Search This Blog

29.7.10

பக்தியைப் பரப்ப இதோ ஒரு வழி!



லண்டனில் மகோற்சவ விழா நடைபெற்றது நியூயார்க்கில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது மஹாகணபதி ஹோமத்தடன் தொடங்கப்பட்டது என்றெல்லாம் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகிறது ஒரு பார்ப்பன ஏடு.

நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும், இந்து மதத் தாக்கமும் பக்தியும் நாடு கடந்தும் சாங்கோ பாங்கமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்காகத்தான் இந்தத் தடபுடல் செய்திகள். இந்தப் பார்ப்பன ஏடுகள் இன்னொரு கைங்கர்யத்தையும் செய்யலாமே!

எங்கள் சிவபெருமான் யார் தெரியுமா? ரிஷி பத்தினிகளின் கற்பைச் சூறையாடிவன். அதனால் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகி, அவன் சிசுனம் அறுந்து விழுந்தது. அதனைப் பார்வதி தேவி தாங்கினாள். அதுதான் சிவலிங்கம் அந்த சிவனுக்குத்தான் இந்தக் கும்பாபிஷேகம்.

மஹாகணபதி யாகம் நியூயார்க்கில் நடக்கிறது. அதன் தாத்பரியம் என்ன தெரியுமா?

எங்கள் கணபதி இருக்கிறாரே அவர் எப்படிப் பிறந்தார் தெரியுமா? எங்கள் சக்திக் கடவுளான பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் என்று பிரமாதமாக ஆதாரங்களைச் சுட்டிக் காட்டி சூட் விடலாமே!

காட்டில் ஆண் யானையும், பெண் யானையும் புணர்வதைப் பார்த்த எங்கள் சிவனும், பார்வதியும் காமவெறியெடுத்து, ஆண் யானையாகவும் பெண் யானையாகவும் உரு மாறிப் புணர்ந்ததால் உடனடியாகப் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைதான் இந்தப் பிள்ளையார்!

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

திருஞான சம்பந்த பார்ப்பனர் பாடிய இந்தத் தேவாரப் பாடல் (வலிவலம் கோவிலில்) பொறிக்கப் பட்டுள்ளதே! அதையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கி வெளியிட்டால் வெளிநாட்டுக்காரர்களும் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதையை விசேஷமாகத் தெரிந்து கொள்வார்களே! பார்ப்பன ஏடுகள் பக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பார்ப்பனியத்துக்குத் துணை போகும் ஏடுகளும் வெளியிடுமா?

------------------------------”விடுதலை” 25-7-2010

4 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆகா அருமை கண்டுபிடி்பபுகளை தொடருங்கள்.

http://sagotharan.wordpress.com

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழருக்கு அன்பின் மாலை வணக்கங்கள்!

சென்ற வருட "விநாயகர் சதுர்த்தி" விழா(?) நாளன்று,எனது நெருங்கிய நண்பர்கள் மூவருக்கு நமது திராவிடர் கழக வெளியீடான "பிள்ளை -யார் " புத்தகம் வாங்கிக் கொடுத்தேன்.அப்புறமென்ன?விழா நாளன்று அவர்கள் கோவிலுக்கும் போகவில்லை ,கொழுக்கட்டையும் தின்னவில்லை. வழமை போல நல்லதொரு பகுத்தறிவு பதிவு தோழர்!

smart said...

பெரியார் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா?
உங்கள் தயவால் முதல் முதலாக ஒரு தொடர் பதிவு போட்டிருக்கேன் வந்து தொடருங்கள்.

Ivan Yaar said...

Tamiloviya,

Do you think that any one will be benefited by reading your blog????

What is the use of discussing on useless things like people beliefs etc ??? What is the use of finding fault on Hindu epics and its characters.Instead you could publish article on common people real world problems etc.

D.K. is the useless party having no guts to contest alone. It always seeks alliance either from DMK or ADMK. I feel DK has no real motto other than making money from politcs.

If DK is really a non religous party, It should oppose all religions and its beliefs. But DK is always against Hindus only. Now started a little fight against christians too.

Does DK has real guts to oppose the religious beliefs against ISLAM?? There are lot of questionable things in ISLAM too like, Sunnath, Bigamy, and divore by saying talak, Hitting themselves on religous occasions etc.. Does DK has any guts to publish articles against that????

Stop publishing articles on useless things and try to publish articles on common man problems like Increase in cost of living etc.