Search This Blog

29.8.11

நீதிக்கட்சி என்ன செய்தது?


சென்னை மாகாணத் தில் சர்க்கார் உத்தியோகங்களுக்காக ஏற்படுத்தியிருக் கும் வகுப்பு வாரி பிரதிநிதித் துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லாமல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று, இந்த மாநாடு தீர்மானிக்கிறது. தற்போதுள்ள வகுப்பு வாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப் பதால் ஜனசங்கியைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென் றும் அவ்விகிதப்படி உத்தி யோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்படவேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இந்த முறை அகில இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதுடன் வரப் போகும் சீர்திருத்த சட்டத் திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக் கிறது.

- இதே நாளில் (1940) திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் மேலே காணப்படுபவை.

71 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தொலை நோக்கோடு இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இட ஒதுக்கீடு வெறும் ஆணையாக இல்லாமல் சட்ட மாக ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்து1994 ஆம் ஆண்டில் (டிசம்பர் 31) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் தொகுத்து அளிக்கப் பட்ட 31(சி) மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற் றப்பட்டது. (தமிழ்நாடு சட்டம் 45/1994) 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அதே போல மத்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது திருவாரூர் மாநாடு நடந்து முடிந்த 50 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியால், கழகத் தலைவரின் திட்டமிட்ட அறி வார்ந்த செயல்முறைகளால், நல்வாய்ப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வாராது வந்த மாமணியாய், வான் மழையாய் வந்து சேர்ந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சமூக நீதி உணர்வால் (1990 ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் அறி விக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்கிற பரிந் துரையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்த சாதனை நிகழ்த்தப் பட்டது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கரிக்கோடு கிழிக்கும் வீடணர்கள் இந்த வரலாற்றை யெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கழகப் பிரச்சாரகர்களும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அழுத்த மாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

---------------- மயிலாடன் அவர்கள் 25-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: