி ஆக வேண்டுமென்ற கவலையும் இன்று நடக்கு இல்லை. ஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்க்காமைக் கொடுமை முதலில் ஒழியட்டும். இதை காங்கிரஸ் செய்தால் நாம் காங்கிரஸ் தொண்டர்கள் என்று சொல்லிப் பெருமை அடைவோம். இல்லாலிட்டால் ஒரு மூச்சு அதுவும் சற்றேறக்குறைய கடைசி மூச்சாகவே பார்த்து விடப்போகிறோம். இதுதான் நாம் செய்யப்போவது.நம் திராவிட மாணவ, இளைஞர் தோழர்களுக்குச் சொல்லுகிறோம்.
இதே இறுதிப் போராட்டமாகக் கருதுங்கள்.இதில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்.கம்யூனிஸ்டுகளுனும் நமக்குத் தகராறு இல்லை. அவர்கள் பார்ப்பனர்கனைத் தலைவர்களாகக் கொண்டு இருக்கிறார்கள்; கதர் போடுகிறார்கள்; காந்திக்கு ஜே சொல்லுகிறார்கள்; மூவர்ணக் கொடியின் நிழலின் கீழ் நிற்கிறார்கள். தொலைந்து போகட்டும் அவர்கள் மானத்தின் வலிமை எவ்வளவு என்று கொள்ளுவோம்.
ஆனால் கம்யூனிஸ்ட் என்பவர்கள் கடவுளை, மதத்தை, பார்ப்பானை சாஸ்திரத்தை, கோயிலை, கோயில் செலவை, பார்ப்பானச் சடங்கை, கோவில், மடப்பொருளை, மடாதிபதிகளைப் பற்றி மறந்தும் பேசமாட்டோம் என்கிறார்கள். இவர்களைத் தான் நாம் “நீங்கள் எப்படி நாணயமான கம்யூனிஸ்டுகளாவீர்கள்?” என்கிறோம். ஆகையால் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார், திராவிடர்கள் ஆகியவர்களை வையாமல் இதன்மூலம் பார்ப்பனர் களுக்குக் காங்கிரசாருக்கு நல்ல பிள்ளைகளாகப் பார்க்கும் கீழ்மையை உதறித்தள்ளி விட்டு உண்மை கம்யூனிஸ்டுகளாகட்டும். நாமும் கொடி தூக்கி அவர்கள் பின் தொடரத் தயாராய் இருக்கிறோம். இல்லாவிட்டால் அதோடும் போராட முடிவு செய்துள்ளோம்.இதுதான் இன்று திராவிடர் கழகம் கைக்கொள்ளவேண்டிய கடமை என கருதுகிறோம்.,
ஆகவே நம் போராட்டத்தின் போது காங்கிரசிலும் கம்யூனிசத்திலும் இருக்கும் திராவிட தோழர்களை ஏமாந்து போய் நாம் ஒருவருர்கொருவர் முட்டிக் கொள்ளும் மூடத்தனத்தில் இறங்கித் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
------------- தந்தைபெரியார் "குடிஅரசு" தலையங்கம் 6-4-1946
Labels:
பெரியார்
சூத்திரர் யார்?
சூத்திரர்கள் என்பதற்கு மனுதர்ம சாஸ்திரம் கீழ்கண்ட பட்டியலை தருகிறது
1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.
--------------- மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4
இப்படி எழுதி வைத்தால் ஆத்திரங்கொண்டு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?
1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.
--------------- மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4
இப்படி எழுதி வைத்தால் ஆத்திரங்கொண்டு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?
Labels:
அய்யத்தெளிவு
Subscribe to:
Posts (Atom)
