Search This Blog

27.2.21

திருச்சி - தில்லை நகர் - மக்கள் மன்றத்தில் 08-12-1967 திருச்சி நகர மக்கள் குழுவினர் நடத்திய தந்தைபெரியார் 89ஆவது பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் .வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய நன்றிப்பேருரை:- 


 பேரன்புமிக்க காங்கிரஸ் தலைவர் சுவாமிநாதன் அவர்களேதாய்மார்களே

முன்னேற்றக்கழகத் தோழர்களே எம்.எஸ்.மணி அவர்களேதிரு நடராஜன் அவர்களேமற்றும் இங்கு கூடியுள்ளகழகத் தோழர்களேஇன்றைய தினம் (08.12.1967) என்னுடைய 89ஆவது பிறந்தநாள் விழாஅதற்காகஇந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருகிறதுஇதற்காக மாலையிலே சிற்றூண்டி விருந்து நடத்தப்பட்டதுபலஅறிஞர்கள் பெரியோர்கள் எல்லாம் வந்து என்னை வாழ்த்தினார்கள்எனக்கு முன்பு பேசியஅறிஞர்கள் என்னை வாழ்த்தியும் எனக்கு பொன்னாடை போத்தியும் மற்றும் அன்பளிப்பாகஏராளமான பொருள் தந்தும் என்னைப் பெருமைப்படுத்தினார்கள்இவைகளுக்கெல்லாம்என்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எனக்கு இன்று 89ஆவது பிறந்தநாள்இந்த கூட்டத்திலே நான் பேசுவதற்கு முன்னர் சில புத்தகங்களைஅறிமுகப்படுத்துகிறேன்எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதினாலேநான் சொல்லுவேன்இது ஒருபிரச்சாரத்துக்காகத்தான்என் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காகத்தான்அதற்கு சாதனமாகயாரோ ஒருவருடைய பெயரை பயன் படுத்துவது சிலதில் இல்லாத பெயரை  பயன்படுத்துவது சிலர்நடக்காத காரியத்தையும் பயன் படுத்துவது எதற்காகவென்றால் இது குறித்து மக்களிடையேபிரச்சாரம் செய்வதற்குத்தான்அந்த முறையிலே என்னுடைய பிறந்தநாள் என்னும் பேராலேபிரச்சாரம் செய்வதுதான் மிக முக்கியமான இலட்சியமும் கூடஇதை அனுசரித்து முதலில் இந்தப்புத்தகங்களைத் தருகிறேன்இது ஞான சூரியன் என்கிற புத்தகம்.

இது மதத்தின் பேராலேகடவுளின் பேராலேகடவுள் சம்பந்தமான புராணங்கள்இதிகாசங்கள்தர்மசாஸ்திரங்கள் இவைகளின் பேராலேநடைபெறுகிற பித்தலாட்டங்களைகந்த புராணத்தன்மைகளை விளக்க நல்ல வண்ணம் ஏறக்குறைய 10, 12 பாரம் 150 பக்கம் இதுக்கு முன்னாலே இந்தபுத்தகம் 11 தடவை அச்சடித்துப் பரப்பப்பட்டதுஇது 40 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.யாராலும் இதைக் குற்றஞ்சொல்ல வாய்ப்பில்லாததுஇதை முக்கால் ரூபாய்க்கு 75 காசுக்குகொடுப்பார்கள்மதம் என்றால் என்னஎன்பதை மேல் நாட்டுப்புலவர் இங்கர்சால் அவர்களால்எழுதப்பட்டதுஇது 25 காசு தான்மதம் கடவுள் சம்பந்தமான முட்டாள்தனமும் பகுத்தறிவுசம்பந்தமான விஞ்ஞான நூல் மா.சிங்காரவேலு அவர்களால் எழுதப்பட்டது

இது 50 காசு, 40 காசுக்கு இங்கு கொடுப்பார்கள்இது இதிகாசங்களுடைய-தன்மைபாரத ராமாயணம்அவர்களது யோக்கியதை நாணயம் என்னாஒழுக்கமென்னாஅதற்கேற்ப அவன்பேரை வைச்சிஅனேக பித்தலாட்டக்கதைகளை உண்டாக்கியிருக்கிறார்கள்அவர்கள் பிறக்கவே இல்லைஇறக்கவே இல்லைஅவன் பேரை வைச்சிதான் பித்தலாட்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்இந்நூல் என்னுடையதல்லபெரிய புலவர் கா.நமசிவாய முதலியார் பிரசிடென்சி காலேஜிலே பெரியத்தமிழ்ப் பண்டிதராக இருந்தவரின் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைஇது 25 காசு.

கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்நாங்கள் கடவுள் கதையைத்தான் சொல்லுகிறோம்ஆனால்அந்தக் கடவுளின் கதைதான் என்னாஅவைகள்நமக்குக்கடவுள்களாஅவர்கள் சொன்ன கதையைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்இராமனையோஇராமாயணத்தையோபாரதத்தையோ குற்றம்சொல்றோம்ன்னாகந்தன் கதை எழுதினவன்இராமன் கதையை எழுதினவன்என்னாஎழுதினானோஅதைத்தான் நாங்கள் சொல்றோம்விளக்கம் சொல்றோம்இது 30 காசு.கடவுள் பற்றிஇங்கர்சால் என்பவர் பெரிய ஆராய்ச்சி பண்ணி எழுதியதுஇது 100 பக்கம்இது 30 காசுதான்.

கத்தோலிக்க மதகுரு ஆராய்ச்சி அவர் மதகுருவாக இருந்தபோது தான் பாதிரியாக இருந்தபோதுஅனேக மக்களை ஏமாத்தி நான் பிரச்சாரம் பண்ணிட்டேன்இப்ப எனக்கு புத்திவந்ததுநான்பண்ணின முட்டாள் தனம் என்பதற்கு என்னென்ன ஆதாரம் என ஒவ்வொரு பிரச்சினைகளைபோட்டுஅவரே பதில் எழுதுகிறார்இது 30 காசு தான். 5 அணா தான். 118 பக்கம்இது முதல்பாகம்இது அவர் எழுதின நூல் 2ஆம் பாகம்இதுவும் அதே புஸ்தகம்அந்த புஸ்தகம் ஒரு பகுதிஇந்தபுஸ்தகம் ஒரு பகுதி இதிலேஇதுவும் 5 அணா.

இது நான் எழுதின பல கட்டுரைகள் மதத்தின் பேராலேஆஸ்திகம் என்றால் என்னாதர்மம் என்றால்என்னாநாஸ்திகம் என்றால் என்னமக்களின் மீது மதமெனும் முட்டாள்தனம்எவ்வளவுபித்தலாட்டமானதுசாதி சமய வர்ணாச்சிரமம் என்கிறதுஇதில் ஆறு கட்டுரைகள் இதன் விலை 4 அணா தான்அனேக அரியவிஷயங்கள் கொண்ட புஸ்தகம் இதுகர்ப்ப ஆட்சி என்கிற புஸ்தகம்மக்கள் அதிகமாக பிள்ளை பெக்கக் கூடாதுபிள்ளை பெத்தால் ஒழுக்கம் போயிடுதுநாட்டுக்கும்கேடானதுமனிதனுடைய சுயமரியாதையும் குறைஞ்சி போயிடுது என்பதைப் பற்றி நான்எழுதியிருக்கிற பெரிய புஸ்தகம்இதன் விலை ஒரு ரூபாய்.

இராமாயணம் என்பது ஒரு புதிய கதை அல்லகந்தபுராணத்தையே மாத்தி எழுதின புத்தகம்இதுமாதிரி யாரும் உங்களுக்கு இது மாதிரி சொல்லியிருக்க மாட்டாங்கஇராமாயணம் என்பது ஒருகதைன்னே நினைக்கிறான் எவனும்தனியாக எழுதப்பட்ட ஒரு கடவுள் சங்கதீன்னு.கந்தபுராணத்தைப் பார்த்து அதிலுள்ள குறிப்புக்களை எல்லாம் வைச்சிகிட்டு பேரை மாத்திரம்மாத்திகிட்டு மற்ற சங்கதிகளை அதிலேயிருப்பதை வைச்சிகிட்டு எழுதினது தான் அதன் லட்சியமேஇராமாயணம் அதிலேயும் காதையும்முலையையும் அறுத்ததுஇதிலேயும் (கந்தபுராணத்தில்முலையையும்காதையும் அறுத்ததுஅதிலே இராவணன்இதிலே சூரபத்மன்இரண்டும் ஒரேகதைதான்இவைகள் ஆராய்ச்சியோடு எழுதப்பட்டவை.

இதுவும் என்னுடைய ஆராய்ச்சியல்லஆர்.பி.சேதுப்பிள்ளை என்கிற அரசாங்கத்துக்குத் தமிழ்இலாகாவிலே பெரிய உத்தியோகத்திலே இருந்த ஒரு புலவன்அவராலே எழுதப்பட்டது இதுஇதன்விலை 15 காசுஇது 1967ஆம் வருஷத்து ஆண்டு மலர்இதில் அனேக அறிஞர்களின் கட்டுரைகள்உள்ளதுஇது ஒண்ணரை ரூபாய்.இத்தனை புத்தகங்களிலே ஏதாவது ஒரு புஸ்தகத்தைவசதிப்பட்டவங்க வாங்கிப் படிச்சீங்கன்னா இந்தக் கூட்டத்தின் தத்துவம் என்னா என்பதையும்நீங்கள் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்நீங்கள் தெரிஞ்சிக்கிறதோடு மற்றவங்களுக்கும் எடுத்துச்சொல்லலாம்.      
        
அடுத்து நீங்கள் தெரிய வேண்டியது இதுதான்தோழர்களேஎனக்குப் பிறந்தநாள் என்பது ஒரு பெரியபிரச்சாரம் பண்ணத்தான் பிறந்தநாள் எனக் கொண்டாடுகிறார்கள்இப்ப சிலபேர் உசுரோடுஇருக்கிறவங்களுக்கும் பிறந்த நாள் எனக் கொண்டாடுறாங்கஅதைப் பாராட்டுகிறதினாலே அந்தநாளைப் பயன்படுத்துகிறாங்கஅதற்கு ஆதாரம் என்னாபிறந்தநாள் என்பதாக முதன்முதல் கடவுள்பேராலேஅந்த நாளை வைச்சி ஆரம்பிச்சாங்கஎன்னாகடவுள்ங்கிற மூடநம்பிக்கையைமக்களிடத்திலே பிரச்சாரம் பண்றதுக்காகஅதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னாசிவன் பிறந்த நாள்விஷ்ணு பிறந்தநாள்அப்புறம் சிவனோட மகன் கந்தன் பிறந்த நாள்அப்புறம் விஷ்ணுவோடஅவதாரங்கள் பேராலே ராமன் பிறந்தநாள்கிருஷ்ணன் பிறந்தநாள்இவனுங்க எல்லாம்இருக்கவுமில்லேபிறக்கவுமில்லே சாகவும் இல்லே (பலத்த கைத்தட்டல்). ஆனால் இருந்தான்பிறந்தான் அது பண்ணினான்இது பண்ணினான்னுகதை எழுதி அவனுங்களை விளம்பரம்பண்றதுக்காக ராமனுக்கு இராமநவமி-ன்னு ஒரு நாளைக் கொண்டாடுகிறாங்கஅதுபண்டிகையாய்ப் போயிட்டதுபழக்கத்திலே நம்ம மக்களிடத்திலேகிருஷ்ணனுக்கு அஷ்டமின்னு ஒருநாள் கொண்டாடுகிறாங்ககோகுலாஷ்டமின்னு.கந்தன் பிறந்ததுக்கு சஷ்டின்னு ஒரு நாள்கொண்டாடுகிறாங்ககந்தன் பிறந்தான்னு முருகன் பிறந்தான்னுஅப்படியே சிவன் பிறந்தான்கிறதுஆருத்திரா ன்னு கொண்டாடுவாங்க.

                இவனெல்லாம் பிறக்கவுமில்லே இருக்கவும் முடியாது.

                கடவுள்-ன்னு சொன்னாலேஅவனுக்குப் பிறப்புமில்லேஇறப்புமில்லே-ன்னு சொல்லிதான்கடவுளைப் புகுத்தினான்அப்புறம் அவன் பிரசாரம் பண்றதுக்கு அவன் பிறந்தான்வாழ்ந்தான்,செத்தான்கிறதுக்காகக் கொல்லப்பட்டான்அதனாலே இவன் செத்தான் என இப்படியெல்லாம்எழுதிட்டான்ராமன் செத்தான்னே எழுதறான் கிருஷ்ணனை இன்னொருத்தன் கொன்னான்னுஎழுதினான்இதெல்லாம் கடவுள்னு சொல்லி எழுதறது முட்டாள்தனம்ஆனால் இதைப் பிரச்சாரம்பண்றவன் கூட ஒரு உறுதியினாலே என்னா எழுதறது என்பதில்யோக்கியமானபடியா நாணயமானகதையாஎன்பதையெல்லாம் சிந்திக்காமேகதையை எழுதிட்டான்.

அதுக்கு உருவம் - அதுக்குக் கோயிலு - அதுக்குப் பண்டிகை - அதுக்குப் பொண்டாட்டி - அதுக்குவைப்பாட்டி (சிரிப்புஅதுக்குக் கல்யாணம் மற்றும் என்னென்னமோ வச்சி மக்கள் உள்ளத்திலே ஒருமூடநம்பிக்கையைப் புகுத்தறதுக்கு கடவுள்பேருன்னு சொல்லி வரிசையா பண்ணிட்டு வந்திட்டான்அதுதான்இராமன் ஒருவன் இருந்தான்அவன் பிறந்தான்னு சொல்ல முடியாதுகிருஷ்ணன்ஒருவனிருந்தான்அவன் பிறந்தான்-அவன் செத்தான்னு எவனாலேயும் சொல்ல முடியாதுஅவன்கதையின்படி அவன் மனுஷனாகவுமில்லேஅவன் கடவுளாகவுமில்லே .மனுஷனாக இருந்தால் அவன்மனுஷத்தன்மையோடு இருக்கணும் .இல்லாட்டா கடவுள் தன்மையோடு இருக்கணும்இரண்டுமில்லேகடவுள்னு சொல்றான் அவன்பொண்டாட்டியை எவனோ இழுத்துகிட்டு போயிடறான்னுஇராமாயணத்தை முடிக்கிறான். (சிரிப்பு) (ராமனைகிருஷ்ணனைக் கடவுளுங்கிறான்எவனோஅவனை வில்லால் அடிச்சான்,

அவன் செத்தான்னு எழுதறான்.இப்படியாக ஒரு முட்டாள்தனமான கருத்து எப்போதும் இருக்கும்படியாக உண்டாக்கின ஒரு தந்திரம் கடவுள் பிறந்த நாளுங்கிறதுஅதுக்குப் பின்னாலே என்னாபண்ணினான்கடவுள் சங்கதி முடிஞ்ச உடனேபக்தர்கள் பேராலே ஆரம்பிச்சான்.நாயன்மார்கள்பிறந்தநாள்ஆழ்வார்கள் பிறந்தநாள்குருநட்சத்திரம்ஆழ்வார்கள் நட்சத்திரம்நாயன்மார்கள்ஆழ்வார்கள் இந்த இரண்டுபேரும் அவனுங்க பிறந்தாங்க செத்தானுங்கன்னுஅதிலே ஆழ்வாரிலே100க்கு 5 பேர்இருந்தாங்களோ என்னமோ?அதிலே 90 பேருபெறட்டுஇருந்திருக்கமாட்டானுங்கஅந்தக் காரியமெல்லாம் நடந்திருக்காதுஅப்படி பேரு வச்சி அவனுங்க பேராலே எழுதினானுங்க.

அப்புறம் அரசியல் பித்தலாட்டம் வந்த பிறகு அரசியல் பெறட்டான கொள்கைகளைப்பரப்பறதுக்குஅதுக்கும் அந்த மாதிரியான ஆளுங்க பேராலே பொய்யும் புளுகும் பேசிக்கிறதுஅவனுங்களைப்பத்தி பிரமாதமா பேசிக்கிறதுஇப்ப கொஞ்சம் மக்கள் அறிவு பெற்றதுக்குதெளிவானதுக்குஅப்புறம்நிஜமாக உயிரோடு இருக்கிறவனை பிறந்தநாளுன்னு அவன் பேரை இப்ப பயன்படுத்தறாங்கஅந்தமாதிரி சிலபேருக்கு நடத்தறாங்கஅதனுடைய கருத்தெல்லாம் காந்தியின் கொள்கையைப்பரப்பறதுபிரசாரம் பண்ணத்தான்அது போலவேஜவகர்லாலுக்கு நடத்தறாங்கஇன்னும் பலபேருக்கும் நடத்தறாங்கமற்றும் நம்மைப் போலவே இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி)க்கும்நடத்தறாங்கமந்திரிமார்களுக்கும் நடத்தறாங்க.

அவர்களைப் பெரிசு பண்றதுக்காகஅவர்களுடைய கொள்கையைப் பரப்பச்செய்யணும்அதேமாதிரியாகவே எனக்கும் நடத்துகிறார்கள் என்றால்என்னுடைய கொள்கையில் ஈடுபட்டவங்கஅதாவது நம்ம கழகத்தோழர்கள் முக்கியமாகக்கழகம் நம்மகொள்கைகளை ஜனங்கள் மத்தியிலேபிரச்சாரம்பண்ண வாய்ப்பை முன் வைத்து மற்ற பெரியவங்களையும் இதைஆதரிக்கும்படியாகக்கேட்டு இதில்சேர்த்து அவர்களுடைய தயவினாலேயும் கொண்டாடி இப்படி பலபேரையும் இணைத்துஎன்னைப் பற்றியே சொல்லிக்கிட்டு போக அவர்களாலே முடியாதுநம்மகொள்கையைப்பற்றிச் சொல்லவேண்டுமானா அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வேணும்நான்கடவுளை எல்லாம் அயோக்கியப் பயலுகங்கிறேன்அவனுங்க பொண்டாட்டிகளை எல்லாம்விபசாரிகள் குச்சிக்காரிகளுங்கிறோம்அந்தக்கடவுள் காரியங்கள் எல்லாம் பெறட்டுஅயோக்கியத்தனம்கிறோம்கடவுளாவது வெங்காயமாவுது மடப்பசங்களாங்கிறோம்.இதையெல்லாம் சொல்ல அவர்களுக்குத் தைரியம் வராதுஏன்னா?

நானும்என்னை யாரும் செருப்பிலே அடிச்சாலும்உதைச்சாலும்கொன்னாலும்குத்தினாலும்என்னா பண்ணினாலும் பரவாயில்லேசங்கதிகளைச் சொல்லி வைக்க வாய்ப்பு கிடைச்சிதேன்னுதுணிஞ்சி நான் பேசறேன்ஒருத்தர்கிட்டேபோயி ஒரு ஓட்டு கேட்க மாட்டேன்எனக்குஇப்ப90வயசாகுது.எனக்கு 5 வயசு முதற்கொண்டே என்னுடைய அஞ்சாவது வயசு முதல் இன்னைக்கு90ஆவது வயசு வரையிலும் ஏதாவது ஒருத்தருக்கு நான் கொடுத்தாகொடுத்திருப்பேனே தவிர,ஒருத்தர் கிட்டே போயி எனக்கு ஒரு காரியம் செய் ஒரு காசு கொடுன்னோ நான் கேட்கமாட்டேன்கேட்டதுமில்லைகேட்காது வாழ முடியாது என்பாங்கஆனால்என்வாழ்விலேஎனக்கு இது பண்ணுஇன்ன காரியம் செய்யின்னுஎனக்கு இந்த உபகாரம் செய்எனக்கு இன்னது வேணும்ன்னுஅந்தமாதிரியான வாய்ப்பும் எனக்கில்லே.

ஆனால் நான் பிறக்கும்போதே நான் துடுக்கான பையனாகவே பொறந்திட்டேன்ரகளைகாரணமாகவே இருந்தேன்எந்தக் காரியத்திலே நான் ஈடுபட்டாலும்நான் தலைவனாதான்இருப்பேனே தவிரவெறும் மெம்பராக எதிலேயும் நான் இருப்பதே இல்லை. (பலத்த - கைத்தட்டல்நான் காங்கிரசிலே கொஞ்ச நாளிருந்தேன். (1919 முதல் 1925 வரைஅதிலேயும் நான் தலைவனாதான்இருந்தேன்என் விருப்பப்படி நடக்கலேகாங்கிரசை விட்டு விலகினேன்அந்த மாதிரி நான்துடுக்காகவே இருந்தேன்எப்படி எப்படியோ வசதி ஏற்பட்ட பிறகு நான் துடுக்காகவே பேசப் பழகிட்டேன்அதுக்குத் தகுந்த ஆராய்ச்சிகளையும் செய்தேன்எனக்குப் புத்தி இப்படிப் போயிட்டுது(சிரிப்புயாரும் கவனிக்காத சங்கதிகளைத்தான் நான் கவனிக்கிறேன் (கைத்தட்டல்).
நம்ம நாட்டிலே நான் சொல்றேனே இன்னைக்கும் ஒருவனுக்குக்கூடதான் ஏன் தேவடியா மகனாகஇருக்கிறான்பாப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கிறான்இவன் குச்சிகாரிமகனாகஇருக்கிறான்நாலாவது ஜாதியா இருக்கிறான் இந்த கவலையே இவனுக்கு இல்லையே(கைத்தட்டல்யாருக்காவது இருக்குதுன்னா எழுந்திரிச்சி
நின்னா நான் வணங்குகிறேன்அவனுக்கு தெரியும் காத்தாலே அவன் சாமியைக் கும்பிடுவான்நெற்றியிலே சாம்பலைப் போட்டுக்குவான்மண்னைப் பூசிக்குவான்கோயிலுக்கு போவான்சாஸ்திரங்களைப் படிப்பான்இதுக்கெல்லாம் என்னா அர்த்தம்கோயிலுக்குப் போறவங்களும் சாஸ்திரங்களைப் படிக்கிறவங்களும் நாமம் போட்டுக்கிறவங்களும் - சாம்பலடிக்கிறவங்களும்இதுக்கு என்னா அர்த்தம்ன்னாஆமாம் நான் பாப்பானுடைய வைப்பாட்டி மகன்தான் (சிரிப்புகைத்தட்டல்நான் குச்சிக்காரி மகன்தான் (மீண்டும்சிரிப்புஎன எழுதறதுக்கு இதிலே கையெழுத்துப் போடற மாதிரி (கைத்தட்டல்). அதைஏண்டா செய்றேன்னா?

அதுக்கு நான் உசுரே கொடுப்பேன்ம்பான்அடே நீ சாம்பலடிச்சிநீ நாமம் போட்டுநீ கோயிலுக்குப்போயிநீ வெங்காடஜலபதிக்கு நீ தேவடியா மகனா இருக்கிறியேநீ ஏன் சிந்தனை பண்றதில்லேநீதேவடியா மகன்மதத்திலே தேடிவயா மகன் - கோயிலிலே தேவடியா மகன் - சாஸ்த்திரத்திலேதேவடியா மகன் - குச்சிக்காரி மகன் (சிரிப்பு) (கைத்தட்டல்மன்னிக்கணும் நீங்கநான்சொல்றதுனாலே நீங்க கோவிச்சிகாதீங்கஇது பற்றி எவனுக்குமே கவலை இல்லியேஇன்றைக்குநடைபெறுகிற சட்டத்தை எடுத்துக்கிட்டா நாம நாலாவது ஜாதி நாம சூத்திரன்நாம தாசிபுத்திரன்அந்த நாய்கள் (பாப்பான்கபிழைக்கிறதுக்காகநம்ம ஆளுக இருக்கிறானே தவிரநம்மைசூத்திரன்னு இருக்குதேன்னுஎவனுக்கும் வெட்கமில்லேமுடியிலே.ஆனால் நம்மை எப்படியோகொண்டு வந்து மாட்டி வைச்சிட்டான்வெட்கப்படறதுக்கே இல்லாமேஅதிலே வெட்கபட்டா பிழைக்கமுடியும்நாமதான் அதுக்கு சத்தம் போட முடியுதுஇப்படி ஒவ்வொரு காரியத்திலேயும் கோயிலுக்குபோறான்.

நிஜமாக அவன் பாப்பானுடையவைப் பாட்டிமகன்னுதானே போறான்அவன் பக்தன்னுநினைச்சிகிட்டு போறது நம்மை ஏமாத்தித்தானேகோயிலுக்கு போறவன் பின்னே என்னாநினைச்சிகிட்டு போறான்நாம தாசி மகன் சூத்திரன்னுநான் பந்தயங்கட்டிக் கேட்கிறேனேநான்சூத்திரன்னு ஒப்புக் கொள்ளாதவன் எவனாவது கோயிலுக்கு போறானாகைத்தூக்கட்டுமேயாராவதுநான் சூத்திரன் அல்லநான் மனுஷன்னு நினைச்சிகிட்டுதான் நான் கோயிலுக்குப்போறேன் அப்படீன்னு யாராவது கைத்தூக்கட்டுமேஇல்லேநம்முடைய இழிவை நினைச்சி நான்சொல்றேன் இதெல்லாம்
இல்லேபோவான் கோவிலுக்குதிருவானைக்காவலுக்குவெங்காயத்துக்குப் போவான்அங்கேயில்லேஇந்த தாயுமானவர் சாமி கோயிலுக்கு வெங்காயத்துக்குப் போவான்சீரங்கம்ரெங்கநாதசாமி கொழுக்கட்டைசாமி அங்கே போவான்எந்தப் பேராலேசாமிகிட்டே நான்சூத்திரன்னு காட்டிக்கிறதுக்குத்தானே அங்கே போறான்வெளியிலேயேதானேநிற்கிறான்.கோயில்சாமிஇருக்கிற வாசற்படிகிட்டே தான் நிற்பான்ஏன்டா சாமியிருக்கிறகருவறைக்குள் போகலே? (சிரிப்புதுணிந்து நீ அங்கே போனா உன்னைப் பாப்பான் கல்தாகொடுப்பான்ஏன்டா தேவடியா மகனே நான் இருக்கிற இடத்துக்கு நீ சூத்திரன் ஏன் உள்ளேவந்தேம்பான்சாமி சாமி தெரியாது வந்திட்டேன்னு கன்னத்திலே போட்டுகிட்டு வெளியேவந்திடுவான்.

இந்த மாதிரி இழிநிலையை ஒத்துகிட்டு எவனாவது கோவிலுக்குப் போவானாஇல்லே.அங்கேயிருக்கிற பாப்பானையாவது கேட்பானா நீ என்னடா ஒஸ்திநான் என்னடா மட்டம்னுஅடே நீஇராத்திரி எல்லாம் மாமா வேலை பண்ணிப் போட்டு குளிக்காமல் (கைத்தட்டி சிரிப்புநீ உள்ளேவந்து புகுந்துகிட்டேநான் குளிச்சி முழுகி சுத்தமா பட்டுகட்டிகிட்டுபட்டை போட்டுகிட்டு,வந்திருக்கிறேன்என்னை ஏண்டா சூத்திரன்னு வெளியே நில்லுங்கிறீயான்னு கேட்க வேண்டாமாஅவன் என்னா பண்ணினாலும் அவன் பிராமணன் தான்ஜாதியை தர்மத்தைக்காக்கபொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பிழைச்சாலும் அவன் பிராமணன்திருடினாலும் அவன்பிராமணன்கொள்ளை அடிச்சாலும் அவன் பிராமணன்கொலை பண்ணினாலும் அவன் பிராமணன்ஒரு பொம்பளையைக் பலாத்காரம் பண்ணினாலும் அவன் பிராமணன் பார்த்துக்கடாங்கிறானேஅவன்சூத்திரன் எவ்வளவு பக்தியோட இருந்தாலும் அவன் தாசிமகன்நாலாவது ஜாதிஇதையெல்லாம் படிங்க ஞான சூரியன் என்ற நூலைஅதுக்கு ஏன் போவானேன்?

இராமாயணத்திலேஇருக்குதே.அதைப்பார்க்க மாட்டேங்கிறான்ராமாயணத்தைத் தெருத்தெருவாவாசிக்கிறானேராமனே சொல்றான் ஆரிய தர்மம் காக்க சூத்திரனைக் கொல்லத்தான் நான்வந்தேன்ஜாதி காப்பாத்த சூத்திரனைக் கொல்லணும்அப்படீன்னல்ல சொல்றான்அது அக்கிரமமடான்னு சொன்னா கேட்கமாட்டேன்கிறான்அந்த இராமாயணத்தைத் தான் படிக்கிறானுங்கயார்இருக்கிறா அதைப் பற்றி எடுத்துச் சொல்லஎன் (உடல்நிலைமை எனக்கு இப்ப வயசு 89 ஆயிப்போச்சிஇப்பவே எனக்கு தொல்லைஇரண்டு பேரை பிடிக்காமல் என்னால் நடக்க முடியாதுஒண்ணுக்கு (சிறுநீர் கழிக்கவும்வெளியே போகனும்ன்னா உட்கார்ந்திருக்க முடியாதுநின்னுகிட்டேதான் இருக்கணும்நான்போயிட்டா நாளைக்கு எவன் சொல்வான் இதைஎல்லாம்இல்லே யார்திருந்துவா?

நான் செத்தவுடன் அவனவன் என்னை பூசை பண்ணுவானே தொலைஞ்சானே சண்டாளப்பயல்னு? (கைத் தட்டல்இருக்கிற நிலைமை மாறலியேசீர்திருத்தமாகலியேபுதுக்கோயில் கட்ட 1ஙூ(ஒண்ணரைலட்ச ரூபாய் அதுக்கு பணம் அனுப்பறான்இதிலே எவன் பிழைப்பான்பாப்பான்பிழைப்பான்அய்யங்கார் பசங்க பிழைச்சாங்கநம்ம பசங்க கெதி என்னாச்சிஅவன் கிட்டேகாசைக்கொடுத்திட்டு அவன் காலைக்கழுவித் தண்ணீர் குடிக்கிறதுசிறப்பு என்னாதாசி புத்திரனாஇருக்கிறான் அவன்ஏன் அந்தக் கோவில்அது புதுக் கோயிலு . அது கட்டின பிறகு நீ அங்கே ஒருபுதுத்தேவடியா மகனாகத்தானே ஆகப் போறே நீஎந்தக் கோயில் கட்டினாலும்நீ உள்ளேபோகிறாப்பிலே கோயிலு கட்ட முடியுமாஎதுக்குச் சொல்றேன்?கோயிலிலே சாமி இருக்கிறபக்கத்திலே சூத்திரன் வரக் கூடாது

சூத்திரன் வந்தால் சாமி தீட்டாய்ப் போய்டும் ஏன்னாநீ தீண்டாதவன்.அவன் (பாப்பான்). அப்படிசொன்னதுக்கப்புறம் சூத்திரப் பசங்க எங்கே மாறியிருக்கிறான்நம்ம மந்திரிகளும் அங்கே போயிசாமி கும்பிடறானுங்களே? (சிரிப்புபத்திரிகைக்கார திருட்டுப் பசங்களெல்லாம் அதே மாதிரிதான்.கோயிலு சாமி பற்றி பரப்பறது.

மனுஷனுடைய அறிவைப் பற்றிமானத்தை பற்றிதன்னுடைய வாழ்க்கையைப் பத்திஎன்றதேஇல்லையார் சொல்லப் போறா இது பற்றி எல்லாம் உங்களுக்குநீ இப்பமுன்பு உன் அப்பன்இருந்தான்பாட்டன் இருந்தான்உங்க பாட்டி இருந்தாள்நாசமா போனாங்க - மாறினாங்களா?அவுங்க பிள்ளைகள் எல்லாம் மாறியிருக்க வேண்டாமாஅவர்கள் பிள்ளைகளாவது மனுஷனாகஇருக்க வேண்டாமோஅவனும் தேவடியா மகனாகவே இருக்கணும்அதுவும் அவன் சூத்திரனாகவேஇருக்கணும்நாலாவது சாதியாய் இருக்கணும்அப்புறம் நீ இருந்தென்னாசெத்தென்னா?ஈனசாதியைப் பரப்பிக்க நாம ஒரு கூட்டமாநீ எத்தனைக் குட்டிபோட்டாலும்அதெல்லாம்நீயும்ஈனஜாதிதானேநாலாவது ஜாதியாகத் தானே ஆவப் போவுதுஅதைப் பற்றி எவனுமேகவலைப்படறதில்லேன்னா மனுஷனுக்கு எவ்வளவு நாளாகக் கவலை இருக்கிறதுபெரிய மனுஷன்பாருடா அந்தப் பண்டாரப் பயல் - அவன் சாமியைத் திட்டறான்அவன் மதத்தை திட்றான்அவன்அதைச் சொல்றான் - இதைச் சொல்றான் -அப்படீன்னுதான் அவன் சொல்றானே தவிர - அவன்சொல்றதிலே என்னா தப்புநம்ம யோக்கியதை எப்படிடா இருக்குதுன்னுயார் சிந்திக்கிறாஎவனும்சிந்திக்கிறதில்லே?.

இந்தஎன்பிறந்தநாளுங்கிறது நம்முடையக் கொள்கையைப் பாராட்றதுக்குநம் கொள்கையை பரப்பஒரு வாய்ப்புதான்எல்லாரும் அதுக்குத்தான் செய்றாங்கநீங்க என்னை வாழ்த்தறது அது மிக மிகசாதாரணம்தலைவர் சொன்னார்நாம வாழ்த்தறதுக்கு நமக்கு யோக்கியதை இல்லேன்னு ஜாடையாசொன்னார்நாம ஒரு பிள்ளையை வாழ்த்துறதுன்னா அதிலே என்னாஅறிவுஇருக்குதுவாழ்த்தறதுங்கிறது என்பதெல்லாம் அய்யா அது ஒரு முட்டாள் தனம் தானே?. வேறு அதிலேஎன்னாபுத்தி இருக்குதாஉன்னை ஒருத்தன் பார்த்து நீ மகாராஜனாய் இருன்னா நீ ஆயிடுவாயா?(கைத்தட்டல்நீ நாசமாபோ ன்னா நீ போயிடுவாயா? (சிரிப்பு கைதட்டல்சொல்லுங்கஅந்தவார்த்தைக்கு ஏதாவது மதிப்பு உண்டோஉண்மையைச் சொல்றேன்அதனாலே உளர்றான்னுநினைப்பீங்கநீங்கள் ஏண்டா இப்படிச் சொல்றான்னு நினைப்பீங்கநீங்கள் என்னைவாழ்த்தறதெல்லாம் முட்டாள்தனம் நான் பெரிய கூட்டத்திலேயெல்லாம் பேசியிருக்கிறேன்இதுஎன்னா சின்னக்கூட்டமாக இருக்கிறீங்கமந்திரிகள்அதிகாரிகள் ஜட்ஜ்கள் அவுங்க இருக்கிறகூட்டத்திலேயும் வாழ்த்தறதுங்கிறது ஒரு முட்டாள் தனம்னு நான் சொல்லியிருக்கிறேன்.

நாமம் போட்டுகிறது எப்படி முட்டாள் தனமோஅது போன்றது வாழ்த்தறதும் என நான்சொல்லியிருக்கிறேன்அதுக்கு என்னா அர்த்தம் சொல்லுங்களே நீங்கள் தான்இன்னும் ஒரு 100, 200 வருஷத்துக்கு இருன்னு சொன்னாஎனக்கு என்னா லாபம்ஒரு நாள் எச்சா இருக்க முடியுமாஎன்னை அவரு 100வருஷம் இருக்கனும்னா அவருக்கு வேடிக்கையா நான் சொல்லுவேன்ஏன் அய்யாஇவ்வளவு சிக்கனம்இவ்வளவு பிச்சக்காரப் புத்திஒரு ஆயிரம் வருஷமிருன்னு சொல்லே என்னாகெட்டுப்போச்சி (சிரிப்பு) (கைதட்டல்ஆயிரம் வருஷமிருன்னு சொல்றது ஒண்ணுதான்நூறுவருஷம்கிறது ஒண்ணுதான்அஞ்சு வருஷமிருங்கங்கிறதும் ஒண்ணுதான்நம்ம பேச்சினால் சாவைத்தடுத்து நாம இருக்கமுடியுமோஅது நம்மவர்களுக்குப் பழக்கமாப் போச்சி பாப்பான் பிச்சைஎடுக்கிறதுக்கு  நீ நீடுழிகாலமிரு - ஆசிர்வாதம் ஆசீர்வாதம்ன்னு பாப்பான் இதைச்சொல்லிக்கொடுத்து ஆசீர்வாதம்ங்கிற சொல்லுக்கு தமிழிலே கண்டுபிடிச்சான் வாழ்த்துறதுன்னு.மத்தது அப்படி என்னா நடக்கும்வாழ்த்தறதிலே என்னா ஆகும்நான் வாழ்த்தறதுன்னு - சொன்னாநினைச்சா நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லுவதுதான்எதுக்காகச் சொல்றேன் அது ஒருமூடநம்பிக்கை.

இப்படியாக நாங்கள் திருத்தமடைய வேண்டியது காரியம் ரொம்ப இருக்குதுஏன் ரொம்பஇருக்குதுன்னாஎவனும் இதையெல்லாம் திருத்தறதுக்காகப் பாடுபடலேஎவன் வந்தாலும் இந்தமூடத்தனத்தை வளர்க்கிறதுக்குத்தான் பாடுபட்டானுங்க - சாமியாராவது பக்தனாகிறதுபுலவனாகிறது - கவிஞனாகிறதுபெரிய பிரசங்கியாகிறது - பழைய முறையைவளர்க்கிறதுக்குத்தான்அதை அதிலிருக்கிற தப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லிமக்களிடையேயுள்ள அந்த முட்டாள்தனத்தைத் திருத்தி நமக்கு இருக்கிற இழிவைமாத்த வேணும்னுஎவனும் பேசமாட்டான்பேச பயப்படறான்உத்தியோகஸ் தனாயிருந்தா அவன் மேல் வேலைக்குப்போயிடுவான்அவன் அரசியல்காரனானா அவன் ஓட்டு வாங்கப்போவான்அவன்வியாபாரியாயிருந்தால் அதனாலே பணம் சம்பாதிக்க மக்களிடம் தயவு தாட்சண்யம் பாப்பான்இவனை எல்லாம் ஒண்ணு சேர்க்கமுடியுமாஇவனெல்லாம் இந்த மூடநம்பிக்கையை முட்டாள்தனமான இக்காரியத்தை கண்டிக்க முடியுமாஅதனாலேதானே இவைகள் இன்னமும்இருக்குது

வாழ்விலே இன்னமும் தாசிபுத்திரன் - சூத்திரத்தன்மை இருக்குதேநான் பிறக்கிற அன்னைக்கும்நான் சூத்திரன்தான்தாசி மகன் தான் - தாசிபுத்திரன்தான்எனக்கு இப்ப 89 வயசாச்சி இன்னும் இந்தஈன ஜாதித்தன்மைதான்மாறல்லியேஅப்படி எவனாவது மாற்ற முற்பட்டால் நான்புத்தனாயிட்டேன்நான் சமணனாயிட்டேன்புத்தன் சமணனாகிறதிலே தான் இருக்கிறான்வாயிலேதான் சொல்லலாமே தவிரகாரியத்திலே ஒண்ணும் செய்றதில்லேசாமியில்லேஅதுக்குப்பொண்டாட்டியில்லேஒண்ணுமேயில்லஅரசாங்கம் மூடத்தனத்தை வளர்த்தது - காங்கிரசுவளர்த்தது மத சம்பிரதாயம் வளர்த்தது - இலக்கியம் வளர்த்தது - மொழிவளர்த்தது - மூடத்தனத்தை.

தேசியமென்றாலே சாமியை நம்பணும்நெற்றியிலே சாம்பலடிச்சிக்கணும்ஆகவே தோழர்களேஇனிமக்களுடைய வாழ்வுக்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயம்மக்கள் அடையவேண்டிய நிலைமை ஆகியவைகளை மாத்தி அமைக்கணும்மாத்தித் தான் அமைக்கணும்.ஏறக்குறைய 3000 வருஷமா இந்தப்பேரு இருக்குதுசூத்திரன் என்பது தமிழனோஆந்திரனோ,கன்னடியனோமலையாளியோ அவனெல்லாம் சூத்திரன்இன்னைக்கு இல்லே இது 4000 வருஷமாஇருக்குதுஇப்பதான் அது ஒழிய சூத்திரன்கிறது கத்தறாப்பிலே ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

முன்பெல்லாம் சொன்னா ஒழியணும்ன்னா அடிச்சே கொன்னுபோடுவாங்க.

என்னைக் கூட மூன்று மாசத்துக்கு ஒருக்கா நாலு மாசத்துக்கு ஒருக்கா உன்னைக் குத்தப் போறோம்கொல்லப் போறோம்ன்னு மிரட்டி கடிதங்கள் வருதுநேற்று முந்தாநாளு கூட (6.12.1967) பத்திரிகையிலே பார்த்தேன்சந்து பொந்திலே தெருவிலே நடைபாதையிலே இருக்கிற கோயிலைஎல்லாம் மாத்தப்போறோம்னு சொன்ன உடனே சென்னை மேயருக்கு வேலூர் நாராயணனுக்குமிரட்டி கடிதம் வந்ததுஎன்னபாப்பானுக்கு அக்கோயில்கள் தான் படிப்புக்கு பாப்பான்னு இருந்தாஅவனுக்குப் படிப்பு என்னான்னாஇந்த சமுதாயத்துக்கு விரோதமாக இருக்கிறவனைக் கொல் என்பதுதான்ஆனால் என்னைக் கொல்ல எவனுக்கும் தைரியமில்லேசில பாப்பான் என்னைஎதிர்க்கிறான்நாம(பாப்பான்இரண்டு மூணு பேரு அவனுங்களிலே (தமிழர்) 1000 பேரு, 10,000 பேரு, 1,00,000 பேரு இருக்கிறாங்கஅவுங்க முன்வந்தா நம்மை அடியோடு ஒழிச்சிக்கட்டிடுவாங்கங்கிறபயம் பாப்பானுங்களுக்கு இருக்கிறதுஇல்லாட்டா என்மீது கைவைச்சிருப்பான்கடவுள் கதைகள்பூராவும் இதுதான்எவன் உங்களுக்கு விரோதியோ அவனைக் கொல்லு.

கடவுளுடைய அவதாரங்களை எடுத்துக்கோ வேதத்தைப் பழிச்சான்அவனைக் கடவுள் கொன்னாருஜாதியைக் குறை சொன்னா அவனைக் கொல்லுமதத்தைக்குறை சொன்னா அவனைக் கடவுள்கொன்னாரு . ஏன்ராவணனை ஏன் ஒருத்தன் கொன்னான்இரணியனைஒருத்தன் ஏன்கொன்னான்இராவணனுக்கு என்னா வேலைபாப்பானை எங்கு கண்டாலும் உதைன்னான்.பாப்பான் எங்கே பிரசாரம் பண்ணினாலும் உதைன்னான்இரணியன் என்னா சொன்னான்பாப்பான் ஊட்டை எல்லாம் இடின்னான்அவன் வீட்டுக்கு நெருப்பு வையின்னான்எவனெவன்பூணூல் போட்டிருக்கிறோனோ அவனை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான்யாருஇரணியன்.அதன்படி சொன்னான்பாப்பானை எல்லாம் வெட்டித் தள்ளுன்னான்இரணியன் இருந்தானா?அப்படிச் சொன்னான்னாங்கிறதல்ல இப்பகதை?

பாப்பான் அவ்வளவு முன்ஜாக்கிரதையாக எழுதி இருக்கிறான் எவனாவது உன்னைக் குறைசொன்னா அவனைக் கொல்லுன்னுகடவுள் பத்தவதாரம் - எடுத்தாருங்கிறான்ஒன்பது அவதாரம்எடுத்தாருங்கிறான்ஒன்பது அவதாரமும் - சாமிக்கு - வேதத்துக்கு - பாப்பானுக்கு - கோயிலுக்கு -குளத்துக்கு - விரோதமாயிருந்தவனை - பாப்பானுடைய தர்மத்துக்கு -யாகத்துக்கு-மற்றும்பூஜைமுதலானவற்றுக்கு-விரோதமாக இருந்தவனை எல்லாம் கொன்னதுதான் அந்தபத்தவதாரக் கதைகளாகும்.

எப்படி சூரபத்மனை கொன்னான் கந்தன்கிறவன்எங்கெங்கே பாப்பானிருக்கிறானோ?அங்கேயெல்லாம் தேடிப் போயி (சூரபத்மன்உதைச்சான் - கொன்னான் - அப்படீன்னு - கதை.அதனாலே தேவர்களுக்குக்கெடுதி பண்ணினவனைக் கொன்னான் (கந்தன்இதைச் சுருக்கமாசொல்றேன்தேவர்ன்னா - பாப்பான்கெடுதிபண்ணினவன் அசுரன்அசுரன்னா - சூத்திரன்.அகராதியிலே அப்படி இருக்குதுநான் சொன்னேனே ஆரம்பத்தில் ஞானசூரியன் நூல் அதிலேஇருக்குதுமனுதர்ம சாஸ்த்திரத்திலே உள்ளது உள்ளபடியேராட்சதன்கிறவன் சூத்திரன்.அரக்கன்கிறவன் சூத்திரன்அந்தக் கதையை நாமளும் படிக்கிறோம்அந்தக் கதைப்படி தான் அவன்(பாப்பான்)நடந்துக்கிறான்இதையெல்லாம் நீங்கள் நல்லபடி சிந்திக்கணும்.

இப்ப இருக்கிற காங்கிரசு அரசாங்கம் (டில்லியில்நம்ம ஆளுங்களும் அதிலே இருக்கிறாங்கநம்மஆளு ரொம்ப பேரு இருக்கிறாங்கநான் இல்லேன்னு சொல்லல்லேஆனால் அவுக எல்லாம் கடவுளைநம்பணும்கடவுளை நம்புகிறவனுக்குத் தான் வேலைகடவுளை நம்பாதவனுக்கு அதில் வேலைஇல்லைகண்டிப்பே அப்படிதான்அதிலே (காங்கிரசிலே). அதைத் தந்திரமாக ஏற்பாடுசெய்திருக்கிறாங்கஅதுக்காக வேண்டியே காந்தி வாழ்க -ன்னு சொல்லவேண்டியது தான்கடவுளைநம்பு இராமனை நம்பு என்பதுதான்.ஜாதியை நம்பணும்வர்ணாசிரமத்தை நம்பணும்அவனவன்ஜாதி மதம்படித்தான் நடக்கணும்அப்படீன்னு காந்தி சொன்னாருன்னுசொல்லிகிட்டு அதன்படிநடக்கிறவன் தான் காங்கிரஸ்காரன்எவனாவது ஒருவன் ஜாதியில்லேமதமில்லேபார்ப்பானில்லேபறையன் இல்லேன்னு ஒருத்தன் சொன்னான்னா அவன் பலத்தினாலே அதில் ஒட்டி கிட்டுஇருக்கிறானே தவிரகாங்கிரசுக்குள்ளே அவனைக் குழியிலே தள்ளி புதைக்கத்தான் பார்ப்பான்.அப்படித்தான் வழக்கம்.

இப்ப வந்திருக்கிறது தி.மு.. (திராவிடர் முன்னேற்றக் கழகம்அரசாங்கம் தான்ஏதோ எங்களுக்குகடவுள் நம்பிக்கையில்லேநாங்கள் மதசம்பிரதாயமில்லேஅப்படீன்னு சொல்லி எப்படியோஆட்சிக்குத் தமிழ்நாட்டில் வந்திட்டாங்கமறுபடியும் அவுக கால் ஊன்றிடுவாங்கன்னு தான் தெரியுதுஏன்னா ஓட்டு அவ்வளவு பெருசா இருக்குதல்லஒரு மந்திரி ஒரு காரியம்இன்னொரு மந்திரிஇன்னொரு காரியம்இப்படி எல்லாம் காரியம் பண்ண வேண்டியிருக்குதுஆனாலும் இன்னைக்குஒரு ஆட்சி நமக்கு இருக்குதுன்னா பகுத்தறிவு ஆட்சி என்பதன் பேராலே இந்தக் கருத்துக்களுக்குஇந்த ஆட்சி இருக்குது.

ஆகவேஅருமைத் தோழர்களே!, இன்னும் மக்கள் மாறலியே இவ்வளவு வருஷமாகியும்?. இவ்வளவு நாமபிரச்சாரம் பண்ணி சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு எத்தனை நாளாச்சி 1925லே காங்கிரசை விட்டுநான் வெளியே வந்து, 1925 லேயே குடியரசு ஆரம்பிச்சி 1925 லேயே சுயமரியாதை இயக்கம்வந்திட்டுதே. 1925 முதல் 1968 வரைக்கும் 43 வருஷமாக வேலை பண்ணுதுஎவ்வளவு பேரைமாத்துச்சி?முடியிலியேகொஞ்சம் பேரைத்தான் மாத்த முடியுதுமாத்தினாலும் அவுகஅவ்வளவு பச்சையாசுயமரியாதை இயக்கத்தில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.ஆனதினாலே அருமைத் தோழர்களேஇந்த பிறந்தநாளுங்கிறது யாருடைய பேராலே இது நடக்குதோ அவுகளுடைய கொள்கை என்னமோஅதைத்தான் சொல்லுவதுஅந்த முறையிலே தான் அவர்கள் என்னைப் பாராட்டு முடிஞ்சுது.என்னைப் பாராட்டினால் அதிலே எனக்குள்ள கொள்கையும் அதுக்குள்ளே இருக்குதுஅதை எல்லாம்எனக்கே விட்டுட்டாங்கநான் என்னையே பாராட்டிக் கொள்ள முடியுமாஅதனாலே நான் என்கொள்கையைப் பிரச்சாரம் பண்றேன்என்னுடைய கொள்கை என்னா?
                மதமிருக்கக் கூடாது

                எவனொருவன் தன்னை இந்து ங்கிறானோ அவன் தன்னைப் பாப்பானுடைய வைப்பாட்டிமகன்ங்கிறதை ஒப்புக்கொள்ளுபவன் தான்நான் இதைப்பல அறிஞர்களை வைத்துக்கொண்டேசொன்னேன்நண்பர் ஜி.டி.நாயுடுகாரே சரி அப்படீன்னார்எவன் ஒருவன் தன்னை இந்துங்கிறானோஅவன் பாப்பானுடைய வைப்பாட்டி மகன் யாராயிருந்தாலும் சரிஅதாவது எவனாவது யோக்கியமாசொல்றானா மதத்தின் பேராலேகவனிக்கணும் நீங்கஇந்து ன்னு சொன்னா அதிலே ஏதாவதுநாணயமிருக்குதாஅறிவுஇருக்குதாசொல்லட்டுமே யாராவதுஇந்து மதம் ன்னா என்னாஅதுஎங்கே இருக்குதுஅது எதிலே இருக்குதுசொல்லட்டுமே யாராவது ஒருத்தன்கண்னைமூடிகிட்டுத்தான் தன்னை இந்து ன்னு முட்டாள் ஒத்துக்குவானே தவிரஅப்படீன்னா என்னடான்னுசொல்றதுக்கு எவனிருக்கிறான்.

கிருஸ்துமதம்கிருஸ்து அதன் தலைவர்அப்படீன்னா என்னாநான் கிருஸ்துமதம்அப்படீன்னாஎன்னாகிருஸ்து - எப்படி நடப்பதுபைபிள் சொன்னபடி நடக்கிறேன்அதற்கு யார் தலைவர்ஏசுபைபிள் தான்வேதம்.எப்போஏற்பட்டதுஇன்னைக்கு இரண்டாயிரம் வருஷமாகுதுஇவன்இந்துக்குஎன்னா வெங்காயமிருக்குது?அதேமாதிரி முஸ்லீமை கேளுநீ யாருநான் இஸ்லாம்உனக்குயார்தலைவன்நபிகள்நாயகம்அதுக்குஎன்னாஆதாரம்?குரான்.அது எப்போ? 1400த்தி சில்லரைவருஷமாச்சிங்கிறான்பவுத்தனை கேளு யார் தலைவன்பௌத்தனுக்கு - பௌத்தன் - புத்தன் . எப்போஇன்னைக்கு 2500 வருஷமாச்சிஎன்ன ஆதாரம்பௌத்தனுடைய உபதேசங்கள்எங்கேஇருக்குதுஇந்தா பாருன்னு காட்றான்ஒரு கிறிஸ்தவனைக் கேளுஇவ்வளவு பெரியபைபிளைக்காட்டுவான்.முஸ்லீமைக்கேளுகுரானைக் காட்டுவான். 60 ரூபாய் அந்த புஸ்தகம் . 8 ரூபாய் 10 ரூபாய், 13 ரூபாய் புஸ்தகம் குரான்கிருஸ்தவர் கொடுத்தது பழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடுன்னுபெரிய புஸ்தகம்சும்மா கொடுத்தாங்க எனக்குஎல்லா கதையும் அதிலே இருக்குதுஅதுமூடநம்பிக்கையோ பகுத்தறிவோ சொன்னது நடக்கிறது.

நீ சொல்ற இந்துமதம் என்கிறதுஎதிலே இருக்குதுஅந்த வார்த்தைஇராமாயணத்திலே இருக்குதா?பாரதத்திலே இருக்குதா?இல்லே சாஸ்த்திரத்திலே இருக்குதாஇல்லே வேதத்திலே இருக்குதாவெங்காயத்திலே இருக்குதாஎதிலே இருக்குதுஇந்துமதம்ன்னுஆயிரக்கணக்கான புலவன்கள்வந்திருக்கிறானுங்களே எந்தப்பயல்களின் இலக்கியத்திலே இந்துமதம் எதிலே எழுதியிருக்கிறானுங்கதமிழிலேசும்மா காத்திலே பறக்குது இந்துமதம்ன்னா எல்லாரும் போயி அதுக்கு ஆளாகணுமே. 25 கோடி, 30 கோடிமக்கள் இந்துக்கள் இருக்கிறாங்கிறான்.

இந்துக்கள் அப்படீன்னா என்னடா அர்த்தம்ன்னா இந்து அகராதியிலே எழுதறானய்யாதுணிச்சலா.இந்து மதம்னா என்னதுலுக்கனும்கிருஸ்தவனும் - அல்லாதவன் இந்து அவ்வளவுதான்எழுதினான்அதற்குரிய இலட்சியமே எழுதலேகிருஸ்துமதம்ன்னா என்னான்னு எழுதறான்ஏசுகிருஸ்துவாலே செய்யப்பட்ட உபதேசிக்கப்பட்ட அவரைப் பின்பற்றுகிற மக்களுடைய மதம்இஸ்லாம் மதம்ன்னா முகம்மது நபி அவர்களாலே குரானைப் பின்பற்றுகிற மதம்அப்படீன்னுஎழுதறான்இந்து மதம்ன்னா என்னா எழுதுவான்இந்து மதத்துக்கு என்னா ஆதாரம்பாப்பான்சொல்லுவான் வேதம் தான் ஆதாரம் ன்னுஎங்கடான்னா உன் நாக்கை அறுப்பேன் என்பான்வேதம்ன்னு சொல்லிடுவான்அதை எங்கடா பாக்கலாமான்னாஉன் கண்னைக் குத்திடுவேன் என்பான்நம்நூல் ஞான சூரியனைப் பார்த்தால் தெரியும்அதை(மூலக்கதையை)நாம படிக்கலாம்னாநாக்கைஅறுப்பேன்பான்.அது என்னடான்னு கேட்டா காதிலே கேட்கலாம்டான்னான்நீ கேட்டாஉன்காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவேம்பான்அந்த மானங்கெட்ட பசங்க அந்த இந்துமதத்துக்குசொந்தக்காரன்னு சொல்லிக்கிறாங்க.

சங்கராச்சாரி ஆரிய மதம்தான் இந்துமதம் ன்னு சொல்லிட்டான்அந்த ஆரிய மதம் தான் எப்பஏற்பட்டதுகோடிகோடிகோடி வருஷம்அதுக்கு லட்சம்லட்சம்லட்சம் வருஷங்கிறான்ஒரு கோடிவருஷத்துக்கு முன்னே மனுஷனெல்லாம் குரங்காதான் இருந்தாங்கிறான்இவன் 100 கோடிக்குமுன்னாலே வயசு அதிகமாகச் சொல்றான்அந்தரிஷி இந்தரிஷி வெங்காயரிஷிங்கிறான்அவன்எப்படா இருந்தான்னாஅவன் அந்த யுகத்திலே இருந்தான்அடுத்த யுகத்திலே இருந்தான் இந்தயுகத்திலே இருந்தானுங்கங்கிறான்அவன் வருஷம் என்னடான்னா? 16கோடி, 18கோடிவருஷங்கிறான் ஒவ்வொருத்தனுக்கும் . இந்த ரிஷிகளுக்கு வருஷம் போட்டாலே, 7,8 கோடி வருஷம்வரும்வசிஸ்டருக்கு வருஷத்துக்குக் கணக்குப் போட்டால்அந்த ரிஷிக்கு ஒரு 20 கோடி (வருஷம்)வரும்விசுவாமித்திரருக்கு 30 கோடி வயசு வரும்நாரதனுக்கு ஒரு 40 கோடி வருஷம் வரும்ஏன் எல்லாயுகத்திலேயும் அவன் (நாரதன்இருக்கிறான்இவனெல்லாம் மனுஷன் தாண்டா அவனுக்கு வயசு 100 தான்டா தப்பினால் 500 வயசுதப்பினால் வயசு 1000 வருஷம்தான்இவ்வளவு கோடி வருஷம் அவன்எப்படிடா இருந்திருப்பான்னாஅதெல்லாம் உனக்குப் புரியாதுடா என்பான். (சிரிப்புகைத்தட்டல்)

 அப்படி எல்லாம் சொல்லியிருக்கிறான் மதத்தைப் பற்றி.மதத்தையே வச்சிக்கோ உன் மதப்படி உன்யோக்கியதை என்னாகிருஸ்தவ மதப்படி கிருஸ்துவுக்கு சமானம் . இஸ்லாம் மதப்படி நபிகள்நாயகத்திற்குச் சமானம் . ஒரு சாதாரண பக்கிரிசாயபுமேல்ஜாதி கீழ் ஜாதியில்லேமற்றவன்ஒஸ்தியல்லஇந்து மதத்திலே யாருக்குச் சமானம்?எந்தப் பாப்பான் நம்பளைத் தொட்டால்குளிக்காமல் இருப்பான்எவன் நம்மை மனுஷன்னு கூப்பிடறான்எவன் நாம் தொட்டதைச்சாப்பிடுவான்இப்படியாக இவனிடத்திலே மானங்கெட்ட தன்மை இருப்பதை .இதைத் தவிர,வேறுஎதைச் சொல்றதுஆனதினாலே நமக்கு மதம்கிறதிலே நமக்கு மதமே கிடையாதுமதம்கிறசொல்லுக்கு அர்த்தமே இல்லேமதத்துக்கு ஒரு ஆதாரமே இல்லேகாந்தி சொன்னார்அவர்கிட்டேபோயி இந்து மதத்தை நான் ஒழிப்பேன் என்று சொன்னபோது அப்படி ஒரு இந்துமதமிருந்தால்தானே நீ அதை ஒழிப்பே என்றார்நீ ஏன் இப்படி எல்லாம் திட்றேநீ ஏன் இப்படிஎல்லாம் பேசறேநீ நல்ல பிள்ளையாய் இருந்தியேஇப்ப ஏன் இப்படி ஆயிட்டேன்னாரு காந்தியார்என்னைஆனா இப்படியே என்னைக் கேட்டாருநான் சொன்னேன் நான் முட்டாள்தனமாயிருந்தபோது நான் நல்ல பிள்ளையாய் இருந்தேன்இப்ப எனக்கு இந்த நாலாவது ஜாதியாமக்கள் இருப்பதில் எனக்குப் பிரியமில்லேஆனதினாலே நான் என்னை நாலாவது ஜாதியாக்குவதற்குநான் சம்மதிச்சிகிட்டு இருப்பதாஎன்றேன்.

அப்பவும் காந்தியார் என்கிட்டே சிரிச்சிகிட்டே சொன்னார்இந்து மதம்கிறது இருந்தாதானே?என்றார் மீண்டும்பின்னே எப்படிய்யா இந்துன்னு வந்ததுன்னாபவானியாவிலே இருந்தவனுக்குபவானியா எனப் பெயர் வந்த மாதிரிசிந்துநதி ஓரத்திலே குடியிருந்தவனுக்கு சிந்துன்னு பேரு வந்ததுஅந்தப் பேரை மற்றவர்களுக்கும் புகுத்திவைச்சிட்டாங்கஅந்த சிந்துங்கிறவன்தான் இந்துவாயிட்டான்இந்துன்னு இல்லேன்னு நான் சொன்னேன் காந்திகிட்டேஇதை அப்பவே (குடி அரசுலேநான்எழுதியிருக்கிறேன்இன்னைக்கு அதை இந்துன்னு ஒத்துக்கிறாங்கசங்கராச்சாரியும் - சொன்னாரு - இந்து மதம்ன்னு சொல்லாதேஆரியமதம்ன்னு சொல்லுன்னுதீர்ந்தது விஷயம்அப்புறம்நமக்குன்னு சாஸ்திரம் என்னாயிருக்குதுமதம் இப்படி ஆச்சி?

சாஸ்திரம் நமக்குஎன்னா இருக்குதுசாஸ்திரத்துக்குஎன்னா ஆதாரமிருக்குதுமனுதர்மம் ஒருசாதாரணம்மனுதர்மத்திலே உன்னை வைப்பாட்டி மகன்-ன்னு எழுதியிருக்கிறான்தொட்டாகுளிக்கணும்கிறான்உன் மூஞ்சிலே முழிச்சா குளிக்கணும்கிறான்நாம அதை (மனுதர்மத்தை)படிக்கக்கூடாதுங்கிறான்நாங்கள் தான் அதை (மனுதர்மத்தைஅச்சுப் போட்டோமே தவிரவெளியேஅதைச் சொல்லக்கூடாதென எழுதி வைச்சிருக்கிறான்நம்மை எந்தசாஸ்திரத்திலே நம்மளை அவன்ஒத்துக்கிறான்?. சைவன் பாரதத்தை - இராமாயணத்தை ஒத்துக்கிறதில்லேவைணவன்கந்தபுராணத்தை ஒத்துக்கிறதில்லேவைணவன் சிவனைக் கடவுள்ன்னு ஒத்துக்கமாட்டான்சைவன்விஷ்ணுவைக் கடவுளுங்க மாட்டான்இவனைக் கண்டால் அவன் முறைப்பான்அவனைக் கண்டால்இவன் ஏற்கமாட்டான்.

நமக்குப் பயந்து கிட்டு அவனெல்லாம் இப்ப ஒண்ணா இருக்கிறானுங்களே தவிரஇதுவரை அவனுங்கதானே ஒருத்தனுக்கு ஒருத்தன் உதைபோட்டுகிட்டானுங்கஅவனுங்களுக்குச் சாத்திரம் ஆதாரம்நமக்கு எது ஆதாரம்வைணவனைக் கேட்டால் தனக்கு நாலாயிரப்பிரபந்தம்கிறான்சைவனைக்கேட்டால் தேவாரம்திருவாசகம்-கிறான்அவனைக் கேட்டால் உன் பந்தாவைக் காட்டுங்கிறான்.இவனைக் கேட்டால் தாசன் தப்பு கொட்றாங்கிறான்எங்கிருக்குது நமக்குத்தமிழிலே தேவர்கள்என.உன் காதுக்கு ,கண்ணுக்கு அவை வரக்கூடாதுன்னுட்டான் ஒரு மதம்ன்னாஅதுக்கு ஒரு தலைவன்அதற்கு ஒருஆதாரம் அதற்கு ஒரு காலம் கொழுக்கட்டையாட்டம்ஒண்ணுமில்லாமலேயேயிருக்கிறோம்சூத்திரன்னு நாம சொல்லிக்கிறதைத் தவிரவேறு ஒண்ணுமேதெரியாதே?அதையெல்லாம் பற்றி நாம சிந்திக்கணும்நமக்கு மதமும் இல்லேசாஸ்திரமும் இல்லேஅப்புறம் கடவுள்.என்னாகடவுள் நமக்கு வெங்காயம்கடவுள்னா எவனுக்குத் தெரியும்இங்கேஇருக்கிறவங்களிலேயாருக்குத் தெரியும்கடவுள்னா என்னான்னுஅது கொழுக் கட்டையா,கருவப்பிள்ளையாவெங்காயமாஎன்னாதெரியும்?

கடவுள்னா கண்னை மூடிக்கிட்டு கும்பிடத்தெரியுமே தவிரமுட்டாள் பசங்களுக்கு கடவுள்ன்னாஎன்னான்னு தெரியும்நீங்க தெரிஞ்சா சொல்லுங்க எனக்குநீதாண்டா முட்டாள்ன்னு இங்கே என்னாபோலீஸ்காரனா இருக்கிறான்கடவுள்ங்கிறதைப் பற்றிஎழுதியிருக்கிறேன்.

கடவுளை உண்டாக்கினவன் முட்டாள்
கடவுளைப் பரப்பறவன் அயோக்கியன்
கடவுளைக் கும்பிடறவன் காட்டுமிராண்டி

இது தான் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியச் சொல்காந்தி வாழ்க!, பாரதம் வாழ்க!,வந்தேமாதரம்!. வெங்காய மாதரம்கிறானே அதே மாதிரி காங்கிரஸ்காரன் சொல்கிறானே அதே மாதிரிஎங்களுக்கு கடவுள் மறுப்புஇலட்சியச் சொல்
கடவுள் இல்லை ,கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி-
எனச்சொல்லுகிறோம்ஏன் கடவுளை உண்டாக்கினவன் முட்டாள்ங்கிறோம்சும்மாசொல்லலேநாம்மதத்தைச் சொன்னேன்சாஸ்திரத்தைச் சொன்னேன்கடவுளைச்சொல்றேன்கடவுளைஉண்டாக்கினவன் முட்டாள்னா கடவுளை உண்டாக்கினவன் உன்கிட்டே என்னா சொன்னான்கடவுள்னா - என்னான்னு சொன்னான்கடவுள் இருக்கிறார்அப்புறம் அதுக்கு உருவமில்லே.கண்ணுக்குத் தெரியாதுகைக்கு சிக்காதுஇவ்வளவும் சொல்லிபோட்டுஉன் மனுசுக்கும்எட்டாதுன்னுட்டானய்யாஅவன் சொன்னவன் மனோவாக்குகாயங்களுக்கு எட்டாதவன்னுட்டான்தோழர்களேஇது கடவுள் மறுப்புஇலட்சியச் சொல்அட்டை அச்சிட்டது.
கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதாகும்.
இந்த கடவுள் மறுப்பு அட்டை 100க்கு விலை ரூபாய்மூன்றுக்கு கொடுக்கிறார்கள் நம் இயக்கத்தார்கள்.நான் இதை எல்லாம் விளையாட்டாய்ச் சொல்லிவிட்டு ஓடறவனில்லையேகடவுளைஉண்டாக்கினவன் முட்டாள்ங்கிறதுக்குகடவுள் இருக்கிறார் உன் கைக்கு சிக்கமாட்டார்கைக்குசிக்காமல் கண்ணுக்கு உருவம் தெரியாமல் எப்படிடா அதை நம்பறதுன்னாஉன் மனசுக்கே எட்டாதுமனசுக்கும்எட்டாதுகைக்கும்சிக்காதுகண்ணுக்கும் தெரியாதுபஞ்சேந்திரியங்களுக்கும்எட்டாதவன்கிறான்நான் சொல்றேன் கண்ணுக்கு மனசுக்கு கைக்கு உடம்புக்கு சிக்காதவன் இந்தப்பயலுக்கு அவன் எப்படி சிக்கினான்? (கைத்தட்டல் சிரிப்புசொல்லுங்க.எனக்குக் கைக்குசிக்காதுன்னான் உன் கைக்குப் படாதுங்கிறான்உன் மனசுக்கும் எட்டாது என் மனசுக்கும்தெரியாதுங்கிறான்என்னைப் போலத்தானே நீயும்உன் மனசுக்கு எப்படி புரிஞ்சுதுஉன்கண்ணுக்கு எப்படித் தெரிஞ்சிதுஇப்ப தெரியலியா கடவுளைக் கும்பிடறவன் முட்டாளுன்னு.
கடவுளைப்பரப்பரவன்அயோக்கியன்னேன்உண்டாக்கினவன் சொல்றானேஅவனே சொல்றானேஅவனுக்கு (கடவுளுக்குகையில்லேகாலில்லேஉருவமில்லேபொண்டாட்டி வேணாம்நகைவேண்டாம்வீடுவேண்டாம்,ஒண்ணுமேயில்லாதவன்.அவனுக்கு ஒண்ணுமே வேண்டாம் கிறான்பரப்பரபயல் அதுக்கு உருவமடிச்சிஒருபொண்டாட்டியை வைச்சி இரண்டுகையிநாலுகையிஎன்னத்துக்காக அவன் அப்படிப் பண்றான்உருவமில்லேன்னுட்டான் உருவமடிச்சி வைக்கிறான்.உருவ மில்லேன்னா ஜனங்களை முட்டாளாக்க என்னவேணுமோ கைகாலுகாதுமூக்குவயிறுதோளுகதைகத்திகொடுவாள்ஈட்டிஇவ்வளவும் கடவுளுக்கு வச்சிஉருவம்காட்றானே!சீரங்கரெங்கநாத சாமிக்கு உறை யூரிலிருக்கிறாள் வைப்பாட்டி (நாச்சியார் அம்மாள்) (சிரிப்புவருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போறான்ரெங்கநாதசாமி என்ன நியாயம்?

ஒண்ணும் வேண்டாம்அவனுக்கு ஒரு நாளைக்கு அஞ்சு வேளை ததியோதனம்சர்க்கரைப் பொங்கல்சட்டி அரனைவெங்காயம் - சோறு எதுக்குஎல்லாம் பாப்பான் வயிற்றிலே அறுத்து வைக்குதுஇந்தமுட்டாள் பணத்தைக் கொடுத்திட்டு முட்டாள்னு கொட்டு போட்டுட்டு வந்திடறான்அவனுக்கு(ரெங்கநாதனுக்குஎதுக்குப் பொண்டாட்டிஅவன் அங்கு இருக்கிறானாஅவள் அங்கேஇருக்கிறாளா எல்லாம் வல்ல கடவுள் - அன்பே உருவமானவர் -என்று சொல்றானேஅவன் கையிலேகொடுவாள் இருக்குசக்கரமிருக்குதுஅறுவாள் - இருக்குதுவெட்றான் - தீர்த்துக் கட்றான்கரகரன்னுஅறுக்கிறான்சிவனை எடுத்துக்கிட்டா கையிலே மளுவு இருக்குதுகொட்டாப்புளி இருக்குது.வேலாயுதமிருக்குதுசூலாயுதமிருக்குதுஇதுதானா அன்பே உருவமான கடவுளுக்கு? (சிரிப்புஆயுதமில்லாத கடவுள் எவன் இருக்கிறான்கொல்லாத கடவுள் எவன்இந்த ரெங்கநாதன் (விஷ்ணுஎத்தனை பேரைக் கொன்னான்இந்த ராமன் எத்தனை பேரைக் கொன்னான்கஇந்த கிருஷ்ணன்எத்தனை பேரைக் கொன்னான்இன்னும் மற்ற (கடவுள்கள்இவனெல்லாம் எத்தனை பேரைக்கொன்னான்இந்த நடராஜன் எத்தனைப் பேரைக் கொன்னான்இந்த முருகன் எத்தனை பேரைக்கொன்னான்இவனுங்களைஎல்லாம் அன்பே உருவமானவனுங்களாஇவனுங்க எல்லாம்அயோக்கியப் பசங்களல்லவாநல்லா கவனிங்க நீங்கஇப்படியாக பாப்பான் உலகத்தைஏய்க்கிறான்இவ்வளவு பித்தலாட்டம் ஏன்டான்னாஅவன் பிராமணன் இவன் சூத்திரன்அவ்வளவுதான்.

அப்படி இருக்கணும்னா - இவ்வளவு பேரையும் எதிர்த்தால்தான் முடியும்ஏன் அப்படி எல்லாம்இருக்கணும்என்னா அவசியம்கிருஸ்தவன் சாமி கும்பிடறான்னாகொழுக்கட்டையை வச்சாகும்பிடறான்?இல்லே முஸ்லீம் சாமி கும்பிடறான்னா பொண்டாட்டி பிள்ளைவைப்பாட்டி எல்லாம்வச்சா கும்பிடறான்சோறூட்றானாகஞ்சி ஊத்தாறானாஇல்லே சாமிக்குக் கல்யாணம்பண்றானாஅவன் எத்தனை கோடி அவன் 100 கோடி 150 கோடி இருக்கிறான்நாம அன்னக்காவடிபசங்க கோடிக் கணக்கில் முட்டாளா இருக்கிறோம்நாம கீழ்ஜாதியா இருக்கிறோம்சங்கதியேவெளியே வரக்கூடாதுங்கிறானேஅடக்கிறானேஇதையெல்லாம் நீங்க யோசனை பண்ணுங்க.

ஆனதினாலே நம்முடைய இழிவு நீங்க வேண்டுமானால் - நமக்கு அறிவு வரவேண்டுமானால் - உலகத்திலே உள்ள மக்களை போல நாமளும் சரி சமமான மக்களாக நாம ஆக வேணுமானா - இந்தக்கடவுள்மதம்சாஸ்த்திரம்இந்த கோயிலுஇந்த நாமம்இந்த சாம்பலு இந்த சடங்குகள் இவைகள்எல்லாம் ஒழிஞ்சால் ஒழிய ஒரு நாளும் முடியாது நாம முன்னேற. 3000 வருஷமா இருந்துபார்த்திட்டீங்களேகோயில் கட்டி வச்சவங்க நீங்கதானேஎந்தப் பாப்பான் ஒரு காசு கொடுத்தான்?எந்த பாப்பாத்தி சுண்ணாம்பு எடுத்து மண்ணு சுமந்திருப்பாள்நாம கட்டினதுக்கு நாம தேவடியாமகன்அவன் உட்கார்ந்துட்டு வேலை வாங்கிறதுக்காக அவன் பாப்பான் - பிராமணனா?

எனவேதான் தோழர்களே!, நம்முடைய பிரச்சாரமெல்லாம் எப்படியாவது நமக்கிருக்கும் இழிவு நீங்கிநாம மனுஷனாகணும்துலுக்கனானபிறகு மனுஷனானாலும் சரிகிருஸ்தவனான பிறகுமனுஷனானாலும் சரிஇந்தியாவுக்குள்ளே வேறே ராஜாவைக் கூட்டி வந்துவிட்டாலும் சரிஆட்சியைமாற்றியாவது ரஷ்யாக்காரனோஅமெரிக்ககாரனோ - வெள்ளைக் காரனோ - பாகிஸ்தான்காரனோ - எவனோவந்து தொலையட்டும்இந்தப் பயல் (பாப்பான்ஒழியட்டும்இந்தப் பயல் நம்மைத்தேவடியாள் மகனாக்கியப் பயல்வெளிநாட்டானை வரச் சொல்வது ராஜத்துரோகமென்பான்உன்னுடன் விசுவாசமாயிருக்க நீ என்னா எனக்கு மரியாதை பண்றே?

பாகிஸ்தானுக்கு நாம போயிட்டோம்னா அவன் அங்கே நம்மை மனுஷன் என்பான்அமெரிக்காபோனோம்ன்னா அவன் நம்மை மனுஷன்பான்ரஷ்யாவுக்குப் போய்ச் சேர்ந்தால் அவன் நம்மைமனுஷன் என்பான்இங்கு இருக்கிற நம்மை நீ மனுஷன் சமம்என்கிறீயாஇதைப்பொறுத்துகிட்டுதான் வாழணும்கிறதுக்கு என்ன அவசியம்ஒவ்வொருத்தரும் இது மாதிரி நாமநினைக்கணும்உடனே மாறிடும் விஷயமெல்லாம்.

அருமைத் தோழர்களே!, இன்றைய பிரச்சாரம் - இரவு 9 மணிக்கு மேல் சினிமா படம் இங்குகாட்டுவாங்கஇப்பமணி 9.15 (இரவுஆகிறதுநாளைக்கு வேறு எனக்குப் பேச்சு இருக்குது.இதெல்லாம் நீங்க நினைக்கணும்இந்தக் கூட்டத்துக்கு நாம வந்ததின் பலனாக இனிமேல் நாமநெத்தியிலே சாம்பலடிக்கிறதில்லை என முடிவு பண்ணிக்கவேணும்.இதைக்கேட்டு கோயிலுக்குப்போறதில்லை எனவும் ஒரு முடிவு பண்ணிக்கணும்நெற்றியிலே சாம்பலடிச்சிகிட்டு நீங்கள் உங்கள்பொண்டாட்டி பிள்ளைகளோடு கோயிலுக்குப்
போயிகண்ட பயல்கள் அங்கே வர்ராப்பிலே பண்ணிஒருத்தருக்கு ஒருத்தர் நசுக்கிறாப்பிலேபண்ணிகிட்டீங்கன்னா என்ன (பலத்த கைத்தட்டல்) (சிரிப்புஎன்னா அர்த்தம் அதுக்குஎன்னாஅந்தக் கோயிலுக்குப் போயி புதிசா என்னாப்பார்க்கப் போறீங்கநாலுதடிப் பசங்க வருவானுங்க.நாளு பொம்பளைங்க சிங்காரிச்சிகிட்டு வருவாங்கஅவுங்களை இவுங்க பாக்கலாம்இவுங்களைஅவுங்க பார்க்கலாம்முடிஞ்ச வரைக்கும் இருவரும் உரசிக் கொள்ளலாம். (கைதட்டல்சிரிப்பு).

சாமியைப் பத்தி உங்களுக்கு என்னாஉங்களுக்கு என்னா பண்ணப் போறான் அந்த சாமிஅங்கேபோனால் உங்கள் பெண் பிள்ளைகளை இன்னொருத்தன் அல்லவாகொஞ்சுவான்? (கைதட்டல்)நினைக்கணும்நீங்கள் எல்லாம்நாமெல்லாம் மனுஷத்தன்மையுடையவர் களாகணும்எந்தமனிதனாவது சொர்க்கவாசல் புகுவானய்யாமந்திரியெல்லாம் புகுறானய்யா? (சிரிப்புஎன்னடான்னா சொர்க்க வாசல்போனவருஷம் சொர்க்க வாசலில் முதல் மந்திரி புகுந்தார் முதன்முதலில்எவ்வளவு பித்தலாட்டம்பாருங்கய்யாஒரு அடைச்சிகிடந்த கதவைச் திறந்தால் அதுசொர்க்கவாசலாவேறு எவனாவது முதலிலே போயிடுவானாஒரு வெள்ளைக்காரன் பார்த்தா இதைஎவ்வளவு சிரிப்பான்நம்மைதுலுக்கன்பார்த்தா நம்மைப் பார்த்து சிரிப்பானய்யாஇப்படியேநம்மை பாப்பான் ஏய்க்கிறான்.சாமி மோகினி அவதாரமெடுக்கிறாருங்கிறான்.சாமிபொம்பளையாவது பார்க்க அன்னைக்குத் தான் ரொம்ப பேருவர்ராங்க சீரங்கத்துக்குஎந்தலோகத்திலே இது உண்டு?மானங்கெட்ட இந்தவேலைவிஷ்ணுசாமி பொம்பளையாகிறது?சிவன்சாமிஆம்பளையாகிறது இரண்டு பேரும் கலவி பண்றது குட்டி போடறது (பலத்த சிரிப்புகதைஇப்படி விஷ்ணு பொம்பளைசிவன் ஆம்பளையாகிறது - புணர்ச்சி பண்ணினதுஅவுககுட்டீபோட்டாங்கஅதுதான் இந்த அய்யப்பன் சாமியாம். (சிரிப்பு கைதட்டல்முட்டாள் பசங்ககும்பிடறாங்களேஇந்தஅய்யப்பனைசாமின்னுஇதையெல்லாம் நீங்க சிந்திக்கணுமய்யாநம்மைஉலகத்தார் பார்த்து சிரிக்காமே?. நமக்கு இருக்கிற இழிவு நம்மைப் பின் தொடராமே இருக்கணும்.

நாம (பெரியார்பிறந்த பிறகு நாமெல்லாம் இப்ப மனிதனாகிட்டோம்நாங்கள் சுயமரியாதைஇயக்கத்தை தோற்றுவித்தது 1925ல்அது தலையெடுக் கிறதுக்கு முன்னே நம்மக்கள் 100க்கு 3பேர்தானய்யா படிச்சிருந்தாங்க உங்கள் எதுக்காலேயே சொல்றேன்தமிழன் பார்ப்பானல்லாதவன் 100 க்கு 3 பேர்தான் படிப்புபாப்பான் 100 பேரிலே 100 பேரும் படிச்சிருந்தான் அப்போ. 1879இல் நான்பெறக்கறப்போநாங்கள் தலையெடுத்து ரகளை பண்ணி பார்ப்பன துவேஷியாகி படாதபாடுபட்டதுக்கு அப்புறம் தான் இப்ப 100க்கு 45 பேர் நம்மவன் படிச்சிருக்கிறான்.

இந்த நிலை இன்னைக்கு (1967இல்தானய்யாவண்ணான் கலெக்டர்பறையன் கலெக்டர்பள்ளன்கலெக்டர்இந்த மாதிரி ஒரு நிலை இன்னைக்குத் தானய்யா வந்ததுஇதுவரைக்கும்உத்தியோகத்தலைமையில் யார் இருந்தாகடைவீதி பயல் கடை வீதியில் - வண்ணான் பையன்வண்ணான் துவைக்கபரியாரி பயல் சிரைச்சிகிட்டுத்தான் இருக்கணும்சக்கிலி பயல் செருப்புதான்தைக்கணும்பறைப்பயல் தப்புதான் கொட்டணும்இப்ப தானே இவனுங்க எல்லாம் கலெக்டர்ஆனான்இப்ப (1967இல்)காமராசருக்கு அப்புறம் தானே நாங்க சண்டைபோட்டு போராடியதற்குஅப்புறம் தானே சொல்லு வாங்களே, 50 வருஷத்துக்கு முன்னே இதைப் பற்றி பேசினது யாருபறையன் கேட்கவே மட்டானேசாமி சாமி எதுவும் வேணாம்பான்.எனவே தோழர்களேநம்சுயமரியாதை இயக்கம் போட்ட கூப்பாட்டுக்குப் பிறகுதான் உயர் பதவியில் நம்மவர்கள் இன்னும்இது கொஞ்சம் கொஞ்சமாய் வளரனும்உங்களுக்குள் கட்டுப்பாடு இருக்கணும் இளைஞர்கள் எல்லாம்நம் உணர்ச்சியோடு இருக்கணும்நாளைக்கும் கூட்டமிருக்குநான் சொன்னதை நம்பாதீங்க.நல்லபடி யோசனை பண்ணுங்கசரீன்னுபட்டதை ஒத்துக்கங்க சின்ன பசங்களுக்கு சொல்றேன்நெற்றியில் சாம்பலடிக்காதேசாம்பலடிச்சா தேவடியா மகன்னுபேருகோயிலுக்குப் போகாதீங்கஇக் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளித்து பெரியார் அவர்கள் பேசியது:- காமராசர் இந்தத் தேர்தலில்ஜெயிச்சே ஆகணும்காமராசர் ஜெயிக்கலேன்னா நீங்களெல்லாம் நன்றி கெட்ட பசங்கன்னு ஆகணும்அவர் வந்துதான் உங்கள் பிள்ளை குட்டி எல்லாம் படிக்க முடிஞ்சுது.

எந்தக் கட்சியா இருந்தாலும் எனக்கு அக்கறையில்லைதோற்றால் அவருக்கு ஒண்ணுமில்லே.நமக்குத்தான் நன்றி விசுவாசமில்லேன்னாகும்படிப்பு ஸ்காலர்ஷிப் அவரால் தானே வந்ததுஹைஸ்கூல் வரைக்கும் ஏறக்குறைய 40 லட்சம் பேருக்குச் சம்பளமில்லா படிப்புயாரால் இதுமுடிஞ்சிதுகாமராசரால்தான்பாப்பான் என்னைக்குமே சம்பளமில்லாமல் தான் படிச்சான் - நம்பபிள்ளைகளுக்கு காமராசர் பெயரை வைக்கணும் - அவரை ஆதரிக்கணும்காங்கிரசு இன்னொருகட்சியா என்கிற கவலை வேணாம்தனிப்பட்ட முறையில் அந்த மனிதன் செய்திருக்கிற காரியம்ரொம்பஅது தான் என் கருத்து. (திராவிடமுன்னேற்றக்கழகக் காரரையும் ரொம்ப மட்டமாநினைக்காதீங்கமற்றவர்கள் பற்றிச் சொல்லுங்ககாமராசர் அவ்வளவு நல்ல காரியங்கள்செய்திருக்கிறார்இத்துடன் என் பேச்சை முடிச்சிக்கிறேன்நன்றி வணக்கம்அய்யா அவர்கள்எனக்குப் பணமும் ஒரு டைரியும் தந்ததுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


 நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

28.1.21

திராவிடர் என்று ஏன் பெயர் வைக்க வேண்டியதாயிற்று? - தந்தை பெரியார்


 

தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண் கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தை களுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.
உங்கள் படிப்பின் தன்மை
முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர் களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தி யாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதா வது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படு கின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர் களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர் களுமாகி விடுகிறார்கள். மாண வர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர் களா கவே இருக்க வேண்டிய வர்களா கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற் கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூட நம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவ தில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகியவர் களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லை களும், முறைகளும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசர தனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர் களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம், இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக் குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும் சாபம், இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனு சரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.
படிப்பால் ஏற்படும் பயன்
இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவை களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள். உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக் கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்ப தால் ஏற்படும் கடமையாவது காலப் போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியான படி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப் பான்மை உண்டாகும்படி யாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.
திராவிடர் கழகம் ஏன்?
இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்து வருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப் படலாம். அவற் றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரிய வேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினு டையவும் தன் மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.
இதுகூட ஏன்?
இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறி களாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழை களாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட வர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப் பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர் களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிரா மணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாததற்குக் காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும். இது திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப் படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள். அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள்.
என்ன மொழியாய் இருந்தால் என்ன?
இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்க முடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவி லிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படி யாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.
நசித்துப் போய் விடாதா?
திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்த முமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமா யிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப் பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரிய னுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவி டனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்ட தாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத் தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாச வேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்ப காலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்று விக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏங்கெல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என் பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.
----------------------9.7.1945ல் ஈரோடு மகாஜன அய்ஸ்ஸ்கூல் சரஸ்வதி ஹாலில்  திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு 'குடிஅரசு' - 14.07.1945

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்




தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்


தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.

ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன்.

அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100-க்கு சுமார் 5 முதல் 10 பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்கவழக்கப் பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அதுபோன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது; வருகிறது.

தமிழ்ப் புலவர்கள் நிலை

அதிலும் தமிழ்ப் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

புலவர்களின் மூடநம்பிக்கையும் பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப்பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவுமே இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

பகுத்தறியும் தத்துவ விசாரணை
அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்வான்கள் என்றால் 100-க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழிலுடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ ஏதேதோபேசி பணம் பெறுவதிலேயே கவலை யுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100-க்கு 90 பேர்கள் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்ப தற்கல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற் கில்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.


ஆசிரியர், மாணவர் நிலையும்  பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100-க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும் படியாக நம்நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலைதான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பா° பெற்ற மாணவனும்கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். “என்னையா அக்கிரமம் நீ சயன்சு படிக்கிறாய்; தத்துவ சா°திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே” என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் “அதற்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா?” என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் குறிப்பாக புலவர், வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றி அறிவு எவ்வளவு இருக்க முடியும்?

மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தமிழ் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வம்பு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக் காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனா கட்டும், அக°தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(Primitive)  பிரிமிட்டிவ் என்றால் அதன் தத்துவமென்ன? (Barbarian) பார்பேரியன்,
(Barbarism) பார்பேரிசம் என்றால் அதன் பொருள் என்ன?

3000.... 4000... ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பேரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?

இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் பரப்பினவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழைக்  காட்டுமிராண்டி மொழி என்றால் கோபப்படுகிறார்கள். இவனுக்கு என்ன பெயர் இடுவது என்பதே நமக்கு புரியவில்லை.

தமிழைச் சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?

தமிழை, தமிழ் எழுத்துக்களைத் திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல்) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டு மிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?

இங்கிலீஷினால் சிறுமை என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவனும் இல்லை என்பதால் பலமுண்டங்கள் பலவிதமாய் பேச முடிகிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.

நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?

நம் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?

புலவர்களுக்கு (தமிழ் படித்து, தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கின்ற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?
இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

முக்கியப் புலவர்களும் மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் இரண்டு, மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1) தொல்காப்பியன், (2) திருவள்ளுவன், (3) கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச  பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னை பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

சாதியை, சாதித் தொழிலை ஆதரித்தவர்கள்

இம்மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் களே ஆவார்கள்.

சந்தர்ப்பம் நேரும்போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்கக் காத்திருக்கிறேன். இவர்களை விட்டுவிட்டு தமிழர்கள் இனி எந்தப் புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

கம்பனுக்கு சிலை வைத்து மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது, சாதியில் சமதர்மம், செல்வத்தில்; பொருளில் சமதர்மம் என்பது மாத்திரமல்லாமல், குணத்திலும் சமதர்மம் என்பதாகக் கருதப்படுகிறது.

பார்ப்பானும், “பறையனும்” சமம்; முதலாளியும், பிச்சைக் காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம்; தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும் - கேடு செய்து கூலி வாங்கிப் பிழைப்பவனும் சமம்; சாணியும் சவ்வாதும் சமம்  என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகின்றது.

மக்களிடம் சமத்துவம் ஏற்படுத்துவதற்கு
முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒரு புறமிருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழி நிலையில் இருத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற, மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழ வேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிறபோது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாக்கப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ்மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத்தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?

பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சா°திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்குப் பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

தமிழ்ப் படித்தவன் பலன் இதுதான்

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொரு வனையும் பார்த்து, “நீ யாருக்குப் பிறந்தவன்” என்று கேட்கும் படி செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சா°திரம் எழுதி வைத்து, ‘கீதை’ வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்னையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

மனிதனுக்கு மானமே தேவை

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.

ஈன சாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்ற வர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்!

சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!

வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் “இரு வருக்கும் சம உரிமை உண்டுஎன்றும் குறிப்பிட்ட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களேயோசித்துப் பாருங்கள்உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதீர்கள்உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும்அன்புச் சகோதரிகளையும் மனதில் கொண்டுயோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும்யோசித்துப் பாருங்கள்இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்றுபோராடுகிறோம்அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாய் வாழ வேண்டுமென்றுபோராடுகிறோம்அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும்நமது சகோதரிகள்விஷயத்திலும்நம் பெண் குழந்தைகள் விஷயத் திலும் கவனிக்க வேண்டாமா?


தந்தை பெரியார்

நூல் : தமிழ் காட்டுமிராண்டி மொழி  ஏன்? எப்படி?
ஆசிரியர்  -தந்தை பெரியார்