Search This Blog

30.7.10

ஆடிமாத மூடநம்பிக்கைதோலுரிப்பு



ஆடி பதினெட்டாம் நாள். காவிரியாறு பாயும் ஜில்லாக்களிலுள்ள மக்கள் பலர் இன்றைய தினத்தை நோன்பு நாளெனக் கொண்டாடுகின்றனர். கொண்டா டப்படும் நோன்பின் கருத்தென்ன? இந்நோன்பால் திராவிட நாட்டு மக்கள் அடையும் பலன் என்ன? இந்நோன்பு திராவிட நாட்டவருக்கு உரியதுதானா? என்பவைகளைப் பற்றி மக்கள் சிறிதேனும் சிந்திப்பது கிடையாது.

எதனையும் ஆராய்ந்து உண்மையா பொய்யா? வேண்டப்படுவதா, அல்லவா? நமக்குரியதா, இல்லையா? என்பவற்றை எண்ணிப் பாராமல், பகுத்தறிவை இழந்து, எவர் சொன்னாலும், எதில் எழுதி வைத்திருந்தாலும் அவற்றை அப்படியே அனுஷ்டித்தல் என்னும் மூடக் கொள்கைக்குத் திராவிட மக்கள் ஆட்பட்டு விடும் கொடிய வழக்கம் இந்நாட்டில் வேரூன்றிவிட்ட படியால்தான், திராவிட மக்கள் மீளா அடிமைத் தனத்திலும், வறுமையிலும் சிக்கித் தப்ப வழிகாணாது தவித்து, மேலும் மேலும் இவ்வடிமைத்தனந்தான் சிறந்த தெனக் கூறி, அதிலேயே திளைத்துக் கிடக்கும் நிலைமையை அடைந்து விட்டனர்.

ஆடி பதினெட்டாம் நோன்புக்கு உட் கருத்து இருவகையாக வருணிக்கப்படுகிறது.

1. பாரதப்போர் நடந்தது இந்த ஆடி மாதத்தில் தானாம். ஆடி முதல் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை போர் நடந்து 18 ஆம் நாள் பாண்டவர் வெற்றி கொள்ளப்போர் முடிவுற்றதாம். இப்போரில் பாண்டவர் தரப்பில் தமிழ்நாட்டு மன்னன் ஒருவனும் சேர்ந்து, பாண்டவர் படைக்கு உணவுப் பஞ்சம் வராதிருக்கவும், உணவுப் பிரச்சினையால் பாண்டவர் படை பீதியுற்றுத் தோல்வியடைந்து விடா திருக்கவும் வேண்டிப் பெருஞ் சோறிட்டான் என வில்லிபாரதம் சான்று கூறுகின்றது. எனவே, தமிழ் மன்னன் சம்பந்தம் கொண்ட அந்த பாரதப்போர் பாஞ்சாலத்தில் 18 நாள் நடந்து முடிவில் பாண்டவருக்கு வெற்றியுடன் முடிந்த இந்நாள், இங்கே, காவிரியாற்றங்கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம்.

பாரதப்போர் நடந்தது, பஞ்சாபில். ஆனால் கொண்டாட்டம் காவிரியில். பஞ்சாபில் பாயும் பாஞ்சால நதியிலும் இக்கொண்டாட்டமில்லை; அதற்கருகே பாயும் கங்கையாற்றங்கரை களிலும் இக்கொண்டாட்டமில்லை. காவிரியில் மட்டும் வந்து முளைத்துக் கொண்டிருப்பதன் கருத்தென்ன?

2. இதற்குப் புலவர்கள் ஒரு கதை கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மும் முறை கடற்கோள் ஏற்பட்டதென்று ஆராய்ச்சியாளர் மொழிகின்றனர். இறுதிக் கடற்கோள் ஏற்படுமுன் குமரியாறு, பஃறுளியாறு என்பவைகள் இந்நாட்டில் இருந்ததாகவும் அவை கடற்கோளால் மறைந்து போன பின் னர்த் தமிழ்நாட்டின் நில முனைக்குக் குமரியாற்றின் ஞாபகார்த்தமாகக் குமரி முனை என்னும் பெயர் இடப் பட்டதாகவும், அக்கடற் கோள்களின் ஞாபகார்த்தமாகவே ஆடிப் பதினெட் டாம் பெருக்கில் நோன்பு அனுஷ்டிக் கப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.

இந்தக் கருத்தேனும் பொருத்த மாகவோ, பகுத்தறிவிற்கேற்றதாகவோ, மக்களுக்குப் பயன்படுவதாகவோ இருக்கிறதா என்று பார்த்தால் அது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஏதேனும் ஒரு பகுத்தறிவுக் கொவ்வாத காரியம் நாட்டில் நடைபெறுவதாயிருந் தால், அதனை ஏற்க மறுத்து, அது முட்டாள்தனமாகத் திராவிடத்தில் நுழைந்து விட்ட செயல் என வெளிப் படையாக எடுத்துரைத்து, அதனைக் கண்டித்து ஒழிக்கும் ஆண்மை நம் புலவர்களுள் பலருக்கு ஏற்படுவதில்லை. இத்தகைய செயல்களைப் பகுத்தறிவாளர்கள் கண்டித்து ஒழிக்க முற்படுங்கால், உடனே இப்புலவர்கள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தோடி வந்து, அதற்குப் புத்துரைகள், தெளிவு ரைகள், விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவை கூறி, சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்து வீசி, அச்செயல் திராவிட மக்களுடையதென நிலை நாட்டத் தாங்கள் இந்த பிரிட்டிஷ் ஆட்சியில் கற்ற விஞ்ஞான வித்தை களையெல்லாம் புகுத்தி, தங்கள் அறிவையும், காலத்தையும் பாழ் படுத்திக் கொண்டு பிற மக்கள் முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாக அமைந்துவிடுகின்றனர். பகுத்தறி வாளர்களான புலவர்கள் சிலர் ஆண்மையுடன் வெளி வந்து, இப் புலவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினால், அப்புலவர்களுக்குத் தங்களாலான இடுக்கண் களையெல்லாம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

போகட்டும்; ஆடி பதினெட்டாம் நோன்பு கொண்டாடப்படுவது பாரதப் போர் முடிவை ஒட்டியதாக இருந்தாலும் சரி; அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடற்கோள்களின் ஞாபகார்த்தமாக இருந்தாலும் சரி, இதனால் மக்கள் அடையும் பலன் என்னவென்றுதான் நாம் கேட்கிறோம்.

இந்த ஆடி பதினெட்டாம் நாளன்று காவிரியாற்றங்கரை நெடுக மக்கள் குழுமி, பகுத்தறிவுக்கு ஏற்கத்தகாத செயல்களைச் செய்து, மேலும் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து போவதைத் தவிர, புலவர் கள் கூறும் கருத்தோ அன்றிப் பிறவோ அம்மக்களுக்குத் தெரியுமா? ஆடி நோன்பு வந்தால் ஏழுக் கன்னி கும்பிட்டு, மஞ்சள் நூல் கட்டிக் கொள் வதும், முளைகளை ஆற்றில் விடுவதும், ஆற்று மணற் பிள்ளையாருக்கு அரிசிப் படையலிடுவதும், அழுக்கேறி மூலை முடுக்குகளில் அடைந்து கிடக்கும் உதவாச் சாமான்களை எரித்து ஆற்றில் தள்ளுவதுமான செயல்களைத் தவிர்த்து வேறென்னதான் நடைபெறுகிறது? வருமானத்தைக் கருதிப் பார்த்தால் புது மாப்பிள்ளைகள் பாடு கொண்டாட்டமாயிருக்கலாம். அதைத் தவிர, அறிவுக்குப் பயன்படும் செயலோ, மக்களை உயர்த்தும் முறையோ, நாட்டுக்கு நலன் உண்டாக்கும் நாட்டமோ இதில் அறவே கிடையாதென்பது நன்கு புலனாகிறது.

இதற்குப் பதிலாக, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி நெருக்கத்தில் இடிபட்டும், உதைபட்டும், காதறுந்தும், மூக்கறுந்தும், நகைகளை இழந்தும் தவிக்கும் காட்சிகளும், புது வெள்ளத்தில் குளிப்பதால் உடல் நிலை கெட்டுப் பின்னர்ப் பலநாள்வரை மருந்தும் கையுமாகத் திரிவதும்தான் ஆண்டுதோறும் இதனால் ஏற்படும் கண்கண்ட பலனாக இருக்கிறது.

எனவே, இனியேனும் தமிழறிஞர்களும், மக்கள் நலனில் ஆர்வ மிக்காரும் முன் வந்து, வெற்றுரைகளை வீம்புக்கேனும் கூறிக் கொண்டிருத்தலை விட்டு, பகுத்தறிவாதிகளுடன் ஒன்றுபட்டு நின்று, இம் மூடத்தனமான செயல்களை அறவே நிறுத்தி விடுமாறு மக்களைத்
தூண்டித் திருத்தும் நற்றொண்டு புரியத் துணிவு கொள்வார்களா என்று கேட்கிறோம்.

திராவிட நாடு பெருமையுற்று, உன்னத நாகரிகமும், கலைச் சிறப்பும் கொண்டது என்ற தனிப் பெரும் பண்டைப் பண்பைப் பெற்று, உலக நாகரிக நாடுகளுள் இதுவும் ஒன்றென நிமிர்ந்து நிற்கவேண்டுமானால், இத்தகைய அறிவுக்கொவ்வாத மூடச் செயல்களுடைய விழாக்கள் அனைத்தும் தமிழ் நாட்டினின்று அறவே அகற்றப்பட வேண்டும். இதற்குச் சான்றுகள் காட்ட சங்க இலக்கியங்கள் தேவை யில்லை; வில்லி பாரதம் வேண்டியதில்லை. பகுத்தறிவுக் கண் கொண்டு, சிந்தனாசக்தியைச் சிறிதேனும் செலுத்தி ஆராய்ந்து முடிவுக்கு வந்தால் இத்தகைய நோன்புகள் திராவிட நாட்டிற்கு எள்ளத்துணையும் நலன் புரிபவை ஆகா என்பது தெள்ளிதிற் புலனாகும்.

------------------------- நன்றி:- “விடுதலை” 3.8.1943

1 comments:

Ivan Yaar said...

Tamiloviya,

Do you think that any one will be benefited by reading your blog????

What is the use of discussing on useless things like people beliefs etc ??? What is the use of finding fault on Hindu epics and its characters.Instead you could publish article on common people real world problems etc.

D.K. is the useless party having no guts to contest alone. It always seeks alliance either from DMK or ADMK. I feel DK has no real motto other than making money from politcs.

If DK is really a non religous party, It should oppose all religions and its beliefs. But DK is always against Hindus only. Now started a little fight against christians too.

Does DK has real guts to oppose the religious beliefs against ISLAM?? There are lot of questionable things in ISLAM too like, Sunnath, Bigamy, and divore by saying talak, Hitting themselves on religous occasions etc.. Does DK has any guts to publish articles against that????

Stop publishing articles on useless things and try to publish articles on common man problems like Increase in cost of living etc.