Search This Blog

3.1.15

பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?சோ சாமர்த்தியம் செல்லுபடியாகாது!


பா.ஜ.க. ஆட்சிக்குப் பார்ப்பனர் 'சோ' பகரும் பாராட்டு!

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (ழிஞிகி) ஆட்சி என்னும் பா.ஜ.க. ஆட்சியின் நடைமுறைகள், பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தின் பேச்சுகள் - ஏச்சுகள் - நடைமுறைகள் பற்றி துக்ளக் இதழில் (31.12.2014) திருவாளர் சோ ராமசாமி தந்துள்ள நற்சான்றுப்(?) பத்திரங்கள் இதோ:

கே: பா.ஜ.க.வில் நிலவும் கருத்துச் சுதந்திரம், அக்கட்சிக்குப் பாதகமாக அமையுமா, சாதகமாக அமையுமா? பா. நாராயணன், சென்னை-92


ப: பா.ஜ.க.வில் இப்போது நிலவுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. கருத்து வெறி. இது அக்கட்சிக்கு நல்லதல்ல.


கே: அயோத்தியில் சீக்கிரமாக ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் - என்று உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பேசியுள்ளது குறித்து? கே.ஆர். சாரங்கபாணி, வடவள்ளி


ப: ஒரு கவர்னர், இப்படி இந்தப் பிரச்சினையில் பேசுவது சரியல்ல. நாளை வேறொரு கவர்னர், இடிக்கப்பட்ட பாப்ரி மசூதி திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று கூறினால், அது எவ்வளவு தவறாக இருக்குமோ, அவ்வளவு தவறு இதுவும்.


கே: இஸ்லாமியர்கள் மதம் மாறுவதை அரசியலாக்கக் கூடாது; அவர்களின் முன்னோர் இஸ்லாமியர்களாக மாற்றப் பட்டவர்கள்தான் - என்கிறாரே வி.ஹெச்.பி.தலைவர்? ச. புகழேந்தி, மதுரை-14


ப: என்றோ ஹிந்துவாக இருந்து, பிறகு மதம் மாறியவர்களின் இன்றைய வாரிசுகளை மீண்டும் ஹிந்துக்களாக மாற்றுவதில் தவறில்லை என்றால், அதே வாதத்தின்படி இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்தவர்களுடைய வாரிசுகள் தானே, இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள்? ஆகையால், எல்லோரும் அவரவருடைய மத நம்பிக் கைகளை விட்டு விடுவதுதான் நல்லதா?


கே: ஸ்ரீநகரில் தேர்தல் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்திருக்கிறாரே பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்? . புகேழந்தி, மதுரை -14


ப: கண்டனத்திற்குரிய நடத்தை. இப்படிச் செய்திருப்பவர் ஒரு பெண் வேட்பாளர் என்பது நிகழ்ச்சியை மேலும் அதிர்ச்சிக் குரியதாக்குகிறது.


கே: தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் மீது கட்டப் பட்டுள்ளது என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே? எஸ். புருஷோத்தம் ராஜன், பரமக்குடி

ப: அந்தச் சிவனுக்கே இது பொறுக்காது.

                                           -----------------------------------(துக்ளக் 31.12.2014 பக்.13)

மோடியை ஆட்சி அதிகார நாற்காலி யில் அமர வைக்க வேண்டும் என்று சோ சும்மா விழுந்து விழுந்து எழுதினார்;  தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது தன் சரக்கை அவிழ்த்துக் கொட்டினார்.


ஆனால், அவராலேயே இந்த ஏழு மாத ஆட்சிபற்றிப்  பெருமைப்பட முடிய வில்லை; மாறாக தன் மனப்புழுக்கத்தைக் கொட்டியுள்ளார்.


இப்படிக் கூறுவதால் சங்பரிவார் நட வடிக்கைகளை சோ ஏற்றுக் கொள்ள வில்லை என்று பொருளல்ல;  அவர்களின் நடவடிக்கைகள் வெகு மக்களின் எதிர்ப்பை மோடி அரசுக்குச் சம்பாதித்துக் கொடுக்குமே என்ற கவலைதான்.
பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தியவர்தானே இந்த சோ அதில் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானிக்கு வக்காலத்துப் போட்டு எழுதியவர்தானே இந்த அக்கிரகாரவாசி!


கேள்வி: பாபர் மசூதி இடிப்பு அத்வானி யின் தூண்டுதலால் நடந்தது என்று சிறப்பு சி.பி.அய் கோர்ட்டில் பூசாரி உட்பட 5 கரசேவகர்கள் வாக்குமூலம் கொடுத்துள் ளார்களே?


பதில்: அவர்களுடைய வாக்குமூலமே இறுதியான ஆதாரம் ஆகி விடாது; நிகழ்ச்சி நடத்து பல வருடங்கள்; வழக்கு தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி சில வருடங்கள்; கமிஷன் விசாரணை தொடங்கி கணிசமான காலம் - எல்லாம் கழிந்த பிறகு, இப்பொழுது திடீ ரென்று இப்படிச் சொல்வதால் - இவர்கள் பேச்சு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது  இவர்கள் கூறுவதை உறுதி செய்ய (சிஷீக்ஷீக்ஷீஷீதீஷீக்ஷீணீமீ) போதுமான சாட்சியங்கள் இருந் தால் மட்டுமே, அவர்கள் சொல்வது நீதிமன் றத்தில் எடுபடும் (துக்ளக் 25.6.2003 பக்.19).


இந்தப் பதிலில் தான் எத்தகைய தளுக்கு - குலுக்கு! - ஆட்சிக்கு வருவதற்கு முன் இதுபோன்ற காரியங்களில் வன்முறையா ளர்களுக்கு வக்காலத்து; ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்ற மதவாத சரக்குகளை சங்பரிவார்கள் அவிழ்த்துக் கொட்டினால் அது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்துமே என்பதால் இன்னொரு நாக்கால் பேசும் தந்திரம். இதற்குப் பெயர் தான் பார்ப்பனீயம் என்பது.

பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி! என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது. புரிந்து கொள்வீர் இந்(து)தப் பார்ப்பன நஞ்சுகளை!

----------------------------------------------------------------------------------------------------------------

பக்தியால் ஒழுக்கக்கேடு குறைந்ததா?
கே: கடவுள் பக்தியால் அச்சமும் வரவில்லை; ஒழுக்கமும் வளரவில்லை என்றால், அது என்ன பக்தி? அது பெருகி என்ன லாபம்? என்ற கி. வீரமணியின் கருத்து பற்றி?


ப: ஊழல், கொலை - கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் ஒழிந்து விடவில்லை. குறையவும் இல்லை. இந்தச் சட்டங்கள் இருந்து என்ன பிரயோஜனம்? இந்தச் சட்டமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட வேண்டியதுதானா? சட்டங்கள் இருப்பதால் தான், இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்போதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ - என்று தானே எல்லோரும் நினைப்பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால்தான், சமுதாயத்தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ...?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


திருவாளர் சோ ராமசாமி தான் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.


முதலில் ஒன்றை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். கடவுள் சக்தியையும் மனிதர்களின் செயல்பாடுகளையும் ஒரே அளவில் - சம மட்டத்தில் வைத்து எழுதுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் மூலம் மனிதனுக்கு மேற்பட்டது கடவுள் என்ற வாதம் அடிபட்டுக் கீழே விழ்ந்து விடவில்லையா? மனிதன்தான் சட்டம் செய்கிறான்; கடவுள், பக்தி இவற்றையும் மனிதன்தான் உண்டு பண்ணுகிறான் என்பதை இதன் மூலம் சோ ஒப்புக் கொள்வது ஒரு வகையில் பாராட்டத்தக்கதே! (இப்படிதான் அவரைப் பாராட்ட முடியும் - வேறு சந்தர்ப்பம் ஏது?)


சரி, இரண்டாவது விவாதத்துக்கு வருவோம் - பக்தி உணர்வு இருப்பதால் தான் இந்த அளவாவது கட்டுப்பாடு இருக்கிறது; இப்பொழுதே இப்படி இருக்கிறது என்றால், சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ என்று தானே எல்லோரும் நினைப் பார்கள்? அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால் தான் சமுதாயத் தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பக்தி உணர்வு  அறவே அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ..?                                          (துக்ளக் 31-12-2014 பக்.13)


பக்தி இருந்தால் ஒழுக்கம் இருக்கும்; கட்டுப்பாடுகள் இருக்கும்; பக்தி உணர்வு அற்றுப் போய் விட்டால் என்ன நேரிடுமோ? என்று பசப்புகிறாரே திருவாளர் சோ ராமசாமி இதே சோவின் துக்ளக் ஏட்டில் பக்தியின் யோக்கியதை எப்படி என்பதை ஒப்புக் கொண்டுள்ளாரே!


வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலைபேசி விற்கலாமா?


புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.


வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா, இப்போது?


புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சிக்கிறா!                   
                               ------------------------- (துக்ளக் 1-6-81 இதழ் பக்.32)


இப்படி எழுதிய சோதான் இப்பொழுது சந்தர்ப்பவாத பல்டி அடிக்கிறார். மேலும் ஒரு செய்தி உண்டு இவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பக்திப் பழம்தானே! அவர் யோக்கியதை - ஒழுக்க சீலம் எத்தகையது என்பதுபற்றி ஊரே சிரிக்கவில்லையா? கொலை குற்றப் பின்னணியில் வேலூர் சிறையில் கம்பி எண்ணவில்லையா? பார்ப்பனப் பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ற பெண்மணி  - ஜெயேந்திர சரஸ்வதி என் கையைப் பிடித்து இழுத்து பிடித்து கேவலமாக நடந்து கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறவில்லையா?


தொலைக்காட்சிகள்கூட அந்த அவல நிலையை ஒளிபரப்பியதே! பக்தி காரணமாக ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளப் பயங்கொள்வார்கள் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

சோ சாமர்த்தியமெல்லாம் செல்லுபடியாகாது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
                             --------------- மின்சாரம் அவர்கள் 03-01-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/93838.html#ixzz3NlH0RWvp

இதுதான் வால்மீகி இராமாயணம் - 49

இதுதான் வால்மீகி இராமாயணம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.



அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி


ஆதலின் வஞ்சகனாகிய வசிட்டன்  உண்மையைக் கூறாது பரதனை அழைத்தால் அவன் மட்டும் அயோத்திக்கு வருவான். அப்போது வேண்டுவன செய்து கொள்ளலாமென நினைத்தான். அவன் சூழ்ச்சியும் பலித்தது. பின் குடிகள் சென்று வேண்டியும் பரதன் முடிபெற மறுத்ததையும், அதற்கு முன்னரும் அவன் கோசலையிடம் வஞ்சினமுரைத்து எவ்வாற்றாளும் இராமனையழைத்து வரத்துணிந்ததையும் அறிந்திருந்துங்கூட, வசிட்டன் மறு படியும் சபை கூட்டிப்பரதனையழைத்து முடிசூட வேண்டு கிறான். இது தன்மேல் குற்றமில்லாமல் தப்பித்துக் கொள்வதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். பரதன் வந்தபோது அவனுக்கு உண்மையை உரைத்து முடிசூட்ட ஏன் பார்த்திருந்தா யெனக் கேகயன் வினவினால், அப்போது வசிட்டன் அகப்பட்டுக் கொள்வான். அதனால் வசிட்ட னுடைய தீயசிந்தைகளையும் சூழ்ச்சிகளையும் உலகமறியும் போது, யாவரும் அவனை இகழ்வார்கள். இவ்வுண்மையை அறியாமலிருந்தும் பரதன் வசிட்டனை அப்போது நிந்திக் கிறான். இதனால் தீமை செய்கிறவர்கள் எவ்வாறாவது நிந்தனையடைவர் என்பது விளங்குகின்றது. இச்சூழ்ச்சி யால் வசிட்டன் மற்றொரு நன்மையுமடைகிறான். அதாவது பரதன் சபைமுன் வாக்குரைக்கச் செய்து தன்னுடைய தீய தோழனாகிய தசரதனுடைய பேராசைப்படி இராமனை யழைத்து வந்து முடி சூட்டிவிடலாம் என முனிவன் நினைத்தான். இதிலும் அவன் வெற்றி பெறுகிறான். இதனால் கேகய மன்னனுக்குத் தான் சபை கூட்டி முடிசூட்டப் போனதாகவும், பரதனே மறுத்துவிட்டன னென்றும் சமாதானம் கூறிக் கொள்ளலாம். தன்னுடைய சூழ்ச்சிகளும், தசரதன் சூழ்ச்சிகளும் மறையக்கூடும். இராமனும் அரசு பெறுவான். வசிட்டனைப் போன்ற தீயோரும உளரோ? வேறு கதைகளிலும் இதைப் போலக் கேட்டறிய முடியாதே!


பரதனிடம் கைகேயி தன் கணவன் இறக்கும்போது கூறியவற்றைத் தன்னிடம் கூறியதுபோலக் கூறுகிறாள். தசரதன் இறக்கும்போது கோசலையின் அரண்மனை யிலேயே இருந்தான். மறுநாளே அவன் இறந்தமையறிந்து அங்கே கைகேயி போகிறாள். இதனால் இவள் இச்சொற் களைப் பரதனுக்குத் திடீரென்று ஏக்கம் வராமலிருக்கும்படி உண்மையை மறைத்துக் கூறியவளாவள். இச்சொற்களை இவள் எவ்வாறு அறிந்தனளோ? இராமன் காட்டுக்குப் போய்விட்டானென்பதைக் கேட்ட பரதன், இராமன் ஏதாவது பெரிய குற்றஞ்செய்தே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டிருக்க வேண்டுமென அய்யுற்று வினாவுகிறான். இவ்விடத்தில் மொழி பெயர்ப் பாளர் சீனிவாசய்யங்கார், இராமனுடைய கலியாண குணங் களைப் பூரணமாகவறிந்த பரதன் அப்படிச் சந்தேகப்படு வதே தகாது என்று குறித்திருக்கிறார். இது தகுமோ தகாதோ, பரதன் இராமனை விபசாரம் முதலிய கொடிய குற்றங்களைச் செய்திருப்பானோ என்று சந்தேகித்தது உண்மை. பரதன் இராமனுடைய தீயநடைகளை உணர்ந்திருந்தமையினாற் றான் அவ்வாறு சந்தேகித்தனன் போலும்! ஆனால், அவன் ஏன் இராமனை அழைத்து வந்து முடிசூட்டத் துணிகிறான்? என்றால், பரதன் வீரத்தன்மையுடையோனாயிராமல் பயங்காளியாயிருந்தான். மேலும் அவனுக்குத் தன்தந்தை செய்த வாக்குறுதியால் நாடு தனக்குரியவையானது என்ற உண்மையும், பிறப்பால் உரிமையுள்ள தன்னை வஞ்சித்துத் தன் தந்தை இராமனுக்கு நாடளிக்க முயன்ற உண்மையும் தெரியாது. அவன் உண்மையாகவே தன்னுடைய தாய் வம்புக்காரி, அவள் இராமனை வஞ்சித்துத் துரத்திவிட்டாள், அதனால் கொடிய பாவம் தனக்கு வந்து சேரும் என்று நம்பி நடுங்கினான். இவ்வாறு அவனுடைய அச்சமும் அவசரமும் அவனுக்கு மனநடுக்கத்தைத் தந்தன. மேலும் கைகேயியுங் கூட பரதனே பிறப்பால் அரசுரிமையுடையவன் என்பதை உணராளே. உணர்ந்திருப்பின் கட்டாயம் அதைக் கூறிப் பரதனைத் தன் வசப்படுத்தியிருப்பாள். இவ்விபரீதங் களினாலேயே பரதன் மிகவும் பழிக்கு அஞ்சியவனாய்த்தன் தாயைத் தாயென்றும் பாராமல் கயிறிட்டு உயிரை விடு எனப்பலவாறு தகாத முறையில் நிந்திக்கிறான். தன்னைப் பெற்ற தாயை நிந்தித்த இவன் மக்களுக்கு ஒரு வழிக்காட்டியே! இவனைப் பார்த்து உலகத்தார் நடப்பரேல், உலகம் விரைவிற் கெட்டழிவது திண்ணம். தன் தாய் தவறி நடந்தால் அவளைக் கண்டிக்கும் முறை வேறு.

பரதனைப் பார்க்க வந்த கோசலை அவனைக் கொடுமையாக நிந்திக்கிறாள். பரதன் மனம் துடிக்கிறான். அப்போது அவன் கூறியதில் தேவதைகளுக்கும் விருந்தி னருக்கும் தென்புலத்தாருக்கும் ஊட்டாமல் எவன் உண் கிறானோ, அவன் நரகமடைகிறான் என்று கூறப்படுகிறது. இதுவும் நாம் முன் கட்டுரைகளில் ஆரியரைப் பற்றிப் புலாலுண்போரென்று கூறிய உண்மையை வலியுறுத்தும். விருந்தினர் வந்தபோது புலாலுணவும், தெய்வம் தொழும் பொழுது உயிர்க்கொலையும் அவர்களுக்கு இன்றியமை யாதது. நாம் முன் கட்டுரைகளில் சீதை கங்கைக்கும் யமுனைக்கும் நேர்ந்து கொண்டபோது, பல உயிர்ப்பிராணி களை வதைத்துத் திருப்தி செய்கிறேன் என்ற வரலாறே இதற்கு இவர்களுடைய மனுநீதி சாஸ்திரம் மேற்கோளா யிருக்கிறது. மேற்கோளாகச் சிலவற்றை இங்கே அந்நாளி லிருந்து குறிப்போம்.

பிதிர்க்களுக்குத் திதி கொடுப்பதைப்பற்றி மனுஸ்மிருதி மூன்றாவது அத்தியாயம் விளங்கக் கூறுகிறது. அதில் சுலோகம் 268 இல் பாடீனசம் முதலிய மச்ச மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதிர்க்கள் இரண்டு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். அரிணமென்கிற மான் மாமிசத்தாற் செய்தால் மூன்று மாதம் வரையிலும், செம்மறியாட்டு மாமிசத்தாற் செய்தால் நான்கு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 269-இல் வெள்ளாட்டின் மாமிசத்தாற் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளி மான் மாமிசத்தாற் செய்தால் ஏழு மாதம் வரையிலும், கருப்புமான் மாமிசத்தாற் செய்தால் எட்டு மாதம் வரையிலும் கலைமான்  மாமிசத்தாற் செய்தால் ஒன்பது மாதம் வரையிலும் பறவைகளின் மாமிசத்தாற் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 270 இல் முள்ளம் பன்றி, காட்டெருமைக்கடா இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவற்றின் மாமிசத்தாற் செய்தால் பதினோரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 271 இல் பசுவின் பால், தயிர், நெய் இவற்றால் சிரார்த்தம் செய்தால் ஓராண்டு வரையிலும், தண்ணீர் குடிக்கும்போது இரண்டு காதும் தண்ணீரிற்படக் குடிக்கின்ற க்ஷீண இந்திரியத்தை யுடையதாகிய வார்த்தீனச மென்னும் கிழ வெள்ளாட்டுக் கடாவின் மாமிசத்தாற் செய்தால் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

                          ---------------------- தொடரும்- “விடுதலை”30-12-2014
Read more: http://viduthalai.in/page-3/93615.html#ixzz3NOQVjFLd

 **********************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

சுலோகம் 212 இல் அந்தந்தக் காலத்திலுண்டான கரியமுது, முள்ளுள்ள வாளை மீன், கட்கமிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசங்களால் செய்தால் அளவற்றநாள் வரையில் திருப்தியடைகிறார்கள். சுலோகம் 123 இல் மாதந்தோறும் செய்யத்தக்க அமாவாசிய சிரார்த்தத்தைப் புதிதாயும் நாற்றமில்லாமலுமிருக்கிற மாமிச முதலிய வற்றாலே செய்யத்தக்கது. 5-ஆம் அத்தியாயம் சுலோகம் 16 இல் ஆயிரம் பல்லுள்ள யுடீனசமென்னும் மீனும், சிவப்பு மீனும் எக்கியத்திலும் சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக் கிறது. கும்பலோடு சஞ்சரிக்கின்ற மீனும், சிங்கமுக மீனும், முள் மீனும் மற்ற காலங்களில் உண்ணலாமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சுலோகம் 18 இல் முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டாமிருகம், முயல் இவை அய்ந்து நகங்களுள்ளவையாயிருந்த போதிலும் உண்ணலாம். ஒரு பக்கம் பல்லுள்ள மிருகங்களில் ஒட்டகம் நீங்கலாக மற்றவற்றை உண்ணலாம். சுலோகம் 28-இல் பிரமன் இவ்வுலக முழுவதையும் சீவனுக்கு ஆகாரமாக உண்டு பண்ணினார். ஆகையால் நெல் முதலான தாவரமும், மிருக முதலான சங்கமமும் சீவனுக்கு ஆகாரமாகவே இருக்கின்றன. சுலோகம் 30-இல் ஆதலால் பிராமணன் புசிக்கத் தகுந்த பிராணிகளைத் தினந்தோறும் புசித்த போதிலும் பாவத்தையடைய மாட்டான். புசிக்கத் தக்கவர்களும், கொல்லத் தகுந்தவையும் பிரமனாலேயே படைக்கப்பட்டிருக்கின்றனவல்லவா?


மேலே கண்டவற்றைச் சிந்தித்தால் ஆரியர் எவ்வளவு தூரம் இழிவான அறிவுடையவர்களாயிருந்தார்களென் பதை உணரலாம். மனிதன் தின்பதற்காகவே மிருகங் களையும் பறவைகளையும் பிரமன் படைத்தானென்று அவர்களுடைய சட்ட நூலாகிய மனுஸ்மிருதியே கூறுகிறது! என்ன அநியாயம்! இவ்வளவு கேவலமான அறிவுடைய மக்களும் இருந்திருப்பார்களா? மிருகங்கள் தின்பதற்காகவே மனிதரைப் பிரமன் படைத்தான் என்று அம்மிருகங்கள் விதித்துக் கொண்டு மனிதர்களைக் கொல்லத் துணிந்தால் இம்மனு முதலிய அறிவற்ற மிருகங்கள் யாது கூறுமோ? இம்மனுவைப் பகுத்தறிவுள்ள மனிதனென்பதா, அறிவற்ற மிருகமென்பதா? இவன் பகுத்தறிவற்ற மிருகமென்பதை நன்கு நிரூபித்துவிட்ட பின்னரும் இவனை மனிதனென்று எவ்வாறு கொள்வது?


 இச்சுயநல மிருகத்தை ஒருவகுப்பார் தமது நீதி நூலாசிரியன் எனப்பாராட்டுகின்றனரே? பரிதாபம்! இதனால் இவ்வாரிய மக்கள் புலாலுண்ணுந்தன்மை மிக விவரமாகத் தெளிவாகின்றது. இதற்குச் சான்றாக இக்காலத்திலும், சென்னைமாபுரிக்கு வடக்கேயுள்ள பார்ப்பன மக்களனை வரும் புலாலுண்பவராக இருத்தலே அமையும், வடநாட்டுப் பார்ப்பனருள் புலாலுண்ணாதோர் கிடைப்பது அருமை யிலும் அருமை.
தென்னாட்டுப் பார்ப்பனரோ தமிழ் மக்களிடைக் காணப்படும் மிகச்சிறந்ததான கொல்லாமையைக் கற்றுக் கொண்டனர். அதனால் புலாலுணவையும் மறுத்தனர். ஏனெனில், அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளாதிருப்பின் அவர்களைக் கேடுகெட்ட மிருகங்களாகவே தமிழ் மக்கள் மதித்திருப்பர். ஆனால் தென்னாட்டுப் பார்ப்பனரோ அடிக்கடி பல வேள்விகள் புரிந்து எண்ணற்ற ஆடுகளைக் காயடித்துக் கொன்று நெய்யிலிட்டுப் பொரித்துத் தின்கின்றனர். இதை அவர்கள் தேவதைகளுக்குப் பிரியமான செயலென்று கூறித்தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததோடு அமையாது தமிழ் மக்களிற் சிலரையும் தம் வசப்படுத்தி, சிறு தெய்வ வழிபாடுகளைப் புகுத்தி, கடவுள் மிருகங்களை மனிதர்கள் தின்பதற்காகவே படைத்தார் என்ற தீய கொள்கைகளையும் பரப்பிப் பலரைப் புலாலுணவு உண் ணுமாறும் செய்து விட்டனர். ஆரியருக்கும் தமிழருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் ஆரியர் புலாலுணவைக் குறைப் பதையும், தமிழரிற் சிலர் புலாலுண்பதையும் கற்றுக் கொண்டனர். மேலும் தேவதைகளுக்குப் பூசை செய்யும்போது கட்டாயம் ஆடு - மாடுகளைக் கொன்று தின்னவேண்டும், இல்லையானால் பாவம் வந்து சேரும் என்ற தப்பான தீய கொள்கையையும் தமிழ் மக்களிற் சிலரிடம் புகுத்தினர்.



இது எதனால் விளங்குகிற தென்றால், மேலே பரதன் இராமனுக்குத் தீமை நினைத்திருந்தால் ஆட்டு மாமிசத்தைத் தேவதைகளுக்கு ஊட்டாமல் உண்பவன் அடையும் பாவத்தில் போடுகிறேன் எனச் சூளுரைப்பதால் இது தெளிவாகிறது.  ஆனால் தற்போது பலர் இதன் உண்மையையுணரத் தொடங்கியுளர். ஆனால், சிறு தெய்வ வழிபாடுகள் ஒழிவதோடு பலியிடுவதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது கண்ட பார்ப்பனர் பாகமென்று பெயர் வைத்து அடிக்கடிப் பல ஆடுகளை வதைத்துக் கொல்லுவதில் மிகுதியாக முனைந்துளர். பரிதாபம்! இத்தகைய ஆரியச் சூழ்ச்சித் தீமைகள் ஒழிந்து கொல்லா விரதம் இக்குவலய மெல்லாம் ஓங்குநாள் எந்நாளோ என்று அறிஞரனைவரும் வேண்டும் முயற்சிகளைச் செய்து கொல்லாவிரதத்தைப் பரப்ப வேண்டும்.


தமிழ் மக்கள் மறந்துமத பிறன்கேடு சூழா மாண்பினர். இன்னா செய்தாரைத் தண்டிக்க அவர் நாண நன்னயஞ் செய்யும் நடையினர். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வதுதான் சாலுமெனக் கொண்டு யாவருக்கும் நலமே புரிவர். ஆதலின் தமிழ் மக்களனைவரும் நமது முன் னோரியல்புணர்ந்து நல்வழிப்படுமாறு வேண்டுகிறோம்.


---------------- தொடரும் --”விடுதலை” 02-01-2015

2.1.15

திருமண ஆடம்பரம் தேவையா?-கி.வீரமணி

திருமண ஆடம்பரம் தேவையா?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - என்பது விவிலியத்தின் (பைபிளில்) பழமொழி, ஆனால், நடைமுறை உண்மை என்ன வெனில் திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!


அது மட்டுமா?


நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்களின் அருவருக்கத்தக்க ஆடம்பரங்கள்; கருப்புப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க சுவிஸ் வங்கி களைத் தேடி நமது மத்திய அரசு ஓடிக் கொண்டிருக்கிறதே - இந்த ஆடம்பரத் திருமணங்களை நடத்துவோர் பட்டியலைத் தேடினால் கறுப்புப் பணம் எங்கே புதைந்துள்ளது என்பது புரியுமே! (திருப்பதி உண்டியல் முதல் பல இடங்களிலும் ரொக்கத்திற்குப் பதிலாக காசோலையாக (செக்)  மட்டுமே போட வேண்டும் என்ற ஒரு சிறு திருத்த அறிவிப்பை வெளியிட்டுப் பார்க்கலாமே - உடனே ஏழுமலை யானின் உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து விடுமே!)


திருமண அழைப்பிதழ்களே பற்பல திருமணங்களில் 100, 200 ரூபாய் (ஒரு அழைப்பிதழ்) ஆகும் அளவுக்கு புதுப்புது முறையில்...! சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள். அந்த திருமண அழைப்பை - அந்த வீட்டாரைத் தவிர - வேறு யாராவது பாதுகாத்து வைக்கப் போகிறார்களா? இல்லையே! - குப்பைக் கூடைக்குத்தானே போகிறது? - இதன் பயன் என்ன? காதொடிந்த ஊசியளவுகூடக் கிடையாதே!


சில மண்டபங்களின் வாடகை மட்டும் 8 லட்ச ரூபாய் ஒரு நாள்  - இரு நாளுக்கு.


ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ் வொரு வகையான நிபந்தனைகள் வேறு!


அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுக்கும் திருமணம் நடத்துவோர் - உணவு தயாரித்தல், புரோகிதரை அமர்த்தல், மண்டப அலங்காரக்காரர், நாதசுர (நாயனம்) வாசிப்போர் அனைத்துமே மண்டபக்காரர் மூலமே ஏற்பாடு செய்யப் பட வேண்டுமாம்!

என்னே நெருங்கிய பாச உறவு பார்த்தீர்களா? அதன் ரகசியம் விளக்க வேண்டியதே இல்லை.


விருந்துகளின் ஆடம்பரங்களில் காலைச் சிற்றுண்டி - எத்தனை இனிப்பு வகைகள்! எவ்வளவு உணவு வகையறாக்கள்!  சிற்றுண்டிக்கென அவ்வளவும் அணி வகுத்து இலையில் வந்து குந்திக் கொள்ளுகின்றன!


பாதி பாதியாக இலைகளில் மிச்சம்! அப்படியே எடுத்து குப்பையில் கொட்டும் அழகுதான் என்னே!


உடனே ஒரு சில மணித்துளிகளில் மதிய தடபுடல் விருந்து - சுமார் 29 காய்கறி வகையறா!


இதற்கிடையில் சில்லறைக் கடைகள் போல் தனித்தனி வகைகள் பீடா வரையில்.

மாலையில் வரவேற்பு என்ற பெய ரால் மற்றொரு ஆடம்பர வெளிச்சம்! பிரபல பாடகர் பாடிடுவார்;  ஒரு சிலர் உட்கார்ந்து கேட்பவர்கள் தவிர, மற்றவர் வருவார் - போவார்! பாட்டு பாடுபவர் இயந்திரம்போல் பாடி, கடைசியில் பேசிய தொகையை வாங்குவதற்குப் பதிலாக முன்கூட்டியே மொத்த தொகையை வாங்கிய பின்னரே குழுவினரோடு வருவார்!

பழைய பஜனை மடங்களில் பாடுவோர் தேங்காய் மூடிக் கச்சேரிக் காரர்கள் என்று கேலி செய்வோர் உண்டு, இப்போது பணம் அதிகம்  - வருவாய் பெருகிடும். ஆனால், சுவைத்தோர் வெகு குறைவு - இதிலும் சலிக்காமல் பாடும் அவரது சகிப்புத் தன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் - பொறுமையின் சின்னமாயிற்றே! மாலை 6 மணி முதல் வரவேற்பு மண்டபத்தில் என்று அழைப்பிதழில் போட்டதை வைத்து உடனடியாக மணமக்கள் வரவேற்பில் கலந்து வாழ்த்தி விட்டு விடை பெறலாம் என்று திட்ட மிட்டு வந்த வருகையாளர்களுக்கு,  மிஞ்சுவது ஏமாற்றமே!


காரணம் பெண் பியூட்டி பார்லரி லிருந்து (Beauty Parlour) அழகு நிலையம் என்று நம்ம மொழியில் சொன்னால் அவ்வளவு அழகாக இருக்காது என்பதால் அப்படி  அழைக் கின்றனர் போலும்! மணமக்கள் சிங்காரித்து அலங்கார பொம்மையாக வருவதற்கு ஒரு மணி நேர கால தாமதம் ஆகும்! (இயற்கை அழகைக் கெடுத்து ஒப்பனை அலங்காரம்  என்ற அலங்கோலம்)


அழைப்பாளர்களில் அவசர கதியில் விடை பெறுவோர்- பெற்றோர் களையே வாழ்த்தி விட்டு திரும்பும் சந்தர்ப்பங்களும் பற்பல நேரங்களில் தவிர்க்க முடியாதவையே!


பசியேப்பக்காரர்களைக் காணாது; புளியேப்பக்காரர்கள் கூட்டத்தையே பார்க்கும் வண்ணம் அந்நாள் முழு வதும் அமையும்!

இது தேவையா?

வரதட்சணை என்ற பெயரால் மணமகனை விலைக்கு வாங்கும் விலை உயர்ந்த நிலை வேறு! - அந்த கணக்கு இதில் வராது.


ஒரு நாள் சில மணி நேரத்திற்கு இப்படியா? இந்த ஆடம்பரத் திருமணங்களைத் தடை செய்தால் அது ஒரு வகையான சமூக நீதிதான்!

இதற்காகவே மற்றொரு முறை இந்திரா காந்தியின் நெருக்கடி கால நிலை திரும்பவேண்டும் போலிருக்கிறது! எங்கள் நாட்டுக்கெந்தநாடு ஈடு?  - பாடுவோம்.

---------------- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி -”விடுதலை” 02-01-2015

குறளைப் படியுங்கள்!இராமாயணத்தைக் கொளுத்துங்கள்!!புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்!!!

கம்பராமாயணம் இல்லாவிட்டால் கலையும் ஒழுக்கமும் கெட்டிருக்காது!

வாசகசாலை நம் நாட்டில் அதிகமாயில்லை, காரணம் நூற்றுக்குப் பத்து பேர்தான் படித்துள்ளோம். அந்தப் படித்த கூட்டமோ எனின் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுள்ளது. 

எனவேதான், பார்ப்பானைவிட நம் இனத்திலுள்ள சில படித்த மேதாவிகள் என்பவர்களின் தொல்லை நமக்கு அதிகமாயிருந்து வருகிறது. இதற்குக் காரணம் பார்ப்பானுக்கு `ஆமாம் சாமி' போட்டால்தான் அவர்கள் வாழ முடிகிறது. அவ்வித வேலை நிலைக்கு நம் சமுதாயம் அடிமைப்-படுத்தப்பட்டிருக்கிறது.
வெள்ளையன் ஆட்சியில் நமக்குப் படிப்பில்லாமல் செய்யப்-பட்டதென்றால் அது அவர்கள் தப்பிதமல்ல. பார்ப்பனர்கள் நடராஜர் கோவிலில் மாடு படுத்து மறைத்திருப்பதைப் போல, நமக்கும் வெள்ளையருக்குமிடையே புகுந்து கல்வி நம் மக்களுக்குத் தாராளமாக வழங்க விடாமல் தடுத்துவிட்டனர். அதனாலேயேதான் வெள்ளையன் வெளியேறியபோது கணக்குப் பார்த்தால் பார்ப்பனர்களே 100-க்கு 100 படித்திருக்கின்றனர்.

இவ்வித நிலையில் இப்பேர்ப்-பட்ட வாசகசாலைகளிலாவது நம் மக்கள் உலக ஞானத்தை ஓரளவாவது பெற முடியும். பள்ளிக்கூடங்களைவிட இவ்வித வாசகசாலைகளினாலேயே மக்கள் பொது அறிவு பெறமுடியும்.
எனவே வாசகசாலைகள் தெருக்கள்தோறும் நம் நாட்டில் பெருக வேண்டுமென்பதே எனது பேராசை.

வாசகசாலைகளில் எவ்வித புத்தகங்களிருக்க வேண்டுமென்று அருமைத் தளபதி அண்ணாதுரை அவர்கள் எடுத்துக் கூறினார்.

நான் புராணப் புத்தகத்தைப் படிக்கவேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அத்துடன் அதற்கு நேர்மாறாயிருக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இராமாயணம் என்று எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமா-யணமும், கம்பராமாயணமும் படிக்கட்டும். அத்துடன் எங்களது ரூ.1-12-0 விலையிலுள்ள ஏழு புத்தகங்களைக் கொண்ட இராமாயணத்தையும் படித்து இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்து உண்மையும், உணர்வும் கொள்ளவேண்டும். அதுவே எங்களது கொள்கையுமாகும்.

ஒன்றைத்தான் படிக்க வேண்டும், ஒருவர் சொன்னதுதான் சரி. அதை எதிர்த்துக் கேட்டால் மாபாதகமாகும். நரகம் கிட்டும் என்று கூறி அந்தப் பழக்கத்திலிருந்து வருவதாலேதான் வீரமும், அறிவும் அறமும் பெற்றிருந்த,  நம் நாடும் மக்களும் இன்றைய ஈன நிலைக்கு _ -அடிமை வாழ்வுக்கு ஆளாக நேர்ந்தது.

அண்ணாதுரை அவர்கள் கூறியதுபோல் பஞ்சாங்கத்தை நம்பாதவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகமேயாகும்.
நாங்கள் நேற்று ஒரு பொதுக் காரியத்துக்காக கோச்சுவண்டி வாங்கினோம். விலை பேசி வாங்கிய பிறகு அந்த வண்டி ஓட்டும் தோழரை ஆபீசில் கொண்டுபோய் வண்டியை விட்டுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால், இன்றைக்குப் பணம் வேண்டாம், ஒன்பது மணி முதல் பத்தரை மணிவரை ராகு காலம் என்று, அதுவும் பட்டணத்திலுள்ள கோச்மான் கூறுகிறான் என்றால், இவன் பிள்ளை குட்டியும், கோச்மான் வேலை செய்யாமல் வேறு எப்படியிருக்க முடியும்.


அருமை நண்பர்களே! வண்டியோட்டுபவர் மட்டுமென்ன? ராஜாக்கள் முதல் வீராதிவீரர்கள் கூட இந்தப் பாழாய்ப்போன ராகுகாலம், தலைவிதி, முற்பிறப்பு, கருமம், கடாட்சம் என்ற ஏமாற்றுதலில் சிக்குண்டதனால் அல்லவோ நாட்டை ஆண்ட நம் சமுதாயம் பஞ்சை-களாகவும், பனாதிகளாகவும், பறையர்களாகவும், சூத்திரர்களாகவும் இருக்கிறோம்.

சுதந்திரம் வந்த பின்னும் அதுவும் மதப் பற்றற்ற ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் 1948- இல் கூடவா ராகுகாலமும், சகுனத் தடைகளுமிருக்க வேண்டும். இதைப்பற்றி எங்களைத் தவிர வேறு யார் சிந்தித்தார்கள், அல்லது தைரியமாகக் கூப்பாடு போட்டார்கள் என்று கேட்கிறேன். இப்படி உயிருக்கு ஊசலாடி அரசியலார் அடக்குமுறைக்கு ஆளாகி நாட்டைப் பிடித்தாட்டும் மூடப்பழக்க வழக்க பார்ப்பனியப் பீடையை ஒழிக்க முன்வரும் எங்கள் தலைமீதா கல் எறிவது? பார்ப்பன அடிமைகளை, குண்டர்களை ஏவிவிட்டுக் கலகம் செய்ய முயற்சிப்பது? இந்த மானங்கெட்ட செய்கைகளுக்கு இனியுமா நாட்டில் இடமிருக்க வேண்டும்?

எனவேதான்,  மனிதன் தான் காணும் விஷயங்களில் உண்மையை அறிய வேண்டு-மானால் வாசகசாலைகள் பெருக வேண்டும். அவ்வித அரிய சேவையை இக்கழகத்தார் வெற்றிகரமாகச் செய்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வ.உ.சி. அவர்கள் பேரால் உள்ள இவ் வாசக சாலையைத் திறந்து வைக்க மனமுவந்து ஒப்புக்கொண்டேன்.
* * *
கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.
பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்.

எனவே, ந்த இராமாயணங்களையும், புராணங்களையும் நம்பினால் நம் நாட்டின் உயர்வும் மக்களின் ஒழுக்கமும் கெட்டுவிடும்.


நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இரு கண்கள் போன்றிருப்பது குறள். அரசியலார் முதல் மக்கள் வரை அதன்படி நடந்தால்,  நாடு விரைவில் முன்னேறும். அக்கிரமங்களும் அநீதிகளும் இன்றிருக்கும் சீர்கேடான ஆட்சி அலங்கோலங்களும் ஒழியும். அதிலும் சில குறைகள் இருக்கலாம்; அவைகளை நீக்கி நாம் நமது திருக்குறளைப் படித்து அதன்படி நடைமுறையிலும் இருப்போமானால் மீண்டும் நாம் உலகத்துக்கேகூட வழிகாட்டிகளாகவும், நாகரிகத்தை _ ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கர்த்தர்களாகவும் கூட விளங்கலாம்.

நான் புராணத்தை நம்புகிறவனல்ல என்றாலும், யாரையாகிலும் குறிப்பிடும்போது `எமன்' போல இருக்கிறான் `பிசாசு' போல இருக்கிறது `ஜம்'மென்று இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறோம். எமனைப் பார்த்தேனா அல்லது பிசாசோடு பழகினேனா இந்திர லோகத்தில் `ஜம்'மென்று வாழ்ந்தேனா, பழக்கத்தில் வரப்பட்ட சொற்களை நாம் வழங்குகிறோம். அதேபோன்று அக்காலத்துக்கு வள்ளுவர் சிலவற்றை உவமையாகக் காட்டியிருக்கக்கூடும். அவைகளை விட்டுவிட்டு இனிக் குறள்களையே படிப்போம், போற்றுவோம், அதன்படி நடப்போம் என்ற உறுதி உங்களுக்கு வேண்டும். ஆடு மாடு மேய்ப்பவனுக்குக்கூட இராமாயணம் பாரதம் தெரியும். இராசா சர்களுக்குக்கூட `குறள்' தெரியாது.

நமது பண்டைய பெருமையான ஏடுகள் அழிக்கப்பட்டன. ஆற்றில் எறியப்பட்டன. மிஞ்சியிருப்பவைகளுக்கு பார்ப்பானே அர்த்தமும், விளக்கமும் எழுதி வந்து-விடுகின்றான். அவன் நீதி சொன்னால், பகவான் சொன்னார், அசரீரி சொல்லிற்று. பார்வதிக்கு பரமசிவன் சொல்ல அதை நந்தி கேட்டிருந்து நாரதரிடம் கூற,  நாரதர் ரிஷியிடம் சொல்ல அதை தேசியப் பாஷையில் பிராமணோத்தமர்-களுக்குக் காதில் கூற அதற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். இதை நம்பு இல்லாவிடில் நரகம் என்று எழுதிவிடுகிறான்.

ஏன், வள்ளுவரையே பார்ப்பானுக்குப் பிறந்தவர் என்று எழுதியிருக்கிறதே! இன்னும் என்ன அக்கிரமத்திற்கு இவர்கள் துணியமாட்டார்கள்.

எனவே, இனியாவது நம்நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள். இராமாயணத்தைக் கொளுத்துங்கள். புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்.


எனக்கு யார்மீதும் எந்தக் குறிப்பிட்ட வகுப்பார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ விருப்போ கிடையாது. இனிமேல், நான் ஒன்றும் பட்டத்துக்கோ ஆசைப்பட்டு வாழ வேண்டிய அவசியமுமில்லை, எண்ணமுமில்லை. எங்கள் இயக்கத்துக்கும் அத்தகைய கொள்கை கிடையாது.

எனவே, நம் திராவிட மந்திரிகள் மீதா எனக்குக் கெட்ட எண்ணம் உண்டாகப் போகிறது. அப்படி வேணுமென்றே யாராகிலும் துவேஷப் பிரச்சாரம் செய்தாலும்,  அதை நீங்கள் தான் நம்பலாமா? நமது மக்களும், நாடும் மந்திரிகளும் உள்ளபடியே தன்மானம் பெற்று எவருக்கும் அடிமைப்பட்டிருத்தல் கூடாதென்-பதற்காகவே இவைகளை எடுத்துக் கூறி வருகிறோம்.

ஒன்று மட்டும் உறுதி. நாங்கள் ஒழிந்தாலும் அடக்குமுறைக்கு இரையானாலும், தங்கள் கொள்கை மட்டும் வெற்றி பெற்றே தீரும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதைக் காணப்போகிறீர்கள்.

-------------------------- 7.11.1948 அன்று சென்னை சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் நிலைய வாசக சாலையினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் ஆற்றிய உரை.- (விடுதலை 10.11.1948)

1.1.15

அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம் வைகுந்த ஏகாதசி!



இன்று வைகுந்த ஏகாதசியாம்; இது வைணவர்களுக்கு உகந்த நாளாம். இன்று வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் கதவைத் திறப்பார்கள்; விடியற்காலையில் பக்தர்கள் இந்த வாசல் வழியாகச் சென்று வந்தால் வைகுந்ததத்திற்கு  - அதாவது சொர்க்கத் துக்குப் போவதாக  அய்திகமாம்.
வைணவர்கள் இப்படி என்றால், சைவர்கள் போட் டிக் கடை வைக்க வேண் டாமா?


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதமிருந்து, சிவன் கோயிலுக்குச் சென்று வழி படுவார்கள்; அப்படி செல்லுபவர்கள் சிவலோகம் - அதாவது மோட்சத்திற்குச் செல்லுவார்களாம்.

வைகுந்த ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறந்து செல்பவர்களும், சிவராத்திரி யன்று விரதமிருந்து சிவன் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களும் அப்படியே சொர்க்கத்திற்குப் போக வேண்டியதுதானே!  ஏன் வீட்டுக்குத் திரும்பி வருகி றார்கள்?


அப்படி செல்லு பவர்கள் திரும்பி வரக் கூடாது அப்படியே சொர்க் கத்திற்குச் செல்லுவார்கள் என்று கற்பனையாக ஒரு கதை கட்டி விட்டால் போதும்; ஒரு பக்தனாவது கோயிலுக்குச் செல்லுவானா?

சரி, கதைக்கு வருவோம்! என்ன அந்த வைகுந்த ஏகாதசி?

திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அசுரன் இருந்தானாம். (எந்தப் புராணக் கதை, இதிகாசக் கதையை எடுத்துக் கொண்டாலும் ஓர் அசுரனோ, ஓர் அரக்கனோ வந்து விடு வான்; கதாநாயகன் பார்ப் பான் என்றால் வில்லன் அசுரனாக இருக்க வேண் டும் அல்லவா!)

முரன் என்ற அந்த அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமை கள் செய்தானாம் (தேவர்கள் என்றால் வேறு யார்? பார்ப்பனர்கள்தான்!) வழக்க மான கதை போலவே தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் (அதாவது விஷ்ணுவிடம்) முறையிட் டனராம். (தீபாவளி கதையை எடுத்துக் கொண்டால் நரகா சுரன் என்னும் அரக்கன் தேவர்களுக்குக் கொடுமை கள் இழைத்தான் - தேவர் கள் விஷ்ணுவிடம் முறை யிட்டார்கள் என்று கதை வரும் - அதனையும் நினைவில் கொள்க!)

முரனுடன் போர் புரிய மகாவிஷ்ணு சங்கு சக்கரத் துடன் புறப்பட்டானாம். பல நாள் போர் நடந்ததாம் (ஓர் அரக்கனைக் கொலை செய்ய கடவுளே பல நாள் போரிட்டாராம் - அப்படி யென்றால் கடவுள் சக்தி எம்மாத்திரம் என்பதைத் தெரிந்து கொள்க!) நாள் தோறும் போர் முடிந்ததும் ஓய்வெடுக்க ஒரு குகைக்குச் சென்று விடுவாராம். அப்படி விஷ்ணு படுத்திருந்தபோது முரன் திடீரென்று அந்தக் குகைக்குள்ளேயே நுழைந்து விஷ்ணுவைத் தாக்கத் தொடங்கினானாம்.

அப்போது விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு மகத்தான சக்தி பெண் வடிவத்தில் வெளிப்பட்டு அந்த அரக் கன் முன் வந்து நின்றாளாம். அவ்வளவுதான் அந்த அரக்கன் அந்தப் பெண் ணின் அழகில் மயங்கி வந்த காரியத்தை மறந்தானாம். (பெண்ணைக் கூட்டிக் கொடுத்துதான் ஒரு கடவுள் ஜெயிக்க வேண்டுமோ! இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை தெரிந்து கொள்க!)

அரக்கன் மயங்கிய போது படைக் கலத்துடன் விசுவ ரூபத்துடன் தோற்ற மளித்த அந்தப் பெண் அரக்கனை அழித்தாளாம்!

அரக்கனைக்கொன்ற சக்தியே! ஏகாதசியன்று உனக்கு உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன்.

இந்த மார்கழி மாதத்தில் உன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்றானாம் கையாலாகாத விஷ்ணு.

அறிவுக்கும், ஒழுக்கத் துக்கும் பொருந்தாத இந்தப் பித்தலாட்டம்தான் வைகுந்த ஏகாதசியாம்! அய்யய்யோ எழுதவே கை கூசுகிறதே!

----------------------- மயிலாடன் அவர்கள் 01-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை