Search This Blog

30.7.16

செக்குலர் என்பதன் பொருள் என்ன?-பெரியார்

செக்குலர் என்பதன் பொருள் என்ன?
பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.
பூணூல் இல்லாத பார்ப்பனர் காங்கிரஸ்காரர்கள்
இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி, எந்தப் பாதகத்தைச் செய் தாவது - அதாவது யாரைக்கொன்றாவது, மக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து, இக்காரியத்தில் (ஒவ்வொரு பார்ப்பானும்) தங்களாலான கைங்கரியத்தைச்செய்து பார்த்து விடத் துணிந்துவிட்டார்கள்.
இதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்குப் பார்த்தாலும் நடந்துவரும் அயோக் கியத்தனங்களும் காலித்தனங்களுமே போது மானவையாகும். இந்த நிலைக்குப் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய காங்கிரஸ்காரர்களும் பெரும் காரணஸ் தர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார் .
தொழிலாளர் என்று கூச்சல் பார்ப்பனக் கூட்டு முயற்சியே!
பார்ப்பனர்களுக்கு அவர்களது பார்ப்பனத் தன்மை இறங்கிக் கொண்டு வருகின்றது. காங்கிரஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் ஆதிக்க வாழ்வு இறங்கியே விட்டது. ஆகையால் இரு சாராரும் சேர்ந்து தங்களால் செய்யக்கூடிய எல்லாப் பாதகச் செயல்களையும் செய்து பார்த்து விடுவது என்று  துணிந்து விட்டிருக்கிறார்கள். இப்போது வேலை நிறுத்தம், தொழிலாளர் என்று கூச்சல் போடுவதெல்லாம் பார்ப்பனக் கூட்டு முயற்சிதான்.
இன்னும் பல பெரிய கேடுகள் ஏற் படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழகத்தைக் கவிழ்க்கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைக் செய்துதான் வருவார்கள். மக்கள் சகித்துக் கொண்டுதான் தீரவேண்டும். ஏன் என்றால், பார்ப்பான் ஒழிவதும், காங்கிரஸ் ஒழிவதும் இலேசான காரியம் அல்ல.
பெரிய சதி முடிச்சுடன் திரிகிறார்கள்
எளிதில் பிரிய முடியாதபடி அவை, ஒன்றுக்கொன்று ஆதரவில் பெரிய முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டும் தங்கள் ஆதிக்கக் கட்டடத் தைக் கடவுள், மதம், கோவில், உருவம், இவை சம்பந்தமான கட்டுக்கதைகள் ஆகிய அஸ்திவாரத்தின் மீதே கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்.
இவர்கள் ஒழிக்கப்பட வேண்டுமென் றால் மக்களுக்குப் பகுத்தறிவேற்பட்டுப் பகுத்தறிவுக்கு மாறான எதையும் ஒழித்துக் கட்டுவது என்ற துணிவு தமிழர்களுக்கு ஏற்பட்டால்தான் முடியும்.
காந்தி சொன்னதன்
முழுப் பொருள் என்ன?
இதை மனத்தில் வைத்துத்தான் காந்தியாரும் ‘காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றும், ஆட்சி - செக்குலர், மதச்சார்பற்ற - பகுத்தறிவு ஆட்சியாக இருக்கவேண்டுமென்றும் சொன்னார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டுவிட்ட படியால், காங்கிரஸ் கலைக்கப்படாமல் போய்விட்டதோடு, செக்குலர் ஆட்சி என்று சட்டம் செய்தும், அது அமுலுக்குக் கொண்டுவர முடியாமலே போய்விட்டது.
இப்போது அதை மதச்சார்பற்ற ஆட்சியாகச் செய்யக்கூடிய தி.மு.க. ஆட்சி நல்வாய்ப்பாக ஏற்பட்டிருந்தும் அதைக் காங்கிரசாரும், பார்ப்பனரும் ஒழிக்கப் பார்க்கின்றார்கள்.
செக்குலருக்குப் பார்ப்பனர் கூறும் விபரீத வியாக்கியானம்
செக்குலர் - மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு இவ்விருசாராரும் என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ‘ஒரு பெண் கன்னியாய் இருக்கவேண்டு மென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக், கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்’ என்பது போல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
செக்குலர் எதற்குப் பொருந்தும்?
‘செக்குலர்’ என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தி னார்களே ஒழிய வேறு மொழிச் சொல் லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல் லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும், காங் கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத் தமாக முடியுமா?
அந்தச் சொல்லும்கூட அரசாங்க காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லு கிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்ல வில்லையே!
அப்படி இருக்க இதில் பார்ப்பனருக்கும், காங்கிரசாருக்கும் ஏன் ஆத்திரம் வர வேண்டும்?
ஏன் என்றால், தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறது; அதில்தான் மக்களுடைய முட்டாள்தனத்தில் கிளைத்து எழுந்த கடவுள், மதம், கோவில், அதில் உள்ள கற்சிலைகள், அவற்றின் பொம்மைகள், சித்திரங்கள், படங்கள், தட்டிகள் முதலி யவைகள் இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.
தமிழர்கள்
கடமை என்ன?
எதை எதையோ சொல்லி, எதை எதையோ செய்து எப்படியோ போகட்டும்; நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை; அதற்குப் பெரும் கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால் பார்ப்பனரும், காங் கிரஸ்காரர்களும் (காங்கிரசிலும் தனித் தன்மையுள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வெளிப்படையாய் வரப்பயப்படுகிறார்கள்) அல்லாத பொது மக்கள் (தமிழர்கள்) கடமை என்ன?
நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டு, அரசாங்க காரியங்களை ஆத ரித்துப் பாராட்டித் தீர்மானங்கள் போட்டு, அத்தீர்மானங்களை முதலமைச்சருக்கும், மத இலாகா அமைச்சருக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.
பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?
பார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார்யாரோ அநாம தேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளி யிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும், பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்பவேண்டாமா?
இப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையையும், காங் கிரசார் யோக்கியதையையும் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாகும்.
சூத்திர வாழ்க்கையில்
சுகமா?
பொதுவாக நம் தமிழ் மக்கள், தாங்கள் என்றென்றும் குத்திரர்களாக, கீழ்ஜாதி களாக இருக்க ஆசைப்படுகிறார்களா? இல்லாவிட்டால் அதை மாற்றத் தமிழர்கள் செய்யும் செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட்கிறேன். தாங்களாகச் செய்யா விட்டாலும் ஆட்சியையாவது ஆதரிக்க வேண்டாமா?
ஒவ்வொரு தமிழனும், தன் வீட்டில் உள்ள கடவுள்-மத சம்பந்தமான படங்களை எடுத்து எறியவேண்டும்; எடுத்து எறிந்துவிட்டுத் தகவல் கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டத்தில் காட்டிக்கிழித்து எறிய வேண்டும்.
இவற்றாலும், இப்படிப்பட்ட காரியங் களாலும்தாம் தமிழர் இழிவு நீங்கும்.
                         -----------------------------தந்தை பெரியார் - ‘உண்மை’,  14.12.1971

7.7.16

நல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது!-பெரியார்



அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி. ஷண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி. ஷண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர் களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்ட தைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகுமென்று கருதுகிறேன்.
அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர்களுக்குச் சொல்லுகிறேன்.

அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரியென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில், இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய வைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால், இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப் படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய்திருப்பேன்.

தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலைவர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டிருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.

கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டு மென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.

எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவ தில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.

இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன்.இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங் களிடமோ,  நம்மை  அனுசரித்துப் பின் பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.

பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி? இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்தி சாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.

மற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறுயாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.

பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.

தோழர். டி. ஷண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில்களைக் கட்டிப் பார்ப்பனர் களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசி களுக்கும் பப்ளிக்ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார் களானால், தோழர் ஷண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மாக நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.

பாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவது தான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.

முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப்பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங் களும் இருக் கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக் கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.

உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலைவனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங் களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?

ஆகவே, காலத்தையும் எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவனிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத்தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. ஷண்முகம், சவுந்திரபாண்டியன் முதலிய வெகு சிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப் பட்டவர்களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.

இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் கிளர்ச்சி துவக்கியிருக் கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்து கிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்பட வில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்பட வில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணய மாய் பேசுகின்றார்களென்றோ நான் கருதவில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும் என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற “வர்ணாசிரம”க்காரனல்ல. சுத்தக்காரனோ அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலா மென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
இந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலா மென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப்பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.

                     ---------------------------- பெரியார் - ’குடிஅரசு’ - சொற்பொழிவு - 18.12.1943

நல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது!-பெரியார்




அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி. ஷண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி. ஷண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர் களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்ட தைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகுமென்று கருதுகிறேன்.
அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர்களுக்குச் சொல்லுகிறேன்.

அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரியென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில், இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய வைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால், இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப் படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய்திருப்பேன்.

தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலைவர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டிருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.

கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டு மென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.

எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவ தில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.

இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன்.இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங் களிடமோ,  நம்மை  அனுசரித்துப் பின் பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.

பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி? இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்தி சாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.

மற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறுயாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.

பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.

தோழர். டி. ஷண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில்களைக் கட்டிப் பார்ப்பனர் களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசி களுக்கும் பப்ளிக்ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார் களானால், தோழர் ஷண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மாக நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.

பாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவது தான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.

முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப்பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங் களும் இருக் கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக் கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.

உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலைவனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங் களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?

ஆகவே, காலத்தையும் எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவனிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத்தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. ஷண்முகம், சவுந்திரபாண்டியன் முதலிய வெகு சிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப் பட்டவர்களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.

இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் கிளர்ச்சி துவக்கியிருக் கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்து கிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்பட வில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்பட வில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணய மாய் பேசுகின்றார்களென்றோ நான் கருதவில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும் என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற “வர்ணாசிரம”க்காரனல்ல. சுத்தக்காரனோ அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலா மென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
இந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலா மென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப்பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.

                     ---------------------------- பெரியார் - ’குடிஅரசு’ - சொற்பொழிவு - 18.12.1943

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?




தோழர்களே!

இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.
அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.
உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.
நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.
ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.
திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?
புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.
மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.
ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.
மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.
இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.
----------------------------------------- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு. --"குடி அரசு" சொற்பொழிவு 13.12.1936