Search This Blog

11.6.09

தி.மு.க அரசு எப்படி ஆட்சி நடத்த வேண்டும்?






தி.மு.க ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையொப்பம் போடும்போதும் பார்ப்பானா, கிறிஸ்தவனா, முஸ்லிமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்துதான் கையொப்பம் போட வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போட்டால் தமிழனைப் பலி கொடுத்ததாகத் தான் பொருள். காமராசர் தமிழனுக்குக் கண் கொடுத்தார்; தி.மு.க தமிழனை எழுந்து நடக்கச் செய்ய வேண்டும்.

கண் இருந்து குருடானாய் இருப்பதில் ஜீவனுக்குப் பயன் என்ன?

நான் இவ்வளவு வேண்டுகோள் செய்வது முதல் மந்திரிக்கு மாத்திரமல்ல, முக்கியமாக மற்ற பத்து மந்திரிமார்களுக்குமேயாகும். ஆகவே,

கவனிக்க வேண்டும்
கவனிக்க வெணடும்
கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும்.

-------------------------- தந்தைபெரியார் - “விடுதலை” 05-03-1969

0 comments: