Search This Blog

12.8.11

பூணூலா-கோவணக் கயிறா?


நாளை - சனிக்கிழமை ஆவணி அவிட் டமாம் - பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு நாங்கள் பிராமணர்கள் - பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்று அகம் பாவத்துடன் மார்தட்டும் நாள்!

பூணூல் அணியாத மக்களைப் பார்த்து நீங்கள் சூத்திரர்கள் - அதாவது எங்களுக்கு (பிராமணர்களுக்கு) வைப்பாட்டி மக்கள் என்று மறைமுகமாக இழிவு படுத்தும் நாள் - கேலி செய்யும் நாள்!

பூணூலைப் பார்ப் பனர்கள் மட்டும்தானா அணிகிறார்கள்? செட்டியார்களும், ஆசாரியார்களும் அணிகிறார்களே என்று சிலர் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் சமாதானம் சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாம்.

உண்மை நிலை என்ன? சாத்திர ரீதியாக அவர்களுக்குப் பூணூல் தரிக்கும் உரிமை உண்டா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! இதோ மனுதர்ம சாஸ்திரம் கூறு கிறது.

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும் வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும், மேடு பள்ளம் இல்லாமல் மெல்லியதாய் பின்னி மூன்று வடமாக நாண் கட்ட வேண்டியது.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 2; சுலோகம் 42)

- இதில் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் தரிப்பது குறித்துக் கூறப்பட்டுள்ளதா?

தங்களை விசுவ பிராமணாள் என்று சொல்லிக் கொள்ளும் சூத்திரத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!

காஸ்மா பாலிட்டன் பார்ப்பனர்களாக, லவுகிக பார்ப்பான்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் சோ உள்பட பூணூல் தரிப்பதில் கவனமாக இருக் கிறார்களே. வெளியே கோட்டு - சூட்டு - உள்ளே பூணூலா?

முதலில் ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பூணூலைத் தரிக்க வேண்டிய இடம் எது?

முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும், துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்.

முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது என்கிறார் இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த விவேகானந்தர். (நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

ஆக, பூணூல் என்பது கோவணம் கட்டிக் கொள்வதற்காக இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டியதை இப்பொழுது வேறிடத்திற்கு எப்படி மாற்றிக் கொண் டார்கள்? (இது சாஸ்திர விரோதம் இல்லையோ!)

சாஸ்திரப்படி முஞ்சா என்னும் புல்லினால் தானே அரைஞாண் கயிறாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இதைப்பற்றி எந்தப் பார்ப்பன சாஸ்திரி எழுதுகிறார்? எந்த சங்கராச்சாரி கருத்துக் கூறுகிறார்?

மூன்றரைக் கிலோ எடையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கே மாஜி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பூணூல் மாட்டி, கடவுளையே தம் ஜாதிக் கூட்டணியின் கீழ் கொண்டு வந்த கில்லாடி ஆயிற்றே!

கஞ்சா அடிக்கும் பார்ப்பானிலிருந்து, கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களிடம் காம வேட்டையாடும். பார்ப்பான் வரை நாளை பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே உளம், சொல், செயல்களை மும்மலங்களை இவர்கள் எல்லாம் அடக்கித்தான், பூணூலைத் தரித்துக் கொள்கிறார்கள் என்பதை சத்தியமாக நம்பித் தொலைப்பார்களாக!- அப்புறம் பூணூலுக்குத் தத்துவம் வெண்டைக்காய், கத்திரிக்காய் விளக்கெண்ணெய்த் தத்துவமாம்!

ஹி... ஹி... வாயாலா சிரிக்க முடியும்?

---------------------”விடுதலை” 12-8-2011

2 comments:

உங்களோடு... said...

சரியான நெத்தியடி

உங்களோடு... said...

சரியான நெத்தியடி