Search This Blog

12.4.09

விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுக் காலமா?


அப்பாவித் தமிழர்கள் படுகொலை போரை நிறுத்தும்படி
உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்



போரை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெகல்கா இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுக் காலம் என்று கூறப்படுவது பற்றி?

பதில்: தமிழ் ஈழ விடு தலைப்புலிகளுக்கு பின்னடைவுக் காலம் என்று ஒன்று இருக்கப் போவதில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுய மரியாதைக்குமான தாகம்தான் குடிகொண் டுள்ளது. நமது அரசியல் விருப்பு வெறுப்புகளை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் கருது கிறார்கள்.
அவர்களுடைய விடுதலைப் போராளி என்ற முறையில் அவர்களது உரிமைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக் காமல் கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருவதன் மூலமே இந்த நிலையை பெற்றிருக்கிறோம்.

விடுதலைப்புலிகளுக்கான ஒரு காலம் வரும் என்று காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்கு பதிலாக எமது மக்களுடைய சுயநிர் ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் படி இந்தியாவையும் அனைத்துலக சமூகத்தை யும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி
: பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு இலங்கைப் படைகள் முயற்சி செய்வதாக வெளியான செய்திகள் தொடர்பாக அவரு டைய பிரதிபலிப்புகள் எவ்வாறு உள்ளன?

பதில்: இந்தச் செய்திகளைப் பார்த்து அவர் (பிரபாகரன்) சிரிக்கிறார்.

கேள்வி
: இந்தப் போரில் இலங்கைப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந் துள்ளனரா?

பதில்: இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் ராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: போர் நிறுத் தத்துக்கு தயார் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?

பதில்: தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படு கொலைப் போரை இலங்கை அரசு தீவிரப் படுத்தி இருப்பதால்தான் போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட் கள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் அவசியமாகும்.

அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள் இலங்கை ஆயுதப்படைகளினால் நாள் தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போகவேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட் டுக்கொள்கிறோம்.

இந்தப் போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத் துலக சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு நடேசன் தான் அளித்த பேட்டி யில் கூறியிருக்கிறார்.

-------------------நன்றி:- "விடுதலை" 12-4-2009

0 comments: