Search This Blog

23.6.09

மகாவிஷ்ணு வராக அவதாரம் (பன்றி) எடுத்தது எதற்கு? - 3



மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

**************************************************************************************



3. வராக அவதாரம் (பன்றி)

கதை: இரணியனின் தம்பியாகிய இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்தானாம். மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து, பூமியை மீட்டானாம். பூமியோடு மகாவிஷ்ணுவான பன்றி புணர்ந்தானாம் - பிள்ளை பிறந்ததாம் - அவன்தான் நரகாசுரனாம். அவன் பூதேவர்களுக்குத் தொல்லை கொடுத்தானாம். அவனை கடவுள் கிருஷ்ணனும், அவன் மனைவி பாமாவும் சேர்ந்து சண்டையிட்டுச் சாகடித்தார்களாம்.

கேள்வி: பூமியைச் சுருட்ட முடியுமா? பூமி தட்டை என்று கருதிய காட்டுமிராண்டிகள் எழுதிய கதைதானே இது?

பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்றால் எதன்மீது நின்று சுருட்டினான்? பூமியில்தானே கடலும் இருக்கிறது? பூமியைப் பாயாகச் சுருட்டும்போது கடலும் அதற்குள் சுருண்டு விடாதா? பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? நரகாசுரன் பிறப்பு அறிவுக்குப் பொருந்துமா? கடவுள் கிருஷ்ணனுக்கும், கடவுளச்சி பாமாவுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன் ஆனான்?



----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

4 comments:

Unknown said...

//மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை//

பார்ப்பனர்ர்களே பதில் சொல்லுங்கள்.

Thamizhan said...

இந்தக் கதைகளைப் படித்து உண்மை உணர்ந்து திருந்தாதத் தமிழ்ர்களைக் குறை சொல்லுங்கள்.
புரியாத மந்திரத்தை,கடவுளுக்கு மாமாவாக இருந்து வசூலிக்கும்
ஏமாற்றாளர்களை மரியாதை கொடுத்து தங்கள் மூளையில் விலங்கு மாட்டித் திரியும் தமிழர்களிடம் சொல்லுங்கள்.
திருக்குறள் ஒன்று இருப்பது தெரியுமா,
இல்லை அதையும் சமசுகிருதத்தில் எழுதி புரியாதவனைப் படிக்கச் சொன்னால்தான் மதிப்பீர்களா?
படிப்பும்,ப்ட்டமும் பணமும் இருப்பதால் நீங்கள் தமிழர்கள் அல்லர்.
திருக்குறளைப் படியுங்கள்,தமிழராகுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
&
தமிழன்

Anonymous said...

/// 1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான். ///........................................................................................................ஒரு காலத்தில் மக்கள் அரக்கராக மாறி விட்டனர். இறைனபிக்கையை மறந்து வாழ்கையில் கிழான நிலையை அடைந்து பாதாளத்தை அடைந்து விட்டனர். இதனால் அசுரன் அவர்களின் மனதை பாயாக சுருட்டி தீய சக்தியில் கடலுக்கடியில் மிக பாதாளத்தில் வைத்து ஒழிந்து கொண்டான்..........................................................................................................................///2.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம்

(உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும்

வந்து விரித்தார். ///.........................................................................................................................இதனால் இறை நண்பிக்கை கொண்டவர்கள் (தேவர்கள்) இறைவனிடம் முறையிட்டனர்.அந்த இறைவன் ( வைணவர்கள் மகாவிஷ்ணு என்கின்றனர்.) அக்காலத்தில் ஒரு புதிய புனித தன்மையுடைய அருள் கொண்டு ( பன்றி அவதாரம் ) உலகத்தை மீட்டு மீண்டும் உலகத்தில் இறை புனித தன்மையை பரப்பினார். அதனால் உலகம் மீண்டும் பக்தியால் விரிக்கப்பட்டது........................................................................................................................../// 3.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.///புனிததால் மக்கள் புத்தி தெளிவு பெற்றனர். அவர்கள் அந்த இறை தன்மையுடன் நண்பிக்கை கொண்டு இரண்டற பக்தியால் கலந்து மேன்மை அடைய ஆசைப்பட்டனர்..........................................................................................................................

///4.ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.///இதனால் அந்த இறைவனும் தன மகிமையால் மக்களுக்கு (பூமி) துணை நின்று, இணங்கி தன் பக்தர்களுக்கு , தன்னிடம் சரண் அடைந்த மகளுக்கு அருள் செய்து பக்தியை வெளிப்படுத்தினார்..........................................................................................................................

/// 5.அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப்பெற்றது.///அதன் பயனாய் பூமியில் மக்கள் காப்பாற்றப்பட்டு ( மீண்டும் புதிய பிறப்பு எடுத்தல்) அதன் மூலம் நரகாசூரன் தோன்றினான்.இறை தன்மையால் உண்டானவன். இறைவனின் புனிததால் பிறந்தவன் ..........................................................................................................................

///6.அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.///ஆனால் அவன் தன்னுடைய புனிதத்தை மறந்து இறுமாப்பு கொண்டு தன்னுடைய வரவுக்கு காரணமாக இருந்த தேவர்களை வருத்தினான். .........................................................................................................................

/// 7.தேவர்களுக்காக விஷ்ணு,நரகாசூரனுடன் போர் துவங்கினார். ///

அதனால் இறைவன் ( விஷ்ணு ) தன்னுடைய இறை பக்தர்களை காப்பதற்காக தன்னால் பிறந்த நரகாசூரனுடன் போர் துவங்கினார்..........................................................................................................................



///8.விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். ///இறைவன் மிகப்பெரியவன் ( மகாவிஷ்ணு) . அவன் தாய் தந்தை என்ற இரு சக்திகளை உள்ளடக்கியவன். தான் பெற்ற குழந்தையை தாய் ஸ்தானத்தில் இருந்து அவனை கொன்றார்..........................................................................................................................


///9.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.///


இதனால் இறை பெரியோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



/// 10.இந்த மகிழ்ச்சிய ை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின்

இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.இதுதானே தீபாவளிப்

பண்டிகையின் தத்துவம்! இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத்

தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத்

தெரியும்?யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம்.///இந்த நரகாசூரன் மகா விஷ்ணு பிள்ளையாகவே சொல்லப்படுகின்றது.அது ஏன் திராவிடர்களை குறிப்பதாக சொல்லி சாயம் பூசுகின்றனர்.அனைவருக்கும் இன்ப தீபாவளி வாழ்த்துக்கள்.