Search This Blog

25.8.08

இந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்பனர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.




திராவிடர் கழகத் தனிமாநாடு



அன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! சென்ற தடவை திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதான பிரச்சனைகள் வந்த போது பெரும்பாலான அங்கத்தினர்கள் இந்த தீர்மானம் மத்திய நிர்வாக கமிட்டியில் செய்வதைவிட இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பின்பு சிறிது நாள் தவணைகொடுத்து பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்த தீர்மானத்தின் கருத்துப்படி எப்போது கூட்டுவது என்று முயற்சி செய்துவந்தோம். டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டொரு தடவை சொன்னேன். இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக நடத்தினார்கள். தஞ்சையில் எனது பிறந்த நாள் விழாவை சிறிது விசேஷமா நடத்த வேண்டும் என்று கருதி எனது எடைக்கு எடை வெள்ளி கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி விழா நடத்த முயற்சி செய்தார்கள். இந்த விழாவுக்கு பெரும்பாலான மக்கள் வருவார்கள், வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணிப்பார்க்கிறபோது எல்லா மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. முன் குறிப்பிட்டு வைத்திருந்த தனிமாநாட்டை இப்போதே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை அதாவது செலவும் தொந்தரவும் இருக்காது; எல்லோரும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ஒருவாய்ப்பு இருக்கும் என்று கருதி விழாவை யொட்டியே தனிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ரொம்ப நெருக்கத்தில் அதாவது (20.10.57ல் நினைத்து) பத்து நாட்களில் துவக்கப்பட்டது. இருந்தபோதிலும் நாட்டில் உண்டான கிளர்ச்சி உணர்ச்சி இங்கு மக்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது மிக மிகப்பாராட்டத்தக்கதாகும்.

தஞ்சை முன்னணியில் உள்ளது

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும் என்னுடைய முயற்சிக்கும் போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர்கழகமாக ஆன பிறகுமாத்திரமல்ல; நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தகாலத்திலும் நடத்திய காலத்திலும் தஞ்சை தான் ஆதரவு அளித்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு என்னை தலைவனாக்க பெரும் ஆதரவளித்ததுக் கூட தஞ்சைதான் என்றால் மிகையாகாது. எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு

உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.

எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் 'கூட்டம் இல்லை' என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது ஒருவர் நாலு லட்சம் என்கிறார் ஒருவர் மூன்று லட்சம் இருக்கும் என்கிறார் உள்ளபடியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. எல்லோருடைய கணக்கும் குறைவாகத்தான் இருக்கும். மழை அருமையான உதவி செய்தது காலையில் மழையில்லை எல்லோரும் மழை போய்விட்டது போய்விட்டது என்றார்கள் ஊர்வலம் முடியும்வரை மரியாதையாகக் காத்துக் கொண்டிருந்தது இவ்வளவுதான் தாங்குவேன் இனிமேல் தாங்கமாட்டேன் என்று சிறு தூறல் போட ஆரம்பித்துவிட்டது நான் எப்படியோ ஆகட்டும் மாநாடு காலையிலேயே நடந்துவிட்டது போங்கள் என்று கூறி விட்டேன். இனிமேல் வசூலித்த பணத்தை திருப்பியா கொடுத்து விடப்போகிறார்கள் எங்காவது தாழ்வாரத்தில் வைத்தாவது கொடுத்துவிடுவார்கள் நானும் அவ்வளவு சல்லீசாக விட்டுவிட்டுபோய் விடமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் என்று கூறிவிட்டேன் எப்படியோ அதோடு மழை நின்று விட்டது. மாநாட்டு பந்தல் ஈரமாக இருக்குமேஎப்படி உட்காருவார்கள் என்று கவலைப்பட்டேன் இப்போது என்னடா என்றால் எள் விழக்கூட இடமில்லாதபடி அளவு வசதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

சிறைக்கு வழிகூட்டும் மாநாடு

இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படத்தக்கதுமான மாநாடாகும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லுகிறேன். திராவிடர் கழகத் தனிமாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்புமாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச்சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன் வெற்றி அதுவாகத்தான் இருக்கும்.

கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியதல்ல, முன்பெல்லாம் சாதாரணம், ஆனால் அது இப்போது லேசில் கிடைப்பதாக இல்லை. பிள்ளையாரை உடைத்தோம்; ராமனைக் கொளுத்தினோம் இன்னும் பல காரியங்கள் செய்தோம்; ஏன் என்று கேட்க ஆளில்லை! ராஜாஜி காலத்திலும் எதுவும் செய்யவில்லை. இல்லாவிட்டால் இப்போது காமராசர் தான் விட்டு விட்டார் என்று அவரை சுட்டுத் தள்ளி விடுவார்கள். இப்போது அவருக்கும் பதில் சொல்ல சுலபமாகிவிட்டது. 'ராஜாஜி காலத்திலேயே ஒன்று மில்லை நான் என்ன அதிசயம்' என்று கூறிவிடுகிறார். பார்ப்பனர்கள் தூண்டுதல்

என்ன ஆனாலும் சரி! இப்போது அரசாங்கத்தை மிகவும் நெறுக்குகிறார்கள். மேலிடத்திலிருந்தும் பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் இன எதிரிகளும், ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? என்று நெறுக்குகிறார்கள். எதனால்? குற்றம் கண்டு பிடித்தா? எல்லோருக்கும் பொறாமை! நாம் நினைக்க முடியாததை சொல்லமுடியாததை இந்த கூட்டம் செய்கிறதே நம் யோக்கியதை வெளியாகிவிடுகிறதே; இந்த கூட்டம் இருப்பதால் நாம் பிள்ளைப் பூச்சியாக இருக்க வேண்டியுள்ளதே; இவர்களை அடக்கினால்தான் நமக்கு மரியாதை இருக்கும் என்று அரசாங்கத்தை நெறுக்குகிறார்கள்; பல முயற்சிகள் நடக்கின்றன.

ஆகவே இன்றைய சர்க்கார் அடக்குமுறை செய்து தீரவேண்டிய சந்தர்ப்பம் இது. தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் கூட ஊரார் வாயை அடைக்கவாவது பிடித்துதீருவார்கள். ஆகவேதான் தோழர்களே! முன்பே இது என்னை சிறை செல்ல வழியனுப்பு மாநாடாக இருக்கும் என்றேன்.

இன்றைய லட்சியம் முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்குமேல் எவனும் இல்லை எல்லோரும் சமம். என்ற இந்தநிலை நமக்குதான் அவசியமாகத் தோன்றுகிறது.

'ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும் ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்' என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லா சாதியும் ஒரு சாதி தான் என்கிறோம் நாம். இந்த ஒரு காரியம் தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது.

மற்ற நாடுகளில் எள்ளி நகையாடுவர்!

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இது போல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். சாதாரணமாக அரசாங்கமே யோக்கியமான, பொது மக்களுக்கான, மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்தில் இல்லாத அரசாங்கமாக இருக்குமானால் ஒரு வரியில் செய்து விடலாம்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போட்டிருக்கிறார்களே! தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு விரோதம்தான். ஆனால் தீண்டாமை ஒழிக்க வேண்டுமென்பது அரசாங்கத்திற்கு அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது செய்தார்கள். அதுபோல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது?

சாதி ஒழிய பரிகாரம் ஏன் பண்ணக்கூடாது என்று கேட்டால் இப்படி பேசுகிறேன் அப்படி பேசுகிறேன் என்று எழுதுகிறார்களே தவிர பேசுவதில் என்ன தப்பு? சாதி ஒழிய வேண்டும் என்பதால் என்ன கெட்டுப் போகும்? சர்க்கார்தான் ஏன் ஆதரவு தரக்கூடாது என்று கேட்பவர்களைக் காணோமே!

இது என்ன சுயராஜ்யம்?

ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை குத்தியதில்லை ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன்.

வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?

ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?

(கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக்கானவர்கள் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்? அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்? (நாங்கள் செய்வோம் என முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அதைத்தவிர வேறு வழியில்லை யென்றால் என்ன செய்வது?


நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்கு பரிகாரம் வேண்டும் என்றால் 'குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான்' என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூர் சம்பவம்

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா? சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? அந்த மாதிரி சொன்னான் அந்த யோக்கிய பொறுப்பே கிடையாது நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். 'ராமசாமி குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்று சொன்னபோது எப்போது சொன்னான்? எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டு' என்றதும் ஒருவனையும் காணோம் ஓடிவிட்டார்கள், 'பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள் சி.அய்.டி.ரிப்போர்ட்டில் அதுபோலக் காணவில்லையே என்றார் ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால் வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன்தான் சும்மா இருப்பான்?

ஆண்மையாக 'இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது' என்றாவது சொல்லேன்.

வீண்மிரட்டல் பலனளிக்குமா?


ஆறுமாதமாக கிளர்ச்சி நடக்கிறது 750 பேரை கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.

'குத்துகிறேன் வெட்டுகிறேன்' என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கிவிடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்கு பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி, விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மான மற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை. சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கரையில்லை 'குத்துகிறேன்' என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டிலொன்று முடியவேண்டும்

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தேதீர வேண்டும்! என்ற லட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும் வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்ற லட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது, பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள வேண்டியது தானா?

பார்ப்பானுக்கு மட்டும் தான் அரசாங்கமா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கு தானா? தந்திரமாக பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்கு போக முடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம் இல்லாவிட்டால் சாகிறோம் சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை. நம்மை அடக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம்

நம் அரசாங்க மந்திரிகளை இழுத்துப்போட்டு இவர்கள் தான் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதோ படம் போட்டுக் காட்டுகிறார்கள். மந்திரிகள் உட்கார்ந்து கொண்டு சிங்கத்தைவிட்டு பார்ப்பனர்களை கடிக்க விடுகிறார்கள். பார்ப்பனர்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள். நான்தான் சிங்கமாம். இப்படி படம் போடுகிறார்கள். காமராசர் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள் பதினாயிரக்கணக்கில் போகிற பத்திரிகை இந்தியா பூராவும் போகிற பத்திரிகை இவ்வளவு அயோக்கியத்தனமாக எழுதுகிறான்? பத்திரிகைக்காரர்களுக்கு மானம் மரியாதை இருந்தால் நான் சொல்வதற்கு பரிகாரம் சொல்ல வேண்டாமா? நீங்கள்தான் மக்கள்; நாங்கள் மக்கள் அல்ல, ராஜ்யம் அவர்களுடையதுதானா?

துரோகிகளால் வந்த ஆபத்து

நம் பிரகலாதன்கள் அவர்களுக்கு அடிமையாகப் போவதால்தானே இவர்களுக்கு இவ்வளவு அகந்தை வருகிறது? வேறுநாட்டில் இதுபோல் இருந்தால் ஒரு ராத்திரியில் வெடிகுண்டு வைத்துகட்டிடத்தை இடித்து நொறுக்கிவிடமாட்டானா? துருக்கியில், பாகிஸ்தானில், இங்கிலாந்தில், ஜெர்மனியில் இது போல ஒரு நிலைமை இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த மானங்கெட்ட நாட்டில் தானே இவ்வளவு கொட்டம் அடிக்கும் போதும் கட்டிடம் இருக்கிறது? அவன் வாழ்கிறான்.

வீண்மிரட்டலுக்குப் பணிவதா?

'ஏண்டா அடிக்கிறாய்' என்றாலே 'கொல்கிறான் கொல்கிறான்' என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை எப்படி எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்று தான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சக்கணக்கான குரல்) நாலு பேர் சாவது ஜெயிலுக்குப் போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி அதுதான் சாஸ்திரம் அதுதான் வேதம் அதைத்தான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 100க்கு 97பேராக உள்ள நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும் பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அந்தமாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் எனக்கு இருபது இடங்களில் கத்தி கொடுத்துள்ளார்கள் எதற்கு கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை, முத்தம் கொடுக்கவா இல்லை, விற்றுத்தின்னவா? உன்னால் ஆகும் வரை பார் முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள் இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை அன்பு செல்வாக்கு உள்ளது இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் காத்திருப்பதா?

செல்வாக்கை தப்பாக உபயோகிக்கமாட்டேன்

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக 'வெட்டு குத்து' என்று சொல்லமாட்டேன் வேறு மார்க்கம் இல்லை யென்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியை 'புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும் 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான் தப்பான காரியத்திற்கு உபயோகப்படுத்தமாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; பொது வேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேணடும்.

இன்றா ஏற்பட்டது இந்த உணர்ச்சி?

பார்ப்பானைக் கொல்லுவதும் பார்ப்பானைக் குத்துவதும் இன்று நேற்றல்ல. அந்த காலத்திலேயே நடந்துள்ளதே! பார்ப்பான் எழுதி வைத்துள்ள புராணங்களைப் பார்த்தாலே தெரியுமே? இரணியன் சொல்லியிருக்கிறான்; இது பாகவதம் 7வது ஸ்கந்தம் 2வது அத்தியாயம் இன்ஜிக்கோல்லை பண்டிட் ஆர் சிவராம சாஸ்திரி மொழி பெயர்ப்பு புரோகரசிங் அச்சுக்கூடப் பதிப்பு 715-716வது பக்கங்களில் உள்ளது.

இரண்யன் சொன்னது

இரண்யன் சொல்கிறான் 'ஓ! தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள் ; தாமசியாமல் அப்படி செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் 'மிக்குச் சென்று தபசு யாகம் அத்யாயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள். பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரமங்களுக்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள்' என்றான் அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர் அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டியை எடுத்து கோவில்களையும் பிரகாரங்களையும் கோபுரங்களையும் பிளந்தார்கள் சிலர் ஜவ்லிக்கும் கொள்ளிகளைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள் இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியில் மறைந்து சஞ்சரித்தார்கள்!'

எதில் இது - பாகவதத்தில் !

கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது அந்த காலத்தில் பித்தலாட்டம் செய்து எப்படியோ பார்ப்பனர்கள் ஜெயித்துவிட்டார்கள் இந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் அவர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.

பார்ப்பான் புத்திசாலியாக இருந்தால் பார்ப்பானைச் சேர்ந்தவன் புத்திசாலியாக இருந்தால் 'இந்து மதத்தில் சாதிகிடையாது சாதியை உண்டாகும் சாஸ்திர புராணங்கள் இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்டவை அல்ல' என்று சொல்ல வேண்டும்.

இந்த 1957லும் இதற்கு பரிகாரம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? ஆதனால்தான் மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம் இல்லாததால் இந்த மாதிரி எண்ணங்கள் எண்ண வேண்டியுள்ளது இந்த காரியத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டாமா?

சாதியில்லை என்று கூட எவனும் சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன் என்றதும் 8 நாளில் துடிதுடித்துக்கொண்டு பதில் சொன்னாயே! இதற்கு அதேபோல பரிகாரம் சொல்லாதகாரணம் பார்பபானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால் சர்க்கார் தான் ஏமாந்துபோகும் பார்ப்பான் தான் ஏமாந்து போவான் நாம் ஏமாறமாட்டோம் இன்னும செய்யவேண்டிய காரியகள் பல இருக்கின்றன அதெல்லாம் செய்த பார்த்து ஒன்றும் நடக்கவில்லையென்றால் கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம்.



-----------------------3.11.57 அன்று தஞ்சை தனி மாநாட்டில்
தலைமை வகித்து தந்தை பெரியார் அவர்கள்பேசிய முன்னுரையிலிருந்து

24.8.08

ஆரியர்களியற்றிய ஆசாரணைகள்

இந்த ஆரிய சிகாமணிகள் நமது தென்னாட்டில் பிரவேசித்த பிறகே, அவர்கள் நிஷ் கபடிகளாகிய திராவிடர்களுக்குப் பல ஆசாரணைகளைப் புகட்டிக் கொண்டு தாங்கள் உயர்ந்த அந்தஸ்துக்களை வகித்தவர்களாயினர். அவ்வாசாரணைகளை யறிந்த மட்டும் இங்கெடுத்து விளக்குவாம்: - அவையாவன: குழந்தை கலியாணம், உடன் கட்டையேறல், தீப்பாய்தல், துர்க்கை காளி, முனி, பிடாரி முதலிய தேவதா பூஜைகள், அஸ்வமேதயாகம், மேஷ யாகம், பவுண்டரிய யாகம் முதலிய பாகாதி கர்மங்கள், சக்தி பூஜை, நிர்வாணக் கூத்து, செடிலாடல், பிராண தோஷணிக் கிரந்தம் படித்தல், கெங்கைக்குக் குழந்தைகளை பலியிடுதல், தோடிச் சக்கரத்தில் பிராண பலி கொடுத்தல், இறந்தவனது திதியில் விதவையைப் பிராமணக் குருவுக்குச் சமர்ப்பித்தல், வேதியரது ஆலயத்துக்கு ஸ்திரீகளைத் தானியாக்குதல், குலஸ்திரீகளை நடனமாட வைத்தல், வாய்ப்பூட்டு போடல், உண்டி கட்டுதல், முதலிய ஆசாரணை களை தென்னிந்தியத் திராவிடர்களனுசரிக்க போதித்தும், போதுமான திரவியங்களைச் சம்பாதித்து வந்த ஆரியர்களது கூற்றதிகமாகி மனிதன் பிறந்து இறக்கும் வரையில் பிரம்மாண்ட வரிகளை வசூல் செய்து ஏமாற்றியசமத்காரர்களென்போம். மஹா தந்திரசாலிகளாகிய விப்பிரர்கள் இக்கலிகாலத்திலும் கொண்ட மட்டும் திராவிடர்களிடமிருந்து அபிமானிகளை விடுவிக்கப் பொருளையும், சுய காரியங்களுக்காகக் கையொப்பத் தொகைகளையும் பெற வேதியர்களே முன் வருதலைக் காண்க.

வேதியர்களுக்குள் அர்ச்சகத் தொழிலாளிகளைக் கேவல மாக்குவதினாலேயே பிரதி ஆராதனைகளை மறுக்கப்பட்டதாக விளங்குகின்றது. நிற்க, ஓர் நகருக்கு யாம் எமது பந்துமித்திரர் களுடன் சென்று ஓர் விஷ்ணு ஆலயத்திற்குப் பிரவேசித்துத் தரிசித்த போது அக்கோவில் வைணவ அர்ச்சகர் சடகோபத்தை எங்கள் சிரசுகளில் வைத்தனர். இதைக் கண்ட சில வைணவவிப் பிரர்கள் அதைத் தடுத்து பிராமணரல்லாதவர்களுக்குச் சடகோபமேற்றலாகாதென வாதாடினார்கள்.

இவ்வதிசயத்தை யாம் கவனித்து அப்பிராமணர்களை நோக்கி, ஹே வைணவ! நும் பூர்வாசாரியாது விசிஷ்டாத வைதப்படி ஜாதி வேற்றுமை களின்றியிருக்கையில் யாம் வைணவரென்று நீவிர் அறிந்திருந்தும் நும் கொள்கைக்கு மாறுபடுகின்றீர்களென யாம் புகன்றபோது, அசட்டை செய்து தம் பிராமணக் குல வதிகாரத்தை மேற்கொண்டனர். இதை வாசிக்கும் திராவிட நண்பர்களே கவனியுங்கள்.

இவ்வாறு பொது ஆலயங்களிலும் வேளாளத் திராவிடர்களை அவமதிக்கும்படியான சுதந்தரங்களை நாமே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விழிக்கிறோமல்லவா? இத்தகைய விப்பிரர்களை நாம் நம்பி அவர்கள் கோரும் சுய ஆட்சிக்கு இடந்தருவ தென்றால் எவ்வாறு முடியும்? ஒருக்காலும் நாம் ஏமாறலாகாது. ஏமாந்தாலோ மனுதருமநூல் மானிடத் தன்மையைக் குறைத்து விடும். எப்போது நீதி நூலை நாம் கையாளக் கருதுகிறோமோ அப்போது ஜாதி, மத வேற்றுமை களொழிந்து! சரியான ஒற்றுமையடைய நேரிடுமென்க. ஆகவே ஆரியர்களா லியற்றிய ஆசாரணைகளை இன்றே வொழித்துத் தந்யர்களாக வேண்டும்.


------ திராவிட நேசன் - "திராவிடன்" 17.8.1917

விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏட்டில் ஆதாரத்துடன் விளக்கம்




(கடவுள்கள், தெய்வங்கள் என்பவற்றை மய்யமாக வைத்து சுற்றி வளைத்துப் புனையப்பட்டுள்ள கதைகளை நுணுகிப் பார்த்தால் அந்தக் கடவுள்கள், கடவுளச்சிகள் எல்லாம் அடிப்படையில் ஒரு மனிதனாகவும் பெண்ணாகவும் இருப்பது வெட்ட வெளிச்சமாகும்.
கிருஷ்ணாவதாரம் என்ற பெயரில் வழக்கறிஞர் திரு கே.எம். முன்ஷி எழுதிய விளக்க நூலில் கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதன். கிருஷ்ண லீலைகள் என்பன குழந்தை விளையாட்டுகள், காளைப் பருவக் குறும்புக் கூத்துக்கள் என்று விளக்கியுள்ளார்.

இதே போன்றே விநாயகன் என்று பூஜிக்கப்படும் யானைமுக அலங்கோல உருவ தெய்வம் என்பதும் அடிநாளில் தண்டச்சோற்று ஊராரை மிரட்டி வயிறு வளர்த்த ஒரு ரவுடியை அடிப்படையாகக் கொண்டது. விநாயகபுராணம் அவனுடைய ரவுடித் தனத்தை விவரிப்பது என்று உண்மை விளக்கம் செய்கிறார் திரு கே.விசுவநாதன் என்பவர்.

டில்லி ஆங்கில மாதம் இருமுறை ஏடு காரவனில் செப்டம்பர் 1 ஆம் தேதி இதழில்.
தந்தை பெரியாரவர்களின் பகுத்தறிவுக்காவனம் எவ்வளவு தொலைவுக்குப் பரந்து வளர்ந்து பூத்துக் காய்த்து நற்பலனளித்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகிறது.)


மனிதனையே கடவுளாக்குகின்றனர்


நம் நாட்டுக் கெட்ட வழக்கங்களில் முக்கியமான ஒன்று மனிதர்களை எல்லாம் கடவுள்களாக்க முற்படுவதும், அவற்றுக்குக் கும்பிடு போட கோயில்கள் கட்டி வைப்பதுமாகும்.
எனவே, ஒருவன் தன் சொந்த உருவத்தில் சொந்த கதையில், அந்தக் கதையில் தனக்கு மதிப்புச் சேர்க்க தன்கிட்டவும் நெருங்காத சில தெய்வீக குணபாவங்களைச் சேர்த்தும் கோயில்கள் அமைத்தும் வந்ததன் காரணமாக ஒரே பெயர் முதலியன உள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோயில்கள் இப்போது நமக்கு உள்ளன. புராணக் கதைகளில் ஆதாரப் புலன்

இந்தக் கடவுள் என்பவைகளைச் சுற்றிப் புனையப்பட்டி ருக்கும் அந்தக் கதைகளை நாம் நுணுகி காரண காரிய புலனாய்வு செய்து பார்த்தால் அந்தக் கதைகள் குறிப்பிடும் அந்தக் கடவுள்கள் என்பன அடிநாளில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதைக் கண்டறியலாம். தலைமைக் கடவுள்கள் என்று கூறப்பட்டவைகளின் அடிப்படையும் கூட இப்படி மனிதனை மூலாதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவ்விதம் மனிதரைக் கொண்டு கடவுள்களை மனிதர்கள் சிருஷ்டி செய்யும் திருப்பணி இன்றும் கூட தொடர்ந்து நடக்கிறது.

இப்போது உயிருடன் இருப்பவர்களில் அல்லது அண்மையில் செத்துப் போனவர்களில் யாராவது தங்களுக்கு விருப்பமானவராக இருந்தால் கடவுள் தன்மை கற்பனை செய்து கூறி அவர் களையும் தெய்வமாக்கி சிலை வைத்துக் கோயில் கட்டி தெய்வமாக்கிவிடுகின்றார்கள்.
ஏன் தடைப்படுத்தவில்லை?

விஞ்ஞானப் புதுமை அறிவுவளம் கண்ட இந்த காலத்திலும் இவ்விதம் இந்த ஏமாற்றுத்தனமான - மோசடியான சட்டப்படி குற்றமான இந்தச் செயல்களுக்கு நமது சமுதாயம் இன்னும் முடிவு கட்டாதது விசித்திர விபரீதமாகத்தான் இருக்கிறது.
இப்படி ஏன் தடைப்படுத்தப்படவில்லை? ஏனென்றால் இவ்விதம் செய்வதை மத விரோதமாகவும் நாத்திகமாகவும் கடவுள் துவேஷமாகவும் இப்போது படித்தவர்கள் என்பவர் களும் கருதி பயந்து ஒதுங்கி ஒருங்கி இருக்கின்றனர்.

ஆயினும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளவும் உண்மையை அறியவும் விரும்புகிறவர்கள் இந்த அறிவொளிப் பணி செய்வதனின்றும் தடைப்பட்டு நிற்கமாட்டார்கள்.

துணிவுடன் இந்த தெய்வ மோசடிகளை அம்பலப் படுத்தி உண்மையை உலகோர் அறியச் செய்ய துணிவுடன் செயலில் ஈடுபட்டுத்தான் தீர்வார்கள்.

விகனேசுவரன் யார்?

ஒரு வேலையைத் துவங்கும் முன் அன்றாடம் பூசை போடுகிறார்களே - விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டு தோறும் ஒரு நாளில் கொண்டாடுகிறார்கள் - இந்த விக்னேசுவரன் யார்? இவன் அடிப்படைப் பிறப்பு - வாழ்க்கை - அடிப்படை -வரலாறு -கதை என்ன? இவனை ஏன் கும்பிடவேண்டும் - அருள் பெறத் துடிக்க வேண்டும்? புராணங்களும் கதைகளும் தவிர்த்து இவனைப் பற்றிய உண்மைகளை அறிய வேறு உண்மையான - ஆதாரங்கள் உள்ளனவா? அறிவியல் கொண்டு கணித்துப் பார்ப்போம்.

புராணக் கதைகளில் இந்த விக்நேசுவரைப் பற்றி குற்றிப்பிட்டுள்ளவற்றில் முக்கியமானவை -


(1) இவருக்குள்ள பெயர்களில் முக்கியமானவை விக்நேசுவரன் ; கணபதி - விநாயகர்.
(2) அவலட்சம் - அசாதாரண நீண்ட மூக்கு - யானைத் துதிக்கை போல் தோற்றம்
(3) ஒரே ஒரு பல்-தந்தம்
(4) பெருச்சாளி வாகனம்


இந்த இலட்சணங்களை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய மனித வாழ்க்கைக் கதையை யூகித்துக் கொள்ளலாம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் (சிவன் பிச்சையாண்டி என்பது புராணம்).

இவனது அவலட்சணம் கண்டு ஊரார் இவனை அறுவறுத்து ஒதுக்கினர் - விரட்டினர் - பிச்சைத் தொழிலும் வயிற்றுப் பாட் டுக்கு உதவியாகவில்லை. பட்டினி வேதனையால் பரிதவித்தான். இருந்தாலும் நல்ல மூளை - புத்திசாலி - சிந்தனா சக்தி அதிகம்.
வயிற்றுப் பாட்டுக்கு ஒரு உபாயம் வகுத்துச் செயல்படுத் தினான்.

அவனைப் போன்ற ஏழை எளியவரும் விஷமிகளுமான சிறுவர்களை கோஷ்டியாகச் சேர்த்துக் கொண்டான். இந்த விஷமச் சிறுவர் கூட்டம் சூழ வீடுதோறும் பிச்சைக்குச் சென்றான் பிச்சை போடாவிட்டால் . . . கூச்சல் - ரகளை செய்தனர். இவர்கள் வீட்டு வாசலை விட்டு அகன்றால் போதும் என்ற வேதனையால் வீட்டுக்காரர்களும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பி வைப்பார்கள்.

இது மாதிரி ரகளைக் கும்பல் பிச்சைக்காரர்கள் இப்போதும் இல்லாமல் போகவில்லை. வயதடைந்ததும் இந்தச் சிறுவன் பிச்சைக்கு கொஞ்சம் கவுரவமான - சிரமமில்லாத - முறையை தேர்ந்தெடுத்தான்.

திருமணம் மற்ற வகை விசேஷங்கள் நடக்கும் வீடுகளில் முற்றுகை இடுவான். இவன் கோஷ்டிக்கு தண்டியான சாப்பாடு போட வற்புறுத்தல் - இன்றேல் கூச்சல் - ரகளை - அந்த விசேஷ நிகழ்ச்சிகள் அமைதியாக நடக்காது செய்வோம் என்று பயமுறுத்தல்.

இந்த எச்சரிக்கை பயமுறுத்தல்களுக்கு அந்த வீட்டுக்காரர் பணிந்து வராவிட்டால், மற்றொரு தொல்லை முறையைக் கையாண்டான். பெருச்சாளிகளைப் பிடித்து வைத்திருந்தனர் இந்த வாலிபக் கூட்டதினால் விசேஷ நிகழ்ச்சிகளில் தங்களுக்கு விருந்துச் சாப்பாடு போடாவிட்டால் தங்களிடம் இருந்த பெருச்சாளிகள் எலிகளை அந்த விருந்து வீட்டுக்குள் போட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் கலைந்து ஓடும்படி செய்வார்கள் துவக்கத்தில் அடிபட நேர்ந்ததென்றாலும் நாளடைவில் இந்த முறை அவனுக்கு நல்ல வெற்றி தேடித் தந்தது; சுகமாக விருந்து சாப்பாடு கிடைக்கச் செய்தது.

இவன் ஒரு விருந்து வீட்டில் தலைகாட்டினால் போதும் - முதலில் இவனுக்கு வலிய விருந்துபச்சாரம் நடத்தி வைத்து அனுப்பிவிடுவர் - சடங்குகளை அமைதியாக நடத்திக் கொள்ள வழி செய்து கொள்வர்.

நாளேற வேற, இவனுக்கு விருந்து வைப்பது அவ்வூரின் ஒரு வழக்கமாகிவிட்டது. திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு இந்தப் போக்கிரி விஷமம் ஏதாவது விளைவித்து தடை ஏற்படச் செய்வானோ என்ற பயமே இவன் வயிற்றை முதலில் நிரப்பி அனுப்பி விடுவதற்கு முக்கிய காரணம்.

நாளாவட்டத்தில் இவனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூடநம்பிக்கை எண்ணத்தை இட்டுக் கட்டி பரப்பி விட்டனர். இவனுக்கு முதலில் சாப்பாடு போட்டால் தொல்லைகள் தடைகள் - விக்கினங்கள் நேரிடாது என்று கூறிவைத்தனர். எனவே பல ஆண்டுகள் தொடர்ந்து இவனுக்கு சுகபோஜன உபசாரம் ஊரார் பலரும் நடத்தி வைத்தனர். அயலூரார் கேட் டால் இவன் தெய்வீக சக்தி கொண்டவன் - சாமியார் போன் றவன். முதலில் இவனுக்கு சோறு போட்டு திருப்திப்படுத்தினால் கல்யாண காட்சி விசேஷங்கள் - மற்ற எல்லா காரியங்களும் விக்கினமின்றி நடக்கிறது. இவனுக்கு முதலில் சோறு போடா விட்டால் இவனிடமுள்ள தெய்வீக சக்தி காரணமாக நமக்கு விக்கினம் விளைகிறது என்று கூறி வைக்கலாயினர். இந்தப் பிரசாரத்தால் இவனை ஒரு மகான் என நினைக்கச் செய்துவிட் டனர். அப்படியே நடத்தவும் செய்தனர். வயது அதிகரித்ததும் கல்யாணக் காட்சிகளுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் அவனை அழைத்து முதன்மை மதிப்பு இடத்தில் அமர்த்தி உபசாரம் நடத்தினர். அவனிடம் ஆசிகளும் பெற்றனர் - தண்டியாக விருந்து சாப்பாடும் போட்டனர். உழைக்காமல் உண்டு களித்து திண்ணை தூங்கி வாழ்க்கை நடத்த வாய்த்ததால் உடலும் வயிறும் பெருத்து பானை வயிறும் யானை உடலும் பெற்றான்.

வயது முதிர்ந்ததும் அவன் செத்து வைத்தான். அவன் சாதாரண மனிதல் அல்ல - தெய்வீக சக்தி வாய்ந்த மகான் என்ற கட்டுக் கதை அவன் செத்ததும் பலவித உருவங்களில் பலவித அசாதாரண கற்பனை தெய்வீக நிகழ்ச்சி ஒட்டுக்களுடன் தீவிரமாகப் பரப்பப் பட்டது. முக்கியமாக உழைக்காமல் உண்டு களிக்க திட்டமிட்ட சோம்பேறிக் கூட்டத்தினர் இவனை தெய்வமாக்கிப் பிரச்சாரம் செய்து சுகமாக வயிறு பிழைக்க வழி செய்து கொள்ளலாயினர்.
இவனைப் போல உருவங்கள் செய்து வைத்து பூசைகள் பெயரால் சாப்பாடு கொழுக்கட்டை வகைகளும் படையல் போடச் செய்து படையல் போட்டவர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் சிறிதளவு கொடுத்துவிட்டு பாக்கியை உண்டு வைத்தனர். இந்த வகையில் அந்த ரவுடித் தலைவன் நிரந்தரத் தெய்வமாக - கடவுளாக ஆக்கப்பட்டுவிட்டான். இவனுக்கு பாவர்வதி விஷ்ணு போன்ற பழைய தெய்வங்களை உறவு காட்டி கதைகளும் பாட்டுகளும் புனைந்து பரப்பினர்.

பிற்காலத்தில் புராணங்கள் என்ற கதைகள் புனையப்பட்ட போது, இந்த தண்டச் சோற்று ரவுடியின் வரலாறும் விநாயக புராணமாகப் பாடி வைக்கப்பட்டது. கோயில் வாசல்களில் - குளம் ஆறு கிணற்றங்கரைகளில் ஜனங்கள் நடமாடும் வழியில் மரத்தடியில் இவனுடைய அவலட்சண உருவச் சிலைகள் செய்து வைத்து விக்கினம் தவிர்க்க பூசை நடத்திக் காணிக்கை செலுத்தும் - படையல் போடும் முறையையும் ஏற்படுத்தினர். அன்றாட அலுவலர் துவங்கும் முன் குளிப்பது முதல் கடமை - இந்த முதல் கடமையை அடுத்து மற்ற வேலைகள் செய்வது வழக்கம். வேலை துவங்கும் முன் முதலில் குளித்தும் முதலில் காட்சி தருவது விக்கின விநாயகன் அவலட்சண சிலை (வைதீகர் கூற்றுப்படி சகுனப் பீடையைப் போல்) எனவே தங்களது அன்றைய வேலைக்கு விக்கினம் ஏற்படாதிருக்க, விக்கினேசுவர சிலைக்குக் கும்பிடு போடும் பூசை போடும் முறை பரம்பரையாக்கப்பட்டு விட்டது.

பெயர்கள் காரணம்

போக்கிரி சிறுவர் கும்பலின் தலைவரான இருந்ததால் இவ னுக்கு விநாயகர் - கணபதி - கூட்டத் தலைவன் - என்றும் தொல் லைகள் விஷமங்கள் விளையாது தடுப்பவன் என்ற எண்ணத்தால் விக்னேசுவரன் என்றும் காரண இடுகுறிப்பெயர்கள் இட்டனர்.
பெரிய சட்டித் தலையும் நீண்ட மூக்கும் சின்னஞ்சிறு குழிக்கண்களும் தொந்தி வயிறும் கொண்டிருந்ததால், பிற்காலப் புராணக் கதைக்காரர்கள் இவன் தலையை சீவன் வெட்டியதாக வும் . . . பார்வதி அழுத்தாலும் வெட்டிய தலை காணாமல் போனதாலும், யானைத் தலையை வெட்டி சேர்த்து சிநவனால் உயிர் ஊட்டியதாகவும் - யானைகள் கலவி செய்ததைப் பார்த்தபடி சிவன் - பார்வதி கூடியதால் அல்லது யானை உருக்கொண்டு கூடியதால் யானைக் குழந்தை பிறந்து வைத்தது என்றும் கதை புனைந்தனர். கிழ வயதில் எல்லா பற்களும் உதிர்ந்து ஒரே பல்லையுடையவன் என்றும் கிழவயதில் மூலையில் முடங்கிக் கிடந்தபோது இவனைச் சுற்றி எலி, பெருச்சாளிகள் ஓடியாடி இவனுக்குப் பிச்சையாகப் போடும் உணவில் பங்கு கொண்டதாலோ - இவன் அடிநாளில் பெருச்சாளிகளைக் கொண்டும் விருந்து வீடுகளில் விஷமம் செய்து வயிறு வளர்க்க இவனுக்கு பெருச்சாரி சாதனமாக இருந்ததாலோ இவனுக்கு வாகனம் எலி பெருச்சாளி என்றும் பிற்காலப் புராணக்காரர்கள் இட்டுக் கட்டிக் கதை புனைந்து வைத்துவிட்டனர்!



------------------- "விடுதலை" 7-9-1969

பெரியார் - குடி அரசு



குடி அரசு' வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே!

இதுசமயம் நமது 'குடி அரசு' வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத்தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி பிகுடி அரசுபீக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்கு மென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி. மூலம் அனுப்பிப் பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர் களுக்கும், முன்பணமனுப்பாதவர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப் படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது 'குடி அரசு' அரசியலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்மந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்கு வதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் 'குடி அரசை' ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 17.10.26

ஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனம்!




இந்து மதம் வேண்டுமா? அல்லது தீண்டாமை ஒழிய வேண்டுமா?

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன். தீண்டாமை என்பதே ஜாதி காரணமாய் ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ இல்லை. தீண்டாமை என்பதே ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக்கூடாது என்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய, மற்றெதற்கு பிரஸ்தாபத் தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது?

ஆகவே தீண்டாமை இந்துமதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல் ஜாதி என்பவர்களுக்கும், கீழ் சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர தீண்டாமை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்லவண்ணம் சிந்தித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. ஆகவே ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர சிறிதும் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து.

நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும், கோவிலினிடமும், கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்லவண்ணம் உணருகிறோம். அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம். நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, 'வேதம்', 'சாஸ்திரம்' ஆகியவற்றையும் நம்மை இழிமகனாக்கும்.
தருமங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும். இவ்வளவு தானா? மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்.
பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் இந்துவாக மாட்டோமா?

இந்த நிலையில் உள்ள இந்துவும், சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் அதில் புத்தியோ, சாத்திய அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும் - இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை. இந்து மதம் இந்துச் சட்டம் (இந்துலா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று – சூத்திரன் தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. மாற்றமடையவும் முடியாது.

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா? சூத்திரப்பட்டமும், தீண்டாமையும் ஒழிய வேண்டுமா? என்பதைப் பற்றி அறிவோடு மானத்தோடு நல்லவண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனஜாதித்தனம் ஒழிவதும் அவசியம் என்றுபட்டால்:

முதலாவதாக நெற்றிக்குறியை ஒழித்துத் தள்ளுங்கள். இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக எந்தவித இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள். பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். பிறகு மற்றதைப் பார்ப்போம்.

(12-05-1969 'விடுதலை'யில் தந்தை பெரியார் தலையங்கம். பெரியார் களஞ்சியம். ஜாதி- தீண்டாமை பாகம்:12 என்ற நூலில் இருந்து…. பக்கம்:250)