Search This Blog

29.8.11

ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி!


தமிழ்ப் பகைவர் செய்த பிழை திருத்தி சித்திரை முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டு என தீர்ப்பெழுதிய தீர்க்க தரிசியே! இரண்டாம் சுதந்திரத்தை இம்மண் ணுக்குப் பெற்றுத் தந்த வாழும் ஜான்சி ராணியே! வல்லமைகளின் குவியலே!... இத்தியாதி இத்தியாதி முழுப் பக்க விளம்பரம் ஒன்று இவ்வார குமுதம் ரிப்போர்ட் டரில் வெளியாகியுள்ளது.

விளம்பரம் கொடுத்திருப்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும்கூட, எதற்காக அவர் பெயரைச் சொல்லி விளம்பரப்படுத்த வேண்டும்?


பிரபவ தொடங்கி அட்சயவில் முடியும் சமஸ்கிருத பெயர்களை உடைய சித்திரைப் பிறப்பு தமிழருக்கு உரியதாம்.

இந்த சமஸ்கிருத ஆண்டு பிறப்பைப்பற்றி தை பிறந்தால் வழி பிறக்கும் என்றமுறையில் உண்மையான தமிழ்ப் பேரறிஞர்கள் கூடி முடிவெடுத்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தி.மு.க. அரசின் சட்டத் திருத்தம் தமிழ்ப் பகைவரால் கொண்டு வரப்பட்ட தாம்!

பார்ப்பனத் தலைமையை ஏற்றதால் நம் தமிழர்கள் புத்தி எவ்வளவு கேவலத்தில் தள்ளாடுகிறது பார்த்தீர்களா?

அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டுள்ளவர்கள் திராவிட அடையாளத்தை கட்சியின் பெயரில் பொறித்துக் கொண்ட வர்கள் எவ்வளவு பெரிய திரிபுவாத நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்!

ஆரிய மாயை நூலில் - (நூல் என்றால் பூணூல் அல்ல புத்தகம்) அறிஞர் அண்ணா மிக அழகாகவே படம் பிடித் துக் காட்டினாரே -

போதை ஏறியவன், கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்து விட்டுப் பிறகு கீழே உருட்டினர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி ஆனான். சோர்ந்தான், சுருண்டான்.

இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே என்றார் அண்ணா.
இன்று நடப்பதை தொலைநோக்கோடு அண்ணா படம்பிடித்து விட்டாரோ!

அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியே அண்ணாவின் எண்ணத்துக்கு மாறாக ஆரியக் கருத்துப் போதை ஏறி, பகைவரை பாசமுள்ள நண்பர் என்றும், நண்பரை நயவஞ்சகப் பகைவர் என்றும் கூறும் நிலை ஏற்பட்டு விட்டதே.

அய்யகோ வெட்கக் கேடு!

------------------- மயிலாடன் அவர்கள் 28-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: