Search This Blog

28.2.11

2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள்

நீதிக்கட்சி காலத்திலே எடுக்க முடியாத சிதம்பரம் கோவிலை அரசாங்கத்தின்கீழ் கொண்டுவந்து சாதனை புரிந்தவர் கலைஞர்!

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் விளக்கவுரை

நீதிக்கட்சி காலத்திலிருந்து எடுக்க முடியாத சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசாங்கத்தின் கீழ்கொண்டு வந்து மக்கள் கோயிலாக்கி சாதனை புரிந்தவர் கலைஞர் என்று கூறி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் றேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆரிய-திராவிடப் போராட்டம்


நீங்கள் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நடப்பது இனப் போராட்டம். ஆரியர்-திராவிடர் போராட்டம் என்பதைத் தெளிவாக உங்களாலே உணர்ந்து கொள்ள முடியும். எப்படி என்று சொல்லும் பொழுது இந்த நந்தன் கதையை உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும். நந்தனார் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கதைப்படி நந்தனாருக்கு ஆசை வந்துவிட்டது. அவர் பாவம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அந்தக் காலத்தில் நடந்துபோனால் கூட புளிசோறு கட்டிக்கொண்டு போய்விடலாம்.

நடராஜர் நடனமாடுகிறார் ஆருத்ரா தரிசனம் என்று எல்லோரும் சென்று பார்க்கிறார்களே! அந்த மாதிரி நடராஜனை நாம் போய் பார்க்கமாட்டோமா என்று ரொம்ப பேருக்கு ஆசை.

நந்தனுக்கும் ஆசை


ஏனென்றால் நம்ம ஊர் நந்தன்களுக்கெல்லாம் இப்பொழுது நடராஜனைப் பார்க்க வேண்டும் என்பதுதானே ஆசையாக இருக்கிறது. விடுதலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களை எது இழிவுப்படுத்துகிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதை எல்லோரும் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை


ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை. ஒரு பெரியார் வரவில்லை. திடீர் என்று நடராஜரைப் பார்ப்பதற்காகப் போகிறேன் என்று நந்தன் சொன்னார். முதலாளி என்னென்னமோ நிபந்தனைகளை வைத்தார். அதைச் சொன்னாலே ரொம்ப நேரம் ஆகிவிடும் உங்களுக்கு அந்தக் கதையை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.

கதைப்படி, நிலப்பிரபு அய்யர் சொல்லுகிறார். நீ இவ்வளவு நெற்பயிரை வளர வைத்து விட்டுத்தான் போக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றார். அய்யர் நிலத்தில் இறங்கியதே கிடையாது. அவருக்கும் ஏர்பிடிப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் நிலப்பிரபு சொல்லிவிட்டார். நந்தனுக்கு வேறு வழியில்லை. உடனே இவர் கடவுளை வேண்டுகிறார்.

கனவில் கடவுள்...!


கடவுள் கனவில் வந்து சொல்லுகின்றார். கதையை எப்படிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள். நந்தன் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, பொழுது விடிந்து பார்த்தால் கதிர் ஓர் களம். கட்டு முக்களம்.

இந்த மாதிரி இந்தியாவில் வேண்டிக் கொண்டால் எல்லா மாநிலத்திலேயும் எல்லாம் விளைந்து அது பாட்டுக்குத் தானாகக் கிடைக்கும்.

வெங்காய விலை எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்கும். முதலில் எல்லாமே கிடைக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உடனே நந்தன் நான்தான் எல்லா நிலத்தையும் விளைவித்துவிட்டேனே! நடராசரைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னார். முதலாளியும் சரி போ என்று சொல்லிவிட்டார். நந்தனார் அவசர அவசரமாக மகிழ்ச்சியோடு போகின்றார். ஆஜானபாகுக்கு உதாரணம் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். சாதாரணமான பார்ப்பனர் அல்லர். நேரில் போய் பார்த்தால்தான் தெரியும்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவன். பல பார்ப்பனர்களைப் பார்த்தவன். மற்ற பார்ப்பனர்களுக்கும், அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். உருவத்திலேயே ரொம்ப வித்தியாசமுண்டு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவன் ஆள் மோட்டாவாக இருப்பான். (கைதட்டல்). நெய், பருப்பு எல்லாம் சாப்பிட்டு, சமஸ்கிருதத்தில் ஆஜானபாகு என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த ஆஜான பாகுக்கு என்ன உதாரணம் என்றால் அவாள்தன் உதாரணம்.

சிதம்பரம் தீட்சிதர் குடுமியோ...!


மற்ற பார்ப்பனர்கள் எல்லாம் குடுமியைப் பின்னாலே கட்டுவார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் மட்டும் சைடிலே கட்டுவார்கள். ரொம்ப பெரிய குடுமியை சைடிலே போட்டுக் கட்டியிருப்பார்கள் (சிரிப்பு-கைதட்டல்).

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே வைத்த பெயர் சைடு பல்பு என்று கூப்பிடுவார்கள்(கைதட்டல்).

பராந்தக சோழன், அந்த சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், நமது சோழ பரம்பரை எல்லாம் கட்டிக்கொடுத்தது இல்லாமல் தங்க ஓடு போட்டு, உள்ளே எல்லாம் பண்ணி, எல்லாம் செய்து முடித்து வைத்துவிட்டான். சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்லிவிட்டார்கள். இது எங்களுக்குச் சொந்தமானது யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.

கோயிலுக்குள்ளே முதலாளி


மற்ற கோயில்களை எல்லாம் அறநிலையப் பாதுகாப்புத்துறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிதம்பரம் கோவிலுக்கு மட்டும் நீங்கள் கிட்டவே வர முடியாது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது. கொள்வினை-கொடுப்பினை எல்லாமே எங்களுக்குள் பண்ணிக்கொள்வோம். இது பூராவும் எங்களுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு நாங்கள்தான் முதலாளி. கோயிலுக்கே முதலாளி வருகிறார். நிலத்துக்கு முதலாளி அவன்தான் அங்கே. கடவுளுக்கும் முதலாளி இவன்தான்.

நந்தன் சிதம்பரம் கோயிலுக்கு வந்து நடராஜரை வழிபட வேண்டும் என்று கேட்டான். அங்கு இருக்கிற தீட்சிதர்கள் நந்தனிடம் ஜாதிப் பெயரைக் கேட்டு, பறையனாக இருக்கிறவன் எப்படி நீ நடராஜரை தரிசிக்க முடியும்? என்று கேட்டார்கள்.

புராணக்கதைப்படி ....


மன்னிக்க வேண்டும். புராணத்தில் இருப்பதைச் சொல்லுகிறேன். எங்களை மாதிரி ஆனால்தானே நீ கடவுளைப் பார்க்க முடியும்? அந்த உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. நீ எப்படி பண்ண முடியும்? என்று கேட்டான்.

நந்தனார் அக்னியில் குதித்தார்


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நந்தன் கேட்டான். ஒன்றும் செய்ய வேண்டாம். நான்சொல்லுவதை செய். நீ உடனே பிராமணர் ஆகிவிடலாம். வேறு ஒன்றும் இல்லை, இதோ நெருப்புக்குழி இருக்கிறது; அக்னி வளர்த்திருப்பார்கள். இந்த அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ பிராமணன் ஆகிவிடலாம் என்று சொன்னான்.

அதே மாதிரி நந்தனார் போனார். அக்னியில் குதித்தார். பிறகு வெளியே வந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். தண்ணீரில் குளித்து வந்தாலே நமக்கு அழுக்குப் போகுமா? என்பது சந்தேகம் (கைதட்டல்). நந்தன் அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

நடராஜருக்கு மனம் இளகுகிறது


நந்தனார் என்ன ஆனார்? நந்தனார் அய்யர் ஆகிவிட்டார்-தீட்சிதர் ஆகிவிட்டார்-சமமாகி விட்டார். வித்தியாசமே இல்லை. அப்படி இருந்தும் நந்தன் சிதம்பரம் கோயிலில் நடராஜரை தரிசிக்க ஆவலாய் உள்ளே போகிறார். உன்னுடைய எல்லை இதுதான். ஆகவே இங்கே நின்று நடராஜரைப் பார் நந்தா என்று தீட்சிதர்கள் சொல்லுகிறார்கள்.

நந்தன் நடராஜனைப் பார்க்கிறார். நந்தி குறுக்கே மறைத்துக்கொண்டிருக்கிறது. நந்தி என்றால் மாடு. அப்பொழுதும் மாட்டைத்தான் நந்தனுக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

நந்தி குறுக்கே நிற்கிறது என்று நந்தன் நடராஜரை வேண்டுகிறார். நடராஜப் பெருமானே, உன்னுடைய பக்தன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.

நீ எவ்வளவோ சோதித்திருக்கிறாய். நான் நெருப்பில் குதித்து வந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் நீ என்னை உள்ளே விடவில்லையே என்று சொன்னவுடனே கடவுள் நடராஜருக்கு மனம் இளகுகிறது.

கடவுள் பட்சாதாபப்பட்டு உதவி பண்ணுகிறார். ஒரு சலுகை காட்டுகிறார். கடவுள் சொல்கிறார், அந்த நந்தன் என்னைப் பார்க்கட்டும். நந்தியே, சற்று விலகியிரு! என்று சொல்லுகின்றார்.

நந்தன் அப்பொழுதுதான் நடராஜரை தரிசித்தார்; அதன் பிறகுதான் மோட்சத்திற்குப் போனார் என்று கதை.

நந்தியே சற்று விலகியிரு!


நந்தன் எப்பொழுது நெருப்பில் விழுந்தாரோ அப்பொழுதே மோட்சத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே கிடையாது. ஆனாலும் நந்தியே சற்று விலகியிரு என்றுதான் கடவுள் நடராஜர் சொன்னார். இது கதை. இது நடந்ததா-இல்லையா என்பதுபற்றிக் கவலை இல்லை.

ஆனால் அன்றிலிருந்து இன்றைய வரையில் சிதம்பரம் கோவில் எங்களுக்கு ரொம்ப காலமாக சொந்தம் என்று சொன்னார்கள். நீதிக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து முயற்சி செய்து, மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் அவரே முயற்சி செய்து இந்தக் கோயிலை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு- அரசாங்கத்தினுடைய துறைக்குக் கொண்டு வரமுடியவில்லை.

வரலாறு படைத்தார் கலைஞர்!


ஆனால், வரலாறு படைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். அவருடைய ஆட்சி காலத்திலே தைரியமாக என்ன செய்தார் என்றால், தீட்சிதர்கள் வசம் இருக்கின்ற கோயிலை எடு என்று அதிகார பூர்வமாக உத்தரவு போட்டார். உடனே தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு ஓடினார்கள். நீதிமன்றம்தானே இப்பொழுது பார்ப்பனர்களுக்கு அபயம் கொடுக்கின்ற இடம்.

நமது உழைப்பினாலே நல்ல நீதிபதிகளும் பல நேரங்களில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தாகி விட்டது. சுப்பிரமணிய சாமிகள் ஆகா! அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன் என்றெல்லாம் போனார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்க வில்லை.

மணி 3, 4 ஆகியது. தீர்ப்புக்காக மாலை நேரத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பு அங்கே சொல்கிறார்கள். தீர்ப்பின் நகல் அவசரமாக வாங்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள்ளாக அது ஃபேக்ஸ் செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பெண் பொறுப்பேற்றுக்கொண்டார்


அந்த ஃபேக்ஸ் அறநிலையத்துறை முக்கிய அதிகாரிகள் கையில் கிடைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரியை விட்டு நீங்கள் உள்ளே போய்ப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார் (கைதட்டல்).

உடனே தீட்சிதர்கள் எல்லாம் ஆகா, ஊகா என்று சொன்னார்கள். பேசாதே, இது உயர்நீதிமன்ற உத்தரவு என்று சொன்னார்கள். நடராஜர் ஒரு காலைத்தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டே, கேட்டுக்கொண்டே யிருக்க வேண்டியதுதான்.

நடராஜர் ஒரு காலைத் தூக்கினார். கலைஞர் அரசாங்கம் இரண்டு கால்களையும் தூக்கி விட்டது. ஆக, இன்றைய வரையில் முயற்சி பண்ணுகிறார்கள். சிதம்பரம் கோயிலைக் கைப்பற்ற வேண்டுமென்று. இவ்வளவு நாள்கள் உண்டியல் பணம் பூராவும், அவர்களைச் சேர்ந்தது.

இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் அரசாங்க அதிகாரிகள் கையில் வந்துவிட்டது. பதின்மூன்றாயிரத்து நான்காயிரம் வரவு; செலவு இவ்வளவு; ரூ.23 மிச்சம் என்று கணக்கு எழுதி வைத்தான்.

நடராஜர் கோயில் உண்டியல் வருமானம்


ஆனால், இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் வருமானம் மாதம் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருகிறது என்று அதிகாரிகள் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.

எனவே, நந்தனை உள்ளே அழைக்க முடிய வில்லை, அந்தக் காலத்து கடவுள் நடராஜரால். ஆனால் இன்றைக்கு திராவிடர் இயக்க முதல்வர் கலைஞரால் நந்தனை கோயிலுக்கு உள்ளே அனுமதித்தார் (கைதட்டல்). இன்றைக்கு எல்லா நந்தர்களையும் உள்ளே விட்டுவிட்டார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்களும் படித்திருந்தால் அர்ச்சகராகலாம். யாரையும் நாங்கள் வித்தியாசப்படுத்தவில்லை என்று ஆக்கினார்.

சிதம்பரம் கோயில் யாருடையது? இன்று மக்கள் சொத்து என்று ஆக்கிவிட்டார் கலைஞர். இது தனியாருடைய உடைமை அல்ல என்று ஆக்கினார் பாருங்கள், இதுதானய்யா அவர் களுக்குக் கோபம். 60 வருடங்கள் தமிழ் வருடங்கள் என்று சொன்னான். விபவ, பிரபவ, சுக்கில, விரோதி, குரோதி என்று 60 வருடங்கள் சொல்லுகிறார்கள்.

எப்படிப் பிறந்தார்கள் என்று கேட்டான். நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தார்கள். என்று சொன்னான். இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள் ஆயிற்றே என்று இவன் சொன்னான். பெரியார்தான் இது ஆபாசமான கதை என்று சொன்னார்.

தை முதல்நாளே தமிழர்திருநாள், அதுதான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்ற உத்தரவே கலைஞர் போட்டுவிட்டார்.

அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். அந்த அடித்தளத்தின்மீது கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டடம் இருக்கிறதே இதுதான். இதைப் பார்த்தவுடனே அவனால் தாங்க முடியவில்லை.

கலைஞர் ஆட்சியில் பசி-பிணி இல்லை


அய்யோ, இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் அல்லவா இப்படி நடக்கிறது? ஆகவே இந்த ஆட்சியை எப்படியாவது வரவிடாமல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த ஆட்சி யினாலே பயன் பெறுகிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் பசியும் இல்லை; பிணியும் இல்லை. சென்ற ஆட்சியில் பசி இருந்தது. சென்ற ஆட்சி தமிழ்நாட்டில் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொன்ன ஆட்சி. ஆனால் இன்றைக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இந்தியாவிலேயே கலைஞர் ஆட்சிதான்...


முதலில் 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். கடைசி வரையில் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்கள்.

இப்பொழுது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்குக் கொடுத்து இந்தியாவிலேயே ஆட்சி நடத்துகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; ஒரே ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; ஒரே முதல்வர் கலைஞர்தான்!

-------------------"விடுதலை” தொடரும் 26-2-2011

தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க முடியாத அளவுக்கு கலைஞர்தான் கான்கிரீட் வீட்டைத் தந்திருக்கின்றார்! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் பேச்சு

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். எந்த தெய்வமும் அந்த மாதிரி பிய்த்துக்கொண்டு கொடுக்கவில்லை. அப்படி பிய்க்க முடியாத அளவுக்கு கலைஞர் கான்கிரீட் வீட்டை கட்டியிருக்கின்றார். தெய்வம் கொடுக் காததை கலைஞர் கொடுத்திருக்கின்றார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரை யாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேசன் கடையில் நேரடியாகவே கொடுக்கப்படுகிறது. மக்கள் நேரடியாகவே பார்க்கிறார்கள். அதுபோல எங்கேயாவது பிணியா? யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலே மக்களுக்குத் தெரிந்துபோய் விட்டது. காய்கறி விற்கிற முனியம்மாவுக்கும் தெரிகிறது. கடையில் வேலை பார்க்கிற சாதாரண முத்தம்மாவுக்கும் தெரிகிறது.

108-க்கு ஃபோன் பண்ணுகிறான்

சாதாரண வேலை செய்கிறார் பாருங்கள் நம்மாள்-அவருக்கும் தெரிகிறது. ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொருத்தர் பையிலே இருக்கின்ற தொலைபேசியைப் பயன்படுத்தி உடனே 108-க்குப் ஃபோன் பண்ணு கின்றார். இதற்கு முன்னால் இந்த 108 என்பதை அர்ச்சனைக்குத்தானய்யா பயன்படுத்தினான் (கைதட்டல்).

இன்றைக்கு அந்த 108அய் மனிதன் உயிர் காக்க கொண்டு வந்த பெருமை முதல்வர் கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது (கைதட்டல்). திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சார்ந்தது. தூங்கும்பொழுது 108 என்று சொன்னால் கூட ஆம்புலன்ஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இதற்கு முன்னால் காலம் காலமாக 108 விளக்கு என்று சொல்லுவான்; 108 அபிஷேகம் என்று சொல்லுவான்.

அசுர குலத் தலைவர் ஆட்சியில்...

ஒன்றும் உருப்படாத மக்கள் அறிவை பாழ்படுத்தி, பார்ப்பானுக்கு வருமானத்தை உண்டாக்கக்கூடிய வழியைத்தான் பண்ணி னார்கள்.

அந்த 108அய் பகுத்தறிவுவாதி ஆட்சியான, அசுர குலத் தலைவனுடைய ஆட்சியான (பலத்த கைதட்டல்) கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 108அய் இப்படி ஆக்கிவிட்டார். அது மட்டுமல்ல; சில பேர் மக்களிடம் பேசினார்கள்.

ஓட்டைக் குடிசையிலே ஒண்ணாரைச் சாண் பாய்தனிலே!

ஓட்டைக் குடிசையிலே, ஒண்ணரைச் சாண் பாய்தனிலே என்று பாட்டுப்பாடி, உங்களுடைய ஏழ்மையைப் போக்குவதற்காக எங்களை அனுப் புங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பில்லாமல் அந்தத் துருப்புச் சீட்டையும் எடுத்துவிட்டார் கலைஞர்.

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

காரணம் என்ன? தமிழ்நாட்டில் எத்தனை குடிசைகள் இருக்கின்றன? கணக்கெடு என்று சொன்னார். 21 லட்சம் குடிசைகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அந்த 21 லட்சம் குடிசைகளுக்கும் முதலில் திட்டம் போட்டார்.

இந்த ஓராண்டுக்குள்ளாகவே கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்து உடனே அதைச் செயல்படுத்தினார்.

இனிமேல் குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்று இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கிய வர் (கைதட்டல்). அந்தக் காலத்திலேயே குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கியவர் கலைஞர். இன்றைக்கு இதையும் உண்டாக்கி விட்டார்.

எல்லோருக்கும் கான்கிரீட் வீடு கிடைக்குமா என்று கேட்டார்கள். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இந்தாங்க பிடிங்க இது உத்தரவாத சீட்டு என்று அவரவர்களும் வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.

எங்களை வரவேற்றதே இந்தத் திட்டம்தான்!

எல்லா கிராமங்களிலும் இப்படி உருவாக்கியி ருக்கிறார். இன்றைக்கு காலையிலே நான் ஈசநத்தம் போனேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளே நுழையும்பொழுது எது நம்மை வரவேற்கிறது என்றால்- கலைஞர் வீட்டு வசதித்திட்டம்.

நான் சென்னையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கூட சொன்னேன். வேடிக்கையாக நம்முடைய நாட்டில் கிராமத்தில் சொல்லிக்கொண்டிருப்பார் கள். கொடுக்கிற தெய்வமாக இருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்குக்கூட ஏண்டா கூரையிருக்கிறது என்று புத்தி வரவில்லை. ஒருவன் ஏன் மாடியில் இருக்க வேண்டும்? இன்னொருவன் ஏன் குடிசையில் இருக்க வேண்டுமென்று கடவுள் எண்ணவில்லை.

எல்லோருமே நமது பிள்ளைகள்தானே! எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கான்கிரீட் வீட்டை கடவுள் கொடுக்கவில்லையே!

மோட்சத்திற்குப் போக

ஒருவரை ஓட்டைக் குடிசையில் வைத்தான். இன்னொருவனை ஒன்பது மாடிக்கு மேலே ஏற்றி வைத்தான். இதைக்கேட்டால் எல்லாம் அவாள் அவாள் தலையெழுத்து என்று சொல்லிக்கொண்டு போனான். இவனும் அதை நம்பிக்கொண்டே இருந்தான். இதை மாற்றுவதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டான். இதை மாற்று வதற்கு மோட்சத்திற்குப் போனால் போதும்; எங்களுக்கு தட்சணை கொடுத்தால் போதும் என்று, சொன்னதை நம்பிக்கொண்டிருந்தான்.

அதைத் தலைகீழாக மாற்றி, குடிசைகளே இல்லா மாநிலமாக ஆக்கியவர் கலைஞர். அவர் ஈரோட்டுக் குருகுலத்திலே பயின்ற காரணத்தினாலே இன்றைக்கு குடிசை இல்லா தமிழ்நாடு என்று ஆகக்கூடிய அளவிற்கு கான்கிரீட் வீடு திட்டத்தைக் கொடுத்து விட்டார்.
அதனால் தெய்வமே என்று இருந்தால் கற்பனைக்காக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன். கடவுள் என்ற ஒன்றை நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை.

கடவுள்கூட கொடுக்க முடியாது!

கடவுள்கூட இனிமேல் கூரையைப் பிய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் பிய்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டார் கலைஞர்.
இப்படி எல்லா துறைகளிலும் பாருங்கள். பசியில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்க படிப்பு இவ்வளவும் கொடுத்தி ருக்கிறார் கலைஞர்.

எங்கு பார்த்தாலும் தொலைபேசி

இவ்வளவும் கொடுத்த கலைஞர் ஆட்சி மீது குறை சொல்ல என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். எங்கு பார்த்தாலும் இப்பொழுது தொலைபேசி இருக்கிறது பாருங்கள். தி.மு.க.வைச் சார்ந்த ஆ.இராசா மத்திய அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
வாஜ்பேயி ஆட்சி காலத்திலிருந்தே தொலைத் தொடர்புத் துறையை நவீன முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது திட்டம். இதை அய்ந்தாண்டுத் திட்டமாக கொண்டு வந்தார்கள்.

இராசா செய்த மகத்தான புரட்சி!

அவர்கள் உருவாக்கிய கொள்கையாக இருந்தாலும், அதை பெரிய அளவுக்கு விரிவாக்கிய காலகட்டம் யாருடையது என்றால், அமைச்சர் இராசா அவர்கள் செய்த மகத்தான புரட்சியினாலே ஏற்பட்ட மிகப்பெரிய விளைவுகள்.

அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களே யானால் எல்லோர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது. ஒன்று-இரண்டு அல்ல; இரண்டு மூன்று செல்ஃபோன் வைத்திருக்கிறவர்கள் கூட நம்பரை மாற்றாமலே பண்ணலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை வந்தாகிவிட்டது. இன்றைக்கு இருபது காசு, 30 காசுக்கு பேசும் நிலைமை வந்துவிட்டது. குற்றம் சொல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் சொல்லட்டும்.

எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சொல்லட்டும். இன்றைக்கு உலகத்திலேயே இங்கே கிடைக்கிற அளவுக்கு டெலிஃபோன் கட்டணம் இவ்வளவு மலிவாக, இவ்வளவு குறைவாக எந்த நாட்டிலாவது உண்டா? தயவு செய்து சொல்லட்டும்.

இன்று 79 கோடி தொலைப்பேசிகள்

அது மட்டுமல்ல; இராசா பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் 30 கோடி டெலிஃபோன்கள் இருந்தன என்றால் அவர் பதவியைவிட்டுப் போகிற பொழுது 79 கோடி டெலிஃபோன்கள் இந்த நாட்டிலே இருந்தன. கூநடந னுநளேவைல என்று சொல்லக்கூடிய அளவுக்கு முத்தன், முனியன், குப்பன், சுப்பன் என்று இன்று எல்லோர் கையிலேயும், டெலிஃபோன் இருக்கிறது. எல்லோரும் பேசுகிறார்கள்.

கார் டிரைவர் கையில் செல்ஃபோன்

சாதாரண வேலைக்காரம்மாகூட முதலாளி அம்மாவிடம் சொல்லுகிறது. நான் கொஞ்சம் இன்றைக்கு லேட்டா வருகிறேன் அம்மா என்று செல்ஃபோனில் சொல்லுகிறது. டிரைவரிடம் செல்ஃபோன் கொடுத்துவிட்டார்கள். நீ எங்கேயப்பா இருக்கிறாய் என்று சொல்லுகின்றார். இப்பொழுது டிரைவர் கையில் ஒரு செல்ஃபோன், முதலாளி கையில் ஒரு செல்ஃபோன். உடனே கார் முதலாளி கூப்பிடு கின்றார்.

ஆக, இப்படி எல்லா இடங்களுக்கும் வசதி வந்தாகிவிட்டது. திடீரென்று ஒரு பூதாகாரமாக ஆக்கினார்கள். 1,76,000 கோடி 2 ஜி அலைக்கற்றை மூலமாக இந்த அரசாங்கத்தில் ஊழல், ஊழலோ ஊழல் என்று ஆரம்பித்தார்கள்.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதில் மனதுக்குத் தகுந்தமாதிரி ஒவ்வொருத்தன் சொல்லுகின்றான். தயவு செய்து இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மணிநேரம் விளக்க வேண்டிய செய்தி இது. உறைய வைக்கும் தகவல்கள்
2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் என்ற தலைப்பில் ஏராளமான தகவல்களைக் கொண்ட புத்தகத்தை நாங்கள் இங்கே விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றோம்.

நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். எங்களுடைய தோழர்கள் கொண்டு வருவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாங்கள் இதைத் தெளிவாகப் படித்துவிட்டுச் சொல்லு கின்றோம்.

ஊழல், ஊழல் என்று சொல்லி அந்தப் புகை மூட்டத்திலேயே திமு.க ஆட்சியை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அசைப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. முடியாது. தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடல்நிலை சரியில்லை

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடம்புக்கு முடியவில்லை. அதனால் சட்டமன்றத்திற்கு வர முடியவில்லை என்று அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் தீர்மானம் செய்தவர்களுக்கே புரிந்தது.

ஏனென்றால் அதைக்காட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கலாம். சட்டமன்றத்திலேயே இப்படி தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆகவே எனக்கு வாய்தா கொடுங்கள் என்று கேட்கத் தயங்காதவர் அந்த அம்மையார். இருக்கட்டும். ஆனால், அவர்களுடைய தொலைக் காட்சியில் சொல்லும்பொழுது ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று சொல்லு வதில்லை.

ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி என்று ரவுண்டாக சொல்லுகிறார்கள். அதில் ஏன் சொச்சம் வைப்பானேன் என்று அவர்கள் இப்படி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.


---------------------”விடுதலை” 27-2-2011 --தொடரும்

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று பிதற்றும் தமிழர்களே!


தொலைக்காட்சி என்பது அறிவியலின் நன்கொடை என்றாலும், அந்த அறிவியல் கருவியைப் பயன்படுத்தி எப்படி அறிவியலுக்கு விரோதமான மதப்பிரச் சாரத்தையும், மூடநம்பிக்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்களோ, அதே போல மின்னஞ்சல் (e-mail) என்னும் ஊட கத்தைப் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் தங்கள் கலாச்சாரப் பரிவர்த்தனைகளை மின்னல் வேகத்தில் செய்து கொண்டு இருக்கின் றனர்.

எதனால் நல்ல பலன் கிட்டும் என்று நினைக்கிறார்களோ, அதனை விரைவாகச் சென்று கைப்பற்றி, தங்கள் மயமாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனீயத்தைப் பல்லக் கில் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வது அவர்களின் நுட்பமான அணுகுமுறை.

இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்படுகிறது அல்லவா? இதில் ஒரு பார்ப்பனரின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தையடுத்த புனவாசலைச் சேர்ந்த பசுசேஷாத்திரி ராகவன் (அர்ஷா வித்திய குருகுலம் என்கிற அமைப்பின் நிறுவனர்) மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைப் பார்ப்பனர்களுக்கு மட்டும் பரப்பிக் கொண்டு திரிகிறார்.

நாடு முழுக்கத் தொடங்கியிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தாய் மொழி என்ற இடத்தில் மறக்காமல் சமஸ்கிருதத்தைக் குறிப்பிடுங்கள்; அல்லது குறைந்த பட்சம் இரண்டாம் மொழி என்னும் இடத்திலாவது சமஸ்கிருதம் என்று கட்டாயம் சொல்லுங்கள். சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை ஒற்று மைப்படுத்துவது சமஸ் கிருதமே! அதனைப் புறக்கணிப்பது நம் கலாச்சாரத்தை நாமே அழித்துக் கொள்வதாகும்.

சமஸ்கிருதத்தை அதிகமான பேர்கள் தாய்மொழியெனக் குறிப்பிடுவதன்மூலம் மத்திய அரசிடமிருந்து சமஸ்கிருத வளர்ச்சிக்குப் பல சலுகைகளைப் பெற முடி யும். அரசுத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) அதிக நேரம் ஒதுக்கிட வாய்ப்புக் கிடைக்கும்.

இந்த அரிய வாய்ப்பை நம்மளவாள் இழந்து விடக்கூடாது என்று அந்த மின்னஞ்சலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களின் முகவரிகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் தவறிப் போய் தமிழின உணர்வாளர் ஒருவருக்கு வந்து விட்டதால்தான் இந்தக் குட்டு உடைபட்டு விட் டது.

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று பிதற்றும் தமிழர்களே! இதற்குப் பின்னாலும் அப்படிக் கூறலாமா? ஒரு கணம் சிந்திப்பீர்!

------------------- மயிலாடன் அவர்கள் 28-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.2.11

ஓங்கட்டும் இனமானம்! ஒழியட்டும் ஆரியம்!

சிறீரங்கம் -நினைவிருக்கிறதா?

-

தினமணி ஏடு ஜாதி அரசியலைப்பற்றி எழுதுகிறது. பல கட்சிகளுக்கும் இப்பொழுதுதான் தங்களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக்கிறது _ எழுதுகோல் இருக்கிறது _ கணினி இருக்கிறது _ அச்சு இயந்திரம் இருக்கிறது _ அடித்துத் தள்ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற்கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது _ என்பது தினமணியின் கருத்தா _ தினமணி வக்கீலாக இருக்கும் - வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என்பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ, கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமிகளோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக்கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதித் தொலையட்டும் - நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப்புணர்வை உண்டாக்காமல் இருந்திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர்களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட காலமும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே - அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே _ அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளாதீர்கள். அது ஆபத்தில் போய் முடியும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டியிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச்சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு _ ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு காங்கிரஸ் - _ 51340 அ.தி.மு.க., -_ 48,954
திருச்சி மேற்கு காங்கிரஸ் _ 50,890
அ.தி.மு.க., _ 50,698
திருவெறும்பூர்
காங்கிரஸ் _ 56,312
அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
காங்கிரஸ் _ 41977
அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
காங்கிரஸ் _ 42,228
அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
காங்கிரஸ் --_ 50,767
அ.தி.மு.க., -_ 70,949


இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் - _ மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -_ இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகாரவாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகிறதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்பதுதான் கருஞ்சட்டை தொண்டர்களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் _ திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக்குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்கலாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக்கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் _ அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை _ நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது _ இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!

ஒழியட்டும் ஆரியம்!


---------------- மின்சாரம் அவர்கள் 26-2-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

பார்ப்பனர் பற்றி வ.உ.சிதம்பரனார்

ஆரிய (மிலேச்ச)ரைப்பற்றி வ.உ.சிதம்பரனார்

பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும் யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும்,

நினைத்தவற்றையெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும்,

அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்தபோது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்.

அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும் நடத்தையிலும் காட்டினார்கள்.

அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம்.

அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியர்களை நடத்துகிறதுபோல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந் நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.

(ஆரோபம் _ ஏறுதல்)

-------------------------_ (5.11.1927இல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாம் அரசியல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கும்போது வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது.

26.2.11

எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்


எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்மீது நடவடிக்கை

டில்லியில் எய்ம்ஸ் என்ற சிறப்பு மருத்துவமனை இருக்கிறது. அது பெரும்பாலும் உயர் ஜாதியினரின் கூடாரமாகவே இருந்து வந்திருக்கிறது. இடஒதுக்கீடு, சமூகநீதி என்றாலே ஒவ்வாமை தான்!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்களும், மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேபோல அந்த மருத்துவமனையின் இயக்குநராக இருந்தவர் வேணுகோபால் என்ற பார்ப்பனர் - பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், மருத்துவத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் என்ற பார்ப்பன அம்மையார் சட்ட விரோதமாக அந்த அய்யருக்கு அய்ந்து ஆண்டு காலம் பதவி நீட்டிப்புச் செய்துள்ளார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ். சட்டப்படி நடந்து கொண்டார். இயக்குநர் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

27 சதவிகித இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டபோதும், பார்ப்பன இயக்குநர் வேணுகோபால் சட்டப்படி பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவர்களைத் தூண்டினார்கள்; அதற்கு இயக்குநர் வேணு கோபால் தூபம் போட்டார்.

ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை செய்யப்பட்ட பகுதி எய்ம்ஸ் மருத்துவமனையும், அதன் வளாகமும்; அவற்றைப் பற்றியெல்லாம் சிறிது பொருட் படுத்தவில்லை. சட்ட விரோதமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்ட விரோதச் செயலுக்கு மருத்துவமனையின் பொருள்கள் (மின்சாரம் உட்பட) பயன்படுத்தப்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்குக்கூட சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விசித்திரமான தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் - அளித்தது. நான்கு ஆண்டுகள் கழித்து டில்லி உயர்நீதிமன்றம் - காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு அந்த வேலை நிறுத்தம் நீதிமன்ற அவமதிப்பு என்றும் டில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைத்து, அவர் களால் அடையாளம் காணப்படுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் கறாராகவே கூறிவிட்டது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல மனுவின்மீது விசாரணை நடத்தியே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சில உருப்படியான பொது நல வழக்கு அரிதாக எப்பொழுதாவது வருவதுண்டு - நீதிமன்றங்களும் அரிய தீர்ப்பினை வழங்குவதுண்டு. அந்த வகையில் டில்லி உயர் நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பினை வழங்கியமைக்காக அதனை வரவேற்கிறோம். எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனையில் உயர் ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்பொழுதுமே கொடி கட்டிப் பறந்து வந்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அங்கு இடஒதுக்கீடு கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டு என்றாலும், அவர்களுக்கு உரிய (தாழ்த்தப்பட்டோர் 15 சதவிகிதம் மலைவாழ் மக்கள் 7.5 சதவிகிதம்) அளவில் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தேர்வுகளில் மதிப்பெண்கள் அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாக அங்கு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தெரிவித்திருந்தனர் என்றால், அந்த மருத்துவமனையின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையில் அகில இந்திய அளவில் எழுதப்படும் நுழைவுத் தேர்வு மூலமாகவும் சேர முடியாது; ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குத் தனி நுழைவுத் தேர்வாம். அந்த அளவுக்கு அசல் நெய்யில் பொரிக்கப் பட்டவை இவை. மக்கள் பணத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனை இப்படி மனுதர்மம் கோலோச்சும் மருத்துவ மனையாக நடைபெறுவது கண்டு தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வு வெடித்துக் கிளம்ப வேண்டாமா?

சட்ட விரோதமாக உயர் ஜாதிப் பார்ப்பனர்களுக்கு போராடும் போது, சட்டத்தில் உள்ளதை நிறைவேற்றக் கோரி நாம் போராடக் கூடாதா?

தந்தை பெரியார் இப்பொழுது தான் டில்லியில் மய்யம் கொண்டுள்ளார். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். அந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பரவிட பரவிட சமூகநீதிக்கொடி எய்ம்ஸ் மருத்துவமனை விதானத்திலும் பறக்கத்தான் போகிறது. அதில் ஒன்றும் அய்யமில்லை.

வாழ்க பெரியார்!

---------------------"விடுதலை” தலையங்கம் 26-2-2011

மாட்டுச் சாணியை சாமியாக கும்பிடுவதின் காரணம்?

வேடிக்கை வாதம் போலி சயன்ஸ்

சுயமரியாதைக்காரர்: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன?

அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்?

பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களையெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களையெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக்காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?

--------------------- ”குடிஅரசு” 20.11.1943

பார்ப்பன ஊடகங்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம் ஏன்?

அசைக்க முடியாத அஸ்திவாரம் கொண்ட கலைஞர் ஆட்சியைப் பார்த்து எதிரிகளுக்கு அதிர்ச்சி! திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

அசைக்க முடியாத அஸ்திவாரத்தைக் கொண்ட கலைஞர் ஆட்சியைப் பார்த்து எதிரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கிக் கூறி உரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாள் ஆகிவிட்டது...

திண்டுக்கல்லில் ஈசநத்தத்தில் நடைபெற்ற மணவிழாவை ஒட்டி நான் இங்கு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தோழர்கள், நீங்கள் திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாளாகிறது. ஆகவே நீங்கள் பொதுக் கூட்டத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வலியுறுத்தினார்கள்.

நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கின்றேன். அநேகமாக ஒரு முக்கால் மணி நேரம் அல்லது அதிகமாகத் தாண்டினால் ஒரு மணி நேரம் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், அந்த நேரத்திற்குள்ளாக பல்வேறு கொள்கை விளக்கங்களை உங்களுக்குச் சொல்லி விட முடியுமா? என்று சொன்னால் நிச்சயம் முடியாது.

ஆரியர்களின் சூழ்ச்சித் திறன்

ஏனென்றால் இந்த நாட்டில் உண்மை விளக்கம் என்று சொல்லுகின்றபொழுது அது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள்கள் செய்ய வேண்டிய அளவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய பொய்யுரைகள், புனைந்துரைகள், அவதூறுகள், பழிகள் இவை எல்லாம் இந்த நாட்டிலே திராவிட இனத்தின் மீது ஆரியர்களுடைய சூழ்ச்சித்திறனாலே அவர்கள் கையிலே சிக்கியிருக்கிற ஊடகங்கள் மூலமாகவும், மற்ற பல்வேறு பத்திரிகைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞரின் தனித்தமிழர் ஆட்சி

ஒரு பலூன் போல அது காட்சியளிக்கிறது. ஊரிலே பலூனைக் கட்டி விளம்பரம் செய்வது போல இன்றைக்குத் திராவிடர் ஆட்சி, கலைஞரு டைய ஆட்சி, தனித்தமிழர் ஆட்சியாக இந்த நாட்டில் அசைக்கமுடியாத அஸ்தி வாரத்தோடு அது அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடியவர்கள், எப்படி எல்லாம் இதைப் பற்றி பொய்யுரை பரப்பி, அதன் மூலமாக நாம் வருகின்ற தேர்தலிலே இழந்த பதவியை எப்படியாவது பிடிக்கலாமா? என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏதாவது கருவிகள் கிடைக்காதா? ஏதாவது பிரச்சாரத்திற்கு மூலதனம் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஒன்றிரண்டு கிடைக்க முடியும். அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சோ இராமசாமி காலம் வரை...

ஆகவே, இராமாயண காலம் தொட்டு - இன்றைக்கு சோ இராமசாமி காலம் வரையிலே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தி என்னவென்று சொன்னால், திராவிடர் இனத்தின்மீது ஆரியர்கள் பழிபோட்டு, அவர்களை எப்படியாவது தண்டிக்கக் கூடிய அளவுக்கு ஆக்கி, பிறகு அந்த மக்களே தங்களுடைய தலைவரை இழந்துவிட்டோமே என்ற அறிவுகூட இல்லாமல் காலம், காலமாக இருந்த ஒரு சூழல் - இராமாயண காலத்திலிருந்து - புராண காலத்திலிருந்து - இதிகாச காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலே இருந்து கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் தமிழன் தீபாவளி கொண்டாடுவானா? இல்லாவிட்டால் சூரபத்மனை வதம் செய்கிறோம் என்று சொல்லு வானா?

திராவிடர் இனம்

அசுரன் என்று சொன்னாலே அவர்கள் யார்?

திராவிடர் இனம் இந்தியா முழுவதும் பரவி யிருந்த ஓர் இனம். வரலாற்றுப் பெருமை மிகுந்த ஓர் இனம். இந்த மண்ணுக்குரிய இனம். மொகஞ் சதாரோ, ஹரப்பா என்று சொல்லக்கூடிய புதைந்து போன நகரங்களிலே இருந்து மிகப் பெரிய ஆதாரங்களைக் கொண்ட இனம் இது.

இது நாடோடிக் கூட்டமல்ல. பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தபொழுது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அர சியல் வடிவமான அந்த பி.ஜே.பி., அதனுடைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? வரலாற்றைக் காவிமயமாக்கித் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள்.

ஆரியர்கள் எல்லாம் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது போலவும், திராவிடர்கள் எல்லாம் இங்கு வந்து குடியேறியதைப் போலவும் அவர்கள் உண்மைக்கு மாறாக சித்திரித்தார்கள்.

காளையை குதிரையாக்கினார்கள்

காளையைப் பிடிப்பது, காளையை அடக்குவது கூட இன்றைக்கு ஜல்லிக்கட்டாக நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த வட்டாரத்திலே கூட ஜல்லிக்கட்டு நிகழ்வதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் காளை மாட்டைப் பயன்படுத்தி இருக்கின்ற சின்னத்தை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்று சொன்னால் நண்பர்களே!

பின்னாலே சொல்லக்கூடிய செய்திக்காக நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


முரளி மனோகர் ஜோஷி அவர்கள் பா.ஜ.க. ஆட் சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நேரத்திலே வரலாற்றையே தலைகுப்புற புரட்டிப் போட்டார், உண்மைக்கு மாறாக, காளை மாட்டுக்குப் பதிலாக மொகஞ்சதாரோ ஹரப்பா வின் சின்னம் குதிரை என்று மாற்றினார்கள்.

ஆரியர்கள் வரும்பொழுது குதிரையுடன் வந்தார்கள். எனவே ஆரிய புராணங்களிலே குதிரை பூட்டிய ரதம் இருக்கும்.

காவி ஆட்சியை அகற்றி...

ஆரியர்களுடைய யாகங்கள். அசுவமேத யாகங்கள் எல்லாம் குதிரையை வைத்துத்தான் இருக்கும்.


அது புத்திர காமேஷ்டி யாகமாக இருந்தாலும், அசுவமேத யாகமாக இருந்தாலும், அந்த யாகங் களைப் பற்றி விளக்கிச் சொன்னால் தாய்மார்கள் இங்கே அமர்ந்திருக்க முடியாது. அவ்வளவு அநாகரிகம் படைத்த கூட்டம் அந்தக் கூட்டம். ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அவர்கள் குதிரையைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக வரலாற்றிலே காளை மாட்டுச் சின்னத்தை குதிரையாக மாற்றினார்கள். கொஞ்சம் அசந்து போயிருந்தால் நமது தமிழ்நாடு ஒத்து ழைத்து அன்றைக்கு அந்த காவி ஆட்சியை மத்தியிலே இருந்து அகற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்று இன்றைக்கு இரண்டாவது முறை யாகவும், தி.மு.க. உள்பட ஆண்டு கொண்டிருக் கிறார்களோ இந்த ஆட்சி வந்திருக்காவிட்டால் இந்நேரம் எல்லோரையுமே குரங்குகளாக ஆக்கி இருப்பார்கள்.

அனுமார் பரம்பரை...!

நம்மாள்களும் அதற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஓகோ! நாமும் அனுமார் பரம்பரை போல இருக்கிறது என்று நினைப்பார்கள். பல இடங்களில் உயர, உயரமாக அனுமார் சிலைகளை வைத்திருக்கின்றார்கள்.

சின்ன குரங்கை வீட்டிற்குள் விட்டாலே ஆபத்து. ஆனால் பெரிய அனுமாரைக் கொண்டு வந்து நாட்டிற்குள் விட்டுவிட்டான். ஆகவே அது ஒரு பண்பாட்டுப் படை எடுப்பினுடைய சின்னம். அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக அவ்வப்பொழுது அந்த பக்தியைக் கொண்டு வந்து விடுவான்.

நம்மாள் புத்தியை இழக்கவேண்டுமானால் இவனுக்கு சரியான மருந்து பக்திதான் என்று அவன் நினைத்து கொடுக்கிறான்.

அதனால்தான் பெரியார் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்தி போகும். பக்தி வந்தால் புத்தி போகும் என்று. அய்யா அவர்கள் எப்பொழுமே எளிமையாகச் சொல்வார்.

ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி!

மற்றவர்கள் எல்லாம் பல மணி நேரம் சொல்லக் கூடிய விசயத்தை அய்யா அவர்கள் பட்டென்று, டக்கென்று நெற்றியடி மாதிரி, பொறி தட்டுகிற மாதிரி ரொம்ப அழகாக எடுத்துச் சொல்லுவார்.

திடீரென்று ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை, ஒரு கலாச்சாரப் படை எடுப்பைக் காட்டுவதற்கு, ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி என்று சொல்லுகின்றான். குரங்கு பிறந்ததை ஜனனம் என்று சொல்லுகின்றான், ஜெயந்தி என்று சொல்லுகின்றான்.

பொறுப்பில்லாமல் சந்தேகத்துடன்...!

இது அறிவு யுகம். பகுத்தறிவு யுகம். அதுவும் 3ஜி தாண்டி, 4ஜி வந்த காலம் இது. இந்த அறிவைப் பயன்படுத்த வேண்டியவன் மூடநம்பிக்கைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்கிறான் என்று சொன்னால், ஆரியம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்களே, இந்த இயக்கம் தேவையா? என்று பொறுப்பில்லாமல் இன்னமும் சந்தேகத்துடன் கேட்கக்கூடிய அப்பாவித் தமிழர்களே, அழைத்துச் செல்வதா?

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இருபத் தோராம் நூற்றாண்டில் உங்களை குரங்கை கும்பிட வைத்து விட்டார்களே!

அன்றைக்கே மார்க்ஸ் சொன்னார்

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்திருக்கின்றான். வளர்ச்சி அய்ந்தறிவிலிருந்து ஆறறிவுக்கு முன்னேற்றம்.

இவன் என்ன செய்தான்? அதைத் திருப்பி விட்டான். மனிதன் எல்லாம் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

காரல் மார்க்ஸ் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே, அவர் எழுதிய மூலதனம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றார்? இந்தியாவில் இருக்கின்ற மனிதர்கள் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று காரல் மார்க்ஸ் எழுதியிருக்கின்றார்.

இதுதான் நமது பண்பாடுமிக்க பாரத கலாச்சாரம். காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்ததை மாற்ற வேண்டும் என்று மார்க்சியம் பேசுகிற தோழர்கள் கூட, இதைப் பற்றி பேசுவதில்லை. குரங்கை கும்பிடுகின்ற கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று மார்க்சிய நண்பர்கள்கூட தங்களுடைய அரசியல் போக்கைக் கடைப்பிடிக்க வந்து விட்டார்கள்.

எனவே, இதைத் திருத்துவதற்கு ஆள் கிடையாது. எனவே இதை கலாச்சார ரீதியால் ஆனது என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

மூளையைத் தாக்கி செயலிழக்க வைக்கும்

இது ஏதோ ஒரு சின்னம். ஒரு குரங்கு பொம்மையை விற்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது மூளையைத் தாக்குகிற மூளைக் காய்ச்சல். மூளையைத் தாக்கிவிட்டால் மூளை பாதிக்கப் பட்ட மனிதன் பயன்படவே மாட்டான். அது மாதிரி இந்த இனத்தினுடைய கலாச்சாரத்தை அழிக்கக் கூடிய வகையிலே அவர்கள் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அசுரன். அசுரன் என்று நம்மையே சொல்ல ஆரம்பித்துவிட்டான். எதிர் கட்சித் தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

அசுர குலத்தை அழிக்க வந்த...!

அசுர குலத்தை அழிக்க வந்தவர் என்று போட்டிருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இப்படித் தான் நீங்கள் எழுத வேண்டும். இப்படித்தான் நீங்கள் பிரச்சாரத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.

இப்பொழுது போராட்டமே அசுர குலத்திற்கும், தேவர் குலத்திற்கும் தான் போராட்டம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அசுர குலம் என்றால் என்ன? அசுரன், அசுரன் என்றால் பயந்து கொண்டிருந்தான். பெரியார் வந்த பொழுதுதான் இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.

அசுரன் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டாயா? என்று கேட்டால் சுராபானமும் சோமபானமும் குடிப்பவர்கள் ஆரியர்கள். வெளியிலிருந்து வந்தவன் சதா குடித்துக் கொண்டிருந்தான். வேதத்தில் பார்த்தால் எனக்கு சுராபானம் கிடைக்காதா? சோம பானம் கிடைக்காதா? என்று இதைத்தான் வேண்டுகோளாக வைத்திருப்பான்.

வேதங்களில் உள்ளது

நல்ல சுராபானத்தைக் கொண்டு வந்து கொடு. இதைத்தான் எழுதியிருப்பான். எதிரிக்கு நோயைக் கொடு. அவனுக்கு மின்னலைக் கொடு. அவனுக்குத் தலைவலியை உண்டாக்கு அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கு. யாருக்கு? தஸ்யூக்களுக்கு, கறுப்பர்களுக்கு.

இந்த இனத்தைப் பார்த்து இப்படி சாபம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு நல்ல சோமபானத்தை வழங்குவாயாக! நல்ல சுராபானத்தைத் தருவாயாக, இதுதான் யஜுர் வேதம், இதுதான் அதர்வண வேதம். இதுதான் எல்லா வேதமும்.

ஆனால் நம்மாள்களுக்கு அது என்ன என்றே தெரியாமல் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். அவர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். வேதத்தைப் படிக்கக் கூடாது. அதைக் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று. அது என்ன வேத வாக்கா? வேதத்தை மாற்றவே முடியாது.

அரசியல் சட்டத் திருத்தம்

அரசியல் ஸ்டேட்டசையே மாற்றலாம். 60 வருடத்தில் நூறு தடவை அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றார்கள்.

இவன் வேதவாக்கு! என்று சொல்லி அய்ந்தா யிரம் வருடமாக அப்படியே வைத்திருக்கின்றார் கள். நடைமுறையில் ஏதாவது அறிவுக்கும், வளர்ச்சிக்கும் உகந்த செய்தியா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே அசுரன் என்றால் வேறொன்றுமில்லை. சுராபானத்தைக் குடித்தவன் சுரன். அசுரன் என்றால் குடிக்காதவன் என்று அர்த்தம்.

அசுர குலத்தை அழிக்க...!

அசுர குலத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒழுக்கமாக இருக்கிறவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.

அசுரர்கள் என்றால் திராவிடர்கள். சுராபானத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆரியர்கள். எனவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது வெறும் அரசியல் போராட்ட மல்ல. மாறாக அசுரர்களுக்கும் அதாவது திராவிட இனத்திற்கும், தேவர்கள் என்று நினைக்கக் கூடிய ஆரியக் கூட்டத்திற்கும்தான் இப்பொழுது நடக்கின்ற போராட்டம். இது இனப் போராட்டமாக நிற்கிறது.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்...

வெளி உருவத்திலே மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது அதற்கு அரசியல் வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆகவே இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவது. இந்தக் கட்சிக்கா, அந்த கட்சிக்கா என்பது பிரச்சினையே கிடையாது.

இந்தப் பிரச்சினையா? அந்தப் பிரச்சினையா? என்பது அல்ல. ரொம்பத் தெளிவாக இருக்கக்கூடிய முன் உதாணரம் என்னவென்றால், காலம் காலமாக இருக்கின்ற இந்த மண்ணுக்குரியவர்கள் இந்த நாட்டை ஆளுவதா? அல்லது இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆரிய தத்துவம் - மனுதர் மத்திற்கு இந்த நாட்டிலே உயிர் ஊட்டவேண்டும் என்று நினைக்கின்றார்களே அந்த மனுதர்மத்திற்கு இடம். கொடுப்பது என்பதுதான் மிக முக்கிய மானது.

ஆகவே, திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக இழிவு ஒழிப்பு, சமுதாயத்திலே அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சமதர்ம நோக்கு, பெண்ணடிமை ஒழிப்பு அனைவரும் சமத்துவத்தோடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்து - இவை அத்தனையையும் உள்ளடக்கியது. தந்தை பெரியாரின் இந்த இயக்கத்தின் கொள்கைகள்.

ஆரியக் கூட்டத்திற்கு விரோதமானது

பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவத்தைச் சொல்லும் பொழுதுகூட, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லுவார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இந்த மூன்றையும் சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த மூன்றும் ஆரியத்திற்கு விரோதமானது. ஆரிய தத்துவத்திற்கு, ஆரிய இனத்திற்கு இந்த மூன்றும் விரோதமானது. ஆரியக் கூட்டம் சுதந் திரத்தை விரும்பாது. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளவேண்டும். உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று பார்க்காதே. அறிவைப் பயன்படுத்தினால் அவனை நாத்திகன் என்று சொல்லி முத்திரைக் குத்தி கீழே தள்ளிவிடு. எனவே சொந்தமாக அறிவைப் பயன்படுத்தக் கூடாது.

கேள்வி கேட்டால் - நரகம்!

இது ஆரிய இனத்தின் தத்துவம். திராவிட இனத்தின் தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வள்ளுவரின் குறளைப் பாருங்கள். இதிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

அறிவு அற்றம் காக்கும், அறிவுதான் மிக முக்கியம் என்று இப்படி திராவிடர்களுடைய சிந்தனை இருக்கிறது.

அறிவைப் பயன்படுத்தாதே. அறிவைப் பயன் படுத்தி நீ கேள்வி கேட்காதே. கேள்வி கேட்டால் நீ போகவேண்டியது ரௌரவாதி நரகம். ஆகவே அறிவைப் பயன்படுத்தாதே என்று சொல்லுவது ஆரிய தத்துவம்.

--------------------தொடரும் -”விடுதலை” 24-2-2011

ஆரிய ஆதிக்கத்தின் மீது கை வைத்தார் கலைஞர் அதனால் ஆரியம் அவரை எதிர்க்கிறது

திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படை எடுப்பின் மீது கலைஞர் கை வைத்தார். அதனால் ஆரியக் கூட்டம் அவரை எதிர்க்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆரிய தத்துவத்தில்...


எனவே ஆரிய தத்துவத்தில் சுதந்திரம் என்ப தற்கு இடமே இல்லை, சமத்துவம் என்பதற்கு இடம் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவம் தான் வர்ணாசிரம தர்மம்.

சகோதரத்துவம் என்பது என்ன? நாம் எல்லோரும் ஓர் நிறை. யாதும் ஊரே யாவரும் கேளிர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழி மாநாட்டுக்குப் பாட்டுமில்லை இது. நீண்ட காலமாக இருந்த திராவிடர்களுடைய வாழ்க்கை முறைப் புத்தாக்கம் கொடுப்பதுதான் திராவிட பாரம்பரியம். தி.மு.க திராவிடப் பாரம் பரியத்தில் வந்த காரணத்தினாலே. பொற்கால ஆட்சி நடத்துகின்ற கலைஞர் இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டு வருகின்றார் (கைதட்டல்).

எனவே நடப்பது வெறும் அரசியல் ரீதியான போராட்டமல்ல. அதைவிட ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்று சொன்னால் இது லட்சிய ரீதியானது.

இனத்தின் லட்சியம்


இந்த இனத்தினுடைய லட்சியம் என்னவென்று சொன்னால் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எல்லாருக் கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற இந்த வாய்ப் பைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

தி.க-தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி


இது பலவகையில் வளர்ந்து இன்றைக்கு தி.க. தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், அரசியலுக்குப் போன பிற்பாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார். அவர் தமது ஆட்சியை எப்படிக் கொண்டு சென்றார்?

இது வெறும் பதவிக்கான வாய்ப்பு என்று அண்ணா அவர்கள் கருதவில்லை. இந்த வரலாறு தனியானது. திராவிடர் இயக்கம் என்றாலே அதன் தனித்தன்மை என்ன என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் அரசியல் பார்வையோடு பார்த்தால் நீங்கள் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்.

நமது கெட்ட வாய்ப்பு


நமது கெட்டவாய்ப்பு அண்ணா அவர்கள் ஓராண்டு-ஒன்றரை ஆண்டு காலம்தான் ஆட்சியில் இருந்தார். ஆனால் அந்த ஓராண்டிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை பெற்று திரும்பி வந்த நேரத்திலே கூட அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஓராண்டு சாதனைகளாக முப்பெரும் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபொழுது மட்டுமல்ல. அது ஆட்சிக்கு வந்த பிற்பாடுகூட அதனுடைய பார்வை-அதனுடைய இலக்கு- அதனுடைய போக்கு எப்படிப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டுமானால், புரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்களுக்காகப் பாடம் எடுப்பதைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா சொன்னார்


ஒரு மரண சாசனத்தைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள். அந்தச் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள். நான் ஆட்சியிலே ஓராண்டு காலம் இருந்தபொழுது செய்த சாதனைகள் ஒன்று என்னுடைய தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினேன்.

இது முதல் செயல். இரண்டாவதாக சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினேன். (கைதட்டல்). அந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றால் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடித்து சுயமரியாதைத் திருமணம் ஆரியர்களுடைய கலாச்சாரப்படி மந்திரம், விவாக சுப முகூர்த்தம் இவைகளுக்கெல்லாம் இடமில்லை. வட மொழிக்கு இடமில்லை. தமிழர்கள் யார் வேண்டுமானாலும் மணவிழாவை நடத்தலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானது.

பண்பாட்டுப் படை எடுப்பு!


ஒரு மனதாயினர் தோழி
திருமண மக்கள் நன்கு வாழி
என்ற அடிப்படையிலே இரண்டு மனங்கள் இணைந்தால் திருமணம். அவ்வளவுதான் இரண்டு மாலைகளோடு சரி என்று எளிமையாகத் தந்தை பெரியார் அவர்கள் ஆக்கினார். இந்த ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பு எங்கெல்லாம் நுழைந்ததோ - அங்கெல்லாம் தேடித்தேடி அடித்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த பண்பாட்டுப்படை எடுப்பை முறியடிப்பது தான் சுயமரியாதைத் திருமணம். அது நடந்து பல பத்தாண்டுகள் ஆன நிலையிலே கூட, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே இருந்த இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அன்று முதல் இன்று வரை என்ன நடக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை திராவிடர் இயக்கக்குடும்பங்கள், சுயமரியாதை இயக்கக் குடும்பங்கள். சட்டப்படி திருமணம் செல்லுபடியானால் என்ன? செல்லுபடி ஆகாவிட்டால் என்ன? உன் சட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதைக்கொண்டு போய் கண்ணாடிக்குப் பக்கத்தில் போடு, அதே நேரத்திலே எங்களது சுயமரியாதை திருமணம் நடப்பது தொடரும் என்று சொல்லி அதற்குப்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்!


அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார்கள்.

மூன்றாவதாக ஆட்சியில் இருமொழிக் கொள்கைதான். உள்ளூரில் நமது பண்பாட்டைக் காப்பதற்குத் தமிழ், உலகத்தோடு தொடர்பு கொள் வதற்கு ஆங்கிலம். இந்த இருமொழி இருந்தாலே போதும். இதற்கு மேல் மூன்றாவது மொழியாக இந்தி தேவையில்லை. கட்டாய இந்திக்கு இடமில்லை என்ற அந்த உணர்வை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். இந்த மூன்றும் அவர் ஆட்சியில் இருந்தபொழுது செய்த சாதனைகள். இதனுடைய அடித்தளம் என்ன?

ஆரியப் பண்பாட்டை எதிர்த்தவர்கள்


இதைக் கூர்ந்து நீங்கள் கவனிப்பீர்களேயானால்-இந்த மூன்றும் சுயமரியாதை கருத்துகள்-தந்தை பெரியாரின் கொள்கை லட்சியங்கள்-சமுதாய லட்சியங்கள் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்தவைகள்.

தமிழ்நாடு என்று சொல்லும்பொழுதுதான் அந்த உணர்ச்சி வருகிறது.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
என்று சொல்லக்கூடிய கட்டம் ஏன் வந்தது? தமிழன் ஏற்கெனவே தலைகுனிந்து நின்றான். அதனால்தான் தலையை நிமிர்ந்து நில் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு வந்தது (கைதட்டல்).

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று சொன்ன பிற்பாடுதான் அந்த உணர்வு வந்தது.

கலைஞரின் பொற்கால ஆட்சி!


ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த நேரத்திலே கூட ஆட்சிக்காக ஆட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆட்சி என்பதை எடுத்துக் காட்டி அண்ணா அவர்கள் அதை உருவாக்கி ஒரு நல்ல அடிக்கட்டுமானத்தைப் போட்டார்கள்.

அண்ணா அவர்கள் விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட நமக்கு ஓர் அற்புதமான தலைவர் கிடைத்தார். அவர்தான் பொற்கால முதல்வராக இருக்கக்கூடிய 87 வயதிலும் இளை ஞரைப் போல் உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அவர் எந்தக் கட்டுமானத்தை உருவாக்கினார்களோ அந்தக் கட்டுமானத்திற்கு மேலே மாளிகைகளை எழுப்பினார். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பை எங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு போனார். ஜாதி இழிவுப்படி சூத்திரனுக்குத் திருமணம் செய்ய உரிமை இல்லை.

எங்களுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வோம். சுயமரியாதைத் திருமணம் சட்ட படியாக செல்லும் என்பதை அண்ணா உருவாக் கினார். விரட்டிக்கொண்டே போனார்

பெரியார் கேட்டார். நான் ஜாதி என்கிற பாம்பை எல்லா இடங்களிலும் அடித்துவிட்டேன். அதை ஒவ்வொரு இடமாக விரட்டிக்கொண்டு வந்தேன்.

ஓட்டலில் தனி இடம் என்று இருந்தது. நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்குள்ளேயே தனி தண்ணீர் பானை இருந்தது. இது பார்ப்பனர்களுக்கு சூத்திரர்களுக்கு என்று.

இதை எல்லாம் ஒழித்தாகிவிட்டது. ஆனால் நான் அடித்த பாம்பு இருக்கிறதே-ஜாதிப்பாம்பு வர்ணாசிரம தர்மப் பாம்பு அது எங்கே போய் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டது தெரியுமா? கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது.

கோவில் கருவறைக்குள் ஒளிந்தது


ஏன் கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது என்றால்-பெரியார் இங்கு வர மாட்டார். கடவுள் சங்கதி என்றவுடன் இவர் அந்தப்பக்கம் போய்விடுவார். ஏனென்றால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் பாருங்கள் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் ரொம்ப அழகாகச் சொன்னார். இல்லை, இல்லை நான் கடவுளை கும்பிடுகிறேனா-இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. என் தம்பி கும்பிடுகிறான். என் அண்ணன் கும்பிடுகிறான். என் மாமன் கும்பிடுகிறான். என் மைத்துனன் கும்பிடுகின்றான். அவன் முட்டாளாக இருக்கின்றான்.

பக்திப் பிரச்சினை அல்ல-
மனிதனுடைய உரிமைப் பிரச்சினை


அவனுக்குப் பக்தி இருக்கிறது. அவன் கோவிலுக்குப் போனால் அவனை சூத்திரன் என்று சொன்னால் நான் யார்? எங்கள் அம்மா யார்? என்னுடைய தாயையும் அவன் தாசி என்றுதானே சொல்லுகின்றான்? ஆகவே இது இழிவு. இது பக்திப் பிரச்சினை அல்ல. மனிதனுடைய உரிமைப் பிரச்சினை என்று சொல்லி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று உண்டாக்கினார்.

உடனே அடுத்த கட்டம். சுயமரியாதைத் திருமணத்தில் எப்படி அண்ணா புரட்சி செய்தாரோ அதற்கு மேல் கட்டுமானத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி கடைசியாக அந்தப் பாம்பு எங்கே போய் ஓடி ஒளிந்ததோ அங்கே போய் அடித்தார்.

கலைஞர் மீது ஆத்திரம்


இன்றைக்கு அவர்களால் அதைப் பார்த்துத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொல்லிவிட்டான். ரொம்ப காலமாக அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். அதில் கை வைத்ததால்தான் இப்பொழுது அவர்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம்.

ஏன் சுப்பிரமணியசாமிக்கு, ஏன் சோவுக்கு , ஏன் ஜெயலலிதாவுக்கு? ஏன் பார்ப்பன ஊடகங்களுக்கு ஏன் பார்ப்பனத் தொலைக்காட்சிகளுக்கு ஆத்திரம்? அவர்களுக்கு வேறு ஒன்றும் இல்லை.

அவர் சாதனையைவிட அடிமடியில் கைவைத்துவிட்டாரே-பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர் நிலை எங்கேயிருக்கிறது என்று சுட்டிக் காட்டினாரே-பெரியார் அடித்த அடி ஜாதி என்கிற பாம்பு கைத்தடியில் வாங்கிய அடியைப் பார்த்தார்கள். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு அய்யா அவர்களைப் புதைக்கிறோமே என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்ட மன்றத்திலே தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர், ஜாதி ஆதிக்கத்தின் தன்மை தீண்டாமை ஒழிப்பின் தன்மை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

பண்பாட்டுப் படை எடுப்பு !


ஏன் இந்த ஆட்சியை பார்ப்பனர்கள் இன்றைக்கு வெறுக்கிறார்கள்? இந்த ஆட்சி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் காரணம் இதுதான். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பினுடைய ஒரு பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

-----------------தொடரும் --------------"விடுதலை” 26-2-2011

25.2.11

திராவிடர்களை பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் படுத்தவில்லையா?


அரசியல் நாகரிகம்!

வாசகர் அரங்கம் என்ற பெயரில் தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு - பார்ப்பனர் சங்க ஏடு, திராவிட இயக்கங்களை, தலைவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவோர்க்கு விஸ்தீரமான இடத்தைக் கொடுத்துக் குதூகலிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் மட்டும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப் பதுபற்றி... என்ற கடிதத்துக்கு வாசகர்களிட மிருந்து வந்த கடிதங்களில் சில என்று கூறி அக்கடிதங்களை வெளியிட்டுள்ளது (தினமணி 23.2.2011)

அண்ணா, கலைஞர் போன்றவர்கள்தான் எதிர்க் கட்சிக்காரர்களைக் கேவலமாக எழுதினர், கொச்சைப்படுத்தி எழுதினர் என்று ஆசிரியரின் கடிதங்களோ, ஆசிரியருக்குக் கடிதங்களோ இடம் பெற்றுள்ளன.

இப்படியெல்லாம் எழுதுவதற்கோ அல்லது மற்றவர்கள் எழுதுவதற்கு ஏட்டில் இடம் கொடுத்து எழுதச் செய்வதற்கோ பார்ப்பனர்களுக்கு அடிப்படைத் தகுதி கிடையாது.

இன்றுவரை பார்ப்பனரல்லாத மக்களைச் சூத்திரர்கள் என்று கூறும் சாத்திரங்களை, சுருதிகளை, ஸ்மிருதிகளை, கீதை போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கூட்டம் அரசியல் நாகரிகத்தைப் பற்றிக் கூற கிஞ்சிற்றும் அருகதை உடையதுதானா என்பது நமது முதற் கேள்வியாகும்.

சூத்திரன் என்றால் பொருள் என்னவாம்? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்? மறுக்க முடியுமா தினமணிகள்? திராவிடர்களைக் கரடிகள் என்றும், குரங்குகள் என்றும் பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் படுத்தவில்லையா?

அப்படிக் கேவலப்படுத்தும் இராமாயணம் போன்ற நூல்களைப் பக்திப் பரவசம் சொட்டச் சொட்ட தினமணிகள் பரப்புரை செய்வதில்லையா? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் முக்கால் நிர்வாணப் பேர்வழிதானே தினமணி பார்ப்பனர் வட்டாரத்தின் ஜெகத் குரு? இவர்களின் மூதறிஞர் ராஜாஜியின் யோக்கியதை தான் என்ன?

மதுரை டி.வி.எஸ். கட்டடத் திறப்பு விழாவில் பேசிய ராஜாஜி சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார்த் தொழிலை பிராமணராகிய டி.வி.எஸ். அய்யங்கார் செய்கிறார் என்று பேசவில்லையா? அவர் பேச்சைத் தொடர்ந்து பேசிய காமராசர் அவர்கள் ஆச்சாரியாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

(ஆதாரம்: முருகு தனுஷ்கோடி எழுதிய காமராசர் ஒரு சரித்திரம்)

நாகர்கோயில் மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட காமராசர்பற்றி ராஜாஜியின் வியாக்கியானம் என்ன?

அகில இந்திய காங்கிரஸ் ஆபீசில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜர் லாயக் கென்று சொன்னாரே - அதுதான் தரமிக்க விமர்சனமா?

ஒரு நாட்டின் பிரதமரையே உருவாக்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரு பச்சைத் தமிழரைக் கேவலப் படுத்துவதுதான் அரசியல் நாகரிகமோ!

சென்னைக் கடற்கரையில் உரையாற்றிய ராஜாஜி இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை இங்குதான் இருக்கிறது; அதனைக் கல்லால் அடித் துக் கொல்ல வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டிப் பேசியதன் கண்ணியம் என்னவாம்?

இவர்களின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த சுதர்ஷன், உமாபாரதியின் குடிப் பிறப்புப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசியதில்லையா? அதை எதிர்த்து, உமாபாரதியின் சகோதரர் கண்டனக் கணைகளை வீசவில்லையா?

காமராசர் மறைந்த நிலையில் அவர் உடலை அடக்கம் செய்யும் இடத்தினை இரவோடு இரவாகத் தானே நேரில் சென்று ஆய்வு செய்து, ஏற்பாடு செய்து அரசியலில் தமது எதிர்ப்புறத்தில் இருந்த கட்சியின் தலைவரான காமராசருக்கு மணி மண்டபம் கட்டினாரே கலைஞர் - அதில் கலைஞர் அவர்களின் கண்ணியத்துடன் கூடிய கடமை உணர்வு பளிச்சிடவில்லையா?

குல்லுகப்பட்டர் என்று திராவிடர் இயக்கத் தவரால் வருணிக்கப்பட்ட இன எதிரியான ராஜாஜிக்கேகூட - ராஜாஜி விரும்பும் ராமன் மணி மகுடத்துடன்கூடிய மணிமண்டபம் எழுப்பியவர்தான் மானமிகு கலைஞர் அவர்கள்.

இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் குவிக்க முடியும். வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற போக்கில், அடக்க முடியாத பார்ப்பன இனவெறி உணர்வோடு திராவிட இயக்கத்தவர்களைக் கொச்சைப்படுத் தும், இழிவுபடுத்தும் வேலையில் தினமணி எழுதுமேயானால், அவாளின் சங்கராச்சாரியாரின் திருவிளையாடலிலிருந்து பலவற்றையும் அம்பலப் படுத்த நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

---------------------"விடுதலை” தலையங்கம் 25-2-2011

திராவிட இயக்க வரலாற்றில் என்றும் பேசப்படும் தலைவர் வீரமணி

திராவிட இயக்க வரலாற்றில் என்றும் பேசப்படும் தலைவர் வீரமணி
கறுப்புடை அணிந்தவர் - ஆனால் வெள்ளை உள்ளம் மிக்கவர்


தமிழர் தலைவருக்கு விருது வழங்கிப் பாராட்டு!

ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க இந்தியர் எனும் விருது வழங்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டப்பட்டார்.

கோவை கே.ஜி. அறக்கட்டளை கோவையில் இன்று (25.12.2011) காலை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கும் வெங்கட் சங்கரவல்லி (நிறுவனத் தலைவர் நெருக்கடி நிலை நிருவாகம் மற்றும் ஆய்வு நிறுவனம்) அவர்களுக்கும் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க இந்தியர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

கே.ஜி.பக்தவச்சலம் திராவிடர் கழகத் தலைவர் பற்றி அறக்கட்டளை நிறு வனர் டாக்டர் கே.ஜி. பக்தவச்சலம் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

அதிகாரம் - அரிதாரம்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை அறிமுகப்படுத் திய வெங்கட் சங்கரவல்லி ஆகிய இருவரையும் கே.ஜி. பவுண் டேசன் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். வீரமணி கறுப்பு உடை அணிந்தவர். ஆனால் வெள்ளை இதயத்தை விட மென்மையானவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பெரியாரின் உண்மைத் தொண்டர், திராவிடர் இயக் கத்தின் வரலாற்றில் என்றைக்கும் பேசப்படுகின்ற தலைவர்.

சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என என்றைக்கும் வாழ்பவர், மூச்சில், தமிழ் பேச்சில் என்றும் அடங்கா முத்துச்சரம், அவர் எழுதிய நூல்கள் 75. அதிகாரம் கோலோச்சும் உலகில் அரிதாரம் பூசாதவர். பெண்களைப் போற்றும் கண்மணி. பெண்களைக் காக் கும் வீரமணி. பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக் காக அல்லும் பகலும் போராடு பவர். தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப் பவன் மாமனிதன். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம்

69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றி அதை இன்றைக்கும் நிலைத்து நிற்கச் செய்த ஆற்றலாளர் வீரமணி; விருது வாங்க விரும்பாதவர், 2000 இளைய சமுதாயத்தினருக்கு - எதிரில் இருக்கும் மாணவ கண்மணிகளுக்கு புதிய எழுச்சியை உருவாக்க வாருங்கள். உங்களுடைய உரையைக் கேட்டு எங்களது மாணவர்கள் தெளிவு பெறட் டும் என்று சொல்லி தான் இந்த விழாவிற்கு அவரை அழைத்துள்ளேன்.

அறியாமை தான் இந்தியாவின் மிகப் பெரிய நோய். அந்த அறியாமை இருளில் இருந்து நமது மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உலகம் முழு வதும் இந்தப் பிரச்சாரத்தை செய்து வரும் அற்புதமான தலைவர். பெரியாரை பேசாத நாள் வீண் என்பதே வீரமணி கூற்று. எந்நாளும் எவ்விடத்திலும் பெரியாரை நினைவு கூர்ந்து அவரின் புகழைப் பரப்புபவர்.

ஆளத்தெரியாதவர்கள் ஆள்வார்கள் உலகில் எங்கெல்லாம் நல்லது நடக்கிறதோ அதை எல்லாம் வாழ்வியல் சிந்தனைகள் மூலம் வெளியிடுவார். நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அற்புதமான நூல். வாழத் தெரியாதவர்கள் உள்ள வரை ஆளத்தெரியாதவர்கள் ஆள்வார்கள். நாம் எல்லாம் சிறப்பாக வாழ்வதற்கு அறிவு பூர்வமான செய்திகளைச் சொல்லுவதற்கு வருகை தந்துள்ளார். விருதைப் பெற உள்ளார். கே.ஜி. பவுண் டேஷன் மூலம் நடத்தப் பெறும் இவ்விழாவிற்கு அவர்களை வரவேற்கிறேன்.

தமிழர் தலைவர் உரை


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமது உரையில் கூறியதாவது:

ஒவ்வொரு மனிதனின் பின் னாலும் ஒரு பெண் உண்டு; அவரவருக்கு அமையப் பெறும் வாழ்வியல் இணையர் மூலம் நிலைத்த புகழைப் பெறுகின்றனர். வாழ்விணையர் என்ற பெயர் நமது வழிகளையும் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்வதால், அவர்களுக்கு ஏற்படுகிறது.

26 ஆண்டுகளுக்கு முன்பு...


26 ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களது பேசண்ட் (கே.ஜி.மருத்துவமனையில்) நான் இதய நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு இந்த மருத்துவமனையும், டாக்டர் கே.ஜி.பக்தவச்சலமும்தான் காரணம். அந்த நன்றி உணர்வோடுதான் இந்த விருதைப் பெற நின்று கொண் டிருக்கிறேன்.

என்னை உருவாக்கிய பெரியார் தந்த அறிவால் உழைக்கிறேன். துறவறம், இல்லறம் என்ற இரண்டை பார்த்திருப்பீர்கள். அன்பு மாணவ செல்வங்களே! பெரியார் சொன்னார். மூன்றாவது அறம் தொண்டறம். அந்தத் தொண்டறத்திற்கு இணையே கிடையாது. அந்தத் தொண்டறத்தோடு, மனிதாபி மானத்தோடு பல காரியங்களை கே.ஜி.பக்தவச்சலம் செய்கிறார்.

உயிர் பிழைத்தேன்....!


அதில்தான் உயிர் பிழைத்தேன். அந்த நன்றிக்கு வித்தாக இந்த விருதை வாங்க வந்துள்ளேன். 1952 ஆம் ஆண்டு நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மாணவன். அப்பொழுது ஆசிரியர் நாங்கள் பெற்ற மதிப்பெண்களை சொல்வதற்காக வருகை தந்த போது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர் களைத்தான் அழைப்பார். என்னை நீண்ட நேரமாக கூப்பிடவே இல்லை.

நான் கூட நினைத்தேன், எனது பேப்பர் காணாமல் போய்விட்டதோ என்று! கடைசியில் ஒரு மாடல் பேப்பர் என்று கூறி ஆசிரியர் என்னிடம் கொடுத்தார். அதில் 85 மார்க்குகள் போட்டிருந்தார். இதுதான் அன்றைக்கு முதல் மார்க்; இதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.

கடைசியில் கோல்டு மெடல் வாங்கினேன். எல்லா மாணவர்களும் அப்படித்தான். டைனமிக் இந்தியன் என்றால் துடிப்புமிக்க இந் தியன் என்று எடுத்துக் கொள்ளலாம். தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பதற்கு இணங்க கே.ஜி.மருத்துவமனை சிறப்பாக இயங்குவதற்கு டாக்டர்.கே.ஜி. பக்தவச்சலம் அவர்களே காரணம்.

இங்கே என் எதிரில் அமைந்துள்ள அய்ந்து மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் அமைவதற்கு காரணமானவர் பொறியாளர் அசோக் பக்தவச்சலம். தன்னம்பிக்கை வளர மூடநம்பிக் கையை அகற்ற வேண்டும். அந்த காலத்தில் வீட்டு வாசற்படியில் அய்ந்து அடி உயர நிலைப் படி இருக்கும் தலையில் தட்டிக் கொண்டால் உடனே பயம் வந்துவிடும்.

பெரியார் கூறினார், ஆறடி உயர மனிதர் அய்ந்து அடி வாசற்படியில் இடித்துக் கொண்டால் வருத்தப்பட என்ன இருக்கிறது? 7 அடி உயர வாசல்படி வைத்து விட்டால் அது இடிக்கிறதா பார்ப்போம் என்று பெரியார் சொன்னார். பல்லி விழுந்தால் பயப்படுகிறார்கள். பல்லி என்ன பன்மொழிப் புலவரா? கிளி ஜோசியம் சொல்லும் ஜோசியம்கூட கேட்கிறார்கள்.

தன் வாழ்க்கையைப் பற்றி கூட அதற்குத் தெரியாது. அது உன் வாழ்க்கைக்கும் பலன் கூறுகிறதா? தடம் பார்த்து நடக்கவும் வேண்டும். தடம் பதித்து நடக்கவும் வேண்டும். எங்களுக்குள்ள சிறப்பு - நாங்கள் தடம் மாறாமல் நடப்பவர்கள். நல்ல தடத்தை அடையாளம் காணுங்கள்.

முடியாவிட்டால் நல்ல தடத்தை உருவாக்குங்கள். இவ்வாறு தமது உரையில் குறிப் பிட்டார் தமிழர் தலைவர்.

--------------------”விடுதலை” 25-2-2011

24.2.11

மதச் சார்பின்மைக்கு மரணவோலையா? பூஜை, புனஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன?


கருநாடக மாநிலத்தில் அரசு தலைமைச் செயலகத்திலும், சட்டமன்றம் நடக்கும் அலுவலகத்திலும் நாள்தோறும் அர்ச்சகர்ப் பார்ப்பனர் ஒருவர் பூஜை நடத்தி வருகிறாராம். இப்பொழுது ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் எடியூரப்பா காலத்திற்கு முந்தைய குமாரசாமி முதல்வராக இருந்தபோதே இந்தக் கேடுகெட்ட நிலை தொடங்கப்பட்டுவிட்டதாம்.

ஒவ்வொரு வாரமும் தம் சொந்த செலவில் இந்த அர்ச்சகப் பார்ப்பனர் பூஜை நடத்துகிறாராம். விலைவாசி ஏறிக் கொண்டேயிருப்பதால், அதிக செலவாகிறதாம்.

மாதம் 40 ஆயிரம் ரூபாய் சொந்த செலவு செய்யும் அளவுக்கு இந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர் என்ன அவ்வளவுப் பெரிய பணக்காரரா?

அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஆயிரம் ஆயிரம் கொடுக்கிறார்களாம் - அதிகாரிகள் கொடுக்கும் வெகுமதிகள் வேறு. அப்படியென்றால், வெகுமதி என்ற பெயரில், பக்திக் காணிக்கை என்ற பெயரில் இலட்சக்கணக்காகத் தொகை புரளா விட்டால், இந்த வேலையில் இறங்கி இருக்கவே மாட்டார் அந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர். ஆதாயம் இல்லாமலா அய்யர்வாள் ஆற்றைக் கட்டி இறைப்பார்?

இவர் இப்படி பூஜை செய்வதால், அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்யும் மாபெரும் பணிகளைக் கண்டு மேலுலகில் உள்ள கடவுள்கள் சிரித்து மகிழ்ச்சி அடைவார்களாம்! ஆமாம், கட வுளுக்கும், இந்த அய்யருக்கும் தனி அலைவரிசை யில் நேரடித் தொடர்பு (கனெக்ஷன்) இருக்கிறது போலும்!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் இப்படிப் புரூடா விடுவதை நம்பித் தொலைக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கின்றனர் என்றால், இந்த முட்டாள்தனத்தை எண்ணி எதில் போய் முட்டிக் கொள்வது?

குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்த சாஸ்திரி வந்ததாகச் சொல்லப்படுகிறது - அப்பொழுதே இந்தப் பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. குமாரசாமியின் ஆட்சி ஏன் தொடர வில்லை? பூஜையின் பலன் குமாரசாமிக்கு ஏன் போய்ச் சேரவில்லை?

சரி, இப்பொழுது எடியூரப்பா முதல்வராக உள்ளார். நாள்தோறும் பூஜை புனஷ்காரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொருநாளும் எடியூரப்பா ஆட்சி செத்து செத்து அல்லவா பிழைத்துக் கொண்டிருக்கிறது - மனுஷன் நிர்வாணமாக அல்லவா படுத்துக் கிடக்கிறார். பூஜை, புனஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன?

சட்டமன்ற உறுப்பினர்களில், அமைச்சர்களில், அதிகாரிகளில், அலுவலர்களில் இந்து மதத்தைச் சாராதவர்கள் இல்லையா? அவர்களுக்கும் சேர்த்து இந்த சாஸ்திரி பூஜை செய்கிறார். இஸ்லாமியர் களாக உள்ளவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாதே - கிறித்தவர்களுக்காக எந்த உருவத்தை வைத்துப் பூஜை செய்கிறார் இந்த சாஸ்திரி?

பல்வேறு மதக்காரர்களும், மத நம்பிக்கை யற்றவர்களும் பணியாற்றும் ஒரு தலைமைச் செயலகத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சாஸ்திரி ஒருவர் குறிப்பிட்ட இந்து மதத்தின் முறைப்படி இந்துக் கடவுள்களின் உருவப் படங்களை ஒவ்வொரு அறையில் வைப்பதும், இந்து மத முறைப்படி பூஜை புனஷ்காரம் நடத்துவதும் சரியானதுதானா?

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா மதச் சார்பற்ற நாடு (செக்குலர் ஸ்டேட்) என்று தெளி வாகவே பிரகடனப்படுத்தியுள்ளது. அப்படி இருக் கும்போது குறிப்பிட்ட மதப் பூஜை, புனஷ்காரங்களை அனுமதிப்பது எப்படி?

மதச் சார்பின்மை என்றால், அரசுக்கும், மதத் துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பது பொருள்.

ஆனால், கருநாடகத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான காரியம் நாள்தோறும் நடக்கிறதே - அதுவும் அமைச்சர்களின் ஆசீர்வாதத் தோடு.

இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை மதிக்கும் நீதிபதியாக இருந்தால், இதனைக் கண்டித்துத் தானே தீர்ப்பு எழுதுவார்?

கருநாடக மாநில சட்டப் பேரவையில் பகுத்தறிவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லையா? மதச் சார்பின்மை பேசும் இடதுசாரிகள் ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்புவதில்லை? இதில் வர்க்கப் பிரச்சினை எதுவும் இல்லை என்று சொல்லுவார்களோ!


கருநாடக மாநிலத்தில் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் - பகுத்தறிவாளர்கள் இதுகுறித்துப் பிரச் சினை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

-------------------”விடுதலை” தலையங்கம் 24-2-2011

தமிழ் மொழி பற்றி பெரியார்




தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா? என்ற கேள்விகள் தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்-களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாகத் திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும்; ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகு காலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம். வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும் மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் நாம் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும் கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல், தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்கிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். சிலர் மறுக்கவும் செய்கிறார்கள். காரணம் அவர்களது மொழியில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடிவாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்தியப் போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும், மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமற் போனதால் நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக்கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன் மூலம் தமது கலை ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பொருளுக்குப் பல சொல்

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழிஅதாவது தமிழ்தான் நாலு இடங்களில் நாலுவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு தோட்டத்திற்குப் போகிறேன் என்றால் வயலுக்கு, விளை நிலத்திற்குப் போகிறேன் என்று அர்த்தம். கொல்லைக்குப் போகிறேன் என்றால் கக்கூசுக்குப் போகிறேன் என்று அர்த்தம். சோழ நாட்டில் தோட்டத்திற்குப் போவதென்றால். கக்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்வார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. இதேபோல் தமிழில் வீடு என்பதைத் தெலுங்கில் இல் என்றும், கன்னடத்தில் மனை என்றும் மலையாளத்தில் பொறை என்றும் கூறுவார்கள். இந்த நான்கையும் தமிழ் அகராதியில் வீட்டிற்குரிய பல பெயர்களாகக் காணலாம். இதே போல் நீர் என்ற, தண்ணீர் என்று பொருள்படும் தமிழ் வார்த்தைக்கு, கன்னடத்தில் நீரு என்றும், தெலுங்கில் நீள்ளு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் கூறுவார்கள். மலையாளத்தில் மழை அதிகம். ஆதலால், தண்ணீரை அவர்கள் எப்போதும் பெருத்த அளவில்தான் பார்ப்பார்கள். ஆதலால், தமிழில் பெருந்தண்ணீர்ப் போக்குள்ள பெயரை அங்கு நீருக்கு வழங்குகிறார்கள். இந்த மாதிரித் தமிழ் வார்த்தைகள் அந்தந்த இடத்திலுள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, பேச்சுப் பழக்கத்துக்கு ஏற்ப உச்சரிப்பில் சிறிது மாற்றமடைந்திருக்கிறதே தவிர வேறில்லை. இதனால் வெவ்வேறு மொழியாகிவிடமுடியுமா? ஒரு பொருளுக்குப் பல சொல் இருந்தால் ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

நாலு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச்சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். அகராதிகொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும்கூட அவற்றுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை, தமிழ்ச் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தங்களையும், திருப்பாவையையும் தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில் தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளி-களும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்கள் என்பது நமக்கு, மேலும் நம் கருத்துக்கு வலிமையை ஊட்டுகிறது. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில் ஹிந்தியைப் புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன்.

இந்தியை ஏன் எதிர்த்தேன்?

அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனியால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திரச் சக்தி நிறைந்தது, எலும்புக்கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல, பின் எதற்காக? தமிழ், இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்நாட்டு நல்வாழ்வுக்கு, பண்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. மூடநம்பிக்கையை உண்டாக்கும் கருத்துகளுக்குத் தமிழ் மொழியில் இடம் இல்லை. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால், மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் பல நன்மையடை-வோம் என்பதோடு; நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக்கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்-தான். வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட, மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்-பதற்காக அல்ல.

-------------------தந்தை பெரியார் “ எழுத்துச் சீர்திருத்தம்” நூலிலிருந்து...