Search This Blog

15.7.10

கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை கர்மவீரர் காமராசர்


காமராசர்

பச்சைத் தமிழர் என்றும், கல்வி வள்ளல் என்றும், ரட்சகர் என்றும் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட கர்மவீரர் காமராசர் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1903).

காமராசர் அவர்களைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கலாம். சுதந்திரப் போராட்டத்தின் தியாகியாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, அரசியல் வாதியாக, ஆட்சித் தலைவராக விரித்துப் பேசலாம்; என்றாலும் தந்தை பெரியார் பார்வையில், தமிழினத்தின் கண்ணோட்டத்தில், பார்ப்பன எதிர்ப்பு என்ற தளத்தில் அவரை வெளிப் படுத்துவதுதான் இன்றைய தேவையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஆகும்.

1953 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த டி.வி.எஸ். கட்டடத் திறப்பு விழா அது. சி.பி. ராமசாமி அய்யரும் இந்த விழாவிலே கலந்து கொண்டார்.

விழாவில் முதல் அமைச்சர் ராஜாஜி பேசும் போது, பிராமணன், சூத்திரன் என்று பேச்சை ஆரம்பித்தார். சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார் தொழிலைப் பிராமணன் செய்வதாகத் தமது பேச்சில் ராஜாஜி குறிப்பிட்டார். ராஜாஜி இவ்வாறு குறிப்பிட்டதும் காமராசர் கோபம் கொண்டார். தொடர்ந்து பேசிய ராஜாஜி டி.வி.சுந்தரம் அய்யங்காரைப் பாராட்டியும் பேசினார். வயதானாலும் டி.விசுந்தரம் அய்யங்கார் தமது புத்திரர்களிடம் தொழிலை ஒப்படைத்திருக்கிறார் என்றும், டி.வி. சுந்தரம் அய்யங்காரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்றும் ராஜாஜி பேசினார்.

அடுத்து காமராஜ் பேசினார். வாலிபர்களிடம் வயோதிகர்கள் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி ராஜாஜி இங்குக் கூறினார். ராஜாஜி இவ்வாறு பேசியதை நான் ஆதரிக்கிறேன். வர்த்தகத்தில் மட்டும் அல்ல, ராஜ்ய நிர்வாகத்திலும் கூட அந்த வழியை வயோதிகர்கள் (ராஜாஜியைப் போன்றவர்கள்) பின்பற்றினால் நாட்டிற்கு நிச்சயமாக நன்மை ஏற்படும் என்று காமராஜ் பேசியதைக் கேட்டதும் விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அதை வரவேற்றுக் கரகோஷம் செய்தனர்.

(ஆதாரம்: முருகு தனுஷ்கோடி எழுதிய காமராசர் ஒரு சரித்திரம்).

காமராசரின் இந்த இனவுணர்வை நன்கு புரிந்து கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அதனால்தான் சென்னைக் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராஜாஜி, இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதைக் கல்லால் அடித்து வீழ்த்தவேண்டும் என்றார். காமராஜரைத்தான் அப்படி ஜாடையாகப் பேசினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கிகள் கார்ட்டூன் போட்டதும் அந்த அடிப்படையில்தான்.

இன்னொரு கார்ட்டூன் கண்டிப்பாக நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று.

குயில் முட்டையிட்டு வந்தவுடன் காகம் அடை காத்து குஞ்சு பொரிக்கச் செய்யும் என்ற கருத்தில் பெரியார் என்ற குயில் கொள்கை என்ற முட்டை போட்டுவிட்டு மரத்துக் கிளையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. காமராசர் என்ற காக்கை அந்த முட்டைகளை அடைகாப்பது போன்ற கார்ட்டூன் அது.

பெரியார் கொள்ளையைக் காமராசர் கடைப்பிடிக்கிறார் என்பதே அவாளுக்கே உரித்தான பாணியில் அன்று கார்ட்டூன் போட்டார்கள்.

காமராசரை சரியாக அடையாளம் கண்டு, மக்கள் மத்தியில் பெரிய நிலைக்கு உயர்த்தினார்தந்தை பெரியார். ரட்சகர் என்று பெரியார் சொன்னார் என்றால் சாதாரணமா?

கல்வி விழாக்களிலே கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக காமராசர் வாழ்த்துப் பாடவேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார் (சேலம் 5.7.1968).

இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விக் கதிர்க் கட்டுகளாக பரிணமிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார், காரணம் கர்மவீரர் காமராசர் ஆகியோரே! கண்ணீர் மல்க நன்றி கூறுவோம்!

-------------- மயிலாடன் அவர்கள் 15-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வணக்கம் நண்பரே!

எனது புதிய பதிவு:
:
கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

http://tamilkadu.blogspot.com/

or

http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html


என்றும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி ஆம்பி!?