Search This Blog

16.1.18

திராவிடரா? தமிழரா?

‘தமிழர்’ என்பவர்கள் ஏதோ திராவிடர் என்பவர்களுக்குப் பகைவர்கள்போல், சில அரசியல் கடை திறந்திருக்கும் புதிய வியாபாரிகளும், அரை வேக்காடுகளும் பக்குவமில்லாத, வரலாறு தெரியாத இளைஞர்களை திசைதிருப்ப முயலுவது அசல் கேலிக்கூத்து ஆகும்.

“திராவிடர் _ திராவிடம் என்பதும், தமிழ் உணர்வு என்பதும் எதிரானவைகள் அல்ல. மொழியால் தமிழராக உள்ள “சூத்திரர் _ பஞ்சமர் _ கீழ்ஜாதி’’ என்று ஒதுக்கப்பட்ட அனைவரும் என்னைப் பொறுத்தவரையில் திராவிடர் _ ஆரியரல்லாதவர். இது இரத்தப் பரிட்சையால் தேர்வு செய்யப்படுவதில்லை; அவர்களது பண்பாடு, நாகரிகம், மொழி இவைகளைப் பொருத்தும், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகும் பான்மையையும் பொருத்தது!’’ என்றார் தந்தை பெரியார்.

திராவிடர் என்பது சில காவி எழுத்தாளர்கள் இப்போது கற்பனையாகக் கூறுவதுபோல், “வெறும் கால்டுவெல் பாதிரிகளால் மட்டும் சொல்லப்பட்டதோ, இறக்குமதி செய்யப்-பட்டதோ அல்ல.’’
‘அவாளின்’ ஆரிய தர்ம நூலான மனுதர்மத்திலேயே இச்சொல் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு மறுப்புக் கூற முடியாது.

“மொழியால் தமிழர் வழியால் (வரலாற்றால்) திராவிடர் (இனம்)’’ இது எப்படி முரண் ஆகமுடியும்?

எந்த ஒரு வீழ்ந்த இனமும் மீண்டும் எழுவதற்கு முதற்படி, முன்தே
வை, அது வரலாற்று ரீதியாகத் தன்னைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளலேயாகும்.

நம் இனத்திற்கு தமிழர் என்கிறபோது _ பார்ப்பனர் உள்ளே புகுந்து நாங்களும் தமிழ் பேசுகிறோம் என்று கூறி ஊடுருவி மேலாதிக்கம் செலுத்தினர். உண்மையான தமிழ்ப் பண்பாட்டை அழித்தனர். எனவே, மொழி மட்டுமிங்குப் போதாது; அதனால்தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள், ‘பார்ப்பனர் தமிழரல்லர்’ என்று ஒரு தனி பகுதியே  விரிவாக எழுதியுள்ளார்கள்!

திராவிட இன அடையாளம்தான் நமது தனித்தன்மையை நிலைநிறுத்தும். ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற எதிர்மறைப் பெயரை _ அதுவும் வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பனருக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் அல்லாதவர் என்று நம்மை அழைத்துக் கொள்வது இழிவிலும் இழிவு என்று கருதியே, தமிழ் மொழி காக்க ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை 1938இல் துவக்கி _ பண்பாட்டுப் போராக _ நடத்திய தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமும் கொடுத்த வரலாறும் பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய நிலையில், அதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று 1944இல் சேலத்தில் மாற்றியதும், மிகப் பெரிய இன அடையாள எழுச்சிக்கு வித்தூன்றிய வரலாற்றுத் திருப்பம் ஆகும்!

“ஓர் இனத்தின் அடையாளம் வெறும் மொழியை மட்டுமே கொண்டதாக இருந்தால் மட்டுமே அது போதியதாகாது; அதன் முக்கிய அடையாளம் அதன் பண்பாட்டுத் தளமே ஆகும். அதன் நாகரிகத்தையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.’’

அது மட்டுமல்லாது, தமிழர் என்று கூறிக்கொண்டு பிற இனத்தவர் ஊடுருவி, தமிழரின் சொந்த அடையாளத்தை,  பண்பாட்டை, நாகரிகத்தை, கலைகளை, அழித்து ஒழித்து தமது பண்பாட்டைச் சுமத்தி, பிறகு இதுவே நிலைத்ததாக ஒரு புதிய வரலாற்றையும் உருவாக்கிக் கொள்ளும் பேரபாயமும் உண்டு.

எப்போதும் வெளியில் உள்ள கிளைகளும், கிளைகளில் தழைத்த இலைகளையும்விட முக்கியம் வேர்களேயாகும்!



‘திராவிடர்’ என்ற சொல்லைத் தந்தை பெரியார் அவர்கள், நம் மக்களுக்கு ஒரு சரியான  தனித்த _  இழிவுபோக்கும் அடையாளம் தருவதற்குரிய கருவியாகவே _ ஆயுதமாகவே பயன்படுத்தினார்.

அந்த அடையாளம் தரப்பட்ட பின்புதான், நமது பண்பாடு, நாகரிகம், மொழியின் தனித்தன்மை _ இவைகளின் பின்புலம் _ எழுச்சியூட்டும் சிந்துவெளி நாகரிகம் _ திராவிடர் நாகரிகம் தொடங்கி _ நாளது, கீழடி ஆய்வு வரையில் செல்வதற்கும் வெல்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

திருவிடம் _ திராவிடம் _ வெறும் இடம் அல்ல; நிலம் அல்ல; அஃது இனப் பண்பாட்டு அடையாளம். நனிநாகரிக _ தனித்த வரலாறு படைத்து வரும் கருவி.

புரிந்துகொள்வீர் இளைஞர்களே! குழப்பத்திற்கு ஆளாகி, ஆரிய வில்லுக்கு அம்பாகாதீர்!

 -------------------- கி.வீரமணி  ஆசிரியர் "உண்மை’’ 2017 -ஆகஸ்ட்  01-15 

15.1.18

எனது பொங்கல் பரிசு - பெரியார்


தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,

தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டா டலாம் என்று சுயமரி யாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

பொங்கல் வாழ்த்துகள் 

இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டு வேண்டு மானால் கூறும். இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த் துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)
இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள்களைச் சேர்ந்தவர்களாகும். இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண்டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 300க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளை வெறுத்து விலக்கி இருப்பது மகிழத்தக்கதாகும்.
தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக்கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மையாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித் துக் கொள்ளக்கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன்வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந்ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது.  பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.
ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்கு வீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து
இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் துவக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரியர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு -  தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வருவனவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவைகள் கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்ம நூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.

இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர்களையும் அறிவற்ற தமிழ் மடையர்களையும் பல தந்திரங்களால் மானம், ஈனம் அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவைகள் சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படிச் செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு ஜட்ஜ் பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலியவைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுவான், கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்முகப்பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி அடிமைத்தன்மையிலிருந்தும், முன்னேற்றத் தடையிலிருந்தும் எந்த விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவர, அதற்கு ஆகத் தொண்டாற்றி மடிவது என் வாழ்நாளினுடையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவைகளைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலி ருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை முதலியவைகளுக்குப்   பதிலாக ஒரு நெறி, கலை, வழிகாட்டுவதற்கு என்று குறளைக் காட்டவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.
குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழ மாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லாவிட்டால் மனிதன் வாழலாம். ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால், ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப்படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவற்கு ஒரு சாதனம், விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை - கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு வருவதற்குக் குறளைத் தூண்டு கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.
மாற்றுப் பண்டம்
நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்காக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்காக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும் என்பதை மனிதன் மானமுள்ள அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் திராவிடன் சிந்திக்கட்டும் என்பதுதான் எனது வேண்டுகோளும், ஆசையுமாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.
ஆகவே இந்த ஆண்டு பொங்கல் ஆண்டு துவக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைகள்போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாகக் கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும் குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை இராமாயண பாரதம் ஆகியவை அடியோடு நீக்கிவிட்டு மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச் செய்து விட்டு அதற்குப் பதிலாக அவைகள் இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால், தமிழர்களுக்கு இப்பொங்க லாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு - அன்புக்கு - நம்பிக்கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.
பதில் பரிசு தருவீர்களா?
இந்த எனது தட்சிணையை, காணிக்கையைத் தமழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால், குறைந்த அளவு என்பால் அருளும், அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள் கூர்ந்து கருணை கூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.
உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காணவேண்டுமானால் அவன் பார்ப்பனப்  பத்திரிகையை வாங்காதவன், ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.
தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கியக் காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய் சூத்திரச்சிகளாய் இருப்பதற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.
ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,
1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி, பொங்கல் விழாக் கொண்டாடுவது.
2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்றுப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.
3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.
பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதாவது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.

பொங்குக பொங்கல்!

பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!,

                            ---------------------------------- ஈ.வெ.ரா. "விடுதலை" -19.01.1969

14.1.18

ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி?


- அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.
அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்க முடியுமா?... அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.
அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.
அப்படி ஒரு தடவை சந்தித்தபோது.... 'முதலில் நாம் நம்மை சுத்தப்படுத்திக்கணும் இல்லியா?.... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும். அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்ய வேண்டும்.... ஏதாவது சொல்லுங்களேன்....' என்றார் மகா பெரியவர்.
நான் சொன்னேன்.
'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். 
டி.கே.ஜெகந்நாதாச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட பிராமணன், தார்மீக ஹிந்துனு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்' என நான் சொன்னேன்.
பதிலுக்கு மகா பெரியவர்....
'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரி.... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமைய மறந்துட்டா இல்லையா?.... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு.... ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.  மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்.... நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்?' என்றார்.
இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது. குளித்தலை அண்ணா அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள். அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய அவர்களோடு நானும் புறப்பட்டேன்.
"பிராமணர்களை திருத்தினால், நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்...." என நம்பிய மகா பெரியவர், இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.
அது என்ன பலனை கொடுத்தது?.
***
மகாபெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப் பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது.
"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல் லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா.... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஸ்மீபீவீநீ ஷிஜீவீக்ஷீவீt) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார். இல்லையா?...." என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.  எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க.... எதற்கு ஆவஹந்தி ஹோமம்?..... அப்படியென்றால் என்ன?...
ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக் காகத்தான் அதாவது கோரிக்கைகளை (பீமீனீணீஸீபீs) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆவஹந்தி ஹோமம்.... ப்ரம்ம தேஜஸ்-க்காக நடத்தப்படுகிறது.  புனித கலசத்தை நிறுவி.... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து..... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம்.
அஃதாவது... அன்னத்தை கொடுத்து. வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ்'ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் பிராமணியத்தின் பலத்தை என குறிப்பிடப்படும். ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.
இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடித்ததும்..... வேதத்தைபற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.  அப்போது.... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன்கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.
இந்த 'வசதி'கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம்.... எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக.... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும். ....  ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமைய்யர் பெரும் பொறுப்பு வகித்தார்.
இப்படியாக.... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.
தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும், ஆவஹந்தி ஹோமமும் பண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலி ருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது?
இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான். செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.
அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி.... அகமதாபாத், டெல்லி , கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வடஇந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.  அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம்.
இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.... நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே.நீலமேகம்.
கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும் போது.
"ஸ்வாமி.... பார்த்தீரா..... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்" என்பார்.
கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லி விட்டுத்தான் நான் நகர்வேன். இந்நிலையில் பிராமணர் களை மட்டுமன்றி.... தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.
இது மகாபெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். "தாத்தாச்சாரீ..... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.
அதுக்கு அடுத்ததா.... அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.... நாம் பூஜா தத்வத்தையும்.... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.... என்ன சொல்றீர்?....." என்றார்.
"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.... இந்த அவேர்னஸ்' (ணீஷ்ணீக்ஷீமீஸீமீss) பிராமணாளுக்கும் வரணும்.... மத்தவாளுக்கும் வரணும்...." என்றேன்.
எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு.... உதித்தது ஆகம சிற்ப சதஸ்.
***
அதென்ன ஆஹம சிற்ப சதஸ்?
'ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.
விக்ரகங்களை.... தெய்வ சிற்பங்களை எப்படி யெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்ரங்களை சொல்லிக்கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.
சிற்பம்?.... இன்றும் நாம் கோயில்களுக்கு செல் கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச்சிறப்பு. நீங்கள் வடஇந்திய கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப் போல நுட்பமும், அழகும் ஒருசேர வாய்த் திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டிவைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறுசிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.
இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டதுதான் ஆஹம சிற்ப சதஸ்.  இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.
ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?
கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம், பூஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிராகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.  கோபுரத்தின் அழகு, பிராகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்ப க்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.
"இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல.... நான் உங்களிடமும் சொல்கிறேன்.  ஆதி காலத்தில்.... அதா வது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும் வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவ மைத்தது போல..... அவருக்கு நாம் சிற்பங்களை சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வவகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்க வேண்டும்." என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச்சார்யார்களையும் அழைத்து வந்து அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.
இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.  சனாதன தர்மசபையில் ஆரம்பித்து.... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.
திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒருநாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே.... நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா.... பிராமணா ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகி யிருக்கோ? இல்லியே.... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவா ரெண்டு பேரையும் சேர்த்து! வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...." என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனை களைத் தந்தேன்.  நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?.... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே! ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?."
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
(தொடரும்)
- இந்துமதம் எங்கே போகிறது?
குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.
               ----------------------- ’விடுதலை’ 12-01-2018


ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி? (2)

- அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

நேற்றையத் தொடர்ச்சி...
"இதப்பாரும்.... எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை - திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா..... நாம எடுத்துண்டதும் தமிழ், சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"  என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்கு புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தபோதும்.... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.  அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
"ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?" -என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என் னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்." என்றேன்.  அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு.....?
***
"நீங்களும் மகாபெரியவரும் ஏன் சமஸ்கிருதத் திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சு போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும்  குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?"
- மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள் சத்திரத்தில் இருந்த சிலர். அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்கு சொல்வதற்கு முன்... மகாபெரியவர் 'திருப்பாவை-திரு வெம்பாவை' என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்டவழியில் சொல்கிறேன்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்கு பொருள் (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்).
தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.  தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாக வும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல்பொழுது விஸ்தாரமாகும்.
இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடி காலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிறுசிறு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு கடவுள் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.
இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.
இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... 'நமது கோரிக் கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ. அவரை முதலில் எழுப்ப வேண்டுமே....' என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.
'கடவுளை மனிதவழியில் அணுகுவது' என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக - நாயகி பாவம்' வரை வளர்ந்தது இந்த பண்பாடு.
தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு ஆதலால் 'பாவை நோன்பு' ஆயிற்று.
தன்னிகரில்லாத தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களாலேயே உருவாக்கப்பட்ட விரதவிழாதான் பாவை நோன்பு,
இத்தகைய தூயதமிழ் கலாச்சாரத்தைத்தான் சைவத் தின் மாணிக்க வாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும், பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள்.  இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத் துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.
தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக் கியத்தை 'பாவைமாநாடு' என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகாபெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்தியிருக்கும்.
இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடைமருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான' பதில் அவர்களுக்கு புரியவில்லை.
அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது...
கும்பகோண மடம்.... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும்.  அந்த வகையில்.... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்.... நாட்டுக் கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்தநேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்.' என்றேன்.  'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.  போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி.... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை.... பாத்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச   வே ண் டி  வ ரு ம் , நோக்குதான் தெரியுமே.... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும், பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ.... அதனால நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்சிடுங்கோ." என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். 'நான் சொன்னது தானப்பா.... சுவாமிகள் மௌனத்தில இருக்கார், நாளைக்கு வாயேன்....' என்றேன்.
'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்' - என தாய்மொழியாம் 'தமிழில்' மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
***
செட்டி நாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகா பெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள். போயிருக்கிறார்கள்...
இது ஒருபக்கம் இருக்க, பாவை மாநாடு சீரும்   சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.
"சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை (சிஷீனீனீஷீஸீ நிஷீபீ) கண்டு பிடிக்கணும் தாத்தாச்சாரீ... - என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகா பெரியவர் பிராமண-பிராமணர் அல்லா தவர், சைவ-வைணவ துவேஷங்களை தீர்த்து வைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அரசியல் கட்சி மாநாடு  அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தை கூட்டியது.
மார்கழி மாதம் முழுதும்... தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை- திருவெம்பாவை உபன் யாஸங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களை தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.
பின்.... விசேஷ மேடை தயார் செய்து அதில் ஆண் டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை  - திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.
எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக் கொள்வோம். கிடைக்காத படங்களை பயன் படுத்துவோம்.
கோவில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது.... நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக் கொண்டு வரமுடியும்?.... ஆண்டாளையும், மாணிக்க வாசகரையும் கையைப் பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?.... - என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம்.
பாவை மாநாடு - வெற்றிகரமாக.... விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்.... இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார். மகா பெரியவரின் ஆசிர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு.... அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரம்மாண்டம் பெற்றது. இதனால் மகா பெரியவருக்கு அரசியல் முக்யத்துவமும் ஏற்பட்டு விட்டது.
பாவை மாநாடா?.... நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே... - என பிராமணர்கள், பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள்.
நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ?.... தமிழ்நாடு முழுதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக் களிலும் மார்கழி மாதம் முழுதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக....
மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம். இந்தப்பக்கம் ஆண்டாள்.... பக்கத்தில் மாணிக்கவாசகர் வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர். 'ஸ்வாமி.... என்ன இப்படி பண்ணிட்டேள்?'.... என மொட்டையாக ஆரம்பித்தார்.
'எதை எப்படி பண்ணிட்டேன். விவரமா சொல் லுங்கோ...'. -என நான் பதில் உரைத்தேன். 'தெரிஞ்சுண்டே கேக்கறிளே?...' மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.
"தீட்சிதரே. என்ன சொல்றீர்?.... நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?....."
- மறுபடியும் உரைத்தேன். தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக்கிடக்கையை உடைத்தார்.
"பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே.... ஆண்டாள் யாரு?. மாணிக்கவாசகர் யாரு?.... ஆண்டாள் பிராட்டி பக்கத்துல ஆதி சைவர் மாணிக்க வாசகர் இருக்கலாமா?.... இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா?.... அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?....."
- மன்னார்குடி வாழ் சில கண்களின் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.
"இதுக்குதான் இவ்ளோ நேரம் இழுத்தேளா?.... இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ.... சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல.... இப்ப இது அரசாங்கம் நடத்துறா..... அவாள்ட்ட போய் கேளும்....." என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன். தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.
மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால். இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு....
சைவ- வைணவ, பிராமணர்- பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும்... சூத்திரர்கள் பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையை கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.
ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.  ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?....
"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே..."என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால். பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப் படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத் திருக் கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால்கூட.... அனுஷ் டானங்கள் கறைபட்டு விடும். அதனால்..... அந்த விக்ர கங்களில் இருந்து பகவான் 'பட்'டென ஓடிப் போய் விடுவார்.
அதனால்.... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்.... விக்ரகம் வெறுங் கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே அவர்களை கோயி லுக்குள் விடாதே..... என்கிறது ஆஹமம்.
ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்?.
அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்க்ஷணம் அதாவது கும்பாபிஷேகம் அதாவது குடமுழுக்கு.... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம். ஆகம உத்தரவு இருந்தாலும் ஆலய நுழைவு போராட்டங்கள் சூடு பிடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ஒருதடவை மகாபெரியவர் என்னை அழைத்தார். சில நிமிடங்களில் அழுதே விட்டார்..... துறவி அழலாமா?.....
துறவி அழலாமா?...  அனைத்தையும் துறந்த சங்கராச்சாரி யாரின் கண்களில் வழிந்த கண்ணீர் என் கண்களையும் உறுத்தியது. என்ன செய்வதென்று தெரி யாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆறுதலும், ஆசியும் சொல்லவேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்.....? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்பு நீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.
பின்.... அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். 'கஷ்டமாயிருக்கு'... என்றபடியே மௌனமானார். அவர் அழுவதற்கு காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.
அது.... ஸ்ரீரங்கத்து சம்பவம்.
ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று... தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.
அப்படித்தான், ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும்.... ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.
காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக் கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.
அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண் டிருக்கும்போதே... இந்த ஆலய நுழைவு போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.
நாமெல்லாம் போகலாம். கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடலாம் - என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.
ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து... 'அபிஷ்டூ.... அவாமேல நம் கைபடாம  வெரட்டணும்டா....' என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத் துரைத்தார். கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஓர் முடிவெடுக்கப்பட்டது.
(நிறைவு)

- இந்துமதம் எங்கே போகிறது?
குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.

                    ----------------------- ’விடுதலை’ 13-01-2018

11.1.18

ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா? கொக்கோகமா?

ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா? கொக்கோகமா?



கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி'யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் - அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.
Andal was herself a Devadasi who lived and died in srirangam temple
ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.
இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல - அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட  Indian Movement some aspects of dissent, protest and reform  நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?
1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?
திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘ஊருக்கு இளைத்தவர்தானா இந்தப் பிள்ளையார் கோவில் ஆண்டி?'
இதில் மிக முக்கியமான நோக்கத்தக்க கருத்துண்டு. ஆண்டாள் தேவதாசிஎன்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்கவேண்டும்?
இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே - தேவர்களுக்குத் தாசி என்று.
தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!
சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடுவதா? தேவர்களுக்குத் தாசியாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?
அன்று சட்டசபையில் நடந்தது என்ன?
திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச் சார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்கவேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்' என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்துவிடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்' தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆசையையும் ஊட்டுவதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத் திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசீயப் பத்திரிகைகளும், ‘தேசீய வீரர்'களும் அனு கூலமாயிருப்பார்களா என்பது இவர்களுடன் யோக்கி யர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு', 10.2.1929)
தேவதாசிக்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார்குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.
‘‘தேவதாசியாக இருப்பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண் ணியத்தை அனுபவித்தது போதும் - போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் - எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை'' என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத்தி னாரே டாக்டர் முத்துலட்சுமி! வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விடவில் லையா?
சத்தியமூர்த்தி அய்யர்வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பிகளுக்குத் தெரியாதோ!
ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.
பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!
இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.
ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.
மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்' இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி கவிப்பேரரசு எழுதியது கண்டு இவுர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப்படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவதாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டினால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக' இருக்கும் அல்லவா!
இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:
‘‘ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.
தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறைவ னான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள். இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.
ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தி லும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.
ஓர் ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து  அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னாள் சிறிதுநேரம் நின்றே மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப்படும்!''
இவ்வளவுப் பிரமாதமாக இந்து மதக் கண் ணோட்டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவதாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீய ராகட்டும், இந்துத்துவா பேர்வழிகளாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?
திராவிடர் கழகத் தலைவர், ‘‘ஆண்டாள் என்ற பாத் திரமே கற்பனையானது'' என்று ராஜாஜி சொன்னதை எடுத்துக் கூறியுள்ளாரே!
கவிஞர் வைரமுத்துவை காயும் கூட்டம் ராஜாஜியைக் கண்டிக்கத் தயார்தானா?
சொல்லப்போனால், ராஜாஜி கடைந்தெடுத்த வைணவர் ஆயிற்றே - ஆண்டாள்மீது அவருக்கு இல்லாத அக்கறையா இந்த அம்பிகளுக்கு?
ஆண்டாளை ஆவர்த்தனம் செய்யும் அட அய்யன்மார்களே, அய்யங்கார்மார்களே, பெண்ணான ஆண்டாள் பாடிய பாடலின் தரமென்ன? விரக தாபமெடுத்த ஒரு பெண்ணின் காமக் கூச்சலாக இல்லையா?
2009 ஆம் ஆண்டில் இராகவன் என்ற பார்ப்பனர், ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி (வெளியீடு கிழக்குப் பதிப்பகம்) என்று நூல் எழுதி வெளிவந்ததே - அப்பொழுதெல்லாம் இந்த அம்பிகள் எங்கே போனார்களாம்?
(ஆண்டாளின் காமக் குரோதப் பாடல்கள் பெட்டி செய்தி காண்க).
கவிப்பேரரசு எழுதியதோடு, பேசியதோடு விட்டி ருந்தால் அந்த அளவோடு முடிந்திருக்கும். பார்ப்பனர் கள் தேவையில்லாமல் சீண்டப் போய் அஸ்தி வாரத்தையெல்லாம் தோண்டக்கூடிய ஒரு நிலையை யல்லவா ஏற்படுத்தி விட்டார்கள்.
பார்ப்பான் படித்தவனே தவிர அறிவாளியல்ல என்று அண்ணல் அம்பேத்கர் காரணமில்லாமலா சொல்லுவார்?
பார்ப்பானுக்கு ஏது முன்புத்தி?
மற்றொரு கேள்விக்குத் தமிழர் தலைவர் வெகுநேர்த்தியாகப் பதில் சொல்லியுள்ளார்.
மதங்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை என்பதற்கு எண்ணாயிரம் சமணர்களை, சைவர்கள் கழுவேற்றிக் கொன்றதை எடுத்துக் கூறியிருக்கிறார்.
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக்கப் பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வினுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!
ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி
ஆஃப் சயின்ஸ்  என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘The Hindu', 20.10.1996).
கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.
ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்கு வமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே - அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்றும், மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர்களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவையும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்' என்று அம்பிகள் அலறுவார்கள் - அய்யோ பரிதாபம்!
ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படுவோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும்,  வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத்துள்ளீர்களே!
அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடுகிறீர்களே - நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?
குறிப்பு: வைரமுத்து அவர்களைக் கடித்துக் குதறும் அய்யன்மார்கள், அந்த ஆய்வுரைக்கு ஏற்பாடு செய்த - அந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்பற்றி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? உரசாதது ஏன்? ஏன்? அதுதான் அவாளுக்கே உரிய முழு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘இனப்பற்று!'

கொக்கோகம் தோற்றோடும் பாடலுக்குச் சொந்தக்காரர் ஆண்டாள்!
ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் உள்ளபடி....
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!
ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!
(கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!)
காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!
எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! விரகதாபம் எடுத்த ஒரு பெண்ணின் காமப் பீறிடல்கள்தானே இவை?
கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!
இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லு வதோ!


‘ஆண்டாள்' கதை பொய் - 
ஆச்சாரியார் கூறுகிறார்!

வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றிப் புகழப் படுபவரும், ‘சூடிக் கொடுத்த நாச்சியார்' என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே ‘பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப்பெறும் பாடல் களுக்கு உரிமை உடைய வர் என்று கூறப்படுபவருமான ‘ஆண்டாள்' என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச் சாரியார் கூறி இருக்கிறார்.
"ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண் டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று ‘‘திரிவேணி'' என்னும் ஆங்கில மாதப் பத் திரிகை யில் 1946ஆம் ஆண்டு செப் டம்பர் இதழில் ராச கோபா லாச்சாரியார் எழுதி யுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைணவர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர் கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள்வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?
          ------------ மின்சாரம்   அவர்கள் 11-1-2018 ’’விடுதலை’’ யில் எழுதிய கட்டுரை