Search This Blog

31.7.13

69 சதவீத இடஒதுக்கீடில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது! - கி.வீரமணி


தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு 9ஆவது அட்டவணை பாதுகாப்புள்ளது

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்யலாம் என்று தீர்ப்பிலேயே உண்டு
 
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் தருவது கண்டிக்கத்தக்கது
69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது - இந்திய அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது.  ஏற்கெனவே 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உள்ள மாநிலங்களில் அது தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலைத் தந்து குழப்புவது குற்றமான செயலாகும். தமிழ்நாட்டில் 69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக 69 சதவீத இடஒதுக்கீடு (50+18+1 = 69) தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் (SC & ST) பிற்படுத்தப்பட்டவர்கள் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (M.BC) என்று சமூக நீதி அடிப்படையில், அவர்களது மக்கள் தொகை விகிதச்சாரத்திற்கு மிகவும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது.

முன்னேறிய ஜாதியினர்  எத்தனை சதவீதம்?

முன்னேறிய ஜாதிக்காரர்கள் (Forward Communities) என்பவர்கள் மொத்தத் தொகை மிகவும் தாராளமாகவே கணக்கிட்டால்கூட, 10  சதவிகிதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் கிடையாது.

மண்டல் கமிஷன் பரிந்துரை என்பது (1980-க்கு முந்தைய கணக்குப்படியேகூட) பிற்படுத்தப்பட்டவர்கள் 52 சதவிகிதம்; வடநாட்டில் மற்ற க்ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் உண்டு; தெற்கே அது கிடையாது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்புகளாகும்.

இத்துடன்  சமூகநீதி பெற வேண்டிய 23 சதவிகித  தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவர் சிறுபான்மையினர் சேர்ந்தால் 85 முதல் 90 விழுக்காடு ஆகிவிடும்!

திராவிடர் கழகத்தின்  அரிய முயற்சியால்...

இந்நிலையில் பெரியாரின் சமூகநீதிப் பூமியாகிய இத்தமிழ்நாடு - திராவிடர் கழகத்தின் தனிப்  பெரும் அரிய பெரிய முயற்சியால் - 69 சதவிகித இடஒதுக்கீடு, இந்திய அரசின் சட்டத்தின் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது. (இதன் கீழ் உள்ள 69 விழுக்காடு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிப்பதே எவ்வளவு தூரம் நியாயமானது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்!)

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஜஸ்டீஸ் கபாடியா அவர்கள் இருந்தபோது  இறுதித் தீர்ப்பு வந்து விட்ட பிறகும்கூட, இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புக் காட்டும் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனரின் முகமூடி அமைப்பும், அதன் முக்கிய வல்லடி வழக்குரைஞரும் மறுஆய்வு மனு போட்டு; அதுவும் தள்ளப்பட்டு விட்டது.

என்றாலும் ஏதாவது அட்மிஷன் சீசனில் - இடம் கிடைக்காத, சிலரைப் பிடித்து வழக்குப் போட்டு, கூடுதல் இடங்கள் பெற்றே வருகின்றனர்!

கூடுதல் இடங்கள் மூலம் அதிகமான பிள்ளைகளுக்கு - மாணவர்களுக்கு இடம் கிடைப்பது நமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், கொள்கை அளவில் 69 சதவிகிதத்தை ஏற்காதது போன்ற ஒரு புறத்தோற்றம் உருவாக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?

நீதிமன்றத்தில் தவறான தகவலா?

நேற்று உச்சநீதிமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பொதுப் பிரிவுக்கு உருவாக்கச் சொல்லி, ஆணையிட்டுள்ள நீதிபதிகள் விசாரித்தபோது, மனுதாரர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஒரு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (பொதுப் பிரிவு முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு மட்டுமல்ல)

மண்டல் கமிஷன் அறிக்கையில் மண்டலேகூட, 50 விழுக்காட்டுக்கு  மேல் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியுள்ளார்; அதை மீறி தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது என்று கூறியுள்ளார்!

இது மிகவும் தவறான தகவல்!

உச்சநீதிமன்றத்திற்குத் தவறான சட்ட நிலையை எடுத்துக் கூறுவது சரியானதுதானா?

ஏற்கெனவே சில தீர்ப்புகளில் உள்ள கருத்துக்கள் காரணமாக 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 52 சதவிகித இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்கிறோம்.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஆனால் உச்சநீதிமன்றத்தின் பழைய சில வழக்குகள் தீர்ப்பின்படி (அதுகூட மூலத் தீர்ப்பு அல்ல (Obiter dictum) 50க்கு மேல் போகக் கூடாது என்று கூறப்பட்டதால், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தரப்பட்டுள்ள (15+75 = 22.5) சதவீதம் - அதாவது 23 விழுக்காட்டினை அப்படியே அவர்களுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாத்து 50இல், 23அய் கழித்து மீதி 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளதோடு, அதே சமயத்தில் எந்தெந்த மாநிலங்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அமலில் உள்ளதோ, அது அப்படியே பின்பற்றப்படல் வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை கூறியுள்ளது.

இதை மறைக்கலாமா? வாதத்தில் இந்த சமூகநீதிக்கு எதிரான வழக்காடிகள்?
அது மட்டுமல்ல. மண்டல் ஆணையம் சம்பந்தமான இந்திரா சகானி வழக்கில் தீர்ப்புக் கொடுத்த நீதிபதிகள், 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடுக்கு தரும் மாநிலங்கள் அதற்குரிய தேவை ஏற்படின் அந்த மாநிலங்கள் தாராளமாக இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் தொடரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறதே! அதை அந்த வழக்குரைஞர்கள் அறிய மாட்டார்களா? அறிந்தவர்களாக இருப்பின் இதை ஏனோ வசதியாக மறைக்க வேண்டும்?
சுதந்திரத்திற்கு நாம் தரும் விலை எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!

69 சதவீதத்திற்கு ஊறு ஏற்பட்டால்...

நம் நாட்டில் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல; சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் நாம் தரும் விலை எப்போதும் நம் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பதுதான் போலும்!

69 சதவிகிதத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது; இதை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் உணரட்டும்!

    ------------------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை    30.7.2013

30.7.13

சோ ராமசாமிக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பதிலடி!


அர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின்மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியான படிப்பு இருக்கிறது. ஸம்ஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதி முறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். இதற்கு ஆழ்ந்த சமஸ்கிருத, சாஸ் திர அறிவு தேவை. இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லித் தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வர வேண் டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும் அர்ச்சகராவதும்
                   ------------------------------------------(துக்ளக் 24.7.2013 பக்கம் 141)
என்று சாதிக்கப் பார்க்கிறது துக்ளக்.
அர்ச்சகர் வேலைக்கென்று தனியான படிப்பு இருக்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுகிறார் சோ.
நாம் கேட்பதுகூட, அர்ச்சகர்களுக் கென்று உருவாக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி யில் படித்தவர்களுக்குத்தானே தவிர, ஏதோ வீதியில் சென்று கொண்டிருக்கும் குப்பனையும், சுப்பனையும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து -_ கருவறைக்குள் திணித்து அர்ச்சனை செய்யப்பா! என்றா சொல்லுகிறோம்?
சைவப் பயிற்சிப் பள்ளிகள் கீழ்க் கண்ட இடங்களில் இந்து அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, தண்டாயுதபாணி கோயில் _ - பழனி, சுப்பிர மணிய சாமி கோவில் _ திருச்செந்தூர், அருணாசலேசுவரர் கோயில் _ திரு வண்ணாமலை, வைணவப் பயிற்சி மய்யங்கள் பார்த்தசாரதி கோயில் _ சென்னை திருவல்லிக்கேணி அரங்கநாத சாமி கோயில், சிறீரங்கம் (திருச்சி)
ஆகிய கோயில்களில்தானே முறைப் படி பயிற்சி அளிக்கப்பட்டது; பயிற்சி அளித்தவர்கள் சாதாரணமானவர்களா?
பயிற்சி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர் களாக இருக்க வேண்டும் என்பதுபற்றியும் தமிழ்நாடு அரசாணை கூறுகிறதே! (தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை (அ-_நி_4_2) துறை நாள் 2.1.2007.
அந்த ஆணை என்ன கூறுகிறது?
பயிற்சி நிலையத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வில் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீண்ட கால அனுபவமும், பயிற்சியும் கற்றறிவும் பெற்றவர்களைத் தேர்வு செய்து அவர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் பொதுக் கல்வித் தகுதிகள் முக்கியமாகக் கருதக் கூடாது. நாளி தழ்களிலும் விளம்பரம் செய்து தகுதி யுள்ளவர்களை ஆசிரியர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் அல்லவா பயிற்சிப் பள்ளி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, 69 சதவீத அடிப்படையில் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு 206 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் (திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த பார்ப்பன ஆசிரியரையே திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள் தாக்கினர் என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்).
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள்பற்றி தி இந்து ஏடு (29.8.2008 பக்.8) ஒரு சிறப்புச் செய்தியையே வெளியிட்டதே!
“Priests - in - Waiting Search for Alternative Avenues” என்ற தலைப்பில் அது வெளி வந்துள்ளது. பயிற்சி பெற்ற சிலரையும் பயிற்சி அளித்தவரையும் பேட்டி கண்டு தி இந்து வெளியிட்டது. டி முருகன் என்பவர் பயிற்சி பெற்ற வர்களில் ஒருவர்; அரசுப் பணி வரும் போது வரட்டும் என்னும் இவர் ஆத்தூரைச் சேர்ந்தவர் (சேலம் மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளில் தினப்படி பூஜை செய்து வருகிறார். இவர் வன்னிய ஜாதி; அர்ச்சகர் பயிற்சியில் சேர விரும்பிய இவரை இவரது பெற்றோர் பரம்பரையாக அர்ச்சகர்களாக உள்ள பார்ப்பனர் களுக்குச் சமமாக வர முடியுமா எனச் சந்தேகப்பட்டனர். முருகன் சரளமாக தங்குத் தடையின்றி சமஸ்கிருத, தமிழ் மந்திரங்களைக் கூறி அசத்துகிறார். மந்தி ரங்களை நல்ல முறையில் மனப்பாடம் செய்து பயிற்சி பெற்றிருக்கிறார்
நான் அர்ச்சகராக இருக்கும் கோயில் களுக்கு வரும் பக்தர்கள் நான் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை. நான் பூஜை செய்யும் நேர்த்தியைத்தான் பார்க் கிறார்கள். உண்மையில் பல பார்ப்பன அர்ச்சகர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார்கள். நானும் ஒத்துக் கொண்டு கற்றுக் கொடுத்து வருகிறேன் என்றார் முருகன்.
எழுதுவது விடுதலை அல்ல; இந்து ஏடுதான் என்பதை துக்ளக் அய்யர் வாளுக்கு நினைவூட்டுகிறோம்.
அதோடு நின்று விடவில்லை.  பயிற்சி அளித்த ஆசிரியரையும் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. சீரங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் வைணவ ஆகமம் கற்பித்த எஸ்.கே ரங்கராஜபட்டர் என்பவர் கூறுகையில், ஆகமம் வழிபாட்டு அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை; நான் ஆகமம் கற்பித்த மாணவர்கள் மிக நல்ல முறையில் ஆகமங்களையும், சடங்கு களையும் கற்றுக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார் என்று இந்து வெளியிட்டுள்ளதே!
அத்துடனும் நிற்கவில்லை இந்து ஏடு. மதுரை மீனாட்சிக் கோயில் ராஜூ குருக் கள் என்று அழைக்கப்படும் சங்கரன் சிவாச்சாரியார் அய்ந்து மாத காலம் சைவ ஆகமப் பள்ளியில் ஆசிரியப் பணியில் இருந்தவரும்கூட; ஆகமங்களைக் கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை என்றார் என்று இந்து எடுத்துக்காட்டியுள்ளதே!
இதற்கு மேலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் அகங்காரத்துடன் துள்ளிக் குதிக்கிறார் என்றால், அது அவரின் ஜாதி ஆணவத்தையும் கட்டுங்கடங்காப் பூணூல் கோத்திரப் புத்தியையும்தான் வெளிப் படுத்தும்.
சங்கீதம், நடனம் மாதிரிதான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும் என்று பெரிய அளவு விவாதத்தை எடுத்து வைத்துள்ளார்.

சங்கீதமும், நடனமும் என்ன ஒரு ஜாதி கூட்டுக்குள்ளா அடைபட்டு கிடக் கின்றன? அவற்றைப் பல ஜாதியினரும் கற்றுத் தேர்ந்து உச்சநிலையில் இருக்க வில்லையா? சங்கீதத்தில் மதுரை சோமுவும், தியாகராய பாகவதரும் கே.பி. சுந்தரம்பாளும் ஜேசுதாசும் முறையாகப் பயின்று கொடி கட்டி ஆளவில்லையா?
பெண்களுக்கே உரித்தானது என்று கருதப்பட நடனத்தில் இன்று ஆண்களே பயிற்சி பெற்றுப் பட்டொளி வீச வில்லையா?
சோ பெரிய விவாதத்தில் பெரிய புலி(ளி) என்று அக்ரகாரம் வாண வேடிக்கை விட்டுப் பிரச்சாரம் செய்கிறதே _ அது எவ்வளவு ஓட்டையானது என்பது இந்த உதாரணத்தின் மூலம் உடைபட்டுப் போகவில்லையா?
அடேயப்பா, சமஸ்கிருத மந்திரங் களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டுமாம். பூஜை விதிமுறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமாம். இதற்கு ஆழ்ந்த சமஸ் கிருத அறிவு தேவையாம். இவற்றை யெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாதாம். அது இயல்பாகவே வரவேண்டுமாம்!
எழுதுகிறார் திருவாளர் சோ
சாமர்த்தியமாக எழுதுவதாக நினைப்பு ஆம் அந்த நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்.
கோயில்களில் இருக்கும் அர்ச்சகர் பார்ப்பனர்கள் சோ சொல்லும் தகுதியில் இருக்கக் கூடியவர்கள் தானா?
சர் சி.பி. இராமசாமி அய்யர் குழு, கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் குருக்கள் பார்ப்பனர்களின் குடுமியை ஆட்டி அவர்களின் அறியாமையைத் தோலுரித்துக் காட்டி விட்டதே!
நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதி களுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாகப் போய்ப் பார்த்தோம்.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக் கின்றனர்; அல்லது அரைகுறை படித்த வர்களாக இருக்கின்றனர். இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர் களாகவும் இருக்கின்றனர். அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும், உச்சாடனமும் பதியத் தக்கதாக இல்லை. தப்பும் தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது என்று அவாள் ஆத்துத் திலகம் சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான குழுவே வெள்ளை வெள்ளையாக நொறுக்கிக் காட்டி விட்டதே! இதற்கு என்ன பதில்?
பார்ப்பனர் அல்லாதவர்கள்மீது பார்ப் பனக் கூட்டம் இன்றுவரை தேக்கி வைத் திருக்கும் வெறுப்பு விஷம்தான் சோவின் எழுத்துக்களில் வழிந்தோடுகிறது. கோயில் என்பது தங்களின் ஜாதி ஆதிக்கக் கோட்டை! அதைக் கோட்டை விட அவர்கள் தயாராக இல்லை என்பதை இதற்கு மேலும் தமிழர்கள் உணரத் தயாராக இல்லை என்றால் அவர்களைவிட ஏமாளிகள் வேறு யாராக இருக்க முடியும்?

தமிழர்களே, பார்ப்பனர்களைப் புரிந்து கொள்வீர்!
************************************************************************************
தமிழ் அர்ச்சனை: சோ பதில் கூறுவாரா?

தமிழ் நாட்டிலுள்ள  பல கோவில்களில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்று போர்டுகள் தூண்களில் தொங்குகின்றன. ஆனால் கோவில்களிலுள்ள பல்லிகூட தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வதில்லை. தமிழ் அர்ச்சனை என்பது நூற்றுக்கு நூற்றுப் பத்து சதவிகிதம் தோற்றுப் போன ஒரு சமாச்சாரம். எல்லோரும் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழியில்தான் படிக்க வேண்டும் என்று ஆசைபடுவதுபோல் கோவில்களில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பம் இது                                                   (துக்ளக் 24.7.2013 பக்கம் 14).
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழன் அர்ச்சகன் என்றால் தணலாகக் கொதிப்பு! தமிழில் வழிபடுதல் என்றால் தடித்தனமான வார்த்தைகள் பிரயோகம்!
கோவில்களில் உள்ள பல்லி கூடத் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வதில்லையாம். அப்படி என்றால் கோவில்களில் சம்ஸ்கிருதம் பல்லி சொல்லிதான் புழக்கத்தில் உள்ளதா?
என்ன திமிர் இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டே இவ்வளவு கேவலமாகக் கொச்சைப்படுத்துவார்கள் இந்த சோ பார்ப்பனர்கள்.
கோவில்களில் சம்ஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களாம்.

அதாவது உண்மையா?
தமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா? அல்லது சமஸ்கிருதம் இருக்க வேண்டுமா? என்பதுபற்றி பக்தர்களின் விருப்பத்தை அறிவதற்காக மதுரை, இராமேசுவரம், சிதம்பரம், பழனி, கன்னியாகுமரி, சென்னை, வடபழனி, திருவரங்கம், தஞ்சாவூர், கோவை ஆகிய ஊர்களில் ஒன்பது கோவில்களில் 27.11.1998 காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடவுள் நம்பிக்கையுள்ள மதுரை பழ. நெடுமாறன் அவர்கள்தான் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்தார்.
18,700 பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். தமிழுக்கு ஆதரவாக 17,695 பக்தர்களும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக 823 பக்தர்களும், இரு மொழிகளும் இருக்கலாம் என 182 பக்தர்களும் வாக்களித்தனர். அர்ச்சனை மொழிபற்றி பக்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கருத்துக் கூறுவோர் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் (தென்செய்தி நாள் 15.121998 பக்கம் 4).
சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவதாக சாதிக்கப் பார்க்கிறாரே திருவாளர் சோ _ இதற்கு என்ன பதில் சொல்லுவார்?
சோ. ராமசாமிகளுக்குப் புரியும்படி, பக்திப் பாஷையிலேயே சொல்ல முடியும்.
சொல்லுவதைப் பொருள் தெரிந்து சொல்ல வேண்டும் என்ற கருத்துத் திருமுறைகள் அனைத்திலும் சொல்லப்பட்டுள்ளது. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தில் உள்ளார். சிவனடிக் கீழ் என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் (இவரும் ஒரு பார்ப்பனர்தான்!) பாடியதை சோக்களால் மறுக்க முடியுமா?
பொருளை நன்றாகத் தெரிந்து சொல்லாவிட்டால் அறிவில் உள்ள இருளைச் சிவபெருமான் போக்க மாட்டார் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை! (மாணிக்க வாசகரின் கீழ்வேளூர்த் திருத்தாண்டகம்)
அர்ச்சனை பாட்டாகும், ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடி இருப்பதைக் கிழித்தெறியப் போகிறாரா திருவாளர் சோ அய்யர்?
மொழி ஆர்வமா? மத துவேஷமா? எனும் தலைப்பில் இதே சோ துக்ளக்கின் (18.11.1998) தலையங்கப் பகுதியில் என்ன எழுதினார்?
நாயன்மார்களும் ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு! என்று எழுதினாரே!
இப்படி சொல்ல சோவுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழில் கரை கண்டவரா? சமஸ்கிருதத்தில் கற்றுத் துறை போனவரா? மாணிக்கவாசகரை விடத் தான் பக்தியில் குளித்து முத்து எடுத்தவரா?
சர்வ சக்தி வாய்ந்தவராகக் கடவுளைக் கூறி, அவர் குறிப்பிட்ட ஒரு மொழியின் ஒலிக்குத்தான் ஆட்படுவார் என்று சொல்லுவதுகூட அந்தக் கடவுளைக் கொச்சைப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும் ஆகாதா?
மற்றமற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்றம் என்ன சொல்லுகிறது? மோடியைக் குற்றவாளி என்று சொல்லி இருக்கிறதா நீதிமன்றம் என்று பூணூலை முறுக்கிக் கொண்டு பேனா தூக்கும் திருவாளர் சோ பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர் பிச்சை என்பவரும் இந்துக் கோயில் பாதுகாப்புக் குழு எனும் அமைப்பின் தலைவர் எனக் கூறும் சிவகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தமிழ் மொழியில் அர்ச்சனையும், பூஜையும் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். கோயில்களில் நடக்கும் வழிபாட்டிலும், பூஜை சடங்குகளிலும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளிலும் அரசு தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி இருந்தனர்.
இந்த இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தர்மராவ் மற்றும் கே. சந்துரு ஆகியோர் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் கூறப்படவில்லை. எந்தவிதமான மத சாத்திரங்களிலோ குறிப்புகள் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி விட்டார்களே (20.3.2008). எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் நீதிமன்றம் என்றுகூறி பயமுறுத்தும் சோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
************************************************************************************
--------------------"விடுதலை” ஞாயிறுமலர் 27-7-2013 இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

29.7.13

கடவுளும் மதமும் - தந்தை பெரியார்

கடவுளும் மதமும்

உலகில் மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகளேயாகும்.
உலகில் கடவுள் பெயரால் உள்ள மதங்களில் குறிப்பிடத்தக்க பெரிய மதங்கள் மூன்று என்று சொல் லலாம். அவை பெரிதும் உண்மைக்கு மாறுபட்டவை யேயாகும்.

அவை முறையே, கிறிஸ்தவமதம், இஸ்லாமிய மதம், இந்து மதம் - என சொல்லப்படுபவைகளாகும். இவைகளில் முதல் இரண்டு மதங்களும் சரித்திர சம்பந்தமான ஆதாரங் களைக் கொண்ட மதங்களாகும்.

மூன்றாவது மதமான இந்து மதம் என்பது காலப் போக்கில் கற்பனைக் கருத்துகளால் பெருக்கி சமயத்துக்கு ஏற்றபடி மக்களுக்குள் புகுத்தி, மக்களை ஏய்க்கும் ஒரு கதம்பக்கருத்து மதமாகும். இம்மதக் கோர்வைக்கு இந்துமதம் என்கின்ற பெயர் முறையே முன் இரண்டுமத காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயராகும்.

இது வேத மதமாக இருந்து ஆரிய மதம் என்றாகி, பிராமண மதம் என்று கூறப்பட்டு வந்து, கடைசியில் இந்துமதம் என்று சொல்லப்படுவதாகும்.
உலகில் கிறிஸ்தவமதம்தான் மிகப்பெரிய எண் ணிக்கை கொண்ட மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதம் ஆகும்.

அடுத்தது இஸ்லாம் மதம் என்பதாகும். இது கிறிஸ்தவ மத மக்கள் அளவில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்ப தாகும்.

மூன்றாவதான இந்து மதம் என்பது இஸ்லாம் மதத்தைவிட மிகச் சிறிய கூட்டத்தினரை, அதாவது இஸ்லாம் மத மக்களில் சற்றேறக்குறைய நான் கிலொரு பங்கு மக்களைக் கொண்டதாக இருக்க லாம்.

இவை தவிர `பவுத்த' மதம் என்ற ஒரு மதம் இருக்கிறது. இம்மதத்திற்குக் கடவுள் கிடையாது என்றாலும், கடவுள் நம்பிக்கை மதத்துக்கு உண்டான சடங்குகள் பெரிதும் உண்டு என்பதோடு கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கிறது.

சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய நாடுகளுடன் மற்றும் சில நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் மதமாகும்.

புத்த மதம் என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு பெயர் சொல்ல வேண்டுமானால், `அறிவு மதம்' என்று சொல்லுவது மிகப் பொருத்தமாகும்.
புத்தி என்ற வடமொழிப் பெயரைக் கொண்ட புத்தமதம் என்பதைத் தமிழில் கூற வேண்டுமானால், அறிவுமதம் என்றுதான் கூறலாம்.

இதற்குப் புத்தமதம், அறிவுமதம் என்று கூறுவ தற்குக் காரணம் என்னவென்றால், முதலில் கூறப்பட்ட மும்மதங்களுக்கும் கடவுள் என்பதாக ஒன்று உண்டு! ஆனால், புத்தமதம், அறிவு மதம் என்பதற்குக் கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. ஏனென்றால், அறிவுக்கு ஏற்ற கொள்கை என்றால் அதில் கடவுளுக்கிடமில்லை. ஆதலால் புத்தமதம், அறிவு மதம் என்று சொல்ல நேர்ந்தது. அறிவுப்படி கூறும்போது புத்தமதத்தை ஒரு மதம் என்று உண்மையான புத்தர்கள், அறிவாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மதம் என்றால் கடவுள் இருந்தாக வேண்டும்.
கடவுளை நம்ப வேண்டும்.
மற்றும் அறிவுக்கடங்காத சில விஷயங்களைக் கருத்துகளை நம்பியாக வேண்டும்.

ஆதலால் அறிவுக் கருத்துகளை, புத்திக் கொள்கைகளை மதம் என்று சொல்லுவதில்லை. கருத்து, கொள்கை, கோட்பாடு என்று பொதுவாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.

முற்கூறிய மும் மதங்களுக்கும் கடவுள் உண்டு என்றாலும் இவைகளில் ஒரு கடவுள் மதமும் உண்டு; பல கடவுள் மதமும் உண்டு. இம் மூன்று மதக் காரர்களும் கடவுளை அதாவது ஒரு கடவுளை பல கடவுளைக் கொண்டிருந்தாலும் கடவுளையா கட்டும் மற்றும் தேவர்களையாகட்டும் ஒன்று என்றும், பல என்றும் கொள்கையாகக் கொண்டிருந்தாலும், இவர்கள் எல்லோரும் கடவுளை ஒரே தன்மையாகத்தான் கருதுகின்றார்கள்.
எப்படி என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எல் லோரும் கடவுளை மனிதனைப் போலவேதான் கருது கிறார்கள். அதாவது இலக்கணத்தில் அஃறிணை, உயர்திணை எனப்படுகின்ற இரண்டு திணைகளில் ஒன்றான உயர்திணைப் பொருளாக, அதுவும் மனி தனைப் போல் மனிதனுக்குண்டான எல்லாக் குணங் களையும் பொருத்தி, மனிதனாகவே மனிதத் தன்மையுடைய வனாகவே மனிதனைவிட எண்ணத்தில் மனித எண்ணமுடையவனாகவே இருந்தாலும் செய்கையில் சிறிது சக்தி அதிகம் உடையவனாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி என்றால் மனிதன் தனது எண்ணத்தை நிறைவேற்ற செய்கையில் செய்தாக வேண்டும். ஆனால், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுள் மனிதனைப் போன்ற எண்ணங்களை உடையவனாகவே இருந் தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற கரியத்தில் செய்யாது `நினைத்த மாத்திரத்தில் ஈடேறக் கூடிய' மாதிரி நினைப் பிலேயே செய்து விடுகிறான்.

இதுதான் மனிதனுக்கும், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள பேதமே தவிர, மற்றபடி தத்துவத்தில் ஒரு பேதமும் இல்லை.

இரண்டு பேரும் மனிதர்களேதான்; இரண்டு பேரும் மனித சுபாவம் உடையவர்களேதான். ஒன்றுக்கொன்று உயர்வுகூற வேண்டுமானால், செய்கையில் சக்தி அதிகம் என்பதைத் தவிர எண்ணத்தில் உயர்வான எண்ணம் என்பதாக என்றோ அல்லது தன்மையில் உயர்வான தன்மை என்பதாக என்றோ இருப்பதாக எதுவும் இல்லை. எதையும் நாம் காண - அனுபவிக்க தக்கதாகக் கற்பிக்கவில்லை.

கிறிஸ்து கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு குமாரன் உண்டு.
முகமது நபி கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு தூதன் உண்டு.
அதுபோலவே மனிதனுக்கும் குமாரன் உண்டு; தூதன் உண்டு.
கடவுள் ``இவைகளை எண்ணத்தில் உண்டாக்கிக் கொண்டான்'' அதுவும் ஒரே ஒரு தடவைதான். மனிதன் இவைகளைச் செய்கையில் தினமும் உண்டாக்கிக் கொள்கிறான்.

இப்படியே தான் ஒவ்வொரு காரியத்தையும்.

உதாரணமாக, கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.

மனிதனும் அப்படியே! தனக்கு நன்மை செய்தவர் களுக்கு நலம் செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.

அவன் - கடவுள் - நினைத்த உடன் காரியம் ஆகும்படி செய்கிறான். மனிதன் அதற்காகச்  செயல் செய்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான்.

கடவுள் எவ்வளவு தவறு செய்த மனிதனையும் தன்னைப் பிரார்த்தித்து, தோத்தரித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான்.
கடவுளும் சிலரை மன்னிக்காமல் தண்டிக்கிறான்.

மனிதனும் அதுபோலவே மன்னிக்காமல் சிலரைத் தண்டிக்கிறான்.
கடவுளும் பழிவாங்குகிறான். மனிதனும் பழிவாங்குகிறான்.

இப்படியே மனிதனிடத்தில் உள்ள எல்லாக் குணங்களும் கடவுளிடத்திலும் உண்டு; கடவுளிடத்தில் உள்ள எல்லாக் காரியமும் மனிதனிடத்தில் உண்டு!
மனிதனுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு; கடவுளுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு!

மனிதனுக்கும் பிற மனிதனைத் தண்டிக்க ஜெயில் உண்டு; கடவுளுக்கும் தண்டிக்க நரகம் உண்டு!

மனிதனும் தண்டனை கொடுக்கிறான்; கடவுளும் தண்டனை கொடுக்கிறான்!
மனிதனும் மனிதனை - ஜீவனை ஏராளமாகக் கொல்லுகிறான். கடவுளும் ஏராளமான மனிதர்களை - ஜீவன்களைக் கொல்லுகிறான்! அதாவது சாகடிக் கிறான்!

மனிதனும் மக்கள் பட்டினிகிடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; கடவுளும் ஏராளமான மக்கள் ஜீவன்கள் பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

மற்றும் பல கடவுள்களையும் பல உருவக் கடவுள்களையும் கற்பித்துக் கொண்டவனும் மனிதனே. மனிதத் தன்மையையே தான் கடவுளாக ஆக்கிக் கொண்டான் என்றாலும், இவன் (பல கடவுள்காரன்)  அயோக்கியத்தனத்தையும் இழிகுணத் தன்மையும் கொண்ட மனிதனைத்தான் கடவுளாகக் கற்பித்துக் கொண்டான். ஏனென்றால், பல கடவுள்களை, பல உருவக் கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட மனிதன் காட்டு மிராண்டியாய், மூர்க்கனாய், மடையனாய், ஒழுக்கம், வரைமுறை என்பவை ஏற்படாதவனாய் இருந்த காலத்தில் கற்பித்துக் கொண்டதால், அன்றைய நிலைக்கு ஏற்ற, பொருந்திய, விளங்கிய தன்மைகளையும் கொண்டே கற்பித்துக் கொள்ள வேண்டியவனானான்.

உதாரணமாக பார்ப்பான் துவக்கத்தில் கடவுள், கடவுள் தன்மை என்பதாக எதையும் கற்பித்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்தக் காலத்தில் அவன் மலைவாசியாக இருந்தான். ஆனதால் அவன் `ஆகாயத்தில் மறைவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற'தாக பல தேவர்களைக் கற்பித்துக் கொண்டான்! இவர்களையும் மிக்க கீழ்த் தரமான மனிதத் தன்மைகொண்டவர்களாகவே கற்பித்துக் கொண்டான்.

இந்தக் கற்பனைத் தேவர்களும்கூட அய்ரோப்பிய காட்டுமிராண்டி மக்களால் பல காரியங்களுக்கு, பல குண முடையவர்களாகக் கற்பித்து, பாவித்துக் கொண்ட தேவர் களையே அவர்களது பெயர்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். சைவர்களால் ருத்திரன் என்றும், துர்க்கை என்றும் போற்றப்படும் தேவர்கள் அய்ரோப்பிய காட்டுமிராண்டிகளால் ``தகப்பன் கடவுள்'' என்ற பெயரால் ஏற்பாடு செய்து கொண்ட தேவர்களாவார்கள். அதையேதான் சைவனும் இன்று `அம்மை கடவுள்' `அப்பன் கடவுள்' என்று சொல்கிறார்கள்.

அந்தக் கடவுளுக்குக் காட்டாளர்கள் போலவே ஆயுதங்கள், மழு, சூலாயுதம், மாட்டு வாகனமும், பெண் கடவுளுக்கு அரிவாள் சூலாயுதம், சிங்க வாகனமும், கோரமான உருவமும் கொண்ட பெண்களாகக் கற்பித்து வணங்கி வந்திருக்கிறார்கள். மற்ற தேவர்களும் அப்படியே கற்பிக்கப்பட்டு பரப்பிவிடப் பட்டார்கள்.

அக்காலத்தில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தேவர்கள் பஞ்ச பூதங்களுக்கு அய்ந்து தேவர்கள் என, நிலம் - பார்வதி; நீர் - வருணபகவான், காற்று - வாயு பகவான்; நெருப்பு - அக்னி பகவான்; ஆகாயம் - ஆகாச வாணி; சூரியன் - சூரிய பகவான்; சந்திரன் - சந்திர பகவான்; சாவு - எம தர்மன்; உற்பத்தி - பிரம்ம தேவன்; வாழ்வு - விஷ்ணுதேவன்; அழிவு - ருத்திர (சிவ) தேவன்; காலை நேரம் - உஷாதேவி! இன்னும் இப்படியே பல தேவர்கள்! இவர்களுக்கு அரசன் இந்திரன்! இவனைத் தேவேந்திரன் என்றே சொல்லுவார்கள்.

இவ்வளவு பேர்களுக்கும் கணவன், மனைவிகள்! சிலருக்கு மக்களும் உண்டு! இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இத்தனை பேர்களையும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் இல்லாத அயோக்கியத் தன்மையுடைய மனிதர்களாகவே கற்பித் துக் கொண்டார்கள். இவர்களுக்கு வரைமுறையே இல்லாமல் இருக்கிறது. கூடாதது, இழிவானது. மகாபாதகமானது என்று நாம் இன்று கூறும் முறைகளை ஆண் பெண் சம்பந்தத்திற்குக் கற்பித்துக் கொண் டார்கள். பிற்காலத்தில் நாளா வட்டத்தில் இவர்களைக் கடவுளாகவே ஆக்கி விட்டார்கள்! நாமும் இன்று இவற்றை இவர்களைத்தான் பெண்டு பிள்ளை இழி தன்மை சகிதமாகக் கடவுளாகவும், கடவுள் தன்மை யாகவும் கருதி இவர்களை வணங்கினால் நமக்கு சகல பாக்கியமும் கிட்டும் என்று நம்பித் தொழுது வணங்கி வருகிறோம்.
கடவுள் என்றால், கடவுள் தன்மை என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? என்பதே தெரியாதவர்களாய் இருக் கிறோம்.

மனித  உருவத்தை - மனிதத் தன்மையை - ``மனிதத் தன்மையிலும் இழி குணமுள்ள மனிதத் தன்மையை'' கடவுளாகக் கருதி வணங்கி வருகிறோம் என்பதோடு, வாய்ப்பேச்சளவில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சர்வ சக்தி கொண்ட ``எல்லாம் வல்லவர் கடவுள்'' என்று பேசி மனப்பால் குடித்து வருகிறோம்! ஆனால், ஒன்றையும் காரியத்தில் அறிய முடியவில்லை.
பொதுவாக மனிதன் பெரிதும் எதில் முட்டாள் - மடையன் என்றால், இந்தக் கடவுள் எண்ணத்திலே தான், முதலாவது முட்டாளாக, மடையனாக விளங்கு கிறான்! என்ன காரணமோ இந்த மடைமையை விளக்க, எடுத்துக்கூற அறிவு படைத்த மக்களாகிய நம்மில் எவரும் முன்வருவதில்லை.

உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய தத்துவ ஞானி என்பதாக ஒருவரைக் கூற வேண்டு மானால், சரித்திர அகராதிப்படி புத்தரைத்தான் சொல்ல முடி கிறது. அடுத்தாற்போல் மேல் நாடுகளில் தோன்றியவர் சாக்கரட்டீஸ் என்ற விஞ்ஞானியாவார். இவர் புத்தருக்குப் பின் தோன்றியவரே.

இவர்களுடைய விஞ்ஞான போதம் சிந்திப்பாரற்று - சீந்துவாரற்று மறைந்து கிடக்கின்றன. பொய்க் கற்பனையையும் மடமையையும் போதித்தவர்களையே உலகம் போற்றுகிறது, பின்பற்றுகிறது.

அரசன் - ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைபட்டவனாகி விட்டான். பார்ப்பான் தன் (இன) சுயநலத்திற்கே அடிமைப்பட்டவனாகி விட்டான். அவன் (பார்ப்பான்) தன்னை மேலான பிறவி என்று ஆக்கிக் கொள்வதில் தான் கவலைகொண்டு, அதற்காகவே கடவுளை வைத்து வருகிறானே ஒழிய, மேலான பிறவி என்பதற்கு தன்னிடம் ஏதாவது மேலான குணமிருக்க வேண்டுமே என்பது பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை.

அதுபோலத்தான் கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் `உள்ள' எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லி கற்பித்தார்களே ஒழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது? என்று எதையும் எவரும் நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டவே இல்லை.

-------------------------------28.4.1968 அன்று ”விடுதலை”யி ல் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

28.7.13

இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை - ஹிந்துராஷ்டிரம் வந்தால்... எச்சரிக்கிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி !

முதல் மணி அடித்தார் தலைவர் வீரமணி!

சென்னை - பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் முதல் மணி அடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்துராஜ்ஜியத்தை நிறுவுவோம் என்று சூளுரைத்துப் புறப்பட்டுள்ளது ஒரு கூட்டம்.
இதற்கு முன்பு அரசல்புரசலாகப் பேசிவந்த அந்தக் கூட்டம் இப்பொழுது தேர்தல் நேரத்தில் வெளிப் படையாக மணி அடித்துக் கிளம்பிவிட்டது.
இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை மணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒலித்தார்.
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று (25.7.2013) மாலை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் எச்சரிக்கை மணியை ஒலித்தார்.
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக்கூடிய மோகன்பகவத் கடந்த ஞாயிறன்று குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டினார்.
இந்தியாவின் அடையாளம் என்பதே இந்துத்து வாதான் என்று அவர் பேசியிருப்பதை எடுத்துக் காட்டினார். வெகுகாலமாக இந்த அடையாளம் இருப்பதாக பகவத் சொன்னதில் உண்மை உண்டா?இந்தியா என்பது ஒரு நாடா? துணைக் கண்டமா? இந்தியா என்ற பெயர் எப்பொழுது வந்தது? 56 தேசங் களாகப் பிரிந்து கிடந்த நாட்டை ஒரு குடையின்கீழ் துப்பாக்கி முனையில் கொண்டு வந்தவன் வெள்ளைக் காரன் அல்லவா!
இந்தியாவில் எத்தனை எத்தனை இனங்கள், எத்தனை எத்தனை மொழிகள், எத்தனை எத்தனை பண்பாடுகள்!
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இந்துத்துவா என்கிற அடையாளம்தான் இந்தியாவுக்கு என்பது எவ்வளவு பெரிய இமயமலைப் பொய் மூட்டை!
முதலில் இந்து என்றால் என்ன என்பதை விளக் கட்டுமே பார்க்கலாம் - அதை விளக்கி விட்டல்லவா அதன் அடையாளத்தைப் பற்றிப் பேசவேண்டும்? என்று ஆணிவேரில் பலத்த அடி கொடுத்தார் ஆசிரியர்.
இந்து என்ற சொல் இந்தியாவில் எந்த மொழியில் உண்டு? என்ன ஆதாரம் கூற முடியுமா?
இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் கொடுத் தானோ, நாம் பிழைத்தோமோ என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?
இந்த நிலையில் எங்கிருந்து குதித்தது இந்து அடையாளமும் - இந்துக் கலாச்சாரமும்?
இந்து என்ற சொல்லுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள விளக்கத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபொழுது கூட்டமே கலகலத்தது.

யார் யாரெல்லாம் கிறித்தவர் அல்லவோ, யார் யார் எல்லாம் முசுலிம் அல்லவோ, பார்சி அல்லவோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லுவதன்மூலம் இந்து என்பதற்கு எந்த ஒரு தனித்துவமும் இல்லை என்று விளங்கவில்லையா?
எது ஒலி பெருக்கி என்று கேட்டால், எது மேசை அல்லவோ எது புத்தகம் அல்லவோ, எது பேனா அல்லவோ அதுதான் ஒலிபெருக்கி என்று சொன்னால், எப்படி இருக்கும்? என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது, சிரிப்பும், கரவொலியும் கலந்து வந்தன.
தனித்துவம் இல்லாத ஒன்று ஒரு நாட்டு மக்களுக்கு அடையாளமாக இருக்க முடியுமா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கிருத்தவனாக இருக்க முடியாது; முசுலீமாகவும் இருக்க முடியாது. ஆனால், அர்த்தமுள்ள இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இந்து, நம்பிக்கை இல்லாதவனும் இந்துவாம்!
(கூட்டத்தில் ஒரே சிரிப்பு!).
ஹிந்துத்வா எப்படி வந்தது? 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதனை அறிமுகப்படுத்திய ஆசாமி யார் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்தினார் ஆசிரியர்.
வெளிநாட்டில் சென்று படித்து வந்த வி.டி. சாவர்க்கர் தான் இதன் தந்தை.
Hindus are a nation bound by
a common culture,
a common history,
a common language,
a common country
and a common religion
பொதுக் கலாச்சாரம்
பொது வரலாறு
பொது மொழி
பொது நாடு
பொது மதம் - இவை அய்ந்தும் சேர்ந்ததுதான் இந்துத்துவா என்கிறார் சவர்க்கார்.
இந்த அய்ந்து பொது அம்சங்களும் இந்தியாவில் எங்கு இருக்கின்றன? ஹிந்து என்பதில்கூட எத்தனை எத்தனைப் பிரிவுகள் - பிளவுகள் - பிணக்குகள்! எத்தனை எத்தனை முரண்பட்ட அம்சங்கள்!
எப்படி கொண்டு போகிறார்கள்? ஆர்.எஸ்.எஸின் தலைவராகவிருந்த மோகன் பகவத் கூறுகிறார்: யூதர்களும், பார்சிகளும் தவிர இந்தியாவிலுள்ள அனைத்து மதக்காரர்களும் இந்துக்கள்தானாம். இந்த பகவத் மட்டுமல்ல, இவருக்கு முன்னர் இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கு.சி.சுதர்சன் (குப்பஹள்ளி சீதாராமய்யா சுதர்சன்) ஆக்ராவில் நடைபெற்ற (15.10.2000) தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு விழாவில் என்ன கூறினார்?
பூர்வீகத்தில் நாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்து களுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆகியோ ருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பேசவில்லையா? நேற்றைய கூட்டத்தில் இதனை எடுத்துக்காட்டிய திராவிடர் கழகத் தலைவர் ஓர் வினாவை எழுப்பவும் தவறவில்லை.
இப்பொழுதுள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நமது முன்னோர்கள் என்று ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு - அவர்களை ஏன் பிரித்துப் பேசவேண்டும்? நம் சகோதரர்கள் என்ற உணர்வு ஏன் வரவில்லை என்ற வினாவை எழுப்பினாரே பார்க்கலாம்.

கிறித்தவர்கள் ராமனையும், முஸ்லிம்கள், கிருஷ் ணனையும்
வணங்கவேண்டும் என்று சொல்லுவ தோடு நிற்கவில்லை. குருஜி கோல்வாக்கரின் வரையறுக்கப்பட்ட தேசியம் எனும் நூலில் இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக்கூடாது; அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழவேண்டும்; எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று எழுதி வைத்திருப்பவர்தானே இந்த இந்துத் துவாவாதிகளின் குருஜியான கோல்வால்கரின் கருத்து.
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகச் சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதானே ஏற்படும்?
அவர்கள் கூறும் ஹிந்துத்துவாவில் கூறிய படி ஒரே நாடு என்றால் மாநிலங்களே கூடாது - ஒரே நாடாகத் தானிருக்கும் - சமஸ்கிருதம்தான் ஒரே மொழி - பார்ப்பனக் கலாச்சாரம் ஒன்று மட்டும்தான் அங்கீ கரிக்கப்படும்.
மதுரையிலே விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்களின் மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தைக் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.
ஹிந்து ராஜ்ஜியம் வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்படும்; மனுஸ்மிருதிதான் அரசமைப்புச் சட்டமாகும் என்று சொல்லவில்லையா? என்ற தகவலைச் சொன்னபொழுது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அமைதி நிலைகொண்டது!
நமது அரசர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள்? மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா? மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறதா? என்றுதானே கேட்பார்கள்.
அந்த நிலை எப்படி மாறியது? எப்பொழுது மாறியது? கல்வி உரிமை நமக்கு வந்த வரலாறு என்ன? யார் காரணம்? என்ற வினாவை எழுப்பிய தமிழர் தலைவர் அதற்கு விடையையும் தந்தார். தந்தை பெரியார், திராவிடர் இயக்கம்- தன்மான இயக்கம் தோன்றிய பிறகே இந்த நிலைமைகள் மாறின என்று குறிப்பிட்ட பொழுது பலத்த கைதட்டல்!
ஹிந்துத்துவாவை அரங்கேற்றிய வி.டி.சாவர்க்கர் இந்து ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்கிறார்? அதனை ஆதாரத்தோடு எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
சதர்வர்ணாய வியவஸ்தாபன்
யாஸ்மின்தேஷ் ஹிக நாவித்யத்தே;
தாம் மிலேச்சதேஷ்ம் ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே
The land where the system of Four Varnas does not exit should be known as the Mellach country Aryavart lies away from it’’
எந்த நாட்டில் நால் வருணம் இல்லையோ, அந்த நாடு மிலேச்சர்களின் நாடு என்று பொருள். ஆரிய வர்த்தம் என்பது அதற்கு மாறுபட்டது என்றுகூறுகிறார் வி.டி.சாவர்க்கர்.
இதில் கிறித்தவர்களாக மாறியவர்கள் மத்தியில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுள்ளது. ஜாதியை முற்றிலும் நிராகரித்தவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே!
மோடி ராஜ்ஜியம் வந்தால் அது அசல் மனுதர்ம ராஜ்ஜியமாக ஆரிய வர்த்தமாகத்தான் இருக்கும்.
இதுவரை பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார்கள் இப்பொழுது முன்னணி யிலே வந்து நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றன. தேர்தல் களத்திலேயே முன்னிறுத்த முனைந்து விட்டனர்!

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது இந்துத் தேசியவாதி என்று மோடி சொல்லுவதன் இரகசியம் இதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை (Preamble) என்ன சொல்லுகிறது?
We, the people of India having solemnly resolved to constitute India in to (Sovereign Socialist Secular Democratic Republic) and to secure to all its citizens Justice, Social, Economic and Political என்றுதான் தொடங்குகிறது. மதச் சார்பற்ற, சோசலிசக் குடியரசை அமைப்பது என்பதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை.
இந்த மதச் சார்பற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளாத - தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று கூறும் ஒருவர் இந்தியாவின் பிரதமர் என்று சொல்லும் ஹிந்துத்துவா சக்திகளை முறியடிக்கவேண்டாமா? மோடி கூறுவது சட்ட விரோதம் அல்லவா? என்றார் தமிழர் தலைவர்.
இந்தியாவுக்கே முதல் மணியை - எச்சரிக்கை மணியை பெரியார் திடல் ஒலிக்கிறது; இது தொடக்கம்தான்.
மத்தியில் இருக்கும் ஆட்சியின்மீது இருக்கும் சில அதிருப்தி உணர்வுகளைப் பயன்படுத்தி, இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி ஹிந்துத்துவாவை அரங்கேற்ற லாம் என்று நினைக்கிறார்கள்.
வெறும் கோபத்தினால் மக்கள் தவறான முடிவை எடுத்தால் அதன் விளைவு - மனுதர்மம்தான் நம்மை மீண்டும் ஆளக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்; ஆம், முதல் மணியை அடித்தார் தமிழர் தலைவர்.
75 நிமிடங்கள் உரையாற்றினார். தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
நடிகவேள் ராதா மன்றம் நிரம்பி வழிந்தது - பலதரப்பினரும் இந்த ஆய்வுரையைச் செவிமடுத்தனர். உரை நிகழ்த்திய பிறகு பல தரப்பினரும் தமிழர் தலைவரைச் சுற்றி நின்று தங்கள் பாராட்டுகளை, உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் இதுவரை அறிந்திராத பல புதிய தகவல்களை அறிந்தேன் என்று கூறி, இந்துத்துவாவின் பேராபத்தை முழுவதும் தாங்கள் உணர்ந்துள்ள அளவுக்கு வேறு எவரையும் என்னால் நினைக்க முடியவில்லை என்று மனந்திறந்து பாராட்டினார். இந்தவுரை முன்னுரைதான் - சில நாட்களில் தொடரும்.
                                                                               ------------------------------------------(வளரும்)
**********************************************************************************
இந்து மதம்பற்றி நீதிபதி ராஜமன்னார்
இந்து மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச் சொல்லினுடைய தெளிவில்லாத - கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம்பற்றிய உணர்வோடுதான் இருக்கிறேன் என ஒளிவு - மறைவு இல்லாமல் வெளிப்படுத்தித் தீரவேண்டியிருந்தது.
(‘‘When I speak of Hindu religion I am actually conscious of the vague connotation of that word’’ Michael vs Venkateswaran case: MLJ 239/1952-1)
தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக  நீதிபதி ராஜமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு என்னும் நூலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்துகொள்ளும் பொருளின்படி இந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று. அல்லது இந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒருபோதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது.
(‘‘Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it ever used by the Hindus as the name of their religion’’ The Cultural Heritage of India; Haridass Battacharia; ILR 1953 (Madras)- 106).
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் இதனை எடுத்துக்காட்டினார்.
******************************************************************************
                       ----------------------------------------26-7-2013
ஹிந்துராஷ்டிரம் வந்தால்... எச்சரிக்கிறார் தமிழர் தலைவர்!
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்த தகவல்கள் (25.7.2013) பலவும் பார்வையாளர்களுக்குப் புத்தம் புதியதாகவே இருந்தன. நேபாளம் முதல் கேரளா வரை இந்து ராஜ்ஜியம் எப்படி கொடிகட்டி ஆண்டது என்பதை எடுத்துச் சொன்னால், ஹிந்துராஷ்டிராவின் ஆபத்தை உணரலாம் என்ற பீடிகையோடு பல்வேறு ஆதாரங்களையும் எடுத்துக்காட்டினார்.

20 ஆம் நூற்றாண்டுவரை இந்துக்களுக்கு என்று ஒரு ராஜ்ஜியம் இருந்து வந்தது; அதுதான் நேபாளம் - இந்து மன்னர்களின் கைகளில் அந்த ஆட்சி இருந்து வந்தது. மாவோயிஸ் டுகள் தலைதூக்கி அந்த ராஜ் ஜியத்தைத் தரை மட்டமாக்கினர்.

ஹிந்துராஷ்டிராவை அமைக்கப் போவதாக இந்தியாவில் உள்ள காவிகள் - சங்பரிவார்கள் முஷ்டி யைத் தூக்கிக்கொண்டு அரட்டைக் கச்சேரிகளை நடத்துகிறார்களே, மீண்டும் மனுதர்மக் கொடியைப் பறக்கவிட்டுக் குளிர்காயலாம் என்று ஆரிய நரிகள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகின் றனவே - அப்படி ஓர் இந்து ராஜ்ஜியம் வந்தால் அது எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டவே இந்து ராஜ்ஜியமாக இருந்த நேபாளம் எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டினார் - எதையும் ஆதாரத் துடன் மேடைகளில் பேசுவதை தம் இயல்பாகக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்,

நேபாளத்தைப் பாரீர்!

மகா தவிரா சங்கராசி
ஸ்த்ரா (Maha sthavira sangharakshita) என்ற புத்த பிக்கு விசுவ ஹிந்து பரிஷத்தினர் ஏற்பாடு செய்த டில்லிக் கூட்டத்தில் (23.2.1982) பேசிய பேச்சினை ஆதாரப்படுத்தினார்.

இதோ புத்தப் பிக்குப் பேசுகிறார்:

1949 மற்றும் 1952-களில் நான் நேபாளம் சென்றதுண்டு. ஜாதி முறை எப்படியெல்லாம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டேன். ஜாதி முறையைப் பின்பற்றவில்லையென்றால், அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் - அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
நான் நேபாளத்தில் ஒரு புத்த மடத்தில் தங்கி இருந்தேன். நடு ராத்திரியில் ஒருவர் கதவைத் தட்டினார்; இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் இந்த இரவு இங்கே தங்கலாமா? அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.

ஏன்? என்ன அவசியம்? என்று கேட்டேன். அதற்கு அந்த இந்து மதக்காரர் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் ஜாதியை இழந்துவிட்டேன்; ஜாதிக்கு விரோ தமாக நடந்துகொண்டு விட்டேன். அதனால் நான் என் வீட்டுக்குச் செல்ல முடியாது; என் மனைவியும், என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாள்; அப்படி அவள் அனுமதித்தாலும் அவளும் ஜாதியை இழந்துவிடுவாள்!

ஏன் அப்படி என்று நான் கேட்டேன். அதற்கு அந்த இந்து ஆசாமி சொன்ன பதில்: வியா பார நிமித்தமாக நான் வெளியூருக்குச் சென்றிருந்த இடத்தில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். ஒரு சத்திரத்தில் தங்கினேன் - தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு உதவினார். எனக்கு வேறு யாரும் உதவ முன்வரவில்லை; அந்தத் தாழ்ந்த ஜாதிக்காரன் தந்ததையும் சாப்பிட்டேன்; அதனால் என் ஜாதி என்னை விட்டுப் போய் விட்டது. எனவே, என்னைத் தயவு செய்து இந்த இரவு தங்கிட அனுமதியுங்கள் என்றான்.

நாளை நானே நேரில் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று நடந்ததைச் சொல்லி அபராதம் கட்டி, இழந்த என் ஜாதியை மீண்டும் பெறுவேன். என் மனைவியும் அப்பொழுது என்னை ஏற்றுக்கொள்வாள் என்று கூறியவற்றையெல்லாம் விசுவ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் அந்தப் பவுத்த பிக்கு சொன்னதை கழகத் தலைவர் 25.7.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுத்துக்காட்டினார்.

-------------------(ஆதாரம்: Religion and secularism - a lecture given to vishva Hindu Parishad)

இந்தப் பகுதியை எடுத்துக்காட்டிய தமிழர் தலைவர் - இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் வந்தால், இங்கும் அந்த நிலைதான் ஏற்படும் என்று எச்சரித்தார்.
அப்படி ஒரு ராஜ்ஜியம் வந்தால் நம் மக்களும் சூத்திரப் பட்டத்தை நல்ல இடத்தில் குத்துங்கள் என்று முகத்தைக் காட்டினாலும் காட்டுவார்கள் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அனைவருக்கும் ஒரே மன இறுக்கம் தான்!

மகாராட்டிரத்தைப் பாரீர்!

நேபாளம் அப்படி என்றால், மகாராட்டிரத்தின் நிலை என்ன?
மலை எலி என்று கூறப்படும் சிவாஜி, யுத்தம் பல வென்று ஒரு புது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான்.

களம் பல வென்ற அந்த மாவீரன் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள முடிந்ததா என்றால், முடியவில்லை; காரணம் சிவாஜி சூத்திரனாம்; இந்து மதத்தின் வருண தர்மத்தின்படி சூத்திரன் முடிசூட்டிக் கொள்ள முடியாது - சத்திரியன்தான் அரசாள முடியும்.

முடி சூட என்ன வழி என்று சிவாஜி கேட்டபோது, சில பிராயச்சித்தங்களை நடத்தி சத்திரியனாக்கி முடிசூட்டும் தகுதியைப் பெறலாம் என்றனர். அதற்கு என்ன செய்யவேண்டும்? யாகங்கள் செய்யவேண்டும் என்றனர்- பார்ப்பனர்கள்!
கங்கைக்கரைப் பகுதியிலிருந்து பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒருவர் அல்லர், இருவர் அல்லர், 11 ஆயிரம் பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டனர். கங்க பட்டர் என்ற பார்ப்பனர் காசியிலிருந்து வரவழைக்கப் பட்டார். அவர்தான் தலைமைப் புரோகிதர்.

1674 மே 28 ஆம் தேதியன்று கங்கப்பட்டன் என்ற அந்தப் புரோகிதன், சிவாஜியின் காதில் காயத்ரி மந்திரங்களை ஓதி, சூத்திரன் சிவாஜியை சத்திரியனாக மாற்றினானாம்.

சிவாஜியின் 300 ஆவது ஆண்டு விழா கொண்டா டப்பட்டபோது, டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஜஸ்டிஸ் ஏட்டில் மூன்று அற்புதத் தலையங்கங்களை அற்புதமான ஆங்கிலத்தில் எழுதினார்.

18 மாதங்கள் யாகங்கள் நடத்தப்பட்டன. விளைவு சிவாஜியின் கஜானா காலியனதுதான் மிச்சம்!

மிக அழகாக டாக்டர் இராமசாமி முதலியார் எழுதி னார். சுரண்டிக் கொழுத்த பார்ப்பனர்களுக்கு ஏகபோக ஆதிக்கக்காரர்களுக்கு - அவர் இட்ட பெயர் மோனோ பொலிஸ்ட்ஸ் (Mono polists) They got the lost pie out of his treasury.
சிவாஜியின் கஜானாவிலிருந்து கடைசிப் பைசாவைக் கூட பார்ப்பனர்கள் சுரண்டிக் கொண்டு விட்டனர் என்று எழுதினாரே!

அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் நாடகத்தை எழுதினார். அதில் சிவாஜி எப்படி யெல்லாம் பார்ப்பனர்க ளால் ஆட்டி வைக்கப் பட்டான். அவன் செல்வம் எப்படியெல்லாம் சுரண் டப்பட்டது என்பதை நாடக வடிவத்தில் விளக் கினார். அந்த நாடகத் தில் அண்ணா அவர் களே காகப்பட்டராக அருமையாக நடித்திருக் கிறார்.
சிவாஜியின் அந்திம கால வாழ்வு மிகவும் பரி தாபகரமானது. சிவாஜிக் குப் பிறகு ராஜ்ஜியம் பேஷ் வாக்கள் எனும் பார்ப் பனர்களின் கைக்குச் சென்றது.
சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்பது இந்தி யாவுக்கு ஒரு சரியான எச்சரிக்கையான பாட மாகும்! என்றார் திரா விடர் கழகத் தலைவர்.

கேரளாவைக் காணீர்!

அடுத்து தெற்கே கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஹிந்துத்துவா அங்கே எப்படி ஆட்கொண்டது என்பதும் முக்கியமானதாகும்.
Missionaries and a Hindu State Travancore 1858-1936  எனும் தலைப்பில் ஜப்பானிய நாட்டின் பல்கலைக் கழகப் பேராசிரியர் கோஜி கவாஷிமா (Kogi Kawashima) என்பவர் எழுதியுள்ளார்.

அந்த நூலைப்பற்றிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்கள் 2013 ஜூன் திங்கள் உங்கள் நூலகம் எனும் அருமையான இதழில் சிறப்பான கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

திருவாங்கூர் அரசை ஓர் இந்து அரசு என வரை யறுத்துவிட்டு, சமய வேறுபாடுகளுக்கிடையில் கல்வி மருத்துவ வளர்ச்சியில் திருவிதாங்கூர் அரசும் மிஷனரி களும் செயல்பட்ட முறை குறித்தும், திருவிதாங்கூர் பகுதியின் அடித்தள மக்கள் பிரிவினர் மீதான அரசு மற்றும் மிஷினரிகளின் அணுகுமுறை குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.

இதோ கட்டுரை தொடர்கிறது:

இந்து அரசு

மன்னர்களால் ஆளப்பட்ட திருவிதாங்கூர்ப் பகுதியில் வேணாட்டு மரபு என்ற பெயரிலான ஆட்சி மரபைத் தோற்றுவித்தவர் மார்த்தாண்ட வர்மா (1729-1758). ஆட்சி அதிகாரத்திற்கான போராட் டத்தில் தனக்கு முந்தைய மன்னனின் மகன்களைக் கொலை செய்ததுடன், தனக்கு எதிராகச் செயல்பட்ட 42 பேர்களைத் தூக்கிலிட்டார். அத் துடன் நில்லாது அவர்களின் பரம்பரையே அற்றுப் போகவேண்டி அவர்களது குடும்பப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக ஏலமிட்டார். மனுதர்மம் அனுமதிக்காது என்பதால், தனக்கு எதிராகச் செயல்பட்ட பிராமணர்களைக் கொலை செய்யாது, பிராமண ஜாதிக்குப் புறம்பாக்கி அவர் களது நெற்றியில் நாய்ச் சின்னத்தைப் பொறித்தார்.

மற்றொரு பக்கம் சில நிர்வாகச் சீர்திருத்தங் களும் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்கிலும் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. மிளகு வாணிபம் அரசின் ஏகபோக உரிமையானது.

இவையெல்லாவற்றையும்விட 1750 ஆம் ஆண்டில் அவர் செய்த ஒரு செயல் திருவிதாங்கூர் வரலாற்றில் மிக முக்கியமான செயலாக அமைந்தது. அரசர் தன் குடும்பத்தினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் புடைசூழ திருவனந்தபுரத் திலுள்ள பத்மனாபசாமி கோவிலுக்குள் சென்று, தன்னை பத்மனாபசாமியின் அடிமையாக அவர் அறிவித்துக் கொண்டார். அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை அக் கடவுளின் பெயருடன் இணைத்து பத்மனாபதாசன் என்ற பெயரைத் தம் இயற்பெயருடன் இணைத்துக் கொண்டார். (இவரையடுத்து வந்த ஏழு மன்னர் களும் பத்மனாபதாசன் என்ற பட்டத்தைத் தாங்கியே ஆட்சி புரிந்தனர்).
பத்மனாப சாமியிடம் நில மானியம் பெற்ற குடி ஆளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். பத்மனாபசாமியே உண்மையான ஆட்சியதிகாரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியதன் வாயிலாக அவரது ஆட்சி தெய்வீகமயமாக்கப்பட்டது.

பத்மனாபசாமியின் தாசன் என்பதை மக்களுக்கு நினைவூட்டிக் கொள்ளும் வகையில் புதிதாகப் பதவியேற்கும் மன்னர் படியேத்தம் என்ற சடங்கு ஒன்றை நிகழ்த்துவார். இச் சடங்கின்படி கோவிலின் முன்புள்ள பீடத்தில் தன் வாளை அவர் வைத்துவிடுவார். கோவிலில் பூசை செய்யும் போத்தி வாளை எடுத்துச் சென்று கருவறைக்குள் இறைவனின் முன்வைத்து பூசை நடத்திவிட்டு அதை எடுத்து வந்து மன்னரிடம் தருவார். இச்சடங்கு மன்னன் என்பவன் தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மக்களுக்கு நினைவூட்டி வந்தது. திருவிதாங்கூரின் திவா னாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர், பத்மனாபசாமியே உண்மையில் ஆட்சி புரிபவர் என்றும், ஆட்சியை நிர்வகிக்கும் வைசிராய்தான் திருவாங்கூர் மன்னர் என்றும் நவீன அரசியல் மொழியில் குறிப்பிட்டார். மன்னரை விமர்சிப்பது சுவாமித் துரோகம் என்றானது.

இந்து சமயம் சார்ந்தவர் என்ற முறையில், இரண்யகர்ப்பதானம் துலாபுருஷதானம் என்ற இரு தானங்கள் திருவிதாங்கூர் மன்னர்களால் வழங்கப்பட்டன. இவற்றுள் இரண்யகர்ப்பதானம் பின்வருமாறு நிகழும்.
பெரிய வடிவிலான தாமரை மலர் ஒன்று தங்கத்தால் செய்யப்படும். இதனுள் பஞ்சகவ்வியம் (பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர், சாணம் ஆகியனவற்றின் கலவை) ஊற்றப்படும். மலர் வடிவிலான இப்பாத்திரத்தில் மன்னர் நுழைவார். அதன்பின் இம்மலர் மூடப்படும். பஞ்ச கவ்வியத்துள் அய்ந்து முறை மூழ்கி மன்னர் வெளிவருவார். இதன் பின்னரே அவருக்கு முடி சூட்டப்படும். இதன்பின் தங்கத் தாமரையைத் துண்டு துண்டாக வெட்டியெடுத்து மன்னரின் அந்தரங்க ஊழியர்களுக்கும், பிராமணர் களுக்கும் கொடையாக வழங்குவர்.

துலாபுருஷதானம் என்பது மன்னரின் எடைக்கு இணையான தங்கத்தை பிராமணர் களுக்குக் கொடையாக வழங்குவதாகும்.

முறஅய்ப்பம் என்பது அரசின் மற்றொரு முக்கிய சடங்காகும். தலைநகரான திருவனந்த புரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலில் மன்ன ராட்சியால் நடத்தப்படும் இச்சடங்கின் நோக்கம், போரின்போது மேற்கொள்ளப்பட்ட செயல் களினால் ஏற்படும் பாவங்களைப் போக்கிக் கொள்வதும், நாடு செழிக்கவேண்டும் என்பதும் தான். இச்சடங்கில் நம்பூதிரிப் பிராமணர்களும் போத்தி என்றழைக்கப்படும் பிராமணர்களும் மட்டுமே கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.

இச்சடங்கின்போது தலைமைப் புரோகிதர் வீற்றிருக்கும் பல்லக்கை, சிறிது தூரம் மன்னர் சுமப்பார். பின் அவரது காலில் விழுந்து வணங்கி அவரைத் தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்து, அவரது பாதங்களைக் கழுவுவார். இச்சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர்களுக்கான தங்கு மிடம், உணவு, தட்சிணை ஆகியவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். 1875-76 இல் 182,009 ரூபாய் இச்சடங்கிற்குச் செலவானது.

இது அந்த ஆண்டு கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாகும். 1911 ஆம் ஆண்டில் அய்ந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இது அரசின் அந்த ஆண்டுச் செலவில் நாலு விழுக் காடாகும். இவை தவிர வருடத்திற்கு இருமுறை நிகழும் ஆராட்டுத் திருவிழாவின்போது கடலில் நீராட, ஊர்வலமாக பத்மனாபசுவாமியின் உலோகப் படிமம் எடுத்துச் செல்லப்படும். இவ் வூர்வலத்தை உருவிய வாளுடன் தலைமையேற்று நடத்திச் செல்பவர் திருவிதாங்கூர் மன்னர்தான். மன்னருடன் அரசு உயர் அதிகாரிகளும் செல்வர்.

இவையெல்லாம் திருவிதாங்கூர் மன்னராட்சி யானது ஓர் இந்து ஆட்சியாக விளங்கியதன் அடையாளங்களாகும்.

        ------------------------(நூல்: திருவிதாங்கூர் இந்து ராஜ்ஜியமும் மிஷனரிகளும்)

மேற்கண்ட தகவல்களை தமிழர் தலைவர் அடுக் கடுக்காக வெளியிட்டார்.

நேபாளம்முதல் திருவனந்தபுரம்வரை...

நேபாளம் தொடங்கி மகாராட்டிரம் உள்ளிட்டு, திருவனந்தபுரம், கேரளம்வரை ஹிந்து சாம்ராஜ்ஜியம் எப்படியெல்லாம் தலைவிரித்தாடியது; பார்ப்பனர்கள் கொட்டம் போட்டனர் என்பதை நல்ல வண்ணம் விளக்கினார் விடுதலை ஆசிரியர்.

ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகக் கூறிப் புறப்பட்டுள்ள காவிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றால், நேபாளத்திலும், மகாராட்டிரத்திலும், திருவனந்தபுரத்திலும் என்ன நடந்ததோ, பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினார்களோ, அதே நிலைதான் இந்தியா முழுவதும் ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர்.

ஹிந்துத்துவாவைக் கையில் எடுத்துக்கொண்டு காவி சக்திகள் இந்தியா முழுமையும் புறப்பட்டுச் செல்லுமானால், அதனை எதிர்த்து முறியடிக்கக் கூடியது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் தான். திராவிடர் இயக்கத் தத்துவம்தான் - அதன் தொடக்க நிகழ்ச்சிதான் இது என்று வெகுநேர்த்தியாக தன் உரையை அமைத்து முடித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
***********************************************************************************

அரசன் தோன்றியது - ஏன்?

அரச பதவியின் தோற்றத்தைக் குறித்து சாந்தி பருவத்தில் (மகாபாரதம்) அடங்கியிருக்கும் இரு கருத்துக்களுமே, ராஜ்ஜியத்தின் தோற்றத்தைப் போற்றிய ஒப்பந்தத் தத்துவத்தை உள்ளடக்கியதாகப் பொருள் கொள்ளத் தக்கன. இந்தக் கருத்துக்களின் நோக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை, முற்றிலும் முரண்பட்டவை. ஆகையால், இவை ராஜதர்மம் என்ற தலைப்பில் ஒரே காலத்தில் எழுதப்பட்டனவா என்பது நமக்குத் தெரியாது. தண்டம், தண்டநீதி என்பனபற்றிய நீண்ட விவாதத்துடன் தொடங்கும் 59 ஆம் அதிகாரத்தில் முதல் கருத்து இடம்பெறுகிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும், ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும், அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும், அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. எந்த அடிப்படையில் பிருது வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள்.

(1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கமாட்டேன் (3) ஜாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் என்று மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள்.

மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால், பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தார். அரசாங்க இயலுக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கெனவே உறுதி மொழி கொடுத்திருந்தான்.

(பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் - நிலையங்கள் சில தோற்றங்கள் (பக்கம் 90) - ஆர்.எஸ்.சர்மா)
*********************************************************************************
                                            --------------------------------தொகுப்பு: மின்சாரம்-"விடுதலை” 27-7-2013

27.7.13

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா? ஜெயேந்திரர் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி!




கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.

நரேந்திரமோடி -  ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர்  கூறியுள்ளார்.
மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.

மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.

நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? 

இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.

அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.
மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.
நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?

அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும்  இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.
ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.

கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.

                       -----------------------------"விடுதலை” தலையங்கம் 25-7-2013

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா? 
 
அயோத்திப் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் அரசியலில் ஈடுபடத் தகுதி உடையவர்தானா?

பி.ஜே.பி.க்குச் சார்பாக அவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் இவர் பிஜேபியில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும்தான் தலைவரா?
காங்கிரசில் உள்ள இந்துக்களுக்கு இவர் தலைவர் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று கருதலாமா?

2004இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சென்னை தியாகராயர் நகரில், பிஜேபி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தவர்தான் இந்த ஜெயேந்திரர். அதுபற்றி பிரச்சினை எழுந்தபோது, அதில் என்ன தப்பு? என்று எதிர் கேள்வி கேட்டவரும் அவரே!

ரஜினியுடன் சேர்ந்து விஜயகாந்து ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவரும் இவரே! (குமுதம் 18.1.2001).

தன்னை நாடி வரும் பக்தர்களுக்குச் சாமியார்கள் ஆசி வழங்குவது வழமைதான். ஆனால் இந்த ஜெயேந்திரரோ வித்தியாசமான மனிதர்; தம்மை நாடிவந்த நடிகரைப் பார்த்து அரசியல் கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? சாமியார் வேடத்தில் ஓர் அரசியல்வாதி பதுங்கி இருக்கிறார் என்றுதானே பொருள்?

திருவானைக்காவல் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்த இவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். (இவருக்கு ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வேலை?).

அந்தப் பேட்டியில் என்ன சொன்னார்? பிஜேபி என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்று அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் (தினமலர் 19.3.1998) என்று சொன்னவர் தானே!

மண்டைக் காட்டிலே இந்து முன்னணிக்காரர் களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் மதக்கலவரத்தைத் தூண்டி படுகொலைகளைச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், இந்த ஜெயேந்திரர் என்ன செய்தார் தெரியுமா?

ராஜபாளையத்தில் தொழிலதிபர்கள் அடங்கிய கூட்டத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி பேசி யதைக் கேளுங்கள்.

தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது ஆர்.எஸ்.எஸை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக் காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்க போகிறீர்களா? என்று பேசியதை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான ஆர்கனைசர் (28.3.1982) வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு முறை அல்ல; இரு முறையல்ல; மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி.

1987 அக்டோபரில் அவாள் நம்பும் விஜயதசமி நாளில் ஜெயேந்திர சரஸ்வதி ஜன கல்யாண் - ஜன ஜாக்ரண் (மக்கள் நலன் - மக்கள் விழிப்புணர்வு) என்ற ஓர் அமைப்பை மடத்தைவிட்டு ஓடிய பிறகு தொடங்கினார்.

அந்த அமைப்பினுடைய கொள்கைகள் என்ன? விடுதலை சொல்லுவதைவிட தினமணி (தலை யங்கம் 5.10.1987) சொல்லுவதுதானே பொருத்த மானது.
ஹிந்து சமுதாயத்தினரிடையே இன உணர் வையும், ஒற்றுமையையும் மேலும் வளர்க்க இத்திட்டம் உதவும் என்றாலும், இதிலுள்ள சில அம்சங்கள் சர்ச்சைகளுக்குரியனவாகவும்  அரசியல் நோக்கம் கொண்டனவாகவும் அமைந்து மக்களிடையே ஓரளவு வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்று தினமணி எழுதியதே!

சங்கரமடம் என்பதும் சங்கராச்சாரியார் என்பதும் ஜெயேந்திரரை பொறுத்தவரை ஒரு வேடம்; மக்களை ஏமாற்றிட வசதியான இடம்; மற்றபடி ஒரு கடைந் தெடுத்த அரசியல்வாதி - காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் கூரிய வாள் முனைதான் ஜெயேந்திரர்

வன்முறையில் நாட்டம் கொண்டவர் - அதனால் தான் வழக்குகளில் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்கள் இவரை ஜெகத்குரு என்று உச்சி மோந்து பாராட்டுகின்றனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது! நம் மக்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வருமா? 

                            -----------------------------"விடுதலை” தலையங்கம் 26-7-2013

26.7.13

மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.! - கி.வீரமணி


  • நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடாது என்று சொன்ன நோபல் அறிஞர் அமர்த்தியாசென்னைப் பழி தூற்றுவதா?
  • பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டும்என்று பி.ஜே.பி. கூறுவதா?
  • பி.ஜே.பி.யின் ஜனநாயகக் கோட்பாடு இதுதானா?
  • மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.!

தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று கூறிய நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென்னைக் கடுமையாக விமர்சித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்றும் ஆவேசமாகக் கூறும் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
குஜராத் மதக் கலவரத்திற்கும், பல வகையான சிறு பான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்களைக் குறி வைத்தும் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் (Pogrom)ப் பின்னணியாக இருந்த ஆட்சி, பா.ஜ.க. மோடியின் ஆட்சியாகும்.

சர்வதேச அளவில் மோடியின் மோசடிகள்!

போலித்தனமான என்கவுண்டர்களைத் திட்டமிட்டு ஆணையிட்டு நிறைவேற்றியதுபற்றியெல்லாம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது; தலைமைக் காவல்துறை அதிகாரிகளே, குற்றம் சுமத்தும் அளவுக்குப் பல்வேறு தகவல்களும், இந்தக் கலவரங்கள்பற்றி பல்வேறு நடுநிலையாளர்களும் ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ள புத்தகங்களும் சர்வதேச அரங்கில் பரவி உள்ளன!
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆணை யைத் தலைமேல் ஏற்று, பா.ஜ.க. என்ற அதன் அரசியல் பிரிவு (சங்பரிவாரத்தில் உள்ள அரசியல் கட்சி இதுவே) மோடியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதற்கட்டமாக - முன்னுரைபோல் - பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகப் போட்டு முன்னோட்டம் நடத்துகிறது!

பா.ஜ.க.வுக்கு உள்ளேயே மோடிக்கு எதிர்ப்பு!

ஆனால், இதற்கு பா.ஜ.க.விற்குள்ளேயே பலத்த எதிர்ப்பு இருக்கிறது; இங்குள்ள ஊடகங்கள் - பார்ப்பன மேல்ஜாதியினரின் கைப்பாவையானபடியால் மோடியைத் தூக்கி வைத்து விளம்பர சடகோபம், சாத்தி, சைவ ஓநாய் இது என்று காட்டிப் பிரச்சாரம் செய்கின்றனர்!

மோடியின் ராஜ்ய பரிபாலனம் ஏதோ மோட்ச சாம் ராஜ்யத்தையே (அவர்கள் நம்பும்) மக்களுக்குக் கொண்டு வருவது போன்று மோடி மஸ்தான் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்!

குஜராத்தில் கல்வி வளர்ச்சி உண்டா?

நிர்வாகத்தில் கல்வி வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி முதல் பலவற்றில், மற்ற மாநிலங்களைவிட மோடியின் குஜராத் ஓங்கி நிற்கவில்லை என்ற உண்மையை முழுப் பூசணிக்காயை கைச் சோற்றில் மறைத்ததுபோல மறைத்து மகிழ்கின்றனர் - இந்தக் காவிகளின் ஏவுகணை களான பிரச்சார இயந்திரங்கள்!

அத்வானி, ஜஸ்வந்த்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் போன்ற பல பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள் மோடியைப் பிரதமராக்குதல் கூடாது என்று உள்ளேயே போர்க் கொடி உயர்த்தியது - உலகெலாம் அறிந்த செய்தியாகிவிட்டது!

பொருளாதார அறிஞரின் அபாய அறிவிப்பு!

இந்திய நாடு பெருமைப்படும் வகையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்கள், மோடி பிரதமராக வந்தால் நாடு அதை ஏற்காது என்று அண்மையில் ஒரு ஏட்டிற்குப் பேட்டி கொடுத்தார்!
இந்தியாவின் நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை யில் நம்பிக்கை உள்ள பெருமக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களும் இதே கருத்தைத்தான் கொண் டுள்ளனர்!

குஜராத் கலவரங்கள்பற்றி குஷ்வந்த் சிங் போன்ற பலரும் இவர்கள் கை ஓங்கினால் இந்தியா என்பதே காணாமற்போய்விடும்; வெறும் யதேச்சாதிகார ஹிந்து நாடுதான் இருக்கும் என்று கவலை தெரிவித்து நூலே வெளியிட்டுள்ளனர்.

அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டுமாம்!

பிரபல பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் அவரது கருத்தை வெளியிட்டார்; அது அவரது பேச் சுரிமை; அடிப்படை உரிமை. அதைக் கண்டு, பா.ஜ.க.வினர் ஆவேசத்துடன் அவர்மீது பாய்ந்து, பிய்த்துப் பிராண்டு கின்றனர்!
அவருக்குக் கொடுத்த பாரத ரத்னா பட்டத்தையே பறித்துவிடவேண்டுமாம்! என்னே அற்பத்தனம்!

இவர்களது ஆட்சியில் முன்பு இதுபோன்ற பட்டங்களை பல கிரிமினல் பேர்வழிகளுக்குத் தந்து, நாடே சிரிப்பாய் சிரித்த கதை மறந்துவிட்டதுபோலும்! காந்தியார் படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாவர்க்கார் படத்தையே நாடாளுமன்றத்தில் மாட்டி ஆண்டுதோறும் அதற்கு வீரவணக்கம் செலுத்திட ஏற்பாடு செய்த கூட்டமா தனக்கிருக்கும் கருத்துரிமையைப் பயன்படுத்திய பொருளாதார மேதையைக் கண்டிப்பது?
அமர்த்தியாசென் என்ன குற்றம் செய்தார்? மோடி பிரதமராக வரக்கூடாது என்று அவரது கருத்தைக் கூறியதற்காக அவரது பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்கிறார்!

பா.ஜ.க.வின் எம்.பி. - மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா என்ற பேர் வழி; இவர் பயோனீர் என்ற பத்திரிகையின் முதலாளி, பிரதான ஆசிரியராம்! மகாவெட்கக்கேடு!! என்னே இவர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை லட்சணம்!

இவர்கள் ஜனநாயகவாதிகளா?

நாலாவது தூண் என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இப்படிக் கூறுவது பச்சை ஏதேச்சாதிகார கருத்து அல்லாமல் வேறு என்ன?
ஹிட்லர் மொழிதானே இது? அதுவும் அடுத்து வரவிருக்கும் (NDA) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி யில் அந்தப் பாரத ரத்னாவைப் பறித்துவிடவேண்டுமாம்! (அடுத்து வருவது பகற்கனவு).
எத்தகைய தலைசிறந்த ஜனநாயகவாதிகள் இவர்கள்? இவர்களிடம் தேசியமும் இல்லை; ஜனநாயகமும், எந்தப் புடலங்காயும் இல்லை!
இதே கருத்தைக் கூறிய, கூறும் அத்வானிகளை, ஜஸ்வந்த்சிங்குகளை, யஷ்வந்த் சின்காக்களை என்ன செய்யப் போகிறது ஆர்.எஸ்.எஸ். அவதாரமாகிய பா.ஜ.க. தலைமை?

கட்காரியின் மிரட்டல்!

முன்பு கட்காரி என்ற பா.ஜ.க. தலைவர் கம்பெனிகளில் வருமான வரி ஏய்ப்பு ரெய்ட் நடந்து ஆவணங்களைக் கைப்பற்றி ஆராய்ந்த வருமான வரி அதிகாரிகளை, அந்த ஆர்.எஸ்.எஸ். கட்காரி (அய்யர்) நாங்கள் ஆட்சிக்கு அடுத்து வருவோம்; அப்போது பார்த்துக் கொள்ளுவோம் உங்களை! என்று உறுமவில்லையா?

நாடே கண்டித்த பிறகு மன்னிப்புக் கேட்கவில்லையா?

ஆட்சிக்கு வருமுன்னேயே இப்படிப்பட்ட மனப் பான்மை - பாசிசக் குரல் என்றால்; ஆட்சி இவர்களிடம் சென்றால், நாடே மறுபடியும் ஹிட்லரை மிஞ்சுவதாகத் தானே ஆகிவிடும்?

மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.

அமர்த்தியா சென் அறிவு - பாரத ரத்னா பட்டத்தில் தொங்கவில்லை; அவரது மூளையில் உள்ளது; அதை எவராலும் பறிக்க முடியாது.  நோபல் பரிசு பெற்ற அறிஞர் பாரத ரத்னா அமர்த்தியா சென்னைக் கொச்சைப் படுத்தும்  பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும்!

 -----------கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் சென்னை -"விடுதலை”   25.7.2013

25.7.13

பூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதையைப் பாரீர்!

பணம் கேட்டு வெளிநாட்டுப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார்
இத்தாலியில் பிறந்தவர் இலியானா சிடாஸ்டி; அவர் ஒடிசாவிற்கு வந்து ஒடிசி நாட்டியம் பயின்று, சிறந்த கலைஞராக விளங்கியதால், இந்திய அரசாங்கத்தால் பத்மசிறீ பட்டம் அளிக்கப்பட்டு கவுரவப் படுத்தப்பட்டார்.

21.7.2013 அன்று அப்பெண் பூரியில் உள்ள ஜகன்னாதர் ரதத்தில் ஏறி இருந்தபோது, இரு ஆசாமிகள் அவரைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தனர். அவர் மறுத்துவிட்டதால், அவரைத் தாக்கியுள்ளனர்.

அவர், பூரி காவல்துறை கண்காணிப் பாளருக்கும், கோவிலின் முக்கிய நிருவாக அதிகாரிக்கும் இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், ரூபாய் 1000 தட்சணை கேட்ட அர்ச்சகர்களின் வேண்டுகோளை புறக்கணித்ததற்காக தான் தாக்கப் பட்டதாகச் சொல்லியிருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,

இரண்டு அர்ச்சகர்கள் என்னை தொல்லைப்படுத்தினர். தட்சணையாக 1000 ரூபாய் கேட்டனர். நான் மறுத்த போது, என்னைத் தள்ளினார்கள்; கன்னத்தில் அறைந்தார்கள். தலையிலும் அடித்தார்கள் என்று சொல்லியுள்ளார்.

என்னிடமிருந்து பணம் பிடுங்க இயலாமற்போனபோது, நான் ஒரு வெளிநாட்டாள் (இந்து அல்லாதவர்) என்றும், ரதத்தின்மேல் நான் ஏறக்கூடா தென்றும் சத்தமிட்டனர். ஆனால், ரதத்தின்மீது நான் ஏறும்போது, என் மதம்பற்றி யாரும் கேட்கவில்லை. பூரி ஜகன்னாதர் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தார் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், கோவிலுக்கு வெளியே நடக்கும் ரத யாத்திரையில் இந்துக்கள் அல்லாதவர்கள் இருப்பதற்கு எந்தவித அதி காரபூர்வமான தடையும் இல்லை என்றார்.

இலியானா சிடாஸ்டி, ஒடிசாவில் 1979 ஆம் ஆண்டுமுதல் வசித்து வருகிறார்.
9 நாள் ரத யாத்திரை ஜூலை 18 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. 

ரதத்திலிருந்து கடவுளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து முடித்துவிட்டனர். ஞாயிறன்று மாலை கடவுள் சிலைகள் கரு வறைக்குள் நுழைந்துவிட்டன.

அர்ச்சகர்களின் இந்த அடாவடி நடவடிக்கைகளைக் கண்ட இலியானா, அதிர்ச்சியடைந்தார். ஒடிசா மொழி நன்கு பேசக்கூடிய அவர், ரதத்திலிருந்து இறங்கி, பேராசை பிடித்த அர்ச்சகர்கள்மீது நடவ டிக்கை எடுக்கவேண்டி அவர் கோவில் அதிகாரிகளை அணுகினார்.

புவனேசுவர் நகரில் ஒடிசி நாட் டியம் கற்றுக்கொடுக்கும் இலியானா சிடாஸ்டி, கோவில் அதிகாரிகளிடம் புகார் செய்த பிறகு, பேக்ஸ் மூலமாக பூரி காவல்துறை கண்காணிப்பா ளருக்குப் புகார் கொடுத்துள்ளதாகக் கூறினார்.
இந்த விரும்பத்தகாத நிகழ்ச்சி பற்றி விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளேன்; அந்தப் பெண்மணி யுடன் நான் பேசியுள்ளேன். அவருக்கு நேர்ந்த சங்கடத்தைக் கண் டித்துள்ளேன். தவறு செய்யும் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று கோவிலின் முதன்மை நிர்வாக அதிகாரி அர்விந்த பதே கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி நடந்த பூரி ஜகன்னாதர் தேர், விழாவின் இரண்டாம் நாள் அன்று ஒரு அமெரிக்கப் பயணிமீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சில கோவில் பாதுகாப்பு காவலர்கள், நோயல்மாகி ஹேடன் என்ற அமெரிக்கரை அவர் ஒரு இந்து அல்லாதவர் என்று காரணங்காட்டி தாக்கியுள்ளனர். கோவிலில் உள்ள வேத நூல்களே, கோவில் ரதத்தின்மீது பிறர் ஏறுவதுபற்றி ஏதும் கூறவில்லை. இந்தப் பிரச்சினைபற்றி கோவில் நிர்வாகம் இதுவரை எந்த முடிவுவையும் எடுக்கவில்லை. இருந்தாலும், கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. கோவிலின் முதன்மை நிருவாகி, இந்த விவரங்களை நாங்கள் பூரி சங்கராச்சாரியாரின் கவனத்திற்கு, ஒரு தீர்வு வேண்டி கொண்டு சென்றிருக்கிறோம். இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

குறிப்பு: இந்தக் கேவலமான, ஒழுக்கமில்லா ரவுடிகள் எல்லாம் அர்ச்சகர்களாக இருக்கலாம். முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாதாம்!
                     ------------------------------------"விடுதலை” 24-7-2013

24.7.13

காசேதான் கடவுளப்பா என்ற பழமொழி சும்மாவா வந்தது?

காசேதான் கடவுளப்பா! 


கோயில்களில் தரிசனம் செய்வதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் முதற்கட்டப் போராட்டம் ஒன்றைத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடத்தியுள்ளனர். (21.7.2013)

இறைவனுக்கு முன் அனைவரும் சமம். இறைவனைத் தரிசிக்கக் கட்டணம் நிர்ணயித்தால் காசு உள்ளவனுக்கு மட்டுமே கடவுளின் தரிசனம் என்ற நிலை வந்துவிடும். இது இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவத்தையே தகர்த்து விடும். இதனால் மேலும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகும்; தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துக்குப்பின் அதிக அளவான வருமானம் கோவில்களில் இருந்தே வருகிறது என்று கூறியுள்ளனர்.

இந்து அமைப்புகள் ஒரே ஒருமுறை நல்ல புத்தி வந்து இப்படி சொல்லியிருக்கிறார்கள், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அவர்களுக்கு ஒரு யோசனை; நாடு தழுவிய அளவில் பல இடங்களில் போராட்டம் நடத்துவதைவிட, எல்லா பக்தர்களையும் இலட்சக் கணக்கில் அணி திரட்டி, திருப்பதி கோயிலை மய்யப்படுத்தி, கண்டனப் பேரணி ஒன்றை நடத்தி, அதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தால், அது இந்தியா முழுவதும் நல்ல அளவு வெளிச்சத்துக்கு வந்து விளம்பரமும் ஆகியிருக்குமே!

இப்பொழுதுகூடக் காலந்தாழ்ந்து போய்விட வில்லை; திட்டமிட்டு அப்படியொரு போராட்டத்தை நடத்தலாம்.

ஆனால் உண்மை என்ன? அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யர் கோயில் கட்டச் சொன்னதே மக்களிடம் அரசின் பணம் பறிக்கச் செய்வதற்கே!
அதற்காக ஒவ்வொரு கோயில் பற்றியும் அற்புதங்களை பரப்பி, அதன் மூலம் மக்களை ஈர்த்துப் பணம் வசூல் செய்யலாம் என்று கூறியிருக்கிறானே!
திருப்பதி கோயிலை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுவதற்குக் காரணம் - அங்குதான் பக்தர்கள், நாள்கணக்கில் தரும தரிசனத் துக்காகப்  காத்துக் கிடக்கிறார்களாம்.

அதிக பணம் கொடுப்பவர்களுக்கோ சில நிமிடங்களிலேயே சிறப்புத் தரிசனங்கள் கிடைத்து விடுகின்றன.

இன்னும் சொல்லப் போனால் பெரும் பண முதலாளிகள் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கோயில் பிரசாதங்களைக் கொடுத்து கொள்ளைப் பணத்தைத் திருப்பதி அர்ச்சகர் பார்ப்பனர்கள் கறந்து விடுவது பற்றி பல நேரங்களில் செய்திகள் வந்ததுண்டே!

ஆங்கிலப் புத்தாண்டன்று இந்துக் கோயில் களைத் திறக்காதீர்கள் - அது இந்து ஆகம விதிகளுக்கு முரணானது என்று சங்கராச் சாரியார்கள்  கதறுகிறார்கள், இந்து முன் னணிகள் கரடியாய்க் கத்துகின்றன.

அந்தக் கதறல்களை, கத்தல்களை எந்த இந்துக் கோயில் பின்பற்றுகின்றது? பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது. அப்படி வருவது ஆகம விதிகளுக்கு விரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிற இந்த அர்ச்சகர் பார்ப்பனர்கள், ஆகம விதிகளுக்கு முரணாக ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பு என்று சொல்லி இரவு 12 மணிக்கு மேலும் நடையைத் திறந்து வைத்துப் பக்தர்களிடம் வசூல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களே! இது ஆகமத்துக்கு எதிரானது அல்லவா!

கடந்த ஆங்கிலப் புத்தாண்டன்று திருப்பதியில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஆயிரம் ரூபாய் வி.அய்.பி. டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத் துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதைப் போலவே பழனி முருகன் கோயிலிலும் ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டுக்காகக் கோயிலைத் திறந்து வைத்தனரே! அன்று மட்டும் வசூல் ரூ.85 லட்சமாம்.

பக்தர்கள் கோயில் உண்டியலில் போட்ட பணத்தையே காஞ்சிபுரம் தேவநாதன் என்ற அர்ச்சகப் பார்ப்பான் செக்ஸ் லீலைக்காகத் திருடினான் என்று ஏடுகளில் செய்தி வெளி வரவில்லையா?

               ----------------------------------(மாலைமலர் 29.11.2009 பக்கம் 4).

காசேதான் கடவுளப்பா என்ற பழமொழி சும்மாவா வந்தது?

                     ---------------------------"விடுதலை”  23-7-2013