Search This Blog

30.7.10

அடே, வாருமய்யா துக்ளக் அய்யரே!


கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?

பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை! நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலைஞர் ரெடி தமிழகம் ரெடி தமிழ் ரெடியா?

(துக்ளக், 4.8.2010, பக்கம் 15)

கொலை குற்றவாளியாக வேலூர் ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்து, கொஞ்சம்கூட வெட்கமின்றி ராஜ நடைபோட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் இவாளுக்கெல்லாம் லோகக்குரு- பவள விழா ஜெயந்தி கனஜோர்!

ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரக் கந்தாயங்கள்! இது மட்டுமா?

காமத்தைத் துறந்தும் காமகோடியாக வாழ முடியும் என்று வரலாற்றில் நிரூபித்த ஒரே சாதனையாளர் என்பதற்காகவும்கூட விழா எடுக்கலாமே!

ஜெயேந்திரர் ரெடி பார்ப்பனர்கள் ரெடி ஆனால், தமிழகம் தாங்குமா என்பதுதான் கேள்வி???

-------------------- "விடுதலை” 30-7-2010

0 comments: