Search This Blog

28.2.15

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன?


நிலம் கையகப்படுத்தல் அல்ல - சுருட்டல்!


நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்து கிறார்கள்? வழிமுறைகள் என்ன?


இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப் பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையகப்படுத் துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.


சட்டம் பற்றிய முன்னுரை:


பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகப் படுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.


சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:


1. முதல் அறிக்கை: நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தும் முன், அவ்வாறு கையகப்படுத்துவதற்கு தனக் குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க் கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.

அ. அரசிதழ் ஆணை

ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.

இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.

இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.


2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:


அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.


நிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகப்படுத்துவது, கையகப் படுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவிக்கலாம்.


இந்தக் கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சிய ருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத் தகைய ஆலோசனைகளுக்கு மதிப்பளிக் காவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச் சையாக முடிவெடுத்ததாக உயர்நீதிமன்றத் தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதைத் தவிர்க்கலாம்.


3. கையகப்படுத்தும் முடிவை அறிவித்தல்:


கையகப்படுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்


அ. அரசிதழ் ஆணை


ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.


இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகப்படுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகப்படுத்தபடும் நோக்கம் ஆகிய வற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:


கையகப்படுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை தன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தைப் பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித் தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்


5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:


சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகப்படுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.


தீர்வுக்கான வழிமுறைகள்:

எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை சட்டபிரிவு 6: கையகப்படுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்குப் பரிந்துரை
சட்டபிரிவு 28 இழப்பீட்டை மறு மதிப்பீடு செய்தல்

யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?


மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையா விட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆட்சியரைக் கோரலாம்.


வழக்கை எவ்வாறு பதிவு செய்வது?


சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பார். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை. இழப்பீட்டை அதிக ரித்தோ, அளவீடு மற்றும் பாகப்படுத்துதல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம். எனினும் இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.


அடுத்த கட்ட நடவடிக்கைகள்:


இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.


அவசரச்சட்டத்தில் உள்ள பாதகமான திருத்தங்களில் சில
  • பாஜக கொண்டுவரும் புதிய சட்டத்தில் இழப்பீடு தொடர்பான எந்த ஒரு தெளிவான விளக்கமும் இல்லை.
  • கிராமசபை, பஞ்சாயத்து உறுப்பினர் களின் சம்மதம் வேண்டும் என்ற விதி எடுக்கப்பட்டுள்ளது.
  • விளைநிலங்களை எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தலாம். அதிகாரிகளிடம் மாத்திரம் இதற்கான அனுமதி பெற்றால் போதும்.
  • நிலம் கையகப்படுத்தும் போது பொதுப்பாதையாக இருந்தாலும் அதைத் தடைசெய்து மாற்றுப்பாதை ஏற்படுத்தவேண்டும்.  றீ    மாநில அரசிடம் நேரடி அனுமதி பெறத் தேவையில்லை.
  • விவசாயி ஒருவரின் அனுமதியின்றி அவரது நிலத்தை கையப்படுத் தலாம் அதற்கான இழப் பிட்டைக் கொடுத்தால் போதும்.  நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமானால் 70 சதவித விவசாயிகளின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்ற அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் இடம் பெற்ற சரத்து இப்போது நீக்கப் பட்டுள்ளது.
அரசு விரும்பினால் யாருடைய நிலத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்படியே தூக்கிக் கொடுக்கலாம்.

நீதிமன்றம் செல்லுவதற்கும் அரசின் ஒப்புதல் அவசியம்.


விவசாய நிலங்களாக இருந்தாலும் கவலையில்லை. ஏற்கெனவே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்பட்டுப் பணம் சம்பாதிக்கப்பட்டது. இனி மேல் வயல்வெளிகளில் எல்லாம் கான்கிரீட் கட்டடங்கள் சும்மா தூள் பறக்கும்.
இத்தொழிற்சாலைகள் கக்கும் விஷ வாயுவைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். இந்தியா விவசாய நாடு என்பது எல்லாம் பழங்கதை, இந்துத்து வாவில்தான் விவசாயம் பாவத் தொழில் ஆயிற்றே!


மோடி குஜராதத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது? குஜராத் மகுவாபகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது.


அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி எடுத்து சோப்புத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்காக உத்தர விட்டவர்தான் முதல் அமைச்சர் மோடி.


பூர்வீகமாக வாழ்ந்த 30 ஆயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் பிஜேபிக்காரர்கள்கூட உள்ளூர் மக்களோடு சேர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.1400 கோடியில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் தனி முதலாளி உருவாக்க இருந்த தொழிற்சாலைக்காக அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்ட கொடுமையை என் சொல்ல!


சவுராட்டிரா வாங்கனர் மாவட்டத்தில் 40 ஹெக்டர்  நிலம் சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்ற விற்பன்னரும் இதே மோடிதான். உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்றனர் என்பது வேறு சேதி!


கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பிஜேபியின் தலைவராக அப்பொழுது இருந்த வெங்கையாநாயுடு பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் விற்றார் என்று பிஜேபி சட்டமன்ற உறுப்பினரே ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டி அளித்ததுண்டு (ஃப்ரண்ட் லைன் 20.5.2011).


மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் தொடங்க இருந்த நானோ கார்களை (ஒரு லட்சம் ரூபாயில்) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கிட நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் வெகு மக்கள் வீங்கு தோள் பூரித்து வெகுண்டெழுந்தனர் (இதற்குக் கம்யூ னிஸ்ட் ஆட்சி பலத்த விலையைக் கொடுக்க நேர்ந்தது)


அங்கிருந்து வெளியேறிய டாட்டாவை சிகப்புக் கம்பளம் விரித்து, பூர்ண கும்பம் கொடுத்து  கூழைக் கும்பிடு போட்டு குஜராத்தில் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை அள்ளிக் கொடுத்த வள்ளல் (?) மோடி தானே!


1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து எந்திரங்களைக் கொண்டு வந்த போக்கு வரத்து செலவான 700 கோடிகளையும் மோடி அரசே ஏற்றது.


கடனாக அளிக்கப்பட்ட தொகையோ ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் கடனை செலுத்தலாம். வட்டி எவ்வளவு தெரியுமா? 0.1% உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் 85 விழுக்காடு என்ற நிபந் தனையும் நீக்கப்பட்டது.


அதானி குழுமத்திற்கு முந்திரா துறைமுகம் கட்டுவதற்காக (2005-2007) மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்ததே! ஆனால் அந்த நிலம் அந்தக் காரணத் துக்காகப் பயன்படுத்தப்பட்டதா? 98.60 லட்சம் சதுர மீட்டர் மட்டுமே பயன் படுத்தப்பட்டது.


சதுர மீட்டர் 32 ரூபாய் விலையில் வாங்கிய அதானி குழுமம் மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன விலைக்கு விற்றுச் சுருட்டியது தெரியுமா? சதுர மீட்டர் ரூ.400 முதல் ரூ.737 வரை மற்ற நிறுவனங்களுக்கு விற்று பெரிய ஏப்ப மிட்டது. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம்!


இதனை எதிர்த்து டில்லி அறிவியல் மய்யத்தின் தலைவர் சுனில் நாராயண் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றை அளித்தார் (18.4.2013) முந்திரா துறைமுகத் திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச் சூழல் சான்றினை உடனே ரத்து செய்யுமாறு வலியுறுத்தினாரே!


மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகிறார். தற்போது நமக்குப் பொரு ளாதார வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் போன்ற விதிகளின் காரணமாக தொழில் தொடங்க பல்வேறு தடைகள் இருந்து வந்தன. அந்தத் தடைகளை இப்பொழுது நீக்கியுள்ளோம் என்று கூறினாரே!


இவற்றை எல்லாம் அறிந்தால் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப் புதல்வர் என்பதை எளிதில் அறியலாமே!


எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணிப்பு (சர்வே) ஒன்றில் இந்தியாவில் உள்ள 100 நிறுவனங்களிடம், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்வியை வைத்தபோது கலந்து கொண்ட கார்ப்ரேட் நிறுவனங்களில் 74 சதவீதம் கார்ப்பரேட்டர்கள் மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர்.


இதில் பிர்லா, டாட்டா, அம்பானி, மிட்டல், அடானி, தாப்பர் போன்றோர் அடங்குவர். ராகுல் உட்பட மற்றவர்களுக்கு 26 சதம் பேர் ஆதரவு தந்தனர். (தீக்கதிர் 29.10.2013 பக்.4)


ஆதரவு தர மாட்டார்களா பிரபுக்கள்? மோடி அளவுக்கு முதலாளித்துவத்திற்கு முத்தம் கொடுத்து ஆராதிக்கும் ஒருவரை எங்குப் போய்த் தேட முடியும்?
குடியரசு நாள் விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் இடம் பெற்றிருந்த செக்குலர், சோஷலிஸ்ட் என்ற சொற்களை விலக்கி ஏன் விளம்பரம் கொடுத்தார்கள் என்பது இப்பொழுது புரிகிறதா?


செக்குலர் என்பதை நீக்கியதன் மூலம் இது மதச் சார்பற்ற அரசு அல்ல - இந்துத்துவா ஆட்சி என்பதைக் காட்டிக் கொண்டனர். சோசலிஸ்ட் என்பதை நீக்கியதன் மூலம் இது முதலாளிமார்கள் கார்ப்பரேட்டர்களின் ஆட்சி என்று விளக்கவே; இப்பொழுது புரிகிறதா அந்த விலக்கலின் மர்மம்?


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி யாருடைய விமானத்தில் இந்தியா முழுமையும் சுற்றித் திரிந்தார்? அடானி குழுமத்தின் விமானத்தில்தானே சுற்றித் திரிந்தார்? எல்லா வகைகளிலும் கார்ப்பரேட்டர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி நன்றிக் கடன்பட்டுள்ளார்.
ஏழைகளாவது, பாழைகளாவது, விவ சாயிகளாவது...இது என்ன இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது - தெரியும் சேதி!
 
----------------------------கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 28-02-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/96983.html#ixzz3T2Lk6Hwh

27.2.15

ஆர்.எஸ்.எஸில் அரசு ஊழியர்கள் உறுப்பினராகலாம் என்பது சாதாரணமானதுதானா?


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளும் விவாதத்திற்குரிய கருத்துகளும் இருப்பதால் அந்த அமைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் நேரடி உறுப்பினர்களாக இருக்ககூடாது. 1999- ஆம் ஆண்டு சத்தீஸ்கர் அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தது.   ஆனால், பாஜக அரசு சத்திஸ்கரில் பதவி ஏற்றதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாக ரமன் சிங் தலைமையில் ஆன அரசு விவகாரங்களில் தலையிட்டு வந்தது. கடந்த ஆண்டு நடந்த நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்தித்து. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில்    பல்வேறு மாற்றங் களைக் கொண்டு  வர ஆரம்பித்துள்ளது. முக்கியமாக பாஜக உறுப்பினர் சேர்க்கையில் அரசு யந்திரங்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் எல்லா கூட்டங்களிலும் பங்கேற்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.   இது கட்சிரீதியாக பார்க்கப்பட்ட நிலையில்,  மாநிலத்தில் தலைமைச் செயலாளர் ஆர்.மிஸ்ரா  அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.


அதில் அரசு அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையலாம் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையும் பட்சத்தில் அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க சிறப்பு அனுமதிவழங்கப்படும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி அனைத்து அரசு ஊழியர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கட்டாயமாக சேரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசு நடத்தும் பல்வேறு விழாக்களில் முக்கியபங்கு வகித்து வரும் நிலையில், அந்த அமைப்பில் உறுப்பினராக ஆகி விட்டால் சிக்கல்கள் ஏற்படும் என்ற நிலையில் அரசு ஊழியர்கள் விருப்பமில்லாத பட்சத்திலும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அட்டையை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதே நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்றே தெரிகிறது. (குஜராத் அரசும் தயாராகி விட்டது)


குஜராத் மாநிலத்தில் மோடி முதல் அமைச்சராவதற்கு முன்பு முதல் அமைச்சராகவிருந்த கேசுபாய் படேல் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரலாம் என்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் (2001). ஆர்.எஸ்.எஸ். ஒரு சமுதாய இயக்கம்தான் அதில் அரசு ஊழியர்கள் உறுப்பினராக சேரலாம் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் குஜராத் அரசின் ஆணையை வழிமொழிகின்ற வகையில் கருத்துத் தெரிவித்தார். அப்பொழுது அது ஒரு பிரச்சினைப் புயலை உருவாக்கியது. அதன் பின்னர் அந்த ஆணை பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.

இப்பொழுது மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் வீண் வேலையில் சத்தீஸ்கர் மாநில அரசு (பிஜேபி) ஈடுபட்டுள்ளது.


ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி; எந்தக் காரணத்துக்காக அது தடை செய்யப்பட்டது என்பது நாடு அறிந்த ஒன்று. 

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பின்னணி என்பது சாதாரணமானதா? 

பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பகிரங்கமாக அடித்து நொறுக்கினார்களே அதைத் தான் மறக்க முடியுமா? உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலை கவிழ்ந்து நிற்கும் அவலத்தை அல்லவா அது ஏற்படுத்தியது.


நாட்டில் நடக்கும் பல்வேறு மதக் கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணமாக இருந்தது என்பதை பல்வேறு ஆணையங்களும், ஆவணங்களும் நிரூபிக்கவில்லையா?


மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் சச்சரவுகளையும் கலவரங்களையும் மூட்டி விட்டு குளிர் காயும் கேவலமான அணுகுமுறைகளையும், திட்டங்களையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ்., இத்தகைய ஓர் அமைப்பில் அரசு ஊழியர்கள் உறுப்பினராகலாம் என்பது சாதாரணமானதுதானா?


ஆர்.எஸ்.எஸ். ஷாகா (பயிற்சி)களில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது? பெண்கள் உட்பட வன்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லையா? ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப் படுவதை மறுக்க முடியுமா?


அங்கு சுற்றி இங்கு சுற்றி இப்பொழுது அரசு அலுவலகங் களுக்குள்ளேயே அன்றாடம் மதச் சர்ச்சைகளையும், கலவரங்களையும் அரங்கேற்றிட அரசு நிலையிலேயே அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது என்றால் அதன் விளைவு எங்கே போய் முடியும்? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?


ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படுகின்ற ஞான கங்கையில் (ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீலீ) என்ன கூறுகிறார்?


இந்தியா என்பதுஒரே நாடு, ஒரே கலாச்சாரம் - ஒரே மொழி சமஸ்கிருதம் என்று தானே கூறுகிறார் இந்தியா இந்துக்களின் நாடு, மற்ற மதக்காரர்கள் இங்கு வாழ வேண்டுமானால் அவர்கள் இந்துக்களாக தங்களை அறிவிக்க வேண்டும்; எந்த வித சலுகைகளையும் எதிர் நோக்கக் கூடாது. குடிமக்கள் உரிமையுமின்றிக்கூட வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே! இவை செயல்பாட்டுக்கு வந்தால் சிறுபான்மை மக்கள் இந்தியாவில் ஒரே ஒரு நிமிடம் வாழ முடியுமா? இந்தப் பிற்போக்குக் கொள்கையுடைய - மற்ற மதங்களைக் கிஞ்சிற்றும் மதிக்க மறுக்கிற ஒர் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்ந்து கொள்ளலாமா?


அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸின் கிளைக் கழகமாக, பாசறையாக, பிரச்சாரக் கூடமாக மாறுவதற்கு அரசே முன்வந்து ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறது என்று தானே அர்த்தம்.


வரலாற்று ஆய்வுக் கழகங்களில் பொறுப்பாளர்களாகவும், மாநில ஆளுநர்களாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏற்கெ னவே நியமிக்கப்பட்டுள்ளனர். இனி, அய்.ஏ.எஸ். அதிகாரி களாக, அய்.பி.எஸ். அதிகாரிகளாக, மாவட்ட நீதிபதிகளாக ஆர்.எஸ்.எஸ். காரர்களாகத் தட்டிப் பார்த்துத் தேர்வு செய்து நியமனம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளின் கார்களில் ஆர்.எஸ்.எஸ். ஸ்வஸ்திக் கொடிதான் பறக்கும். ஆர்.எஸ்.எஸின் கொள்கைகள் அப்பட்டமாகப் பாடத் திட்டங்களில் இடம் பெறும்; காந்தியார் படுகொலை செய்யப்பட்டது சரியே நியாயம்தான் என்று கற்பிக்கப்படும்.


காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே அவதாரப் புருசன் என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்களே வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டனர்; கோட்சேக்குச் சிலைகள் வைக்கவும் முந்தி நிற்கின்றன. இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எசுக்கு அரசு ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்வதற்கே கடுமையாக இருக்கிறது. குடியரசு விழா விளம்பரத்தில் மதச் சார்பின்மை என்பதையும், சோசலிஸ்ட் என்பதையும் நீக்கி விளம்பரம் செய்தார்கள். இந்த இரண்டின் அடிப்படை எதிரி அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அரசமைப்புச் சட்டத்தை உயிரோடு கொல்லும் ஓர் அமைப்பு. அதிகாரப் பூர்வமான ஆயுதத்தை எடுத்துப் பறப்படப் போகிறது - உஷார்! உஷார்!!


மதச் சார்பற்ற சக்திகளுக்கு அதிக வேலை காத்திருக்கிறது. தயார்தானா?

                      ----------------------"விடுதலை” தலையங்கம் 27-02-2015

26.2.15

பெரியாரின் மொழி நடை

பெரியாரின் மொழி நடை
தந்தை பெரியார் அவர்கள் 1926 இல் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயரில் ஒரு சமுதாய சீர்திருத்த இயக் கத்தைத் தோற்றுவித்தார்.

ஜாதி மதமென்ற கொடுமை ஒழி வதும் கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமுதாயத்திற்கு நன்மை யானது என்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருது கின்றேனோ அந்த வேலையைச் செய் கிறேன் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கான காரணத்தை முன் வைத்தார்.

இவ்வியக்கம் திராவிடர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிடர் கழக மாக இயங்கியது, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தந்தை பெரியார் பொது மக்களி டையே தமது கருத்துகளைப் பிரச்சாரம் செய்ய மக்கள் பேசும் பேச்சு மொழியைக் கையாண்டார். தன் வாழ்நாள் முழுவ தும் தமிழரின் முன்னேற்றத்திற்குப் பாடு பட்ட பெரியார், 95 வயது வரை தமிழக மெங்கும் சூறாவளியெனச் சுற்றிவந்து, புரட்சிச் சிந்தனைகளைப் பேராறு களாகப் பாய்ச்சி வந்தார்.

சிந்தனையாள ராகவும், சாதனையாளராகவும், பண் பாளராகவும், சமத்துவச் சுடரொளி யாகவும், பகுத்தறிவுப் பகலவனாகவும் தன்மான இயக்கத் தந்தையாகவும் திகழ்ந்தார்.

பெரியாரின் பேச்சிலும் எழுத்திலும் எளிமை இருக்கும். ஆணித்தரமாக தமது வாதங்களை எடுத்துரைப்பதோடு, அவற்றினை அவ்வாறு எழுதவும் செய்தார். பழமொழிகளும் உவமானங் களும் பொருத்தமுடையனவாக இருக் கும். நவசக்தி ஆசிரியரான திரு.வி.க. அவர்கள் பெரியாரின் பேச்சு பற்றிய கருத்தை இங்குக் கூறுகிறார்.


சிறீமான் ராமசாமி நாயக்கர் பெரிய நூற்புலமை உடையரல்லர். ஆனால் பெரிய நூற்புலவர் அவர்போல பேச மாட்டார். நாயக்கர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுங்கூட்டத்தில் காற்றும் மழையும் கலந்து வீசுவது போல், நான்கு மணி நேரம் அய்ந்து மணிநேரம் பேசு வார்... மலையினின்றும் அருவி பெருக் கெடுத்து ஓடுவதுபோல், சிறீநாயக்கர் வாயினின்றும் சொற்கள் பெருக் கெடுத்தோடும்.
இவரது பேச்சுத்திறனைப் பற்றி ஆனந்த விகடனில் கல்கி எழுதுகிறார்.
சாதாரணமாக இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வட நாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்த வராவார். ஆனார், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்கு மேல் கேட்க முடியாது...
எவ்வளவுதான் நீட்டினாலும் ராமசாமியாரின் பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் ராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

தந்தை பெரியாரின் பேச்சில் பழ மொழிகளும் உவமானங்களும் நிறைய காணப்படும்.
இதோ சான்றுகள்

தோட்டத்தில் பகுதி கிணறு,

தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதுபோல்

வௌவால் வீட்டிற்கு உறவு முறையார் வந்தால், ஆளுக்கொரு கிளையில்தானே தொங்கவேண்டும்,

காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி விழும்,

பட்டுச்சேலையை இரவல் கொடுத்து விட்டு மணையைத் தூக்கிக் கொண்டே திரிவதா?

பெரியார் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் பற்றிக் கவலை இல்லை. கிணறு, வயிர், ஆஹி, சூஹி, ஆருதல் போன்ற பிழைகள் இருக்கும். பேச்சுத்தமிழில் தான் எழுதுவார். பிழைகள் நிறைந் திருப்பினும் படிப்போரை வசீகரிக்கும் தன்மை இவர் எழுத்துக்கு உண்டு. இவரது வாக்கியங்கள் நீண்டனவாக இருக்கும்.
இவருடைய எழுத்தில் மொழி வளம் இல்லாவிட்டாலும் பொருள் வளம் உண்டு. பெரியாருடைய எழுத்தி லிருந்து இவரது கருத்துக்கு மாறான பொருள் கொள்ள முடியாது.

அதற்காகவே தான் மற்றபடி, அதுவும் அல்லாமல், அதனோடுங்கூட, என்றுதான் சொல்லுகிறோம், போன்ற தொடர்களை மிகுதியாகப் பயன்படுத் துவார். எந்தச் சிறுகருத்தையும் மிகவும் அழுத்தமான முறையில் சுருக்கென்று தைக்குமாறு வெளிப்படையாக விளங்கக்கூடிய நடையில் எழுதுவதில் இவர் ஒரு நிகரற்ற தனி எழுத்தாளர்.
உரை யாடுவது போலவே எழுதுவதிலும் வல்லவர். அய்ந்துக்கு இரண்டு பழு தில்லை, வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம், போன்ற தலைப்பிட்டு புனைப்பெயரில் எழுதுவார். இவரது நடையில் தமது கருத்துக்களைத் தெளிவாக வெளியிடுகின்ற தன்மையைக் காணலாம்:


நீ மனிதன். பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத்தறிவுக்கே முதலிடம் கொடு.

கடவுளை மற மனிதனை நினை. பிறப்பால் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை. ஆணும், பெண்ணும் சமம். மனைவி மலிவான வேலைக்காரியல்ல, வெறும் விளையாட் டுப் பொம்மையல்ல, நகை மாட்டியல்ல, வாழ்க்கைத் துணை. உயிருள்ள, உரிமை யுள்ள வாழ்க்கைத் துணை. எனவே இருவரும் தோழமையோடு வாழுங்கள்.

ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத் தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப் பட்டுக்கொண்டு வருகின்றன. பெண் களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவ தாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால், ஆடு, கோழி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்கா வது முதலாளிகளால் தொழிலாளி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப் பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண் களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது.

அந்த ஆண்மை  உலகில் உள்ள வரையிலும் பெண் மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டுமொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி, சிவபெருமான் பேசிய மொழி என்பதற்காகவோ, அகத்தியரால் உண்டாக்கப்பட்ட மொழி என்பதற் காகவோ எனக்கு அதில் பற்றில்லை.

வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று, மூடப்பக்தியேயாகும். குணத்திற்காகவும் அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய் விடுவேன்.

அது போலவே எனது மொழி என்பதானது எனது இலட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்கு பயனளிக் காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். ஆதலால் விரும்புவ தற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பயன் காரணம் என்பதை உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இந்த நாட்டு மக்களுக்குச் சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடி யதும் சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும் மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக்கூடி யதும் ஆகும் என்பது எனது அபிப் பிராயம்.

மற்ற இந்திய மொழிகளை விட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால் தமிழுக்குக் கேடு உண்டாக்கும் எனச் சந்தேகப்படத் தக்க வேறு எந்த மொழியும் விரும்பத் தாகாததேயாகும்.

மேடைப்பேச்சாளராகவும், கட்டுரை யாளராகவும் மட்டும் இல்லாமல் தந்தை பெரியார் பன்முக ஆற்றலுடையவ ராகவும் விளங்கினார். நிறைய நூல் களுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். அதுபோழ்து அவரது திறனாய்வுத் திறன் வெளிப்படும். ஒத்தகருத்துள்ள அறிஞர்களின் புத்தகங்களுக்கு முன் னுரை எழுதி, அந்நூலின் அவசியத் தையும் கூறுவார். தமிழ் மேடைப் பேச்சுக்கு உயிரூட்டியவர்கள் வரிசையில் டாக்டர் வரதராஜூலு நாயுடு, அறிஞர் அண்ணா - தந்தை பெரியாருக்குத் தனியிடம் உண்டு.

பெரியாரைப் பின்பற்றி குத்தூசி குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரி சாமி, எம்.ஆர்.இராதா போன்றோர் பேச்சாளர் ஆனார்கள். அவரின் தாக்கத்தால் தம் உரைநடையைச் செம்மையாக்கிக் கொண்டவர்கள் பலர். 

நெ.து.சுந்தரவடிவேலு,  கி.வீரமணி முதலானோர் பெரியாரின் அடிச்சுவட் டில் எழுதினவர்களே. திரு.வி.க., முத்தமிழ்க்காவலர், குன்றக்குடி அடிகளார் இவர்களது நட்பு இருந் தாலும், அவர்தம் உரைநடையின் தாக்கம் பெரியாரிடத்தில் காணுதல் அரிது.
                            --------------------------பட்டுக்கோட்டை தமிழ் அன்பன்”விடுதலை” ஞாயிறுமலர் 21-02-2015
Read more: http://viduthalai.in/page2/96578.html#ixzz3SOzufdzt

25.2.15

இந்து வெறியர்களின் ஆட்சியில் இந்தியா இன்னும் என்னென்ன விலையைக் கொடுக்க வேண்டியிருக்குமோ!

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அநாகரிகப் பேச்சு! 


ஆர்.எஸ்.எசுக்கும், எங்களுக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை; அது வேறு; நாங்கள் வேறு என்று ஒரு காலகட்டத்தில் பி.ஜே.பி. பிரமுகர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். இப்பொழுதெல்லாம் அவர்கள் அவ்வாறு சொல்லுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில்கூட ஆர்.எஸ்.எசுக்குப் பச்சையாக வக்காலத்து வாங்கிப் பேசி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் என்று சொல்லுவதில் பெருமைப்படுகிறோம் என்று சொல்லவும் செய்கின்றனர்.


அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் முதல் தலைவர்கள் வரை பேசி வருகின்றவை பி.ஜே.பி.க்காரர் களைத் திக்கு முக்காடச் செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தமது சொந்த ஊரான பரத்பூரில் (ராஜஸ்தான்) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களுக்கே உரித்தான இந்துத்துவா வெறியோடு நஞ்சைக் கக்கியுள்ளார்.

நமதுநாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல்வச் செழிப்பும், அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின்படி கட்டுப்பாட்டோடு வேலை களைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பைச் சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது.


ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி மத மாற்றத்தை ஆங்கிலே யர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் மத மாற்றத் திற்கு உதவிட வெளிநாட்டினர் இங்கு வந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மத மாற்றத்தைச் செயல்படுத்தினர்.


இந்த வரிசையில் மதர் செரசா மிகவும் புத்திசாலித் தனமாக சேவை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார்.  எங்களைப் போன்றவர் களுக்குத்தான் மதர் தெரசாவின் உண்மையான நட வடிக்கை என்னவென்று தெரியும். மக்கள் மதர் தெரசா வின் உண்மையான மத மாற்ற செயலைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் செய்த மத மாற்றச் செயல் பாடுகள் வெளிவராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர்.


அவர் உண்மையிலேயே சேவை செய்யவேண்டுமென் றால், உலகில் வேறு நாடுகளே இல்லையா? இந்தியா மாத்திரம் ஏன் அவர்களின் கண்களுக்குப்பட்டது? அவர் களின் நோக்கமே இந்து மதத்தின் மாண்புகளைச் சிதைக்கவேண்டும். மக்களை மதம் மாற்றி இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பொரிந்து தள்ளியுள்ளார்.


இதற்கு பி.ஜே.பி. தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? 

(தமிழ்நாட்டுக்கு பி.ஜே.பி.யின் பொறுப்பாள ராக இருக்கக்கூடிய முரளிதரராவ் மீண்டும் பழைய குரலில் பேச ஆரம்பித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு பி.ஜே.பி.யைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். அடடே, இவர்களின் இரட்டை வேடத்துக்கும், இரட்டை நாக்குக்கும் எல்லையே இல்லையா?)


ஏதோ இப்பொழுதுதான் இவர்கள் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைக்கவேண்டாம்; இவர்களின் புத்தியே மத நஞ்சில் ஊறித் திளைத்த ஒன்றாயிற்றே!


அமர்த்தியாசென், மதர் தெரசா ஆகியோருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது - கிறிஸ்துவ சதி என்று சொன்னவர் யார் தெரியுமா? விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால்தான் அப்படிக் கூறினார்.

அதோடு விட்டுவிட்டார்களா? இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அமர்த்தியா சென் கூறுவது - கிறிஸ்தவர்களின் கல்விப் பணியை நாட்டில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன்தான் என்று ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் எழுதியது.


உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கல்வி யைக் கொடுக்காதே என்று சொன்னது இந்து மதம்; கல்வியைக் கொடு என்று சொன்னது கிறித்தவம். ஆங் கிலேயர்கள் இந்தியா வரவில்லை என்றால், கல்வியும், மருத்துவமும் இங்கு வேர் விட்டு இருக்குமா? என்பது அறிவார்ந்ததும், யதார்த்தமானதுமான கேள்வியாகும்.


1999 ஜனவரி 22 இல் ஒரிசா மாநிலம் மனோகர்பூர் கிராமத்தில் என்ன நடந்தது? தொழுநோயாளிகளுக்காகக் குடும்பத்தோடு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் அவர்களையும், அவர் களின் அருமைச் செல்வங்கள் பிலிப்ஸ், திமோத்தி ஆகியோரை ஒரு நள்ளிரவில் கொளுத்திக் கொன்ற கூட்டம் எது? சங் பரிவாரைச் சேர்ந்த பஜ்ரங் தள் அமைப் பைச் சேர்ந்த தாராசிங் தலைமையிலான கும்பல்தானே!


தொழுநோய் என்றால் கர்மப் பலன் என்று கதை கட்டிய இந்துத்துவக் கும்பல், தொழுநோயாளிகள் மத்தியில் தொண்டு செய்து வந்த ஸ்டெயின் பாதிரியாரையும், அவரின் இரண்டு மகன்களையும் படுகொலை செய்தது என்றால், மதர் தெரசாவை அவர் மரணத்திற்குப் பிறகும் இப்பொழுது கொச்சைப்படுத்துகிறது!


கிறித்தவர்கள் விழாவில் கலந்துகொண்டு அனைத்து மதத்திற்கும் இந்தியாவில் சம உரிமை உண்டு என்று கொட்டி முழங்கிய பிரதமர் நரேந்திரமோடி ஆர்.எஸ்.எஸ். தலைவரின் மதர் தெரசா குறித்த கொச்சைத்தனமான விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் வாயிலிருந்து வரும் சமாதானம் என்ன?


இந்த இந்து வெறியர்களின் ஆட்சியில் இந்தியா இன்னும் என்னென்ன விலையைக் கொடுக்கவேண்டி யிருக்குமோ!

                                ------------------------”விடுதலை” தலையங்கம் 25-02-2015

24.2.15

மதவாதம்பற்றி ஒபாமா

மதவாதம்பற்றி ஒபாமா 


மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமானவர்களாவர்; மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல்களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேரவேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் (19.2.2015) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு  எதிரான நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தியுள் ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலி யுறுத்தவில்லை, மனித நேயத்தைத்தான் வலியுறுத்துகிறது. ஆனால், சிலர் மதத்தின் பெயரால் மக்களைத் துன்புறுத் துகின்றனர். கொலை செய்கின்றனர். அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர்.


ஆகையால் நமது நடவடிக்கை மதத்தின் மரபுகளைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நடவடிக் கையில் இறங்குபவர்களை ஒடுக்கவதாக இருக்க வேண்டும். சில தீவிரவாத இயக்கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குகின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளை ஞர்களை இவர்கள் மூளைச்சலவை செய்கிறார்கள். இவர் களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.


மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர்களை நல்வழியில் திருப்பவேண்டும். மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்டகால வரலாற்றை உடையது, ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய பரிணாமத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் அனைவரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக்கோட்பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக் கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறிவியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர்.  அவர்கள் முன்வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.


ஏனெனில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்த வர்கள் அல்ல; அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல்களைச் செய் பவர்கள்  தீவிரவாதச் செயல்களைச் செய்யும் இவர்கள் ஒரு மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். தீவிர வாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர்.  இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாத குழுக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதே தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகையிலும் பிரதிநிதித்துவம் செய்ய வில்லை.


அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத்தியக்காரர்களே! கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொல்பவர்கள் இந்துக்களா னாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத்தவர்கள் என எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது.


பயங்கரவாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமான வர்களாவர். தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ். சீர்குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக் கப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர். இது மன்னிக்க முடியாத கொடூரம் அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைபடுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.


மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதிரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாத செயலுக்குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத்துழைப்பு இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது - என்று அமெரிக்க அதிபர் பேசியது வரவேற்கத்தக்கது.


மதத்தைப்பற்றி பொதுவான கருத்துக்களை அவர் ஒருபுறம் கூறியிருந்தாலும், அதுகுறித்து பிரதிவாதங்கள் இப்பொழுது முக்கியமல்ல. மாறாக மதத்தால் நாட்டு மக்கள் எந்த அளவுக்குப் பெரும் துன்பத்திற்கு இலக்காக்கப் படுகிறார்கள் என்ற அதிபரின் கவலை கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆக வேண்டும்.


இந்தியாவிற்கு அவர் வந்த போதும் சரி, இந்தியாவின் பயணத்தை முடித்து அவர் அமெரிக்கா சென்ற பிறகும் சரி - இந்தியாவில் நடைபெற்று வரும் இந்துத்துவா வெறித் தாக்குதலை மனதிற் கொண்டு சொன்ன கருத்துக்கள் மிக முக்கியமானவை என்பதில் அய்யமில்லை.


இந்து மதத்தைப் பொறுத்தவரை அது பிறவியிலேயே பேதம் கற்பிக்கக் கூடியதாகும். அடக்குமுறைக்கு ஆளாக் கப்பட்டவர்கள் உரிமைக் குரல் கொடுத்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அடக்கப்பட வேண்டும்; அதற்காக உயர் ஜாதிக்காரர்கள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும் என்று வன்முறையை மதத்தின் கருவிலேயே வைத்துள்ள மதம் இந்து மதமாகும்.


எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றினர் என்றால் தெரிந்து கொள்ளலாமே! இந்திய அளவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்து வெறியர்கள் வாலாட்ட முடியாது என்பதற்குக் காரணம் இங்கு தோன்றிய தலைவர் பெரியாரும், அவர்கள் கண்ட இயக்கமுமே! இந்தியாவில் அனலைக் கக்கிக் கொண்டு இருக்கும் இந்த வெறியை நீர்த்துப் போகச் செய்யும் தத்துவம் தந்தை பெரியாரியலாக இருக்கிறது - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியலாகவே இருக்கிறது.


இவற்றை இந்தியா முழுமையும் எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு மதச் சார்பற்ற சக்தி களுக்குக் கண்டிப்பாகவே இருக்கிறது.


அமெரிக்க அதிபர் பொதுவாகப் பேசி இருந்தாலும் இந்தக் கால கட்டத்தில் அய்.எஸ்.அய்.எஸ். கொடூரக்காரர் களையும் இந்தியாவில் காவிப் பயங்கரவாத சக்திகளையும் மனதிற் கொண்டேதான் பேசினார் என்பதில் அய்யமில்லை.

                  ------------------------"விடுதலை” தலையங்கம் 24-02-2015

23.2.15

ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்

திராவிடர் என்ற உணர்வு வந்திராவிட்டால் ஆரியம் ஆட்சி புரியாதா?
கிருட்டினகிரி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, பிப். 20- திராவிடர் என்ற உணர்வு வந்திரா விட்டால் ஆரியம் ஆட்சி புரியாதா? என்று கேள்வி எழுப் பினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

இரண்டாவது வாய்ப்பு இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு....

மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும்கூட, மிக எழிலோடும், எழுச்சியோடும், சிறப்போடும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு, இந்த கிருஷ்ணகிரி மாநகரில், பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கி, நடைபெறக்கூடிய இந்த அற்புதமான திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 2000 மாநாடுகளை தமிழ்நாடு முழுக்க வருகின்ற ஓராண்டுக்குள் முடிக்கவேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் முடிவெடுத் தோம். அந்த அடிப்படையில், நேற்று முன்னாள் சென்னை யில் முதலாவது மாநாடு; இன்றைக்கு இரண்டாவது வாய்ப்பு இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குக் கிடைத்தது பெரு மையாகும். நாளைக்கு மூன்றாவது மாநாடு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு அந்த வாய்ப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட  எழுச்சி மிகுந்த இந்த மாநாட்டினுடைய தலைவர் மானமிகு தலைமைச் செயற்குழு உறுப்பினர், பெருமதிப்பிற்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் அய்யா திருப்பதி அவர்களே, வரவேற்புரையாற்றி யுள்ள மானமிகு மாவட்டத் தலைவர் தியாகராஜன் அவர்களே, இந்த மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்பான சொற்பொழிவை ஆற்றி அமர்ந்துள்ள கழகச் செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்களே, கழகக் கொடியை ஏற்றி வைத்து அடுத்து விரைவில் இந்த கிருஷ்ணகிரி மாநகரில், ஏற்கெனவே கார்னேஷன் திடலுக்குப் பக்கத்தில் அவர்கள் அளித்த அந்த இடத்தில், கழகத்தின் சார்பாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக, நூலகம், படிப்பகக் கட்டடம் விரைவில் இன்னும் சில மாதங்களில், வருகின்ற 2015 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்ற வகையில், அதற்காக இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ள அருமைத் தோழியர் பிரபா வதி அவர்களே, அதேபோன்று, நம்முடைய அய்யா மருத் துவர் அவர்களும், 50 ஆயிரம் ரூபாயை அறிவித்து, முதல் தவணையாக 5 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார்கள்.

2003-க்குப் பிறகு 2014 இல்!
ஆக, அப்படிப்பட்ட ஒரு நல்ல பணியைத் தொடங்கக் கூடிய இந்தக் காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி; ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்பு, 2003 என்று நினைவுபடுத்தினார்கள்; அதற்குப் பிறகு 2014 இல் தான் வட்டார மாநாடு மறுபடியும் இங்கே நடைபெறுகிறது என்று சொன்னாலும், எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய தைப்போல, இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான் என்று சொல்லக்கூடிய அளவில், புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, இந்த மாவட்டத்தினுடைய, மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய அருமைத் தோழர் மானமிகு இ.ஜி.சுகவனம் அவர்கள், பொறுப்பேற்றதும் முதலாவதாக பங்கேற்கக்கூடிய மேடையாக, இந்த மாநாட்டு மேடை அமைந்தது மிகவும் சிறப்பானது. அவருடைய பணியின் தொடக்கம், அந்தப் பொறுப்பின் முதல் பணி என்னவென்றால், திராவிடர் களுக்கு விழிப்பை ஏற்படுத்துவதுதான் என்பதை அறிவிக் கின்ற பணியாகவே அது தொடங்கியிருக்கிறது. ஏனென்றால், இந்த மாநாடு திராவிடர் விழிப்புணர்வு மாநாடாகும். திராவிடன் தூங்கியதினால்தான், இன்றைக்குப் பல அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, தூங்கிக் கொண்டிருக்கின்ற திராவிடர்களை, தமிழர்களைத் தட்டியெழுப்பவேண்டும் என்ற பணியை நாங்கள் செய்கின்றோம் என்று சொன்னால், அந்தப் பணியில், முதன் பணியாக, முதல் பங்காக என்னுடையதும் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஆற்றல்மிகு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர் அருமைச் சகோதரர் இ.ஜி.சுகவனம் அவர் களே.

உங்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி!
மாவட்டச் செயலாளர் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல, பனி பொழிந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி. இந்தப் பணியை நாங்கள் செய்வதற்கு, பனியாக இருந்தாலும், மழையாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், இடைவிடாது பொழிகின்ற பனியாக இருந் தாலும், எங்களுடைய பணி நிற்கக்கூடாது என்பதுதான், இந்த இனத்தினுடைய மிக முக்கியமாகும்.
எப்படி உடலில் இருதயத்தின் இயக்கம் நிற்கக்கூடாதே, அதுபோலத்தான், பெரியார் இயக்கத்தினுடைய செயல்பாடு என்பது தங்கு தடையில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும். இயங்கிக் கொண்டே இருப்பதினால்தான், இது இயக்கமாக இருக்கிறது. இதைப் புரியாமல், இங்கே இருக்கின்ற சில காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை, துணைத் தலைவர் அவர்கள் மிகுந்த வேதனையோடு, அதே நேரத்தில் நியாயமான கோபத்தோடு இங்கே தெரியப்படுத்தினார்கள்.
கருத்து மாறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும்கூட...

இதனைக் கேட்கும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களுடைய பணி என்பது, காவல்துறையின ருக்குப் பிரச்சினையில்லாமல், மக்கள் அமைதியாக இருக்கவேண்டும்; மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்; ஜாதிக் கலவரம், மதக் கலவரம் இவைகளில் ஈடுபடக் கூடாது. அனைத்து மக்களும் கைகோர்த்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லா மக்களும், அன்பு சகோதரர்கள் என்கிற உணர்வு படைத்தவர்களாக இருக்கவேண்டும். நாம் ஜாதி யால் பிரிந்திருக்கக்கூடாது; மதத்தால் பிளவுபட்டிருக்கக் கூடாது. கட்சிகளால் வேறுபட்டு இருக்கக்கூடாது. கருத்து மாறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும்கூட, சட்ட ரீதியாக ஜனநாயக முறையில் அவைகளை வெளிப் படுத்தவேண்டுமே தவிர, எவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொன்ன அறிவாசான் தலைவர் தந்தை பெரியாருடைய இயக்கம் இந்த இயக்கம்.

காக்கிகள் இருக்கின்ற இடத்தில், காவிகள் வந்து அமரக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்

தயவு செய்து காவல்துறை அதிகாரிகளே, அதுவும் பார்ப்பனரல்லாத அதிகாரிகளே, நீங்கள் போட்டிருக்கின்ற காக்கிச் சட்டை, பெரியார் அணிந்த கறுப்புச் சட்டையினு டைய உழைப்பினால், உங்களுக்கு ஏற்பட்டது. அதை மறந்துவிடாதீர்கள். திராவிடர் கழகம் பலமாக இருந்தால் தான், காக்கிகள் இருக்க முடியும்; இல்லையானால், காக்கிகள் இருக்கின்ற இடத்தில், காவிகள் வந்து அமரக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, எங்களுடைய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் சொன்னார்கள் அல்லவா, தெளி வான ஒரு நல்ல அறிவுரை; எச்சரிக்கை என்றுகூட நாங்கள் சொல்லமாட்டோம்; அதுபோன்ற சொற்களைக்கூட நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நல்ல அறிவுரை, தோழமையுள்ள ஒரு அறிவுரை, பொறுப்பான ஒரு சிறப்புரை, அவர்கள் சொன்னார்களே, அதனை நான் கழகத்தினுடைய தலைவன் என்கிற முறையில் மட்டுமல்ல, மக்களில் ஒருவனாக இருந்து, ஜனநாயக உரிமையினுடைய காவல் அரணாக இருக்கக்கூடிய இயக்கம், இந்த இயக்கம் என்கிற காரணத்தினாலே, நான் வழிமொழிகிறேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

தயவு செய்து நீங்கள், இந்தச் சில்லறைப் பணிகளில், விஷமங்களில் ஈடுபடுவீர்களேயானால், அடுத்து நீங்கள் எங்களை நீதிமன்றத்தில் சந்திக்கக்கூடிய அவசியம் ஏற்படும்; எங்களால் வீதிமன்றத்திற்கும் வர முடியும்; நீதிமன்றத்திற்கும் போக முடியும். இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களில், அதிகாரிகளுக்கு அபராதம் போடுகின்ற பழக்கம் அதிகமாக வருகின்றதென்பதையும் நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு. எனவேதான், தெளிவாகச் சொல்கிறோம், எங்கள் தோழர்களை ஏதோ ஓரிருவர் என்று நினைக்காதீர்கள். எண்ணிக்கை முக்கிய மல்ல. இந்த நாட்டில் எந்த அரசு அமைவது; அமைந்த அரசுகள் நீடிப்பதா? நிலைப்பதா? இவைகளையெல்லாம் நிர்ணயம் செய்யக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைப்பிற்குப் பெயர்தான் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகத்தை  ஏதோ சாதாரணமாக நீங்கள் எண்ணிவிடாதீர்கள். அதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையில், இதனை நாங்கள் மிகத் தெளிவாக உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே, இனிமேல் இப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதுவரை திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில், பொதுச்சொத்துக்கு நாசமுண்டா? பொது அமைதிக்குப் பங்கமுண்டா? அனுமதியில்லாமல், நாங்கள் திடீரென்று சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட வரலாறு உண்டா? கிடையவே கிடையாது.

ஆகவேதான், திராவிடர் கழகத்தை நீங்கள் சாதாரண மாக எண்ணிவிடாதீர்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது மாறி மாறி வரும். ஒரு கட்சியே ஆளுங்கட்சியாக இருக்கமாட்டார்கள்; ஒரு கட்சியே எதிர்க்கட்சி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல. ஆனால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களுக்கு யார் ஆளுகிறார்கள்; யார் எதிர்க் கட்சியாக இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்த மக்கள் கட்டுப்பாடோடு, ஒழுங்கோடு, உண்மையாக, நேர் மையாக, பாதுகாக்கப்பட்ட உரிமை உள்ள மக்களாக திரா விடர் சமுதாய மக்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

காரணம், இது பெரியார் இயக்கம். பெரியாருடைய இயக்கத்தில், தெளிவாக அய்யா சொன்ன அறிவுரை என்ன? ஏறத்தாழ நூறாண்டு காலம் வாழ்ந்த ஒரு தலைவர்; அதில் முக்கால் நூற்றாண்டு பொதுத் தொண்டுக்காகவே செலவழித்த ஒரு தலைவர். அப்படிப்பட்ட அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய பணி என்ன? என்று சொல்கின்ற நேரத்தில், திராவிடர் சமுதாயத் தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று, 95 வயதில், தனக்கு இயல்பாக சிறுநீர் பிரியவில்லை என்று சொன்ன நேரத்தில், அந்த சிறுநீர் பிரிவதற்காக, குழாயை அமைத்து, ஒரு பையை வைத்து - அதனைத் தூக்கிக்கொண்டு, இந்த மக்களுக்காக உழைத்தாரே, அவருடைய இயக்கம் இந்த இயக்கம். அந்தப் பணியினுடைய தொடர்ச்சிதான் திராவிடர் கழகம். எனவே, திராவிடர் கழகத்தை நீங்கள் துச்சமாகக் கருதலாம் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள். அதனை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைக்கும் இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாட்டில் உண்மைகளைச் சொல்லக்கூடியவர்கள் உண்டா? ஆறு மாதங்களுக்கு முன்பு, திராவிடர்களுக்கு விழிப்புணர்வுத் தேவை என்று, தேர்தல் நேரத்தில், தேர்தலை நாங்கள் வெறும் அரசியலாகப் பார்க்காமல், வெறும் வாக்குச் சேகரிக் கின்ற வாய்ப்பு, சிலர் வெற்றி பெறுவார்கள்; சிலர் தோல்வி யுறுவார்கள் என்று பார்க்காமல், நீங்கள் இதில் அலட்சிய மாக இருந்தால் என்னாகும்? உங்களுக்கு மயக்க பிஸ் கெட்டுகளைக் கொடுக்கிறார்கள். மயக்க மருந்தைகூட அல்ல; இனிப்பைத் தடவிக் கொடுப்பதைப்போல, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே இருந்த அரசுகள் செய்யத் தவறிய பல பிரச்சினைகளை யெல்லாம், அதிருப்தி அடைந்திருந்த மக்கள் மத்தியில், இப்படி ஒரு ஈர்ப்பைக் காட்டியவுடன், அதில் இளைஞர்கள் உள்பட பலர் ஏமாந்துவிடக்கூடாது; உள்ளே இருப்பது விஷம்; வெளியே தெரிவது இனிப்பு. ஆகவே, நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று தெளிவாகச் எடுத்துச் சொன்னோம்.
எங்களுடைய பார்வை அரசியல் பார்வை அல்ல!
ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை நண்பர்களே, மோடி வந்தால், ஏதோ பெரிய இந்த நாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று பலர் நினைத்தார்கள். உங்களிடத்தில் சொன்னார்கள்; ஆறு மாதத்திற்கு முன்பாக, தமிழ்நாட்டில் மோடி ஓடி, ஓடி பலரைப் பார்த்தார்; சினிமாத் துறைகளில் உள்ளவர்களையெல்லாம் பார்த்தார்; சினிமா நடிகர், நடிகைகளையெல்லாம் போய்ப் பார்த்தார்; வலிய, வலிய அவரே சென்று பார்த்தார். இன்னுங்கேட்டால், அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக்களுக்கே வாழ்த்துச் சொல்வதற்காக, பிரதம வேட்பாளராக இருக்கக்கூடிய ஒருவர் அங்கே சென்று பார்த்தார். காரணம் என்ன? தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத ஒரு காவிக் கட்சி; ஒரு ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி. சிலர் கேட்கலாம், என்னய்யா, நீங்கள்தான் அரசியலுக்குப் போகாதவர்களாயிற்றே! உங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை என்று கேட்லாம். எங்களுடைய பார்வை அரசியல் பார்வை அல்ல. மீண்டும் உறுதிப்படுத்திச் சொல்கிறோம். எங்களுடைய பார்வை, பொதுநலப் பார்வை; பொது அமைதிப் பார்வை. இந்த நாட்டில், ஜாதிக்கலவரமோ, மதக் கலவரமோ வேறு எந்தவிதமான கலவரமோ நடக்கக் கூடாது. மக்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அன்பால், பண்பால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம் இந்த இயக்கம். அந்த அடிப்படையில், நீங்கள் நினைத்துப் பாருங்கள்,

திராவிடர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை?
இவர்கள் வந்து இங்கே சொன்னவுடன், அரசியல் லாபத்திற்காக சிலரைத் தேடித் தேடி  அலைந்தார்கள். சில நண்பர்கள், பாவம் அவர்களுடைய கூட்டணிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இப்பொழுது நீங்கள் நினைத்துப் பாருங்கள், திராவிடர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை? திராவிடர் விழிப்புணர்வு மாநாடு இந்த மாநாடு இந்த மாநாட்டிற்கு ஏன் அந்தத் தலைப்பு இருக்கிறது? எனவே, தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை? ஆறு மாதத்திற்குமுன்பு தூங்கியவர்கள், இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் போய் சேர்ந்தவர்கள், இன்றைக்கு அவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சகோதரர் வைகோ, எங்களிட மிருந்து வேறுபட்டாலும், எங்களை விமர்சித்திருந்தாலும், நாங்கள் அவரை விமர்சித்திருந்தாலும், சகோதரர் என் றைக்கும் சகோதரர்தான். அதில் எந்தவிதமான மாறுபாடும் இருக்க முடியாது. சண்டை போடும் சகோதரர்களாகவும் இருப்பார்கள்; சமரசம் காணும் சகோதரர்களாகவும் இருப்பார்கள். எதைப் பொறுத்ததும் சகோதரத்தன்மை அல்ல; நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் சகோதரர் அல்ல என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மனைவி இல்லை என்று சொன்னால்கூட, விடுதலை கொடுப்பார்கள்; ஆனால், சகோதரர் இல்லை என்று யாரும் வழக்குப் போட முடியாது. இது ஒரு சாதாரண செய்தியாகும்.
அவர்களைப் பார்த்து, மற்றவர்கள் ஏமாறாதீர்கள் என்று சொல்கிறோம்
அதுபோலத்தான், இன்றைக்கு ஆறு மாதத்திற்குள் தெளிவு ஏற்பட்டு, மோடி அரசு மாதிரி, ஒரு மோசடி அரசு வேறு கிடையாது என்று அவர்தான் இப்பொழுது வேக மாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் விழித்துக் கொண்டார்; அவரைப் பின்பற்றி பல பேர் சென்றார்களே, அவர்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்கள் விழிக்க வைக்கப் பட்ட பாட்டை விட, மோடியும், காவியும், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் செய்கின்ற பணி இருக்கின்றதே, அவர்களே, இவர்களைத் தட்டி எழுப்பி விட்டார்கள். எனவே, நீங்கள் அதில் தெளிவாக இருங்கள்; அவர்களைப் பார்த்து, மற்றவர்கள் ஏமாறாதீர்கள் என்று சொல்கிறோம்.

நம்முடைய டாக்டர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்கள்; எங்களுடைய அன்பிற்குரியவர். அப்படிப்பட் டவர், நேற்று அற்புதமான, ஒரு மகத்தான உண்மையை வெளியிட்டிருக்கிறார். இதுவரையில், அவர் வெளியிடாத ஒரு உண்மையை வெளியிட்டு, நான்கூட அதனை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். செய்தியாளர்களி டமும் அதைப்பற்றி நான் காலையில் பேசினேன்.

பா.ஜ.க. என்ற ஒன்று இல்லை; இது டாக்டர் ராமதாஸ் வாக்குமூலம்!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்ற ஒன்று இல்லை. இது டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய வாக்குமூலம் நேற்று. என்ன அற்புதமான கண்டுபிடிப்பு இது. இல்லாத ஒன்றுடனா, இவ்வளவு நாள் கூட்டுச் சேர்ந்துகொண்டிருந்தோம் என்று இப்பொழுதுதான் உணருகிறார்கள், மகிழ்ச்சியே! நான் குற்றம் சொல்லமாட்டேன். நீங்கள் விழித்திருக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்கவேண்டி யது எங்களுடைய வேலை. எங்களுடைய வேலை நாளுக்கு நாள் எளிதாகக் கொண்டிருக்கிறதே தவிர, சிக்கலாகிக் கொண்டுவரவில்லை.

எனவேதான், இந்த இரண்டு பேரும் வெளியேறி விட்டார்கள்  என்றால், அடுத்தது யார் உங்களோடு இருப் பார்கள். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு புதுக்கணக்கு வருவது போலவும், திராவிடக் கட்சிகளை வீழ்த்தி விடுவோம் என்றெல்லாம் தோள் தட்டி, தொடை தட்டி, மார்தட்டி யெல்லாம் சொன்னார்கள். மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். மிஸ்டு காலில் ஒரு இயக்கத்திற்கு ஆள் சேர்த்தால், அந்த இயக்கத்திற்குப் பெயர் என்ன?

மிஸ்டு கால் கொடுத்து ஆள் சேர்க்கிறார்களாம்!
மிஸ்டு கால் கொடுத்து, இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதை இதுவரையில் நீங்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர் களா? திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள்; ஏன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள்; எங் களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், அது வேறு சங்கதி.  ம.தி.மு.க.,விற்கும் உறுப்பினர்களைச் சேர்க்கிறார் கள். காங்கிரசிற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக, மும்முரமாக இருக்கிறார்கள். காங்கிரசை விட்டு வெளியேறிய ஜி.கே. வாசன் அவர்கள் அவருடைய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கிறார். எல்லோரும் போய், ஆளைப் பார்த்து, கொள்கையைச் சொல்லி, அந்தக் கொள்கைக்கு அவர் உடன்பாடா என்று பார்த்துதான் ஒரு இயக்கத்தில் சேர்க்கக்கூடிய வழக்கமே தவிர, மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் ஓடிவருகிறோம் என்று சொல்கிற அளவிற்கு இருந்தால், இது என்ன பீட்சா விற்கின்ற வியாபாரமா?  வியாபாரத்திற்குத்தான் விளம்பரத்தில் போடுவார்கள், மிஸ்டு கால் கொடுங்கள் என்று.

ஆகவே, இவர்கள் வியாபாரம் செய்கிறார்களா, அர சியல் வியாபாரம் செய்கிறார்களா? அல்லது கொள்கை யைப் பரப்புகிறார்களா? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


122 அல்ல; தமிழ்நாட்டில் ஒரு 5 இடமாவது கிடைக்குமா?

இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டையே நாங்கள் பிடித்துவிடுவோம்; 122 எங்களுடைய இலக்கு என்றெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, நான் மிகவும் அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், இந்த 122 இல், 1, 2, 2, இந்த மூன்றையும் கூட்டினால், 5 இந்த 5 ஆவது உங்களுக்குக் கிடைக்குமா? என்று நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று மக்கள் கேட்கிறார்கள். நான் கேட்கவில்லை. யார் கேட்கிறார்கள்? உங்களோடு நேற்றுவரையில் இருந்து, இன்றைக்கு இருக்கிறார் என்று, இன்னமும் நீங்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற, டாக்டர் ராமதாஸ் கேட்கிறார்; என்னவென்று, பா.ஜ.க. என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் இல்லையே என்கிறார்.  பா.ஜ.க.வே இல்லாதபோது, ஒரு 5 இடமாவது கிடைக்குமா?

அதுதான் எங்களுடைய வாதம்.  உங்களுடைய சரக்கு என்ன வென்பது, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தெரிந்துவிட்டது.

இதுவரையில், வேகமாக மோடி வித்தைகள் காட்டினார்; இங்கேகூட மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்வில், வித்தைகளைக் காட்டினார்கள். இந்த வித்தைகள் எவ்வளவு நேரத்திற்கு சுவையாக இருக்கும்; கொஞ்ச நேரத்திற்கு சுவையாக இருக்கும். அது நீண்ட நேரத்திற்கு இருக்காது. அதுபோன்று, உங்களோடு யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்லலாம்.
தேமுதிக இன்னமும் எங்களோடு இருக்கிறதே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அவரே சொல்லிவிட்டார், என்னுடைய தலைமையை ஏற்றுக்கொண்டால்தான், கூட்டணி என்று. அவரைப் பொறுத்தவரையில், அவர் எப்பொழுது, என்ன முடிவெடுப்பார் என்பது அவருக்கே தெரியாது. அவருக்கே தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? நமக்கு எப்படி தெரியும்?  ஏனென்றால், திடீரென்று என்னுடைய கூட்டணி தெய்வத்தோடு என்று சொல்வார். தெய்வத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே எல்லோருக்கும் சிக்கல் உள்ளது.

ஆகவே, அந்த நிலையில், உங்களோடு இருந்த ஆறு மாதத்திற்கு முன்பாக ஏமாந்தவர்களே, இப்பொழுது ஏமாறத் தயாராக இல்லை என்று அறிவித்து, நாங்கள் விழித்துக் கொண்டோம், விழித்துக்கொண்டோம் என்று சொல்லக் கூடிய கட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால், இனிமேல் புதிதாக நாங்கள் ஏமாற்ற, மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொன்னால், எந்த அளவிற்கு வருவார்கள். ஏதோ சிலர் லாபம் கருதி வரக்கூடும். ஆனால், அடிப்படை அதுவல்ல நண்பர்களே, பத்தோடு பதினொன்று அல்ல, அந்த அரசியல் கட்சி. சில பேர் நம்முடைய நாட்டில்கூட, ஏதோ இவ்வளவு நாள்கள் இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்; இப்பொழுது புதிதாக அவர்களுக்குத்தான் ஓட்டளித்துப் பார்ப்போமே என்று அவர்கள் நினைத்தார்கள் என்று சொன்னால், அதைவிட பொறுப்பற்றப் போக்கு, நாட்டைப்பற்றிய அலட்சிய மனப்பான்மை வேறு இருக்க முடியாது.

இன்றைக்கு நாமெல்லாம் முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டிக்கொள்கிறோமே, தோளில் துண்டு போடு கிறோமே, வெள்ளையாக, டிப்டாப்பாக உடையணிகி றோமே, கோவணத்தைக்கூட தேடிக் கண்டுபிடிக்கவேண் டிய ஒரு சமுதாயமாக இருந்த, உழைப்பாளி சமுதாயமாக இருந்த நம்முடைய சமுதாயம், சேற்றில் கால் வைத்து அழுந்தி இருக்கக்கூடிய நம்முடைய சமுதாயம், பள்ளப் பயல், பறைப்பயல், சக்கிலி என்று கேவலப்படுத்தி, நம்முடைய சகோதரன், நம்முடைய உழைப்பாளியைப் பார்த்து கொச்சைப்படுத்திய ஒரு சமுதாயத்தை மாற்றி, நீங்களெல்லாம் மனிதர்கள், நமக்கென்று ஒரு வரலாறு உண்டு; அதுதான் திராவிட இனத்தினுடைய வரலாறு; அவர்கள்தான் திராவிடர்கள் என்று நம்மைத் தட்டியெழுப்பி, நம்முடைய தோளில் தொங்கச் செய்தாரே, அவர் தந்தை பெரியார் அல்லவா! அந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் அல்லவா! இந்த நாட்டில் திராவிடர் என்கிற உணர்வு வந்திருக்காவிட்டால், ஆரியம் ஆட்சி புரிந்திருக்காதா? ஆரியம் இருந்த காலத்தில் வந்தது என்ன? அதுதானே மனுதர்மம்.

நாங்கள் சொல்கின்ற ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமானது
இன்றைக்கும் சில பேர் சொல்கிறார்கள், ஆரியர் - திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.


பெரியாரும், அண்ணாவும் மிக அழகாகச் சொன்னார்கள். ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், நீண்ட நாள் களுக்கு முன்பாகவே, ஆரியரும், திராவிடரும் கலந்து விட்டார்கள்.

அவர்கள் கலந்துவிட்டார்கள் என்று நீ சொல்லித் தெரியவேண்டியதில்லையே! எல்லா திராவிடர்களுக்கும் தெரியும். இரண்டு பேரும் கலந்துவிட்டார்கள் என்பது.

எப்பொழுது கலந்தார்கள்; எங்கே கலந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. மனுதர்மத்திலேயே கலந்துவிட்டார்கள் என்று நீயே எழுதி வைத்திருக்கிறாய். சங்கர ஜாதி என்ற வார்த்தையை மனுதர்மத்தில் பயன்படுத்தியிருக்கிறாயே!
நாங்கள் சொல்கின்ற ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வ மானது. இங்கே நாங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்திருக் கிறோம் என்று சொன்னால், அது வியாபாரத்திற்காக அல்ல!

இந்த இயக்கம், இந்த இயக்கத்தினுடைய சொற்பொழி வாளர்கள் பேசுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், அந்தக் கொள்கை என்பது முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வ மானது; சான்றுகளைக் கொண்ட உண்மைகள். உண்மை களைத் தவிர வேறு கிடையாது.
                                                   ----------------------------(தொடரும்) 20-02-2015
*************************************************************************************

மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா?
கிருட்டினகிரி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

சென்னை, பிப். 21- மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார் 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:

சாகும் தறுவாயில் யாரும் பொய் சொல்லமாட்டார்கள்
அய்யா ஒருமுறை சொன்னார், என்னைப் பார்த்து உண்மை இல்லாத விஷயத்தைச் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. காரணம், நான் பொய் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.


மரண வாக்குமூலம் கொடுக்கின்றவர்கள் யாரும் பொய் சொன்னதாக வரலாறு கிடையாது. மரண வாக்குமூலம் என்று சொன்னால், அதற்கு சட்ட ரீதியான வலிமை உண்டு.  ஏனென்றால், சாகும்பொழுது யாரும் பொய் சொல்ல மாட்டார்கள். அவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள், கடைசி கட்டத்தில் என்பதுதான் உண்மை. அதற்கு சட்டத்தில் இருக்கின்ற தனித்தன்மையான வலிமையாகும்.

அதைத்தான் அய்யா அவர்கள் சொன்னார், மரண வாக்குமூலம் மாதிரி நான் சொல்கிறேன். நாங்கள் ஏன் பொய் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அய்யா ஒன்றை சொன்னார்.

உண்மையைச் சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லை. நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன் என்று சொன்னார்.

ஆகவே, நினைத்துப் பாருங்கள், ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியில் சில பேர் ஈடுபடுவது. இன்னும் சில பேருக்குப் பதவி ஆசையை உண்டாக்கி, நாக்கில் தேனைத் தடவி, அவரவர்கள் தனித்தனி அமைப்பை உண்டாக்கிக் கொள்வோம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவது. இப்படிப்பட்டவர்களுக்காக நான் சொல்கிறேன், திராவிடர் விழிப்புணர்வு மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாட்டைப் போட்டிருக்கிறோம். திராவிடம் என்று சொன்னால், அதையெல்லாம் நாங்கள் வீழ்த்தி விடுவோம், திராவிடர் இயக்கம் எல்லாம் கீழே விழுந்து போய்விட்டது. திராவிடர் இயக்கம் இனிமேல் எழுந்து நிற்க முடியாது என்று சொல்கிறார்கள். சோர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

சோர்ந்துவிட்டதற்கு அடையாளமா, முன்பு 30 மாவட்டங்களாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்; இன்றைக்கு 65 மாவட்டங்களாக வந்திருக்கிறது என்று சொன்னால், வளர்ச்சியா? தளர்ச்சியா? அய்யய்யோ, அது இல்லை என்று சொன்னால், இவ்வளவு போட்டிகள் இல்லாமல் இருக்குமா? நல்ல வாய்ப்பாக, இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் வந்திருக்கிறார். அப்படி இருந்தால்கூட என்ன? எந்த அரசியல் கட்சியில் இல்லாமல் இருக்கு.

அத்வானி என்ன முழுக்க முழுக்க மோடியை ஆதரிக் கிறாரா? முரளிமனோகர் ஜோஷி என்று ஒருத்தர் இருந்தாரே, அவர் என்ன முழுக்க முழுக்க மோடியை ஆதரிக்கிறாரா? தேசிய அளவிலேயே அப்படி இருக்கிறது.

இங்கே மாநிலத்தில் ஏதாவது ஒன்று நடந்தால், அதைப் பெரிதுபடுத்துகிறார்கள். ஏனென்றால், பார்ப்பன ஆதிக்கக் கருவிகளாக ஊடகங்கள் இன்றைக்கு இருக்கின்றன. இன்றைக்கு இவ்வளவு பெரிய மாநாடு நடக்கிறது. அதிகமான அளவிற்கு, மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்துவது திராவிடர் கழகம். ஆனால், அதிகமான அளவிற்குப் பத்திரிகையில் இடம்பெறாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம்தான்.
ஏனென்றால், நாங்கள் பரபரப்பை ஊட்டுவதில்லை; நாங்கள் அங்க மச்ச அடையாளங்களைப்பற்றி விமர்சனம் செய் கிறவர்கள் அல்ல. நாங்கள் கருத்துகளைப் பேசக்கூடியவர்கள். எனவே, கருத்துகளைப் பேசினால், அது செய்தியாகாது இவர்களுக்கு.

அவர் இவரைத் தாக்கினார்; இவர் அவரைத் தாக்கினார் என்று சொன்னால்தான், சில பேருக்கு செய்தி.

பெரியாரைப் பார்க்காதவர்கள் இங்கே இருக்கிறீர்கள்; பெரியாரின் பேச்சைக் கேட்காதவர்கள் இங்கே இளைஞர்கள் இருக்கிறீர்கள். பெரியாரைத் தெரிந்துகொள்ளாதவர்கள் பலர் இங்கே இருக்கிறீர்கள். பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பெரியார் பாடுபட்டது அவருக்காகவா? நாங்கள் என்ன பதவிக்குப் போகக்கூடியவர்களா? எப்பொழுது எங்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடியவர்களா? அல்ல! தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எப்பொழுது நம்முடைய சூத்திரப் பட்டம், இழிவுப்பட்டம் நீங்கும் என்ற எதிர்பார்ப் பிற்காக, தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தற்கொலைப் பட்டாளம் இருக்கிறது என்றால், அதுதான் கருஞ்சட்டைப் பட்டாளம் என்கிற உணர்வோடு இருக்கக் கூடியவர்கள். எனவே, இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தந்தை பெரியார் சொல்கிறார்
தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்: நான், நம்மை திராவிடர் என்பதும், பின் சரித்திரக் காலத் தன்மை என்பதும் உங்களை நான் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கருதாதீர்கள்.  திராவிடர் - ஆரியர் என்று உடற்கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து, பிரித்துப் பேசுவதாகக் கருதா தீர்கள். ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

கறுப்புச் சட்டைக்காரர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா? என்று பாருங்கள்.

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட் சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக் கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது.

ஆரியம் - திராவிடம் தெரிந்துகொள்ளுங்கள்!
ஆரியம் என்றால் என்ன?

பூணூல் போடவேண்டும்; ஆரியம் என்றால் என்ன? பிறக்கும்பொழுதே ஒருவன் மேல்ஜாதி; பிறக்கும்பொழுதே இன்னொருவன் கீழ்ஜாதி; அவனுக்குக் கீழே தொடக்கூடாத ஜாதி; பார்க்கக்கூடாத ஜாதி; புழங்கக்கூடாத ஜாதி. இது ஆரியம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; எல்லாம் ஒன்றே; மனித குலம் ஒன்றே என்று சொல்வது திராவிடம்.


உங்களுக்கு விளங்குவதற்காக சொல்கிறேன்.

ஒருமுறை துக்ளக் ஏட்டிற்காக, நண்பர் சோ.ராமசாமி, பெரியார் திடலுக்கு வந்து என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியை ஆறு வாரத்திற்கு வெளியிட்டார்கள்.

அந்தப் பேட்டிக்காக என்னிடம் கேள்விகளைக் கேட்டார். அவர் பேசும்பொழுதே குயுக்தியாக பேசுவார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்; எழுதும்போதும் அப்படித்தான் எழுதுவார்.

அவர் என்னிடம் கேட்டார், ஏன் சார், நீங்கள் எதற்கு இன்னும் ஆரியம் - திராவிடம்; பார்ப்பனர் - பார்ப்பனரல்லா தார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, இப்பொழுது எல்லோரும்தான் மாறிவிட்டார்களே என்று கேட்டார்.

நான் உடனே, அப்படிங்களா, நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம் என்றேன்.

என்ன சார் நீங்க, வம்புக்கு வருகிறீர்களே! என்று கேட்டார்.

அடிப்பதற்காகவோ, சண்டை போடுவதற்காக சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். அவர்கள் மாறிவிட்டார்கள் என்று சொன்னால், உங்கள் முதுகில் ஏன் பூணூல் தொங்குகிறது? என்னுடைய முதுகு ஏன் வெறும் முதுகாக இருக்கிறது என்றேன்.

சார், எங்க அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகப் போட்டுக் கொண்டேன் என்று சொன்னார்.

சரி, உங்க அப்பா, அம்மா சொன்னார்கள்; என்னுடைய அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகவே நான் போடாமல் இருக்கிறேன்.
ஜாதித் தத்துவத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள்? அசல் மனுதர்ம சாஸ்திரம் இங்கே விற்கப்படுகிறது. அதில், பூணூல் போடுவதைக்கூட எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? நம்மாள் சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ஏங்க, நம்ம செட்டியார் போட்டிருக்கிறாரே, ரெட்டியார் போட்டிருக் கிறாரே, வன்னியர் போட்டிருக்கிறாரே என்று கேட்கிறார்கள். இவையெல்லாம்  சட்டபூர்வமாகவும் சரி, சாஸ்திரபூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இது கள்ள 100 ரூபாய் நோட்டு போல. கள்ள நோட்டுகளை எங்கேயாவது ஏற்றுக்கொள்வார்களா?

உங்கள் சங்கராச்சாரியாரை பூணூல் எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்கள்!
சோ முதுகில் போட்ட பூணூல் இருக்கிறது பாருங்கள், அதுதான் உயர்ஜாதி பூணூல்.

சோ, உடனே சொன்னார், சார் நீங்களும் போட்டுக் கொள்ளலாமே என்றார்.
உடனே நான், சோ அவர்களே, நான் போட்டால், அந்தப் பூணூலுக்கு மரியாதை கிடையாது என்பது தெரியும். உங்கள் சங்கராச்சாரியாரை பூணூல் எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்கள், எல்லோரும் போட்டுக் கொள்வதற்கு என்றேன். ஏற்கெனவே, ராமானுசர் எல்லோருக்கும் பூணூல் போட்டாரே, தாழ்த்தப் பட்டவர்களுக்கெல்லாம் ராமானுசர் பூணூல் போட்டு விட்டாரே, அவர்கள் எல்லாம் கறுப்பு அய்யர்களாக மாறி விட்டார்களா? இல்லையே! நூலுக்குப் பிடித்த கேடே தவிர, நூல் விலை உயர்ந்ததே தவிர, வேறொன்றும் இல்லை. நூல்தானே வீணாகப் போயிற்று. கொஞ்சம் பலமான நூலாக இருந்தாலும் கூட,  வேகமாக இழுத்தால், முதுகு அரிக்கும்பொழுது அவன் சொரிந்துகொள்ள முடியும்; இந்த நூலை இழுத்தாலே அறுந்து போய்விடுமே! அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா? இந்த நூல் படுத்துகிற பாட்டைப் பாருங்கள் என்றேன்.

அய்யய்யோ, இதற்குமேல் வேண்டாம் என்று சொன்னார்.

மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா?

நான் சொன்னேன், இதோ பாருங்கள், எல்லோரையும் பூணூல் போட்டுக்கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதை விட, நீங்கள் மூன்று பேர்; நாங்கள் 97 பேர். 97 பேர் நூலை வாங்கிப் போட்டால், நூல் விலை ஏறும். மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா? சொல்லுங்க  என்று கேட்டேன்.

வேண்டாங்க, சார், அடுத்த கேள்விக்குப் போகலாம் என்றார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், ஆரியம் - திராவிடம் இன்னும் இருக்கிறதா, இல்லையா என்று கேட்டால், இருக்கிறதா? இல்லையா? ராமகோபாலனும் இந்து முன்னணிதான்; அதிலொன்றும் சந்தேகமில்லை. இன்னொரு வர் பிரிந்து போனவர் அர்ஜுன் சம்பத் என்பவர். இரண்டு பேரையும் ஒரே மாதிரி பார்க்கிறார்களா? பா.ஜ.க. இயக்கத்திற்கு காரைக்குடியிலிருந்து ஒரு அய்யர், ராஜா அய்யர் என்பவர், தமிழகத்திற்கு பா.ஜ.க. தலைவராக வரவேண்டும் என்று நினைக்கிறார். தமிழிசை சவுந்திரராஜன் என்று நம் குடும்பத்துப் பெண்; நம் குடும்பம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், என்னைப் பார்த்தால், சிற்றப்பா, பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார், எங்கேயாவது சந்தித்தால். காரணம் என்னவென்றால், நம்முடைய குமரிஅனந்தன் அவர்களுடைய மகள் அவர். குமரிஅனந்தனும், நானும்  பல்கலைக் கழகத் தோழர்கள், பல ஆண்டுகாலமாக. அந்த தமிழிசை சவுந்திர பாண்டியன் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த அம்மையாரை தலைவராகப் போட்டிருக் கிறார்கள் என்றால், எதற்காக? மோடியைக் காட்டி பிற்படுத்தப்பட்டவர் என்று ஒரு காலகட்டத்தில் தேர்தல் நேரத்தில் மோடி வித்தை காட்டினார்கள் பாருங்கள், பிற்படுத்தப்பட்டவர் என்கிற முத்திரையை காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

ஏன் ராஜா அய்யரை தலைவராகப் போடவேண்டும் என்று மேலே முடிவு செய்தார்கள். ஆனால், ஏன் இந்த அம்மை யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே நடந்த ஆரிய - திராவிட போராட்டத்தினால்தான். இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இதை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். இது பெரியார் கண்ணாடிக்கு மட்டுமே தெரிகின்ற விஷயம். இதைப் புரிந்துகொள்ளவேண்டு மென்றால், பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் தெரியும். பெரியார் கண்ணாடி மட்டுமல்ல, அது நுண்ணாடி.


அண்ணாவின் கருத்து

ஆரியம் - திராவிடம்பற்றி அண்ணா அவர்களும் மிக அழகாக சொன்னார்; பெரியார் கருத்து என்னவோ, அதுதான் அண்ணாவின் கருத்தாகும்.
ஒரு இனம் தங்களை உயர்ந்தவர்கள் என்றும், தங்கள் நாகரிகமே சிறந்தது என்றும், தங்கள் மொழியே சிறப்புடையது என்றும் கூறிக்கொண்டு, மற்ற மக்களையும், அவர் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழிவாகப் பேசும் போக்கையும் நாம் கண்டிக்கிறோம், வெறுக்கிறோம். ஆரியராவது, திராவிடராவது ஒன்றுமில்லை. எல்லோரும் ஒன்றாகக் கலந்துவிட்டனர் என்று யார் யார் வாய் வேதாந்தம் பேசுகிறார்களோ, அவர்களே இன்றைக்குத் தங்களை ஆரியர்கள் என்றும், தங்கள் மொழியான சமஸ்கிருதம் கோவில்களிலும், பிற இடங்களிலும் முதலிடம் பெறவேண்டும் என்றும் கூறி வருவதோடு, திராவிடர்களையும், திராவிட மொழிகளையும் இழிவாகப் பேசி வருகின்றனர். ஆரியர்களில், படித்தவர், படிக்காதவர் யாராக இருந்தாலும், தங்களுடைய வேதம் நான்கென்றும், அது ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்றும் கூறுகின்றனரே அன்றி, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ, ஏனைய தமிழ் இலக்கியங்களையோ, தங்களுடைய நூல்களாக ஒப்புக்கொள்ளுவதே கிடையாது என்று திராவிட நாட்டில் எழுதியிருக்கிறார். அண்ணா அவர்கள் பல ஆண்டுகாலம் எழுதினார் பெரியார் கருத்தை.
இன்றைக்கு என்ன சூழ்நிலை? இன்றைக்குப் பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று, அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த அம்மையாராக இருக்கக் கூடிய திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் பேசுகிறார் என்றால், என்ன அர்த்தம்?

இன்னுங்கூட ஒருவரை விட்டு சொன்னார்கள்; பகவத் கீதையை தேசிய புனித நூல் என்று அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இங்கே உரையாற்றிய எங்களுடைய செயலவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்கள் ஒரு கேள்வி கேட்டாரே, இந்து மதத்திலேயே எல்லோரும் ஒப்புக்கொள் கின்ற நூலா பகவத் கீதை? முதலில் இந்து மதத்தில் உள்ள எல்லா பிரிவினரும் பகவத் கீதையை ஏற்றுக்கொள்கிறார்களா? சைவர்கள் இந்நூலை ஏற்றுக்கொள்கிறார்களா? மறைமலை யடிகள் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? கா.சு.பிள்ளை அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆகவே, கீதையின் மறுபக்கம் என்கிற நூலைப் படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஏன் பகவத் கீதையை வலியுறுத்துகிறான் என்றால், மறுபடியும் ஜாதியைக் கொண்டுவந்து நிலை நாட்டவேண்டும் என்று நினைக்கிறான். ஆரியத்தினுடைய உயிர்நிலை எங்கே இருக்கிறது என்றால், வருணாசிரம தருமத்தில் இருக்கிறது. அந்த வருணாசிரம தருமத்தைச் சொல்வதுதான், ஒரு பக்கத்தில் மனுதர்மம்; இன்னொரு பக்கத்தில் பகவத் கீதை.


மதுரையில் மாநாடு போட்டு தீர்மானம் நிறைவேற் றினார்கள்!

விசுவ இந்து  பரிசத் எல்லோரையும் மத மாற்றம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் பாருங்கள், அவர்கள் மதுரையில் மாநாடு போட்டு, நிறைவேற்றிய தீர்மானம் என்ன  தெரியுமா?

இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் நாட்டின் அரசியல் சட்டமாக எதை வைக்கவேண்டும் என்றால், மனுதர்மத்தைத்தான் வைக்கவேண்டும் என்று மதுரையில் தீர்மானம் நிறைவேற்றினார்களே!
ஆர்.எஸ்.எஸ்.சிற்கு யார் இதனை சொல்லிக் கொடுத்தது; இந்து மகாசபைத் தலைவர்களில் முதன்மையாக இருந்து, பெரிய தேசபக்தர் என்று வேஷம் போட்டு, மக்களிடம்  விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் பாலகங்காதர திலகர்.
நியாயமாக சுதந்திர இந்தியா வந்தால், மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அந்த மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் விட்ட பணி இன்றைக்கு தொடர்கிறது...

அம்பேத்கர் இதனை மறுத்தார்; அப்படி மறுத்தால் உங்களுக்கு இடமில்லை என்று சொன்னார்கள். அப்படி யானால், எனக்கு மந்திரி பதவி தேவையில்லை. எனக்கு மந்திரி பதவி முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம் என்று வெளியேறியவர் பாபாசாகேப்  அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் விட்ட பணி இன்றைக்கு நடந்துகொண்டிருக் கிறது மிகத் தெளிவாக.
பெண்களுக்குச் சொத்துரிமையா? இந்து மதத்தில் கிடையாது, கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள். இதனை யார் சொன்னது தெரியுமா? சாதாரண குப்பனோ, சுப்பனோ அல்ல. ஜனாதிபதி பதவியில் உட்கார்ந்திருந்த சனாதிவதி பாபு ராஜேந்திர பிரசாத் சொன்னார்.

-------------------------------------- தொடரும்21-02-2015
Read more: http://viduthalai.in/page-3/96634.html#ixzz3SNwR9DPB
 *******************************************************************************
கடவுள் இல்லை என்கிற எங்களால்
கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா?

கிருட்டினகிரி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில்
தமிழர் தலைவர் எழுப்பிய அறிவார்ந்த வினா
சென்னை, பிப். 22- கடவுள் இல்லை என்கிற எங்களால் கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு


காரணம் என்ன? மனுதர்ம சிந்தனை; ஆரியம், அந்த ஆரியம் எங்கெங்கே சென்றாலும், அவர்களுடைய காரியம் என்னவென்றால், தங்களுடைய தத்துவத்தை சொல்வதுதான் அவர்களுடைய அடிப்படையாகும். ஆகவே, அந்த அடிப் படையினுடைய அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்.
அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று.


அடுக்கு ஜாதி முறை என்று அதைத்தான் சொன்னார் கள். Graded inequality  மற்ற இடங்களில் நடந்த அநியாயத்தைவிட, இந்து மத வருணாசிரம தருமத்தில், ஏணிப் படிக்கட்டு மாதிரி.


நான்காவது ஜாதிக்குக் கீழே ஜாதிக்கு அப்பாற்பட்ட வர்கள், ஜாதி அற்றவர்கள் இதில் யார் வருகிறார்கள் என்றால், பஞ்சமர்கள்; அய்ந்தாவது ஜாதி. ஆறாவது ஜாதி என்று ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரியாத ஒன்று, அது அத்தனை ஜாதியிலும் இருக்கின்ற பெண்கள். உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்கள் ஆறாவது ஜாதியாக, கீழ்ஜாதியாகக் கொண்டு வந்தார்கள். எனவே தான், சூத்திரர்களுக்கு என்னென்ன அடிமையாக இருக் கின்ற வேலையோ, அவை அத்தனையையும் சேர்த்து செய்யவேண்டிய வேலை பெண்களுக்கு உண்டு.


மனுதர்மம் 415 ஆவது சுலோகம் என்ன சொல்கிறது.


சூத்திரன் என்றால் என்ன பொருள்?


சூத்திரன் ஏழு வகைப்படுவர்; 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒரு வனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறை, தலைமுறை யாக ஊழியம் செய்கிறவன்.
இதை பாராட்டவேண்டிய அளவிற்கு, நம்முடைய மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் துண்டறிக்கையாக அச்சடித்து அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.


ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்


மேற்கண்ட நிலை மீண்டும் வரவேண்டும் என்பதற் காகத் தான் ஆர்.எஸ்.எஸ். அதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வினுடைய இன்னொரு திட்டம். கொஞ்சம் ஏமாந்திருக்கிறார்களா, இல்லையா என்று விட்டு விட்டுப் பார்க்கிறார்கள். தூங்கியவன் தொடை யில் கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தின்மேல் ஏன் கோபம் என்றால், இவர்களைத் தத்துவ ரீதியாக எதிர்க்கின்ற இயக்கம், இந்தியாவிலே இயக்கம் இருக்கிறது என்றால், அரசியல் ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி, திராவிடர் இயக்கம்தான்.


இதற்கு நேர் எதிரானது; கருப்புக்கு நேர் எதிரானது வெள்ளை என்பதுபோல, இருட்டுக்கு நேர் எதிரானது வெளிச்சம் என்பதுபோல, ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்.


வள்ளுவர் எழுதியிருக்கிறாரே,


உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.


நம்மாள் சேற்றில் கால் வைக்காவிட்டால், இவன் சோற்றில் கை வைக்க முடியுமா?


ஆனால், பாருங்கள், மனுதர்மத்தில் எழுதுகிறான்:


பாவகரமான தொழில் உண்டு என்று சொன்னால், அது விவசாயம்; அதை செய்யவே கூடாது. அதிலும் பிராமணர் கள் ஏர் பிடிக்கவே கூடாது என்று. இன்றுவரையிலும் அதைக் கடைபிடிக்கிறார்கள். நம்மாள்களில் எத்தனையோ பேர் ஏர் பிடிக்கிறார்கள். அதில் ஒன்றும் தடையில்லை. எது ஆரியம்? எது திராவிடம்? இந்த ஆராய்ச்சியைப் பார்க்காதீர்கள். இதுதான் ஆரியம்; இதுதான் திராவிடம். அன்றைய நிலையைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக் கின்றான். இன்றைக்கும், டிராக்டர் வந்த காலத்தில்கூட, எங்கேயாவது அவன் டிராக்டர் கம்பெனியில் மேனேஜராக இருந்திருப்பானே தவிர, உழுவதற்கு வயலில் இறங்கி இருக்கிறானா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவே, இந்த சமுதாயத்தில் இது மீண்டும் தலைகீழாக உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையில், அதனை செய்வதற்காகத்தான் அந்தப் பணிகளைச் செய்கிறார்கள். இதைத்தான் கீதையும் சொல்கிறது.


மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது


அந்த பிரம்மா உண்டாக்கினார் என்றான். மும்மூர்த்தி கடவுள்களில். இதில், கிருஷ்ண அவதாரக் கடவுள். இதை யெல்லாம் ஆர்.எஸ்.எஸ். நம்பச் சொல்கிறார்கள்.


மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது. ரொம்ப வருஷத்திற்குப் பிறகுதான், கீதை என்ற ஒன்றை உண் டாக்கி, அதைக் கொண்டு போய் நடுவில் சொருகினார்கள். பகுத்தறிவோடு யோசனை செய்தால், பகுத்தறிவோடு யாரும் சிந்தித்துப் பார்த்தால், அது நிற்காது.


காரணம் என்னவென்றால், ஒரு சிறிய விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கிருஷ்ணன், சாரதியாக வந்து ரதம் ஓட்டுகிறார். எதிரே கவுரவர்களின் படை நிற்கிறது. பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக வருகிறார் கிருஷ்ணன் என்றுதான் கதை எழுதி வைத்திருக்கிறார்கள்.


எதிரே நிற்பவர்கள் எல்லோரும் சொந்தக்காரர்கள். அவர் களை எதிர்த்து சண்டை போடு என்று கிருஷ்ணன் சொல் கிறான். அர்ஜூனனுக்கு நியாயமான ஒரு சந்தேகம் இருக்கிறது. நம் சொந்தக்காரர்களை சாகடித்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து, ஆகவே, அதற்கு நான் தயாராக இல்லை என்கிறான்.


உடனே கிருஷ்ண பரமாத்மா என்ன செய்திருக்க வேண் டும்? இங்கே கலவரம் நடைபெறுகிறது என்றால், காவல்துறை என்ன செய்யவேண்டும்?

காவல்துறை கலவரத்தைத் தடுக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் காவல்துறை. இல்லை, இல்லை நீங்கள் நன்றாகக் கலவரம் செய்யுங்கள்; நாங்களும் உங்களுக்கு வசதி செய்து தருகிறோம். நீங்கள் ஏன் சோர்ந்து போய் இருக்கிறீர்கள், இதோ இருக்கிறது பெட்ரோல் பாம் என்று சொன்னால், அது காவல்துறையாக இருக்க முடியுமா?


சண்டைக்குப் போ, போ என்று சொல்வதற்கு ஒரு கடவுள் தேவையா?
அதுபோல, அர்ஜூனன் போர் செய்ய மாட்டேன் என் கிறான், ஆனால், சண்டைக்குப் போ, போ என்று சொல்வ தற்கு ஒரு கடவுள் தேவையா? உலகத்திலேயே நம் கட வுளைத் தவிர, இந்துக் கடவுளைத் தவிர சண்டைக்குப் போகச் சொன்ன கடவுள் வேறு எங்காவது இருக்கிறானா? இதைவிட, அராஜகம், இதைவிட பயங்கரவாதம் வேறு ஏதாவது உண்டா? போர் செய், எதிரே இருப்பவர்களை சாகடி என்று சொல்கிறார். அப்போது உபதேசம் சொல் கிறார்.


700 சுலோகம் சொன்னார் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், 745 சுலோகம் இருக்கிறது என்றும், எத்தனையோ கீதைகள் இருக்கிறது என்றும் திலகரே எழுதி வைத்திருக்கிறார்.


சரி, 700 சுலோகங்களை சமஸ்கிருத்தில் சொல்கிறார். எதிரே, எதிரிப் படைகள் நின்று கொண்டிருக்கின்றன. அது நட்புக் களம் அல்ல; போர்க்களம்; அந்தப் போர்க்களத்தில் படைகள் நின்று கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் அமைதியாக நிற்கிறார்களாம்; இன்னும் 700 சுலோகம் முடியவில்லை; 645 சுலோகம்தான் முடிந்திருக்கிறது என்று அமைதியாக நிற்பார்களா?  இது அறிவுக்கு ஏதாவது சம்பந்தம் உள்ள விஷயமா?  நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


அப்பொழுது என்ன டேப்ரிக்கார்டில் பதிவு செய்தார் களா? யாராவது ஷார்ட்டெண்டில் எழுதினார்களா, கிருஷ்ணன் சொல்லச் சொல்ல, பிறகு பின்னாளில் எப்படி புத்தகம் வந்தது? நம்பு என்று சொல்கிறார்கள்; வெள்ளைக் காரன் சொன்னான், புராணங்கள் எல்லாம் கற்பனை என்று.
அவதாரம் எடுத்தான் என்று சொல்கிறார்களே, கிருஷ்ணன் பத்து அவதாரம் எடுத்தான் என்று.


தேவர்கள் எல்லாம் சென்று, தேவர்கள் என்றால், ஆரியர்களுக்குச் சமம். அசுரர்கள் என்றால், திராவிடர்கள் என்கிற கற்பனை.


அசுரர்கள் எல்லாம் அக்கிரமம் செய்கிறார்கள். அவர்களை அடக்க முடியவில்லை. அவர்களை ஏதாவது செய் என்று சொன்னவுடன்,
கிருஷ்ணன் உடனே, நான் அவதாரம் எடுத்து வருகிறேன் என்று சொல்லி, பத்து அவதாரம் எடுத்தான். அய்ந்து அவதாரத்தை மிருகமாக எடுத்தான். மீதி அய்ந்து அவதாரம் மனித உருவமாக.


அசுரர்களை அழிக்கவேண்டும்; அதில் சத்திரியர்களே மிகத் திமிராக இருக்கிறார்கள். அவர்களையும் அடக்க வேண்டும் என்று சொல்லி, இரண்டு அவதாரத்தை எடுக்கிறார். இவையெல்லாம் மகாபாரதத்தில் எழுதியிருக் கிறது. அதைத்தான் நான் சொல்கிறேன்.


யாருக்காவது சந்தேகம் இருந்தால், காவல் துறையாக இருந்தாலும் சரி, யாராவது ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னாலும், தயவு செய்து, இந்தப் பேச்சுக்காக என்மீது வழக்குப் போடுங்கள்; என் பேச்சை பதிவு செய்துகொண்டு வழக்குப் போடுங்கள். நீதிமன்றத்தில் அதனை சந்திப்பதற்கு நமக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதற்காக நான் சொல் கிறேன்.
நீங்கள் கேட்பது, பாரதக் கதையில் இருக்கும் மிகப் புண்ணியமான ஒரு இடத்தை நான் சொல்லப் போகிறேன். சொல்கிற எனக்கும் புண்ணியம்; கேட்கின்ற உங்களுக்கும் புண்ணியமாகும். பாதியில் நிறுத்தினால், இரண்டு பேரும் நரகத்திற்குப் போய்விடுவோம்.  அவன் கதை சொல்லி வைத்திருக்கிறான். அதனாலே பாதியிலே நிறுத்த நான் தயாராக இல்லை. முழுவதும் சொல்லியாகவேண்டும்.


மகாவிஷ்ணு தடவிப் பார்க்கிறார், மார்பில் இருக்கின்ற இரண்டு மயிரைப் பிடுங்கி எறிகிறார். ஒன்று கறுப்பு மயிர்; இன்னொரு வெள்ளை மயிர். கறுப்பாக இருந்த மயிர் கிருஷ்ண அவதாரம்; வெள்ளை மயிர் பலராமன் அவ தாரம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருந்தால், பாரதத்தைப் பாருங்கள்;


இதை அப்படியே மறைமலையடிகள் தன்னுடைய புத்தகத்திலேயே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். மாணிக்கவாசகர் காலமும், வரலாறும் என்பதிலேயும் எடுத்து எழுதியிருக்கிறார்.


புராணங்கள் எல்லாம் நடந்தவையாம்!


ஆகவே, இப்பொழுது என்ன சொல்கிறார்கள், ஆர்.எஸ். எஸ்.காரரை சரித்திர ஆராய்ச்சி தலைவராகப் போட்டவுடன், அவர் சொல்கிறார்,
புராணத்தையெல்லாம் கற்பனை என்று நினைக் காதீர்கள்; அவையெல்லாம் நடந்தது என்று சொல்கிறார்.


சரி, இப்பொழுது இந்த விஷயம் நடந்தது என்று ஒப்புக்கொண்டால், கடவுளை எவ்வளவு டேமேஜ் செய்கிற விஷயம் இது.


ஏண்டா, கற்பனை என்று நாங்கள் சொன்னதை நீங்கள் நம்பினால், உன் கடவுளாவது காப்பாற்றப்படுகிறார்; இல்லை, நடந்தது என்று ஒப்புக்கொள் என்று நீ சொன்னால், இதைவிட கடவுளைக் கேவலப்படுத்துவது, கொச்சைப் படுத்துவது வேறு உண்டா?


அந்தக் கிருஷ்ணன் சொல்கிறார்,


சதுர்வர்ணம், மயாசிருஷ்டம்


நான்கு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன். நானே நினைத்தாலும்கூட அதனை மாற்ற முடியாது.


ஏன் ஜாதி நம் நாட்டில் நிலைத்து இருக்கிறது. ஜாதி இருந்தால், ஜாதி சண்டை வரும்; மதம் இருப்பதினால், மதச் சண்டை ஏற்படுகிறது.


அந்த மதவெறி, இந்த மதவெறி என்று உண்டா? அண்மையில் பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்திலிருந்த குழந்தை களைக் கொன்றிருக்கிறார்களே! மனிதனுக்கு மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து என்றால், மனிதனுக்கு மதம் பிடித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக்கின்ற நாட்டில், என் மதம் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதுதான் இந்துத்துவா!
என் மதம் இந்து மதம்; அதுவும் பெரும்பான்மை நாங்கள், அதனால், இந்துக்கள் நாங்கள்.


மோகன்பகவத் என்கிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், இந்தியாவில் உள்ள எல்லோரும் இந்துக்கள். ஆகவே, நாங்கள் இதனை செய்வோம் என்று.
இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும்தான் இந்துக் களாயிற்றே! பிறகு ஏன், இந்துராஜ்ஜியம் என்ற ஒன்றை உருவாக்கவேண்டும். இந்தியாவே இந்துராஜ்ஜியம் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே! ஏன், இந்தியாவை மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.


இதோ என் கையில் இருப்பதைப் பாருங்கள்:


எவ்வளவு பெரிய ஆபத்து வர இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், நண்பர்களே, புரிந்துகொள்ளுங்கள், இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய, ஞானகங்கை புத்தகமாகும். இது 1939 இல் கோல்வால்கர் எழுதியதாக சொல்லப்படுகின்ற புத்தகம்.


அந்தக் கோல்வால்கர் என்ன சொன்னார் என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று சொல்கிறார்.


அதனால்தான் இப்பொழுது கட்டாய மத மாற்றம்.  மத மாற்றம் நாங்கள் செய்வோம். எல்லோரையும் பிடிப்போம்; 2 லட்சம் ரூபாய் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்து மத மாற்றம் செய்கிறார்கள்.


மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் வந்தபொழுது கண்டித்த வர்கள், இன்றைக்கு மீண்டும் தாய் மதம் என்று சொல்கிறார்கள்; எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் ஏற்பவர்கள் அல்ல திராவிடர் கழகத்துக் காரர்கள். ஆனால், மனிதநேய நேய அடிப்படையில், நல்லெண்ணம் இருக்கவேண்டும்.


நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டுள்ளதா?


கடவுள் இல்லை என்கிற எங்களால் யாருக்காவது, எந்தக் கோவிலுக்காவது ஆபத்து உண்டா? யாராவது வழிபடுகின்ற இடத்திற்கு ஆபத்து உண்டா? ராமர் இங்கே பிறந்தார் என்று இவன்தான் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறான்; இன்னொருத்தன், இல்லை, இல்லை இங்கேதான் பாபர் மசூதி கட்டினார் என்று அவர் போகிறார், தடுக்கிறார். ரத்த ஆறு ஓடுகிறது.
நாங்கள்தான் சொல்கிறோம், ஏம்பா, யார் இடமாக இருந்தாலும் அமைதியாக இருங்கள் என்று சொல்வதற்கு எங்களைத் தவிர நாட்டில் நாதி உண்டா? நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டு இருக்கிறதா? கடவுள் சண்டை உண்டா? மதச் சண்டை உண்டா?


பள்ளிக்கூடம் கட்டு, எல்லோரும் வருவார்கள் என்று சொல்கிறோம்; ஒரு கோவில் கட்டினால், அந்த மதத்துக் காரர் மட்டும்தான் வருவார்; மசூதி கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார்; சர்ச் கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார். ஆனால், மருத்துவ மனை கட்டுங்கள், அதற்கு எல்லா மதத்துக்காரர்களும் வருவார்களே, அதில் யாரும் வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்.


ஆனால், பல்கலைக் கழகத்தில்கூட, இந்துப் பல்கலைக் கழகம் என்று ஆரம்பித்தவர்தான், அண்மையில் இது வரையில் நீங்கள் கேள்விப்படாத ஒரு பெயரை இரண்டு நாள்களுக்கு முன்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பண்டிட் மதன்மோகன் மாளவியா என்று.
மாளவியா என்றால், பல பேருக்குத் தெரியாது. தெரிய வேண்டிய பல பேரையே தெரியாது நமக்கு. மோடியே ஆறு மாதத்திற்கு முன்பு பல பேருக்குத் தெரியாதே! இப்பொழுதுதானே மோடியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த மதன்மோகன் மாளவியா என்ன செய்தார் தெரியுமா? இந்துப் பல்கலைக் கழகத்தை, இந்து மகாசபையை உருவாக்கினார். அதனுடைய விளைவு என்ன? ஆறு மாதத்திற்கு முன்பு நீங்கள் ஏமாந்ததின் விளைவு, என்ன அக்கிரமம் நடந்திருக்கிறது என்றால், காந்தி தேசப் பிதா, அண்ணல் காந்தியடிகள், அவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான்; ராம் ராம் என்று சொன்னவர்தான்.


ரகுபதி ராகவ ராஜாராம்!
பதீத பாவன சீதாராம்!
சீதாராம் ஜெய சீதாராம்!
பஜ து ப்யாரே சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சப்கோ சன்மதி தே பகவான்!
ரகுபதி ராகவ ராஜா ராம்!
பதீத பாவன சீதாராம்!


காந்தியார்மீது அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது?


இவ்வளவையும் பாடியவர்தான் காந்தியார்; அவர் ஒன்றும் நாத்திகர் அல்ல. அப்பேர்ப்பட்ட காந்திக்கு, கடைசியில், இந்த ஆரியத்தின் சூழ்ச்சி புரிந்தது; வகுப்புவாரி உரிமைபற்றி பேசியதும்; திராவிடர்களுடைய கோரிக்கை நியாயம் என்று சொல்லிவிட்டார் என்றவுடன், அவர் களுக்கு காந்தியார்மீது கோபம் வந்தது.


காந்தியார் கேட்டார், வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு; நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்; நீங்கள் ஏன் பிணத்தை அறுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஏன் டி-ஸ்கொயர் எடுத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று கேட்ட ஒரு மாதத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  நாதுராம் விநாயக கோட்சே என்ற மராத்திய பார்ப்பான்.


எவ்வளவு தைரியம் இருந்தால், இவ்வளவு நாள் வரையில் அந்த கோட்சேயைப்பற்றி பேசாதவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டில் போஸ்டர் அடித்து ஓட்டுகின்ற அளவிற்கு, இந்த ஆட்சிகளும், காவல் துறையும் எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. தயவு செய்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். காந்தியாருடைய நினைவு நாளான ஜனவரி 30; மதவெறி ஒழிப்பு நாள்! அதனால்தான் நாங்கள் இன்றைக்கு மிகத் தெளிவாக அறிவித்தோம். வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி மதவெறி ஒழிப்பு நாள் என்று காந்தியாருடைய நினைவு நாளை நாங்கள் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், ஒத்த கருத்துள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களையும், பேச்சாளர்களையும் அழைத்து, மாவட்டத் தலைநகரங் களில் நடத்தி, மக்கள் நல்லிணக்கத்தாடு இருக்கவேண்டும், ஒற்றுமையோடு இருக்கவேண்டும்; மதவெறிக்கு ஆளாகக் கூடாது; இந்த நாடு காப்பாற்றப்படவேண்டும்.


இது பெரியார் பூமி; திராவிட பூமி!


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடியது. ஆனால், ஒரு சம்பவம்கூட, ஒரு அசம்பாவிதம்கூட, ஒரு சிறு பிரச்சினைகூட இல்லாத ஒரு மாநிலம், இந்தியாவில் தமிழ்நாடுதான். காரணம், இது பெரியார் பூமி; திராவிட பூமி.


இதையேதான் பத்திரிகைகளும் அன்றைக்கு எழுதின. அதைக் குலைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் மடமடவென்று வேகமாக நடக்கின்றன. ஒரு பக்கம் மதமாற்றம்; இன்னொரு பக்கம், பச்சையாக கோட்சேவுக்கு நாங்கள் சிலை வைப்போம்; கோட்சே பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று சொல்கிறார்கள்.


காந்தியார் அப்படி என்ன செய்தார்? வகுப்புரிமையை ஆதரித்தார், அவ்வளவுதானே! அப்பேர்ப்பட்ட காந் தியாரை சுட்டுக் கொன்றனர். எல்லாருக்கும் சம வாய்ப்புக் கொடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்கின்ற ஒரு ஆட்சி வந்து, நீங்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்தால், அதனுடைய விளைவு என்ன?


ஆரியம் - பாசிசம்; திராவிடம் - ஜனநாயகம்


ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? பெரும்பான்மை மக்கள் ஆளவேண்டும்; அவர்களுடைய பிரதிநிதிகள் ஆளவேண்டும். சிறுபான்மைச் சமுதாய மக்கள் மாள வேண்டும் என்பதா? சிறுபான்மை சமுதாய மக்களும் வாழவேண்டும், அதுதான் மிக முக்கியம். பெரும்பான்மை ஆளட்டும்; சிறுபான்மைச் சமுதாயமும், மற்றவர்க ளைப்போல உரிமைப் பெற்று வாழவேண்டும்; அதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவமாகும்.


நான் பெரும்பான்மை, நான் வைத்ததுத்தான் சட்டம் என்று சொன்னால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது பாசிசம், பச்சைப் பாசிசம். ஆரியம் என்பது பாசிசம்; திராவிடம் என்பது ஜனநாயகம்.


எப்படி திருக்குறள் என்பது திராவிடம்; மனுதர்மம் என்பது ஆரியமோ அதுபோலத்தான், அதே தத்துவங்கள் தான்.


இந்த கோல்வால்கர் என்பவர் தெளிவாக அவருடைய நூலில் சொல்லியுள்ளார்.

*************************************************************************


ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே!
கிருட்டினகிரி மாநாட்டில் கழகத் தலைவர் உரை
சென்னை, பிப். 22- ராஜபக்சே வெற்றபெற வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே! என்றார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


உயிர், கொள்கைக்காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு வேறு கிடையாது


நாங்கள் ஏன் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு போட்டு இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்? எங்களுக்கு அதனால் என்ன லாபம்? எங்களுடைய உயிரையும் பணயம் வைத்துப் பேசுகிறோம்; எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், நீ வந்தால், இன்றைக்குத் திரும்பிப் போகமாட்டாய் என்று சொல்கிறார்கள்.


இன்றைக்கு தைரியமாக அடையாளம் தெரியாத ஆள்களெல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் திரும்பிப் போவது முக்கியமல்ல; நீ திருந்தி வருவதுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, நாங்கள் என்ன உலகம் உள்ளவரை வாழப் போகிறோமா? உயிர், நோயால் போகக்கூடாது; உயிர், விபத்தினாலே போகக்கூடாது. உயிர், கொள்கைக் காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு வேறு கிடையாது. அப்படி எண்ணக்கூடியவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்.


எனவே, இந்த சமுதாயத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதற்கு எங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் கிடையாது. எங்களுக்கு அரசியல் ஆசாபாசங்கள் கிடையாது. எங்களுக்கு லட்சியப் பார்வை மட்டுமே உண்டு. ஆகவே அந்த அடிப்படையில்தான் இதைச் சொல்கிறோம்.


கோல்வால்கரின் ஞானகங்கை என்ன சொல்கிறது?


அந்த கோல்வால்கர் நூலில் சொல்லியிருக்கிறார் பாருங்கள், அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:


இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமுதாயத்தில், மிக முக்கியமாக இருக்கக்கூடிய உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் நீங்கள் எல்லோரும் அந்நிய மக்கள். நாட்டில் வாழும் அன்னிய மக்களுக்கு, இரண்டே வழிகள்தான் உள்ளன.


ஒன்று, அவர்கள் சமுதாய இனத்தில் ஒன்றென கலந்து, அவர்கள் பண்பாட்டை தழுவுதல் வேண்டும். அல்லது சமுதாய இனத்தின் தயவு தாட்சண்யத்தில் வாழுபவராக இருக்கவேண்டும். அதுதான் தர்க்கரீதியாக உட்பட்ட சரியான முறையாகும்.


ஒன்றுதான் மிக முக்கியம்,

இந்துஸ்தானத்தில் வாழும் இந்துக்கள் அல்லாதார், இந்து பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, இந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, இந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதா வது, அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மைகளை யும், நன்றிகெட்ட தன்மையையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளவேண்டும். ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால், அவர்கள் அன்னிய ராக இருப்பதை விட்டொழித்துவிடவேண்டும். அவ்வாறு அவர்கள் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதிலேயோ அல்லது பிரஜா உரிமையோ கூட அவர் அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழுதல் வேண்டும்.
ராமனைக் கும்பிட்டால்தான், இஸ்லாமியர்களாகிய நீங்கள் இந்த நாட்டில் இருக்க முடியும். கிருஷ்ணனை நீங்கள் வணங்கினால்தான், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் இருக்க முடியும் என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். ஆதாரம் இருக்கிறதே!


இதை எவ்வளவு விரைவாக நம்முடைய ஆட்சியில் செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் செய்யவேண்டும் என்பதுதான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.
இதைச் சொல்லாமல், மக்களை ஏமாற்றுவதற்காக என்ன சொன்னார்கள், வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொன்னார்கள். நாங்கள் வந்தால் மாறுதல் செய்வோம் என்று சொன்னார்கள்.


சகோதரர் வைகோ அவர்களுக்கு அன்றைக்கே புரிந்தது!


இவர்கள் வந்தால், நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைத்துவிடும். நம்முடைய மீனவப் பிரச்சினை கள் தீர்ந்துவிடும். மோடி கையில் மந்திரக் கோல் வைத் திருக்கிறார், அதனை நீட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.


என்ன நடந்தது? இவர் பதவியேற்ற நாளிலேயே அது அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்தது. சகோதரர் வைகோ அவர்களுக்கு அன்றைக்கே புரிந்தது. ஆனால், வெட்கம் தடுத்தது; உடனே சொல்வதற்கு. அதனால், எதிர்ப்பைக் காட்டினார்.


மோடி பதவியேற்பு விழாவிற்கு, கொடுங்கோலன் ராஜபக்சவை அழைத்தார்கள். அவரை மட்டுமல்ல, எல் லோரையும் அழைத்தார்கள். சார்க் மாநாட்டுத் தலைவர்கள் என்று அதற்கு வியாக்கியானம் சொன்னார்கள்.
சர்வதேச அரசியலுக்கு மாறாக, இலங்கையில் தமிழினம் புண்பட்டுக் கிடக்கிறது. அதிபராக இருக்கின்ற ராஜபக்சே, அய்க்கிய நாடுகளின் சபையின் சார்பாக போடப்பட்ட மனித உரிமையின் ஆணையத்தின் சார்பில், போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றவாளி, சர்வதேச ரீதியாக.


கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

அதற்காக அய்.நா. தன்னுடைய குழுவை அனுப்புகிறது. நான் அவர்களை அனுமதிக்கமாட்டேன் என்று நேற்று வரை சொல்லிக் கொண்டிருந்தவர், அந்த சர்வாதிகாரி, சிங்கள வெறியன், இலங்கை அதிபர் ராஜபக்சே.  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; எங்கே, டில்லியில். இதைவிட ஈழத் தமிழர்கள் நெஞ்சில் புண்ணை உருவாக் கக்கூடியது; வெந்த புண்ணில் வேலை குத்துவது வேறு ஏதாவது உண்டா? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன்

இலங்கையில் நடைபெறுகின்ற அதிபர் தேர்லில், நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று மோடி வாழ்த்துச் சொல்கிறார். அதைச் சொல்லலாமா? தமிழர்களுடைய உணர்வுகளை அவர் புரிந்துகொண்டாரா? காங்கிரஸ்காரர் மேல் இருந்த கோபம், தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு; உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று சொல்வார்கள்.


உருட்டை என்றால் எலுமிச்சம்பழம்; புளியம்பழம் அதிகம் புளிப்பா? எலுமிச்சம் பழம் அதிகம் புளிப்பா? என்ற சந் தேகம் வந்தது.


சப்பிப் பார்த்தவுடன், இவன் வாயில் போட்டு ருசித்துப் பார்த்தான்; உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று சொன்னான். அதுபோல, காங்கிரசுக்கு அப்பன், எதில், அவர்கள் நடந்துகொண்டது மோசம் என்று இவர்களை வைத்தால், இவர் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்ட மாதிரி, அவருக்கு அடிக்கடி வரவேற்பு கொடுத்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வராத துணிச்சல், அப்பொழுது ஏற்படாத அக்கிரமம் இப்பொழுது வந்துவிட்டது. இதனைப் புரிந்துகொண்டோமே, இவ்வளவு சீக்கிரத்தில்.

உண்மை உருவத்தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில் ஒப்பனைதான் இருக்கவேண்டும்!

ராஜபக்சே வெற்றி பெறவேண்டும் என்று மோடி சொன்னார்; அத்தோடு மட்டுமல்ல நண்பர்களே, அவருடைய வெற்றிக்கு உதவுகிறாராம். என்ன செய்கிறார் தெரியுமா? நேற்று முன்நாள்தான் ஒரு செய்தி வெளிவந்தது. இந்தியாவில், இணையத்தில் இளைஞர்களை ஏமாற்றினார் பாருங்கள், அதற்கு அரவிந்த் குப்தா என்பவர், அவர் அமெரிக்காவிலிருந்து வந்து இணைய தளத்தையெல்லாம் சரிபடுத்திக் கொடுத்தவர். அந்த இணைய தளத்தின் உதவியுடன் மோடியின் வெற்றிக்காக இளைஞர்களை ஏமாற்றுவது எப்படி? தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி? வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சி!! என்று சொல்லி வித்தியாசம் காட்டவேண்டும்; உண்மை உருவத் தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில் ஒப்பனைதான் இருக்கவேண்டும்.
ஒப்பனையை நம்பினால் என்னாகும்? அந்தக் காலத்தில் சொல்வார்கள், கிராமத்திலிருந்து ஒருவன் நாடகம் பார்க்கச் சென்றான். ஸ்திரீபாட் போட்ட ஒரு வனைப் பார்த்து, அவன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். அந்தக் காலத்தில், ஆண்கள்தான் ஸ்திரீபாட் போடுவது வழக்கம். பெண்கள் நடிப்பதில்லை. இவன் ஒற்றைக்காலில் நின்றான், அவ ளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று. அவன் அரிதாரத்தைக் கலைத்து, நான் ஆண் என்றான்.


அதுபோன்று,  இவர்கள் ஏமாற்றக்கூடிய அளவிற்கு அப் படியே உருவத்தை மாற்றுகிறார்கள்.


தமிழினம் பூண்டோடு அற்றுப் போவதற்கு உதவினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு இருக்கமுடியுமா?


நீங்கள் எப்படி இந்தியாவில் வெற்றி பெற்றீர்களோ,  அதற்காக இணையத்தில் பணி செய்தாரே, அவரை இலங்கைக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்.
அரவிந்த் குப்தா என்பவர், அதற்காக இலங்கைக்குச் சென்றிருக்கிறார். அவர்தான் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேற்பார்வையாளராக இருக்கிறார்.


ஆனால், இலங்கையில் என் தமிழனை அழிக்கின்ற ஒருவன் மீண்டும் அவன் பதவிக்கு வரவேண்டுமென்று உத வினால், தமிழினம் பூண்டோடு அற்றுப் போவதற்கு உத வினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு இருக்கமுடியுமா?


இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இங்குள்ள மீனவர் பிரச்சினை தீர்ந்ததா? இன்றைக்குக்கூட கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அடித்து, இலங்கைக் கடற்பனையினர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்; இது அண்மைச் செய்தி. இல்லை யென்று மறுக்கமுடியுமா?


ஆக, அந்த மீனவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டனவா? சுப்பிரமணியசாமி என்ன அதிபரா? அவனைவிட ஒரு அரசியல் புரோக்கர் வேறு யாருமே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு ஆளை வைத்துக் கொண் டிருக்கிறார்கள்; அவர் தமிழ்நாட்டில் எதையும் பேசினால், இவர்கள் எல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். சமய சந்தர்ப்பம் வரும்பொழுது, கோட்சேவுக்கு சிலையா? அதற்கும், பி.ஜே.பி.,க்கும் சம்பந்தம் இல்லை என்று சொல் கிறார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னவுடன்,


ஆதாரம் வேண்டுமானால், விடுதலையில் இருக்கிறது!


கலைஞர் அவர்கள் சட்டசபையில் இருந்தபொழுது பிரச்சினை எழுந்தது ஒரு நாள். உடனே கலைஞர் சொன்னார், ஆதாரம் வேண்டுமானால், விடுதலையில் இருக்கிறது; ஆதாரம் வேண்டுமானால், பெரியார் திட லுக்குச் செல்லுங்கள் என்றார்.


இல்லீங்க, அவர் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டார். கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினரா? என்று கேட்டார்கள்; மிகவும் சாமர்த்தியமாக. அப்பொழுது ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் சேர்க்கின்ற பழக்கமே கிடையாது. அப்பொழுது அதில் உறுப்பினர் என்றால், எவ்வளவு சாமர்த்தியமான வாதம் பாருங்கள்; உறுப்பினராக யாருமே சேர்க்க முடியாது என்று சொன்னால், பிறகு அவர் எப்படி உறுப்பினராக இருந்திருப்பார். இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவர் என்று சொன்னார்கள்.


காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது


சரி, இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவர் என்று சொன்னீர்கள் அல்லவா, நாங்கள் ஒரு கேள்வி கேட் கிறோம், அதற்குப் பதில் சொல்லுங்கள். இந்து மகாசபையை உண்டாக்கியவர் பண்டிட் மதன்மோகன் மாளவியா. இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவன்தான் கோட்சே, காந்தியாரைக் கொன்றவன் என்றால், இப்பொழுது அவர்கள் மிகத் தெளிவாக பாரத ரத்னா விருதை யாருக்குக் கொடுக்கிறார்கள் என்றால், காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது கொடுக்கிறார்கள் என்றால், கோட்சவுக்கு சிலை வைக்கின்றவர்களுக்கும், மறைமுகமாக பாரத ரத்னா விருது கொடுக்கின்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தத்துவத்தில்? இதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? இதையெல்லாம் பெரியார் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவேண்டும். அதற்காகத்தான் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு.
நாங்கள் எச்சரிக்கிறோம்! எச்சரிக்கை மணி அடிக் கின்றோம்; கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளாதீர்கள். ஏற்கெனவே உங்கள் தலை புண்ணாக இருக்கிறது என்று சொல்கிறோம். இதைச் சொல்வதுதான் எங்களுடைய வேலை. ஆகவே, நண்பர் களே, உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்பதுதான்.

இந்தக் கூட்டத்தில் ஆதாரப்பூர்வமாக அதனைச் சொல் கிறோம். நமக்கு ஆபத்து வருகிறது; திராவிடர் இயக்கம் என்று சொல்லாதீர்கள்; திராவிடர் இயக்கத்தை கீழே தள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். உடனே, பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், போட்டு விட்டார்கள். 2ஜி ஊழல். வழக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது, இன்னும் தண்டிக்கப்படவேயில்லை. இவர்கள் தண்டிக்கப்படாதவர்கள்; உச்சநீதிமன்றத்திற்குப் போயிருக் கிறார்கள். புதிதாக சரக்கு ஒன்றும் இல்லை என்றவுடன்,  இன்னொரு வழக்கை புதிதாகப் போடுகிறான். சரி, அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், நாங்கள் ஒன்றும் அதற்காக வக்காலத்து வாங்கவேண்டிய வேலையில்லை.


இந்தியா டுடே


ஆனால், நண்பர்களே,  இப்பொழுது என்ன எழுது கிறார்கள் தெரியுமா? எந்தப் பத்திரிகைக்காரன் எழு தினானோ, அதே பத்திரிகைக்காரன், இந்த 2ஜி எல்லாம் மிகவும் மிகைப்படுத்தி பூஜ்ஜியம், பூஜ்ஜியமாகச் சேர்த்து விட்டோம். அது தவறாக நடந்துபோய்விட்டது. அப் பொழுது ஊழல் என்று பெரிது படுத்திவிட்டோம் என்று சொல்கிறார்கள் இப்பொழுது யார்? இந்தியா டுடே. அவர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் மாற்றுவார்கள்.
ஆகவே, நீங்கள் எந்த வகையிலும் சாதாரணமாக நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல் கிறார்கள். வடக்கேயிருந்து இங்கே வந்து ஒருவர் பேசு கிறார், திராவிட இயக்கமெல்லாம் சோர்ந்து போய்விட்டது; திராவிட இயக்கத்தினுடைய கதையெல்லாம் முடிந்து போய்விட்டது. நாங்கள் வந்துதான் இங்கே உட்கார போகிறோம் என்கிறார்.


உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சைதானே!


உன்னை அடையாளமே தெரியாதே, இன்றைக்குக் கொஞ்ச நஞ்சம் உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், திராவிட இயக்கம் போட்ட பிச்சைதானே! எங் களுடைய ஆள்களின் தோள்மீது மாறி மாறி ஏறி உட்கார்ந்தீர்கள்; உங்கள் தோள்மீது எங்கள் ஆள்கள் ஏறினார்களோ இல்லையோ, அவர்களுடைய தோள்மீது நீங்கள் ஏறி உட்கார்ந்தீர்கள்.  அதனாலே கொஞ்சம் கணக்கைத் தொடங்கினீர்கள். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன் வாஜ்பேயி தனியே வந்தாரே! 13 நாள்கள் ஆட்சியில் உட்கார்ந்தாரே, அதற்குப் பிறகு என்னாயிற்று? வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வந்தவுடன், வாஜ்பேயினுடைய கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுமா? நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்றார். ஏனென்றால், அவருக்குத் தெரியும் ஓட்டெடுப்பில் தோற்றுப் போய் விடுவோம் என்பது. இவையெல்லாம் பழைய கதையாகும்.


சத்தியமூர்த்தி பார்ப்பனர் என்ன சொன்னார்? ஆகவே, உங்களுக்குச் சொல்கிறோம், திராவிடர் இயக்கம் என்று சொன்னால், நீங்கள் அதனை அலட்சியமாக நினைக்காதீர்கள். இன்னும் பல பேர் புரியாமல் சொல் கிறார்கள், திராவிட இயக்கங்களுடைய சகாப்தம் முடிந்து விட்டது என்று. இப்படித்தான் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னார், சத்தியமூர்த்தி என்ற ஒரு பார்ப்பனர், காங்கிரஸ்காரர். ஜஸ்டீஸ் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்றார்.


நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுகவின் ஆட்சி

அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டார்கள்,


10 வருஷத்தில் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி, உலகத்தில் நீங்களேதான்; அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள் என்றனர் செய்தியாளர்கள்.
வேறு ஒருத்தராக இருந்தால், ஆமாம், ஆமாம் என்று மார் தட்டி இருப்பார். ஆனால், அண்ணாவினுடைய அறிவும், அடக்கமும் ஒப்பற்றவை. அண்ணா அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? 10 வருஷத்தில் ஆட்சியைப் பிடிக்கவில்லை; 50 வருஷத்திற்கு முன்பு எனக்குப் பாட்டன் யார் தெரியுமா? அதுதான் நீதிக்கட்சி; அதனுடைய தொடர்ச்சிதான் இப்பொழுது. நீதிக்கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சொன்னார்களே, நீ புதைக்கவில்லை, நாங்கள் மறுபடியும் உயிரோடு வந்திருக்கின்றோம் என்று காட்டுவதுதான் திராவிடர் இயக்கம் என்று சொன்னார்.


எப்போதும் ஏமாறுவதுதான் தமிழனுடைய வழக்கம்

எனவே, எந்தக் கொம்பனாலும் திராவிடர் இயக்கத்தை அசைத்துவிட முடியாது. அதுவும் இன்றைக்கு சாதாரணமான இயக்கம் அல்ல இது. இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இயங்குவோம்; எங்களுடைய வேலை இருக்கிறது பாருங்கள், நாங்கள் கோட்டைக்கு உள்ளே போகிறவர்கள் அல்ல; கோட்டைக்கு வெளியில்தான் எங்கள் பணி. கோட் டையில் யாரும் ஓட்டை போட்டுவிடக்கூடாது என்பதற்காக! நம்மாள் எப்பொழுதும் ஏமாந்துகொண்டே இருக்கிறான். ஏமாறுவதுதான் எப்பொழுதும் தமிழனுக்கு வழக்கம்.
கதை எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், வாசுகி என்கிற பாம்பை, மத்தாக்கி பாற்கடலை கடைந்தார்களாம்; அப்படிக் கடைந்தவுடன், அமுதம் வந்ததாம்; தலைப்பக்கம் யார் நின்றது என்றால், அசுரர்கள்; வால் பக்கம் யார் நின்றது என்றால், தேவர்கள்.


வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு

அமுதம் கிடைத்ததும் என்ன செய்திருக்கவேண்டும்; ஒரு கூட்டம் தலைப்பக்கம் நின்றார்கள். இன்னொரு கூட்டம் வால் பக்கம் நின்றார்கள். பங்கு போடவேண்டும் என்று வந்தவுடன், எனக்கு 50 சதவிகிதம் கொடு என்று கேட்டார்கள்; அய்ம்பது சதவிகித பிரச்சினை அப்பொழுதே ஆரம்பித்துவிட்ட பிரச்சினையாகும். இது இப்பொழுது ஆரம்பித்தது அல்ல. 50 சதவிகிதம் கொடு என்றார்கள் அசுரர்கள். நியாயமாக 100 சதவிகிதம் கொடு என்று கேட்கவேண்டும். ஏனென்றால், இவர்கள் தலைப்பக்கம் நின்று போராடியவர்கள். ஆனால், தேவர்கள் வால்பக்கம் நின்றவர்கள். ஆனால், அசுரர்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை. முழுக்க முழுக்க இவர்களே அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு. அதற்கு அந்தக் காலத்துப் புராணத்திலிருந்து உதாரணம் சொல்லலாம். வரலாற்றிலிருந்துகூட அல்ல.


100 சதவிகிதமும் தங்களிடம் வரவேண்டும் என்று நினைத்தார்கள். போரிட்டு அசுரர்களை வெல்ல முடியாது. அதற்காக என்ன செய்தார்கள் என்றால், மோகினி அவதாரத்தை விட்டார்கள். நம்மாள்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள், ஆனால், இந்த மோகினி அவதாரம் என்றாலே, அதுதான்  வீக்பாயிண்ட் அவனுக்கு; அந்த இடத்தில் நம்மாள் கீழே விழுந்தான். ஒவ்வொரு அவதாரங் களையும் எப்படி கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

எச்சரிக்கை செய்வதற்குத்தான் திராவிடர் கழகம்

இப்பொழுதும் பல மோகினி அவதாரங்கள் வரப் பார்க்கின்றன. அதை எச்சரிக்கை செய்வதற்குத்தான் இந்த இயக்கம் இருக்கிறது.
எனவே, ஏமாறாதீர்கள் தமிழர்களே! நாம் திராவிடர்கள். நம்முடைய உரிமைகள் திராவிடர்களுடைய உரிமைகள். சமத்துவம், ஜாதியற்ற சமுதாயம், எல்லோருக்கும் உரிமையுள்ள சமுதாயம் இவைகள் மலரவேண்டுமானால், விழிப்போடு இருங்கள், விழிப்புற்று எழுங்கள் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, அனைவருக்கும் நன்றி! வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                     --------------------------"விடுதலை” 23-02-2015