Search This Blog

30.7.09

பெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடைக்க ஏற்படுத்திய பித்தலாட்டம்!




பெண்கள் திதி கொடுக்கக்கூடாது


தாயோ, தந்தையோ இறந்தபின அவர்களுக்கு திதி கொடுக்க ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. பெண்களுக்கு உரிமை இல்லை. இந்துமத வெறியர்கள் இதுபற்றி எவரும் வாய்திறப்பதில்லை. காரணம், பார்ப்பான் வயிறு புடைக்க ஏற்படுத்திய பித்தலாட்டம் தான் அது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் சிவநேசன் பத்திரிகையில் சிரார்த்தபலம் என்ற தலைப்பில் பிதிர்கள் என்பது பற்றி சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார். நீங்களும் படியுங்களேன்.

"பிதிர் எனும் சொல் அன்னையையும் குறிக்குமா? குறிக்கும் எனில் எவ்வாறு குறிக்கும்? குறியாது எனில் இறந்துபோன அன்னையர் தென்புலத்தாரிற் சேர்ந்தவா? வேறு புலத்தவரா?

இப்போதும் கவனிக்கலாம் இறந்த தந்தைக்குத்தான் மகன் திதி கொடுப்பாரே தவிர தாய்க்கு அல்ல. மகளோ தாய் தந்தை இருவருக்கும் திதி கொடுப்பதில்லை. பெண்களக்குத் திதி கொடுக்கிற உரிமை, - பெறுகிற உரிமை கிடையாது. அதாவது பெண் ஜீவனே அல்ல. இது ஆணாதிக்கத்தின் சித்தாந்த வெளிப்பாடுகள்"
.

(அருணன் எழுதிய வ.உ.சி.கடைசிக் காலத்தில் தடம் மாறினாரா? என்ற நூலிலிருந்து.)

-----------------தகவல்: பொன். வெங்கடேசன், வடமணப்பாக்கம் -"உண்மை" ஜூலை 16-31_2009

0 comments: